
பல கட்டங்களாக நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மார்ச் 11, 2017 அன்று வெளிவந்தது. சட்டசபைத் தேர்தல்
நடந்த மாநிலங்கள் உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா. இதில்
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. இதர நான்கு மாநிலங்களில் பாஜக தலைமையிலான
ஆட்சி அமைந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஏறக்குறைய மூன்று
ஆண்டுகள் கழித்து நடந்த தேர்தல் என்பதால் மிகுந்த கவனத்தைப் பெற்ற தேர்தலாக அமைந்தது.
குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேச முடிவுகள் 2019 தேர்தலுக்கான
முன்னோட்டமாக இருக்கும் எனத் தேர்தல் நடந்தபோது மோடி ஆதரவாளர்களில் ஆரம்பித்து மோடி
எதிர்ப்பாளர்கள், வெறுப்பாளர்கள் வரை கருத்துரைத்தனர். இந்தத் தேர்தல் முடிவுகளை,
2012ம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளோடும், 2014ம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத்
தேர்தல் முடிவுகளோடும் ஒப்பிட்டுப் பேசலாம். ஆம்ஆத்மி கட்சியின் உதயம் தேசிய அளவில்
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது, ஒவ்வொரு மாநிலத்திலும் இதர தேசியக் கட்சிகளின்
செல்வாக்கு மற்றும் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு சரிந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா
என்ற கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது.
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மார்ச் 11, 2017 அன்று வெளிவந்தது. சட்டசபைத் தேர்தல்
நடந்த மாநிலங்கள் உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா. இதில்
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. இதர நான்கு மாநிலங்களில் பாஜக தலைமையிலான
ஆட்சி அமைந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஏறக்குறைய மூன்று
ஆண்டுகள் கழித்து நடந்த தேர்தல் என்பதால் மிகுந்த கவனத்தைப் பெற்ற தேர்தலாக அமைந்தது.
குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேச முடிவுகள் 2019 தேர்தலுக்கான
முன்னோட்டமாக இருக்கும் எனத் தேர்தல் நடந்தபோது மோடி ஆதரவாளர்களில் ஆரம்பித்து மோடி
எதிர்ப்பாளர்கள், வெறுப்பாளர்கள் வரை கருத்துரைத்தனர். இந்தத் தேர்தல் முடிவுகளை,
2012ம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளோடும், 2014ம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத்
தேர்தல் முடிவுகளோடும் ஒப்பிட்டுப் பேசலாம். ஆம்ஆத்மி கட்சியின் உதயம் தேசிய அளவில்
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது, ஒவ்வொரு மாநிலத்திலும் இதர தேசியக் கட்சிகளின்
செல்வாக்கு மற்றும் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு சரிந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா
என்ற கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகளை மேலோட்டமாக ஒப்பிட
வேண்டுமானால், ஆட்சியில் இருந்த கட்சிகள் தேர்தலில் தத்தம் மாநிலங்களில் பின்னடைவைச்
சந்தித்துள்ளன. பஞ்சாப், கோவா தவிர்த்து பிற மாநிலங்களில், மோடியின் தலைமையில் அபரிமிதமான
வெற்றியைப் பாஜக பெற்றுள்ளது. மாநிலக் கட்சிகள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ள
தேர்தல் இது.
வேண்டுமானால், ஆட்சியில் இருந்த கட்சிகள் தேர்தலில் தத்தம் மாநிலங்களில் பின்னடைவைச்
சந்தித்துள்ளன. பஞ்சாப், கோவா தவிர்த்து பிற மாநிலங்களில், மோடியின் தலைமையில் அபரிமிதமான
வெற்றியைப் பாஜக பெற்றுள்ளது. மாநிலக் கட்சிகள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ள
தேர்தல் இது.
உத்திரப் பிரதேசம்:
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப்
பிரதேசம் 403 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் பாஜக அணி 325 இடங்களைப் பெற்றுள்ளது.
312 இடங்களில் பாஜகவும், கூட்டணிக் கட்சிகளான அப்னா தள் 9 இடங்களிலும், சுஹேல் தேவ்
சமாஜ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சமாஜ்வாதி – காங்கிரஸ் அணியில் இருகட்சிகளும்
முறையே 47 மற்றும் 7 இடங்களைப் பெற்றுள்ளன. பஹுஜன் சமாஜ்வாதி கட்சி 19 இடங்களையும்,
சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
பிரதேசம் 403 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் பாஜக அணி 325 இடங்களைப் பெற்றுள்ளது.
312 இடங்களில் பாஜகவும், கூட்டணிக் கட்சிகளான அப்னா தள் 9 இடங்களிலும், சுஹேல் தேவ்
சமாஜ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சமாஜ்வாதி – காங்கிரஸ் அணியில் இருகட்சிகளும்
முறையே 47 மற்றும் 7 இடங்களைப் பெற்றுள்ளன. பஹுஜன் சமாஜ்வாதி கட்சி 19 இடங்களையும்,
சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
பாஜகவைப் பொருத்தவரையில் 2012ல் 47 இடங்களை
மட்டுமே பெற்றிருந்த கட்சி 2017 தேர்தலில் 312 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் 1980ல் அதிக பட்சமாக 309 இடங்களைப் பிடித்திருந்தது.
2014 லோக்சபா தேர்தலில் பாஜக வென்ற நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளிட்ட சட்டசபைத்
தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் பாஜக 328 இடங்களைப் பிடித்திருந்தது.
தற்போது 312 இடங்களில் வென்றுள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் பாஜக அணி 44% வாக்குகளைப்
பெற்றிருந்தது. 3% வாக்குகளை இழந்து 41% வாக்குகளை இத்தேர்தலில் பெற்றுள்ளது. ஆனால்
2012 சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 16%. தற்போது அது 25% அதிகரித்துள்ளதையும்
காண முடிகிறது. உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன.
மட்டுமே பெற்றிருந்த கட்சி 2017 தேர்தலில் 312 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் 1980ல் அதிக பட்சமாக 309 இடங்களைப் பிடித்திருந்தது.
2014 லோக்சபா தேர்தலில் பாஜக வென்ற நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளிட்ட சட்டசபைத்
தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் பாஜக 328 இடங்களைப் பிடித்திருந்தது.
தற்போது 312 இடங்களில் வென்றுள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் பாஜக அணி 44% வாக்குகளைப்
பெற்றிருந்தது. 3% வாக்குகளை இழந்து 41% வாக்குகளை இத்தேர்தலில் பெற்றுள்ளது. ஆனால்
2012 சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 16%. தற்போது அது 25% அதிகரித்துள்ளதையும்
காண முடிகிறது. உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன.
2012, 2014
& 2017 கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் :
& 2017 கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் :
வாக்கு சதவீதம்
|
|||
கட்சிகள்
|
2012
|
2014
|
2017
|
பாரதிய ஜனதா
|
15.00%
|
42.63%
|
39.63%
|
சமாஜ்வாதி
|
29.13%
|
22.35%
|
21.80%
|
காங்கிரஸ்
|
11.65%
|
7.53%
|
6.20%
|
பஹுஜன் சமாஜ்வாதி
|
25.91%
|
19.77%
|
22.20%
|
1. மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்த தேசியக்
கட்சியான பாஜக 14 வருட வனவாசத்திற்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மாநிலத்தில்
இரு பெரும் மாநிலக் கட்சிகள் (பகுஜன் சமாஜ்வாதி, சமாஜ்வாதி கட்சிகள் தேசிய அந்தஸ்து
பெற்று இருந்தாலும் மற்ற மாநிலத்தில் ஆட்சிக்கு வராததால்) அசுர பலத்துடன் ஆட்சியை மாறி
மாறிப் பிடித்து வந்த நிலையில் இம்முறை பாஜக அதை முறியடித்தது மட்டுமல்லாமல், சிங்கத்தின்
குகைக்குள் சென்று அதன் பிடரியை இழுத்துப் போட்டதொரு வெற்றியைப் பெற்றுள்ளது. மோடி
தேசிய அரசியலுக்குள் நுழைந்த பின்னர்தான் பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் தனது வாக்கு சதவீதத்தைக்
கூட்டியோ தக்கவைத்துக் கொண்டோ செல்வதைக் காண முடிகிறது.
கட்சியான பாஜக 14 வருட வனவாசத்திற்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மாநிலத்தில்
இரு பெரும் மாநிலக் கட்சிகள் (பகுஜன் சமாஜ்வாதி, சமாஜ்வாதி கட்சிகள் தேசிய அந்தஸ்து
பெற்று இருந்தாலும் மற்ற மாநிலத்தில் ஆட்சிக்கு வராததால்) அசுர பலத்துடன் ஆட்சியை மாறி
மாறிப் பிடித்து வந்த நிலையில் இம்முறை பாஜக அதை முறியடித்தது மட்டுமல்லாமல், சிங்கத்தின்
குகைக்குள் சென்று அதன் பிடரியை இழுத்துப் போட்டதொரு வெற்றியைப் பெற்றுள்ளது. மோடி
தேசிய அரசியலுக்குள் நுழைந்த பின்னர்தான் பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் தனது வாக்கு சதவீதத்தைக்
கூட்டியோ தக்கவைத்துக் கொண்டோ செல்வதைக் காண முடிகிறது.
2. மோடி 2014ல் பதவியேற்ற பின் மஹாராஷ்டிரா, ஹரியானா
போன்ற மாநிலங்களிலும் இச்சாதனையைச் செய்து காட்டியது. பாஜகவையும் காங்கிரசையும் இப்படி
ஒப்பிட்டால்தான் இரு கட்சிகளின் தேசிய வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் புரிந்து கொள்ள
முடியும். காங்கிரஸ் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்ட பின்னர் எந்தவொரு மாநிலத்திலும்
மக்கள் நம்பிக்கையைத் தனித்து நின்று பெற்று ஆட்சி அமைத்ததாகக் கடந்த கால வரலாறு இல்லை.
உதாரணமாக, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில்
அதன் வீழ்ச்சியைக் காணலாம். பீகாரில் பாஜக எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது
போன்ற ஒரு தோற்றமுள்ளது. காங்கிரஸ் மற்றும் லாலுவும், நிதிஷ் குமாரும் இணையாமல் தேர்தலை
எதிர்கொண்டிருந்தால் பீகாரில் கூட பாஜக ஆட்சி அமைத்திருக்கும். உத்திரப் பிரதேசத்தில்கூட
இந்த அடிப்படையில்தான் காங்கிரசும் சமாஜ்வாதி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்கொண்டன.
பகுஜன் சமாஜ்வாதி தனித்து நின்றதால் பாஜகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
போன்ற மாநிலங்களிலும் இச்சாதனையைச் செய்து காட்டியது. பாஜகவையும் காங்கிரசையும் இப்படி
ஒப்பிட்டால்தான் இரு கட்சிகளின் தேசிய வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் புரிந்து கொள்ள
முடியும். காங்கிரஸ் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்ட பின்னர் எந்தவொரு மாநிலத்திலும்
மக்கள் நம்பிக்கையைத் தனித்து நின்று பெற்று ஆட்சி அமைத்ததாகக் கடந்த கால வரலாறு இல்லை.
உதாரணமாக, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில்
அதன் வீழ்ச்சியைக் காணலாம். பீகாரில் பாஜக எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது
போன்ற ஒரு தோற்றமுள்ளது. காங்கிரஸ் மற்றும் லாலுவும், நிதிஷ் குமாரும் இணையாமல் தேர்தலை
எதிர்கொண்டிருந்தால் பீகாரில் கூட பாஜக ஆட்சி அமைத்திருக்கும். உத்திரப் பிரதேசத்தில்கூட
இந்த அடிப்படையில்தான் காங்கிரசும் சமாஜ்வாதி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்கொண்டன.
பகுஜன் சமாஜ்வாதி தனித்து நின்றதால் பாஜகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
3. ராகுல் காந்தி கட்சியைத் தனித்து வளர்க்க வேண்டுமென்று
அதிகக் கவனம் செலுத்திய மாநிலங்கள் பீகார், உத்திரப்பிரதேசம். ஆனால் தனது கட்சியால்
இனி பாஜகவையோ, மாநிலக் கட்சிகளையோ எதிர்கொள்ள இயலாது என்பதாலும், மீண்டும் இம்மாநிலங்களில்
ஆட்சியைப் பிடிக்க இயலாது எனக் கருதி மாநிலக் கட்சிகளோடு தன்னை இணைத்துக் கொண்டு அணிலாகச்
செயல்பட முனைந்தும் கூட உபியில் பாஜகவின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. முற்றிலுமாக
உபியில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் கூட
காங்கிரஸ் 4 இடங்களையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகக் கவனம் செலுத்திய மாநிலங்கள் பீகார், உத்திரப்பிரதேசம். ஆனால் தனது கட்சியால்
இனி பாஜகவையோ, மாநிலக் கட்சிகளையோ எதிர்கொள்ள இயலாது என்பதாலும், மீண்டும் இம்மாநிலங்களில்
ஆட்சியைப் பிடிக்க இயலாது எனக் கருதி மாநிலக் கட்சிகளோடு தன்னை இணைத்துக் கொண்டு அணிலாகச்
செயல்பட முனைந்தும் கூட உபியில் பாஜகவின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. முற்றிலுமாக
உபியில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் கூட
காங்கிரஸ் 4 இடங்களையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
4. உபி முடிவுகளில்
அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பஹுஜன் சமாஜ்வாதி கட்சியே! குறிப்பாகத் தலித்
மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் கூட இம்முறை பகுஜன் சமாஜ்வாதி கட்சி அதிகம் வெற்றி
பெறவில்லை. மேலும் நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் அக்கட்சிக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை.
தற்போது பதவியிலுள்ள ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்காலம் முடியும்போது அக்கட்சிக்கு
ஒரு எம்பி மட்டுமே இருப்பார்.
அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பஹுஜன் சமாஜ்வாதி கட்சியே! குறிப்பாகத் தலித்
மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் கூட இம்முறை பகுஜன் சமாஜ்வாதி கட்சி அதிகம் வெற்றி
பெறவில்லை. மேலும் நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் அக்கட்சிக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை.
தற்போது பதவியிலுள்ள ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்காலம் முடியும்போது அக்கட்சிக்கு
ஒரு எம்பி மட்டுமே இருப்பார்.
5. சமாஜ்வாதி கட்சிக்கு, ஆட்சிக்கு எதிரான அலையும்,
அதை விட மோடி அலையும் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கக் காரணமாக அமைந்துள்ளது. ஆனால்
மீண்டும் சமாஜ்வாதி கட்சி எளிதில் எழுந்து நிற்கும் வாய்ப்புள்ளதை மறுக்க இயலாது.
அதை விட மோடி அலையும் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கக் காரணமாக அமைந்துள்ளது. ஆனால்
மீண்டும் சமாஜ்வாதி கட்சி எளிதில் எழுந்து நிற்கும் வாய்ப்புள்ளதை மறுக்க இயலாது.
6. பாஜக உபியில் தனது வெற்றியைத் தக்கவைத்துக்
கொள்ள செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. மக்களுக்குச் சேவை செய்யும் இன்னொரு மோடியை,
சிவராஜ் சிங் சௌகானை உபிக்கு அடையாளப்படுத்துவது மட்டுமே. இதில் தவறிழைத்தால் கட்சி
மீண்டும் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் வாய்ப்புகூட உருவாகும் என்பதை உணர்ந்து
செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதைப் பொறுத்தே 2019 லோக்சபாவின் வெற்றி தோல்வி பாஜகவிற்கு
அமையும். தற்போது உத்திரப் பிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத்
மக்களின் எதிர்பார்ப்பை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
கொள்ள செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. மக்களுக்குச் சேவை செய்யும் இன்னொரு மோடியை,
சிவராஜ் சிங் சௌகானை உபிக்கு அடையாளப்படுத்துவது மட்டுமே. இதில் தவறிழைத்தால் கட்சி
மீண்டும் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் வாய்ப்புகூட உருவாகும் என்பதை உணர்ந்து
செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதைப் பொறுத்தே 2019 லோக்சபாவின் வெற்றி தோல்வி பாஜகவிற்கு
அமையும். தற்போது உத்திரப் பிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத்
மக்களின் எதிர்பார்ப்பை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
7. இதையெல்லாம் மீறி உத்திரப் பிரதேசத்தில்
பாஜக செய்திருக்கும் சாதனை, ஜாதி மற்றும் மத ரீதியாக மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலையை
அடியோடு மாற்றிக் காண்பித்திருப்பதுதான். இதை ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஒரு பாடம்
என்றுகூடச் சொல்லலாம். ஓரளவுக்கு மேல் மத மற்றும் ஜாதி ரீதியான பிளவுகள் ஒரு கட்சியின்
வெற்றி வாய்ப்பைப் பாதிக்காது என்பதை உரக்க நிரூபித்திருக்கிறது பாஜக.
பாஜக செய்திருக்கும் சாதனை, ஜாதி மற்றும் மத ரீதியாக மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலையை
அடியோடு மாற்றிக் காண்பித்திருப்பதுதான். இதை ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஒரு பாடம்
என்றுகூடச் சொல்லலாம். ஓரளவுக்கு மேல் மத மற்றும் ஜாதி ரீதியான பிளவுகள் ஒரு கட்சியின்
வெற்றி வாய்ப்பைப் பாதிக்காது என்பதை உரக்க நிரூபித்திருக்கிறது பாஜக.
பஞ்சாப்:
சிரோன்மணி அகாலிதளம், பாஜக கூட்டணி ஆட்சியே கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாபில் இருந்தது.
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவியதை, கடந்த லோக்சபா
தேர்தலிலேயே இக்கூட்டணிக்குக் கிடைத்த எண்ணிக்கையிலிருந்து புரிந்து கொள்ள இயலும்.
மோடி அலையின் காரணமாக லோக்சபா தேர்தலில் இந்த அணி 6/13 இடங்களைப் பிடித்திருந்தது.
தற்போது சட்டசபைத் தேர்தல் என்பதும், ஆட்சிக்கு எதிரான அலை வீசியதும், இவ்விரு கட்சிகளுக்கும்
பெருத்த அடியைத் தந்துள்ளது.
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவியதை, கடந்த லோக்சபா
தேர்தலிலேயே இக்கூட்டணிக்குக் கிடைத்த எண்ணிக்கையிலிருந்து புரிந்து கொள்ள இயலும்.
மோடி அலையின் காரணமாக லோக்சபா தேர்தலில் இந்த அணி 6/13 இடங்களைப் பிடித்திருந்தது.
தற்போது சட்டசபைத் தேர்தல் என்பதும், ஆட்சிக்கு எதிரான அலை வீசியதும், இவ்விரு கட்சிகளுக்கும்
பெருத்த அடியைத் தந்துள்ளது.
மொத்தமுள்ள 117 இடங்களில் , முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைச்
சேர்த்து மொத்தமாகப் பார்த்தால், ஆம்ஆத்மி கூட்டணியைக் காட்டிலும் சிரோன்மணி அகாலிதளம்
+ பாஜக அணி அதிக இடங்களில் முதலிரண்டு இடங்களைப்
பெற்றுள்ளது. சிரோன்மணி + பாஜக அணி மொத்தமாக 80 இடங்களில் முதலிரண்டு இடங்களில் வந்துள்ளது.
ஆனால் ஆம்ஆத்மி + லோக் இன்சாப் அணி 48 இடங்களில் மட்டுமே முதலிரண்டு இடங்களில் வந்துள்ளது.
பாஜகவை நேரடியாக ஆம்ஆத்மி கட்சி எதிர்கொண்ட இடங்களில் பாஜகவின் வாக்கு சதவீதம் ஆம்ஆத்மியைக்
காட்டிலும் இரு மடங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.
சேர்த்து மொத்தமாகப் பார்த்தால், ஆம்ஆத்மி கூட்டணியைக் காட்டிலும் சிரோன்மணி அகாலிதளம்
+ பாஜக அணி அதிக இடங்களில் முதலிரண்டு இடங்களைப்
பெற்றுள்ளது. சிரோன்மணி + பாஜக அணி மொத்தமாக 80 இடங்களில் முதலிரண்டு இடங்களில் வந்துள்ளது.
ஆனால் ஆம்ஆத்மி + லோக் இன்சாப் அணி 48 இடங்களில் மட்டுமே முதலிரண்டு இடங்களில் வந்துள்ளது.
பாஜகவை நேரடியாக ஆம்ஆத்மி கட்சி எதிர்கொண்ட இடங்களில் பாஜகவின் வாக்கு சதவீதம் ஆம்ஆத்மியைக்
காட்டிலும் இரு மடங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.
2012, 2014 & 2017 கட்சிகள் பெற்ற வாக்கு
சதவீதம் :
சதவீதம் :
வாக்கு சதவீதம்
|
|||
கட்சிகள்
|
2012
|
2014
|
2017
|
காங்கிரஸ்
|
40.09%
|
33.19%
|
38.50%
|
சிரோன்மணி அகாலிதளம்
|
34.73%
|
26.37%
|
25.20%
|
பாரதிய ஜனதா
|
7.18%
|
8.77%
|
5.40%
|
ஆம் ஆத்மி
|
**
|
24.40%
|
23.70%
|
** ஆம் ஆத்மி கட்சி துவங்கப்படவில்லை.
பஞ்சாப் தேர்தல் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்ள
வேண்டும்?
வேண்டும்?
1. சிரோன்மணி அகாலிதளம், பாஜக ஆட்சிக்கு எதிரான
அலை அக்கட்சிகள் பல இடங்களை இழக்கக் காரணமாக அமைந்துள்ளது.
அலை அக்கட்சிகள் பல இடங்களை இழக்கக் காரணமாக அமைந்துள்ளது.
2. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் டெல்லி உட்பட
அனைத்து மாநிலங்களிலும் ஓரிடத்தைக் கூடப் பெறாத ஆம்ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மட்டும்
புத்துயிர் அளிக்கும் விதமாக 4 இடங்களை வழங்கி பஞ்சாபில் ஆம்ஆத்மிக்கான பலத்த எதிர்பார்ப்பை
உருவாக்கி இருந்தது. மேலும் வெளிவந்த பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும், ஆம்ஆத்மிக்கும்
காங்கிரசிற்கும் இடையே பலத்த போட்டி இருக்குமென்றும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும்
என்றும் கூறின. அதை வைத்துப் பார்த்தாலும் சரி, லோக்சபா தேர்தல் முடிவுகளை வைத்துப்
பார்த்தாலும் சரி, ஆம்ஆத்மிக்கு இத்தேர்தல் முடிவுகள் மாபெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
வாக்கு சதவீத அடிப்படையில் சிரோன்மணி அகாலிதளத்தைக் காட்டிலும் குறைந்த வாக்குகளைப்
பெற்றாலும் இடங்களின் எண்ணிக்கையில் அதிக இடங்கள் என்ற அடிப்படையில் எதிர்க் கட்சி
என்ற அந்தஸ்தை ஆம்ஆத்மி பெறுவது அக்கட்சிக்கு ஒருவகையில் நல்லதே. எதிர்காலத்தில் ஆம்ஆத்மி
கட்சி ஆட்சியைப் பிடிக்குமா என்றோ, ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி மீது வெறுப்பு வந்தால்
சிரோன்மணி அகாலிதளம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்றோ எவராலும் உறுதியாகச் சொல்ல
முடியாது.
அனைத்து மாநிலங்களிலும் ஓரிடத்தைக் கூடப் பெறாத ஆம்ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மட்டும்
புத்துயிர் அளிக்கும் விதமாக 4 இடங்களை வழங்கி பஞ்சாபில் ஆம்ஆத்மிக்கான பலத்த எதிர்பார்ப்பை
உருவாக்கி இருந்தது. மேலும் வெளிவந்த பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும், ஆம்ஆத்மிக்கும்
காங்கிரசிற்கும் இடையே பலத்த போட்டி இருக்குமென்றும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும்
என்றும் கூறின. அதை வைத்துப் பார்த்தாலும் சரி, லோக்சபா தேர்தல் முடிவுகளை வைத்துப்
பார்த்தாலும் சரி, ஆம்ஆத்மிக்கு இத்தேர்தல் முடிவுகள் மாபெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
வாக்கு சதவீத அடிப்படையில் சிரோன்மணி அகாலிதளத்தைக் காட்டிலும் குறைந்த வாக்குகளைப்
பெற்றாலும் இடங்களின் எண்ணிக்கையில் அதிக இடங்கள் என்ற அடிப்படையில் எதிர்க் கட்சி
என்ற அந்தஸ்தை ஆம்ஆத்மி பெறுவது அக்கட்சிக்கு ஒருவகையில் நல்லதே. எதிர்காலத்தில் ஆம்ஆத்மி
கட்சி ஆட்சியைப் பிடிக்குமா என்றோ, ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி மீது வெறுப்பு வந்தால்
சிரோன்மணி அகாலிதளம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்றோ எவராலும் உறுதியாகச் சொல்ல
முடியாது.
3. காங்கிரஸ் எண்ணிக்கை அடிப்படையில் நோக்கும்
போது மாபெரும் வெற்றியைக் குவித்துள்ளது. ஆனால் 2012 சட்டசபை வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டால்
ஆம்ஆத்மியிடம் தனக்கான வாக்குகளை இழந்திருக்கிறது என்பதைக் காணலாம். காங்கிரஸ் இம்மாநிலத்தில்
வெற்றி பெற, அமரிந்தர் சிங் ஒரு தனித்த அடையாளம்
என்பதையும், காங்கிரஸின் பலம் பொருந்திய சில மாநிலங்களில் பஞ்சாபும் ஒன்று என்பதையுமே
தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. இத்தேர்தலைப் பொருத்தமட்டில் ஆம்ஆத்மியின் மீது
பெரிய நம்பிக்கை வைக்காமல், காங்கிரஸ் ஆட்சியமைக்கவே மக்கள் விரும்பியுள்ளார்கள்.
போது மாபெரும் வெற்றியைக் குவித்துள்ளது. ஆனால் 2012 சட்டசபை வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டால்
ஆம்ஆத்மியிடம் தனக்கான வாக்குகளை இழந்திருக்கிறது என்பதைக் காணலாம். காங்கிரஸ் இம்மாநிலத்தில்
வெற்றி பெற, அமரிந்தர் சிங் ஒரு தனித்த அடையாளம்
என்பதையும், காங்கிரஸின் பலம் பொருந்திய சில மாநிலங்களில் பஞ்சாபும் ஒன்று என்பதையுமே
தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. இத்தேர்தலைப் பொருத்தமட்டில் ஆம்ஆத்மியின் மீது
பெரிய நம்பிக்கை வைக்காமல், காங்கிரஸ் ஆட்சியமைக்கவே மக்கள் விரும்பியுள்ளார்கள்.
4. சிரோன்மணி அகாலிதளம் பாஜக அணி வாக்கு சதவீதம்,
இடங்களின் எண்ணிக்கை இரண்டையுமே இழந்துள்ளது. இக்கட்சிகளின் ஒரே நம்பிக்கை ஆம்ஆத்மியை
ஒப்பிடுகையில் 5.7% அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதுதான்.
இடங்களின் எண்ணிக்கை இரண்டையுமே இழந்துள்ளது. இக்கட்சிகளின் ஒரே நம்பிக்கை ஆம்ஆத்மியை
ஒப்பிடுகையில் 5.7% அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதுதான்.
உத்தராகண்ட்:
உத்தராகண்ட் மாநிலத்தின் சட்டசபைத் தொகுதிகளின்
எண்ணிக்கை 70. உத்தராகண்ட் மாநிலத்தில் மகத்தான வெற்றியைப் பெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது.
கீழுள்ள அட்டவணையில் கட்சிகள் பெற்றுள்ள இடங்களைக் காணலாம்.
எண்ணிக்கை 70. உத்தராகண்ட் மாநிலத்தில் மகத்தான வெற்றியைப் பெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது.
கீழுள்ள அட்டவணையில் கட்சிகள் பெற்றுள்ள இடங்களைக் காணலாம்.
2012, 2014
& 2017 கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் :
& 2017 கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் :
வாக்கு சதவீதம்
|
|||
கட்சிகள்
|
2012
|
2014
|
2017
|
காங்கிரஸ்
|
33.79%
|
34.40%
|
33.50%
|
பாரதிய ஜனதா
|
33.13%
|
55.93%
|
46.50%
|
உத்தராகண்ட் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது?
1. உத்தராகண்ட்டைப் பொருத்தவரையில் 2014 மற்றும்
2017 ஆகிய இரு தேர்தல்களிலும் தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்த இயலவில்லை என்பது தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக அலை வீசிய மாநிலங்களில் உத்தராகண்ட்டும் ஒன்று.
கூடுதலாக அங்கு காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்ததும், இம்மாநிலத்திலும் ஆட்சிக்கு எதிரான
அலையில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
2017 ஆகிய இரு தேர்தல்களிலும் தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்த இயலவில்லை என்பது தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக அலை வீசிய மாநிலங்களில் உத்தராகண்ட்டும் ஒன்று.
கூடுதலாக அங்கு காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்ததும், இம்மாநிலத்திலும் ஆட்சிக்கு எதிரான
அலையில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
2. பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை, கடந்த லோக்சபா
தேர்தலில் பெற்ற வாக்கு சதவீததைக்காட்டிலும் குறைவாகப் பெற்றாலும், பாஜக இழந்த அவ்வாக்குகள்
சுயேச்சைகளுக்குச் சென்றுள்ளனவே தவிர, காங்கிரசால் அவ்வாக்குகளைத் திரும்பப் பெற இயலவில்லை
என்று திருப்திப் பட்டுக் கொள்ளலாம். மேலும் தற்போதும் தனக்கு அடுத்த நிலையிலுள்ள காங்கிரசைக்
காட்டிலும் கூடுதலாக 13% வாக்குகளைப் பெற்றுள்ளது. சிறந்த முதல்வரை அறிமுகப்படுத்தி
நல்லாட்சி வழங்கினால் குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் வரிசையில் இம்மாநிலமும்
வரலாம்.
தேர்தலில் பெற்ற வாக்கு சதவீததைக்காட்டிலும் குறைவாகப் பெற்றாலும், பாஜக இழந்த அவ்வாக்குகள்
சுயேச்சைகளுக்குச் சென்றுள்ளனவே தவிர, காங்கிரசால் அவ்வாக்குகளைத் திரும்பப் பெற இயலவில்லை
என்று திருப்திப் பட்டுக் கொள்ளலாம். மேலும் தற்போதும் தனக்கு அடுத்த நிலையிலுள்ள காங்கிரசைக்
காட்டிலும் கூடுதலாக 13% வாக்குகளைப் பெற்றுள்ளது. சிறந்த முதல்வரை அறிமுகப்படுத்தி
நல்லாட்சி வழங்கினால் குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் வரிசையில் இம்மாநிலமும்
வரலாம்.
3. பெரிதாக மற்ற மாநில கட்சிகள் இங்கில்லை என்பதும்,
பஹுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு மட்டும் சிறிதளவு வாக்கு வங்கி உள்ளது என்பதும் மட்டுமே
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசியக் கட்சிகளுக்கும் ஆசுவாசத்தைக் கொடுக்கிறது.
பஹுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு மட்டும் சிறிதளவு வாக்கு வங்கி உள்ளது என்பதும் மட்டுமே
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசியக் கட்சிகளுக்கும் ஆசுவாசத்தைக் கொடுக்கிறது.
மணிப்பூர்:
70 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது மணிப்பூர். மணிப்பூரில் காங்கிரஸ் அதிக
இடங்களைப் பெற்று இருந்தாலும், அங்குள்ள மாநில கட்சிகள் பாஜகவை ஆதரிக்க முன்வந்ததால்
அங்கும் பாஜக ஆட்சியை அமைக்கிறது. மணிப்பூர் கோவா இரு மாநிலங்களிலும் சிறு கட்சிகள்
பாஜகவை ஆதரிப்பதற்கு மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதே காரணம். மணிப்பூரைப் பொருத்தவரை
மணிப்பூர் நாகா கட்சி எக்காலத்திலும் காங்கிரசை ஆதரிக்காது என்பதால் அதைச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொண்டது பாஜக. பாஜகவைப் பொருத்தவரையில் வட கிழக்கு மாநிலங்களில் தனது
அடித்தளத்தை வலுப்படுத்த அதிகக் கவனத்தைச் செலுத்தி வந்ததன் அடையாளமாக அஸ்ஸாமிற்கு
அடுத்தபடியாக மணிப்பூரிலும் கட்சியை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. 2012 சட்டசபைத் தேர்தலில்
ஓரிடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக தற்போது 21இடங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடி ஆட்சிக்கு
வந்தபிறகு வட கிழக்கு மாநிலங்களில் நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி வந்ததே பாஜக அங்கு
வலுப்படக் காரணமாக அமைந்துள்ளது.
இடங்களைப் பெற்று இருந்தாலும், அங்குள்ள மாநில கட்சிகள் பாஜகவை ஆதரிக்க முன்வந்ததால்
அங்கும் பாஜக ஆட்சியை அமைக்கிறது. மணிப்பூர் கோவா இரு மாநிலங்களிலும் சிறு கட்சிகள்
பாஜகவை ஆதரிப்பதற்கு மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதே காரணம். மணிப்பூரைப் பொருத்தவரை
மணிப்பூர் நாகா கட்சி எக்காலத்திலும் காங்கிரசை ஆதரிக்காது என்பதால் அதைச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொண்டது பாஜக. பாஜகவைப் பொருத்தவரையில் வட கிழக்கு மாநிலங்களில் தனது
அடித்தளத்தை வலுப்படுத்த அதிகக் கவனத்தைச் செலுத்தி வந்ததன் அடையாளமாக அஸ்ஸாமிற்கு
அடுத்தபடியாக மணிப்பூரிலும் கட்சியை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. 2012 சட்டசபைத் தேர்தலில்
ஓரிடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக தற்போது 21இடங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடி ஆட்சிக்கு
வந்தபிறகு வட கிழக்கு மாநிலங்களில் நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி வந்ததே பாஜக அங்கு
வலுப்படக் காரணமாக அமைந்துள்ளது.
கோவா:
40 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது கோவா. கோவாவில் பாஜக 2012, 2014 தேர்தல்களை
மகாராஷ்டிரா கோம்னாடக் என்ற கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. இம்முறை தனித்து
நின்றது. மனோகர் பரிக்கருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட லக்ஷ்மி காந்த் பரிக்கர் ஆட்சி
மீது நம்பிக்கையின்மையும் நிலவியது. இதனால் பாஜகவுக்கு 13 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
மகாராஷ்டிரா கோம்னாடக் என்ற கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. இம்முறை தனித்து
நின்றது. மனோகர் பரிக்கருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட லக்ஷ்மி காந்த் பரிக்கர் ஆட்சி
மீது நம்பிக்கையின்மையும் நிலவியது. இதனால் பாஜகவுக்கு 13 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
வாக்கு சதவீதம்
|
|||
கட்சிகள்
|
2012
|
2014
|
2017
|
காங்கிரஸ்
|
30.08%
|
37.02%
|
28.40%
|
பாரதிய ஜனதா
|
34.68%
|
54.12%
|
32.50%
|
மகாராஸ்டிரா கோம்நாடக்
|
6.72%
|
**
|
11.30%
|
ஆம் ஆத்மி
|
*
|
1.00%
|
6.30%
|
|
|
|
|
NCP – 4.08% allinace with Cong
|
|
|
1. கோவாவில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும்
வாக்கு சதவீதத்தை வைத்து ஒப்பிட்டால் இன்றும் பாஜகவை விடக் குறைவாகவே உள்ளது.
வாக்கு சதவீதத்தை வைத்து ஒப்பிட்டால் இன்றும் பாஜகவை விடக் குறைவாகவே உள்ளது.
2. பாஜக தனித்து நின்றதால் தனது செல்வாக்குக் குறைந்திருப்பதைக்
கணக்கில் கொள்ளவேண்டும். இதை மனதில் வைத்து, ஆட்சியை விட்டுவிடக்கூடாது என்பதால்தான்
மனோகர் பரிக்கரையே திரும்ப அனுப்பியுள்ளது பாஜக.
கணக்கில் கொள்ளவேண்டும். இதை மனதில் வைத்து, ஆட்சியை விட்டுவிடக்கூடாது என்பதால்தான்
மனோகர் பரிக்கரையே திரும்ப அனுப்பியுள்ளது பாஜக.
ஐந்து மாநிலத் தேர்தல்கள் இறுதியாக இரண்டு செய்திகளைச் சொல்கின்றன. மாநிலங்களில்
நல்லாட்சியைத் தரவில்லை என்று நம்பும் பட்சத்தில் அது எக்கட்சியின் ஆட்சி நடந்தாலும்
மக்கள் அதற்கு எதிரான வாக்குகளை அளிப்பார்கள் என்பது ஒன்று. இன்னொன்று, பாரதிய ஜனதாவை
வெல்ல மிகப் பெரிய கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைக்கவேண்டும். அப்போது மட்டுமே 2019
லோக்சபா தேர்தலில் மோடியையும் பாஜகவையும் எதிர்கொள்ள முடியும். நல்லாட்சியைத் தந்தால்
மக்கள் அக்கட்சியையும் தலைவனையும் வரவேற்பார்கள் என்பதற்கு மோடி ஓர் உதாரணம். இந்திய
வரலாற்றில் மோடி மிகப்பெரிய இடத்தைப் பெறுவார் என்பதை எவரும் மறுக்க இயலாது. பாஜகவை
எதிர்க்க மிகப்பெரிய வியூகம் அமைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் எதிர்க்கட்சிகளும்,
அவர்களில் யார் தலைமையை ஏற்று நடப்பது என்ற குழப்பமும் நீடித்தால் மோடியே மீண்டும்
இந்தியாவின் பிரதமர் என்பது உறுதி.
நல்லாட்சியைத் தரவில்லை என்று நம்பும் பட்சத்தில் அது எக்கட்சியின் ஆட்சி நடந்தாலும்
மக்கள் அதற்கு எதிரான வாக்குகளை அளிப்பார்கள் என்பது ஒன்று. இன்னொன்று, பாரதிய ஜனதாவை
வெல்ல மிகப் பெரிய கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைக்கவேண்டும். அப்போது மட்டுமே 2019
லோக்சபா தேர்தலில் மோடியையும் பாஜகவையும் எதிர்கொள்ள முடியும். நல்லாட்சியைத் தந்தால்
மக்கள் அக்கட்சியையும் தலைவனையும் வரவேற்பார்கள் என்பதற்கு மோடி ஓர் உதாரணம். இந்திய
வரலாற்றில் மோடி மிகப்பெரிய இடத்தைப் பெறுவார் என்பதை எவரும் மறுக்க இயலாது. பாஜகவை
எதிர்க்க மிகப்பெரிய வியூகம் அமைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் எதிர்க்கட்சிகளும்,
அவர்களில் யார் தலைமையை ஏற்று நடப்பது என்ற குழப்பமும் நீடித்தால் மோடியே மீண்டும்
இந்தியாவின் பிரதமர் என்பது உறுதி.
http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx