எத்தனை எட்டாத உயரத்தில் தெய்வங்கள் இருந்தாலும், அங்கே செல்வது மிகமிகக் கடினம்
என்றாலும், சில நேரம் உயிருக்கே உத்தரவாதமில்லை என்றாலும் கூட, சர்க்கரைக் கட்டியைத்
தேடிச்செல்லும் எறும்புக் கூட்டம் போல சாரிசாரியாக மலை மீது ஊர்ந்து சென்று, பலவித
சிரமங்களையும் தாங்கிக் கொண்டு அந்த தெய்வத்தைத் தரிசிக்க மனிதர்கள் தயாராகி விடுகிறார்கள்.
சிறிய மலையோ, பெரிய மலையோ, கோவில்களை மலை உச்சியில் நம் ஆச்சார்யர்கள் கட்டி வைத்ததற்குக்
காரணம் இருக்கிறது. மலையேறுகையில் மூச்சு வாங்கும். எண்ணங்கள் ஒடுங்கும். ஒரு கட்டத்தில்
நம் ஆழ்மனம் திறக்கும். ஆழ்மனம் திறக்கையில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் நூறு சதம்
ஈடேறும். இதைத்தான் ஆங்கிலத்தில் ஆல்ஃபா மைன்ட் பவர் என்கிறார்கள். நம் ஆழ்மனத்தின்
எண்ணங்களை பிரபஞ்ச சக்தி ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்றி வைக்கும் என்பார்கள். இதை
அடிப்படையாக வைத்துதான் பல கோவில்கள் மலைமீது கட்டப்பட்டுள்ளன.
என்றாலும், சில நேரம் உயிருக்கே உத்தரவாதமில்லை என்றாலும் கூட, சர்க்கரைக் கட்டியைத்
தேடிச்செல்லும் எறும்புக் கூட்டம் போல சாரிசாரியாக மலை மீது ஊர்ந்து சென்று, பலவித
சிரமங்களையும் தாங்கிக் கொண்டு அந்த தெய்வத்தைத் தரிசிக்க மனிதர்கள் தயாராகி விடுகிறார்கள்.
சிறிய மலையோ, பெரிய மலையோ, கோவில்களை மலை உச்சியில் நம் ஆச்சார்யர்கள் கட்டி வைத்ததற்குக்
காரணம் இருக்கிறது. மலையேறுகையில் மூச்சு வாங்கும். எண்ணங்கள் ஒடுங்கும். ஒரு கட்டத்தில்
நம் ஆழ்மனம் திறக்கும். ஆழ்மனம் திறக்கையில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் நூறு சதம்
ஈடேறும். இதைத்தான் ஆங்கிலத்தில் ஆல்ஃபா மைன்ட் பவர் என்கிறார்கள். நம் ஆழ்மனத்தின்
எண்ணங்களை பிரபஞ்ச சக்தி ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்றி வைக்கும் என்பார்கள். இதை
அடிப்படையாக வைத்துதான் பல கோவில்கள் மலைமீது கட்டப்பட்டுள்ளன.
தெற்கே பொதிகை மலை, சதுரகிரி, பர்வதமலை, கொல்லிமலை, உட்பட பல மலைகளுக்கும் ஏறிச்
சென்று வழிபட்டிருக்கிறேன். வடக்கே திபெத்தில் உள்ள கைலாஷ், இந்திய எல்லையில் உள்ள
ஆதிகைலாஷ், ஓம் பர்வத், கேதார் பத்ரி என இமயத்தின் பல இடங்களுக்கும் சென்றிருக்கிறேன்.
மலையேற ஏற எண்ணங்கள் ஒடுங்குவதை அனுபவ ரீதியாக உணர்ந்துமிருக்கிறேன். ஒவ்வொரு யாத்திரையும்
பல்வேறு அனுபவங்களையும், பரந்துபட்ட பார்வையையும் நமக்குத் தருகிறது. பல்வேறு மனிதர்களின்
வாழ்வியலை அறிந்து கொள்ள உதவுகிறது.
சென்று வழிபட்டிருக்கிறேன். வடக்கே திபெத்தில் உள்ள கைலாஷ், இந்திய எல்லையில் உள்ள
ஆதிகைலாஷ், ஓம் பர்வத், கேதார் பத்ரி என இமயத்தின் பல இடங்களுக்கும் சென்றிருக்கிறேன்.
மலையேற ஏற எண்ணங்கள் ஒடுங்குவதை அனுபவ ரீதியாக உணர்ந்துமிருக்கிறேன். ஒவ்வொரு யாத்திரையும்
பல்வேறு அனுபவங்களையும், பரந்துபட்ட பார்வையையும் நமக்குத் தருகிறது. பல்வேறு மனிதர்களின்
வாழ்வியலை அறிந்து கொள்ள உதவுகிறது.
திருப்பதி மலையை ஏறிச்சென்று வழிபட்ட ஒரு நாளில்தான் ஆதிகைலாஷ் யாத்திரை செல்வதென்று
எங்கள் குழுவினர் தீர்மானித்தோம். அப்போது என் நண்பர் ஒருவர் ஆதிகைலாஷ் செல்வதற்கு
உங்களுக்கு உடல் தகுதி இருக்கிறது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்றார். எப்படி
எனக் கேட்டேன். பொதிகை மலை ஏறிக் காட்டுங்கள், ஆதி கைலாஷ் அழைத்துச் செல்கிறேன் என்றார்.
நானும் சிரித்தபடி ஏறினா போச்சு என்றேன்.
எங்கள் குழுவினர் தீர்மானித்தோம். அப்போது என் நண்பர் ஒருவர் ஆதிகைலாஷ் செல்வதற்கு
உங்களுக்கு உடல் தகுதி இருக்கிறது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்றார். எப்படி
எனக் கேட்டேன். பொதிகை மலை ஏறிக் காட்டுங்கள், ஆதி கைலாஷ் அழைத்துச் செல்கிறேன் என்றார்.
நானும் சிரித்தபடி ஏறினா போச்சு என்றேன்.
அதே போல் 2008 ஏப்ரல் மாதம் 28ம் தேதி நெல்லை பாபநாசம் சென்ற நாங்கள் மறுநாள்
காரையார் அணை கடந்து பொதிகை ஏற ஆரம்பித்து மே ஒன்றாம் தேதி ஆறாயிரத்து ஐநூறு அடி உயரத்தில்
உள்ள அகத்தியரை வழிபட்டோம். என் சக்தியை நானறிந்த தினம் அன்று. ஏனெனில் பொதிகை மலை
ஏறுவது மிகவும் சவாலான விஷயம். சில இடங்களில் நாம் குரங்கு போல கை கால் எல்லாவற்றையும்
உபயோகப்படுத்தி, தொற்றிக் கொண்டு கூட ஏற வேண்டி வரும். சூரிய ஒளியே படாத பொதிகையின்
பல்லுயிர்க் காடுகளைக் கடந்து செல்வது புதியதொரு அனுபவம்.
காரையார் அணை கடந்து பொதிகை ஏற ஆரம்பித்து மே ஒன்றாம் தேதி ஆறாயிரத்து ஐநூறு அடி உயரத்தில்
உள்ள அகத்தியரை வழிபட்டோம். என் சக்தியை நானறிந்த தினம் அன்று. ஏனெனில் பொதிகை மலை
ஏறுவது மிகவும் சவாலான விஷயம். சில இடங்களில் நாம் குரங்கு போல கை கால் எல்லாவற்றையும்
உபயோகப்படுத்தி, தொற்றிக் கொண்டு கூட ஏற வேண்டி வரும். சூரிய ஒளியே படாத பொதிகையின்
பல்லுயிர்க் காடுகளைக் கடந்து செல்வது புதியதொரு அனுபவம்.
என்னைத் தூண்டி விட்ட நண்பர் ஆதிகைலாஷ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்தார். நானும்
என் இருபது வயது இளைய மகளும் சேர்ந்தே ஆதிகைலாஷ் செல்வதெனத் தீர்மானித்தோம். இந்திய
எல்லையோரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது ஆதி கயிலாயம். இதனை தரிசிக்க மிகவும்
கடினமானதொரு யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசு மூலம் கயிலாயம் மானசரோவர்
செல்லும் அதேவழியில்தான் இந்த யாத்திரையும் மேற்கொள்ளப்படும். ஆனால் இதை அந்த மாநில
அரசே நடத்துகிறது. கிட்டத்தட்ட ஐம்பபத்து மூன்று பேர் கொண்ட எங்கள் குழு, உத்தரகாண்ட்
அரசின் குமான் மண்டல் விகாஸ் நிஹாம் நிறுவனம் மூலம் இங்கிருந்து டெல்லிக்கு முதலில்
சென்றோம்.
என் இருபது வயது இளைய மகளும் சேர்ந்தே ஆதிகைலாஷ் செல்வதெனத் தீர்மானித்தோம். இந்திய
எல்லையோரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது ஆதி கயிலாயம். இதனை தரிசிக்க மிகவும்
கடினமானதொரு யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசு மூலம் கயிலாயம் மானசரோவர்
செல்லும் அதேவழியில்தான் இந்த யாத்திரையும் மேற்கொள்ளப்படும். ஆனால் இதை அந்த மாநில
அரசே நடத்துகிறது. கிட்டத்தட்ட ஐம்பபத்து மூன்று பேர் கொண்ட எங்கள் குழு, உத்தரகாண்ட்
அரசின் குமான் மண்டல் விகாஸ் நிஹாம் நிறுவனம் மூலம் இங்கிருந்து டெல்லிக்கு முதலில்
சென்றோம்.
டெல்லியிலிருந்து அன்றிரவே பேருந்து மூலம் 415 கி.மீ தூரம் பயணித்து ஜாகேஷ்வர்
நோக்கிச் செல்லும் வழியில் கங்கா ஆரத்தியும் காணக் கிடைத்தது. இந்த யாத்திரையில் நங்கள்
கண்டது ஜாகேஷ்வர், பாதாள் புவனேஸ்வர், நைனிடால் எனப் பல இடங்கள் என்றாலும், இந்தக்
கட்டுரையில் ஆதி கைலாஷ் மற்றும் ஓம் பரவத் யாத்திரை பற்றி மட்டும் பார்ப்போம்.
நோக்கிச் செல்லும் வழியில் கங்கா ஆரத்தியும் காணக் கிடைத்தது. இந்த யாத்திரையில் நங்கள்
கண்டது ஜாகேஷ்வர், பாதாள் புவனேஸ்வர், நைனிடால் எனப் பல இடங்கள் என்றாலும், இந்தக்
கட்டுரையில் ஆதி கைலாஷ் மற்றும் ஓம் பரவத் யாத்திரை பற்றி மட்டும் பார்ப்போம்.
ஜாகேஷ்வரிலிருந்து பாதாள் புவனேஸ்வர் வழியாக முந்நூற்று சொச்ச கி.மீ தூரம் மலைப்பாதையில்
பேருந்தில் பயணித்து நாம் அடையும் இடம் டார்ச்சுலா. இதுதான் ஆதி கைலாஷ் யாத்திரையின்
ஆதார முகாம். இங்கிருந்துதான் ஆயத்தங்கள் தொடங்கும். இரவு நேரம் என்பதால் எல்லோரும்
தூங்கிவிட்டோம். மறுநாள் காலை கண்விழிக்கும் போதே ஏதோ ஒரு பேரிரைச்சல் கேட்க என்னவென்று
புரியாமல் அறையின் பால்கனிக்கு வந்து பார்த்த நான் மலைத்துப் போனேன். எங்கள் ஹோட்டலை
ஒட்டி பொங்கிப் பிரவாகமாய் காளி நதி பெரும் இரைச்சலோடு ஓடிக் கொண்டிருந்தது. இந்தியாவையும்
நேபாளத்தையும் பிரித்தபடி ஓடுகிறது. நதிக்கு அந்தப் பக்கம் நேபாளம். இரு நாடுகளையும்
இணைக்கும் பாலம் இருக்கிறது. அடையாள அட்டையுடன் காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை
இந்த பாலத்தைக் கடந்து நேபாளிகள் இந்தியாவிற்கும், இந்தியர்கள் நேபாளத்திற்கும் செல்லலாம்.
மலையேறும் போது ஊன்றி நடப்பதற்கான கம்புகள் இங்கே விலைக்குக் கிடைக்கின்றன. குதிரைகளில்
செல்ல முடியாத இடங்களில் நாம் நடந்துதான் செல்ல வேண்டும் என்பதனால் இந்தக் கம்பைக்
கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
பேருந்தில் பயணித்து நாம் அடையும் இடம் டார்ச்சுலா. இதுதான் ஆதி கைலாஷ் யாத்திரையின்
ஆதார முகாம். இங்கிருந்துதான் ஆயத்தங்கள் தொடங்கும். இரவு நேரம் என்பதால் எல்லோரும்
தூங்கிவிட்டோம். மறுநாள் காலை கண்விழிக்கும் போதே ஏதோ ஒரு பேரிரைச்சல் கேட்க என்னவென்று
புரியாமல் அறையின் பால்கனிக்கு வந்து பார்த்த நான் மலைத்துப் போனேன். எங்கள் ஹோட்டலை
ஒட்டி பொங்கிப் பிரவாகமாய் காளி நதி பெரும் இரைச்சலோடு ஓடிக் கொண்டிருந்தது. இந்தியாவையும்
நேபாளத்தையும் பிரித்தபடி ஓடுகிறது. நதிக்கு அந்தப் பக்கம் நேபாளம். இரு நாடுகளையும்
இணைக்கும் பாலம் இருக்கிறது. அடையாள அட்டையுடன் காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை
இந்த பாலத்தைக் கடந்து நேபாளிகள் இந்தியாவிற்கும், இந்தியர்கள் நேபாளத்திற்கும் செல்லலாம்.
மலையேறும் போது ஊன்றி நடப்பதற்கான கம்புகள் இங்கே விலைக்குக் கிடைக்கின்றன. குதிரைகளில்
செல்ல முடியாத இடங்களில் நாம் நடந்துதான் செல்ல வேண்டும் என்பதனால் இந்தக் கம்பைக்
கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
டார்ச்சுலாவிலிருந்து மாங்தி என்னும் இடம் வரை 21 கி.மீ நம்மைப் பேருந்தில்
அழைத்துச் செல்கிறார்கள். பேருந்தில் செல்லும் இந்த மலைப் பயணம் ரம்யமானது. தூரத்து
அருவிகளும், பசுமை போர்த்திய மலைகளும் தவழும் மேகங்களும் மனதை மயக்கும். மலைப்பாதையில்
நிலச்சரிவுகள் ஏற்படுவது சர்வசாதாரணம். காளி நதியின் ஆக்ரோஷமான வேகம் பிரமிக்க வைக்கும்.
அழைத்துச் செல்கிறார்கள். பேருந்தில் செல்லும் இந்த மலைப் பயணம் ரம்யமானது. தூரத்து
அருவிகளும், பசுமை போர்த்திய மலைகளும் தவழும் மேகங்களும் மனதை மயக்கும். மலைப்பாதையில்
நிலச்சரிவுகள் ஏற்படுவது சர்வசாதாரணம். காளி நதியின் ஆக்ரோஷமான வேகம் பிரமிக்க வைக்கும்.
மாங்தியில்தான் நாம் குதிரையேற வேண்டும். அங்கே நம்மை வழியனுப்பி வைக்க இந்திய
திபெத் எல்லையோரக் காவல் படையினர் புன்சிரிப்புடன் காத்திருக்கிறார்கள். அந்தக் குளிரிலும்,
பனியிலும் அவர்கள் அங்கே பணியாற்றுவதால்தான் நாம் பாதுகாப்பாக இங்கே எல்லா சுகங்களையும்
அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
திபெத் எல்லையோரக் காவல் படையினர் புன்சிரிப்புடன் காத்திருக்கிறார்கள். அந்தக் குளிரிலும்,
பனியிலும் அவர்கள் அங்கே பணியாற்றுவதால்தான் நாம் பாதுகாப்பாக இங்கே எல்லா சுகங்களையும்
அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த யாத்திரை முழுவதும் இந்த காவல் படையினர் நமக்குச்
செய்யும் உதவிகள் ஏராளம். மாங்தியிலிருந்து, ஓம் பர்வத் மற்றும் ஆதிகயிலாயம் வரையுள்ள
98 கி.மீ தூரத்தை அடைய ஆளுக்கொரு குதிரையும், உதவியாளரும் வைத்துக் கொள்வது நல்லது.
நாங்கள் சென்ற சமயம், குதிரைகளுக்கு ஒரு கி.மீ தூரத்திற்கு ரூ.45ம் உதவியாளருக்கு ஒரு
கி.மீ தூரத்திற்கு ரூ.39ம் கட்டணமாக வசூலித்தார்கள். தற்போது அது பலமடங்காக அதிகரித்திருக்கக்கூடும்.
குதிரைக்காரர் நம்மைக் குதிரை மீது அமரவைத்து அழைத்துச் செல்வார். நடந்து செல்ல வேண்டிய
இடங்களில் உதவியாளர், நம்மை பத்திரமாக அழைத்துச் செல்வதோடு, நம் கைப்பை, கம்பு முதலியவற்றையும்
சுமந்து வருவார். ஒரு செட் மாற்று உடை, மழை கோட்டு போன்ற அத்தியாவசியமான பொருட்களைக்
கைப்பையில் வைத்துக் கொள்ள வேண்டும். இடுப்புப் பட்டை இருந்தால் அதில் பணம், அடையாள
அட்டை போன்றவற்றைப் பத்திரப்படுத்தி இடுப்பில் கட்டிக் கொள்ளலாம். மலையேறும் போது கண்டிப்பாகத்
தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தாகமிருக்கிறதோ இல்லையோ, அவ்வப்போது கண்டிப்பாக
நீரருந்த வேண்டும். முதல் இரண்டு நாட்கள் வழியில் நாம் செல்லும் பாதையிலேயே வழியெங்கும்
சிறிதும் பெரிதுமான அருவிகள் தென்படும். சுத்தமான தண்ணீர் கிடைக்கும். பாட்டில் நீர்
தீர்ந்துவிட்டால் பிடித்துக் கொள்ளலாம்.
செய்யும் உதவிகள் ஏராளம். மாங்தியிலிருந்து, ஓம் பர்வத் மற்றும் ஆதிகயிலாயம் வரையுள்ள
98 கி.மீ தூரத்தை அடைய ஆளுக்கொரு குதிரையும், உதவியாளரும் வைத்துக் கொள்வது நல்லது.
நாங்கள் சென்ற சமயம், குதிரைகளுக்கு ஒரு கி.மீ தூரத்திற்கு ரூ.45ம் உதவியாளருக்கு ஒரு
கி.மீ தூரத்திற்கு ரூ.39ம் கட்டணமாக வசூலித்தார்கள். தற்போது அது பலமடங்காக அதிகரித்திருக்கக்கூடும்.
குதிரைக்காரர் நம்மைக் குதிரை மீது அமரவைத்து அழைத்துச் செல்வார். நடந்து செல்ல வேண்டிய
இடங்களில் உதவியாளர், நம்மை பத்திரமாக அழைத்துச் செல்வதோடு, நம் கைப்பை, கம்பு முதலியவற்றையும்
சுமந்து வருவார். ஒரு செட் மாற்று உடை, மழை கோட்டு போன்ற அத்தியாவசியமான பொருட்களைக்
கைப்பையில் வைத்துக் கொள்ள வேண்டும். இடுப்புப் பட்டை இருந்தால் அதில் பணம், அடையாள
அட்டை போன்றவற்றைப் பத்திரப்படுத்தி இடுப்பில் கட்டிக் கொள்ளலாம். மலையேறும் போது கண்டிப்பாகத்
தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தாகமிருக்கிறதோ இல்லையோ, அவ்வப்போது கண்டிப்பாக
நீரருந்த வேண்டும். முதல் இரண்டு நாட்கள் வழியில் நாம் செல்லும் பாதையிலேயே வழியெங்கும்
சிறிதும் பெரிதுமான அருவிகள் தென்படும். சுத்தமான தண்ணீர் கிடைக்கும். பாட்டில் நீர்
தீர்ந்துவிட்டால் பிடித்துக் கொள்ளலாம்.
மாங்தியில் குதிரையேறியபின் காலா என்ற இடம் நோக்கி நம் பயணம் ஆரம்பிக்கிறது.
இடைப்பட்ட தூரம் எட்டு கி.மீ. பல இடங்களில் குதிரை செங்குத்தாக ஏறுவது போல இருக்கும்.
குதிரையில் அமரும்போது ஒரு விஷயத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தால் சௌகரியமாகச் செல்லலாம்.
அதாவது குதிரை ஏற்றத்தில் செல்லும்போது நாம் முன்புறமாக அதன் மீது சாய்ந்து கொள்ள வேண்டும்.
இறக்கத்தில் செல்லும்போது நாம் நம் உடலைப் பின்புறமாகக் கொண்டு சென்று ஒருகையால் அதன்
வளையத்தைப் பற்றிக் கொண்டு ஒரு கையைப் பின்னால் கொண்டு சென்று நாம் அமர்ந்திருக்கும்
இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் ஏற்ற இறக்கங்களில்
முன்பாரமும் பின்பாரமும் சமமாவதால், குதிரைக்கும் சங்கடத்தை அளிக்காது. ஏனெனில் மிகக்
கடினமான பயணம் இது. குதிரைக்கே கூட பல இடங்களில் மூச்சிரைத்து மேற்கொண்டு நம்மைச் சுமக்க
இயலாமல் சண்டித்தனம் செய்யும்.
இடைப்பட்ட தூரம் எட்டு கி.மீ. பல இடங்களில் குதிரை செங்குத்தாக ஏறுவது போல இருக்கும்.
குதிரையில் அமரும்போது ஒரு விஷயத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தால் சௌகரியமாகச் செல்லலாம்.
அதாவது குதிரை ஏற்றத்தில் செல்லும்போது நாம் முன்புறமாக அதன் மீது சாய்ந்து கொள்ள வேண்டும்.
இறக்கத்தில் செல்லும்போது நாம் நம் உடலைப் பின்புறமாகக் கொண்டு சென்று ஒருகையால் அதன்
வளையத்தைப் பற்றிக் கொண்டு ஒரு கையைப் பின்னால் கொண்டு சென்று நாம் அமர்ந்திருக்கும்
இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் ஏற்ற இறக்கங்களில்
முன்பாரமும் பின்பாரமும் சமமாவதால், குதிரைக்கும் சங்கடத்தை அளிக்காது. ஏனெனில் மிகக்
கடினமான பயணம் இது. குதிரைக்கே கூட பல இடங்களில் மூச்சிரைத்து மேற்கொண்டு நம்மைச் சுமக்க
இயலாமல் சண்டித்தனம் செய்யும்.
மாங்தியிலிருந்து காலா பயணம் இனியது. நடுவில் தேநீர்க் கடைகள் தென்படுகின்றன.
இமயத்தில் தேநீர் அருந்தும் சுகம் பின்னர் கிடைக்குமா? எனவே குதிரையிலிருந்து இறங்கி
ஆற அமர தேநீரைச் சுவைத்துப் பருகிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்து, பிற்பகலில் காலாவை
அடைந்தோம். அன்றிரவு அங்குதான் தங்க வேண்டும். தங்குமிடத்திலிருந்து சுற்றிலுமிருந்த
மலைகளைக் காண்பது திகட்டாத விஷயம்.
இமயத்தில் தேநீர் அருந்தும் சுகம் பின்னர் கிடைக்குமா? எனவே குதிரையிலிருந்து இறங்கி
ஆற அமர தேநீரைச் சுவைத்துப் பருகிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்து, பிற்பகலில் காலாவை
அடைந்தோம். அன்றிரவு அங்குதான் தங்க வேண்டும். தங்குமிடத்திலிருந்து சுற்றிலுமிருந்த
மலைகளைக் காண்பது திகட்டாத விஷயம்.
காலாவிலிருந்து புத்தி என்ற இடம் வரை செல்லும் இரண்டாம் நாள் பயணம்தான் இந்த
யாத்திரையில் மிகவும் சவாலானது. மிக நீண்டது. சுமார் 21 கி.மீ தூரம் கொண்டது. இந்த
இரண்டாம் நாளில் இந்த பயணம் துவங்கும் போது குதிரைகளின் மீது 7000 அடி உயரத்தில் மலைவிளிம்பில்
பயணிக்கும் நம்மை ஒருசில கி.மீ தூரம் சென்றதும் ஓரிடத்தில் குதிரைகளில் இறக்கி விட்டு
விடுவார்கள். அங்கிருந்து சுமார் 4440 அடிகள் நாம் கீழ்நோக்கி இறங்கி நடக்க வேண்டும்.
இறக்கங்களில் குதிரைமீது பயணிக்க இயலாது. கடினமான இறங்குமுக பயணத்தின் முடிவில் மலையிலிருந்து
இறங்கி காளி நதியின் கரையோரத்திற்கு நதியைத் தொடுவது போல வந்திருப்போம். இந்த இரண்டாம்
நாள் பயணம் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும். கடுமையானது மட்டுமல்ல, இனிமையானதும்
கூட. நாம் செல்லும் பாதையில் நூற்றுக்கணக்கில் சிறிதும் பெரிதுமான அருவிகள் நம்மை வரவேற்கும்.
மேகக் கூட்டங்கள் நம்மை உரசிச் செல்லும். உருவமே தெரியாத அளவுக்குப் பனிமூட்டங்கள்
இருக்கும்.
யாத்திரையில் மிகவும் சவாலானது. மிக நீண்டது. சுமார் 21 கி.மீ தூரம் கொண்டது. இந்த
இரண்டாம் நாளில் இந்த பயணம் துவங்கும் போது குதிரைகளின் மீது 7000 அடி உயரத்தில் மலைவிளிம்பில்
பயணிக்கும் நம்மை ஒருசில கி.மீ தூரம் சென்றதும் ஓரிடத்தில் குதிரைகளில் இறக்கி விட்டு
விடுவார்கள். அங்கிருந்து சுமார் 4440 அடிகள் நாம் கீழ்நோக்கி இறங்கி நடக்க வேண்டும்.
இறக்கங்களில் குதிரைமீது பயணிக்க இயலாது. கடினமான இறங்குமுக பயணத்தின் முடிவில் மலையிலிருந்து
இறங்கி காளி நதியின் கரையோரத்திற்கு நதியைத் தொடுவது போல வந்திருப்போம். இந்த இரண்டாம்
நாள் பயணம் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும். கடுமையானது மட்டுமல்ல, இனிமையானதும்
கூட. நாம் செல்லும் பாதையில் நூற்றுக்கணக்கில் சிறிதும் பெரிதுமான அருவிகள் நம்மை வரவேற்கும்.
மேகக் கூட்டங்கள் நம்மை உரசிச் செல்லும். உருவமே தெரியாத அளவுக்குப் பனிமூட்டங்கள்
இருக்கும்.
புத்தி செல்லும் பயணப் பாதையில்தான் லகன்பூரை அடுத்து மால்பா என்ற இடத்தைக்
கடப்போம். இந்த மால்பா என்ற பெயரைக் கேட்டால் இப்போதும் எல்லோருக்கும் அடிவயிறு கலங்கும்.
1998ம் ஆண்டு கயிலாயம் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பி வரும் வழியில் இங்கு தங்கியிருந்த
யாத்ரீகர்கள், உதவியாளர்கள், குதிரைகள் உட்பட சுமார் இருநூறு பேர் மற்றும் கிராமவாசிகள்
எனப் பலநூறு உயிர்கள் இங்கு ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானார்கள். ஒரு கிராமமே
புதையுண்டு போனதாகக் கூறப்படுகிறது. பாதிபேரின் உடல்களைக்கூட வெளியில் எடுக்க இயலவில்லையாம்.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரில் பிரபல நாட்டிய மேதை புரோதிமா பேடியும் ஒருவர்
என்பது வேதனையான விஷயம். இந்த இடத்தில் குதிரைக்காரர்கள், உதவியாளர்கள் அனைவரும் சிலநிமிடம்
நின்று மௌனமாக அஞ்சலி செலுத்தி பிரார்த்திக்க, நாங்களும் அவர்களோடு அங்கு சிலநிமிடம்
மௌன அஞ்சலி செலுத்தினோம். அந்த நிலச்சரிவின் சுவடு மாறாமல் அப்படியே இருக்கிறது அங்கு.
இறந்தவர்களுக்காக ஒரு நினைவுச் சின்னமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நம்மை அதிகநேரம்
இருக்க விடுவதில்லை குதிரைக்காரர்கள். இது நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான இடம் என்பதால்
மிகுந்த பாதுகாப்பாக நம்மை இங்கிருந்து அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
கடப்போம். இந்த மால்பா என்ற பெயரைக் கேட்டால் இப்போதும் எல்லோருக்கும் அடிவயிறு கலங்கும்.
1998ம் ஆண்டு கயிலாயம் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பி வரும் வழியில் இங்கு தங்கியிருந்த
யாத்ரீகர்கள், உதவியாளர்கள், குதிரைகள் உட்பட சுமார் இருநூறு பேர் மற்றும் கிராமவாசிகள்
எனப் பலநூறு உயிர்கள் இங்கு ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானார்கள். ஒரு கிராமமே
புதையுண்டு போனதாகக் கூறப்படுகிறது. பாதிபேரின் உடல்களைக்கூட வெளியில் எடுக்க இயலவில்லையாம்.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரில் பிரபல நாட்டிய மேதை புரோதிமா பேடியும் ஒருவர்
என்பது வேதனையான விஷயம். இந்த இடத்தில் குதிரைக்காரர்கள், உதவியாளர்கள் அனைவரும் சிலநிமிடம்
நின்று மௌனமாக அஞ்சலி செலுத்தி பிரார்த்திக்க, நாங்களும் அவர்களோடு அங்கு சிலநிமிடம்
மௌன அஞ்சலி செலுத்தினோம். அந்த நிலச்சரிவின் சுவடு மாறாமல் அப்படியே இருக்கிறது அங்கு.
இறந்தவர்களுக்காக ஒரு நினைவுச் சின்னமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நம்மை அதிகநேரம்
இருக்க விடுவதில்லை குதிரைக்காரர்கள். இது நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான இடம் என்பதால்
மிகுந்த பாதுகாப்பாக நம்மை இங்கிருந்து அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
நாம் பயணிக்கும் பாதை மிகக் குறுகலானது. பாறைக்கற்கள் நிறைந்தது. நீர்வீழ்ச்சிகளில்
நனைந்தபடிதான் நடந்து செல்ல வேண்டியிருக்கும். மலை பல இடங்களில் குடையப்பட்டு நமக்குக்
குடை பிடித்தாற்போல இருக்கிறது. அந்தக் குடையின் மேற்புறமாக அருவி வழிந்து கொட்ட, நீர்த்திவலைகள்
நம் மீது தெறிக்க நடுவில் நடந்து செல்வோம். காளி நதியின் ஆக்ரோஷத்தை வெகு அருகில் காணமுடியும்.
பழுப்பு நிற காளி நதியோடு வெள்ளை நிறத்தில் உள்ள டிங்கர் நதி சங்கமிக்கும் அழகையும்
நடுவே ஓரிடத்தில் காணமுடியும்.
நனைந்தபடிதான் நடந்து செல்ல வேண்டியிருக்கும். மலை பல இடங்களில் குடையப்பட்டு நமக்குக்
குடை பிடித்தாற்போல இருக்கிறது. அந்தக் குடையின் மேற்புறமாக அருவி வழிந்து கொட்ட, நீர்த்திவலைகள்
நம் மீது தெறிக்க நடுவில் நடந்து செல்வோம். காளி நதியின் ஆக்ரோஷத்தை வெகு அருகில் காணமுடியும்.
பழுப்பு நிற காளி நதியோடு வெள்ளை நிறத்தில் உள்ள டிங்கர் நதி சங்கமிக்கும் அழகையும்
நடுவே ஓரிடத்தில் காணமுடியும்.
ஒருவழியாக மாலை மயங்கும் நேரத்தில் புத்தி முகாமை அடையும் நம்மை அன்போடு சூடான
தேநீர் கொடுத்து வரவேற்கிறார்கள் இந்திய திபெத் எல்லையோரக் காவல் படையினர். நமக்கான
உணவும் அங்கே சூடாக தயார் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அத்தனை தூரம் நடந்து வந்த
களைப்பை மறந்து எல்லோரும் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டோம். இரவு உணவுக்குப்
பின் உடல்வலி தெரியாதிருக்க மாத்திரைகள் உட்கொண்டு ஜாலியாகச் சிரித்து பேசியபடி, அடுத்தநாள்
மிக மிகக் கடினமான ஒரு மலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதறியாமல் தூங்கிப்போனோம்.
தேநீர் கொடுத்து வரவேற்கிறார்கள் இந்திய திபெத் எல்லையோரக் காவல் படையினர். நமக்கான
உணவும் அங்கே சூடாக தயார் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அத்தனை தூரம் நடந்து வந்த
களைப்பை மறந்து எல்லோரும் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டோம். இரவு உணவுக்குப்
பின் உடல்வலி தெரியாதிருக்க மாத்திரைகள் உட்கொண்டு ஜாலியாகச் சிரித்து பேசியபடி, அடுத்தநாள்
மிக மிகக் கடினமான ஒரு மலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதறியாமல் தூங்கிப்போனோம்.
*
புத்தி முகாமிலிருந்து மறுநாள் விடியல் நேரத்திலேயே தேநீர் அருந்திவிட்டுக்
கிளம்பினோம். குதிரையில் அமர்ந்தாயிற்று. சகதிக் குளமாக இருந்த பாதையில் ஒரு கி.மீ
தூரம் சென்றபிறகு குதிரைக்காரர் ஹிந்தியில் ஏதோ சொன்னார். ஹிந்தி மாலும் நஹி என்றேன்.
சிரித்தவர் என்னருகில் வந்து என் முதுகை முன்புறமாகத் தள்ளி என்னை முன்புறமாகச் சாய்த்துவிட்டுக்
குதிரையை நடத்தினார். எனக்குப் புரியவில்லை. நானும் முன்புறமாக சாய்ந்து அமர்ந்திருந்தேன்.
அடுத்த பத்தாம் நிமிடம் அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பதற்குக் காரணம் புரிந்தது.
நாங்கள் சென்ற பாதை வெகு செங்குத்தாக மேலேறியது. பார்க்கவே திகைப்பாக இருந்தது. சிறிதும்
பெரிதுமான பாறைக்கற்கள் ஒழுங்கற்ற உயரங்களில் படிக்கட்டு அமைத்தாற் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
குதிரை அதில் ஏற ஆரம்பித்ததும் பயத்தில் சற்றே என் அடிவயிறு குழைந்தது. பின்புறமாகக்
கீழே விழுந்து விடுவேனோ என்று பயப்படும் அளவுக்கு குதிரையின் முன்புறம் மேல்நோக்கியும்
பின்புறம் சரிந்துமிருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட ஐந்து கி.மீ. தூரம் இந்த
செங்குத்துப் பயணம் தொடர்ந்தது. குதிரைக்கே நக்கு தள்ளும் மலையேற்றம். குதிரை மூச்சிரைத்தபடி
ஆங்காங்கே மேற்கொண்டு ஏராமால் சண்டித்தனம் செய்ய, குதிரைக்காரர்கள் வெகு லாகவமாக அதன்
பின்புறத்தைப் பிடித்துத் தள்ளி மேலேற்றினார்கள். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரம்
இந்த மலையேற்றம் தொடர்ந்தது. நாங்கள் குதிரையின் முன்புறம் பல்லி மாதிரி சரிந்து படுத்து
ஒட்டிக் கொண்டிருந்தோம். இத மலையேற்றத்தில் யாரும் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாத
நிலை. நாக்கு வறண்டு போயிற்று. எப்போது சமவெளியை அடையப்போகிறோம் என்று தோன்ற ஆரம்பித்தது.
குதிரைக்காரர்கள் ஒரு வினாடி அசந்தாலும் யாரேனும் குப்புற விழக்கூடும். ஆனால் அவர்கள்
மிக லாகவமாகக் குதிரைகளை மேலேற்றினார்கள். சமவெளி வந்ததும் எங்களைக் குதிரை மீதிருந்து
இறக்கி விட்டார்கள். நாங்கள் அத்தனை பேரும் அவர்களோடு கைகுலுக்கி அவர்களைப் பாராட்டி
நெகிழ்ந்தோம். நான் என் குதிரைக்காரர் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டேன். மிகவும்
கூச்ச சுபாவம் கொண்ட அவர் லேசாக என் கண் கலங்கியிருப்பதைப் பார்த்துக் குழந்தை மாதிரி
சிரித்தார்.
கிளம்பினோம். குதிரையில் அமர்ந்தாயிற்று. சகதிக் குளமாக இருந்த பாதையில் ஒரு கி.மீ
தூரம் சென்றபிறகு குதிரைக்காரர் ஹிந்தியில் ஏதோ சொன்னார். ஹிந்தி மாலும் நஹி என்றேன்.
சிரித்தவர் என்னருகில் வந்து என் முதுகை முன்புறமாகத் தள்ளி என்னை முன்புறமாகச் சாய்த்துவிட்டுக்
குதிரையை நடத்தினார். எனக்குப் புரியவில்லை. நானும் முன்புறமாக சாய்ந்து அமர்ந்திருந்தேன்.
அடுத்த பத்தாம் நிமிடம் அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பதற்குக் காரணம் புரிந்தது.
நாங்கள் சென்ற பாதை வெகு செங்குத்தாக மேலேறியது. பார்க்கவே திகைப்பாக இருந்தது. சிறிதும்
பெரிதுமான பாறைக்கற்கள் ஒழுங்கற்ற உயரங்களில் படிக்கட்டு அமைத்தாற் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
குதிரை அதில் ஏற ஆரம்பித்ததும் பயத்தில் சற்றே என் அடிவயிறு குழைந்தது. பின்புறமாகக்
கீழே விழுந்து விடுவேனோ என்று பயப்படும் அளவுக்கு குதிரையின் முன்புறம் மேல்நோக்கியும்
பின்புறம் சரிந்துமிருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட ஐந்து கி.மீ. தூரம் இந்த
செங்குத்துப் பயணம் தொடர்ந்தது. குதிரைக்கே நக்கு தள்ளும் மலையேற்றம். குதிரை மூச்சிரைத்தபடி
ஆங்காங்கே மேற்கொண்டு ஏராமால் சண்டித்தனம் செய்ய, குதிரைக்காரர்கள் வெகு லாகவமாக அதன்
பின்புறத்தைப் பிடித்துத் தள்ளி மேலேற்றினார்கள். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரம்
இந்த மலையேற்றம் தொடர்ந்தது. நாங்கள் குதிரையின் முன்புறம் பல்லி மாதிரி சரிந்து படுத்து
ஒட்டிக் கொண்டிருந்தோம். இத மலையேற்றத்தில் யாரும் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாத
நிலை. நாக்கு வறண்டு போயிற்று. எப்போது சமவெளியை அடையப்போகிறோம் என்று தோன்ற ஆரம்பித்தது.
குதிரைக்காரர்கள் ஒரு வினாடி அசந்தாலும் யாரேனும் குப்புற விழக்கூடும். ஆனால் அவர்கள்
மிக லாகவமாகக் குதிரைகளை மேலேற்றினார்கள். சமவெளி வந்ததும் எங்களைக் குதிரை மீதிருந்து
இறக்கி விட்டார்கள். நாங்கள் அத்தனை பேரும் அவர்களோடு கைகுலுக்கி அவர்களைப் பாராட்டி
நெகிழ்ந்தோம். நான் என் குதிரைக்காரர் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டேன். மிகவும்
கூச்ச சுபாவம் கொண்ட அவர் லேசாக என் கண் கலங்கியிருப்பதைப் பார்த்துக் குழந்தை மாதிரி
சிரித்தார்.
ஒருவகையில் ஹிமாலயப் பயணம் என்பது வாழ்க்கைப் பயணத்தை ஒத்ததுதான். மலைக்க வைக்கும்
ஏற்ற இறக்கங்களும், இதைக் கடந்து செல்வோமா என்று பயமுறுத்தும் சூழல்களும் நம் வாழ்விலும்
எதிர்ப்படுகிறது. நம்மை பத்திரமாக அவற்றைக் கடக்கச் செய்வது கண்டிப்பாக நாம் வணங்கும்
கடவுள் என்னும் குதிரைக்காரன்தான். நம் கர்மாதான் குதிரைகளாக இருந்து நம்மைச் சுமந்தபடி
ஒவ்வொன்றாகக் கடந்து செல்கிறதோ என்று எனக்குத் தோன்றியது.
ஏற்ற இறக்கங்களும், இதைக் கடந்து செல்வோமா என்று பயமுறுத்தும் சூழல்களும் நம் வாழ்விலும்
எதிர்ப்படுகிறது. நம்மை பத்திரமாக அவற்றைக் கடக்கச் செய்வது கண்டிப்பாக நாம் வணங்கும்
கடவுள் என்னும் குதிரைக்காரன்தான். நம் கர்மாதான் குதிரைகளாக இருந்து நம்மைச் சுமந்தபடி
ஒவ்வொன்றாகக் கடந்து செல்கிறதோ என்று எனக்குத் தோன்றியது.
மிகவும் அபாயகரமானதொரு ஏற்றத்தைக் கடந்துவிட்டோம் என்று சந்தோஷப்பட்டு விட முடியாது.
இன்னும் பயணம் இருக்கிறது. ஏற்ற இறக்கங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் குதிரைக்காரர்
இருக்க கவலை எதற்கு?
இன்னும் பயணம் இருக்கிறது. ஏற்ற இறக்கங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் குதிரைக்காரர்
இருக்க கவலை எதற்கு?
புத்தியிலிருந்து ஐந்து கிமீ. செங்குத்தான மலையேற்றத்தைக் கடந்து நாங்கள் வந்து
சேர்ந்த இடம். சியாலேக் சமவெளி. நாங்கள் குதிரையிலிருந்து இறங்கிய இடத்திலிருந்து சற்று
தூரம் நடந்தால் ஒரு செக்போஸ்ட் இருக்கிறது. எல்லையோரக் காவல் படையினர் அங்கே அமர்ந்து
நம்மைப் பற்றிய விவரங்களை ஒரு பதிவேட்டில் எழுதிக் கொண்டு, நமது அடையாள அட்டைகளைச்
சரிபார்த்த பிறகுதான் மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்கிறார்கள்.
சேர்ந்த இடம். சியாலேக் சமவெளி. நாங்கள் குதிரையிலிருந்து இறங்கிய இடத்திலிருந்து சற்று
தூரம் நடந்தால் ஒரு செக்போஸ்ட் இருக்கிறது. எல்லையோரக் காவல் படையினர் அங்கே அமர்ந்து
நம்மைப் பற்றிய விவரங்களை ஒரு பதிவேட்டில் எழுதிக் கொண்டு, நமது அடையாள அட்டைகளைச்
சரிபார்த்த பிறகுதான் மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்கிறார்கள்.
சியாலேக் பகுதி மிக அழகான இடம். எல்லைகடந்த நேபாளத்தில் உள்ள பனி போர்த்திய
அன்னபூர்ணா சிகரங்களின் முதல் தரிசனம் இங்குதான் நமக்குக் கிடைக்கிறது. இந்த இடத்திற்கு
மலர்களின் சமவெளி என்றும் ஒரு பெயருண்டு. எங்கு நோக்கினும் பல்வேறு நிறங்களில் அழகிய
மலர்கள் சிரிக்கின்றன.
அன்னபூர்ணா சிகரங்களின் முதல் தரிசனம் இங்குதான் நமக்குக் கிடைக்கிறது. இந்த இடத்திற்கு
மலர்களின் சமவெளி என்றும் ஒரு பெயருண்டு. எங்கு நோக்கினும் பல்வேறு நிறங்களில் அழகிய
மலர்கள் சிரிக்கின்றன.
எங்கள் குதிரைப்பயணம் தொடர்ந்தது.
(பயணம் தொடரும்)