Posted on Leave a comment

மஹாராஷ்ட்ரா, ஹரியானா – 2019 -சட்டசபைத் தேர்தல் முடிவுகள் – ஒரு பார்வை | லக்ஷ்மணப் பெருமாள்

அரசியலில்
என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதைத்தான் மஹாராஷ்ட்ரா, ஹரியானா தேர்தல்
முடிவுகள் காட்டுகின்றன. மஹாராஷ்ட்ராவைப் பொருத்தவரை, கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட
பாரதிய ஜனதா கட்சியும் சிவசேனாவும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற்றன.
ஹரியானாவில் தனித்தே போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு, பெரும்பான்மைக்குப்
போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் வெளியானபோது,
பாரதிய ஜனதா ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் மற்றும் சிறு கட்சிகள் இணைந்து
ஆட்சி அமைக்குமா என்று விவாதங்கள் எழுந்தன.
2019ல்
புதிதாகக் களமிறங்கிய ஜன்நாயக் ஜனதா கட்சி
10 இடங்களைப்
பெற்றிருந்தது. பாஜகவை எதிர்த்து தேர்தல் களத்தை எதிர்கொண்ட போதும், இரு
நாட்களுக்குள்ளாக பாஜகவிற்கும், ஜனநாயக் ஜனதா கட்சிக்கும் உடன்பாடு ஏற்பட்டு
சுமூகமாக ஆட்சியை அமைத்தது பாரதிய ஜனதா கட்சி. மீண்டும் மனோகர் லால் கத்கர்
முதல்வரானார்.
மஹாராஷ்ட்ராவில்
தேர்தல் முடிவுகள் வந்த போது பாரதிய ஜனதாவும், சிவசேனாவும் ஓரிரு நாட்களில் ஆட்சி
அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் பதவி தங்களுக்கு
வேண்டுமென்ற சிவசேனாவின் கோரிக்கையில் கூட்டணியில் பூசல் உருவானது. அக்டோபர்

23
ல், தேர்தல் முடிவுகள் வந்த போதிலும், ஒரு நிலையற்ற சூழலே
அங்கே நிலவுகிறது. திடீரென பாஜகவின் ஃபட்நாவிஸும் தேசியவாத காங்கிரஸின் அஜித்
பவாரும் முறையே முதல்வராகவும் துணை முதல்வராகவும் பதவி ஏற்றிருப்பது
அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் உருவாக்கி உள்ளது.
சிவசேனாவின்
அரசியல் வரலாற்றில் முதல்முறையாக காங்கிரசுடனும் தேசியவாதக் காங்கிரசுடனும்
கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
2014-19
க்கான சட்டசபை நவம்பர் 8ம்
தேதி கலைக்கப்பட்டவுடன், தனிப்பெரும்கட்சியான பாரதிய ஜனதாவை
48 மணி நேரத்திற்குள் ஆட்சி
அமைக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார் கவர்னர் பகத் சிங். பாஜகவோ தங்களிடம் போதுமான
எண்கள் இல்லையென்று அறிவித்துவிட்டது. உடனடியாக சிவசேனாவை அழைத்து
24 மணி நேரத்திற்குள்ளாக ஆட்சி
அமைக்க நேரம் ஒதுக்கினார். சிவசேனா போதுமான ஆதரவுக் கடிதங்களைக் கொண்டு வரவில்லை
என நிராகரித்தார் கவர்னர். பின்னர் தேசியவாதக் காங்கிரஸ் கட்சிக்கும்
24 மணி நேரத்திற்குள்ளாக
போதுமான சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் வந்தால் ஆட்சி அமைக்க
அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார். தேசிய வாதக் காங்கிரஸ் கூடுதல் நேரம்
கேட்டவுடன் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிட்டார் கவர்னர். நவம்பர்

12, 2019
அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு
வந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘குடியரசுத் தலைவர் ஆட்சி
மஹாராஷ்ட்ராவில் அறிவிக்கப்பட்டது துரதிருஷ்டம் என்றாலும், எதிர்க் கட்சிகள்
பெரும்பான்மை எண்ணிக்கையைக் காட்டும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி
கலைக்கப்பட்டு, பெரும்பான்மை காட்டும் கட்சிக்கு ஆட்சி அமைக்க அனுமதி அளிக்கப்படும்’
என்று தொலைக்காட்சி பேட்டியில் அறிவித்தார். ஆனால் எதிர்பாரா திருப்பமாக நவம்பர்
23ம் தேதி அதிகாலையில் பட்நாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும்
பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
காங்கிரஸ்
ஆரம்பத்தில் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் தனது மதச்சார்பின்மை (வேடம்)
கலைந்துவிடுமோ என்று அஞ்சியது. போலி மதச்சார்பின்மையை வழக்கம் போல கையில்
எடுத்தும், கடந்த இரு லோக்சபா தேர்தலில் எதுவும் பலிக்கவில்லை என்பதால்,
மதச்சார்பின்மை என்ற அரசியலைக் கையில் எடுப்பதற்குப் பதிலாக ஆட்சிக் கட்டிலில்
பாஜக அமராமல் இருக்கச் செய்தால் போதுமென்ற அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது
காங்கிரஸ். அப்படித்தான் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தலுக்குப்
பிந்தைய கூட்டணியை அமைத்து ஆட்சி அமைத்த காங்கிரஸ், ஒரே வருடத்தில் ஆட்சியைக்
கவிழ்த்தது. தன்னுடைய தலைமையின் கீழ் ஆட்சி அமைக்கப்படவில்லை எனில், மாநிலக்
கட்சியை ஆட்சி அமைக்கச் சொல்லி விட்டு, சமயம் பார்த்துக் காலை வாரிவிடுவதை
வழக்கமாகவே கொண்டுள்ளது காங்கிரஸ். இவையனைத்தும் மாநில கட்சிகளுக்குத் தெரிந்த
போதும், பதவி வெறியில்  எந்தக் கட்சியும்
இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே தங்களது
கட்சியைப் பலப்படுத்த முடியும் என்று நம்புவதால் காங்கிரஸ் அளிக்கும் ஆதரவை
ஏற்றுக் கொள்கின்றனர். அதிக இடங்களைப் பிடித்தும் தம்மை ஆட்சி அமைக்க விடாமல்
எதிர்க் கட்சிகள் அரசியல் செய்கின்றன என்பதால் பாஜகவும் அத்தனை மோசமான வழிகளையும் கையாண்டு,
எதிர்க்கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்ய முயலவேண்டியதாகிறது. கர்நாடகாவில்
காங்கிரசின் பங்கைப் போல அந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக எடுத்த முயற்சிகளும் வெட்ட
வெளிச்சம். சமீபத்தைய உதாரணம், இன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்த காங்கிரஸ்
மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தள சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் பாஜகவிலேயே
ஐக்கியமாகி உள்ளது.
அதிகாரம்
என்று வரும்போது அரசியலில் யார் யாரோடு வேண்டுமென்றாலும் சேருவார்கள். மஹாராஷ்ட்ரா
மாநிலத்தில் கட்சிகள் பெற்ற இடங்களையும்,கடந்த கால தேர்தல்களோடு ஒப்பிட்டுப்
பார்க்கலாம்.
2019 சட்டசபைத்
தேர்தலில், மொத்தமுள்ள
288 தொகுதிகளில்,
பாஜக
105, சிவசேனா 56, தேசியவாதக் காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 மற்றும் இதர கட்சிகள் 29 இடங்களையும் பிடித்தன. பாஜக
கூட்டணி
162 இடங்களையும்,
காங்கிரஸ் கூட்டணி
105
இடங்களையும் பிடித்தன. பெரும்பான்மையை நிரூபிக்க
144 இடங்களே தேவை. ஆனால் மேலே கூறியுள்ளபடி
குளறுபடிகள் நடந்ததால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. இப்போது
இன்னொரு குளறுபடியாக பட்நாவிஸ் முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார்.
2014ல்
நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக, சிவசேனா, தேசியவாதக் காங்கிரஸ், காங்கிரஸ்
ஆகிய கட்சிகள் தனித்தே போட்டியிட்டன. தனித்துப் போட்டியிட்ட பாஜக
122, சிவசேனா 63,
காங்கிரஸ் 42,
தேசியவாதக் காங்கிரஸ்
41
இடங்களையும் பிடித்திருந்தன.
2019 சட்டசபை
தேர்தலில் பாஜக சிவசேனாவுடனும், காங்கிரஸ் தேசிய வாதக் காங்கிரசோடும் கூட்டணி
அமைத்துத் தேர்தலைக் களம் கண்டன. பாஜகவைப் பொறுத்தவரையில்
2014 தேர்தலில் நின்ற தொகுதிகளோடு
வெற்றி பெற்ற தொகுதிக்கான வெற்றி விகிதத்தை ஒப்பிட்டால்
2019
தேர்தலில் அதிகமென்றாலும் எண்ணிக்கையில் குறைவான இடங்களையே
பிடித்துள்ளது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் பாஜக, சிவசேனா முறையே
17,
7
இடங்களை இழந்துள்ளன. தேசியவாதக் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய
இரு கட்சிகளும் முறையே
13, 2 இடங்களைக்
கூடுதலாக பெற்றுள்ளது.
பட்டியலின
தொகுதிகள் ஓர் ஒப்பீடு:
மஹாராஷ்ட்ராவில்
கடந்த
2014 சட்டசபைத் தேர்தலில்,
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான தொகுதிகளில் தேசிய வாதக் காங்கிரசும், காங்கிரசும் தலா
ஏழு இடங்களைப் பிடித்திருந்தன. இம்முறை இரு கட்சிகளும் முறையே தலா
12 இடங்களைப் பிடித்துள்ளன.
கடந்த
2014 சட்டசபைத் தேர்தலில்,
பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் முறையே
25, 12
இடங்களைப் பிடித்திருந்தன. 2019 சட்டசபை தேர்தல் முடிவுகளில்
பாஜக
16 இடங்களையும், சிவசேனா 8 இடங்களையுமே பிடித்துள்ளன.
கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில், பட்டியலினத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில்
பாஜகவும் சிவசேனாவும்
13 தொகுதிகளை
இழந்துள்ளன.
நகர்ப்புற
தொகுதி முடிவுகள் ஓர் ஒப்பீடு:
மஹாராஷ்ட்ராவில்
58 தொகுதிகள் நகர்ப்புறத்
தொகுதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அவற்றில் பாஜக
2019 தேர்தலில் 29 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது.
கடந்த
2014 தேர்தலில்
28 தொகுதிகளைக் கைப்பற்றியது
குறிப்பிடத்தக்கது. அதே போல சிவசேனாவும்
2014 & 2019 இரு
தேர்தல்களிலும்
18 தொகுதிகளைக்
கைப்பற்றி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
2014 & 2019 தேர்தலில்
தேசியவாதக் காங்கிரஸ்
4 தொகுதிகளைக்
கைப்பற்றி தக்கவைத்துக் கொண்டுள்ளது
. காங்கிரஸ்
கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் ஒரு இடம் குறைந்து நான்கு இடங்களை இம்முறை
பெற்றுள்ளது. நகர்ப்புற படித்த மக்களிடையே பாஜகவும், சிவசேனாவும் நன்மதிப்பைப்
பெற்றுள்ளது என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
கிராமப்புறத்
தொகுதிகள் :
கிராமப்புறத்
தொகுதிகளாக மொத்தம்
140 தொகுதிகள்
அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. இதில் கடந்த
2014
தேர்தலில் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்
ஆகிய கட்சிகள் முறையே
55, 25, 25, 28 ஆகிய
இடங்களைப் பிடித்திருந்தன. இம்முறை தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது
132 தொகுதிகளில் பாஜக,
காங்கிரஸ்,தேசியவாதக் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே
39,
31, 26
ஆகிய இடங்களில் முன்னணி வகித்தன. சிவசேனா
மற்றும் இதர கட்சிகள்
36 இடங்களில்
முன்னணியில் இருந்தன. இதையே நாம் முடிவாகக் கருதிக் கொண்டால் கூட (தேர்தல்
முடிவுகளுக்குப் பின்னான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை), கிராமப்புறத்
தொகுதிகளில் கடந்த தேர்தலோடு ஒப்பிட்டால் பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளது.
ஹரியானா
தேர்தல் முடிவுகள்:
ஹரியானாவில்
மொத்தம்
90 சட்டசபை
தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க
46
இடங்கள் தேவை. நடந்து முடிந்த
2019
சட்டசபை தேர்தலில், பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும், புதிதாக உதயமான ஜன்நாயக் ஜனதா
கட்சி
10 இடங்களையும், இந்திய தேசிய லோக்தள் கட்சி ஒரு
இடத்தையும்
, இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 8

இடங்களையும் கைப்பற்றின. ஏற்கெனவே குறிப்பிட்டது போல பாஜகவும்  ஜன்நாயக் ஜனதா கட்சியும் தேர்தலுக்குப் பிந்தைய
கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துக் கொண்டன.
ஹரியானாவில்
பாஜகவிற்கு உண்மையில் வீழ்ச்சியா, காங்கிரஸ் இயக்கத்திற்குப் பெரிய வெற்றியா
என்பதை ஆராய வேண்டி உள்ளது. ஹரியானாவில்
2014
Vs 2019
தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்களுக்கான
ஒப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஏழு இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ்
15 இடத்திலிருந்து 31 இடங்கள் வரை பெற்றுள்ளது.
இந்திய தேசிய லோக்தள் கட்சி இம்முறை முற்றிலுமாக தமது செல்வாக்கை இழந்து
விட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிதாக உதயமான ஜேஜேபி கட்சி
10
இடங்களைப் பிடித்துள்ளது.
பட்டியிலினத் தொகுதிகள் ஓர் ஆய்வு:
ஹரியானாவில் மொத்தம் 17 எஸ்சி தொகுதிகள் உள்ளன. 2019 தேர்தலில் பாஜக, காங்கிரஸ்,
ஜேஜேபி ஆகிய கட்சிகள் முறையே
5, 7, 4 இடங்களைப்
பெற்றுள்ளன. இதர ஒரு இடத்தை மட்டும் மற்றவர்கள் பெற்றுள்ளனர். பாஜக
2014
தேர்தலில் 9 இடங்களைப்
பெற்றிருந்தது. இம்முறை வாக்கு சதவீதத்தை இழக்காவிட்டாலும், காங்கிரசிடமும் மற்ற
கட்சிகளிடமும் இடத்தைப் பறி கொடுத்துள்ளது. இதை கீழுள்ள படத்தைப் பார்த்தாலே புரிந்து
கொள்ளலாம்.
2014 தேர்தலில்
இந்திய தேசிய லோக்தள் பெற்ற வாக்குகள் மற்றும் இதர வாக்குகள் இம்முறை கூடுதலாக
காங்கிரசிற்குச் சென்றுள்ளதால் காங்கிரஸ் கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக
இடங்களைப் பெற முடிந்திருக்கிறது.
பிஜேபியின் பின்னடவுக்குக்கான காரணம்
பாஜக 2014 தேர்தலைக்
காட்டிலும் குறைந்த இடங்களையும் குறைந்த வாக்கு சதவீதத்தையும் பெற இரு முக்கியக்
காரணிகள் உள்ளன. பாஜக ஹரியானாவில் ஜாட் பிரிவைச் சேராத ஒருவருக்கு முதல்வர் பதவியை
வழங்கியது. ஹரியானாவின் மொத்த மக்கள் தொகையில்
40% வரையிலும் ஜாட் இனத்தவர் உள்ளனர். பாஜக ஜாட்
அல்லாத
35 இதர ஜாதியினருக்கு அதிக
அளவில் முக்கியத்துவம் கொடுப்பதாக ஜாட் மக்கள் கருதி உள்ளனர்.
1977
ல் மட்டும் பன்சாரி தாஸ் குப்தா என்பவர் மட்டுமே
ஹரியானாவில் ஜாட் பிரிவைச் சேராத ஒருவர் முதல்வராக இருந்துள்ளார். அதுவும்
52 நாட்கள் மட்டுமே முதல்வர்
பதவியில் நீடித்துள்ளார். அதை பாஜக உடைத்து ஐந்தாண்டுகளுக்கு ஜாட் இனத்தைச் சேராத
ஒருவரை (மனோகர் லால் கத்தார் – பஞ்சாபி பஜன்லால்) முதல்வராக வைத்தது. இதுதான்
குறிப்பாக ஜாட் மக்களின் பிஜேபிக்கு எதிரான அணித் திரள அமைய முக்கியக் காரணியாகப்
பார்க்கப்படுகிறது.
பாஜக
தான் வாங்கிய வாக்குகளில் ஜாட் சமூக மக்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில்
16% குறைவாகவும், ஜாட்
மக்கள்தொகை குறைவாக உள்ள மற்ற தொகுதிகளில்

22%
வாக்குகளை லோக்சபா தேர்தலோடு ஒப்பிடுகையில்
குறைவாகப் பெற்றிருந்தாலும், அதிக இடங்களை இழந்துள்ளது ஜாட் மக்கள்
40%
இருக்கும் தொகுதிகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாட்
மக்கள் குறைவாக உள்ள சில தொகுதிகளில் ஜாட் மக்கள் காங்கிரசிற்கு அதிக அளவில்
வாக்களித்துள்ளனர். அதேபோல ஜாட் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் துஷ்யந்த்
சௌதாலாவின் ஜேஜேபி கட்சி அதிக வாக்குகளையும் அதிக இடங்களையும் கைப்பற்றி உள்ளது.
பாஜகவின் வெற்றியை பல தொகுதிகளில் ஜேஜேபி கட்சி பதம் பார்த்துள்ளது என்றே சொல்ல
வேண்டும். கீழுள்ள அட்டவணையைப் பார்த்தால் புரியும். தமிழகத்தில் வன்னியர்,
முக்குலத்தோர், கவுண்டர்கள் ஓரணிக்கு அணி திரண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான்
அங்கு ஜாட் மக்கள் அணி திரண்டால் ஒரு கட்சியின் வெற்றியைப் பாதிக்கிறது. பெரும்
எண்ணிக்கையிலான சாதிகள் மட்டுமே அதிகார பலத்தில் இருக்கக் கூடாது என்ற சமூக நீதியை
பாஜக முன்னெடுத்துள்ளது. அது வேறு மாதிரியான வாக்கரசியல்தான் என்றாலும், உண்மையில்
இதுதான் சமூக நீதியை நிலை நாட்டுவதாகும். தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரம் ஐந்தே
சாதிகளின் கைகளில் குவிந்துள்ளதற்குக் காரணம் அதிமுகவும் திமுகவும் சிறிய
எண்ணிக்கையிலான சாதிகளை மதிக்காமல் பெரும் எண்ணிக்கையிலான சாதியினருக்கு மட்டுமே
இடங்களை அதிக அளவில் ஒதுக்குவதும், அமைச்சரவையில் இடம் கொடுப்பதுமே ஆகும்.
முக்குலத்தோர், வன்னியர், கவுண்டர், நாயக்கர், நாடார், தலித் ஆகிய ஆறு சாதிகளில்
எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பதோடு பிராமணர்கள், பண்டாரம், ஆசாரி, பிள்ளைமார்,
ஆதி சைவர் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பிரதிநித்துவம் எந்த அளவுக்கு
வழங்கப்பட்டுள்ளது என்று பார்த்தாலே தெரியும். திமுக அதிமுகவும் ஏன் சிறு
எண்ணிக்கையிலான சாதிகளை அதிக அளவில் மதிக்காமல் உள்ளன என்றால், தேர்தல் வெற்றிக்கு
பெரும் சாதிகளின் ஆதரவு தேவை என்கிற ஒற்றை அரசியல் பார்வை மட்டுமே! அதைத் தாண்டி
அனைத்து சமூகத்தினருக்குமான அதிகாரப்பகிர்வை வழங்காமல் தமிழகத்தை ஆண்ட/ஆளும்
கட்சிகள் சமூக நீதி என்று பேச அருகதை அற்றவர்கள்.
ஹரியானா
நகர்ப்புறத் தொகுதி முடிவுகள் ஓர் ஆய்வு:
ஹரியானாவில்
மொத்தம்
26 தொகுதிகள் நகர்ப்புறத்
தொகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பாஜக
17 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 7 தொகுதிகளையும் ஜெஜேபி
மற்றும் சுயேட்சை தலா ஒரு இடத்தையும் பெற்றுள்ளனர். கடந்த

2014
சட்டசபை தேர்தலிலும் பாஜக
17
இடங்களைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹரியானா,
மஹாராஷ்ட்ரா என இரு மாநிலங்களிலும் பாஜக நகர்ப்புற மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
இரு
மாநில முடிவுகளையும் வைத்துப் பார்த்தால் மக்களிடம் பெருமளவுக்கு ஆட்சிக்கெதிரான
மனநிலை பெருமளவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. நாம் இந்த இரு மாநில தேர்தல்
முடிவுகளையும் எப்படிப் பார்க்க வேண்டும்? கடந்த
2014 தேர்தலில் பாஜக முதல்வர் யாரென சொல்லி வாக்குகள்
கேட்கவில்லை. ஆனால் இந்த இரு மாநிலங்களிலும் சிறிய சமூகமான பிராமணர் சமூகத்தைச்
சேர்ந்த தேவேந்திர பாட்நாவிசை மஹாராஷ்ட்ராவிலும், கத்தாரை (பஞ்சாப் பஜன்லால்)
ஹரியானாவிலும் முதல்வராக்கியது. ஹரியானாவில் மோடியை ஏற்றுக் கொண்ட ஜாட் இன மக்கள்
கத்தாரை அந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஜாட் மக்களை அடிப்படையாகக் கொண்டு
உருவாக்கப்பட்டுள்ள ஜேஜேபி கட்சியைச் சேர்ந்த துஷ்யந்த் சௌதாலாவை துணை
முதல்வராக்கி சமூக நீதியை நிலை நாட்டி உள்ளது. உண்மையில் அனைத்து சமூக மக்களின்
பிரதிநிதிகளுக்கும் அதிகாரப்பகிர்வை பல மாநிலங்களிலும் பாஜக ஏற்படுத்தி வருகிறது.
அதன் அம்சமாகவே இதைப் பார்க்க வேண்டும். அதைப் போலவே தேவேந்திர பாட்னாவிசை மராத்தா
அல்ல என்றோ, பெரும் சமூகம் சேர்ந்தவர் தங்கள் முதல்வராக இல்லையென்றோ மக்கள்
பார்க்கவில்லை. ஆகையால் தான் பாஜக சிவசேனா கூட்டணியால் பெரும்பான்மைக்குத் தேவையான
இடங்களைப் பெற முடிந்துள்ளது. மகாராஷ்ட்ராவில் பாஜக தனிப்பெரும் கட்சி என்ற
பெருமையை தக்க வைத்துள்ளது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஒருவேளை ஆட்சி
அமைத்தால், அது அதிக ஆண்டுகள் நீடிக்காது என்பது தெரிந்தும், அதிகாரத்தில்
இருந்தால் மட்டுமே தமது சொந்த கட்சியைப் பலப்படுத்த முடியுமென்ற அடிப்படையில்தான்
அனைத்துக் கட்சிகளும் செயல்படுகின்றன என்பதே யதார்த்தமான உண்மை! இது
ஹரியானாவிற்கும் பொருந்தும்.


Leave a Reply