Posted on Leave a comment

பயங்கரவாதத்தை எதிர்க்கத் தயாராகும் கார்ப்பரேட் நிறுவனங்கள் – ஜெயராமன் ரகுநாதன்

மேஜர் சந்தீப் நாராயணனையும் இன்னும் பல உயிர்களையும் இழந்து, இந்தியாவையே
ஒன்றிரண்டு நாட்களுக்கு டென்ஷனில் உட்கார வைத்த
26/11ல் நடந்த பயங்கரம், இந்த நவம்பரில்
ஒன்பதாவது வருட சோக நினைவாகப் போகிறது
. என்னதான் கடுமையான
சோதனைகள் வைத்தாலும் தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் தயங்காத பைத்தியக்காரத் தீவிரவாதியை
எப்படித் தடுக்க முடியும்
. செப்டம்பர் பதினொன்று சோகத்தைக் கண்ட
அமெரிக்கா பல ஆயிரம் பில்லியன் டாலர்கள் செலவழித்துக் கடும் சோதனைகளை ஏற்படுத்தியிருக்கிறது
. இருந்தும் தீவிரவாதத்தின்
அரக்கக்கைகள் எங்கு எப்போது நீண்டு அப்பாவி உயிர்களைக் கொல்லுமோ என்னும் பயம் அடிநாதமாக
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
. சமீபத்தில்தான் மான்செஸ்டரில் குண்டு
வெடித்து
19 பேரைக் கொன்று தன்னையும் அழித்துக்கொண்டான்
ஒரு தீவிரவாதி
.


இந்த இழப்பில் நாம் கற்ற பல பாடங்களில் ஒன்று, முழுக்க முழுக்க
அரசையும் காவல்துறையையும் மட்டுமே நம்பி இனி இந்த உலகத்தில் வாழ்வது போதாது
. ஒவ்வொரு தனி
மனிதரும் சரி
, நிறுவனமும் சரி, ஆரம்பகட்டத்திலாவது
தம்மைத்தாமே காத்துக்கொள்ள
, பல முயற்சிகள் எடுத்தாக வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுவிட்டது
. அமெரிக்காவில் பல ஊர்களில் ஒவ்வொரு இடம் சார்ந்த
மக்கள் குழுக்களாகப் பிரிந்து தத்தம் ஏரியாவுக்குள் கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள
ஆரம்பித்துவிட்டனர்
. ஒரு தாக்குதல் நடந்தால் போலீஸும் கமாண்டோக்களும்
வருவதற்குள் என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய பயிற்சி கொடுக்கப்படுகிறது
.
என்ன ராமசாமி! உம்ம தெருவுல
நேத்து புதுசா ஒரு ஆள் நடமாட்டமாமே
?”
அதொண்ணுமில்லீங்க! என் மச்சான்தான், கானாடுகாத்தான்லேர்ந்து
வந்திருக்கான்
.”
ஓ உன் மச்சான்தானா! சரி சரி. நா வர்ரேன். வயலுக்கு போவணும்.”
பழங்காலக் கிராமங்களின் சூதானம் இப்போது விஞ்ஞானபூர்வமாகச் செயல்படுத்தப்பட
வேண்டிய அவசியம்
. நம் சுற்றுப்புறத்தில் நடக்கும் விஷயங்களைக்
கவனித்து
, செய்திகள் பரிமாறி, அனாவசிய ரகசியங்களுக்கு
இடம் கொடாமல் பாதுகாத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்
.
26/11 நடந்தபோதுதான் நம் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக
இருந்திருக்கிறது என்று புரிந்தது
. பயங்கரவாத எதிர்ப்புத் தயார் நிலை என்பது
நம் ராணுவத்தில் மேலானதாக இருந்தபோதும் பதான்கோட்டில் ராணுவ வளாகத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறார்கள்
. அப்படி இருக்க
நகரங்களில்
, அதுவும் அதிக நடமாட்டம் இருக்கும் இடங்களில், பாதுகாப்பு ஓரளவுக்குத்தான்
இருக்க முடியும்
. இன்னொரு 26/11ஐ நம்மால் தாங்க
முடியுமா
? தாஜ் மஹால் ஹோட்டலைப் போன்ற இன்னொரு நிறுவனச் சேதமும் உயிர்
இழப்பும் கடுமையானதாக இருக்கும்
. அதனாலேயே பல முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கான
பாதுகாப்பை ஓரளவுக்குத் தாமே கவனித்துக்கொள்ள முடிவு செய்து அதைச் செயல்படுத்தியும்
வருகின்றன
. உலகம் முழுவதிலும் புதிது புதிதாகச் சித்தாந்தங்கள் உருவாகி
ஒவ்வொரு சித்தாந்தத்துக்கும் ஒரு பயங்கரவாதம் முன்னணியாகும் அவலம் நிகழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது
. அந்தப் பயங்கரவாதிகளின் கையில் தொழில்நுட்பம் சிக்கி சேதங்களுக்குத்
துணைபோகும் அபாயமும் அதிகரிக்க
, இந்தப் பயங்கரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், இன்னும் இன்னுமே
அதிக கவனத்துடனும்
, திட்டமிடுதலுடனும் அதீதத் தொழில்நுட்பங்களுடன்
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது
. இன்றைய இந்தியாவில்
கார்ப்பரேட் நிறுவனங்கள் சுயப்பாதுகாப்பே முதல் வரிசைப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து
அதைச் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டன
.
மாபெரும் இணைய வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் பாதுகாப்புத்துறை
இயக்குநர் தனது பணியாளர்களில் பலரைப் பயங்கரவாத எதிர்ப்புச் சிறப்புச்சான்றிதழ் பயிற்சிக்கு
(Certified
Anti Terror Specialists Training Programme – CATS)
அனுப்பித் தயார்ப்படுத்தியிருக்கிறார். இந்தத் தயார்ப்படுத்துதல்
மிக முக்கியமும் அவசியமானதும் என்கின்றார்கள் விற்பன்னர்கள்
. இந்த பயிற்சிக்குப்
பிறகு தீவிரவாதச் செயல்களை முன்னெச்செரிக்கையாகத் தடுக்கும் விதமும் அது பற்றிய முன்னேற்பாடான
சிந்தனைகளும் அதிகரித்திருக்கின்றன என்கிறார் இன்னொரு பாதுகாப்பு எக்ஸ்பர்ட் மேஜர்
ராஹுல் சூதன்
. ஃப்ளிப்கார்ட் தவிர, ரிசர்வ் பேங்க், ரிலயன்ஸ், தாமஸ் குக், பாரத் பெட்ரோலியம்
போன்ற மேலும் பல பெரும் நிறுவனங்களும் இந்தப் பயிற்சியைத் தம் பணியாளர்களுக்கு வழங்க
ஆரம்பித்துவிட்டன
.
காப்டன் முகேஷ் செயினி என்னும் காட்ரெஜின் பாதுகாப்புத் தலைவர்
தாமே இந்தச் சான்றிதழ்ப் பயிற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறார்
.
ஒரு தீவிரவாதச் செயலை நம்மால் முழுவதும் தடுத்துவிட முடியாது. ஆனால் இந்த பயிற்சிக்குப்
பிறகு அவனைக் கூடுமானவரைச் செயலிழக்கச் செய்ய முடியும்
. எங்களுடைய உயிர்களையும்
சொத்துக்களையும் பாதுகாக்க முடியும்
. இதில் மனவியலே
உடலியலை விட முக்கியம்
என்கிறார் செயினி.
அமெரிக்காவின் 9/11, இந்தியாவின் 26/11க்குப்பிறகு
ஒவ்வொரு நிறுவனமும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதன் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டேயாக
வேண்டும்
. அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின்போது அதன் தீவிரத்திலும்
நம்பமுடியாத அதிர்ச்சியிலும்
, அரசாலும் பாதுகாப்பு விற்பன்னர்களாலும்
உடனடியாகச் செயல் படமுடியவில்லை
. இப்படியெல்லாம் கூடத் தாக்குதல் வருமா
என்னும் அதிர்ச்சியே மேலோங்கி ஸ்தம்பிக்க வைத்தது
. இந்தியாவிலும்
நவம்பர்
26 தாக்குதலின்போது தீவிரவாதிகளின் துணிச்சல் அதிர்ச்சி
அடையவைத்துவிட்டது
. இனி இது போன்ற தாக்குதல்களை முன்பே கண்டுபிடிப்பதும்
அந்தத் தாக்குதல்களின் தீவிரத்தை ஒடுக்க முனைவதும் மிக முக்கியம்
.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தீவிரவாதம் என்பதன் இன்னொரு பரிமாணத்தையும்
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது
. அந்தப்பரிமாணம் Cyber
attack
என்னும் இணைய ஊடுருவல் மற்றும் தகவல் திருட்டு அல்லது அழிப்பு. ஆகவே பயிற்சி
என்பது இம்மாதிரியான இணையத்தாக்குதலையும் சமாளித்து வெற்றிகொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்
.
ஒரு நிறுவனம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகுமானால் முதலில்
அதை எதிர்கொள்வது அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள்தான்
. எனவே அவர்கள்
புதுமையாகச் சிந்தித்து
, தீவிரவாதிகளைவிட ஒருபடி மேலாகச் செயல்பட்டேயாக
வேண்டும்
. இல்லையென்றால் உயிர் இழப்பும் அழிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
தொழில்நுட்பம் வளர வளர, அது நல்ல வளர்ச்சியை
மட்டும் கொண்டு வருவதில்லை
. வர்த்தகத்தில் Drone என்னும் தானியங்கிகள்
எவ்வளவோ உதவியாக இருந்தாலும் அவை தீவிரவாதிகளுக்கும் வரமாகவே இருக்கின்றன
. நிறுவனங்கள்
இந்த மாதிரியான தாக்குதலுக்கு எதிராக முன்னேற்பாடாக இருக்க வேண்டும்
.
நான் மேலே சொன்ன CATS பயிற்சி மிகப்
பயனுள்ளது எனப் பல நிறுவனங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்
. இந்த CATS பயிற்சியில்
சில முக்கியமான விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன
.
     ஒரு அவசர நிகழ்வில் எப்படி உடனடியாக செயல்படுவது
     உயிர்களையும் சொத்துக்களையும் நெருங்காமல்
தீவிரவாதிகளை எப்படி கால தாமதம் செய்வது
     நேரம் கடத்தி பாதுகப்பை இறுக்குவது
     உடனடியாக உதவி கேட்பது
     முதலுதவி மற்றும்
     மனிதர்களைப் பாதுகாப்பாக எப்படி அந்த
இடத்திலிருந்து அப்புறப்படுத்துவது
சிங்கப்பூரின் Chartered
International Institute of Security and Crisis Management
என்னும் சர்வதேச
நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கும் இந்தப் பயிற்சியை முடித்த சிலர்
, தங்களின் தன்னம்பிக்கையும்
தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளத் தேவையான துணிவும் அதிகரித்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர்
. புதிதாக முளைத்துள்ள
தாக்குதல் முறைகள்
, தொழில்நுட்பங்கள் மற்றும் Best
Practices
என்னும்சிறந்த செயல்பாடுகள்போன்றவை கற்பிக்கப்பட்டு, முந்தையத் தாக்குதல்களையும்
அதனை எதிர்கொண்ட செயல்பாடுகளின் நல்ல மற்றும் தோல்வியடைந்த செயல்பாடுகளையும் அலசி ஆராய்ந்து
, எதிர்கால முன்னேற்பாட்டைப்
பலப்படுத்தும் வழி முறைகளும் விவாதிக்கப்படுகின்றன
. ஒரு தாக்குதல்
தொடங்கிவிட்டால் அதை உடனடியாக எப்படி எதிர்கொள்வது
, சந்தேகத்துக்குரிய
பேர்வழியை எப்படித் துப்புத்துலக்குவது
, ஒருவருடைய பின்புலத்தை
எப்படி அலசுவது பற்றியும் இணையத் தாக்குதலின் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் பாடங்கள்
எடுக்கப்படுகின்றன
. ஒருவரைப் பற்றிய Profiling என்னும் விவரமிடுதல்
இயலும் விலாவரியாகச் சொல்லித்தரப்படுகிறது
.
ஆண்களின் உடைமாற்றுமிடம் தீவிரவாதிகள்
சுலபமாக நழுவி உள்ளே வரும் இடம் என்பதை ஆராய்ந்து ஃப்ளிப்கார்ட் அலுவலகத்தில் அந்த
இடத்தை செக்யூரிட்டிக்கு அருகில் மாற்றிவிட்டது ஒரு முக்கியமான தடுப்புச்செயல் என்கிறார்
மேஜர் ராஹுல் சூதன்
.
அதெல்லாம் சரி, இந்த ட்ரெயினிங்க்குக்கு
என்ன செலவாகும்
?”
அதுதான் சிக்கல்! ஒருவருக்கு ட்ரெயினிங்
தர
, எக்ஸ்பர்ட்டுகள் கிட்டத்தட்ட 80,000 ரூ முதல் ஒரு
லட்சம் வரை கேட்கிறார்கள்
!”
இதுதான் கொஞ்சம் கவலை தரும் விஷயமாக இருக்கிறது. இந்தச் செலவுக்குப்
பயந்து பல நிறுவனங்கள் தயங்குகின்றன
. ஒரு தாக்குதல்
நடக்கும்போதுதான் அந்தத் தயக்கத்தின் அருமை புரியும்
. ஆனாலும் செலவு
அதிகம்தான் என்பதில் சந்தேகமில்லை
. ஆனால் இந்தப் பயிற்சியைத் தரும் நிறுவனமான
நேட்ரிகா
(Netrika) இன்னொரு கோணத்தை முன்வைக்கிறார்கள்.
இந்தப் பயிற்சியில்
இதுவரை எங்களுக்கு லாபம் ஏதுமில்லை
. ஏனென்றால் பயிற்சி தரும் விற்பன்னர்களை
நாங்கள் அமெரிக்கா அல்லது பிரிட்டனிலிருந்துதான் வரவழைக்கிறோம்
. அவர்கள் ஒரு
நாளைக்கு
3,000 டாலர் (கிட்டத்தட்ட
இரண்டு லட்ச ரூபாய்
) வரை கேட்கிறார்கள். இதனால் சில நிறுவனங்கள்
தங்கள் கம்பெனியிலிருந்து நன்கைந்து பேரை இந்தப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள்
. இந்த நாலைந்துபேர்
பயிற்சியை முடித்து தத்தம் கம்பெனியில் மற்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதே பயிற்சி
(Train the
Trainer)
தந்துவிடுகிறார்கள்.”

நம்மைச் சுற்றி இன்று பரவி வரும் தீவிரவாதக்
கலாசாரம் எத்தனையோ பரிமாணங்களைப் பெற்றுவிட்டது
. அதன் ஆக்டோபஸ்
கைகள் பலவிதங்களில் ஒரு நாட்டையும் மக்களையும் நிறுவனங்களையும் அழிக்க முற்படுகிறது
. உள்நாட்டு வெளி
நாட்டுத் தீவிரவாதம்
, தீவிரவாதத்தின் தோன்றலும் வளர்ச்சியும், வெடிகுண்டைக்கண்டறிதல், மேம்படுத்தாப்பட்ட
வெடிச்சாதனங்கள்
, முக்கியமாக வாகங்களில் பயன்படும் வெடிச்சாதனங்கள், ஒரு தாக்குதலின்
சுழற்சி
, தற்கொலைப்படையின் சித்தாந்தங்கள், தீவிரவாதிகளின்
நடத்தை மற்றும் மன ஓட்டம் என்று பல்வேறு விதப் பாடத்திட்டங்களில் கொடுக்கப்படும் இந்தப்
பயிற்சிகளினால் நாமும் நம் உலகமும் இன்னும் இன்னும் பாதுகப்பான இடமாக மாற வேண்டும்
என்று நாம் விரும்பினாலும்
, தீவிரவாதிகளின் குறுக்குப்புத்தியானது
நம்மைவிட இரண்டடி முன்னேறி விடுகிறது
. தொடர்ந்து அரசும், நிறுவனங்களும்
சாதாரண மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் தீவிரவாதிகளைத் தன்னம்பிக்கையுடன்
எதிர்கொண்டு அழித்து உயிர்களையும் நாட்டையும் காப்பாற்ற முடியும்
.
Leave a Reply