Posted on Leave a comment

கம்பனில் குலமும் சாதியும் | ஜடாயு

இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடைய தமிழிலக்கியத்தின் ஒரு மகத்தான சிகரம் கம்பராமாயணம் என்பதில் இருவேறு கருத்தில்லை. இந்த மகத்தான காவியத்தின் ஊடாக அறநெறிகளும், தத்துவச் சிந்தனைகளும், வாழ்க்கைத் தரிசனங்களும், பல்வேறு விதமான பண்பாட்டு, சமூக, வரலாற்றுச் செய்திகளும் இயல்பாகப் பயின்று வருகின்றன. இவற்றைப் பலவிதங்களில் ரசனைக்கும் ஆய்வுக்கும் உட்படுத்துவது கம்பரைப் பற்றியும், தமிழ்ப் பண்பாடு பற்றியதுமான நமது கண்ணோட்டத்தை விரிவாக்கும். அதனடிப்படையில் குலம், சாதி, வர்ணம் ஆகிய மரபார்ந்த கருத்தாக்கங்கள் குறித்து கம்பராமாயணப் பாடல்களில் வரும் குறிப்புகளை ஒரு தொகுப்பாக இக்கட்டுரையில் பார்க்கலாம். Continue reading கம்பனில் குலமும் சாதியும் | ஜடாயு

Posted on Leave a comment

இந்தியா புத்தகம் 7 | முனைவர் வ.வே.சு.

Rambles in Vedanta – B.R.Rajam Iyer (Collection of his contributions to The Prabuddha Bharata, 1896-1898)

அது ஆறாம் வகுப்பு. முதல் நாள். நாங்கள் படிக்கும் காலத்தில் அஞ்சாவது வரை ஒண்ணாங் கிளாஸ் ரெண்டாங் கிளாஸ் என்று சொல்வார்கள்; ஆறாவது என்பது ஃபர்ஸ்ட் ஃபார்ம். எலிமெண்டரி ஸ்கூலில் இருந்து பெரிய ஸ்கூலுக்கு வந்த வேளை. எல்லாம் புதுசு. புது நண்பர்கள்; புது ஆசிரியர்கள். Continue reading இந்தியா புத்தகம் 7 | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

காலை நடைப் பயிற்சியின் போது பூனை ஒன்று இறந்து கிடந்தது. சில நொடி மௌன அஞ்சலிக்குப் பிறகு கடந்து சென்றேன். Continue reading பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

Posted on 1 Comment

என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்

எழுத்து என்பது நிலத்தடியில் உள்ள நீரூற்று போல. நீரூற்றுள்ள நிலம் சில்லென்றிருக்கும். எறும்புப் புற்றைப்போல் அங்கே வடிவமற்ற கற்பனைகள் உருவாகிக் கொண்டிருக்கும். இதை ஆழ்ந்து கவனிப்பவர், உள்ளுக்குள் இருக்கும் நீரோட்டத்தைத் துளையிட்டு வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபடுவர். அம்புலிமாமா வாசிக்கும் காலத்திலேயே அடிமனசில் ஒளிந்திருந்த இந்த நீரூற்றை நானும் அறிந்தேன். Continue reading என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்

Posted on Leave a comment

புத்தகத்தில் தொலைதல் | ராம் ஸ்ரீதர்

நீங்கள் உங்களை / உங்கள் சுற்றுப்புறத்தை மறந்து ஒரு புத்தகத்திற்குள் தொலைந்து போவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல விஷயம் என்கிறது ஒரு விஞ்ஞானக் குறிப்பு. புத்தகத்திற்குள் தொலைதல், அதாவது அதில் ஆழ்ந்து போவது மிகவும் நல்லது, உங்களை அது மேலும் புத்திசாலியாக, ஒரு சிறந்த படைப்பாளியாக மாற்றும். அது ஒரு தப்பித்தல்தான் – உங்கள் கவலைகளிலிருந்து, உங்கள் தினசரி இயந்திரத்தனமான வாழ்விலிருந்து இப்படி தப்பித்து உங்கள் கனவுகளுக்குள் மூழ்கிப்போவது நல்லது. Continue reading புத்தகத்தில் தொலைதல் | ராம் ஸ்ரீதர்

Posted on Leave a comment

பாரதியாரின் கண்ணன் பாட்டு: ஒரு முழுமைப் பார்வை | ஜடாயு

“ஒரு வார்த்தை மட்டும் கூறுகின்றேன். இந்த ஆசிரியன் காலத்திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கின்றேன்”.

– பரலி சு. நெல்லையப்ப பிள்ளை (கண்ணன் பாட்டு முதற்பதிப்பின் முகவுரை, 1917)

Continue reading பாரதியாரின் கண்ணன் பாட்டு: ஒரு முழுமைப் பார்வை | ஜடாயு

Posted on Leave a comment

மகத்தான வெற்றி பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி? | ராம் ஸ்ரீதர்

(பொறுப்புத் துறப்பு: இந்த விஷயத்தில் பல்வேறு இடங்களில் கேள்விப்பட்ட, படித்த, பார்த்து அனுபவித்த விஷயங்களை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மற்றபடி நான் ஒன்றும் ஒரு தில்லாலங்கடி எழுத்தாளர் இல்லை. இன்னும் ஆகவில்லை என்று தன்னாகத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.) Continue reading மகத்தான வெற்றி பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி? | ராம் ஸ்ரீதர்

Posted on Leave a comment

வலையில் சிக்காத தீவிரவாத யானை | ராம் ஸ்ரீதர்

பனிக் குல்லா போட்டுக் கொண்ட மலைச்சிகரங்கள், மரகதப் பச்சையில் கம்பளம் விரித்த பள்ளத்தாக்குகள், ஆப்பிள் தோட்டங்கள், குங்குமப்பூ நிறைந்த நிலங்கள்…. இந்த அழகான, கவித்துவமான சூழ்நிலையைப் பார்க்கும்போது காஷ்மீர்ப் பள்ளத்தாக்கை யாரும் தீவிரவாதிகள் நிறைந்த இடம் என்று சொல்ல மாட்டார்கள்.

ஆனால், பல ஆண்டுகளாக இந்த இடம் அமைதியின்றித் தத்தளித்துக் கொண்டுள்ளது. நமக்குச் சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகள் மேலாகியும், இந்தப் பூவுலகச் சொர்க்கத்தின் மீது பாகிஸ்தான் கொண்ட வெறி கொஞ்சமும் குறையவில்லை. ஆம், அதை வெறி என்றுதான் சொல்லவேண்டும். ஆசை, காதல் போன்றவை மென்மையான வார்த்தைகள். அவை பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் மீது இருக்கும் அதீத வெறியை வர்ணிக்கப் போதாது.

31 அக்டோபர் 2019 முதல் இத்தனை வருடங்களாக ஜம்மு/காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த தன்னாட்சியைத் திரும்பப்பெற்று, லடாக் பகுதி மற்றும் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தது இந்திய அரசு.

பெரும்பான்மை ஹிந்துக்கள் இருக்கும் ஜம்முவில் இதற்குப் பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லாத நிலையில், பெரும்பான்மையாக முஸ்லிம்களும், முஸ்லிம் தீவிரவாதிகளும் நிறைந்த காஷ்மீரில் எதிர்பார்த்தது போலவே தீவிர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Continue reading வலையில் சிக்காத தீவிரவாத யானை | ராம் ஸ்ரீதர்

Posted on Leave a comment

கேரளத்தின் சங்கர மடங்கள் | V.அரவிந்த் ஸுப்ரமண்யம்

ஆதி சங்கர பகவத்பாதர், நம் ஸனாதன தர்மத்தைக் காக்க வேண்டி பாரத பூமி முழுவதும் பயணம் செய்து நமது தர்மத்திற்குப் புத்துயிரூட்டினார். நம் பாரதத்தின் ஆச்சார்ய புருஷர்களில் மிக முக்கியமான ஒருவராகவே சங்கரர் விளங்குகிறார்.

அதன் அங்கமாக, இந்தியாவின் பல இடங்களில் அவருடைய சம்பந்தம் சொல்லப்படுகிறது. அவர் இந்த இடத்துக்கு விஜயம் செய்திருக்கிறார், இந்தக் கோவிலில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்திருக்கிறார், இந்த இடத்தில் அவர் தவம் செய்து இருக்கிறார் என்று பல தலங்களைச் சொல்லுவது வழக்கம். அதே போல அவருடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் இந்த இடத்தில்தான் நடந்தது என்று ஒரே சம்பவத்தை இரண்டு மூன்று இடங்களில் சொல்வதும் வழக்கம் உண்டு. அந்த அளவுக்கு சங்கரரின் தாக்கம் பாரதக் கலாசாரத்தில் உண்டு.

அதேபோல சங்கர மடங்கள் என்று ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட மடங்களைப் பற்றியும், ஆதிசங்கரர் சமாதியான இடம் குறித்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் உண்டு.

Continue reading கேரளத்தின் சங்கர மடங்கள் | V.அரவிந்த் ஸுப்ரமண்யம்