
இரண்டு கைகளிலும் புத்தகங்கள் நிரம்பிய பைகளுடன் செல்லும்
வாசகர்களை இந்த ஆண்டு காண முடியவில்லை.
வாசகர்களை இந்த ஆண்டு காண முடியவில்லை.
– எழுத்தாளர் பா.ராகவனின் முகநூல் பதிவு.
42வது சென்னை புத்தகக் காட்சி கடந்த மாதம்
20ம் தேதி அன்று நிறைவுற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பதினேழு நாட்கள் நடைபெற்ற
இப்புத்தகக் கண்காட்சியில் பதினெட்டு கோடி ரூபாய் அளவில் விற்பனை நடைபெற்றிருப்பதாகக்
கூறப்பட்டது. ஏறக்குறைய 11 லட்சம் நபர்கள் (கவனியுங்கள், வாசகர்கள் அல்லர்) வந்து சென்றிருக்கிறார்கள்.
20ம் தேதி அன்று நிறைவுற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பதினேழு நாட்கள் நடைபெற்ற
இப்புத்தகக் கண்காட்சியில் பதினெட்டு கோடி ரூபாய் அளவில் விற்பனை நடைபெற்றிருப்பதாகக்
கூறப்பட்டது. ஏறக்குறைய 11 லட்சம் நபர்கள் (கவனியுங்கள், வாசகர்கள் அல்லர்) வந்து சென்றிருக்கிறார்கள்.
எண்ணிக்கையில் 800-ஐ நெருங்கிய அரங்குகள்.
ஒரு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி நூல்கள்; உண்மையிலேயே பிரம்மாண்டம்தான். ஏற்பாடு
செய்வது மட்டுமல்ல – பெரிய பிரச்சனைகள் ஏதும் இன்றி நடத்தி முடிப்பதும் சவால்தான்.
அதனைச் சாதித்த பபாசி (Bapasi) உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
ஒரு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி நூல்கள்; உண்மையிலேயே பிரம்மாண்டம்தான். ஏற்பாடு
செய்வது மட்டுமல்ல – பெரிய பிரச்சனைகள் ஏதும் இன்றி நடத்தி முடிப்பதும் சவால்தான்.
அதனைச் சாதித்த பபாசி (Bapasi) உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
பொங்கல் பண்டிகையோடு புத்தகத் திருவிழாவும்
இணைந்து, வாசிக்கும் வழக்கம் உடையவரை வசீகரிக்கின்றது. சென்னை மட்டுமல்லாமல் மதுரை,
ஈரோடு, திருப்பூர் மற்றும் நெய்வேலி என்ற மற்ற பெருநகரங்களிலும் ஆண்டுதோறும் புத்தகக்
கண்காட்சிகள் நடைபெற்றவண்ணம் உள்ளன. மாநகரங்கள் மட்டுமல்லாது திருவண்ணாமலை, செங்கம்
எனச் சிறுநகரங்களில் கூட புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன என்றாலும், சென்னை புத்தகக்
கண்காட்சி பல்வேறு வகைகளில் சிறப்பு உடையது.
இணைந்து, வாசிக்கும் வழக்கம் உடையவரை வசீகரிக்கின்றது. சென்னை மட்டுமல்லாமல் மதுரை,
ஈரோடு, திருப்பூர் மற்றும் நெய்வேலி என்ற மற்ற பெருநகரங்களிலும் ஆண்டுதோறும் புத்தகக்
கண்காட்சிகள் நடைபெற்றவண்ணம் உள்ளன. மாநகரங்கள் மட்டுமல்லாது திருவண்ணாமலை, செங்கம்
எனச் சிறுநகரங்களில் கூட புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன என்றாலும், சென்னை புத்தகக்
கண்காட்சி பல்வேறு வகைகளில் சிறப்பு உடையது.
·
தமிழகத்தின் 99% பதிப்பகங்கள் இடம்பெறுகின்றன.
தமிழகத்தின் 99% பதிப்பகங்கள் இடம்பெறுகின்றன.
·
ஒப்பீட்டளவில் பிற புத்தகக் கண்காட்சிகளைவிட சென்னை புத்தகக்
காட்சியினையொட்டி பல பதிப்பகங்கள் புதிய நூல்களை பதிப்பிக்கின்றன.
ஒப்பீட்டளவில் பிற புத்தகக் கண்காட்சிகளைவிட சென்னை புத்தகக்
காட்சியினையொட்டி பல பதிப்பகங்கள் புதிய நூல்களை பதிப்பிக்கின்றன.
·
ஒரு பதிப்பகத்தின் ஒட்டுமொத்த நூல்களையும் (அச்சில் உள்ளனவற்றை)
காணமுடியும்.
ஒரு பதிப்பகத்தின் ஒட்டுமொத்த நூல்களையும் (அச்சில் உள்ளனவற்றை)
காணமுடியும்.
·
புத்தகங்களின் பின் அட்டையில் மட்டுமே பார்த்த எழுத்தாளர்களைச்
சந்திக்கவும், உரையாடவும் சென்னை புத்தகக் காட்சி வாய்ப்பளிக்கிறது.
புத்தகங்களின் பின் அட்டையில் மட்டுமே பார்த்த எழுத்தாளர்களைச்
சந்திக்கவும், உரையாடவும் சென்னை புத்தகக் காட்சி வாய்ப்பளிக்கிறது.
மேற்கூறப்பட்ட காரணங்கள் தவிர்த்து ஒவ்வொரு
வாசகனுக்கும் சென்னை புத்தகக் காட்சிக்கு வருவதற்கான அந்தரங்கமான காரணங்கள் இருக்கக்கூடும்.
ஒரு கோடி புத்தகங்களூடே உலாவுவதே அலாதியான அனுபவம்தான்.
வாசகனுக்கும் சென்னை புத்தகக் காட்சிக்கு வருவதற்கான அந்தரங்கமான காரணங்கள் இருக்கக்கூடும்.
ஒரு கோடி புத்தகங்களூடே உலாவுவதே அலாதியான அனுபவம்தான்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ – மைதானத்தில் நடைபெற்ற
ஜனவரி 04 முதல் 20 வரையிலான ‘மாரத்தான் புத்தகக் கண்காட்சி’ பல பாடங்களைத் தந்துவிட்டுச்
சென்றுள்ளது. எவ்வளவு பெரிய புத்தகக் காதலராயினும் 700க்கும் மேற்பட்ட அரங்குகளை முழுமையாகப்
பார்த்துவிட முடியாது. சென்னை வாழ் மக்கள் வேண்டுமானால் மூன்று நாள்கள் விஜயம் செய்து
முழுமையாகப் பார்க்கலாம். பிற அயலூர் வாசிகள், தங்குமிடம், உணவுச்செலவு ஆகியவற்றை எதிர்கொள்ள
நேரிடும். அதற்கு வீட்டில் இருந்தவாறே நூலை இணையத்தில் தருவித்துவிடலாம். எனவே ஸ்டால்களின்
எண்ணிக்கையில் கட்டுப்பாடு வேண்டும்.
ஜனவரி 04 முதல் 20 வரையிலான ‘மாரத்தான் புத்தகக் கண்காட்சி’ பல பாடங்களைத் தந்துவிட்டுச்
சென்றுள்ளது. எவ்வளவு பெரிய புத்தகக் காதலராயினும் 700க்கும் மேற்பட்ட அரங்குகளை முழுமையாகப்
பார்த்துவிட முடியாது. சென்னை வாழ் மக்கள் வேண்டுமானால் மூன்று நாள்கள் விஜயம் செய்து
முழுமையாகப் பார்க்கலாம். பிற அயலூர் வாசிகள், தங்குமிடம், உணவுச்செலவு ஆகியவற்றை எதிர்கொள்ள
நேரிடும். அதற்கு வீட்டில் இருந்தவாறே நூலை இணையத்தில் தருவித்துவிடலாம். எனவே ஸ்டால்களின்
எண்ணிக்கையில் கட்டுப்பாடு வேண்டும்.
துறைவாரியாக ஸ்டால்களை ஒதுக்குவதைக் குறித்துச்
சிந்திக்கலாம். ஆங்கில நூல்கள், குழந்தைகள் நூல்கள், பல்கலைப் பதிப்புகள், கல்விப்புல
நூல்கள் எனத் தனிவரிசைகள் அமைப்பதைப் பற்றி ஆலோசிக்கலாம். இதற்கென வரும் வாசகர்கள்
எளிதாக நூல்களை வாங்குவதோடு, பிறருக்குத் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும்.
சிந்திக்கலாம். ஆங்கில நூல்கள், குழந்தைகள் நூல்கள், பல்கலைப் பதிப்புகள், கல்விப்புல
நூல்கள் எனத் தனிவரிசைகள் அமைப்பதைப் பற்றி ஆலோசிக்கலாம். இதற்கென வரும் வாசகர்கள்
எளிதாக நூல்களை வாங்குவதோடு, பிறருக்குத் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும்.
இணையத்தில் நுழைவுச்சீட்டை பெறும் செயலியை
அளித்த பபாசி, இறுதிவரை 2019 ஆண்டிற்குரிய புத்தக ஸ்டால்களின் பெயர் – எண் இணைந்த அட்டவணையைப்
பதிவிடவேயில்லை. தீவிர வாசகன் பதிப்பக ஸ்டால்களை தேடுவானேயன்றி விற்பனையாளர்களை அல்ல.
தம் விருப்பத்திற்குரிய எழுத்தாளரை – அவருடைய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களுடனே இணைத்துத்தான்
அடையாளம் காண்கிறான். 2018-ற்குப் பிறகு அப்டேட் செய்யப்படாத பதிப்பகத்துடன் கூடிய
ஸ்டால் எண் பட்டியல் பெரும் சோர்வைத் தந்தது. அரங்கு நுழைவாயிலில் கிடைக்கும் பட்டியலை
வைத்துத் தேடுவது நேர விரயத்தையே ஏற்படுத்திற்று.
அளித்த பபாசி, இறுதிவரை 2019 ஆண்டிற்குரிய புத்தக ஸ்டால்களின் பெயர் – எண் இணைந்த அட்டவணையைப்
பதிவிடவேயில்லை. தீவிர வாசகன் பதிப்பக ஸ்டால்களை தேடுவானேயன்றி விற்பனையாளர்களை அல்ல.
தம் விருப்பத்திற்குரிய எழுத்தாளரை – அவருடைய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களுடனே இணைத்துத்தான்
அடையாளம் காண்கிறான். 2018-ற்குப் பிறகு அப்டேட் செய்யப்படாத பதிப்பகத்துடன் கூடிய
ஸ்டால் எண் பட்டியல் பெரும் சோர்வைத் தந்தது. அரங்கு நுழைவாயிலில் கிடைக்கும் பட்டியலை
வைத்துத் தேடுவது நேர விரயத்தையே ஏற்படுத்திற்று.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து
550 ஆசிரியர்கள் பள்ளிப் பேருந்துகளில் வந்தார்கள். பேருந்தை நிறுத்தியதற்கும் – அரங்கிற்கும்
இடையே சுத்தமாய் முக்கால் கிலோமீட்டர் தூரம். சொந்த உபயோகத்திற்கும், பள்ளி நூலகங்களுக்கும்
வாங்கிய புத்தகப் பொதிகளைத் தோள் வலிக்கச் சுமந்தவர்கள் பபாசியைத் திட்டவே செய்தனர்.
இக்குறைபாடு தவிர்க்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களின் விலையையும், கழிப்பிடங்களின்
சுகாதாரமின்மையையும் பற்றி எல்லா புத்தகக் காட்சிகள் மீதும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும்
ஒன்று. இம்முறையும் அது தொடர்ந்தது. இவ்விரண்டு குறைபாடுகளையும் தவிர்க்கவே முடியாது
என்ற முடிவிற்கு பபாசி வந்துவிட்டதா என்று தெரியவில்லை.
550 ஆசிரியர்கள் பள்ளிப் பேருந்துகளில் வந்தார்கள். பேருந்தை நிறுத்தியதற்கும் – அரங்கிற்கும்
இடையே சுத்தமாய் முக்கால் கிலோமீட்டர் தூரம். சொந்த உபயோகத்திற்கும், பள்ளி நூலகங்களுக்கும்
வாங்கிய புத்தகப் பொதிகளைத் தோள் வலிக்கச் சுமந்தவர்கள் பபாசியைத் திட்டவே செய்தனர்.
இக்குறைபாடு தவிர்க்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களின் விலையையும், கழிப்பிடங்களின்
சுகாதாரமின்மையையும் பற்றி எல்லா புத்தகக் காட்சிகள் மீதும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும்
ஒன்று. இம்முறையும் அது தொடர்ந்தது. இவ்விரண்டு குறைபாடுகளையும் தவிர்க்கவே முடியாது
என்ற முடிவிற்கு பபாசி வந்துவிட்டதா என்று தெரியவில்லை.
சென்னை புத்தகக் காட்சி மாலை நேரச் சொற்பொழிவுகள்
எந்த வகையில் நூல்களின் விற்பனை எண்ணிக்கை உயர்த்தப் பயன்படுகின்றன என எழுத்தாளரும்,
விற்பனையாளருமான கெழுதகை நண்பர் கேள்வி எழுப்பியதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
‘நிலையவித்துவான்கள்’ என்றொரு கோஷ்டி அரசு வானொலி நிலையங்களில் உண்டு. நிகழ்ச்சியில்
இடைவெளி நேரங்களை இட்டு நிரப்பப் பயன்படுவார்கள். அதைப்போல ஸ்டால்களிடையே நடந்து களைத்த
பார்வையாளர்கள் காலாற அமரும் இடமாகவே பேச்சாளர் அரங்கங்கள் உள்ளன. வெற்றுப் பேச்சில்
ருசி கண்ட தமிழ் கூறும் நல்லுலகின் நீட்சியாக அவ்விடம் இருப்பதை விடுத்து – விருது
பெற்ற நூல்கள், ஆசிரியர்களின் படங்கள், கைவசம் உள்ள பழைய முதற்பதிப்பு நூல்கள் என வரலாற்றுப்
பயணத்திற்கான வாய்ப்பாக அவ்வரங்கம் மாற்றப்படுவதைக் குறித்து ஆராயலாம். கண்மணி குணசேகரன்
பேசலாம் – எழுத்தாளர்! கமல்ஹாசன் போன்ற போலிகள் வாசிப்பைக் குறித்துப் பேசுமளவிற்கு
தமிழக அறிவு உலகம் வறண்டுவிடவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை கமலின் சினிமா பிரபல்யம்
புத்தகக் காட்சியை நோக்கி மக்களை ஈர்க்கப் பயன்படும் என நினைப்பார்களேயானால், அடுத்த
ஆண்டு கீர்த்தி சுரேஷ் போன்ற ‘பளபள’ பரிந்துரைகள் என்னிடம் உள்ளன.
எந்த வகையில் நூல்களின் விற்பனை எண்ணிக்கை உயர்த்தப் பயன்படுகின்றன என எழுத்தாளரும்,
விற்பனையாளருமான கெழுதகை நண்பர் கேள்வி எழுப்பியதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
‘நிலையவித்துவான்கள்’ என்றொரு கோஷ்டி அரசு வானொலி நிலையங்களில் உண்டு. நிகழ்ச்சியில்
இடைவெளி நேரங்களை இட்டு நிரப்பப் பயன்படுவார்கள். அதைப்போல ஸ்டால்களிடையே நடந்து களைத்த
பார்வையாளர்கள் காலாற அமரும் இடமாகவே பேச்சாளர் அரங்கங்கள் உள்ளன. வெற்றுப் பேச்சில்
ருசி கண்ட தமிழ் கூறும் நல்லுலகின் நீட்சியாக அவ்விடம் இருப்பதை விடுத்து – விருது
பெற்ற நூல்கள், ஆசிரியர்களின் படங்கள், கைவசம் உள்ள பழைய முதற்பதிப்பு நூல்கள் என வரலாற்றுப்
பயணத்திற்கான வாய்ப்பாக அவ்வரங்கம் மாற்றப்படுவதைக் குறித்து ஆராயலாம். கண்மணி குணசேகரன்
பேசலாம் – எழுத்தாளர்! கமல்ஹாசன் போன்ற போலிகள் வாசிப்பைக் குறித்துப் பேசுமளவிற்கு
தமிழக அறிவு உலகம் வறண்டுவிடவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை கமலின் சினிமா பிரபல்யம்
புத்தகக் காட்சியை நோக்கி மக்களை ஈர்க்கப் பயன்படும் என நினைப்பார்களேயானால், அடுத்த
ஆண்டு கீர்த்தி சுரேஷ் போன்ற ‘பளபள’ பரிந்துரைகள் என்னிடம் உள்ளன.
போதாமைகள் பல இருப்பினும் வாசிப்பை –
பதிப்புவகை உயிர்ப்புடன் வைத்திருப்பவை புத்தகக் காட்சிகளே. 500 முதல் 1000 பிரதிகள்
வரை அச்சிட்டு தமிழ்நாடு அரசின் நூலகக் கொள்முதலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இயங்கிய
அவல நிலையைப் புத்தக் காட்சிகள் மாற்றியுள்ளன. வெள்ளைத்தாளை விற்கும் கடைக்கு வங்கிகள்
கடன்தரும். ஆனால், பதிப்பகங்களுக்குச் சல்லிக்காசு தராது. இச்சூழல் புத்தகக் காட்சிகள்
மேலும் வலுப்பெற்றுப் பரவலாகி வாசிப்பை, பதிப்புலகை மேம்படுத்த வேண்டும்.
பதிப்புவகை உயிர்ப்புடன் வைத்திருப்பவை புத்தகக் காட்சிகளே. 500 முதல் 1000 பிரதிகள்
வரை அச்சிட்டு தமிழ்நாடு அரசின் நூலகக் கொள்முதலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இயங்கிய
அவல நிலையைப் புத்தக் காட்சிகள் மாற்றியுள்ளன. வெள்ளைத்தாளை விற்கும் கடைக்கு வங்கிகள்
கடன்தரும். ஆனால், பதிப்பகங்களுக்குச் சல்லிக்காசு தராது. இச்சூழல் புத்தகக் காட்சிகள்
மேலும் வலுப்பெற்றுப் பரவலாகி வாசிப்பை, பதிப்புலகை மேம்படுத்த வேண்டும்.
பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ‘பார்வையாளர்கள்’
42வது புத்தகக்காட்சிக்கு வந்திருப்பினும் எத்தனைபேர் அவர்களுள் வாசகர்கள், அதாவது
நூல்களை வாங்கியவர்கள் என்பது கேள்விக்குறியே. மேலும் 18 கோடி ரூபாய் நூல் விற்பனைத்
தொகை என்பதும் மகிழ்விற்குரியதாகுமா எனத் தெரியவில்லை. விற்பனையான நூல்களுள் சோதிடம்,
சமையல், கோலம், குண்டாவது (அ) ஒல்லியாவது எப்படி வகையறாக்கள் இலக்கியத்தை வளப்படுத்துவன
ஆகாது. மேற்படி நூல்களை வாங்குபவர்கள் நீடித்த வாசகர்களாகமாட்டார்கள். இவற்றின் அடிப்படையில்
பார்க்கும்போது பதிப்பகங்கள் நித்யகண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலேயே இயங்கி வருகின்றன
என்பதே உண்மை.
42வது புத்தகக்காட்சிக்கு வந்திருப்பினும் எத்தனைபேர் அவர்களுள் வாசகர்கள், அதாவது
நூல்களை வாங்கியவர்கள் என்பது கேள்விக்குறியே. மேலும் 18 கோடி ரூபாய் நூல் விற்பனைத்
தொகை என்பதும் மகிழ்விற்குரியதாகுமா எனத் தெரியவில்லை. விற்பனையான நூல்களுள் சோதிடம்,
சமையல், கோலம், குண்டாவது (அ) ஒல்லியாவது எப்படி வகையறாக்கள் இலக்கியத்தை வளப்படுத்துவன
ஆகாது. மேற்படி நூல்களை வாங்குபவர்கள் நீடித்த வாசகர்களாகமாட்டார்கள். இவற்றின் அடிப்படையில்
பார்க்கும்போது பதிப்பகங்கள் நித்யகண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலேயே இயங்கி வருகின்றன
என்பதே உண்மை.
நூலகக்கொள்முதல் என்பது விசித்திரமான
சூத்திரங்களுக்குட்பட்டது. தமிழ் எங்கள் மூச்சு எனக் கூறிக்கொள்ளும் அரசு, ஆங்கில நூல்களுக்கே
அதிக அடக்கவிலையை நிர்ணயிக்கின்றது. மேலும் தனது விருப்பத்திற்குரிய கதாநாயகனின் திரைப்படத்தை
முதற்காட்சியிலேயே பார்க்க ஆயிரம் ரூபாய் செலவழிக்கத் தயங்காத இளைஞன், ஒரு லிட்டர்
பெட்ரோல் விலைக்கும் குறைவான புத்தகத்தை வாங்குவதில் கணக்குப் பார்ப்பதும் அவலமே!
சூத்திரங்களுக்குட்பட்டது. தமிழ் எங்கள் மூச்சு எனக் கூறிக்கொள்ளும் அரசு, ஆங்கில நூல்களுக்கே
அதிக அடக்கவிலையை நிர்ணயிக்கின்றது. மேலும் தனது விருப்பத்திற்குரிய கதாநாயகனின் திரைப்படத்தை
முதற்காட்சியிலேயே பார்க்க ஆயிரம் ரூபாய் செலவழிக்கத் தயங்காத இளைஞன், ஒரு லிட்டர்
பெட்ரோல் விலைக்கும் குறைவான புத்தகத்தை வாங்குவதில் கணக்குப் பார்ப்பதும் அவலமே!
உணவு விடுதியில் அமர்ந்து அம்புலிமாமா
கதைக்கு ஒப்பான ஹாரிபாட்டரை எழுதிய ரவ்லிங், இங்கிலாந்து அரசிக்கு நிகராக வருமான வரிகட்டும்
அளவிற்கு சம்பாதித்தார். ஆனால் நோபல் பரிசு பெறத் தகுதியான படைப்புகளை அளித்த அசோகமித்திரன்
சாகும்வரை வாடகை ஆட்டோவில்தான் பவனித்தார். ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி சுமார்
1000 பக்க அளவில் ‘யதி’ என்ற அற்புத நாவலைத் தந்த பா.ராகவன் தன் லௌகீகத் தேவைகளுக்கு
தொலைக்காட்சித் தொடர் வசனம் எழுதவேண்டியுள்ளது!
கதைக்கு ஒப்பான ஹாரிபாட்டரை எழுதிய ரவ்லிங், இங்கிலாந்து அரசிக்கு நிகராக வருமான வரிகட்டும்
அளவிற்கு சம்பாதித்தார். ஆனால் நோபல் பரிசு பெறத் தகுதியான படைப்புகளை அளித்த அசோகமித்திரன்
சாகும்வரை வாடகை ஆட்டோவில்தான் பவனித்தார். ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி சுமார்
1000 பக்க அளவில் ‘யதி’ என்ற அற்புத நாவலைத் தந்த பா.ராகவன் தன் லௌகீகத் தேவைகளுக்கு
தொலைக்காட்சித் தொடர் வசனம் எழுதவேண்டியுள்ளது!
எனவே, புத்தகக்காட்சிகள் இன்னும் பெருக
வேண்டும். வாசகர்கள் வருகை தந்து நூல்களை வாங்கி, பதிப்பகங்களை (அதன் மூலமாக) எழுத்தாளர்களை
ஆதரிக்க வேண்டும். புத்தக வாசிப்பு, தமிழர்களின் பண்பாட்டின் அங்கமாக மாறவேண்டும்.
வேண்டும். வாசகர்கள் வருகை தந்து நூல்களை வாங்கி, பதிப்பகங்களை (அதன் மூலமாக) எழுத்தாளர்களை
ஆதரிக்க வேண்டும். புத்தக வாசிப்பு, தமிழர்களின் பண்பாட்டின் அங்கமாக மாறவேண்டும்.
சென்னைப் புத்தகக்காட்சி வெற்றியா – தோல்வியா
என நிர்ணயிக்கத் தேவையில்லை. பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.
கடந்த நூற்றாண்டில் தங்கத் தட்டில் சாப்பிடுமளவிற்குச் சம்பாதித்த தமிழ்த்திரையுலகின்
முதல் சூப்பர்ஸ்டார் பெயரை உலகம் மறக்கலாம். ஆனால், ‘போரும் அமைதியும்’ நாவலைத் தமிழில்
அற்புதமாகப் பதிப்பித்த சக்தி வை.கோவிந்தன் என்ற பதிப்பாளருக்கு வரலாற்றில் என்றும்
இடம் உண்டு.
என நிர்ணயிக்கத் தேவையில்லை. பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.
கடந்த நூற்றாண்டில் தங்கத் தட்டில் சாப்பிடுமளவிற்குச் சம்பாதித்த தமிழ்த்திரையுலகின்
முதல் சூப்பர்ஸ்டார் பெயரை உலகம் மறக்கலாம். ஆனால், ‘போரும் அமைதியும்’ நாவலைத் தமிழில்
அற்புதமாகப் பதிப்பித்த சக்தி வை.கோவிந்தன் என்ற பதிப்பாளருக்கு வரலாற்றில் என்றும்
இடம் உண்டு.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்தத் தமிழ்க்குடியில் எத்தனையோ ஆயிரம் மன்னர்கள் வந்து சென்றிருக்கலாம்!
ஆனால் சங்கப்பாடல்களில் இரண்டினை மட்டுமே எழுதிய ஒரு புலவனை ஐ.நா.சபை வரை கொண்டு சேர்த்துள்ளது
இலக்கியம். அவர் பெயர் கனியன் பூங்குன்றன்.
முன்தோன்றிய மூத்தத் தமிழ்க்குடியில் எத்தனையோ ஆயிரம் மன்னர்கள் வந்து சென்றிருக்கலாம்!
ஆனால் சங்கப்பாடல்களில் இரண்டினை மட்டுமே எழுதிய ஒரு புலவனை ஐ.நா.சபை வரை கொண்டு சேர்த்துள்ளது
இலக்கியம். அவர் பெயர் கனியன் பூங்குன்றன்.
எவ்வளவு நீர் அருந்தினாலும் தாகம் தீரா
சாபம் பெற்ற ஜீயஸின் மகன் டான்டலஸ் போன்று, புத்தகக் கட்டுகளைச் சுமந்தபடி இல்லம் திரும்பும்
தீவிர வாசகன், தன் தீரா வாசிப்புத் தாகம் தணிக்க அடுத்த ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவிற்கு
காத்திருக்கத் தொடங்குகிறான். அந்த வாசகன்தான் சென்னை மட்டுமல்ல – எல்லாப் புத்தகக்
காட்சிகளுக்கும் உயிர் கொடுப்பவன்.
சாபம் பெற்ற ஜீயஸின் மகன் டான்டலஸ் போன்று, புத்தகக் கட்டுகளைச் சுமந்தபடி இல்லம் திரும்பும்
தீவிர வாசகன், தன் தீரா வாசிப்புத் தாகம் தணிக்க அடுத்த ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவிற்கு
காத்திருக்கத் தொடங்குகிறான். அந்த வாசகன்தான் சென்னை மட்டுமல்ல – எல்லாப் புத்தகக்
காட்சிகளுக்கும் உயிர் கொடுப்பவன்.