Posted on Leave a comment

வலம் ஏப்ரல் 2020 இதழ்

வலம் ஏப்ரல் 2020  இதழ் :

வலம் ஏப்ரல் 2020 இதழ் படைப்புகளை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.
















எஸ் வங்கி பிரச்சினை | ஜெயராமன் ரகுநாதன்

வீரப்பன்: பொய்களுக்கு இடையில் சில உண்மைகள் | சுஜாதா தேசிகன்

 
 
 
 
 

 

Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – பாகம் 12 | லாலா லஜ்பத் ராய் | தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்

பகுதி 12- என் முடிவுகள், அறிவுரைகளின் தொகுப்பு
கடந்த கட்டுரையில், மியான் பாஸ்ல்-இ-ஹுசைன் குறைபட்டுக்கொள்ளும் ஒரு மனிதராக
இருப்பதைத் தெரிவித்திருந்திருந்தேன். ஆனால் அது யாருக்கு எதிரான குறை
? நிச்சயமாக
இந்து சமூகத்திற்கு எதிரானதல்ல. இந்துக்கள் அரசாங்கத்தின் கீழ் அதிக
எண்ணிக்கையிலான பதவிகளை ஆக்கிரமித்திருந்தால்
, அதற்கு அவர்கள் முற்றிலும்
எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதியுடையவர்களாக இருப்பார்கள்
. எனவே
அவர்கள் மீது குற்றம் சாட்டப்படக் கூடாது. தவறு முக்கியமாக தங்களுடையது என்பதை
முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்ப நாட்களில்
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கல்வி வசதிகளை அவர்கள் போதுமான அளவில்
பயன்படுத்தவில்லை. அதுதான் தற்போதைய விஷயங்களுக்குக் காரணமாக இருக்கிறது. கடந்த
ஐம்பது ஆண்டுகளாக
, அவர்கள்
இழந்த நேரத்தை ஈடுசெய்வதற்கான சிறப்பு வசதிகளை அரசு அவர்களுக்கு வழங்கி வருகிறது.
ஆனால் அது இப்போது மற்ற எல்லா சமூகங்களுக்கும் எதிராக அவர்கள் தங்கள் சொந்த
நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதில் முடிந்திருக்கிறது.

எதிர்காலத்தில் அரசாங்க பதவிகளில் தங்களுக்கு உரிய பங்கைத் தர வேண்டும்
என்று அவர்கள் கூறுவதில் நியாயம் உள்ளது. ஆனால்
, தங்களின் சரியான விகிதாச்சாரம்
தங்களுக்கு வழங்கப்படும் வரை
, மற்ற சமூகத்தைச் சேர்ந்த எவரும் பணியமர்த்தப்படக்கூடாது
என்று அவர்கள் கூறுவது எந்த விதத்தில் நியாயம்
? இப்படிப் பட்ட சர்ச்சை அபத்தமானது.
ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள அரசாங்கப் பதவிகளின் எண்ணிக்கை
மக்கள்தொகையில் அதன் வலிமைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்ற கூற்றும் அபத்தமானது.
இந்த எண்ணிக்கைகள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்
? விகிதங்கள் பதவிகளின் எண்ணிக்கையின்படி
நிர்ணயிக்கப்பட வேண்டுமா
, அல்லது ஊதியத்தின் அளவுக்கேற்ப நிர்ணயிக்கப்பட வேண்டுமா? பதவி உயர்வு, இடைக்கால
நியமனங்கள்
, ஓய்வூதியம்
ஆகியவையும் கூட இதே அடிப்படையால் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா
? அப்படியானால், அரசாங்கத்தின்
அனைத்து துறைகளும்
முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதபிரிவுகளாக, முற்றிலும் தனித்தனியாகவும், சுயாதீனமாகவும்
இருக்க வேண்டும் என்று ஏன் சொல்லக்கூடாது
? இவை கூட நகர்ப்புற மற்றும் கிராமப்புற மற்றும் விவசாய, வேளாண்மை அல்லாதவை
எனப் பிரிக்கப்பட வேண்டும். இந்த முழு விஷயமும் மிகவும் அபத்தமானது
, இதுபோன்ற
கூற்றை அறிவுஜீவிகளான
, பகுத்தறிவுள்ள
மனிதர்களால் எவ்வாறு தீவிரமாக முன்வைக்க முடியும் என்று ஆச்சரியப்பட
வேண்டியுள்ளது.

தவிர, அகில இந்திய
அளவிலான புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டால்
, இந்த கொள்கைகள் நடைமுறைப்படுத்தப் படுவதன்
மூலம் தங்களுக்கு அதிகப் பங்கு கிடைக்கும் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக
இருக்கிறார்களா
? எந்தக்
கொள்கையின் அடிப்படையில் அமைச்சகங்கள் பிரிக்கப்படும்
? சில மாகாணங்களில், மாகாணங்களில்
உள்ள சில துறைகளில்
, மக்கள்தொகை
விகிதம் குறிப்பதை விட அவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பதவிகள் கிடைத்துள்ளன என்பது
உண்மையல்லவா
?

நடைமுறை சிக்கல்களின் அடிப்படையில் இந்த விஷயத்தைப் பரிசீலிக்கும்படியும், அதன்
பின்னர் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படக்கூடிய அளவிலான ஒரு
திட்டத்தைப் பரிந்துரை செய்யும்படியும் எனது நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இனவாத உணர்வின் தற்போதைய நிலையில் எந்தவொரு துறையும் எந்தவொரு சமூகத்தினாலும்
அல்லது வர்க்கத்தினாலும் ஏகபோக உரிமைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்பதை நான்
ஒப்புக்கொள்கிறேன். இந்த நிலைக்கு எதிரான தகுந்த பாதுகாப்பு செய்யப்படவேண்டும்.
வகுப்புவாத சூழ்ச்சிகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
முறையான பிரதிநிதித்துவம் கொண்ட பொதுச் சேவை ஆணைக்குழுவின் நியமனம் எந்தவொரு
சமூகமும் எதிர்காலத்தில்
, அரசாங்க பதவிகளில் அதன் சரியான பங்கை இழக்காது என்பதற்கு
போதுமான உத்தரவாதமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தற்போதைய சூழ்நிலையின்
தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேறு எந்த தீர்வையும் என்னால் நினைத்துப்பார்க்க
முடியவில்லை. எவ்வாறாயினும்
, ஸ்வராஜ்யத்தை அடையும்போது, ​​தீர்வு எளிமையாக இருக்கும். மாகாண அரசாங்கங்கள்
தங்கள் ஊழியர்களை நியமிக்க முழு அதிகாரங்களைக் கொண்டிருக்கும்
, முஸ்லிம்
பெரும்பான்மையைக் கொண்ட மாகாணங்கள்
, தற்போதைய உணர்வுகளின் நிலை தொடர்ந்தால், தானாகவே
பெரும்பான்மையான முஸ்லிம் அரசு ஊழியர்களைக் கொண்டிருக்கும். அகில இந்திய சேவைகளைப்
பொருத்தவரை
, ஒரு சேவை
ஆணையம் தொடர்ந்து நியமனங்களைச் செய்யும்.

இதற்கிடையில், அரசாங்க
நியமனங்கள் குறித்து அதிகம் வம்பு செய்ய வேண்டாம் என்று இந்துக்களிடம்
மரியாதைக்குரிய வேண்டுகோள் ஒன்றை விடுக்கலாமா
? அரசாங்கத்தின் ஆதரவை அதிகம்
நம்பியுள்ள எந்த சமூகமும் பொருளாதார ரீதியாக வளர முடியாது. மக்கள்தொகையில் எவ்வளவு
சதவீதத்தினர் தங்கள் வாழ்க்கையை அப்படிக் கழிக்கிறார்கள்
? அரசு ஊழியர்கள் இனவாத வாழ்க்கையை
தங்கள் சம்பளத்தை விட அதிகப்படியாக மதிக்கிறார்கள் என்பது உண்மைதான். இத்தகைய
தாக்கங்களின் அளவு எளிதில் மிகைபடுத்தக் கூடியதே. தற்போதைய நிலைமை நீடிக்கும் வரை
, ரொட்டிகளையும்
மீன்களையும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழியில் அரசாங்கம் விநியோகிக்கட்டும்.
உயர்மட்டப் பதவிகள் எப்படியிருந்தாலும்
, ஐரோப்பியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது; பின்னர்
ஆங்கிலோ-இந்தியர்கள்
; கடைசியில் இந்தியர்கள்
வருகிறார்கள். நொறுக்குத் தீனிகள் மீதான சண்டை போன்ற இது எந்தவொரு தேசபக்தரும்
ஈடுபடுவதற்கு மிகவும் அற்பமான விஷயமாகத் தெரிகிறது. ஸ்வராஜ்யத்தின் கீழ்
, ஒவ்வொரு
மாகாணத்தின் அரசாங்கமும் அதன் நிர்வாக அமைப்பின் வடிவையும் தன்மையையும்
தீர்மானிக்கும். இந்த விஷயத்தைப் பற்றி எந்தவொரு ஒப்பந்தத்திலும் இப்போது நுழைவது
அல்லது அதைப் பற்றி சண்டையிடுவது முற்றிலும் பயனற்றது.

அரசாங்க சேவைகளிலிருந்து இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்வோம்.
உள்ளாட்சி அமைப்புகளின் அரசியலமைப்பு சட்டமன்றங்களிலிருந்து வேறுபட்ட விதத்தில்
இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மக்கள்தொகை அடிப்படையிலான விதி அவர்கள்
விஷயத்தில் சரியாக இருக்காது. உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்களை இயற்றாது. அவர்கள்
உள்ளூர் விவகாரங்களை மட்டுமே நிர்வகிக்கிறார்கள். உள்ளூர் விவகாரங்கள் அந்தந்த
இடங்களைச் சார்ந்தது
, எல்லாவற்றிற்கும்
மேலாக
, ஒவ்வொரு
வட்டாரத்தின் தனிப்பட்ட முரண்பாடுகளின்படி அவை நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால்
முஸ்லிம்கள் மக்கள் தொகை அடிப்படையை வற்புறுத்தினால்
, நான் அதை அனுமதிப்பேன். அதை அவர்கள்
செய்யும் போது சில மாகாணங்களில் ஆதாயம் பெறுபவர்களாக இருப்பார்கள்
, மற்ற
இடங்களில் அந்த ஆதாயத்தை இழப்பார்கள்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை, அவை
எந்தவொரு வகுப்புவாத வேறுபாட்டையும் அனுமதிக்கக் கூடாத இடங்கள். அது தேசத்தின்
முழு அறிவுசார் வாழ்க்கையையும் நச்சுப்படுத்தும். பின்தங்கியதாகக் கருதப்படும்
சமூகங்களுக்குக் கேட்கப்படும் சிறப்பு வசதிகளை நான் புரிந்துகொண்டு பாராட்ட
முடியும். அவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை கொடுங்கள்
, அவர்கள் பெரும்பான்மையாக உள்ள
இடங்களில் திறந்தவெளிக் கல்வி மையங்களை அமையுங்கள்
; தற்போதுள்ள நிறுவனங்களை இடமாற்றம்
செய்யாமலோ சிதைக்காமலோ பொது வருவாயிலிருந்து அதிகமான அல்லது சிறப்பு மானியங்களை
அவர்களின் நலனுக்காக ஒதுக்கலாம்.

இதுதொடர்பாக, பஞ்சாப்
சட்டமன்றத்தின் சில இந்து உறுப்பினர்கள் காம்ப்பெல்பூர்
, லியால்பூர் மற்றும் குஜ்ராத்தில்
இடைநிலைக் கல்லூரிகளைத் திறப்பதற்குக் காட்டிய எதிர்ப்பை நான் விரும்பவில்லை
, ஏற்றுக்கொள்ளவுமில்லை.
கலைக் கல்லூரிகளுக்கு அதிக பணம் செலவழிக்கப்படுவதை அவர்கள் ஆட்சேபித்தால்
, ஒன்று
அல்லது இரண்டு கல்லூரிகளை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மாற்றுமாறு
பரிந்துரைப்பதே அவர்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம். பஞ்சாப் சட்டமன்றத்தின்
சில இந்து உறுப்பினர்களின் நடத்தை பற்றிய ஒரு பகுப்பாய்வு
, கடந்த கவுன்சிலிலும், தற்போதைய
கவுன்சிலிலும் சரி
, பஞ்சாபில்
தற்போதைய வகுப்புவாத பதட்டத்திற்கு முழு குற்றச்சாட்டும் மியான் பாஸ்ல்-ஐஹுசைனைச்
சார்ந்ததே என்று ஒரு சமநிலை கொண்டவரை நம்ப வைக்காது.

மியான் செய்த அல்லது செய்துகொண்டிருப்பதன் பெரும்பகுதி பொறுப்பு
அதிகாரத்துவ வர்க்கத்திடம் உள்ளது. அவரது சொந்த கருத்துக்கள் அரசாங்கத்தின்
கருத்துக்களுடன் ஒத்துப்போனதால்
, அவர் அதன் ஒரு கருவியாக இருந்திருக்கலாம். இந்து
விமர்சகர்கள் இந்தப் போக்கைக் கண்டுகொண்டு
, சமூகங்களிடையே பிளவை உருவாக்குவதில்
அதிகாரத்துவத்தின் மையக் கருவிகளாகத் தங்களை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடாது. வருங்கால
சந்ததியினர்
, நாம்
எதிர்நோக்கும் நெருக்கடியைக் கொண்டுவருவதற்கு தாங்கள் அறியாமலேயே அவர்கள் அளித்த
உதவியை மறக்கமாட்டார்கள்
. அதன்மூலம் அவர்கள் புரிந்த குற்றத்திலிருந்து அவர்களை
விடுவிக்கவும் மாட்டார்கள். எனது தீர்ப்பில் ஒத்துழையாமை இயக்கமும் அதற்கு ஓரளவு
பொறுப்பு ஆகும். தனிப்பட்ட முறையில்
, அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள பதவிகள் பற்றியோ, அதன்
சேர்க்கையைப் பற்றியோ நான் கவலைப்படவில்லை. இருப்பினும்
, தொழில்முறை கல்லூரிகளின் நிலை
வேறுபட்டது. அவர்களின் விஷயத்தில்
, வெவ்வேறு சமூகங்களுக்கு தகுதியைப் பொருட்படுத்தாமல்
குறிப்பிட்ட இடங்களை ஒதுக்குவது
, கல்வித் தரத்தையும் வெற்றிகரமான செயல்திறனையும்
குறைக்கும். எவ்வாறாயினும்
, இவை சிறிய விஷயங்கள். அவற்றிற்குத் தேவையற்ற
முக்கியத்துவத்தை அளிக்கக்கூடாது.

இப்போது நான் செய்த பரிந்துரைகள் சுருக்கமாக:

(1) முழுமையான உரிமைகள் என்ற தீங்கு
விளைவிக்கும் கோட்பாட்டிலிருந்து உங்கள் மனதை விடுவிக்கவும்.

(2) உங்கள் மத (பிடிவாதமான
மதம்) அரசியலை நீக்குங்கள்.

(3) மதத்தை முடிந்தவரை பகுத்தறிவு
மயமாக்குங்கள். அத்தியாவசியங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள்.

(4) ஒரு சமூகத்தை மற்றொரு
சமூகத்திலிருந்து பிரிக்கும் சமூகத் தடைகளை அகற்றவும்.

(5) உலகின் வேறு எந்த நாட்டையும் விட
இந்தியாவை நேசிக்கவும்
, முதலிலும் கடைசியிலும் இந்தியர்களாக இருங்கள்.

(6) வீட்டின் நிலைமைகளை
மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் கவனியுங்கள். உங்கள் சொந்த நாட்டு
மக்களுக்கான கடமை அனுமதிக்கும் வரை வெளிநாட்டிலுள்ள உங்கள் சக மதவாதிகளிடம்
அனுதாபப்படுவதையும் அவர்களுக்கு எப்போதாவது உதவுவதையும் நீங்கள் செய்யலாம். இந்த
விஷயத்தில் துருக்கி மற்றும் எகிப்தைப் பின்பற்றுங்கள்.

(7) சுத்தியைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
அது இங்கே முழுமையாக வந்துவிட்டது.

(8) இஸ்லாமியத்திற்கும்
ஹிந்துயிஸத்துக்கும் எதிரான உணர்வுகளைக் களைந்துவிட்டு சங்கதனையும் டான்ஸிமையும்
நீங்கள் முயலலாம். ஆனால் அது மிகவும் கடினமானது.

(9) சட்டமன்றத்தில் விகிதாசாரப்
பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருங்கள்
, ஆனால் தனித் தொகுதிகளை வலியுறுத்த வேண்டாம்.

(10) பெரும்பான்மையினரின் ஆட்சியைச்
செயல்படுத்த பஞ்சாப்பை இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கவும்.

(11) உள்ளாட்சி அமைப்புகளில்
பிரதிநிதித்துவ நியமனம் என்று மக்கள் தொகையை அடிப்படையாகக் காட்டி வலியுறுத்த
வேண்டாம். ஆனால் அதைப் பின்பற்ற நேர்ந்தால்
, தனித் தொகுதிகளை வலியுறுத்த
வேண்டாம்.

(12) சில பொதுவான பரந்த கொள்கைகளின்
அடிப்படையில் அரசாங்கப் பதவிகளை நிரப்புவதை ஒழுங்குபடுத்த பொதுச் சேவை ஆணையங்களை
வைத்திருங்கள்.

(13) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி
நிறுவனங்களில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் இருக்கக் கூடாது. ஆனால் பின்தங்கிய
வகுப்பினருக்கான சிறப்பு வசதிகள் வழங்கப்படலாம்
, பொது வருவாயிலிருந்து அவர்களின்
நலனுக்காக சிறப்பு மானியங்கள் வழங்கப்படலாம்.

Posted on Leave a comment

திருமாலிருஞ் சோலை நின்றான் வாணாதிராயன் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

கதையின் காலம் பதினான்காம் நூற்றாண்டு. பாண்டியர்கள், வாணாதிராயர்கள்
காலம். அரசரின் கோவில் திருப்பணிகள், குரு பக்தி, தேச பக்தி அனைத்தும் கலந்து காண முடிந்தது
நம் வரலாறுகளில். பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய ‘யதீந்திரப்ரணவ ப்ரபாவம்’ என்ற
வைணவ வரலாற்று நூல் மேற்கோலிட்ட விஷயம், கோவில் கல்வெட்டுகளில் உள்ள சில செய்திகள்,
சமகால நிகழ்வுகள் எல்லாம் கோத்து இந்தக் கதையைப் புனைந்துள்ளேன். மதுரையின் மேலுமொரு
வரலாற்றுச் சிறப்பு மிக்க, அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட இடம், பெயரும் திரிந்து வணிக
கட்டடங்களோடு இருக்கிறது. பல ஊர்களின் பெயர்கள் திரிந்து தொன்மை மாறி உள்ளன. வரலாற்றிக்குப்
பாதிப்பில்லாமல் சில கற்பனைகளும் உண்டு.
*
பாண்டி மண்டல ஸ்தாபனாச்சாரியார் என்ற விருது
கொண்ட தாங்கள் ஏனோ ஆழ்ந்த சிந்தனையில் உள்ளீர் போல் தெரிகிறதே மன்னா?
அமைச்சரின் கேள்விக்கு திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயர்
உடனடியாய் பதில் தரவில்லை.
ஆம் அமைச்சரே.. பாண்டிய நாட்டை அந்நிய ஆட்சியால் ஏற்பட்ட அழிவிலிருந்து
மீட்டுக் குழப்பத்தை ஒழித்து மதுரையிலிருந்து ஆட்சி செய்ததால்
பாண்டியமண்டல ஸ்தாபனாசாரியன் என்றும், புதுக்கோட்டையில்
கோலோச்சிய சோழனை வென்று
சோழ மண்டல பிரதாபச்சாரியன் என்றும் விருது
கொண்ட இந்த வாணவராய வம்சம், காஞ்சி வரை பரவியிருந்தாலும் இன்றும் விஜய நகர அரசின் கீழ்
தான் இருக்கிறது. இன்று லக்கணதண்ட நாயக்கர் முன் தென்காசி பாண்டியன் இவ்வாறு பேசுவாரென்று
துளியும் எதிர்பார்க்கவில்லை. அதுதான் அடுத்தகட்ட யோசனையில் இருந்தேன்..
மன்னர் அமைச்சரிடம் நீண்ட சிந்தனைக்குப் பின் சொன்னார். அதற்குள்
தேர் மதுரை அரண்மையை நெருங்கிக்கொண்டிருந்தது.
அவர்கள் திருசிராமலையிலிருந்து வந்து கொண்டிருந்தனர்.
அது மிகவும் முக்கியக் காரியமென்பதால் பிரதான அமைச்சர் நரசிங்கத் தேவரும், காரியாதிகாரி
பஞ்சவராயரும் உடன் பயணித்தனர். ஒரு சிறு படையும் உடன் இருந்தது.
அமைச்சரே, நாயக்கர் சொன்ன விஷயம் தொடர்பான முடிவுகள் எடுக்க உடன்
மந்திராலோசனை கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும்..
அவ்வமயம் மன்னர் எதையோ கண்ணுற்றவராய், தேரோட்டி, சற்றே நிறுத்தும்.. அங்கேதோ கூட்டம் கூடியிருக்கிறதே… என்றார். அரசன் பார்வை கூட்டத்தின் நடுவில் இருந்த ஒரு துறவியிடம்
இருந்தது. அவர் வைணவ சின்னங்கள் தரித்து திருவாழியின் நிறத்தையொத்த திருமேனியோடு இருந்தார்.
அவரின் திருமேனி ஒளியே அரசனை அங்கிழுத்தது. தேரும் நின்றது. சாரதி தேரை நிறுத்தும்
காலம் பதினான்காம் நூற்றாண்டில் நாற்பது வருடங்கள் கடந்திருந்தன. பல அரசியல் குழப்பங்களோடு
பாண்டியநாடு விஜயநகரப் பேரரசின் கீழ் இரு பிரிவுகளாய் இருந்தது.
தேரை விட்டு இறங்கி மக்கள் கூட்டம் இருக்குமிடத்திற்குச்
சென்றான் மன்னன். உடன் அமைச்சரும் சென்றார்.
அந்த வைணவத் துறவியைச் சுற்றி சிங்கங்கள் போல் எட்டு
சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர் நடு நாயகமாய் நின்று, அந்த இடத்தின் பெருமையைப் பற்றிச்
சொல்லிக்கொண்டிருந்தார். மன்னன் வந்ததும் தெரியாமல் அங்கிருந்தவர்கள் அதில் மூழ்கியிருந்தனர்.
அவர் திருமாலின் பெருமைகளைச் சொல்ல, அரசனும் நின்று கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள்
நின்ற இடம் பாண்டிய அரண்மனையின் மேல் திசையிலும், கூடல் அழகர் கோவிலுக்கு வடக்கே சற்று
தூரத்தில் இருந்தது.
அங்குதான் வைணவ ஆழ்வாரான பெரியாழ்வார், ஸ்ரீவல்லப
பாண்டியன் சந்தேகத்திற்குத் தக்க சமாதானம் கூற, பொற்கிழி தானே இறங்கி வந்தது. உடன்
திருமாலும் கருடன் மீதேறி வந்து அருளினார். வியூக சுந்தரனான திருமாலின் மீது கண்ணெச்சில்
பட்டுவிடக்கூடாதென்று பெரியாழ்வார்
பல்லாண்டு என்ற தமிழ்ப் பதிகம் பாடினார். இந்தக் கதையைச் சுவைபட, சொல்வன்மை
மிக்கவரான வைணவத் துறவியும் சுற்றி இருந்தோர்க்குக் கூறினார் இந்த பாடலோடு.
கோதிலவாமாழ்வார்கள் கூறுகலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண் டானதுவும் * வேதத்துக்கு
ஓமென்னு மதுபோல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய் *
தான் மங்கலமாதலால்
அன்று பெரியாழ்வார் கருடன் மீது வந்த பெருமானைக் கண்ட
இடத்திற்கே சென்றுவிட்டார் அவர். அங்கிருந்த மணல் அன்றொருநாள் பெரியாழ்வார் திருப்பாதம்
பட்ட இடமாய் இருந்திருக்கும் என்று கூறி அங்கு வணங்கி, விழுந்து புரண்டார். இந்த பக்தியைக்
கண்ட அரசன் தன்னிலையை மறந்தான். அங்கிருந்த சிறு பாலகன் ஒருவர் இவ்வாறு பாடினார்.
ஈதோ கூடல்! ஈதோ புள்ளேறி வந்தவிடம்*
ஈதோ மெய் காட்டிய கரம்பு*
ஈதோ பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான்
பல்லாண்டென்று காப்பிட்ட இடம்*
அந்த பாடல்களைக்கேட்டு ஆஹா..ஆஹா.. என்ற பேரொலியோடு அங்கிருந்தவர்கள் எல்லாம் தொழுது நின்றனர். அப்போதுதான்
அரசன் அங்கு வந்ததை அந்த வைணவ குழாம் கவனித்தார்கள். அரசன் துறவியின் கால்களில் விழுந்து
வணங்கினார்.
மன்னன் தன் விருதுகள் சொல்லாமல், அடியேன், திருமாலிருஞ்சோலை நின்றான் வாணாதிராயன்.. என்றார். அந்த பக்தி, அவரின் பெயர் எல்லாம் கண்டு மன்னர் வைணவ வழியில்
வருபவர் என்று துறவி அறிந்துகொண்டார்.
அருகிருந்த வைணவ அடியார்களில் ஒருவர் துறவி பற்றி, ஸ்வாமி, அழகிய மணவாள ஜீயர். நாங்கள் கோவிலிருந்து (ஸ்ரீரங்கம்) வருகிறோம்.
பாண்டிய நாட்டு திவ்ய தேச யாத்திரை போய்க்கொண்டிருக்கிறோம்
என்று கூறினார்.
ஸ்வாமிகளைத் தரிசித்தது அடியேன் பாக்யம். இந்த பாண்டிய மண்டலமே பேறு
பெற்றது தங்களின் பொன்னடி பட்டதால். இராமானுசரின் மறு அவதாரமான மணவாள மாமுனிகளே அடியார்களோடு
இங்கு வந்தது நாங்கள் செய்த புண்ணியம்.
அரசன், தான் ஏற்கெனவே வைணவத்தில் ஈடுபட்டிருந்ததால் அவர்கள் பற்றி
அறிந்திருந்தார். மேலும் அரசரின் முன்னோர் வாணாதிராயர்கள் சில காலம் முன் மதுரையில்
ஏற்பட்ட அந்நிய படையெடுப்பில் அங்கிருந்த கோவில்களைப் பாண்டியர்களோடு தோள் தந்து காத்தனர்.
அப்போது அங்கு பிரதான அமைச்சரான திருமலையாழ்வார் மூலம் மீண்டும்
வைணவத்தைத் தழுவினர். அவரோடு சேர்ந்து ஸ்ரீரங்கம் உத்ஸவ மூர்த்தியைக் காத்து சேர தேசம்
வரை சேர்த்தனர். வாணாதிராயர்கள் சிறந்த நிர்வாகத் தலைவர்களாக பாண்டியர்களுக்கு ஆபத்துக்காலங்களில்
உதவினர். பாண்டியர்கள் சார்ந்த மதத்தையே ஏற்று நடந்தனர். திருமலையாழ்வார்தான் பின்னாளில்,
அரச பதவியைத் துறந்து திருவாய்மொழிப் பிள்ளை என்ற நாமத்தோடு வைணவத்தை வளர்த்து இந்த
மாமுனிகளைத் தன் சிஷ்யராய்ப் பெற்றார்.
நரசிங்கத்தேவரே, இவர்கள் நம் முன்னோர் இராஜாங்க பிரதானி திருமலையாழ்வார்
வழி வருபவர்கள். ஒரு வகையில் மதுரையம்பதியை பிறந்த வீடாய்க் கொண்டவர்கள். அடியார்களனைவரையும்
நம் அரண்மனை அருகில் இருக்கும் அப்பன் திருவேங்கடமுடையான் மடத்தில் தங்குவதற்கு சிறப்பான
ஏற்பாடுகள் செய்யுங்கள்
என்றார் அமைச்சரிடம்.
பின் மாமுனிகளிடம், அடியேன்… ஸ்வாமிகள்
சந்திவேளையில் கூடல் திருக்கோவில் மங்களாசாசனம் செய்யவேணும். அதற்குள் சிறிது இராஜ்ய
விஷயம் முடித்துவிட்டு வருகிறேன்.
அவரும் ஆமோதித்து
அருள, அனைவரும் செல்லத்தொடங்கினர்.
அரசன் அரண்மனை அடைந்ததும், சிறிது நேரத்தில் இளவரசனோடு மந்திராலோசனை
மண்டபம் விரைந்தார். அங்கு, நரசிங்க தேவர், பஞ்சவராயர், சோழக் கோனார் போன்ற தளபதி,
அரசு அதிகாரிகளும், சுந்தர சோழபுரத்து நகரத்தார், வட்டாற்று நாட்டார், பின்முடிதாங்கினார்
போன்ற ஊர்த்தலைவர்களும் இருந்தனர். அரசனின் உத்தரவின் படி ஊர்த் தலைவர்களும் வந்திருந்தனர்.
அவையோரே… நம் நாட்டின் மீது தாக்குதல் இல்லை. ஆனாலும் நாம் இன்று
சற்று வித்தியாசமான சூழலில் இருக்கிறோம். அது பற்றித்தான் விவாதிக்க இங்கு கூடியுள்ளோம்.
அந்நியப் படையெடுப்பில் சிதைந்து போன நம் பாண்டிய மண்டலம், கம்பண்ண உடையாரால் மீண்டு,
விஜயநகர அரசர்களுக்குக் கீழ் இருந்தது. அந்தக் காலங்களில் பாண்டிய நேரடி வாரிசு இல்லாததால்,
பாண்டியர் மண உறவில் வந்த வாணாதிராயர்கள் பாண்டிய மண்டலத்தில் அரசரானோம். ஆனாலும் தென்காசியைத்
தலைநகராய்க் கொண்டிருக்கும் கொற்கை பாண்டியர்கள் மதுரையைக் கைப்பற்ற ஏற்கெனவே போர்
செய்து தோற்றனர். இப்போதும் பராக்கிரம பாண்டியன் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறார். இவை எல்லாம் தாங்கள் நன்கு அறிந்தது
என்றார் அரசர்.
இரண்டாம் தேவராயரின் அரசியல் அதிகாரி லக்கண தண்ட நாயக்கர் அழைப்பின்
பேரில் திருசிராமலையில் ஒரு கூட்டம் நடந்தது. அங்கு பாண்டியனும் வந்திருந்தார். நாங்கள்
அங்கு சந்திப்போமென்று இருவருமே எதிர்பார்க்கவில்லை..
அரசே, இது என்ன? இருவரும் நேரில்.. தகுந்த பாதுகாப்பு இல்லாமல்..
எதுவும் விபரீதம் நடக்கவில்லையே…?
பதறினார் சோழக்
கோனார்.
அழகர் கிருபையில் விபரீதம் இல்லை. ஆனால் போய் வந்த விஷயம்தான் கொஞ்சம்
யோசிக்க வேண்டியிருந்தது.
என்ன அரசே? பாண்டியர் மீண்டும் ஏதாவது.. என்று பல்லவராயர் சொல்லவும், இல்லை.. விஜயநகர
அரசு தன் ஆளுமையைக் கடல் கடந்து நீட்டிக்க விரும்புகிறது. ஈழம் வரை. ஆம்!. புது யுத்தம்.
சற்றே நிறுத்தித் தொடர்ந்தார். அவர்கள், நம்
படைகளோடு, பாண்டியப் படையும் சேர்த்துக்கொண்டு ஈழத்தைக் கைப்பற்ற நினைக்கின்றனர். ஒரு
பெரும்படை விஜயநகரிலிருந்தும் வரும். இவ்வழியே ஈழம் வரை செல்லும்..
நாம் ஏற்கெனவே விஜயநகர் ஆட்சிக்குட்படாமல் சில காலமாய் தனியே இருக்கிறோம்.
ஆனாலும் சுதந்திரமாய்ச் செயல்படவில்லை. இந்தச் சமயத்தில் நாம் எப்படி அவர்கள் படையை
அனுமதிப்பது, அதுவும் பாண்டிய படைகளோடு சேர்த்து?
என்றார் அமைச்சர்.
ஆம் அமைச்சரே. அதுதான் நானும் யோசித்தேன். பாண்டியர்களும் இதற்கு
உடன்படவில்லை. பின் நாயக்கரிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
என்ன அரசே? அனைவரும் திகைப்பில் கேட்டனர்.
விஜயநகரப் படைகள் நம் மண்டலத்துக்குள் நுழையாது. இந்தப் போரில் படைகள்
நம் பாண்டி மண்டலத்திலிருந்துதான் செல்லும். விஜயநகர முக்கியப் படைகள் மட்டும் வரும்.
தென்காசி பாண்டியர்களும் இதே போல் உதவுவார்கள். நம் படை தென்காசி தாண்டிச் செல்ல இடையூரில்லை.
போரின் வெற்றிக்குப் பின் விஜயநகர அரசிடமிருந்து முற்றும் பிரிந்து பாண்டிமண்டலம் தன்னாட்சி
பெறும். இதுவே சாராம்சம்.
அரசர் தொடர்ந்தார். இப்போது கார்த்திகை
மாதம். வரும் மாசி மாதத்தில் நம் படைகள் கிளம்பும். இங்கிருந்து நான் அரச நிர்வாகம்
செய்வேன். இளவரசன் சுந்தரத்தோளுடையான் நம் படைகளை வழி நடத்திக் கொண்டு செல்வான். ஊர்த்தலைவர்கள்
படைகளைத் தயார் செய்யும் வேலைகளைச் செய்யுங்கள்.
அனைவரும் இதை ஒத்து தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள்.
நல்லது மன்னா. இளவரசரின் இந்த முதல் போரில் நாம் வெற்றிபெறுவோம்.
இந்த வெற்றியின் மூலம் நம் இளவரசரும் பாண்டிமண்டல நவ ஸ்தாபனாச்சாரியர் என்று புகழ்பெறுவார்
என்றார் அமைச்சர்.
யுத்தம் காரணமாய் மாவடை, மரவடை, பொன்வரி போன்ற வாசற்கணக்கு வரிகள்
திருத்தப்பட்டன.

படைகள் செல்லும் வழியில் இருக்கும் குடவர்,
கோவனவர், பூவிடுவார், தழையிடுவார், அணுக்கர் போன்ற பிரிவுகளுக்குத் தகுந்த உத்தரவுகள்
சேர்க்கப்பட்டன. மேலும் பல முடிவுகள் எடுத்து, திருவோலை வரைவர் மூலம் ஓலைப்படுத்தினர்.
அமைச்சர் அப்பன் மடம் சென்று பார்வையிட்டு மாலையில் கூடலழகர் கோவிக்குச்
சென்றார். அங்கு மணவாள மாமுனிகள், கோவிலைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த கிருதுமால் நதியில்
மாலை அனுட்டானம் முடித்துவிட்டு அடியார்களுடன் சென்று சுந்தரராஜப் பெருமானைத் தரிசித்தார்.
பின் அமைச்சரிடம் மன்னனின் வைணவ கோவில் கைங்கர்யங்கள்
பற்றிக் கேட்டார்.
அரசர் திருமாலிருஞ்சோலை அழகரிடம் அளவில்லா அன்பு கொண்டவர். அங்கு
ஸ்வர்ண விமானம் செய்வித்து, மேலும் பல கைங்கர்யங்கள் செய்ய ஏற்பாடு செய்வித்து வருகிறார்.
இதற்கு திருவளவன் சோமயாஜி என்பாரை நியமித்துள்ளார். திருமாலிருஞ்சோலையில் முதல் மாறவர்மன்
சுந்தரபாண்டியரது இராஜ்ய அதிகாரி சோலைமலைப் பெருமாள்
வாணாதிராயர் மடம் என்று ஒன்றை
ஸ்தாபித்து அடியார்களுக்கு அமுது செய்வித்திருந்தார். இப்போது மன்னர் அதைப் புனர்நிர்மாணம்
செய்துள்ளார்.
பெரியநம்பி திருமாலிருஞ்சோலை நின்றான் நிருவாகம் என்று பல வைணவ சந்நிதிகளுக்கு நிவந்தம் தந்துள்ளார் என்று மேலும் பல திருப்பணி பற்றி நரசிங்கதேவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
மன்னரும் சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.
மாமுனிகள் அடியார் குழாங்களோடு திருவோலக்கம் கொண்டிருந்தார். அவரின்
சொல்வன்மையில் அனைவரும் அசையாமல் இருந்தனர். பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பற்றி
மாமுனிகள் வ்யாக்யானம் செய்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மன்னர் தனியே சந்தித்து
உபதேசம் பெற்றார்.
மன்னருடன், இளவரசன் சுந்தரத்தோளுடையான், பட்டத்தரசி ஸ்ரீரங்கநாயகியார்,
அம்மான் நீலங்கரையார் அனைவரும் இருந்தனர். அரசன் திருமாலிருஞ்சோலை கோவிலில் செய்துவரும்
கருவறை, மற்றை சந்நிதி, தங்க விமான கைங்கர்யங்கள் எல்லாம் கேட்டு மாமுனிகள் மிகவும்
சந்தோஷித்து, அவர்கள் அனைவரையும் மறுநாள் உதயத்தில் வரச் சொன்னார்.
மறுநாள் அரசன் வைகை ஆற்றங்கரையில் காலிங்கராயன் படித்துறை சென்று
புனித நீராடி குடும்பத்தோடு கோவில் விரைந்தார். அவர்கள் அனைவருக்கும் அங்கேயே பஞ்ச
ஸம்ஸ்காரங்கள்
1 செய்து வைத்தார் மணவாள மாமுனி. பின்னர் அன்று பின்னிரவே கிளம்பி,
கூராகுலத்தம தாசர் அவதரித்த சிறுநல்லூர், திருப்புல்லாணி, திருவழுதி நாட்டு திருக்
குருகூர்
2, மார்கழி நீராட்டு உற்ஸவம் திருமல்லிநாட்டு ஸ்ரீவில்லிபுத்தூர்
என்று திவ்ய தேச யாத்திரை வழியைச் சொன்னார்
மாமுனிகள். அது கேட்டு மகிழ்ந்து ஆண்டாள் நாச்சியாரின் சில பாசுர அர்த்தங்களைக்
கேட்க விரும்பினான் மன்னன்.
அவரும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்.. என்ற திருமாலிருஞ்சோலை பாசுரங்களைச் சில மணிகளில், இந்த உலகமே கண்ணனின் விளையாட்டு. வீட்டைப் பண்ணி விளையாடும் அவனையே
சரணடைய வேண்டும்
என்று வெகுவாக விளக்கிச் சொன்னார். அவர்கள் யாத்திரை கிளம்பும்
நேரம் வந்தது. ஆச்சாரியார் நடந்து போனால் யாத்திரை குறித்த நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்
போக முடியாது என்று எண்ணி, பொன்னாலும், இரத்தினங்களாலுமான திருப்பல்லக்கை மன்னர் சமர்ப்பித்து
கார்த்திகை மாதப் பனி தாக்காமல் பனிப் போர்வையோடு அன்று இரவே கிளம்பினர். அவர்கள் வைகை
நதியை ஒட்டியே போனார்கள்.
அதிகாலை வேளை வந்ததும், ஒரு கிராமத்தில் பல்லக்கை இறக்க, மாமுனிகளும்
அங்கு நதியில் நீராடி, தன் அனுஷ்டானம் செய்யும் போது, அரசன் திருமாலிருஞ்சோலை நின்றான்
பல்லக்கு தாங்கி வந்த கோலத்தோடு இருப்பது கண்டு வியந்து
உறங்காவில்லி தாசரோ?3 என்று வினவி, நீரும் அவரைப்போல்
அரச குலத்தில் வந்து ஆச்சாரிய பக்தியால் இவ்வாறு பல்லாக்கும் சுமந்து இரவெல்லாம் நடந்து
வந்துள்ளீரே?
என்று அருளினார். இந்த ஊரை தாங்கள்
கடாக்ஷிக்க வேண்டும்
என்று அரசன் வேண்டியபடி அந்த ஊர்க்கு அழகிய மணவாள நல்லூர்4 என்று திருநாமமிட்டார் ஆச்சாரியார்.
மன்னரும் சந்தோஷித்து மதுரை நோக்கிக் கிளம்பினான். அவரது குரு பக்தி
கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். மன்னரைப்போல் குடிகளும் மாறத் தொடங்கினர்.
5
மதுரையில் இளவரசன் போருக்கு ஆயத்த வேலைகளைத் தீவிரமாய்ச் செய்தான்.
அனைத்து நாட்டுக்கும் தானே நேரில் பார்வையிட்டு வந்தான். சில நாட்களில் தூதுவர்கள்
மூலம் நாயக்கரின் செய்தி வந்தது. மன்னன், இளவரசனோடு சேர்ந்து படைகளின் வியூகங்களைச்
செய்தார். தென்காசி பாண்டியன் சற்றே இணக்கமாய் இருந்தான்.
இந்த வேலைகளில் ஆச்சாரியரின் யாத்திரை பற்றியும் கேட்டு வந்தான்
வாணாதிராயர். அவர்கள் சற்றே தாமதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தாலும் அங்கு, ஆண்டாள்
நாச்சியார் தானே அருளி, மார்கழி நீராட்டு உற்ஸவத்தை மாமுனிகள் பொருட்டு நீடித்ததைக்
கேட்டு மகிழ்ந்தான்.
தை கடைசியில் படைகள் பாளையங்களிலிருந்து கிளம்பின. நாயக்கரின் படையும்
வந்தது. சுந்தரத் தோளுடையான் படைகளை நடத்திப் போனான். பராக்கிரம பாண்டியன் தென்காசி
படையோடு அணிவகுத்து வந்தான். சிறுவயதானாலும் இளவரசன் வீரம், கம்பீரம் கண்டு அனைவரும்
ஆச்சரியப்பட்டனர். ஒரு திங்களுக்கு உள்ளாகவே படைகள் இலங்கை அடைந்தன. இதை அறிந்து இலங்கை
மன்னனும் போருக்குத் தாயாராய் இருந்தான். பெரும் போர் மூண்டது.
வாணாதிராயன் சாமர்த்தியமாக மற்றொரு படையை இராமநாதபுரம் கடல் வழியே
அனுப்பியிருந்தார். எதிர்பாராத தாக்குதலால் இலங்கைப் படை குலைந்தது. இருந்தாலும் சில
திங்கள் போர் நீடித்தது. வாணாதிராயன், இளவரசன் பற்றிய முன்னுக்குப் பின் முரணான செய்தியால்
கலக்கமுற்றான். மனக்கவலை அதிகமாகிக் கொண்டே போனது. பட்டத்தரசி ஸ்ரீரங்கநாயகியாருடன்
ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் நாச்சியாரை வணங்க எண்ணினான்.
அது ஆடி மாதம்., ஆண்டாள் நாச்சியார் திருஅவதார உற்ஸவமான திருவாடிப்பூர
உத்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மூன்றாம் நாள். ஆண்டாள் நாச்சியார் திருமல்லி
நாட்டில் இருக்கும் பொன்பற்றி விழுப்பரைய நல்லூர் என்ற சுந்தரதோள் விண்ணகர்
6 கிராமத்திற்கு எழுந்தருளி ஒரு நாள் முழுதும் இருப்பார். பின்னர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வருவார். வாணாதிராயர் அன்று முழுதும் காத்துக்கொண்டிருந்தார்.
ஆண்டாள் நாச்சியார் மீண்டும் வர ஸ்ரீவில்லிபுத்தூர் காலதாமதமானது.
ஆண்டாளைத் தரிசிக்க முடியவில்லையே என்ற கவலையும், இளவரசர் பற்றிய கவலையும் அரசருக்கு
அதிகமானது. சில நேரம் கழித்து ஆண்டாள் சகல பரிவாரங்களோடு ஸ்ரீவில்லிபுத்தூர் அடைந்தார்.
அரசரும் ஆனந்தமாய் தரிசிக்க, அங்குள்ள கோபுரத்தடி மண்டபத்தில் பல்லாண்டு இசைப்பாரான
அரையர்கள் நாச்சியார் திருமொழியை இசை அபிநயத்தோடு சமர்ப்பித்தனர். அதுவும், வாணாதிராயர்
மாமுனிகளிடம் கேட்ட
சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்.. என்ற திருமாலிருஞ்சோலை பதிகம்.
சுந்தரத் தோளுடையான், ஏறுதிருவுடையான் என்று சொல்லும்
போதும்,
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வார்களே என்று அரையர்கள் இசைஅபிநயம் பிடிக்கும் போதும் அரசன் தன் நிலை மறந்து
கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தான். மன்னருக்குக் கோவில் மரியாதைகள் செய்யப்பட்டன.
இரண்டொரு நாட்களில் தூதுவன் மூலம் இளவரசன் பற்றிய நற்செய்தி வந்தது.
பாண்டியபடைகள் வெற்றி பெற்று சுந்தரத்தோளுடையான் தலைமையில் மதுரை நோக்கி வருகின்றன.
மன்னன் சந்தோஷித்து, தன் மனக்குறை தீர திருவமுது, திருமாலை, திருவிளக்கு மற்றும் நித்யபடிக்கு
திரளிற் பற்றில்7 உள்ள மாங்குளம் என்ற ஊரைத்
தானமாகத் தருவதாய் ஸ்ரீரங்கநாத பிரியன் என்ற திருவோலை வரைவார் மூலம் பட்டோலைப்படுத்தினார்.
பின்னர் அது கோவிலில் கல்வெட்டாய் எழுதப்பட்டது
.. சூடிக்கொடுத்தருளிய நாச்சியாற்குத் திருவாடித் திருநாள் நம் குறையறுப்பாகக்
கொண்டருளும் படிக்கு இந்தத் திருநாளுக்கு வேண்டும் அமுதுபடி கரியமுது சாத்துபடி திருப்பரிவட்டம்
திருமாலை திருவிளக்கும் மஞ்சள்காப்பு, கற்பூரம், குங்குமம் கண்டருளத் திருக்காப்பு
சூடம் உட்பட வேண்டும் நைவேத்தியங்களுக்கும் உட்பட்ட வகைக்கு விட்ட வீர நாராயண வளநாட்டுத்
திரளில் பற்றில் மாங்குடி ஆன சுந்தரத்தோள நல்லூர்…
அழகர் திருவுள்ளம்….
மதுரை வந்து சிலநாட்களில் வெற்றிக்கொண்டாட்டம் நடந்தது. மன்னர் தனியாக
நாணயங்கள் வெளியிட்டார்.
சமரகோலாகலன் ஒருபுறம், கருடன் மறுபுறம் என்று ஒரு நாணயமும், பாண்டிய
சின்னமான மீனின் மீது கருடன் அமர்வது போலவும், கருடன், சங்கு, சக்கரம் உள்ளது போலவும்
இருந்தது மற்றை நாணயங்களும் வெளியிட்டார். திருமாலிஞ்சோலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய
வைணவத் தளங்களுக்கு நிறைய கைங்கர்யம் செய்தான்.
திருமாலிருஞ்சோலை அழகருக்கு பச்சைக் கற்பூரம், சந்தனம், வாசனாதி
திரவியங்கள் அரைக்க அழகிய அம்மிக்கல்லை குழவியோடு தந்தான். அதில் தம் ஆச்சாரியரான மணவாள
மாமுனிகளையும், அவரின் முக்கிய எட்டு அடியார்களையும் நினைக்கும் வண்ணம், எட்டு சிங்கங்கள்
தாங்கும் அந்த அம்மியின் அடியில்
திருமாலிருஞ்சோலை
நின்றான் மாவலி வாணாதிராயர் உறங்காவில்லி (தா)ஸந் ஆன சமரகோலாகலன்..
என்று பொறித்தான்.
மற்றைய சைவக் கோவில்களுக்கும் அநேக திருப்பணிகள் செய்ய பாண்டிய மண்டலத்தில்
வைதீக மதம் மீண்டும் தழைத்தது. பின்னாளில் சுந்தர தோளுடையானும் அது போலவே பல நல்ல பணிகளைச்
செய்தான். பல கோவில்களைப் புதுப்பித்தான். குடிகளும் மகிழ்ச்சியாய் இருந்தனர்.
அடிக்குறிப்புகள்:

1. பஞ்ச ஸம்ஸ்காரங்கள் என்பது திருமாலே சரணம் என்று அடைய
ஸ்ரீவைஷ்ணவராக நெறிப்படுத்தும் ஒரு முறை.

2.
இன்று ஆழ்வார் திருநகரி

3. இராமானுசர் காலத்தில் சோழ நாட்டுப் படைத் தளபதி
உறங்காவில்லிதாசர் என்று ஒருவர் ஸ்ரீரங்கத்தில் கைங்கர்யம் செய்தார். அவர்
எப்போதும் கைங்கர்யத்தில் இருப்பதால் உறங்குவதில்லை, ‘உறங்காவில்லி தாசர்’
எனப்பட்டார்.

4. இன்று ‘முத்தரசன்’ என்றுள்ளது அந்த ஊர்.

5. இம்மன்னன் கல்வெட்டில் திருமாலிருஞ்சோலை மாவலி வாணாதிராயன்
உறங்காவில்லிதாசன், சமரக்கோலாகலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.

6. இன்று விழுப்பனூர் என்று வழங்கப்படுகிறது.

7.
இன்று திரளி


Posted on Leave a comment

விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்கள் | அரவிந்த் சுவாமிநாதன்

1918ல் வெளியான கீசக
வதம்
தான் தமிழின் முதல் சலனத் திரைப்படம்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முன்னோடியான அந்த முதல் முயற்சியைச் செய்தவர் ஆர். நடராஜ
முதலியார். அதனைத் தொடர்ந்து
திரௌபதி வஸ்திராபரணம்,மஹிராவணன்,
மார்க்கண்டேயன்
போன்ற பல பேசாப் பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன என்றாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின்
தடையாலும் கட்டுப்பாட்டாலும் அவை மட்டுப்படுத்தப்பட்டன. 1931ல் வெளியான
காளிதாஸ்
தமிழின் முதல் பேசும் படமாகக் கருதப்படுகிறது. அதற்கு முன்பே அதே ஆண்டில்,
குறத்திப்
பாட்டும், டான்ஸூம்
என்ற சிறு படம் (குறும்படம்) வெளியாகியிருக்கிறது.
மொத்தம் நான்கே ரீல்கள் கொண்ட அப்படமே தமிழின் முதல் பேசும்படம் (அ) குறும்படம் என்று
கருதத்தக்கது. அதனைத் தொடர்ந்து புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு
ராமாயணம்,காலவா,சத்தியவான்
சாவித்திரி
, கிருஷ்ண லீலா
போன்ற படங்கள் வெளியாகின. கூடவே அக்காலத்தின் புகழ்பெற்ற நாடகங்களான
வள்ளி
திருமணம்
,ஹரிச்சந்திரா,
பிரகலாதா, நந்தனார்,
கோவலன் போன்றவையும் திரைப்படங்களாகி
வெற்றிபெற்றன.

இவ்வாறாக, நாடு விடுதலையும்
ஆகஸ்ட் 1947க்கு முன்பாகவே சுமார் 400 படங்கள் வரை வெளியாகியிருக்கின்றன. அவற்றில்
அரிய செய்திகளைக் கொண்ட சில படங்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சீதா கல்யாணம் (1934)

தமிழின் ஆரம்ப காலத்தில்
புராண, வரலாற்றுக் கதைகளை மையமாக வைத்தே திரைப்படங்கள் வெளியாகின. அந்த வகையில்
1933ல் தொடங்கப்பட்டு 1934ல் வெளியான படம் சீதா கல்யாணம். பிரபல ஹிந்திப் பட இயக்குநர்
வி.சாந்தாராமின் முயற்சியில் உருவான இப்படத்தின் கதையை அக்காலத்தின் பிரபல எழுத்தாளரான
எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் எழுதியிருந்தார். பாபுராவ் பண்டேர்கர் இயக்கியிருந்தார்.
சீதையின் திருமணத்தைப் பற்றிய இந்தக் கதையில் கதாநாயகன் ராமனாக நடித்தது பிற்காலத்தில்
இசை மற்றும் ஓவிய மேதையாக அறியப்பட்ட எஸ். ராஜம். கதாநாயகி சீதையாக நடித்தது எஸ்.ஜெயக்ஷ்மி.
இவர் ராமனாக நடித்த எஸ்.ராஜத்தின் சகோதரி. மற்றொரு சகோதரி சரஸ்வதி ஊர்மிளையாக நடிக்க,
சகோதரரான பாலசந்தர் ராவண தர்பாரில் கஞ்சிரா வாசிப்பவராக நடித்திருந்தார். இவரே பிற்காலத்தில்
நடிகரும் சிறந்த இயக்குநருமாக உருவாகி, இசை மேதையாகவும் திகழ்ந்த வீணை எஸ்.பாலசந்தர்.
இவர்களது தந்தையான சுந்தரம் ஐயர், ஜனக மகாராஜாவாக நடித்திருந்தார். இவர், அக்காலத்தின்
பிரபல வழக்குரைஞர்களுள் ஒருவர்.

அதுவரை கர்நாடக இசை வல்லுநராகத்
திகழ்ந்து பாடல்கள் எழுதி வந்த பாபநாசன் சிவன், இப்படத்தின் மூலம் பாடலாசிரியராகத்
திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். படத்திற்கு ஏ.என். கல்யாணசுந்தரத்துடன் இணைந்து இசையமைத்திருந்தவரும்
சிவன்தான். இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றாலும், அண்ணனும் தங்கையுமே நாயக,
நாயகியாக நடித்ததால் சர்ச்சையையும் தோற்றுவித்தது.

இப்படத்தைத் தொடர்ந்து
பின்னர், எம்.கே.தியாகராஜ பாகவதருடன் இணைந்து சிவகவியிலும், ராதா கல்யாணம், ருக்மணி
கல்யாணம் போன்ற படங்களிலும் நடித்த எஸ்.ராஜம், பின்னர் நடிப்பிலிருந்து விலகி இசை மற்றும்
ஓவியத்தில் தனது கவனத்தைச் செலுத்தி ஓவிய மேதையானார். எஸ்.ஜெயக்ஷ்மியும் சில படங்களில்
கதாநாயகியாக நடித்துப் பின் இல்லற வாழ்வில் ஈடுபட்டார். எஸ்.பாலசந்தரும் சில படங்களில்
நடித்தார்.
பொம்மை, அந்த நாள் போன்ற சில படங்களை இயக்கினார்.
சில படங்களைத் தயாரித்தார். பின் முழுக்க இசைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

பிரபாத் டாக்கிஸின் முதல்
படமான சீதா கல்யாணம், 1934ல் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் பாபுராவ்
பண்டேர்கருக்கு உதவியாளராகப் பணியாற்றிய முருகதாசா (முத்துசாமி ஐயர்), இதே படத்தில்
ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.ராம்நாத்துடனும், எடிட்டர் ஏ.கே சேகருடனும் இணைந்து
பிற்காலத்தில்
வேல் பிக்சர்ஸ்
என்ற நிறுவனத்தை உருவாக்கினார். பல வெற்றிப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்தது.

பாமா விஜயம் (1934)

பிரபல கர்நாடக சங்கீத
வித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியம் முதன் முதலில் அறிமுகமான படம் இது. மகாராஜபுரம் விஸ்வநாத
ஐயரின் சகோதரர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கதாநாயகன் கிருஷ்ணனாக நடித்திருந்தார். ஜி.என்.பி.க்கு.
நாரதர் வேடம் பி.எஸ்.ரத்னா பாய் மற்றும் பி.எஸ். சரஸ்வதி பாய், பாமா, ருக்மணி ஆக நடித்திருந்தனர்.
துவாபரயுகத்துக் கிருஷ்ணன், கலியுகத்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய தியாகராஜ
சுவாமிகளின் கீர்த்தனையைப் பாடுவதாக ஒரு காட்சி. இது ஒரு முரண் என்றால் படத்தின் இறுதிக்
காட்சியில் கிருஷ்ணன், பாமா, ருக்மணி, நாரதர் எல்லாரும்
ஜன
கண மன
பாடலைப் பாடுகிறார்கள். அந்த வகையில் தேசியகீதம்
முதன் முதல் ஒலித்த தமிழ்ப்படமும் பாமா விஜயம்தான்.

எம்.கே. தியாகராஜ பாகவதர்
என்று அழைக்கப்படும் (நடிகர் தியாகராஜ பாகவதர் அல்ல) எம்.கே. தியாகராஜ தேசிகர் இப்படத்திற்கு
இசையமைத்திருந்தார். (ஒரே பெயரில் இருவர், ஒரே துறையில், ஒரே காலத்தில் அப்போது இருந்திருக்கிறார்கள்!)
மாயவரம் கந்தசாமி தியாகராஜ பாகவதர் என்பது இவரது முழுப்பெயர்.
ரஞ்சித
மோகன கவி
’, பாகவதர்
என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், இசை ஆசிரியர்
என்று பல்வேறு திறமைகளுடன் இயங்கிய இவர்,
தியாகராஜ தீக்ஷிதர்
என்றும்,
தியாகராஜ தேசிகர்
என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். தருமபுருர ஆதினத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை
கந்தசாமி தேசிகர் அக்காலத்தின் சிறந்த தமிழ் வித்வான்களுள் ஒருவர்.
சித்தாந்த
ரத்நாகரம்
என்று போற்றப்பட்டவர்.

தியாகராஜ தேசிகர் அல்லிவிஜயம்,
பக்த துளசிததாஸ் (1937), மாணிக்கவாசகர்
போன்ற பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
சாம்பான்வரலாற்றை எழுதியிருக்கிறார். தக்ஷிணாமூர்த்தி மீதும் ஒரு செய்யுள்
நூலை இயற்றியுள்ளார்.

பவளக்கொடி (1935)

எம்.கே.தியாகராஜ பாகவதர்
கதாநாயகனாக முதன் முதலில் அறிமுகமான படம் இது. கதாநாயகியாக நடித்த எஸ்.டி. சுப்புலட்சுமிக்கும்
அதுவே முதல் படம். இருவரும் ஏற்கெனவே
வள்ளி திருமணம், ஹரிச்சந்திரா உட்பட பல நாடகங்களில்
இணைந்து நடித்த இணையர். இதனால் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. படத்தில்
தியாகராஜ பாகவதர் அர்ஜூனன் ஆக நடித்திருந்தார். அக்காலத்தின் புகழ்பெற்ற நாடக நடிகரான
எஸ்.எஸ். மணி பாகவதர், கிருஷ்ணனாக நடித்திருந்தார். எஸ்.டி. சுப்புலட்சுமி பவளக்கொடியாக
நடித்திருந்தார். இப்படத்தில் ஐம்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. எழுதியவர் பாபநாசம்
சிவன். அற்புதமான வர்ண மெட்டுக்களையும் அவர் அமைத்திருந்தார்.

நாட்டு வழக்கில் இருக்கும்
மகாபாரதத்தின் கிளைக்கதையான அல்லி கதையை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதை இது.
சகுந்தலா
என்ற அக்காலத்து நாடகத்தால் புகழ்பெற்ற
சாந்தா தேவியும்
இப்படத்தில் நடித்திருந்தார். அவரது நாட்டியமும் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. திரைப்பட
விளம்பரத்தில் அது குறித்த செய்தியும் இடம் பெற்றிருக்கிறது. தியாகராஜ பாகவதரைத் தமிழ்நாடெங்கும்
கொண்டு சேர்த்த முதல் படம் இதுதான். இப்படம் ஒன்பது மாதங்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
(கே.சுப்பிரமணியம் –
எஸ்.டி. சுப்புலட்சுமி)
மீனாக்ஷி சினிடோன் தயாரித்திருந்த
இப்படத்தின் இயக்குநர் அக்கால ஜாம்பவான்களுள் ஒருவரான கே.சுப்பிரமணியம். மீனாக்ஷி என்பது
அவரது முதல் மனைவியின் பெயர்; பிற்காலத்தில் இப்படத்தில் நடித்த எஸ்.டி. சுப்புலட்சுமியை
இவர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இருவருமாக இணைந்து
யுனைடெட்
ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன்
என்ற நிறுவனத்தை உருவாக்கினர். அதன் மூலம்
நவீன சதாரம், பாலயோகினி,
பக்த குசேலா, மிஸ்டர்
அம்மாஞ்சி
, கௌசல்யா கல்யாணம்,
சேவாசதனம், தியாகபூமி,
இன்பசாகரன் போன்ற பல படங்களைத்
தயாரித்து இயக்கினார்.

டி.ஆர்.ராஜகுமாரியை திரையுலகில்
அறிமுகம் செய்தது இவர்தான்.
கச்சதேவயானி
படத்தின் மூலம் அறிமுகமான ராஜகுமாரி, அக்காலத்து ரசிகர்களின் கனவுக் கன்னி ஆனார். தென்னிந்திய
திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பை உருவாக்கியவரும் கே.சுப்பிரமணியம்தான்.
தமிழ்த்
திரையுலகின் தந்தை
யாக இவர் மதிக்கப்படுகிறார்.
ரத்னாவளி (1935)

வடமொழியில் ஹர்ஷரால்
எழுதப்பட்ட நாடகம் ரத்னாவளி. இதனைத் தமிழில் நாடகமாக எழுதியிருந்தார் பம்மல் சம்பந்த
முதலியார். அது நாடகமாக நடத்தப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றதால் அதனைப் படமாக்க விரும்பினார்
ஏவி.மெய்யப்பச் செட்டியார். ஏற்கெனவே அவர் கிராமபோன் இசைத்தட்டுக்களுக்காக
சரஸ்வதி
ஸ்டோர்ஸ்
என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார்.
அதனை அடுத்து அவர்
சரஸ்வதி டாக்கீஸ்
என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் எடுக்கப்பட்ட படம்
தான்
ரத்னாவளி.

நாடக உலகில் வெற்றிகரமாகத்
திகழ்ந்த பி.எஸ். ரத்னா பாய், பி.எஸ். சரஸ்வதி பாய் சகோதரிகள் இந்தப் படத்தில் கதாநாயகிகளாக
நடித்தனர். தென்னிந்திய நாடக சங்கீத ராணி, ஆர்மோனியச் சக்கரவர்த்தினி, கோகில கான வாணி
என்று போற்றப்பட்டவர் ரத்னா பாய். சங்கீத திலகம் என்று போற்றப்பட்டிருக்கிறார் சரஸ்வதி
பாய். இவர்கள் இருவரும் சகோதரிகள். நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையைச் சேர்ந்தவர்கள்.
நிறைய கிராமபோன் தட்டுக்கள் இவர்கள் பாடி அக்காலத்தில் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் சரஸ்வதி
பாய் வாஸவதத்தை ஆகவும், ரத்னா பாய் ரத்னாவளி ஆகவும் நடித்திருந்தனர். நாயகனாக நடித்தது
எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி. இவர் அக்காலத்தின் வெற்றிப்பட நாயகர்களுள் ஒருவர். இப்படத்தில்
கதாநாயகியின் தோழி காஞ்சனமாலையாக அறிமுகமானவர்தான் டி.ஏ.மதுரம். முக்கிய வேடங்களில்
சி.பஞ்சு, ஏ.டி.கிருஷ்ண சர்மா, எம்.ஆர். சுப்பிரமணிய முதலியார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

தென்னாட்டுச் சார்லி சாப்ளின்
என்று போற்றப்பட்ட சி.எஸ். சாமண்ணா இந்தப் படத்தில் நகைச்சுவை வேடமேற்றிருந்தார். உடன்
சுப்ரமணிய முதலியார், அங்கமுத்து, பபூன் ஷண்முகம், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் நகைச்சுவை
வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதியிருந்தார். பிரஃபுல்லா
கோஸ் இயக்கியிருந்தார். 

ஒரே அரசனை ஒன்று விட்ட
சகோதரிகளான இருவர் மணக்கும் கதை இது. கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய
வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் அக்காலத்தில் நகைச்சுவைக் காட்சிகளுக்காக பரவலான ரசிக
வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பி.எஸ்.ரத்னாபாய், பி.எஸ்.சரஸ்வதிபாய் பிற்காலத்தில் என்ன
ஆனார்கள் என்று குறிப்புகள் ஏதும் தற்போது கிடைக்கவில்லை. இந்தப் படத்தின் பிரதியும்
கைவசம் இருப்பதாகத் தெரியவில்லை.

மிஸ். கமலா (1936)
(T.P. ராஜலட்சுமி)
தென்னிந்தியாவின் முதல்
பேசும் படமான
காளிதாஸ்
படத்தின் நாயகி டி.பி. ராஜலட்சுமி. இவர் அடுத்துக் கதாநாயகியாக நடித்த படம் மிஸ்.கமலா.
படத்திற்குக் கதை, வசனம் எழுதி இயக்கியவரும் இவரே! தயாரிப்பாளரும் இவர்தான். முதல்
பெண் திரைப்படத் தயாரிப்பாளர், முதல் பெண் திரைப்படக் கதாசிரியர், முதல் பெண் இயக்குநர்
என்று பல்வேறு பெருமைகளை அவருக்கு பெற்றுத் தந்த படம் இது.

1936ல் தனது ராஜம்
டாக்கீஸ்
மூலம் இப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார்
ராஜலட்சுமி. தனது முதல் நாவலான
கமலவல்லி அல்லது டாக்டர்
சந்திரசேகரன்
என்ற படைப்பையே திரைப்படமாக எடுத்திருந்தார்.
இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குநர் என்ற சிறப்பும் இவருக்குக் கிடைத்தது. (இந்தியாவின்
முதல் பெண் ஃபாத்திமா பேகம்.)

ஒரு பெண் எழுத்தாளரின்
நாவல் முதன்முதலில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது என்றால் அது
மிஸ்.கமலாதான்.
அதுபோல திரைப்படமாகத் தயாரான இரண்டாவது நாவல் இதுதான். (முதல் நாவல்/படம் வடுவூர் துரைசாமி
ஐயங்காரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட
மேனகா’.) இப்படத்தில் ராஜலட்சுமியுடன் டி.வி.சுந்தரம்,
டி.பி.ராஜகோபால், வி.எஸ்.மணி, ஸ்டண்ட் ராஜூ, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்குப்
பாடல்களை எழுதி, இசையும், படத்தொகுப்பையும் கூட ராஜலட்சுமியே செய்திருந்தார்.

இது ஒரு வித்தியாசமான
காதல் கதை. புரட்சி அம்சம் கொண்ட கதை என்றும் சொல்லலாம். கதாநாயகி கமலவல்லி (டி.பி.ராஜலட்சுமி)
கண்ணப்பன் என்பவனைக் காதலிக்கிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் டாக்டர் சந்திரசேகரனுடன்
திருமணம் நடக்கிறது. சந்திரசேகரனிடம் தன் காதல் பற்றிச் சொல்கிறாள் கமலவல்லி. பல்வேறு
பிரச்சினைகளுக்கிடையே அவன் அந்தக் காதலனைத் தேடிக் கண்டுபிடித்து அவனுக்கே அவளை மீண்டும்
ஊரறியத் திருமணம் செய்து வைக்கிறான் – இதுதான் நாவலின் கதை. விருப்பமின்றி வேறு ஒருவருடன்
திருமணம் நிகழ்ந்தாலும், அவருடன் சேர்ந்து வாழாது பண்பாடு, கலாசாரம் போன்ற மரபுகளை
மீறி ஒரு பெண் தன் காதலனையே மீண்டும் திருமணம் செய்து கொள்வதைக் காட்டும் படம். அது
அக்காலத்தில் மட்டுமல்லாது இக்காலத்திலும் புரட்சிதான். தமிழில் இம்மாதிரியான முற்போக்குச்
சிந்தனைகளுடன் வெளியான முதல் படம் அதுதான்.

படத்தின் புரட்சிகரமான
முடிவைக் கண்டு பலர் கொதித்தனர். திரையரங்குகள் முன் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆனாலும்
படம் வெற்றி பெற்றது. இப்படத்தின் சிறப்பாக, பாடல் காட்சி ஒன்றில் டி. என். ராஜரத்தினம்
பிள்ளையின் நாதஸ்வரம் இடம் பெற்றதைச் சொல்லலாம். (இந்தக் கதை பிற்காலத்தில் பிரபல நகைச்சுவை
ஒருவரின் வாழ்க்கையிலும் உண்மையாக நடந்தது. அதை மையமாக வைத்து பிற்காலத்தில் திரைப்படம்
ஒன்றும் உருவானது.)

சினிமா
ராணி
என்று போற்றப்பட்ட ராஜலட்சுமி, உடன் நடித்த நடிகர்
டி.வி.சுந்தரத்தைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தனக்குப் பிறந்த மகளுக்கு
தனது படம் மற்றும் கதாநாயகியின் நினைவாக
கமலா
என்று பெயர் சூட்டினார்.
பக்த குமணன் அல்லது ராஜயோகி, மதுரை வீரன் (1938), வீர அபிமன்யு, சாவித்ரி, திரௌபதி வஸ்திரா பரிணயம், குலேபகாவலி, ஹரிச்சந்திரா, நந்தகுமார், ஜீவஜோதி, இதயகீதம் போன்ற படங்களில் நடித்த
ராஜலட்சுமி, 1964ல் காலமானார். படத்தின் பிரதி தற்போது கிடைக்கவில்லை

சத்யசீலன் (1936)

1936ம் ஆண்டில் தமிழில்
வெளியான முக்கியமான படங்களுள் இதுவும் ஒன்று. கதாநாயகனாக நடித்தவர் எம்.கே. தியாகராஜ
பாகவதர். அவர் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான திருச்சி தியாகராஜா ஃபிலிம்ஸை ஆரம்பித்துத்
தயாரித்த முதல் படம் இதுதான். எம்.எஸ்.தேவசேனா கதாநாயகியாக நடித்திருந்தார். இவரது
இயற்பெயர் கிருஷ்ணவேணி. இப்படத்தில் நடிப்பதற்காக பாகவதர்
தேவசேனா
என்று பெயரை மாற்றி விட்டார். டைகர் வரதாச்சாரியிரன் சகோதரரிடம் இசை பயின்றவர் தேவசேனா.
நாட்டியமும் அறிந்தவர். படத்தை இயக்கியிருந்தவர் பி.சம்பத்குமார். தன் நண்பரும், தனது
நாடகங்கள் பலவற்றுக்கு இசையமைத்தவருமான ஜி. ராமநாதனை இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக்கினார்
பாகவதர். பாடல்களை ஜனகை கவி குஞ்சரம் என்பவர் எழுதியிருந்தார்.

படத்தின் கதை, வசனத்தை
எல்.ராஜமாணிக்கம் எழுதியிருந்தார். ஜோதிபுரி நாட்டின் முதன்மந்திரி திடீரென இறந்து
போகிறார். சேனாதிபதியும் தன் பதவியை ராஜினாமா செய்கிறார். இரண்டாவது மந்திரி முதன்மந்திரியாகிறார்.
சேனாதிபதி பதவி காலியாக இருக்கிறது. அந்த இடத்தைப் பிடிப்பது யார் என்ற போட்டி ஏற்படுகிறது.
மக்கள் இறந்துபோன முதல் மந்திரியின் மகனும் வீரனுமான சத்தியசீலனை (எம்.கே.டி.) ஆதரிக்கின்றனர்.
அரச குடும்பத்தினரோ மன்னரின் மருமகனான பிரதாபருத்ரனை ஆதரிக்கின்றனர். கொடியவனான அவன்
பல்வேறு சூழ்ச்சிகள் செய்து ஆட்சியைப் பிடிக்க எண்ணுகிறான். இறுதியில் சத்தியசீலன்
எப்படி வென்று ஆட்சியைப் பிடிக்கிறான், மன்னனின் மகளான பிரேமாவதியை (எம்.எஸ்.தேவசேனா)
மணக்கின்றான் என்பதே கதை.

பம்பாய் வாடியா மூவிடோனில்
தயாரிக்கப்பட்ட இப்படத்தில் சுதந்திரம், ஆட்சி தொடர்பான வசனங்களும், சில பாடல்களும்
இடம் பெற்றிருந்தன. பிரிட்டிஷ் அரசின் கடுமையான ஆட்சேபத்தால் அவை நீக்கப்பட்டதுடன்,
பாடல் வரிகளும் மாற்றப்பட்டன.

பாரதியாரின் பாடலான வீர
சுதந்திரம் வேண்டி நின்றார்
என்ற பாடலையும் மெட்டையும்
அப்படியே கையாண்டு வரிகளை மட்டும் மாற்றி இப்படத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். படத்தில்
இடம் பெற்ற அப்பாடல் இதுதான்.
வீரர்கள் வாழ்வினை வேண்டிநின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ
ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டார்
கள்ளிர் அறிவைச் செலுத்துவாரோ
பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்று
வெற்றியை அறிந்தாரேல் – மானம்
துறந்தும் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று நினைப்பாரோ..
இப்படத்தில் சொல்லு
பாப்பா..நீ சொல்லு பாப்பா சுகம் பெற வழி ஒன்று சொல்லு பாப்பா

என்ற பாடலும் இடம் பெற்றிருக்கிறது. அது முதலில்
சுதந்திரம்பெற வழி நீ
சொல்லு பாப்பா
என்றே இடம் பெற்றிருந்தது. பிரிட்டிஷாரின் எதிர்ப்பால்
வரிகள் மாற்றப்பட்டன. மட்டுமல்லாமல் உழைப்பை வலியுறுத்தியும், குடியை எதிர்த்தும் இப்படத்தில்
பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாபநாசம் சிவன் எழுதிய, தோடி ராகத்தில் அமைந்த
தாமதமேன்
சுவாமி
என்ற பிரபல கர்நாடக இசைப் பாடலும் இப்படத்தில்
இடம் பெற்றிருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியாக
நடித்த தேவசேனா பிற்காலத்தில்  
நந்தனார் படத்தில் நடித்தவரும்,
பிரபல கர்நாடக இசைக்கலைஞருமான எம்.எம்.தண்டபாணி தேசிகரை மணந்து கொண்டார். படத்தின்
பிரதி இப்போது கிடைக்கவில்லை

பக்த குசேலா (1936)

பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம்,
தனது முதல் படமான
நவீன சதாரம் படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து இயக்கிய படம்
பக்த குசேலா.
பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான பாபநாசம் சிவன் நடித்த முதல் படம் இதுதான்.
அவர் குசேலன் வேடத்தில் நடித்திருந்தார். அவரது மனைவி சுசீலையாகவும், நண்பன் கிருஷ்ணனாகவும்
இரு மாறுபட்ட வேடங்களில் நடித்தவர் எஸ்.டி. சுப்புலட்சுமி. பிற்காலத்தின் தன் பாடல்களுக்காக
மிகவும் புகழடைந்த ஆர்.பாலசரஸ்வதி தேவி இப்படத்தின் மூலம்தான் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
பட்டு ஐயர், வித்வான் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1936ல் வெளியான
இப்படம் அக்காலத்தின் வெற்றிப்படங்களுள் ஒன்று.

தமிழில் வெளிவந்த முதல்
இரட்டை வேடத் திரைப்படம் இதுதான் எனலாம். தமிழில் முதன்முதலில் மாறுபட்ட இரட்டை வேடங்களில்
நடித்த பெண் கதாநாயகி என்ற பெருமையும் எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு இப்படம் மூலம் கிடைத்தது
(ஆண்: பி.யு.சின்னப்பா, படம்: உத்தமபுத்திரன், ஆண்டு: 1940.) பக்த குசேலா படத்தின்
பிரதி இப்போது இல்லை.

இரு சகோதரர்கள் (1936)
புராணப் படங்களே அதிகம்
வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படங்கள் சிலவும்
வந்தன. அவற்றுள் ஒன்று இது. எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படம் 1936ல் வெளியானது.
சதி லீலாவதி
திரைப்படத்திற்குப் பிறகு
டங்கன் இயக்கிய இரண்டாவது படம் இது. கதாநாயகன்
கே.பி.கேசவன். நாயகி, எஸ்.என்.விஜயலட்சுமி. உடன் எம்.கே.ராதா, எஸ்.என்.கண்ணாமணி, கே.கே.பெருமாள்,
டி.எஸ்.பாலையா, கிருஷ்ணவேணி, எம்.எம்.ராதாபாய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில்
எம்.ஜி.ஆர் காவலராக தம்முடைய சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்
நடித்த இரண்டாவது படம் இது.

படத்தின் கதையை பிரபல
எழுத்தாளரும் கவிஞரும் திரைப்பட இயக்குநருமான ச.து.சு.யோகி எழுதியிருந்தார். திரைக்கதை
மற்றும் பாடல்களும் அவரே! இசை: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பரூர் எஸ். அனந்தராமன்.

அண்ணன் – தம்பி இருவருக்கிடையே
எழும் பிரச்சினைகளை நாடக்குழுக்களின் பின்னணியில் இப்படத்தில் சொல்லியிருந்தார் யோகி.
அதுவரை தமிழில் முப்பது, நாற்பது, ஐம்பது எனப் பாடல் வந்து கொண்டிருந்த காலத்தில் அவற்றை
வெகுவாகக் குறைத்து உண்மையான சினிமாவைக் காட்ட விரும்பினார் டங்கன். அதனால் இதில்
13 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றன. வசனங்களோடு கூடவே காட்சி அமைப்பிற்கும் மிகுந்த முக்கியத்துவம்
கொடுத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார் டங்கன். கதைக்குத் தொடர்பில்லாத நகைச்சுவைக்
காட்சிகளே திரைப்படங்களில் அதிகம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், கதையோடு இணைந்த
நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன. இப்படத்தின் மேம்படுத்தப்பட்ட
வடிவமே பின்னர்
நாம் இருவர்
என்ற திரைப்படமாக வெளி வந்தது எனலாம். ச.து.சு. யோகியின் இரண்டாவது படம்
அதிர்ஷ்டம்.
வி.வி.சடகோபன், சூர்யகுமாரி, கொத்தமங்கலம் சுப்பிரமணியன், செல்லம், தமயந்தி ஆகியோர்
நடித்திருந்தனர். அதுவும் ஒரு வெற்றிப்படமே!
இரு சகோதரர்கள்
படத்தின் பிரதி இப்போது கிடைப்பதாகத் தெரியவில்லை.

நவயுவன் (1937)
நவயுவன்
அல்லது கீதாசாரம்
என்ற தலைப்பில் 1937ல் வெளியான இப்படத்தின்
கதாநாயகன் பிரபல கர்நாடக இசைக்கலைஞரான வி.வி.சடகோபன். தமிழ்த் திரையுலகின் முதல் பட்டதாரி
நாயகன் இவர்தான். ஹாலிவுட் இயக்குநரான மிசெல் ஒமலெவ் இப்படத்தை இயக்கியிருந்தார். வெளிநாட்டில்,
குறிப்பாக லண்டனில் படம் பிடிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். சடகோபன் நடிகனாகத்
தொடங்கி, பாடகராக, இசையமைப்பாளராக, கவிஞராக, எழுத்தாளராக,, பத்திரிகாசிரியராக, இசைப்
பேராசிரியராக உயர்ந்து, பலதளங்களில் சாதனை புரிந்த கலை மேதை. இவரது இரண்டாவது படமான
மதனகாமராஜன்தான்
ஜெமினி நிறுவனத்தின் முதல்
படமாகும்.
இப்படத்தில் (மதனகாமராஜன்)
சடகோபன் கதாநாயகனாக நடிக்க, வசந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். எழுத்தாளர் பி.எஸ்.
ராமையா கதை-வசனம் எழுதியிருந்தார். பாடல்கள்: பாபநாசம் சிவன். இசை: எம்.டி.பார்த்தசாரதி,
எஸ்.ராஜேஸ்வரராவ். ஜெமினியின் முதல் வெற்றிப்படமாக இது அமைந்தது.
நவயுவன்
திரைப்பட உருவாக்கத்திற்காக முதன்முதல் லண்டன் சென்ற தமிழ் எழுத்தாளர் பி.எஸ்.ராமையாதான்.
இவர் சினிமா பற்றி எழுதியிருக்கும் நூல் குறிப்பிடத்தகுந்தது.
சிறந்த நடிகராக இருந்து,
சிறந்த கர்நாடக சங்கீதக் கலைஞராக உயர்ந்த வி.வி.சடகோபன், ஒரு சமயம் டெல்லியில் இருந்து
ரயில் பயணம் மேற்கொண்டார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கூடூர் ரயில் நிலையத்தில் இறங்கியவர்,
அதன்பின் மர்மமான முறையில் காணாமல் போய் விட்டார். அவர் ஹிமாலயத்திற்குச் சென்று துறவு
பூண்டு விட்டார் என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல்.

சதி அஹல்யா (1937)

மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தாரின்
முதல் படம்
சதி அஹல்யா.
டி.ஆர்.சுந்தரம் இயக்கிய முதல் படம் இது. நடிகையும், பாடகியுமான யூ.ஆர்.ஜீவரத்தினம்
முதன்முதலில் அறிமுகமான படமும் இதுதான். அவருடைய முதல் பாடல் இடம்பெற்ற படமும் இதுவே.
(தவமணி
தேவி)

ஆனால், இப்படத்தின் கதாநாயகி
தவமணி தேவி. இவர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். இப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
புராணப் படமான அகலிகையின் கதை இது. நாயகனாக எஸ்.வி.தத்தாச்சார் நடித்திருந்தார். உடன்
எஸ்.டி.சுப்பையா, டி.எம்.சங்கர், எஸ்.என்.சிவக்கொழுந்து உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பாடலை மதுரை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதியிருந்தார். இசை:ஆர்.பாலுசாமி. தவமணி தேவி, முதன்முதலில்
நீச்சல் உடையில் நடித்த கதாநாயகி என்ற சிறப்பைப் பெற்றது இப்படம் மூலம் தான்.

நந்தகுமார் (1938)

டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாக
முதன்முதலில் அறிமுகமான படம் நந்தகுமார். அப்போது அவருக்கு வயது 14. கிருஷ்ணனாக இப்படத்தில்
அவர் நடித்திருந்தார். அவருக்குத் தாய் யசோதாவாக டி.பி.ராஜலட்சுமி நடித்திருந்தார்.
கதாநாயகி ராதையாக டி.எஸ்.ராஜலக்ஷ்மி நடித்திருந்தார். டி.ஆர்.ராமச்சந்திரன், பிரபல
இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் ஆகியோர் அறிமுகமான படம் இதுதான். தமிழில் முதல்
பின்னணிக் குரல் ஒலித்தது இப்படத்தில்தான். கிருஷ்ணரின் தாய் தேவகியாக நடித்த நடிகையின்
குரல் வளம் சரியில்லாததால் அவர் பாடலுக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகி லலிதா வெங்கட்ராமன்
பின்னணி பாடினார். ஏவி.மெய்யப்பச்செட்டியாரின் பிரகதி பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்திருந்தது.

ஸ்ரீராமானுஜர் (1938)
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான
சங்கு சுப்பிரமணியம் நடித்த படம்
ஸ்ரீராமானுஜர்.
இப்படத்தில் அவர் ராமானுஜராக நடித்திருந்தார். உடன் படத்தில் எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி,
கலைமகள் ந. ராமரத்னம், சீனிவாச வரதன், ஜி.ஏ.ஞானாம்பாள், கமலாம்பாள் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பாடல்களை எழுதியவர்: பாரதிதாசன். வசனத்தை எழுதியவர் வ.ரா. இயக்கம்: ஏ.நாராயணன்.
ராஜி
என் கண்மணி
படத்திற்கு வசனம் எழுதியவரும் சங்கு சுப்பிரமணியம்தான்.

ஜலஜா (1938)

நாட்டியத்தை அடிப்படையாக
வைத்து உருவான முதல் தமிழ்ப்படம்
ஜலஜா அல்லது நாட்டிய
மகிமை
. 1938ல் இப்படம் உருவானது. படத்தின் கதாநாயகியாக
நடித்தவர் கும்பகோணம் ஸ்ரீ பானுமதி என்பவர். ஜி.கே.சேஷகிரி இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.
கதை வசனத்தை எழுத்தாளர் மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன், டாக்டர் வி.ராகவன் மற்றும் ஜி.கே.சேஷகிரியுடன்
இணைந்து எழுதியிருந்தார். படத்தை ஜி.கே.சேஷகிரி மற்றும் ஆர்.ஆர்.கௌதம் இணைந்து இயக்கியிருந்தனர்.
இப்படத்தின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார், மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன். பாடல்கள்,
இசை: ஏ.என்.கல்யாணசுந்தரம். பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பரூர் எஸ்.அனந்தராமன் இசைக்குழுவின்
தலைவராகப் பணி புரிந்த படம் இது.

இன்பசாகரன் (1939)
இயக்குநர் கே. சுப்ரமணியத்தின்
தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம். கோவை அய்யாமுத்து அவர்கள் எழுதிய நாடகத்தைப்
பார்த்து வியந்த இயக்குநர் அதன் உரிமையை வாங்கிப் படமாக எடுத்தார். கதாநாயகியாக எம்.ஆர்.சந்தானலஷ்மி
நடித்திருந்தார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் தன் குழுவினருடன் இந்தப் படத்தில்
நடித்திருந்தார். நம்பியாரும் முக்கிய வேடமேற்றிருந்தார். தயாரிப்பு முடிந்து, படத்தை
வெளியிடும் முன்னர் ஸ்டூடியோ தீ விபத்தில் சிக்கியது. அனைத்துப் படச் சுருள்களும் எரிந்து
அழிந்தன. இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஒரு சில பாடல்கள் மட்டுமே நமக்குக் காலத்தின்
சாட்சியாக இருக்கின்றன. எரிந்துபோன ஸ்டூடியோவை ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள்
வாங்கி, அங்கே ஜெமினி ஸ்டூடியோவை நிர்மானித்தார்

வாமனாவதாரம் (1940)
டி.ஆர்.மஹாலிங்கம் மாஸ்டர்
டி.ஆர்.மஹாலிங்கம்
ஆக நடித்த இரண்டாவது படம். கதையை சி.ஏ.லக்ஷ்மணதாஸ்
எழுதியிருந்தார். பாடல்களை எழுதியவர் சி.எஸ்.ராஜப்பா என்ற இயற்பெயர் கொண்ட கம்பதாசன்.
கம்பன்மீது கொண்ட பற்றால் கம்பதாசன் ஆன கவிஞர். இவர் ஏற்கெனவே
திரௌபதி
வஸ்திராபகரணம்
, சீனிவாச கல்யாணம்
போன்ற படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். நடிப்போடு பாடல் எழுதுவது, இசையமைப்பது,
கதை, வசனம் எழுதுவது என்று பல்வேறு திறமைகளைக் கொண்டவர். இவர் பாடல் எழுதிய முதல் படம்
இதுதான். இசை: என்.பி.எஸ்.மணி. இயக்கம்: பிரேம் சேத்தனா.

தொடர்ந்து மகாமாயா,
ஞானசௌந்தரி,
மங்கையர்க்கரசி,
சாலிவாகனன்,
லைலா மஜ்னு,
வனசுந்தரி,
சியாமளா,
அமரதீபம் எனப் பல படங்களில் கம்பதாசனின்
பாடல்கள் இடம்பெற்றன. பி.யு.சின்னப்பாவுக்கு இவர் எழுதிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

மஹாபலிச் சக்கரவர்த்தி
மற்றும் வாமனரின் கதைதான் இது. ஆனால், வேறு ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வாமனன் ஆக நடித்தது டி.ஆர்.மஹாலிங்கம். என்.பி.எஸ்.மணி, வி.வி.எஸ்.மணி, டி.கே.உபேந்திரநாத்,
ஆர்.பாலசுப்பிரமணியம் போன்றோர் உடன் நடித்திருந்தனர்.
*
அந்தக் காலத் திரைப்படங்கள் பற்றி மேலும் சில
சுவாரஸ்யமான செய்திகள்:
* கர்நாடக சங்கீத வித்வான்
மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஒரே படம் பக்த நந்தனார் (1935).

* பெண்களே இல்லாமல் தயாரிக்கப்பட்ட
முதல் படம்
பக்த ராமதாஸ்
(1935).

* என்.எஸ்.கிருஷ்ணன்
அறிமுகமான படம் மேனகா (1935).

* தமிழ்த் திரையுலகில்
அதிகம் பாடல்கள் இடம் பெற்ற படம் – இந்திர சபா. 79 பாடல்கள். (1936)

* தமிழின் முதல் ஆக்‌ஷன்
படம் 1936ல் வெளியான மெட்ராஸ் மெயில். சண்டைக் கலைஞரான பாட்லிங் மணி (Battling
Mani) இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

* குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து உருவாக்கப்பட்ட முதல் குழந்தைகள் படம் – பால யோகினி. (1937)

* பாரதிதாசன் முதன்முதலில்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வெளியான படம் பாலாமணி அல்லது பக்காத் திருடன்.
(1937)

* சுதேசி இயக்க ஆதரவு,
தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்திய முதல் படம் சேவாசதனம். (1938)

* பிரபல சங்கீத வித்வான்
எஸ்.வி.சுப்பையா பாகவதர் கதாநாயகனாக நடித்த படம் கம்பர். வேல்பிக்சர்ஸ் தயாரித்திருந்த
இப்படம் 1938ல் வெளியானது. சி.எஸ்.யு. சங்கர் இயக்கியிருந்தார். எல்.நாராயண ராவ், மங்களம்
உள்ளிட்டோர் உடன் நடித்திருந்தனர்.

* முதன்முதலில் காடுகளில்
எடுக்கப்பட்ட படம் வனராஜா கார்ஸன். (1938)

* டி.ஏ.மதுரம் கதாநாயகியாய்
நடித்த முதல் படம் பாண்டுரங்கன் அல்லது ஜே ஜே விட்டல். (1939)

* தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்திய
முதல் படம் பக்த சேதா. (1940)

* மதுவிலக்கை வலியுறுத்தி
உருவான முதல் படம் விமோசனம். (1940)

* பிரபல நாதஸ்வர வித்வான்
டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கதாநாயகனாக நடித்த படம் காளமேகம். (1940)

* ஆண் வேடத்தில் நடித்த
பெண் கதாநாயகிகள்: டி.பி.ராஜலக்ஷ்மி, பி.எஸ்.ரத்தினாபாய், பி.எஸ்.சிவபாக்கியம், கே.பி.சுந்தராம்பாள்.

* பிரபல நாதஸ்வர வித்வான்
திருவெண்காடு சுப்பிரமணியம் கதாநாயகனாக நடித்த படம் காத்தவராய சாமி.
*

Posted on Leave a comment

அமைதி வழியில் அரசியல் புரிந்த மாமேதை பி.எஸ்.சிவசாமி அய்யர் (1864-1946) | பா.சந்திரசேகரன்

முத்திரை பதித்த பல அரசியல்
தலைவர்களை இந்திய சுதந்திரப் போராட்டம் உருவாக்கியது. அவர்களுக்கு உந்துகோலாக இருந்தது
முழு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற தேசப்பற்றுதான். இந்தியர் என்கிற ஒற்றுமைதான்.
அன்றி, எந்த ஒரு இனமோ, மதமோ, சாதியோ அல்ல. சுதந்திரப் போராட்ட அரசியல் தலைவர்கள் சிலர்
ஆங்கிலேய அரசை எதிர்த்து நேரடியாகக் கிளர்ச்சி செய்து பல்வேறு மாற்று முயற்சிகளைச்
செய்து வந்தார்கள். அதே சமயம் சில அரசியல் தலைவர்கள் ஆங்கிலேய அரசின் ஆதிக்க ஆட்சிமுறையை மாற்ற அரசின் பணிகளை ஏற்று உள்ளிருந்து
பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளார்கள்.

இந்த இரண்டாவது ரக அரசியல்
தலைவர்கள் அப்பொழுது மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் அரசுக்கு எதிராகக்
குரல் கொடுப்பவர்கள், ஆனால் நேரடியாகப் போராட்டத்தின் மூலம் செயல்பட விரும்பாதவர்கள்.
இவர்கள் கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசியல் சாசன முறையில் சுதந்திரம் பெறவேண்டும்
என்று எண்ணினார்கள். இவர்கள் ஆங்கிலேய அரசின் கொடுங்கோல் ஆட்சியை எழுத்துப்பூர்வமாக
எதிர்க்க வேண்டும்; எவ்விதத்திலும் வன்முறையோ உயிர்ச் சேதமோ ஏற்படாமல் போராட வேண்டும்
என்று வலியுறுத்தினார்கள். ஆங்கிலேய அரசுக்கு எதிராக நேரடியாகக் கிளர்ச்சி மற்றும்
போராட்டத்தின் மூலம் முத்திரை பதித்த அரசியல் தலைவர்களுக்கு சற்றும் குறையாத வகையில்
பல மிதவாத அரசியல் தலைவர்கள் அரசியல் சாசனம் மூலமாக ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்துள்ளதை
வரலாற்று ஆய்வில் நாம் காணமுடிகிறது. அப்படிப்பட்ட சில தலைவர்கள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில்
கொடிகட்டிப் பறந்துள்ளார்கள்.

அந்த வகையில் பழமானேரி
சுந்தரம் சிவசாமி அய்யர் முற்போக்கான கொள்கைகளை ஆதரித்த ஒரு முக்கியத் தலைவர். பெரும்பாலும்
அவர் பி.எஸ்.சிவசாமி அய்யர் என்று அழைக்கப்பட்டார். மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர்
காலத்துக்கு முன்னர் மிதவாத காங்கிரஸ் வாதியாகவும், நல்ல தேசிய வாதியாகவும் திகழ்ந்தவர்
சிவசாமி அய்யர். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு சிவசாமி அய்யர் ஆற்றிய பங்களிப்பு
ஆக்கபூர்வமானது. அவர் பொதுவாழ்வில் ஆற்றிய மகத்தான பணிகள் எண்ணற்றவை. அன்றைய இந்தியாவின்
புகழ்பெற்ற சட்ட அறிஞராக அவர் விளங்கினார். கல்வித் துறையிலும் இந்தியப் பாதுகாப்புத்
துறையிலும் பல்வேறு தளத்தில் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தார். ஒரு ஸ்டேட்ஸ்மென் என்று
அனைவராலும் பாராட்டப்பட்டவர் அவர்.

சிவசாமி அய்யர் மகாத்மா
காந்தி பிறப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு இன்றைய தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள பழமானேரி கிராமத்தில் பிப்ரவரி 7ம் தேதி 1864ல் மூத்த
மகனாகப் பிறந்தார். அவருக்கு மூன்று இளைய சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். சிவசாமி
அய்யர் தனது ஆரம்பக் கல்வியை எஸ்.பி.ஜி கோட்டை பள்ளியிலும் உயர்நிலை பள்ளிக் கல்வியை
மானம்புசாவடி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று 1877ல் மெட்ரிக்குலேசன் தேர்வில் முதல்
வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், மெட்ராஸ்
மாநிலக் கல்லூரியிலும் இளங்கலைக் கல்வியை 1882ல் முடித்தார்.

பிறகு அவர் மெட்ராஸ்
மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்ட அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று
1885ல் வழக்குரைஞராக 21 வயதிலே தனது வக்கீல் பணியைத் துவங்கினார். முதலில் அவர் வழக்கறிஞர்
ஆர்.பாலாஜி ராவ் என்பவரிடம் தொழில் பழகுநராகச் சேர்ந்து பயிற்சி பெற்றார். 1893ல் தனது
தந்தை இறந்த பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதே வருடம் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில்
உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து 1899ம் ஆண்டு வரை பணியாற்றினார். பிரிட்டிஷ்
இந்தியாவின்
வெள்ளி நாக்கு (சில்வர் டங்) என்று போற்றப்படும் வி.எஸ்.ஸ்ரீனிவாச
சாஸ்திரி, சிவசாமி அய்யரிடம் சட்டம் பயின்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்குரைஞராக சிவசாமி
அய்யர் மெட்ராஸ் மாகாண உயர் நீதிமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் 1883 முதல்
1907 வரை மெட்ராஸ் சட்டச் செய்தி இதழின் (Madras Legal Journal) இணை ஆசிரியராக இருந்தார்.
அவர் 43து வயதில் 1907 முதல் 1912 வரை மெட்ராஸ் மாகாண தலைமை வழக்கறிஞர் அதாவது அட்வகேட்
ஜெனரலாகப் பணியாற்றினார்.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற
வழக்கறிஞர்களுக்கான சங்கத்தை சிவசாமி அய்யர் 1889ம் ஆண்டு உருவாக்கினார். பல முக்கிய
புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்றோர் சட்ட நுணுக்கங்களில்
சிவசாமி அய்யரிடம் ஆலோசனை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்துறையில் சிறந்து
விளங்கிய அவர் 1904 முதல் 1907 வரை மெட்ராஸ் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.சி)
தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு கவர்னர் நிர்வாக கவுன்சில் உறுப்பினராக 1912 முதல்
1917 வரை பதவி வகித்தார். முதலாம் உலகப் போர்க் காலத்தில் இந்தியத் தொண்டர் இயக்கத்தை
உருவாக்கி ஆதரவளித்தார் சிவசாமி அய்யர். மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் கொள்கையான,
படிப்படியாக அரசியல் சாசனச் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் திட்டத்தை ஆதரித்த இந்திய
மிதவாதிகள் கட்சியின் தலைவராக 1919ல் மற்றும் 1926ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐ.நா
சபைக்கு முன்பு இருந்த
லீக் ஆஃப் நேஷன்ஸ்
1922ம் ஆண்டு நடத்திய மூன்றாவது கூட்டத்தொடரில் இந்தியாவின் சார்பாக சிவசாமி அய்யர்
கலந்துகொண்டு, இந்தியா சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின்
செனட் உறுப்பினராக 1898ல் சிவசாமி அய்யர் முதல் இந்தியராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு
பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகவும் (Fellow) இருந்தார். அவர் 1916 முதல் 1918 வரை மெட்ராஸ்
பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் பிறகு 1918 முதல் 1919 வரை வாரணாசியில் உள்ள பனாரஸ்
இந்துப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றினார். வி.கிருஷ்ணசாமி அய்யர்
சென்னையில் சமஸ்கிருதக் கல்லூரியைத் துவங்கினார். அந்தக் கல்லூரியின் தலைவராக முப்பது
ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் சிவசாமி அய்யர். பள்ளியிலும் மற்றும் கல்லூரியிலும்
மாணவர்களுக்குத் தாய் மொழியில்தான் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் ஆழமாகத்
தனது எழுத்துக்கள் மற்றும் பேச்சாற்றல் மூலம் எடுத்துரைத்தார் சிவசாமி அய்யர். சட்டம்,
சமூகம், அரசியல், பொருளாதாரம், இராணுவம், பன்னாட்டுச் சட்டம் போன்றவை பற்றிப் பல ஆய்வுக்
கட்டுரைகளை எழுதியுள்ளார் அவர்.

அவருடைய சொந்த ஊரான திருக்காட்டுப்பள்ளியில்
இருந்த சிறிய பள்ளி ஒன்று கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த போது, 1906ம் ஆண்டு அந்தப்
பள்ளியை முழுவதுமாகத் தன் சொந்த நிதியின் மூலம் உயர்த்தினார். அந்தப் பள்ளி இன்றும்
சர்.பி.எஸ்.சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அவர்
இருக்கும் வரை அவருடைய பெயரை அந்தப் பள்ளிக்கு வைக்க அவர் அனுமதிக்கவில்லை. அன்றைக்கு
இந்தப் பள்ளிதான் சுத்தியிருக்கும்
பதினெட்டு
பட்டிக்கும் ஒரே பள்ளியாகத் திகழ்ந்தது.

பெண்கள் படிக்க வேண்டும்
என்பதைத் தீவிரமாக வலியுறுத்தியவர் சிவசாமி அய்யர். இன்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள
லேடி சிவசாமி அய்யர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அப்பொழுது தேசிய பெண்கள் உயர்நிலைப் பள்ளி
என்று 1930ல் இயங்கிவந்தது. இந்தப் பள்ளியின் வளர்ச்சி குன்றியபோது, சிவசாமி அய்யர்
தலைமையேற்றுப் பல ஆயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்து, அந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக
உயர்த்தினார். அவர் உயிரோடு இருக்கும் வரை அவரது மனைவியின் பெயரை அந்தப் பள்ளிக்கு
வைக்க மறுத்துவிட்டார்.

இந்த இரண்டு பள்ளிகளிலும்
அவர் நூலகத்துக்கு என்று தனிக் கவனம் செலுத்தினார். மிகச்சிறந்த பழமையான மற்றும் புதிய
நூல்களையெல்லாம் திரட்டி மாணவ மாணவிகள் சிறந்த கல்வியைப் பெறவேண்டும் என்பதில் ஆர்வமுடன்
செயல்பட்டார். இந்த இரண்டு பள்ளிகளும் இன்று வரை சிறப்பான கல்விக் கூடங்களாக விளங்குகின்றன.
1939ம் ஆண்டு அவரது மனைவி இறந்த பிறகு, தான் வசித்த மைலாப்பூர் வீட்டை விற்று, அந்தப்
பணத்தைப் பள்ளிகளுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு, வாடகை வீட்டில் குடியேறினார் சிவசாமி
அய்யர். சென்னை விவேகானந்தா கல்லூரிக்கும் மற்றும் சம்ஸ்கிருத கல்லூரிக்கும் அவர் அளித்த
நன்கொடைகள் பற்றி அவர் இறந்த பிறகுதான் பலருக்கும் தெரியவந்தது.

சிவசாமி அய்யர் 1931ல்
இந்திய ராணுவ கல்லூரிகளுக்கான குழுவில் உறுப்பினராக இருந்தார். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ்
கவுன்சில் உறுப்பினராக 6 ஆண்டுகள் (1921-1923 மற்றும் 1924-1926) இருந்தபோது 1921ல்
சிவசாமி அய்யர் பதினைந்து அம்சங்களைக் கொண்ட அத்தீர்மானத்தில், இந்தியக் கடல் வணிகத்தை
மேம்படுத்தி, கப்பல் பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் பணியிடங்களில் 25 சதவீதம் இந்தியருக்கு
வாய்ப்பளிக்க வேண்டும் குரல் எழுப்பினார். இன்றைய இந்தியக் கடல்சார் படிப்புகளுக்கு
அவர் அன்று கொண்டு வந்த தீர்மானமே மூல வித்தாக அமைந்தது. மேலும் 1912ல் கோகலே அவர்கள்
உறுப்பினராக இருந்த அன்றைய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் இந்தியர்களுக்கு அனைத்துத்
துறைகளிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்திய ராணுவத்தைப் பற்றி
மிகுந்த அக்கறையோடு பல கேள்விகளை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் பதிய வைத்தவர்
சிவசாமி அய்யர். மேலும் இந்தியாவில் புதிய கல்வி நிறுவனங்களைக் கொண்டு வர வேண்டும்
என வலியுறுத்தினார்.
தமிழ் – ஆங்கிலப் பேரகராதி
(Tamil Lexicon) தொகுக்கும் பணியை முன்னெடுத்த குழுவின் தலைவராக விளங்கியவர் சிவசாமி
அய்யர். அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்கள்: உ.வே. சாமிநாத அய்யர், எஸ்.அனவரதவிநாயகம்
பிள்ளை, எஸ்.குப்புசாமி அய்யர், ரி.ராமகிருஷ்ண பிள்ளை மற்றும் மார்க் ஹன்டர்.

சிவசாமி அய்யர் காந்திமேல்
மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் அவர் அறிவித்த போராட்டங்களில் நடந்த
வன்முறையைக் கண்டு கடுமையாக விமர்சித்தார். மேலும், நேரு சோவியத் நாடுகள் பின்பற்றிய
கொள்கைகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதையும் எதிர்த்தார்.

சிவசாமி அய்யர் அரசியலில்
மிதவாதியாக இருந்ததோடு, மக்கள் சமூக நலனிலும் அக்கறை கொண்டிருந்தார். தனிநபர் சுதந்திரத்தில்
சாதி வேற்றுமை கூடாதென்று கடுமையாக 1933ல் வாதாடியிருக்கிறார். ஆட்சி முறையைக் கட்டாயமாகப்
பரவலாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய அரசியல் சாசனத்தில் அடித்தட்டு மக்களுக்குத்
தகுந்த பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்றால் எந்த ஆட்சியானாலும் அது அநீதியும் கொடுங்கோன்மையும்
கொண்ட ஆட்சியாகத்தான் இருக்கும் என்று அழுத்தமாக 1913ல் கூறினார் சிவசாமி அய்யர்.

சிவசாமி அய்யர் சிறந்த
நூல்களையும் எழுதியுள்ளார்.
எவல்யூஷன் ஆஃப் இந்து
மாரல் ஐடியல்ஸ்
(1935) என்ற தலைப்பில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்
நிகழ்த்திய கமலா நினைவுச் சொற்பொழிவு மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில்
இந்திய
அரசியல் சாசன பிரச்சினைகள்
(1928) என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய வி.கிருஷ்ணசாமி
நினைவுச் சொற்பொழிவுகள் போன்றவை பிரபலமானவை.
நாடு சுதந்திரம் அடைய
பத்து மாதங்களுக்கு முன்பு அவர் தனது 82ம் வயதில் 1946 நவம்பர் 5ம் தேதி காலமானார்.
அவருடைய தள்ளாத வயதிலும், இந்தியா மத அடிப்படையில் பிளவுபட இருப்பதை அறிந்து வேதனையுற்று
இந்தியாவைத் துண்டாடுவதை எதிர்த்துக் கடைசி மூச்சுவரை குரல் கொடுத்தார் சிவசாமி அய்யர்.


Posted on Leave a comment

16-ஆகஸ்ட்-1946, 15-ஆகஸ்ட்-1947, 14-பிப்ரவரி-2020 | சுசீந்திரன்

16 ஆகஸ்ட் 1946 – பொது
விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிற முஸ்லிம் லீகின் கோரிக்கை நிராகரிக்கப்பட
வேண்டும் என்று வங்காள காங்கிரஸ் வாதாடியது. பாகிஸ்தான் பிரிவினை வேண்டும் என்கிற முஸ்லிம்
லீகின் ஆசையை அனைத்து மக்களின் விருப்பம் போல் காட்டுவதாக அமையும் என்பதால் பொது விடுமுறையாக
அறிவிப்பது சரியல்ல என்ற காங்கிரஸின் வாதத்தை ஏற்றுக்கொண்டு வங்காள கவர்னர் பிரெட்ரிக்
பர்ரோவ்ஸ் முஸ்லிம் லீகின் கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் ஜின்னா அதைப் பொருட்படுத்த
வில்லை. ஆகஸ்ட் 16ஐ பொது ஹர்த்தால் தினமாக அறிவித்தார். அந்த தினத்தை நேரடி நடவடிக்கை
நாள் என்று அழைத்தார் ஜின்னா.

16 ஆகஸ்ட் 1946, அஃதோர்
வெள்ளிக்கிழமை. அன்றைய தினம் ஆங்கிலேய ராணுவப் படை செல்டாஹ் (Sealdah) எனும் இடத்தில்
முகாமிட்டிருந்தது. அன்று தொழுகைக்காகக் கூடிய இஸ்லாமியர்கள் தொழுகை முடிந்தபின்னர்,
கத்தி, லத்தி போன்ற ஆயுதங்களுடன் ஹர்த்தால் அனுஷ்டிக்காத ஹிந்துத் தரப்புக் கடைகளை
அடித்து நொறுக்கினர். குழுக்குழுக்களாக பிரிந்து சென்று கலவரத்தை ஏற்படுத்தினார்கள்.
கலவரத்தைத் தடுக்கும் பொருட்டு தலைமைக் காவல் அதிகாரி ஹாட்விக் அந்த முகாமில் இருந்த
ஆங்கிலேயப் படைக்குத் தந்த உத்தரவை நிராகரித்தார் அன்றைய வங்க மாகாண ப்ரீமியரும் முஸ்லிம்
லீகின் முக்கியத் தலைவருமான ஸய்யாத் ஹுசைன் ஸூர்வர்டி. கலவரத்தில் ஈடுப்பட்ட இஸ்லாமியத்
தரப்பால் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர், குற்றுயிராக்கப் பட்டனர், ஹிந்துப்
பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர், உடைமைகளை இழந்தனர். 
இத்தனை கொடூரங்களும் நடைபெறும்
போது ஆங்கிலேய ராணுவப்படை அந்த முகாமை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியின்றி வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 17 நள்ளிரவு சுமார் 2 மணிக்கு அப்படை அந்த முகாமை
விட்டு வெளியேறிய போது, சரிசெய்யமுடியாத வரலாற்றுப் பிழை ஒன்று நிகழ்ந்து முடிந்து
விட்டிருந்தது. நடந்த தாக்குதலுக்கு பதில் தரும் பொருட்டு ஹிந்துத் தரப்பும் வன்முறையைக்
கையிலெடுத்தது. இஸ்லாமியத் தரப்பும் கொலைகள், வன்புணர்வுகள், பொருட்சேதம் போன்ற துன்பங்களுக்கு
இலக்கானது. இதுவே நவகாளி படுகொலைகள் போன்ற எல்லா ஹிந்து-முஸ்லிம் வகுப்புவிரோதத்திற்கான
மூலவிதை ஆனது.

பெரும்பான்மை ஹிந்துக்கள்
இஸ்லாமியர்களான தங்களைச் சரியாக நடத்த மாட்டார்கள் என்ற ஜின்னாவின் எண்ணத்தைத் பல முஸ்லிம்கள்
நம்பினார்கள், அது உண்மையில்லை என்ற போதிலும்! ஆனால் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கான
பேச்சுவார்த்தைக்குக் கூட உடன்படாமல் முஸ்லிம் லீக் முரண்டு பிடித்தது. பஞ்சாப் மற்றும்
லாகூர் ஆகியவற்றை உள்ளடக்கிய பஞ்சாப் – சிந்து மாகாணத்தையும் மற்றும் முழு வங்காளத்தையும்
பாகிஸ்தானாகப் பிரித்துத் தர கேட்டார் ஜின்னா. இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகள்
மட்டும் பாகிஸ்தானாகட்டும், இல்லையென்றால் பொது வாக்கெடுப்பு நடத்தி அங்குள்ள மக்களின்
கருத்துக் கேட்போம் என்ற யோசனையை நிராகரிக்க ஜின்னா சொன்ன காரணம், அப்படி பொது வாக்கெடுப்பு
நடத்தினால் இஸ்லாமியர்கள் அல்லாதோரும் வாக்களிப்பார்கள் என்பதுதான். அதாவது பாகிஸ்தான்
வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை அந்த மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களுக்கு
மட்டுமே உண்டு, மொத்த மக்கட்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் ஹிந்துக்களாக இருந்தாலும்
அதில் ஹிந்துக்கள் பங்கு கொள்ளக் கூடாது என்பதே ஜின்னாவின் எண்ணம்.

இதற்கு இந்திய தேசிய
காங்கிரஸ் உடன்பட மறுத்ததாலேயே ஜின்னா ஆகஸ்ட் 16ஐ பொது ஹர்த்தால் தினமாக அறிவித்து
வன்முறைகளை ஊக்குவித்து பாகிஸ்தான் பிரிவினை என்பதைத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றினார்.

ஹிந்து – இஸ்லாமியர்
ஒற்றுமையைப் பெரிதும் விரும்பினார் காந்தி. அவர் பாகிஸ்தான் பிரிவினையைத் தவிர்க்க
தன்னால் முயன்ற எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் நேரடி நடவடிக்கை நாளுக்குப் பின்னர்
அவரது சகாக்கள் இனியும் முஸ்லிம் லீகுடன் ஒற்றுமை ஏற்படுத்த முயல்வது வீண் என்ற மனநிலைக்கு
வந்துவிட்டனர். அரசியல்ரீதியான நிகழ்வுகள் இவையென்றால் வரலாற்றுரீதியாக நிகழ்ந்தவை
இன்னும் மோசமானவை.

நேரடி நடவடிக்கை நாளுக்குப்
பிறகு நாட்டின் பல பகுதிகளில் ஹிந்து – முஸ்லிம் கலவரங்கள் வெடித்தன. இந்நிகழ்வுகளின்
உச்சமாக கோட்ஸே என்பவர், இப்பிரச்சினைகளுக்குக் காரணம் பாகிஸ்தான் பிரிவினையைச் சரியாக
கையாளாத காந்தியின் செய்கைகளே என்று எண்ணி, நம் தேசப்பிதாவின் உயிரைக் காவு வாங்கியதில்
போய் முடிந்தது.

வெறும் பேச்சுவார்த்தைகள்
மூலம் தீர்த்திருக்கக் கூடிய இப்பிரச்சினைகளை, வெற்று அரசியல் லாபங்களுக்காக வன்முறைக்
கோரங்களை ஊக்குவித்ததுடன் அதற்கு மறைமுகமாகக் கைகொடுத்த முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின்
முதல் கவர்னர் ஜெனெரலாகவும், ஸய்யாத் ஹுசைன் ஸூர்வர்டி பாகிஸ்தானின் ஐந்தாவது பிரதமராகவும்
பதவி பெற்றனர். அவர்களின் பெயர்களில் பல்கலைக்கழகங்கள், சிலைகள் என நினைவுச் சின்னங்கள்
பல உள்ளன. ஆனால் அந்தக் கோர நிகழ்வாலும் அதனால் உண்டான சங்கிலி வினைகளாலும் பாதிக்கப்பட்ட
ஹிந்து இஸ்லாமியக் குடும்பங்களின் நிலையைச் சொல்ல எந்த ஆவணமும் இல்லை, நினைவுச் சின்னமும்
இல்லை.

குடியுரிமைத் திருத்தச்
சட்டம், தேசிய மக்கட்தொகைக் கணக்கீடு மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை
எதிர்ப்பதோ ஆதரிப்பதோ, அவற்றை விமர்சிப்பதோ அரசியலமைப்பு தரும் அடிப்படை உரிமை. அந்தக்
கருத்துக்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு சட்டத்திற்கு உட்பட்ட வழியில் போராடுவது
இந்திய இறையாண்மை தரும் ஜனநாயக உரிமை. ஆனால் போராட்டங்களில் ஒலிக்கும்
ஆஸாதி
ஆஸாதி
என்ற குரல்களும், தொழுகைக்குப் பின்னர் கூடும்
போராட்டங்களும் அதன் பின்னர் உண்டாகும் வன்முறைகளும் இன்னொரு நேரடி நடவடிக்கை நாள்
என்ற பெரும் விலையை இந்தியா தந்துவிடுமோ என்ற அச்சத்தை ஊட்டுகிறது. பதவிக்காகப் போராட்டங்களைத்
தூண்டும் ஜின்னாக்களுக்கும், ஸூர்வர்டிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. ஆனால் ஒற்றுமைக்காக
ரத்தம் சிந்தும் காந்திக்குத்தான் பஞ்சம். இதைப் புரிந்து மக்கள் நடந்தால் எல்லாம்
நலமே. ஆனால் ஏனோ
பிரிவினை கேட்பது முஸ்லிம்களா, முஸ்லிம்
லீகா
என்ற நேருவின் கேள்விக்கு, பெரும்பான்மை
முஸ்லிம்கள் மீதான முஸ்லிம் லீகின் ஆதிக்கத்தைக் குறைத்து விடுவது மிகவும் கடினம்

என்ற சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் பதில் மனதில் எதிரொலிப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

Posted on Leave a comment

வீரப்பன்: பொய்களுக்கு இடையில் சில உண்மைகள் | சுஜாதா தேசிகன்

ஏழு வருடங்கள் முன் கார் ஓட்டிக்கொண்டு பெங்களூரிலிருந்து
வயநாடு வழியாகக் கேரளாவுக்குச் சென்றேன். போகும் வழியில் பந்திப்பூர் காட்டைக் கடந்து
வரும் வழியில் சாலை குறுக்கே ஒரு பெரிய யானை கடக்க கொஞ்சம் நேரம் காத்திருந்தேன். சத்தியமங்கலம்
வந்தபோது செக் போஸ்ட்டில் காரை நிறுத்தினார்கள். எங்கே போகிறேன் போன்ற விசாரிப்புகளுக்குப்
பின் பயணத்தைத் தொடர்ந்தேன். என் பக்கத்திலிருந்தவர்
சார் இங்கேதான் ஒரு காலத்தில் வீரப்பன் நடமாடிக்கொண்டு இருந்தான் என்றார். அந்த அடர்ந்த காட்டை மீண்டும் பார்த்தபோது அதன் நிசப்தம்
ஒரு வித பீதியைக் கிளப்பியது.

யானை
கடந்து போன பந்திப்பூரில்தான் 1994ம் வருடம் க்ருபாகர் சேனனி (Krupakar Senani) என்று
இரண்டு பிரபல வனவிலங்குப் புகைப்படக்காரர்களை
பெரிய அதிகாரிகள் என்று நினைத்து வீரப்பன் கடத்தினான்.
பதினான்கு நாட்களுக்குப் பிறகு விடுவித்தான். (இருவரும் Birds, Beasts and Bandits
– வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள்.) பந்திப்பூர்
யானையும், நாங்களும் அன்று பயம் இல்லாமல் காட்டைக் கடந்து சென்றதற்கு வீரப்பன் கொல்லப்பட்டதே
காரணம்.
சமீபத்தில்
முன்னாள் சிறப்பு
டாஸ்க் ஃபோர்ஸின் தலைவர் (STF) கே. விஜயகுமார்
எழுதிய
சந்தன கடத்தல் வீரப்பன் வேட்டை படித்தேன். (Veerappan –
Chasing the brigand என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.) அதைத் தொடர்ந்து, இதன்
ஆங்கில மூலத்தில் சில முக்கியமான பகுதிகளையும், கர்நாடகத்தின் முன்னாள் காவல்துறை இயக்குநர்
எழுதிய
வீரப்பனின் நட்சத்திரக் கடத்தல்
– ராஜ்குமார்
புத்தகத்தையும் மீண்டும் படித்தேன்.
சில புள்ளிகளை இணைக்க முடிந்தது.

தமிழ்நாட்டில்
வீரப்பன் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. அவன் நல்லவன், அவனை இப்படி
மாற்றியது கல்குவாரி அதிபர்கள், அரசியல்வாதிகள்,
அவரை எங்கள் எல்லைச்சாமியாகவே பார்க்கிறோம், வீரப்பன்
இருந்திருந்தால் காவரி பிரச்சினை இருக்காது
, வீரப்பர் என்று கூப்பிட வேண்டும் கோயில் கட்ட
வேண்டும் என்று இன்றும் அரசியல் பேசும் பிரிவினைவாதிகள் ஒரு புறம். அவன் கொள்ளைக்காரன்,
பல உயிர்களைக் காவு வாங்கிய
ஈவு
இரக்கமற்ற கொலைகாரன், தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு
கொண்டவன் என்ற கருத்தும் உடையவர்கள் இன்னொரு புறம். 

இந்த இரண்டு
கருத்துக்களைத் தாங்கித்தான் வீரப்பன் பற்றிய திரைப்படம், புத்தகம் எல்லாம் வந்திருக்கின்றன.

விஜயகுமார்
எழுதிய புத்தகம் மிக முக்கியமான ஆவணம். வீரப்பனைச் சுட்டு வீழ்த்தியவர் என்ற ஒரு காரணம்
இருந்தாலும், காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பில் பணிபுரிபவர் தேச நலனைக் கருத்தில் கொண்டு
உண்மையை எழுதியிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. புத்தகம் முழுவதும் விறுவிறுப்பான
வீரப்பனின் வேட்டை. புத்தகம் இப்படி ஆரம்பிக்கிறது.

ஒளிந்து கொள்பவர்களுக்கும்
தேடுபவர்களுக்கும் இடையில் நடக்கும் போட்டியில் பத்துக்கு ஒன்பது முறை ஒளிந்து கொள்பவர்கள்தான்
வெற்றி பெறுகிறாரகள் – ரிச்சர்ட் கிளார்க்.


இதற்கு எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம். சி.தினகர் எழுதிய வீரப்பன் நட்சத்திரக் கடத்தல் இன்னொரு
முக்கிய ஆவணம். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது என்ன மாதிரியான அரசியல் நடந்தது
என்று இதில் தெரிந்துகொள்ளலாம். இந்த இரண்டு புத்தகங்களையும், சேர்ந்து நோக்கும்போது
வேறு பரிமாணம் கிடைக்கிறது.
வீரப்பனைத்
தமிழகத்தின்
ராபின் ஹுட் என்றும், வீரப்பனைப் பிடித்துவிட்டார்களா? என்றும் பலர் கேலி பேசியுள்ளார்கள். துக்ளக் சோ முதல் சுஜாதா வரை
கேலி பேசாதவர்கள் யாரும் இல்லை.

சுஜாதா சொன்ன
பதில் ஒன்று:
இண்டர்நெட்டில் வீரப்பனைப் பற்றி
வெப்தளமும் இடம் பெற்று விட்டதே?
அப்படியா இனியாவது அவரைப் பிடித்து
விடலாம்!

30 ஆண்டுகளுக்கு
மேலாகக் காவல்துறைக்குத்
தண்ணி காட்டி, பல ஆண்டுகளாகக் காட்டில்
சந்தனமரக் கடத்தல் செய்து, பல யானைகளைக் கொன்று, பல அதிகாரிகளைக் கொன்று தொழில் செய்த
வீரப்பனை ஒரே ஒரு முறைதான் காவல்துறை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியது. அதன்
பிறகு அவன் காவல்துறையில் பிடிபடவேயில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் 24 மணி நேரத்தில் இரண்டு
முறை தப்பித்திருக்கிறான்.

வீரப்பன் எவ்வளவு பயங்கரமானவன்
என்பதற்கு இந்த ஒரு சம்பவம் போதும். 1990 வருடம் ஸ்ரீநிவாஸ் என்ற வனத்துறை அதிகாரி
தானாக முன்வந்து கர்நாடகா அமைத்த சிறப்பு அதிரடிப்படையில் சேர்ந்தார். ஒரு முறை ஸ்ரீநிவாஸிடமிருந்து
வீரப்பன் தப்பியிருந்தான். அதனால் அவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று அவர் அதிரடிப்படையில்
சேர்ந்தார். வீரப்பனின் தங்கை தற்கொலை செய்துகொள்ள ஸ்ரீநிவாஸ்தான் காரணம் என்று வீரப்பன்
நம்பினான். அதனால் ஸ்ரீநிவாஸைப் போட்டுத்தள்ளத் திட்டம் வகுத்தான்.

தான் சரணடையத் தயார் என்று
அறிவித்த வீரப்பனைச் சந்திக்க உற்சாகமாக ஸ்ரீநிவாஸ் கிளம்பினார். ஆனால் புதர்களுக்குள்
பதுங்கி இருந்த வீரப்பனும் அவன் கூட்டாளிகளும்…

ஸ்ரீநிவாஸ் சுற்றுமுற்றும் பார்த்தார். யதார்த்தம்
உறைத்தது. … வாழ்வின் கடைசி நிமிடங்கள். நின்றுகொண்டிருந்த ஸ்ரீநிவாஸைப் பார்த்து
வீரப்பனும் அவன் கூட்டாளிகளும் சிரிக்கத் தொடங்கினர். … வீரப்பன் துப்பாக்கியால்
சுட்டான். அவர் சரிந்து விழுந்து இறந்தார். ஆனால் அப்போதும் வீரப்பன் திருப்தி அடையவில்லை.
ஸ்ரீநிவாஸின் தலையை வெட்டினான். கொடூரமான அந்த வெற்றிக் கோப்பையைத் தனது முகாமிற்குக்
கொண்டு சென்றான். அங்கு அவனும் அவன் கூட்டாளிகளும் அதை ஒரு கால்பந்தைப் போல உதைத்து
விளையாடினர்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள்
வரையில் ஸ்ரீநிவாஸின் தலை மீட்கப்படவில்லை!
அந்த முப்பது ஆண்டுகளில்
அவன் 124 பேரைக் கொன்று குவித்துள்ளான். சிலர் 184 என்கிறார்கள். ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்
என்ற ஒன்று உருவாகக் காரணம் அந்தப் புனித வெள்ளி படுகொலைதான்.

ஒரு புனித வெள்ளி அன்று
வீரப்பன் வைத்த கண்ணிவெடிகளில் ஒரே சமயத்தில் 22 காவலர்கள் உயிர் இழந்தார்கள். அந்தப்
படுகொலை தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரே
நாளில் பங்குச் சந்தையில் விலை ஏறுவது போல வீரப்பனின் தலைக்கு ஐந்து லட்சம் என்பதிலிருந்து
20 லட்சம் ஏறியது. அதைவிட அவனிடம் பயமும் அதிகமாகியது.

அந்தப் புனித வெள்ளி தாக்குதலில்
ராம்போ என்ற காவலர் பலத்த காயமடைந்தார். அவரைப் பற்றி புத்தகத்தில் வரும் பகுதி இது:

அந்தக் குண்டு வெடிப்பில் ராய்போ பலத்த காயமடைந்திருந்தார்.
ஆனால் அவரைப் போன்ற அசாதாரணமானவர்களை மரணம் நெருங்குவது
கடினம். அல்லது அவரது மலைபோன்ற உடல்வாகு பாதிப்பைக் குறைத்திருக்கலாம். அவசரமாக அவர்
சேலம் கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிரோடு இருந்தது, அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்
குழுவை பிரமிக்க வைத்தது.

பல மணி நேரங்களுக்குப் பிறகு அவர் சுயநினைவு வந்து
எழுந்தபோது மறுபடியும் ஒரு அதிர்ச்சியில் இருந்தார். அவருக்கு அருகே அப்போதைய முதலமைச்சர்
ஜெ.ஜெயலலிதா நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

நீங்க நல்லாயிட்டீங்கன்னு டாக்டர்கள் எங்கிட்ட சொன்னாங்க.
சீக்கிரம் சரியாயிடுவீங்க
என்று சொன்னார்..

ஜெயலலிதாவின்
முகம் கடுமையாக இருந்தது.
இதை இப்படியே விட்டுவிடக்
கூடாது
என்று உத்திரவிட்டார்.

இதற்குப் பிறகு ராம்போ
ஒரு வருடத்திற்கு மேலாக மருத்துவ விடுப்பிலிருந்தார். அவருக்கு 12 அறுவைச் சிகிச்சையாவது
நடந்திருக்கும். அவர் வாழ்க்கை தொடர்ச்சியான வலியிலேயே கழிந்தது.

இந்தச் சம்பவத்துக்குப்
பிறகு ஜெயலலிதா காட்டிய வேகம் அசாதாரணமானது. வால்டர் தேவாரம் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு
அதிரடிப்படை அறிவிக்கப்பட்டு, அதில் சேர பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தார்கள்.
இன்னொரு சம்பவம். காட்டில்
யானை ஒன்று விஜயகுமாரைத் துரத்த மலைச் சரிவில் விழுந்து அடிபட்டு மூன்று வாரங்கள் ஓய்விலிருந்து
வந்தபிறகு அவருக்குப் பணி மாறுதல். அப்போது அவர் ஜெயலலிதாவிடம்

மேடம்… எனது டாஸ்க் இன்னும் முடியவில்லையே?
என்று முதல்வரிடம் கேட்டேன்

வீரப்பனைப் பிடிக்க நாள் குறித்து விட்டீர்களா?
என்றார்.
அந்தக் கேள்வி என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

இல்லை
என்றே தர்மசங்கடத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. 20 வருடங்களாக அந்தக் கொள்ளைக்காரன்
தப்பித்துக் கொண்டிருக்கிறான். என்னால் அவனைப் பிடிப்பதற்கான தேதியைத் தெளிவாகச் சொல்ல
முடியவில்லை.

புத்தகத்தின் இன்னொரு பகுதியில்,
வீரப்பனைத் தேடும் பணியில் இருந்தபோது சக காவலர் பாட்டில் தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார்.
இங்கே எப்படி ஸ்பிரைட்
கிடைத்தது?
இது பாசி பிடித்த தண்ணீர் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரண்டு வாய் குடிப்பதற்குள்
குமட்டிக்கொண்டு வர… என்று வருகிறது.

பிறகு ஒரு சமயம், வீரப்பனின்
தாக்குதலில் கோபால் என்ற காவலர் அடிப்பட்டு ஜீப்பில் இருக்கிறார். அவருடைய ஓட்டுநர்
ரவி என்பவர் காயம் பட்டு வலது மணிக்கட்டு துண்டிக்கப்படும் நிலையில் இருக்கிறார். அத்தனை
வேதனையையும் தாங்கிக்கொண்டு, ரவி தனது முரட்டுத்தனமான தைரியத்தையும் சமயோஜித புத்தியையும்
செயல்படுத்தி, குறுகிய நேரத்தில் ஒரே கையில் வண்டியை ஓட்டிக்கொண்டு தப்பித்திருக்கிறார்கள்.

வீரப்பன் சிறுவனாக இருந்தபோது
அவன் ஒரு யானையைக் கொன்றிருக்கிறான். யானையின் நெற்றியில் சுட்டு உடனடியாக அதை உயிரிழக்கச்
செய்வது அவனுக்குப் பிடித்தமான வழிமுறை. ஏராளமான யானைகளை அவன் கொன்று குவித்திருக்கிறான்.
ஒரு யானையின் சடலம் பறவைகள், எறும்புகள் போன்ற லட்சக்கணக்கான உயிரினங்களுக்கு உணவாகிறது
என்றும் யானையைக் கொல்வது ஒரு தொண்டுதான் என்றும் அவன் வாதிடுவானாம்.
நாயகன் படத்தில் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல என்ற வசனத்திற்கு நாம் கைதட்டி ரசித்த அபத்தத்திற்கும்
வீரப்பனின் இந்த விதண்டாவாதத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சினிமா வேறு நிஜ வாழ்க்கை
வேறு என்பதை இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் பார்க்க முடிந்தது. ஒரு சம்பவத்தை ஒரு
சிறுகதையாகவே எழுதிவிடலாம்.
விஜயகுமார் அவருடைய வேலையைப்
பற்றி முடிந்தவரையில் குழந்தைகளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார். ஒருமுறை சேலம்
மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது…

ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு எனது குடும்பத்தினரை
அழைத்துச் சென்றேன். நான் காரை ஓட்டினேன். எனது டிரைவர் என் அருகில் முன் சீட்டில்
அமர்ந்திருந்தார். மீனாவும் (மனைவி) குழந்தைகளும் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.

வழியில் ஒரு உள்ளூர் ரவுடி ஒருவன் பொதுமக்களிடம்
தகராறு செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அது என்னை ஆத்திரமூட்டியது. காரைவிட்டு
வெளியே வந்தேன். அவன் என்னைக் கோபத்துடன் திரும்பிப் பார்த்தான். ஆள் வாட்டசாட்டமாகப்
பெரிதாக இருந்தான். நடுரோட்டில் ஒரு ரவுடியுடன் மோதுவது சரியான முடிவா இல்லையா என்பதையெல்லாம்
சிந்திக்கும் நிலையில் நான் இல்லை. பொதுமக்களை அடித்துக்கொண்டு இருந்தவனை நோக்கி நான்
வருவதைக் கண்ட அவன் என்னைத் தாக்க கையை ஓங்கினான். அவனது கையைப் பிடித்து தடுத்து ஓங்கி
ஒரு அறைவிட்டேன். அடுத்து, எனது துப்பாக்கியைப் பார்த்ததும் சிறிது மிரண்டான். சாலையில்
விழுந்து கிடந்த மரக்கிளை ஒன்றை எடுத்தேன். அவனது காலைப் பிடித்து இழுத்து காரின் முன்சீட்டில்
அவனைத் தள்ளினேன். போலிஸ் ஸ்டேஷன் வரும் வரையில் அவனை அந்த மரக் கிளையை வைத்து அடித்துக்
கொண்டே வந்தேன். எனது குழந்தைகள் இருவரும் சினிமாவில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்த
காட்சிகளை நிஜத்தில் பார்த்து மிரட்சி அடைந்தனர். அவர்கள் பொருமினர். விம்மினர். அவர்கள்
கண்ணில் கண்ணீர் உடைத்துக் கொண்டு வெளியேறியது.

குழந்தைகள் முன் இப்படி
நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று விஜயகுமாரின் மனைவி கடுமையாகக் கோபித்துக் கொண்டுள்ளார்.
ஒரு போலிஸ் அதிகாரி ரவுடியை இந்த மாதிரி போலிஸில் ஒப்படைப்பதை சினிமாவில் பார்த்துக்
கைதட்டும் நாம் அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் என்ன மாதிரி சவால்களைச் சந்திக்கிறார்கள்
என்று புரிந்துகொள்ள முடிகிறது.

வீரப்பன் என்றால் சந்தனக்
கடத்தலுக்குப் பிறகு நினைவுக்கு வருவது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல். ஜூலை 30,
2000 அன்று இரவு வீரப்பன் ராஜ்குமார் தங்கியிருந்த பண்ணை வீட்டில் வைத்து அவரைக் கடத்தினான்.
பக்கத்திலிருந்த ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளிடம் ஒரு ஆடியோ கேசட் கொடுத்து அப்போதைய
முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கொடுக்கச் சொல்லிச் சென்றான். பர்வதம்மாள் உடனே பதற்றத்துடன்
பெங்களூரு நோக்கிச் சென்றார். போகும் வழியில் குடும்ப ஜோதிடரைப் பார்த்து ஆலோசனை கேட்டுவிட்டுச்
சென்றார். ஒரு சில நாட்களில் பாதுகாப்பாகத் திரும்புவார் என்றார் ஜோதிடர். ராஜ்குமார்
வருவதற்கு 108 நாட்கள் ஆனது.

1994ல் புகைப்படக்காரர்களை கடத்தியபோது
அதில் ஒருவர் தன் நண்பருக்குக் விளையாட்டாகக் கைரேகை பார்க்க, உடனே வீரப்பன் ஆர்வமாகத்
தன் கையைக் காட்டிப் பார்க்கச் சொல்லி, தனக்கு ஆயுசு எவ்வளவு நாள் என்று கேட்டுத் தெரிந்துகொண்டான்.
எதுக்கு நமக்கு வம்பு என்று கைரேகை பார்த்தவர்
எழுவது வயது வரை நீங்க இருப்பீங்க என்று சொல்லியுள்ளார்.

2001 அதிரடிப்படைக்கு வீரப்பனின்
ஜாதகம் வந்தது. அதிரடிப்படையில் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சிலர் ஜாதகம் பார்க்கும்
நிபுணர்களை வரவழைத்து அவர்களிடம் வீரப்பனின் பற்றியும் அவன் எதிர்காலம் பற்றியும் கேட்டுள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிரியாக இருப்பான். அவனுடைய பெரும்பாலான வாழ்க்கை வனவாசமாக இருக்கும்.
அவனுக்கு ராஜதண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றார்கள். வீரப்பன் 14, 19, 32,
45, 52 ஆகிய வயதில் சோதனையை அனுபவிப்பான். 65 வயது வரையில் அவன் உயிரோடு இருந்துவிட்டால்
அவன் 78 வயது வரை உயிரோடு இருப்பான் என்று கணித்தார்கள். வீரப்பன் 52 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தின்
முக்கியத் திருப்பம் ராஜ்குமாருடன் சென்ற அவருடைய உதவியாளர் நாகப்பா தப்பித்து வந்தது.
விஜயகுமார் எழுதிய புத்தகத்தில்: ஒரு மாலை நேரம் நாகப்பா தூக்கம் வராமல் புரண்டு கொண்டு
இருந்தார். நக்கீரன் கோபால் ஏதோ புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டு இருக்க, வீரப்பன்
குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு இருந்த போது, நாகப்பா இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று
அங்கே இருந்த அரிவாளை எடுத்து வீரப்பனை வெட்ட ஓங்கிய போது மேலே உள்ள கூரை தடுத்தது.
அப்போது கோபால் அவரது தோள்களைப் பிடித்துத் தடுக்க, அதற்கு நாகப்பா இதற்கு மேல் அங்கே
இருந்தால் ஆபத்து என்று தப்பித்து வந்துவிட்டார்.

வில்லனிடம் தப்பித்து வந்த
ஹீரோவாக நாகப்பா புகழப்பட்டார். ஆனால் விரைவிலேயே சிலர் நாகப்பா தனது ஹீரோவை விட்டு
ஓடி வந்த கோழை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ராஜ்குமார் குடும்பத்தினர் கூட அவரிடம்
முகம் கொடுத்துப் பேசவில்லை என்ற செய்திகள் இருக்கிறது. நாகப்பா செய்ததையே
ராஜ்குமார் செய்திருந்தால் மீடியா இப்படி பேசியிருக்குமா என்று தெரியாது.
கில்லிங்
வீரப்பன்
என்ற
படத்தில் விஜயகுமார் டீமில் இருக்கும் ஒரு எஸ்.பி கதாபாத்திரத்தில் ராஜ்குமார் மகன்
பிறகு நடித்து திரைப்படத்தின் வழியாக வீரப்பனைக் கொன்றார்!.
தினகர் எழுதிய புத்தகத்தில்
நாகப்பா பற்றி மிக முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார்.

நாகப்பா ஓர் ஏழை. ஆனால் ராஜ்குமாரிடம் அபரிமிதமான
விசுவாசம் உடையவர். ஓர் ஏழைக்குக்கூட தன்னுடைய மரியாதையைக் காப்பாத்திக் கொள்கின்ற
உரிமை இருக்கிறது. நாகப்பா பற்றி தவறான அறிவிப்பை நான் வெளியிட்டேன்… அவருக்கு அநீதி
செய்துவிட்டேன்… அவருக்கு என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன்..
தன்னுடைய உயிரினையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய எஜமானருக்காக அவர் ஒரு வீரச் செயலைச்
செய்திருக்கிறார்.
நாகப்பா தயவு செய்து என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை
ஏற்றுக்கொள்ளுங்கள்.

கோபால் மட்டும் இல்லாவிட்டால், இந்த இருண்ட இரவில்
நாகப்பா வீரப்பனின் வாழ்க்கையினையே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பார். தொல்லைகளும்
முடிவுக்கு வந்திருக்கும். வீரப்பன் இன்று உயிருடன் இருப்பதற்கு கோபால்தான் பொறுப்பு.
என்ன முரண்பாடு. உண்மையுள்ள ஊழியன் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறான். காட்டுக்
கொள்ளைக்காரன் வீரப்பனை மரணத்திலிருந்து காப்பாற்றி ஒருவர் குளிர்சாதன வசதியில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார். வீரப்பன் பற்றிய கதைகளை எழுதி சம்பாதித்த செல்வத்தை அனுபவித்துக்
கொண்டிருக்கிறார். நக்கீரன் கோபால் செய்த குற்றங்களுக்காக தமிழ்நாடு காலவல்துறையினர்
அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.

ராஜ்குமார் விடுவிப்புக்குப்
பிறகு பத்திரிகையாளார்களை சந்தித்து அவருடைய அனுபவங்களைச் சொன்ன போது வீரப்பனின் மீது
எந்த கசப்புணர்வும் இன்றி,
வீரப்பனை மனிதத்தன்மை உடையவனாகவே கருதலாம். என்னை
விடுவிக்கும் முன் அங்கே ஒரே கூத்தும் கும்மாளமும்தான்
என்று நினைவு கூர்ந்தார். வீரப்பன் இறந்த பின் ஒரு தீய சக்தி அழிக்கப்பட்டது என்றார்.
ராஜ்குமார் விடுவிப்புக்குப்
பல கோடிகள் கைமாறியது என்பது பல புத்தகங்களில் இருக்கிறது. விஜயகுமார் தன் புத்தகத்தில்
அதைக் குறிப்பிட்டுள்ளார் ஆனால் இரு மாநில அரசும் அதை மறுத்தது. ராஜ்குமார் கடத்தலுக்குப்
பிறகு வீரப்பனைத் தேடும் பணியில் இருந்தபோது பல ரூபாய் நோட்டுகள் கிடந்ததையும், ராஜ்குமார்
கடத்தலின் போது கொடுத்த பணமாக அவை இருக்கலாம் என்றும் யூகங்கள் அடிப்படையில் சொல்லி
உள்ளார். சில வருடங்களுக்கு முன் ராஜ்குமார் மூத்த மகன் வீரப்பனுக்குப் பணம் கொடுக்கப்பட்டது
ஒரு ஓப்பன் சீக்ரெட்..
யார் எவ்வளவு என்று தெரியாது ஆனால் நிறைய
என்று கூறியுள்ளார். தினகர்
தன் புத்தகத்தில் எவ்வளவு கோடி யார் என்று பட்டியலிட்டுள்ளார்.


மருமகன் மூலம் 5 கோடி இரண்டு முறை (10 கோடி), உளவுத்துறைத்
தலைவர் மூலம் 5 கோடி, பர்வதம்மா சென்னைக்கு அனுப்பிய 1 கோடி கருணாதிநி வீட்டில் கொடுக்கப்பட்டது.
பர்வதம்மா பானுவிடம் நேரடியாக 2 கோடி, திரைப்படத் தொழிலில் உள்ளவர்கள் சென்னையில் கருணாநிதி
வீட்டிற்குக் கொண்டு சென்ற 2 கோடி… மொத்தம் 20 கோடி!

வீரப்பனுடைய செல்வாக்கு
தமிழ்த் தீவிரவாதிகளின் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு அடுத்த நிலைக்குச் சென்றது
என்று கூறினால் மிகை ஆகாது. கோபால், நெடுமாறன் போன்றவர்கள் சென்று வீரப்பனை மீட்டுக்
கொண்டு வந்ததை
In retrospect, the entire drama looks like a
pre-planned, well-executed exercise with the single-point agenda of promoting
Nedumaran
s interest in
politics and his popularity among the public
என்று சோ கூறியுள்ளார்.

வீரப்பனைப் பிடிக்க, சிறையில்
தமானி(விஜயகுமார் இப்படித்தான்
புத்தகத்தில் எழுதி இருக்கிறார்) என்ற கேரள மதத்தலைவருடன் பேசி ஒரு திட்டத்தை வகுக்க,
போலிஸ் அவரை ரகசியமாகச் சந்தித்தது. அந்த சமயத்தில் தினமலர் பத்திரிகை
அடிக்கடி கோவை சிறைக்குக் காவல் அதிகாரி செல்கிறார் என்று செய்தி வெளியிட்டு போலிஸின் தூக்கத்தைக்
கெடுத்தது. வீரப்பனின் கேசட் வெளியிடுகிறேன் என்று சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிடத்
தொடங்கின. பல தலைவர்கள் பற்றியும் வீர்ப்பன் அசிங்கமாகப் பேசியது (குறிப்பாக ஜெயலலிதா),
தடா கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சு, காவிரி பிரச்சினை பற்றிப் பேசியது போன்றவை
எல்லாம் இரு மாநில அரசாங்கங்களுக்கும் பல சிக்கல்களை உருவாக்கியது.

வீரப்பன் என்கவுண்ட்டர்
என்ற செய்தி வந்தபிறகு அந்த என்கவுண்ட்டர் போலி என்று மீடியாக்கள் ஊதிப் பெருக்கின.
இத்தகைய வதந்திகள் அதிரடிப்படையின் நேர்மைக்கும் வலிமைக்கும் ஒரு அவமானம் என்கிறார்
விஜயகுமார். அதிரடிப்படை அப்பாவி மலைவாழ் மக்களைக் கொடுமைப் படுத்தியது என்று ஒரு செய்தி
திட்டமிட்டுப் பரப்பப்பட்டு அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தியதில் மீடியாக்களுக்கு
உள்நோக்கம் இருக்கத்தான் செய்கிறது. கோர்ட் கேஸ் என்று வந்த பிறகு, சின்னதாக
வருத்தம் என்று வெளியிட்டு முடித்துக்கொள்கிறார்கள்.

துக்ளக் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி:

பத்திரிக்கையாளர்களுக்கும் சிறைத்தண்டனை அளிக்கும்
பயங்கரவாதத் தடுப்பு மசோதாவைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதே?

ப: தீவீரவாதிகளைப் பற்றிய தகவல் அளித்த பத்திரிகையாளர்கள்,
அது பற்றிய விவரங்களை அரசுக்குத் தர மறுத்தால் தண்டனை – என்பது மசோதாவின் ஷரத்துக்களில்
ஒன்று. இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. பத்திரிகையாளர்களும் குடி மக்களே.
நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்களே

உச்சநீதிமன்றம் நம் நாட்டுக்கு ஏன் முக்கியம் என்பது வீரப்பன் விஷயத்தில்
வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இரு மாநில முதல்வர்களும் தடா கைதிகளை விடுவிக்க முடிவு
செய்தபோது உச்ச நீதி மன்றம் தடுத்தது. தன்னுடைய தீர்ப்பில்

கடந்த
பத்தாண்டுகளுக்கு மேலாகக் காடுகளில் வீரப்பன் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து செயல்பட்டுக்
கொண்டிருக்கிறான், வீரப்பன் தொடர்ந்து குற்றங்களை இழைப்பவன் என்று எங்களுக்கு உறுதியாகத்
தெரிகிறது. சட்டத்தை மீறுபவர்களுக்குப் பயந்து அரசு நடந்து கொண்டால் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு
இடம் கொடுப்பதாகிவிடும். இதன் விளையாக ஜனநாயக அமைப்பே சீர்குலைந்து போகும். சட்டம்
ஒழுங்கைப் பாதுகாப்பது கர்நாடக அரசின் பொறுப்பு. உங்களால் முடியவில்லையெனில் நீங்கள்
பதவி இறங்கி அதை யார் செய்வார்களோ அவர்களுக்கு வழிவிடுங்கள்.


வீரப்பனின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று
வழக்கு தொடுத்தவர் அப்துல் கரீம் என்ற 76 வயது ஓய்வு பெற்ற முன்னாள் டி.எஸ்.பி. இவருடைய
மகன் வீரப்பனின் தாக்குதலில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. ஷகில் அகமதுவின் தந்தை. இவர்களைப்
போல உண்மையான குடிமகன்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இருக்கக் கூடாது.

வீரப்பனை வெளியே கொண்டு வர, மிஸ்டர் எக்ஸ் என்ற
வீரப்பனிடம் தொடர்புடைய தொழிலதிபர் ஒருவர் உதவியிருக்கிறார். அவர் யார் என்று புத்தகத்தில்
சொல்லப்படவில்லை. கடைசியில் வீரப்பனை எப்படிச் சுட்டு வீழ்த்தினார்கள் என்ற பகுதிகள்
படிக்கச் சுவாரசியமானவை.
வீரப்பன் முடிவுக்கு வந்த பின் துக்ளக் தலையங்கத்தில்
சோ இப்படி எழுதினார்:
துக்ளக்
உட்பட பல பத்திரிகைகள் செய்து வந்த கிண்டல்; பொதுவாகவே மக்களிடையே நிலவிய ஏளனம்; நிபுணர்கள்
என்று தங்களை நினைத்துக் கொண்டவர்களின் உபதேசங்கள்; நடக்கவே நடக்காது எனக் கூறி சில
தலைவர்கள்
விட்டு வந்த சவால்கள்… போன்றவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு வந்த தமிழக போலிஸ்துறை,
வீரப்பனையும், அவனது சகாக்கள் சிலரையும் சுட்டு வீழ்த்தி, ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது….
….
இன்றைய முதல்வர் ஜெயலலிதா, தன்னால் முன்பு தோற்றுவிக்கப்பட்ட
விசேஷப் படையை மீண்டும் உயிர்ப்பித்தார். அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்ததுடன்,
நவீன சாதனங்களையும் அவர்கள் பெற வழி செய்து, அவர்களை ஊக்கப்படுத்தினார். அரசு அவர்கள்
பின் நிற்கும் என்ற உறுதியையும் அவர்கள் மனதில் தோற்றுவித்தார். விசேஷப் படை காட்டிய
முனைப்பிற்கு, முதல்வர் ஜெயலலிதா காட்டிய உறுதியும் முக்கியக் காரணம். தீவிரவாதத்தைக்
கட்டுப்படுத்துவதிலும், ரௌடிகளை அடக்குவதிலும், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதிலும்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிற முனைப்பு, இந்தியாவில் வேறெந்த முதல்வருக்கும் இல்லை
என்ற நமது கருத்து மீண்டும் ஊர்ஜிதப்படுத்தப் பட்டிருக்கிறது. விஜயகுமாருடன் சேர்ந்து,
ஜெயலலிதாவையும் பாராட்டுகிறோம். நல்லது நடந்திருக்கிறது. நல்லவர்கள் பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா அதிரடிப்படையில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் ஒரு மனையும்,
ரூ 3 லட்சம் ரொக்கமும் பதவி உயர்வும் கொடுத்து கௌரவித்தார்.
விஜயகுமார் ஒரு பேட்டியில்
தன்னுடைய புத்தக விற்பனையில் வரும் பணத்தில் ஒரு பகுதியை எப்படிப் பயன்படுத்தப் போகிறேன்
என்று கூறி இருக்கிறார்.
I want to donate the entire proceeds for
education-related activities in the places where Veerappan struck like a
tsunami – say the villages including Manjucomapatti, Pulinjur, Geddesal- where
people were brutally killed by him
என்கிறார்
விஜயகுமார் ஆங்கிலப் புத்தகத்தின் ஆரம்பத்தில் Dedicated to late
Selvi J. Jayalalithaa and to all search teams
என்று
சமர்ப்பித்துள்ளார். ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பில் இதைக் காணவில்லை!
-சுஜாதா தேசிகன்
புத்தகங்கள்:
Veerappan: Chasing the Brigand, K. Vijay Kumar (ஆங்கிலம்)
வீரப்பன் வேட்டை, கே. விஜயகுமார் (தமிழ்)
Birds, Beasts and Bandits by Krupakar Senani,
மாலை சுவடுகள் – மாலை முரசு பிரசுரம்
பரபரப்பு செய்திகள்:

Posted on Leave a comment

அச்சமறியா போர்ப் பறவை: குலாலை இஸ்மாயில் | ராம் ஸ்ரீதர்



திடீரென்று
நடக்கவில்லை என்றாலும், ஒருநாள்
காலையில் எங்கெங்கு பார்த்தாலும்
அந்தப் பெண்ணின் முகம்தான்
பாகிஸ்தானின் அதிகமாகத் தேடப்பட்டு
வரும் குற்றவாளி என்ற அச்சுறுத்தலான
வாசகங்களுடன்அனைத்துக் காவல்
நிலையங்கள், விமான நிலையங்கள்,
பஸ்
/
ட்ரெயின் நிலையங்கள் சகலத்திலும் குலாலை இஸ்மாயில் (Gulalai Ismail) முகம்தான்!
அவர்
மீது தேசத் துரோக
வழக்கு! மனித உரிமைப் பாதுகாவலர்கள்
அவர் பக்கம் நின்றாலும்,
பாகிஸ்தானில் மனித உரிமையாவது
மண்ணாவது? அதுவும் ஒரு
பெண்ணுக்கு!
மனித
உரிமைப் பாதுகாவலர்கள் குலாலை மேல் சுமத்தப்பட்ட
குற்றங்கள் எல்லாமே போலியானவை
என்று போராடினர். பாகிஸ்தானின்
ராணுவம் செய்துவரும் அத்துமீறல்களை
வெளிச்சம் போட்டுக் காட்டியது
குலாலை செய்த மாபெரும்
தவறு. பாகிஸ்தானின் ஒவ்வொரு
இண்டு இடுக்கையும் சல்லடை
போட்டுத் தேடி வந்தனர் பாகிஸ்தானின் ரகசியப் பிரிவைச் சார்ந்த உளவுப்படை போலிசார்.
இவை
எல்லாவற்றையும் மீறி 32 வயதான
குலாலை இஸ்மாயில் பாகிஸ்தானின்
அச்சுறுத்தும் போலிஸ் / ராணுவ
வலையிலிருந்து தப்பி இறுதியில்
அமெரிக்காவில் ப்ரூக்ளினில் (Brooklyn) உள்ள அவர் சகோதரியிடம்
வந்து சேர்ந்து விட்டார்.
அமெரிக்க அரசிடம் அரசியல்
புகலிடம் (Political Asylum) கேட்டு
விண்ணப்பித்துள்ள இவர்,
தனக்கு அது கிடைத்துவிடும் என நம்புகிறார். நியூயார்க் நகரம் வந்து
சேர்ந்து சிறிது காலம்
கழிந்தும் தான்
பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை
குலாலையால் நம்ப முடியவில்லை.
தொடர்ச்சியாக, மனித உரிமை
ஆர்வலர்களையும், அரசைச் சேர்ந்த
அதிகாரிகளையும் தொடர்ந்து சந்தித்துப்
பேசி வருகிறார். 
பாகிஸ்தானில்
இன்னமும் இருக்கும் அவருடைய
பெற்றோர்கள் பற்றிய சிந்தனை
குலாலைக்கு அதிகமாகவே உள்ளது.
பாகிஸ்தானிலிருந்து எப்படித் தப்பினார் குலாலை?
இந்தக்
கேள்வியை அவரிடம் கேட்டபோது
மிகச் சுருக்கமாக அங்கிருந்த எந்த
விமான நிலையத்திலிருந்தும் நான்
பறக்கவில்லை என்கிறார்.
இதற்கு
மேல் என்னிடம் கேட்காதீர்கள்.
நான் தப்பி வந்த
விதத்தை விவரித்தால் நிறைய
நல்லவர்களின் உயிருக்கு ஆபத்தாக
முடியும் என்கிறார். 
குலாலைக்கு
ஏற்பட்ட துன்பங்கள் பாகிஸ்தானின்
உண்மை முகத்தைக் காட்டுகின்றன. தனிமனித உரிமையைத் துச்சமாக
மதித்து, பெண்களையும், வயதானவர்களையும் கூட மிகக்
கொடுமையான அடக்குமுறை மூலம்
அடக்கி ஒடுக்கும் பாகிஸ்தானைப்
பற்றி யாரும் பேச
விரும்புவதில்லை.
பாகிஸ்தானில்
பெண்கள் உரிமைகளுக்காக குலாலை
இஸ்மாயில் தொடர்ந்து மிகத்
தீவிரமாகக் குரல் கொடுத்து
வந்தார். பாகிஸ்தான் அரசும்
அதனுடைய ரகசியப் பாதுகாப்புப்
படையும் பெண்கள் மீது
ஏவிவிடும் அதீத
அடக்குமுறை, வன்கொடுமைகள், இன்னபிற
உரிமை மீறல்கள் போன்றவற்றை
வெளியுலகம் அறியச் செய்ய
தொடர்ந்து போராடி வந்தார். 
ராணுவம்
சர்வ வல்லமை வாய்ந்ததாக
அடக்கியாளும் (வெளியுலகுக்கு என்னதான்
ஜனநாயக முகமூடியைக் காட்டினாலும்) பாகிஸ்தான் போன்ற ஒரு
நாட்டில் ஒரு மாற்றுப்புள்ளி எங்கேயாவது தோன்றியே
ஆகவேண்டும் என்பதே குலாலை
போன்ற எண்ணற்ற மக்களின்
நம்பிக்கை.
பாகிஸ்தானிய
அரசு அதிகாரிகள் குலாலை போன்ற போராளிகள்
பற்றித் தொடர்ந்து வாய்
திறக்க மறுத்து வருகிறார்கள்.
குலாலை இஸ்மாயில் பாகிஸ்தானில் இருந்து துணிகரமாகத் தப்பித்த விஷயம்
மேலைநாட்டு ஊடகங்களில் பெரிதாகப்
பேசப்பட்டபோதும் அதைப்
பற்றி கருத்து தெரிவிக்கவும் மறுத்து வருகின்றனர். 
மனித
உரிமை மறுக்கப்பட்டு, இதுபோன்று
அடியோடு நசுக்கப்படும் நிகழ்வுகளை சர்வதேச
ஊடகங்களின் கவனத்திலிருந்து திசைதிருப்பவே
பாகிஸ்தான் காஷ்மீர் மீது
இந்தியா கொண்டுவந்த மாற்றங்களைத்
தொடர்ந்து கூக்குரலிட்டுக் கண்டனம் செய்து உலக
அரங்கில் ஆதரவு தேட
மிகுந்த முயற்சிகளைச் செய்து
வருகிறது.
ஒருபுறம்
அந்தநாட்டின் பொருளாதாரம் மிக
மோசமாக இருக்கிறது. மறுபக்கம்
எவ்வளவு முயற்சி செய்தாலும்
உலக அரங்கில் அந்த
நாட்டிற்குப் பெரிய அளவில்
ஆதரவுக் குரல் கொடுக்க
பல நாடுகள் இதுவரை
முன்வரவில்லை.
குலாலை அமெரிக்காவுக்குப் புகலிடம் கேட்டு
வந்துள்ள கோரிக்கையை நியாயமாகப்
பரிசீலனை செய்துவருகிறோம், அவருக்கு
வேண்டிய உதவிகளைச் செய்து
கொடுப்போம். பாகிஸ்தானுக்குத் திரும்பினால்
அவர் உயிருக்கு எந்தவித
உத்தரவாதமும் இல்லை என்பதையும்
அறிந்துள்ளோம் என்று அமெரிக்க செனட்டர்களில்
பிரபலமானவர்களில் ஒருவராக
விளங்கும் நியூ யார்க்
நகர செனட்டரான சார்லஸ்
ஷூமர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான்
பாதுகாப்புப் படையினர் தங்களுடைய
பிடியிலிருந்து குலாலை எப்படியோ
தப்பிவிட்டார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
அவரை
வெகு தீவிரமாகக் கண்காணித்து
வந்தும் எப்படியோ தப்பித்து,
நாங்கள் அணுகமுடியாத இடத்துக்குச்
சென்றுவிட்டார் என்று
தன்னைப் பற்றி விவரங்கள்
சொல்ல விரும்பாத ஒரு
பாதுகாப்பு அதிகாரி அமெரிக்க
நியூ யார்க் டைம்ஸ்
பத்திரிகை நிருபர் ஒருவரிடம்
சொன்னதாக அந்த நாளிதழ்
தகவல் வெளியிட்டது.
குலாலை இஸ்மாயில் பாகிஸ்தானுக்குள் சுதந்திரமாகப் பயணம்
செய்யவே தடைகள் இருந்தபோது,
நாட்டை விட்டே எப்படித் தப்பித்தார் என்பது பாகிஸ்தான் அரசுக்கு ஒரு புரியாத ஒரு
புதிராகவே விளங்குகிறது.
அவர்
தப்பிக்க உதவியவர்கள் தரை
மார்க்கமாக ஆப்கானிஸ்தான் அல்லது
ஈரான் வழியாகத் தப்ப
உதவினார்களா அல்லது கடல்
மார்க்கமாக ஏதேனும் ஒரு
ஐரோப்பிய நகருக்குத் தப்பிக்க
வைத்து அங்கிருந்து அமெரிக்கா
தப்பவைத்தார்களா என்பது
யாருக்கும் தெரியவில்லை.
தனி
மனித உரிமையைப் பற்றி (குறிப்பாகப் பெண்களின்
உரிமை) இப்போது பேச
ஆரம்பித்தவர் அல்ல குலாலை. கிட்டத்தட்ட
அவருடைய 16 வயதிலிருந்து 16 வருடங்களாகக்
குரல் கொடுத்து வருகிறார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்,
பெண்கள் மீது பாகிஸ்தானில் இருக்கும் அடக்குமுறை,
அதை எதிர்த்தவர்கள் / எதிர்த்துக்
குரல் கொடுத்தவர்கள் ஆகியோருக்கு
ஏற்பட்ட பயங்கர முடிவுகள்
போன்றவற்றைப் பற்றி குலாலை அசராது
பேசி வருகிறார். பெண்கள் சிறுவயதிலேயே
எப்படி திருமணத்துக்கு வற்புறுத்தப் படுகிறார்கள், காதல் என்று
ஏதாவது இருந்தால் நடக்கும்
கௌரவக் கொலைகள் என்று
குலாலை தொடாத விஷயமே
இல்லை. 
பெண்கள்
மீது ஏவி விடப்படும் அடக்குமுறைகள்,
அநீதிகள், பாகிஸ்தான் ராணுவ
வீரர்கள் எப்படித் தத்தம்
வீரத்தை அப்பாவிப் பெண்களைக்
கெடுத்துs சீரழிப்பது மூலம்
வெளிப்படுத்துகிறார்கள் போன்றவற்றைப்
பற்றி 2019 ஜனவரியில் குலாலை முகநூல் மற்றும்
ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தினார். இது மட்டுமல்லாமல், ஆண்டாண்டு
காலமாக பாகிஸ்தானில் தன்னுடைய
பஷ்டூன் இன மக்கள்
மீது நடக்கும் அடக்குமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார், தன்
இன மக்களின் ஆதார
உரிமைகளை பாகிஸ்தான்
ராணுவம் அடியோடு நசுக்குவதை
எதிர்த்து நடைபெற்ற பேரணியில்
குலாலை கலந்துகொண்டு பேசினார்.
இதனால்
எரிச்சலடைந்த பாகிஸ்தான் ராணுவம்
குலாலை மீது தேசத்துரோக
வழக்கை ஏவியது. பிற
மக்களை அரசுக்கு எதிராகக்
கலகம் செய்யத் தூண்டுகிறார்
என்றும் அவர் மீது
பழி சுமத்தப்பட்டது. 2019
மே மாதம் குலாலை
மீது அரசு
தொடுத்துள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து
ஓடப் பார்க்கிறார்
என்று அரசால்
தேடப்படும் குற்றவாளி (Fugitive) என்ற குற்றம் சுமத்தப்பட்டது. தன்னை ஒரேயடியாகத் தீர்த்து
விட முயற்சி நடக்கிறது
என்பதை குலாலை உணர்ந்துகொண்டார்.
இது
பற்றிய தகவலை அவருடைய
நண்பர் ஒருவர் குலாலை
வீட்டுத் தொலைபேசியில்
தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் உள்ள
அந்த வீட்டில்தான் குலாலை
தன் வயது முதிர்ந்த
பெற்றோருடன் வசித்துவந்தார். ஊடகங்கள் முழுக்க
உன்னைப் பற்றிய செய்திதான்.
உன் இருப்பிடத்தைச் சோதனை
செய்து உன்னைக் கைது
செய்ய உளவுப்படை போலிஸ்
வருகிறது. இதுதான் நீ
இங்கிருந்து கிளப்புவதற்குச் சரியான
தருணம். உடனே கிளம்பு என்று
தொலைபேசியில் தெரிவித்தார் அந்த
நண்பர். 
மாற்று
உடை,
கையில் அலைபேசி என
எதுவும் இல்லாமல் வீட்டைவிட்டு
உடனே வெளியேறினார் குலாலை.
அலைபேசி தன் வசம்
இருந்தால், அதன் மூலம்
தன் இருப்பிடத்தைப் பற்றி
அறிந்துகொள்ள உளவுப்படை போலிஸால்
முடியும் என்பதை குலாலை
அறிந்திருந்தார். 
நீங்கள் பயந்தீர்களா என்ன? 
குலாலை
இந்தக் கேள்விக்குப் புன்னகைத்தவாறே பதில் சொன்னார்,
எதையும்
நினைத்துப் பார்க்கக் கூட
எனக்கு
நேரமில்லை. பயப்படுவதற்கோ, தைரியமாக
இருப்பதற்கோ நேரமில்லை. அது
தப்பிப்பதற்கான நேரம் என்றார்
அவர்.
அடுத்த
மூன்று மாதங்களை ஒரு
இடத்திலிருந்து இன்னொரு இடம்
என்று மாறி மாறி
பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நாடோடி வாழ்க்கை
நடத்தினார் குலாலை. தனக்கு
மிக நம்பகமான மிகச்
சில நண்பர்களை மட்டுமே
நம்பினார் அவர். இஸ்லாமியப் பெண்
என்பதால் முகத்திலிருந்து
கால் வரை

மறைக்கப்பட்ட உடை அவருக்குப்
பெரிதும் உதவியாக இருந்தது.
மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் நகரங்கள் பலவற்றில்
இருக்கும் சோதனைச் சாவடிகளைக் கடக்கும் போதெல்லாம் மிகவும்
பயந்திருந்தார் குலாலை. 
இதுபோன்ற
ஒரு தருணத்தில் தன்
தந்தையின் நெருங்கிய நண்பர்
வீட்டிற்கு முன்னறிவிப்பு எதுவும்
இன்றி ஒருமுறை திடீரென்று
சென்று அந்த வீட்டில்
இருந்தவர்களை துணுக்குறச் செய்ததை
எண்ணி இப்போதும் வருந்துகிறார்
குலாலை. என்
தந்தையின் நண்பர் என்னைப்
பார்த்ததும் மிகவும் பயந்துவிட்டார்.
ஏனென்றால் நான் அரசால்
மிகத் தீவிரமாகத் தேடப்படும்
குற்றவாளி. எனக்கு உதவி
செய்வது தெரிந்தால் அவர்
குடும்பத்துக்குக் கிடைக்கும்
தண்டனை மிகக் கொடூரமானதாக
இருக்கும். அதனால் ஒரே
இரவில் அங்கிருந்து வெளிவந்து,
நண்பர் ஏற்பாடு செய்த
டாக்சி மூலம் வேறிடத்திற்குச் சென்று விட்டேன்.
ஒளிந்து வாழ்வது ஒன்றும்
ரசிக்கத்தக்க அனுபவமல்ல,
என்றார் அவர்.
குலாலை
முன்னெச்சரிக்கையாக முதலிலேயே
அமெரிக்க விஸாவுக்கு விண்ணப்பித்து
அதை வாங்கி வைத்திருந்தார்.
ஏனென்றால் அங்கு அவருடைய
இரு சகோதரிகளும், இரு
சகோதரர்களும் ஏற்கெனவே அமெரிக்காவில் குடியேறி இருந்தனர்.
அவர்களைச் சந்திப்பதற்காக முன்பே
(
நேரான வழியில்) அமெரிக்கா
சென்றுவந்த அனுபவமும்
அவருக்கு உண்டு.
குலாலைக்குத்
தன் பெற்றோரை எண்ணி
இன்னமும் பயமாகவே இருக்கிறது என்கிறார்.
அவர் அமெரிக்கா தப்பிச் செல்ல
பண உதவி செய்தார்கள் என்று
அவர்கள் எந்த நேரமும்
கைதாகலாம் என்ற என்ற
அச்சமும் அவருக்கு உள்ளது.
ஆனால், உண்மையில் குலாலையின்
பெற்றோர்கள் அவருக்குப் பணஉதவி
எதுவும் செய்யவில்லை.
இருந்தாலும்
குலாலையின் பெற்றோர் மீது
தீவிரக் கண்காணிப்பு இருந்து
வருகிறது. அமெரிக்காவில் இருக்கும்
பாகிஸ்தானிய உளவுப்படை ஆட்கள்
யாராவது பார்த்தாலும் குலாலைக்குப்
பிரச்சினைதான். 2019 செப்டம்பர்
மாதம் அமெரிக்கா சென்று அடைந்துவிட்டாலும் இன்னமும் பயத்துடன், தனியாக
வெளியே எங்கும் செல்லாமல்
கூடியவரை சகோதரியின் வீட்டிலேயே
இருக்கிறார் குலாலை. அங்கு இருக்கும் தன்
குடும்பத்தினருக்கு விதவிதமான
பாகிஸ்தானிய உணவுகளைச் சமைத்துப்
பரிமாறுவதில் ஆர்வம் காட்டுகிறார்.
இதுபோன்ற
மனித உரிமை வழக்குகளை
எடுத்து நடத்திவரும் மஸ்ரூர் ஷா என்ற
வழக்கறிஞர், குலாலை
மறுபடியும் பாகிஸ்தானிய அரசு
அதிகாரிகளிடம் சிக்கினால் அவருக்கு
நிச்சயம் மரண தண்டனைதான் என்கிறார். குலாலை அமைதி
மற்றும் ஜனநாயகத்துக்கான குரல் என்று
ஒரு அமைப்பை ஏற்படுத்தி
அதன் மூலம் தன்
போன்ற பெண்களுக்கு உதவி
செய்து வருகிறார். சட்டம்
படிக்கும் திட்டமும் அவரிடம்
உள்ளது. ஆனால், மறுபடியும்
தன் பெற்றோரைப் பார்க்கவே
முடியாது என்ற உண்மை
அவரை மிகவும் வாட்டுகிறது.நான் அந்த
நாட்டிலிருந்து வெளிவந்தபோதே இது
ஒரு வழிப்பாதை என்பதை
உணர்ந்து கொண்டேன். அமெரிக்க
மண்ணை மிதித்தவுடன் இனி
இதுதான் என் பூமி
என்ற எண்ணத்தையும் என்னுள்
விதைத்துக்கொண்டேன் என்கிறார்
குலாலை.
தகவல்கள் நன்றி:

நியூ யார்க் டைம்ஸ் தினசரி, Front-line Defenders இயக்க இணையத்தளம், Peace Direct இயக்க இணையத்தளம், Undispatch இணையத்தளம், Secure Avaaz இயக்க இணையத்தளம்.

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 2) | ஹரி கிருஷ்ணன்

கேள்வி: கிருஷ்ணனுடைய மாயை என்ற ஸஞ்சயன் அனுமானம் எந்த அளவுக்கு உண்மை?
 
இந்திரனிடமிருநது பெற்ற வாசவி சக்தியைக் கர்ணன், தான் போர்க்களத்துக்கு வந்த முதல் நாளிலேயே பயன்படுத்தி இருக்கலாமே. அவ்வாறு செய்யாமல், அந்த அஸ்திரத்தை ஏன் கடோத்கசனின்மேல் வீணடித்தான் என்று திருதராஷ்டிரன் எழுப்பிய கேள்விக்கு ஸஞ்சயன் சொன்ன பதிலைச் சென்றமுறை பார்த்தோம். இதற்கு, கிருஷ்ணன் உண்டாக்கிய மாயைதான் காரணம் என்ற தொனியில் ஸஞ்சயனின் விடை அமைந்திருந்தது. ஆனால், கர்ணன் களத்துக்கு வந்த பதினோராம் நாள் யுத்தத்திலிருந்து, கடோத்கசன் மீது அவன் இந்திரன் கொடுத்த சக்தியாயுதத்தை வீணடித்த பதினான்காம் நாள் இரவு நடந்த நிகழ்ச்சிகளை வரிசைப் படுத்தி, மிகச் சுருக்கமாக high-lights மட்டும் பார்த்துக்கொண்டு வந்தால், கர்ணனிடத்திலிருந்த சக்தி அஸ்திரத்திலிருந்து தப்பியது கிருஷ்ணன் உண்டாக்கிய மாயையாலா அல்லது வேறு காரணங்களாலா என்பது தெளிவாகும் என்று சொல்லியிருந்தோம். இப்போது கர்ணன் யுத்தகளத்துக்குள் நுழைந்த பதினோராம் நாள் யுத்தத்திலிருந்து பதினான்காம் நாள் இரவு யுத்தத்தில் கடோத்கசனைக் கொன்றது வரையில் நடந்தனவற்றை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். அதாவது கிட்டத்தட்ட 300-400 பக்கங்களின் சுருக்கத்தைப் பார்க்கப் போகிறோம்.
பத்தாம் நாள் பீஷ்மர் விழுந்தார். பீஷ்மர் உயிரோடு இருக்கும் வரை போர்புரிய மாட்டேன் என்று சபதம் செய்திருந்த கர்ணன், பதினோராம் நாள் யுத்தத்துக்கு வந்தான். பீஷ்மருடைய மரணத்துக்குப் பிறகே போருக்கு வருவேன் என்று அவன் உத்தியோக பர்வத்தில் மூன்று வெவ்வேறு சமயங்களில் சபதம் செய்கிறான். அதில் மூன்றாவது முறையாகச் செய்யும் சபதத்தில் இவ்வாறு சொல்கிறான்:
Alone I will exterminate the army of the Pandavas! The fame, however, of such a feat will attach to Bhishma, O tiger among kings, for this Bhishma, O monarch, hath been made by thee the commander of thy forces, and the renown always attacheth to the leader and not to those that fight under him. I will not, therefore, O king, fight as long as Gangas son liveth! After Bhishma, however, hath been laid low, I will fight with all the Maharathas of the enemy united together! (கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்ப்பு, உத்யோக பர்வம் 169ம் பகுதி)
 
அதாவது, நான் ஒருவனாகவே பாண்டவர்களை அழிப்பேன். ஆனால், பீஷ்மரின் தலைமையில் போரிட்டால், பாண்டவர்களை நான் அழித்ததற்கான எல்லாப் புகழும் சேனைத் தலைவர் என்ற முறையில் பீஷ்மரைச் சேரும். ஆகவே, இன்னொருவர் தலைமையின்கீழ் நான் போரிட மாட்டேன் என்று சொன்ன கர்ணன், இப்போது துரோணருடைய தலைமையின்கீழ் போரிட வந்திருப்பதே பெரிய நகைமுரண். அது போகட்டும். இந்தப் பதினோராவது நாள் யுத்தத்திலிருந்து நடந்தவை என்ன? வரிசைப்படிப் பார்ப்போம்.
 
பதினோராம் நாள்
 
இன்று நான் யுதிஷ்டிரனை சிறைப் பிடிப்பேன். ஆனால் ஒன்று. நான் அவ்வாறு சிறையெடுக்கும் சமயத்தில் அர்ஜுனன் குறுக்கிடக் கூடாது. அப்படி அவன் குறுக்கிடாமல் நீ பார்த்துக் கொண்டால் யுதிஷ்டிரனைச் சிறைப் பிடிக்கிறேன் என்று துரோணர், துரியோதனனுக்கு வாக்களித்திருந்தார். அன்று நடந்த யுத்தத்தில் பீமன், சல்யன், சாந்தனீகன், கர்ணனுடைய மகன் விருஷசேனன், அர்ஜுனனுடைய மகன் அபிமன்யு என்று பலர் தமக்குள் போர்புரிந்து கொண்டார்கள். துரோணர், தருமபுத்திரனை ஏறத்தாழ சிறைப்பிடித்துவிட்டார் என்ற நிலையில் மின்னல் வேகத்தில் அங்கே வந்த அர்ஜுனன் அவரைத் தடுத்துவிட்டான். துரோணரால் தர்மபுத்திரனைச் சிறைப்பிடிக்க முடியவில்லை. அன்று கர்ணன் களத்தில்தான் இருந்தான். அவனால் முடிந்திருந்தால், துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் புகுந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் யுதிஷ்டிரன் ஒருவேளை சிறைப்பிடிக்கப் பட்டிருக்கலாம். கர்ணன் அவ்வாறு குறுக்கிடவில்லை.
 
பன்னிரண்டாம் நாள்
 
அர்ஜுனனை சம்சப்தகர்கள் வெகுதொலைவுக்கு இழுத்துச் சென்றிருந்தனர். பகதத்தனும் அவனுடைய யானையான சுப்ரதீகமும் பாண்டவர் சைனியத்தைக் கலங்கடித்தனர். பீமன், சாத்யகி, அபிமன்யு என்று பலர் முயன்றும் சுப்ரதீகத்தின் அட்டகாசத்தைத் தடுக்க முடியவில்லை. எங்கிருந்தோ முளைத்த அர்ஜுனன் அன்று சுப்ரதீகத்தை அடக்கினான். அதைத் தொடர்ந்துதான் அர்ஜுனன்மீது பகதத்தன் வைஷ்ணவாஸ்திரத்தை எறிகிறான். அவன் அப்படி எறியும்போது, கிருஷ்ணன் தன் குதிரைச் சவுக்கையும் கீழே போட்டுவிட்டு, முழுமையான நிராயுதபாணியாக எழுந்து நின்று அந்த அஸ்திரத்தைத் தன் மார்பில் ஏற்றுக் கொள்கிறான். அது அவன் கழுத்தில் மாலையாக விழுகிறது. கிருஷ்ணா, நீ இப்படிக் குறுக்கிட்டிருக்கக்கூடாது என்று ஆட்சேபித்த அர்ஜுனனுக்கு, இது என் பொருள். என்னிடம் திரும்ப வந்துவிட்டது. பூமாதேவி கேட்டுக்கொண்டதன் பேரின் இதை நான் நரகாசுரனுக்குக் கொடுத்திருந்தேன். அவனிடமிருந்து பகதத்தனிடத்தில் இது வந்திருக்கிறது. இப்போது அவன் தன்னுடைய அங்குசத்தின்மேல் அபிமந்திரிந்து உன்மீது எய்தான். இனி நீ போரைத் தொடர்க என்று கிருஷ்ணன் பதில் சொன்னான். அதைத் தொடர்ந்து பகதத்தன் மீது அர்ஜுனன் எய்த அம்பு அவனுடைய மார்பைத் துளைத்து, அவன் உயிரைக் கவர்ந்தது. கிஸாரி மோகன் கங்கூலி சொல்கிறார்:
 
The son of Pandu then, with a straight shaft furnished with a crescent-shaped head, pierced the bosom of king Bhagadatta. His breast, being pierced through by the diadem-decked (Arjuna), king Bhagadatta, deprived of life, threw down his bow and arrows. Loosened from his head, the valuable piece of cloth that had served him for a turban, fell down, like a petal from a lotus when its stalk is violently struck.
 
கர்ணன் அன்று பகதத்தனுக்கு அருகிலேயேதான் இருந்தான். பகதத்தனுக்கு உதவியாக அர்ஜுனோடு போர்புரிந்து, கர்ணன் அர்ஜுனனைத் தடுத்திருக்கலாம். கர்ணன் அப்படி எதையுமே செய்யவில்லை.
 
பதின்மூன்றாம் நாள்
 
அன்றும் சம்சப்தகர்கள் அர்ஜுனனுக்கு சவால்விட்டு, அவனை யுத்தகளத்தின் தெற்குக் கடைக்கோடிக்கு இழுத்துச் சென்றிருந்தனர். அன்றுதான் அபிமன்யு சக்கர வியூகத்துக்குள் நுழைந்து, கர்ணன் உள்ளிட்ட கௌரவ மஹாரதிகளைத் தோற்கடித்திருந்தான். இப்படி அர்ஜுனனைத் தொலைதூரத்துக்கு இழுத்துச் சென்றால்தான் அபிமன்யு சக்கர வியூகத்துக்குள்ளே வருவான் என்பது ஏற்பாடு. அப்படியானால், அர்ஜுனனை அந்த இடத்திலிருந்து விலக்க துரோணாசாரியார் சம்சப்தகர்களைத் தற்கொலைப் படையாக உபயோகித்துக் கொண்டது ஏன்? கர்ணனைவிட்டு அர்ஜுனனைத் தடுத்திருக்கலாமே! அவனிடம்தான் இந்த மகத்தான சக்தி அஸ்திரம் இருக்கிறதே! துரோணர் கர்ணனிடம் இந்த வேலையை ஒப்படைக்கவில்லையே! அவனால் அர்ஜுனனைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை துரோணாசாரியருக்கு இருக்கவில்லையே!
 
பதினான்காம் நாள்
 
ஜயத்ரத வதம் நடந்த தினம். அன்று துரோணர், கௌரப் படைகளை அர்த்த-பத்ம-அர்த்த சக்கர வியூகங்களாக அமைத்து, இந்த வியூகங்களுக்குள் ஒரு ஊசி வியூகத்தை ஏற்படுத்தி, அந்த ஊசியின் காதுப் பகுதியில் ஜயத்ரதனை நிறுத்தியிருந்தார். ஜயத்ரதனுடைய பாதுகாப்புக்காக நின்ற மஹாரதிகளில் கர்ணனும் ஒருவன். ஜயத்ரதன் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் பீமனுக்கும் கர்ணனுக்கும் போர் மூண்டது. பீமன் கர்ணனை அன்று மூன்றுக்கும் மேற்பட்ட முறைகள் தோற்கடித்தான். கதாயுதப் போரிலில்லை; விற்போரில்தான். கர்ணனுடைய தேர்களைச் சிதைத்து அவனைத் தரையிலே நிற்கவைத்தான். இப்படித் தொடர்ந்து தோற்கடித்துக்கொண்டிருந்த பீமனிடத்தில் ஆயுதங்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. யுத்தத்தில், கையிலுள்ள ஆயுதங்கள் செலவழியும்; சாரணர்கள் (Scouts) ஆயுதங்களைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். அப்படி, சாரணர்களிடமிருந்தும் ஆயுதங்களைப் பெறமுடியாத நிலையில் இருந்தான் பீமன். பலமுறை பீமனிடம் தோற்றிருந்த கர்ணன், ஆயுதக் குறைபாட்டோடு இருந்த பீமனை வென்றான். அர்ஜுனனைத் தவிர மற்றவர்களைக் கொல்ல மாட்டேன் என்று குந்தியிடம் அவன் வாக்களித்திருந்தான். இது, கர்ணனே குந்திக்குத் தந்த வாக்கு; குந்தி கர்ணனிடம் கேட்டுப் பெற்றதன்று. ஆகவே கர்ணன் பீமனைக் கொல்லவில்லை. அதற்கு பதிலாக பீமனை, காட்டுக்குப் போ. பயிற்சியில்லாமல் உயர்ந்த வீரர்களோடு போர்புரிய வராதே என்றெல்லாம் பலவிதமாக அவமானப்படுத்தினான். தேரில்லாமல் தரையில் நின்றுகொண்டிருந்த பீமனைத் தன் வில் நுனியால் தொட்டான். வீரர்களுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய அவமானம் இது. ஜயத்ரத வதத்துக்காக அந்த இடத்தை நெருங்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் இதைப் பார்த்தான். சூரியனோ அஸ்தமனத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சூர்யாஸ்தமனத்துக்குள் ஜயத்ரதனைக் கொல்லாவிட்டால் தீயில் பாய்வேன் என்று சபதம் செய்திருந்த அர்ஜுனன் பீமனுக்கும் கர்ணனுக்கும் குறுக்கே வந்தான். Then the ape-bannered (Arjuna), urged by Kesava, shot at the Sutas son, O king, many shafts whetted on stone. Those arrows adorned with gold, shot by Parthas arms and issuing out of Gandiva, entered Karnas body, like cranes into the Krauncha mountains. With those arrows shot from Gandiva which entered Karnas body like so many snakes, Dhananjaya drove the Sutas son from Bhimasenas vicinity. His bow cut off by Bhima, and himself afflicted with the arrows of Dhananjaya, Karna quickly fled away from Bhima on his great car. என்று இந்த இடத்தை கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார். (துரோண பர்வம், அத்தியாயம் 138)
 
ஜயத்ரதனுக்குப் பாதுகாவலாக நிறுத்தப்பட்டிருந்த கர்ணன், அர்ஜுனனுடைய காண்டீவத்திலிருந்து புறப்படும் அம்புகளைச் சமாளிக்க முடியாமல் அந்த இடத்தைவிட்டு கிருபருடைய தேரில் ஏறிக்கொண்டு ஓடிப் போனான். கர்ணன் இந்தச் சமயத்திலாவது அர்ஜுனன் பேரில் அந்த மகத்தான சக்தியாயுதத்தை எய்திருக்கலாம். எய்யவில்லை.
 
ஜயத்ரத வதம் முடிந்தபிறகு எப்போதும்போல சூரிய அஸ்தமனத்துடன் போர் நிற்காமல் இரவெல்லாம் தொடர்ந்தது. இரவு ஆக ஆக அரக்கர்களுக்கு பலம் அதிகரிக்கும். அரக்கனான கடோத்கசனுக்கு பலம் ஏறிக்கொண்டே போனது. கடோத்கசன் ஏற்படுத்துகிற அழிவைப் பொறுக்க முடியாமல் கௌரவப் படைகள் கர்ணனிடத்தில் தஞ்சம் புகுந்தன. இதற்குமேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் கர்ணன் அந்த இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தைக் கடோத்கசன் மீது எய்தான்.
சக்தியாயுதம் என்பது அவ்வளவு பெரிய ஆற்றலுடையதா? உத்யோக பர்வத்தில் கர்ணனிடத்தில் பீஷ்மர் கேட்கிறார்: The shaft that the illustrious and adorable chief of the celestials, the great Indra, gave thee, thou wilt see, will be broken and reduced to ashes when struck by Kesava with his discus. That other shaft of serpentine mouth that shineth (in thy quiver) and is respectfully worshipped by thee with flowery garlands, will, O Karna, when struck by the son of Pandu with his shafts, perish with thee
அந்த சக்தியாயுதம் என்ன அவ்வளவு பெரியதா? கிருஷ்ணனுடை சக்ராயுதம் பட்டால் அது பொடிப் பொடியாகப் போய் சாம்பலாகும் என்கிறார் பீஷ்மர். அதற்குக் கர்ணன், ஆமாம். கிருஷ்ணனுடைய தன்மை அப்படிப்பட்டது; அதற்கும் மேற்பட்டது. நான் மறுக்கவில்லை என்கிறான்.
Karna said, Without doubt, the chief of the Vrishnis is even so. Further, I admit, that that high-souled one is even more than that. Let, however, the Grandsire listen to the effect of the bit of harsh speech that he hath uttered. I lay down my weapons. The Grandsire will henceforth behold me in court only and not in battle. After thou hast become quiet, the rulers of the earth will behold my prowess in this world. (உத்தியோக பர்வம், அத்தியாயம் 62)
 
அர்ஜுனனிடத்தில் சக்ராயுதத்துக்குச் சற்றும் குறையாத பாசுபதாஸ்திரம் இருந்தது. இந்திரனுடைய வஜ்ராயுதமும் இருந்தது. இந்திரனுடைய வஜ்ராயுதத்தைப் பயன்படுத்தித்தான் அவன் நிவாத கவசர்களை அழித்திருந்தான். எனவே அர்ஜுனனிடம் சக்தியாயுதத்துக்கு மாற்று இல்லாமலில்லை. கண்ணனுடைய சக்ராயுதம், அதற்குச் சற்றும் குறையாத பாசுபாதாஸ்திரம் இந்திரனுடைய வஜ்ராயுதம் என்று சகலவிதமான மாற்று ஆயுதங்களும் அர்ஜுனனுடைய துணைக்கிருந்தன.
 
அதற்குமேல், இந்திரன் இந்த சக்தியாயுதத்தைக் கர்ணனுக்குத் தரும்போது, மற்ற எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திய பிறகே இதைப் பயன்படுத்தவேண்டும்; உன்னுடைய உயிருக்குப் பேராபத்து இருக்கும் நிலையில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தான். தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் கட்டம் வரையில் கடோத்கசனோடு கர்ணன் போர்புரிந்திருநதான். வேறுவழியே இல்லாத நிலையில்தான் சக்தியாயுதத்தை கடோத்கசன் மீது எய்தான்.
 
அவ்வாறு எய்யப்படாமல் இருந்திருந்தாலும் எதுவும் நடந்திருக்காது. அர்ஜுனனிடத்திலேயே சக்தியாயுதத்தைவிட அபரிமிதமான ஆற்றலுள்ள ஆயுதங்கள் இருந்தன. ஒருவேளை அவையே இல்லாமல் போயிருந்தாலும் கண்ணனுடைய சக்ராயுதம் அந்த நேரத்தில் சும்மா இருந்திருக்காது. அதற்குமேல், கடோத்கச வதம் நடந்த சிலமணி நேரத்துக்கு முன்னால்தான் கர்ணன் பீமனிடத்திலேயே மூன்று நான்கு முறை விற்போரில் தோற்று, தேரிழந்து நின்றிருக்கிறான். அர்ஜுனனோடு நேருக்கு நேர் மோதி தோற்று ஓடியிருக்கிறான். சக்தியாயுதத்தை கடோத்கசன்பேரில் வீணடித்திராவிட்டாலும் அது அர்ஜுனனை வெல்ல ஒரு காரணியாக இருந்திருக்கவே போவதில்லை.
Posted on Leave a comment

எஸ் வங்கி பிரச்சினை | ஜெயராமன் ரகுநாதன்

 

கடந்த ஒரு வருடத்தில்
நாம் இரண்டு பெரிய நிதித்துறை அதிர்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. முதலில்
பஞ்சாப் மஹாராஷ்டிரா கோ-ஆப்பரேடிவ் வங்கியின் திவால். அதன் தாக்கம் முழுமையாகச் சரி
செய்யப்படுவதற்குள் இப்போது எஸ் வங்கியின் (
Yes
Bank)
வீழ்ச்சி. இந்த வீழ்ச்சி வெகு ஆழமான காரணங்களுக்கு உட்பட்டது என்பது இப்போதுதான் தெரிய வருகிறது. பதிலில்லாத பல
கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஒரு சராசரி இந்தியனின் மனக்குமுறலை அதிகரிக்கும் வண்ணம்
சிக்கல்களை இந்த வங்கியின் வீழ்ச்சி உள்ளடக்கியிருக்கிறது.


அக்டோபர்
2019 தொடங்கி டிசம்பர் 2019 வரையிலான மூன்று மாதங்களில் எஸ் வங்கி அடைந்திருக்கும்
நஷ்டம் ரூ
பாய் 18,564 கோடி. ஒரு வருடம் முன்பு, அதாவது
அக்டோபர் 2018 தொடங்கி டிசம்பர் 2018 வரையிலான மூன்று மாதங்களில் எஸ் வங்கியின் லாபம்
ரூ 1000 கோடி என்று அறிக்கை சொல்லியிருக்கிறது. இந்த மாதிரியான அதலபாதாள வீழ்ச்சி ஒரே
வருடத்தில் சாத்தியமா? அப்படியானால் இதுநாள் வரையிலான அறிக்கைகளும் தணிக்கை செய்யப்பட்ட
கணக்குகளும் சொல்லியவை எல்லாம் பொய்தானா? இந்த அளவுக்கா அடிப்படை முறைமைகளே கேள்விக்குள்ளாகும்?
இது நமது நாட்டின் நிதித்துறையின் சட்டதிட்டங்களையே கேலிக்குள்ளாக்கும் அவலமில்லையா?


உடனடி முடிவாக
ரிசர்வ் வங்கி எஸ் வங்கியில் பணம் திரும்பப்பெறும் (M
oratorium) அளவை ரூ
50,000க்கு என்று கட்டுப்படுத்திவிட்டது இந்தக் கட்டுப்பாடு மர்ச் 18ம் தேதி வரை மட்டுமே.
இந்த முடிவுமே கேள்விக்குரியதாக ஆகியிருக்கும் நிலையில் இதைக் கொஞ்சம் விவரமாக அலசுவது
அவசியம். ஆனால் அதற்கு முன்னால் இந்த எஸ் வங்கியில் நடந்த நிகழ்ச்சிகளை
த் தேதி வாரியாகப் பார்க்கலாம்:

செப்டம்பர்
19, 2018 
வங்கியின் தலைப்பொறுப்பில்
இருந்த ரானா கபூருக்கு அந்தப் பதவியில் தொடருவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி மறுத்து,
அவர் ஜனவரி 2019ல் பதவி விலகவேண்டும் என்று கட்டளை இடுகிறது.


நவம்பர் 27,
2018
நிதித் தரத்தை
நிர்ணயிக்கும் மூடி (Moody) என்னும் சர்வதேச நிறுவனம் எஸ் வங்கியின் அந்நியச் செலாவணி
அளிக்கும் நிறுவனத் தரத்தை சந்தேகத்துக்குரியது என்று நிர்ணயித்தல்.


ஃபிப்ரவரி
13, 2019
எங்களின் சொத்து மற்றும் வாராக்கடன் பற்றின ஒதுக்கீட்டில்
எந்த முறைகேடும் இல்லை என ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது
என்று எஸ் வங்கி
அறிவிப்பு


ஏப்ரல் 8,
2019
முதலீட்டுத்
தேவையை மனதில் கொண்டு எஸ் வங்கி நாங்கள் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் மூலம் இன்னும்
முதலீட்டைப்பெருக்குவோம் என்ற அறிவிப்பு


ஏப்ரல், 26,
2019
முதன் முறையாக,
கடந்த மூன்று மாதத்திய (ஜனவரி – மார்ச் 2019) வருவாயில் இழப்பு என்று எஸ் வங்கி அறிவிக்க,
எஸ் வங்கியின் பங்கு அடுத்த நாள் சந்தையில் 30% வீழ்ச்சி.


மே 14, 2019
இதுவரை காணாத
வகையில் ரிசர்வ் வங்கி ஆர். காந்தி என்னும் ஓய்வுபெற்ற உதவி கவர்னரை தன் சார்பில் எஸ்
வங்கியில் கூடுதல் நிர்வாக இயக்குநராகப் புகுத்தியது.


ஜூலை 17,
2019
முதல் மூன்று
மாதங்களுக்கான (ஏப்ரல் – ஜூன் 2019) லாபம் 91% குறைவு என்றும், வாராக்கடன் தொகை விகிதம்
5.01%க்கு உயர்ந்து விட்டது என்றும் எஸ் வங்கி அறிவிப்பு.


செப்டம்பர்
10, 2019
எஸ் வங்கியின்
தலைவர் ரன்வீட் கில் (Ranveet Gill), சர்வதேச தொழில்நுட்ப கம்பெனி ஒன்று எஸ் வங்கியின்
பங்குகளை வாங்கி முதலீடு செய்வதற்குச் சம்மதித்திருப்பதாக அறிவிப்பு.


அக்டோபர் 3,
2019
மேலும் பல முதலீட்டாளர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தி அதிக முதலீடு பெறப்படும் என்று மறுபடி கில் அறிவிப்பு.


அக்டோபர்
31, 2019
ஒரு சர்வதேச
முதலீட்டாளர் எஸ் வங்கிக்கு 1.2 பில்லியன் டாலர் (ரூ. 8,400 கோடி) முதலீடு அளிக்க வாக்குக்
கொடுத்திருப்பதாக அறிவிப்பு. இந்தச் செய்தி வந்தவுடன் எஸ் வங்கியின் பங்குகள் 39% விலை
உயர்வு.


நவம்பர் 1,
2019
அடுத்த மூன்று
மாதங்களுக்கான (ஜூலை – செப்டம்பர் 2019) வரவு செலவு கணக்கில் மிகப்பெரிய இழப்பும் வாராக்கடன்
விகிதம் 7.39% உயர்வும் மற்றும் வாராக்கடன் ஒதுக்கீடு 133.6 கோடி ரூபாய் எனவும் எஸ்
வங்கி அறிவிப்பு.


நவம்பர் 26,
2019
2 பில்லியன்
டாலருக்கு (ரூ 14,000 கோடி) முதலீடு பெறுவதற்கான முயற்சிகளை எஸ் வங்கி எடுத்திருப்பதாக
அறிவிப்பு. அதில் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலர் (ரூ 8,400 கோடி) எர்வின் சிங் பிரெய்ச்
என்னும் கனடா தொழிலதிபருக்குச் சொந்தமான, ஹாங்காங்கைச் சேர்ந்த எஸ் பி ஜி பி ஹோல்டிங்ஸ்
என்னும் கம்பெனி (
Erwin Singh Braich and Hong Kong-based SPGP Holdings) அளிக்கவிருப்பதாகவும்
அறிவிப்பு.


ஜனவரி 10,
2020
எர்வின் சிங்
பிரெய்ச்சின் திட்டத்தை எஸ் வங்கி நிராகரித்து விட்டதாகவும் வேறு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும்
அறிவிப்பு.


ஃபிப்ரவரி
12, 2020
அக்டோபர் முதல்
டிசம்பர் வரையிலான வருமான விவரங்களை அளிக்க இன்னும் அவகாசம் தேவைப்படுவதாகவும் தாம்
இன்னும் முதலீட்டைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிப்பு. JC
Flowers, Tilden Park Capital Management, OHA (UK) and Silver Point Capital போன்ற
கம்பெனிகளிடமிருந்து முதலீட்டை அளிப்பதற்கான விருப்பம் வந்திருப்பதாக அறிவிப்பு.


மார்ச் 5,
2020
ரிசர்வ் வங்கி
எஸ் வங்கியில் பணம் திரும்பப்பெறுதல் அளவை ரூ 50,000க்கு என்று கட்டுப்படுத்திவிட்டது.
அதோடு எஸ் வங்கியின் நிர்வாகத்தை அடுத்த முப்பது நாட்களுக்கு ரிசர்வ் வங்கியே எடுத்துக்கொண்டு
விட்டதாகவும் அறிவிப்பு.
ஏதோ ஒரு மர்மக்கதை போல நடந்த அறிவிப்புக்களைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி தன்
பொறுமையை இழந்து செயல்பாட்டில் இறங்கியதைப் பார்த்தோம்.
2004ல் தொடங்கப்பட்ட இந்த எஸ் வங்கி மிக ஆக்ரோஷமாகத்தான் செயல்பட ஆரம்பித்தது.
பதினைந்தே வருடங்களில் இந்த வங்கியின் சொத்து மதிப்பு ரூ நான்கு லட்சம் கோடியை எட்டியது.
இந்த வங்கியின் வெற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது.
‘‘இப்படி அல்லவா
இருக்க வேண்டும் தனியார் வங்கி
’’ என்று சொல்லும்படி அதன் செயல்பாடுகள்
இருப்பதாக வங்கியின் அதிகாரிகள் டீவியிலும் பத்திரிகைகளிலும் பேட்டி அளித்தனர். போன
வருடம் கூட வங்கியின் தலைவர் எஸ்
வங்கியின் வளர்ச்சி அபாரமாக
25% வரை இருக்கக்கூடும் என்று அறிவித்திருந்தார். பங்குச் சந்தையில் எஸ் வங்கியின்
பங்குகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கி விற்கப்பட்டன. வங்கியின் வருடாந்திர அறிக்கையில்
காணப்பட்ட வாக்கியம் “எதிர்காலம் இன்றே“!
எந்த ஒரு பொருளுமே ஒளியின் வேகத்தைவிட வேகமாகப் பாய முடியாது. அப்படிப் பாயுமானால்
இன்று மட்டுமல்ல நாளையும் கூட நேற்றாகிவிடும் என்பார் ஐன்ஸ்டீன்! எஸ் வங்கியின் முன்னேற்ற
வேகம் அப்படித்தான் இருந்தது.
இதுநாள் வரையிலான எஸ் வங்கியின் செயல்பாடுகளில் ஒரு சர்ரியலிஸம் இருப்பதை உணரலாம்.
போதுமான மூலதனம் (capital adeqacy – 16.5%),
குறைவான
வாராக்கடன் (3.5%)
என்று கடந்த மார்ச் 31 2019 வரை அபார வளர்ச்சியுடன் விளங்கியதாக
அறிக்கையில் சொல்லப்பட்ட வங்கி, எப்படி பன்னிரண்டே மாதங்களில் இப்படிச்
சரிய முடியும்? அப்போது இது நாள் வரை அறிக்கையில் வந்தவை, அதிகாரிகள் பேட்டியில் தெரிவித்தவை,
மேலே நாம் பார்த்த அறிவிப்புக்கள் எல்லாம் மேலும் மேலும் மூலதனம் வாங்குவதற்காகச் சொல்லப்பட்ட
வெற்று வார்த்தைகள்தானா? ரிசர்வ் வங்கி ஆடிட்டர்கள், அரசாங்கம், மக்கள் என எல்லாரையும்
ஒரு சேர ஏய்க்க முடியுமா அல்லது இது திட்டமிடப்பட்ட அரசியல் குறுக்கீடுகள் கொண்ட இன்னொரு
குளறுபடியா என்னும் கேள்வி எழாமலில்லை.
கடந்த சில வருடங்களாகவே நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் பல வீழ்ச்சிகளில் –
ஐ டி பி ஐ வங்கி, ஐ எல் எஃப் எஸ், டி ஹெச் எஃப் எல், பி எம் சி கோஆப் வங்கி, ஆல்டிகோ
காபிடல் போன்ற அதிர்ச்சிகளை ஒட்டியே இப்போது எஸ் வங்கியும் கவிழ்ந்திருப்பது நமது நிதித்துறை
எத்தனை அபாயகரமான பாதுகாப்பின்மையுடன் இயங்குகிறது என்பதைப் பறைசாற்றவில்லையா?
அப்படி எஸ் வங்கியில் எதில்தான் தவறு நிகழ்ந்தது?
இதற்குப்பதில் மிகச்சுலபம்! எல்லாவற்றிலும்தான்!
(ரானா கபூர்)
ராணா கபூருக்கும் அவரின் மைத்துனி மது கபூருக்கும் வங்கியின் பொறுப்பில் யாருக்கு
முக்கியத்துவம் என்னும் தகராறு வெளிப்படையாகவே அரங்கேறியது. கடந்த செப்டம்பர் மாதம்
ரிசர்வ் வங்கி ரானா கபூர் பதவிக்காலம் முடிவடையும்போது வெளியேறி விட வேண்டும் என்று
சொல்லி, அவர் வங்கியில் தொடருவதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டது. நிர்வாகச் சீர்கேடு
என்று காரணம் சொல்லி வங்கியின் தனி இயக்குநர் (independent Director) உத்தம் பிரகாஷ்
அகர்வால் ஜனவரி மாதம் ராஜினாமா செய்துவிட்டார்.
தேசலான நிர்வாகம், செயல்பாடில்லாத நிர்வாகக்குழு, குளறுபடிகளுடன் கூடிய தணிக்கை
முறைகள், உடைபட்ட நிதிச்சந்தை சட்டங்கள், துணிவில்லாத மேலாண்மை, இவையெல்லாம் தவிர,
அரசியல் மூக்கு நுழைப்பை உறுதியாகக் கையாளாததால் ஏற்பட்ட சிக்கல்களால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
அத்துடன், பல வருட நேர்மையற்ற உள் விவகாரங்கள், எஸ் வங்கியின் முதலாளிகளுக்கும் நிர்வாகிகளுக்கும்
அரசியல் தலையீட்டுக்கும் இருந்த சங்கிலித்தொடர்புகள் எல்லாமாகச் சேர்ந்துதான் இந்த
நிலைமை உண்டாகி விட்டிருக்கிறது.
அதுவும் இந்த எஸ் வங்கி வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணம் ஒரு மிக மோசமான
தருணமாகிவிட்டது. ஏற்கெனவே பொருளாதாரம் இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்
வேளையில் இப்படி ஒரு தனியார் வங்கி வீழ்ந்தது இன்றைய வங்கித் துறையின் மீதான பொது மக்களின்
நம்பிக்கைக்கு பலத்த அடியைச் சாத்தியிருக்கிறது.
நிகழ்ந்த அவலங்களை மட்டும் பேசுவது எவ்விதத்திலும் நன்மை தரப்போவதில்லை. ஆனாலும்
இதைச் சரி செய்ய வேண்டிய அரசாங்கத்தின் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதி நிர்வாகத்திறமை
மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தை மறுக்க இயலாது. மக்களின் மத்தியில், முக்கியமாக முதலீட்டாளர்களின்
மத்தியில் ஒரு இயலாமை, வருத்தம் ஏன் கொஞ்சம் கோபம் கூட உண்டாகியிருக்கிறது. இந்தச்
சந்தேகம் சில அரசியல் மற்றும் நிதித்துறைப் பலிகளை வாங்கப்போகிறது என்பது நிச்சயம்.
நிதித்துறை எந்த நாட்டிலுமே கொஞ்சம் மென்மையானது. சீர்கேடுகளுக்குள் சுலபத்தில்
மாட்டிக்கொண்டுவிடும் அபாயம் இருக்கிறது. இத்துறையின் ஏதோ ஒரு பகுதி எல்லை மீறினாலும்
மொத்த நிதித்துறையும் அதற்கான விலையைத்தர வேண்டியிருக்கும் என்பதுதான் சரித்திரம் நமக்கு
மீண்டும் மீண்டும் உணர்த்தும் பாடம். இந்தியாவின் இன்றைய நிதித்துறைச் சட்ட திட்டங்களும்
கட்டுப்பாடுகளும் சர்வதேசத்தரம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவற்றை நிர்வகிக்கும்
திறமை ரிசர்வ் வங்கிக்கு போதுமான அளவில் இருக்கிறதா என்பதற்கான பதிலைத்தான் தேட வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 1969 வரை 559 தனியார் வங்கிகள் திவாலாகியிருக்கின்றன.
1969ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டுவிட்டதால் திவால் நிலைமை ஏற்படவில்லை. ஆனால் மீண்டும்
வங்கித்துறை தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின்னர் 36 வங்கிகள் வீழ்ச்சியடைந்து அவை
வேறு பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டன. கடந்த ஐந்து வருடங்களில் 26 பொதுத்துறை
வங்கிகளின் 3400 கிளைகள் மூடப்பட்டோ அல்லது வேறொரு வங்கிக் கிளையுடனோ ஐக்கியப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த எண்ணிக்கையில் 75% கிளைகள் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகள் என்பதில் சப் டெக்ஸ்ட்
இருப்பதாகக் கருதலாம்! தவிர இப்போது இன்னும் பத்து பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு
நான்கு பொதுத்துறை வங்கிகளாக்கப்படும் என்னும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.
(திவால் அல்லது இணைக்கப்பட்ட தனியார் வங்கிகளின் பட்டியலைப் பெட்டிச் செய்தியில்
காண்க.)
எஸ் வங்கி விவகாரத்திலேயே சென்ற வருடம் அறிவிக்கப்பட்ட வாராக்கடன்களின் மொத்த
மதிப்பு கிட்டத்தட்ட ரூ 3277 கோடி வரை குறைத்துச் சொல்லப்பட்டதாக (under
reporting) அன்றைய தணிக்கை சொல்லுகிறது. ஆனால் இந்தத் தொகையே மிக்குறைவு. அதாவது மறைக்கப்பட்ட
வாராக்கடன் இதை விட மிக மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஏன் என்றால் இந்த மார்ச்
மாதம் 6ம் தேதி ரிசர்வ் வங்கி எஸ் வங்கியின் பணம் திரும்பப்பெறுதல் அளவை ரூ 50,000க்கு
என்று கட்டுப்படுத்திவிட்டபோதே (Moratorium), வங்கியின் முதலீடான ரூ 26,904 கோடியில்
பாதிக்கு மேல் இழக்கப்பட்டு விட்டது (Eroded) என்பது புரியத்
தொடங்கியது.
கடந்த சில வருடங்களாகவே தனியார் வங்கிகளின் வருடாந்திரக் கணக்கு வழக்குகளைப்
பார்க்கும்போது ஒரு சில விஷயங்களில் சந்தேகம் வருகிறார் போல இருப்பதாக வல்லுநர்கள்
சொல்லி இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் தனியார்மயக்
கொள்கைக்கு எதிரானவர்கள், அப்படித்தான் பேசுவார்கள்
என்று அசட்டை செய்து விட்டோமோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. எஸ் வங்கியிலேயே
2016-17ல் அளித்த கடன்கள் ஆண்டுக்கு 35% வரை உயர்ந்திருக்கிறது. அடுத்த வருடத்தில்
கடன் 54% உயர்ந்திருக்கிறது. இதே வருடங்களில் வட்டியில்லா வருமானமும் மிக அதிகமான விகிதத்தில்
மேலே போயிருக்கிறது. ஒரு தனியார் வங்கி தன் வருடாந்திரக் கணக்கில் அசாதாரணமான தொகைகளை
வட்டியில்லா வருமானமாகக் காண்பிக்கும்போது நம் சந்தேக ஆண்டென்னாக்கள் விடைத்து எழுந்திருக்க
வேண்டும் என்று இப்போது புரிகிறது. இந்த வட்டியில்லா வருமானமானது சந்தேகோபாஸ்தமான வழிகளில்
ஈட்டப்படுகிறது என்பதும் அதற்கான திரை மறைவு நன்மைகள் யார் யாருக்கோ போய்ச்சேருகின்றன
என்பதும், நிரூபிக்க முடியாவிட்டாலும் விஷயமறிந்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிற சமாச்சாரம்தான்.
ஆகவே ரிசர்வ் வங்கி இந்த எஸ் வங்கி விவகாரத்தில் சென்ற வருடம் முதல் நடந்த சில தணிக்கைகளில்
கண்டுபிடிக்கப்பட்ட விவரங்களை
த் தெரிவிக்க வேண்டும்.
பொறுப்பேற்க வேண்டியவர்களையும் அடையாளம் காட்ட வேண்டும்.
முக்கியமாக வல்லுநர்கள் சொல்லுவது ரிசர்வ் வங்கி இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்
என்பதே. திசை திருப்புதல், முழுமையான வெளிப்படுத்துதல் (Disclosure) இல்லாத தகவல்கள்,
ஏறிக்கொண்டிருந்த வாராக்கடன்கள், அரிக்கப்பட்ட மூலதனம், மேலும் மூலதனம் திரட்டும் தகுதியின்மை
போன்ற சிக்கல்கள் எஸ் வங்கியில் தொடர்ந்திருப்பது எப்படி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில்
வெளிப்படாமல் போனது என்னும் கேள்வி பெரிதாக எழுந்து நிற்கிறது. இதற்கான சீரமைப்பாக
மாரட்டோரியத்தைக் கொண்டு வந்து டெபாசிட் போட்ட வாடிக்கையாளர்களின் நிம்மதியை வேறு ரிசர்வ்
வங்கி கெடுத்துவிட்டது என்னும் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. (இந்தக் கட்டுரை அச்சேறும்
தறுவாயில் இது சரி செய்யப்பட்டுவிட்டது.) எனவே தனியார் வங்கிகள் மிகவும் திறமையானவை,
பொதுத்துறை வங்கிகளைப்போல மெத்தனமாகச் செயல்படுவதில்லை என்ற கருத்து இப்போது மரண அடி
வாங்கியிருக்கிறது.
இது ஒன்றும் புதிதும் அல்ல. குளோபல் டிரஸ்ட் வங்கி மற்றும் பஞ்சாப் மஹாராஷ்டிரா
கோஆப்பரேடிவ் வங்கிகளிலும் நடந்தவைதாம் இங்கும் நடந்தேறியிருக்கின்றன.
சரி, இந்த வீழ்ச்சியைச் சரி செய்ய என்ன மறுசீரமைப்பு திட்டமிடப்பட்டிருக்கிறது
என்பதைப் பார்ப்போம்.
முதலாக ஸ்டேட் வங்கி முன் வந்து ரூ 2450 கோடி முதலீட்டைத் தருவதற்குச் சம்மதித்துள்ளது.
சம்மதித்ததா அல்லது நிர்பந்தப்படுத்தப்பட்டதா என்பது பதிலில்லாத கேள்வி. அந்த அளவு
மூலதனத்திற்கு ஸ்டேட் வங்கிக்கு எஸ் வங்கியின் 49% பங்குகள் கொடுக்கப்படும். ஒரு நல்ல
விஷயம் என்னவென்றால் ஸ்டேட் வங்கியின் நிர்வாகத்திறமையும் இது போன்ற சவால்களைச் சந்தித்த
அனுபவமும் எஸ் வங்கி விஷயத்திலும் கை கொடுக்கும். அதோடு மேலும் சில தனியார் வங்கிகளும்
மூலதனம் இட ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஹெச் டி எஃப் சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக்
வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவையும் மொத்தமாக ரூ 3,100 கோடி வரையும் ஃபெடரல் வங்கி மற்றும்
பந்தன் வங்கி ரூ 600 கோடி வரையிலும் மூலதனம் இட ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள்.
மிகச்சிறந்த நிர்வாகிகளும் ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் நிதித்துறையும் ஒருங்கிணைந்து
எஸ் வங்கியின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டபடியால் இச்சங்கடங்கள் தீர்க்கப்பட்டு
டெபாசிட் செலுத்திய பொது மக்களின் பணத்துக்கு பங்கம் வராமல் காப்பாற்றிவிடுவார்கள்
என்னும் நம்பிக்கை வலுக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் முன்பு போல அரசாங்கம் எஸ் வங்கியை இன்னொரு
வங்கியுடன் இணைக்கும் முடிவை எடுக்கவில்லை. இதுவும் சரியான முடிவுதான் என்று தோன்றுகிறது.
ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்னால் குளோபல் டிரஸ்ட் வங்கி வீழ்ச்சி அடைந்தபோது அதை
ஓரியண்டல் வங்கியுடன் இணைத்து விட, பின் நிகழ்ந்தவை மிகவும் மறக்க வேண்டியவையாக மாறிப்போன
சரித்திரத்தை அரசு நினைவில் கொண்டு, இணைப்பு என்னும் முறையைக் கைவிட்டிருக்கிறது. அச்சமயத்தில்
குளோபல் டிரஸ்ட் வங்கி இணைப்பால் ஓரியண்டல் வங்கி அடிபட்டுச் சாய்ந்தது. ஓரியண்டல்
வங்கியின் வீழ்ச்சிக்கு இது மட்டுமே காரணம் அல்ல. அரசியல் தலையீட்டுக் கடன், வாராக்கடன்
பெருக்கம், துணிவில்லாத வங்கிக்கொள்கை மற்றும் நிர்வாகத்திறமையின்மை என்று பல காரணங்களைச்
சொன்னாலும் ஓரியண்டல் வக்கியின் வீழ்ச்சிக்கு இந்த குளோபல் டிரஸ்ட் இணைப்பு கடைசி வைக்கோலாகிப்
போனதை மறுக்க முடியாது.
பதவியேற்ற 2014ல் நாட்டின் வங்கித்துறை எப்படி இருந்தது என்பது பற்றி வெள்ளை
அறிக்கை வெளியிடவேண்டும் என்று பல முறை கேட்டபோதும் பாஜக அரசு அதை மறுத்து விட்டது.
அப்படிப்பட்ட வெள்ளை அறிக்கை வங்கித்துறையின் மீதான பொது மக்களின் நல்லெண்ணத்தை சீர்
குலைத்துவிடும் என பாஜக அரசு தெரிவித்திருந்தது. அதனாலேயே பல சீர்திருத்தக் கொள்கை
முடிவுகள் மூலமாகவே வங்கித்துறை மாற்றங்களைக் கொண்டு வர ஆரம்பித்து. ஆனால் வெள்ளை அறிக்கை
இல்லாமையால் யார் தவறு என்பதில் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி குற்றம் சாட்டிக்
கொண்டிருந்ததே தவிர பொது வெளியில் அதற்கான தெளிவு பிறக்கவில்லை. பல கொள்கை முடிவுகள்
எடுக்கப்பட்டு வங்கித்துறைச் சீர்திருத்தங்கள் நடைபெற்ற நிலையில் இப்போதாவது பாஜக அரசு
2014க்கு முன் மற்றும் அதற்குப்பின் இன்றைய நிலை என்ன என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்
என்னும் எதிர்பார்ப்பு வல்லுநர்களிடம் இல்லாமலில்லை.
பொருளாதாரத்தில் கண்ணுக்குத் தெரிகின்ற மற்றும் தெரியாத தாக்கங்கள் என்பவை உண்டு.
இந்த எஸ் வங்கி விவகாரத்தில், அதுவும் முக்கியமாக ரிசர்வ் வங்கி ரு 50,000க்கு மிகாமல்
பணத்தை எடுக்க வேண்டும் என்னும் மாரடோரியம் கொண்டு வந்த சமாச்சாரம் நிச்சயம் இரு வகைத்
தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிப்படையான மற்றும் மறைமுகமான தாக்கங்கள்.
இந்த வங்கியில் சேமிப்பு மற்றும் இதரக் கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின்
வெளிப்படையான தாக்கங்கள் என்று பார்த்தால்: அவசரத்தேவைக்கு ரூ 50,000க்கு மேல் எடுக்க
முடியாதது, எஸ் வங்கியில் செக் கொடுத்தவர்களின் நிலை, இந்த பாங்கின் மூலம் மாதாந்திர
ஈ.எம்.ஐ. ஏற்பாடு செய்தவர்களின் நிலை.
ஆனால் இவற்றைவிட கண்ணுக்குத்தெரியாத மறமுகமான தாக்கங்கள் ஆழமானவை.
தனியார் வங்கிகளெல்லாம் நம்பத்தகுந்தவை அல்ல என்றும் அதனாலேயே பொதுத்துறை வங்கிகள்
மிகவும் நம்பிக்கை வாய்ந்தவை என்னும் எண்ணம் உருவாகி இருப்பது. இது நிச்சயம் ஒரு மாயத்தோற்றமே!
ரிசர்வ் வங்கி இந்த மாரட்டோரியத்தை நீக்கும்போது இருக்கிறது வேடிக்கை. வாடிக்கையாளர்கள்
வங்கிக்கு விரையப்போகிறார்கள். Run on the bank என்று சொல்லும் படையெடுப்பு நிகழவிருக்கிறது.
அதை எதிர்பார்த்து ரிசர்வ் வங்கி எஸ் வங்கிக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவ வேண்டியிருக்கும்.
எஸ் வங்கியின் நிர்வாகத்திற்காக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட பிரஷாந்த்
குமார் இந்த மாரட்டோரியம் இன்னும் ஓரிரு வாரங்களில் நீக்கப்பட்டுவிடும் என்று சொல்லி
இருந்தார். அதே போல் நீக்கப்பட்டும் விட்டது. அப்படியானால் இதை முதலில் விதித்ததற்கான
காரணம் என்ன என்னும் கேள்வியும் எழுகிறது.
31 மார்ச் 2019க்கான ஆண்டறிக்கை எஸ் வங்கியின் நிதிநிலைமை நன்றாக இருக்கிறது
என்று சொல்லப்பட்டிருந்தும் இத்தனை குறுகிய காலத்தில் நிலைமை இவ்வளவு மோசமானது எங்ஙனம்?
ஆடிட்டர்களும் ரிசர்வ் வங்கியின் தணிக்கையும் என்ன செய்துகொண்டிருந்தனர்?
இன்னொரு பரவலான தாக்கம் பொது மக்கள் தங்கள் டெபாசிட்டுகளைத் தனியார் வங்கியிலிருந்து எடுத்துப் பொது வங்கிக்குள் செலுத்தக்கூடும். இது
நிகழ ஆரம்பித்து விட்டதை சில உதாரணங்களின் மூலம் நாமே காணலாம். 2015 முதல் 2019 வரை
பொதுத்துறை வங்கிகளின் டெபாசிட் ரூ 1,65,000 கோடியாக இருக்க
, தனியார் வங்களின் டெபாசிட் ரூ 46,680கோடிதான். ஆனால் கடந்த சில வருடங்களாக
நிலமை மாறி, பொதுத்துறை வங்கிகள் ரூ 14,60,000 கோடி டெபாசிட் திரட்ட, தனியார் வங்கிகள்
திரட்டிய டெபாசிட் தொகை ரூ 18,60,000 கோடிகள். ஆனால் எஸ் வங்கி வீழ்ச்சிக்குப்பிறகு
மீண்டும் டெபாசிட்டுகள் பொதுத்துறை வங்கிகளை நோக்கி நகரும். ஆகவே தனியார் வங்கிகள்
டெபாசிட்டை வரவேற்க அதிக வட்டி கொடுக்க வேண்டும். அப்போது தனியார் வங்கிகள் தரும் கடன்
வட்டி விகிதமும் உயரக்கூடுமல்லவா?
இது போலவே கடன் விநியோகத்திலும் தனியார் வங்கிகள், கடந்த சில வருடங்களில் பொதுத்துறை
வங்கிகளை விட மிக அதிகமான அளவில் கொடுத்தார்கள். 2019-20ல் தனியார் வங்கிகள் கொடுத்த
கடன் தொகையானது அதிகரிக்க, பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடன் தொகை ரூ 25,560 கோடி குறைந்திருந்தது.
இனி டெபாசிட்டுகள் பொதுத்துறை வங்கியை நோக்கிப் போனாலும் அவை கடன் கொடுக்க மெத்தனமாக
இருப்பதால் தொழில்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதும் வெளிப்படையாகத் தெரியாத இன்னொரு
தாக்கமாகும்.
இன்று நாமெல்லோரும் எஸ் வங்கியின் வீழ்ச்சி பற்றி விலாவாரியாகப் பேசி விவாதித்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால் மேலே சொன்ன மறைமுகமான தாக்கங்கள் நமது நிதித்துறையில் ஏற்படக்கூடும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு எஸ் வங்கியின் மறு சீரமைப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு,
அவை திறமையாக நிர்வகிக்கப்பட்டால்தான் நிதித்துறை சந்திக்கவிருக்கும் சவால்களைச் சமாளிக்க
முடியும். முக்கியமாக எஸ் வங்கி போல வீழக் காத்திருக்கும் அடையாளங்கள் தெரியும் வங்கிகளையும்
இப்போதே அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின்
தணிக்கை முறைகள் இன்னும் கடுமையாக்கப்பட்டு, அளிக்கப்பட்ட கடன்கள் திரும்ப வராமல் இருக்கக்கூடிய
சமிக்ஞைகளை உடனுக்குடன் கண்டறிந்து, சம்மந்தப்பட்ட வங்கிகளின் மீது சீர் செய்யும் நடவடிக்கைகளுக்கு
வழி செய்ய வேண்டும்.
(சக்திகாந்த தாஸ்)
இந்த வருட பட்ஜெட்சமயத்தில்
நமது தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்,
‘‘பொதுத்துறைகளில் இடப்படும் ஒரு ரூபாய்
மூலதனம் அரசுக்கு 23 பைசா நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதே ஒரு ரூபாய் மூலதனம்
தனியார் வங்கிகளில் போடப்பட்டால் அது 9.6 பைசா லாபம் தருகிறது
’’ என்று சொன்னதை நினைத்துப் பார்ப்போம்.
அரசாங்கத்தின் தனியார்மயக் கொள்கையினைக் கேள்விக்குரியதாக ஆக்கிவிட்ட எஸ் வங்கி மற்றும்
இதர வீழ்ச்சிகளை எப்படி நிகழாமல் காக்கப்போகிறோம் என்பதில் முழு முனைப்போடு அரசும்
ரிசர்வ் வங்கியும் உழைக்க வேண்டும். முக்கியமாக இன்று பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியிருக்கும்
அரசு, நிதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வண்ணம் செயல்பட வேண்டியது
முக்கியம். பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர எஸ் வங்கிக்கு மூலதனம் அளிக்க முன் வந்திருக்குப்பவை
அனைத்துமே தனியார் வங்கிகள்தாம் என்பது, ரிசர்வ் வங்கி அமல்படுத்தியிருக்கும் மறு சீரமைப்புத்திட்டம்
சரியான நோக்கில் செயல்படுத்த முடியக் கூடியதுதான் என்னும் நம்பிக்கையைத் தருகிறது.
மேலும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்,
எந்த நிலையிலும் டெபாசிட்டர்களின் பணத்துக்கு
ஆபத்தில்லை. அதில் சிக்கல் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் ரிசர்வ் வங்கி முன் வந்து
பணத்தைத் தந்து உதவும்
என்று ஆணித்தரமாகத் தெரியப்படுத்தியிருப்பது, இந்த அரசாங்கமும்
ரிசர்வ் வங்கியும் நிதித்துறை மேலாண்மையை
ச் சரியான முறையில் நடத்திச் செல்லுகிறார்கள்
என்னும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. தவறுகள் நிகழ்ந்தாலும் அவற்றைக் கண்டறிந்து சரிசெய்யும்
முயற்சிகள் பாராட்டத்தக்க வகையில் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


1969ல் இருந்து மூடப்பட்ட தனியார் வங்கிகள்