Posted on Leave a comment

எங்கே செல்லும் இந்தப் பாதை – ஹாலாஸ்யன்

தன் மனைவிநாய்
வளர்ப்பதைப் பிடிக்காத கணவனைப்
பற்றிய ஒரு நகைச்சுவை சொல்வார்கள்.
தனக்குப் பிடிக்காத மனைவியின் நாயை,
கணவன் தன்காரில்ஏற்றி‌,
சுமார் இரண்டு கிமீ தள்ளிக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருகிறான்.
அந்த நாய் அவன் வரும் முன்னர் வீட்டுக்கு வழி கண்டுபிடித்து வந்துவிடுகிறது.
அடுத்த முறை ஒரு பத்து கிமீ எங்கெல்லாமோ சுற்றிச் சுற்றிப் போய் விட்டுவிடுகிறான்.
மறுபடியும் வந்துவிடுகிறது. மூன்றாவது முறை
இன்னும் ஏகப்பட்ட தூரம் போய் இறக்கி விடுகிறான்
. திரும்பி
வரும் வழி இவனுக்கு மறந்துவிடுகிறது
. மனைவியை ஃபோனில்
அழைத்து அந்த நாய் வந்துட்டுதா என்று கேட்கிறான்
. மனைவி
ஆம் என்கிறாள்
. ‘அதை அனுப்பி வை. எனக்கு
வழி மறந்துபோச்சு
என்று கணவன் சொல்வதாக அந்த நகைச்சுவை போகும்.
அதில் கவனிக்க வேண்டிய உண்மை என்னவெனில் அந்த நாய்
எப்படியோ வழி கண்டுபிடித்துவிடுகிறது
என்பதுதான்.
நாய் மட்டுமல்ல, பொதுவாகவே விலங்குகள் வழி தெரியாமல் முச்சந்தியில்
நின்று தலையைச் சொறிவதில்லை
. என்தாத்தாவின்
இளம்பிராயத்தில் அவர் யாருக்கோ விற்ற ஒரு வண்டிமாடு,
விற்றவர் வீட்டிலிருந்து கயிற்றை அவிழ்த்துக்கொண்டு நேரே வீட்டுக்கு வந்துவிட்டதாம்‌.
மன்னர்கள் கதைகளில் அவர்களின் குதிரைகள் மயக்கமுற்ற தன் எஜமானரைச் சுமந்துகொண்டு
அரண்மனைக்குத் திரும்பிய கதையெல்லாம் கேட்டிருப்போம்
. இதெல்லாம்
என்ன பிசாத்து
?
தி கிரேட் ஆர்டிக் டெர்ன் The great
arctic tern
என்னும் பறவை வலசைப் போவதற்காக வடதுருவத்தில் இருந்து
தென்துருவத்திற்கும் வலசை முடிந்து ஒரு ரிட்ர்ன் ட்ரிப்பும் அடிக்கிறது
‌‌.
அசகாய சூரத்தனம். கடல்மேல் பறக்கையில்சட்டென்று
நீருக்குள்
பாய்ந்து ஒரு மீனை கவ்விக்கொண்டு அந்த மீனை காற்றிலேயே
தூக்கிப்போட்டுப் பிடித்துப் பறக்கையிலேயே விழுங்கிவிடும்
. டெர்ன் பறவைகள் தமிழில் ஆலாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஓயாமல் பறக்கிற அவற்றின் பெயராலேயே ஆலாய்ப் பறக்கிறான்
என்ற சொலவடை வந்திருக்கக்கூடும்
.

அதேபோல சாலமன் மீன்கள் இனப்பெருக்கப் பருவம் வந்ததும்,
கடலில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் எதிர்நீச்சல் போட்டு,
தான் பிறந்த நதிப் படுகைக்குப் போய் இனப்பெருக்கம் செய்து முட்டையிடுகின்றன.
புறாக்கள் தம் காலில் கட்டிய ஓலையை, கச்சிதமாய்ச்
சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டு
ஏப்பா!!
ரிப்ளை ஏதும் போடுவியா?” என்று பதில் ஓலையையும் வாங்கிக்கொண்டு வந்து சேர்கின்றன.
சாணத்தை உருட்டி எடுத்துப்போய்ச் சேகரிக்கும் வண்டுகள்  உருட்டிக்கொண்டு வழி மாறாமல் தன் இருப்பிடம் சேர்கின்றன.


 விலங்குகள், பறவைகள்
மற்றும் பூச்சிகள் திசை அறியும் நுட்பம் மிகமிகச் சுவாரசியமானது
‌.
அவை இயற்கையைப் பலவாறாகத் தங்களுக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்துகின்றன.
அவற்றுள் முக்கியமானது சூரியன். சூரியன் இருக்கும்
இடத்தையும்
, அப்போதைய நேரத்தை வைத்தும் வழி கண்டுபிடிக்கின்றன.
தேனீக்கள் இந்த வித்தையில் கில்லாடிகள். பூ
எங்கிருக்கிறது என்று ஃபீல்ட் விசிட்டுக்குப் புறப்படும் தேனீ
,
பூக்களைக் கண்டவுடன் திரும்பி வந்துசூரியனுக்கு
எதுத்தாப்புல அஞ்சு டிகிரி லேசா சாஞ்சு போனா ஒரு நந்தவனமே இருக்கு

என்று வழி சொல்கின்றன. பறவைகள் சூரியனை நம்புகின்றன.
அதைத்தவிர வானம் மப்பும்மந்தாரமுமாய் இருக்கையில் பூமியின் காந்தப்புல மாறுதல்களை
வைத்து இடம் கண்டுபிடிக்கின்றன
. இந்த காந்தப்புல மாறுதல்களை வைத்து திசை கண்டுபிடித்தல்,
பறவைகளில் மட்டுமல்ல, பாக்டீரியாக்களிலும் உள்ளது.
அவற்றின் உடலினுள் சிறு இரும்புத் தாது அதனை ஒட்டிச் சில புரதங்கள்,
காந்தப்புல மாறுதலால் அந்த இம்மி இரும்புத் தாதுவில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றி
இருக்கும் புரதங்களையும் பாதித்து அதன் மூலம்
ஏ வேடந்தாங்கல்
வந்தாச்சு
, லேண்ட் ஆகுஎன்று
பறவைகள் இறங்கும்
. இதையும் தவிர க்ரிப்டோக்ரோம்
(cryptochrome)
என்னும் புரதங்களின் மூலமும் காந்தப்புல மாறுதல்களை
அறிய முடியும்
. அந்தப் புரதங்கள் காந்தப்புல மாறுதலால் ஒளியில் ஏற்படும்
மாறுதல்களை வைத்து வழி கண்டுபிடிக்கின்றன
. பழக்கடைகளில்
மாம்பழங்களை மொய்க்கும் பழ வண்டுகள் இந்த க்ரிப்டோக்ரோம்களைத்தான் வழிகாட்டியாகக் கொண்டுள்ளன
.
சாணத்தை உருட்டி எடுத்துப் போகும் வண்டுகள் உண்மையில் எல்லா ஜீவராசிகளையும்
தலைகுனிய வைக்கின்றன
. அவை பால்வீதியின் நட்சத்திரங்களை,
இரவு வானில் அவற்றின் இருப்பிட மாறுதல்களைக் கொண்டு சாணத்தை உருட்டி இருப்பிடம்
எடுத்துப்போகின்றனவாம்
. சாலமன் மீன்கள் ஞாபகத்தின் மூலமாகவும் வாசனையின் மூலமாகவும்
தாம் பிறந்த நதிப்படுகையை அடைகின்றன
. ஆனால் நாம்?
நாமும் சளைத்தவர்கள் அல்ல. இந்த
உலகத்தில் வாழிடத்துக்காகவும்
, பிழைப்புக்காவும் இடம்பெயரும் ஜீவன்களில் மனிதர்களும்
அடக்கம்
. ஆப்பிரிக்காவில் தொடங்கி, கண்டம்,
தீவுகள் எனத் தாறுமாறுகாக இடம் பெயர்ந்திருக்கிறோம்.
கிட்டத்தட்ட நடந்தே போய்ப் பல கண்டங்களில் குடியேறியிருக்கிறோம்.
ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கெல்லாம் எப்படிப்போனோம் என்பது இப்போது வரை பெரிய
பிரமிப்புதான்
, காந்தப்புலத்தை அறியும் அளவுக்கு நமது மூளைக்குத் திறமையில்லை
என்றாலும்
, இந்த நகர்தலுக்கு நம் மூளை பழக்கப்பட்டதுதான்.
இன்னும் பார்த்தால் வேட்டைச் சமூகக் காலத்தில் எதையாவது துரத்திப்போய் அடித்துக்கொண்டு
மீண்டும் வீடோ
, குகையோ திரும்புதல் என்பது உயிர்வாழ்தலுக்கு அத்தியாவசியமான
ஒன்று
. நமது மூளையில் அதற்கு உரிய பங்கு இருக்கிறது. மூளையின்
இரண்டு அரைக்கோள
ங்களுக்கு அடியிலும் குர்குரே சிப்ஸ் போன்ற ஒரு வடிவத்தில்
மூளையின் ஒரு ஏரியா இருக்கிறது
. அந்த ஏரியாவின் பெயர் ஹிப்போகாம்பஸ்
(Hippocampus).
ஹிப்போகாம்பஸ் குறுகிய கால ஞாபகத் திறன்,
நெடுங்கால ஞாபகத் திறன் மற்றும் பரிமாண ஞாபகங்களை நிர்வகிக்கக் கூடியதாக இருக்கிறது.
புதிதாக ஒரு இடத்துக்குப் போகையில் அந்த இடத்தைப் பார்வையால்
அளந்து அதன் பரிமாணங்களை
, நம்மால் எங்கெல்லாம் நகர முடியும் என்று ஹிப்போகாம்பஸ்
ஒரு திட்டம் வைத்துக்கொள்ளும். பார்வையற்றோருக்கு
வேறு புலன் உள்ளீடுகளால் அந்த இடைவெளி நிரப்பப்படும்
. அந்த
இடத்தின் வழியாகத் திரும்ப வரவேண்டி இருக்குமெனில் அதைக் குறுகிய கால ஞாபகத்திலேயே
வைக்கும்
. அடிக்கடி வந்து போகிற இடமெனில் நெடுங்கால இலாகாவிற்கு
மாற்றிவிடும்
. இதனைத் தவிரபாஸ்
இங்கேர்ந்து செவுறு ஏறிக் குதிச்சா
, நேரா சாப்புட்ற
இடத்துக்கு வந்துடலாம் பாஸ்
என்பதுபோல முப்பரிமாணத்தில் வரைபடம் தயாரிக்கிற பரிமாண
ஞாபகங்களையும் அதுவே நிர்வகிக்கிறது
,
அறிவியல் சம்பிரதாயப்படி எலிகளை வைத்துச் சோதனை செய்ததில்
அவற்றின் ஹிப்போக்காம்பஸின் இடம் கண்டுபிடித்தலுக்கான சிறப்பான ந்யூரான்கள் இருப்பதைக்
கண்டுபிடித்திருக்கிறார்கள்
. எலிகள் ஒரு அறைக்குள் நகர்கையில் ஒவ்வொரு இடத்துக்கும்
ஒவ்வொரு ந்யூரான்கள் செயல்பட்டிருக்கின்றன
. ஒரு
புது அறைக்குள் விடப்படுகையில் அந்த அறையின் பரிமாணங்களை அறிந்துகொள்ளவும்
,
ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ந்யூரான் என்று நிறுவவும் வேண்டியிருப்பதால் ஹிப்போகாம்பஸ்
அதிகம் செயல்படுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள்
.
பாலூட்டிகளின் மூளை அமைப்பில் ஏகப்பட்ட ஒற்றுமைகள்
இருப்பதால் நமக்கும் இதே ந்யூரான் நேர்ந்துவிடல்கள் உண்டு
. ஆரம்ப
காலத்தில் வழி கண்டுபிடிக்க எந்த உபகரணமோ
, உதவியோ
இல்லாதபோது இந்த வழிகளெல்லாம் செவிவழிச் செய்திகளாய்
, அந்தக்
குழுவின் மூத்த
, பழுத்த அனுபவமுடைய ஒரு மனிதரால் கடத்தப்படும்.
வானியல், காற்று வீசும் திசை, நீரோடும்
திசை இவற்றையெல்லாம் நாம் பயன்படுத்தி வழிகண்டுபிடிக்கத் தொடங்குகையில் மூளையும் அந்தக்
கருவிகள் சார்ந்த தரவுகளைத் தொடர்ச்சியாகச் சேமித்துக்கொண்டே வந்து கொண்டிருந்தது
.
அந்தக் கண்டுபிடிப்பு வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்தான் வரைபடங்கள்.
வரைபடங்கள் வாழ்வை எளிதாக்கியிருக்கின்றன.
பெரிய நிலப்பரப்புகளை ஆளவும், கடக்கவும் ஏன்
அழிக்கவும் பயன்பட்டிருக்கின்றன
. Cartography என்கிற வரைபடவியல்
மிகவும் சுவாரசியமான ஒரு இயல்
. வரைபடங்களை எப்படி வரையவேண்டும்,
அவற்றின் அளவீடுகள் என்ன மாதிரியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்.
நாம் தட்டையான பேப்பரில் பார்க்கிற வரைபடங்கள் உருச்சிதைந்தவையே.
கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவிற்குத் தம்பி போல வரைபடத்தில் தெரிய வரும் க்ரீன்லாந்து,
உண்மையில் அளவீட்டில் ஆப்பிரிக்காவிற்குப் பக்கத்தில் கூட வர முடியாது.
ஆனால் ஒரு கோளத்தை தட்டையான இருபரிமாணத் தாளில் தருவது என்கிற இடியாப்பச் சிக்கலில்
இதுவே பெரிய விஷயம்
.
நாம் வழிமாறிப் போகாமல் திரும்ப வருவோம்.
வரைபடங்கள் மிக அதிகம் பயன்பட்டது கடலோடிகளுக்குதான்.
வெறும் நட்சத்திரங்களையும், தொலைநோக்கிகளையும்
வைத்துக் குத்துமதிப்பாகப் போய்க்கொண்டிருந்த கப்பல்கள் துல்லியமாய் இலக்கை நோக்கிப்
பயணிக்க ஆரம்பித்ததில் உலக வரலாற்றிலும் வர்த்தகத்திலும் பெரும் திருப்பங்களுக்குக்
காரணமானது
. ஆனால் வரைபடங்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை அல்ல.
அவற்றின் மேற்பக்கம் எப்போதுமே வடக்கைப் பார்த்துதான் இருக்கும்.
உனக்கு வேணும்னா நீ திரும்பி பாத்துக்கோஎன்கிற
கதையாய் முரண்டு பிடிக்கும்
. அப்படி வேறு ஒரு பொருளை, இந்த
இடத்தில் வடக்கு திசையை ஆதாரமாய்க் கொண்டிருப்பதால் இவ்வகையான வரைபடங்களை அல்லோசெண்ட்ரிக்

(Alocentric)
என்று அழைக்கிறார்கள்.
நன்றாக வரைபடத்தை அலசத் தெரிந்த ஒரு ஆளுக்கு ஹிப்போக்காம்பஸ்
கொஞ்சம் கூடுதலாய் வேலை செய்யும்
. ஒரு நகரின் வரைபடத்தைப் பார்க்கையில் ஒவ்வொரு சாலையும்
எங்கு போகிறது
, இடையில் வரும் முச்சந்தி, நாற்சந்திகள்
எங்கெல்லாம் போகின்றன என்று நாம் இருக்கும் இடத்தையும்
, அந்த
வரைபடத்தையும் ஒப்பிட்டு ஹிப்போகாம்பஸ் ஒரு வரைபடத்தைத் தனக்குத் தானே தயாரித்துக்கொள்ளும்
.
சத்யம் தியேட்டர் போணுமா? அண்ணா சாலை ட்ராபிக்கா? பீச்
ரோடு புடிச்சு சுத்தி உள்ள போய்க்கலாம்
என்று சூழ்நிலைகளுக்கு
ஏற்ப முடிவுகளையும் எடுக்கும்
.
ஆனால் பாருங்கள், இந்த
கூகுள் மேப்ஸ் போன்ற வழிகாட்டும் செயலிகளின் வரைபடங்கள் இஷ்டத்துக்கு திரும்பும்
.
அதாவது நீங்கள் முக்கியம். வடக்கு தெற்கெல்லாம் இல்லை.
உங்களுடைய இடது, வலது, முன்,
பின் இவைதான் திசைகள். இப்படி தன்னை முன்னிலைப்படுத்தலுக்கு ஈகோசெண்ட்ரிக்
(egocentric)
என்று பெயர். ஈகோ
செண்ட்ரிக் வரைபடங்களில் ஹிப்போகேம்பஸ் திணறும்
. நாம்
திரும்புவதற்கு ஏற்ப அதுவும் சுழன்று கொண்டே இருப்பதால் லேசாய்க் கடுப்பாகும்
.
Turn right at
என்று திரும்பச் சொல்கிற கணினிப் பெண்குரலை கிட்டத்தட்ட
தன் சக்களத்தியாகவே பார்க்கும்
. அந்தக் குரல் ஒலிக்கையில் அது ந்யூரான்களைப் பயன்படுத்தும்
தேவையின்றிப் போவதால் ஹிப்போகாம்பஸ் கிட்டத்தட்ட அணைக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன
.
ஒரு ஆய்வில், கலந்துகொண்டவர்களை,
லண்டன் நகரத்தின் கணினி மாதிரி ஒன்றில் டாக்ஸி ஓட்டுநர்களாக இருக்கச்சொல்லி
இவ்வளவு வாடிக்கையாளர்களை அவர்கள் சொல்லும் இடத்தில் இறக்கிவிட வேண்டும் என்று விளக்கிச்
செய்ய வைத்தனர்
. ஒரு சாரார் வழிகாட்டும் செயலிகளைப் பயன்படுத்தலாம்.
மற்றொரு சாரார் பயன்படுத்தக்கூடாது. அந்த
ஆய்வு நடக்கையிலேயே அவர்களை மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் வழிகாட்டும் செயலிகளைப்
பயன்படுத்துபவர்களின் ஹிப்போகாம்பஸ் பெரிதாகச் செயல்படவில்லை எனவும்
,
அதுவே தானாய் வழிகண்டுபிடித்த ஆட்கள் குறைவான வேகத்தில் செயல்பட்டாலும்,
அவர்களின் ஹிப்போகாம்பஸ் சுறுசுறுப்பாக இயங்கியது.
இதில் ஆச்சரியம் என்னவெனில் லண்டன் டாக்ஸி டிரைவர்களுக்கு
ஹிப்போகாம்பஸ் சராசரியைவிட அளவில் பெரியதாக இருந்தது
. லண்டன்
நகரத்தில் கார் வைத்திருந்து
, ஓட்டத் தெரிந்திருந்தால் மட்டும் டாக்ஸி நடத்திவிட
முடியாது
. பத்தாயிரத்திற்கும் அதிகமான அந்த நகரின் தெருக்களை,
இண்டு, இடுக்குகளை ஞாபகம் வைத்துக்கொண்டிருக்க வேண்டும்.
தகுதித் தேர்வெல்லாம் உண்டு. அதனால் அவர்களின்
ஹிப்போகாம்பஸ் அளவில் சற்றே பெரிதாய் இருந்திருக்கிறது
. அதே
நேரம் வழிகாட்டும் செயலிகளைத் தொடர்ச்சியாய்ப் பயன்படுத்துவோரின் ஹிப்போகாம்பஸ் அளவில்
லேசாய்ச் சுருங்கி இருந்தது
, இந்தத் திறனெல்லாம் use it or
lose it
வகையைச் சேர்ந்ததுபயன்படுத்தாவிடில்
அந்த இடம் லேசாய் வேறு ஒரு மூளையின் பாகத்திற்குக் கொடுக்கப்படும்
.
காரணம் மொத்த மூளையும் அந்த மண்டை ஓட்டுக்குள்ளேதானே இருந்தாக வேண்டும்.
சரி, எவ்வளவோ திறன்களை
இழந்தாயிற்று
. இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே என்று இருக்கலாம்தான்.
நாம் எல்லா வேலைகளையும் திறன்களையும் தொழில்நுட்பத்திற்கு அவுட்சோர்ஸ் செய்து
வருகிறோம்
. கால்குலேட்டர்கள் மிகச் சிறந்த உதாரணம்.
ஏற்கெனவே பார்த்தபடி ஹிப்போகாம்பஸ் ஞாபகத்திறனில் சம்பந்தப்படுவதால் அந்தப்
பகுதி டிமெண்டியா
dementia, அல்ஸைமர்
alzheimer
போன்ற வியாதிகளில் முதலில் பாதிக்கப்படும் பகுதியாக
இருக்கிறது
, முதியவர்கள் வழிதவறிச் செல்லுதல்,
வழிதெரியாமல் சுற்றிச் சுற்றி வருதல் இதெல்லாம் ஹிப்போகாம்பஸ் சிதைவின் வெளிப்பாடு,
அதனால் இந்தப் பகுதியை சுறுசுறுப்பாக வைத்திருந்தால் பின்னாளில் இந்த மாதிரியான
சிதைவு நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு
. அப்படி சுறுசுறுப்பாக
வைக்க என்ன செய்யலாம்
?
     வாரமிருமுறை உங்களுக்கு அருகில்
உள்ள
, நீங்கள் சென்றிருக்காத ஒரு பகுதிக்கு எந்த வழிகாட்டியும் இல்லாமல் போய் வாருங்கள்.
(
நாய் விரட்டினால் நான் பொறுப்பல்ல.)
     போய் வந்த இடத்தின் வரைபடத்தைத்
தோராயமாய் வரைய முடிகிறதா என்று முயற்சியுங்கள்
. எத்தனை
இட
, வல திருப்பங்கள் போன்றவை.
     அலுவலகத்துக்குப் போகையிலோ வருகையிலோ
இதுவரை முயன்றிருக்காத ஒரு வழியில் சென்று பாருங்கள்
.
     ஜிபிஸ் உதவியுடன் செயல்படும் செயலிகளைப்
பயன்படுத்த வேண்டிய சூழல் வந்தாலும் அதை மட்டுமே நம்பி இருக்காமல்
,
கொஞ்சம் வழிகாட்டும் பலகைகளையும் பார்த்து ஓட்டுங்கள்.
இது ஒரு ஒட்டுமொத்தமான மூளைக்கான பயிற்சியாகவும் அமையும்.
ந்யூரான்கள் செயல்பாடு ஒழுங்குபடுத்தப்படும்மூளைச் சிதைவு நோய்களைத் தள்ளிப் போடவும் முடியும்.
ஏனெனில் ஒரு தொழில்நுட்பத்திடம் எதை இழக்கிறோம் என்ற புரிதலும் அதை எப்படி வேறுவிதத்தில்
தக்க வைக்கலாம் என்ற தேடலும் இன்றைய உலகின் அத்தியாவசியத் தேவையாகி விட்டது
.

Leave a Reply