
புதுடெல்லிக்கான சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 08,2020 அன்று
நடந்தது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11,2020 அன்று
வெளியாகின. மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும் பாரதிய ஜனதா கட்சி8 இடங்களையும்
பிடித்தன. காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. டெல்லியின் தேர்தல் முடிவுகளை
டெல்லியோடு மட்டுமே நாம் பொருத்திப் பார்க்கக் கூடாது. இன்றைய காலகட்டத்தில்
வாக்காளர்களின் மனநிலை எப்படிச் செயல்படுகிறது என்பதை ஒவ்வொரு கட்சியும் கூர்ந்து
கவனிக்க வேண்டும். அதைத் தவறவிடும் கட்சிகள் மக்களை விட்டு வெகு தூரத்திற்குச்
செல்லும் என்பதைத்தான் டெல்லி முடிவுகள் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது. அதற்கான
காரணங்களைக் காண்போம்.
நடந்தது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11,2020 அன்று
வெளியாகின. மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும் பாரதிய ஜனதா கட்சி8 இடங்களையும்
பிடித்தன. காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. டெல்லியின் தேர்தல் முடிவுகளை
டெல்லியோடு மட்டுமே நாம் பொருத்திப் பார்க்கக் கூடாது. இன்றைய காலகட்டத்தில்
வாக்காளர்களின் மனநிலை எப்படிச் செயல்படுகிறது என்பதை ஒவ்வொரு கட்சியும் கூர்ந்து
கவனிக்க வேண்டும். அதைத் தவறவிடும் கட்சிகள் மக்களை விட்டு வெகு தூரத்திற்குச்
செல்லும் என்பதைத்தான் டெல்லி முடிவுகள் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது. அதற்கான
காரணங்களைக் காண்போம்.
வட இந்திய வாக்காளர்கள்
முட்டாள்கள் – ஆர்.எஸ்.பாரதி
முட்டாள்கள் – ஆர்.எஸ்.பாரதி
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வட இந்தியர்களை
முட்டாள்கள் என்கிறார். இது தமிழகத்தில் உள்ள பல திராவிடத் தமிழர்களுக்குள்ள
ஒருவிதமான மன நோய். கல்வியறிவில் வட இந்தியர்கள் தமிழகத்தை விடப்
பின்தங்கியுள்ளார்கள் என்பதாலும், வட இந்தியர்கள் தமிழகம் வாக்களிக்கும் முறைக்கு
நேரெதிராக வாக்களிப்பதாலும், திராவிடத் தமிழர்கள் வட இந்திய வாக்காளர்களை
முட்டாள்கள் என்று கருத்தை உதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். எந்த ஒரு
மாநிலத்தையும் இப்படிப் பார்ப்பது
தவறானது.
முட்டாள்கள் என்கிறார். இது தமிழகத்தில் உள்ள பல திராவிடத் தமிழர்களுக்குள்ள
ஒருவிதமான மன நோய். கல்வியறிவில் வட இந்தியர்கள் தமிழகத்தை விடப்
பின்தங்கியுள்ளார்கள் என்பதாலும், வட இந்தியர்கள் தமிழகம் வாக்களிக்கும் முறைக்கு
நேரெதிராக வாக்களிப்பதாலும், திராவிடத் தமிழர்கள் வட இந்திய வாக்காளர்களை
முட்டாள்கள் என்று கருத்தை உதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். எந்த ஒரு
மாநிலத்தையும் இப்படிப் பார்ப்பது
தவறானது.
1975ல் இந்தியா முழுமைக்கும் இந்திரா எமெர்ஜென்சி சட்டத்தைக் கொண்டு
வந்தார். அதன் பிறகு நடந்த லோக்சபா தேர்தலில் (1977)
இந்தியா முழுமைக்கும் இந்திராவின் கொடுங்கோல ஆட்சிக்கு எதிராக ஜனதாகட்சி பெரும்
வெற்றி பெற்றது. குறிப்பாக வட இந்தியாவில் மாபெரும் வெற்றியை ஜனதா கட்சியும் தென்
இந்தியாவில் காங்கிரசும் அதிக இடங்களைப் பிடித்தன. அதிலும் தமிழகத்தில் காங்கிரஸ்
அதிமுக கூட்டணி 34 இடங்களைப் பிடித்திருந்தது. ஓர்
கொடுங்கோல ஆட்சிக்குப் பின்னாக நடந்த தேர்தலில் தலைகீழாக வாக்களித்தவர்கள்
புத்திசாலியான வாக்காளர்களா என்று கேட்டால் திராவிடத் தமிழர்கள் முகத்தை எங்கு
கொண்டு வைப்பார்கள்? இதை விடுங்கள், வட இந்திய வாக்காளர்களும் புத்திசாலிகள்
என்பதற்கு சமீப காலத்தில் நடந்த இன்னொரு உதாரணம் தருகிறேன்.
வந்தார். அதன் பிறகு நடந்த லோக்சபா தேர்தலில் (1977)
இந்தியா முழுமைக்கும் இந்திராவின் கொடுங்கோல ஆட்சிக்கு எதிராக ஜனதாகட்சி பெரும்
வெற்றி பெற்றது. குறிப்பாக வட இந்தியாவில் மாபெரும் வெற்றியை ஜனதா கட்சியும் தென்
இந்தியாவில் காங்கிரசும் அதிக இடங்களைப் பிடித்தன. அதிலும் தமிழகத்தில் காங்கிரஸ்
அதிமுக கூட்டணி 34 இடங்களைப் பிடித்திருந்தது. ஓர்
கொடுங்கோல ஆட்சிக்குப் பின்னாக நடந்த தேர்தலில் தலைகீழாக வாக்களித்தவர்கள்
புத்திசாலியான வாக்காளர்களா என்று கேட்டால் திராவிடத் தமிழர்கள் முகத்தை எங்கு
கொண்டு வைப்பார்கள்? இதை விடுங்கள், வட இந்திய வாக்காளர்களும் புத்திசாலிகள்
என்பதற்கு சமீப காலத்தில் நடந்த இன்னொரு உதாரணம் தருகிறேன்.
ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும்பாராளுமன்றத் தேர்தலும் 2019ல் ஒரே நேரத்தில்
நடக்கிறது. அங்குள்ள வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சியை 8 லோக்சபா
இடங்களில் வெற்றி பெறச் செய்கிறார்கள். இது 56 சட்டசபை
இடங்களை வெல்வதற்கான எண்ணிக்கை. ஆனால், அதேதினத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில்
பாஜக வெறும் 23 இடங்களையே பிடிக்கிறது. நவீன்
பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமோ 112 சட்டசபை இடங்களைப்
பிடித்தாலும் லோக்சபா தேர்தலில் 12 இடங்களைத் (84 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடங்களைத்) தான் பெறுகிறது. பெரும்பாலும்
பணம் கொடுத்து வாக்காளர்களை மயக்காமல் நடக்கும் தேர்தலில் ஒரு மாநில வாக்காளர்கள்
இப்படி வாக்களிக்கிறார்கள் என்றால், உண்மையில் அவர்களிடம் தெளிவு இருக்கிறது
என்றுதான் பார்க்கவேண்டும். இந்த எளிய மக்களைத்தான் திராவிடத் தமிழர்கள் என்று
சொல்லிக் கொள்பவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள்.
நடக்கிறது. அங்குள்ள வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சியை 8 லோக்சபா
இடங்களில் வெற்றி பெறச் செய்கிறார்கள். இது 56 சட்டசபை
இடங்களை வெல்வதற்கான எண்ணிக்கை. ஆனால், அதேதினத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில்
பாஜக வெறும் 23 இடங்களையே பிடிக்கிறது. நவீன்
பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமோ 112 சட்டசபை இடங்களைப்
பிடித்தாலும் லோக்சபா தேர்தலில் 12 இடங்களைத் (84 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடங்களைத்) தான் பெறுகிறது. பெரும்பாலும்
பணம் கொடுத்து வாக்காளர்களை மயக்காமல் நடக்கும் தேர்தலில் ஒரு மாநில வாக்காளர்கள்
இப்படி வாக்களிக்கிறார்கள் என்றால், உண்மையில் அவர்களிடம் தெளிவு இருக்கிறது
என்றுதான் பார்க்கவேண்டும். இந்த எளிய மக்களைத்தான் திராவிடத் தமிழர்கள் என்று
சொல்லிக் கொள்பவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள்.
இப்போது இன்னொரு வட இந்தியப் பகுதியான டெல்லியைப்
பார்க்கலாம். அங்குள்ள வாக்காளர்கள் மிகத் தெளிவாக வாக்களிக்கும் முறையைப்
பின்பற்றுகிறார்கள். 2013ல் பாஜக 32 (34%), ஆம் ஆத்மி, 28(29%), காங்கிரஸ் 8 (24.8%) இடங்களில் வெல்கிறது.
இந்தத் தேர்தலில் குழப்பமான ஓர் முடிவு வருகிறது. ஏனெனில், ஆம் ஆத்மியின் தொடர்
போராட்ட முறைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து இருக்கிறது. காங்கிரசுடன் ஆட்சி
அமைத்த கெஜ்ரிவால் மூன்று மாதங்களுக்குள்ளாகத் தானே ஆட்சியைக் கலைத்து விடுகிறார்.
அதன் பிறகுஆறு மாதத்திற்குள்ளாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. டெல்லி வாக்காளர்கள்
மிகத் தெளிவாக மோடிதான் பிரதமராக வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள். மொத்தமுள்ள 7
இடங்களிலும் பாஜக வெல்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஓர் இடத்தைக்
கூடப் பெறவில்லை.
பார்க்கலாம். அங்குள்ள வாக்காளர்கள் மிகத் தெளிவாக வாக்களிக்கும் முறையைப்
பின்பற்றுகிறார்கள். 2013ல் பாஜக 32 (34%), ஆம் ஆத்மி, 28(29%), காங்கிரஸ் 8 (24.8%) இடங்களில் வெல்கிறது.
இந்தத் தேர்தலில் குழப்பமான ஓர் முடிவு வருகிறது. ஏனெனில், ஆம் ஆத்மியின் தொடர்
போராட்ட முறைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து இருக்கிறது. காங்கிரசுடன் ஆட்சி
அமைத்த கெஜ்ரிவால் மூன்று மாதங்களுக்குள்ளாகத் தானே ஆட்சியைக் கலைத்து விடுகிறார்.
அதன் பிறகுஆறு மாதத்திற்குள்ளாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. டெல்லி வாக்காளர்கள்
மிகத் தெளிவாக மோடிதான் பிரதமராக வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள். மொத்தமுள்ள 7
இடங்களிலும் பாஜக வெல்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஓர் இடத்தைக்
கூடப் பெறவில்லை.
அதே வேளையில் அடுத்து ஆறு மாதங்களுக்குள்ளாக நடக்கும்
சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 இடங்களில்67 இடங்களைக் கைப்பற்றுகிறது. பாஜக
வெறும் 3 இடங்களை மட்டுமே பெறுகிறது. காங்கிரஸ்
துடைத்தெறியப்படுகிறது. ஆறு மாத இடைவெளிக்குள் நடந்த மூன்று தேர்தல்களில் எப்படி
டெல்லி வாக்காளர்கள் மாறி ஓட்டுப் போடுகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கும்
போதுதான்,டெல்லி முனிசிபாலிட்டிக்கான தேர்தல்கள் 2017ல்
நடக்கின்றன. அதில் பாஜக 181 இடங்களையும், ஆம் ஆத்மி 49 இடங்களையும்,காங்கிரஸ் 46 இடங்களையும்
வெல்கிறது. இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் 2012ல்
நடந்த முனிசிபாலிடி தேர்தலில்131 இடங்களைப் பெற்ற பாஜகதான்
181 இடங்களைப் பெறுகிறது. பாஜக கடந்த மூன்று எம்சிடி
தேர்தலிலும் வெற்றிவாகை சூடி வருகிறது என்பதும் மேலும் டெல்லி மக்களைக் கவனிக்க
வைக்கிறது. 2015 சட்டசபைத் தேர்தலில் 67 இடங்களைப் பெற்ற ஆம் ஆத்மி ஏன் பெருமளவு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை
என்கிற கேள்வி மிக முக்கியமானது. தமிழக வரலாற்றில் ஜெயலலிதாவும் கருணாநிதியும்
ஆட்சியில் இருக்கும் வரையில் சட்டசபை இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் எந்த
தில்லாலங்கடி வேலை செய்தாவது வெற்றியைத் தக்க வைக்க முயற்சி செய்வதைப்
பார்த்திருக்கிறோம். மக்களும், ஆள்கிற கட்சியே உள்ளாட்சித் தேர்தலில் வென்றால்தான்
நமக்கு நல்லது என்ற அடிப்படையில் வாக்களிப்பார்கள். அதைத் தவறு என்று சொல்ல
மாட்டேன். ஆனால் அதே வேளையில், டெல்லியில் முனிசிபாலிடி உறுப்பினர்களில் பாஜகவினர்
தங்களுக்கு சேவை செய்வதால், அவர்களே இருக்கட்டும் என்ற அடிப்படையில் தொடந்து
மூன்று முறை ஒரே கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் டெல்லி வாக்காளர்களைத்
தாராளமாகப்பாராட்டலாம்.
சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 இடங்களில்67 இடங்களைக் கைப்பற்றுகிறது. பாஜக
வெறும் 3 இடங்களை மட்டுமே பெறுகிறது. காங்கிரஸ்
துடைத்தெறியப்படுகிறது. ஆறு மாத இடைவெளிக்குள் நடந்த மூன்று தேர்தல்களில் எப்படி
டெல்லி வாக்காளர்கள் மாறி ஓட்டுப் போடுகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கும்
போதுதான்,டெல்லி முனிசிபாலிட்டிக்கான தேர்தல்கள் 2017ல்
நடக்கின்றன. அதில் பாஜக 181 இடங்களையும், ஆம் ஆத்மி 49 இடங்களையும்,காங்கிரஸ் 46 இடங்களையும்
வெல்கிறது. இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் 2012ல்
நடந்த முனிசிபாலிடி தேர்தலில்131 இடங்களைப் பெற்ற பாஜகதான்
181 இடங்களைப் பெறுகிறது. பாஜக கடந்த மூன்று எம்சிடி
தேர்தலிலும் வெற்றிவாகை சூடி வருகிறது என்பதும் மேலும் டெல்லி மக்களைக் கவனிக்க
வைக்கிறது. 2015 சட்டசபைத் தேர்தலில் 67 இடங்களைப் பெற்ற ஆம் ஆத்மி ஏன் பெருமளவு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை
என்கிற கேள்வி மிக முக்கியமானது. தமிழக வரலாற்றில் ஜெயலலிதாவும் கருணாநிதியும்
ஆட்சியில் இருக்கும் வரையில் சட்டசபை இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் எந்த
தில்லாலங்கடி வேலை செய்தாவது வெற்றியைத் தக்க வைக்க முயற்சி செய்வதைப்
பார்த்திருக்கிறோம். மக்களும், ஆள்கிற கட்சியே உள்ளாட்சித் தேர்தலில் வென்றால்தான்
நமக்கு நல்லது என்ற அடிப்படையில் வாக்களிப்பார்கள். அதைத் தவறு என்று சொல்ல
மாட்டேன். ஆனால் அதே வேளையில், டெல்லியில் முனிசிபாலிடி உறுப்பினர்களில் பாஜகவினர்
தங்களுக்கு சேவை செய்வதால், அவர்களே இருக்கட்டும் என்ற அடிப்படையில் தொடந்து
மூன்று முறை ஒரே கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் டெல்லி வாக்காளர்களைத்
தாராளமாகப்பாராட்டலாம்.
டெல்லி வாக்காளர்களின் மனநிலை மாற்றம் ஓர் படிப்பினை.
அடுத்து 2019க்கான லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதை
முடிவு செய்கிற தேர்தல். டெல்லி வாக்காளர்கள் 2014ஐக்
காட்டிலும் அதிக அளவில் பாஜகவிற்கு வாக்களிக்கிறார்கள். மீண்டும் டெல்லியிலுள்ள
ஏழு இடங்களையும் பாஜக கைப்பற்றுகிறது. இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவெனில் பாஜக 46%
(2014) லிருந்து 56.4% (2019)வாக்குகளைப்
பெறுகிறது. காங்கிரசிற்குஇரண்டாம் இடத்தையும் ஆம் ஆத்மிக்குமூன்றாம் இடத்தையும்
வழங்குகிறார்கள் டெல்லி வாக்காளர்கள். இந்த ஏழு லோக்சபா இடங்களுக்குட்பட்ட 70
சட்டசபை தொகுதிகளில்65 இடங்களில்
பாஜகவும், 5 இடங்களில் காங்கிரசும் முன்னிலை பெற்று
இருந்தது. ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் கூட முதலிடத்தில் வரவில்லை. ஆனால் அதே டெல்லி
வாக்காளர்கள் அடுத்த ஆறு மாதத்தில் நடந்த தற்போதைய சட்டசபைத் தேர்தலில் ஆம்
ஆத்மிக்கு 62 இடங்களையும் பாஜகவிற்கு 8 இடங்களையும் வழங்குகிறார்கள். காங்கிரஸ் அதலபாதாளத்திற்குச் சென்று
விட்டுள்ளது.
அடுத்து 2019க்கான லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதை
முடிவு செய்கிற தேர்தல். டெல்லி வாக்காளர்கள் 2014ஐக்
காட்டிலும் அதிக அளவில் பாஜகவிற்கு வாக்களிக்கிறார்கள். மீண்டும் டெல்லியிலுள்ள
ஏழு இடங்களையும் பாஜக கைப்பற்றுகிறது. இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவெனில் பாஜக 46%
(2014) லிருந்து 56.4% (2019)வாக்குகளைப்
பெறுகிறது. காங்கிரசிற்குஇரண்டாம் இடத்தையும் ஆம் ஆத்மிக்குமூன்றாம் இடத்தையும்
வழங்குகிறார்கள் டெல்லி வாக்காளர்கள். இந்த ஏழு லோக்சபா இடங்களுக்குட்பட்ட 70
சட்டசபை தொகுதிகளில்65 இடங்களில்
பாஜகவும், 5 இடங்களில் காங்கிரசும் முன்னிலை பெற்று
இருந்தது. ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் கூட முதலிடத்தில் வரவில்லை. ஆனால் அதே டெல்லி
வாக்காளர்கள் அடுத்த ஆறு மாதத்தில் நடந்த தற்போதைய சட்டசபைத் தேர்தலில் ஆம்
ஆத்மிக்கு 62 இடங்களையும் பாஜகவிற்கு 8 இடங்களையும் வழங்குகிறார்கள். காங்கிரஸ் அதலபாதாளத்திற்குச் சென்று
விட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் தெளிவாகத் தேர்ந்தெடுக்கும்
மக்களைத்தான் திமுகவின் அமைப்புச செயலாளர் முட்டாள்கள் என்கிறார். இந்தியா
முழுமைக்கும் பாஜக வெற்றி பெற்றபோது தமிழக வாக்காளர்கள் நேரெதிராக வாக்களித்தார்கள்.
அவ்வாறானால் தமிழக வாக்காளர்கள் முட்டாள்களா என்று கேட்கக் கூடாது. அதற்கான
காரணங்களை ஆராய்வதற்கு டெல்லி தேர்தல் முடிவுகள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
அது என்ன என்பதைப் பார்க்கலாம்.
மக்களைத்தான் திமுகவின் அமைப்புச செயலாளர் முட்டாள்கள் என்கிறார். இந்தியா
முழுமைக்கும் பாஜக வெற்றி பெற்றபோது தமிழக வாக்காளர்கள் நேரெதிராக வாக்களித்தார்கள்.
அவ்வாறானால் தமிழக வாக்காளர்கள் முட்டாள்களா என்று கேட்கக் கூடாது. அதற்கான
காரணங்களை ஆராய்வதற்கு டெல்லி தேர்தல் முடிவுகள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
அது என்ன என்பதைப் பார்க்கலாம்.
இன்றையக் காலக் கட்டத்தில் அரசியலைப் பொருத்தவரையில்
கருத்துருவாக்கம் என்கிற சொல் மிக முக்கியமானதாக ஆகியுள்ளது.
இக்கருத்துருவாக்கங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன? வெறும் கருத்துருவாக்கங்களே
தேர்தல் வெற்றியைத் தந்து விடுமா? ஆட்சி முறை மாற்றங்கள் முக்கியமானதில்லையா? இது போன்ற
கேள்விகளோடு பொருத்திப் பார்த்துத்தான் நாம் ஓர் முடிவுக்கு வரமுடியும்.
கருத்துருவாக்கம் என்கிற சொல் மிக முக்கியமானதாக ஆகியுள்ளது.
இக்கருத்துருவாக்கங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன? வெறும் கருத்துருவாக்கங்களே
தேர்தல் வெற்றியைத் தந்து விடுமா? ஆட்சி முறை மாற்றங்கள் முக்கியமானதில்லையா? இது போன்ற
கேள்விகளோடு பொருத்திப் பார்த்துத்தான் நாம் ஓர் முடிவுக்கு வரமுடியும்.
ஓர் ஆட்சி மக்களிடையே வெறுப்பைச் சம்பாதிக்காமல் பார்த்துக்
கொள்ள வேண்டியது இங்கு மிக மிக அவசியமானதாகிறது. எளிமையாகப் புரியவேண்டும்
என்பதற்காக ஆட்சி என்பதைக் கட்சி என்று போட்டுப் பார்க்கலாம். ஆட்சியாளர்கள் ஊழல்
அற்றவர்கள் என்கிற பார்வை அவர்களின் வெற்றிக்கு முக்கியமாகி உள்ளது. அடுத்து ஓர்
ஆட்சி கொடுத்த வாக்குறுதியில் 100%
நிறைவேற்றா விட்டாலும், அவர்கள் நமக்காக ஓரளவுக்குச்
செய்கிறார்கள் என்கிற கருத்துருவாக்கம் செய்ய வேண்டியது மிக முக்கியமானதாகி
உள்ளது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பல நல்ல விஷயங்களைச் செய்வார்கள்.
ஆனால், அந்தக் கட்சி எந்த அளவுக்கு மக்களிடையே அதைக் கொண்டு செலுத்துகிறது என்பது
அக்கட்சியை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று.
தற்காலங்களில் இலவசங்களும் மக்கள் நலத்திட்டங்களும் மக்களை ஓரளவுக்குச் சென்று
சேரும் காலகட்டத்திற்கு வந்துள்ளோம். இவையெல்லாம் ஆளும் அரசுகள் தங்களைப்
பயனாளிகளிடம் நெருங்கச் செய்ய உதவி செய்கிறது.
கொள்ள வேண்டியது இங்கு மிக மிக அவசியமானதாகிறது. எளிமையாகப் புரியவேண்டும்
என்பதற்காக ஆட்சி என்பதைக் கட்சி என்று போட்டுப் பார்க்கலாம். ஆட்சியாளர்கள் ஊழல்
அற்றவர்கள் என்கிற பார்வை அவர்களின் வெற்றிக்கு முக்கியமாகி உள்ளது. அடுத்து ஓர்
ஆட்சி கொடுத்த வாக்குறுதியில் 100%
நிறைவேற்றா விட்டாலும், அவர்கள் நமக்காக ஓரளவுக்குச்
செய்கிறார்கள் என்கிற கருத்துருவாக்கம் செய்ய வேண்டியது மிக முக்கியமானதாகி
உள்ளது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பல நல்ல விஷயங்களைச் செய்வார்கள்.
ஆனால், அந்தக் கட்சி எந்த அளவுக்கு மக்களிடையே அதைக் கொண்டு செலுத்துகிறது என்பது
அக்கட்சியை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று.
தற்காலங்களில் இலவசங்களும் மக்கள் நலத்திட்டங்களும் மக்களை ஓரளவுக்குச் சென்று
சேரும் காலகட்டத்திற்கு வந்துள்ளோம். இவையெல்லாம் ஆளும் அரசுகள் தங்களைப்
பயனாளிகளிடம் நெருங்கச் செய்ய உதவி செய்கிறது.
அதேவேளையில் எதிர்க்கட்சிகள் சில மாநிலங்களில் வெற்றி
பெறுவதற்கான காரணங்களையும் ஆராய வேண்டி உள்ளது. தொடர் போராட்டங்களைப் பல்வேறு
அமைப்புகள் மூலமாக, குறிப்பாக அரசியல் கட்சியாகச் செயல்படாத அமைப்புகள் மூலமாக,
தொண்டு நிறுவனங்கள் மூலமாக, மத அமைப்புகள் மூலமாகத் தொடர்ந்து செய்யும் போது
பெரும்பகுதி மக்களிடையே அது வரவேற்பைப் பெற்று விடுகிறது. இது போன்ற போராட்டங்கள்
நடக்கும் போது ஆளும் தரப்பு மக்களிடையே தங்களின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாகச்
சொல்லாமல் இருப்பதும், போராட்டங்களை அனுமதித்துக் கொண்டும்,மக்களிடையே திட்டத்தின்
நன்மை பற்றிப் பேசாமல் இருந்து கொண்டே திட்டத்தைத் தாமதமாக அமல்படுத்தலாம் என்கிற
மனப்பாங்கோடு செயல்படுவதும் மக்களிடையே வெறுப்பைச் சம்பாதிக்கச் செய்கிறது.
பெறுவதற்கான காரணங்களையும் ஆராய வேண்டி உள்ளது. தொடர் போராட்டங்களைப் பல்வேறு
அமைப்புகள் மூலமாக, குறிப்பாக அரசியல் கட்சியாகச் செயல்படாத அமைப்புகள் மூலமாக,
தொண்டு நிறுவனங்கள் மூலமாக, மத அமைப்புகள் மூலமாகத் தொடர்ந்து செய்யும் போது
பெரும்பகுதி மக்களிடையே அது வரவேற்பைப் பெற்று விடுகிறது. இது போன்ற போராட்டங்கள்
நடக்கும் போது ஆளும் தரப்பு மக்களிடையே தங்களின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாகச்
சொல்லாமல் இருப்பதும், போராட்டங்களை அனுமதித்துக் கொண்டும்,மக்களிடையே திட்டத்தின்
நன்மை பற்றிப் பேசாமல் இருந்து கொண்டே திட்டத்தைத் தாமதமாக அமல்படுத்தலாம் என்கிற
மனப்பாங்கோடு செயல்படுவதும் மக்களிடையே வெறுப்பைச் சம்பாதிக்கச் செய்கிறது.
அடுத்து ஊடகங்களின் பங்களிப்பும், சமூக ஊடகங்களின்
பங்களிப்பும் முக்கியப் பங்காற்றுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊடகங்கள் இன்று
நடுநிலையோடு இருப்பதில்லை. அவை ஆட்சியாளர்கள் பற்றிய கருத்துருவாக்கங்களை
உருவாக்குகின்றன. குறிப்பாகப் போராட்டங்கள் இன்று ஓரிடத்திலிருந்து பல
இடங்களுக்குப் பரவுவதில் ஊடகங்களின் பங்கு அலாதியானது. இதை எந்தத் தரப்பு சரியாகக்
கையாள்கிறதோ அவர்கள் மக்களிடையே ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
பங்களிப்பும் முக்கியப் பங்காற்றுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊடகங்கள் இன்று
நடுநிலையோடு இருப்பதில்லை. அவை ஆட்சியாளர்கள் பற்றிய கருத்துருவாக்கங்களை
உருவாக்குகின்றன. குறிப்பாகப் போராட்டங்கள் இன்று ஓரிடத்திலிருந்து பல
இடங்களுக்குப் பரவுவதில் ஊடகங்களின் பங்கு அலாதியானது. இதை எந்தத் தரப்பு சரியாகக்
கையாள்கிறதோ அவர்கள் மக்களிடையே ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இவையெல்லாம் காரணிகள்தான். மக்களைப் பொருத்தவரையில் ஓர் ஆட்சியில்
தாங்கள் கண்ட துன்பங்கள், அவலங்கள், ஊழல் விஷயங்கள்என்ன என்பதைத்தான் பெரும்பாலும்
பார்க்கிறார்கள். எந்த அளவுக்கு ஓர் ஆட்சி தன் மீதுஎதிர்மறையான விஷயங்கள் பரவாமல்
பார்த்துக் கொள்கிறதோ அதுவே முக்கியமாகி உள்ளது. தேர்தலைப் பொருத்தவரையில் நேர்மறை
வாக்குகளைக் காட்டிலும் எதிர்மறை வாக்குகளை மையமாக வைத்துத்தான் ஆட்சி மாற்றங்கள்
நடக்கின்றன. அந்த வகையில் டெல்லி வாக்காளர்களும் சரி, இந்தியாவின் இதர
வாக்காளர்களும் சரி, தங்கள் முன்பாக வைக்கப்படும் கருத்துருவாக்கத்தின்
அடிப்படையில் வாக்களிக்கும் மனநிலையில் உள்ளார்கள். இதில் தமிழக வாக்காளர்களை
முட்டாள்கள் என்கிற கருத்தையும் நாம் நிராகரிக்க வேண்டும். வட இந்திய வாக்காளர்கள்
முட்டாள்கள் என்ற வாதத்தையும் நிராகரிக்க வேண்டும். இதற்கான படிப்பினையைத்தான்
டெல்லி, ஒடிஸா போன்ற தற்காலத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழகத்தில் கூட 2020
லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே அதிமுகவுக்குத் தந்த மக்கள், அதே நாளில்
நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 9
இடங்களில் வெல்லச் செய்து ஆட்சியை நிலைநிறுத்தச் செய்துள்ளார்கள்
என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.
தாங்கள் கண்ட துன்பங்கள், அவலங்கள், ஊழல் விஷயங்கள்என்ன என்பதைத்தான் பெரும்பாலும்
பார்க்கிறார்கள். எந்த அளவுக்கு ஓர் ஆட்சி தன் மீதுஎதிர்மறையான விஷயங்கள் பரவாமல்
பார்த்துக் கொள்கிறதோ அதுவே முக்கியமாகி உள்ளது. தேர்தலைப் பொருத்தவரையில் நேர்மறை
வாக்குகளைக் காட்டிலும் எதிர்மறை வாக்குகளை மையமாக வைத்துத்தான் ஆட்சி மாற்றங்கள்
நடக்கின்றன. அந்த வகையில் டெல்லி வாக்காளர்களும் சரி, இந்தியாவின் இதர
வாக்காளர்களும் சரி, தங்கள் முன்பாக வைக்கப்படும் கருத்துருவாக்கத்தின்
அடிப்படையில் வாக்களிக்கும் மனநிலையில் உள்ளார்கள். இதில் தமிழக வாக்காளர்களை
முட்டாள்கள் என்கிற கருத்தையும் நாம் நிராகரிக்க வேண்டும். வட இந்திய வாக்காளர்கள்
முட்டாள்கள் என்ற வாதத்தையும் நிராகரிக்க வேண்டும். இதற்கான படிப்பினையைத்தான்
டெல்லி, ஒடிஸா போன்ற தற்காலத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழகத்தில் கூட 2020
லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே அதிமுகவுக்குத் தந்த மக்கள், அதே நாளில்
நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 9
இடங்களில் வெல்லச் செய்து ஆட்சியை நிலைநிறுத்தச் செய்துள்ளார்கள்
என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.
டெல்லியில் கட்சிகளின் நிலை என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஆம் ஆத்மியைப் பொருத்தவரை இந்தத் தேர்தலில் அதன் வெற்றிக்கு
ஏழை மக்களுக்கான இலவசத் திட்டங்களும், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கான
முக்கியத்துவமும் மக்களைத் திருப்தி படுத்தி உள்ளது. பல குறைபாடுகள் உள்ளன என்ற
பாஜகவின் வாதத்தில் நியாயமிருந்தாலும், கெஜ்ரிவால் முடிந்தளவு நல்லது செய்கிறார்
என்கிற எண்ணம் ஒட்டுமொத்த வாக்காளர்களிடையே வந்துள்ளது. அதை நாம் கவனிக்க வேண்டி
உள்ளது. தேர்தலை எதிர்கொண்டதில் கெஜ்ரிவாலைப் பாராட்ட வேண்டி உள்ளது. ஓரிடத்தில்
கூட தன்னை இந்துக்களுக்கு எதிரியாகக் காட்டி விடக் கூடாது என்பதிலும் அவர் மிகத்
தெளிவாக இருந்தார். அரசியல் சட்டப் பிரிவு370
நீக்கத்தை ஆதரித்தார் கெஜ்ரிவால். ராமர் கோவில் தீர்ப்பை
வரவேற்பதாக அறிவித்தார். சிஏஏ சட்டத்தை எதிர்ப்பதாக ஆரம்பத்தில் காட்டிக்
கொண்டாலும் தேர்தல் பரப்புரையில் அதை முன்னிலைப்படுத்தினால் பாஜகவிற்குச் சாதகமாகி
விடும் என்பதை உணர்ந்து அதைப் பற்றிப் பேசுவதையும் அக்கேள்வியை எதிர்கொள்வதையும்
பெரும்பாலும் தவிர்த்தார். அனுமன் பாடலைத் தாமாகவே பாடினார். இவையெல்லாம் இஸ்லாமிய
வாக்குகளைத் தமக்கு எதிராகத் திருப்பி காங்கிரசிற்குக் கொண்டு சென்று விடாதா என்று
அவர் கவலைப் படவே இல்லை. அதற்குக் காரணம் உள்ளது. இந்திய இஸ்லாமியர்களின்
வாக்குமுறை இதன் அடிப்படையில்தான் அமைகிறது. அது ‘பாஜக ஆட்சியின் நலத்திட்டங்கள்,
ஊழலற்ற ஆட்சி, ஆட்சியின் செயல்முறை ஆகியவற்றைச் சார்ந்து பாஜகவைப் பார்க்க
வேண்டியதில்லை. பாஜக ஆட்சி நல்லதே செய்திருந்தாலும் வாக்களிக்க வேண்டியதில்லை.
பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்கிற எண்ணத்தை சிறு குழந்தைகள் வரை கொண்டு
சேர்த்துள்ளது இஸ்லாமிய சமூகம். குறிப்பாக மோடியை முன்வைத்து! ஆகையால் இஸ்லாமியர்களின்
வாக்களிக்கும் முறை என்பது பாஜகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும்
வாக்களிக்கக்கூடாது என்பதுதான். அடுத்து பாஜகவை எதிர்த்து எந்தக் கட்சி வெற்றி
பெறும் வாய்ப்புள்ளதோ அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்கிற இடத்திற்கு
இஸ்லாமிய வாக்குகள் வந்துவிட்டன.”
இந்தப் புள்ளியை கெஜ்ரிவால் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார். இஸ்லாமியர்களிடத்து
எனக்கு வாக்களிக்காமல் காங்கிரசிற்கு வாக்களித்தால் பாஜக ஆட்சிக்கு வந்து விடும்
என்கிற எண்ணத்தை மட்டும் தனது இஸ்லாமிய வேட்பாளர்கள் வாயிலாகக் கொண்டு சேர்த்தார்.
அந்த வகையில் கெஜ்ரிவாலின் அரசியல் சாதுர்யத்தைப் பாராட்ட வேண்டி உள்ளது.
ஏழை மக்களுக்கான இலவசத் திட்டங்களும், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கான
முக்கியத்துவமும் மக்களைத் திருப்தி படுத்தி உள்ளது. பல குறைபாடுகள் உள்ளன என்ற
பாஜகவின் வாதத்தில் நியாயமிருந்தாலும், கெஜ்ரிவால் முடிந்தளவு நல்லது செய்கிறார்
என்கிற எண்ணம் ஒட்டுமொத்த வாக்காளர்களிடையே வந்துள்ளது. அதை நாம் கவனிக்க வேண்டி
உள்ளது. தேர்தலை எதிர்கொண்டதில் கெஜ்ரிவாலைப் பாராட்ட வேண்டி உள்ளது. ஓரிடத்தில்
கூட தன்னை இந்துக்களுக்கு எதிரியாகக் காட்டி விடக் கூடாது என்பதிலும் அவர் மிகத்
தெளிவாக இருந்தார். அரசியல் சட்டப் பிரிவு370
நீக்கத்தை ஆதரித்தார் கெஜ்ரிவால். ராமர் கோவில் தீர்ப்பை
வரவேற்பதாக அறிவித்தார். சிஏஏ சட்டத்தை எதிர்ப்பதாக ஆரம்பத்தில் காட்டிக்
கொண்டாலும் தேர்தல் பரப்புரையில் அதை முன்னிலைப்படுத்தினால் பாஜகவிற்குச் சாதகமாகி
விடும் என்பதை உணர்ந்து அதைப் பற்றிப் பேசுவதையும் அக்கேள்வியை எதிர்கொள்வதையும்
பெரும்பாலும் தவிர்த்தார். அனுமன் பாடலைத் தாமாகவே பாடினார். இவையெல்லாம் இஸ்லாமிய
வாக்குகளைத் தமக்கு எதிராகத் திருப்பி காங்கிரசிற்குக் கொண்டு சென்று விடாதா என்று
அவர் கவலைப் படவே இல்லை. அதற்குக் காரணம் உள்ளது. இந்திய இஸ்லாமியர்களின்
வாக்குமுறை இதன் அடிப்படையில்தான் அமைகிறது. அது ‘பாஜக ஆட்சியின் நலத்திட்டங்கள்,
ஊழலற்ற ஆட்சி, ஆட்சியின் செயல்முறை ஆகியவற்றைச் சார்ந்து பாஜகவைப் பார்க்க
வேண்டியதில்லை. பாஜக ஆட்சி நல்லதே செய்திருந்தாலும் வாக்களிக்க வேண்டியதில்லை.
பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்கிற எண்ணத்தை சிறு குழந்தைகள் வரை கொண்டு
சேர்த்துள்ளது இஸ்லாமிய சமூகம். குறிப்பாக மோடியை முன்வைத்து! ஆகையால் இஸ்லாமியர்களின்
வாக்களிக்கும் முறை என்பது பாஜகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும்
வாக்களிக்கக்கூடாது என்பதுதான். அடுத்து பாஜகவை எதிர்த்து எந்தக் கட்சி வெற்றி
பெறும் வாய்ப்புள்ளதோ அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்கிற இடத்திற்கு
இஸ்லாமிய வாக்குகள் வந்துவிட்டன.”
இந்தப் புள்ளியை கெஜ்ரிவால் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார். இஸ்லாமியர்களிடத்து
எனக்கு வாக்களிக்காமல் காங்கிரசிற்கு வாக்களித்தால் பாஜக ஆட்சிக்கு வந்து விடும்
என்கிற எண்ணத்தை மட்டும் தனது இஸ்லாமிய வேட்பாளர்கள் வாயிலாகக் கொண்டு சேர்த்தார்.
அந்த வகையில் கெஜ்ரிவாலின் அரசியல் சாதுர்யத்தைப் பாராட்ட வேண்டி உள்ளது.
பாஜகவைப் பொருத்தவரையில் தனது வாக்கு சதவீதத்தைக் கடந்த
தேர்தலைக் காட்டிலும் 6% உயர்த்திய போதும், மக்களின் மனநிலையை வெல்லாமல் போனதற்கான காரணங்களை ஆராய
வேண்டி உள்ளது. கெஜ்ரிவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில் அதற்கு இணையான ஒருவரை
முன்னிறுத்தி இருக்கவேண்டும். பாஜக அதைச் செய்யவில்லை. எங்கெல்லாம் ஆம் ஆத்மி
ஆட்சி தவறு இழைக்கிறது என்பதை மக்களிடம்கொண்டு செல்லத் தவறி விட்டது பாஜக.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொரு கட்சியும் யார் தலைமையில் வழி
நடத்தப்படுகிறது, யார் மக்களின் மனதில் தலைமைத்துவத்திற்கான ஏற்புத் தன்மையைக்
கொண்டு வருகிறார் என்பதும் முக்கியமானது. எப்படி நரேந்திர மோடிக்கு
ராகுல்இணையில்லையோ அப்படித்தான் கெஜ்ரிவாலுக்கும் இணையான பாஜக முகம் டெல்லியில்
இல்லாமல் போனது, பாஜகவிற்குப் பெரும் பின்னடைவைத் தந்துள்ளது.
தேர்தலைக் காட்டிலும் 6% உயர்த்திய போதும், மக்களின் மனநிலையை வெல்லாமல் போனதற்கான காரணங்களை ஆராய
வேண்டி உள்ளது. கெஜ்ரிவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில் அதற்கு இணையான ஒருவரை
முன்னிறுத்தி இருக்கவேண்டும். பாஜக அதைச் செய்யவில்லை. எங்கெல்லாம் ஆம் ஆத்மி
ஆட்சி தவறு இழைக்கிறது என்பதை மக்களிடம்கொண்டு செல்லத் தவறி விட்டது பாஜக.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொரு கட்சியும் யார் தலைமையில் வழி
நடத்தப்படுகிறது, யார் மக்களின் மனதில் தலைமைத்துவத்திற்கான ஏற்புத் தன்மையைக்
கொண்டு வருகிறார் என்பதும் முக்கியமானது. எப்படி நரேந்திர மோடிக்கு
ராகுல்இணையில்லையோ அப்படித்தான் கெஜ்ரிவாலுக்கும் இணையான பாஜக முகம் டெல்லியில்
இல்லாமல் போனது, பாஜகவிற்குப் பெரும் பின்னடைவைத் தந்துள்ளது.
காங்கிரஸ் டெல்லி தேர்தலில் பெருத்த பின்னடைவைச்
சந்தித்துள்ளது. டெல்லியில் தலித் வாக்குகள், சிறுபான்மை வாக்குகளை முற்றிலுமாக
இழந்து விட்டுள்ளது. காங்கிரஸ் டெல்லி தேர்தலை அணுகிய முறையும், தேர்தல்
முடிவுகளில் ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியில்
புளகாங்கிதம் அடைந்ததையும் வைத்துப் பார்த்தால் காங்கிரஸ் அரசியல் செய்ய
லாயக்கில்லாத கட்சி என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் 4.26% வாக்குகளை
மட்டுமே டெல்லி தேர்தலில் பெற்றுள்ளது.காங்கிரசின் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். தான் ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை
என்று காங்கிரஸ் முடிவெடுத்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் மீண்டும் முதன்மைக்
கட்சியாக வந்த சரித்திரம் கிடையாது. இப்படித்தான் திமுகவை அழிக்க எம்ஜிஆரைப்
பயன்படுத்தலாம் என்று ஆரம்பித்தது. இன்று தமிழகத்தில் அதிமுக, திமுகவின் முதுகில்
சவாரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. ஆம் ஆத்மியின் வெற்றியில் மகிழ்ச்சி அடையும்
ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் டெல்லியில் இனி என்றைக்கும் மூன்றாவது கட்சிதான் என்பது
புரியவில்லை.
சந்தித்துள்ளது. டெல்லியில் தலித் வாக்குகள், சிறுபான்மை வாக்குகளை முற்றிலுமாக
இழந்து விட்டுள்ளது. காங்கிரஸ் டெல்லி தேர்தலை அணுகிய முறையும், தேர்தல்
முடிவுகளில் ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியில்
புளகாங்கிதம் அடைந்ததையும் வைத்துப் பார்த்தால் காங்கிரஸ் அரசியல் செய்ய
லாயக்கில்லாத கட்சி என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் 4.26% வாக்குகளை
மட்டுமே டெல்லி தேர்தலில் பெற்றுள்ளது.காங்கிரசின் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். தான் ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை
என்று காங்கிரஸ் முடிவெடுத்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் மீண்டும் முதன்மைக்
கட்சியாக வந்த சரித்திரம் கிடையாது. இப்படித்தான் திமுகவை அழிக்க எம்ஜிஆரைப்
பயன்படுத்தலாம் என்று ஆரம்பித்தது. இன்று தமிழகத்தில் அதிமுக, திமுகவின் முதுகில்
சவாரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. ஆம் ஆத்மியின் வெற்றியில் மகிழ்ச்சி அடையும்
ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் டெல்லியில் இனி என்றைக்கும் மூன்றாவது கட்சிதான் என்பது
புரியவில்லை.
காங்கிரசின் எதிர்காலம், பாஜக Vs காங்கிரஸ் நேரடிப்
போட்டி நிலவும் மாநிலங்களில் மட்டுமே இருக்கிறது. எங்கெல்லாம் மாநிலக் கட்சிகள்
வலுவாக உள்ளதோ அங்கெல்லாம் காங்கிரஸ் இனி ஒட்டுண்ணி அரசியல் கட்சியாக மட்டுமே
இருக்கும். இனி டெல்லியில் காங்கிரசிற்கு அரசியல் முக்கியத்துவம் இருக்காது
என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
போட்டி நிலவும் மாநிலங்களில் மட்டுமே இருக்கிறது. எங்கெல்லாம் மாநிலக் கட்சிகள்
வலுவாக உள்ளதோ அங்கெல்லாம் காங்கிரஸ் இனி ஒட்டுண்ணி அரசியல் கட்சியாக மட்டுமே
இருக்கும். இனி டெல்லியில் காங்கிரசிற்கு அரசியல் முக்கியத்துவம் இருக்காது
என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
டெல்லி வாக்கு சதவீத ஒப்பிடு:
கடந்த கால தேர்தல் வாக்கு சதவீதம்: