Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 36 | சுப்பு

எம்ஜிஆரால் ஏற்பட்ட திருப்பம்

தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற காலைநேரச் செய்தி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது (அக் 5, 1984). முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அரசுத் தரப்பிலும் அப்போலோ மருத்துவமனை தலைமை டாக்டர் பிரதாப் சி ரெட்டி அறிக்கையிலும் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை செய்ததாகச் சொல்லப்பட்டிருந்தது. எம்ஜிஆர் உடல்நிலை தேறி வருகிறார் என்ற நம்பிக்கை வலுப்பெறும் நேரத்தில் அடுத்த அதிர்ச்சி. அவரது வலது பக்க கை கால்களை அசைக்க இயலவில்லை, மூளையில் ரத்த உறைவு உள்ளது என்பது தெரிய வந்தது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 36 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு

கபில்தேவின் கப்

மார்க்ஸிஸ்ட் தோழர்கள் நடத்தும் உரையாடல் மற்றும் எழுத்தில் அதிகமாகப் புழங்கும் ஒரு வார்த்தை – வர்க்க உணர்வு. தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பாட்டாளிகளிடம்தான் புரட்சிக்கு அவசியமான வர்க்க உணர்வு இருக்கும் என்றும், அவர்கள் முன்னெடுத்துச் செல்வதுதான் ஒரிஜினல் புரட்சி என்றும், கார்ல் மார்க்ஸ் எழுதினார். நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அது நடக்கவில்லை. தோழர்களே அந்தப் பாடத்தைத் திருத்தித் திருத்தி எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த வார்த்தை நிலைத்துவிட்டது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 34 | சுப்பு

பிரதமர் இந்திரா படுகொலை

திருவொற்றியூர் கடற்கரைக் கோவிலில் டாக்டர் நித்யானந்தம் ஏற்படுத்திய அனுபவத்தின் தாக்கம் என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் எவ்வளவு முயன்றாலும் அது என்னைவிட்டு அகலவில்லை. என்னுடைய உளநிலையில் டாக்டர் தனக்கென்று ஒரு உள்ஒதுக்கீடு செய்து கொண்டு விட்டார். எதைச் செய்தாலும் எங்கே சென்றாலும் என்னால் அவரை அகற்ற முடியவில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 34 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு

பராசக்தியைப் பார்க்கவில்லை

டாக்டர் நித்தியானந்தத்தின் சந்திப்பு என்னுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்தது என்று சொன்னேன் அல்லவா. அதற்கு முன்பாக நடந்த இன்னொரு விஷயமும் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு

Posted on 1 Comment

சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு

அத்துவாக்களும் அடுத்த பந்தியும்

வியாபார ரீதியில் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த அச்சகத்தை ரமணி வேறு ஒருவருக்கு விற்று விட்டான். விளைவு, நமக்கு வேலையில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு

கிரேசி மோகன்

ரமணியின் அச்சகத்தில் பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஒரு செய்தி என்னைத் தாக்கியது (27.03.1984). ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கத்தைச் சேர்ந்த, தொடக்கத்தில் என்னைப் பண்படுத்தி வழிநடத்திய பத்துஜி (பத்மநாபன்) கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பதுதான் அந்தச் செய்தி. அது என்னை வெகுவாகப் பாதித்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு சகஜநிலைக்கு வருவதற்கு சில நாட்கள் ஆயின. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு

ஆல்பெர் காம்யூவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

அடையாறு பகுதியின் இளைஞர்கள் அன்றாடம் கூடுமிடம் ஹோட்டல் ரன்ஸ். பலருக்கு அதை வாழுமிடம் என்றுகூடச் சொல்லலாம். எவ்வளவுநேரம் உட்கார்ந்திருந்தாலும் ஏனென்று கேட்கமாட்டார்கள். காபி, டீ, சமோசா என்று பில் மட்டும் கூடிக்கொண்டே போகும். என்னுடைய வாழ்க்கைத் தடத்தில் ஹோட்டல் ரன்ஸுக்கு முக்கியமான இடமுண்டு. பத்தாண்டுகளுக்கு மேலாக நான் ஈடுபட்டுவந்த கடல் தொழில், மீன் தொழில், கருவாடு தொழில், எல்லாவற்றிலிருந்தும் விலகும் கட்டம் அங்கேதான் நிகழ்ந்தது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு

போலிசுக்கு பதிலாக புஸ்வாணம்

தமிழகத்தில் செயல்படும் இந்து இயக்கங்களுக்குச் சவாலாக இரண்டு நிகழ்வுகள் ஏற்பட்டன. 1981 மற்றும் 1982ல். முதலில் மீனாட்சிபுரம், இரண்டாவது மண்டைக்காடு. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு

Posted on Leave a comment

டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு

தமிழ்த் திரைப்பட வரிசையில் இயக்குநர்களைப் பற்றிப் பேசும்போது கே.சுப்ரமணியத்தை விட்டுவிட்டுப் பேசமுடியாது. அந்த அளவுக்கு முக்கியஸ்தர் அவர். தன்னுடைய புதுப்படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காகப் பிரபல கதாநாயகியின் வீட்டிற்குப் போனார். நடிகைக்கும் இயக்குநருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் உரசல் ஏற்பட்டது. Continue reading டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் – சில பதிவுகள் 28 | சுப்பு

சி.ஆர். நரசிம்மன்
மத்தியில்
ஆட்சி செய்த இந்திரா காந்தி அரசு நெருக்கடி நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து“தேர்தல்
நடத்தப்படும்
என்ற அறிவிப்பை வெளியிட்டது
(18-01-1977). இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்றது. ஜனதா கட்சியின்
கூட்டணிக்கு 292 இடங்கள் கிடைத்தன.
தமிழகத்தில்
ஜனதா கூட்டணியில் ஸ்தாபன காங்கிரஸுக்கு மூன்று இடங்களும், திமுகவுக்கு ஒரு இடமும் கிடைத்தன.
அதிமுக – இந்திரா காங்கிரஸ், வலது கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு முப்பத்தேழு இடங்கள் கிடைத்தன.
தேர்தல்
முடிவுகளைத் தொடர்ந்துமொரார்ஜி தேசாய் பிரதமராகப் பதவியேற்றார். இந்த அமைச்சரவையில்
அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோர் இடம்பெற்றதில் என்னைப் போன்றோருக்கு
மகிழ்ச்சி.
ஆனால்
ஜனதா கட்சியில் ஒற்றுமை என்பது தேடப்பட வேண்டிய பொருளாக இருந்தது. உள் கட்சியில் ஏற்பட்ட
பிளவு காரணமாக மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். அடுத்த பிரதமராக வந்தவர் சரண் சிங்.
சரண் சிங் அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த சத்தியவாணிமுத்து, பாலா பழனூர் ஆகியோர்
இடம்பெற்றனர். ஏகப்பட்ட குளறுபடிகளுக்குப் பிறகு சரண் சிங் ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்தது (ஜனவரி 1980).
இந்தத்
தேர்தலில் இந்திரா காங்கிரஸ் 351/525 இடங்களில் வெற்றிபெற்றது. இந்திரா பிரதமரானார்.
இதற்கிடையே
தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் (ஜூன் 1977) அதிமுக கூட்டணி ஆட்சியைப்
பிடித்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
சரண்
சிங் பதவிவிலகலுக்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (ஜனவரி 1980)தமிழ்நாட்டின்
அரசியல் அணிவகுப்பில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. திமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி
அமைத்து பெரும் வெற்றிபெற்றன. அதிமுகவுக்குக் கிடைத்தது இரண்டு இடங்கள்தான்.
மு.கருணாநிதியின்
விருப்பத்திற்கிணங்க பிரதமர் இந்திராவால் அதிமுக அரசு கலைக்கப்பட்டது
(17-02-1980).
அதிமுக
கப்பல் மூழ்கிவிடும் என்ற நினைப்பில் திமுகவினர் மிதந்துகொண்டிருந்தனர். அவர்களுக்குத்
தீனி போடும் வகையில் முரசொலியில் அன்றாடம் செய்திகள் வந்துகொண்டிருந்தன. அமைச்சர் சௌந்தர
பாண்டியன் விலகல், மாநிலங்களவை உறுப்பினர் நூர்ஜஹான் ரசாக் திமுகவில் சேர்ந்தார், அதிமுக
எம்.எல்.ஏ ஆறுமுகம் விலகல், வி.பி.முனுசாமி எம்.பி திமுகவில் சேர்ந்தார், செல்வராஜ்
எம்.எல்.ஏ திமுகவில் சேர்ந்தார், வீட்டுவசதி வாரியத் தலைவர் செல்லையா திமுகவில் சேர்ந்தார்,
வெங்கா எம்.பி திமுகவில் சேர்ந்தார் என்கிற ரீதியில் முரசொலி செய்திகள் வெளிவந்து திமுகவினரை
குஷிப்படுத்திக்கொண்டிருந்தன.
இந்த
பரபரப்பான அரசியல் பின்னணியில்தான் நான் சமாசார் செய்தி நிறுவனத்தின் தமிழ்நாடு செய்தியாளராக
இருந்தேன். அதில் இரண்டு சம்பவங்களைமட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.
தமிழ்நாடு
ஆளுநராக இருந்த பிரபுதாஸ் பட்வாரியின் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது.
அது அன்றைய குடியரசுத் துணைத்தலைவர் எச்.எம்.ஹிதயதுல்லாவின் பிறந்தநாளுக்கான விருந்து.
நான் கலந்துகொண்டேன் (டிசம்பர் 1979). செல்வந்தர்கள், உயர்மட்டத்திலிருக்கும் அரசியல்வாதிகள்,
அதிகாரிகள் ஆகியோரோடு அதிகப் பழக்கம் இல்லாத எனக்கு அது புது அனுபவமாக இருந்தது.
ஆரம்பமே
சரியில்லை. உள்ளே நுழைந்தவுடன் நான் ஒரு இடத்தில் உட்கார வைக்கப்பட்டேன். அங்கு வந்த
ஒரு அதிகாரி“கவர்னர் மாளிகையின் எல்லைக்குள் சிகரெட் பிடிக்கக்கூடாது

என்று என்னை எச்சரித்தார். நான் புகைப் பழக்கத்தை விட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை
அவருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. வேண்டுமானால் திரும்பிப்
போய்விடுகிறேன் என்று நான் சொல்லச் சொல்ல அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிகரெட்
விஷயத்திலேயே குறியாக இருந்தார். ஒரு கட்டத்தில் எங்கள் சம்பாஷணை எந்தத் தரப்பிற்கும்
வெற்றி தோல்வியில்லாமல் முடிவுக்கு வந்தது. விருந்து நடக்கும் இடத்திற்கு நான் அழைத்துச்
செல்லப்பட்டேன்.
அதுவரை
சினிமாக்களில் மட்டுமே நான் பார்த்திருந்த காட்சி அது. விசாலமான அறையின் மையப்பகுதியில்.
மிகப்பெரிய முட்டை வடிவில் மேசை. வெளிச்சத்துக்கென்று இல்லாமல் அழகுக்காகச் செய்த விளக்குகள்.
கூப்பிடு தூரத்தில் சீருடைப் பணியாளர்கள். பத்து பேர் சாப்பிடும் விருந்துக்கு நான்கு
பணியாளர்கள், இரண்டு மேஸ்திரிகள்.
என்னைத்
தவிர, சட்டப் பேரவைத் தலைவர் ம.பொ.சிவஞானம், நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில், ஆற்காடு
இளவரசர், கலாசேத்திராவின் ருக்மணி அருண்டேல்,தமிழ்நாடு சட்ட அமைச்சர் கே.நாராயணசாமி
முதலியார், ராஜாஜியின் புதல்வர் சி.ஆர்.நரசிம்மன்,ஹிதயதுல்லா தம்பதியினர் மற்றும் பட்வாரி.
விருந்தினர்கள்
அமர வைக்கப்பட்ட பிறகு பட்வாரியும்,ஹிதயதுல்லா தம்பதியரும் வந்தார்கள். அவர் வரும்போது
எழுந்து நிற்க வேண்டும் என்று எனக்கு ஏற்கெனவே சொல்லப்பட்டுவிட்டது. இந்த மாதிரி விஷயங்களில்
எனக்கு சமர்த்து குறைவு என்று எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்கள்.
எனக்குப்
பக்கத்தில் இருந்தவர் ம.பொ.சி. பேரவையின் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்காகப் போய்
வந்ததில் அவரோடு கொஞ்சம் பழக்கம் உண்டு. ம.பொ.சி எனக்குத் தெரிந்தவரையில் சாமானியர்களில்
சாமானியர். “இங்கே எப்படி நடைமுறை
என்று அவரிடம் கேட்டுவிட்டேன். அவர் முதலிலேயே
மூன்று மணிகளை அடித்துவிட்டார். “நாமாகப்பேசக்கூடாது, சத்தம்போட்டுப் பேசக்கூடாது,
கேட்ட கேள்விகளுக்கு மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும் என்பவைதான்

அந்த எச்சரிக்கை மணிகள்.
இத்தனையும்
மீறி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. மாளிகையின் பணியாளர் ஒருவர் என்னருகில் வந்து,
குனிந்து காதில்“விருந்து முடிந்த பிறகு மேதகு ஆளுநர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்

என்றார். ம.பொ.சியையும் அவருடைய எச்சரிக்கையையும் மறந்துவிட்ட நான்“என்னோடு பேச விரும்புகிறீர்களா?

என்று பட்வாரியைப் பார்த்துக் கேட்டுவிட்டேன், சத்தம் போட்டு. எங்களுக்கு சம்பந்தமில்லை
என்ற மாதிரிஎல்லோரும் அமைதியாக இருந்துவிட்டார்கள், பட்வாரி உட்பட.
விருந்து
நன்றாகத்தான் இருந்தது. ஆனால் எல்லோருமே தயங்குமிடத்தில் விருப்பப்படி விளையாட நம்முடைய
நாகரிகம் இடம் தரவில்லை.
விருந்துக்குப்
பிறகு, ஆளுநர் என்னை அழைத்துப் பேசுவார் என்று காத்திருந்தேன். அவர் அழைக்கவில்லை.
எல்லோரும் அவரவர்களுடைய காரில் ஏறி வெளியேறிவிட்டார்கள். மாளிகையின் வாசலறையில் மூவர்
மட்டும் இருந்தோம். நான், சி.ஆர்.நரசிம்மன் மற்றும் ஆளூநரின் ஏ.டி.சி. (A.D.C).
மற்றவர்கள்
புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தபோது, சி.ஆர்.நரசிம்மன் என்னிடம் கேட்டார். “தி.நகருக்கு
ஆட்டோ சார்ஜ் எவ்வளவு ஆகும்
என்று. என்னை அந்த வார்த்தைகள் வெகுவாகப்
பாதித்துவிட்டன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கில் வக்கீல் தொழிலில் சம்பாதித்த
ராஜாஜியின் புதல்வர் இவர். தவிர, சி.ஆர்.நரசிம்மன் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக
இருந்திருக்கிறார். கை சுத்தம் என்பதால் காசு மிச்சமில்லை. இப்போது கிண்டி ராஜ்பவனிலிருந்து
தி.நகருக்கு ஆட்டோவில் போகும் செலவைப் பற்றித் தயங்குகிறார் என்பது எனக்கு அதிர்ச்சியாக
இருந்தது. உடைமைகளையும், ஊதியங்களையும் தேச நன்மைகளுக்காக விட்டுக்கொடுத்தவர்களின்
குடும்பங்களுக்கு இந்த கதிதான் என்கிற விஷயம் உறைத்தது.
அவரிடம்“நான்
ஏற்பாடு செய்கிறேன்
என்று சொல்லிவிட்டு மெயின் ரோடிலிருந்து
ஆட்டோவை மடக்கி உள்ளே அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி ஏ.டி.சியிடம் கேட்டுக்கொண்டேன்.
அவர் உதவினார். ஆட்டோ வந்தது. தமிழர்கள் செய்த பாவச் செயலுக்குப் பரிகாரமாக நானே அவருடன்
ஆட்டோவில் போய் அவரை விட்டுவிட்டு பிறகு அடையார் வீட்டுக்குத் திரும்பினேன். ஆட்டோ
செலவு என்னுடையது…
*
பிரதமர்
இந்திரா பதவி ஏற்ற நூறாவது நாளில் சென்னைக்கு வந்தார் (ஏப்ரல் 1980). பிரதமரைச்சந்திப்பதற்காக
சென்னை விமான நிலையத்தின் வி.ஐ.பி பகுதியில் பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தோம். என்னையும்
சேர்த்து இருபது பேர். எங்களை பொழுது விடியாத நேரத்தில் கலைவாணர் அரங்கத்திற்கு வரச்
சொல்லி மூன்று வேன்களில் ஏற்றி விமான நிலையத்திற்குக் கூட்டி வந்திருந்தார்கள். எல்லோரும்
கலைவாணர் அரங்கத்திற்கு ஆறு மணிக்குதான் வந்தார்கள். நான் மட்டும் சங்கக் கட்டுப்பாட்டுடன்
ஐந்து மணிக்கு ஆஜர். பின் விளைவுகள் என்னை பாதித்தபடியே இருக்க மீனம்பாக்கம் விமான
நிலையத்திற்கு வந்து காத்திருந்து ஒன்றுக்கு இரண்டு காப்பி குடித்துவிட்டு என்ன கேட்கலாம்
என்று யோசித்திருந்தபோது “யஷ்பால்
என்று ஒரு மெல்லிய குரல் கேட்டது. கூப்பிட்டவர்
இந்திரா.
யஷ்பால்
என்பவர் இந்திராவின் உதவியாளர் யஷ்பால் கபூர். அரசு ஊழியராக இருந்த யஷ்பால் கபூர் அரசு
வேலையைத் துறந்துவிட்டு உத்திரபிரதேசத்தின் ரேபெரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திராவுக்கு
உதவியாளராக இருந்தார் (1971). அரசு வேலையிலிருந்து யஷ்பால் கபூர் விடுவிக்கப்படுவதற்கு
முன்பே தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவிட்டார் என்பது அலகாபாத் நீதிமன்றத்தில் சோசலிஸ்ட்
தலைவர் ராஜ் நாராயண் தொடுத்த வழக்கின் பாய்ண்டுகளில் ஒன்று என்பதைக் குறித்துக்கொள்ளவும்.
இந்திரா
சோபாவில் அமர்ந்திருக்க, எதிரில் நாங்கள் நின்றிருந்தோம். சில போட்டோகிராபர்களும் சேர்ந்துகொண்டார்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ரிப்போட்டர்கள் இரண்டு பேர் டேப் ரிக்கார்டரின் பளு தாங்காமல்,
தேடி ஒரு ஸ்டூலைக் கண்டுபிடித்துவிட்டார்கள். பத்து நிமிடம்தான் பிரதமர் பேசுவார் என்று
எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. பத்து என்றால் பதினைந்து என்று அர்த்தம் என்று அகில
இந்திய வானொலிக்காரர் என் காதில் கிசுகிசுத்தார்.
பார்வைக்கு
இந்திரா பணக்கார சீமாட்டி போலத் தெரிந்தார். பதில்களெல்லாமே ஏதோ எங்களுக்குச் செய்கிற
சலுகை போல் இருந்தது. இதனால் அந்த இடத்தில் கேள்வி கேட்பதில் தயக்கம் இருந்தது. சர்க்கரைக்கான
இரட்டை விலை என்கிற ஜனதா அரசின் உத்தரவை (Dual pricing policy) இந்திரா ரத்து செய்திருந்தார்.
அதுபற்றி ஒரு கேள்வி வந்தது. இன்னொருவர் பதுக்கப்பட்ட சர்க்கரையை வெளிக்கொண்டுவர முடியவில்லையே
என்று கேட்டார். அதற்கு இந்திரா“இந்த நாடு மிகப் பெரிய நாடு. இதன் மூலைகளில் எல்லாம்,
கிராமங்களில் பதுக்கப்பட்டுள்ள சர்க்கரையைக் கண்டுபிடித்து எடுக்க அரசு இயந்திரம் போதாது

என்றார்.
இந்த நேரத்தில் நான் புகுந்தேன். “கிராமங்களில்
இருப்பவர்கள்தான் பதுக்கல் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்களா? “ என்று கேட்டேன். அவர்
புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தார், பதிலில்லை. இடைவெளியில் இன்னொருவர் வேறு கேள்வி
கேட்க விஷயம் திசைமாறிவிட்டது.
“கிராமங்களில்தான்
சர்க்கரை பதுக்கப்பட்டுள்ளது என்கிறார் பிரதமர்
என்பதாகச்
செய்தி எழுதி அனுப்பிவிட்டேன். விளைவு, அது இந்தியா முழுவதும் செய்தியாகிவிட்டது. தமிழகத்தில்
இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டும் இதைப் பதிவு செய்திருந்தது.
சர்க்கரை
விஷயமாக நான் கொடுத்த செய்தி பற்றி பிரதமர் அலுவலகத்திலிருந்து சமாசார் தலைமையிடம்
விசாரித்திருக்கிறார்கள்.இதன் விளைவாக என் மேலதிகாரி என்னை விசாரித்தார். அவருக்கு
அவசியமாகத் தெரிந்த விசாரணை என் புத்திக்கு அநாவசியமாகப்பட்டது. ஒரு கட்டத்தில் நான்
கோபப்பட்டேன். வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.
வேலையை
விட்டு விலகியவுடன் ராஜேந்திரனைப் பார்க்க நொச்சிக்குப்பத்துக்குப் போனேன்.அங்கே ராஜேந்திரனுக்கும்
புதிய பார்ட்னர் குமாருக்கும் தகராறு. நாகப்பட்டினத்திலிருந்து மூட்டை மூட்டையாக நெத்திலிக்
கருவாடு வாங்கிவந்து அடுக்கி வைத்திருந்தார்கள். வால்டேக்ஸ் ரோடிலுள்ள கருவாடு மொத்த
வியாபாரிகள் அதை வாங்கத் தயாராக இல்லை. இதுதான் பிரச்சினை.
“மொத்தமாக
விற்க முடியாவிட்டால் சில்லறையாக விற்கலாமே
என்பது என் யோசனை. அதில் அவர்களுக்கு விருப்பமில்லை.
ஒருநாள் முழுவதும் போராடி அவர்களைச் சம்மதிக்க வைத்துவிட்டேன். மறுநாள் ஒரு சைக்கிள்
ரிக்க்ஷாவில் இரண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டேன். துணைக்கு சின்ன ராஜேந்திரன் என்ற பையன்.
சைதாப்பேட்டை
மீன் மார்க்கெட்டுக்குப் போய் அங்கு கருவாடு விற்கும் பெண்களுடன் பேசினேன். மூட்டையிலிருந்து
எடுக்கப்பட்ட கருவாடுகள் ஐந்து பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் அதைக் கூறுகட்டி
விற்றார்கள். காலை முதல் மாலை வரை கருவாட்டுக் கடையில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தேன்.
என் கையில்“Talks with Ramana
.
பத்து
நாட்களில் கருவாடு விற்கப்பட்டு கமிஷன் கொடுக்கப்பட்டு போட்ட பணத்தை எடுத்துவிட்டோம்.
பிறகு நானில்லாமல் சின்ன ராஜேந்திரனை அனுப்பி தங்கசாலையிலும் இதே பார்முலா தொடர்ந்தது.
இதற்குப்
பிறகு குமாருடைய முயற்சியால் மேட்டூர் அணையில் கிடைக்கும் மீன்களை ஹெளராவிற்கு எடுத்துப்
போனேன்.இது ஒரு மாதம்தான்.சரிவரவில்லை.
கல்கத்தா
அருகில் உள்ள தட்சிணேசுவரத்துக் காளி கோவிலில் வெகு நேரம் நின்றிருந்தேன்.கல்கத்தாவின்
நெரிசல் இங்கு இல்லை.மக்கள் வரிசையாக வந்து கங்கை நீரைக் குடத்தில் எடுத்து வந்து புஷ்பங்களோடு
லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்தார்கள்.சிமெண்ட் தரையில் வெய்யில் சூடு தெரியாதிருக்க
கங்கைச் சிதறல்.இந்தப் பராசக்திதானா பரமஹம்சர் கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டாள்?இவளா
பேசினாள்? இப்படி ஒவ்வொன்றாக யோசித்துக் கொண்டிருந்தேன்.ஆனால் விக்ரகம் நான் கற்பனை
செய்திருந்ததைவிடச் சிறியதாக இருந்தது.
தட்சிணேசுவரம்
இப்படி என்றால் கல்கத்தாவின் மையப்பகுதியில் இருக்கும் காளிகட்டம் நேர் எதிர்.கடவுள்
நம்பிக்கையே ஆட்டம் கண்டுவிடும் போலிருந்தது.வரிசையாகப் போகும்போது, எனக்கு முன்னால்
ஒருவன் காளியின் மீதே கைகால் விரித்துக் கவிழ்ந்திருந்தான்.பெரிய பக்தன் போலிருக்கிறது
என்று நினைத்துக் காத்திருந்தேன்.அவன் அசைவதாய் இல்லை.சிறிது நேரத்திற்குப் பிறகுதான்
எனக்கு அங்கே நடப்பது என்ன என்று தெளிவாகியது.காசு கொடுத்தால் நாம் காளியைத் தொட்டுப்
பார்க்கலாம்.அப்படிக் கொடுக்காதவர்கள் தொட்டுவிட முடியாதபடி இந்த பந்தோபஸ்து.
ஹெளராவிலிருந்து
திரும்பி வரும்போது பாரதீப் போனேன்.கொண்டம்மாள் எனக்குத் தர வேண்டிய பாக்கியை வசூல்
செய்யலாம் என்று போனால் கொண்டம்மாளின் நிலைமை பரிதாபமாயிருந்தது.அவளுடைய இடத்தில் இன்னொரு
வியாபாரி வந்துவிட்டதால், வருமானம் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.கணவன் எப்படி
இருக்கிறான் என்று கேட்டதற்கு, “அவர் இப்பவெல்லாம் ரொம்ப திருந்திட்டார்.வீட்லதான்
குடிக்கிறாரு
என்றாள்.
இடையே
ஒருமுறை பீஹாரில் உள்ள பொகாரோவுக்குப் போய் விஷ்ணுவோடு சில நாட்களிருந்தேன்.சென்னைக்கு
வந்தவுடன் எனக்கு நாகப்பட்டினத்தில் போஸ்டிங்.
கொண்டய
பாலத்தில் விசைப்படகைப் பறிகொடுத்ததிலிருந்து எனக்கும் ராஜேந்திரனுக்கும் ஒரு இடைவெளி
ஏற்பட்டுவிட்டது.அந்த இடைவெளிக்குக் காரணம் பணநஷ்டம் அல்ல.அவனுடைய குடிப்பழக்கம்தான்.ராஜேந்திரன்
விடியற்காலையில் எப்போது சாராயக்கடை திறக்கும் என்று காத்திருப்பான்.இரவில் கடை மூடும்வரை
இருந்து குடித்துவிட்டு வருவான்.
நாகப்பட்டினத்திலிருந்து
ஐஸ்மீனை நாங்கள் சென்னைக்கு அனுப்பிக் கொண்டிருந்தோம். குமார் சென்னையில் அதை விற்றுக்
கொண்டிருந்தான்.கம்பனி சட்டப்படி எங்களுக்கு ஆளுக்கு தினசரி பாட்டா நாற்பது ரூபாய்.என்னுடைய
செலவு பத்து ரூபாயைத் தாண்டாது.ஒரு ரூபாய் கொடுத்தால் லாட்ஜில் படுக்கை வசதி உண்டு.அங்கேயே
வராந்தாவில் தங்கிக் கொள்ளலாம்.குளியலறை, கழிவறையைப் பயன்படுத்தலாம்.காலையில் ஒரு டீ
மட்டும் சாப்பிடுவேன்.மதியம் ஐந்து ரூபாய் கொடுத்து, பையனை அனுப்பி, வரும் கேரியர்
சாப்பாட்டை நானும்அவனும் ஒரு நாயும் வரிசையாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.இரவு உணவு இரண்டு
ரூபாய்.இடையில் ஒரு டீ உண்டு.ராஜேந்திரனோ சூரியன் உச்சிக்கு வருவதற்குள் நாற்பது ரூபாயைக்
காலி செய்துவிட்டு, என்னிடம் அன்றாடம் ஒவர் டிராப்ட் கேட்பான்.என்னுடைய மீதத்தை அவனுக்குக்
கொடுத்துவிடுவேன்.
நாங்கள்
தங்கியிருந்த லாட்ஜில் ஒரு மலையாளி இருந்தார். இவர் தனக்கு மந்திர, தந்திரங்கள் தெரியும்
என்று சொல்லி அங்கேயிருந்தவர்களை மிரட்டி வைத்திருந்தார்.ஆனால் என்னிடம் மட்டும் மரியாதையோடிருப்பார்.ஒருநாள்
இரவு நான் அவருடைய அறையில் தங்கினேன்.அறையில் நான் மட்டும்தான்.வராந்தாவில் மற்ற வியாபாரிகள்.
என்னால் தூங்க முடியவில்லை.கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று அங்கே நடமாடுவதைப் போன்ற
உணர்வு.எழுந்து வெளியே வந்து படுத்துவிட்டேன்.
காலையில்
அவரை விசாரித்தேன்.அவர் சிரித்தார். பதில் சொல்லவில்லை.அங்கே இருந்தவர்களிடம்“டேய்,
இவன் லுங்கியை அவுறுங்கடா
என்றேன்.இரண்டு பேர் பிடித்துக்கொள்ள, லுங்கி
அவிழ்க்கப்பட்டது.ஒரு தொடையில் தையல் போட்டிருந்தது.தன்னை விட்டுவிடுமாறு அவர் கெஞ்சினார்.சில
துர்தேவதைகளை உபாசனை செய்து தன் கட்டுக்குள் வைத்திருப்பதாகச் சொன்ன அவர், “தொடைக்குள்
மந்திரத் தகடு இருக்கிறது
என்றார்.அவருடைய மந்திரம் என்னிடம் பலிக்கவில்லை
என்று ஒப்புக்கொண்டார்.பிறகு மான் கொம்பு, நவபாஷாணக்கல் ஆகியவற்றை சன்மானமாகக் கொடுத்தார்.அந்தப்
பொருட்களை அங்கே இருந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.
அவருடைய
லுங்கியை ஏன் அவிழ்க்கச் சொன்னேன் என்று எனக்குத் தெரியாது.ஆனால் அவர் என் மணிக்கட்டில்
கட்டியிருந்த கயிற்றை மந்திரக் கயிறு என்று அவர் நினைத்துவிட்டார் என்கிற விஷயம் பிறகு
தெரிய வந்தது.உண்மையில் அது ஆர்.எஸ்.எஸ். நண்பரால் கட்டப்பட்ட ரட்சாபந்தன்கயிறுதான்.
தொடரும்…