தமிழின் மூன்று மகத்தான கவிஞர்களாக கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோரைத் தனது பாடல்களில் பாரதியார் பட்டியலிட்டுள்ளார். அதில் ஒரு பாடல்,
சிலப்பதிகாரச்
செய்யுளைக் கருதியும்,
திருக்குறள் உறுதியும், தெளிவும், பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
எல்லையொன்றின்மை எனும் பொருளதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது’ என்று
உறுதிகொண்டிருந்தேன்…
சிலப்பதிகாரச்
செய்யுளைக் கருதியும்,
திருக்குறள் உறுதியும், தெளிவும், பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
எல்லையொன்றின்மை எனும் பொருளதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது’ என்று
உறுதிகொண்டிருந்தேன்…
என்று
போகிறது. இதில் கம்பனுக்குத் தரப்பட்டுள்ள புகழுரை சிந்தனைக்குரிய ஒன்று. எல்லையொன்றின்மை
என்று பாரதி சொல்வதை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக, வாழ்க்கையை,
மனித விழுமியங்களைக் கூறுகிறார் என்று கொள்ளலாம். அன்பிற்கு, தியாகத்திற்கு, சகோதர
பாசத்திற்கு, பக்திக்கு அல்லது ஆசைக்கும் தான் எல்லை உண்டா? அதன் அடிப்படையில்
லட்சுமணனும், பரதனும், கைகேயியும், குகனும், வாலியும், ஜடாயுவும், லங்கா தகனமும்,
அக்கினிப் பிரவேசமும், மாயமானும் வாழ்க்கையின் சில பரிமாணங்களின் ஆழ்ந்த
குறியீடுகளாகவே நம் கலாசார வெளியில் பதிந்து விடச் செய்தவன் கம்பன். இது மிகவும்
பொருத்தமாக இருந்தாலும் வலிந்து கொள்ளும் பொருள் தான். அடுத்ததாக, எல்லையொன்றின்மை
என்பதற்கு நேர்ப்பொருள் முடிவற்றது, அனந்தம் என்பதாகும். இச்சொல் இந்திய ஞான
மரபிலும் கவி மரபிலும் பிரம்மம் எனப்படும் பரம்பொருளையே குறித்து நிற்கிறது. எனவே,
அந்தப் பரம்பொருளின் இயல்பைக் குறிகளால் காட்டக் கம்பன் செய்த முயற்சி என்றாகிறது.
இது கம்பரை மாகவிஞன் என்ற நிலையோடு கூட, தத்துவ ஞானியாகவும், வேதாந்தியாகவும்
சித்தரிக்கிறது.
போகிறது. இதில் கம்பனுக்குத் தரப்பட்டுள்ள புகழுரை சிந்தனைக்குரிய ஒன்று. எல்லையொன்றின்மை
என்று பாரதி சொல்வதை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக, வாழ்க்கையை,
மனித விழுமியங்களைக் கூறுகிறார் என்று கொள்ளலாம். அன்பிற்கு, தியாகத்திற்கு, சகோதர
பாசத்திற்கு, பக்திக்கு அல்லது ஆசைக்கும் தான் எல்லை உண்டா? அதன் அடிப்படையில்
லட்சுமணனும், பரதனும், கைகேயியும், குகனும், வாலியும், ஜடாயுவும், லங்கா தகனமும்,
அக்கினிப் பிரவேசமும், மாயமானும் வாழ்க்கையின் சில பரிமாணங்களின் ஆழ்ந்த
குறியீடுகளாகவே நம் கலாசார வெளியில் பதிந்து விடச் செய்தவன் கம்பன். இது மிகவும்
பொருத்தமாக இருந்தாலும் வலிந்து கொள்ளும் பொருள் தான். அடுத்ததாக, எல்லையொன்றின்மை
என்பதற்கு நேர்ப்பொருள் முடிவற்றது, அனந்தம் என்பதாகும். இச்சொல் இந்திய ஞான
மரபிலும் கவி மரபிலும் பிரம்மம் எனப்படும் பரம்பொருளையே குறித்து நிற்கிறது. எனவே,
அந்தப் பரம்பொருளின் இயல்பைக் குறிகளால் காட்டக் கம்பன் செய்த முயற்சி என்றாகிறது.
இது கம்பரை மாகவிஞன் என்ற நிலையோடு கூட, தத்துவ ஞானியாகவும், வேதாந்தியாகவும்
சித்தரிக்கிறது.
கம்பரின்
இந்தப் பரிமாணத்தையும், கம்பராமாயணத்தில் வேதாந்தக் கருத்துக்கள் அங்கங்கு அமைந்து
வரும் பாங்கையும் குறித்து, சில அறிஞர்களும் ஆய்வாளர்களும் சுட்டிக்
காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, தத்துவக் கருத்துக்களை எடுத்துரைக்கும்போது,
தொன்றுதொட்டு உபநிஷதங்களும் சங்கரர் முதலான ஆசாரியர்களும் வேதாந்த மரபில் கூறியுள்ள
உவமைகளைத் தனது கவிதையில் கம்பர் உரிய இடங்களில் அழகுற எடுத்தாளும் பாங்கு கற்று
இன்புறுதற்குரியது. ‘கல்வியிற் பெரியவன் கம்பன்’ என்ற கூற்றுக்கேற்ப, வேதாந்த
சாஸ்திரத்திலும் கம்பனுக்கு நல்ல பரிச்சயமிருந்தது என்பது இவற்றிலிருந்து
புலனாகிறது.
இந்தப் பரிமாணத்தையும், கம்பராமாயணத்தில் வேதாந்தக் கருத்துக்கள் அங்கங்கு அமைந்து
வரும் பாங்கையும் குறித்து, சில அறிஞர்களும் ஆய்வாளர்களும் சுட்டிக்
காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, தத்துவக் கருத்துக்களை எடுத்துரைக்கும்போது,
தொன்றுதொட்டு உபநிஷதங்களும் சங்கரர் முதலான ஆசாரியர்களும் வேதாந்த மரபில் கூறியுள்ள
உவமைகளைத் தனது கவிதையில் கம்பர் உரிய இடங்களில் அழகுற எடுத்தாளும் பாங்கு கற்று
இன்புறுதற்குரியது. ‘கல்வியிற் பெரியவன் கம்பன்’ என்ற கூற்றுக்கேற்ப, வேதாந்த
சாஸ்திரத்திலும் கம்பனுக்கு நல்ல பரிச்சயமிருந்தது என்பது இவற்றிலிருந்து
புலனாகிறது.
1. பொன்னின்
பிறிதாகில பொற்கலனே?
பிறிதாகில பொற்கலனே?
நின்னின் பிறிதாய் நிலையின் திரியா
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும்
உன்னின் பிறிது ஆயினவோ உலகம்?
பொன்னின் பிறிது ஆகில பொற்கலனே.
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும்
உன்னின் பிறிது ஆயினவோ உலகம்?
பொன்னின் பிறிது ஆகில பொற்கலனே.
–
யுத்தகாண்டம், இரணியன் வதைப் படலம்
யுத்தகாண்டம், இரணியன் வதைப் படலம்
அசையும்
அசையாப் பொருள்களினால் ஆன இவ்வுலகம் (ஜகத்), உன்னிலிருந்து வேறுபட்டதாகவும், தனது
நிலையில் மாறாததாகவும், அதே சமயம் தன்னுள் வேறுவேறானவற்றைக் கொண்டுள்ளதாகவும் தோன்றுகிறது.
எனினும், உன்னிலிருந்து வேறுபட்டதா இவ்வுலகம்? பொன்னால் செய்த அணிகலன்கள் பலவிதமாக
இருந்தாலும், பொன்னை விட்டு வேறு ஒன்றாக ஆவதில்லை.
அசையாப் பொருள்களினால் ஆன இவ்வுலகம் (ஜகத்), உன்னிலிருந்து வேறுபட்டதாகவும், தனது
நிலையில் மாறாததாகவும், அதே சமயம் தன்னுள் வேறுவேறானவற்றைக் கொண்டுள்ளதாகவும் தோன்றுகிறது.
எனினும், உன்னிலிருந்து வேறுபட்டதா இவ்வுலகம்? பொன்னால் செய்த அணிகலன்கள் பலவிதமாக
இருந்தாலும், பொன்னை விட்டு வேறு ஒன்றாக ஆவதில்லை.
ஆதிசங்கரர்
தனது பல நூல்களில் எடுத்தாண்ட உவமை இது. உதாரணமாக,
தனது பல நூல்களில் எடுத்தாண்ட உவமை இது. உதாரணமாக,
ஸச்சிதா³த்மன்யனுஸ்யூதே
நித்யே விஷ்ணௌ ப்ரகல்பிதா: |
வ்யக்தயோ விவிதா⁴: ஸர்வா ஹாடகே கனகாதி³வத் ||
நித்யே விஷ்ணௌ ப்ரகல்பிதா: |
வ்யக்தயோ விவிதா⁴: ஸர்வா ஹாடகே கனகாதி³வத் ||
உண்மை,
அறிவு (ஸத், சித்) வடிவமாகவும், அழிவற்றதாகவும், எங்கும் வியாபித்துள்ளதுமான
(விஷ்ணு) பரம்பொருளில் பலவித வேற்றுமையுள்ள பொருட்கள், தங்கத்தில் காப்பு
முதலியவைகள் செய்யப்படுவது போல கற்பிக்கப் பட்டுள்ளன.
அறிவு (ஸத், சித்) வடிவமாகவும், அழிவற்றதாகவும், எங்கும் வியாபித்துள்ளதுமான
(விஷ்ணு) பரம்பொருளில் பலவித வேற்றுமையுள்ள பொருட்கள், தங்கத்தில் காப்பு
முதலியவைகள் செய்யப்படுவது போல கற்பிக்கப் பட்டுள்ளன.
–
ஆத்மபோதம், 9
ஆத்மபோதம், 9
‘நீருமாய்த்
தீயுமாகி நிலனுமாய் விசும்புமாகி, ஏருடைக் கதிர்களாகி..’ என்கிறார் அப்பர். ‘நீரும்,
தீயும், நிலனும், விசும்பும் ஆக்கி’ என்று கூறவில்லை. ‘வானாகி மண்ணாகி வளியாகி
ஒளியாகி ஊனாகி உயிராகி’ என்கிறது திருவாசகம். ‘வானாக்கி, மண்ணாக்கி, வளியாக்கி,
ஒளியாக்கி’ என்று கூறவில்லை. இந்துமதத்தின் கடவுள் என்பவர் ஏதோ ஏழு வானங்களுக்கு
அப்பால் பரமண்டலத்தின் உட்கார்ந்துகொண்டு உலகத்தைப் படைத்து வேடிக்கை பார்க்கும் பிரபஞ்சத்தினின்றும்
வேறுபட்ட கடவுள் (extra Cosmic God) அல்ல. மாறாக, உலகத்தின் ஒவ்வொரு
அணுவுக்குள்ளும் அணுவாக நின்று பிரபஞ்சமாகவே திகழும் கடவுள் (Cosmic God). நரசிம்ம
அவதாரத்தின் மையமான தத்துவமே இதுதான். அதனால்தான், அந்த அவதாரக் கதையைக் கூறும்
படலத்தில் பிரகலாதனின் துதியாக இந்தப் பாடலைக் கம்பர் அமைத்திருக்கிறார்.
தீயுமாகி நிலனுமாய் விசும்புமாகி, ஏருடைக் கதிர்களாகி..’ என்கிறார் அப்பர். ‘நீரும்,
தீயும், நிலனும், விசும்பும் ஆக்கி’ என்று கூறவில்லை. ‘வானாகி மண்ணாகி வளியாகி
ஒளியாகி ஊனாகி உயிராகி’ என்கிறது திருவாசகம். ‘வானாக்கி, மண்ணாக்கி, வளியாக்கி,
ஒளியாக்கி’ என்று கூறவில்லை. இந்துமதத்தின் கடவுள் என்பவர் ஏதோ ஏழு வானங்களுக்கு
அப்பால் பரமண்டலத்தின் உட்கார்ந்துகொண்டு உலகத்தைப் படைத்து வேடிக்கை பார்க்கும் பிரபஞ்சத்தினின்றும்
வேறுபட்ட கடவுள் (extra Cosmic God) அல்ல. மாறாக, உலகத்தின் ஒவ்வொரு
அணுவுக்குள்ளும் அணுவாக நின்று பிரபஞ்சமாகவே திகழும் கடவுள் (Cosmic God). நரசிம்ம
அவதாரத்தின் மையமான தத்துவமே இதுதான். அதனால்தான், அந்த அவதாரக் கதையைக் கூறும்
படலத்தில் பிரகலாதனின் துதியாக இந்தப் பாடலைக் கம்பர் அமைத்திருக்கிறார்.
‘படைப்புகளை
வணங்குவது மூடத்தனம் (ஷிர்க்). படைத்தவனாகிய அல்லாஹ் ஒருவனே வணங்குவதற்குரியவன்’
என்பது போன்ற விளம்பரப் பலகைகள் தமிழ்நாட்டில் இஸ்லாமிய வஹாபிய மதப்பிரசாரங்கள்
கோலோச்சும் சில இடங்களில் தென்படுவதைப் பார்த்திருக்கலாம். இந்துக்கள் பூமியையும்
நதிகளையும் மலைகளையும் மரங்களையும் புனிதமாகக் கருதி வழிபாடு செய்வதைக் கேலியும்
கண்டனமும் செய்யும் நோக்கத்துடனேயே இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால்
இந்து சமயப் பண்பாடு காலம்காலமாக இயற்கையையும் சிருஷ்டியையும் தெய்வத்தன்மை
உடையதாகவே கருதி வந்திருக்கிறது. படைப்போன், படைப்பு என்ற இருமைக் கோட்பாடும் அதனால்
விளையும் வேற்றுமை உணர்வுகளும் அதில் இல்லை. ‘படைப்போனும் படைப்பாளியும் அல்ல,
நடராஜனும் அவனது நடனமுமே’ (No creator and creation, only the dancer and his
dance) என்ற மேற்கோள் இந்தத் தத்துவத்தின் சாரம்தான். இந்துத் தத்துவங்களுக்கும்
ஆபிரகாமிய மதக்கோட்பாடுகளுக்கும் உள்ள அடிப்படையான ஒரு வேறுபாட்டை விளக்கும்
வகையில் மேற்கண்ட உவமை அமைந்திருக்கின்றது என்று சொன்னால் அது மிகையில்லை.
வணங்குவது மூடத்தனம் (ஷிர்க்). படைத்தவனாகிய அல்லாஹ் ஒருவனே வணங்குவதற்குரியவன்’
என்பது போன்ற விளம்பரப் பலகைகள் தமிழ்நாட்டில் இஸ்லாமிய வஹாபிய மதப்பிரசாரங்கள்
கோலோச்சும் சில இடங்களில் தென்படுவதைப் பார்த்திருக்கலாம். இந்துக்கள் பூமியையும்
நதிகளையும் மலைகளையும் மரங்களையும் புனிதமாகக் கருதி வழிபாடு செய்வதைக் கேலியும்
கண்டனமும் செய்யும் நோக்கத்துடனேயே இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால்
இந்து சமயப் பண்பாடு காலம்காலமாக இயற்கையையும் சிருஷ்டியையும் தெய்வத்தன்மை
உடையதாகவே கருதி வந்திருக்கிறது. படைப்போன், படைப்பு என்ற இருமைக் கோட்பாடும் அதனால்
விளையும் வேற்றுமை உணர்வுகளும் அதில் இல்லை. ‘படைப்போனும் படைப்பாளியும் அல்ல,
நடராஜனும் அவனது நடனமுமே’ (No creator and creation, only the dancer and his
dance) என்ற மேற்கோள் இந்தத் தத்துவத்தின் சாரம்தான். இந்துத் தத்துவங்களுக்கும்
ஆபிரகாமிய மதக்கோட்பாடுகளுக்கும் உள்ள அடிப்படையான ஒரு வேறுபாட்டை விளக்கும்
வகையில் மேற்கண்ட உவமை அமைந்திருக்கின்றது என்று சொன்னால் அது மிகையில்லை.
2. ஆலமும்
வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்
வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்
காலமும் கருவியும் இடனும் ஆய் கடைப்
பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய்
சீலமும் அவைதரும் திருவும் ஆய் உளன்
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்.
–
யுத்தகாண்டம், இரணியன் வதைப் படலம்
யுத்தகாண்டம், இரணியன் வதைப் படலம்
[இடனும் –
களனும்; ஆய் – ஆகி; கடைப்பால் – இறுதியில்; துய்ப்பானும் – அனுபவிப்பனும்; சீலம் –
நல்லொழுக்கம்]
களனும்; ஆய் – ஆகி; கடைப்பால் – இறுதியில்; துய்ப்பானும் – அனுபவிப்பனும்; சீலம் –
நல்லொழுக்கம்]
உலகில்
எந்த ஒரு செயலையும் செய்வதற்குரிய காலம் கருவி, களன் மூன்றுமாய் ஆகி, அந்தச்
செயலின் இறுதிப் பயனாகவும், அந்தப் பயனை அனுபவிப்பனாகவும் தானே ஆகி,
நல்லொழுக்கமும், அதனால் அடையும் செல்வமும் தானே ஆகியவன் அந்தப் பரம்பொருள்.
ஆலமரமும் அதன் விதையும் போல, உலகமனைத்தும் தன்னுள் அடங்கியிருக்கும் படியான
பேராண்மையுள்ளவன் அவன்.
எந்த ஒரு செயலையும் செய்வதற்குரிய காலம் கருவி, களன் மூன்றுமாய் ஆகி, அந்தச்
செயலின் இறுதிப் பயனாகவும், அந்தப் பயனை அனுபவிப்பனாகவும் தானே ஆகி,
நல்லொழுக்கமும், அதனால் அடையும் செல்வமும் தானே ஆகியவன் அந்தப் பரம்பொருள்.
ஆலமரமும் அதன் விதையும் போல, உலகமனைத்தும் தன்னுள் அடங்கியிருக்கும் படியான
பேராண்மையுள்ளவன் அவன்.
பிரகாலதன்
இரணியனுக்கு நல் உபதேசம் செய்யும் பகுதியில் இப்பாடல் வருகிறது. இதில் வரும்
தத்துவார்த்தமான அந்த உவமை, மிகத் தொன்மையானது. வேதாந்தத்தின் ஆதிமுதல் நூல்களான
உபநிஷதங்களிலேயே அது உள்ளது. சாந்தோக்ய உபநிஷதத்தில், குருவான ஆருணி உத்தாலகர்
என்ற முனிவருக்கும் அவரது மகனும் சீடனுமாகிய சுவேதகேது என்ற சிறுவனுக்கும் இடையில்
நிகழும் கீழ்க்கண்ட உரையாடலில் இது வருகிறது. நீயே அது (தத்வமஸி) என்ற மகா
வாக்கியமே இதன் இறுதி உபதேசமாக அமைந்துள்ளது.
இரணியனுக்கு நல் உபதேசம் செய்யும் பகுதியில் இப்பாடல் வருகிறது. இதில் வரும்
தத்துவார்த்தமான அந்த உவமை, மிகத் தொன்மையானது. வேதாந்தத்தின் ஆதிமுதல் நூல்களான
உபநிஷதங்களிலேயே அது உள்ளது. சாந்தோக்ய உபநிஷதத்தில், குருவான ஆருணி உத்தாலகர்
என்ற முனிவருக்கும் அவரது மகனும் சீடனுமாகிய சுவேதகேது என்ற சிறுவனுக்கும் இடையில்
நிகழும் கீழ்க்கண்ட உரையாடலில் இது வருகிறது. நீயே அது (தத்வமஸி) என்ற மகா
வாக்கியமே இதன் இறுதி உபதேசமாக அமைந்துள்ளது.
இந்த
மரத்திலிருந்து ஒரு அத்திப்பழம் கொண்டு வா.
மரத்திலிருந்து ஒரு அத்திப்பழம் கொண்டு வா.
இதோ ஐயா.
இதை உடை.
உடைத்துவிட்டேன்
ஐயா.
ஐயா.
அதில்
என்ன காண்கிறாய்?
என்ன காண்கிறாய்?
துகள்கள்
போன்று சிறிய விதைகள், ஐயா.
போன்று சிறிய விதைகள், ஐயா.
அவற்றில்
ஒன்றை உடை.
ஒன்றை உடை.
உடைத்துவிட்டேன்
ஐயா.
ஐயா.
அங்கு
என்ன காண்கிறாய்?
என்ன காண்கிறாய்?
ஒன்றுமில்லை
ஐயா.
ஐயா.
அவர்
சொன்னார் – அன்பு மகனே, உன்னால் அங்கு காணமுடியாத நுண்ணிய சூட்சுமப் பொருள்; இந்த
நுண்பொருளிலிருந்தே இந்தப் பெரும் அத்திமரம் வளர்ந்து நிற்கிறது. சிரத்தை கொள்,
அன்பு மகனே. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது
ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
சொன்னார் – அன்பு மகனே, உன்னால் அங்கு காணமுடியாத நுண்ணிய சூட்சுமப் பொருள்; இந்த
நுண்பொருளிலிருந்தே இந்தப் பெரும் அத்திமரம் வளர்ந்து நிற்கிறது. சிரத்தை கொள்,
அன்பு மகனே. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது
ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
இதில்
வரும் ‘ந்யக்ரோதஸ்ய பலம்’ என்பது அத்திப்பழம் என்று பொதுவாக மொழியாக்கம் செய்யப்
படுகிறது. ஆனால் இது ஒரு பொதுப்பெயராக அத்திமரம், ஆலமரம், அரசமரம் ஆகிய மூன்றையும்
குறிப்பதாகக் கொள்ளலாம். இவை மிகப் புனிதமான மரங்களாக வேதகாலம் முதல் கருதப் பட்டு
வந்துள்ளன. நியக்ரோத (nyagrodha), உதும்பர (udumbara), அஸ்வத்த (ashwattha) என்று
விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் முறையே இந்த மூன்று மரங்களின் பெயர்களும்
அடுத்தடுத்து வருகின்றன.
வரும் ‘ந்யக்ரோதஸ்ய பலம்’ என்பது அத்திப்பழம் என்று பொதுவாக மொழியாக்கம் செய்யப்
படுகிறது. ஆனால் இது ஒரு பொதுப்பெயராக அத்திமரம், ஆலமரம், அரசமரம் ஆகிய மூன்றையும்
குறிப்பதாகக் கொள்ளலாம். இவை மிகப் புனிதமான மரங்களாக வேதகாலம் முதல் கருதப் பட்டு
வந்துள்ளன. நியக்ரோத (nyagrodha), உதும்பர (udumbara), அஸ்வத்த (ashwattha) என்று
விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் முறையே இந்த மூன்று மரங்களின் பெயர்களும்
அடுத்தடுத்து வருகின்றன.
இந்த மரங்களின்
மலர்களுக்கு ஒரு தனிசிறப்பு இருக்கிறது. இந்த மூன்று மரங்களின் மலர்களுமே மிக
அபூர்வமானவை. அவற்றின் பூப்பருவம் என்பதை நாம் காணவே முடியாது. அது காய், கனிப்
பருவங்களின் அடியில் மறைந்து கிடக்கிறது. ‘அத்தி பூத்தாற்போல’ என்பது வழக்கு.
கருவுக்குள் உயிர் யாருக்கும் தெரியாமல் குகையில் வளரும் கனல் போல வளர்கிறது,
குழந்தையாக அது வெளிப்படும்போது (manifest) தான் நாம் அதைக் காணமுடிகிறது.
அதேபோலத்தான் பிரபஞ்சமும். அது வெளிப்பட்டு நிற்கும் நிலையை மட்டுமே நாம்
காணமுடியுமே அன்றி அதன் மூலத்தை அல்ல. இந்த மரங்களின் மலர்தலும் கனிதலும்
சிருஷ்டியின் மகா ரகசியத்தின் குறியீடுகள் போல இருப்பதால்தான், தேர்ந்தெடுத்து இத்தகைய
உவமையை நமது ரிஷிகள் கூறினார்கள் என்று தோன்றுகிறது.
மலர்களுக்கு ஒரு தனிசிறப்பு இருக்கிறது. இந்த மூன்று மரங்களின் மலர்களுமே மிக
அபூர்வமானவை. அவற்றின் பூப்பருவம் என்பதை நாம் காணவே முடியாது. அது காய், கனிப்
பருவங்களின் அடியில் மறைந்து கிடக்கிறது. ‘அத்தி பூத்தாற்போல’ என்பது வழக்கு.
கருவுக்குள் உயிர் யாருக்கும் தெரியாமல் குகையில் வளரும் கனல் போல வளர்கிறது,
குழந்தையாக அது வெளிப்படும்போது (manifest) தான் நாம் அதைக் காணமுடிகிறது.
அதேபோலத்தான் பிரபஞ்சமும். அது வெளிப்பட்டு நிற்கும் நிலையை மட்டுமே நாம்
காணமுடியுமே அன்றி அதன் மூலத்தை அல்ல. இந்த மரங்களின் மலர்தலும் கனிதலும்
சிருஷ்டியின் மகா ரகசியத்தின் குறியீடுகள் போல இருப்பதால்தான், தேர்ந்தெடுத்து இத்தகைய
உவமையை நமது ரிஷிகள் கூறினார்கள் என்று தோன்றுகிறது.
3. மொக்குளே
போல முரண் இற்ற அண்டங்கள்
போல முரண் இற்ற அண்டங்கள்
நிற்கும் நெடும் நீத்த நீரில் முளைத்து எழுந்த
மொக்குளே போல முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து உன் உளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே
– ஆரணிய
காண்டம், கவந்தன் வதைப் படலம்
காண்டம், கவந்தன் வதைப் படலம்
[பரம்பரனே
– மேலானவற்றுக்கெல்லாம் மேலானவன்; நீத்த நீரில் – வெள்ளத்தில்; மொக்குள் – குமிழ்;
முரண் இற்ற – முரண்கள் அழிந்த; பக்கம் – பக்ஷம், தன்மை]
– மேலானவற்றுக்கெல்லாம் மேலானவன்; நீத்த நீரில் – வெள்ளத்தில்; மொக்குள் – குமிழ்;
முரண் இற்ற – முரண்கள் அழிந்த; பக்கம் – பக்ஷம், தன்மை]
(அனைத்தும்
அழிந்துவிடும் பிரளயம் எனப்படும் ஊழியிலும்) நிலையாக நிற்கும் பெரு வெள்ளக் கடலில்
முளைத்தெழுந்த குமிழ்கள் போல, (ஒன்றோடு ஒன்றுக்கு நிலவிய) மாறுபாடுகள் அனைத்தும் அழியப்
பெற்ற அண்டங்கள், ஒரே போல மேலெழுந்து, உன்னிடத்தே தோன்றி, உன்னிடத்திலேயே ஒளிந்து
மறைகின்ற தன்மை அறிதற்கு எளிதோ?
அழிந்துவிடும் பிரளயம் எனப்படும் ஊழியிலும்) நிலையாக நிற்கும் பெரு வெள்ளக் கடலில்
முளைத்தெழுந்த குமிழ்கள் போல, (ஒன்றோடு ஒன்றுக்கு நிலவிய) மாறுபாடுகள் அனைத்தும் அழியப்
பெற்ற அண்டங்கள், ஒரே போல மேலெழுந்து, உன்னிடத்தே தோன்றி, உன்னிடத்திலேயே ஒளிந்து
மறைகின்ற தன்மை அறிதற்கு எளிதோ?
ஆதியில்
சிருஷ்டியின்போது அண்டங்கள் அனைத்தும் மாறுபாடற்று ஒரே பொருளாக (singularity)
உள்ளது. அந்த ஒற்றைப் பொருளிலிருந்து ஆகாசமும் (பெருவெளி), ஆகாசத்திலிருந்து
வாயுவும், வாயுவிலிருந்து அக்னியும், அக்னியிலிருந்து நீரும் எனப் படிப்படியாக
ஐம்பூதங்களும் தோன்றிப் பல்வேறு மாறுபாடுகளுடன் கூடிய பிரபஞ்சம் முழுவதுமாக
மலர்கிறது. பின்பு பிரளயத்தின்போது, இதற்கு நேரெதிராக, மாறுபாடுகள் அனைத்தும்
படிப்படியாக அழிந்து ஒற்றைப் பொருளாக ஆகின்றது. பிறகு மீண்டும் சிருஷ்டி, மீண்டும்
பிரளயம் என பிரபஞ்ச சுழற்சி தொடர்கிறது. இந்து ஞானம் கூறும் இந்த மகத்தான
பிரபஞ்சவியல் தத்துவத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே நவீன இயற்பியல் இத்திறக்கில்
கண்டடைந்து கொண்டிருக்கும் கருத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
சிருஷ்டியின்போது அண்டங்கள் அனைத்தும் மாறுபாடற்று ஒரே பொருளாக (singularity)
உள்ளது. அந்த ஒற்றைப் பொருளிலிருந்து ஆகாசமும் (பெருவெளி), ஆகாசத்திலிருந்து
வாயுவும், வாயுவிலிருந்து அக்னியும், அக்னியிலிருந்து நீரும் எனப் படிப்படியாக
ஐம்பூதங்களும் தோன்றிப் பல்வேறு மாறுபாடுகளுடன் கூடிய பிரபஞ்சம் முழுவதுமாக
மலர்கிறது. பின்பு பிரளயத்தின்போது, இதற்கு நேரெதிராக, மாறுபாடுகள் அனைத்தும்
படிப்படியாக அழிந்து ஒற்றைப் பொருளாக ஆகின்றது. பிறகு மீண்டும் சிருஷ்டி, மீண்டும்
பிரளயம் என பிரபஞ்ச சுழற்சி தொடர்கிறது. இந்து ஞானம் கூறும் இந்த மகத்தான
பிரபஞ்சவியல் தத்துவத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே நவீன இயற்பியல் இத்திறக்கில்
கண்டடைந்து கொண்டிருக்கும் கருத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
பிரம்மமே
உலகிற்கு முதற்காரணமாக உள்ளது என்பதை விளக்கும் உவமை இது.
உலகிற்கு முதற்காரணமாக உள்ளது என்பதை விளக்கும் உவமை இது.
வேதாந்த
நூல்களில் காரணம் (cause) என்பதை உபாதான காரணம் (material cause), நிமித்த காரணம்
(efficient cause) என்று இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள். உதாரணமாக, குடத்திற்கு
மண் உபாதான காரணம்; குயவன், சக்கரம், குயவனின் கருவிகள் முதலியவை நிமித்த காரணம். எப்படியென்றால்,
குடம் மண்ணிலிருந்து உண்டாகிறது என்பது மட்டுமல்லாமல், குடம் இருக்கும் காலம்
முழுவதும் அது மண்ணில்தான் நிலைபெற்றிருக்கிறது. மண்ணைவிட்டுப் பிரித்து குடத்தைத்
தனியாக எடுத்துச்செல்ல முடியாது. குடம் கடைசியாக அழிந்தாலும் அது மண்ணாகிறது. இவ்வாறு
காரியம் (effect) காரணத்திலிருந்து (cause) பிரிக்க முடியாமலிருக்கும்போது அது
உபாதான காரணம் எனப்படுகிறது. மாறாக, குயவன், சக்கரம், குயவனின் கருவிகள் முதலியவை
குடம் உண்டாவதற்குத் தேவையாக இருந்தபோதும், அதன்பிறகு குடத்துடன்
சம்பந்தமில்லாததால், அவை நிமித்த காரணம் என்றாகின்றன.
நூல்களில் காரணம் (cause) என்பதை உபாதான காரணம் (material cause), நிமித்த காரணம்
(efficient cause) என்று இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள். உதாரணமாக, குடத்திற்கு
மண் உபாதான காரணம்; குயவன், சக்கரம், குயவனின் கருவிகள் முதலியவை நிமித்த காரணம். எப்படியென்றால்,
குடம் மண்ணிலிருந்து உண்டாகிறது என்பது மட்டுமல்லாமல், குடம் இருக்கும் காலம்
முழுவதும் அது மண்ணில்தான் நிலைபெற்றிருக்கிறது. மண்ணைவிட்டுப் பிரித்து குடத்தைத்
தனியாக எடுத்துச்செல்ல முடியாது. குடம் கடைசியாக அழிந்தாலும் அது மண்ணாகிறது. இவ்வாறு
காரியம் (effect) காரணத்திலிருந்து (cause) பிரிக்க முடியாமலிருக்கும்போது அது
உபாதான காரணம் எனப்படுகிறது. மாறாக, குயவன், சக்கரம், குயவனின் கருவிகள் முதலியவை
குடம் உண்டாவதற்குத் தேவையாக இருந்தபோதும், அதன்பிறகு குடத்துடன்
சம்பந்தமில்லாததால், அவை நிமித்த காரணம் என்றாகின்றன.
சங்கரர்
கூறுகிறார்:
கூறுகிறார்:
உபாதா³னே(அ)கி²லாதா⁴ரே
ஜக³ந்தி பரமேஶ்வரே ।
ஸர்க³ஸ்தி²திலயான் யாந்தி பு³த்³பு³தா³னீவ வாரிணி ॥
ஜக³ந்தி பரமேஶ்வரே ।
ஸர்க³ஸ்தி²திலயான் யாந்தி பு³த்³பு³தா³னீவ வாரிணி ॥
அனைத்திற்கும்
ஆதாரமாகவும், உபாதானமாகவும் உள்ள பரமேசுவரனிடத்தில், தண்ணீரில் நீர்க்குமிழிகள்
தோன்றி, இருந்து, மறைந்து போவது போல, உலகமெல்லாம் உண்டாகி, இருந்து, அழிந்து
போகின்றன.
ஆதாரமாகவும், உபாதானமாகவும் உள்ள பரமேசுவரனிடத்தில், தண்ணீரில் நீர்க்குமிழிகள்
தோன்றி, இருந்து, மறைந்து போவது போல, உலகமெல்லாம் உண்டாகி, இருந்து, அழிந்து
போகின்றன.
–
ஆத்மபோதம் 8
ஆத்மபோதம் 8
நீர்க்குமிழிகள்
நீரிலிருந்து எழுகின்றன, நீரில் வாழ்கின்றன, நீரிலேயே அமிழ்கின்றன. நீரைத் தவிர்த்துத்
தனியான இருப்பு என்று ஒன்று அவற்றுக்கு இல்லை. அதே போல, பல்வேறு மாறுபாடுகளுடன்
கூடிய பிரபஞ்சமும் அதன் ஜட, சேதனப் பொருட்களும் (உணர்வற்றவை, உணர்வுடையவை)
பிரம்மத்தினின்று தோன்றுகின்றன. பிரம்மத்தில் வாழ்கின்றன, பிரம்மத்திலேயே மறைந்து
லயமடைகின்றன. எனவே பிரபஞ்சத்திற்கு பிரம்மம் நிமித்த காரணமாக மட்டுமல்ல, உபாதான
காரணமாகவும் இருக்கின்றது. இதுவே அத்வைத வேதாந்தம் கூறும் கருத்து. த்வைதம்,
விசிஷ்டாத்வைதம் முதலான மற்ற தத்துவப் பிரிவுகளில் பிரம்மம் உபாதான காரணம் என்பது
ஏற்கப்படவில்லை. இந்தக் குறிப்பிட்ட உவமையைக் கம்பன் கூறியுள்ள விதம் சங்கரரின்
மேற்கண்ட சுலோகத்தின் மொழியாக்கம் போலவே உள்ளது என்பது கவனிக்கத் தக்கது.
நீரிலிருந்து எழுகின்றன, நீரில் வாழ்கின்றன, நீரிலேயே அமிழ்கின்றன. நீரைத் தவிர்த்துத்
தனியான இருப்பு என்று ஒன்று அவற்றுக்கு இல்லை. அதே போல, பல்வேறு மாறுபாடுகளுடன்
கூடிய பிரபஞ்சமும் அதன் ஜட, சேதனப் பொருட்களும் (உணர்வற்றவை, உணர்வுடையவை)
பிரம்மத்தினின்று தோன்றுகின்றன. பிரம்மத்தில் வாழ்கின்றன, பிரம்மத்திலேயே மறைந்து
லயமடைகின்றன. எனவே பிரபஞ்சத்திற்கு பிரம்மம் நிமித்த காரணமாக மட்டுமல்ல, உபாதான
காரணமாகவும் இருக்கின்றது. இதுவே அத்வைத வேதாந்தம் கூறும் கருத்து. த்வைதம்,
விசிஷ்டாத்வைதம் முதலான மற்ற தத்துவப் பிரிவுகளில் பிரம்மம் உபாதான காரணம் என்பது
ஏற்கப்படவில்லை. இந்தக் குறிப்பிட்ட உவமையைக் கம்பன் கூறியுள்ள விதம் சங்கரரின்
மேற்கண்ட சுலோகத்தின் மொழியாக்கம் போலவே உள்ளது என்பது கவனிக்கத் தக்கது.
4.
வேலையும் திரையும்போல் வேறுபாடு இலான்
வேலையும் திரையும்போல் வேறுபாடு இலான்
காலையின் நறு மலர் ஒன்றக் கட்டிய
மாலையின் மலர் புரை சமய வாதியர்
சூலையின் திருக்கு அலால், சொல்லுவோர்க்கு எலாம்
வேலையும் திரையும்போல் வேறுபாடு இலான்.
–
யுத்தகாண்டம், இரணியன் வதைப் படலம்
யுத்தகாண்டம், இரணியன் வதைப் படலம்
[காலையின்
– காலத்தே; புரை – போன்ற; சூலை – வெம்மை, தாபம்; திருக்கு – மாறுபாடு; வேலையும்
திரையும் – கடலும் அலையும்]
– காலத்தே; புரை – போன்ற; சூலை – வெம்மை, தாபம்; திருக்கு – மாறுபாடு; வேலையும்
திரையும் – கடலும் அலையும்]
காலத்தே
மலர்ந்த நறுமலர்களைச் சேர்த்துக் கட்டிய மாலையில் உள்ள மலர்களைப் போல,
சமயவாதிகளின் மனங்களின் வெம்மை காரணமான மாறுபாடு அல்லாமல், அவனது உண்மைத் தன்மையை
உணர்ந்து கூறும் ஞானிகளுக்கெல்லாம், கடலும் அலையும் போல வேறுபாடில்லாதவன் அவன்.
மலர்ந்த நறுமலர்களைச் சேர்த்துக் கட்டிய மாலையில் உள்ள மலர்களைப் போல,
சமயவாதிகளின் மனங்களின் வெம்மை காரணமான மாறுபாடு அல்லாமல், அவனது உண்மைத் தன்மையை
உணர்ந்து கூறும் ஞானிகளுக்கெல்லாம், கடலும் அலையும் போல வேறுபாடில்லாதவன் அவன்.
இந்த
உவமையில் இரண்டு விதமான வேறுபாடுகளையும் கடந்தவன் பரம்பொருள் என்று கவி
சுட்டுகிறார். முதலாவது, பல்வேறு பெயர்களிலும் ரூபங்களிலும் வழிபட்டாலும் பிரம்மம்
எனப்படும் பரம்பொருள் ஒன்றே; அதன் உருவங்களும் பெயர்களும் மாலையில் தொடுத்த
மலர்களைப் போன்றவை என்பது. இக்கருத்து நமது ஞானநூல்களிலும் பக்திப் பாடல்களிலும்
தொடர்ந்து பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ள ஒன்றுதான். இரண்டாவது, பற்பல
மாறுபாடுகளால் ஆன இவ்வுலகம் (பிரபஞ்சம்) பிரம்மத்திலிருந்தும் வேறுபட்டதன்று என்ற
கருத்து. கடலுக்கும் அலைக்கும் உள்ள உறவு என்ன என்ற கேள்விக்கு வேறுவேறு
விதங்களில் விடைகாண்பதன் மூலமாகவே தூய அத்வைதம் முதல் தூய த்வைதம் வரையிலான
வேதாந்த தத்துவப் பிரிவுகளின் நுட்பமான வேறுபாடுகளை விளக்கி விட முடியும்.
உவமையில் இரண்டு விதமான வேறுபாடுகளையும் கடந்தவன் பரம்பொருள் என்று கவி
சுட்டுகிறார். முதலாவது, பல்வேறு பெயர்களிலும் ரூபங்களிலும் வழிபட்டாலும் பிரம்மம்
எனப்படும் பரம்பொருள் ஒன்றே; அதன் உருவங்களும் பெயர்களும் மாலையில் தொடுத்த
மலர்களைப் போன்றவை என்பது. இக்கருத்து நமது ஞானநூல்களிலும் பக்திப் பாடல்களிலும்
தொடர்ந்து பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ள ஒன்றுதான். இரண்டாவது, பற்பல
மாறுபாடுகளால் ஆன இவ்வுலகம் (பிரபஞ்சம்) பிரம்மத்திலிருந்தும் வேறுபட்டதன்று என்ற
கருத்து. கடலுக்கும் அலைக்கும் உள்ள உறவு என்ன என்ற கேள்விக்கு வேறுவேறு
விதங்களில் விடைகாண்பதன் மூலமாகவே தூய அத்வைதம் முதல் தூய த்வைதம் வரையிலான
வேதாந்த தத்துவப் பிரிவுகளின் நுட்பமான வேறுபாடுகளை விளக்கி விட முடியும்.
ஸத்யபி பே⁴தா³பக³மே
நாத² தவாஹம்ʼ ந மாமகீனஸ்த்வம் ।
ஸாமுத்³ரோ ஹி தரங்க³꞉ க்வசன ஸமுத்³ரோ ந தாரங்க³꞉ ॥
நாத² தவாஹம்ʼ ந மாமகீனஸ்த்வம் ।
ஸாமுத்³ரோ ஹி தரங்க³꞉ க்வசன ஸமுத்³ரோ ந தாரங்க³꞉ ॥
இறைவா,
வேற்றுமை நீங்கியபோதும், நான் உன்னுடையவன், நீ என்னுடையவனல்லன். அலையன்றோ கடலைச்
சேர்ந்தது? ஒருபோதும், கடல் அலையைச் சேர்ந்ததாக இருப்பதில்லை.
வேற்றுமை நீங்கியபோதும், நான் உன்னுடையவன், நீ என்னுடையவனல்லன். அலையன்றோ கடலைச்
சேர்ந்தது? ஒருபோதும், கடல் அலையைச் சேர்ந்ததாக இருப்பதில்லை.
– ஷட்பதீ
ஸ்தோத்ரம் (சங்கரர்)
ஸ்தோத்ரம் (சங்கரர்)
இறைவா
உனது தன்னியல்பும் (ஸ்வரூபம்) எனது தன்னியல்பும் ஒன்றே. அது ஸச்சிதானந்த வஸ்து.
ஆயினும் நீ நித்யமுக்தன். பெரும் தீயிலிருந்து சிறு நெருப்புப்பொறி கிளம்புவது போல
நான் உன்னிடமிருந்து கிளம்பியுள்ளேன். பிறவிச் சுழலில் மாயையால் அல்லல்படுகிறேன்.
உன் கருணையால் அந்த ஸ்வரூபத்தை உணரப் போகிறேன். ஆகையால் சிறியோனாகிய நான் எப்போதும்
பெரியோனாகிய உன்னுடையவன்தான்.
உனது தன்னியல்பும் (ஸ்வரூபம்) எனது தன்னியல்பும் ஒன்றே. அது ஸச்சிதானந்த வஸ்து.
ஆயினும் நீ நித்யமுக்தன். பெரும் தீயிலிருந்து சிறு நெருப்புப்பொறி கிளம்புவது போல
நான் உன்னிடமிருந்து கிளம்பியுள்ளேன். பிறவிச் சுழலில் மாயையால் அல்லல்படுகிறேன்.
உன் கருணையால் அந்த ஸ்வரூபத்தை உணரப் போகிறேன். ஆகையால் சிறியோனாகிய நான் எப்போதும்
பெரியோனாகிய உன்னுடையவன்தான்.
அத்வைத
உண்மையின் உட்பொருளும், நடைமுறையில் பக்தனின் பக்தி உணர்வும் முரண்பட்டதல்ல என்பதை
இந்த உவமையைக் கொண்டு சங்கரர் விளக்குகிறார்.
உண்மையின் உட்பொருளும், நடைமுறையில் பக்தனின் பக்தி உணர்வும் முரண்பட்டதல்ல என்பதை
இந்த உவமையைக் கொண்டு சங்கரர் விளக்குகிறார்.
திருமழிசையாழ்வாரும்
தனது பாசுரம் ஒன்றில் இதனை அழகுற அமைத்துப் பாடியுள்ளார்.
தனது பாசுரம் ஒன்றில் இதனை அழகுற அமைத்துப் பாடியுள்ளார்.
தன்னுளே திரைத்தெழும் தரங்கவெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே.
தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே.
– திருச்சந்தவிருத்தம், நாலாயிர திவ்யப்ரபந்தம்
5.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால்,
அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே,
மறைகளுக்கு இறுதி ஆவார்!
– சுந்தர
காண்டம், கடவுள் வாழ்த்து.
காண்டம், கடவுள் வாழ்த்து.
[அலங்கல்
– மாலை; அரவு – பாம்பு; விலங்கிய – ஊடுருவிக்கலந்த; விகாரப் பாடு – மாற்றங்கள்;
வீக்கம் – தோற்றம்; கலங்குவது – இல்லாமல் போவது; பொருதார் – போரிட்டார்]
– மாலை; அரவு – பாம்பு; விலங்கிய – ஊடுருவிக்கலந்த; விகாரப் பாடு – மாற்றங்கள்;
வீக்கம் – தோற்றம்; கலங்குவது – இல்லாமல் போவது; பொருதார் – போரிட்டார்]
எவருடைய
தரிசனத்தால் ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும் வேறு வேறு விதமாக
அமைந்த பன்மைத் தோற்றம், மாலையில் தோன்றும் பொய்ப்பாம்பு போல இல்லாது போய்விடுமோ,
அவரன்றோ கைவில் ஏந்தி இலங்கையில் போர் செய்தார்! – என்று வேதத்தின் எல்லை நிலமாக
இருக்கின்ற ஞானிகள் கூறுவர்.
தரிசனத்தால் ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும் வேறு வேறு விதமாக
அமைந்த பன்மைத் தோற்றம், மாலையில் தோன்றும் பொய்ப்பாம்பு போல இல்லாது போய்விடுமோ,
அவரன்றோ கைவில் ஏந்தி இலங்கையில் போர் செய்தார்! – என்று வேதத்தின் எல்லை நிலமாக
இருக்கின்ற ஞானிகள் கூறுவர்.
ரஜ்ஜுஸர்ப்பம்
(கயிற்றரவு) என்று சுருக்கமான பெயரால் அழைக்கப்படும் மிகப் பிரபலமான வேதாந்த உவமை
இது. கயிற்றில் பாம்பின் பொய்த்தோற்றம் ‘அத்யாஸம்’ எனப்படுகிறது. இப்பாடலில் கயிறு
என்னுமிடத்தில் மாலை என்று கூறப்பட்டுள்ள போதிலும் உட்பொருள் அதேதான்.
(கயிற்றரவு) என்று சுருக்கமான பெயரால் அழைக்கப்படும் மிகப் பிரபலமான வேதாந்த உவமை
இது. கயிற்றில் பாம்பின் பொய்த்தோற்றம் ‘அத்யாஸம்’ எனப்படுகிறது. இப்பாடலில் கயிறு
என்னுமிடத்தில் மாலை என்று கூறப்பட்டுள்ள போதிலும் உட்பொருள் அதேதான்.
சங்கரர்
கூறுகிறார்:
கூறுகிறார்:
ரஜ்ஜுஸர்ப்வதா³த்மானம்ʼ ஜீவோ
ஜ்ஞாத்வா ப⁴யம்ʼ வஹேத் ।
நாஹம்ʼ ஜீவ: பராத்மேதி ஜ்ஞாதஶ்சேன்னிர்ப⁴யோ ப⁴வேத் ॥
ஜ்ஞாத்வா ப⁴யம்ʼ வஹேத் ।
நாஹம்ʼ ஜீவ: பராத்மேதி ஜ்ஞாதஶ்சேன்னிர்ப⁴யோ ப⁴வேத் ॥
-ஆத்மபோதம்,
27
27
கயிற்றைப்
பாம்பாக (எண்ணுவது) போல, தன்னை ஜீவனாக எண்ணி பயமடைகிறான். நான் ஜீவனல்ல, பரமாத்மா
என்று அறிந்தால் பயம் நீங்கினவனாக ஆகிறான்.
பாம்பாக (எண்ணுவது) போல, தன்னை ஜீவனாக எண்ணி பயமடைகிறான். நான் ஜீவனல்ல, பரமாத்மா
என்று அறிந்தால் பயம் நீங்கினவனாக ஆகிறான்.
மாலை
நேரத்தில் இருட்டில் ஆற்றங்கரையோரமாகச் செல்லும் மனிதன், கீழே வளைந்து கிடக்கும்
கயிற்றைப் பார்த்து பாம்பென நினைத்துப் பயமடைகிறான். அது காற்றில் சிறிது
அசைந்தாலும் பயந்து ஓடிக் கீழே விழுந்து துன்பமடைகிறான். இவன் பாம்பென்று
நினைத்தாலும் அதனால் கயிற்றில் எந்தவித மாறுபாடும் ஏற்படுவதில்லை. பிறகு
வெளிச்சத்தைக் கொண்டுவந்து, நண்பனின் உதவியுடன் வந்து உற்றுப்பார்த்ததும், இது
பாம்பல்ல கயிறு என்று தெரிந்து கொள்கிறான். பயமெல்லாம் நீங்கிவிடுகிறது. இதைப்
போலவே, தனது உண்மை ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்ளாமல் உடல், புலன்கள், மனம்
இவற்றுடன் சேர்ந்து அவைகளையே ப்ரமத்தால் நான் என எண்ணி ஜீவன் உலகில் வாழ்கிறான். நான்
என்று எண்ணும் உடல் முதலானவற்றின் போக்குகளை வைத்து தன்னைக் குறுகியவனாக
எண்ணுகிறான். தன்னைக் காட்டிலும் வேறான பிரபஞ்சம் இருப்பதாக எண்ணி அதன் மூலம்
பயத்தையும் துன்பத்தையும் அடைகிறான். இவன் வேறாக நினைத்தாலும் அதனால் ஆத்ம
ஸ்வரூபத்தில் ஒருவித மாறுபாடும் ஏற்படுவதில்லை. எப்போது வேதாந்த ஞானத்தாலும்,
குருவின் உபதேசத்தாலும் அருளாலும் விவேகம் ஏற்பட்டு தனது உண்மை ஸ்வரூபத்தை
அறிந்துகொள்கிறானோ, அப்போது நான் உடல் அல்ல, புலன்கள் அல்ல, மனம் அல்ல, நான்
ஸச்சிதாந்த ஸ்வரூபமான பரமாத்மா. என்னைக் காட்டிலும் வேறாக பிரபஞ்சம் கிடையாது
என்று தெரிந்துகொண்டு பயம் நீங்கி விடுதலையடைகிறான்.
நேரத்தில் இருட்டில் ஆற்றங்கரையோரமாகச் செல்லும் மனிதன், கீழே வளைந்து கிடக்கும்
கயிற்றைப் பார்த்து பாம்பென நினைத்துப் பயமடைகிறான். அது காற்றில் சிறிது
அசைந்தாலும் பயந்து ஓடிக் கீழே விழுந்து துன்பமடைகிறான். இவன் பாம்பென்று
நினைத்தாலும் அதனால் கயிற்றில் எந்தவித மாறுபாடும் ஏற்படுவதில்லை. பிறகு
வெளிச்சத்தைக் கொண்டுவந்து, நண்பனின் உதவியுடன் வந்து உற்றுப்பார்த்ததும், இது
பாம்பல்ல கயிறு என்று தெரிந்து கொள்கிறான். பயமெல்லாம் நீங்கிவிடுகிறது. இதைப்
போலவே, தனது உண்மை ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்ளாமல் உடல், புலன்கள், மனம்
இவற்றுடன் சேர்ந்து அவைகளையே ப்ரமத்தால் நான் என எண்ணி ஜீவன் உலகில் வாழ்கிறான். நான்
என்று எண்ணும் உடல் முதலானவற்றின் போக்குகளை வைத்து தன்னைக் குறுகியவனாக
எண்ணுகிறான். தன்னைக் காட்டிலும் வேறான பிரபஞ்சம் இருப்பதாக எண்ணி அதன் மூலம்
பயத்தையும் துன்பத்தையும் அடைகிறான். இவன் வேறாக நினைத்தாலும் அதனால் ஆத்ம
ஸ்வரூபத்தில் ஒருவித மாறுபாடும் ஏற்படுவதில்லை. எப்போது வேதாந்த ஞானத்தாலும்,
குருவின் உபதேசத்தாலும் அருளாலும் விவேகம் ஏற்பட்டு தனது உண்மை ஸ்வரூபத்தை
அறிந்துகொள்கிறானோ, அப்போது நான் உடல் அல்ல, புலன்கள் அல்ல, மனம் அல்ல, நான்
ஸச்சிதாந்த ஸ்வரூபமான பரமாத்மா. என்னைக் காட்டிலும் வேறாக பிரபஞ்சம் கிடையாது
என்று தெரிந்துகொண்டு பயம் நீங்கி விடுதலையடைகிறான்.
ஒன்றோடொன்று
ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும் வேறுவேறாக அமைந்த பன்மைத் தோற்றம் என்று
இப்பாடல் கூறும் கருத்தாக்கம் பஞ்சீகரணம் என்று வேதாந்த மொழியில் அழைக்கப்படுகிறது.
இது பற்றிய முழுமையான விளக்கம் சங்கரரின் ஆத்மபோதம் (சுலோகம் 12, 13), விவேக
சூடாமணி முதலான நூல்களில் உள்ளது.
ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும் வேறுவேறாக அமைந்த பன்மைத் தோற்றம் என்று
இப்பாடல் கூறும் கருத்தாக்கம் பஞ்சீகரணம் என்று வேதாந்த மொழியில் அழைக்கப்படுகிறது.
இது பற்றிய முழுமையான விளக்கம் சங்கரரின் ஆத்மபோதம் (சுலோகம் 12, 13), விவேக
சூடாமணி முதலான நூல்களில் உள்ளது.
பரம்பொருளே
அவதாரமெடுத்து ஸ்ரீராமனாகத் தோன்றியதால், இலங்கையில் போர் செய்தார் என்ற அடைமொழி
இங்கு ஸச்சிதானந்தமான ஆத்ம ஸ்வரூபத்தை, பிரம்ம ஸ்வரூபத்தைக் குறிக்கிறது.
அவதாரமெடுத்து ஸ்ரீராமனாகத் தோன்றியதால், இலங்கையில் போர் செய்தார் என்ற அடைமொழி
இங்கு ஸச்சிதானந்தமான ஆத்ம ஸ்வரூபத்தை, பிரம்ம ஸ்வரூபத்தைக் குறிக்கிறது.
ஸ்ரீராமஜெயம். ஓம் தத் ஸத்.