தட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமிச உணவு பரிமாறப்படுகிறது? – பீட்டர் ஸிங்கர் – தமிழில்: அனீஷ் கிருஷ்ணன் நாயர்
பீட்டர் ஸிங்கர் (Peter Singer) மெல்போர்னில் பிறந்தார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்ற இவர், சமகாலத் தத்துவவியலாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்போது ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரி அறம் (bioethics) சார்ந்த துறையின் பேராசிரியராகவும், மெல்போர்ன் பல்கலையில் தத்துவப் பேராசிரியராகவும் பணிபுரிகிறார். ‘அறம்’ என்பதுதான் இவரது முக்கிய ஆய்வுக் கருதுகோள். தத்துவம் மற்றும் அறம் சார்ந்த விவாதங்களை தமது குறும் பத்திகள் வாயிலாகத் தினசரி வாசகர்களிடம் சேர்த்தது இவரது தனிச்சிறப்பு. Ethics in the Real World என்னும் புத்தகம் இத்தகைய 86 கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றில் ஒரு சில கட்டுரைகள் அதிர்ச்சியூட்டுபவை.இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை வாஷிங்டன் போஸ்ட் இதழில் 2012ம் வருடம் வெளிவந்தது. இக்கட்டுரையை Frances Kissing என்னும் அறிஞர் மற்றும் செயல்பாட்டாளருடன் இணைந்து எழுதியுள்ளார்.இன்று சுற்றுச்சூழல் செயல்பாடு என்பது லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. பல நேரங்களில் இத்தேசத்திற்கு எதிராகச் செயல்படும் நபர்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் என்னும் பெயரில் சுற்றி வருகின்றனர். (இவர்களில் ஒரு சில நபர்களை A Dictionary of Fashionable Nonsense செல்லமாக ‘தர்பூசணி’ என்றழைக்கிறது; வெளியே பச்சை, உள்ளே சிவப்பு!) இத்தகைய சூழ்நிலையில்தான் பீட்டர் ஸிங்கர் நமக்கு வழி காட்டுகிறார். பன்னாட்டு நிதி உதவியுடன் செய்யப்படும் பெரும் போராட்டங்கள்தான் சுற்றுச்சூழலைக் காக்கும் என்றில்லை. தனி நபர்களின் உணவுத் தேர்வுகளும் சுற்றுச்சூழலைக் காக்க உதவும் என்பதை ஸிங்கர் தெளிவுபடுத்துகிறார். மேலும் ஸிங்கரின் கட்டுரை நமக்குப் போலிகளை இனம் காணவும் உதவுகிறது.
ரியோ டே ஜெனிரோவில் நடக்கும் ‘நீடித்திருக்கும் வளர்ச்சி’ (sustainable development) தொடர்பான கூடுகையில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடப் போகிறார்கள். இருபது வருடங்களுக்குப் பிறகு இதே நகரில் இவர்கள் ஒன்று கூடப் போகிறார்கள். அன்று, இங்கு முதல் ‘புவி மாநாடு’ (Earth Summit) நடந்தது. அன்றிலிருந்து இன்று வரை இக்கூடுகைகளின் குறிக்கோள் பைங்குடில் வாயுக்களின் (பசுமைவீடு வாயுக்கள் Greenhouse gases) வெளியேற்றத்தைக் குறைப்பதன் வாயிலாக, மிகக் கடுமையான வறுமையில் வாழும் 1.3 பில்லியன் ஏழைகளுக்கு உதவுவது எப்படி என்பது குறித்த ஆய்வுதான். இன்னும் வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில், ‘வருங்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையை, வாழ்வுரிமையை அபாயத்திற்குள்ளாக்காமல் நாம் அறத்தோடு வாழ்வது எப்படி?’ என்பது இத்தகைய கூடுகைகளின் குவிமையப் பொருள். இதுதான் அவர்களது செயல்திட்டத்திலும் இருக்கிறது.
என்ன நடக்குது சபரிமலையிலே…? – ஆனந்தன் அமிர்தன்
இராமானுசன் என்னும் சமதர்மன் – ஆமருவி தேவநாதன்
பசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் – பி.ஆர்.ஹரன்
“வேளாண்மை பற்றிப் பேசும்போது ‘கால்நடைப் பண்ணை’ என்று நாம் சொல்வதில்லை. ‘பசுப்பாதுகாப்பு’ என்றுதான் சொல்கிறோம். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகெங்கும் கால்நடைப் பண்ணைகள் இருக்கின்றன. ஆனால் நம்மிடம் கால்நடைப் பண்ணைகள் இல்லை; நம்மிடம் பசுப்பாதுகாப்புதான் இருக்கின்றது. பசுக்களைப் பாதுகாப்பது! தர்மத்தின் பாதுகாப்பு என்றால் பசுப்பாதுகாப்பும்தான்! நம் அரசியல் சாஸனம் வழங்கியுள்ள வழிகாட்டும் கோட்பாடுகளில் பசுப்பாதுகாப்பும் ஒன்று. அதன்படி, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பசுவதையைத் தடைசெய்து சட்டம் இயற்றலாம். பசு என்பது ‘உபலக்ஷணம்’. உபலக்ஷணம் என்பது அனைத்து விலங்குகளுக்கும் பொருந்தும். ஆகவே, விலங்குகள் நமக்குத் துன்பம் தராமல் இருக்கின்றபோது நாமும் அவற்றுக்குத் துன்பம் தராமல் இருக்க வேண்டும்.”
– பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி
பா.ஜ.கவின் பிரதான கொள்கை
அரசியல் அமைப்புச் சட்டத்தில் பசுவதை
பாரத கலாசாரத்தில் பசுவின் பெருமை
சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள்
தர்மத்தின் பாதுகாப்பு பசுப்பாதுகாப்பும்தான்
ஜல்லிக்கட்டு: சில உண்மைகள் – அரவிந்தன் நீலகண்டன்
வலம் மே 2017 படைப்புகள்
- அசோகமித்திரன் – நுணுக்கத்தின் மகத்துவம் – ஜடாயு
- அசோகமித்திரன்: விடைபெற்றுச் சென்ற தனித்துவக்குரல் – பா.சி. அனீஷ் கிருஷ்ணன் நாயர்
- திராவிட இயக்கம் என்னும் அபத்தம் – ஆமருவி தேவநாதன்
- நாளைய நகரங்கள் – கிஷோர் மகாதேவன்
- தமிழக விவசாயிகளின் போராட்டம் – ராஜா ஷங்கர்
- ஒரு நொடி – லதா ரகுநாதன்
- பிக் டேட்டா – சுஜாதா தேசிகன்
- மேகாலயா பயணம்: கடவுளின் தோட்டம் – திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்
- உரையாடும் ரோபோ: சாட்பாட் (Chatbot) – ஜெயராமன் ரகுநாதன்
- அயோத்தியில் ராமர் கோவில்: இறுதிக்கட்டத்தில் ராமஜன்ம பூமி வழக்கு – பி.ஆர்.ஹரன்
- ஸார்… வோட் ப்ளீஸ்! – ஜெ.ராம்கி
- ஜக்கி வாசதேவும் ஸ்டீபன் ஜேகவுல்டும் – அரவிந்தன் நீலகண்டன்
- அட்டைப்பட அசோகமித்திரன் ஓவியம் – லதா ரகுநாதன்
வலம் ஜனவரி 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்
பைரப்பாவின் பித்தி: பெருந்துயரங்களைத் தாண்டி வாழ்தல் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்
அபரத்யாகராஜூ – ரஞ்சனி ராமதாஸ்
ஐசாக் அஸிமாவ்வின் புனைவுகளில் மதம் – அரவிந்தன் நீலகண்டன்
சோவைப் பற்றிப் பேசுகிறேன் – சுப்பு
ஆசிரியர் சோ – பி.கே. ராமசந்திரன்
குருவை மிஞ்சிய சிஷ்யை – ஜெ.ராம்கி
ஜெயலலிதா மறைவு – அடுத்து என்ன? – பி.ஆர். ஹரன்
தமிழக அரசியலின் எதிர்காலம்: ஜெயலலிதா மறைவுக்குப் பின் – லக்ஷ்மணப் பெருமாள்
அழகிய சிக்கிம் – ஹரி வெங்கட்
சோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் – ஆமருவி தேவநாதன்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் – ’என்றென்றும் அன்புடன்’ பாலா
சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் – ஜடாயு
சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் – ஜடாயு
வரலாற்றிலும் இலக்கியங்களிலும் கோயில் சிற்பங்களிலும் அவருக்கும் நல்ல ஆர்வமும் ஈடுபாடும்
உண்டு.கோயிலில் உள்ள விஷயங்களையெல்லாம் நிதானமாக ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு உரையாடியபடியே
வந்தோம். நடராஜர் வீற்றிருக்கும் கனகசபையின் கூரையில் வேயப்பட்டுள்ள தங்க ஓடுகளைத்
தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தோம். “சோழனும் பாண்டியனும் போட்டி போட்டுக்கொண்டு
இந்தக் கோயிலை அலங்கரித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? ‘சென்னி அபயன் குலோத்துங்கச்
சோழன் தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறு’ என்று பெரியபுராணத்தில்
ஒரு இடத்தில் வருகிறது. ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்கு ‘கோயில் பொன்வேய்ந்த பெருமாள்’
என்றே ஒரு பட்டப்பெயர் உண்டு. தமிழ் மன்னர்கள் அன்று இங்கே கொண்டு வைத்த தங்கம் இவ்வளவு
நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எப்படி தகதகக்கிறது பாருங்கள்.” – மிகவும் நெகிழ்ச்சியுடன்
சொல்லிக்கொண்டு போனார் நண்பர்.
என்ன ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா என்பது போலப் பார்த்தார். “நீங்கள் சொன்னது சரிதான்.
ஆனால், அந்தப் பொன் அல்ல இப்போது நீங்கள் இங்கே பார்ப்பது” என்றேன். அவர் ஒரே நேரத்தில்
ஆச்சரியமும் பதற்றமும் அடைந்தார். அக்கோயில் வரலாற்றின் சில பக்கங்களை அவருக்கு விளக்கினேன்.
இக்கட்டுரைக்கான பின்னணி இதுதான்.
சிதைக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டது குறித்த வரலாறு இப்போது ஓரளவு பரவலாகத்
தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. மதுரைக் கோயிலில் இது குறித்த ஒரு தகவல் பலகையும்
உள்ளது. ஆனால், சிதம்பரம் மற்றும் இன்னும் சில முக்கியக் கோயில்களும் இதே போன்ற தாக்குதல்களுக்கு
உள்ளாகிப் பிறகு அழிவிலிருந்து மீண்டெழுந்தன என்பது பலர் அறியாதது.
என்ற இடத்தை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான். வீரபாண்டியனின் படைகளில் பணிபுரிந்து
வந்த 20,000 முஸ்லீம் படைவீரர்கள் தக்க சமயத்தில் தம் கடமையையும் நன்றியையும் மறந்தவர்களாய்
மாலிக்காபூர் படையினருடன் சேர்ந்து கொண்டனர். வீர்பாண்டியன் ஊரைவிட்டே ஓடிவிட்டான்…
காடுகளில் ஒளிந்து ஒளிந்து வெளிப்பட்டான். தன் கைகளிலிருந்து நழுவி நழுவிச் சென்ற வீரபாண்டியனைத்
துரத்திக் கொண்டு மாலிக்காபூர் சிதம்பரம் வந்தடைந்தான். ஆங்குப் பொன்னம்பலத்தை அடியுடன்
பேர்த்தெடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினான். ஊருக்கும் தீயிட்டான். உடைமைகளைச்
சூறையாடினான். ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்து வெறியாட்டயர்ந்தான்.
சிதம்பரத்தில் இருநூற்றைம்பது யானைகளைக் கைப்பற்றினான். கொள்ளையடித்த பொன்னையும் மணியையும்
யானைகளின் மேல் ஏற்றிக் கொண்டான். மீண்டும் பீர்தூலை நோக்கித் தன் படையைச் செலுத்தினான்.
ஆங்காங்கே கண்ணில்பட்ட கோயில்கள் அத்தனையும் இடித்துத் தரைமட்டமாக்கினான் (கி.பி.
1311). திருவரங்கத்தையும் அவன் விட்டு வைத்தானல்லன்.” (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்”,
கே.கே. பிள்ளை, பக். 386-387).
கண்டேன். இதற்கு அடிப்படையாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களே எழுதிவைத்த ஆதாரபூர்வமான
ஆவணங்கள் உள்ளன என்பது பின்னர் தெரியவந்தது.
குஸ்ரு எழுதியுள்ள ‘வெற்றிப் பொக்கிஷங்கள்’ (Khazain-Ul-Futuh) என்ற நூலில் மாலிக்
காபூரின் படையெடுப்பு குறித்த விவரங்கள் தேதியிட்டுத் தரப்பட்டுள்ளன. இதன்படி, மாலிக்
காபூரின் தமிழ்நாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்த காலம் 1311ம் ஆண்டு மார்ச் 10 முதல் ஏப்ரல்
25 வரை 45 நாட்கள். இப்படையெடுப்பு தொடர்பான ஒரு குறிப்பிட்ட பகுதியை அமீர் குஸ்ருவின்
சொற்களிலேயே காண்போம்.
ராஜா மறுபடி தப்பித்து விட்டான். எனவே, காண்டூரில் முழுப் படுகொலை ஆணையிடப்பட்டது.
அவன் ஜால்கோட்டாவுக்கு தப்பியோடி விட்டான் என்று தெரியவந்தது. அங்கு மாலிக் அவனை மீண்டும்
துரத்தினான். அவன் காடுகளுக்குள் தப்பித்து ஒளிந்திருந்தான். மாலிக் அங்கு புகமுடியவில்லை.
எனவே மீண்டும் காண்டூருக்குத் திரும்பிவந்தான். இங்கு, பிரம்ஹஸ்த்புரி என்ற இடத்தில்
உள்ள தங்க விக்கிரகத்தைப் பற்றியும் அதைச் சுற்றிலும் யானைகள் கட்டிவைக்கப்பட்டிருப்பதையும்
குறித்து அவன் அறிந்தான். அந்த இடத்தைக் குறிவைத்து மாலிக் ஒரு இரவுப் படையெடுப்பை
நிகழ்த்தினான். காலையில் இருநூற்றைம்பதுக்குக் குறையாத எண்ணிக்கையில் யானைகளைக் கைப்பற்றினான்.
பிறகு, அவன் அந்த அழகிய கோயிலை அடியோடு தகர்ப்பதற்குத் தீர்மானித்தான். அது ஷாதாதின்
சொர்க்கம் போல இருந்து, இழக்கப்பட்ட பிறகு அந்த நரகவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ராமனின்
பொன்மயமான இலங்கை போன்று இருந்தது என்று கூறலாம். மொத்தத்தில் அது ஹிந்துக்களுக்குப்
புனிதமான ஒரு இடம். மாலிக் மிகவும் கவனத்துடன் அஸ்திவாரத்தோடு அதைப் பெயர்த்து எடுத்தான்.
பிராமணர்கள் உள்ளிட்ட காஃபிர்களின் தலைகள் அவர்கள் கழுத்திலிருந்து ஆடி ஆடி அவர்கள்
கால்களின் கீழ் நிலத்தில் விழுந்தன. ரத்தம் வெள்ளமாகப் பெருகி ஓடிற்று.
காஃபிர் பெண்கள் தங்கள் பிறப்புறுப்புக்களை இதன்மீது தேய்த்து மகிழ்ச்சியடைவார்களாம்.
இந்த அனாசாரங்களை இது நாள்வரை இஸ்லாம் என்ற குதிரை உடைத்து எறியாமல் இருந்தது. இப்போது
முஸல்மான்கள் எல்லா லிங்கங்களையும் அழித்தொழித்தார்கள். தேவ் நாரயண் கீழே விழுந்தது.
அங்கே பீடத்தில் அமர்ந்திருந்த மற்ற கடவுளர்கள் இலங்கைக் கோட்டையில் சென்று விழுந்தனர்.
லிங்கங்களுக்கும் கால்கள் இருந்தால் அவையும் பறந்து சென்றிருக்கும். பெருமளவிலான பொன்னும்,
விலையுயர்ந்த நகைகளும் முஸல்மான்களின் கைகளில் வந்து சேர்ந்தது. இவ்வாறு தங்கள் புனிதக்
கடமையை முடித்த பிறகு, ஹிஜ்ரி 710 ஜில்கிதா 13ம் நாள் (1311 ஏப்ரல் 4) முஸல்மான்கள்
தங்கள் அரச கூடாரத்துக்குத் திரும்பினர். பிறகு பிர்தூலில் இருந்த அனைத்துக் கோயில்களையும்
அழித்தனர். கொள்ளைகளைப் பொக்கிஷத்தில் சேர்த்தனர்.”
Dowson: Vol II, pp 90-91)
இடங்களை வரலாற்றாசிரியர்கள் அடையாளம் காண முயன்றுள்ளார்கள். ‘பிர்தூல்’ என்பது ‘வீரதாவளம்’
எனப்பட்ட ஜெயங்கொண்ட சோழபுரம். ‘காண்டூர்’ என்பது ஹொய்சளர்களுக்கும் மதுரையிலிருந்து
ஓடிவந்த வீரபாண்டியனுக்கும் முக்கியத் தளமாக விளங்கிய கண்ணனூர். ‘ஜால்கோட்டா’ எந்த
ஊர் என்று தெரியவில்லை. கொள்ளிடத்திற்கு அருகில் இருந்த பழைய ‘நீர்க்கோட்டை’யைக் குறிக்கலாம்
என்ற ஊகம் உள்ளது. பிரஹ்மஸ்த்புரி
என்று குறிக்கப்படுவது சிதம்பரம்தான் என்று சீதாராம் கோயல்1, ரிச்சர்ட் எம் ஈடன்2 உள்ளிட்ட பல வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். கிருஷ்ணசுவாமி
ஐயங்கார் சிதம்பரத்திற்குரிய சைவாகமப் பெயரான பிரம்மபுரி என்பதன் திரிந்த வடிவமே அது
என்கிறார். லிங்க் மஹாதேவ், தேவ் நாராயண் என்று இரு கடவுளர் பெயர்களையும் குறிப்பிடுவதால்
நடராஜர், கோவிந்தராஜர் இருவரும் உறையும் சிதம்பரம் கோயில்தான் அது என்கிறார்3. விதிவிலக்காக,
குடவாயில் பாலசுப்ரமணியன் இது பிரகதீஸ்வரபுரி எனப்படும் தஞ்சையைக் குறிக்கலாம் என்று
கருதுகிறார். தஞ்சைப் பெரிய கோயிலின் மகாமண்டபம், திருச்சுற்று மாளிகை மற்றும் பிரகாரங்களிலுள்ள
சிற்பங்களில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள், இந்தப் படையெடுப்பின் போது நிகழ்ந்திருக்கலாம்
என்றும் சிவலிங்கத்தின் பீடத்தை உடைக்க முயற்சி செய்து அதில் இஸ்லாமியப் படையினர் தோல்வியுற்றனர்
என்றும் கூறுகிறார்4. எப்படியானாலும், சோழநாட்டின் எல்லா முக்கியக் கோயில்களுமே
இக்காலகட்டத்தில் மிக மோசமாக சேதப்படுத்தப்பட்டன என்பதில் ஐயமில்லை.
அழித்தொழிப்பையும் இவ்வாறு பெருமிதத்துடன் எழுதிச் செல்லும் இந்த அமீர் குஸ்ருதான்
சிறந்த பாரசீக, உருது மொழிக் கவிஞராகவும் சூஃபி ஞானியாகவும் மேதையாகவும் அறியப்படுகிறார்.
அதற்கும் மேலாக, இந்தியாவின் மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் குஸ்ருவை மத நல்லிணக்க உணர்வின்
சின்னமாகவும், இந்திய கலாசாரப் பன்மையின் அடையாளமாகவும் முன்வைப்பது குரூரமான நகைச்சுவை
அன்றி வேறில்லை. இதே போன்ற விவரணங்கள் குஸ்ருவின் நண்பரும் கவிஞருமாகிய ஜியாசுதீன்
பரனி எழுதிய Tarikhi Firoz Shahi என்ற நூலிலும், வேறு சில இஸ்லாமியப் பதிவுகளிலும்
உள்ளன.
பின்பு 1318ல் குஸ்ரூகான் தலைமையில் மீண்டும் ஓர் இஸ்லாமியப் படை தில்லியிலிருந்து
வந்து தமிழகக் கோயில்களைக் கொள்ளையடித்துச் சிதைத்துவிட்டுப் போயிற்று. 1320 முதல் சுமார் 50 ஆண்டுகள் மதுரையில்
சுல்தானியக் கொடுங்கோலாட்சி இருந்தது. தமிழக வரலாற்றின் மிக இருண்ட காலகட்டம் இது.
அதன் நிறுவனர்களில் ஒருவரான புக்கராயரின் மருமகன் குமார கம்பணன் இஸ்லாமிய ஆட்சியை முறியடித்து
1371ல் மதுரையை மீட்டார். தமிழ் ஆவணங்கள் ‘வீர கம்பண உடையார்’ என்றே இவரது பெயரைக்
குறிக்கின்றன. இதன்பிறகுதான் அழிந்து வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டுக் கோயில்கள் ஏற்றம்
பெற்றன. “துலுக்கர் கலகத்தால் நாற்பதாண்டுகள் கோயில்கள் மூடப்பெற்றிருந்தன” என்று
1370ம் ஆண்டைச் சேர்ந்த கம்பணரின் இன்னம்பூர் கல்வெட்டு (கும்பகோணம் அருகில்) கூறுகிறது.
திருவையாறு வீரசாவண உடையார் சாசனம் (1381), திருவொற்றியூர் இராஜநாராயண சம்புவரையன்
சாசனம் ஆகியவை துருக்கரால் சிதைக்கப்பட்ட கோயில்கள் புதுப்பிக்கப்பட்டதைக் கூறுகின்றன.
இக்காலகட்டத்தில் சிதம்பரமும் மீண்டிருக்க வேண்டும். இப்போது நாம் காணும் கனகசபை முழுவதும்
சோழரும் பாண்டியரும் அலங்கரித்ததல்ல, விஜயநகர அரசர் எழுப்பியது என்றே கருதவேண்டும்.
பிறகு தொடர்ச்சியாக விஜயநகர மன்னர்கள் சிதம்பரம் கோயிலில் செய்த திருப்பணிகள் பற்றிய
விவரங்கள் கிடைக்கின்றன. 1428ல் மகாதேவராயர் கோயில் நிர்வாகத்தை சீரமைத்தது, 1503ல்
திம்மராயர் ஒரு கிராமத்தை நிவந்தமாக அளித்தது, 1510ல் கிருஷ்ணதேவராயர் வடக்குக் கோபுரத்தைக்
கட்டி, பல பூசைகளுக்கான கொடைகளை அளித்தது, 1529ல் அச்சுதராயர் தேர்த்திருவிழாவைச் சிறப்புற
நடத்த 38 கிராமங்களை சர்வமானியமாக வழங்கியது, 1578ல் வேங்கடதேவராயர் துறவிகளுக்கும்
பக்தர்களுக்கும் கட்டிச்சோறு வழங்க கிராமங்களை அளித்தது என்று இது தொடர்கிறது. பின்னர்
நாயக்க மன்னர்களும் இப்பாரம்பரியத்தினைப் பின்பற்றினர்.
கோயில் பூஜையின்றி இருந்தது. இக்காலகட்டத்தில் நடராஜரின் திருவுருவம் வேறுவேறு இடங்களில்
வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.
(*** இணையப் பதிப்பில் இந்தத் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. தவறைச் சுட்டிக்காட்டிய திரு. அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன் அவர்களுக்கு நன்றி).
என்ற சுவாரஸ்யமான கட்டுரையை எழுதியிருக்கிறார் (நினைவு மஞ்சரி இரண்டாம் பாகம், பக்.
1-10). இஸ்லாமியப் படையெடுப்பு குறித்து அறியவந்த சிதம்பரம் தீட்சிதர்கள் இரவோடிரவாக
நடராஜரின் மூர்த்தியை எடுத்துச் சென்று ஒரு சிற்றூரிலிலுள்ள புளியந்தோப்பில் புளியமரப்பொந்தில்
வைத்து அப்பொந்தை மூடிவிட்டுத் திரும்பி வந்து விடுகிறார்கள். அத்தோப்புக்குச் சொந்தக்காரர்
எதேச்சையாக அதற்குள் நடராஜரின் திருவுருவம் இருப்பதைக் கண்டு இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும்
என்று ஊகிக்கிறார். இந்த மரத்தில் தெய்வம் இருப்பதாகக் கனவு கண்டதாக ஊர்மக்களிடம் கூறிப்
பூசை செய்து வருகிறார். ஆண்டுகள் பல கடந்ததும் சிதம்பரத்தில் அமைதி திரும்புகிறது.
தீட்சிதர்கள் நடராஜரை மறைத்து வைத்த இடத்தை அடையாளம் காண முடியாமல் ஊரூராகத் தேடி அலைகிறார்கள்.
ஓரிடத்தில் “தம்பி, அந்த அம்பலப்புளியில கொண்டு போய் மாட்டைக் கட்டு” என்று ஒரு பெரியவர்
சொல்வதைக் கேட்டு அங்கு சென்று பார்க்க, நடராஜர் உருவம் அங்கு ஒரு புளியமரப்பொந்தில்
இருந்தது கண்டு பெருமகிழ்ச்சியடைந்து, அதை எடுத்துவந்து கோயிலில் பிரதிஷ்டை செய்கிறார்கள்.
இதன் காரணமாகவே அந்த ஊருக்கு புளியங்குடி என்று பெயர் ஏற்பட்டது என்று கூறி அதற்குச்
சான்றாக ‘சோழமண்டல சதகம்’ என்ற நூலிலிருந்து பின்வரும் பாடலையும் உ.வே.சா மேற்கோளாகத்
தருகிறார்.
அடிப்படையிலானதே என்பதற்கான ஆதாரம் செப்பேடுகள் மூலம் உறுதி செய்யப் படுகிறது5. இதில் நான்கு
செப்பேடுகள் (‘தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50’ நூலின் படி, செப்பேடு எண் 45 முதல்
48) சிதம்பரத்தில் நடந்த இரண்டு கும்பாபிஷேக விழாக்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவை
சத்ரபதி சிவாஜியின் புதல்வரான சாம்பாஜி காலத்தியவை.
வரும் பாடலில், முதல் பாதியில் கும்பாபிஷேக ஆண்டு நாள் கிழமை விவரங்கள் உள்ளன. இரண்டாம்
பாதி இவ்வாறு கூறுகிறது –
அளித்த பொன் முழுவதும் இஸ்லாமியப் படையெடுப்பில் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு மூளியாக
இருந்த சிற்சபை, சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு செம்புத் தகடுகள் வேய்ந்து திருப்பணி
செய்யப்படுகிறது என்பது புலனாகிறது. கீழே அடுத்துவரும் பாடலில் இருந்து இந்தக் கும்பாபிஷேகத்தின்போது
நடராஜரின் மூலமூர்த்தி தில்லைக்கு வெளியே இருந்தது என்பதும் தெரியவருகிறது.
வேய்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட செய்தி உள்ளது. இதுதான் இன்று நாம் காணும்
பொன்னம்பலம். இந்த நிகழ்வைக் குறிக்கும் கீழ்க்காணும் செப்பேட்டுப் பாடலில் நடராஜர்
தில்லையிலிருந்து வெளியேறி மீண்டும் திரும்பிவந்த காலக்கணக்கு துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
24) முதல் சகாப்தம் 1608 அட்சய வருடம் கார்த்திகை 14 (1686 நவம்பர் 14) வரை. அதாவது
37 ஆண்டுகள் 10 மாதம் 20 நாட்கள்.
அவரது குலகுருவான முத்தைய தீட்சிதரின் வழிகாட்டலில் திருச்சிற்றம்பல முனிவர் நடத்தி
வைத்தார். பறங்கிப் பேட்டையில் மராட்டிய மன்னரின் அதிகாரியாக இருந்த கோபால் தாதாஜி
பண்டிதர் என்பவர் பொறுப்பேற்று திருப்பணிகளைக் கண்காணித்தார். இந்தச் செய்திகளும் இச்செப்பேடுகளிலிருந்து
தெரிய வருகின்றன.
நடராஜர் தில்லையிலிருந்து வெளியேறி திருவாரூரில் இருந்தார் என்ற செய்தி சிதம்பரம் கோயில்
ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது. ஔரங்கசீப்பின்
இஸ்லாமியப் படைகள் மராத்தியப் படைகளைத் துரத்தி வந்து செஞ்சியில் முகாமிட்டிருந்தது
இதற்குக் காரணமாக இருக்கலாம்.
போராட்டங்களும் துயரங்களும் தியாகமும் நிறைந்தது. அவர் உலகில் வாழ்ந்திருந்ததே 31 ஆண்டுகள்தான்.
ஆட்சியில் இருந்த காலம் பத்தாண்டுகள் கூட அல்ல. அவ்வளவு குறுகிய வாழ்க்கையில் இரண்டு
முறை தில்லை நடராஜரின் கும்பாபிஷேகம் அவரது ஆணையின் கீழ் நடந்திருக்கிறது என்பது மிகவும்
ஆச்சரியத்திற்குரிய விஷயம். இரண்டே
ஆண்டுகளில் சிற்சபைக்குக் கூரையிடும் அளவு பொன்னைத் திரட்டிய சாம்பாஜியின் பக்தியுணர்வும்,
முயற்சியும் வியக்க வைக்கின்றன. 1689ம் ஆண்டு சாம்பாஜி இஸ்லாமியப் படைகளால்
சிறைப்பிடிக்கப்பட்டார். ஔரங்கசீப்பின் ஆணைப் படி அவர் குரூரமாகச் சித்திரவதை செய்து
கொல்லப்பட்டார் என்பது வரலாற்றில் ஆதாரபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கூடுதலாக,
ஔரங்கசீபின் முன் தலைவணங்கி இஸ்லாம் மதத்தை ஏற்றால் சாம்பாஜியை விடுவிக்கிறோம் என்று
ஆசைகாட்டப்பட்டது என்றும், சாம்பாஜி அதை மறுத்து மரணத்தைத் தழுவி தனது வீரமரபின் மேன்மையைக்
காத்தார் என்றும் மராட்டிய வீரகதைப் பாடல்கள் கூறுகின்றன. சாம்பாஜியை ‘தர்மவீரன்’ என்று
புகழ்கின்றன.
இந்த வரலாறும் உங்கள் நினைவில் எழட்டும். ஸ்தலபுராணக் கதைகளோடு சேர்த்து, அந்தந்தத்
தலத்தின் புனிதத்தையும் பண்பாட்டையும் காப்பதற்காக நமது முன்னோர்கள் தொடர்ந்து போராடிய
தியாக வரலாறுகளையும் அறிந்து கொள்வோம். அவற்றை நமது அடுத்த தலைமுறைக்கும் கூறுவோம்.
Islamic Evidence), Sita Ram Goel. Voice Of India, Ch. 7
Eaton, Frontline, Jan 2001, pp 72-73
Aiyangar, pp 109.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் – ‘என்றென்றும் அன்புடன்’ பாலா
ஆண்டாள் என்ற பெயரைக் கேட்டவுடன் நமக்கு மார்கழி மாதமும், பாவை நோன்பிருந்து ஆண்டாள்
பாடிய திருப்பாவையும் ஞாபகத்துக்கு வந்து விடுகின்றன. ஆண்டாளின் திருப்பாவை அத்தனை
சிறப்புடையது. பன்னிரு ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களை, நாதமுனிகள் என்ற வைணவப்பெருந்தகை
தேடித் தொகுத்து, இசையுடன் வழங்க, அதுவே நாலாயிர திவ்யப் பிரபந்தமாக வைணவக் கோயில்களில்
ஓதப்படுகிறது.
மழைக்காலம் கழிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள். ஆயர்பாடியிலுள்ள கன்னியர்கள்,
நாட்டு நலத்திற்காகவும் பால் வளம் பெருகவும் நல்ல கணவர்களை அடையவும் நோன்பு நோற்றனர்.
மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப் பெண்களால் நோற்கப்பட்டதால்
‘பாவை நோன்பு’ என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும்
எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி,
பார்வதி தேவியைப் பாடித் துதித்து வழிபட்டனர்.
ஆயர்குலப் பெண்ணாகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, ‘பாவை நோன்பு’ நோற்ற சமயம் சூடிக்கொடுத்த
நாச்சியார் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’.
நாச்சியார் திருமொழியும். 30 பாசுரங்கள்
கொண்ட திருப்பாவை, கோதா பிரபந்தம்/உபநிடதம் என்று வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. இவற்றை
அருளிய சமயம் ஆண்டாள் பதின்ம வயதில் இருந்தாள் என்பது பாசுரங்களைப் பார்த்தாலே விளங்கும்.
அவரது பாசுரங்களை வாசித்து அனுபவிக்கையில், அந்தச் சின்னப்பெண்ணுக்குத் தமிழில் இருந்த
பெரும்புலமை பிரமிக்க வைக்கும். அதிலும் திருப்பாவை மிகக் கடினமான ‘இயல் தரவிணை கொச்சகக்
கலிப்பா’ வகையைச் சேர்ந்தது. ஆக, கோதை ஆண்டாள் தமிழையே ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில்
பதினெட்டு வயதுக்கு முன்னரே, திருப்பாசுரங்கள் அருளியவர்கள், தலையாய நம்மாழ்வாரும்,
ஆண்டாளும் மட்டுமே என்பது குறிப்பிடவேண்டியது.
திருப்பாவை முப்பதும் செப்பியவள், இராமானுஜருக்குத் தங்கையாகக் கருதப்படுபவள், ஒரு
நூற்று நாற்பத்து மூன்று உரைத்தவள் (நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள் கொண்டது),
உயர் அரங்கர்க்கே கண்ணி (மாலை) உகந்து அளித்தவள். அதனால் அவள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி.
அழகு பார்த்து, பெருமாளை மணமுடிப்பதற்குத் தான் பொருத்தமானவளா என்றும் எண்ணிப்பார்த்துவிட்டே
கோதை அவற்றைக் கோயிலுக்கு அனுப்புவாளாம். ஒருநாள் பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு,
“இது தகாத காரியம்” என்று கடிந்து, அடுத்த முறை ஆண்டாள் சூடிப் பார்க்காத மாலையை எடுத்துச்
சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உவப்பானது; அதை எடுத்து வாரும்!”
என்றாராம்.
அம்சமாக இருக்கலாம்’ என்று எண்ணி, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று தன் பெண்ணை அழைக்கலானார்.
மணப்பருவம் வந்தவுடன், கோதையை அலங்கரித்து பெரியாழ்வார் திருவரங்கத்துக்கு அழைத்து
வந்து, அரங்கனின் சன்னதியில் அவளை விட்டுவிட, கோதை அரங்கனுடன் ஐக்கியமாகி மறைந்து போனாள்
என்பது குரு பரம்பரை சொல்லும் ஆண்டாள் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள் ஆண்டாளின் பல
நாச்சியார் திருமொழிப் பாசுரங்களில் இருக்கின்றன.
வைத்துக்கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவை/நாச்சியார் திருமொழிப்
பாசுரங்களில் காணப்படும் கடலை ஒத்த பேரன்பும், பிரவாகமாகப் பெருக்கெடுக்கும் பக்தி
ரசமும், கவிதை நயமும், அழகியல் உணர்வும் தனித்துவமானவை. ஒரு தெய்வப் பெண்ணின் காலத்தினால்
அழியாத தமிழ்ப் புலமைக்கும், கவித்துவ அழகுக்கும் நாம் தரும் மரியாதைக்கும் கௌரவத்திற்கும்
இன்றளவும் சாட்சிகளாக, வருடாவருடம் நடக்கும் திருவில்லிபுத்தூர் உத்சவமும், தைலக்காப்பும்,
பிரியாவிடை சேவையும் விளங்குகின்றன.
பலமுறை திருப்பாவையை ஓதி வந்தார். திருப்பாவையின் மீது இருந்த ஈடுபாடே ராமானுஜருக்கு
‘திருப்பாவை ஜீயர்’ என்ற பட்டத்தை அவரது ஆச்சார்யனான பெரிய நம்பியிடம் பெற்றுத் தந்தது.
ராமானுஜர் திருப்பாவை குறித்த உபன்யாசங்கள் செய்ததோ, விளக்கங்கள் எழுதியதோ கிடையாது.
அதற்கு ஆண்டாள் மீது உடையவருக்கு இருந்த பிரியமும், பெருமதிப்பும் ஒரு காரணம். இன்னொரு
காரணம், தான் திருப்பாவைக்கு ஈடு எழுதும் பட்சத்தில், பின்னாளில் யாரும் அதற்கு வித்தியாசமான
விளக்கம் எழுதத் துணியமாட்டார்கள் என்று அவர் கருதினார். ராமானுஜருக்கு விரிந்த தொலைநோக்குப்
பார்வை இருந்ததும், திருப்பாவையின் சீர்மையும் இதனால் நமக்குப் புரியலாம்.
ஆழ்த்தும். ஐந்து இறை நிலைகளில், முதல் பாசுரத்தில் பரம்பொருளையும் (நாராயணனே நமக்கே),
2வதில் பாற்கடலில் பள்ளி கொண்ட வியூகப் பெருமாளையும் (பையத்துயின்ற பரமன்), 3வதில்
விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமனையும் (ஓங்கி உலகளந்த உத்தமன்), 4வதில் அந்தர்யாமியாக
எங்கும் வியாபித்திருக்கும் ஊழி முதல்வனையும் (ஊழி முதல்வன் உருவம் போல்), 5வதில் கோயில்களில்
எழுந்தருளியிருக்கும் பெருமாளின் அர்ச்சாவதர கோலத்தையும் (மன்னு வடமதுரை மைந்தனை) சூடிக்கொடுத்த
நாச்சியார் பாடியிருக்கிறாள். ஆக, ஆண்டாள். வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூக,
விபவ, அந்தர்யாமி, அர்ச்ச நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடியிருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
(கண்ணன்) குறித்தும்,
கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றியும்,
உறக்கம் விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியவர் கூட்டத்தோடுச்
சேருமாறு விண்ணப்பித்தும்,
எழுப்பி, உள் செல்ல அனுமதி வேண்டியும்,
பலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக விண்ணப்பித்தும்,
விழித்தெழ வேண்டியும்,
உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தும்,
போற்றியும், தங்கள் அபிமான பங்க நிலைமையை ஒப்புக் கொண்டும், கண்ணனின் அருட்கடாட்சத்தை
மட்டுமே (தங்கள் சாபங்கள் ஒழிய) நம்பி வந்திருப்பதையும்,
அமர வேண்டியும்,
செய்தும்,
அரவணைக்க அவனைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று உணர்த்தியும்,
தாங்கள் வேண்டும் பரிசுகளைப் பட்டியலிட்டும்,
மேன்மை, அவனுடனான பிரிக்க முடியாத உறவு, தங்களது பாவ பலன்களை நீக்கக் கோருதல் ஆகியவை
பற்றியும்,
திருச்சேவை செய்வதற்கு அருள வேண்டியும்,
அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளியிட்டும்,
தொடர்ச்சியும் ஓட்டமும் பங்கப்படா வகையில், கோதை நாச்சியார் ஒரு கிருஷ்ண காவியத்தையே
படைத்துள்ளார்.
பெறச் செல்லும்போது (பாதுகைகள் அணியத் தடையில்லாதபோதும்) ராமானுஜர் பாதுகைகள் அணியாமல்தான்
செல்வார். அச்சமயங்களில் அவர் திருப்பாவையை உரக்க ஓதியபடி செல்லும் பழக்கம் இருந்ததால்,
பாதுகைகள் அணிந்து செல்வதை ஆண்டாளுக்கும், திருப்பாவைக்கும் செய்யும் அவமரியாதையாகவே
கருதினார்.
ராமானுஜர், ‘உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்’ என்ற 18வது பாசுரத்தை பாடிய வண்ணம்
தனது குருவான திருக்கோட்டியூர் நம்பி அவர்களின் வீட்டு வாசற்கதவைத் தட்டினார். பிட்சையோடு
வந்த பெரிய நம்பியின் மகளான அத்துழாய் கைவளை குலுங்கக் கதவைத் திறக்கவும், ராமானுஜர்
‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்’ என்று பாடி முடிக்கவும் சரியாக
இருந்தது. அவளைக் கண்ட மாத்திரத்தில், பாசுர வரிகளில் லயித்திருந்த ராமானுஜர், அத்துழாயை நப்பின்னை பிராட்டியாக எண்ணிக்
கொண்டு, நெடுஞ்சாண்கிடையாக அவள் கால்களில் விழுந்து சேவித்து, மயங்கிவிட்டார்.
சரியாக ராமானுஜர் ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தைப் பாடியபோதுதான் இப்படி ஒரு நிகழ்வு
ஏற்பட்டு அவர் மயங்கியிருக்கவேண்டும் என்பதைக் கணித்து விட்டார். ஆக, இப்பாசுரம் உடையவருக்கு
மிகவும் உகந்தது. அதனாலேயே, இப்பாசுரத்தை வைணவக் கோயில்களில் இரண்டு தடவை பாடுவது வழக்கமாக
இருந்து வருகிறது.
தோற்கடித்து விட்டு, கண்ணனை ஒரு கையாலும், பூப்பந்தை ஒரு கையாலும் அணைத்த வண்ணம் கிடந்த
நப்பின்னையின் கோலம் சித்தரிக்கப்படுகிறது. ஐம்புலன்களில் ‘தொடுதல்’ என்பது மேலே சொல்லப்பட்டது.
அது போல, மற்ற நான்கு புலன்களின்அனுபவமும் சொல்லப்பட்டுள்ளது சிறப்பு.
(ஒன்றே) என்பதையும், அவர்கள் இருவரும் சேர்ந்தே உபாயமாகவும் (வழிமுறை) உபேயமாகவும்
(இலக்கு) இருப்பதையும் இப்பாசுரம் உணர்த்துகிறது. இதை வடமொழியில், ‘ஏக சேஷித்வம்’ என்றுரைப்பார்கள்.
வரை உள்ள 10 பாசுரங்கள்) ‘ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி’யாக, அதாவது ஒவ்வொரு பாசுரமும்
ஓர் ஆழ்வாரை (முறையே, பெரியாழ்வார், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார்,
பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார்,
திருமங்கையாழ்வார்) துயிலெழுப்புவதாகச் சொல்வது ஒரு வைணவ மரபு. அதற்கான சுவையான விளக்கங்களும்
உண்டு. பன்னிருவரில், ஆண்டாளும், மதுரகவியாரும் துயில் எழுப்பப்படவில்லை.
வைத்த 3 அடிகளில், பூமியை அளந்த திருவடியைத்தான் கோதை நாச்சியார் போற்றியிருக்கிறார்.
(ஆழ்வார்களும், எந்தை இராமனுசரும் இன்னும் பல மகான்களும் வந்துதித்த) மண்ணுலகம் முழுதுமே
புண்ணிய பூமிதானே! திரிவிக்ரமனே புருஷோத்தமன் (புருஷ உத்தமன்). பரமன் வாமனனாகி மூவுலகை
அளந்த காலத்தில், அவனது திருவடியானது, அடியவர்-கொடியவர் என்று பாராமல் அனைத்து உயிர்களையும்
தொட்டு ரட்சித்தது.
அருளிய புண்ணியத்தலமான திருக்கோவலூரில் ‘நடந்த’ கோலத்தில் அருள் பாலிக்கும் உலகளந்த
பெருமாளை, கோதைக்கு உகந்த கண்ணனாகப் பார்க்கிறோம். எப்படி? திருக்கோவலூர் திவ்வியதேசம்
பஞ்ச கிருஷ்ண சேத்திரங்களில் முதன்மையானது. (மற்ற நான்கு, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி,
திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகியவையாம்.) ஏனெனில், இத்திருத்தலம் ஓர் ஆதி கிருஷ்ண சேத்திரம்.
இங்கு சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஆகையால்,
இக்கண்ணபிரானையே (உலகளந்த பெருமாள் இருந்தாலும்) இத்திருத்தலத்தின் கதாநாயகனாகச் சொல்வது
வைணவ மரபு.
அடைந்துவிடும் ஆசையை வெளிப்படுத்தும் அற்புதமான காதல் பாசுரங்கள்; எப்படியாவது தன்னை
அவ்வழகிய மணவாளனிடம் சேர்த்து விடு என்று ஆண்டாள் காமதேவனை வேண்டி நோன்பு நோற்பதில்
தொடங்கி, பின் கண்ணனின் லீலைகளில் திளைத்து, காதலில் உருகியுருகி பாடியவை அவை.
விருப்பங்கள்; மேகங்களையும் குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலின்
பெருமை பேசுதல், தூது விடுதல்; வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்யும் பிரமாண்டமான கல்யாண
ஊர்வலத்தைக் கனவு காணுதல்; அவன் ஆடையை என்மேல் வீசுங்கள், அவன் திருக்கேசத்தை அலங்கரித்த
துளசி மாலையை என் குழலில் சூட்டுங்கள், அவன் திருமார்பில் தரித்த மாலையை எனக்கு அணிவியுங்கள்,
அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள்,
அவன் திருவடி மண்ணை என் மேல் பூசுங்கள் என்று காதல் அரற்றல்கள்… இப்படி நாச்சியார் திருமொழிப் பாசுரங்களில் ஒரு
சராசரிப் பெண்ணின் பாசாங்கற்ற அதி தீவிரக் காதல் இருப்பதை உணரலாம்.
இது பெரும்பக்தியையும் தாண்டிய ஓர் உன்னத நிலை என்பதைப் புரிந்து உணரவேண்டும். அரங்கனைத்
தன் மணாளனாக மனதில் வரித்துக்கொண்டு, ஆண்டாள் அவன் மீது எடுத்துக்கொண்ட உரிமை, காமம்
என்ற வரையறைக்குள் வரவே வராது. அவனுடன் ‘சேர’ வேண்டும் என்பதான கோதையின் விருப்பம்,
வைகுந்த (மீள்) வாசத்திற்கான பூமிப்பிராட்டியின் ஏக்கம்.
பார்க்கலாம்.
போய் அரங்கனின் கருவறையில் கரைந்துவிட்டாள். ‘நூறு அண்டா வெண்ணெய்யும் நூறு அண்டா
சக்கரைப்பொங்கலும்’ என்ற அவளது நேர்த்திக் கடனை யார் செலுத்துவது? சில நூற்றாண்டுகள்
கழிந்தன.
வேண்டுதலை நிறைவேற்றியிருப்பாளோ மாட்டாளோ என்ற நெருடல் ஏற்பட்டது. திருமாலிருஞ்சோலைப்
பெருமாளுக்கான கோதையின் நேர்த்திக்கடனை செலுத்தும் கடமையைத் தான் மேற்கொண்டார். பின்பு
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார். வில்லிபுத்தூர் வந்தடைந்த ராமானுஜருக்கு
ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. ஆண்டாளது கோயிலின் அர்த்தமண்டபத்தில் ராமானுஜர் நுழைந்தபோது,
அங்கே அவருக்காகக் காத்திருந்த ஆண்டாளே அவரை வரவேற்று, தனது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக
அவருக்கு நன்றி தெரிவித்தாள். அவரை ‘அம்மான்’ என்று அன்போடு அழைத்தாள் ஆண்டாள்.
செய்வானோ, அப்படி ‘சில நூற்றாண்டுகளுக்கு முன்னான’ தனது விருப்பத்தை நிறைவேற்றிய ‘அண்ணனான’
ராமானுஜருக்காக கர்ப்பகிருகத்திலிருந்து வெளியே வந்த கோதை நாச்சியார் அதன்பிறகு உள்ளே
செல்லவே இல்லை. அன்றிலிருந்து அர்த்தமண்டபத்திலேயே, தனது மணாளன் வடபத்ரசாயியுடன் சூடிக்
கொடுத்த சுடர்க்கொடி எழுந்தருளி இருக்கிறாள். அன்றிலிருந்து ராமானுஜருக்கும் கோதக்ராஜர்
என்ற திருநாமம் வழங்கலாயிற்று. ஆண்டாளின் அன்புக்குரிய தமையன் ஆனார். அதனால்தான் இன்றும்,
ஆண்டாளுக்கு வாழி சொல்லும்போது ‘பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே’ என்கிறோம்.