Posted on Leave a comment

வலம் மார்ச் 2017 இதழ் – படைப்புகள் விவரம்

வலம் மார்ச் 2017 (மாசி – பங்குனி) இதழின் படைப்புகள்.

கேமரா கனவுகள் – சுஜாதா தேசிகன்
திராவிட அரசியலின் அராஜக முனை  – ஓகை நடராஜன்
ஹிந்து எனும் வார்த்தையின் ஹரப்பா-வேத வேர் – அரவிந்தன் நீலகண்டன்
நிவேதிதா பிடே: சேவைக்கு விருது – பாலா
டி.கே.மூர்த்தி: காலத்தின் பொக்கிஷம் – மிருதங்கக் கலைஞர் ஈரோடு நாகராஜ்
கலிங்கத்துக் கோயில் பரணி – ஜெ.ராம்கி
கலிங்கத்துக் கோயில்களில் சிற்பங்கள் – வல்லபா ஸ்ரீநிவாசன்
புலாலும் ஆரியமும் – பத்மன்
பட்ஜெட் 2017 – ஜெ.ரகுநாதன்
நீட்டாக ஒரு தேர்வு –  B.K. ராமச்சந்திரன்
கொனாரக் மகாலஷ்மி (சிறுகதை) – ராமசந்திரன் உஷா
கார்ட்டூன்கள் –  ஆர்.ஜி.
ஆதிகவியின் முதல் கவிதை – பெங்களூரு ஸ்ரீகாந்த்

இந்த இதழை மட்டும் ஆன்லைனில் வாங்கி வாசிக்க: http://nammabooks.com/magazines/valam-march

வலம் இ-இதழுக்கான ஆன்லைன் சந்தா செலுத்த –  http://nammabooks.com/valam-one-year-subscription (சந்தா செலுத்துபவர்கள் தங்கள் இமெயில் முகவரியை எங்களுக்கு அனுப்பவேண்டும்.)

வலம் அச்சு இதழுக்கான சந்தா செலுத்த – https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html

Posted on Leave a comment

வலம் மாத இதழ் பிப்ரவரி 2017

வலம் பிப்ரவரி 2017 இதழின் படைப்புகள்:

பசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் பி.ஆர்.ஹரன்

என்ன நடக்குது சபரிமலையிலே…? ஆனந்தன் அமிர்தன் 

ஜல்லிக்கட்டு போராட்டம்: சில உண்மைகள் அரவிந்தன் நீலகண்டன்

 தட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமிச உணவு பரிமாறப்படுகிறது? பீட்டர் ஸிங்கர்; தமிழில்: அனீஷ் கிருஷ்ணன் நாயர்

அதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு ஹாலாஸ்யன்

துபாஷி (அனந்த ரங்கப்பிள்ளை)  பி.எஸ்.நரேந்திரன்

இசக்கியின் கொடுவாய் (சிறுகதை) சுதாகர் கஸ்தூரி

ஃபிடல் காஸ்ட்ரோ: சில உண்மைகள் சந்திர பிரவீண்குமார்

இறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் ஜடாயு

பத்ம விருதுகள் 2017

இராமானுசன் என்னும் சம தர்மன் ஆமருவி தேவநாதன்


மின்னிதழாகப் படிக்க: நம்ம புக்ஸ்

ஆன்லைனில் அச்சு இதழுக்கு சந்தா செலுத்த: www.nhm.in/shop

Posted on Leave a comment

வலம் நவம்பர் 2016 இதழ் – முழுமையான படைப்புகள்

வலம் நவம்பர் 2016 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.




Posted on Leave a comment

தமிழகத்தில் பள்ளிக்கல்வி – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

தமிழகத்தில் பள்ளிக்கல்வி
அனீஷ் கிருஷ்ணன் நாயர்
தமிழகத்தில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பே ஒரு தேய்வழக்காகிவிட்டது. இந்தத் தலைப்பில் ஒரு விவாதத்தை நடத்த தேநீர்க் கடைகளில்கூட யாரும் தயாராக இல்லை. கல்வி வணிக மயமாகிவிட்டது என்று உரத்துக் கூவிவிட்டு அனைவரும் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். வடமாநிலங்களில் நடக்கும் தேர்வு மோசடிகளை நக்கல் செய்யும் வேளையில் நமது மாநிலத்தின் நிலையைக் குறித்து யாரும் யோசிப்பது இல்லை.
வணிக மயம்என்று கூறிவிட்டு நம் கண்முன் தெரியும் நோய்க் குறிகளை அசட்டை செய்ய முடியாது.
கடந்த மாதத்தில் நடந்த இரண்டு நீதிமன்ற வழக்குகள் நமது கல்விமுறையில் உள்ள பிரச்சினைகளை வெளிச்சம் இட்டுக் காட்டுகின்றன. இரண்டு நீதிமன்ற வழக்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. இரண்டுமே தகுதி /நுழைவுத் தேர்வு தொடர்பானவை.
NEET(National
Eligibility
Cum Entrance Test)
மற்றும் TET (Teacher
Eligibility Test)
ஆகியவை குறித்த வழக்குகளையும், அதன் பின்புலத்தையும் ஆராய்ந்தால் நாம் அதிர்ச்சி அடைவோம்.
            I
முதலில் நாம்
NEET
தொடர்பான தீர்ப்பைக் குறித்து பார்ப்போம்.(1) உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி மருத்துவப் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஒன்றினை மத்திய அரசு அறிவித்தது. நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டுதான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அரசு அறிவித்தது. மருத்துவக் கல்வியில் புழங்கும் கோடிகளைப் பற்றி நமக்குத் தெரியும்.
NEET
என்பது நிர்வாக இடங்களில்கூட ஒருவிதமான தர வரிசை உருவாக வழி செய்கிறது. அதாவது நிர்வாகிகள் தங்கள் விருப்பப்படி நன்கொடை வாங்கிக்கொண்டு மாணவர்களைச் சேர்க்க முடியாது. இத்தகைய ஒரு தேர்வை அனைவரும் கைதட்டி வரவேற்றிருக்க வேண்டும்.
ஆனால் நடந்தது என்ன? பெற்றோர்களும் மாணவர்களும் பதறிப் போனார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு இறுதி வரை போராடியது. கருணாநிதி முதல்வர் ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டினார்.
NEET
ல் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குப் பெற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என ஜெயலலிதா தெரிவித்தார்.
ஒரு நுழைவுத் தேர்வை எழுதி அதன் வழியாக மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் நமக்கு என்ன
பிரச்சினை?[
1]. வேறு எங்கும் இல்லாத, மிகச்சிறந்த சமச்சீர்க் கல்வி முறையில் அடிப்படைகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்டவர்களாகிவிட்ட நமது மாணவ மாணவியர் இதில் கலந்து வெற்றி வாகை சூடலாமே! நமது பாடத்திட்டம் மத்திய அரசின் பாடத்திட்டத்தைவிடத் தரமானதாக இருக்கிறது என்றால் தமிழக மாணவர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வு மிக எளிதானதாக அல்லவா இருக்க வேண்டும்?
நமது பாடத்திட்டம் மத்திய அரசின்
CBSE
பாடத்திட்டத்துக்கு இணையாகத் தரமாக இல்லை என்றால் ஏன் அது சீர் செய்யப்படவில்லை? இதையல்லவா அரசும் மக்களும் யோசிக்க வேண்டும். அதனை விட்டு உச்ச நீதிமன்றத்தில் கருணை மனு போடுவதால் என்ன பயன்?
இரண்டாவது வழக்கு இன்னும் வேடிக்கையானது. இது ஆசிரியர் தகுதித் தேர்வைக் குறித்தது.
TET
என்றழைக்கபடும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து தங்களுக்கு விலக்குத் தரவேண்டும் எனக் கோரி, சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் தொடுத்த வழக்கு[2].
RTE (Right To Education)
என்றழைக்கப்படும் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என மத்திய அரசின் அமைப்பான
NCTE
அறிவித்தது(3). இத்தேர்வில் எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களைச் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்,
2010
ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இது அவசியம். இதனை எழுதித் தேர்ச்சி அடைவதில் என்ன சிக்கல்?
சிறுபான்மையினரால் நடத்தப்படாத அரசு உதவி பெறும் பொதுப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளத்திற்கு ஈடான சம்பளத்தை, அரசு உதவி பெறும் சிறுபான்மைப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் பெறுகிறார்கள். ஒரே விதமான சம்பளம், ஒரே
பாடத்திட்டம், ஒரே பதவி. ஆனால் தகுதித் தேர்வில் மட்டும் விதிவிலக்கு வேண்டும்.
இதுதான் கோரிக்கை.
அரசியலமைப்புச் சட்டத்தைச் சுட்டிக் காட்டி, உயர்நீதி மன்றம் வழக்கை ஏற்றது.
[
இத்தகைய தீர்ப்புகள் விளைவுகளைக் குறித்து
Oxford Handbook of The Indian Constitution
நூலில்
K. Vivek Reddy
எழுதிய “Minority
Educational Institutions”
என்னும் கட்டுரை சிறப்பாக விளக்குகிறது.]
ஏனையப் பெரும்பான்மை /தனியார்ப் பள்ளிகளில் பணிபுரியும் பல ஆசிரியர்களும் இந்தத் தீர்ப்பை பொறாமையுடன் எதிர்கொண்டனர். ஒட்டுமொத்தமாக
TET
ஒழித்தால் அவர்களுக்கு நிம்மதி. தரத்தைக் குறித்துச் சிந்தித்தவர்கள் வெகு சிலரே.
தகுதித் தேர்வை எதிர்க்கும் ஆசிரியர்களும் நுழைவுத்தேர்வுகளை எழுத விரும்பாத மாணவர்களும் இணைந்து உருவாக்கும் சித்திரம் புரிந்துகொள்ள மிகவும் சிக்கலானது.
            II
னியார்ப் பள்ளிகளின் தில்லுமுல்லுகள், கோழிப்பண்ணை பாணி பயிற்சி ஆகியவற்றைக் குறித்து ஏராளமான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. வித்தை காட்டும் குரங்கிற்கு வித்தைக்காட்டியால் எத்தகைய துயரங்களும் நீங்காத பாதிப்புகளும் ஏற்படுமோ, அத்தகைய துயரங்களும் பாதிப்புகளும் பெரும்பாலான தனியார்ப் பள்ளி மாணவ மாணவியருக்கு ஏற்படுகின்றன.
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கதை வேறு. சில விதிவிலக்குகளைத் தவிர்த்துவைத்தால் குடுமி அடித்தால் மொட்டைகதைதான். கற்பித்தலைக் கைகழுவி விடுவது, அல்லது மாவட்டக் கல்வி அதிகாரி/ஆட்சித் தலைவர் போன்றவர்கள் தரும் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல், பாடங்களை எடுப்பதற்குப் பதிலாக, தேர்ச்சி அடையத் தேவையான குறுக்கு வழிகளை மாணவர்களுக்குக் காட்டிக்கொடுப்பது.
கடுமையான கல்வி அதிகாரிகள் வந்தால் ஆசிரியர்கள் திருந்துவார்கள் எனச் சிலர் எண்ணுகின்றனர். நடப்பதோ அதற்கு நேர்மாறான விஷயம். உதாரணத்திற்கு, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துமாறு ஓர் ஆங்கில ஆசிரியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், அவர் சில தில்லுமுல்லுகளைச் செய்யத் தொடங்குவார்.
Precise writing
என்னும் சுருக்கி எழுதுதலை ஒரே நிமிடத்தில் கற்றுக்கொடுத்துவிடுவார்.
ஒரு வரியை விட்டு ஒரு வரியை எழுதுஎன்று மாணவர்களிடம் கூறி விடுவார். பத்தி சுருங்குவதற்கு முன்பாகவே மாணவர்களின் அறிவு சுருங்கிவிடும். ஆனால் மதிப்பெண்கள் ஓரளவு கிடைக்கக்கூடும். அத்தகைய மதிப்பெண்களைக் கொண்டு, தேர்ச்சியைக் கொண்டு யாருக்கு என்ன லாபம்?
            III
ள்ளிக் கல்வியில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட வேண்டும் எனில் நாம் பல அடிப்படை விஷயங்களை, நமது அரசியல் சரிநிலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, சரிசெய்ய வேண்டும்.
முதலில் நம்முன் நிற்கும் கேள்வி என்னவென்றால் இன்று எத்தகைய நபர்கள் ஆசிரியர் பணியைத் தேர்வு செய்கின்றனர் என்பதுதான். ஒரு காலத்தில் தலைசிறந்த மாணவர்கள்தான், அவர்களது ஆசிரியர்களால் ஈர்க்கப்பட்டு ஆசிரியப் பணிக்கு வருவார்கள். இன்று உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள எத்தனை ஆசிரியர்கள் பல்கலைக்கழக அளவில் முதன்மை இடங்கள் பெற்றிருந்தார்கள் அல்லது கல்லூரிக் காலத்தில் வகுப்பில் முதன்மை பெற்றிருந்தார்கள் என்று விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியும். கல்லூரியில் நன்றாகப் படிப்பவர்கள் பெரும்பாலும் ஆசிரியர் பணிக்குச் செல்வதில்லை. கல்விப் பணியில் ஆர்வம் உள்ள மாணவர்கள்கூட
B.Ed.
மற்றும் D.T.Ed. கல்வியியல் கல்லூரிக்குச் செல்லத் தயங்குகின்றனர். ஒழுங்காகப் படித்து முடித்தாலும் அரசு வேலை/அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை கிடைக்குமா என்ற எண்ணம்தான் காரணம். குறிப்பாக, அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர்களைப் பணியமர்த்தும் விதம் பிரம்ம ரகசியம்.
அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுக் கல்வியியல் கல்லூரியில் படிக்கும் தலைசிறந்த மாணவர்களுக்குக் கணிசமான உதவித்தொகை தர வேண்டும். மேலும் அனுபவம் உள்ளிட்ட பல காரணங்களைக் கூறாமல் கல்லூரித் தேர்வுகளிலும், தகுதித்தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்றால் அரசுப் பணி கிடைக்க வழிவகை செய்யவேண்டும். ஜாதி, மொழி, மதம், வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல் திறமை அடிப்படையில்
100%
ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டால் மட்டுமே கற்பித்தலின் தரம் கூடும். திறமையான ஆசிரியர் ஒருவர் வேலைக்கு எடுக்கப்பட்டால் ஒரு சமுதாயமே முன்னுக்கு வரும்.
TET
தகுதித் தேர்வை அனைத்துப் பள்ளிகளில் (தனியார் பள்ளி உட்பட) பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் கட்டாயத் தகுதியாக்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கு மற்றொரு தகுதித் தேர்வை வைக்க வேண்டும். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டு. ஆனால் அந்தச் சட்டபாதுகாப்பைக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைக்கவேண்டுமா என்று அவர்கள் யோசிக்கவேண்டும்.
ஆசிரியர்களைத் திறமை அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் தேர்வு செய்வதோடு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் தகுதித் தேர்வு/புத்தாக்கத் தேர்வு எழுதித் தேர்ச்சி அடைவது கட்டாயமாக்கப்படவேண்டும்.
மக்கள்தொகைக்
கணக்கெடுப்பு, ஆதார் அட்டை, தேர்தல் பணிகள் ஆகியவற்றில் ஆசிரியர்களை
ஈடுபடுத்தக்கூடாது. இந்தப்
பணிச்சுமைகள் கற்பித்தலைப் பாதிக்கும். இதனால் உருவாகும் அழுத்தம் வகுப்பறையில் பிரதிபலிக்கும். மேலும் இந்தப் பணிகளை எழுத்தறிவு உள்ள எந்த ஒரு கடைநிலை அரசாங்க ஊழியரும் செய்ய இயலும். இப்பணிக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்துவது, சந்தனக் கட்டைகளைக் கொண்டு அடுப்பை எரிப்பதற்கு ஒப்பானது. மாவட்டக் கல்வி அதிகாரி போன்ற பணி இடங்களைச் சுழற்சி முறையில் மாற்றினால், ஓர் ஆசிரியர் இறுதி வரை ஆசிரியராகப் பெருமிதத்தோடு இருக்கலாம். மாவட்டக் கல்வி அதிகாரி,
CEO /DEO
போன்ற பள்ளிக்கல்வி இயக்குநரகப் பணிகள் போன்ற நிர்வாகப் பணிகளுக்குச் செல்பவர்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் அப்பணிகளில் இருக்கக் கூடாது. ஒருமுறை நிர்வாக பணிக்குச் சென்றால் அடுத்த ஆறாண்டுகளுக்கு மறு நியமனம் கூடாது.
அரசு, பள்ளித் தேர்வு தேர்ச்சி விகிதத்தைக் கண்காணிப்பதால் எந்தப் பயனும் இல்லை.
100%
தேர்ச்சி என்றாலே ஏதோ பிரச்சினை என்றுதான் பொருள். மாறாகக் கற்பித்தல் ஒழுங்காக நடக்கிறதா என்று கண்காணித்தால் போதுமானது. எட்டாம் வகுப்பில் ஒரு பொதுத் தேர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குக் குறுகிய காலப் பயிற்சி அளித்து அவர்களைக் கொண்டு பின்தங்கிய மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்தலாம்.
தனியார்ப் பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ, எதுவானாலும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன என்றால் அவற்றை அரசாங்கமே கைப்பற்றி நடத்த வேண்டும். அவை சேவை நிறுவனங்களே. வணிக நிறுவனங்கள் அல்ல. எனவே அரசாங்கம் தாராளமாக இதனைச் செய்யலாம்.
மாநில அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பாத பெற்றோர்கள் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயாவில் தங்கள் குழந்தைகளை எப்பாடுபட்டாவது சேர்க்க முயல்கின்றனர். இது ஏன் என்பதை மாநிலக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டும்.
பெற்றோர்கள்
Brand Value
ஐக் கொண்டு பள்ளிகளைத் தேர்வு செய்வதால்தான் பல முன்னாள் சாராய வியாபாரிகள் இன்று அதனைவிட லாபகரமாக இருக்கும் இந்தத் தொழிலில் குதித்துள்ளனர். உங்கள் குழந்தையின் கல்வி என்பது வாகனச் சேவை அல்ல. எந்தப் பள்ளியில் சேர்த்தாலும் உங்களது பங்களிப்பு, கவனம் ஆகியவை மட்டுமே உங்கள் குழந்தைகளுக்கு நன்மை தரும்.
மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளுக்குச் செல்வதாலேயே குழந்தைகள் ஆன்மிகப் பேரொளியாகவோ, உத்தம சீலனாகவோ மாறப்போவதில்லை. ஒருவேளை மாணவர்கள் எதிர்த்திசையில் நடக்கும் வாய்ப்பும் உண்டு. ஆன்மிகத்தையும், ஒழுக்கத்தையும் உங்கள் வாழ்வில் இருந்து உங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ளட்டும். தமிழக் கல்வி முறையிலும் பள்ளிகளும் மாற்றங்களைச் செய்யவேண்டிய காலம் கடந்துபோய்விட்டது. இனியும் இந்நிலை நீடித்தால், கல்வி அறிவற்ற ஆனால் பட்டங்கள் பல கொண்ட ஒரு சமுதாயத்தைத்தான் நாம் விட்டுச் செல்வோம்.
அடிக்குறிப்புகள்:

Posted on Leave a comment

காவிரி: நதிநீர்ப் பிரச்சினையின் நான்கு கண்ணிகள் – ஜடாயு

காவிரி: நதிநீர்ப் பிரச்சினையின் நான்கு கண்ணிகள்
    ஜடாயு
மலையும் குகையும் வனங்களும் நிறையும் இந்த எழில், இறைவன் தன் படைப்பு விசித்திரங்களை வரிசைப்படுத்திய கொலு மண்டபம். நெஞ்சை அள்ளும் இந்த அழகெல்லாம் தெய்வக் காவேரியின் பிறப்பிடத்திற்கன்றி வேறு எதற்குப் பொருந்தும்?
புகழ்பெற்ற கன்னடக் கவிஞர் டி.வி.குண்டப்பா
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பல பெங்களூர்வாசிகளின் நாட்களையும் எண்ணங்களையும் ஆக்கிரமித்திருப்பது காவிரிப் பிரச்சினைதான். அடிப்படையில் இப்பிரச்சினையில் நான்கு முக்கியமான கண்ணிகள் உள்ளன. பிரச்சினைக்கான நீண்டகாலத் தீர்வு என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகவே இருக்கும். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1. நீர்ப்பங்கீட்டு உரிமைகள்
வான் பொய்ப்பினும்தான் பொய்யாக் காவேரிஎன்று சங்கத் தமிழ்ப் பாடல் கூறினாலும், பெருமளவு மழைப்பொழிவைச் சார்ந்தே காவிரியின் நீரோட்டம் அமைந்துள்ளது என்பதுதான் யதார்த்தமான உண்மை. பனிமலையில் தோன்றும் கங்கையையும் யமுனையையும் போன்று வற்றாத நீரோட்டம் கொண்ட ஜீவநதியல்ல காவிரி. பல்வேறு சூழலியல் காரணிகளால், மழைப்பொழிவு வருடாவருடம் குறைந்துகொண்டே வரும் நிலையில், காவிரியின் நீர்வரத்தும் குறைந்தே வருகிறது. இந்நிலையில், தேவைக்கும் குறைவாக உள்ள காவிரி நீரைப் பங்கிடுவது என்பது பற்றாக்குறை பட்ஜெட் போடுவது போன்ற விஷயம். சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமே இல்லை. எனவே, இயற்கை வழங்கும் வரமான முழுக்கொடையைப் பகிர்ந்து கொள்வது போலவே, அது தரும் சாபமான பற்றாக்குறையையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே சமநிலை கொண்ட நியாயமான அணுகுமுறையாக இருக்க முடியும்.
இதன் அடிப்படையில்தான் பல பத்தாண்டுகள் இந்தப் பிரச்சினை தொடர்பான வழக்காடல்களுக்குப் பிறகு இந்திய உச்சநீதிமன்றம் ஒரு நீர்ப்பங்கீட்டு விகிதத்தை 2007ம் வருடத் தீர்ப்பின் மூலம் நிர்ணயித்தது. இந்த விகிதத்தை இரு மாநிலங்களுமே முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் வழக்கு இன்னும் தொடர்கிறது.
சரித்திரமும்
பூகோளமும் இணைந்து இந்தப் பங்கீட்டை சிக்கலான ஒன்றாக ஆக்கியிருக்கின்றன
. நிலவியல் ரீதியாகக் காவிரி நதியின் பயணம் தொடங்குமிடமாகவும் மேற்பரப்பாகவும் (upper riparian) உள்ள கர்நாடகம் கடந்த 100 வருடங்களில் நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் நான்கு பிரம்மாண்டமான அணைக்கட்டுகளைக் கட்டி காவிரி நீரைத் தேக்கும் வசதிகளைச் செய்து கொண்டிருக்கிறது. 19ம் நூற்றாண்டு வரை இந்த அணைக்கட்டுகள் இல்லாததால், நதியின் கீழ்ப்பரப்பிலுள்ள தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப் பகுதி, கட்டுப்படுத்தப்படாத காவிரியின் பிரவாகத்தை கல்லணை போன்ற பாரம்பரியத் தடுப்பணைகளில் தேக்கிக் கால்வாய்களின் வழியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்திசோழநாடு சோறுடைத்துஎன்ற பெயரை உண்டாக்கியிருக்கிறது.
வரலாற்று ரீதியாக அப்பகுதியின் ஒட்டுமொத்த வாழ்க்கை, விவசாயம், கலாசாரம் அனைத்தும் காவிரியை நம்பியும் சார்ந்துமே உள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலும் கம்பராமாயணமும் தியாகராஜரின் சங்கீதமும் எல்லாம் காவிரியின் கொடை அன்றி வேறென்ன? உண்மையில் உலகெங்கும் எல்லா நதிகளின் டெல்டாப் பிரதேசங்களுக்கும் இது பொருந்தும். எனவே, எல்லாப் பிரதேசங்களிலும் உள்ள நீர்ப்பங்கீட்டு உடன்படிக்கைகள் இத்தகைய வரலாறுகளை அங்கீகரித்தே உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால், காவிரி நீரின் போக்கைக் கட்டுப்படுத்தும் நிலையில் உள்ள கர்நாடகம், இந்த இயல்பான விஷயத்தை மிகவும் எரிச்சலுடனும் வன்மத்துடனும் அணுகுகிறது. தமிழ்நாட்டின் சட்டபூர்வமான உரிமைக் கோரல், ‘நமதுகாவிரி நீரைத் தமிழ்நாடு அநியாயமாகக் கேட்கிறது என்பதாக இங்குள்ள அரசியல்வாதிகளாலும் கன்னடப் பிரதேசவாதக் குறுங்குழுக்களாலும் தொடர்ந்து சித்திரிக்கப்படுகிறது. இந்த வருடம் தங்கள் மாநிலத்தின் நீர்த் தேவைகள் மற்றும் பற்றாக்குறைகளை விடாமுயற்சியுடன் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டுக்குத்
தரவேண்டிய ஒட்டுமொத்த நீரின் அளவைக் குறைப்பதில் கர்நாடக மாநில அரசு ஓரளவு
வெற்றியும் பெற்றுள்ளது. ஆனாலும், இதனால்
திருப்தியடைவதற்குப் பதிலாகஊசி முனையளவு நிலம் கூடப் பாண்டவர்களுக்குத் தர முடியாதுஎன்று கூறிய துரியோதனனைப் போன்ற ஒரு மனநிலை இங்குள்ள காவிரி போராட்டக் குழுக்களிடையே நிலவுகிறது.
நீதிமன்றம் முன்பே அறிவுறுத்தியபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நீதிமன்றம் பாராளுமன்றத்தையே கட்டுப்படுத்தும் விதமாகச் செயல்படுகிறது என்ற வாதத்தை முன்வைத்து மத்திய அரசு பின்வாங்கியது. நீதிமன்றத்தால்வஞ்சிக்கப்படுவதாககருதும் கர்நாடகத்திற்கு ஓர் ஆறுதலையும் தமிழ்நாட்டின் தரப்புக்கு ஒரு தற்காலிக பின்னடைவையும் இது அளித்துள்ளது.
2. நீர்ப் பயன்பாடு:
கர்நாடகச் சட்டமன்றம் இப்பிரச்சினை தொடர்பாக இயற்றிய தீர்மானத்தில்பெங்களூர் மற்றும் கர்நாடகத்தின் பிற ஊர்களுக்கான குடிநீர்த் தேவை என்பது பாசனத்திற்கும் மற்ற பயன்பாடுகளுக்குமான நீர்த்தேவையை விட அதிமுக்கியமானது. எனவே குடிநீர்த் தேவை போக மேலதிகமாக உள்ள காவிரி நீரை மட்டுமே நீர்ப்பங்கீட்டுக்காக அளிப்பது குறித்து யோசிக்க முடியும். இந்த வருடம் அதற்கான சாத்தியமே இல்லை. எனவே நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த முடியாதுஎன்று குறிப்பிட்டது. மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் தர்க்கபூர்வமாகத் தோன்றினாலும், அவ்வளவு எளிமையான சமன்பாடு அல்ல இது. உண்மையில் நீர்ப்பயன்பாடு குறித்து இரு மாநிலங்களும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயங்களுக்கு இந்தத் தீர்மானம் அடிகோலியிருக்கிறது.
காவிரி நதியின் வழித்தடத்திற்கு மிக அருகில் இருக்கும் மைசூர், மாண்டியா ஹாசன் போன்ற சிறு நகரங்கள் காவிரி நீரைப் பயன்படுத்துவது பிரச்சினையில்லை. அசுரவேகத்தில் வளர்ந்து வரும் பெங்களூர் என்ற பெருநகரத்தின் தேவைக்காக 150 கிமீ தூரத்திற்கும் மேல் குழாய்களைப் பதித்து 500 அடி ஆழத்திலிருந்து இறைக்கப்பட்டு காவிரி நீர் பெங்களூருக்குக் கொண்டு வரப்படுகிறது. காவிரி என்றகாமதேனுஎவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் தரும் என்ற கணக்கில், பெங்களூரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளும் குளங்களும் முற்றிலுமாகச் சீரழிய விடப்பட்டுள்ளன. இந்த நீராதாரங்களை உயிர்ப்பிப்பதுதான் பெங்களூரின் நீண்டகாலத் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாறைகள் நிறைந்த பெங்களூர் பகுதியில் நிலத்தடி நீரைத் தேடிப் பயன்படுத்துவது என்பது அதிக செலவும் குறைந்த பயன்பாட்டு மதிப்பும் கொண்ட ஒரு சமாசாரம்.
நகரக் குடிநீர் வாரியத்தின் மூலமாக விநியோகிக்கப்படும் நீர் முழுவதும்குடிநீர்த் தேவைஎன்று கணக்கிடப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இதில் குறைந்த அளவு நீரே (அதிகபட்சம் 25-30%) உண்மையில் குடிநீருக்காகவும் உணவுக்காவும் பயன்படுகிறது. மற்ற நீர் அனைத்தும் குளியல், சுத்தம் செய்தல், கழிவறைகள், தோட்டங்கள், நகர்சார்ந்த சிறிய தொழில்கள் என்று பலவிதங்களில் செலவழிகிறது. இவற்றில் கணிசமான பயன்பாடுகளுக்கான நீர், குடிநீர் போன்று உயர்தரத்தில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கழிவுநீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரையே நாம் இவற்றுக்காகப் பயன்படுத்த முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பெங்களூர் உட்பட இந்தியாவின் எல்லா நகரங்களிலும் பெரும்பாலான கட்டடங்களும் நீர்விநியோகக் குழாய்களும் இதற்கு வசதியானதாகக் கட்டமைக்கப்படவில்லை. நகரத்தின் பொருளாதார வளர்ச்சியுடன் சேர்த்து இதற்கும் நிதி ஒதுக்கி, கட்டமைப்புகளை மேம்படுத்தி, நீர்ப்பயன்பாட்டைத் தீவிரமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதுதான் தீர்வேயன்றி, விவசாயத்திற்கான நீரை நகரங்களுக்குக் கொண்டு வந்து அதைக் கழிவு நீராக்குவதல்ல என்ற வாதத்தில் நிச்சயம் நியாயம் உள்ளது.
உணவெனப் படுவது நிலத்தொடு நீரேஎன்கிறது புறநானூறு. ஆம், உணவை விளைவிப்பதற்கென்று உள்ள நதிநீரை அவ்வாறே பயன்படுத்துவதுதான் முறையானதும் இயற்கைக்கு முரண்படாததும் ஆகும். ஆனால், இதிலும் அறிவியல்பூர்வமான செயல்பாடும் கட்டுப்பாடும் கண்காணிப்பும் வேண்டும். பயிர்களின் தேர்வும் பாசன முறைகளும் அதை ஒட்டியே அமைய வேண்டும். ஆனால், பல காரணங்களால் அப்படி அமையவில்லை. உதாரணமாக, கர்நாடகத்தின் மைசூர், மாண்டியா பிரதேசங்களில் 1970களுக்கு முன்பு வரை சோளம், கம்பு, கேழ்வரகு (ராகி) மற்றும் பல சிறுதானியங்கள் அதிக அளவில் பயிரிடப் பட்டன. இவற்றை விளைவிப்பதற்கான நீர்த்தேவை மிகவும் குறைவு. ஆனால், தற்போது இந்தப் பயிர்களின் சாகுபடி 50-60% குறைந்து, அதற்குப் பதிலாக, நீடித்த, அதிக அளவிலான நீர்ப்பாசனத்தைக் கோரும் நெல்லும் கரும்புமே அதிக அளவில் பயிரிடப் படுகின்றன. 1970களுடன் ஒப்பிடுகையில் கரும்புச் சாகுபடி 500% அதிகரித்துள்ளது. தஞ்சை காவிரி டெல்டாப் பகுதியிலும் காலம்காலமாக நெல்,கரும்பு ஆகிய பயிர்களே மிகப் பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன.
அரிசிச் சோற்றையே மைய உணவுப் பொருளாகக் கொண்ட ஓர் உணவுக் கலாசாரத்தையே இப்போது நாம் தென்னிந்தியாவில் மிகப் பரவலாகப் பின்பற்றுகிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளாக நமது பயிர் மற்றும் உணவுக் கலாசாரம், பல்வேறு தானியங்களும் இணைந்ததாகத்தான் இருந்து வந்துள்ளது என்றும், மிக அண்மைக்காலத்தில்தான் அது மாறியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இனிவரும் காலங்களில் பாசனத்திற்கான நீர்த்தேவையை நாம் பெருமளவில் கட்டுக்குள் வைத்தே ஆகவேண்டும். அதற்கேற்றபடியான பயிர் மாற்றங்களைக் கொண்டுவந்தேயாக வேண்டும். இல்லையென்றால் குடிநீரா உணவு உற்பத்திக்கான நீரா என்ற வாழ்வாதாரப் போட்டியை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
3. நதியின் நசிவு
குடகிலிருந்து கடல் வரையிலான காவிரியின் பயணத்தில் ஒவ்வொரு இடத்திலும் நாளும் நாளும் நதி நசிந்து தேய்ந்து அழிந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள பிரம்மகிரியில் காவிரி பிறந்து மலைகளினூடாகக் கீழிறங்குகிறது. ஹாரங்கி, சுவர்ணாவதி, ஹேமாவதி, கபினி, லக்ஷ்மணதீர்த்தம் ஆகிய துணை ஆறுகள் அதனுடன் இணைகின்றன. இது பள்ளத்தாக்குப் பகுதி. பின்னர் சமவெளியில் ஷிம்ஸா, அர்காவதி ஆகிய ஆறுகள் இணைகின்றன. இது மைசூர் பீடபூமிப் பகுதி. இவை இரண்டும் கர்நாடகத்தில் உள்ளன. பின்னர் பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகள் காவிரியில் வந்து இணைகின்றன. குளித்தலைக்குப் பிறகு அகண்ட காவிரி. நந்தலாறு, நட்டாறு, வஞ்சியாறு, நூலாறு, அரசலாறு, திருமலைராயன் ஆறு, புத்தாறு என ஏழு கிளைகளில் நூற்றுக்கணக்கான வாய்க்கால்களாக ஓடிக் கடலைச் சென்று அடைகிறது. இது தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப் பகுதி. இந்த மூன்று பகுதிகளிலும் காவிரி மிகப் பெரிய அளவில் மாசுபடுத்தப்பட்டு, சீரழிக்கப்பட்டு வருகிறது.
குடகுமலைக் காடுகளின் அடர்த்தியால் உருவாகும் பெருமழையே காவிரி நீர்ப்பெருக்கிற்கான முதற்காரணம். 19ம் நூற்றாண்டில் இந்த நீடித்த மழைப்பொழிவையே மையமாக வைத்து அங்கு காப்பி எஸ்டேட்கள் உருவாகத் தொடங்கினாலும், காடுகள் பெருமளவில் அழியவில்லை. ஆனால் காப்பிக்கான உலக அளவிலான சந்தையின் வசீகரம் கொஞ்சம் கொஞ்சமாக காடழிப்பு நிகழ வழிவகுத்தது. 1977 முதல் 1997 வரையிலான இருபது வருடங்களில் குடகுமலைக் காடுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் 30% குறைந்துவிட்டன. இதுபோக, மின் கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்காகவும் குடகின் கானகவளம் அழிக்கப்படுகிறது. கடந்த 40 வருட மழைப்பதிவு விவரங்களை எடுத்துப் பார்த்தால், குடகில் மழைப்பருவத்தின் கால அளவும் வருடாவருடம் சுருங்கி வருவது தெரிகிறது. இது நேரடியாகவே காவிரிக்கு வரக்கூடிய மழைநீரின் அளவைப் பாதிக்கிறது.
மைசூர் பீடபூமிப் பகுதியில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களின் உபரி நீர், விவசாயத்தை அதிகரித்துள்ளதோடு பல்வேறு தொழிற்சாலைகளையும் உருவாக்கியுள்ளது. 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள நஞ்சன்கூடு தொழிற்பேட்டை மற்றும் மைசூரைச் சுற்றியுள்ள காகித ஆலைகள், சாராய ஆலைகள், உர உற்பத்தி மையங்கள் அனைத்தும் காவிரி நீரை மாசுபடுத்துகின்றன. காவிரிப் படுகையில்
உள்ள, உலகெங்கிலுமிருந்து பறவைகள் வந்து கூடும் ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயத்தின்
பல பகுதிகள் மீன்களற்றுப் போய்க் கிடக்கின்றன.
காவிரியின் நன்னீரை ஒருபுறமாக எடுத்துக் கொள்ளும் பெங்களூர் மாநகரத்தின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் முழுவதும் மறுபுறமாக விருஷபாவதி ஆற்றின் வழியாகக் காவிரியின் துணைநதியான அர்காவதியில் வந்து கலக்கிறது.
சமீபத்தில் கர்நாடகப் பாசனத்துறை அமைச்சர் பெங்களூரிலிருந்து 1400 மில்லியன் லிட்டர் கழிவுநீர் காவிரியின் வழியாகத் தமிழ்நாட்டுக்கு தினந்தோறும் பாய்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலைச் சட்டசபையில் தெரிவித்தார். தமிழ்நாடு அரசிடமிருந்து இதற்கு எந்த எதிர்வினையும் எழாததில் எந்த ஆச்சரியமுமில்லை. ஏனென்றால் காவிரியை
மாசுபடுத்துவதிலும் சுரண்டுவதிலும் கர்நாடகத்தைவிட முன்னணியில் நிற்கிறது
தமிழ்நாடு. கர்நாடகத்தில் காவிரி நதி ஓடும் தூரம்
316 கிமீ தூரம்தான், அதிலும் பெருமளவு மக்கள் கூட்டமில்லாத மலைப்பகுதிகளில் காவிரி ஓடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 416 கிமீ தூரம், முற்றிலும் சமவெளிப்பகுதிகளில் மக்கள் அதிகம் நிறைந்த ஊர்கள் வழியாகக் காவிரி ஓடுகிறது. சீரழிவும் அதற்கேற்றபடி அதிகம்தான்.
மேட்டூர் நீர்த்தேக்கத்தின் அண்மையிலேயே மெட்ராஸ் அலுமினியம், கெம்ப்லாஸ்ட் சன்மார் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் அத்தனையும் சேர்ந்து அபாயகரமான நச்சுப் பொருட்களை கணக்கு வழக்கின்றிக் காவிரி நீரில் கொட்டி வருகின்றன. பவானி ஆறு சாயப் பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள், காகித ஆலைகளின் நச்சுகளையும்,கீழ் பவானியில் மேட்டுப்பாளையத் தொழிற்சாலைக் கழிவுகளையும் திரட்டிக் கொண்டு வர, எல்லாம் காவிரியில் கலக்கின்றன. அதற்கும் கிழக்கே நொய்யல் ஆற்றில் திருப்பூர் நகரின் ஒட்டுமொத்த சாயம் மற்றும் சலவைத் தொழில்களின் கழிவுகள் சேர்ந்து அந்த ஆறே உயிரியல் ரீதியாக இறந்தது (biologically dead)
என்று கருதும் அளவுக்கு மாசுபடுத்தப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, கரூர், மேட்டுப்பாளையம், கோவை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் சேர்ந்து மொத்தமாகத் தினந்தோறும் 270 மில்லியன் லிட்டர் நகரக் கழிவுகளை காவிரியின் வழித்தடத்தில் கொட்டுகின்றன. இந்தக் கழிவுகளை உருவாக்கும் சிறிதும் பெரிதுமான வர்த்தக நிறுவனங்களும் நகராட்சிகளும் பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பிறகும் கழிவுகளைச் சுத்திகரித்துப் பின் நீரில் விடுவதற்காகக் கட்டமைப்புகளை உருவாக்கவே இல்லை.
இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, காவிரிப் படுகையில் மணல்கொள்ளை அரசியல்வாதிகள் மற்றும் கிரிமினல்களின் கூட்டு மாஃபியாவினால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்த மணல்கொள்ளை இன்னும் சில காலத்திற்கு இப்படியே தொடர்ந்தால் காவிரி நதி, ஒரு நதியாகத் தமிழ்நாட்டில் தன் ஜீவனைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்றே ஐயம் ஏற்படுகிறது. கர்நாடகம் காவிரி நீர்மீது தனக்கு நியாயமாக உள்ளதை விட அதிக உரிமையை ஒருவேளை கோரும் என்றால், தமிழ்நாடு அளவுக்கு மோசமாக காவிரியைத் தங்கள் மாநிலம் சீரழிக்கவில்லை என்பதையே ஒரு தார்மீகக் காரணமாகச் சொல்லக் கூடும். அது உண்மையும் கூட.
இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும்போதுதான் காவிரி நதிநீர்ப்பங்கீடு என்பதை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும் அணுகுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பது புரியும். நதிநீர் என்பது இயந்திரத்தனமாகப் பங்குவைக்கும் சொத்து அல்ல. அது ஜீவனும் உயிர்த்துடிப்பும் உள்ள ஓர் இயற்கை மண்டலம். ஆனால் நீர்ப்பங்கீட்டு வழக்கை விசாரிக்கும் நமது உச்சநீதிமன்றம் கூட இந்தக் காரணிகள் எதையும் கணக்கில் கொள்ளாமல், சாதாரண வருடத்தில் இத்தனை டி.எம்.சி தண்ணீர், பற்றாக்குறை வருடத்தில் அத்தனை டி.எம்.சி. தண்ணீர் என்று கணக்குப் போடுவதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
4. தேச நல்லுறவு
1991ம் வருடம் காங்கிரஸ் தலைவர் பங்கராப்பா முதல்வராக இருந்தபோது காவிரிப் பிரச்சினையை வைத்து பெங்களூரில் பெரும் கலவரம் நடந்தது. தமிழர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன, தாக்குதல்களும் நிகழ்ந்தன. இந்த வருடம் செப்டம்பரில் சில வாரங்கள் ஏற்பட்ட நிலைமை அந்த அளவுக்கு மோசமாகவில்லைதான். ஆனால் அதே காவிரிப் பிரச்சினையை முன்வைத்து இப்போது உண்டான பதற்றத்தையும் பீதியையும், பதினெட்டு வருடங்களாக வாழ்ந்துவரும் இந்த அழகிய நகரத்தில் நான் முன்னெப்போதும் உணர்ந்ததாக நினைவில்லை.
கேபிள் தொலைக்காட்சியும் இணையமும் சமூக ஊடகங்களும் உடனுக்குடனாக உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் ஒரு பக்கச் சார்பான செய்தி அலசல்களையும் வதந்திகளையும் தொடர்ந்து அளித்துக் கொண்டிருந்தன. இதுவும் கலவர மனநிலையைப் பரப்புவதற்குக் காரணமாகியிருக்கலாம் என்பதைப் புறந்தள்ளிவிடமுடியாது.
நதிநீர்ப்பங்கீட்டு வழக்கில் தமிழ்நாட்டுக்குச் சாதகமாக வரும் தீர்ப்பை முகாந்திரமாக்கி உடனடியாக அதைத் தமிழர்கள் மீதான வெறுப்புணர்வாக மாற்றத் திட்டமிட்டு வேலை செய்யும் கன்னட பிரதேசவாதக் குறுங்குழுக்கள் இங்கு கணிசமான அளவில் உள்ளன. இவற்றுடன் சமூகவிரோதிகளும் இணைந்து இம்முறை பெரிய அளவிலான கலவரத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டனர். கே.பி.என் பஸ்கள் எரிக்கப்பட்டதும், தமிழ்நாட்டுப் பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டதும், தமிழர்களுக்கு உரிமையான சில வர்த்தக நிறுவனங்கள் உடைக்கப்பட்டதும் பெங்களூரின் மீது விழுந்துவிட்ட மோசமான கரும்புள்ளிகள். இதேபோல, தமிழகக் குறுங்குழுக்களால் ராமேஸ்வரத்தில் கன்னட யாத்ரீகர்கள் தாக்கப்பட்டதும், சென்னையின் பாரம்பரிய உணவகமான உட்லண்ட்ஸ் தாக்குதலுக்குள்ளானதும் தமிழ்நாட்டின் மீதான ஒரு கரும்புள்ளியே.
இரு மாநிலங்களிலும் பிரதேசவாதக் குறுங்குழுக்கள் உண்டென்றாலும், அவற்றுக்கிடையேயுள்ள முக்கியமான ஒரு வேறுபாடு கவனத்திற்குரியது. கர்நாடகத்தில் அதிகபட்சம் அது கன்னட மொழிவெறி, பெருநகர லும்பன்களின் அடாவடி என்ற அளவில் நின்று விடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உடனடியாக இந்திய தேசிய விரோதமாகவும் தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினைவாதப் பிரசாரமாகவும் தூபம் போட்டு வளர்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரிவினைவாதம், இஸ்லாமியப் பயங்கரவாதம், விடுதலைப் புலிகள், மாவோயிசப் பயங்கரவாதம் இவற்றுக்கெல்லாம் ஆதரவுக் குரல்கொடுக்கும் இந்தக் குறுங்குழுக்கள் காவிரிப் பிரச்சினையிலும் உட்புகுந்து நச்சுக் கருத்துக்களைத் தூவும் சூழல் நிலவுகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரிய போக்கு. இந்தத் தமிழ்த்தேசியக் குறுங்குழுக்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படவேண்டும்.
கர்நாடகம்தமிழ்நாடு இடையே ஓசூர் வழியான வாகனப் போக்குவரத்து சில வாரங்களுக்கு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுக் கிடந்ததும், எல்லைக் காவல் படையினர் அத்திப்பள்ளி செக்போஸ்டில் பாதுகாவலாக நின்றதும் கொடுங்கனவாக எண்ணி மறந்து விடவேண்டியவை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இவையெல்லாம் மிகச்சிறிய விதிவிலக்கான சம்பவங்களே.
இவற்றுக்கு நடுவில் இந்த தேசத்தின் உணர்வுபூர்வமான ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடந்தேறின – ராமேஸ்வரத்திற்கு
வந்த கன்னட யாத்ரீகர்களை இந்து மக்கள் கட்சியினர் பூர்ண கும்பம் கொடுத்து
வரவற்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்ற கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளுக்கு
தமிழ்நாடு அரசு முழு பாதுகாப்பு அளித்தது. தும்கூரில், தமிழ்நாட்டு லாரி
ஓட்டுநர்கள் 250 பேரை 2-3 நாட்கள் தங்கவைத்து உணவளித்து அவர்களது வாகனங்களுக்கும்
பாதுகாப்பளித்தனர் அந்த ஊரின் கன்னடச் சகோதரர்கள்!
2007ல் கர்நாடகத்தில் ஆட்சி செய்த பாஜகஜனதாதள அரசு எந்தப் பெரிய கலவரங்களும் பதற்றங்களும் ஏற்படாமல் சிறு சலசலப்புகளுடன் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடும் சம்பிரதாயத்தைக் கையாண்டது. ஆனால், இப்போதைய காங்கிரஸ் மாநில அரசும், கர்நாடகத்தில் உள்ள பாஜக உள்ளிட்ட