Posted on Leave a comment

வலம் டிசம்பர் 2020 இதழ் – முழுமையான பட்டியல்

வலம் டிசம்பர் 2020 இதழ் உள்ளடக்கம்..


நேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ் 

பள்ளிக் கல்வியில் ஆங்கிலமும் தாய்மொழியும் | ஜெயராமன் ரகுநாதன்

பாஜக வடகிழக்கை வென்ற வரலாறு புத்தகத்தின் முன்னுரை | எஸ்.ஜி. சூர்யா 

சாதனம் நான்கு: வேதாந்த விசாரத்திற்கான அடிப்படைத் தகுதிகள் – ஜடாயு 

ஓட்டம் (கம்யூனிஸத் திரைப்படங்கள்) | அருண் பிரபு 

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 9) | ஹரி கிருஷ்ணன் 

சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு 

பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

இந்தியா புத்தகங்கள்  7 | முனைவர் வ.வே.சு.

லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு

ஆல்பெர் காம்யூவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

அடையாறு பகுதியின் இளைஞர்கள் அன்றாடம் கூடுமிடம் ஹோட்டல் ரன்ஸ். பலருக்கு அதை வாழுமிடம் என்றுகூடச் சொல்லலாம். எவ்வளவுநேரம் உட்கார்ந்திருந்தாலும் ஏனென்று கேட்கமாட்டார்கள். காபி, டீ, சமோசா என்று பில் மட்டும் கூடிக்கொண்டே போகும். என்னுடைய வாழ்க்கைத் தடத்தில் ஹோட்டல் ரன்ஸுக்கு முக்கியமான இடமுண்டு. பத்தாண்டுகளுக்கு மேலாக நான் ஈடுபட்டுவந்த கடல் தொழில், மீன் தொழில், கருவாடு தொழில், எல்லாவற்றிலிருந்தும் விலகும் கட்டம் அங்கேதான் நிகழ்ந்தது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு

Posted on Leave a comment

மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்

விலக்கப்பட்ட வேள்வி

மே மாத இதழில் நம்முடைய ஐந்தாவது கேள்வியாகப் பின் வருவதை எழுப்பியிருந்தோம்: ‘பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டு வந்த சமயத்தில்—அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில், Continue reading மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.

Annie Besant – An Autobiography. (அன்னி பெஸெண்ட் – ஒரு சுயசரிதை)

இங்கிலாந்து சர்ச் ஒன்றின் பாதிரியான டாக்டர் ப்யூசேவிடம், 20 வயதான அப்பெண் கூறுகிறாள்:

“ஃபாதர் எனக்கு ஜீஸஸ் மீதோ அவர் கூறியுள்ள வார்த்தைகள் மீதோ நம்பிக்கை இல்லை. என் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நீங்கள் விளக்க வேண்டும்.”

“பெண்ணே! நீயே ஒரு தேவாலய ஊழியரான பாதிரியின் மனைவி. நீ இப்படிச் சொல்வது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் உள்ளது. நீ செய்வது இறை நிந்தனை.”

“கிறித்துவ மதத்தில் எனக்குள்ள சந்தேகங்களைத்தானே கேட்கிறேன்!”

Continue reading இந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

வலம் மே 2020  முழுமையான இதழ்


வலம் மே 2020 இதழ் படைப்புகளை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நேர்காணல் | அபாகி

நாவல் கொரோனா – அச்சமும் அறிவுறுத்தலும் | சுஜாதா தேசிகன்

முதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்

ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன்

ஜெர்மனியின் அல்கட்ராஸ் சிறை (Friedrich Loeffler Institute) | ராம் ஸ்ரீதர்

மகாபாரதம் கேள்வி பதில் | ஹரி கிருஷ்ணன்

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்

சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்

விடுப்பிற்குப் பின் (சிறுகதை) | ராமையா அரியா

 

Posted on Leave a comment

ஸ்டெர்லைட்: இந்தியாவும் தாமிரத்தின் புவி அரசியலும்

மூலம்  :  கௌதம்
தேசிராஜூ, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ், பெங்களூரு

தமிழில்:  ஜனனி ரமேஷ்

ஸ்டெர்லைட்
ஆலையில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடத்தப்பட்ட நீண்ட காலப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 2018ல் அரசும் நீதிமன்றமும் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட
ன. இதன் பிறகே இந்தியாவிலுள்ள பெரும்பான்மையோர் தாமிரம் பற்றிய செய்தியைப் பார்க்கத் தொடங்கினார்கள்.  

தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பொது சுகாதாரம் குறித்த அச்சம் ஆகியவை
வேதியல் துறையைப் போலவே பழமையானது.  அரசாங்கங்கள் மற்றும் நீதித் துறை அமைப்புகளுக்கு இடையே எப்போதுமே ஒரு நிச்சயமற்ற உறவுதான். தொழிற்துறையைப் பொருத்தவரையோ இந்த உறவு, வாழ்க்கைத் தரம் மற்றும் இலாப அளவு ஆகிய இரண்டுக்கும் இடையே, சாதக பாதகமின்றி நடுத்தரமாக எச்சரிக்கை உணர்வுடன் கத்திமேல் நடப்பது போலத்தான். இருப்பினும் இதற்கான தீர்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளில்
ஓரளவுக்குக் கண்டறியப்பட்டுள்ளன.  அதோடு, செர்னோபில், லவ் கனால், போபால் விஷ வாயுக் கசிவுபோல் மிகப் பெரிய பேரழிவுகள் தற்போதெல்லாம் நடைபெறுவதில்லை.  

ஸ்டெர்லைட் எப்படி வேறுபடுகிறது?  அது ஏன் மூடப்பட்டது? இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஏன் இன்னும் மூடியே இருக்கிறது? மாசு, தொழிற்சாலை மூடப்படுவது மற்றும் மீண்டும் திறக்க  இயலாதது ஆகியவற்றுக்கு யார் காரணம்? அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்களே காரணமா அல்லது வேறு யாரேனுமா?  இவைபோன்று இன்னும் பல கேள்விகள் உள்ளன.

அடிப்படை அறிவியலிலிருந்து புவி அரசியல் தொடங்குவதால் முதலில் வேதியலுக்குச் செல்வோம். 90க்கும் அதிகமான இயற்கைத் தனிமங்களில் தாமிரம் முதன்மையானதாகும்.  5000 ஆண்டுகளுக்கு  முன்பே மனிதனால் சுத்தமாகத் தனிமைப்படுத்தப்பட்ட இந்த உலோகம் ஏனைய தனிமங்களைப் போலவே வித்தியாசமானதாகும். வேதியலாளர்கள் சேர்மங்களை உருவாக்குவது போலத் தனிமங்களை உருவாக்க முடியாது. பூமியின் மேலடுக்கிலுள்ள தனிமமும், வளிமண்டலமும் மட்டுமே நமக்கு உள்ளன. ஆக்ஸிஜன், சிலிகான், இரும்பு ஆகியவை ஏராளமாக இருக்கின்றன.  தாமிரம் போன்றவை மிக அரிதாகக் கிடைக்கின்றன. அவையும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இயற்கையாக தாமிரமாகக் கிடைக்காத இந்த உலோகத்தின் தாது, சிலி, பெரு, அமெரிக்கா, இந்தோனீஷியா, ஜாம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும்  ஃபிலிபைன்ஸ் ஆகிய சில நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. அங்கும் இங்குமாகச் சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது என்பது சரிதானே? 

பிரச்சினையின் மையப் புள்ளியே இதுதான். அதிக அளவு மின் கடத்துத் திறன், அதிக வெப்பக் கடத்துத் திறன், அதிக வளை மற்றும் வடமாக நீளும் திறன், நடுத்தர விலை (வெள்ளியின் பண்புகள் தாமிரத்தைப் போலவே நல்லதுதான் என்றாலும் அதன் விலை பொதுவான பயன்பாட்டுக்குத் தடையாக உள்ளது) ஆகியவை தாமிரத்தின் சிறப்பியல்புகள். இந்தப் பண்புகள் காரணமாக அதிக அளவிலான மின் பகிர்மானத்துக்குத் தேவையான கம்பி வடங்கள் மற்றும் மின் முனைகள் தயாரிப்பில் தாமிரம் மிக அத்தியாவசியமான உலோகமாகிறது.  எளிதாகச் சொல்வதெனில் உலகளவில் தாமிரம் உடனடியாக எளிதாகக் கிடைக்காவிட்டால் இன்றைய நவீன வாழ்க்கை சாத்தியமில்லை.  

தாமிரத்தின்
முக்கிய தாதுப் பொருளான தாமிர பைரேட்டுகள் இந்தியாவில் அதிக அளவில் கிடைப்பதில்லை.
ராஜஸ்தானிலிருந்து ஜார்கண்ட் செல்லும் வழியில் கிடைக்கும் மிகக் குறைந்த அளவும் (உலகின்
மொத்த தாமிரத் தாதுவில் 2% மட்டுமே) தரம் குறைந்ததாகும்.  ஸ்டெர்லைட் போன்ற தாமிரம் பிரித்தெடுக்கும் நிறுவனங்கள்,
இந்தத் தாதுப் பொருளை மேற்கண்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, சுத்தமான உலோகத்தை
தூத்துக்குடியில் உற்பத்தி செய்கின்றன. இது மொத்தத் உள்நாட்டுத் தேவையில் சுமார்
35% ஆகும். மின்கலங்களில் பயன்படுத்தப்படும் எதிர்மின் முனைகள் (கேத்தோடுகள்) தயாரிப்புக்காகச்
சீனாவுக்குக் கணிசமான அளவில் தாமிர உலோகத்தை இந்தியா ஏற்றுமதி செய்தும் வந்தது. தாமிரத்தின்
இறக்குமதிகளைச் சீனா நம்பியிருக்க, அதை இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

ஒரு
நாட்டின் முக்கிய உலோகத்தை இழக்கச் செய்வது பண்டைய போர் முறையின் ஒர் அங்கமாகும். தங்கத்துக்கும்,
வெள்ளிக்கும் போரிட்டு சாம்ராஜ்ஜியங்கள் உருவாகி உள்ளன அல்லது சரிந்துள்ளன. அறிவியல்
வளரும் போது அத்துடன் இணைந்து தொழில்நுட்பமும் வளரவே, மற்ற தனிமங்களுக்கான நமது விருப்புகளும்
அதிகரிக்கத் தொடங்கின. உதாரணத்துக்கு பிளாட்டினம், பலோடியம், குரோமியம், நியோடைமியம்,
யுரேனியம், இண்டியம் போன்ற தனிமங்களும் இன்றைய அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவைப்படுகின்றன. 
 

மேற்கண்ட
தனிமங்களைக் கொண்ட நாடுகள் அவை இல்லாத நாடுகள் மீது தங்கள் அசாதாரணச் செல்வாக்கைப்
பயன்படுத்த முடியும்.  இதற்குக் காரணம், தனிமங்களை
உற்பத்தி செய்ய முடியாது, அவற்றைத் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கத்தான் முடியும்.  உதாரணத்துக்கு, தென் ஆப்பிரிக்க நிற வெறி அரசாங்கம்
நீண்ட காலம் நீடித்ததற்குக் காரணம், அமெரிக்கச் சந்தையின் மிக முக்கியப் பொருளான எஃகு
மீது பூசப்படும் குரோமியம் அதன் கைவசம் ஏராளமாக இருந்ததுதான். உயர் காந்தப் பாய்வு
அல்லது பெருக்குகளில் முக்கியப் பொருளாக விளங்கும் நியோடைமியம்
என்னும்
உலோகம் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத அளவுக்குச் சீனாவில் இன்றைக்குக்
குவிந்திருப்பதால் அதன் உலகச் சந்தை விலையை நினைத்தபடி சீனாவால் நிர்ணயிக்க முடியும்.  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்…   
 

இதனைக்
கருத்தில் கொண்டு தாமிரத் தேவைகள் தொடர்பான இந்தியாவின் இழப்பு காரணமாக எந்த நாடு அதிக
அளவில் பயனடையும் என்பதை ஆய்வு செய்வது முக்கியமாகும்.  இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தாமிரச் சுத்திகரிப்பு
ஆலைகள் உள்ளன. சில ஆலைகள் உள்ளூர்த் தாதுக்களைப் பயன்படுத்துகின்றன. சில ஆலைகள் தாதுக்களை
இறக்குமதி செய்கின்றன.  ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம்
பிரிவில் வருகிறது. மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் (தாமிர பைரேட் தாதுவின் சாம்பலாக்கல் மற்றும் உருக்கலின்
போது வெளியேறும் நச்சுப் பொருள் சல்ஃபர் டை ஆக்சைட்) நீண்ட காலமாகவே கண்டுகொள்ளப்படாமலும்,
புறக்கணிக்கப்பட்டும், மீறப்பட்டும் வந்துள்ளது. இதற்கு நீண்ட நெடிய வரலாறும் உள்ளது.  இந்தப் பிரச்சினை போதாதென்று திராவிட இனவாதம், பிராமணத்
துவேஷம், கிறித்துவ மதமாற்றப் பிரசாரம், இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவற்றுடன் எப்போதுமே
பரபரப்புடன் கொந்தளிக்கும் அரசியல் சூழலுள்ள மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் ஸ்டெர்லைட்
ஆலை நிறுவப்பட்டுள்ளது. இவை காரணமாக அதிகார பலத்துடன் சர்வ வல்லமை படைத்தவர்களால் நினைத்த
நேரத்தில் பிரச்சினையைக் கொந்தளிக்க வைக்கவும் முடியும், உடனடியாக நிறுத்தவும் முடியும்.

இவை
அனைத்துக்கும் மேலாக இடதுசாரிகளின் வலுவான தடம், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின்
பிராந்திய அடிப்படையிலான போக்கு ஆகியவை இம்மாநிலத்தில் ஆழமாக வேருன்றி உள்ளன. அடிப்படைப்
பிரச்சினையைத் தூண்டிய நாட்டுக்கு
,
இந்தியத் தொழிலாளர் மற்றும் தொழில்துறைத் தகராறுகள் மத்திய மாநில
அரசுகளின் பொதுப் பட்டியலில் வரும் என்ற விவரம் என்பது கண்டிப்பாகத் தெரியும். மேலும்  கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தில்லி அரசுடன்
மோதல் போக்கையும்,  மையத்திலிருந்து விலகும்
தன்மையைம் கொண்ட ஒரு மாநில அரசைக் கையாளவது வெகு சுலபம் என்பதையும் அறிந்தே இருந்தனர்.
எனவேதான் தமிழகத்திலுள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தது,  புவிசார் மூலஉத்தி மேதாவித்தனம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
 

விவரங்களைக்
கூறிவிட்டேன்.  இதற்கு மேலும் எதையேனும் கூறினால்
அது ஊகங்களுக்கும், அனுமானங்களுக்குமே இடமளிக்கும். எனவே நான் வைத்த புள்ளிகளைக் கோலமாக்கிப்
புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த இரு ஆண்டுகளுக்குள் மரியாதைக்குரிய
ஏற்றுமதியாளர் ஒருவரிடமிருந்து இந்தியா தாமிரத்தை இறக்குமதி செய்யத் தொடங்கி இருக்கிறது
(இதன் காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சுமார் ரூ 40,000 கோடிகள்). இதே காலகட்டத்தில்
சீனாவுக்கான  பாகிஸ்தானின் தாமிர ஏற்றுமதிகள்
400% அதிகரித்துள்ளன (தாமிர பைரேட் தாது பலுசிஸ்தானில் ஏராளமாக உள்ளது). இதன் மூலம்
சீனாவின் தேவைகளைப் பாகிஸ்தான் தொடர்ந்து நிறைவு செய்து வருகிறது.  அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள்
அல்லது மதக் குழுக்கள் ஆகியோருக்கு லஞ்சம் வழங்க பெரிய ஆற்றல்மிகு நாட்டை உலகின் எங்கு
வேண்டுமானாலும் தேடுங்கள், உங்களுக்கான விடை கிடைக்கும். 
 

எந்த
நாடாக இருப்பினும் அந்நாட்டுத் தலைவர்கள் வேதியல் தனிமம் மற்றும் அதன் சேர்மங்கள் ஆகியவற்றுக்கு
இடையேயுள்ள வேறுபாட்டைத் தங்கள் விஞ்ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும், ஆலோசனை
பெறுவதிலும் தவறுவதில்லை.  ஆனால் இந்தியாவிலுள்ள
அறிவியல் ஆலோசகர்களால் இதனைச் செய்ய முடிவதில்லை. ஆனாலும், நிறைவாக, அரசியல், பொருளாதாரம்
மற்றும் மதத்தின் சட்டங்களை விட வேதியல் சட்டங்கள் உயர்வானவை. 

ஆங்கில மூலம் இங்கே.

Posted on Leave a comment

கடைசியாக ஒரு வைரஸ் என்னைப் பீடித்தது – டாக்டர் பியோட் (பெல்ஜியம்)

 கடைசியாக ஒரு வைரஸ் என்னைப் பீடித்தது” – எபோலாவையும் ஹெச்ஐவியையும் எதிர்த்துப் போராடிய அறிவியலாளர் கரோனாவால் மரணத்தை எதிர்நோக்க நேர்ந்த தருணத்தைப் பற்றி!


வைரஸ் ஆய்வாளரும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினின் (London School of Hygiene & Tropical Medicine) இயக்குநருமான பீட்டர் பியோட் மார்ச் மத்தியில் கரோனா
நோயால்
(கோவிட்-19) பாதிக்கப்பட்டார்.
ஒரு வாரம் ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு
, பின்னர் லண்டனில் உள்ள தனது வீட்டில் குணமடைந்து
வருகிறார். இன்னும் மாடிப்படிகளில் ஏறும்போது மூச்சுவிடுவது அவருக்கு சிரமமாகவே
இருக்கிறதாம்.  
 

பெல்ஜியத்தில் வளர்ந்த பியோட், 1976ல் எபோலா வைரஸைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவர். தனது
வாழ்க்கையை, தொற்று நோய்களுக்கு எதிராகவே கழித்தவர். 1995 மற்றும் 2008 க்கு
இடையில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டத்தின்
தலைவராக இருந்த அவர், தற்போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின்
(Ursula von der Leyen) கொரோனா வைரஸ் ஆலோசகராக உள்ளார். புதிய கொரோனா வைரஸுடனான
அவரது தனிப்பட்ட போராட்டம், அவரது வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது என்று
கூறுகிறார் பியோட்.
 

மே 2 அன்று டச்சு மொழியில் நடந்த நேர்காணலின் தமிழ்
வடிவம் இங்கே – ஆங்கிலம் வழியே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழி பெயர்த்தவர்
கிருஷ்ணன் சுப்பிரமணியன்.
 

*

மார்ச் மாதம் 19ம் தேதி, எனக்குத்
திடீரெனக் காய்ச்சல் வந்தது.
கடுமையான
தலைவலியும் இருந்தது. நம்பமுடியாத அளவுக்கு என் தலையும்
, தலைமுடியும் வலித்தன. எனக்கு அப்போது இருமல் இல்லை. ஆனால்
என்னுடைய முதல் எண்ணம்
, எனக்கு அந்த நோய் வந்துவிட்டது. ஆனாலும் நான் என்
பணியைத் தொடர்ந்து வீட்டிலிருந்து செய்துவந்தேன். நான் ஒரு வொர்க்கஹாலிக். கடந்த
ஆண்டு லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் டெலிவொர்க்கிங்
முறையைக் கொண்டுவர நாங்கள் முயன்றோம். எனவே நாங்கள் அதிக பயணம் செய்ய வேண்டிய தேவை
இல்லை. புவி வெப்பமடைதலுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் செய்யப்பட்ட அந்த
முதலீடு இப்போது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.      

நான் சந்தேகித்தபடி, COVID-19 சோதனையில் எனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. நான்
வீட்டில் விருந்தினர் அறையில் தனிமையில் இருந்தேன். ஆனால் காய்ச்சல் சரியாகவில்லை.
அதற்கு முன்பு இதைப் போல எனக்குத் தீவிரமாக நோய் வந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில்
ஒரு நாள் கூட உடம்பு சரியில்லை என விடுப்பு எடுத்ததில்லை. நல்ல
, ஆரோக்கியமான
வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்
. தவறாமல் நடைப்பயிற்சி செய்துவந்தேன். என்னை கரோனா
பாதிக்க  ஒரே காரணம் என் வயதுதான். எனக்கு
வயது 71. நான் எப்போதும் நேர்மறையாகச் சிந்திப்பவன் என்பதால்
, இதுவும்
கடந்து போகும் என்று நினைத்தேன். ஆனால் காய்ச்சலும் களைப்பும் அதிகரித்துக்கொண்டே
வந்ததால் ஏப்ரல் 1ம் தேதி ஒரு மருத்துவர் நண்பர் முழுமையான பரிசோதனை செய்துகொள்ள
அறிவுறுத்தினார்.

எனக்குக் கடுமையான ஆக்ஸிஜன் குறைபாடு இருந்தது, ஆனால்
மூச்சு விடுவதில் சிரமம் இல்லை. என்னுடைய நுரையீரலின் படங்கள் நான் கரோனாவின் பொது
அறிகுறியான நிமோனியாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததையும்
, பாக்டீரியா
நிமோனியா இருந்ததையும் காட்டின. பொதுவாக எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நான் தொடர்ந்து
சோர்வாக உணர்ந்தேன்
. சாதாரண சோர்வு அல்ல, கடும் அயர்வு. அந்த உணர்வை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டேன். இதற்கிடையில் வைரஸ் சோதனை நெகட்டிவ் என்றுகூடக் காட்டியது. இதுவும்
கரோனாவின் அறிகுறிதான். வைரஸ் மறைந்து விட்டாலும்
, அதன் விளைவு பல வாரங்களுக்குத் தொடர்ந்து இருக்கும். 

மருத்துவமனையில் உடனடியாக ஒரு வென்டிலேட்டரில்
வைக்கப்படுவேன் என்று கவலைப்பட்டேன். ஏனென்றால் அப்படிப்பட்ட நிலை இறக்கும்
வாய்ப்பை அதிகரிக்கும் என்று படித்திருந்தேன். இது என் பயத்தை அதிகரித்தது
. ஆனால்
அதிர்ஷ்டவசமாக முதலில் எனக்கு ஒரு ஆக்ஸிஜன் மாஸ்க்கைக் கொடுத்தார்கள்
. அது என்
பாதிப்பைக் குறைத்தது. எனவே நான் தீவிர சிகிச்சைப் பிரிவின் முன்புற அறையில் ஒரு
தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருக்கவேண்டியிருந்தது. அந்த நிலையில் சோர்வாகி
, விதியின்
பிடியில் வாழ்க்கையை விட்டுவிடுவது போல் உணர்வீர்கள்.  செவிலியர்களிடம் முழுமையாகச் சரணடைந்துவிடும்
கட்டம் அது.  ஊசியில் இருந்து மருந்து
உட்செலுத்துதல் வரையான ஒரு
ரொட்டீன் வாழ்க்கை அது. நான் எப்போதுமே செயலூக்கத்துடன் வேலை
செய்வது வழக்கம். ஆனால் இங்கு 100% நோயாளி மட்டுமே.
 

ஒரு வீடற்ற நபர், ஒரு கொலம்பியத் துப்புரவாளர், பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு மனிதருடன் நான் ஒரு அறையைப்
பகிர்ந்து கொண்டேன் – மூன்று பேரும் நீரிழிவு நோயாளிகள். இதுவும் நோயின்
அறியப்பட்ட ஒரு பகுதிதான். பேசும் ஆற்றல் யாருக்கும் இல்லாததால் பகலும் இரவும்
தனிமையில் கழிந்தன. என்னால் பல வாரங்கள் கிசுகிசுப்பாக மட்டுமே பேச முடிந்தது
; இப்போது
கூட
, என் குரல்
மாலையில் சக்தியை இழக்கிறது. ‘நான் இதிலிருந்து குணமான பின்பு எப்படி இருப்பேன்?’ என்ற
கேள்வி எனக்குள் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

40
ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் வைரஸ்களை எதிர்த்துப் போராடிய பிறகு
, நான்
தொற்றுநோய்களின் நிபுணனாகிவிட்டேன். எனக்கு எபோலா நோய் வராமல் கரோனா வந்தது
ஒருவிதத்தில் மகிழ்ச்சி. ஒருவர் கரோனாவுடன் பிரிட்டிஷ் மருத்துவமனையில் சேர்ந்தால்
அவர் இறப்பதற்கு
30% வாய்ப்பு இருப்பதாக நேற்று ஒரு விஞ்ஞான ஆய்வைப்
படித்தேன். இது மேற்கு ஆப்பிரிக்காவில்
2014ல் எபோலா நோயால் நேர்ந்த ஒட்டுமொத்த இறப்பு விகிதம்
ஆகும். இது சில நேரங்களில் உங்கள் அறிவியல் ரீதியான சிந்தனைகளை மழுங்கச் செய்து
, உங்களை
உணர்ச்சியின் பிடிக்குள் தள்ளுகிறது.  வைரஸ்களை
எதிர்த்துப் போராடுவதற்காக நான் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன்
. இறுதியாக அந்த
வைரஸ்கள் என்னைப்
பிடித்துப் பழிவாங்குகின்றன
என்று நினைத்தேன். முடிவு எப்படி இருக்கும் என்றே தெரியாமல் ஒரு வாரம் சொர்க்கத்திற்கும்
பூமிக்கும் இடையில் போராடினேன்.
 

நீண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து
வீடு திரும்பினேன். தனிப்பட்ட வாகனத்தில் இல்லாமல்
, பொதுப் போக்குவரத்து மூலம் வீட்டிற்குச் சென்றேன். நகரத்தையும்
அதன் வெறிச்சோடிய வீதிகளையும்
, மூடிய விடுதிகளையும், ஆச்சரியப்படத்தக்க வகையில் தூய்மையடந்திருந்த காற்றையும்
பார்க்க விரும்பினேன். தெருவில் யாரும் இல்லாதது ஒரு விசித்திரமான அனுபவமாக
இருந்தது. நீண்ட நாட்கள் படுத்திருந்ததாலும்
, இயக்கம் இல்லாததாலும், என்னுடைய தசைகள்
பலவீனமடைந்திருந்தால்
, என்னால் சரியாக நடக்க முடியவில்லை. ஒருவருக்கு நுரையீரல்
தொடர்பான வியாதிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படும்போது இது ஒரு நல்ல விஷயம் அல்ல.

வீட்டில் நான் நீண்ட நேரம் அழுதேன். சிறிது நேரம்
தூங்கினேன். ஏதேனும் தவறாகப் போய்விடுமோ என்ற யோசனை உங்களை அலைக்கழிக்கும்.
நீங்கள் மீண்டும் அடைபட்டிருப்பதுபோல் உணர்வீர்கள்
. ஆனால் இது போன்ற விஷயங்களை சரியான முறையில் அணுகுவது
நல்லது. இப்போது நெல்சன் மண்டேலாவை முன்பை விட அதிகமாகப் போற்றுகிறேன். 27
ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டாலும் சரியான சிந்தனைகளுடன் அவர் வெளியே
வந்தார்.
 

எனக்கு எப்போதுமே வைரஸ்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. அது இப்போதும்
குறையவில்லை. எய்ட்ஸ் வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்காக நான் எனது வாழ்க்கையின்
பெரும்பகுதியை அர்ப்பணித்துள்ளேன். வைரஸ் மிகவும் புத்திசாலித்தனமானது. அதைத்
தடுக்க நாம் செய்யும் எல்லாவற்றையும் அது தவிர்த்துவிடுகிறது. இப்போது என் உடலில்
ஒரு வைரஸ் இருப்பதை நான் உணர்ந்திருப்பதால் அது வைரஸ்களின் மீதான என் பார்வையை
மாற்றியிருக்கிறது. இதற்கு முன்னர் வைரஸ்களுடன் நான் சந்தித்த அனுபவங்கள்
இருந்தபோதிலும்
, இந்த
அனுபவம் என் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதை உணர்கிறேன். நான் எளிதாகத்
தாக்கப்படக்கூடியவன் என்று உணர்கிறேன்.
 

நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, எனக்கு
மூச்சுத் திணறல் அதிகரித்தது. நான் மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல
வேண்டியிருந்தது
, ஆனால் அதிர்ஷ்டவசமாக வெளிநோயாளி என்ற அடிப்படையில்
சிகிச்சை பெற முடிந்தது. சைட்டோகைன் புயல்
(cytokine storm)
என்று அழைக்கப்படும் ஒன்றால் ஏற்படும் நிமோனியா வகை நுரையீரல் நோய் என்னைப்
பீடித்திருந்தது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதீதமாக வேலை செய்வதால்
ஏற்படுவது.  வைரஸால் ஏற்படும் திசு
சேதத்தால் பலர் இறக்கவில்லை
. ஆனால் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அதீதமான
எதிர்வினையின் காரணமாக இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அதன் காரணம், நோய்
எதிர்ப்பு சக்திக்கு இந்த வைரஸை என்ன செய்வது என்று தெரியவில்லை.
 

இந்த நோய்க்கான சிகிச்சையில்தான் இன்னும் இருக்கிறேன். அதிக அளவு
கார்டிகோஸ்டீராய்டுகள் எனக்கு அளிக்கப்படுகின்றன
, அது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது.
என் உடலில் வைரஸ் அதிகரித்த அறிகுறிகளுடன் அந்தப் புயலும் (
cytokine storm)
இருந்திருந்தால்
, நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். எனக்கு ஏட்ரியல்
ஃபைப்ரிலேஷன் என்ற பாதிப்பும் இருந்தது
. என் இதய துடிப்பு நிமிடத்திற்கு 170 ஆகத் துடிக்கிறது. இது
சிகிச்சையின் துணையுடன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
. குறிப்பாக பக்கவாதம் உள்ளிட்ட இரத்த உறைவு நிகழ்வுகளைத்
தடுக்க இது கட்டாயம் தேவை. இந்த வைரஸைக் குறைத்து மதிப்பிடக்கூட்டாது. இது நம்
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கலாம்.
 

கரோனா 1% நோயாளிகளைக் கொல்கிறது என்று பலர் நினைக்கிறார்கள், மீதமுள்ளவர்கள்
சிலர் ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தப்பிக்கிறார்கள். ஆனால் பலருக்கு
நாள்பட்ட சிறுநீரகம் மற்றும் இதய பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்களின் நரம்பியல்
அமைப்பு கூடப் பாதிக்கப்படுகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால்
பாதிக்கப்பட்டிருப்பார்கள்
. அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறுநீரக டயாலிசிஸ்
போன்ற சிகிச்சைகள் தேவைப்படும். கொரோனா வைரஸைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகக்
கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு கேள்விகள் எழுகின்றன. இதனோடு பயணம் செய்துகொண்டே நாம்
அதைப் பற்றிக் கற்றுக்கொண்டிருக்கிறோம். அதனால்தான்
, விமர்சகர்கள் பலரைப் பார்த்து நான் எரிச்சலடைகிறேன்.
எந்த ஒரு நுண்ணறிவும் இல்லாமல் அவர்கள் அறிவியலாளர்களையும்
, கொள்கை
முடிவுகள் எடுப்போரையும் விமர்சனம் செய்துகொண்டு
, வைரஸைத் தடுக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். அது
நியாயமானதல்ல.

இன்று, 7 வாரங்களுக்குப் பிறகு, முதல் முறையாக நான் பழைய நிலையைக் கிட்டத்தட்ட
அடைந்துவிட்டதுபோல் உணர்கிறேன். வீட்டின் அருகிலுள்ள துருக்கியக்
கடைக்காரரிடமிருந்து வெள்ளை அஸ்பாரகஸை வாங்கிச் சாப்பிட்டேன்
. அஸ்பாரகஸ்
வளரும் சமூகமான பெல்ஜியத்தின் கீர்பெர்கனைச் சேர்ந்தவன் நான். என் நுரையீரல்
படங்கள் ஒருவழியாகச் சீரடைந்திருக்கின்றன. அதைக் கொண்டாட நீண்ட காலத்திற்குப் பின்
ஒரு நல்ல மது பாட்டிலைத் திறந்தேன்
. எனது செயல்பாடு சிறிது காலத்திற்கு
மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும்
, நான் மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். நான்
ஈடுபட்ட முதல் பணி
, வான் டெர் லேயனின் COVID-19 R&D சிறப்பு ஆலோசகராக அமர்ந்தது.

ஒரு தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இந்த ஆணையம் தீவிரமாக
முனைந்துள்ளது.  ஒரு விஷயத்தைத் தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள்.  கொரோனா வைரஸ்
தடுப்பூசி இல்லாமல்
, நாம் ஒருபோதும் சாதாரணமாக வாழ முடியாது. இந்த
நெருக்கடியிலிருந்து வெளியேறும் ஒரே உண்மையான உத்தி, ஒரு தடுப்பூசியை உருவாக்குவது.
இது உலகளவில் வெளியிடப்படுவதற்கு
, பில்லியன் கணக்கில் இந்த மருந்தை உற்பத்தி
செய்யவேண்டும். இது பெரும் சவாலான முயற்சி. இதற்கான முயற்சிகள் பல்வேறு இடங்களில்
நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற போதிலும்
, கரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்குவது சாத்தியமா என்பதே
இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

தடுப்பூசிகள் மூலம் தங்கள் வாழ்க்கையைக்
காத்துக்கொண்டிருக்கும் சிலர் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட விரும்பாமல்
இருக்கும் முரண்பாடும் இன்று உள்ளது. கரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்தால்
அதுகூட ஒரு பிரச்சினையாக மாறும்
, ஏனென்றால் அதிகமானோர் அதைப் போட்டுக்கொள்ள மறுத்தால், நாம்
ஒருபோதும் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது.

இந்த நெருக்கடி பல பகுதிகளில் அரசியல் பதட்டங்களைக்
குறைக்கும் என்று நம்புகிறேன். இது ஒரு மாயையாக இருக்கலாம்
. ஆனால்
போலியோ தடுப்பூசி பிரசாரங்கள் அமைதிக்கு வழிவகுத்ததைக் கடந்த காலத்தில்
பார்த்தோம். அதேபோல்
, COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் ஒரு சிறந்த பணியைச் செய்து
வரும் உலக சுகாதார அமைப்பு [
WHO], தனது அதிகாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொள்ளும்
என்று எதிர்பார்க்கிறேன். தனிப்பட்ட நாடுகளின் சொந்த நலன்களைக் காக்கும் ஆலோசனைக்
குழுக்களை அந்த அமைப்பு சார்ந்து இருப்பதிலிருந்து வெளிப்பட்டு சீர்திருத்தப்படலாம்
என்று நம்புகிறேன்.
WHO கூட அடிக்கடி ஒரு அரசியல் விளையாட்டு மைதானமாக மாறிவிடுகிறது.

நான் நேர்மறை எண்ணங்களைக் கொண்டவனாகப் பிறந்தவன்.  மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பிய பின், முட்டாள்தனத்திற்கும்
அறிவற்றுச் செயல்படும் விதத்திற்குமான எனது சகிப்புத்தன்மையின் அளவு முன்பை விட
இன்னும் குறைந்துவிட்டது. அதேசமயம், நோய்வாய்ப்படுவதற்கு முன்பிருந்ததை விட
இப்போது என்னுடைய நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்தான் செயல்படுத்துகிறேன் என்றாலும், அமைதியாகவும்
ஆர்வமுடனும் பணிகளைத் தொடர்கிறேன்
.

நன்றி: www.sciencemag.org