‘தமிழகத்திற்கும் தமிழ்த் தாய்க்கும் தொண்டு புரிவதென்ற நோக்கத்துடன் வெளிவந்துள்ள பல பத்திரிகைகள் இருக்கையில் ‘நானும் அத்தொண்டில் சேருவேன்’ என்று தீர்மானம் கொள்வதே அதிகத் துணிவு என்று நினைத்தல் கூடும். ஆயினும் ராமன் சேதுபந்தம் செய்யும் காலத்தில் ராமசேவையில் ஈடுபட்டு, ஒரு சிறிய கல்லை வெகுப் பிரயாசையோடு கொண்டு வந்து சேர்த்த அணிலின் பக்தியை பரமாத்மா பெரிதாகக் கொள்ளவில்லையா? அவ்வாறே தேசத்தொண்டு தமிழன்னையின் ஒவ்வொரு புதல்வனும் கைப்பற்ற வேண்டிய தர்மம் என்று கருதி, ‘பாரத மணி’ தன்னால் இயன்றதைச் செய்ய வெளிவந்திருப்பதால் தமிழ் மக்களின் பூரண ஆதரவைப் பெரும் என்று நம்புகிறோம்.’ Continue reading பாரத மணியும் வேங்கட ரமணியும் | அரவிந்த் சுவாமிநாதன்
Tag: அரவிந்த் சுவாமிநாதன்
அந்தக் கால சமையல் புத்தகங்கள் | அரவிந்த் சுவாமிநாதன்
(மீனாட்சி அம்மாள்)
இந்த கோவிட்-19 வீட்டு முடக்க நாட்களில், குழந்தைகளுக்கும், மனைவிக்கும் சுவையாக ஏதாவது தின்பண்டங்கள் செய்து அசத்தலாமே என்று இணையத்தில் தேடினேன். அறிந்ததும் அறியாததுமாய்ப் பல்வேறு தின்பண்டங்கள் செய்யும் வழிமுறைகள் காணக் கிடைத்தன. கூடவே கிடைத்தது ‘மீனாட்சி அம்மாள்’ என்பவர் எழுதிய ‘சமைத்துப் பார்’ என்ற புத்தகம் பற்றிய செய்திகள். ‘மீனாட்சி அம்மாள்’ அந்தக் காலத்து மனுஷி ஆயிற்றே, அவர் எழுதிய புத்தகம் இன்னுமா கிடைக்கிறது என்று ஆச்சர்யத்துடன் தேடிப் பார்த்தால்.. ஆம். அவர் எழுதிய புத்தகமேதான். அவருடைய பேத்தி ப்ரியா ராம்குமார் வெளியிட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் வழக்கில் இருந்த சொற்களை மாற்றி, தற்காலத்து மக்களுக்கும் புரியும்படி நூலைக் கொண்டு வந்திருக்கிறார் ப்ரியா. அமேசானிலும் கிடைக்கிறது.
மீனாட்சி அம்மாளின் ‘சமைத்துப் பார்’ வெளிவந்தது 1951ம் ஆண்டு. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகம். இப்புத்தகம் இன்றைக்கும் விற்பனையில் இருக்கிறது என்பதும், ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது என்பதும் சமையற்கலைக்கு இருக்கும் முக்கியத்துவத்தையும், வரவேற்பையும் காட்டுகிறது. அதனால்தான் இன்றைக்கும் செட்டிநாட்டுச் சமையல், கொங்கு நாட்டுச் சமையல், சிறு தானியச் சமையல், அசைவச் சமையல், சைவச் சமையல், கிராமத்துச் சமையல், மண்பானைச் சமையல், மூலிகைச் சமையல் என்றெல்லாம் புதிது புதிதாகப் புத்தகங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வந்து கொண்டிருக்கின்றன.
‘The Best Of Samaithu Paar’ என்ற தலைப்பில், பெங்குவின் வெளியீடாக மீனாட்சி அம்மாளின் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது. அதனை வாசித்துக் கொண்டிருக்கையில் தமிழில் சமையற்கலை பற்றி வெளியான முதல் புத்தகம் எதுவாக இருக்கும் என்ற சிந்தனை தோன்றியது.
Continue reading அந்தக் கால சமையல் புத்தகங்கள் | அரவிந்த் சுவாமிநாதன்
விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்கள் | அரவிந்த் சுவாமிநாதன்
வதம்’ தான் தமிழின் முதல் சலனத் திரைப்படம்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முன்னோடியான அந்த முதல் முயற்சியைச் செய்தவர் ஆர். நடராஜ
முதலியார். அதனைத் தொடர்ந்து ‘திரௌபதி வஸ்திராபரணம்’, ‘மஹிராவணன்’,
‘மார்க்கண்டேயன்’
போன்ற பல பேசாப் பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன என்றாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின்
தடையாலும் கட்டுப்பாட்டாலும் அவை மட்டுப்படுத்தப்பட்டன. 1931ல் வெளியான ‘காளிதாஸ்’
தமிழின் முதல் பேசும் படமாகக் கருதப்படுகிறது. அதற்கு முன்பே அதே ஆண்டில், ‘குறத்திப்
பாட்டும், டான்ஸூம்’ என்ற சிறு படம் (குறும்படம்) வெளியாகியிருக்கிறது.
மொத்தம் நான்கே ரீல்கள் கொண்ட அப்படமே தமிழின் முதல் பேசும்படம் (அ) குறும்படம் என்று
கருதத்தக்கது. அதனைத் தொடர்ந்து புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு ‘ராமாயணம்’, ‘காலவா’, ‘சத்தியவான்
சாவித்திரி’, ‘கிருஷ்ண லீலா’
போன்ற படங்கள் வெளியாகின. கூடவே அக்காலத்தின் புகழ்பெற்ற நாடகங்களான ‘வள்ளி
திருமணம்’, ‘ஹரிச்சந்திரா’,
‘பிரகலாதா’, ‘நந்தனார்’,
‘கோவலன்’ போன்றவையும் திரைப்படங்களாகி
வெற்றிபெற்றன.
ஆகஸ்ட் 1947க்கு முன்பாகவே சுமார் 400 படங்கள் வரை வெளியாகியிருக்கின்றன. அவற்றில்
அரிய செய்திகளைக் கொண்ட சில படங்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
புராண, வரலாற்றுக் கதைகளை மையமாக வைத்தே திரைப்படங்கள் வெளியாகின. அந்த வகையில்
1933ல் தொடங்கப்பட்டு 1934ல் வெளியான படம் சீதா கல்யாணம். பிரபல ஹிந்திப் பட இயக்குநர்
வி.சாந்தாராமின் முயற்சியில் உருவான இப்படத்தின் கதையை அக்காலத்தின் பிரபல எழுத்தாளரான
எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் எழுதியிருந்தார். பாபுராவ் பண்டேர்கர் இயக்கியிருந்தார்.
சீதையின் திருமணத்தைப் பற்றிய இந்தக் கதையில் கதாநாயகன் ராமனாக நடித்தது பிற்காலத்தில்
இசை மற்றும் ஓவிய மேதையாக அறியப்பட்ட எஸ். ராஜம். கதாநாயகி சீதையாக நடித்தது எஸ்.ஜெயக்ஷ்மி.
இவர் ராமனாக நடித்த எஸ்.ராஜத்தின் சகோதரி. மற்றொரு சகோதரி சரஸ்வதி ஊர்மிளையாக நடிக்க,
சகோதரரான பாலசந்தர் ராவண தர்பாரில் கஞ்சிரா வாசிப்பவராக நடித்திருந்தார். இவரே பிற்காலத்தில்
நடிகரும் சிறந்த இயக்குநருமாக உருவாகி, இசை மேதையாகவும் திகழ்ந்த வீணை எஸ்.பாலசந்தர்.
இவர்களது தந்தையான சுந்தரம் ஐயர், ஜனக மகாராஜாவாக நடித்திருந்தார். இவர், அக்காலத்தின்
பிரபல வழக்குரைஞர்களுள் ஒருவர்.
திகழ்ந்து பாடல்கள் எழுதி வந்த பாபநாசன் சிவன், இப்படத்தின் மூலம் பாடலாசிரியராகத்
திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். படத்திற்கு ஏ.என். கல்யாணசுந்தரத்துடன் இணைந்து இசையமைத்திருந்தவரும்
சிவன்தான். இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றாலும், அண்ணனும் தங்கையுமே நாயக,
நாயகியாக நடித்ததால் சர்ச்சையையும் தோற்றுவித்தது.
பின்னர், எம்.கே.தியாகராஜ பாகவதருடன் இணைந்து சிவகவியிலும், ராதா கல்யாணம், ருக்மணி
கல்யாணம் போன்ற படங்களிலும் நடித்த எஸ்.ராஜம், பின்னர் நடிப்பிலிருந்து விலகி இசை மற்றும்
ஓவியத்தில் தனது கவனத்தைச் செலுத்தி ஓவிய மேதையானார். எஸ்.ஜெயக்ஷ்மியும் சில படங்களில்
கதாநாயகியாக நடித்துப் பின் இல்லற வாழ்வில் ஈடுபட்டார். எஸ்.பாலசந்தரும் சில படங்களில்
நடித்தார். ‘பொம்மை’, ‘அந்த நாள்’ போன்ற சில படங்களை இயக்கினார்.
சில படங்களைத் தயாரித்தார். பின் முழுக்க இசைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
படமான சீதா கல்யாணம், 1934ல் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் பாபுராவ்
பண்டேர்கருக்கு உதவியாளராகப் பணியாற்றிய முருகதாசா (முத்துசாமி ஐயர்), இதே படத்தில்
ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.ராம்நாத்துடனும், எடிட்டர் ஏ.கே சேகருடனும் இணைந்து
பிற்காலத்தில் ‘வேல் பிக்சர்ஸ்’
என்ற நிறுவனத்தை உருவாக்கினார். பல வெற்றிப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்தது.
வித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியம் முதன் முதலில் அறிமுகமான படம் இது. மகாராஜபுரம் விஸ்வநாத
ஐயரின் சகோதரர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கதாநாயகன் கிருஷ்ணனாக நடித்திருந்தார். ஜி.என்.பி.க்கு.
நாரதர் வேடம் பி.எஸ்.ரத்னா பாய் மற்றும் பி.எஸ். சரஸ்வதி பாய், பாமா, ருக்மணி ஆக நடித்திருந்தனர்.
துவாபரயுகத்துக் கிருஷ்ணன், கலியுகத்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய தியாகராஜ
சுவாமிகளின் கீர்த்தனையைப் பாடுவதாக ஒரு காட்சி. இது ஒரு முரண் என்றால் படத்தின் இறுதிக்
காட்சியில் கிருஷ்ணன், பாமா, ருக்மணி, நாரதர் எல்லாரும் ‘ஜன
கண மன’ பாடலைப் பாடுகிறார்கள். அந்த வகையில் தேசியகீதம்
முதன் முதல் ஒலித்த தமிழ்ப்படமும் பாமா விஜயம்தான்.
என்று அழைக்கப்படும் (நடிகர் தியாகராஜ பாகவதர் அல்ல) எம்.கே. தியாகராஜ தேசிகர் இப்படத்திற்கு
இசையமைத்திருந்தார். (ஒரே பெயரில் இருவர், ஒரே துறையில், ஒரே காலத்தில் அப்போது இருந்திருக்கிறார்கள்!)
மாயவரம் கந்தசாமி தியாகராஜ பாகவதர் என்பது இவரது முழுப்பெயர். ‘ரஞ்சித
மோகன கவி’, ‘பாகவதர்’
என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், இசை ஆசிரியர்
என்று பல்வேறு திறமைகளுடன் இயங்கிய இவர், ‘தியாகராஜ தீக்ஷிதர்’
என்றும், ‘தியாகராஜ தேசிகர்’
என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். தருமபுருர ஆதினத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை
கந்தசாமி தேசிகர் அக்காலத்தின் சிறந்த தமிழ் வித்வான்களுள் ஒருவர். ‘சித்தாந்த
ரத்நாகரம்’ என்று போற்றப்பட்டவர்.
‘பக்த துளசிததாஸ்’ (1937), ‘மாணிக்கவாசகர்’
போன்ற பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். ‘சாம்பான்’ வரலாற்றை எழுதியிருக்கிறார். தக்ஷிணாமூர்த்தி மீதும் ஒரு செய்யுள்
நூலை இயற்றியுள்ளார்.
கதாநாயகனாக முதன் முதலில் அறிமுகமான படம் இது. கதாநாயகியாக நடித்த எஸ்.டி. சுப்புலட்சுமிக்கும்
அதுவே முதல் படம். இருவரும் ஏற்கெனவே ‘வள்ளி திருமணம்’, ‘ஹரிச்சந்திரா’ உட்பட பல நாடகங்களில்
இணைந்து நடித்த இணையர். இதனால் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. படத்தில்
தியாகராஜ பாகவதர் அர்ஜூனன் ஆக நடித்திருந்தார். அக்காலத்தின் புகழ்பெற்ற நாடக நடிகரான
எஸ்.எஸ். மணி பாகவதர், கிருஷ்ணனாக நடித்திருந்தார். எஸ்.டி. சுப்புலட்சுமி பவளக்கொடியாக
நடித்திருந்தார். இப்படத்தில் ஐம்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. எழுதியவர் பாபநாசம்
சிவன். அற்புதமான வர்ண மெட்டுக்களையும் அவர் அமைத்திருந்தார்.
மகாபாரதத்தின் கிளைக்கதையான அல்லி கதையை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதை இது. ‘சகுந்தலா’
என்ற அக்காலத்து நாடகத்தால் புகழ்பெற்ற ‘சாந்தா தேவி’யும்
இப்படத்தில் நடித்திருந்தார். அவரது நாட்டியமும் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. திரைப்பட
விளம்பரத்தில் அது குறித்த செய்தியும் இடம் பெற்றிருக்கிறது. தியாகராஜ பாகவதரைத் தமிழ்நாடெங்கும்
கொண்டு சேர்த்த முதல் படம் இதுதான். இப்படம் ஒன்பது மாதங்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.டி. சுப்புலட்சுமி)
இப்படத்தின் இயக்குநர் அக்கால ஜாம்பவான்களுள் ஒருவரான கே.சுப்பிரமணியம். மீனாக்ஷி என்பது
அவரது முதல் மனைவியின் பெயர்; பிற்காலத்தில் இப்படத்தில் நடித்த எஸ்.டி. சுப்புலட்சுமியை
இவர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இருவருமாக இணைந்து ‘யுனைடெட்
ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன்’என்ற நிறுவனத்தை உருவாக்கினர். அதன் மூலம்
‘நவீன சதாரம்’, ‘பாலயோகினி’,
‘பக்த குசேலா’, ‘மிஸ்டர்
அம்மாஞ்சி’, ‘கௌசல்யா கல்யாணம்’,
‘சேவாசதனம்’, ‘தியாகபூமி’,
‘இன்பசாகரன்’ போன்ற பல படங்களைத்
தயாரித்து இயக்கினார்.
அறிமுகம் செய்தது இவர்தான். ‘கச்சதேவயானி’
படத்தின் மூலம் அறிமுகமான ராஜகுமாரி, அக்காலத்து ரசிகர்களின் கனவுக் கன்னி ஆனார். தென்னிந்திய
திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பை உருவாக்கியவரும் கே.சுப்பிரமணியம்தான். ‘தமிழ்த்
திரையுலகின் தந்தை’யாக இவர் மதிக்கப்படுகிறார்.
எழுதப்பட்ட நாடகம் ரத்னாவளி. இதனைத் தமிழில் நாடகமாக எழுதியிருந்தார் பம்மல் சம்பந்த
முதலியார். அது நாடகமாக நடத்தப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றதால் அதனைப் படமாக்க விரும்பினார்
ஏவி.மெய்யப்பச் செட்டியார். ஏற்கெனவே அவர் கிராமபோன் இசைத்தட்டுக்களுக்காக ‘சரஸ்வதி
ஸ்டோர்ஸ்’ என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார்.
அதனை அடுத்து அவர் ‘சரஸ்வதி டாக்கீஸ்’
என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் எடுக்கப்பட்ட படம்
தான் ‘ரத்னாவளி.’
திகழ்ந்த பி.எஸ். ரத்னா பாய், பி.எஸ். சரஸ்வதி பாய் சகோதரிகள் இந்தப் படத்தில் கதாநாயகிகளாக
நடித்தனர். தென்னிந்திய நாடக சங்கீத ராணி, ஆர்மோனியச் சக்கரவர்த்தினி, கோகில கான வாணி
என்று போற்றப்பட்டவர் ரத்னா பாய். சங்கீத திலகம் என்று போற்றப்பட்டிருக்கிறார் சரஸ்வதி
பாய். இவர்கள் இருவரும் சகோதரிகள். நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையைச் சேர்ந்தவர்கள்.
நிறைய கிராமபோன் தட்டுக்கள் இவர்கள் பாடி அக்காலத்தில் வெளியாகியுள்ளன.
பாய் வாஸவதத்தை ஆகவும், ரத்னா பாய் ரத்னாவளி ஆகவும் நடித்திருந்தனர். நாயகனாக நடித்தது
எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி. இவர் அக்காலத்தின் வெற்றிப்பட நாயகர்களுள் ஒருவர். இப்படத்தில்
கதாநாயகியின் தோழி காஞ்சனமாலையாக அறிமுகமானவர்தான் டி.ஏ.மதுரம். முக்கிய வேடங்களில்
சி.பஞ்சு, ஏ.டி.கிருஷ்ண சர்மா, எம்.ஆர். சுப்பிரமணிய முதலியார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
என்று போற்றப்பட்ட சி.எஸ். சாமண்ணா இந்தப் படத்தில் நகைச்சுவை வேடமேற்றிருந்தார். உடன்
சுப்ரமணிய முதலியார், அங்கமுத்து, பபூன் ஷண்முகம், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் நகைச்சுவை
வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதியிருந்தார். பிரஃபுல்லா
கோஸ் இயக்கியிருந்தார்.
சகோதரிகளான இருவர் மணக்கும் கதை இது. கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய
வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் அக்காலத்தில் நகைச்சுவைக் காட்சிகளுக்காக பரவலான ரசிக
வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பி.எஸ்.ரத்னாபாய், பி.எஸ்.சரஸ்வதிபாய் பிற்காலத்தில் என்ன
ஆனார்கள் என்று குறிப்புகள் ஏதும் தற்போது கிடைக்கவில்லை. இந்தப் படத்தின் பிரதியும்
கைவசம் இருப்பதாகத் தெரியவில்லை.
பேசும் படமான ‘காளிதாஸ்’
படத்தின் நாயகி டி.பி. ராஜலட்சுமி. இவர் அடுத்துக் கதாநாயகியாக நடித்த படம் மிஸ்.கமலா.
படத்திற்குக் கதை, வசனம் எழுதி இயக்கியவரும் இவரே! தயாரிப்பாளரும் இவர்தான். முதல்
பெண் திரைப்படத் தயாரிப்பாளர், முதல் பெண் திரைப்படக் கதாசிரியர், முதல் பெண் இயக்குநர்
என்று பல்வேறு பெருமைகளை அவருக்கு பெற்றுத் தந்த படம் இது.
டாக்கீஸ்’ மூலம் இப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார்
ராஜலட்சுமி. தனது முதல் நாவலான ‘கமலவல்லி அல்லது டாக்டர்
சந்திரசேகரன்’ என்ற படைப்பையே திரைப்படமாக எடுத்திருந்தார்.
இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குநர் என்ற சிறப்பும் இவருக்குக் கிடைத்தது. (இந்தியாவின்
முதல் பெண் ஃபாத்திமா பேகம்.)
நாவல் முதன்முதலில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது என்றால் அது ‘மிஸ்.கமலா’தான்.
அதுபோல திரைப்படமாகத் தயாரான இரண்டாவது நாவல் இதுதான். (முதல் நாவல்/படம் வடுவூர் துரைசாமி
ஐயங்காரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘மேனகா’.) இப்படத்தில் ராஜலட்சுமியுடன் டி.வி.சுந்தரம்,
டி.பி.ராஜகோபால், வி.எஸ்.மணி, ஸ்டண்ட் ராஜூ, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்குப்
பாடல்களை எழுதி, இசையும், படத்தொகுப்பையும் கூட ராஜலட்சுமியே செய்திருந்தார்.
காதல் கதை. புரட்சி அம்சம் கொண்ட கதை என்றும் சொல்லலாம். கதாநாயகி கமலவல்லி (டி.பி.ராஜலட்சுமி)
கண்ணப்பன் என்பவனைக் காதலிக்கிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் டாக்டர் சந்திரசேகரனுடன்
திருமணம் நடக்கிறது. சந்திரசேகரனிடம் தன் காதல் பற்றிச் சொல்கிறாள் கமலவல்லி. பல்வேறு
பிரச்சினைகளுக்கிடையே அவன் அந்தக் காதலனைத் தேடிக் கண்டுபிடித்து அவனுக்கே அவளை மீண்டும்
ஊரறியத் திருமணம் செய்து வைக்கிறான் – இதுதான் நாவலின் கதை. விருப்பமின்றி வேறு ஒருவருடன்
திருமணம் நிகழ்ந்தாலும், அவருடன் சேர்ந்து வாழாது பண்பாடு, கலாசாரம் போன்ற மரபுகளை
மீறி ஒரு பெண் தன் காதலனையே மீண்டும் திருமணம் செய்து கொள்வதைக் காட்டும் படம். அது
அக்காலத்தில் மட்டுமல்லாது இக்காலத்திலும் புரட்சிதான். தமிழில் இம்மாதிரியான முற்போக்குச்
சிந்தனைகளுடன் வெளியான முதல் படம் அதுதான்.
முடிவைக் கண்டு பலர் கொதித்தனர். திரையரங்குகள் முன் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆனாலும்
படம் வெற்றி பெற்றது. இப்படத்தின் சிறப்பாக, பாடல் காட்சி ஒன்றில் டி. என். ராஜரத்தினம்
பிள்ளையின் நாதஸ்வரம் இடம் பெற்றதைச் சொல்லலாம். (இந்தக் கதை பிற்காலத்தில் பிரபல நகைச்சுவை
ஒருவரின் வாழ்க்கையிலும் உண்மையாக நடந்தது. அதை மையமாக வைத்து பிற்காலத்தில் திரைப்படம்
ஒன்றும் உருவானது.)
ராணி’ என்று போற்றப்பட்ட ராஜலட்சுமி, உடன் நடித்த நடிகர்
டி.வி.சுந்தரத்தைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தனக்குப் பிறந்த மகளுக்கு
தனது படம் மற்றும் கதாநாயகியின் நினைவாக ‘கமலா’
என்று பெயர் சூட்டினார். ‘பக்த குமணன் அல்லது ராஜயோகி’, ‘மதுரை வீரன்’ (1938), ‘வீர அபிமன்யு‘, ‘சாவித்ரி’, ‘திரௌபதி வஸ்திரா பரிணயம்’, ‘குலேபகாவலி’, ‘ஹரிச்சந்திரா’, ‘நந்தகுமார்’, ‘ஜீவஜோதி’, ‘இதயகீதம்’ போன்ற படங்களில் நடித்த
ராஜலட்சுமி, 1964ல் காலமானார். படத்தின் பிரதி தற்போது கிடைக்கவில்லை
வெளியான முக்கியமான படங்களுள் இதுவும் ஒன்று. கதாநாயகனாக நடித்தவர் எம்.கே. தியாகராஜ
பாகவதர். அவர் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான திருச்சி தியாகராஜா ஃபிலிம்ஸை ஆரம்பித்துத்
தயாரித்த முதல் படம் இதுதான். எம்.எஸ்.தேவசேனா கதாநாயகியாக நடித்திருந்தார். இவரது
இயற்பெயர் கிருஷ்ணவேணி. இப்படத்தில் நடிப்பதற்காக பாகவதர் ‘தேவசேனா’
என்று பெயரை மாற்றி விட்டார். டைகர் வரதாச்சாரியிரன் சகோதரரிடம் இசை பயின்றவர் தேவசேனா.
நாட்டியமும் அறிந்தவர். படத்தை இயக்கியிருந்தவர் பி.சம்பத்குமார். தன் நண்பரும், தனது
நாடகங்கள் பலவற்றுக்கு இசையமைத்தவருமான ஜி. ராமநாதனை இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக்கினார்
பாகவதர். பாடல்களை ஜனகை கவி குஞ்சரம் என்பவர் எழுதியிருந்தார்.
எல்.ராஜமாணிக்கம் எழுதியிருந்தார். ஜோதிபுரி நாட்டின் முதன்மந்திரி திடீரென இறந்து
போகிறார். சேனாதிபதியும் தன் பதவியை ராஜினாமா செய்கிறார். இரண்டாவது மந்திரி முதன்மந்திரியாகிறார்.
சேனாதிபதி பதவி காலியாக இருக்கிறது. அந்த இடத்தைப் பிடிப்பது யார் என்ற போட்டி ஏற்படுகிறது.
மக்கள் இறந்துபோன முதல் மந்திரியின் மகனும் வீரனுமான சத்தியசீலனை (எம்.கே.டி.) ஆதரிக்கின்றனர்.
அரச குடும்பத்தினரோ மன்னரின் மருமகனான பிரதாபருத்ரனை ஆதரிக்கின்றனர். கொடியவனான அவன்
பல்வேறு சூழ்ச்சிகள் செய்து ஆட்சியைப் பிடிக்க எண்ணுகிறான். இறுதியில் சத்தியசீலன்
எப்படி வென்று ஆட்சியைப் பிடிக்கிறான், மன்னனின் மகளான பிரேமாவதியை (எம்.எஸ்.தேவசேனா)
மணக்கின்றான் என்பதே கதை.
தயாரிக்கப்பட்ட இப்படத்தில் சுதந்திரம், ஆட்சி தொடர்பான வசனங்களும், சில பாடல்களும்
இடம் பெற்றிருந்தன. பிரிட்டிஷ் அரசின் கடுமையான ஆட்சேபத்தால் அவை நீக்கப்பட்டதுடன்,
பாடல் வரிகளும் மாற்றப்பட்டன.
சுதந்திரம் வேண்டி நின்றார்’ என்ற பாடலையும் மெட்டையும்
அப்படியே கையாண்டு வரிகளை மட்டும் மாற்றி இப்படத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். படத்தில்
இடம் பெற்ற அப்பாடல் இதுதான்.
வேறொன்று கொள்வாரோ
ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டார்
கள்ளிர் அறிவைச் செலுத்துவாரோ
பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்று
வெற்றியை அறிந்தாரேல் – மானம்
துறந்தும் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று நினைப்பாரோ..
பாப்பா..நீ சொல்லு பாப்பா சுகம் பெற வழி ஒன்று சொல்லு பாப்பா’
என்ற பாடலும் இடம் பெற்றிருக்கிறது. அது முதலில் ‘சுதந்திரம்பெற வழி நீ
சொல்லு பாப்பா’ என்றே இடம் பெற்றிருந்தது. பிரிட்டிஷாரின் எதிர்ப்பால்
வரிகள் மாற்றப்பட்டன. மட்டுமல்லாமல் உழைப்பை வலியுறுத்தியும், குடியை எதிர்த்தும் இப்படத்தில்
பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாபநாசம் சிவன் எழுதிய, தோடி ராகத்தில் அமைந்த ‘தாமதமேன்
சுவாமி’ என்ற பிரபல கர்நாடக இசைப் பாடலும் இப்படத்தில்
இடம் பெற்றிருக்கிறது.
நடித்த தேவசேனா பிற்காலத்தில் ‘நந்தனார்’ படத்தில் நடித்தவரும்,
பிரபல கர்நாடக இசைக்கலைஞருமான எம்.எம்.தண்டபாணி தேசிகரை மணந்து கொண்டார். படத்தின்
பிரதி இப்போது கிடைக்கவில்லை
தனது முதல் படமான ‘நவீன சதாரம்’ படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து இயக்கிய படம் ‘பக்த குசேலா.’
பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான பாபநாசம் சிவன் நடித்த முதல் படம் இதுதான்.
அவர் குசேலன் வேடத்தில் நடித்திருந்தார். அவரது மனைவி சுசீலையாகவும், நண்பன் கிருஷ்ணனாகவும்
இரு மாறுபட்ட வேடங்களில் நடித்தவர் எஸ்.டி. சுப்புலட்சுமி. பிற்காலத்தின் தன் பாடல்களுக்காக
மிகவும் புகழடைந்த ஆர்.பாலசரஸ்வதி தேவி இப்படத்தின் மூலம்தான் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
பட்டு ஐயர், வித்வான் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1936ல் வெளியான
இப்படம் அக்காலத்தின் வெற்றிப்படங்களுள் ஒன்று.
இரட்டை வேடத் திரைப்படம் இதுதான் எனலாம். தமிழில் முதன்முதலில் மாறுபட்ட இரட்டை வேடங்களில்
நடித்த பெண் கதாநாயகி என்ற பெருமையும் எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு இப்படம் மூலம் கிடைத்தது
(ஆண்: பி.யு.சின்னப்பா, படம்: உத்தமபுத்திரன், ஆண்டு: 1940.) பக்த குசேலா படத்தின்
பிரதி இப்போது இல்லை.
வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படங்கள் சிலவும்
வந்தன. அவற்றுள் ஒன்று இது. எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படம் 1936ல் வெளியானது.
‘சதி லீலாவதி’
திரைப்படத்திற்குப் பிறகு‘ டங்கன் இயக்கிய இரண்டாவது படம் இது. கதாநாயகன்
கே.பி.கேசவன். நாயகி, எஸ்.என்.விஜயலட்சுமி. உடன் எம்.கே.ராதா, எஸ்.என்.கண்ணாமணி, கே.கே.பெருமாள்,
டி.எஸ்.பாலையா, கிருஷ்ணவேணி, எம்.எம்.ராதாபாய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில்
எம்.ஜி.ஆர் காவலராக தம்முடைய சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்
நடித்த இரண்டாவது படம் இது.
எழுத்தாளரும் கவிஞரும் திரைப்பட இயக்குநருமான ச.து.சு.யோகி எழுதியிருந்தார். திரைக்கதை
மற்றும் பாடல்களும் அவரே! இசை: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பரூர் எஸ். அனந்தராமன்.
எழும் பிரச்சினைகளை நாடக்குழுக்களின் பின்னணியில் இப்படத்தில் சொல்லியிருந்தார் யோகி.
அதுவரை தமிழில் முப்பது, நாற்பது, ஐம்பது எனப் பாடல் வந்து கொண்டிருந்த காலத்தில் அவற்றை
வெகுவாகக் குறைத்து உண்மையான சினிமாவைக் காட்ட விரும்பினார் டங்கன். அதனால் இதில்
13 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றன. வசனங்களோடு கூடவே காட்சி அமைப்பிற்கும் மிகுந்த முக்கியத்துவம்
கொடுத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார் டங்கன். கதைக்குத் தொடர்பில்லாத நகைச்சுவைக்
காட்சிகளே திரைப்படங்களில் அதிகம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், கதையோடு இணைந்த
நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன. இப்படத்தின் மேம்படுத்தப்பட்ட
வடிவமே பின்னர் ‘நாம் இருவர்’
என்ற திரைப்படமாக வெளி வந்தது எனலாம். ச.து.சு. யோகியின் இரண்டாவது படம் ‘அதிர்ஷ்டம்’.
வி.வி.சடகோபன், சூர்யகுமாரி, கொத்தமங்கலம் சுப்பிரமணியன், செல்லம், தமயந்தி ஆகியோர்
நடித்திருந்தனர். அதுவும் ஒரு வெற்றிப்படமே! ‘இரு சகோதரர்கள்’
படத்தின் பிரதி இப்போது கிடைப்பதாகத் தெரியவில்லை.
அல்லது கீதாசாரம்’ என்ற தலைப்பில் 1937ல் வெளியான இப்படத்தின்
கதாநாயகன் பிரபல கர்நாடக இசைக்கலைஞரான வி.வி.சடகோபன். தமிழ்த் திரையுலகின் முதல் பட்டதாரி
நாயகன் இவர்தான். ஹாலிவுட் இயக்குநரான மிசெல் ஒமலெவ் இப்படத்தை இயக்கியிருந்தார். வெளிநாட்டில்,
குறிப்பாக லண்டனில் படம் பிடிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். சடகோபன் நடிகனாகத்
தொடங்கி, பாடகராக, இசையமைப்பாளராக, கவிஞராக, எழுத்தாளராக,, பத்திரிகாசிரியராக, இசைப்
பேராசிரியராக உயர்ந்து, பலதளங்களில் சாதனை புரிந்த கலை மேதை. இவரது இரண்டாவது படமான
‘மதனகாமராஜன்’தான்
‘ஜெமினி’ நிறுவனத்தின் முதல்
படமாகும்.
சடகோபன் கதாநாயகனாக நடிக்க, வசந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். எழுத்தாளர் பி.எஸ்.
ராமையா கதை-வசனம் எழுதியிருந்தார். பாடல்கள்: பாபநாசம் சிவன். இசை: எம்.டி.பார்த்தசாரதி,
எஸ்.ராஜேஸ்வரராவ். ஜெமினியின் முதல் வெற்றிப்படமாக இது அமைந்தது.
திரைப்பட உருவாக்கத்திற்காக முதன்முதல் லண்டன் சென்ற தமிழ் எழுத்தாளர் பி.எஸ்.ராமையாதான்.
இவர் சினிமா பற்றி எழுதியிருக்கும் நூல் குறிப்பிடத்தகுந்தது.
சிறந்த கர்நாடக சங்கீதக் கலைஞராக உயர்ந்த வி.வி.சடகோபன், ஒரு சமயம் டெல்லியில் இருந்து
ரயில் பயணம் மேற்கொண்டார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கூடூர் ரயில் நிலையத்தில் இறங்கியவர்,
அதன்பின் மர்மமான முறையில் காணாமல் போய் விட்டார். அவர் ஹிமாலயத்திற்குச் சென்று துறவு
பூண்டு விட்டார் என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல்.
முதல் படம் ‘சதி அஹல்யா’.
டி.ஆர்.சுந்தரம் இயக்கிய முதல் படம் இது. நடிகையும், பாடகியுமான யூ.ஆர்.ஜீவரத்தினம்
முதன்முதலில் அறிமுகமான படமும் இதுதான். அவருடைய முதல் பாடல் இடம்பெற்ற படமும் இதுவே.
தேவி)
தவமணி தேவி. இவர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். இப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
புராணப் படமான அகலிகையின் கதை இது. நாயகனாக எஸ்.வி.தத்தாச்சார் நடித்திருந்தார். உடன்
எஸ்.டி.சுப்பையா, டி.எம்.சங்கர், எஸ்.என்.சிவக்கொழுந்து உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பாடலை மதுரை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதியிருந்தார். இசை:ஆர்.பாலுசாமி. தவமணி தேவி, முதன்முதலில்
நீச்சல் உடையில் நடித்த கதாநாயகி என்ற சிறப்பைப் பெற்றது இப்படம் மூலம் தான்.
முதன்முதலில் அறிமுகமான படம் நந்தகுமார். அப்போது அவருக்கு வயது 14. கிருஷ்ணனாக இப்படத்தில்
அவர் நடித்திருந்தார். அவருக்குத் தாய் யசோதாவாக டி.பி.ராஜலட்சுமி நடித்திருந்தார்.
கதாநாயகி ராதையாக டி.எஸ்.ராஜலக்ஷ்மி நடித்திருந்தார். டி.ஆர்.ராமச்சந்திரன், பிரபல
இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் ஆகியோர் அறிமுகமான படம் இதுதான். தமிழில் முதல்
பின்னணிக் குரல் ஒலித்தது இப்படத்தில்தான். கிருஷ்ணரின் தாய் தேவகியாக நடித்த நடிகையின்
குரல் வளம் சரியில்லாததால் அவர் பாடலுக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகி லலிதா வெங்கட்ராமன்
பின்னணி பாடினார். ஏவி.மெய்யப்பச்செட்டியாரின் பிரகதி பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்திருந்தது.
சங்கு சுப்பிரமணியம் நடித்த படம் ‘ஸ்ரீராமானுஜர்.’
இப்படத்தில் அவர் ராமானுஜராக நடித்திருந்தார். உடன் படத்தில் எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி,
கலைமகள் ந. ராமரத்னம், சீனிவாச வரதன், ஜி.ஏ.ஞானாம்பாள், கமலாம்பாள் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பாடல்களை எழுதியவர்: பாரதிதாசன். வசனத்தை எழுதியவர் வ.ரா. இயக்கம்: ஏ.நாராயணன். ‘ராஜி
என் கண்மணி’ படத்திற்கு வசனம் எழுதியவரும் சங்கு சுப்பிரமணியம்தான்.
வைத்து உருவான முதல் தமிழ்ப்படம் ‘ஜலஜா அல்லது நாட்டிய
மகிமை’. 1938ல் இப்படம் உருவானது. படத்தின் கதாநாயகியாக
நடித்தவர் கும்பகோணம் ஸ்ரீ பானுமதி என்பவர். ஜி.கே.சேஷகிரி இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.
கதை வசனத்தை எழுத்தாளர் மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன், டாக்டர் வி.ராகவன் மற்றும் ஜி.கே.சேஷகிரியுடன்
இணைந்து எழுதியிருந்தார். படத்தை ஜி.கே.சேஷகிரி மற்றும் ஆர்.ஆர்.கௌதம் இணைந்து இயக்கியிருந்தனர்.
இப்படத்தின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார், மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன். பாடல்கள்,
இசை: ஏ.என்.கல்யாணசுந்தரம். பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பரூர் எஸ்.அனந்தராமன் இசைக்குழுவின்
தலைவராகப் பணி புரிந்த படம் இது.
தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம். கோவை அய்யாமுத்து அவர்கள் எழுதிய நாடகத்தைப்
பார்த்து வியந்த இயக்குநர் அதன் உரிமையை வாங்கிப் படமாக எடுத்தார். கதாநாயகியாக எம்.ஆர்.சந்தானலஷ்மி
நடித்திருந்தார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் தன் குழுவினருடன் இந்தப் படத்தில்
நடித்திருந்தார். நம்பியாரும் முக்கிய வேடமேற்றிருந்தார். தயாரிப்பு முடிந்து, படத்தை
வெளியிடும் முன்னர் ஸ்டூடியோ தீ விபத்தில் சிக்கியது. அனைத்துப் படச் சுருள்களும் எரிந்து
அழிந்தன. இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஒரு சில பாடல்கள் மட்டுமே நமக்குக் காலத்தின்
சாட்சியாக இருக்கின்றன. எரிந்துபோன ஸ்டூடியோவை ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள்
வாங்கி, அங்கே ஜெமினி ஸ்டூடியோவை நிர்மானித்தார்
டி.ஆர்.மஹாலிங்கம்’ ஆக நடித்த இரண்டாவது படம். கதையை சி.ஏ.லக்ஷ்மணதாஸ்
எழுதியிருந்தார். பாடல்களை எழுதியவர் சி.எஸ்.ராஜப்பா என்ற இயற்பெயர் கொண்ட கம்பதாசன்.
கம்பன்மீது கொண்ட பற்றால் கம்பதாசன் ஆன கவிஞர். இவர் ஏற்கெனவே ‘திரௌபதி
வஸ்திராபகரணம்’, ‘சீனிவாச கல்யாணம்’
போன்ற படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். நடிப்போடு பாடல் எழுதுவது, இசையமைப்பது,
கதை, வசனம் எழுதுவது என்று பல்வேறு திறமைகளைக் கொண்டவர். இவர் பாடல் எழுதிய முதல் படம்
இதுதான். இசை: என்.பி.எஸ்.மணி. இயக்கம்: பிரேம் சேத்தனா.
‘ஞானசௌந்தரி’,
‘மங்கையர்க்கரசி’,
‘சாலிவாகனன்’,
‘லைலா மஜ்னு’,
‘வனசுந்தரி’,
‘சியாமளா’,
‘அமரதீபம் எனப் பல படங்களில் கம்பதாசனின்
பாடல்கள் இடம்பெற்றன. பி.யு.சின்னப்பாவுக்கு இவர் எழுதிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
மற்றும் வாமனரின் கதைதான் இது. ஆனால், வேறு ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வாமனன் ஆக நடித்தது டி.ஆர்.மஹாலிங்கம். என்.பி.எஸ்.மணி, வி.வி.எஸ்.மணி, டி.கே.உபேந்திரநாத்,
ஆர்.பாலசுப்பிரமணியம் போன்றோர் உடன் நடித்திருந்தனர்.
சுவாரஸ்யமான செய்திகள்:
மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஒரே படம் பக்த நந்தனார் (1935).
முதல் படம் ‘பக்த ராமதாஸ்’
(1935).
அறிமுகமான படம் மேனகா (1935).
அதிகம் பாடல்கள் இடம் பெற்ற படம் – இந்திர சபா. 79 பாடல்கள். (1936)
படம் 1936ல் வெளியான மெட்ராஸ் மெயில். சண்டைக் கலைஞரான பாட்லிங் மணி (Battling
Mani) இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.
கொடுத்து உருவாக்கப்பட்ட முதல் குழந்தைகள் படம் – பால யோகினி. (1937)
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வெளியான படம் பாலாமணி அல்லது பக்காத் திருடன்.
(1937)
தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்திய முதல் படம் சேவாசதனம். (1938)
எஸ்.வி.சுப்பையா பாகவதர் கதாநாயகனாக நடித்த படம் கம்பர். வேல்பிக்சர்ஸ் தயாரித்திருந்த
இப்படம் 1938ல் வெளியானது. சி.எஸ்.யு. சங்கர் இயக்கியிருந்தார். எல்.நாராயண ராவ், மங்களம்
உள்ளிட்டோர் உடன் நடித்திருந்தனர்.
எடுக்கப்பட்ட படம் வனராஜா கார்ஸன். (1938)
நடித்த முதல் படம் பாண்டுரங்கன் அல்லது ஜே ஜே விட்டல். (1939)
முதல் படம் பக்த சேதா. (1940)
உருவான முதல் படம் விமோசனம். (1940)
டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கதாநாயகனாக நடித்த படம் காளமேகம். (1940)
பெண் கதாநாயகிகள்: டி.பி.ராஜலக்ஷ்மி, பி.எஸ்.ரத்தினாபாய், பி.எஸ்.சிவபாக்கியம், கே.பி.சுந்தராம்பாள்.
திருவெண்காடு சுப்பிரமணியம் கதாநாயகனாக நடித்த படம் காத்தவராய சாமி.
விடுதலைக்கு முந்தைய சமய இதழ்கள் | அரவிந்த் சுவாமிநாதன்
தமிழில் சமயம் வளர்க்கும் இதழ்களை இன்றைக்கு விரல் விட்டு எண்ணி விடலாம். சமய இதழ்கள் என்ற பெயரில் இன்றைக்கு ஆன்மிக, பக்தி இதழ்களும், ஜோதிடம் சார்ந்த இதழ்களுமே அதிக அளவில் வெளிவருகின்றன. ஆனால், நம் தேசத்தின் விடுதலைக்கு முன்பு சைவம், வைணவம், சைவ சித்தாந்தம், அத்வைதம் சார்ந்து பல இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஆதினங்கள் வெளியிட்ட சமயம் சார்ந்த இதழ்கள் தவிர்த்து தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாகவும் பலர் பல இதழ்களைத் தொடங்கி நடத்தியிருக்கின்றனர். அக்காலச் சமய இதழ்களைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமே இக்கட்டுரை.
ஞானப் பொக்கிஷம் ஞானாலயா | நேர்காணல்: அரவிந்த் சுவாமிநாதன்
இறங்கி ஒரு ஆட்டோ ஓட்டுநரை விசாரித்ததுமே, ‘தெரியும் சார், வாங்க போகலாம்’ என்று ஏற்றிக் கொண்டார். திருக்கோகர்ணத்தில்
இருக்கும் ஞானாலயா நூலகமும் சரி, கிருஷ்ணமூர்த்தியும் சரி அந்த அளவுக்குப் பிரபலம்.
பழங்கால நூல்கள், இதழ்கள், மலர்கள், தொகுப்புகள் என ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட
நூல்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்தனையும் கிருஷ்ணமூர்த்தி-டோரதி கிருஷ்ணமூர்த்தி
இணையரின் உழைப்பு, கனவு. ஆரம்பத்தில் ‘மீனாட்சி நூலகம்’ என்று தனது தாயாரின் பெயரில்தான்
இந்த நூலகத்தை நடத்தி வந்திருக்கிறார், கிருஷ்ணமூர்த்தி. அது ஏதோ வாடகை நூல் நிலையத்தின்
பெயர் போல இருப்பதாக நண்பர்கள் சொல்லவும், ‘ஞானாலயா’ என்று பெயர் மாற்றம் செய்தார். ‘ஞானச்சோலை’யாக, ஆய்வாளர்களின் வேடந்தாங்கலாகத்
திகழ்ந்து வரும் ஞானாலயா மூலம் இன்றைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம்
பெற்றுள்ளனர். இன்றும் பலர் ஆய்வுக்காக நாடி வந்த வண்ணம் உள்ளனர்.
நிமிடப் பயணத்தில் ‘ஞானாலயா’ வந்துவிட்டது. நாம் உள்ளே நுழைந்ததும் “வாருங்கள்” என்று வரவேற்கிறார், டோரதி கிருஷ்ணமூர்த்தி.
“சார் இப்பத்தான் வெளில போனாரு. கொஞ்ச நேரத்துல வந்திருவாரு” என்றார். சிறிது நேரம் காத்திருக்க,
தனது இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார் கிருஷ்ணமூர்த்தி. “வாருங்கள்” என்று வரவேற்றுவிட்டு நம்முடன்
உரையாடத் துவங்குகிறார். புத்தகச் சேகரிப்பில் தனது ஆர்வம், அந்தக் காலத்து அச்சகங்கள்,
பதிப்பகங்கள், நூலகங்கள், அதைப் பாதுகாத்த புரவலர்கள், நூலகங்களின் இன்றைய நிலை என்று
அவர் சொல்லச் சொல்ல கேட்கும் நாம் பிரமிக்கிறோம். மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீண்ட
அந்த உரையாடலில் இருந்து…
தந்தையார் கே.வி. பாலசுப்ரமணியன், நல்ல படிப்பாளி. கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர்.
அவர் மூலம் எனக்குச் சிறு வயதிலேயே புத்தகங்கள் அறிமுகமாகின. என் தந்தையார் ஒருமுறை
சில நூறு புத்தகங்களை என்னிடம் கொடுத்து இவற்றைக் கவனமாகப் பாதுகாத்து வா என்று சொன்னார்.
ஒருநாள் அதில் ஒரு புத்தகத்தைப் புரட்டினேன். அது என் தாய்வழித் தாத்தாவான பொன்னுசாமி,
1873ல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது, எஸ்.எஸ்.எல்.சியில் தமிழில் முதல்
பரிசு பெற்றமைக்காகக் கிடைத்த பரிசு. Footprints of Famous men என்பது அந்தப் புத்தகத்தின்
பெயர். கோல்டன் கலரில் பச்சையப்பன் கல்லூரி எம்ப்ளம் பொறித்த நூல் அது.
சொல்லித் தந்தவர். ஆசிரியராக இருந்தவர். ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம் மூன்றிலும்
தேர்ந்தவர். கரந்தை தமிழ்ச்சங்கம் உருவாதற்குக் காரணமானவர். என் தாத்தா கையெழுத்திட்ட
‘தனிப்பாடல் திரட்டு’ என்ற நூலும் அந்தச் சேகரிப்பில் இருந்தது. அது எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்கள்
வெகுநாட்களாய்த் தேடிக் கொண்டிருந்த புத்தகம் என்பதை அறிந்ததும் எனக்கு வியப்பாக இருந்தது.
அதுமுதல் பழைய புத்தகங்களின் மீதான எனது காதலும் தேடுதலும் அதிகரித்தது.
துவங்கி அசோகமித்திரன் வரை பத்திரிகைகளில் எழுதி, பின்னர்தான் அவை நூல்களாக வெளியாகி
இருக்கின்றன. நேரடியாகப் புத்தகங்களை வெளியிட்டவர்கள் மு.வ. உள்ளிட்ட ஒரு சிலர்தான்.
ஆக, பத்திரிகைகள்தான் எழுத்திற்கு அடிப்படையாக அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றன.
ஞானாலயா பத்திரிகைகளின் சேகரிப்பில் தனித்த கவனம் செலுத்தியது. பாரதியாரின் முதல் கவிதை
வெளியான விவேகபாநு 1904 இதழ் என்னிடம் இருக்கிறது. அதை நீங்கள் பார்ப்பதற்கும் இப்போது
உள்ள ‘தனிமையிரக்கம்’ பாடலைப் பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கும். ஆக, முதற் பதிப்பைச் சேர்ப்பது,
அவை வெளியான மூல நாளிதழ்கள், வார, மாத இதழ்களைச் சேர்ப்பது என்பதில் கவனம் செலுத்த
ஆரம்பித்தேன். பாரதியின் சுதேச கீதங்கள், உ.வே.சா.வின் மணிமேகலை போன்றவற்றின் முதல்
பதிப்பில் இடம்பெற்ற பல விஷயங்கள் அதற்குப் பிறகு வந்த பதிப்புகளில் இல்லை. அப்படித்
தேடித் தேடிச் சேகரித்தவைதான் இந்த இத்தனை நூல்களும். இதற்கு என்னை ஊக்கப்படுத்தியவர்
ஏ.கே. செட்டியார். பல புத்தகங்கள் எனக்குக் கிடைப்பதற்குக் காரணமாக இருந்ததும் அவர்தான்.
அவரது ‘குமரிமலர்’ இதழ்த் தொகுப்புகள் முழுமையாக என்னிடம் இருக்கின்றன.
எனது புத்தகத் தேடல் துவங்கிவிட்டது. பல இடங்களுக்கும் பயணித்து நான் புத்தகங்களைச்
சேகரித்திருக்கிறேன். இதற்கு மிகுந்த பொறுமை தேவை. அலைச்சல்களும் ஏமாற்றமும் இருக்கத்தான்
செய்யும். செட்டிநாட்டுப் பகுதியில் நாள் முழுக்க, காலை முதல் மாலை வரை காத்திருந்து
வெறும் கையுடன் திரும்பியிருக்கிறேன். விளக்கு வைத்தபின் எதுவும் கொடுக்கக் கூடாது
என்பது நகரத்தார்கள் பின்பற்றி வரும் பழக்கம். அதனால் நான் உள்ளம் சோர்ந்து போகாமல்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்திருக்கிறேன். இன்றைக்கும் செட்டிநாட்டில் புத்தகங்களைப்
பொக்கிஷமாக, ஆவணமாகக் கருதுகிறார்கள். குழந்தை பிறப்பிற்கு, திருமணத்திற்கு, 60ம் ஆண்டு,
80ம் ஆண்டு, பவள விழா, முத்து விழா, வெள்ளி விழா எனப் புத்தகங்களை நகரத்தார்கள் தங்கள்
குடும்ப விழாக்களில் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தமிழக்கடல் ராய. சொக்கலிங்கம்
போன்றவர்கள் எல்லாம் இம்மாதிரி விழாக்களுக்குப் புத்தகங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளனர்.
1980க்கு முன்னால் புகழ்பெற்ற 13 பதிப்பாளர்களில் 10 பேர் நாட்டுக்கோட்டை நகரத்தார்
சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
காலத்தில் தமிழ் நூல்களை அச்சிடுவதற்குச் சரியான அச்சகமே கிடையாது. 1835ல்தான் பிரிட்டிஷ்
அரசு தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு அச்சாபீஸ் வைத்துக் கொள்ள உரிமை வழங்கியது. அதற்கு
முன் எல்லாம் கிறிஸ்துவ மிஷனரீஸ்தான் பதிப்பிக்க, விற்க உரிமையுள்ளவர்களாக இருந்தனர்.
பிற்காலத்தில் தமிழர்களின் அச்சுக்கூடம் உருவாவதற்குக் காரணமே அக்காலத்தில் ஜூப்ளி
அச்சுக்கூடம், ரிப்பன் பிரஸ் போன்ற பல அச்சுக்கூடங்கள் கிறித்துவர்களுடையதாகவும், கிறித்துவப்
பாதிரியார்களுடையதாகவும் இருந்ததுதான். நாம் எப்படி ஆங்கிலத்தை ‘மிலேச்ச பாஷை’ என்று சொன்னோமோ அதே போல் அவன்
நமது மொழியை ‘நீச பாஷை’ என்று சொல்லிவிட்டான். அதனால்தான் தமிழ் நூல்கள் பலவற்றை அச்சிடுவதற்காக திரு.வி.க.
‘சாது அச்சுக் கூடம்’ என்பதை உருவாக்கினார். திரு.வி.க.வின் அண்ணன் உலகநாதன் அதனை நடத்தினார். அந்த
எழுத்துக்களே ஒரு மாதிரி அழகாக இருக்கும். அம்மாதிரி எழுத்துக்கள் எல்லாம் இப்போது
கிடையாது. மறைமலையடிகள் “முருகவேள் அச்சக சாலை” என்ற ஒன்றை வைத்திருந்தார். இப்படிப் படிப்படியாகத்
தமிழ் நூல்களை அச்சிட அச்சகங்கள் தோன்றின.
கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நூல்களைப் பதிப்பிப்பது என்றால்
சென்னைக்கு வர வேண்டி இருந்தது. சனிக்கிழமை போட் மெயிலில் புறப்பட்டு வேலையை முடித்துவிட்டு
ஞாயிறு இரவு போட்மெயிலில் அவர் திரும்பி விடுவார். இப்படி அவர் அலைவதைப் பார்த்துவிட்டு
மனம் வருந்திய பூண்டி அரங்கநாத முதலியார் உ.வே.சா.வை பிரசிடென்சி கல்லூரிக்கு மாற்றினார்.
இதெல்லாம் வரலாறு.
பதிப்பகங்களில் அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர் செய்த சாதனையை யாரால் செய்ய இயலும்? அதேபோல
ஜி.ஏ.நடேசனும் புகழ்பெற்ற பதிப்பாளர். ஆங்கிலத்தில் பத்திரிகை நடத்தியவர். இப்படி அந்தக்
காலத்தில் நிறையச் செய்திருக்கிறார்கள். ஆனால் வெளியே தெரியவில்லை. தெரிந்தாலும் அரசு
ஆதரவில்லை. பல்கலைக்கழகங்கள் உதவவில்லை.
இருக்கும் வக்கீல் ஒருவர்தான் முதன்முதலில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் புத்தகத்தை
1928ல் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார். அந்த நூலின் பெயர் : “கல்வி கற்பித்தல்
– ஒரு புதிய அணுகுமுறை.” அதுபோல “At The Feet of the Master” என்பது ஜே.கே.யின் புகழ்பெற்ற சொற்பொழிவு. அதனை “குருநாதரின் அடிச்சுவட்டில்” என்ற தலைப்பில் விராலிமலையில்
வெளியிட்டிருக்கிறார்கள். இப்படிப் பரவலாகத் தமிழகம் முழுவதும் பதிப்பு முயற்சிகள்
இருந்தன. 1960, 1970 வரை பதிப்பாளர்கள் தமிழ்நாட்டில் பரவலாக இருந்தார்கள். மதுரை,
திருச்சி, திருநெல்வேலி, கோவை, கும்பகோணம் என்று எல்லா ஊர்களிலும் பதிப்பாளர்கள் இருந்தார்கள்.
ஆனால், இன்றைக்கு எல்லாம் அரிதாகிவிட்டது. அன்று பல மாவட்டங்களில் பதிப்பகங்கள் இருந்தன.
இன்று கோவையில் விஜயா பதிப்பகம் போன்று ஒரு சிலதான் பிரபலமாக இருக்கின்றன. தற்போது
எல்லாரும் சென்னையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.
பழைய புத்தகங்கள் விற்பனையில் முன்னோடியாக இருந்தவர் சுப்பையாச் செட்டியார். அவருக்கு
தமிழ்நாட்டில், எந்தெந்தப் பிரபலங்கள் வீட்டில் எந்தெந்த மாதிரியான நூலகங்கள் இருக்கின்றன
என்பது தெரியும். இவர் என்ன செய்வார் என்றால் பிரபல மனிதர்கள், அறிஞர்கள் யாரேனும்
மறைந்து விட்டால் அதற்கு ஒரு மாதம் கழிந்த பின்பு, அவர்கள் வீட்டுக்குச் சென்று பேசி
அந்தப் புத்தகங்களை வாங்கிக் கொண்டுவந்து விடுவார். அவரை நான் சந்தித்துப் பேசியபோது
வாசன், கொத்தமங்கலம் சுப்பு, கிருஷ்ணசாமி ஐயர் உள்பட பல பிரபலங்கள் தன் கடைக்கு வந்ததாகச்
சொல்லியிருக்கிறார். செட்டியார் திருச்சியில் பிரபலம் என்றால் சென்னை மூர் மார்க்கெட்டில்
ஜெயவேல் பிரபலம். லண்டன் டைம்ஸிலேயே அவர் கடை குறித்த விளம்பரங்கள் வரும். மூர் மேக்கெட்
தீப்பிடித்து எரிந்தது பழைய புத்தகங்களுக்கும், பழைய சேகரிப்புகளுக்கும் அதன் ஆர்வலர்களுக்கும்
மிகப் பெரிய இழப்பு. தியாசபிகல் சொசைட்டி (பிரம்மஞான சபை) நூலகங்கள் அந்தக் காலத்தில்
பல ஊர்களில், சொல்லப்போனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தன. இன்றைக்கும் சிவகங்கையில்
பிரம்மஞான சபை நூலகம் இருக்கிறது.
பல தனியார் நூலகங்கள் மிகவும் புகழ்பெற்றதாக இருந்தன. நான் கல்லூரியில் படிக்கும்போது
திருச்சியில், பெரியகடை வீதியின் மாடி ஒன்றில் நேஷனல் லைப்ரரி இருந்தது. வ.ரா.வை, கல்கி
முதன்முதலில் சந்தித்த இடம் அதுதான். அங்கு சென்று நிறையப் புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.
தனி நபர் நூலகங்கள் என்று எடுத்துக் கொண்டால் அந்தக் காலத்தில் ஆர்.கே.சண்முகம் செட்டியாரின்
நூலகம் மிகப் பெரிய நூலகமாக இருந்தது. அந்த நூலகத்தில் வேலை பார்த்தவர்தான் எழுத்தாளர்
ஆர்.சண்முகசுந்தரத்தின் தம்பி ஆர்.திருஞானசம்பந்தம். சண்முகம் செட்டியார், ‘வசந்தம்’ என்ற இதழை, திருஞானசம்பந்தத்தை
ஆசிரியராக வைத்து வெளியிட்டார். இன்றைக்கு ‘வசந்தம்’ பத்திரிகையைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?
இன்னுமொரு தெரியாத செய்தி சொல்கிறேன். சண்முகம் செட்டியார், சிலப்பதிகாரத்தின் புகார்
காண்டத்திற்கு உரை எழுதியிருக்கிறார். அந்த நூல் என்னிடம் இருக்கிறது. அதுபோல கோவையில்
ஜி.டி.நாயுடுவின் நூலகமும் மிகப் புகழ்பெற்றது. அதில் கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு
நாவலர் நெடுஞ்செழியன் பணியாற்றினார் என்று நினைவு. அது போல அழகப்பச் செட்டியாரின் நூலகமும்
மிகப் பெரியது. அதுவும் காரைக்குடியில் அழகப்பா கல்லூரி உருவானதும் சா.கணேசன் முயற்சியில்
அது அங்கு சென்றுவிட்டது.
முன்பு மாக்ஸ்முல்லர் பவனில் மாக்ஸ்முல்லர் நூலகம், யூ.எஸ்.ஐ.எஸ். நூலகம் இருந்தது.
தனியார் நூலகங்கள் நிறைய இருந்தன. Servants of India Society Library லஸ் கார்னரில்
இருந்தது. சீனிவாச சாஸ்திரியார் தலைவராக இருந்து நடத்திய நூலகம் அது.
Y.M.I.A.Library இருந்தது. காமதேனு தியேட்டருக்கு எதிரே ரானடே நூலகம் இருந்தது. இப்படி
ஒவ்வொரு நூலகத்திற்குப் பின்னாடியும் மிகப் பெரிய கதைகள் இருக்கின்றன. ஆனால், இன்றைக்கு
யாருக்குமே தெரியாது. நூறு ஆண்டு கூட ஆகவில்லை. இந்தச் செய்திகள் எல்லாம் மறந்து போய்
விட்டன. பல நூலகங்கள் செயல்படவில்லை. சென்னையில் நூலகங்கள் என்றால் கன்னிமாரா, மாவட்டங்களில்
மாவட்ட நூலகங்கள் என்றுதான் சொல்வார்களே தவிர, பல நூலகங்களைப் பற்றி இன்றைக்கு யாருக்குமே
தெரியாது.
சக்தி வை.கோவிந்தன்
பிறகு, காந்தியால் ஏற்பட்ட சுதந்திரத் தாகம் மற்றும் விழிப்புணர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு
மாவட்டங்களிலும் பல அச்சுக்கூடங்கள் உருவாகின. பல பத்திரிகைகள் வெளியாக ஆரம்பித்தன.
பல வெளியீட்டாளர்கள் வந்தார்கள். அதில் முக்கியமானவர் 1934ல் பர்மாவிலிருந்து தமிழகத்துக்கு
வந்த சக்தி வை. கோவிந்தன். அவர் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தைச் சார்ந்தவர். அவர்தான்
புத்தக வெளியீட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். History of Indian Publication
என்ற நூலை எழுதிய கேசவன், அந்த நூலில், “அந்தக் காலத்தில் நகரத்தார்கள் எல்லாம் வட்டிக்
கடை வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்த காலத்தில், இந்த மனிதர் (சக்தி வை.கோவிந்தன்)
ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்து, சக்தி காரியாலத்தை உருவாக்கினார்” என்கிறார். இன்றைக்கு மியூசிக்
அகாதமி இருக்கும் இடம்தான் அந்தக் காலத்தில் சக்தி காரியாலயம். அவர் வெளியிட்ட நூல்கள்
எல்லாம் மிக முக்கியமானவை. அரசியல் நூல்கள், வரலாற்று நூல்கள், விவசாய நூல்கள், காய்கறிகளைப்
பற்றி, மரங்களைப் பற்றி, மொழிபெயர்ப்பு நூல்கள் என்று பல தரப்பட்ட நூல்களை அவர் கொண்டு
வந்தார். எனக்குத் தெரிந்து ரஷ்ய நூல்களை, இலக்கியங்களை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து
வெளியிட்டது அவர்தான். உலகப் புகழ்பெற்ற டைம் மேகசின் போல தமிழிலும் ஒரு பத்திரிகை
வேண்டும் என்று விரும்பி, அதே ஃபார்மட்டில் ‘சக்தி’ என்ற இதழை ஆரம்பித்தார். கோவிந்தன் கடைசியாக வெளியிட்டது
தினமணி ஆசிரியர் சொக்கலிங்கம் மொழிபெயர்த்த ‘வார் அண்ட் பீஸ்.’ சக்தி கோவிந்தன் எல்லாம் ஒரு லட்சியத்துடன்
வாழ்ந்தவர். அவரது நூல்கள் எல்லாம் இங்கே ஞானாலயாவில் இருக்கின்றன. இன்றைக்கும் கண்ணில்
ஒற்றிக் கொள்ளலாம் அப்படி ஒரு அச்சு. அப்படி ஒரு நேர்த்தி.
அச்சுத்தொழில் கற்பனைகூடச் செய்ய முடியாத அளவுக்கு முன்னேறிவிட்டது. ஆனால், அன்றைக்கு
காலால் ட்ரெடில் மிஷன் ஓட்டி அச்சிட்ட காலத்தில் அந்த மனிதர் செய்த சாதனை போற்றத் தகுந்தது.
பெங்குவினுக்கு நிகராக ‘சக்தி மலர்கள்’ என்று ஒரு சீரிஸ் பண்ணியிருக்கிறார். 45 மலர்கள் வந்திருக்கின்றன. “What’s will we do that?” “இனி நாம் செய்ய வேண்டியது யாது?” என்னும் டால்ஸ்டாய் நூல்தான் சக்தி
மலர் வெளியிட்ட முதல் நூல். அதன் எம்ப்ளமே கலங்கரை விளக்கம்தான். எழுத்தாளர்களுக்கு
மட்டுமல்ல; பதிப்பாளர்களுக்கும் அவர் ஒரு கலங்கரை விளக்கம். அந்தக் காலத்திலேயே எழுத்துலகில்,
பதிப்புலகில் பல புதுமைகளைச் செய்தவர். பெரிய காந்தியவாதி. ஆனால் அவர்தான் காரல் மார்க்ஸின்
வரலாற்றை முதன்முதலில் வெளியிட்டார். அவர் அச்சுலகிற்கு, பத்திரிகை உலகிற்குச் செய்திருப்பது
மிகப் பெரிய தொண்டு.
முறையூர் சொக்கலிங்கம் செட்டியார்
நூல்கள் வெளியீட்டில் அடுத்து மிக முக்கியமானவர் முறையூர் சொக்கலிங்கம் செட்டியார்.
தமிழின் மிகச் சிறந்த வரலாற்று நூல் ஆசிரியரான வெ.சாமிநாத சர்மாவை ஆதரித்தவர் இவர்.
படிக்கும் பழக்கமே இல்லாதவனைக் கூட வரலாற்று நூல்களை நாவல் மாதிரிப் படிக்கச் செய்தவர்
என்ற பெருமை சாமிநாத சர்மாவுக்கு உண்டு. அவரது நூல்களை வெளியிடுவதற்காகவே பிரபஞ்ச ஜோதிப்
பிரசுராலயத்தை ஆரம்பித்தார் செட்டியார். அதில் சாமிநாத சர்மாவின் நூலைத் தவிர வேறெதையுமே
அவர் வெளியிட்டதில்லை. மொத்தம் 83 புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
நூலை வெளியிடுவதற்காக முறையூர் சொக்கலிங்கம் செட்டியார் ஆரம்பித்ததுதான் பிரகாஷ் பதிப்பகம்.
அவரது மாமா வள்ளல் சண்முகஞ்செட்டியார். அவர்தான் ‘தனிச்செய்யுட் சிந்தாமணி’ என்னும் தொகுப்பை முதன்முதலில்
கொண்டு வந்தவர். 1908ல் வெளிவந்த அந்த நூல்தான் பிற்காலத்தில் வெளியான தனிப்பாடற்றிரட்டு
நூல்களுக்கு எல்லாம் முன்னோடி நூல். சண்முகனார் முறையூர் ஜமீனும் கூட. இப்படியெல்லாம்
தமிழுக்காகவும், புத்தகங்களுக்காகவும் அந்தத் தலைமுறையில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு
நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
வட்டமேசை மாநாட்டுக்குச் சென்றவர் நம் தமிழ்நாட்டின் இரட்டைமலை சீனிவாசன். அதைப்பற்றி
யாருமே பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் ஒரு குழு அல்லது வேறு சில அடிப்படைகளில்தான்
பேசுகிறார்கள். உண்மையில் வட்ட மேசை மாநாட்டிற்கு பிரிட்டிஷார் அம்பேத்கரை அழைத்தது
போலவே இவரையும் கூப்பிடுகிறான், தென் மாநிலத்தின் பிரதிநிதியாய். அம்பேத்கர் அதனைத்
தெரிந்துகொண்டு, இரட்டைமலை சீனிவாசனிடம், “நாம் ரெண்டு பேரும் தனித் தனியாக அறிக்கை
சமர்ப்பிக்க வேண்டாம். ஒன்றாகவே சமர்ப்பிப்போம். நீங்கள் தயாரித்த அறிக்கையை என்னிடம்
கொடுங்கள்” என்று கேட்டு
வாங்கி, ஒன்றாகச் சமர்ப்பிக்கிறார். இந்த இரட்டை மலை சீனிவாசன்தான் 1920களில், இரட்டை
ஆட்சி முறை அறிமுகமானபோது, சுப்பராய ரெட்டியார் அமைச்சரவையில், தாழ்த்தப்பட்டவர்களை
காந்தி ‘ஹரிஜன்’ என்று அழைப்பதற்கு
முந்தைய கால கட்டத்தில், அவர்களை “ஆதி திராவிடர்” என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ஆதி
திராவிடர்கள் என்றால் பூர்விகக் குடிகள் என்பது பொருள்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களை எல்லாம் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைக்கிறார். வந்தவர்களை
கணவரும், மனைவியும் கை கொடுத்து வரவேற்கிறார்கள். இரட்டைமலை சீனிவாசன் தன்னுடைய முறை
வரும்போது கை கொடுக்க மறுத்துவிடுகிறார். “ஏன்?” என்று ஜார்ஜ் கேட்க, சீனிவாசன் தன் சட்டைக்குள்ளிலிருந்து
ஒரு அட்டையை அடுத்துக் காண்பிக்கிறார். அதில் “I am untouchable” என்று இருக்கிறது. ஜார்ஜ்
what do you mean என்று கேட்க, சீனிவாசன் அன்றைய சமூகநிலையை, நடப்பு உண்மைகளைச் சொல்கிறார்.
“நான் என்னால் இயன்ற அளவுக்கு இதற்கு எதிரான முயற்சிகளைச் செய்கிறேன். நீங்கள் இப்போது
என் விருந்தினர்” என்று கூறி
கை கொடுக்கிறார் ஜார்ஜ். 1892-1899 இரட்டைமலை சீனிவாசன் “பறையன்” என்ற பெயரில் ஒரு பத்திரிகையை
நடத்தினார். அதன் தொகுப்பு எதுவும் தற்போது கிடைக்கவில்லை. பின்னால் அயோத்திதாசப் பண்டிதரின்
ஒரு பைசாத் தமிழன் தொகுப்பு கிடைக்கிறது. ஆனால் இரட்டைமலை சீனிவாசனின் இதழ்கள் கிடைக்கவில்லை.
இரட்டைமலை சீனிவாசனின் சகோதரி தனலட்சுமியின் கணவர்தான் அயோத்திதாசர்.
என்ன சொல்கிறான், தமிழையே புகழ்ந்து கொண்டிருக்காதே. அது செம்மொழி, சிறந்த மொழி என்று
நீ கருதினால் அதை உலகம் ஒப்புக்கொள்ளும்படியாக நீ செய்ய வேண்டும் என்கிறான். சும்மா
சொல்லிச் செல்லவில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்கிறான். அதனால் தான்
மகாகவி. அவன் கருத்துக்கள் என்றும் மாறாது.
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.”
கனவை நனவாக்கிய முதல் தமிழர் என்றால் தனிநாயக அடிகளைத்தான் சொல்ல வேண்டும். அவர்
Tamil Culture என்ற தலைப்பில் ஒரு காலாண்டு இதழை நடத்தினார். அதில் தமிழ் இலக்கியம்
பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டார். சிறந்த ஆசிரியர்களை,
கட்டுரையாளர்களைக் கொண்டு அவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். அப்போதெல்லாம் தமிழ்
எம்.ஏ. படிப்பு என்றாலும் இரண்டு தாள்கள் ஆங்கிலம் அதில் உண்டு. ஆக தமிழோடு அவர்கள்
ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். டாக்டரேட் தீஸிஸ் எல்லாம் ஆங்கிலத்தில்தான்
எழுத வேண்டும், அது தமிழ் பற்றிய ஆய்வாக இருந்தாலும் கூட. மு.வ. தமிழ்த்துறைத் தலைவராக
வந்த பிறகுதான் இது மாறியது, தமிழ்ப் படிப்பிற்கு ஆங்கிலம் வேண்டாம் என்று. தமிழாய்வுக்கு
தீஸிஸ் ஆங்கிலத்தில் வேண்டாம் என்று மாற்றியவர் அவர்தான். சொல்லப்போனால் அவருடைய முனைவர்
பட்ட ஆய்வே ஆங்கிலத்தில்தான். பின்னர்தான் அது ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு
வெளியானது. அவருக்கே ஆறுக்கு மேற்பட்ட மொழிகள் தெரியும். பல மொழிகள் கற்றவராக இருந்ததால்
அவர்கள் எல்லம பரந்துபட்ட கண்ணோட்டம் உடையவராக இருந்தனர். இல்லாவிட்டால் மொழி நூல்,
மொழி வரலாறு எல்லாம் எழுத முடியாது. அவர்தான் ஆராய்ச்சி அணுகுமுறைகள், நெறிகள் போன்றவற்றையெல்லாம்
எம்.ஏ.விற்குப் பாடமாகக் கொணர்ந்தார்.
முதலமைச்சர் ஆனதும் முதன்முதலில் கையெழுத்துப் போட்டதே வாஞ்சிநாதனின் மனைவி பென்ஷனுக்கு
ஒப்புதல் வழங்கித்தான். அது குறித்து அவரது உதவியாளர், “ ‘இவர் காந்தியத்திற்கு எதிரானவர்.
அதனால் பென்ஷன் பெறத் தகுதி இல்லை’ என்று பக்தவச்சலம் ஃபைலில் எழுதி இருக்கிறார்” என்கிறார். உடனே அந்தக் கோப்பைக்
கொண்டுவரச் சொல்கிறார் அண்ணா. அதை வாங்கிப் பார்த்தால், பக்தவச்சலம், “Not eligible for freedom fighter’s pension” என்று எழுதி கையெழுத்திட்ட குறிப்பு இருக்கிறது. அதன் கீழே அண்ணா எழுதுகிறார்.
“வாஞ்சிநாதன் ஆஷைச் சுட்டது 1911, ஜூன். அண்ணல் காந்தியடிகள், தென் ஆப்பிரிக்காவில்,
அகிம்சையையும், சத்தியாகிரகத்தையும் பரீட்சார்த்தமாக முயற்சி செய்ய ஆரம்பித்தது அப்போதுதான்,
அவர் இந்தியாவிற்கு வந்ததே 1914ல் தான். ஆகவே வாஞ்சிநாதன் ஆஷைச் சுட்ட காலத்தில், இந்தியாவில்
அகிம்சை, சத்தியாக்கிரகம் என்ற பேச்சே எழவில்லை. ஆகவே, “eligible for pension” என்று அவர் குறிப்பு எழுதினார்.
அண்ணாவிடம் சொந்தமாக கார் கூட இல்லை. காமராஜர், ராமமூர்த்தியிடம் “நந்தி ஹில்ஸுக்குச்
சென்று ஓய்வெடுங்கள்” என்று சொல்லியனுப்புகிறார். அண்ணா போகவில்லை. ‘சிம்லாவுக்குச் சென்று ஓய்வெடுங்கள்” என்று நேரு ஜோதிபாசு மூலம் சொல்லியும்
அண்ணா கேட்கவில்லை. அவர் மிகவும் எளிமையாகவே வாழ்ந்தார். முதலமைச்சர் ஆனதும் சம்பளத்தைக்
குறைத்தவர் அவர்தான். அதிகாரிகளுக்கு இத்தனை ஜீப்புகள், செலவுகள் தேவையில்லை என்று
குறைத்தவரும் அவர்தான். மக்களும் அரசும் இணைந்து தங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து
கொள்ள வேண்டும் என்று அவர் ‘சீரணிப் படை’ என்பதை உருவாக்கினார். அவரோடு அது போய்விட்டது.
38 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவன். என்னிடம் மாணவர்கள், “சார், எங்களிடம் படிக்கும்
பழக்கமே இல்லை. நல்ல நூல்களைப் பரிந்துரையுங்கள்” என்று கேட்டால் மு.வ., கல்கியின் நாவல்களைப் பரிந்துரைப்பேன்.
வரலாறு என்றால் வெ.சாமிநாத சர்மா. இந்த மூன்று பேரின் புத்தகங்களை ஒருவன் படிக்க ஆரம்பித்துவிட்டான்
என்றால் பிற்காலத்தில் அவன் எல்லாப் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்து விடுவான். இந்தக்
காலத்திற்கும் கூட நான் கல்கியின் வரலாற்று நாவல்களைப் பரிந்துரைப்பேன். இன்றைக்கு
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் எனப் பலரும் நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு
சினிமா மோகம் அதிகமாகி விட்டது. நீங்கள் கவிஞர் என்றால் திரைப்படத்திற்குப் பாடல் எழுதும்
மோகம். எழுத்தாளர் என்றால் கதை-வசனம் எழுதும் மோகம். அப்போதுதான் பலரால் கவனிக்கப்
படக் கூடும் என்ற எண்ணப்போக்கு இருக்கிறது. வருமானமும், புகழும் கூடவே கிடைக்கிறது.
ஆனால் அன்றைக்கு சினிமா வேறு மாதிரி இருந்தது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது
வந்த படம் ‘ஏழை படும் பாடு.’ பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. சுத்தானந்தபாரதிதான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
விக்டர் ஹ்யூகோவின் கதை. நாகையா, பாலையா, ஜாவர் சீதாராமனின் நடிப்பு மறக்கவே முடியாது.
நான் பல தடவை பார்த்த படம் அது. இன்றைக்கு அப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதே பலருக்குத்
தெரியாது. அந்தக் காலகட்டம் அப்படி இருந்தது.
பள்ளிகள் பாரதியார் பாடல், திருக்குறள் ஒப்புவித்தல், பாரதிதாசன் பாடல் என்றெல்லாம்
பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடக்கும். இன்றைக்கு பள்ளிகளில் சினிமாதான்
ஆதிக்கம் செலுத்துகிறது. சினிமாக்களைப் பார்த்து அதே போன்று ஆடும் ரிகார்ட் டான்ஸ்தான்
அதிகமாகி விட்டது. Literature Prefers Oldest. Science Prefers Latest என்று சொல்வார்கள்.
இலக்கியத்திற்கு எப்போதுமே பெருமை பழமையில்தான்.
தலைவர்களுக்குள்ளேயே நல்ல போட்டி இருந்தது. ஆதித்தனார் – நாம் தமிழர் இயக்கம், ம.பொ.சி.
– தமிழரசு கட்சி, ஜீவானந்தம் – கலை இலக்கியப் பெருமன்றம், அண்ணா தமிழைச் சொல்லியே ஆட்சிக்கு
வந்தவர். இந்தத் தலைவர்களுக்குப் பின்னால் நிறையப் படித்தவர்கள், கற்றவர்கள் இருந்தார்கள்.
தமிழரசுக் கட்சியில் மு.வ. தெ.பொ.மீ., ந.சஞ்சீவி போன்றோ இருந்தனர். அதே போல அண்ணாவுக்குப்
பின்னால் தில்லை வில்லாளன் எம்.ஏ.பி.எல், ராதாமணாளன், எம்.எஸ். வெங்கடாசலம் எம்.ஏ.பி.எல்.
என்று பலர் இருந்தனர். இவர்களுக்குத் தமிழ்தான் தாய்மொழியா அல்லது ஆங்கிலமா என்று நினைக்குமளவுக்குச்
சரளமாக ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்கள். பல மணி நேரத்திற்குச் சளைக்காமல் ஆங்கிலத்திலும்
தமிழிலும் பேசுவார்கள். கவிதையை மேடையிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பேசுவார்கள்.
இவர்கள் எல்லாம் இந்த ஆற்றலை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் முன்னமேயே வளர்த்துக் கொண்டவர்கள்.
அந்த அளவுக்கு அன்றைக்குக் கல்வி இருந்தது. ஆனால் இன்றைக்குப் பெற்றோர்களே தமிழை ஒதுக்கும்
நிலை. தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது. தமிழ்
ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றும் அதில் பாண்டித்யம் பெறுவது பெரிய அறிவே இல்லை என்றும்
நினைக்கின்றனர். படிப்பு என்பது இன்றைக்கு வணிகமாகிவிட்டது. வெளிநாடுகளுக்குச் சென்று
பொருளீட்டுவதற்கான ஒரு பாஸ்போர்ட் ஆகி விட்டது இன்றைய கல்வி முறை.
இலக்கியமும் வணிக நோக்கம், ஜாதிக் கண்ணோட்டம், கட்சிக் கண்ணோட்டம் ஆகி விட்டது. சில
இலக்கிய அமைப்புகளின் விருதுகளே அவர்களது வளையத்துக்குள் வந்தால்தான். இல்லாவிட்டால்
இல்லை என்ற நிலைமை இன்றைக்கு இருக்கிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியது.
அடிப்படையில் புத்தகங்களை வரிசைப்படுத்தியுள்ளோம். காந்தி ஒரு ராக்கில் என்றால், முதல்
வரிசையில் காந்தி பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள். பின்னால் தமிழ்ப் புத்தகங்கள். அதுபோல
சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணர் நூல்களுக்கு, முதலில் தமிழில் வந்தவை, பின்னர் ஆங்கிலத்தில்
வெளியானவை. பின்னால் கீதையின் மொழிபெயர்ப்புகள் இருக்கும். அடுத்த வரிசை பாரதியார்
நூல்கள் முழுமையும். பின்னால் குரான், பைபிள். அடுத்து ராமாயணம். வால்மீகி, துளஸிதாசர்,
கம்பன் எல்லாருடைய பதிப்புகளும் இருக்கும். அடுத்து உரையாசிரியர்கள் திரு,வி.க., மறைமலையடிகள்
நூல்கள். தொடர்ந்து திருக்குறள் அனைத்து பதிப்பு, ஆராய்ச்சி நூல்கள். தொடர்ந்து தமிழ்நாட்டு
வரலாறு, மன்னர்கள் வரலாறு. ஒரு ராக்கில் சிறுகதைகள். துறைவாரியாகவும், நூல் பெயர் வாரியாகவும்
நூல்களை வரிசைப்படுத்தியுள்ளோம்.
மலர்கள், செய்தித் தொகுப்புகள், கட்டுரைகள், தின இதழ்கள் என்று தனியாகவும் வரிசைப்படுத்தி
வைத்திருக்கிறோம். வாசனின் ‘நாரதர்’ தொகுப்பு எங்களிடம் உள்ளது. ஏ.கே.செட்டியாரின் உலக நாடுகள் குறித்த பயண நூல்கள்,
சக்தி வை. கோவிந்தனின் பிரசுரங்கள் என பல்வேறு இதழ்களையும், நூல்களையும் இங்கே சேகரித்து
வைத்துள்ளோம். 1578ல் தமிழில் அச்சான முதல் நூலான ‘தம்பிரான் வணக்கம்’ நூலின் நகல் இங்குள்ளது. ‘தீபம்’ இதழ் இருக்கிறது. மாதவையாவின்
பஞ்சாமிர்தம், வ.வே.சு.ஐயர் நடத்திய பாலபாரதி, குகப்ரியை ஆசிரியையாக இருந்த மங்கை,
கலைமகள், சக்தி, சுதேசமித்திரன் இதழ் தொகுப்புகள், ஜம்புநாதன் தமிழாக்கிய வேதத் தொகுப்புகளும்
உள்ளன. அக்காலத்தில் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்ட பல நூல்களும் இங்கே உள்ளன.
குறிப்பாக தமிழர்களுக்கு வழிபாட்டு மனப்பான்மை அதிகம் உண்டு. பூஜா மனப்பான்மை. அதனால்
யாராவது ஏதாவது எதிராகச் சொன்னால் அடிக்க வருவார்களே தவிர, சிந்திக்க மாட்டார்கள்.
தாகூர் எழுதிய நூலைத் தழுவித் தான் ‘குளத்தங்கரை அரசமரம்’ எழுதப்பட்டது என்று சொல்வார்கள்.
நான் என்ன சொல்கிறேன் என்றால், Greatmen think Alike. “The world is my home; All
are my brethren” என்று
Thomas Paine சொல்லியிருக்கிறார். அவர் என்ன, “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று சொன்ன கணியன் பூங்குன்றனாரைப்
படித்துத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்று நாம் சொல்ல முடியுமா?
வழிபாட்டு மனப்பான்மையும், உயர்வு மனப்பான்மையும் உண்மையைத் தேடுவதில் பெரிய இடர்ப்பாடாக
இருக்கிறது. வைக்கம் போராட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று நம்மிடம் பட்டியல்
உள்ளது. காந்தியோடு உப்புசத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர்கள் யார் என்ற பட்டியல்
இருக்கிறது. ஆனால் வேதாரண்யம் உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர்கள் பற்றி முழுமையான
பட்டியல் நம்மிடையே இல்லை. பாரதி புதிய ஆத்திசூடியில் ‘சரித்திரம் தேர்ச்சி கொள்’ என்கிறான். ஏனென்றால் நம்மிடம்
வரலாற்று உணர்வோ, பெருமிதமோ, அதனைப் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையோ கிடையாது.
தேடல் உள்ளவர்களே இன்றைக்குக் குறைந்து போய் விட்டார்கள். இந்தக் காலத்தில் ஆய்வாளர்கள்
பலர் உழைக்க விரும்புவதில்லை. பலர் கடமைக்காகச் செய்கின்றனர். ஆராய்ச்சி செய்ய விரும்பும்
பலருக்கு உண்மையான ஆர்வம் இருப்பதில்லை. ஏன், பலருக்கு ஆய்வுத் தலைப்புகளையே சரியாகத்
தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. ஒரு சிலர் தொலைபேசியில் அழைத்து, “நீங்களே பார்த்துச்
சொல்லிவிடுங்கள் சார், நாங்கள் எழுதிக் கொள்கிறோம்” என்கிறார்கள். இப்படியான நிலைமை ஆரோக்கியமானதல்ல.
வட்டம்’ அந்தக் காலத்தில்
அவ்வளவு சிறப்பான பணிகளைச் செய்திருக்கிறது. 45 புத்தகங்களை வெளியீட்டிருக்கிறார்கள்.
‘அம்மா வந்தாள்’ தி.ஜானகிராமனின்
நாவல். வாசகர் வட்டத்திற்காக நேரடியாக எழுதப்பட்ட நாவல். ஜானகிராமனுக்கு வாரம்/மாதம்
ஓர் அத்தியாயம் என தொடர்கதை எழுதித்தான் பழக்கம். ஒரே மூச்சில் அச்சுக்காக அவர் எழுதிய
நாவல் என்றால் அது ‘அம்மா வந்தாள்’ தான். மிகச் சிறப்பான நாவல். கத்திமேல் நடப்பது மாதிரியான விஷயத்தை சிறப்பாகக்
கொண்டு சென்றிருப்பார் ஜானகிராமன். அவர்கள் ‘நூலகம்’ என்ற பத்திரிகையையும் வெளியிட்டார்கள்.
பிறகு எழுத்தாளர்களை ஆதரித்தது ‘கலாமோகினி’ இதழ். அதன் ஆசிரியர் வி.ஆர். ராஜகோபாலன் என்னும் சாலிவாஹனன் தன் நிலங்களை எல்லாம்
விற்று பத்திரிகை நடத்தினார். முதன்முதலில் எழுத்தாளர்களின் படத்தை அட்டையில் போட்டு,
அவர்கள் சிறப்பைப் பற்றி ‘நமது அதிதி’ என்று கட்டுரையும் எழுதி வெளியிட்டவர் அவர்தான். இன்றைக்கு சாலிவாஹனனை யாருக்காவது
தெரியுமா? கலைஞன் பதிப்பகம் ‘கலாமோகினி’ இதழ்த் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எம்.ஏ.வில் புதுக்கவிதை, நாவல், சிறுகதை எல்லாம் பாடமாக இடம் பெறக் காரணமே சி.சு.செல்லப்பாதான்.
அது தெ.பொ.மீ. மதுரை பல்கலையில் துணைவேந்தராக இருந்தபோது நிகழ்ந்தது. செல்லப்பா எம்.ஏ.
தமிழில் இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களையும் சேர்க்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தினார்.
அப்படித்தான் அவை பாடத்திட்டத்தில் இடம்பெற்றன. கவிதை பற்றிய பாடங்களைக் கோடை விடுமுறையில்
ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார் செல்லப்பா. நாவல், சிறுகதை பற்றி வகுப்பெடுத்தனர்
சிட்டியும், சிவபாதசுந்தரமும். செல்லப்பா செய்த அரிய சாதனை இது. இன்றைக்கு இது எத்தனை
பேருக்குத் தெரியும்?
நூலகங்களில் நூலகர் உங்களுக்குத் தேவையான நூல்களைத் தேடி எடுத்துத் தரலாம். ஆனால் இங்கு
உங்களுக்குத் தேவையான நூல் என்ன, அதன் பின்னணி, பதிப்பு பற்றிய வரலாறு, அதோடு தொடர்புடைய
பிற சம்பவங்கள், பிற நூல்கள் என எல்லாவற்றையும் ஒருங்கே தெரிந்து கொள்ள முடியும். என்னால்
விளக்கவும் முடியும். பல நூல்கள் இங்கிருந்து பெற்று மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளன.
இது முழுக்க முழுக்க எங்கள் சுய உழைப்பால் ஆன நூலகம். இந்த நூலகம் இங்கேயேதான் இருக்க
வேண்டும். தற்போது பழைய நூல்களை டிஜிடலைஸ் செய்து சேகரித்து வருகிறோம். நவீன தொழில்நுட்பங்களைப்
பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். இந்த நூலகம் பற்றி,
இதன் சிறப்பு பற்றி 21 மணி நேரத்திற்கு மேல் (துண்டு துண்டாக) நான் பேசியது தனிப்பட்ட
முறையில் என் நண்பர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது 17 டிஸ்கில் இருக்கிறது. இன்னும்
பேச வேண்டியது நிறைய இருக்கிறது. பாரதி கிருஷ்ணகுமார் என்னைப் பற்றி, ஞானாலயா பற்றி
ஒரு டாகுமெண்ட்ரியைத் தயார் செய்து கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் மெள்ள மெள்ளச்
சோர்வு எட்டிப் பார்க்கிறது. மதியம் ஒருமணி நேரமாவது ஓய்வெடுத்தே ஆக வேண்டிய கட்டாயம்
இருக்கிறது. மருத்துவரோ வயதாவதன் தளர்ச்சி என்கிறார். ஆமாம், எனக்கு 78 வயது முடியப்
போகிறது.”
சிரிக்கிறார், கிருஷ்ணமூர்த்தி. கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் உரையாடி, ‘வலம்’ இதழுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து
கொண்டமைக்காக அவருக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.
நூலக முகவரி: ஞானாலயா ஆய்வு நூலகம், எண்.6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை – 622002, தமிழ்நாடு, இந்தியா.
சில சுவாரஸ்யங்கள்
கலித்தொகையைப் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. மிகப் பெரிய தமிழறிஞர். சென்னைப்
பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. அவர் ஈழத்தவர். சைவராக
இருந்து, பின் கிறித்தவரானவர். பின் மீண்டும் சைவர் ஆனவர் என்று சொல்வார்கள். அவர்
பயன்படுத்திய சதுரகராதி என்னிடம் இருக்கிறது. 1880ம் வருடத்தது. அதில், ‘தாமோதரம் பிள்ளை,
பாளையங்கோட்டை’ என்று அவரது
கையெழுத்து இருக்கிறது. அங்கு ஜட்ஜாக இருந்திருக்கிறார். அப்போது வாங்கிய புத்தகம்
போலிருக்கிறது. அதில் என்ன விசேஷம் என்றால், அந்தச் சதுரகராதியை அச்சிட்டவர்கள் ‘முருகன்
துணை’ என்று அச்சிட்டிருக்கிறார்கள்.
இவர் அதை அடித்துவிட்டு, அதற்கு மேல் சின்னதாக ஒரு சிலுவைக் குறியைப் போட்டு, கூடவே
இம்மானுவேல் துணை என்று எழுதியிருக்கிறார்.
ஞானசூரியன் என்ற நூல்தான், குடியரசின் முதல் வெளியீடு. அதை எழுதியவர் தயானந்த சரஸ்வதி.
அவருடைய இயற்பெயர் அப்புண்ணி நாயர். அவர் ஒரு மலையாளி. தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும்
புலமை பெற்றவர். அவரை அழைத்துக் கொண்டுவந்து கானாடுகாத்தானிலேயே தங்க வைத்து எழுத வைத்தது
வை.சு. சண்முகம் செட்டியார். அவர் ஒரு காந்தியவாதி. இவர் பாரதியையும், பாரதிதாசனையும்
ஆதரித்த வள்ளல். வ.வே.சு. ஐயர் குருகுலம் வாங்கம் இடமளித்தவர்.
வீட்டின் பெயர் ‘இன்ப மாளிகை.’ இப்போது மண்மேடு ஆகிவிட்டது. அவரது பேத்தியின் கணவர் தான் எஸ்.பி. முத்துராமன்.
தமிழுக்காகவும், சமூக முன்னேற்றத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் சண்முகம்
செட்டியார். தனது சொத்துக்களை எல்லாம் அதற்காக இழந்தவர். இறுதிக் காலத்தில் வறுமையில்
வாழ்ந்தார். அவர் 1927ல் பதிப்பித்த நூலை பெரியார் வாங்கி தனது பதிப்பகத்தின் முதல்
நூலாக 1929ல் வெளியிட்டார். சண்முகம் செட்டியார் பதிப்பித்த நூலின் விலை 1 ரூபாய்.
பெரியார் பதிப்பித்த நூலின் விலை நாலணா. அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியவர்கள் வ.உ.சி.,
மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற பல தமிழ் அறிஞர்கள். இப்போதைய சுயமரியாதை
இயக்கப் பதிப்பில் நீங்கள் அதையெல்லாம் பார்க்க முடியாது. எடுத்துவிட்டார்கள்.
முதல் தொகுதி 1938ல் வந்தது. குஞ்சிதம் குருசாமி வெளியிட்டது. அதன் சிறப்பு அதில் இருக்கும்
சமர்ப்பணப் பாடல்கள். அந்த நூல் வெளியாவதற்கு உதவி செய்தவர் யார் என்றால், சைவ சித்தாந்தப்
பெருமன்றத்தினுடைய தமிழ்நாட்டின் செயலாளர் நாராயணசாமி நாயுடு. ஆனால் அடுத்த பதிப்பில்
அந்த சமர்ப்பணப் பாடல் இல்லை.
இல்லாமல் நூலை வெளியிட்டவர் திரு,வி.க. அதைப் பார்த்துத் தான் மு.வ.வும் அட்டையில்
எந்தப் படமும் இல்லாமல் (மலர்விழி தவிர்த்து) தன் நூல்களை வெளியிட்டார். மு.வ. நாவல்களுக்கு
எல்லாம் அவரது மாணவர்கள் ரா.சீனிவாசன், மா.ரா.போ.குருசாமி போன்றோர் தான் முன்னுரை எழுதியிருப்பர்.
ஒரே ஒரு நூலுக்கு மட்டும் அவர் நீண்ட முன்னுரையை திரு,வி.க.விடம் வாங்கியிருக்கிறார்.
அந்த நூல் “திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்”. அற்புதமான முன்னுரை அது.
முதல் சிறுகதைத் தொகுப்பான ‘மங்கையர்க்கரசியின் காதல்’ அதற்கு ஆங்கிலத்தில் ராஜாஜி முன்னுரை
எழுதியிருக்கிறார். தமிழிலும் முன்னுரை எழுதியிருக்கிறார். ஒரே நூலுக்கு, இரண்டு முன்னுரைகள்.
இரண்டையும் எழுதியவர் ராஜாஜி என்பது இன்றைக்குப் பலருக்கும் தெரியாது. மற்றுமொரு முக்கியமான
சிறப்பு, அந்த நூலுக்கு, ஐயரின் மிக நெருங்கிய நண்பரான சாவர்க்கர் எழுதியிருக்கும்
அணிந்துரை. அது படிக்க மிக நெகிழ்ச்சியாக இருக்கும். இதெல்லாம் நினைவு கூர்வதற்குக்
கூட இன்று ஆட்கள் இல்லை. காரணம், பின்னால் வந்த பதிப்புகளில் இவையெல்லாம் இல்லை.
ஐயரின் “Kural or The Maxims of Tiruvalluvar” என்னும் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு அவ்வளவு
அற்புதமானது 36 நாட்களில் அவர் திருக்குறளை மொழிபெயர்த்தார். எந்தெந்த இடங்களில் ட்ரூவும்,
போப்பும் தவறியிருக்கிறார்கள், தவறான பொருள் கொண்டிருக்கிறார்கள் என்று முன்னுரையில்
மிக அழகாக விளக்கியிருப்பார் அந்த நூலில். சித்பவானந்தர் அமைப்பு மூலம் அது மீண்டும்
வெளியாகியிருக்கிறது. ஆனால், ஐயர் எழுதிய முன்னுரை அதில் இல்லை.
பற்றிய மிகப் பெரிய தொகுப்பு ஞானாலயாவில் உள்ளது. அதில் ஒன்று இந்திய அரசின் பப்ளிகேஷன்
டிவிஷன் வெளியிட்ட ஓர் அற்புதமான நூல்.
காந்தியைப் பற்றிய முழுமையான
நூல் என்று இதனைச் சொல்லலாம். அரிய படங்கள் இதில் இருக்கின்றன. ஜெயகாந்தன் உள்ளிட்ட
இங்கே வந்த பலரும் அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் அதிலேயே மூழ்கிப் போய்விட்டனர்.
அந்த நூல் இப்போது அச்சில் இல்லை. அருணன் போன்றவர்கள், ஆப்பிரிக்காவில் காந்திக்கு
தமிழில் கையெழுத்துப் போடச் சொல்லிக் கொடுத்ததே இரட்டைமலை சினிவாசன்தான் என்பதாக எழுதியிருக்கிறார்கள்.
ஆனால், என்னுடைய தேடலில் அதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. என்னிடம் இருக்கும் காந்தி குறித்த
எந்த நூல்களிலும் அதற்கு ஆதாரம் இல்லை. ஆனால், வாய்ப்பிருந்திருக்கலாம் என்பதையும்
மறுப்பதற்கில்லை.
வெளியானது வருண சிந்தாமணி என்ற நூல். அதற்கு பாரதியார் சாற்றுக்கவி வழங்கியுள்ளார்.
அந்த நூல் இங்கே உள்ளது.
வெளியான, மோசூர் வெங்கடசாமி ஐயர் தொகுத்த “Tamil Poetical Anthology” என்னும் நூலும் ஞானாலயாவில் உள்ளது.
வெளியான தமிழ்-லத்தீன் அகராதி உள்ளது.
இங்கே உள்ளன.
கிருஷ்ணமூர்த்தி
எழுத்து மூவர் | – அரவிந்த் சுவாமிநாதன்
என்றைக்காவது ஒருநாள் சரியாய் சாமான்கள் வாங்கி வந்ததுண்டா? குப்பையும் கூளமுமாய் எல்லாச்
சாமான்களையும் வாங்கி வந்தால் நஷ்டம் யாருக்கு? கடைக்காரன் எது கொடுக்கிறானோ அதை வாயைத்
திறவாமல் வாங்கி வந்து விடுகிறீர்கள்! கடுகு பாதி மண்! ஆறு தடவை புடைத்தேன். இன்னும்
மண் போகவில்லை. புளி கன்னங்கரேல் என்று அடையாயிருக்கிறது. உங்களுக்கு என்று ஒன்பது
வருஷப் புளியை அந்தப் பாழாய்ப் போவான் எப்படிக் காப்பாற்றி வைத்திருக்கிறானோ! அவன்
வாங்கின காசு கரியாய் மாறாதா? பருப்பு பார்த்து வாங்கினீர்களே! அதற்கு அடித்துக் கொள்ள
இரண்டு கைகளும் போதாது. பூ என்று ஊதினால் பறக்கும் இலைப்பருப்பைக் கொடுத்து ஏய்த்து
விட்டான். குண்டுப்பருப்பு ஒரு கடையிலும் கிடைக்காமற் போயிற்றா? திருப்பத்தூர் குண்டுப்
பருப்பு சிரிப்பாய்ச் சிரிக்கிறது. உங்களுக்குமட்டும் எங்கிருந்து இலைப்பருப்பு கிட்டிற்றோ
தெரியவில்லை? போகும்போதே எண்ணெய் ஒரு கடைக்கு ரெண்டு கடையாகப் பார்த்து வாங்குங்கள்
என்று படித்துப்படித்துச் சொல்லியிருந்தேன்! காறல் எண்ணெய்யை ஒரு குடம் வாங்கிக் கொண்டு
வந்து நிற்கின்றீர்கள். அதை யார் தொடப்போகிறார்கள்? உடனே அந்தக் குடத்தைக் கடையில்
கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்து மறுகாரியம் பாருங்கள். நெய் பிணநாற்றம் வீசுகிறது.
இதற்கு விலை படிக்கு ஒரு ரூபா கொட்டிக்கொடுத்தீர்கள்….”
இப்படியெல்லாம் கணவனைத் திட்டும் மனைவியின் கதையைப் படித்தவுடன் இது ஏதோ 50, 60களில்
விகடன், கல்கி போன்ற இதழ்களில் வந்தது என்று நினைத்து விடாதீர்கள். இது அதற்கும் மேலே!
அதாவது 1900த்தின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது. ‘தலையணை மந்திரோபதேசம்’ என்ற பெயரில்
1901ல் வெளியான இந்த நூலை எழுதியவர் ச.ம.நடேச சாஸ்திரி. இசையுலக மூவர் போல் எழுத்துலக
மூவரில் முதன்மையாக மதிக்கப்படத் தக்கவர் இவர். காரணம் இலக்கியச் செயல்பாடுகளில் பல
வகையில் அவர் முன்னோடியாக இருந்ததுதான். மேற்கண்ட ‘தலையணை மந்திரோபதேசம்’ நூல் விமர்சகர்களால்
‘நாவல்’ என்று மதிப்பிட்டாலும் உண்மையில் ராம பிரஸாத் – அம்மணி பாய் என்ற இருவருக்கிடையே
எழும் ஊடல்தான், சிறு சிறு சம்பவங்களாக, சிறுகதையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்
பெற்றிருக்கிறது. அந்த வகையில் இதனை சிறுசிறு சம்பவங்களின், கதைகளின் தொகுப்பு என்றும்
சொல்லலாம். தமிழில் இவ்வகை நகைச்சுவை எழுத்தின் முன்னோடி நடேச சாஸ்திரிதான். மட்டுமல்ல;
தமிழில் முதன் முதலில் துப்பறியும் நாவலை எழுதியவரும் இவரே! ‘தானவன்’ (‘தானவன் என்ற
போலிஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புதக் குற்றங்கள்’) என்ற இவரது நாவல் 1894ல் வெளியானது.
காலவரிசையின்படி பார்க்கப் போனால் ‘பிரதாப முதலியார் சரித்திரம் (1879)’ நாவலுக்குப்
பிறகு தமிழில் வெளியான இரண்டாவது நாவல் ‘தானவன்’ தான். ஆனால் இது தழுவல் முயற்சி என்று
இலக்கிய ஆய்வாளர்களால் புறந்தள்ளப்பட்டது. காரணம் Dick Donovan ஆங்கிலத்தில் எழுதிய
நாவல்களை முன் மாதிரியாகக் கொண்டே இந்த நாவலை எழுதியிருந்தார் சாஸ்திரி. தொடர்ந்து
‘தீனதயாளு’ (1900), ‘திக்கற்ற இரு குழந்தைகள்’, ‘மதிகெட்ட மனைவி’, ‘மாமியார் கொலுவிருக்கை’
போன்ற நாவல்களை எழுதினார். தமிழின் நாவல் வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் வித்திட்டவர்களுள்
ச.ம. நடேச சாஸ்திரியும் ஒருவர்.
ச.ம.நடேச சாஸ்திரி |
முதலில் ஆங்கிலத்தில் சிறுகதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளரும் இவரே எனலாம். ‘FolkLore
in South India’ (1884), ‘The Dravidian Nights Entertainments’ (1886), ‘Tales of
the sun’ (1890) போன்றவை ஆங்கிலத்தில் வெளியான இவரது சிறுகதைத் தொகுப்புகள். ‘Hindu
Feasts, Fasts and Ceremonies’ (1903) என்ற நூல் இந்தியாவின் மக்கள் வாழ்க்கையையும்,
நம்பிக்கைகளையும் அதன் பண்டிகைகள் போன்றவற்றின் சிறப்பையும் ஐரோப்பியருக்கு அறிமுகப்படுத்த
எழுதப்பட்டதாகும். ‘The Dravidian Nights Entertainments’ என்ற நூல் தமிழில் வழங்கி
வந்த ‘மதனகாமராஜன் கதை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அந்த வகையில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குக்
கதைகளை மொழிபெயர்த்த முன்னோடித் தமிழ் எழுத்தாளரும் நடேச சாஸ்திரியே என்று கூறலாம்.
1859ம் ஆண்டு, திருச்சி மாவட்டத்தில், மணக்கால் அருகே உள்ள சங்கேந்தி என்ற கிராமத்தில்,
ஸ்ரீ மகாலிங்க ஐயர் – அகிலாண்டேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கும்பகோணத்தில்
உயர் கல்வியை முடித்த பின் சென்னைப் பலகலையில் இளங்கலைப் படிப்பை நிறைவு செய்தார்.
1881ல் இவருக்கு இந்திய அரசின் கலை மற்றும் சிற்பத்துறையில் (Art and Sculpture) வேலை
கிடைத்தது. பிரிட்டிஷ் அதிகாரி ராபர்ட் சிவெலின் கீழ் இவர் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி உடையவராக
இவர் இருந்ததால், இவரது புலமையைக் கண்டு வியந்த ராபர்ட் சிவெல் இவருக்கு ‘பண்டிட்’
என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார். சில வருடங்கள் சென்னையில் பணியாற்றியவர் பின்னர்
மைசூர் அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்று கலை மற்றும் சிற்ப கலைத் துறையில் இரண்டு
ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு தமிழகத்திலும் சிறைத்துறை, பதிவுத்துறை போன்ற துறைகளில்
பணியாற்றினார். லண்டன் கலாசாலை உறுப்பினராக இருந்த இவர் மீது ஐரோப்பியர்களுக்கு மிகுந்த
நன்மதிப்பு இருந்தது.
ஓய்வு நேரத்தில் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார் சாஸ்திரி. தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல்
சம்ஸ்கிருதத்திலும் சில நூல்களை எழுதியிருக்கிறார். ‘விவேக போதினி’ இதழில் இவர் தொடர்ந்து
பல கட்டுரைகளையும், மொழிப்பெயர்ப்புத் தொடர்களையும் (குமார சம்பவம்) எழுதி வந்தார்.
மிகுந்த கடவுள் பக்தி கொண்ட இவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத் திருவிழாக்களில்
தவறாது கலந்து கொள்வது வழக்கம். அவ்வாறே ஒருநாள் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகச்
சென்றிருந்தார். சுவாமி வீதி உலாவின் போடப்பட்ட அதிர்வேட்டுச் சத்தத்தால் மிரண்ட குதிரை
ஒன்று தறிகெட்டு ஓடியது. பயந்து ஒதுங்கி நின்ற நாடேச சாஸ்திரிகள் மீது வேகமாக வந்து
மோதியது. சாஸ்திரிகள் கீழே விழுந்தார். கல் ஒன்றின் மீது தலை அடிபட்டு மயக்குமுற்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி மறுநாள் ஏப்ரல் 11,1906 அன்று காலமானார்.
நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று சகல தளங்களிலும் முன்னோடியாக வாழ்ந்த அவரது வாழ்வு
1906ல் முற்றுப்பெற்றது. என்றாலும் அவரது மறைவிற்குப் பின்னும் அவரது கட்டுரைகள் ‘விவேக
போதினி’ இதழில் தொடர்ந்து வெளியாகின. நூல்கள் பலவும் தொடர்ந்து அச்சிடப்பட்டன. இன்றைக்கும்
அவரது நூல்கள் (ஆங்கிலத்தில்) அச்சில் கிடைக்கின்றன என்பதே அவரது முன்னோடி முயற்சிகளுக்கு
முக்கிய சான்றாகிறது.
‘ஜில்லா ஸ்கூல்’ என்று பெயர் வழங்கிய கவர்ன்மெண்டு காலேஜ் என்ற பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத்தில்
ஒரு மூலையில் சில பெஞ்சுகளும் அவற்றின் மத்தியில் ஒரு நாற்காலியும் மேஜையும் போடப்பட்டிருந்தன.
அந்த மேஜையின்மேல் சில மைக்கூடுகள் இருந்தன. ‘டிங்டாங்’ என்று பத்தாவது மணி அடித்தவுடன்
அவ்விடத்தில் சுமார் இருபது பையன்கள் வந்து கூடினார்கள். அவர்கள் வந்து ஐந்து நிமிஷத்திற்குள்
அம்மைத் தழும்புகள் நிறைந்த முகத்தையும் நீண்ட கறுத்த உருவத்தையுமுடைய ஒரு மனிதர் அங்கே
வந்தார். அவர் அந்தப் பள்ளிக்கூடத்துத் தமிழ்ப் பண்டிதர். அவர் பெயர் அம்மையப்ப பிள்ளை.
அவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கலாம். அவர் பிறந்த ஊர், ‘ஆடுசாபட்டி’ என்று ஐந்தாறு
வீடுகளும் ஒரு புளியமரமும் உள்ள ஒரு பெரிய பட்டணம். அவர் அகாத சூரர். எமகம், திரிபு
என்று இப்படிப் பாட ஆரம்பித்தாரானால் குரங்குகள் அத்திப்பழத்தை உதிர்ப்பதுபோல் சடசடவென்று
உதிர்த்து விடுவார். யாராவது தமிழ் தெரிந்தவன் அவர் கையிலகப்பட்டுவிட்டால் ராமபாணம்
போட்டாற் போல மூச்சு விடுமுன்னே முந்நூறு, நானூறு கணக்காகப் பாட்டுகளை வீசி அவன் காதைச்
சல்லடைக் கண்களாகத் தொளைத்துவிடுவார்.
தமிழ் தெரியாத ஒரு பைராகிக்கும் ஒரு சாஸ்திரியாருக்கும் சண்டை உண்டாய்விட்டது. பைராகி
தன் வசவுகளில் ‘காரே, பூரே’ என்று அபரிமிதமாய் வைய, சாஸ்திரியார் முட்டாள், போக்கிரி
என்றிப்படித் தனக்குத் தெரிந்த வசவுகளையெல்லாம் வைது பார்த்தார். அவன் வாயொடுங்குகிற
வழியாகவில்லை. அய்யர் பழைய வசவுகளுக்கு இவன் கட்டுப்படமாட்டான் என்று நினைத்து புதுமாதிரியாக,
‘அடா போடா, புஸ்தகமே, சிலேட்டே, பென்சிலே, கலப்பையே, மோர்க்குழம்பே, ஈயச்சொம்பே, வெண்கலப்பானையே’
என்று இப்படி வாயில் வந்த வார்த்தையை எல்லாம் வசவாக அடுக்கவே, அந்தப் பைராகி புதுவசவுகள்
அகப்படாமல் திண்டாடித் தத்தளித்துப்போனான். அதுபோல அம்மையப்ப பிள்ளையுடன் ஏதாவது ஒரு
விஷயத்தைக் குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம்பித்தால் ஆயிரக்கணக்கான பாட்டுகளைச் சொல்லி
எதிராளியின் வாயை அடக்கி விடுவார். அந்தப் பாட்டுகள் எடுத்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாவிட்டால்
என்ன? அதனுள் என்ன குறைவு? பாட்டுகள் பாட்டுகள்தானே! அதுவும் அவர் பாட ஆரம்பித்தால்
அவருக்குச் சரியாக மகா வைத்தியநாதையரால் கூடப் பாட முடியாது.”
மேற்கண்ட, வரிக்கு வரி நகைச்சுவை ததும்பும் எழுத்து எழுதப்பட்டது 19ம் நூற்றாண்டில்
அல்ல. அதற்கும் முன்பு. ஆம். இன்றைக்கு 125 ஆண்டுகளுக்கு முன்னால், 1893ல், மேற்கண்ட
வரிகள் இடம்பெற்ற தொடரை விவேக சிந்தாமணியில் எழுதியவர் பி.ஆர். ராஜம் ஐயர். இத் தொடரை
எழுதும்போது அவருக்கு வயது 21. இவ்வுலகில் அவர் வாழ்ந்ததோ வெறும் 26 வருடங்கள் தான்.
இலக்கிய உலகில் பயணித்ததோ வெறும் ஐந்தே ஆண்டுகள்தான். அதற்குள் அவர் செய்திருக்கும்
சாதனை தமிழ் இலக்கிய உலகில் என்றும் நிலைபேறுடையது.
ஐயர், 1872ம் ஆண்டில், வத்தலகுண்டில் பிறந்தார். உயர்கல்வியை அவ்வூரில் நிறைவு செய்தவர்,
மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் சேர்ந்து எஃப். ஏ. பயின்றார். அதனைத் தொடர்ந்து அக்காலத்தில்
புகழ்பெற்று விளங்கிய சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார்.
தமிழ் இலக்கியத்தில் தேர்ந்திருந்த ஐயர், வித்வான் பூண்டி அரங்கநாத முதலியார் இயற்றிய
கச்சிக்கலம்பகத்தின் பாடல்களுக்கு விளக்கவுரை ஒன்றை கல்லூரி இதழுக்காக எழுதினார். அதுவே
அச்சில் வந்த இவரது முதல் படைப்பு. அக்கட்டுரையே இவரது திறமையை பலரும் அறியக் காரணமானது.
கல்லூரி நூலகத்தில் இவர் வாசித்த ஷேக்ஸ்பியர், ஷெல்லி, வேர்ட்ஸ் வெர்த், டென்னிசன்
போன்றோரது படைப்புகள் கவிதா ஆர்வத்தைத் தூண்டின. கம்பனின் பாடல்கள் இவரை மிகவும் கவர்ந்தன.
பி.ஏ. படிப்பை நிறைவு செய்ததும், தொடர்ந்து சட்டம் பயில்வதற்காக சென்னை சட்டக் கல்லூரியில்
சேர்ந்தார். ஆனால், இறுதித் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை. அது இவரது மனதை வாட்டியது.
தனிமை விரும்பியாக இருந்த ஐயர், மேலும் தன்னுள் ஒடுங்கினார். விரக்தி அடைந்த நிலையில்
இருந்த இவருக்குத் தாயுமானவரின் நூல் தொகுப்பு கிடைத்தது. அது இவரது உள்ளத்தில் புதியதோர்
எழுச்சியைத் தோற்றுவித்தது. எது நிலையானது, எது நிலையற்றது, வாழ்வதற்கு என்ன தேவை என்பதையெல்லாம்
ஆராய்ந்து சிந்தித்து உணர்ந்தார். கைவல்லிய நவநீதம், தத்துவராய சுவாமிகளின் பாடல்கள்
போன்றவை இவரது உள்ளத்தை ஞானமார்க்கத்தில் செலுத்தின. இவர் வசித்து வந்த திருவல்லிக்கேணியில்
அடிக்கடிச் சொற்பொழிவுகள் நடக்கும். ஒரு சந்நியாஸினி அவ்வப்போது அங்கு வந்து ஆன்மிகச்
சொற்பொழிவாற்றி வந்தார். அவரை அணுகி தீக்ஷை பெற்றார் ஐயர். தொடர்ந்த ஆன்மிக நாட்டத்தின்
விளைவால் சாந்தாநந்த சுவாமிகள் என்பவரிடமும் குரு தீக்ஷை பெற்றுச் சீடரானார். அதுமுதல்
எப்போதும் ஏகாந்தமாக அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதும் தனிமையில் தியானிப்பதும்
அவரது வழக்கமானது.
பி.ஆர்.ராஜம் ஐயர் |
ராஜம்
ஐயரின் நண்பர் ஒருவர் ‘பிரம்மவாதின்’ இதழுக்கு ஒரு கட்டுரை எழுதித் தருமாறு கேட்டார்.
ஐயரும் அதற்கு உடன்பட்டு ‘Man his Littleness and Greatness’ (மனிதன் – அவன் தாழ்வும்
ஏற்றமும்) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதித் தந்தார். அது பிரசுரமானது
அக்கட்டுரை அவரது ஆன்மிக அனுபவத்தின் சாரமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து விவேக சிந்தாமணி
இதழுக்கு எழுதும் வாய்ப்பு வந்தது. அதுதான் ‘ஆபத்துக் கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள்
சரித்திரம்’ என்னும் பெயரிலமைந்த தொடர். தமிழில் வெளியான முதல் நீண்ட தொடர்கதை; தமிழில்
முதன்முதலில் பெண்ணை மையப் பாத்திரமாக வைத்து, பெண்ணின் தலைப்பைச் சூட்டி எழுதப்பட்ட
முதல் நாவல்; ஆங்கில நடையின் தாக்கமின்றி எழுதப்பட்ட யதார்த்தமான முதல் தமிழ் நாவல்;
தமிழில் தத்துவம் பற்றிப் பேசிய முதல் நாவல்; இரு தலைப்புகள் கொண்ட முதல் நாவல் என்பது
உட்பட பல்வேறு சிறப்புகளை உடையது இந்நாவல். பாடநூல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த
நாவல், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்குப் பாட நூலாகவும் வைக்கப்பட்ட பெருமையுடையது.
முதல் நாவல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ 1879ல் வெளிவந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள்
கழித்துத் தான் (1896) இந்த நாவல் நூலாக வெளிவந்தது என்றாலும், பாத்திரப் படைப்பிலும்,
கதை சொல்லும் நேர்த்தியிலும், உருவகத்திலும், நாவல் அமைப்பிலும் இதுவே முதல் நாவலாக
ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இந்த நாவல் மட்டுமல்லாமல், கம்பராமாயணத்தை அடிப்படையாக
வைத்து, கம்பனின் கவிச் சிறப்பையும், சீதையின் பெருமையையும் ஜானகி, நடராஜன் என்ற இருவர்
வியந்து உரையாடுவது போல் ‘சீதை’ என்ற தொடரையும் விவேக சிந்தாமணி இதழில் ராஜம் ஐயர்
எழுதியிருக்கிறார். ‘சீதை’ கட்டுரைதான் கம்பராமாயணம் பற்றி வெளியான தமிழின் முதல் இலக்கியத்
தொடராகும். கம்பனைப் பற்றி முதன்முதலில் தமிழில் விரிவாக ஆராய்ந்தவர் என்று சொல்லப்படும்
வ.வே.சு. ஐயருக்கு முன்பாகவே கம்பராமாயணத்தை அறிமுகப்படுத்தி ஒரு தொடர் கட்டுரையை எழுதியவர்
ராஜம் ஐயர்தான். ராஜம் ஐயரின் கட்டுரை வெளியானபோது வ.வே.சு. ஐயருக்கு வயது 13தான்.
ராஜம் ஐயர் அத்தொடரை எழுத ஆரம்பித்தது ஜனவரி 1896ல். ஆனால், எட்டு அத்தியாயங்கள் மட்டுமே
கொண்ட அக்கட்டுரைத் தொடர் நிறைவுற்றது ஜனவரி 1898ல்தான். தொடர், மாதா மாதம் தொடர்ச்சியாக
வெளியாகவில்லை. காரணம், ராஜம் ஐயருக்கு இடையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவும், தொடர் சிகிச்சைகளும்தான்.
மேலும் இக்காலகட்டத்தில் அவர் ‘பிரபுத்த பாரதா’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
பாரதா’ சுவாமி விவேகானந்தரின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இதழ். அதில் தனது இயற்பெயரிலும்
டி.சி. நடராஜன், ரங்கநாத சாஸ்திரி எனப் பல்வேறு புனைபெயர்களிலும் தத்துவ, வேதாந்த,
புராண, சமய விசாரணைக் கட்டுரைகளை எழுதினார் ஐயர். அவ்விதழில் ‘True Greatness or
Vasudeva Sastri’ என்ற தலைப்பில் இவர் ஆங்கிலத்தில் எழுதிய தொடர் நாவல் மிக முக்கியமானது.
சுமார் 20 வாரங்கள் வெளியான அந்த நாவல் ராஜம் ஐயருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால்
முற்றுப்பெறாமல் நின்றுவிட்டது. அந்த வகையில் ஆங்கிலத்தில் நாவல் எழுதிய, தொடர்கதை
எழுதிய தமிழின் முதல் எழுத்தாளர் பி.ஆர். ராஜம் ஐயர் என்று சொல்லலாம்.
ஆன்மிக வேட்கை காரணமாக ராஜம் ஐயர் தனது உடலை சரிவரப் பராமரிக்கவில்லை. அதனால் அடிக்கடி
உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. நோய் முற்றி, மே 13, 1898ல் தனது 26ம் வயதில் காலமானார்.
“கமலாம்பாள் சரித்திரம் என்ற ஒரே நாவலின் மூலம் சென்ற நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர்
என்ற புகழ் ஒரு முகமாகக் கிடைக்கப் பெற்ற நாவலாசிரியர் பி.ஆர். ராஜமய்யர். இந்த நாவலின்
முதல் பதிப்பு அவர் காலத்திலேயே வெளிவந்திருக்கிறது. கமலாம்பாள் நாவலுக்குப் பிறகு
அதோடு ஒப்பிடக் கூடிய தமிழ் நாவல் இன்னும் வரவில்லை” என்பது இலக்கிய மேதை சி.சு.செல்லப்பாவின்
கருத்து.
பெயர் கடல் கடந்து பரவ வேண்டும் என்ற ஆசை ராஜம் ஐயருக்கு இருந்தது. அது பிற்காலத்தில்
சாத்தியமாயிற்று. ஸ்டூவர்ட் ப்ளாக் பெர்ன் (Stuart Blackburn) இந்நூலை ‘The Fatal
Rumour’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ராஜம் ஐயர் பிரபுத்த பாரதாவில்
எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘Rambles in Vedanta’ என்ற தலைப்பில் 900 பக்கங்கள்
கொண்ட நூலாக வெளியாகியுள்ளது.
காலமே வாழ்ந்தாலும் நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, பத்திரிகை என்று நிறைவாக எழுதி
தனது முத்திரைகளைப் பதித்துச் சென்றிருக்கும் பி. ஆர். ராஜம் ஐயர், இலக்கிய உலகம் மறக்கக்
கூடாத ஒரு முன்னோடி.
வயதாகும்பொழுது என் சிறிய தாயாராகிய தஞ்சாவூர்ப்பெண் எங்கள் வீட்டுக்கு வந்தாள். அவளுக்கு
அப்பொழுது பதின்மூன்று வயது. அவள் அழகுள்ள பெண்; தணிந்த விலையுள்ள சீலைகள் கட்டிக்
கொள்ள மாட்டாள். தன்னைச் சிங்காரஞ் செய்து கொள்வதில் வெகு விருப்பமுடையவள். நடையுடை
பாவனைகளெல்லாம் புதுமாதிரியாகவே யிருந்தன. அவளுக்கு எழுத வாசிக்கத் தெரியும். வந்து
சிலநாள்களுக்குள் அவள் குணம் வெளிப்பட்டது. தானே வீட்டில் ஏகாந்தமாய் ஆளவேண்டுமென்ற
எண்ணத்துடன், என் தாய் இறந்த நாள்முதல் வீட்டுவேலைகளைப் பார்த்துக்கொண்டு என்னை அன்புடன்
வளர்த்துவந்த என் அத்தையைப்பற்றித் தன் புருஷனிடத்திற் கோட்சொல்லத்தொடங்கி, சிலநாள்களில்
அவளைத் துரத்திவிட்டாள். அப்புண்ணியவதி வெகு விசனத்துடன், நான் அழுவதைக் காணப் பிரியமின்றி,
வெளியே விளையாடப்போயிருக்கும் பொழுது, தன்னூருக்குப்போய்விட்டாள். நான் வீட்டுக்கு
வந்தவுடன் ‘அத்தையம்மாள் எங்கே?’ என்று கேட்டேன். அதற்கு என் சிறு தாயாகிய செங்கமலம்
‘அத்தையுமில்லை, பாட்டியுமில்லை. முண்டையொழிந்தாள். சனியன் தொலைந்தது’ என்றாள். நான்
கோ வென்றழுதேன், அதற்கு அவள் ‘என் காலின் கீழ் முட்டாதே. எங்கேயாவது ஒழி’ என்று சொல்லிக்கொண்டே
பிடித்திழுத்து முதுகிலடித்து வெளியே தள்ளிவிட்டாள். நான் தெருவில் விம்மி விம்மி யழுதுகொண்டு
நின்றேன். அப்பொழுது என் தகப்பனார் வந்தார். அவர் ஒன்றும் கேட்கவில்லை. திரும்பிக்
கூடப் பார்க்கவில்லை. என் துக்கம் அதிகரித்தது. அப்பொழுதுதான் நான் அனாதை யென்றறிந்தேன்.
‘அம்மா செத்துப்போனாள்’ என்பதின் பொருள் அப்பொழுதுதான் தெரிந்தது. குளத்திற் போய் விழுந்து
இறக்கலாமென்று நினைத்தேன். ஆனால் தவளை கடிக்குமே. கிணத்திற் போய் விழுந்துவிடுவோமென்றால்
ஆமை கடிக்குமே. ஒரு விஷயமும் தெரியாது; என்ன செய்கிறது! இவ்வித யோசனைகளில் அழுகை மாறிவிட்டது.
பிற்பாடு என் தோழியாகிய சேஷி தம்பிக்கு வைசூரி கண்டிருந்ததனால் அவள் வீட்டுக்குப் போகக்கூடாதென்று
என் அத்தையம்மாள் சொல்லி யிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. வைசூரியினா லிறக்கலாமென்று
நினைத்து அங்கே போகப்புறப்பட்டேன். சேஷி வீட்டு வாசலிற் போனவுடன் வேப்பிலைகள் சிதறிக்கிடப்பதைக்கண்டு
பயந்து திரும்பிவிட்டேன். சாயங்காலம் சாப்பாட்டுவேளை வந்தவுடன், பசிமுன்னிழுக்க, வெட்கம்
பின்னிழுக்க, மெள்ள மெள்ள வீட்டருகே சென்றேன். தெருத் திண்ணையில் வீற்றிருந்த என் தகப்பனார்,
‘சாவித்திரி! உள்ளேபோய்ச் சாப்பிடு’ என்றார். நான் தலையைக் கவிழ்ந்துகொண்டே வீட்டுக்குட்
சென்றேன். உடனே செங்கமலம் என் சிறிய தாயார் ‘எடுத்துப் போட்டுத் கொண்டு தின்னு’ என்றாள்.
என் கண்களிற் கண்ணீர் தளும்பிற்று. ஒன்றுஞ் சொல்லாமல் சோற்றுப் பானையிலிருந்து எடுத்துப்
போட்டுக்கொண்டு சாப்பிட்டபின், எச்சிலைச்சுத்தி செய்துவிட்டுத் திகைத்து நின்றேன்.”
ஒரு சிறிய பெண்ணின் அவல வாழ்வை மிக உருக்கமாகச் சொல்லும் இவ்வரிகளை எழுதியவர், அனந்த
நாராயண ஐயர் மாதவையா என்னும் அ. மாதவையா. ஜூன் 1892ல் விவேக சிந்தாமணி இதழில் ‘சாவித்திரி
சரிதம்’ என்னும் மேற்கண்ட வரிகள் கொண்ட இத்தொடர் வெளியானபோது அவருக்கு வயது 20. ஒரு
சிறு பெண், தன் வாழ்க்கையை தன் சரித்திரமாகவே கூறுவது போல் அமைந்த இத்தொடர்தான் விவேக
சிந்தாமணி இதழில் வெளியான முதல் தொடர். ‘சாவித்திரி’ என்ற பெண் தன் வரலாற்றைக் கூறும்
இக்கதையை ‘சாவித்திரி’ என்ற புனைபெயரில் எழுதியிருந்தார் மாதவையா. அதுதான் தமிழில்
அவரது முதல் படைப்பு. அதற்கு முன்பு, அவர் தான் பயின்ற கிறித்தவக் கல்லூரி இதழில் ஆங்கிலக்
கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அந்த வகையில் ‘சாவித்திரி சரிதம்’ தமிழில் வெளியான மாதவையாவின்
முதல் படைப்பு மட்டுமல்ல; தமிழில் வெளியான முதல் தொடர்கதையும் கூட. ஆனால், ஆசிரியருடன்
ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அத்தொடர் ஆறு மாதங்களோடு (நவம்பர் 1892) நிறுத்தப்பட்டு
விட்டது. அதே காலக்கட்டத்தில் பெ. சுந்தரம் பிள்ளையின் ‘மனோன்மணீயம்’ குறித்து ஒரு
திறனாய்வையும் அவர் விவேக சிந்தாமணியில் எழுதியிருந்தார். ஆசிரியருடன் ஏற்பட்ட பிணக்கு
காரணமாக அதன் பின்னர் விவேக சிந்தாமணியில் எதையுமே மாதவையா எழுதவில்லை. (அதற்குச் சில
மாதங்களுக்கு பிறகுதான் பிப்ரவரி 1893ல் ராஜம் ஐயரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’ விவேக
சிந்தாமணியில் தொடராக வெளியாக ஆரம்பித்தது.) ‘சாவித்திரி சரிதம்’ பின்னர் மீண்டும்
எழுதப்பட்டு 1903ல் ‘முத்து மீனாட்சி’ என்ற தலைப்பில் நாவலாக வெளியானது.
அ.மாதவையா |
16, 1872ல் திருநெல்வேலியில் உள்ள பெருங்குளம் கிராமத்தில் அனந்தநாராயண ஐயருக்கும்
மீனாட்சியம்மாளுக்கும். மகனாகப் பிறந்தார் மாதவையா. திருநெல்வேலி இந்துக் கல்லூரியில்
உயர் கல்வியை முடித்தார். பின் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பி.ஏ. பயின்றார். அதில்
தேர்ச்சி பெற்ற பின் உப்பு-சுங்க இலாகாவில் அரசு அதிகாரியாகச் சேர்ந்தார். தமிழ், ஆங்கிலம்
இரண்டிலும் நல்ல புலமை பெற்றிருந்த மாதவையா, இருமொழிகளிலும் எழுத ஆரம்பித்தார். அவரது
‘பத்மாவதி சரித்திரம்’ தமிழில் தோன்றிய மூன்றாவது நாவலாக இலக்கிய ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது.
தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ‘விஜய மார்த்தாண்டம்’, ‘தில்லை கோவிந்தன்’, ‘சத்தியானந்தன்’,
‘கிளாரிந்தா’ போன்ற நாவல்களை எழுதினார். அந்நாவல்களுக்கும், ‘குசிகர் குட்டிக்கதைகள்’
என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறுகதைகளுக்கும் வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர இருந்தன.
தனது படைப்புகளில் ஆண்-பெண் சமத்துவம், பெண் கல்வி, விதவா விவாகம், சாதி எதிர்ப்பு,
இந்து மதச் சீர்கேடுகளைச் சாடுதல் போன்றவற்றை மையப்படுத்தியிருந்தார். மூட நம்பிக்கைகளைச்
சாடி நவீன மேற்கத்திய சிந்தனைப் போக்குகளைத் தன் படைப்பில் முன்வைத்ததால் அவரது படைப்புகளுக்கு
எதிர்ப்புக் கிளம்பியது. என்றாலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார்.
மீது கொண்ட ஆர்வத்தால் பெ.நா.அப்புசாமி, வே.நாராயணனுடன் இணைந்து 1917ல் ‘தமிழர் கல்விச்
சங்கம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அச்சங்கத்தின் மூலம் ‘தமிழர் நேசன்’ இதழைத்
துவக்கினார். ‘பாரிஸ்டர் பஞ்சநதம்’, ‘மணிமேகலை துறவு’ போன்ற நாடகங்களை அவர் தமிழர்
நேசனில் எழுதினார். மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் சிலவற்றையும் எழுதினார். ஆங்கிலத்துக்கு
இணையான தமிழ்க் கலைச் சொற்கள் பலவற்றை அவ்விதழில் அறிமுகப்படுத்தினார். 1922ல் விருப்ப
ஓய்வு பெற்ற பின் தனிப்பட்ட தனது கருத்துக்களை வெளியிடுவதற்காகவே ‘பஞ்சாமிர்தம்’ என்ற
இதழைத் துவக்கினார். அதில் ‘நிலவரி ஏலம்’, ‘கண்ணன் பெருந்தூது’, ‘ஏணி ஏற்றம்’, ‘முருகன்
ஆரூடம்’ போன்ற சிறுகதைகளையும் ‘தக்ஷிண சரித்திர வீரர்’ போன்ற கட்டுரைகளையும் எழுதினார்.
தான் எழுதியது மட்டுமில்லாமல் அசலாம்பிகை அம்மையார், விசாலாக்ஷி அம்மாள், லக்ஷ்மி அம்மாள்,
வே.தாயாரம்மாள், மா.பாமணி போன்ற எழுத்தாளர்களையும் பி.வி.ஜகதீச ஐயர், வி.சுப்பிரமணிய
ஐயர், ரா.வாசுதேவ சர்மா போன்ற பண்டிதர்களின் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டார்.
‘பொது தர்ம சங்கீத மஞ்சரி’, ‘இந்திய தேசிய கீதங்கள்’ போன்றவை மாதவையரின் கவிதைத் தொகுப்புகளில்
குறிப்பிடத் தகுந்தவை. இராமாயணத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் ‘பால ராமாயணம்’ என்று ஆங்கிலத்தில்
எழுதியுள்ளார். கம்பராமாயணம் மீதும் அவருக்கு ஆர்வம் இருந்தது.
சமூகச் சீர்த்திருத்தங்களை வலியுறுத்தியதாலும், இந்து மதக் கருத்துக்கள் சிலவற்றைச்
சாடி எழுதியிருந்ததாலும், கிறித்தவத் தாக்கம் அவரது படைப்புகளில் தென்பட்டதாலும் அவர்
கிறித்துவச் சார்புடையவர் என்பதாக ஒரு கருத்து அக்காலத்தில் முன் வைக்கப்பட்டது. ஆனால்,
அதை மறுக்கிறார், எழுத்தாளரும், மாதவையாவின் உறவினருமான பெ.நா.அப்புசாமி. “மாதவையா
குசிகர் குட்டிக் கதைகள் முதலியவற்றை எழுதியதாலும், பத்மாவதி சரித்திரத்தின் சில பகுதிகளிலும்,
கிளாரிந்தா என்னும் நாவலிலும், சத்தியானந்தா என்னும் நாவலிலும், கிறிஸ்தவ மதத்தையும்
அம்மதத்தைச் சார்ந்த பெரியார்கள் சிலரையும் புகழ்ந்ததாலும், அவர் தம்முடைய மதத்தின்
மீது பற்றற்றவர் என்றும், அவர் கிறிஸ்தவ மதப் பற்று மிக்கவர் என்றும் சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
இது முற்றும் தவறு” என்கிறார் அவர். உண்மையில் மாதவையா சமரசவாதியாகவே இருந்திருக்கிறார்.
சிலகாலம் பிரம்ம ஞான சங்கத்தில் சேர்ந்து அதன் உறுப்பினராக இருந்திருக்கிறார். புத்தரின்
மீது ஈடுபாடு ஏற்பட்டு எட்வின் ஆர்னால்ட் எழுதிய ‘ஆசிய ஜோதி’யை தனித் தமிழில் ‘சித்தார்த்தன்’
ஆக எழுதி வெளியிட்டார். மற்றபடி அவர் தன்னை சமயவாதியாகவோ ஆச்சார சீலராகவோ வெளிப்படுத்திக்
கொள்ளவில்லை. ‘எம்மதமும் சம்மதம்’ என்ற கொள்கை உடையவராகவே வாழ்த்திருக்கிறார். ‘அமுத
கவி’ என்ற புனைபெயரில் இறைவனை வேண்டி ‘பஞ்சாமிர்தம்’ இதழில் பல கவிதைகளை எழுதியிருக்கிறார்
மாதவையா.
சரித்திரம்’ நூலின் மூன்றாம் பாகத்தை பஞ்சாமிர்தத்தில் ஆரம்பித்தார். ஆனால், அது முற்றுப்
பெறவில்லை. சென்னைப் பல்கலையின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருந்த அவர், 1925 அக்டோபர்
22 அன்று, தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்; தமிழைக் கட்டாயப் பாடமாக்க
வேண்டும் என்று அக்குழுவில் பேசினார். மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசி அமர்ந்தவர்,
மூளையின் ரத்தநாள வெடிப்பு ஏற்பட்டு அங்கேயே காலமானார். அவர் இறப்பிற்குப் பின் அவர்
எழுதிய ‘மோகினி மாசா’ என்ற நாவலின் இரண்டு அத்தியாயங்கள் ‘பஞ்சாமிர்தம்’ இதழில் வெளியாகின.
அதன் பின் அந்த இதழும் நின்று விட்டது.
சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், ஆ. மாதவையா என்னும் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான இம்மூவரது
சாதனைகள், இலக்கிய உலகம் என்றும் மறக்காமல் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று.
மூவர் பட்டியலில் பாரதியைப் பற்றிக் குறிப்பிடவில்லையே, அவரும் இவர்களுக்குக் கிட்டத்தட்டச்
சம காலத்தில் வாழ்ந்தவர்தானே என்ற ஐயம் பலருக்கும் தோன்றக்கூடும். உண்மைதான். நாவல்
முயற்சிகள், சிறுகதை, கவிதை, கேலிச் சித்திரம், தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள்,
நகைச்சுவை என்று பல வகைகளில் பாரதி இவர்களைப் போலவே முன்னோடியாகப் பல சாதனைகளைச் செய்திருக்கிறார்
என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பாரதி நம் அளவுகோல்களுக்கு அப்பாற்பட்ட மகா கவி. மகா
படைப்பாளி. அந்த அளவுக்கு அவர் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவற்றைப் பிறிதொரு
சமயம் பார்க்கலாம்.
நாடி ஜோதிடம் – புரியாத புதிரா? | அரவிந்த் சுவாமிநாதன்
ஊருக்கு ஊர் டீக்கடைகள் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒரு நாடி ஜோதிட நிலையம் இருக்கிறது. “முனிவர்கள் கணித்து வைத்துள்ள பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் உங்கள் எதிர்காலப் பலன்களை மிகத் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம்” என்ற அறிவிப்போடு அகத்தியர், சுகர், வசிஷ்டர், பிருகு, விசுவாமித்திரர் என்று பல முனிவர்களின் பெயரைத் தாங்கிய பெயர்ப் பலகைகளை நாம் எங்கும் பார்க்க முடியும். உண்மையிலேயே இவையெல்லாம் இம்முனிவர்களால் உருவாக்கப்பட்டதுதானா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றப் போகும் ஒருவரது வாழ்க்கைக் குறிப்புகளை, அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை எப்படி இம்முனிவர்களால் கணித்து எழுத முடிந்தது என்று நாடி ஜோதிடர்களிடம் கேட்டால், “அவர்கள் ஞான திருஷ்டி மிக்கவர்கள். முக்காலமும் உணர்ந்தவர்கள். காலத்தைக் கடந்தவர்கள். அவர்களால் எதுவும் முடியும்” என்பது நமக்கு பதிலாகக் கிடைக்கும்.
நம்மில் பலரும் நாடி ஜோதிடம் பார்த்திருப்போம். சிலருக்கு நாடியில் கூறியபடியே அனைத்துப் பலன்களும் நடந்திருக்கும். சிலருக்கு ஒன்றுமே நடந்திருக்காது. பொதுவில், பலன் பெற்றவர்கள் நாடி ஜோதிடம் உண்மைதான் என்பார்கள். நாடி சொன்னபடி தங்களுக்கு எதுவுமே நடக்காதவர்களோ, “சே, சுத்த ஏமாற்று வேலை, எல்லாம் பக்கா ஃப்ராடு. பொய்” என்பார்கள்.
அப்படியானால் உண்மைதான் என்ன?
நாடி ஜோதிடம் என்பது என்ன?
‘நாடி ஜோதிடம்’ என்பது தமிழர்களின் தொன்மையான ஆரூட முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியா முழுமையும் இவ்வகை ஜோதிடமுறை பயன்பாட்டில் இருக்கிறது. தென்னாட்டில் அகத்தியர் நாடி, சுகர் நாடி, பிருகு நாடி, காக புஜண்டர் நாடி, சிவவாக்கியர் நாடி, நந்தி நாடி, வசிஷ்டர் நாடி, கெளசிகர் நாடி, சிவநாடி, விசுவாமித்திரர் நாடி போன்ற பலவகை நாடிகள் காணப்படுகின்றன. இவை அந்தந்தப் பெயர்கள் கொண்ட முனிவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றன. ஆனால் வடநாட்டில் இத்தகைய முனிவர்களின் பெயர்களினால் ஆன நாடிகளை விட சூர்ய நாடி, சந்திர நாடி, சுக்ல யஜூர் நாடி, சுக்ர நாடி, கெளமார நாடி, புத நாடி, பிரம்ம நாடி, துருவ நாடி, மார்கண்டேய நாடி, பிருகு நாடி, நாரத நாடி, கர்கர் நாடி, பராசரர் நாடி போன்றவை அதிகம் காணப்படுகின்றன.
ஒரு மனிதனின் பிறப்பு, வளர்ப்புமுதல் ஆயுள்வரையிலான பலன்களை விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவதே நாடி ஜோதிடம். நம் நாட்டில் பல்வேறு விதமான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரகநிலைகளின்படி, அவருக்கு, அவர்தம் எதிர்கால வாழ்க்கையினைப் பற்றிய பலாபலன்களைக் கூறுவது பொதுவாக நடைமுறையில் உள்ள ஜோதிட முறை. கைரேகை ஜோதிடம், எண்கணித ஜோதிடம், கிளி ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், முகக்குறி பார்த்துப் பலன் சொல்லுதல், மூச்சு ஜோதிடம், பிரமிடு ஜோதிடம், கோடங்கி பார்த்தல், சோழி பார்த்தல் எனப் பல்வேறு முறைகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் தொன்மையான ஓலைச்சுவடிகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கப்படும் ஜோதிடமே நாடி ஜோதிடம் என அழைக்கப்படுகிறது. ‘நாடி’ என்பதற்கு அணுகுதல், தேடுதல், விரும்புதல் எனப் பல பொருள்களுண்டு. ‘நாடி ஜோதிடம்’ என்பதற்கு ‘நாடி வந்து பார்க்கக் கூடிய ஜோதிடம்’ என்று பொருள் கொள்ளலாம். நாடி ஜோதிடம் பார்க்க விரும்பும் ஒருவரது கைப் பெருவிரல் ரேகையினைக் கொண்டு, பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் ஆராய்ந்து நாடி ஜோதிடர்கள் பலன்களைக் கூறுகின்றனர்.
உலக அளவில் நாடி ஜோதிடம்
பல நாடுகளிலும் பலவேறு வகையான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. சில நாடுகளில் ‘கப்பாலா’ (kabbalah) என்னும் ஓர் இரகசிய, பழமையான ஆருட முறை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. ‘டேரட்’ எனப்படும் சீட்டுகளைக் கலைத்துப் போட்டுப் பலன் கூறும் முறை சீனாவில் மிகப் பிரபலமானதாகும். இதன் மூலம் பல துல்லியமான பலன்கள் தெரிய வருகிறது என்பது அதைப் பார்த்த சிலரது கருத்தாக உள்ளது. திபெத்தில் வழங்கிவரும் Akashik Records என்பதும் கூட நாடிஜோதிடத்தின் சூட்சுமத்தை அடிப்படையாகக் கொண்டதே! சீன நாட்டிலும் இதே போன்ற ஒரு ஜோதிட முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் பெயர் (Iching) ‘யீசிங்.’ ‘யீ’ என்றால் ‘மாறுதல்’ என்பது பொருள். ‘சிங்’ என்றால் ‘புத்தகம்’ என்பது பொருள். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வில் நிகழக்கூடிய கடந்த, நிகழ்கால, எதிர்காலச் சம்பவங்களைப் பற்றி விவரிப்பதே இதன் தனித் தன்மையாகும்.
நாடி ஜோதிடம் உண்மையா?
நாடி ஜோதிடம் என்பது உண்மையா, பொய்யா? எதைக் கண்டு அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது? விரல் ரேகையின் மூலம் ஒருவரது எதிர்கால, கடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல் என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்? எதிர்காலத்தில் நடக்க இருப்பதை எப்படி அறிய முடிந்தது? அவர்கள் ஏன் அதனை ஓலைச்சுவடியில் எழுதி வைத்தனர்? அந்த ஓலைச்சுவடி எழுத்துக்களை நாடி ஜோதிடர்களைத் தவிர மற்றவர்களால் ஏன் படிக்க இயலவில்லை?
இப்படியெல்லாம் பல கேள்விகள் நமக்குத் தோன்றத்தான் செய்கின்றன. ஆனால், அதற்கான விடைகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. காரணம், நாடி ஜோதிடர்கள் அவற்றைத் தொழில் ரகசியமாகவும், மறை பொருளாகவும் வைத்துள்ளனர். சீடர்களாகப் பயிற்சியில் சேரும்போதே இவ்வகை ரகசியங்களை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டேன் என இறைவன், குரு, அகத்தியர் போன்ற சித்தர்கள் திருவுரு முன் சத்தியம் செய்து உறுதி ஏற்கின்றனர். அதனால்தான் நம்மால் இவற்றின் ரகசியங்களை முழுமையாக அறிய முடிவதில்லை.
அதேசமயம் நாடி ஜோதிடம் பலிக்காதது போல் நாடி ஜோதிடம் குறிப்பிட்டபடி பலருக்கும் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவேதான் நாடி ஜோதிடம் உண்மையா, பொய்யா என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. இதன் உண்மைத் தன்மையை அறிய பல்வேறு ஆய்வு முறைகள் தேவையாக இருக்கின்றன. ஒரே நபருக்குப் பல்வேறு இடங்களில், பல்வேறு ஆண்டுகால இடைவெளியில் பல்வேறு முறை நாடி ஜோதிடம் பார்த்தால்தான் அதன் உண்மைத் தன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஆனால், அது பெரும் செலவு பிடிக்கும் விஷயமுமாகும்.
காண்டங்கள்
நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு காண்டங்கள் உதவியாக இருக்கின்றன. காண்டங்கள் என்றால் உட்பிரிவுகள் என்பது பொருள். நாடியில் மொத்தம் பன்னிரண்டு காண்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் எதிர்காலப் பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஆனால் அவற்றை அறிய, முதலில், முதல் காண்டமான பொதுக்காண்டத்தினைப் பார்க்க வேண்டும். பொதுக்காண்டத்தில் ஒருவரைப் பற்றிய பொதுவான செய்திகள் காணப்படும். அதாவது ஒருவரது பெயர், தொழில் மற்றும் குடும்ப விபரங்கள் அதில் இருக்கும். விரிவான பலன்களை அறிய அதற்கென உள்ள தனித்தனிக் காண்டங்களைப் பார்க்கவேண்டும். இவ்வாறு மொத்தம் 12 காண்டங்கள் உள்ளன. அவை தவிர்த்து சாந்தி காண்டம், தீக்ஷை காண்டம், ஔஷத காண்டம், ஞான காண்டம், பிரசன்ன காண்டம் போன்றவையும் உள்ளன. துல்லிய காண்டம், அரசியல் காண்டம், எல்லைக் காண்டம் போன்றவையும் இருக்கின்றன. சூட்சுமமான விஷயங்களை, ரகசியங்களை, மறை உபதேசங்களை, இறையருள் மற்றும் ஞானம் பெறும் ரகசிய வழிமுறைகளை, சித்தர்களுடனான தொடர்புகளை, ஆலயம் அமைப்பது பற்றிய செய்திகளைப் பற்றிக் கூறும் சூட்சும காண்டமும் உள்ளது. இவையே மற்ற ஜோதிட முறைகளுக்கு இல்லாத நாடி ஜோதிடத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பு என்கின்றனர் நாடி ஜோதிடர்கள்.
நாடி ஜோதிடம் பார்க்கும் முறைகள்
நாடி ஜோதிடர்கள், தங்கள் நிலையத்தினை நாடி வரும் நபர்களுடைய கைப் பெருவிரல் ரேகையினை (ஆண் என்றால் வலது கைப்பெரு விரல் ரேகை; பெண்ணாக இருப்பின் இடது கைப்பெரு விரல் ரேகை), முதலில் ஒரு தாளில் பதிந்து கொள்கிறார்கள். பின்னர் அதற்கான ஓலையைத் தேடி எடுக்க முற்படுகின்றனர். அதற்கான நேரம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. சிலருக்கு ஓலை உடனே கிடைத்து விடும். சிலருக்கு ஓரிரு நாள் கூட ஆகலாம். மற்றும் சிலருக்கு ஓலை கையிருப்பில் இல்லை என்றால் வேறு நிலையத்திலிருந்துதான் தேடி எடுக்க வேண்டும் என்பதால் தாமதமாகவும் வாய்ப்பு உள்ளது.
ஓலைச்சுவடி கிடைத்ததும் நாடி வாசிப்பவர் ஜோதிடம் பார்க்க வந்திருப்பவரை அழைப்பார். அது அந்நபருக்குரிய ஓலைதானா என்பதனை அறியப் பல கேள்விகளைக் கேட்பார். நாடி பார்க்க வந்திருப்பவர் எந்த விபரங்களையும் (பெயர் உட்பட) முன்னதாகக் கூற வேண்டியதில்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘ஆம்’, அல்லது ‘இல்லை’ என்று மட்டும் பதில் கூறினால் போதும்.
பொதுவாகக் கீழ்க்கண்ட கேள்விகளைப் போன்ற பொதுவான கேள்விகளையே நாடிஜோதிடர்கள் கேட்பர். சரியான ஓலைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறு கேட்பதாகச் சொல்கின்றனர். ஜோதிடம் பார்க்க வந்தவர் அதற்கான சரியான பதிலைக் கூறுவதன் மூலம் அவருக்கான ஓலையினைக் கண்டறிந்து பலன் கூற முற்படுகின்றனர். ஓலைச்சுவடியில் உள்ள பாடல்களைப் படித்து விளக்கம் கூறுகின்றனர். அவற்றை ஏட்டில் எழுதியும், ஒலிப்பதிவு நாடா/குறுந்தகட்டில் பதிவு செய்தும் தருகின்றனர்.
பொதுவான கேள்விகள் சில. (இவை பொதுவான கேள்விகள் மட்டுமே. ஆளுக்கு ஆள், சுவடிக்குச் சுவடி இவ்வகைக் கேள்விகள் மாறுபடும்.)
(1) தங்களுடைய தகப்பனார் அரசாங்கப் பணியாளரா? (2) தங்கள் தாயாரின் பெயர் அம்பாளின் பெயரைக் குறிப்பதாக இருக்குமா? (3) தங்கள் உடன் பிறந்தவர்கள் நால்வருக்கு மேலா? (4) தங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா? (5) நீங்கள் சட்டம் அல்லது மருத்துவம் பயில்பவரா? (6) உங்களுக்குக் காதல் திருமணமா? (7) முதல் குழந்தை பெண்ணா? (8) தகப்பனாரின் பெயர் சிவனைக் குறிப்பதாக இருக்குமா? (9) மனைவி / கணவனின் பெயரில் மலரின் பெயர் வருமா? (10) உங்களுடைய பெயர் முருகக்கடவுளோடு தொடர்புடையதா? (11) உங்கள் பெயர் வல்லினத்தில் தான் ஆரம்பிக்குமா? (12) நீங்கள் வளர்பிறையில் பிறந்தவரா?
இது போன்ற சில கேள்விகளுக்கு நாடி பார்க்க வந்தவர் கூற வேண்டிய பதில் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பது மட்டுமே. இத்தகைய கேள்விகள் மூலம் சரியான மூல ஓலையைக் கண்டறிந்து அதன் மூலம் விரிவான, சரியான பலன்களைத் தாங்கள் கூறுவதாக நாடிஜோதிடர்கள் சொல்கின்றனர். ஆனால், இக்கேள்விகள் மூலம் ஒருவரைப் பற்றிய நுணுக்கமான விவரங்களை ரகசியமாகக் குறித்துக் கொண்டு, பின்னர் அவற்றைப் பாடலில் வந்ததுபோல் படித்துக் கூறுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மேல் உள்ளது.
ஒலைச்சுவடி பற்றிய விவரங்கள்
நாடி பற்றிக் கூறும் ஓலைச்சுவடியானது சுமார் பத்து முதல் பதினொன்று அங்குல நீளத்திலும், ஒன்று முதல் ஒன்றரை அங்குல அகலத்திலும் காணப்படுகின்றது. அந்த ஓலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, நன்றாகக் கட்டிவைக்கப்பட்டுளன. ஒவ்வொரு ஓலைக்கட்டிலும் சுமார் ஐம்பதுமுதல் நூறு ஓலைகள்வரை காணப்படுகின்றன. சிலவற்றில் அதைவிடக் குறைவாகவும் ஓலைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓலைச்சுவடிகளில் பின்புறமும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் காணப்படுவதில்லை. அவற்றில் உள்ள எழுத்துக்கள் கூட்டெழுத்துக்கள் என்கின்றனர் நாடி ஜோதிடர்கள். “ஒற்று நீங்கிய மிகவும் பழைய எழுத்துக்களாகக் காணப்படும் அவற்றைத் தங்களைப் போன்ற சிறப்புப்பயிற்சி பெற்றவர்களேயன்றி மற்றவர்களால் வாசிக்க இயலாது” என அவர்கள் கூறுகின்றனர். மேலும் எழுத்துக்கள் சுருக்க முறையில் குறியீடாக அதில் எழுதப்பட்டு இருக்கும் என்றும், அதனைப் பயிற்சி பெற்றுப் பல்லாண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் அனுபவம் வாய்ந்தவரே அன்றி மற்றவர்களால் புரிந்து கொள்ள இயலாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இக்கூற்றை சுவடியியல் வல்லுநர்கள் மறுக்கின்றனர். “இத்தகைய எழுத்துக்களே தமிழில் இல்லை. இவையெல்லாம் வெறும் கிறுக்கல்கள். ஏமாற்றுவேலை” என்பதே அவர்களில் பலரது கருத்தாக உள்ளது.
நாடி ஜோதிடம் – சில விளக்கங்கள்
சிறு குழந்தைகளுக்கும் இறந்த நபர்களுக்கும் நாடி ஜோதிடம் பார்க்கப்படுவதில்லை. ஜாதகமே இல்லாதவர்களுக்கும் நாடி மூலம் ஜாதகம் கணித்துப் பலன்கள் கூற முடியும். சாதாரண ஜோதிடத்தை விட நாடி ஜோதிடம் பார்க்க அதிகம் பொருள் செலவாகும். அதிகக் கால விரயமும் ஏற்படும். அதேசமயம் பலன்களும் துல்லியமாக இருக்கும். பரிகாரம் செய்தால்தான் முழுப்பலன் என்று நாடி ஜோதிடம் கூறுவதால், அதுபற்றி ஒரு தெளிவான பார்வையுடன், அதாவது, செலவு, கால விரயம், அலைச்சல் போன்றவை பற்றி முன்னமேயே தீர்மானித்துத் திட்டமிட்டுக் கொண்டு நாடி பார்க்கச் செல்வது நலம். கூடுமானவரை நாடி ஜோதிடர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதனைத் தவிர வேறு எதையும் கூறாமல் இருப்பது நலம். பொதுவாக, நாடி ஜோதிடம் பார்க்கும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். மேலும் அவர்களில் பெரும்பாலானோர் ஒருவருக்கு ஒருவர் உறவினராக இருக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இத்தொழிலைக் குலத்தொழிலாகச் செய்து வருகின்றனர். தங்களுக்குள்ளே நாடி ஜோதிட ஓலைச்சுவடிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றனர்.
பெருவிரல் ரேகையை மட்டும் கொண்டு எப்படி ஒருவருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டால், “அதெல்லாம் தொழில் ரகசியம். விரல் ரேகைகளில் சங்கு, வட்டம், கோணம், சக்கரம், பூபந்தம், கொடி, மணி, சிகிரி, சுழி, கீற்று என்று பல வகைகள் உண்டு. அவற்றில் ஒரு புள்ளி, இரு புள்ளி என்று பல உட்பிரிவுகள் உண்டு. முதலில் அவற்றைக் கண்டறிந்து அதன் மூலம் அந்த நபருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறோம்” என்கின்றனர் நாடி ஜோதிடர்கள்.
இவர்களுடைய சுவடிப் பரிமாற்றத் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரன் கோயில். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் உறவினர்கள் என்பதாலும், குருகுல முறைப்படி தொழிலைத் தொடர்பவர்கள் என்பதாலும், குலத்தொழில் என்பதாலும் சில நுணுக்கமான தகவல்களை, தங்களுக்குள் இரகசியமாகவே வைத்துள்ளனர். வெளிநபர்கள் யாரும் அதனை அறிவது மிக மிகக் கடினமாகும். உதாரணமாக விரல் ரேகைக்கு ஒரு நாடியில் வந்திருக்கும் பெயரானது மற்றொரு நாடியில் மாறுபடுவது ஏன் என வினவினால் சரியான விடை கிடைக்கவில்லை. கேட்டால் “தமிழ் நுணுக்கமான மொழி, ஒரே சொல்லுக்குப் பல பொருள் உண்டு, ஒவ்வொரு முனிவரும் அதனை ஒவ்வொரு மாதிரி குறிப்பிடுவர். அதன்படி மாறி இருக்கலாம் ஆனால் பலன் ஒன்றுதான்” என்று கூறுகின்றனர். ஆனால் இது பொருத்தமானதாக இல்லை.
நாடி ஜோதிடர்கள்
பெரும்பாலான நாடிஜோதிடர்கள் தூய்மையான வெண்மை நிற ஆடைகளையே உடுத்துகின்றனர். வாக்கு வன்மை பெற்றவராக இருக்கின்றனர். வருபவர்களின் சந்தேகங்களை நீக்க முனைபவராகவும் குறைகளைச் செவிமடுப்பவராகவும் உள்ளனர். இறைநாட்டம், ஒழுக்கம், பக்தி, பணிவு, திறமை கொண்ட இவர்கள், குருவினிடத்தே தீட்சை பெற்ற பின்னரே இப்பணியில் ஈடுபடுகின்றனர். பல வருடங்கள் குருகுல வாசம் இருந்து நாடி பற்றிய விவரங்கள், நுணுக்கங்கள், சூட்சுமங்களை விரிவாக அறிந்து, அனுபவ அறிவுடனும் குருவின் ஆசியுடனும் அனுமதியுடனும் இப்பணியில் ஈடுபடுவதாகச் சொல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு ஜோதிடம் முழுமையாகத் தெரியும் என்றும், தமிழில் பாடல் எழுதும் புலமையும் உண்டு என்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்டே, பல்வேறு கேள்விகள் கேட்டு அதனைச் ஓலைச்சுவடியில் வந்தது போல் பாடலாக எழுதித் தந்து ஏமாற்றுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
நன்கு படித்தவர்களும் கூட நாடி ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சான்றாக டாக்டர், பொறியியல் பட்டம், பட்டயம் பெற்றுள்ள சிலரும் வைத்தீஸ்வரன் கோவிலிலும், சென்னையிலும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதைக் கூறலாம். அவ்வப்பொழுது மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டிற்கும் இவர்களைப் போன்றவர்கள் சென்று பொருளீட்டி வருகின்றனர்.
போலி நாடி ஜோதிடர்கள்
அதே சமயம் நாடி ஜோதிடர்களில் பல போலி நாடிஜோதிடர்களும் உள்ளனர். உண்மையானவர்களை விட இவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். எனவே நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இல்லாவிட்டால் ஏமாற்றம் என்பது தவிர்க்க முடியாததாகி விடும். ‘உங்கள் சார்பாக நாங்களே அனைத்துப் பரிகாரங்களையும் செய்து விடுகின்றோம், நீங்கள் பணம் மட்டும் கொடுத்தால் போதும்’ என்று கூறுபவர்களிடம் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் ‘பரிகாரங்களைச் செய்யும் பொழுது தொடர்புடையவர் உறுதியாக அதில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு கலந்து கொள்வதன் மூலம்தான் அவர்கள் தம் பாவங்கள் முழுமையாக நீங்குகின்றன’ என்பதே மூத்த ஜோதிடர்கள் பலரது கருத்தாக உள்ளது. போலி நாடி ஜோதிடர்கள் பல்வேறு நுணுக்கமான முறைகளைக் கையாள்வதால் நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
நாடி ஜோதிட நிலையங்கள்
தமிழகத்தின் பல இடங்களில் அகத்தியர், வசிஷ்டர், பிருகு, சுகர், சப்தரிஷி, கௌசிகர் எனப் பல முனிவர்களின் பெயரில் நாடி ஜோதிட நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தலைமைப்பீடமாகத் திகழ்வது வைத்தீஸ்வரன் கோவில். ஆனால்,
இங்கு தரகர்களின் ஆதிக்கம் அதிகம். ஊருக்குப் புதியவர்கள் வந்தாலோ, பேருந்தில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாலோ உடனே தரகர்கள் வருவோரை அணுகி, நாடி ஜோதிடம் பார்ப்பது குறித்துப் பேரம் பேச ஆரம்பிக்கின்றனர். குறிப்பிட்ட நாடி ஜோதிடர் பெயரைச் சொல்லி அவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால், “அவர் இல்லை ஊருக்குப் போயிருக்கிறார்” என்றோ, “அவர் மகன்தான் இவர்” என்றோ அல்லது “அவர் உறவினர்தான் இவர்” என்றோ அல்லது யாரோ வேறு ஒரு நபரை அறிமுகப்படுத்தி “நீங்கள் குறிப்பிட்டவர்தான் இவர்” என்றோ கூறி ஏமாற்றுகின்றனர். வருபவர்களை வழிமறித்து, மனம் குளிரப்பேசி, சில குறிப்பிட்ட நாடி நிலையங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று விட்டுவிடுகின்றனர். இவ்வாறு மக்களைக் கூட்டி வருவதற்கு இவ்வகைத் தரகர்கள், வரும் நபரின் தராதரத்தைப் பொறுத்து, நபர் ஒருவருக்குத் தங்கள் கமிஷன் கட்டணமாக, ரூபாய் 50/- முதல் 100/- வரை நாடிஜோதிடர்களிடமிருந்து வாங்கிக் கொள்கின்றனர். ஆகவே இது போன்ற இடங்களுக்கு நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பல நாடி நிலையங்களுக்குச் சென்னை, கோவை மட்டுமல்லாது இந்தியா முழுக்கக் கிளைகள் உள்ளன. இங்கு பயிற்சி பெற்றவர்கள் பெங்களூர், டில்லி, புனே போன்ற வெளிமாநிலங்களில் நாடிஜோதிட நிலையம் அமைத்துத் தொழில் செய்து வருகின்றனர். சான்றாக சென்னையில் உள்ள ஒரு நாடிஜோதிட நிலையத்திற்கு மும்பையில் கிளை உள்ளது. தாம்பரத்தில் உள்ள ஒரு நாடிஜோதிட நிலையத்திற்கும் மும்பையில் கிளை உள்ளது.
நாடி ஜோதிடப் பாடலின் அமைப்பு
நாடியில் வரும் பாடலானது ‘அந்தாதி’ என்னும் இலக்கிய அமைப்பில் உள்ளது. ‘அந்தாதி’ என்பது ‘அந்தம் + ஆதி’ என விரியும். அதாவது முன் நின்ற பாடலின் ஈற்றசையோ, எழுத்தோ, சீரோ, அடியோ, தளையோ, தொடையோ வரும் பாடலின் முதலாவதாக வைத்துப் பாடப்படுவதே அந்தாதியாகும். சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாக ‘அந்தாதி’ விளங்குகிறது. தமிழில் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி, பொன் வண்ணத்தந்தாதி, அற்புதத் திருவந்தாதி, எனப் பல அந்தாதி நூல்கள் உள்ளன.
சான்றாக ஒருவரின் நாடி ஜோதிடக் குறிப்பில் வந்த ‘அந்தாதி’ அமைப்பில் இருக்கும் பாடல்.
காலமதில் ஒளடதபதி தலைவன் தோற்றம்
காளையிவன் அறிவு முதல் திறமை யூகம்
மேலான அத்தன் சுகம் அன்னை வீவு
மேதினியின் ஈர்வேபடல் தந்தையர்க்கு
தந்தையர்க்கு முன்குடியாள் புதல்வனாகும்
தானிவர்க்கு ஆண்துணை ஓர் அரிவை இல்லை
துணைஆணும் வேறு குல மன்றல் தொண்டு
இயம்ப அது வாகனத்தின் ஓட்டம் தன்னில்
ஆனால், “இவ்வகைப் பாடல்கள் ‘அந்தாதி’ அமைப்பில் இருந்தாலும் இவை அகத்தியர் போன்ற முனிவர்களாலோ, சித்தர்களாலோ இயற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை” என்பதும், “சங்ககாலத்தில் ‘ஆசிரியப்பா’வே ஏற்றம் பெற்றிருந்ததால், பிற்காலத்தில் தோன்றிய ‘வெண்பா’ யாப்பில் இம்முனிவர்கள் பாடியிருக்க வாய்ப்பே இல்லை” என்பதும் தமிழார்வலர்களின் கருத்தாக உள்ளது. இவற்றிற்கு விளக்கம் கூறும் நாடி ஜோதிடர்கள், “அக்காலத்தில் இருந்த ஓலைச்சுவடிகளை அப்படியே பயன்படுத்துவதில்லை. அவற்றைப் பிரதியெடுத்தும், படி ஓலை தயாரித்துமே பயன்படுத்துகிறோம். அப்படி பிரதியெடுக்கும்போது பிழை நேர்ந்திருக்கலாம்” என்கின்றனர். ஆனால், இக்கருத்து ஏற்கக் கூடியதாக இல்லை.
அகத்தியர் போன்றவர்களால் எழுதப்பட்ட இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் இவை என்பது நாடி ஜோதிடர்கள் கருத்து. ஆனால் அதில் பயின்று வரும் பாடல் வகையான அந்தாதி முறை ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இலக்கியத்தில் ஏற்றம் பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. (தமிழில் முதலில் தோன்றிய அந்தாதி நூலாக, காரைக்காலம்மையாரின் அற்புதத்திருவந்தாதி கருதப்படுகிறது. இது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியதாக இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.)
நாடி ஜோதிடம் சில சந்தேக விளக்கங்கள்
சுவடியியல் அறிஞர்களிடம் நாடி ஜோதிடம் பற்றிக் கேட்டால், “இவையெல்லாம் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. முதலில் பனை ஓலைகளைக் கொண்டு, ஓலைகளைத் தயாரித்து, அவற்றை நெல் ஆவியில் காட்டி பழங்கால ஓலைச்சுவடிகள் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். அவற்றில் எதையாவது கிறுக்கி, இது பழங்காலத் தமிழ்; எங்களால் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுகின்றனர். அவற்றில் இருப்பது வட்டெழுத்தும் இல்லை. கூட்டெழுத்தும் இல்லை. கிரந்தமும் கிடையாது. எல்லாம் சும்மா ஏமாற்று வேலை” என்கின்றனர்.
ஆனால் நாடி ஜோதிடர்களோ, “இவையெல்லாம் பழங்காலத் தமிழ் எழுத்துக்கள்தான். எங்களைப் போன்று அதைப் படிப்பதற்கென்றே, தனியாக குரு மூலம் பயிற்சி பெற்றவர்களால் அன்றி மற்றவர்களால் அதைப் படித்து பொருள் காண முடியாது” என்கின்றனர். மேலும் “ஒரு வித மூலிகையை உள்ளடக்கி, சில ரகசிய மந்திரங்களை உச்சாடனம் செய்து, தனிமையில் அமர்ந்து தவம் செய்தால், அந்த எழுத்துக்களைப் படிக்கும் ஆற்றலும், வாக்குப் பலிதமும் உண்டாகும்” என்று இவர்கள் கூறுவது நம்பக் கூடியதாக இல்லை.
நாடி ஜோதிட ஓலைச் சுவடிகளின் தொன்மை, எழுத்துக்களின் தன்மை, அதன் உண்மையான காலம் பற்றி அறிய, கார்பன் பரிசோதனை (Carbon Treatment) செய்தால் போதும். ஆனால் அதற்கு நாடி ஜோதிடர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. அதுமட்டுமல்ல; ஏதாவது ஒரு ஓலைச்சுவடியை வைத்துக் கொண்டு (அது ராம நாடக கீர்த்தனையாகவும் இருக்கலாம். மருத்துவச் சுவடியாகவும் இருக்கலாம். அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்) அது நாடி ஜோதிட ஓலைச்சுவடி என்று கூறி, அதைப் படித்துப் பார்த்துப் பலன் எழுதுவது போல மக்களை ஏமாற்றியும் வருகின்றனர். (பார்க்க படங்கள் : 2, 3) அதுவும் மொழி தெரியாத வெளிநாட்டுக்காரர்கள், வட இந்தியர்கள் என்றால் ஏமாற்றுவது இன்னமும் எளிது. “உங்கள் பெயர் இதோ இருக்கிறது பாருங்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் முனிவர் உங்களைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். நீங்கள் அதிர்ஷ்டசாலி; புண்ணியவான்; முனிவரின் அருள் பெற்றவர் “ என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி, ஓலைச்சுவடியைக் காட்டிப் பணம் பறிக்கின்றனர். இவர்களில் சிலர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட சம்பவங்களும், சிலர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளும் கூட இருக்கின்றன.
நாடி ஜோதிடம் என்பது உண்மையா பொய்யா, ‘பொய்’ என்றால் ஏன் பொய்யாகிறது, அதற்குக் காரணம் என்ன, சிலருக்கு மட்டும் ஏன் நாடியில் வந்தது போலவே பலன்கள் நடக்கின்றன, அதற்கான சூட்சும காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது பற்றியெல்லாம் மிக விரிவாக ஆராய வேண்டியிருக்கிறது. “நாடி ஜோதிடத்தில் ‘யக்ஷிணி’ போன்ற சில தேவதைகளின் பயன்பாடு உண்டு” என்ற கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் மிக விரிவாக, பலர் ஒன்றிணைந்து, பல்வேறு கால கட்டங்களில் பல முறை மீள மீளச் செய்ய வேண்டிய ஆய்வுகளாகும். என்றேனும் ஒருநாள் எதிர்காலத்தில் இது சாத்தியமாகக் கூடும் என்று நம்புவோம். அதுவரை ‘உண்மை’ என்றும் ‘பொய்’ என்றும் இரு வேறு கருத்துக்களுடன் இது புரியாத புதிராகவே நீடிக்கும்.
அந்தக் கால விளம்பரங்கள்… | அரவிந்த் சுவாமிநாதன்
மருந்து ‘மன்மதக் குளிகை.’ ‘இது
தாது புஷ்டியைக் கொடுப்பதில் சிறந்தது’ என்கிறது
இந்த விளம்பரம்.
மருந்தை அந்த ஆணுக்குப் பரிந்துரைப்பது சக நண்பனோ அல்லது மருத்துவரோ இல்லை. அவன்
மனைவி. பெண்
சுதந்திரம் உச்சத்தில் இருப்பதாக நம்பப்படும் இன்றைக்குக் கூட இம்மாதிரி ‘தைரியமான’ விளம்பரங்கள் பத்திரிகைகளில் வருவதாகத் தெரியவில்லை. சரி, இதன்
விலை? அதிகமில்லை, 20 குளிகை ரூபாய் இரண்டுதான். அணுக வேண்டிய முகவரி : மலையப்பசாமி
வைத்தியசாலை, பழனி!
மட்டும்தானா? நிரந்தர தாதுபுஷ்டி டானிக் மருந்து, நரசிங்க
லேகிய தங்க பஸ்பம், ஒரிஜினல்
தங்கம் சேர்த்த நர்வினஸ் டானிக் மருந்து, ஜீவாம்ருதம், ஸண்டோஜன் (இது
உறுப்புகளுக்கு வலிமை தரும் உலோக ஆகாரம் என்கிறது விளம்பர வாசகம்) வெளிப்புறத்தில்
உபயோகிக்க கஸ்தூரி லினமெண்டேன், ஒருமுறை பரிக்ஷித்துப் பார்த்துவிட்டுப் பலன் இல்லை என்றால் ‘10000/-’
இனாம் தரத் தயார் என்று சொல்லும் தாது புஷ்டிக்கான ‘பீம – வீர்’ விளம்பரம், நடுத்திர
வயதினர் ‘வாலிப
வலுவு’ கொள்ளவும், மனைவி, ‘மீண்டும் 20 வயது இளைஞர் போலிருக்கிறீர்களே’ என்று ஆச்சரியப்படவும் கல்ஸானா (kALZANA) மாத்திரைகள் (இதனைப் பெண்களும் சாப்பிடலாமாம். சூதகக் கோளாறுகள் உள்ளிட்ட அனைத்தும் நீங்கி பெண் வலிவும், பொலிவும்
பெறுவாளாம்) என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதெல்லாம்
படிக்கப் படிக்க ஆண்களுக்கு ‘இது’ ஆதிகாலத்திலிருந்தே
பிரச்சனையாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. ஆனால், எனக்கு
மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது ‘கருங்குரங்கு ரஸாயன’ விளம்பரம்.
கழுத்தில் உள்ள ஒரு நரம்பை வயதாகித் தளர்ந்த ஒரு மனிதனின் கழுத்து நரம்புடன் சேர்த்தால் அவனுக்கு வாலிப உணர்ச்சியும், உடல் பலமும் உண்டாகுமாம். இது இந்தூர் மஹாராஜா அவர்களுக்குச் செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டுமிருக்கிறதாம். கருங்குரங்கின் ஜீவ உறுப்புக்களை மனிதனுடைய உறுப்புகளில் சேர்ப்பது டாக்டரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது என்கிறது விளம்பரம். சகல
வியாதிகளுக்கும் ஓர் கைகண்ட ஔஷதமாம் இது. அக்காலத்தில்
ஜீவ காருண்ய சங்கத்தார் எப்படி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது தெரியவில்லை.
சிருங்கார ரசம் பெருக்கும் விளம்பரங்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் கொசுவலை விளம்பரம், பட்டுப்
புடைவை விளம்பரம், பற்பொடி
விளம்பரம், இன்ஸ்யூரன்ஸ்
கம்பெனி விளம்பரம், பிராவிடண்ட்
ஃபண்ட் ஃபைனான்ஸ் விளம்பரம், கூந்தல்
ஆகார விளம்பரம், நரை
மயிர் நீக்கும் விளம்பரம், பெண்களின்
சூதகப் பிரச்சினைகளை நீக்கும் கெற்ப சஞ்சீவி எண்ணெய் விளம்பரம், நீலகிரி
காபிக் கொட்டை, சகல
வியாதிக்கும் மருந்தாகும் ‘மின்சார ரசம்’ (அப்படின்னா
என்னவாக இருக்கும்?) கேள்விகளுக்கு
பதில் எழுதி அனுப்பச் சொல்லும் ஜோதிட விளம்பரம், நினைத்ததை
நிறைவேற்றித் தரும் ‘மாந்த்ரீக
மோதிரம்’ (இதன்
மூலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லாம் தெரிந்து கொண்டு விடலாமாம். ஆவிகளுடனும்
பேச முடியுமாம்; ஏன் புதையல் எங்கே இருக்கிறது என்பதைக் கூட இதன் மூலம் கண்டறிந்து விட முடியுமாம்) என்று பல விளம்பரங்கள் அக்காலச் சமூக நிலையைக் காட்டுகின்றன.
விளம்பர வாசகங்களில் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமேயில்லை. ரோமங்களை நீக்கும் ஜனானா கிரீம், வேண்டா
ரோமத்தை உடனே நீக்கி சருமத்தை மிருதுவாக்கிப் பாதுகாக்கின்றதாம். பெரிய குடும்பங்களால் உபயோகிக்கப்படும் அதன் பெரிய ட்யூப் விலை 12 அணா. பாட்டிலிலும் கிடைத்திருக்கிறது, விலை 14 அணாதான். சிடுசிடுவென்றிருக்கும் மனைவியை ‘குளு’ ‘குளு’ என்று
மாற்ற தினமும் அவளுக்கு ‘குவேக்கர்
ஓட்ஸ்’ கொடுக்குமாறு
பரிந்துரைக்கிறது ஒரு விளம்பரம். ‘கோடைக்
காலத்தில் மனைவி அடுப்படியில் கஷ்டப்பட வேண்டாம். அவளுக்கு
ருக்மணி குக்கர் வாங்கிக் கொடுங்கள். ஒரு
மணி நேரத்தில் சாதமும் ஐந்துவித பதார்த்தங்களும் செய்யலாம்’ என்கிறது
இன்னொரு விளம்பரம்.
(1935ல் வெளிவந்த இப்படம்தான் தமிழில் வெளியான முதல் சமூகப் படம்; வடுவூர்
துரைசாமி ஐயங்காரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில்தான் என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமாயிருக்கிறார்) ஆயிரம் தலைவாங்கி அபூர்வசிந்தாமணி, சந்திரலேகா, கண்ணகி, பாலாமணி (இதுவும் வடுவூராரின் பிரபல நாவல்தான்; பாரதிதாசன்
முதன்முதலில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்
எழுதி வெளியான படம்) என்று
பெண்களை மையப்படுத்தி வெளியான திரைப்படங்களுக்குக் குறைவே இல்லை. இப்படங்களில்
குறிப்பிடத்தகுந்த ஒரு படம் ‘சிந்தாமணி.’ எம்.கே. தியாகராஜ
பாகவதரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது. 1937ல்
வெளியாகி 52 வாரங்கள்
தொடர்ந்து ஓடி, தமிழில்
அதுவரை வெளியான படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெயரைப் பெற்றது இப்படம். (மூன்று
தீபாவளிகள் கண்ட ‘ஹரிதாஸ்’ பின்னர் 1944ல்தான் வெளியானது.) சிந்தாமணி
படத்தின் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு மதுரையில் ராயல் டாக்கீசார் கட்டிய திரையரங்கம் தான் ‘சிந்தாமணி’ தியேட்டர்.
படத்தின் பாடல்களை கிராமபோன் ரெக்கார்டாக (இசைத் தட்டாக) வெளியிடத்
தயாரிப்பாளர்கள் கருதினார்கள். பாகவதரை அணுகினார்கள். ஆனால், பாகவதருக்குத்
தயக்கம். காரணம், அதற்கு முன்னால் படங்கள் வெளியான பின்னர்தான் பாடல்கள் கிராமபோன் ரெகார்டாக வெளிவந்தன. ஆனால், இப்போது படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும்போதே ரெகார்ட் வந்தால், பலரும்
அதை மட்டும் வாங்கிக் கேட்டுவிட்டு, படத்தைப் பார்க்காமல் இருந்துவிடுவார்களோ என்று அவர் நினைத்தார். மேலும் அதற்கு முன்னால் அவரது பாடல்கள் தொகுப்பை வேறு ஒரு நிறுவனம்தான் வெளியிட்டிருந்தது. இது புதிய நிறுவனம். அதனால்
கிராமபோன் ரெகார்ட் வெளிவர அவர் ஒத்துழைக்கவில்லை.
தயாரிப்பாளர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். படத்தில் நாயகி அஸ்வத்தம்மா, பாகவதருடன் பாடிய டூயட் பாட்டான ‘மாயப்பிரபஞ்சத்தில் ஆனந்தம்’ என்ற
பாடலை கர்நாடக இசை வல்லுநரும், இசையமைப்பாளரும், பாடகருமான துறையூர் ராஜகோபால் சர்மாவை வைத்துப் பதிவு செய்து வெளியிட்டு விட்டனர். இதற்கு
அவர் குரல் பாகவதரின் குரலை ஒத்திருந்ததாக அவர்கள் கருதியதே காரணம். (ராஜகோபால்
சர்மா தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி – ஜி.என்.பி. நடித்த ‘சகுந்தலை’ படத்தின்
இசையமைப்பாளர்.) கூடவே பாடியது யார் என்று விளம்பரம் செய்யாமல் ‘சிந்தாமணி படப்பாடல்’ என்று
மட்டுமே தயாரிப்பாளர்கள் இசைத்தட்டில் குறிப்பிட்டிருந்தார்கள்.
தட்டும் நிறைய விற்பனையாகியது. ஆனால் மக்களுக்கு உண்மை புரிந்துவிட்டது. கண்டனம் எழுந்தது. அதனால்
வேறு வழியில்லாமல் அவர்கள் மீண்டும் பாகவதரை அணுகி, சமாதானம்
செய்து, அவர்
கேட்ட தொகைக்கு ஒப்புக்கொண்டு மீண்டும் படத்தின் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டனர். ஆனால், ‘மாயப்பிரபஞ்சத்தில்..’ பாடலை மட்டும் மீண்டும் பாட பாகவதர் சம்மதிக்கவில்லை. ‘ஏற்கெனவே அந்த இசைத்தட்டுதான் வெளிவந்து விட்டதே!. மீண்டும்
எதற்காகப் புதிதாகப் பாட வேண்டும்?’ என்று
கூறி, அந்தப்
பாடலை மட்டும் பாட மறுத்து விட்டார். ஆக, படத்தில் தியாகராஜ பாகவதர் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல், இசைத்தட்டில்
ராஜகோபால் சர்மாவின் குரலில் ஒலித்தது. அந்த
வகையில் தமிழின் முதல் பின்னணிப் பாடகர் என்று துறையூர் ராஜகோபால் சர்மாவைச் சொல்லலாம்.
கால நகைச்சுவை நடிகை டி.ஏ.மதுரம் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார் என்பது ‘பாண்டுரங்கன் அல்லது ஜே ஜே விட்டல்’ என்ற
பட விளம்பரத்தின் மூலம் தெரிய வருகிறது. நாயகனாக
நடித்திருப்பவர் மஹாராஜபுரம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. அக்காலத்தின் பிரபல இசையறிஞர் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சகோதரர் இவர். உடன் ‘காளி’என்.ரத்னம், பி.எஸ்.சிவபாக்கியம், எம்.எஸ்.சரோஜா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதே கிருஷ்ணமூர்த்தி நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படம் ரத்னாவளி. இதில்தான்
டி.ஏ.மதுரம் அறிமுகமானார். (மஹாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தியும் கர்நாடக இசை வித்வான் ஜி.என்.பாலசுப்ரமணியமும் இணைந்து நடித்த படம் பாமா விஜயம். இந்தப்
படத்தில் கிருஷ்ணமூர்த்திக்குக் கிருஷ்ணன் வேடம். ஜி.என்.பி. நாரதர். துவாபரயுகத்துக்
கிருஷ்ணன், கலியுகத்தில், 18ம் நூற்றாண்டில் தோன்றிய தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனையைப் படத்தில் பாடுகிறார். இது ஒரு முரண் என்றால் படத்தின் இறுதிக் காட்சியில் கிருஷ்ணன், பாமா, ருக்மணி, நாரதர்
எல்லாரும் ‘ஜன கண மன’ பாடலைப்
பாடுகிறார்கள். முதன்முதலில் ஒரு தமிழ்ப் படத்தில் தேசியகீதம் ஒலித்தது என்றால் அது இந்தப் படத்தில்தான். இந்தக் காட்சிக்கு அந்தக் காலத்தில் அவ்வளவு வரவேற்பு. காரணம், சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த 1934ல் இப்படம் வெளியானதுதான் – தகவல்: ராண்டார்
கை.)
காலத் திரைப்பட விளம்பரங்களிலிருந்தும் சுவையான பல செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக ‘பாலநாகம்மா’ என்ற படம் 25 வாரங்களுக்கும்
மேல் ஓடியிருக்கிறது. தலைப்பு தமிழில் இருந்தாலும் உண்மையில் இது தமிழ்ப்படமல்ல; தெலுங்குப்படம். இது ஜெமினியின் இரண்டாவது தயாரிப்பும் கூட. (முதல்
தயாரிப்பு: மதனகாமராஜன்) ஒரு தெலுங்குப்படம், தமிழ்நாட்டில் 25 வாரம் ஓடியிருக்கிறது என்பது உண்மையிலேயே சாதனைதான். (நீண்ட
வருடங்களுக்குப் பிறகு 1978ல் வெளிவந்த ‘மரோசரித்ரா’ அந்தச் சாதனையை முறியடித்தது.)
படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது தற்போதைய வழக்கம். ஆனால், அக்காலத்தில் சில தமிழ்ப் படங்களுக்குப் பிற மொழிகளில் பெயர் வைத்திருக்கின்றனர். அதற்கு நல்ல வரவேற்பும் இருந்திருக்கிறது. சான்று ‘சம்சார நௌகா’ என்று
பெயரிடப்பட்டிருக்கும் ஒரு படம். நடித்திருப்பவர்கள், டி.ஆர்.ராமச்சந்திரன், பி.ஆர்.பந்துலு, பிரேமாவதி, சூர்ய குமாரி உள்ளிட்டோர். இயக்கம்: ஹெ.எல்.என்.சிம்ஹா. இவர்
கன்னடத் திரைப்பட உலகின் புகழ்பெற்ற இயக்குநர். முதலில்
கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்று பின்னர் தமிழுக்கு 1948ல் வெளிவந்தது இப்படம். கன்னடத்தில்
வெளியான முதல் சமூகப் படம் சம்சாரா நௌகா (கன்னடத்தில்
நௌகே) தான். அந்தக் காலத்திலேயே மகாத்மா காந்தி பற்றி 12 ரீல்
கொண்ட ஒரு தமிழ்ப் படம் வெளியாகியிருக்கிறது என்பதும் ஓர் ஆச்சரியமான செய்திதான்.
விளம்பரப்படுத்தும் வகையில் படம் பார்ப்பவர்களுக்குப் பரிசுகளை அறிவிக்கும் உத்திகளை அந்தக் காலத்திலும் பயன்படுத்தியுள்ளனர். படத்தின் சிறந்த பாடல்களை வரிசைப்படுத்தி பரிசுகளை வெல்லுங்கள் என்கிறது ’ஜெமினி’யின் ‘நந்தனார்’ பட விளம்பரம். இக்காலத்தில்
பழைய படங்களின் தலைப்புகளில் புதிய படங்கள் வெளியாவது போல் அந்தக் காலத்திலும் ‘நந்தனார்’ என்னும்
இதே பெயரில் 1933லும், 1935லும் படங்கள் வெளியாகியுள்ளன. 1935ல் வெளியான ‘பக்த
நந்தனார்’ படத்தில்
இசைக்கலைஞர் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் வேதியராக நடித்திருந்தார். (நந்தனார் : கே.பி.சுந்தராம்பாள்.) வித்வான் விஸ்வநாத ஐயர் நடித்த ஒரே படம் இதுதான்.
எம்.ஜி.ஆரை வைத்துப் படம் தயாரிக்கப் பலர் முன் வந்திருக்கின்றனர். ஆனால், எல்லாருக்கும்
அதில் வெற்றி கிடைத்ததில்லை. எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்து, அவரை
வைத்துப் படம் தயாரிக்க முன்வந்து, அதில்
தோல்வி அடைந்தவர்களுள் ஒருவர் கண்ணதாசன். அந்தப்
படம் ‘ஊமையன் கோட்டை.’ ஊமைத்துரையின்
வரலாற்றை அடிப்படையாக வைத்து ‘ஊமையன் கோட்டை’ என்ற
நாவலை எழுதியிருந்தார் கண்ணதாசன். நாவலைக்
கூட திரைப்படத்திற்கு ஏற்றவாறு சுவாரஸ்யமான அம்சங்கள் சேர்த்துத்தான் எழுதியிருந்தார். அதனைப் படமாக எடுக்கலாம் என்று தீர்மானித்தார். படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிப்பது என்று முடிவானது. பூஜை
போடப்பட்டு சிலநாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. உண்மையைச்
சொல்லப் போனால் ‘மாலையிட்ட மங்கை’க்கு
முன்பாக முதன்முதலில் கண்ணதாசனால் தயாரிக்கப்பட்ட படம் இதுதான். ஒருவிதத்தில்
இது கண்ணதாசனின் முதல் படம் மட்டுமல்ல; கனவுப்
படமும் கூட. ஆனால், சிலகாரணங்களால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனது. கண்ணதாசன்
கடனாளி ஆனார். ஆனாலும்
மனம் தளராத அவர் அடுத்த ஆண்டே ‘மாலையிட்ட மங்கை’ படத்தை
எடுத்து வெளியிட்டார். தொடர்ந்து தனது கனவுப் படமான ஊமையன் கோட்டையின் நாயகன் ‘ஊமைத்துரை’ பாத்திரத்தை
முதன்மைப் பாத்திரமாக்கி, எஸ்.எஸ்.ராஜேந்திரனை நாயகனாக வைத்து ‘சிவகங்கைச் சீமை’ படத்தைத்
தந்தார். ‘பாரி
மகள்’ என்ற
படத்தின் தயாரிப்பிலும் கண்ணதாசன் ஈடுபட்டிருந்தார். ஆனால், அது
வெளிவந்ததாகத் தெரியவில்லை.
விளம்பரங்கள்தான் என்றில்லை. கிராமபோன்
இசைத் தட்டு விளம்பரங்களும்கூடப் பல சுவையான செய்திகளைச் சொல்கின்றன. வஸந்தகோகிலம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள் போன்ற இன்றைக்கும் புகழ்பெற்றவர்கள்தான் என்றில்லை; தர்மாம்பாள், கொச்சம்மாள் (ஹரிகதா), குமாரி
மாசிலாமணி (பெண்தான்!), எம்.எஸ்.விஜயாள், சுந்தர
காமக்ஷி, தாயம்மாள், நஞ்சன் கூடு நாகரத்னம்மாள், மிஸ். ரத்தினாம்பாள், மிஸ் மனோரஞ்சிதம், மிஸ்.கண்ணாமணி, மிஸ். தேவநாயகி, மிஸ். லோகநாயகி, மிஸ்.ஜயலஷ்மி
போன்ற பல பெண் வித்வாம்சினிகளின் பாடல்களும் கிராமபோன் இசைத்தட்டுக்களாக வெளியாகியுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. இக்காலத்தை
விட அக்காலத்தில் பெண் பாடகிகள் அதிகமாக இருந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது அதிலும் சுந்தர காமாக்ஷி எம்.எஸ்.சுப்புலட்சுமியை விடப் புகழ்பெற்றவராய் இருந்திருக்கிறார். ‘பிராட்காஸ்ட் ரத்தினம்’ என்று
போற்றப்பட்டிருக்கிறார்.
சுப்பிரமணிய ஐயர், மதுரை
மணி ஐயர், செம்பை
வைத்தியநாத பாகவதர், சித்தூர்
சுப்பிரமணியப் பிள்ளை என இன்றைக்கும் அறியப்படும் ஆண் சங்கீத வித்வான்களைப் போலவே, இன்றும்
நாம் அறியாத டி.ஏ.கே.ஸ்வாமி
பாகவதர், சௌரிராஜ
ஐயங்கார், இரத்தின
பத்தர், எஸ்.எஸ்.ராஜப்பா, பபூன் ஷண்முகம், கே.சுப்ரமணியம், விளாத்திகுளம் சுவாமிகள, மகம்மத்
பீர், எஸ்.வி. சுப்பய்யா
பாகவதர் எனப் பலரும் அக்காலத்தில் புகழ்பெற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். அவர்கள் பாடி கிராமபோன் இசைத்தட்டுக்களும் வெளியாகியிருக்கின்றன. கர்நாடக சங்கீதம், ஹரிகதை, நாதஸ்வரம், நாடகப்
பாடல்கள்தான் என்றில்லாமல் ‘பாண்டு வாத்தியம்’, ‘ஹார்மோனியம்’ போன்றவையும் தனித்தனி கிராமபோன் ரிகார்டாக வெளிவந்திருக்கும் செய்திகள் ஆச்சரியமூட்டுகின்றன.
விளம்பரங்களுக்கும் குறைவில்லை. பாய்ஸ் கம்பெனி, ஸ்ரீராம
பாலகான வினோத சபா, மதுரை
தேவி பாலவிநோத சங்கீத சபை (நவாப்
டி.எஸ். ராஜமாணிக்கத்தின் நாடகக்குழு இது) என
பல நாடகக்குழுக்களின் விளம்பரங்கள் மூலம் அக்காலத்தில் நாடகங்களுக்கு இருந்த வரவேற்பை அறிந்து கொள்ள முடிகிறது.
நூல்கள் பற்றிய பாரதி பிரசுர விளம்பரம், ‘பெண்களுக்காகப்
பெண்கள் பலர் எழுதிய, கதைகளும், கட்டுரைகளும், பாட்டுக்களும் நிறைந்து விளங்கும் ஸ்தீரிகள் சித்திர மாதப் பத்திரிகை. ஒவ்வொரு
ஸ்திரீயும் வாசித்து இன்புற வேண்டியது – கிரஹலக்ஷ்மி’, என்னும் பெண்கள் இதழுக்கான விளம்பரம், பாரதி
புதுச்சேரியில் இருந்தபோது எழுதிய, நீலகண்ட
பிரம்மச்சாரி ஆசிரியராக இருந்த ‘சூரியோதயம்’ இதழ் விளம்பரம் போன்றவை ஆச்சரியப்படுத்துகின்றன.
பாக்கெட் நாவல், க்ரைம்
நாவல் போல் அந்தக் காலத்தில் துப்பறியும் நாவல்களாக எழுதித் தள்ளியவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். நாவல்
வெளியீட்டிற்காக அவர் ஆரம்பித்து நடத்திய இதழின் பெயர் ‘நவரசமாலிகா’ என்பதை ஒரு விளம்பரத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ’மனோரஞ்சனி’ என்னும் மாத இதழ் மூலமும் வடுவூரார் துப்பறியும் நாவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரே
முகவரியில் இருந்து ஆனால், வெவ்வேறு
நிறுவனப் பெயர்களில் அவர் செயல்பட்டு வந்ததையும் விளம்பரங்கள் காட்டுகின்றன. அந்தக் கால ‘நாவல் ராணி’யான
வை.மு.கோதைநாயகியின் நாவல்கள் பட்டியல் வியப்பைத் தருகிறது. இசை
வளர்ப்பதற்காக 1933 முதல் வெளிவந்த இதழ் ‘ஸங்கீத அபிமானி’ என்பது. அக்காலத்தின் பிரபல ஆடிட்டர்களுள் ஒருவரான வைத்தியநாத ஐயர் இதன் ஆசிரியராக இருந்தார். . கொக்–சாஸ்திரம் என்பது எதைப் பற்றிய விளம்பரம் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ’படுக்கையறைப் படங்கள்’ (புத்தகம்தான்) விளம்பரங்களும்கூடச் சில இதழ்களில் இடம் பெற்றிருக்கின்றன.
டெவலப்பர்’ என்னும்
உயர்ந்த ரப்பரினால் ஆன தேகப்பயிற்சி உபகரணம். 12 வயதுமுதல் 70 வயதுவரை
யாவரும் உபயோகிக்கலாம் என்கிறது இவ்விளம்பரம். கடிதம் எழுதிப் போட்டால் போதுமாம். வீடு
தேடி வந்து விடுமாம். இரண்டாயிரம்
ரூபாய்க்கு 20 பொருள்கள், ஆயிரம்
ரூபாய்க்கு 10 பொருள்கள் என்று மிக்ஸி, ஃபேன், குக்கர், கேஸ்
ஸ்டவ் எல்லாம் ஆங்காங்கே இக்காலத்தில் விற்கப்படுவது போல, அந்தக்
காலத்திலும் சில பொருள்கள் விற்கப்பட்டிருக்கின்றன. ரூ. 6க்கு 15 நல்ல சாமான்கள் என்ற தலைப்பில், டார்ச்
லைட், ஸேப்டி
ரேஸர், ப்ளேட், ப்ரஷ், பொத்தான்கள், செண்ட்பாட்டில், ரோல்டு கோல்டு நிப் பேனா என்று அளிக்கப்படும் பொருட்களின் பட்டியல் நீளுகிறது.
ஒரு படி 1 அணா; துவரம் பருப்பு 15 அணா, உளுத்தம்பருப்பின் விலை: 1 ரூபாய் 2 அணா, களிப்பாக்கு
ஒரு வீசை: 5 ரூபாய், 6 அணா..) 1943ல்
சோப்களின் விலை என்ன என்று விளக்குகிறது மற்றொரு விளம்பரம். சர்க்கரை
வியாதி அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதை ’ஏழே
நாளில் குணமாகும்’ என்ற
அறிவிப்புடன் வெளியாகியிருக்கும் விளம்பரம் காட்டுகிறது. தான் விலாசம் மாறியதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் மிருதங்கம் கண்ணன் என்ற இசைக்கலைஞர் கொடுத்திருக்கும் விளம்பரம், தொழில்
மீதான அவரது அக்கறையைக் காட்டுகிறது. லாட்டரி விளம்பரங்களுக்கும் பஞ்சமில்லை.
விளம்பரம் குறிப்பிடத்தக்க ஒன்று. தங்கள்
நெய் சுத்தமானது; கலப்பிடமில்லாத அசல் நெய் என்பதற்காக பி.கே.வி. பிராண்ட்
நெய் ஆதாரச் சான்றிதழ் ஒன்றையும் தன் விளம்பரத்தோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது. காளிகட்டைச் சேர்ந்த ‘கேரளா சோப் இன்ஸ்டிட்யூட்’ பரிசோதனை செய்து சான்றளித்திருக்கிறது. சோப் இன்ஸ்டிட்யூட்டிற்கும் நெய்க்கும் என்ன சம்பந்தம் என்பது கண்களில் அசல் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேடியும் அகப்படவில்லை. அதுபோல விகடனுக்கும் பாக்குத்தூளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியாது; விகடன்
தாத்தாவின் படத்தோடு ‘விகடன் பரிமள பாக்குத்தூள்’ என்ற விளம்பரம் வெளியாகியிருக்கிறது. ஸ்தீர்கள் ஆரோக்கியமாக இருக்கச் சாப்பிட வேண்டியது லோத்ராவாம். ருசித்துச் சாப்பிட நீங்கள் வரவேண்டியது மவுண்ட்ரோடில் இருக்கும் ‘ஷாங்காய் பிறாமணாள் காபி ஹோட்டல்’ என்று
வரவேற்கிறது ஒரு விளம்பரம். ‘ஷாங்காய்’க்கும் ‘பிறாமணாள்’க்கும்
என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை.
ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் கிடைப்பதே அரிதான விஷமாய் இருக்கையில் அந்தக் காலத்தில் ரயிலில் பயணம் செய்யச் சலுகைகளை அறிவித்திருக்கும் விளம்பரங்கள் ஆச்சரியத்தைத் தருகின்றன. தீபாவளிக்கான
பயணத்தில் ‘100-மைல்களுக்கு மேற்பட்ட பிரயாணத்திற்கு எல்லா ஸ்டேஷன்களுக்குமிடையே எல்லா வகுப்புகளுக்கும் மலிவான ரிடர்ன் டிக்கட்டுகள் கொடுக்கப்படும்’ என்கிறது ஒரு விளம்பரம். மைசூர்
மகாராஜா பிறந்த தினத்தையொட்டி நடக்கும் குதிரைப் பந்தயம் காண மலிவு விலையில் டிக்கெட்டுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரிடர்ன் டிக்கெட்டுகளை கிட்டத்தட்ட 1 மாதத்திற்குள் உபயோகப்படுத்திவிட வேண்டுமாம். 3 வயதிற்கு மேல் 12 வயதுக்குள்
உள்ள குழந்தைகளுக்கு அரை சார்ஜாம். இன்றைக்கும்
குழந்தைகளுக்கு 5-12 வயது முதல் அரை சார்ஜ் என்பதை நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
உங்களுக்குக் கேட்கும் ஆற்றலைத் தருகிறேன்’ என்று
செவிடர்களைக் கூவி அழைக்கிறது ஒரு விளம்பரம். ‘கால்செவிடு, அரைச்செவிடு, முழுச்செவிடு எதுவாக இருந்தாலும் எங்கள் ‘டெப்கில்லர்’ மூலம் சரி செய்துவிடலாம்; ‘செவிடர் செவ்வையாகச் செவியுறுகிறார்’’ என்கிறது அது.
ஆயில் விளம்பரம், குட்டிக்
கூரா பவுடர் விளம்பரம், குமார
சஞ்சீவினி, கெற்ப
சஞ்சீவினி, எல்.ஜி. பெருங்காயம், நெ.1. மணிமார்க்
பட்டணம் மூக்குத் தூள், வைர
நகை விளம்பரம் என விதவிதமாக விளம்பரங்கள் வெளியாகியிருக்கின்றன.
மேனியின் அழகுக்கு அழகு சேர்க்கும் சோப்பாகத்தான் நாமறிந்திருக்கிறோம். ஆனால், அது
ஆரம்ப காலத்தில் துணி துவைக்கும் சோப்பாகத்தான் இருந்திருக்கிறது என்பது ஓர் ஆச்சரியம். குழந்தையின்
உத்தமான துணைவன், மேனிக்கு
அழகு தரும், தோல்
வியாதியை நீக்கும் – இதெல்லாம்
குட்டிக்கூராவின் பெருமைகள். இது
ஆயிண்மெண்டாகவும் கிடைத்திருக்கிறது. மூன்று தலைமுறைகளாகத் தாய் மகளுக்குக் கொடுக்கச் சொல்லித் தரும் உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் (1937 விளம்பரம் இது) என்று
விதம் விதமான விளம்பரங்கள் அக்கால இதழ்களை அலங்கரிக்கின்றன.
கடிதம் எழுத வேண்டும் என்பதுதான் நிபந்தனை. ‘வியாபாரத்திற்கு
அழகு விளம்பரம் செய்தல்’ என்று
சொல்லி விளம்பரத்திற்கே விளம்பரம் செய்கிறது எம்.சி.அப்பாசாமி செட்டி & கம்பெனி விளம்பரம். இப்படி
அந்தக் கால இதழ்களின் விளம்பரங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் செய்திகள் பலப்பல.
ஆணாக மாற்றிய அதிசய அறுவை சிகிச்சை, இறந்தவரைச்
சில மணி நேரம் உயிர்ப்பித்த ஐரோப்பியர், கயிற்றை வானில் வீசி தூண் போல நிற்க வைத்து குழந்தையும் தானும் அதில் ஏறிச் சென்று மறைந்து பின் திரும்ப வந்த அதிசய மந்திரவாதி, ஆதினகர்த்தர் மேல் வழக்குத் தொடர்ந்த அனவரதம் நாயக பிள்ளை, அந்தக்
காலத்திலேயே கோயில்களில் சிலையைக் கொள்ளையடித்த சிலைத் திருடர்கள் போன்ற செய்தித் துணுக்குகள் பற்றியெல்லாம் எழுதினால், ஏற்கெனவே
நீண்டிருக்கும் இந்தக் கட்டுரை, இன்னும்
நீநீண்டுவிடும் என்பதால் இத்துடன் நிறைவடைகிறது.
ஓலைச்சுவடிகள் – அரவிந்த் சுவாமிநாதன்
ஏடுகள் தேடி அலைந்த அவரது அலைச்சலும், அதனை நூலாகப் பதிப்பிப்பதற்காக அவர் உழைத்த உழைப்பும் உடனே நினைவிற்கு வந்தது. கூடவே நூல்களின் அச்சாக்கம் என்பது எந்த அளவு இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்ற பிரமிப்பும் ஏற்பட்டது. ஒவ்வொரு நூல் உருவாக்கத்திற்கும் அவர் உழைத்த உழைப்பு சாதாரணமானதில்லை. அதிலும் புறநானூறைத் தொகுப்பதற்காக அவர் பட்ட கஷ்டங்கள், ஒப்பிட்டுப் பார்த்த பிரதிகள், எது சரி என்று தீர்மானித்து முடிவு செய்தது என்பதெல்லாம் சாதாரணமானவையல்ல. அதுகுறித்தெல்லாம் அவர் தனது நூல்களில் விரிவாகவே எழுதியிருக்கிறார்.
ஒரு சான்றைப் பார்ப்போம். புறநானூற்றின் 299வது பாடல் இது.
“பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி
கடல் மண்டு தோணியின் படை முகம் போழ
நெய்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்,
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி,
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே’
பொன்முடி எழுதியது இந்தப் பாடல். பாடலுக்கு விளக்கமெல்லாம் வேண்டாம். “கலம் தொடா மகளிர்’ யார் என்று ஆராய்ந்தால் அது வேறு ஆராய்ச்சியில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆகவே, இந்தப் பாடலை மட்டும் பார்ப்போம். இந்தப் பாடலுக்காக உ.வே.சா. பயன்படுத்திய ஓலைச்சுவடிகளில் இரண்டு கிடைத்தன.
அதைப் பாடலுடன் ஒப்புநோக்கிப் பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்பட்டது. காரணம், சுவடிகளில் பல வரிகள் விடுபட்டுள்ளன. இதை மட்டுமில்லாமல் சுமார் பத்திற்கும் மேற்பட்ட பல ஏட்டுப் பிரதிகளை ஒப்புநோக்கி, பிரதி பேதம் பார்த்துத்தான் நூலை அச்சிட்டிருக்கிறார் உ.வே.சா. ஒரு பாடலுக்கே இத்தனை கஷ்டம் என்றால் ஒவ்வொரு நூலுக்கும் எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டிருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தன்னுடைய புறநானூற்று நூல் பதிப்பு பற்றி உ.வே.சா., “ஒரு நூலைத் திருத்தமாகப் பதிப்பிக்க வேண்டுமென்றால் பல வகையான கருவிகளை முதலில் அமைத்துக் கொள்ளவேண்டும். ஏட்டுச் சுவடிகள் கிடைப்பது மட்டும் போதாது. ஏட்டில் இருப்பது அவ்வளவும் திருத்தமாக இராது. பல காலமாகப் பிழையாகவே வழங்கி வந்த பாடங்களை அவற்றிற் பார்க்கலாம்; அவற்றுள் இதுதான் சுத்த பாடம் என்று தெரிந்து கொள்வதற்குப் படும் சிரமந்தான் மிகவும் அதிகம். நூலில் உள்ள கருத்துகளுக்கும் சொற்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொள்வது மட்டும் போதாது. புறநானூற்றில் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். அப்புலவர்களுடைய பாடல்கள் வேறு நூல்களிலும் இருக்கின்றன. அந்தப் பாடல்களைப் பார்த்தால் அப்புலவர் வாக்கின் போக்கையும், அவருக்கு விருப்பமான கருத்துகளையும், நடையையும் உணர்ந்து கொள்ளலாம். அந்த ஆராய்ச்சியிலிருந்து சில திருத்தங்கள் கிடைக்கும். ஆகவே சங்கப் புலவர்கள் பெயர்களை வரிசையாக எழுதிக்கொண்டு அவர்கள் இயற்றிய பாடல்கள் எந்த எந்த நூல்களிலுள்ளனவென்று தெரிந்து தொகுத்துப் படித்தேன். புறநானூற்றை ஆராய்ச்சி செய்வதற்குச் சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதனால் எனக்குப் பன் மடங்கு இன்பம் உண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று’ என்கிறார். (என் சரித்திரம், உ.வே.சா.)
“வேணு வனலிங்க விலாசச் சிறப்பு’ (1878) என்பதுதான் உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல். இரண்டாவது “திருக்குடந்தைப் புராணம்’ (1883) அதன் பிறகு அவர் பதிப்பித்த பல நூல்களைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நூற்றுக்கு மேற்பட்ட இலக்கிய, புராண நூல்களை அவர் பதிப்பித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அக்காலத்தில் சி.வை. தாமோதரம் பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை உள்ளிட்ட பலரும் நூல்களை அச்சிட்டு வெளியிட்டு வந்தனர். இதில் ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமைக்கும், சண்டை, சச்சரவுகளுக்கும் குறைவே இல்லை.
ஒரு சமயம் உ.வே.சா.வின் “சீவகசிந்தாமணி’ நூல் பதிப்பிற்காக புலவர் ஒருவர் சண்டைக்கு வந்தார். சீவகசிந்தாமணியை முதன் முதலில் பதிப்பித்தது (1883ல்) புதுக்கோட்டை அரங்கசாமிப் பிள்ளை என்பவர்தான் என்றும், அதன் பிறகே 1887ல் ஐயரின் பதிப்பு முழுமையான நூலாக வெளிவந்தது என்றும் பூ. முருகேசபிள்ளை என்பவர் விளம்பரம் செய்தார். அதுமட்டுமல்லாமல், உ.வே.சாவின் பதிப்பில் பல பிழைகள் உள்ளன என்றும் அறிவித்து “சீவகசிந்தாமணி வழுப்பிரகணம்’ என்ற நூல் ஒன்றையும் வெளியிட்டார். உ.வே.சா.வையும் வலிந்து வாதுக்கழைத்தார்.
நல்லவேளையாக, உ.வே.சா. அதனை ஏற்று வாதுக்குச் செல்லவில்லை. அப்படி அவர் சென்றிருந்தால் நமக்கு இன்று நூற்றுக்கணக்கான பழந்தமிழ் நூல்கள் கிடைத்திருக்காது. உ.வே.சா.வின் நேரம் முழுவதுமே இதுமாதிரியான சச்சரவுகளை எதிர்கொள்வதிலேயே கழிந்திருக்கும்!
இலக்கிய, புராணச் சுவடிகள்தான் என்றில்லை. தேவார, திருவாசகச் சுவடிகள், தத்துவ விளக்கங்கள், ஜோதிடம், மாந்த்ரீகம், மருத்துவம் பற்றிய சுவடிகள், சமயம் சார்ந்த சுவடிகள், நாட்டுப்புறவியல் சார்ந்த சுவடிகள் என்று பல தலைப்புகளில் ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. உ.வே.சா. இலக்கியத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியதால் பிற சுவடிகள் அதிகம் வரவேற்புப் பெறவில்லை. அவற்றில் பல இன்னமும் ஆதினங்களிடமும், ஆசியச் சுவடியியல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு மையம் (இங்குள்ள சுவடிகள் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன), தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், உ.வே.சா. நூலகம், கேரள பல்கலைக்கழக கீழ்த்திசைச் சுவடிகள் நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் போன்ற இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் மாந்த்ரீகச் சுவடிகள் மிகுந்த சுவாரஸ்யமானவை. “சாலத்திரட்டு’, “சௌமிய சாகரம்’, “குறி சொல்ல எழுதிக் கட்ட மந்திரம்’, “குறளி வித்தை’, “குறளிச் சக்கரம்’, “குரல் கட்ட மந்திரம்’ என இவற்றின் பெயர்களே வித்தியாசமாக உள்ளன. சான்றாக, “குடிசை திவால்’ என்ற சுவடியைப் பார்க்கலாம். இது ஒரு மாந்த்ரீகச் சுவடி. “குடிசை திவால்’ என்ற பெயரிலிருந்தே இது பிற்காலத்து ஓலைச்சுவடி என்பதைத் தெரிந்து கொள்ளலாம் (திவால் – தமிழ்ச் சொல் அல்ல).
இந்தச் சுவடி என்ன சொல்கிறது?
அடிக்கடி கிராமப்புறங்களில் நாம் கேள்விப்படும் செய்தி. திடீர் திடீரெனக் குடிசைகள் தீப்பிடித்து எரிகின்றன; ஆடைகள் எல்லாம் திடீர் திடீரெனத் தீப்பிடிக்கின்றன என்பது. இதற்குக் காரணம் என்ன? தீயவர்களின் சதியா, ஏவல், பில்லி, சூனியமா, மர்ம, மாந்த்ரீகமா, சாமியார்களின் சாபமா, தெய்வத்தின் கோபமா? அல்லது யாரேனும் வெண் பாஸ்பரஸைக் கொண்டு புத்திசாலித்தனமாக சதி செய்கிறார்களா? தெரியாது. காரணமும் புரியாது. ஆனால் அவ்வப்போது செய்தித்தாள்களில் இது போன்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் வரும். பின்னர் அடங்கிவிடும்.
இந்த மர்மத் தீப்பிடித்தல் நிகழ்விற்கும் மேலே சொன்ன “குடிசை திவால்’ சுவடிக்கும் தொடர்பிருக்கிறது. அந்தச் சுவடியிலிருந்து ஒரு சிறு பகுதி:
“ஒரு மூஞ்சூரைப் பிடித்து, அதன் வயிற்றைக் கிழித்து, மசானச் சாம்பலை அதிலே திணித்து, அதற்கு மேலே இளந்தீட்டுப் பெண்ணின் சீலையைத் தூக்கிச் சுத்தி, மயானத்திலே, கன்னிப்பெண் பிணம் வேகுறபோது அதிலே வைத்து, வெந்து நீறான அந்தச் சாம்பலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, தனக்கு வேண்டாதவர்கள் வீட்டுப் பிரப்பிலே தூவினால் அந்த வீடு திவால்.’
“அந்த நீறிலே கொஞ்சம்போல அந்த வீட்டுக் கூரையிலே ஊதிப் போட்டு, “சாம்பவி, உமாதேவி, நசி மசி மசி நசி வாமா, தூமா ஓடிவா திவால்’ என 1008 தரம் ஜெபித்து உருவேற்ற அந்த வீடு திவால்.’
– இப்படி, தனக்குப் பிடிக்காதவர்களின் வீட்டைத் திவாலாக்க பல வழிகளைச் சொல்கிறது ஒரு சுவடி. இதெல்லாம் சாத்தியமா, எப்படி இந்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன, அது ஏன் ஏழைகள் வசிக்கும் குடிசை போன்றவை மட்டுமே எரிகின்றன. மாடி, ஓட்டு வீடுகள், பணக்காரர்கள் வசிக்கும் இல்லங்கள் எரிவதில்லையே ஏன் என்பது போன்ற கேள்விகள் நமக்கு எழத்தான் செய்கின்றன. ஆனால் விடைதான் கிடைக்கவில்லை. அதேசமயம் இந்தச் சுவடி சொல்வது அனைத்தும் உண்மை என்றும் ஏற்பதற்கில்லை. கற்பனையாகவும் இருக்கலாம். ஆனால், அக்காலத்தில் எதிரிகளை அழிக்க இதுபோன்ற பல வழிகளை முயற்சித்திருக்கின்றனர்; கையாண்டிருக்கின்றனர் என்பது மட்டும் பல மாந்த்ரீகச் சுவடிகள் மூலம் தெரிய வருகிறது. இவை தவிர்த்து பெண் வசியம், ஆண் வசியம், தேவதா வசியம், ஸ்தம்பனம், மாரணம், வெற்றி என பலவற்றிற்கும் பல வித சக்கரங்களையும், மந்திரங்களையும், குறியீடுகளையும் ஓலைச்சுவடிகளில் குறித்துள்ளனர்.
ஜோதிடம் பற்றிய சுவடிகள் “கேரள மணிகண்ட சாத்திரம்’, “குரு நாடி சாத்திரம்’, “அகத்தியர் நாடி சாஸ்திரம்’, “ஆரூடக்கையேடு’, “கிரகச் சக்கர ஏடு’, “ஞானம் – 32′, “சித்தராரூடம்’, “ஆதித்தன் பலன்’ என வித விதமான தலைப்புகளில் உள்ளன. மருத்துவச் சுவடிகள் “அகத்தியர் ருண வாகடம்’, “அகத்தியர் செந்தூரம்’, “அகத்தியர் நூறு’, “அகத்தியர் கற்பம்’, “அகத்தியர் உட்கரு சாத்திரம்’, “அகத்தியர் சவுக்காரத் திறவுகோல்’ என பல தலைப்புகளில் உள்ளன. கேரள மணிகண்ட சாத்திரத்தில் அரிஷ்ட காண்டம், சகோதர காண்டம், பித்ரு காண்டம், அற்பாயுசு காண்டம், யோக காண்டம், மாதுரு காண்டம் என மொத்தம் 20 காண்டங்கள் உள்ளன. இத்தகைய சுவடிகள் பற்றிய விளக்கத்தை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் போன்றவை நூலாகத் தொகுத்து வெளியிட்டுள்ளன.
இவ்வகை ஓலைச்சுவடிகள் பல வித அளவுகளில் இருக்கின்றன. ஒரு சில அரை அடி நீளத்தில் இருக்கின்றன. உள்ளங்கை அளவே அகலமிருக்கும் குறுஞ்சுவடிகளும் உள்ளன. சில இடங்களில் ஒரு முழ நீள அளவிற்கு மிக நீளமான ஓலைச்சுவடிகளும் காணக் கிடைக்கின்றன. சிலவற்றில் படங்கள், விளக்கக்குறிப்புகள் எனத் தற்பொழுது காணப்படும் நூல்களைப் போன்று பல்வேறு தகவல்களும் காணப்படுகின்றன. சிலவற்றில் இரு புறமும் எழுத்துகள் காணப்படுகின்றன. சிலவற்றில் ஒரு புறம் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. நாட்டுப் பாடல், கதைப்பாடல், நாடகங்கள் வடிவிலும் பல சுவடிகள் உள்ளன (சாத்தாவையன் கதை, சாத்தான் கதை போன்றன). பல சுவடிகள் இதுவரை பதிப்பிக்கப்படவில்லை. சொல்லப்போனால் நிறைய ஓலைச்சுவடிகளில் என்ன உள்ளது, அது எதைப் பற்றியது என்கிற ஆய்வு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பல ஓலைச்சுவடிகள் மிகவும் சிதைந்து காணப்படுகின்றன. சிலவற்றைப் படிக்க இயலவில்லை. சில படிக்க எளிதாக, பழங்காலத் தமிழ் நடையில் உள்ளன. சில தொன்மையான ஆலயங்களில் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் அலட்சியமாகக் குவித்து வைக்கப்பட்டும் கிடக்கின்றன.
இவற்றில் நாடிஜோதிட ஓலைச்சுவடிகள் மிகுந்த சுவாரஸ்யமானவை. நாடி ஜோதிடர்கள் பலரும் கட்டுக்கட்டாக ஓலைச்சுவடிகளை வைத்துள்ளனர். உண்மையிலேயே அவை அனைத்தும் ஜோதிடச் சுவடிகள்தானா அல்லது வேறு துறையைச் சார்ந்தவையா என்பது ஐயமாகவே உள்ளது. மேலும் அவை அனைத்துமே உண்மையானதுதானா என்பதும் ஆய்வுக்குரியது.
சான்றாக, இந்தச் சுவடியின் படத்தைப் பாருங்கள்.
ஒரு சுவடிக் கட்டு, ஜாதகக் குறிப்பு, ஓலைச்சுவடியைப் பார்த்து பலன் எழுத முனையும் ஒருவரின் கை எல்லாம் தெரிகிறதா? சரி, இதில் என்ன விசேஷம் என்று கூறுகிறீர்களா?
இருக்கிறது. அதில் இருக்கும் தமிழ் எழுத்துகளை உங்களால் வாசிக்க முடிகிறதா? சற்று முயன்றால் வாசிக்கலாம். வேப்பம்பட்டை, சாது மிளகு, முடக்கத்தான், வால் மிளகு என்றெல்லாம் வார்த்தைகள் தெரிகின்றன. இது ஜோதிடச் சுவடியே அல்ல; மருத்துவச் சுவடி. ஆனால் இதை வைத்துதான், இது பழங்கால முனிவர்களால் எழுதப்பட்ட நாடி ஜோதிடச் சுவடி என்றெல்லாம் கூறி, தம்மை நாடி வரும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் சில நாடி ஜோதிடர்கள். குறிப்பாக, ஏதாவது ஒரு ஓலைச்சுவடியை வைத்துக்கொண்டு (அது ராம நாடக கீர்த்தனையாகவும் இருக்கலாம். மருத்துவச் சுவடியாகவும் இருக்கலாம். அல்லது யோகம், மாந்த்ரீகம் என்று வேறு எதுவாகவும் இருக்கலாம்.) அது நாடிஜோதிட ஓலைச்சுவடி என்று கூறி, அதைப் படித்துப் பார்த்துப் பலன் எழுதுவதுபோல மக்களை ஏமாற்றி வருகின்றனர். தொன்மை, எழுத்துகளின் தன்மை, அதன் உண்மையான காலம் பற்றி அறிய, கார்பன் பரிசோதனை (Carbon Treatment) செய்தால் போதும். ஆனால் அதற்கு இவ்வகை ஓலைச்சுவடிகளை வைத்திருப்பவர்கள் ஒத்துழைப்பதில்லை.
இவ்வகை ஓலைச்சுவடிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், முனிவர்களால்தான் எழுதப்பட்டது என்பதையும் முழுக்க ஏற்க முடியவில்லை. ஏனெனில் இவ்வகை ஜோதிடச் சுவடிகளில் பெரும்பாலான பாடல்கள் அந்தாதி யாப்பிலேயே அமைந்துள்ளன. சங்ககாலப் பாடல்களில் ஆசிரியப்பாவே ஏற்றம் பெற்றிருந்தது. சங்ககாலத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இவை இயற்றப் பெற்றதாக இருந்திருந்தால் பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவில் தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. எனவே “அகத்தியர்’ போன்ற முனிவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலும் அந்த முனிவர்களால் தான் அவை இயற்றப்பட்டன என்ற கருத்தை முழுமையாக ஏற்க இயலாது. சங்கம் மருவிய காலத்தும் அதன் பின்னரும் வெண்பா ஏற்றம் பெற்றது. எனவே அக்காலத்திற்குப் பின் தான் இவ்வகை நூல்கள் தோன்றியிருக்கும் என்பது உறுதி. குறிப்பாகக் கூறின், தமிழில் முதலில் தோன்றிய அந்தாதி நூலான, காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதிக்குப் பின்னரே இவ்வகை நூல்கள் தோன்றியிருக்க வேண்டும். காரைக்காலம்மையாரின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். அதுபோல நாடிஜோதிடச் சுவடிகளில் சில வெறும் கிறுக்கல்களாகவும் அமைந்துள்ளன.
இவற்றை தங்களைத் தவிர வேறு யாராலும் படித்துக் கூற முடியாது என்று கூறும் நாடிஜோதிடர்களின் கருத்தும் ஏற்பதற்கில்லை. இவற்றில் இருப்பது வட்டெழுத்தும் இல்லை. கூட்டெழுத்தும் இல்லை. கிரந்தமும் கிடையாது. பழந்தமிழும் கிடையாது. எல்லாம் சும்மா ஏமாற்று வேலை என்பதே டாக்டர் நாகசாமி போன்ற வரலாற்றாய்வாளர்களின் கருத்து.
அகத்தியரால் எழுதப்பெற்றதாகக் கூறப்படும் அகத்தியர் வாகடம் என்பது உண்மையில் அகத்தியரால் எழுதப்பெற்றதுதானா என்பதும் சந்தேகமே! ஏனெனில் அதிலும் பாடல்கள் அந்தாதி முறையில் காணப்படுகின்றன. எழுத்துகளின் அமைப்பும், வடசொற்களின் ஆதிக்கமும் அவையெல்லாம் பிற்காலத்தைச் சார்ந்ததாகவே கருத இடமளிக்கின்றன. சான்றாக, அந்தச் சுவடியின் இறுதியில், ஹரி ஓம் நன்றாக வாழ்க, குருவே துணை, தம்பிரான் அண்ணாமலைப் பரதேசி, அண்ணாமலை மடம் என்ற தகவல்கள் காணப்படுகின்றன.
சமய நூல்கள் பற்றிய சுவடிகளும் சுவாரஸ்யம் மிகுந்தவை. சான்றாக இந்தச் சுவடிகளைப் பாருங்கள்.
இது திருவாசக ஓலைச்சுவடி. ஒற்றில்லாமல் (அதாவது மெய்யெழுத்தின் மீது புள்ளியில்லாமல்) எழுதப்பட்டிருக்கும் இச்சுவடி மிகத் தொன்மையானது என்பதில் ஐயமில்லை.
முப்பூ, ரசமணி, ரசவாதம் பற்றியெல்லாம் சுவடிகள் கூறும் கருத்தை ஆராயப்புகுந்தால் அது வேறு எங்கோ சென்றுவிடும் என்பதால், இத்தோடு சுபம்.
வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி — அரவிந்த் சுவாமிநாதன்
இதுபற்றி இலக்கிய விமர்சகர் க.நா.சு, தனது ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ என்ற கட்டுரையில், “அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்ற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்” என்று நினைவுகூர்கிறார்.
க.நா.சு.விடம் சொன்னதோடு நிற்கவில்லை ஐயங்கார். ‘Long Missing Links’ என்ற பெயரில் 800 பக்கங்களுக்கு மேல் ஒரு நூலாக அதனை வெளியிட்டார். அதனால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார். அப்போதும் கூட விடாமல் அந்த நூலில் உள்ள செய்திகளை சிறு சிறு நூற்களாக எழுதித் தமிழில் வெளியிட்டார். அதில் ஒன்றுதான் ‘சமய ஆராய்ச்சி’ என்பது.
அந்நூலில் ஐயங்கார், “சில வருஷ காலத்திற்கு முன்னர், நான் தமிழ் நாவல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டு, தேச சரித்திரங்கள், சமய நூல்கள், பாஷைகள் முதலியவற்றை ஆராய்வதற்கென்றே ‘ஓரியண்டல் ஹோம் யூனிவர்ஸிட்டி’ என்ற ஸ்தாபனத்தை அமைத்து, சுமார் மூன்று வருஷம் உழைத்து, நான் தெரிந்துகொண்ட புதிய விஷயங்களில் சிலவற்றைத் திரட்டி, ‘லாங் மிஸ்ஸிங் லிங்ஸ்’ அல்லது, ‘ஆரியர்கள், கிறிஸ்து, அல்லாஹ் என்பனவற்றைப் பற்றிய ஆச்சரியகரமான புதுமை வெளியீடுகள் (முதல் பாகம்)’ என்னும் பெயரில் ஒரு பெரிய நூலை வெளியிட்டேன்” என்கிறார். இதற்காகவும், இவருடைய அந்த முயற்சியைப் பாராட்டியும் ஜெர்மனி, அமெரிக்காவிலிருந்தெல்லாம் அவருக்குப் பாராட்டுக் கடிதங்கள் வந்திருக்கின்றன. கிறிஸ்துவர்கள், முஸ்லிம் கனவான்கள் எனப் பலரும் பாராட்டி சன்மானமும் அனுப்பி ஊக்குவித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில்?
ஐயங்காரே சொல்கிறார். “இந்நூலைப் பெரும்பாலோர் வாங்கிப் படிக்காது அசட்டையாய் இருந்து விட்டதனால், இந்த ஆராய்ச்சியினாலும், இந்நூலை வெளியிட்டு, இதுபற்றி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டதனாலும் எனக்கு சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் வரையில் கடன் ஏற்பட, அதைத் தீர்க்கும் பொருட்டு சகலவிதமான நாவல் காப்பிரைட்டுகளையும், புஸ்தகங்களையும், சுமார் இருபதாயிரம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட மூன்றடுக்கு மாடி வீட்டையும் விற்று நான் மாத்திரம் மீள வேண்டியவனானேன். ஆயினும் நான் எடுத்துக்கொண்ட விஷயம் உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களுக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தங்களைக் காட்டி சமரஸத் தன்மையை உண்டாக்க வேண்டுமென்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகையால் எப்பாடுபட்டாயினும் என்னாலியன்ற வரையில் என் கருத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்ற உறுதியான தீர்மானம் என்னைவிட்டு அகலாமல் இன்னமும் இருப்பதனால் நான் நாவல் வெளியீட்டோடு இந்தத் தொண்டையும் சிறிதளவு கலந்து செய்ய வேண்டுமென்பதே என் கருத்து” என்கிறார்.
லாங் மிஸ்ஸிங் லிங்க்ஸ் இப்போது அச்சில் இல்லை. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. இணையத்தில் சில படங்கள் மட்டும் கிடைக்கின்றன. ஆனால் அதிலிருந்த சில விஷயங்களைத் தமிழ்ப்படுத்தி ‘சமய ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் ஐயங்கார் நூலாக எழுதியிருக்கிறார். அதுவும் தற்போது அச்சில் இல்லை. என் தாத்தாவின் சேகரிப்பில் இருந்த ஒரே ஒரு பிரதி மட்டும் எனக்குக் கிடைத்தது. அதில் ஐயங்கார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
Ø ஹிந்துக்கள் என்று அழைக்கப்படும் நம்மவர்களின் முன்னோர் பண்டைய ‘அப்பரகா’ (Africa) தேசத்திலிருந்து வந்தவர்கள்.
Ø நம் முன்னோர்களுக்கும், கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களை ஸ்தாபித்தவர்களின் முன்னோருக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு.
Ø வட அப்பரகா (ஐயங்கார் இப்படித்தான் எழுதியிருக்கிறார்)வில் வசிக்கும் ஜனங்களின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் நம்முடைய ஜனங்களைப் போலவே இருக்கின்றன.
Ø பண்டைய ஈகைப்பட்டு (Egypt) (இப்படித்தான் ஐயங்கார் எழுதியிருக்கிறார்) மன்னர்களுக்கும் நமது தென்னாட்டிற்கும் நெருங்கிய தொடர்பிருந்திருக்கிறது.
Ø வடகலை ஐயங்கார்கள் அணிவது போன்ற குறிகளை அவர்கள் நெற்றியிலும், தோள் போன்ற பிற இடங்களில் அணிவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
Ø அவர்களுடைய வழிபாட்டுமுறை நம்முடைய வழிபாட்டு முறையை ஒத்ததாகவே இருந்தது.
Ø அவர்களும் நம்மைப் போலவே விலங்கு, (நந்தி) பறவை (கருடன்) போன்றவற்றை வழிபட்டனர்.
Ø அங்கே இருக்கும் நைல் என்பதன் சரியான பெயர் ‘நீல நதி’ என்பதே.
Ø பெயரிலும் கூட நமது இந்தியப் பாரம்பரியப் பெயர்களோடு அவர்களது பெயருக்கு ஒப்புமை இருந்தது
– என்றெல்லாம் ஐயங்கார் சொல்லிச் செல்கிறார்.
மட்டுமல்ல; அவர்கள் வழிபட்ட தெய்வத்திற்கும், ஹிந்துக்களின் தெய்வத்திற்கும் வழிபாட்டில் ஒப்புமை இருந்தது என்றும் சொல்கிறார். ‘கணேசர்’ என்ற பெயரில் நாம் வழிபடும் தெய்வத்தைப் போன்றே அவர்களும் ‘கண்சா’ என்ற பெயரில் ஒரு தெய்வத்தை வழிபட்டிருக்கின்றனர். தனது கருத்துக்களுக்கு ஆதாரமாக ‘Egyptian Mythys and Legends’ by Donald A.Mackenzie என்ற நூலையும், ‘The Northen Bantu’ by John Roscoe M.A., Published by the Cambridge University Press என்ற நூலையும் உதாரணம் காட்டுக்கிறார்.
இந்த ‘சமய ஆராய்ச்சி’ என்னும் நூலில் ஐயங்கார் சொல்லியிருக்கும் விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. நம்ப முடியாதவையாக இருக்கின்றன. சில குழப்பத்தை உண்டு பண்ணுவதாகவும் இருக்கின்றன. சமயம் மட்டுமில்லாமல், வழிபாடு, வான சாஸ்திரம், ஜோதிடம், தமிழ் இலக்கியங்கள், மொழி அமைப்பு, சொற்கள் பயின்றுவரும் விதம் என்றெல்லாம் பல களங்களில் அவரது ஆராய்ச்சி விரிகிறது.
நூலில் இருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள்:
Ø ரோம ரிஷி என்பவர் ரோமில் வாழ்ந்த ராஜ ரிஷி.
Ø தேரையர் என்னும் சித்தர் பாரஸீகத்திலிருந்த சக்கரவர்த்தி.
Ø மயன் என்பவர் கிரீத் அல்லது கண்டியர் என்று குறிக்கப்படுவதும், மத்திய தரைக்கடலில் இருப்பதும், ஆதி காலத்தில் அதலம் என்று குறிக்கப்பட்டதுமான தேசத்தின் அரசர்
– என்றெல்லாம் அவர் சொல்லும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. சிற்பி வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி அவர்களும் மயன் நாகரிகம் அப்பகுதியைச் சார்ந்ததே என்று தெரிவித்திருக்கிறார். பகவான் ரமண மகரிஷியும், சாத்விக்கிடம், ”இந்த அண்ணாமலையைப் போலவே இதன் மறு மையத்தில் ஓர் மலை அல்லது ஆன்மிக அச்சின் மற்றொரு பகுதி இருக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். அட்லாண்டிஸ், பெரு, மச்சுபிச்சு எல்லாம் கிட்டத்தட்ட இதை ஒட்டித்தான் வருகிறது. ஆக, இந்தக் கருத்துக்கள் விரிவான களத்தில் ஆராயத்தக்கன.
இந்நூலில் நகைப்பிற்கிடமாகவும் சில விஷயங்கள் உள்ளன. சான்றாக, “தென்கலை நாமம் சனி பகவானைக் குறிக்கிறது. வடகலை நாமம் வியாழன் என்னும் தேவேந்திரனைக் குறிக்கிறது. மாத்வ பிராமணர்கள் நெற்றில் கரிக்கோடிட்டுக் கொள்வது ராகுவைக் குறிக்கிறது. ‘ராகுகாலம்’ என்பதை நாம் பழக்கத்தில் ‘ராவு காலம்’ என்றே சொல்கிறோம். ‘ராவு’ என்ற பட்டப்பெயரை அவர்கள் தங்கள் பெயரோடு சேர்த்து வைத்துக் கொள்வது இதற்கு இன்னொரு சான்றாகும்” என்று அவர் குறித்திருப்பதைச் சொல்லலாம். சில விஷயங்கள் சிந்திக்க வைக்கின்றன. பல விஷயங்களுக்கு அவர் கொண்டுகூட்டிப் பொருள் கொண்டு, அதையே ‘சரி’ என்று ஸ்தாபிக்க முயல்வதும் தெரிகிறது. சில தகவல்கள் குழப்பத்தைத் தருகின்றன. முப்பது தலை ராவணனை ஐயங்கார் ஒருவர் தாக்குவது போன்று உள்ள படம் நிஜமா, கற்பனையா என்று யோசிக்க வைக்கிறது. பகலின் தந்தை சூரியன்; தாய் சுக்கிரன். இரவின் தந்தை சனி; தாய் சந்திரன் என்று விளக்கி சினேந்திரமாலைப் பாடலை உதாரணம் காட்டுகிறார்.
“கிறிஸ்தவர்களின் பழைய ஆகமத்தில் கந்தபுராணத்தில் குறிக்கப்படும் சூரன் முதலியோர் வருகின்றனர்” என்று சொல்லும் ஐயங்கார், “கருங்கடலுக்கு அருகில் இருந்த கிரௌஞ்சம் அல்லது கௌஞ்சத்தை ஆண்ட அசுரனை சுப்பிரமணியர் சம்மாரம் செய்ததாத கந்தபுராணம் கூறுகிறது. அராபியா, பர்ஸியா ஆகியவற்றிற்கு அப்பாலுள்ள கருங்கடலுக்கு அருகில் அசிரியா என்று ஒரு தேசமிருந்து அழிந்துபோய் விட்டது. அதன் கல்வெட்டு சிலா சாசனங்களில் ‘கௌஞ்சகம்’ என்ற பெயர் காணப்படுகிறது. அவ்விடத்தில் அசூர் என்ற அரசர்கள் ஆண்டு இதர தேசங்களை நாசப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் பாலஸ்தானத்தை அழித்து அங்கிருந்த சமரத்தன் குருக்கள்மார்களை சிறைப்படுத்திக் கொண்டுபோய் தங்கள் ஜனங்களுக்கு கடவுள் வழிபாடு கற்றுக்கொடுக்கும்படி அமர்த்தியதாக கிறிஸ்தவருடைய பழைய ஆகமம் கூறுகிறது” என்று சொல்லும் விஷயம் சிந்திக்க வைப்பதாய் உள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துகள் சிலவற்றையும் ஐயங்கார் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.
Ø ‘மேரி’ என்பதை சிலர் ‘மாரி’ என்று மாற்றி அதை மாரியம்மனாக்குவது வழக்கம். அது தவறு. மேரி என்பது ‘மேரு’ பர்வதத்திலிருந்து உதித்தவள் என்பதைக் காட்டுகிறது.
Ø மீனாஷி என்றால் மீனத்தில் ஆக்ஷியாக உள்ள வியாழ பகவானைக் குறிக்கும்.
Ø சரஸ்வதி என்பது சுக்கிரனைக் குறிக்கும்.
“பார்வதி’ என்று எழுதுவது தவறு. ‘பாற்வதி’ என்று எழுதுவதுதான் சரி. பரமசிவனின் பக்கத்தில் உள்ளவள் என்பது இதற்குப் பொருள். பாற்வதி மகாவிஷ்ணுவின் தங்கை என்று சைவ புராணங்கள் சுட்டுகின்றன. ஆனால் எப்படித் தங்கை என்பதுதான் எங்கும் விளக்கப்படவில்லை. பார்வதி ஆதியில் தக்ஷனுக்கு மகளாகப் பிறந்ததாகவும் பின்னர் அந்தப் பாவம் தீர மறுபடி இமவானுடைய மகளாகப் பிறந்ததாகவும் சைவ புராணங்கள் சுட்டுகின்றன. அப்படியானால் மகாவிஷ்ணு தக்ஷனுடைய பிள்ளையா, அல்லது இமவானுடையா பிள்ளையா?” என்று நாத்திகர்கள் போல் கேள்விகள் எழுப்புகிறார் ஐயங்கார். இராமனைப் பற்றிக் கூறும் போது, வைஷ்ணவ பாஷ்ய விளக்கங்களுக்கு மாறாக, “இராமன் என்பதை இரா+மன் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். அதற்கு இரவின் தந்தை என்பது பொருள். இரவின் தந்தை ‘சனி.’ மகாவிஷ்ணுக்கு உகந்த கிழமை சனி என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்.
நாராயணனையும் ஐயங்கார் விட்டு வைக்கவில்லை. வைஷ்ணவ ஆச்சரியரான ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகரால் இயற்றப்பட்ட அதிகார ஸங்கிரகத்தின் கருத்தையே அவர் மறுக்கிறார். “நாராயணன் என்றால் நாக்கிற்கு ராஜனாகிய வியாழ பகவானுக்கு அணன், அண்மையில் இருப்பவன் அதாவது சமீபத்தில் இருப்பவன் என்பது பொருள்” என்கிறார். வியாழனே நாராயணன். நாராயணனே இந்திரன்; அவனே இமவான் என்றும் உறுதிபட அவர் கூறுவது வியப்பைத் தருகிறது. மேலும் அவர், “தேசிகர் வைஷ்ணவர்களுள் ஒரு சாராருக்கு மதாசாரியர். ஆகவே நாம் இதில் குற்றங்கண்டுபிடிப்பது அபசாரமாகும். வைஷ்ணவர்களில் சுயமாசாரி புருஷர்கள் என்று ஒரு வகுப்பார் இருக்கிறார்கள். அவர்கள் வேறு எவரையும் ஆசாரியராக ஏற்றுக் கொள்வதில்லை. நாம் இந்த வகுப்பைச் சேர்ந்த பரம்பரையில் வந்தவராதலால், தேசிகர் நமக்கு ஆசாரியாரல்லரானாலும் அவருடைய கவித்திறமையையும் பரந்த ஞானத்தையும், இன்ன மற்ற யோக்கியதாம்சங்களையும் கண்டு நாம் வியப்படையாமலும், அவரை மனதாரப் புகழாமலும் இருப்பது சாத்தியமானதல்ல” என்கிறார்.
ஆங்கிலத்தில் புழங்கும் சொற்கள் தமிழிலிருந்தே சென்றன என்று கூறி அவர் உதாரணம் காட்டுபவை நமக்கு நகைப்பையும் திகைப்பையும் வரவழைக்கின்றன. “கல் பலகை, சிலை ஏடு என்பதே சிலேட் (slate) ஆகி இருக்கிறது. பாம்பு போல் நீண்டிருக்கும் மூங்கில், பாம்பு மரம் (Bamboo Tree) என்று இங்கிலீஷில் குறிக்கப்படுகிறது. கடவுளுக்குச் சொல்லும் துதியான ‘பறைதல்’ என்பதே ப்ரேயர் (Prayer) ஆகி இருக்கிறது. கள்ளாகிய பாலைக் கொடுக்கும் பனை மரம் பால் மா (Palmyra) என்று குறிக்கப்படுகிறது. பெண்ணினமாகிய அம்மாவைக்குக் குறிக்கும் ’மாதர்’ என்பதே மதர் (Mother) ஆயிற்று. அப்பா என்பதே ஃபாதர் (Father) ஆகி, பின்னர் ‘பாதிரி’ ஆகியிருக்கிறது.‘புட்டு’ என்பதே Food ஆகியிருக்கிறது. உண்பதாகிய ‘தின்னல்’ என்பதே ‘டின்னர்’ (Dinner) ஆகியுள்ளது.
இப்படி அந்த நூல் முழுவதும் இம்மாதிரியான பல தினுசு தினுசான கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன. மேற்கண்ட காரணங்களால் ஐயங்காரின் ஆராய்ச்சியை முழுக்க முழுக்க உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் சில விஷயங்களைப் புறந்தள்ளவும் முடியவில்லை.
ஐயங்காரின் இந்த நூலை முழுக்க வாசித்து முடித்தவுடன் பண்டை எகிப்தியர்களின் வரலாற்றைக் கூறும் ‘A GUIDE TO THE EGYPTIAN COLLECTIONS’, ‘AN ANCIENT EGYPT UNDER THE PHARAOHS’, ‘A HISTORY OF EGYPT UNDER THE PHARAOHS’ போன்ற சில நூல்களை மேலோட்டமாக வாசித்தேன். அதில் கிடைத்த சில தகவல்கள் ஆச்சரியத்தைத் தருகின்றன.
Ø எகிப்தை ஆண்ட பண்டைய மன்னர்களுள் ஒருவர் பெயர் ரமேசெஸ் (Rameses) (ராமசேஷன் என்ற பெயர் ஞாபகத்திற்கு வருகிறதா?) ரமேசெஸ் – 1 ரமேசெஸ் – 2, ரமேசெஸ் – 3 என்று அவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்திருக்கின்றனர்.
Ø ரமேசெஸ் -1ற்கு வழிகாட்டியாக, நண்பராக இருந்தவர் ஓர் இந்தியர்.
Ø ரமேசெஸ் -1 ஆட்சி செய்த காலம் B.C.1200ஐ ஒட்டியது.
Ø எகிப்தின் வளர்ச்சிக்குக் காரணமான மற்றொரு மன்னரின் பெயர் கர்ணாக் (Karnak)
Ø இம்மன்னர்களில் பலரது நெற்றிலும் ‘நாமம்’ போன்ற குறிகள் காணப்படுகின்றன.
Ø எகிப்தில் பண்டைக்காலத்தில் பல கடவுள்களை வழிபட்டிருக்கின்றனர். ஒரு கடவுளின் பெயர் ஆமன் – ரா. (Amen-Ra) இவர் Thebes நகரத்தின் புகழ்பெற்ற கடவுள்.
Ø பெருமாள் கோயில்களில் தீர்த்தப் பிரசாதம் வழங்குவது போல பண்டை எகிப்திலும் இம்மாதிரி இறை வழிபாட்டிற்குப் பின்னர் புனித தீர்த்தம் (Holy water) பிரசாதமாக வழங்கப்படும் பழக்கம் இருந்திருக்கிறது.
Ø காளை, பசு, சிங்கம், முதலை, நாய் போன்ற விலங்குகளையும் பாம்பு மற்றும் கருடன் போன்ற சில பறவைகளையும் அவர்கள் வழிபட்டிருக்கின்றனர்.
பசுவை வழிபடுவது சிறப்பிற்குரியதாய் இருந்திருக்கிறது. அதுபற்றி, ‘Ancient Egypt under THE PHARAOHS’ என்ற நூலில் காணப்படும், ‘India is the land which in this respect most closely resembles Egypt the cow is there an object of adoration and no devotee of Isis or Athor could have regarded its slaughter for food with greater horror than a Hindoo’ என்ற குறிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. ‘We had historical ground for concluding that these religious ideas and usages had been transplanted by colonization from India to Egypt’ என்ற குறிப்பு, ஐயங்கார் சொன்னது உண்மையாகத்தான் இருக்குமோ என்ற கேள்வியை வரவழைக்கிறது. Long Missing Links நூலை முழுமையாக வாசித்து, பின்னர் இந்தப் பண்டைய எகிப்தின் வரலாற்றைக் கூறும் நூல்களையும் முழுமையாக வாசித்தால் மேலும் பல புதிர்கள் அவிழக்கூடும். அல்லது குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கக்கூடும். நிதானமாக யோசித்துப் பார்த்தால், பண்பாட்டு ஒற்றுமைகளை மட்டுமே கணக்கில்கொண்டு ஒரு முடிவுக்கு வருவது சரியல்ல என்றுதான் தோன்றுகிறது.