Posted on Leave a comment

வலம் மார்ச் 2021 இதழ்

வலம் இதழ் மார்ச் 2021 இதழை இங்கே வாசிக்கலாம்.

சந்தா செலுத்த இங்கே செல்லவும்.

மத்திய பட்ஜெட் 2021 – வடக்கே போகும் தேசம் | ஜெயராமன் ரகுநாதன் 

கேடில் விழுச்செல்வம் கல்வி | கோ.இ. பச்சையப்பன் 

இந்தியா புத்தகங்கள் 10 | முனைவர் வ.வே.சு 

இங்கே விடியல்கள் அமைதியானவை | அருண் பிரபு 

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1879-1972) | பா.சந்திரசேகரன் 

மகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்

சில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு 

உறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்

லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன் 

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்

மறைக்கப்படும் உண்மைகள்

பிப்ரவரி 2021 இல் ‘தாஸ்குப்தா ரிவ்யூ’ என்கிற முக்கியமான அறிக்கையை இங்கிலாந்து அரசு வெளியிட்டது. பயோடைவர்ஸிட்டி என்கிற உயிரினப்பன்மையின் பொருளாதார முக்கியத்துவம் குறித்த மிகவும் விவரங்கள் நிறைந்த அறிக்கை. Continue reading லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

உறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்

சில நாட்கள் முன்பு மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி சுமார் 75 ஆண்டுகள் முன்பு நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தார். Continue reading உறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு

கபில்தேவின் கப்

மார்க்ஸிஸ்ட் தோழர்கள் நடத்தும் உரையாடல் மற்றும் எழுத்தில் அதிகமாகப் புழங்கும் ஒரு வார்த்தை – வர்க்க உணர்வு. தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பாட்டாளிகளிடம்தான் புரட்சிக்கு அவசியமான வர்க்க உணர்வு இருக்கும் என்றும், அவர்கள் முன்னெடுத்துச் செல்வதுதான் ஒரிஜினல் புரட்சி என்றும், கார்ல் மார்க்ஸ் எழுதினார். நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அது நடக்கவில்லை. தோழர்களே அந்தப் பாடத்தைத் திருத்தித் திருத்தி எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த வார்த்தை நிலைத்துவிட்டது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

அர்ஜுனனுடனான இறுதிப் போரின்போது, கர்ணனுடைய தேர்ச்சக்கரம் பூமியில் அமிழத் தொடங்கியதும், ‘நான் இந்தத் தேர்ச்சக்கரத்தைத் தூக்கும் வரையில் என்மீது அம்பு தொடுக்காமல் இரு என்று உன்னை தர்மத்தின் பேரால் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கர்ணன் சொன்னதும், அர்ஜுனனுடைய தேர்ச்சாரதியான கண்ணன், ‘உனக்கு இப்போதாவது தர்மத்தின் மீது நினைவு வந்ததே’ என்று சொல்லிவிட்டு, கர்ணன், பாண்டவர்களுக்குச் செய்த தீங்குகளைப் பட்டியலிட்டு ‘அப்போதெல்லாம் உன் தர்மம் எங்கே போனது’ என்று அவனை நோக்கிப் பதினோரு கேள்விகள் எழுப்பியதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1879-1972) | பா.சந்திரசேகரன்

இன்றைய தமிழகத்தில் மட்டுமில்லாமல், இந்தியாவில் மற்ற பகுதியிலும் சரி, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற மாமனிதர், ஒரு தமிழர், பல்துறை அறிஞர், நம் நாட்டிற்கு அளித்த பங்களிப்பைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலும் தெரியாது. ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டது என்பது துரதிர்ஷ்டம். ராஜாஜி மறைந்து 48 ஆண்டுகள் ஆகின்றன. ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு, அவரின் எண்ணற்ற தமிழ் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் மறைக்கப்பட்டது, எதோ தனி நபருக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பல்ல, வருங்கால சந்ததியினருக்கும் மற்றும் நம் தேசத்துக்கும்தான். Continue reading சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1879-1972) | பா.சந்திரசேகரன்

Posted on Leave a comment

இங்கே விடியல்கள் அமைதியானவை | அருண் பிரபு

ரஷ்ய கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. மகா தேசப்பற்றுப் போர் என்று சோவியத் பெயர் சூட்டிய இரண்டாம் உலகப் போரில் எல்லைக் கிராமம் ஒன்றில் நிகழ்ந்த சம்பவமே இப்படம். Continue reading இங்கே விடியல்கள் அமைதியானவை | அருண் பிரபு

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் 10 | முனைவர் வ.வே.சு

Our Oriental Heritage – Will Durant

பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்த எமெர்ஜென்ஸி காலம். பேச்சுக்கு இருந்த கட்டுப்பாடு உணவுக்கு இல்லை. எனவே சென்னை மயிலை லஸ் முனையிலுள்ள உணவகத்தில் சிற்றுண்டி அருந்த நண்பர்களோடு சென்றிருந்தேன். வட இந்திய உணவு வகை மற்றும் வேறு பல புதிய உணவு வகைகள் கிடைக்குமிடம். இதுவரை சாப்பிடாத ஏதேனும் ஒன்றை ‘டேஸ்ட்’ செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆசை. Continue reading இந்தியா புத்தகங்கள் 10 | முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

கேடில் விழுச்செல்வம் கல்வி | கோ.எ. பச்சையப்பன்

(புதிய கல்விக்கொள்கை வரமா சாபமா – நூலை முன்வைத்து)

(விலை ரூ 175, கிழக்கு பதிப்பகம்)

1834ம் ஆண்டு வெள்ளையரின் விதேசிகளின் ஆட்சி பாரதத்தில் வேர்பிடிக்கத் தொடங்கிய தருணம்! குடும்பத் தொழில் நொடித்துப் போனதால் ஏற்பட்ட பொருளிழப்பை ஈடுகட்ட ‘சூரியன் அஸ்தமிக்காத’ இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்தார் ஒருவர். தகிக்கும் வெயிலிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க ஆங்கிலேயர்கள் அப்போது(ம்) கோடைவாசஸ்தலமாகக் கருதிய ஊட்டிக்குச் சென்னையிலிருந்து பயணமானார். நான்கு ‘கூலிகள்’ டோலி கட்டி பதினோரு நாட்கள் மேற்படி கனவானைச் சுமந்துகொண்டு ஊட்டிக்குக் கொண்டு சேர்த்தனர். தமக்கு முன்னரே அங்கே தங்கியிருந்த வில்லியம் பெண்டிங் உள்ளிட்ட நால்வருடன் இணைந்துகொண்ட அந்த ‘போலிப் பயணி’ வடிவமைத்ததுதான் ‘இந்தியத் தண்டனைச் சட்டம்’. Continue reading கேடில் விழுச்செல்வம் கல்வி | கோ.எ. பச்சையப்பன்

Posted on Leave a comment

மத்திய பட்ஜெட் 2021 – வடக்கே போகும் தேசம் | ஜெயராமன் ரகுநாதன்

வடக்கே போகும் தேசம் என்றவுடன் ஏதோ நான் தனித்தமிழ் அன்பனாக மாறி சீரிய திராவிடச்சிந்தனையின் பாதிப்பில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்னும் நைந்து போன வசனம் பேசுவதாக நினைக்க வேண்டாம். நான் சொல்லும் வடக்கே என்பது இரு பரிமாணப் பரப்பில் உயருவதைக் குறிக்கும் சொல்லாடலான ‘Going north’ என்பதுதான்! Continue reading மத்திய பட்ஜெட் 2021 – வடக்கே போகும் தேசம் | ஜெயராமன் ரகுநாதன்