Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தை மீண்டும் தோளில் போட்டுக்கொண்டு நடக்கலானான். அப்போது வேதாளம் எள்ளி நகைத்து ‘ஹே அரசனே கேள்! நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? இதனால் உன்னைப் போற்றுகிறவர்கள் யார்? கிடைத்ததற்கரிய செல்வத்தைக் கொண்டு வந்தால் கூட, கொண்டு போகிற இடத்தில் சிலருக்குப் பாராட்டுக் கிடைக்காது. ஆனால் எந்த இடத்திலிருந்து எடுக்கிறார்களோ அங்கேதான் பாராட்டுக் கிடைக்கும். இதற்கு நான் ஒரு கதையைச் சொல்கிறேன் கேள்’ என்று ஆரம்பித்தது.

ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டிலே செல்வம் குறைந்து விட்டது. எனவே அந்த நாட்டு ராஜா தைரியமும் சாமர்த்தியமும் மிக்க வீரர்களையும் வியாபாரிகளையும் திரட்டி நாடு விட்டு நாடு சென்று செல்வங்களை ஈட்டி வர அனுப்பினான். அவர்கள் ரொம்ப காலம் அலைந்து ஒரு நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே ஈடிணையில்லாத வைரம் ஒன்று இருந்தது. அந்த வைரம் ஒரு மாயாஜால வைரம். அதை ஒருவர் கண்டுபிடித்தால் அவரே அந்த வைரத்தை எடுத்துக் கொண்டு போனாலும் அந்த வைரம் அங்கேயேதான் இருக்கும்.

இந்த வைரம் அந்த மக்களிடம் இருந்தது.

அங்கே வந்த வியாபாரிகளில் புத்திசாலியான ஒருவன் இந்த வைரம் இம்மக்களிடம் இருப்பதைக் கண்டுபிடித்தான். அவன் அந்த வைரத்தைக் கண்டுபிடித்ததால் அதே வைரம் அவனிடமும் வந்துவிட்டது. அந்த ஊரைவிட்டும் போகவில்லை. இந்த வைரத்தை அவன் தன் நாட்டுக்குக் கொண்டு வந்தான்.

இந்த வைரத்தை அவன் தன் நாட்டுக்குக் கொண்டு போனதால் எந்த நாட்டிலிருந்து வைரத்தைக் கொண்டு போனானோ அந்த நாட்டு மக்கள் அவனுக்கு சிலைச் வைத்தார்கள். அதே மக்கள் அந்த வைரத்தைப் பட்டை போட்டுப் பளபளப்பாக்கி அதனை யார் இத்தனை நாட்கள் காப்பாற்றி வந்தார்களோ அவர்களையெல்லாம் மறந்துவிட்டார்கள். அந்த அயல்நாட்டு வியாபாரியைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆனால் அவன் கொண்டு போன நாட்டிலோ அவனைக் கண்டுகொள்ளக் கூட இல்லை.

இதை சொல்லி நிறுத்திய வேதாளம் ‘மன்னனே.. ஏன் இந்த விசித்திரமான நடத்தை? இதற்கு பதில் தெரிந்தும் நீ சொல்லவில்லை என்றால் உன் தலையை சுக்கல் நூறாக சிதறடிப்பேன்’ என்று சொன்னது.

விக்கிரமாதித்தனும், ‘ஏ வேதாளமே! அந்த வைரத்து நாட்டு மக்களுக்கு அன்னிய மோகமும் தாழ்வு மனப்பான்மையும் இருந்தது. அந்த அன்னிய நாட்டிலோ வைரத்தின் மதிப்பே தெரியவில்லை. இதுதான் காரணம்’ என்று கூறினான். அவனது சரியான இந்த பதிலால் அவன் மௌனம் கலையவே வேதாளம் மீண்டும் முருங்கை மரத்துக்குத் திரும்பியது.

என்ன சொல்ல வந்தேனென்றால், நாம் ஜி.யு.போப்பைக் கொண்டாடுகிறோம். தேவாரத்தையும் திருவாசகத்தையும் நமக்குத் தந்த அருளாளர்களை அவர்களின் வைதீக ஞான தமிழ் மரபை விட்டுவிட்டோம். எத்தனையோ படையெடுப்புகள் கோவில் இடிப்புகள் மதமாற்ற வெறியாட்டங்கள் இத்தனைக்கும் நடுவில் திருக்குறளையும் திருவாசகத்தையும் காப்பாற்றித் தந்த சனாதன தர்ம மரபை மறந்துவிட்டோம். ஆனால் இந்நூல்களை உள்நோக்கத்துடன் மொழிபெயர்த்த ஜி.யு.போப்பைக் கொண்டாடுகிறோம்.

அவர் நம் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அவரைக் கொண்டாட வேண்டியவர்கள் யார்? ஆங்கிலேயர்கள் அல்லவா? அவர்கள் கண்டுகொள்ளவே இல்லையே. ஏன்?

காரணம் நமக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை. உண்மையில் நம் தமிழை நாம் பெருமையடையச் செய்யவும் வளர்க்கவும் அண்டை மொழி சமுதாயங்களிடமல்லவா கொண்டு செல்ல வேண்டும்? இன்றைக்கு ஹிந்தி பேசுகிற மாநிலங்களில் தமிழன் குறித்து என்ன தெரியும்? வீட்டிலேயே பிஎஸ்என்எல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் புகழ் தயாநிதி, சர்க்காரியா புகழ் கருணாநிதி, அலைகற்றை புகழ் ஆண்டிபட்டி ராசா, அக்கா கவிதாயினி, ப.சிதம்பரம். தமிழர் கெட்ட பெயர் கொண்டு போனாலும் செழித்து வாழ்வது நம் பரம்பரைகளாக இருக்க வேண்டும் என்பதுதானே இன்றைய ‘தமிழ் தமிழ்’ என்று கரையும் கும்பல்களின் உண்மை நோக்கமாக இருக்கிறது.

ஆங்கிலேயப் பாதிரி அவரது மதமாற்ற அரசியல் பிரித்தாளும் நோக்கங்களுக்காக தமிழைக் கொஞ்சம் புகழ்வது போல புகழ்ந்தாலும் நமக்கெல்லாம் அப்படி சந்தோஷம். புல்லரிக்கிறது. இறுதியில் பார்த்தால் தமிழுக்கு உண்மையான வளம் சேர்த்த நாயன்மார்களும் ஆழ்வார்களும் எங்கே என்றால் காணோம். காரைக்கால் அம்மையாரும் அருணகிரிநாதரும் கிடையாது. கிருஷ்ணதேவராயர் தமிழ் ஆழ்வாரான ஆண்டாளின் சரிதத்தை தெலுங்கில் செய்தார், அவரை எந்த தமிழ் அரசியல்வாதியும் கொண்டாடுவதில்லை. கான்ஸ்டண்டைன் பெஸ்கிக்கும் ஜியு போப்புக்கும் கால்டுவெல் பாதிரிக்கும் சிலை வைப்பார்கள். அவர்கள் பிறந்தநாளில் அரசு விளம்பரம் கொடுப்பார்கள். பெரும்பான்மை ஹிந்துக்கள் வரிப்பணத்தில்.

இத்தகைய சூழலில் தமிழரே தமிழகத்தின் உண்மைப் பண்பாட்டிலிருந்து அன்னியப்பட்டிருக்கும் போது மதமாற்ற சக்திகளும் இந்தியாவை உடைக்கும் சக்திகளும் புகுந்து விளையாடுகின்றன. அவர்கள் சித்தாந்தப்படி தமிழ்ப் பண்பாட்டைத் திரித்தும் சிதைத்தும் போலி பிம்பங்களைக் கட்டமைக்கின்றன. தமிழறியாத பிற இந்தியரும் இதுதான் தமிழர் பண்பாடு என நினைக்கின்றனர்.

மோதியையும் ராகுலையும் கவனியுங்கள். மோதி தமிழ்ப் பண்பாட்டின் உச்சங்களைப் பேசுகிறார். உள்வாங்கியிருக்கிறார். திருக்குறளையும் பாரதியையும் எங்கெங்கோ பேசுகிறார். பாராளுமன்றமோ பள்ளி மாணவர்களோ பனி படர்ந்த சிகரங்களில் நம் படை வீரர்களிடமோ அவர் திருக்குறளைப் பேசுகிறார். வாக்குகளுக்காக அல்ல. தேர்தலுக்காக அல்ல.

ஆனால் ராகுலை கவனியுங்கள். குஜராத்தில் சிவ பக்தன் வேஷம். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் தன் உண்மையான கத்தோலிக்க சந்தோஷம். கோவில்களில் ராகுலின் உடல் மொழியைக் கவனியுங்கள். ஒரு கட்டாயமும் ஒவ்வாமையும் தெரியும். வேறுவழியில்லை இங்கே நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதே ராகுலை கத்தோலிக்க தேவாலயங்களிலோ அல்லது கிறிஸ்தவ பாதிரிகளுடனோ பாருங்கள். இது தன்னிடம், இவர் நம்மவர் என்கிற உடல் மொழி தெரியும்.

ராகுலும் தமிழ்நாடு வருகிறார். தமிழ் பண்பாட்டை மோடி மதிக்கவில்லை என்கிறார். பிறகு பிரியாணி செய்வதாக ஒரு ஸ்டண்ட் அடிக்கிறார். சிக்கனுக்கும் மட்டனுக்கும் தமிழ் என்ன என்று கேட்கிறார். ஜனநாயகத்தின் பூபாளம் என்று இந்த வாரிசு அரசியல் வறட்டுத்தனத்துக்கு முட்டு கொடுக்கக் கூட கூலியெழுத்தர்கள் இங்கு உண்டு என்பது புளித்துப் போன விஷயம்.

விஷயமென்னவென்றால் மோடி தமிழை நேசிக்கிறார். உண்மையாக நேசிக்கிறார். ஆனால் ஸ்டாலினும் ராகுலும் தமிழை தங்கள் வாரிசு அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இதற்கிடையில்தான் ஊடுருவுகிறது நச்சரவம்.

ஜகத் கஸ்பர்.

காந்தாரத்திலிருந்து சகுனி வந்தானென்றால் கத்தோலிக்க சபையிலிருந்து ஒரு கஸ்பர். இறுதியில் இருவர் நோக்கமும் முடிவதென்னவோ அழிவில்தான். இலங்கையில் போல.

தமிழ் என்பது ஒரு இனம். தமிழ் தேசிய இனம். அதுதான் நம் அடையாளம். இப்படி தொலைகாட்சிகளெங்கும் முழங்குகிறார் கஸ்பர். அவ்வப்போது ஒட்டுக்கு ஊறுகாய் போல திருவாசகம். என்ன ஒரு மோசடி! தமிழை ஐரோப்பிய இனவாத இன தேசிய அரசியலுக்குள்ளும், வைதீக சைவ வைணவ கௌமார சாக்த மரபுகளுடன் உயிரிணைப்பு கொண்ட தமிழ் ஆன்மிகமரபை கிறிஸ்தவத்துக்குள்ளும் அடைக்கும் வக்கிர முயற்சி கஸ்பருடையது. இதற்குத் துணை போவது திமுக ராஜகுல இளவரசி கனிமொழி.

வெற்று மொழி வெறிஅரசியலும் கிறிஸ்தவ மதவெறியும் இணைந்து வேத நெறியாம் ஹிந்து தர்மத்தை அழிக்க திட்டமிடுகின்றனர். இந்நிலையில் ஒட்டுமொத்த பாரதத்துக்கு தமிழ்ப் பண்பாடு உண்மையில் அனைத்து பாரதத்துக்கும் சொந்தமான சனாதன தர்ம பண்பாடே என்பதை உணர்த்த இன்று சில முக்கிய முயற்சிகள் தலையெழுந்துள்ளன.

அண்மைக் காலங்களில் தமிழ்ப் பண்பாட்டை தமிழ்நாட்டு எல்லைகளுக்கு அப்பால் அனைத்து பாரத மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் ஒரு இணையத்தளம் – குறிப்பாக காணொளிகள் மூலம் இயங்குகிறது.

இந்த பொங்கலன்று தமிழ்-வடமொழி அறிஞரும் ஹிந்துத்துவ சிந்தனையாளருமான ஜடாயு சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றியது காணொளியாக வெளிவந்தது. தமிழறியாத பலரை சிலப்பதிகாரம் சென்றடைந்தது. சிலப்பதிகாரம் தங்கள் நூலே என்பதை அவர்கள் உணர்ந்தனர். ஜடாயு அவருக்கே உரிய அறிவும் சுவையும் சார்ந்த முறையில் இம்மகோன்னத காவியத்தை விளக்குகிறார். எப்படி சிலப்பதிகாரம் காவியச் சுவையுடன் என்றுமுள்ள அழிவற்ற தர்மத்தை எடுத்தியம்புகிறது என்பதைத் தெள்ளத் தெளிந்த நீரோடையின் நல்லழகுடன் விளக்குகிறார். ஆங்கிலத்தில். தமிழின் இனிமை கெடாமல் அதை ஆங்கிலத்தில் அளிக்க ஒரு தனித்திறமை மொழி மேலாண்மை வேண்டும். அது ஜடாயுவுக்கு மிக அழகாக கை வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் பௌதீக அறிவியலாளர் பேராசிரியர் ராமநாதனுடன் உரையாடும் காணொளி வெளியானது. நடராஜர் திருமேனியின் தத்துவக் குறியீடுகளின் ஆழத்தையும் அழகையும் வெளிப்படுத்தினார். சோழர் கைத்திறன் பாரதத்தின் திக்கெட்டும் கற்றோருக்குச் சென்றடைந்தது. பத்தூர் நடராஜரை மீண்டும் பாரதம் கொண்டு வர பாடுபட்ட பெருமகனார் நாகசாமி அவர்கள். அவரே நடராஜரைக் குறித்து பேசுவது எவ்வளவு பொருத்தம். தமிழ்நாட்டிலேயே வாழும் அவரை நாம் கொண்டாடுவதில்லை. ஆனால் ஒட்டுமொத்த திராவிட இனவாத கூட்டத்தைக் காட்டிலும் இந்த தனிமனிதன் தமிழுக்குச் செய்த தொண்டு அளப்பரியது.

பேராசிரியர் ராமநாதன் துடிப்புள்ள இளைஞர். அறிவியலாளர். இசை ஆர்வலர். பண்பாட்டு அறிஞர் என பல முகங்கள் கொண்டவர். இவர் பண்டைய பாரத வேதியியல் குறித்து ஒரு காணொளி அளித்துள்ளார். அதில் அவர் சிலப்பதிகாரத்தில் இருக்கும் கைவினைச் செயல்பாடுகளில் இருக்கும் அறிவியல் தரவுகளை அளிக்கிறார். முக்கியமான பதிவு.

பொதுவாக நாம் அதாவது இந்துத்துவர்களாகிய நாம், நம் பண்டைய வரலாற்றை மிகவும் புகழ்வோம். ஆனால் அந்த பண்பாட்டு சாதனைகளின் பின்னாலிருக்கும் சமூக கட்டமைப்பு குறித்து நமக்கு தெளிவான பார்வை இருக்காது. இடதுசாரிகள் ‘கோல்’ அடிக்கும் இடம் இதுதான். ஆனால் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன் இந்த இடத்தை நிரப்புகிறார். அவரது அபரிமித அறிவு பண்டைய சமூக இயங்கியல் சார்ந்தது. அது இலக்கியம், புராணம், இதிகாசம் கல்வெட்டு எனப் பல துறைகளிலுள்ள புலமை சார்ந்தது. எப்படி சோழ பேரரசு நிர்வகிக்கப்பட்டது என்பதை அவர் பேரா.ராமநாதனுடன் விளக்கி உரையாடும் காணொளி ஒரு அரும் பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.

இவற்றையெல்லாம் வெளியிடும் இணையத்தளத்தின் பெயர் அதர்வா ஃபோரம்.

இது வட இந்தியாவில் உள்ள அமைப்பு. ஆனால் அது தமிழுக்குச் செய்யும் தொண்டு முக்கியமானது. ஏனெனில் தமிழ்ப் பண்பாடு குறித்து திராவிடவாத விஷக்கிருமிகள் உருவாக்கியுள்ள போலி பிம்பத்தை அது உடைக்கிறது. மிக முக்கியமாக ஆன்மிகமும் நடைமுறைத் தன்மையும் கொண்ட தமிழ் பண்பாட்டை அது அனைத்து பாரத மக்களிடமும் எடுத்து செல்கிறது.

இந்த ஃபோரத்தை ஆதரிக்க வேண்டியது நம் கடமை. அதற்கு நாம் ‘subscribe’ செய்யலாம். இந்த காணொளிகளை நம்மால் முடிந்த அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். ஜகத் கஸ்பர், ராவுல் வின்ஸி-காந்தி, ஸ்டாலின் – கனிமொழி போல பெரும் ராட்சத பலத்துடன் இயங்கும் தீய சக்திகளுடன் நாம் போரிடுகிறோம். இந்நிலையில் இப்படிப்பட்ட சிறு துளிகளான முயற்சிகளை ஊக்குவிப்பது முக்கியம். சிறுதுளிகளென்றாலும் இவை அமிர்தத் துளிகள்.

அதர்வா ஃபோரம் ஃபேஸ்புக்: https://www.facebook.com/AtharvaForum

அதர்வா ஃபோரம் ட்விட்டர்: https://twitter.com/AtharvaForum

அதர்வா ஃபோரம் யூட்யூப் சானல்: https://www.youtube.com/channel/UCdq7DbK8ClftFTNumdI6xJQ/featured

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்

மறைக்கப்படும் உண்மைகள்

பிப்ரவரி 2021 இல் ‘தாஸ்குப்தா ரிவ்யூ’ என்கிற முக்கியமான அறிக்கையை இங்கிலாந்து அரசு வெளியிட்டது. பயோடைவர்ஸிட்டி என்கிற உயிரினப்பன்மையின் பொருளாதார முக்கியத்துவம் குறித்த மிகவும் விவரங்கள் நிறைந்த அறிக்கை. Continue reading லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

நம்முடைய பாடப் புத்தகங்கள் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. அண்மையில் எழுந்த சர்ச்சை மொகலாய மன்னர்கள் தாங்கள் இடித்த ஹிந்துக் கோவில்களை மீண்டும் சீரமைத்தார்கள் என்பது. இதற்கு ஆதாரங்கள் உண்டா எனத் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது ‘இல்லை’ என என்.சி.ஈ.ஆர்.டி நிறுவனம் பதிலளித்துள்ளது. Continue reading லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘என் சரித்திரம்’ மிகவும் புகழ்பெற்ற நூல். அதைப் போலவே முக்கியமான மற்றொரு நூல் அவர் எழுதிய அவரது குருநாதரின் வாழ்க்கை வரலாறு. ‘திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’. Continue reading லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

எல்லா நல்ல காரியங்களையும் பிள்ளையார் பெயர் சொல்லி ஆரம்பிக்க வேண்டுமென்பார்கள். எனவே புதிதாக ஆரம்பிக்கிற இந்த ‘லும்பன் பக்கங்கள்’ தொடரையும் அவர் விஷயத்திலிருந்து ஆரம்பிப்பதில் தவறில்லை. Continue reading லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

தமிழ்வாணன் என்கிற தேசபக்த ஹிந்து | அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்நாட்டில் திராவிட இயக்க அலை அடித்த போது அதனை எதிர்த்து நின்றதோடு, ஹிந்து தர்மத்துக்காகக் குரல் கொடுத்த முக்கியமான ஊடகவியலாளர்கள் உண்டு. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் இல்லாமல், அவர்கள் தீர்மானமாக ஹிந்து தர்மத்தை ஆதரித்தனர். திராவிட இயக்க போலித்தனங்களைத் தோலுரித்தனர்.

அப்படிப்பட்ட ஒரு ஊடகவியலாளர் தமிழ்வாணன் அவர்கள். தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களால் தமிழ்வாணன் எனப் பெயர் சூட்டப்பட்டவர் அவர். ‘துணிவே துணை’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டவர். Continue reading தமிழ்வாணன் என்கிற தேசபக்த ஹிந்து | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

அரவிந்தன் நீலகண்டனின் சிறப்புக் கட்டுரை – போலிப் பெண் போராளி

முனைவர் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தகைகள் கட்சியின் தலைவர். 2019 ஜனவரியின் போது சனாதனத்தை ஒழிப்போம் என்கிற போர் அறிவிப்புடன் ஒரு மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சி, திமுக, இடது கம்யூனிஸ்ட் வலது கம்யூனிஸ்ட் ஆகியோருடன் இஸ்லாமிய வகுப்புவாத கட்சிகளும் கலந்து கொண்டன. Continue reading அரவிந்தன் நீலகண்டனின் சிறப்புக் கட்டுரை – போலிப் பெண் போராளி

Posted on Leave a comment

சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்

அந்த அமெரிக்க ஆராய்ச்சியாள தம்பதிகள் நாட்டுப்புறத் திருவிழாவைக் காண அந்த கிராமத்துக்கு வந்திருந்தனர். நகர்ப்புறங்களிலிருந்து மிகவும் விலகி இருந்த கிராமம் அது. அந்தத் தம்பதிகளுக்கு வழிகாட்டியாக ஒரு பதினேழு வயது இருக்கும் கிராமப்பெண் கிடைத்தாள். கெட்டிக்கார பெண். தன் பணியைச் செவ்வனே செய்தாள். கிராமத்திலிருந்த மிருக ஆஸ்பத்திரி அந்தத் தம்பதிகளின் கவனத்தை ஈர்த்தது. அங்கே சென்று பார்க்கலாமா? ஓ சரி என்றாள் அந்த வழிகாட்டிப் பெண். Continue reading சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

அயோத்தி தீர்ப்பு – உண்மை மதச்சார்பின்மையின் வெற்றி | அரவிந்தன் நீலகண்டன்


அயோத்தியில்
ஸ்ரீ ராமருக்கு கோவில் கட்ட இறுதியாக அனுமதி கிடைத்துவிட்டது. பிரச்சினை ஒரு
முடிவுக்கு வந்துவிட்டது. ஏறக்குறைய 500 ஆண்டுகளாக இந்துக்கள் மேற்கொண்ட ஒரு
பெரும் தொடர் போராட்டம் அமைதியான ஆர்ப்பாட்டமற்ற வெற்றியை அடைந்திருக்கிறது.
சர்வதேச
அளவில் மதச்சார்பின்மைக்குக் கிடைத்த மிகப் பெரிய சமீபத்திய வெற்றி இதுதான்.
ஸ்வராஜ்யா
பத்திரிகையின் இணைய ஆசிரியர் ஆருஷ் தாண்டன் தீர்ப்பு வரும் அன்று அதிகாலை தனது
ட்விட்டரில் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டினார்:
‘சற்றேறக்குறைய
100 கோடி மக்களைக் கொண்ட மதத்தின் சமுதாயம், அதன் மிக மிக ஆதாரமான புனித இடத்தில் கோவில்
கட்ட வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய மதச்சார்பற்ற நாட்டின் நீதிமன்றத்தை
நம்பிக் காத்திருக்கிறார்கள். இதை போல் வேறெங்காவது பார்க்க முடியுமா?’
பின்னர்
அன்று காலை பத்திரிகையாளர் மின்ஹாஸ் மெர்ச்சண்ட் இதே விஷயத்தை மீண்டும்
சுட்டிக்காட்டினார்.
இந்தியா
போல தன்னியல்பிலேயே மதச்சார்பின்மை கொண்ட தேசத்தில்தான் 80 விழுக்காடு
பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் 70 ஆண்டுகளாக தாம் கோவில் கட்ட சட்டபூர்வமான ஒரு
தீர்ப்புக்காகக் காத்திருப்பார்கள். இந்தியாவுக்கு மத சகிப்புத்தன்மை குறித்து
உபதேசப் பேருரை செய்யும் மேற்கத்திய ஜனநாயகங்கள் கொஞ்சம் தங்கள் வரலாறுகளைப்
பார்த்தால் நலம்.
அப்படியானால்
டிசம்பர் 6 1992?
இந்தியாவின்
சராசரி முஸ்லிமுக்கு இது மிகப்பெரிய துயரத்தை அளித்தது. அது முழுமையாகப் புரிந்து
கொள்ளக் கூடியதுதான். இதன் விளைவாக முஸ்லிம் சகோதரர்கள் இயல்பாக, பாதுகாப்பற்ற
உணர்வில் ஆழ்ந்தார்கள். அன்னிய முதலீட்டில் ஊட்டி வளர்க்கப்பட்ட பயங்கரவாத
இயக்கங்களுக்கு இரையானார்கள். இது ஒரு விஷச்சுழலை உருவாக்கியது.
ஆனால்
இதை உருவாக்கியவர்கள் இந்துத்துவர்கள் அல்ல.
இதை
உருவாக்கியவர்கள் இடதுசாரிகள். மார்க்ஸியவாதிகள்.
தொடக்கம்
முதல் ஹிந்துத்துவ இயக்கங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிவந்த ஒரு விஷயம், இது
ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள மதப்பிரச்சினை அல்ல என்பதுதான்.
ஹிந்துத்துவ இயக்கத் தலைவர்களில் ஒருவரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வராகவும்
இருந்த கல்யாண் சிங் உருக்கமாக சொன்னார்:  ‘நாங்கள் ஸ்ரீ ராம ஜென்மபூமியாக தலைமுறை
தலைமுறையாக வழிபடும் இந்த இடத்தை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள். எங்கள் தலைகளில்
செங்கல்கள் சுமந்து இதே சரயு நதிக் கரையில் பிரம்மாண்டமான மசூதியை நாங்கள்
கட்டித்தருகிறோம்.’
அதற்கு
இஸ்லாமிய சகோதரர்கள் பெரிய அளவில் ஒத்துக் கொண்டார்கள் எனக் கூறுகிறார்
அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது அவர்கள். அதை இல்லாமல் ஆக்கியவர்கள் மார்க்சியக்
குறுங்குழு ஒன்று என்கிறார் அவர்.
அக்காலகட்டத்தில்
வெளிப்படையாகக் களமிறங்கியவர்கள் பெரும் மார்க்சிய அறிவுஜீவிகள். ஆனால் அவர்கள்
அனைவரும் கச்சிதமாக கல்வி சமூக-வரலாற்று ஆராய்ச்சி அமைப்புகளில் மிகப் பெரிய
பொறுப்புகளில் இருந்தார்கள். அவர்கள்தான் பாடநூல்களை வடிவமைத்தார்கள். அவர்களை
பொதுவாக மக்கள் வரலாற்று அறிஞர்களாகப் பார்த்தார்களே தவிர ஒரு அரசியல் தரப்பின்
சித்தாந்தத் தரகர்களாகப் பார்க்கவில்லை.
அவர்கள்
அந்த இடம் மசூதிதான் என்றார்கள். ஹிந்துக்களின் கோரிக்கைக்கு வரலாற்று ஆதாரம்
எதுவுமில்லை என்றார்கள். புராண மத நம்பிக்கைகளை வரலாறாகத் திரித்து அரசியல்
செய்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்றார்கள்.
ஜனவரி
1991ல் மார்க்ஸிய வரலாற்றறிஞர்களான ஆர்.எஸ்.ஷர்மா, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பர்
உட்பட 42 அறிவுஜீவிகள் ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டார்கள். ‘அங்கே கோவில் இருந்ததற்கான
சான்றுகளே இல்லை.’
இன்னும்
கூட சொன்னார்கள், ‘ராமரைக் கும்பிடும் வழக்கமும் அயோத்தியைப் புனிதமாகக்
கருதுவதும் கூட பின்னாட்களில் ஏற்பட்டதுதான்.’
ஹிந்து
தரப்பினருக்குப் பொதுவாக நவீனத்துவ பரிபாஷைகள் நிரம்பிய அறிவியக்கத் தந்திரங்களில்
பரிச்சயமில்லை. இடதுசாரிகள் அடித்து ஆடினார்கள். ராமர் பிறந்ததே ஆப்கனிஸ்தானில்
என்றார்கள். பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார்கள். இரு தரப்பினரிடமும் அரசு
ஆதாரங்கள் கேட்டபோது பாபர் மசூதிக் குழுவினருக்கு ஆதரவாக ஆதாரங்களை அளிக்கிறோம்;
ஆனால் நாங்கள் பாரபட்சமற்ற அறிவியல் நோக்கு கொண்ட வரலாற்றாசிரியர்களின் தனிக்குழு
என அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள். ஏற்கெனவே பாப்ரி ‘மசூதி’ ஆலோசனைக்
குழுக்களிலும் இருந்த இந்த பெருமக்களின் கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது. பேச்சு
வார்த்தைகள் நடந்தபோது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. ஆதாரமே இல்லை என்று சொன்ன
ராமர் கோவிலுக்கு ஆதாரங்களை விஸ்வ ஹிந்து பரிஷத் அளித்தது. அதிர்ச்சி அடைந்த
அறிவுஜீவிகள் அதனைப் படிக்கத் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டுமென்று கேட்டார்கள்.
அகழ்வாராய்ச்சியாளர்
பி.பி.லால், ராம ஜென்ம பூமி – பாப்ரி அமைப்பு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்தவர்.
அவர் அங்கே தூண்களின் அடித்தளங்கள் இருப்பதை உறுதி செய்தார். இடதுசாரிகளோ, இல்லவே
இல்லை அது பொய், லால் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறார் என்றார்கள். அவரது ஒரிஜினல்
அறிக்கையில் அவர் அதைக் கூறவே இல்லை என்றார்கள். அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது
இதை மறுத்தார். 1977களில் பாப்ரி அமைப்பினையொட்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில்
இருந்த ஒரே முஸ்லிம் தான் மட்டுமே என்பதை நினைவுபடுத்திய அவர் ‘பாப்ரி அருகே
அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்துக்கு நான் சென்று பார்த்தேன். அங்கே தூண்களின்
அடித்தளங்கள் இருப்பதைக் கண்டேன்’ எனத் திட்டவட்டமாக கூறினார்.
தண்டனையாக
அதன் பின்னர் கே.கே.முகமது இடமாற்றமும் செய்யப்பட்டார். ஆனால் அவர் அதைக்
குறித்தெல்லாம் கவலை அடையவில்லை. அவர் கூறிய சான்றாதாரம் இந்தியன் எக்ஸ்பிரஸில்
வெளிவந்தது. கேகே முகமது அவர்களின் சாட்சியத்தை வெளியே கொண்டு வர உதவியவர் ஐராவதம்
மகாதேவன்.
ஆனால்
இடதுசாரிகள் விடவில்லை. நாடு முழுக்கத் தங்கள் இயக்கங்களைப் பயன்படுத்தி, பெரிய
பிரசாரம் செய்தார்கள். ‘புத்த கயாவின் கதை என்ன? அதை ஹிந்துக்கள் அழிக்கவில்லையா?
ஆக்கிரமிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள்.
ஆனால்
உண்மை அப்படி அல்ல. வரலாற்றாராய்ச்சியாளர் டாக்டர்.அப்துல் குதோஸ் அன்ஸாரி
விளக்கினார்:
‘பௌத்தம்
செழித்து வளர்ந்திருந்த புத்த கயா பகுதியில் இஸ்லாமின் சிலை உடைப்புத் தீவிரம்
பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்திருக்க வேண்டும். இதன் விளைவாக அங்கே பௌத்தர்களே
இல்லாமல் அழிந்துவிட்ட நிலையில் அங்கு (சிதைக்கப்பட்ட) பௌத்த விகாரங்களை வழிபட,
பராமரிக்க ஆளில்லாத நிலையில் பிராமணர்கள் தங்கள் மதக்கடமைக்கு வெளியே சென்று
அந்தப் பணிகளையும் செய்ய வேண்டியிருந்தது.’
ஆனால்
இத்தகைய வரலாற்று நுண் உண்மைகளைக் குறித்துப் பேசிடும் நிலையில் இல்லை இடதுசாரி
பிரசாரகர்கள். வலுவான ஊடகமும் அதிகார வர்க்கமும் ஒரு பக்கம் அணிதிரள, அயோத்தியில்
ராமனுக்கு ஓர் ஆலயம் இல்லையா என்கிற ஆதங்கம் வெகுஜன மக்கள் மனத்தில் அலையடிக்க
ஆரம்பித்தது. இஸ்லாமியர் மனத்திலோ, அது ஒரு மசூதி என்கிற எண்ணம் ஆழப்பதியத்
தொடங்கியது.
இந்நிலையில்
அக்டோபர்-நவம்பர் 1990 – தேவ தீபாவளி எனப்படும் வடநாட்டு கார்த்திகா பௌர்ணமி
தினத்தன்று அயோத்தியில் குழுமிய கரசேவர்களை முலாயம் சிங் யாதவின் அரசு படுகொலை
செய்தது. அதிகாரபூர்வமாக 13 முதல் 16 என்கிறார்கள். ஆனால் நிச்சயம் ஐம்பதுக்கு
அதிகம் கரசேவகர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. பல உடல்கள் மண் சாக்கில் கட்டி சரயு
நதிக்குள் வீசப்பட்டு பின்னர் அழுகி உருகுலைந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டன.
இதன்
விளைவாக அடுத்த தேர்தலில் உத்தர பிரதேசத்தை பாஜக வென்றது. கல்யாண் சிங்
முதலமைச்சரானார். சர்ச்சைக்குட்பட்ட நிலத்தை சுற்றி நிலத்தைக் கையகப்படுத்தினார்.
இதற்கு
எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. கரசேவகர்கள் கடும் வருத்தமடைந்தனர். ஆனால்
1991ல், உச்சநீதிமன்றம் சொன்னதைக் கேட்டு அமைதி காத்தனர். உடனே ஊடகங்கள் ‘கரசேவை
பிசுபிசுத்துவிட்டது; ராமஜென்மபூமி மீட்பு இயக்கம் சக்தி இழந்துவிட்டது’ என்று
பேசின.
1991ல்
கூறப்பட்ட தீர்ப்பு 1992 இறுதியில் கூட கொடுக்கப்படவில்லை. இத்தனை
உணர்ச்சிபூர்வமான விஷயத்தில், லட்சக்கணக்கான மக்கள் தேசமெங்கும் இருந்து வந்து
அயோத்தியில் குழுமியிருக்கும் ஒரு விஷயத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது சில
வாரங்கள் தாமதமானால் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு வருடம் தாமதமானால்? தங்கள்
பொறுமை அதிகார வர்க்கத்தால் துச்சமாக விளையாட்டுப் பொருளாக்கப்படுகிறது என்பதைப்
புரிந்து கொண்டனர் கரசேவகர்கள். அதனால்தான் டிசம்பர் ஆறு 1992ல் பொங்கியெழுந்தனர்.
அது துரோகமென்றால், துரோகத்தின் முதல் கல்லை இந்த நாட்டின் போலி மதச்சார்பின்மை
பேசும் அதிகார வர்க்கம் அவர்கள்மீது வீசியது.
இக்கும்மட்டங்கள்
இடிக்கப்பட்ட பின்னர் 1993 ஜனவரியில் சென்னையில் ஒரு சர்வமத தலைவர்களும்
அரசியல்வாதிகளும் கொண்ட ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முக்கிய பேச்சாளராக
இருந்தவர் காந்தியரும் வரலாற்றாசிரியருமான தரம்பால்.
தரம்பால்
அந்த இடிப்பு பெரும்பான்மை இந்தியர்களுக்கு நன்மையைத் தந்ததாகவே கூறினார்.
மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடு இது, இதற்கு ஒரு தனி இயக்கமோ அல்லது கட்சியோ
பொறுப்பாக முடியாது என்றார்.
விடுதலைக்குப்
பின்னர் இந்திய அரசுக்கும் பாரத தேசத்துக்கும் ஏற்பட்ட பிளவை இந்த இயக்கம் சமன்
செய்கிறது. அது வெற்றி அடையுமா என்னவாகும் என்பது தெரியாது என்பதுதான் உண்மை –
இதுதான் அவரது மைய கருத்து.
அதன்
பின்னர் 2003ல் வழக்குக்காக அகழ்வாராய்ச்சி ஆரம்பித்தது. ஒரு கனேடிய புவியியல்
நிறுவனம் முதலில் ஆராய்ந்து, அங்கே பாப்ரி அமைப்புக்குக் கீழே மற்றொரு அமைப்பு
இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தது. அகழ்வாராய்ச்சியில் தேவநாகரி
கல்வெட்டு உட்பட, சில மனித உருக்கொண்ட விக்கிரகங்களும் கிடைக்க ஆரம்பித்தன. நவீத்
யார் கான் என்ற ஒரு பாப்ரி ‘மசூதி’ ஆதரவாளர் அகழ்வாராய்ச்சிக்குத் தடை விதிக்க
கோரி உச்சநீதிமன்றத்திடம் கோர, அது தள்ளுபடி ஆயிற்று.
ஜூன்
மாதத்தில் மீண்டும் ஊடக காமெடி தொடங்கியது. ஜூன் 11 2003ல் வெளியான செய்திகளில் ‘பாப்ரி
மசூதிக்குக் கீழே ஓர் அமைப்பு இருப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை’ என்பதாகச்
செய்திகள் வெளியாயின. ஆனால் இந்தச் செய்திகளைப் படிக்கும்போது எந்த அளவுக்குத்
தங்கள் வாசகர்களை எவ்வித மனச்சாட்சியும் இல்லாமல் மடையர்கள் என இந்தப்
பத்திரிகைகள் கருதுகின்றன என்பது புரியும். உதாரணமாக, ’தி ஹிந்து’ தனது செய்தியின்
தொடக்கத்தில் இப்படி முழங்கியது:
‘இந்திய
அகழ்வாராய்ச்சிக் கழகம் தனது அறிக்கையில் பாப்ரி மசூதியின் கீழே வேறொரு அமைப்பு
இருப்பதற்கான எவ்வித அமைப்புரீதியிலான வித்தியாசங்களையும் தான் தோண்டிய 15 புதிய
குழிகளிலும் காண முடியவில்லை என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.’
ஆனால்
உண்மை இப்படி இருந்தது. அது முக்கியப்படுத்தப்படாமல் அதே செய்தியில்
குறிப்பிடப்பட்டது.
‘அமைப்புரீதியிலான
வித்தியாசங்களைத் தான் ஆராய்ச்சி மேற்கொண்ட வேறு 15 குழிகளில் கண்டறிந்ததாக
அறிக்கை சொல்கிறது.’
இப்போது
நாம் அனைவரும் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டிய கேள்வி – எது இந்திய
மதச்சார்பின்மைக்கும் அற உணர்வுக்கும் எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய அநீதி?
திட்டமிட்டுப் பொய் பிரசாரம் செய்து, இல்லாத மசூதியான ஒரு கும்மட்டத்தை, ஒரு
மசூதியாக சிறுபான்மை மக்கள் மனத்தில் பதித்த இந்தப் படித்த அயோக்கியர்களின் செயலா?
அல்லது தாக்கப்பட்டு, குண்டடி பட்டு மீண்டும் மீண்டும் இந்தியாவின் உச்ச
மட்டங்களில் அமர்ந்திருக்கும் அதிகார வர்க்கத்தினரால் ஏமாற்றப்பட்டு, அந்தக்
கும்மட்டத்தை ஏறி உடைத்த கரசேவகர்களின் செயலா?
அந்த
இடம் இந்த தேசத்தின் ஆதார தேசிய உணர்ச்சியுடன் தொடர்புடையது. இந்த தேசம் முழுவதும்
அனைத்து சமுதாய மக்களிடமும் ஆழமான பண்பாட்டு ஆன்மிக உணர்ச்சியுடன் இணைந்த ஒரு
பெயர் ஸ்ரீ ராமன். ஆதிகவி வான்மீகிக்கு அவன் ஆதர்ச நாயகன். அகநானூற்றுக் கவி
கடுவன் மள்ளனாருக்கும் வேடுவப் பெண் சபரிக்கும் அவன் தெய்வம். குகனுக்கு சகோதரன்.
ஆனால் அவனையும் கூட கேள்விக்கு உட்படுத்தும் மரபு ஹிந்துக்களுடையது. எனவேதான் அவன்
பாரதத்தின் தேசிய நாயகன். ராம ரசத்தைப் பருகுங்கள் என்று சிந்து நதிக்கரை
சீக்கியர் கபீர் கானத்தைப் பாடுகிறார். பிபரே ராமரசம் என்ற காவேரிக்கரை
தென்னிந்தியர் போதேந்திரர் கானத்தைப் பாடுகிறார். இப்படி அனைவரையும் இணைக்கும்
பண்பாட்டு உன்னதம் ராமன்.
பாஜக
ஏன் ஒரு அரசாணையைப் பிறப்பித்து ராமர் கோவில் கட்டியிருக்கக் கூடாது என்று 2019
தேர்தலின்போது சிலர் கேட்டார்கள். அது அரசியல் ஆதாயத்தைத் தந்திருக்கலாம். ஆனால் தேசம்
முழுமைக்கும் சொந்தமான ராமனுக்குக் கட்டப்படும் கோவிலாக அது அமையாது. அப்படி அமைய
இப்படிக் காத்திருந்து நீதிமன்றம் மூலமே செய்யப்படும் செயல்தான் ராமனுக்குப்
பெருமை தரும்.
இன்றைக்கு
அளித்த தீர்ப்பின் மூலம் பாரதத்தின் உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கும்
பாரததேசத்தின் ஆன்மாவுக்கும் இடையில் ஏற்பட்ட செயற்கை நேருவியப் பிளவை அகற்ற
முன்வந்திருக்கிறது. அதற்கான ஆன்ம பலம் நம் அரசியல் சாசனத்துக்கு உள்ளது என்பதைக்
காட்டியிருக்கிறது.

இது இந்த தேசத்தின் பண்பாட்டின் பெருமை. ராம நாம வேள்வியின்
மகிமை.

Posted on Leave a comment

குழந்தையின் மரணமும் நியூட்ரினோவின் சாத்தியமும் | அரவிந்தன் நீலகண்டன்



நம் அனைவரையும் உலுக்கியிருக்கும் ஒரு துன்பச்
சம்பவம் இரண்டு வயதுக் குழந்தை சுஜித் வில்ஸனின் துர்மரணம். எண்பது மணி நேரப் போராட்டத்தின்
பின்னர் அக்குழந்தையை மீட்க இயலவில்லை. ஆனால் அரசு அதன் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தியது.
நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தையும் மானுடத் திறமையையும் அதன் உச்ச துரித கதியில்
பயன்படுத்தியது. மாநில அரசின் அமைச்சரின் செயல்பாடு இத்தருணங்களில் எப்படி அரசியல்வாதிகள்
நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான புதிய அடிப்படை நடத்தையாக மாறியுள்ளது.
இவை ஒருபுறமிருக்க இந்தத் துன்பச் சம்பவத்தை ஊடகங்கள்
பயன்படுத்திய விதம் அனைத்து மக்களிடமும் பொதுவாக முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘அறம்’ திரைப்பட இயக்குநர் போன்ற அறிவியல் எதிர்ப்பாளர்கள் ஊடகப் பிரபலங்களாகவும் துறை
வல்லுநர்களாகவும் வலம் வந்தனர். நல்ல காலம் அத்திரைப்படத்தில் நடித்த நடிகர்களும் துறை
வல்லுநர்களாக பேட்டி தரவில்லை என்பது ஏதோ தமிழ்நாட்டின் பூர்வ ஜென்ம புண்ணியம்.
அக்குழந்தையின் மறைவுக்குப் பிறகு சமூக ஊடகங்களில்
அருணன் போன்ற ‘அறிவுசீவிகள்’ வெளியிட்ட வெறுப்பு உமிழும் ட்வீட்கள் தமிழ்நாட்டில் முற்றிப்
போய்விட்ட மனோவியாதியின் வெளிப்பாடுகளாக இருந்தன. ஏதோ அந்தக் குழந்தை கிறிஸ்தவர் என்பதால்
ஆர்.எஸ்.எஸ் மகிழ்ந்ததாக ட்வீட் செய்து தனது வக்கிரத்தை வெளிக்காட்டி புளகாங்கிதமடைந்திருந்தார்
அருணன்.
இப்படி ஒரு ஊடகப் பொது மன மண்டலம் அனைத்துத் தமிழரும்
வெட்கித் தலைகுனிய வேண்டிய சமூக வியாதியே அன்றி வேறல்ல. தமிழ்நாட்டில் இன்று ஊடகவியலாளனாக
வேண்டுமென்றால் அதன் முதல் தகுதியே இந்த மனவக்கிரம்தான் எனத் தோன்றுகிறது.
சுஜித் வில்ஸன் அவன் மரணத்தின் மூலம் நமக்குப்
பல பாடங்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறான். ஆழ் துளைக் கிணறுகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.
அவற்றை ஒழுங்காக மூடுங்கள். குறிப்பாக சிறார்கள் அவற்றின் அருகில் செல்வதைத் தடுக்கும்
விதமாக மூடி அபாயக் குறிப்புகளை வையுங்கள். உங்கள் வீட்டின் அருகிலேயே குழந்தைகள் விளையாட
ஆபத்தற்ற இடங்களையும் அவை செல்லக் கூடாத ஆபத்து சாத்தியங்கள் உள்ள இடங்களையும் குழந்தைகளுக்குத்
தெளிவாகச் சொல்லி, தவிர்க்க வேண்டிய இடங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வையுங்கள்.
சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் விண்கலன்களை அனுப்பும்
இந்தியா பூமியில் எண்பதடிகளுக்குள் மாட்டிக் கொண்ட சிறார்களைக் காப்பாற்ற முடியவில்லை
என மீம்கள் வலம் வரலாயின. மீத்தேனைத் தோண்டி எடுக்க முடிந்த ONGC தொழில்நுட்பத்தால்
குழந்தையை மீட்க முடியாதா என அடுத்த மீம்கள். இவை எல்லாவற்றிலும் அடிப்படையாக இருப்பது
இந்தியாவின் மீதும் அதன் அறிவியல் தொழில்நுட்ப அமைப்புகள், சாதனைகள் மீதுமான வெறுப்பு.
வேற்று நாட்டின் மீது பயபக்தி. இது இந்தியாவில் ஒவ்வொரு துயர நிகழ்வின் போதும் செயல்படுத்தப்படும்
சமூக ஊடக நிகழ்வு. இப்போது தமிழ்நாட்டில் இது பொது ஊடகங்களிலும் அழுத்தமாகக் குடி கொண்டிருக்கும்
வியாதி.
பெட்ரோலையும் மீத்தேனையும் தோண்டி எடுப்பது போலவா
குழந்தையைத் தோண்டி எடுக்க முடியும்? அருவாமனையில் அபெண்டிக்ஸ் ஆப்பரேஷன் செய்ய சொல்லும்
புத்திசாலித்தனம் இது.
வெறுப்பு பேச்சுக்கு உள்ளான இஸ்ரோவை எடுத்துக்
கொள்வோம். பல முறை நம் மீனவர்களைக் கடலில் தத்தளிக்கும்போது காப்பாற்ற இஸ்ரோ தொழில்நுட்பமே
உதவியது. நம் நீராதாரங்களை மேம்படுத்த இஸ்ரோ உதவியுள்ளது. இஸ்ரோவால் உண்மையாகக் காப்பாற்றப்பட்ட
நம் நாட்டு மக்களின் எண்ணிக்கை எந்த சூப்பர் கதாநாயகனும் அவனது ஒட்டுமொத்தத் திரைவாழ்க்கையில்
திரையில் காப்பாற்றியதாக நடித்த மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடப் பெரிதாக இருக்கும்.
ஆனால் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப எதிர்ப்பு, இந்திய
வெறுப்பு ஆகியவற்றைத் திட்டமிட்டு பரப்பும் தீயசக்திகளான லயோலா முதல் திமுக வரை இவற்றைக்
குறித்து கவலைப்படுவதே இல்லை.
சுஜித் மீட்பு நடக்கும்போது ஆளூர் ஷா நவாஸ் என்கிற
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சீனாவில் இத்தகைய மீட்பு பணி வெற்றிகரமாக நடக்கும்
வீடியோ காட்சியை வைரலாக்கினார். சீனாவில் தொழில்நுட்பம் மக்களுக்கு உதவுகிறது, இந்தியாவில்
உதவவில்லை என்பது பிரசாரத்தின் அடிநாதம்.
சீனா கடந்த சில பத்தாண்டுகளில் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும்
அசுர வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால் அதற்கு சீன மக்கள் கொடுத்த விலை அதிகம். பெரிய
விண்வெளி சாதனைகளைச் செய்திருக்கிறது சீனா. ஆனால் அதற்காக ராக்கெட் லாஞ்ச்களின் போது
ஒட்டுமொத்தக் கிராமங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. தவறுதலாக ஏவப்பட்ட ராக்கெட்களால்
நள்ளிரவில் மக்களோடு எரிந்து தரைமட்டமான கிராமங்களின் காணொளிகள் காணக்கிடைக்கின்றன.
கைதிகள் எல்லாவிதமான அறிவியல் மானுடப் பரிசோதனைகளுக்கு ஆட்படுத்தப்படுவதுடன் அவர்களின்
உள்ளுறுப்புகள் பெரிய அளவில் ‘அறுவடை’ செய்யப்படுகின்றன. அண்மையில் க்வாண்டம் டெலிபோர்ட்டேஷன்
என்கிற முன்னணித் தொழில்நுட்பத்தில் சீனா பெரும் சாதனையை நிகழ்த்தியது. மானுட அறிதலிலேயே
மிக முக்கியமான முன்னணித் தாவல். ஆனால் அதற்கான மையத்தை சீனா ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தின்
மேற்சிகரமொன்றில் அமைத்திருந்தது. திபெத்தில் சீனா நடத்தும் பண்பாட்டு மக்கள் இனத்துடைத்தழிப்பு
உலகம் அறிந்த ஒன்று. 2016ல் சீனா உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி டிஷ்ஷை அமைத்தது.
பிரபஞ்சத்தில் எங்காவது ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் அறிவுத்திறனுள்ள உயிரினங்கள்
ஏதாவது சமிக்ஞைகளை அனுப்புகின்றனவா எனப் பகுத்தறிய இந்த ரேடியோ டெலஸ்கோப் டிஷ் ஆண்டெனா.
இதற்காக 9,000 கிராம மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு வேறிடங்களுக்குக் கொண்டு
போக வைக்கப்பட்டனர்.
இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி இப்படிப்பட்ட அசுரத்தனம்
கொண்டதல்ல. இன்னும் சொன்னால் அதற்கு முட்டுக்கட்டை போடும் சக்திகள்தான் அசுரத்தனமாக
இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டில் தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம்
அமைக்கப்படவிருந்தது நினைவிருக்கலாம். இதன் அமைப்பைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
ஆயிரம் அடி கீழே அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மையம். இதனை வந்தடைய பக்க வாட்டில் மலையடியே
ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்க அணுகு சாலை. இதை வரவிடாமல் செய்தவர்கள்
நாம். லூடைட் தனமாகப் போராடி நியுட்ரினோ குறித்துப் பொய் பிரசாரம் செய்து, அறிவியல்
எதிர்ப்புப் பிரசாரம் செய்து இதை வரவிடாமல் செய்தோம்.
இது நிறைவேறியிருக்கும் பட்சத்தில் ஆயிரம் அடிக்கு
கீழே மனிதர்கள் – ஆராய்ச்சியாளர்கள் வேலை செய்யும் ஒரு அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும்.
அது செயல்படும் பட்சத்தில் அதில் நெருக்கடி மீட்புக்கான தொழில்நுட்பமும் அமைந்திருக்கும்.
அதற்குத் தேவையான உபகரணங்கள், நிலச்சரிவில் ஆழத்தில் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய
வேண்டும் என்ன செய்ய கூடாது என்பது போன்ற விதிகள் தெரிந்த ஒரு வல்லுநர் குழு நமக்கு
இருந்திருக்கும். இங்கு இருக்கும் ஆபத்து உதவி உபகரணங்கள் மிக நிச்சயமாக சுஜித்தைக்
காப்பாற்றுவதிலும் நல்பங்கு வகித்திருக்கும் என நம்ப மிகுந்த இடம் இருக்கிறது.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நியூட்ரினோ ஆய்வகத்தில்
1,000 அடி ஆழத்தில் மனிதர்கள் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் அல்ல என்றாலும்
கூட, மானுடர்கள் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். அப்போது ஏதாவது ஆபத்துக்கள் நிகழ்ந்தால்
அவர்களைக் காப்பாற்றும் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அங்கே இருந்தாக வேண்டும்.
இவை எல்லாம் அங்கே உருவாகியிருக்கும். சுஜித் விஷயத்தில் அவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
அக்குழந்தையைக் காப்பாற்றும் விஷயத்தில் மிக முக்கியக் காரணியான காலம் என்பதை அது சிக்கனப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு சாத்தியத்தைக் கூட இல்லாமல்
ஆக்கியது வேறு யாருமல்ல, நம் இடதுசாரி தமிழ்ப் பிரிவினைவாத லூடைட் கும்பல்தான்.

நமது ஏவுகணை தொழில்நுட்பம் நமக்கு ஏவுகணைகளை மட்டும்
தரவில்லை. போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எடை குறைவான அதே சமயம் வலுவான நடையுதவி
சாதனங்களை உருவாக்கி தந்தது. இப்படிப்பட்ட உப நன்மைகளை ‘ஸ்பின் ஆஃப்’ நன்மைகள் என்பார்கள்.
எந்த ஒரு பெரும் தொழில்நுட்பத்துடனும் இப்படிப்பட்ட ஸ்பின் ஆஃப்கள் கூட கிடைக்கும்.
நியூட்ரினோ ஆய்வக அமைப்பு பொறிநுட்ப சாதனை. நம் நிலவியல் சூழலில் மிக ஆழங்களில் மானுடர்கள்
செயல்பட அமைக்கப்படும் ஒரு அமைப்பு. இதன் ஸ்பின் ஆஃப்களில் பேரிடர் சூழலில் ஆழப்புதைபடும்
மக்களைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் நமக்குக் கிடைத்திருக்க பெரும் வாய்ப்பு உண்டு.
அதனை இல்லாமல் ஆக்கியதில் நம் இடதுசாரி லூடைட்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இதற்கு
நாம் என்ன விலை கொடுக்கிறோம் என்பதைத் தெரியாமலே விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அறிவியல் தொழில்நுட்ப எதிர்ப்பு சக்திகளை எந்த அளவு விலக்கி வைக்கிறோமோ அந்த அளவு நம்
சமூகத்துக்கு நல்லது.