Posted on Leave a comment

ராமாயி (சிறுகதை) | ஒரு அரிசோனன்

“டாங்கி மாட்டர்
வூடு இதுதானே, தம்பி?” என்று கேட்டபடி வாயிலில் நின்ற மூதாட்டியை ஏற இறங்கப் பார்த்தேன்
நான்.
நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது வயதிருக்கும். நெற்றியில், கன்னத்தில்,
கண்ணைச் சுற்றி,
சுருக்கங்கள் முதுமையின் கோடாக அழுத்தமாகப் பதிந்திருந்தன. பார்வையில் ஒரு கனிவு. பளபளவென்ற
உடம்பின் கருமைப் பழுப்பான நிறமும் பொருத்தமான ஒரு அழகாகத்தான் இருந்தது. நெற்றியில்
வெறுமை. காதிலிருந்து இரண்டங்குலத்திற்குக் கீழே தொங்கிய காதணிகள். தலைமயிரை இழுத்துப்
பின்னால் மேலே சுற்றிச் சொருகியிருந்த பாவம், தலையலங்காரம் செய்துகொள்ள நேரமில்லை என்
பதைப் பறைசாற்றியது.
கரும்பச்சைநிறப்
புடைவை ரவிக்கையில்லாத மேலுடம்பை
யும்
சுற்றி மறைத்திருந்தது.
இலேசான வேப்பெண்ணைய்
நெடி.
அவள் பின்னால் ஒருவன் முழங்கால்வரை தொங்கும் பெரிய அழுக்குத்துணிக்
கோவணம் ஒன்று கட்டியிருந்தான்
. தலையில் மிகப்பெரிய முண்டாசு. வேறு உடையெதுவும் இல்லை. தலையிலிருந்த முண்டாசைக் கழட்டி
ஏன் வேட்டியாகக் கட்டிக்கொள்ளாமல் வெறும் கோவணத்துடன் இருக்கிறான் என்று என்னை நானே
கேட்டுக்கொண்டேன்
.
“என்ன தம்பி,
முளிக்கிறே? டாங்கி மாட்டர் வூடு இதுதானே?” மீண்டும் கேட்கப்பட்ட அக்கேள்வி என்னைக்
குழப்பியது.
“டாங்கி மாட்டரா?
அப்படி இங்கே யாரும்..” என்ற நான் மேலே தொடருவதற்குள், “கண்ணா? யாரு வாசல்ல?” என்றபடி
எனது பாட்டி அங்கு வந்தார்.
“அம்மா, தம்பிக்கு
என்னைத் தெரியல. நாந்தாங்க ராமாயி. டாங்கி மாட்டர் சமுசாரம்தாங்க நீங்க?” என்று தனது
வெற்றிலைக் காவிபடிந்த பற்கள் தெரியச் சிரித்தாள் அந்த முதிய பெண்மணி – ராமாயி.
சிலவிநாடிகள்
திகைத்த என் பாட்டி, மகிழ்வும், வியப்பும் கலந்த குரலில், “அடேடே, நம்ம ராமாயியா?
ரெண்டு மாமாங்கம் ஆயிப்போயிடுத்துடீ, உன்னைப் பார்த்து! ஒம் முகம் இன்னும்
மாறாம அப்படியே, மூக்கும் முழியுமாத்தானேடீ நீ இருக்கே!
முகத்தில சுருக்கம் இல்லாட்டா
இருபத்துநாலு வருஷம் முன்னால ராமாயி போகல்லே
, நேத்திக்குத்தான் போயிட்டு இன்னிக்கு வந்திருக்கான்னு
நினைக்க வேண்டியிருக்கும்
.
வாடீ,
வா!” என்று வரவேற்றபின்தான், ‘டாங்கி மாட்டர்’ என்
று ராமாயி குறிப்பிட்டது, டிராயிங் மாஸ்டரான எனது தாத்தாவை என்று
ஊகித்துக்கொண்டேன்.
“தம்பிதான் பாப்பாவோட
புள்ளையா? நான் கடைசியாப் பாத்தப்போ இந்தத் தம்பி வயசுதான பாப்பாவுக்கு?” என்று என்னைப்
பார்த்துப் பரிவுடன் கேட்டாள் ராமாயி. பாப்பா என்று குறிப்பிட்டது என் அம்மாவை என
ப் புரிந்துகொண்டேன்.
“ஆமாண்டி. அதுதான்
ஒன்னைப் பார்த்து மாமாங்கக் கணக்காயிடுத்துன்னு சொன்னேனே! பாப்பாவுக்குக் கல்யாணமாகி
மூணு கொழந்தைகள். இவன் மூத்தவன். இவனுக்கப்பறம் ரெண்டு பொண்ணு.
மாப்பிள்ளைக்கு
அடிக்கடி வேலை இடத்த மாத்திடறதுனாலே
, படிப்பு கெடவேண்டாம்னு இவன் இங்கேயே எங்களோட இருக்கான்” என்ற என் பாட்டி, “ஏன்னா, இங்கே வந்து யார் வந்திருக்கான்னு
பாருங்கோ! நம்ம ராமாயி!” என்று உள்ளே இருந்த என் தாத்தாவை விளித்
தார். “அது சரி. ஒம் புருஷன் சுகமா இருக்கானா? உனக்கு
எத்தனை கொழந்தைங்க? என்ன இப்படி திடுதிம்முனு வந்திருக்கே? உம் புருஷனும் வந்திருக்கானா?”
அமைதியாகத் தலையைக்
குனிந்துகொண்டாள் ராமாயி. முகத்தில் ஒரு சோகம் நிழலாடியது. பளபள்வென்றிருந்த பெரிய
கண்கள் இடுங்கின.
இதற்குள் அங்கு
வந்த தாத்தா, “வாம்மா ராமாயி, அத்தி பூத்தாப்பல இருக்கே, உன்னைப் பார்க்கறது! என்னம்மா,
சௌக்கியமா இருக்கியா? ஏன் தலையைத் தொங்கப்போட்டுண்டு
நிக்கறே?” என்று நல்ம் விசாரித்தார்.
“சாமி, எல்லாத்தையும்
தொலச்சுட்டு வந்துருக்கேன் சாமி!” வாய்விட்டு அழுதாள் ராமாயி.
நான் புரியாமல்
தடுமாறினேன். இந்த வயதான பெண் என் தாத்தாவைத் தேடி ஏன் வரவேண்டும்? ஏன் இப்படி அழவேண்டும்?
எதை இவள் தொலைத்திருக்கிறாள்? என் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன.
“உக்காரு முதல்லே.
உன்னைச் சமாதானப்படுத்திகோ. பின்னால நிக்கறது யாரு?” என்றவர், “உள்ளே போயி ராமாயி குடிக்கறத்துக்கு
ஜலம் கொண்டுவா!” என்று என் பாட்டியை அனுப்பினார்.
ராமாயி சைகை காட்டியவுடன், அவள் பின்னால் நின்றிருந்த
கோவணாண்டி
, தயங்கித் தயங்கி உள்ளே எட்டிப்பார்த்து, தனது காவிபடிந்த பற்களைக் காட்டித் தலைக்குமேல் கைகளைக் கூப்பினான்.
இவன் என் தம்பி நாச்சியபன், சாமி.
இவனுக்குப் ரொம்பநாளா காது கேக்காமப் போயிடுச்சு சாமி,” என்று மேலும் அழுதாள் ராமாயி.
இதற்குள் என் பாட்டி ஒரு சொம்பு நிறையத்
தண்ணீர் கொணர்ந்து ராமாயின் கையில் கொடுத்தார்
. பாதிச் சொம்புத் தண்ணீரை
மடக்மடக்கென்று குடித்துவிட்டு
, அதை நாச்சியப்பனிடம் நீட்டினாள்.
அவனும் பவ்யமாக அதை வாங்கி ஒரு வாய் குடித்தபின்னர் சொம்பை மெதுவாகக்
கீழேவைத்தான்
.
சொல்லு, ராமாயி! இருபத்திநாலு
வருஷம் முன்னாலே உன் மாமன்மகன் மாரியப்பனைக் கல்யாணம்பண்ணிண்டு கிராமத்துலே விவசாயம்
பண்ணப்போறேன்னு உன் தம்பி நாச்சியப்பனையும் கூட்டிண்டு போனே
! அதுக்கப்பறம் ஆளே மாறிப்போயி, எல்லாத்தையும் தொலைச்சுட்டேன்னு
சொல்றே
. பதட்டப்படாம, விவரமாச் சொல்லு
என்று கனிவுடன் கேட்டார் தாத்தா.
அந்த வவுத்தெரிச்சல நீங்களும் கேட்டுக்கிடுங்க சாமிஎன்று துவங்கிய ராமாயி, கிராமத்தில் தரிசாகக் கிடந்த தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து காப்பாற்றுகிறேன் என்று
தனது மாமன் மகன் மாரியப்பன் சொன்னதை நம்பி
, தெருவில் எல்லோர் வீட்டிலும் பால் வியாபாரம்
செய்துவந்ததை நிறுத்திவிட்டு
, வைத்திருந்த இரண்டு பசுக்களில்
ஒன்றை விற்று
, ஒரு
பசுவுடன், தானும், தன் தம்பியும், கிராமத்திற்குச் சென்றதைஎன் தாத்தா, பாட்டிக்குத் தெரிந்த செய்தியை, மீண்டும் ஒருதடவை சொல்லிச்
சிறிதுநேரம் நிறுத்தினாள்
.
அவளே மேலே தொடரட்டும் என்று அமைதியாக இருந்தனர் தாத்தாவும், பாட்டியும்.
அந்தக் கட்டைலேபோற என் புருசன், நாலைஞ்சு
வருசத்தில என் நிலம்
, பசுமாடு எல்லாத்தையும் கொஞ்சம்கொஞ்சமாப்
புடுங்கிக் கூத்தியா கால்ல கொண்டு கொட்டிட்டான் சாமி
. அவன நம்பிப்
போயி எல்லாத்தையும் தொலச்சுட்டேன்
. குடிச்சுட்டு வந்து காசு கேப்பான்.
இல்லைன்னா என்னையும், என் தம்பியையும் போட்டு உதை,
உதைன்னு உதைப்பான். அப்படி ஒருதடவை எக்குத்தப்பா
அடிச்சப்பத்தான் இவனுக்குக் காது
கேக்காமப் போயிடுச்சு. அது
போதாதுன்னு
, ஒரு தடவை குடிச்சுப்பிட்டு எம் வயித்திலே அவன் உதைச்சதால
பன்னண்டு வருசம் களிச்சு உண்டான என் கர்ப்பமும் கலங்கிப் போயிக் குறைப்பிரசவமாயிட்டுது
.
அந்தக் கசுமாலப் புருசன விட்டுட்டு வாரதுன்னாகிராமத்த விட்டுட்டு வாரதுன்னா எத்தை நம்பி நான் திரும்பி
வாரது
? வந்தா யாருக்காவது பாரமாத்தான இருக்கணும்? அங்கணயே நொந்துக்கிட்டுக் கெடந்தேன், சாமி. நாச்சியப்பன்
மட்டும் அங்கிட்டு இங்கிட்டு
வேலைசெஞ்சு காப்பாத்தலேன்னா எம் பொளப்பே நாறிப்போயிருக்கும்
. ஒரு
அநாதைப் புள்ளைக்கு அவனைக் கண்ணாலமும் செஞ்சு
வச்சேன் சாமி. செவுடனை வேற யாரு கண்ணாலம் கட்டிக்கிடுவாக?
அதுவாவுது ஒளுங்காக் குடுத்தனம் நடத்தப்படாதா? பாவிமகன் நாச்சி பக்கத்து மிராசு பண்ணையில வேலை பாத்துட்டு ரவையிலே வந்திருக்கான்.
நானும் அந்தச்சமயம் பார்த்து கூத்துப் பார்க்கப் பக்கத்து ஊருக்குப்
போயிருந்தேன்
. இவன் வந்து
பார்த்தா, அந்தச் சிறுக்கி என் புருசனோட சல்லாபம் பண்ணிக்கிட்டிருந்திருக்கா.
அதைப்
பார்த்து, அப்படியே
துடிச்சுப் போயிட்டான் சாமி இவன்
. பித்துப் பிடிச்சவன் மாதிரி
அப்படியே வூட்டு வாசல்ல படுத்துக் கிடந்திருக்கான்
. நான் காலைக்
கருக்கல்ல வந்து பார்த்துப் பதறிப்போயிட்டேன்
. இந்த ஏமாளிப்பய
வெவரம் சொல்லறபோதுதான் மெதுவா அந்தச் சிறுக்கியும் எம் புருசனும் கதவைத் தொறந்துக்கிணு
வெளிலே வந்தாங்க
.
ஏண்டா பொறுக்கி நாயேஒனக்கு கூத்தியா போதாதாடா?
இப்படி அநியாயமா என் தம்பி வாள்க்கைய நாசம்பண்ணிப்பிட்டீயேடா.
உண்டவீட்டுக்கே ரெண்டகம் செய்யற படவான்னு கத்தி, தெருவைக் கூட்டிப்பிட்டேனுங்க. பேச்சு தடிச்சுப்போச்சு.
அந்தச் சிறுக்கியும் வாய்க்கொளுப்போட என் தம்பி ஆம்பளயே இல்ல,
அவன்கூட வாள்க்கையே நடத்தமுடியாதுன்னு சொல்லிப்புட்டுசொல்லறதென்ன, மோசமா சைகை
பண்ணிக் காமிச்சு, தாலியை விசிறி எறிஞ்சுப்புட்டு. எம்புருசன்கூட கெளம்பிட்டா. நானும் போடான்னு,
என் புருசன் கட்டின தாலியக் களட்டி அவங்கிட்டயே வீசிப்புட்டேன்.”
ராமாயி கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் கொட்டியது. சேலைத் தலைப்பால் அவ்வப்போது துடைத்துக்கொண்டாள்.
கட்டின பொண்சாதியே ஆம்பிளையே இல்லேன்னது இவனை என்னவோ செஞ்சுட்டுதுங்க.
அதுலேந்து இவன் வேட்டிய அவுத்துத் தலைல கட்டிட்டு வெறும் கோவணத்தோட அலயறானுங்க.
ஒரு எடத்துல நிலச்சு வேலை செய்யறதில்லை. எப்படியோ
நாலைஞ்சு வருசம் காலம் தள்ளீப்புட்டோம்
.”
கீழே இருந்து சொம்பை எடுத்து மீதித் தண்ணீரையும் வேகவேகமாகக் குடித்தாள் ராமாயி.
அப்புறம்?” என்று அவளைத் தூண்டினார் என் பாட்டி.
ஏதோ அரை வயிருக்காவது துண்ணுக்கிட்டிருந்தோமுங்க. திடுமுன்னு இந்தப் பயலுக்குச் சரியா வெளிவாசல் போகமுடியலீங்க. திங்காம இருந்துப்புடலாம். வெளிவாசல் சரியாப்போகலேன்னா
எப்படி
? இப்ப ஒருமாசமா தண்ணியாத்தான் சாப்பிடமுடியதுங்க.
கஞ்சியோ, கூழோதான் குடிக்கறான். கண்ராவியா இருக்குங்க. கிராமத்து நாட்டுவைத்தியரு கொடுத்த
சூரணம் வேலைபண்ணல
. அவரும் டவுனு டாகுடருதான் பார்த்து வைத்தியம்பண்ணனும்னு
சொல்லிட்டாரு
.
எனக்கு யாரைங்க தெரியும்? இங்க காரக்குடிலேதான்
பெரிய டாகுடரையா இருக்காங்க
. தரும ஆசுப்பத்திரிலே இவனைக் காட்டலாமுன்னு
இங்க கூட்டிக்கிணு வந்தேனுங்க
. எனக்கு இந்த ஊரில உங்கள விட்டா
யாரைத் தெரியுமுங்க
? இவன் கொஞ்சம் சொகமாகறதுக்கு நீங்கதான் கொஞ்சம்
வளி காட்டணுமுங்க
.”
தேம்பித் தேம்பி அழுதாள் ராமாயி.
தாத்தாவும், பாட்டியும் சிலகணங்கள் கண்களாலேயே பேசிக்கொண்டபின்,
பாட்டி இலேசாகத் தலையை அசைத்தார். தாத்தாவும் தொண்டையைச்
செருமிக்கொண்டார்
.
ராமாயி. நீ தங்க இங்கேயே நான் வசதி பண்ணிக்
கொடுக்கறேன்
. உன் தம்பியை வேட்டியை இடுப்பில் கட்டிக்கச் சொல்லு.
ஆஸ்பத்திரிக்குப் போவோம்என்ற என் தாத்தாவை நன்றியுடன்
நோக்கினாள் ராமாயி
.
நான் சொன்னாக் கேக்கமாட்டானுங்க. நீங்களே
பயமுறுத்துங்க
, இந்தப் பயபுள்ளைய.”
தாத்தா நாச்சியப்பனைக் கோபமாக முறைத்துப் பார்த்தார். பாட்டியையும் ராமாயியையும் காட்டினார்.
அவன் தலையிலிருந்த முண்டாசை வெடுக்கென்று பிடுங்கி, அவன் கையில் கொடுத்து, கட்டிக்கொள்ளும்படி சைகைசெய்தார்.
அவரது செயலைக்கண்டு நாங்கள் அதிர்ந்துபோய்விட்டோம்.
நாச்சியப்பன் ஒன்றும் பேசாமல் முண்டாசை அவிழ்த்து இடுப்பில்
கட்டிக்கொண்டான்
.
பாட்டி அவர்கள் இருவருக்கும் மதிய உணவு கொடுத்தார். நாச்சியப்பன்
வேண்டாமென்று மறுத்தான்
.
வெளிவாசல் போகமுடியாம கசுட்டப்படறான். என்னம்மா
சாப்புடுவான்
?” என்று வருத்தத்துடன் அலுத்துக்கொண்டாள் ராமாயி.
பாலாவது ஒரு டம்ளர் குடிக்கட்டும்டீ. பாவம்!
கொலைபட்டினியாவா கெடப்பான்?” என்று பால் எடுத்துவந்தார்
எனது பாட்டி
.
மூவரும் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்கள். தாத்தாவும்,
ராமாயியும் திரும்பிவந்தார்கள். நாச்சியப்பனை ஆஸ்பத்திரியில்
வைத்துப் பார்த்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டார்களாம்
.
வாசல் சுவருக்கும், வீட்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் ஒரு
தட்டியைப் போட்டு மறைத்துக் கட்டினார் தாத்தா
. பாட்டி ஒரு பாயும்,
போர்வையும் கொடுத்தார். ராமாயி அங்கேயே தன் துணிமூட்டையைத்
தலைக்கு வைத்துக்கொண்டு இரவு படுத்துக்கொண்டாள்
ஒருவாரம் வைத்திருந்து மருந்துமாத்திரை கொடுத்துப் பார்த்துவிட்டு, நாச்சியப்பனுக்கு
ஆசனவாயில் கட்டிவளர்ந்திருப்பதால் அறுவைசிகிச்சை செய்யவேண்டும்
, மதுரைக்குத்தான் கூட்டிப்போகவேண்டும் சொன்னார்கள். ராமாயி
மிகவும் பயந்துபோய்விட்டாள்
.
தாத்தாவும், பாட்டியும் அவளைச் சமாதானப்படுத்தினார்கள்.
நாச்சியப்பன் நிலைமை மிகவும் மோசமாக ஆகிவருகிறது, ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்து ஒத்துக்கொள்ளாமல் நிறைய வாந்தியெடுத்தவண்ணம்
இருக்கிறான் என்று தாத்தா மெல்லப் பாட்டியின் காதைக் கடித்தார்
.
அடுத்தநாள் ஆள்பத்திரி சென்று அங்கிருந்து மதுரைக்குக் கூட்டிச்
செல்லலாம் என்று முடிவுசெய்தார்கள்
.
அதற்கு வேலையே வைக்காமல் அன்றிரவே நாச்சியப்பன் இவ்வுலகையே விட்டுப்
போய்ச்சேர்ந்துவிட்டான்
. தெருவுக்கே கேட்கும்வண்ணம் கதறிய ராமாயி மெல்லமெல்ல
அடங்கி அமைதியானாள்
.
நாச்சியப்பனை முனிசிபாலிட்டியே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டது.
நான் துங்கிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்து,
இரவில் தாத்தா
பாட்டி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தது என்
காதில் விழுந்தது
:
ஏன்னா, இப்ப ராமாயி விஷயம் என்ன ஆறது?
அவ தம்பியோ போய்ச்சேர்ந்துட்டான். இவளுக்கோ கிராமத்திலே
பொழப்புக்கு ஒண்ணும் இல்லே
…” என்று பாட்டி மெல்ல இழுத்தார்.
ஆமா, அத நெனச்சாத்தான் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா
இருக்கு
.” இது தாத்தா.
அவ நம்மள நம்பி இங்கே வந்துட்டா. நாமதானே
ஏதாவது செய்யணும்
. அவளை எப்படி…” மீண்டும்
அதே இழுப்பு
.
அவளுக்குத் தெரிஞ்சது பால் வியாபாரம்தானே?”
ஒரு மாடு இருந்தா, அதைக் கொல்லைலே கட்டிட்டு,
இங்கேயே இருந்து பார்த்துக்கோடின்னு சொல்லலாம்…”
மாட்டுக்கு எங்கே போறது?”
அதுவும் சரிதான். நாலு எடத்துல வீட்டுவேலை
செஞ்சா
…?”
அதெப்படி அவளை வீட்டுவேலை செய்னு எப்படிச் சொல்றது? வாழ்ந்து நொடிச்சவ. மேலேயும், இந்தத்
தெருவில வேலை செய்யற முத்தம்மாவுக்கு அது போட்டியான்னா போயிடும்
?”
அப்படீன்னா?”
சிறிது நேரம் தாத்தாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
ஏன்னா, தூங்கிட்டேளா?”
எப்படித் தூங்கறது? யோசிக்கிறேன். வழி தெரியாமலா
போயிடும்
? அப்ப அதப்பத்தி அவகிட்ட பேசலாம். நீ இதப்பத்தி ராமாயிகிட்ட எதுவும் பேசவேணாம். தம்பியப்
பறிகொடுத்த சோகத்திலே இருப்பா
.”
சரி.”
நான் கண்ணயர்ந்துவிட்டேன்.
ஏன்னா, ராமாயியை காணோமே? எங்க போயிட்டா?” என்று பாட்டி தாத்தாவை உரக்கக் கேட்கும்
குரல் என்னை எழுப்பியது
.
அவள் தங்கியிருந்த இடத்தில் அவளது துணிமூட்டையும் இல்லை. தாத்தாவும்
நானும் எல்லா இடத்திலும் தேடிப்பார்த்தோம்
. அவளைக் கண்டுபிடிக்கவே
முடியவில்லை
.
ராமாயி சென்றவள் சென்றவள்தான். அதன்பிறகு
அவளுக்கு என்ன ஆயிற்று என்று எங்களுக்குத் தெரியவே இல்லை
.



*****
Leave a Reply