(தடம் பதிப்பக வெளியீடாக வெளிவரும், அரவிந்தன்
நீலகண்டனின் ‘ஆழிபெரிது’ நூலுக்கான அணிந்துரை)
நீலகண்டனின் ‘ஆழிபெரிது’ நூலுக்கான அணிந்துரை)
(ஆழி பெரிது, அரவிந்தன் நீலகண்டன், தடம் பதிப்பகம், ரூ 330)
கடந்த இருபதாண்டுகளாக
இந்த நூலின் ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டன் தமிழில் பல தளங்களில், அரசியல் முதல் சூழலியல்
வரை பல்வேறு பேசுபொருள்கள் குறித்துத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அனேகமாக அவற்றில்
பெரும்பாலானவற்றை, ஃபேஸ்புக் விவாதங்கள் உட்பட, நான் முழுமையாக வாசித்து வந்திருக்கிறேன்
என்று சொல்ல முடியும். அதனடிப்படையில், அவர் இதுகாறும் எழுதியவற்றில், அதிகமான நிலைத்த
இருப்பு கொண்ட படைப்புக்கள் எவை என்று கேட்டால், சந்தேகமின்றி இந்த நூலில் உள்ள கட்டுரைகளுக்குத்
தான் முதலிடம் என்று சொல்வேன்.
இந்த நூலின் ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டன் தமிழில் பல தளங்களில், அரசியல் முதல் சூழலியல்
வரை பல்வேறு பேசுபொருள்கள் குறித்துத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அனேகமாக அவற்றில்
பெரும்பாலானவற்றை, ஃபேஸ்புக் விவாதங்கள் உட்பட, நான் முழுமையாக வாசித்து வந்திருக்கிறேன்
என்று சொல்ல முடியும். அதனடிப்படையில், அவர் இதுகாறும் எழுதியவற்றில், அதிகமான நிலைத்த
இருப்பு கொண்ட படைப்புக்கள் எவை என்று கேட்டால், சந்தேகமின்றி இந்த நூலில் உள்ள கட்டுரைகளுக்குத்
தான் முதலிடம் என்று சொல்வேன்.
அதற்குக் காரணங்கள்
உண்டு. இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் தமிழ்பேப்பர் தளத்தில் 2011ம் ஆண்டு தொடர்ச்சியாக
வெளிவந்தபோது, ஒருவித இறையாவேச நிலையில்தான் அவர் இவற்றை எழுதுகிறாரோ – வேத ரிஷிகள்
சூக்தங்களைப் பாடியது போல – என்ற எண்ணம் வாசகர்களில் கணிசமானவர்களுக்கு எழுந்திருக்கக்
கூடும். அந்த அளவுக்கான உத்வேகம் இவற்றில் உறைந்துள்ளது. முனைவர் பட்ட ஆய்வேடுகளைக்
கூட போகிறபோக்கில் எழுதிவிட்டுச் செல்கிற தமிழ் அறிவுச்சூழலில், இந்த இணையதளக் கட்டுரைகள்
ஒவ்வொன்றுமே உயர்தரமான ஆய்வுத்தாள்களோ என்று வியக்குமளவுக்கான பொருட்செறிவும், வீச்சும்
கொண்டு விளங்குகின்றன என்றால், இவற்றை எழுத அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையையும் செலுத்திய
உழைப்பையும் பற்றி ஊகிக்க முடியும். எல்லாவற்றையும் விட, இக்கட்டுரைகளின் பண்பாட்டு
முக்கியத்துவம் அவற்றை மிகவும் கவனத்திற்குரியதாக ஆக்குகிறது.
உண்டு. இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் தமிழ்பேப்பர் தளத்தில் 2011ம் ஆண்டு தொடர்ச்சியாக
வெளிவந்தபோது, ஒருவித இறையாவேச நிலையில்தான் அவர் இவற்றை எழுதுகிறாரோ – வேத ரிஷிகள்
சூக்தங்களைப் பாடியது போல – என்ற எண்ணம் வாசகர்களில் கணிசமானவர்களுக்கு எழுந்திருக்கக்
கூடும். அந்த அளவுக்கான உத்வேகம் இவற்றில் உறைந்துள்ளது. முனைவர் பட்ட ஆய்வேடுகளைக்
கூட போகிறபோக்கில் எழுதிவிட்டுச் செல்கிற தமிழ் அறிவுச்சூழலில், இந்த இணையதளக் கட்டுரைகள்
ஒவ்வொன்றுமே உயர்தரமான ஆய்வுத்தாள்களோ என்று வியக்குமளவுக்கான பொருட்செறிவும், வீச்சும்
கொண்டு விளங்குகின்றன என்றால், இவற்றை எழுத அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையையும் செலுத்திய
உழைப்பையும் பற்றி ஊகிக்க முடியும். எல்லாவற்றையும் விட, இக்கட்டுரைகளின் பண்பாட்டு
முக்கியத்துவம் அவற்றை மிகவும் கவனத்திற்குரியதாக ஆக்குகிறது.
வேதம் நிறைந்த தமிழ்நாடு
என்றார் பாரதியார். அதற்கேற்ப, தமிழ்ப் பண்பாட்டின் ஆதி விடியல் முதலே இங்கு வேதம்
தழைத்து வந்து கொண்டிருக்கிறது. வேதஞானத்தின் ஒளியே ஆதாரமாக நின்று, தமிழரின் கல்வியிலும்,
கலைகளிலும், வாழ்க்கை நெறிகளிலும், இலக்கியங்களிலும், ஆன்மீகத்திலும், தத்துவங்களிலும்
வர்ணஜாலங்களை, நிறப்பிரிகைகளை உருவாக்கி வந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்களை இந்த நூல்
நெடுகிலும் காண முடியும். ஆயினும், தமிழ்நாட்டில் கல்விகற்கும் ஒரு இளைஞருக்கோ அல்லது
நவீன இலக்கிய வாசகருக்கோ கூட வேதங்கள் குறித்த அறிதல், புரிதல் என்பது அனேகமாக இல்லை,
அல்லது பல்வேறு பொய்மைகள், திரிபுகள், எதிர்மறைச் சித்திரங்கள் வழியாக வடிகட்டப் பட்டிருக்கிறது
என்பதே நிதர்சனம். வேதம், வேதாந்தம், இந்து ஞானம் என்று வாயெடுத்தாலே அதைப் பற்றிய
ஏராளமான முன்முடிவுகளோடும் மனத்தடைகளோடும் தயக்கங்களோடும் நிராகரிப்புகளோடும் ஏளனங்களோடும்
கூடிய கருத்துக்களையே படித்து, கேட்டு வளர்ந்துள்ள தலைமுறை சார்ந்தவர்களே இங்குள்ள
கணிசமான வாசகர்கள். இத்தகைய சூழலின் அழுத்தங்களையும் சார்பு நிலைகளையும் கடந்து உண்மையான
அறிவு வேட்கையுடனும், திறந்த மனத்துடனும் வரும் வாசகர்களும் கணிசமான பேர் உண்டு. அத்தகையோரை
எதிர்நோக்கி, வேதப் பண்பாடு குறித்த ஒரு காத்திரமான, ஆழமான, அதே சமயம் சுவாரஸ்யமான
நூலைப் படைப்பது என்பது பெரிய சவாலான விஷயம். அதை இந்த நூல் சாதித்திருக்கிறது.
என்றார் பாரதியார். அதற்கேற்ப, தமிழ்ப் பண்பாட்டின் ஆதி விடியல் முதலே இங்கு வேதம்
தழைத்து வந்து கொண்டிருக்கிறது. வேதஞானத்தின் ஒளியே ஆதாரமாக நின்று, தமிழரின் கல்வியிலும்,
கலைகளிலும், வாழ்க்கை நெறிகளிலும், இலக்கியங்களிலும், ஆன்மீகத்திலும், தத்துவங்களிலும்
வர்ணஜாலங்களை, நிறப்பிரிகைகளை உருவாக்கி வந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்களை இந்த நூல்
நெடுகிலும் காண முடியும். ஆயினும், தமிழ்நாட்டில் கல்விகற்கும் ஒரு இளைஞருக்கோ அல்லது
நவீன இலக்கிய வாசகருக்கோ கூட வேதங்கள் குறித்த அறிதல், புரிதல் என்பது அனேகமாக இல்லை,
அல்லது பல்வேறு பொய்மைகள், திரிபுகள், எதிர்மறைச் சித்திரங்கள் வழியாக வடிகட்டப் பட்டிருக்கிறது
என்பதே நிதர்சனம். வேதம், வேதாந்தம், இந்து ஞானம் என்று வாயெடுத்தாலே அதைப் பற்றிய
ஏராளமான முன்முடிவுகளோடும் மனத்தடைகளோடும் தயக்கங்களோடும் நிராகரிப்புகளோடும் ஏளனங்களோடும்
கூடிய கருத்துக்களையே படித்து, கேட்டு வளர்ந்துள்ள தலைமுறை சார்ந்தவர்களே இங்குள்ள
கணிசமான வாசகர்கள். இத்தகைய சூழலின் அழுத்தங்களையும் சார்பு நிலைகளையும் கடந்து உண்மையான
அறிவு வேட்கையுடனும், திறந்த மனத்துடனும் வரும் வாசகர்களும் கணிசமான பேர் உண்டு. அத்தகையோரை
எதிர்நோக்கி, வேதப் பண்பாடு குறித்த ஒரு காத்திரமான, ஆழமான, அதே சமயம் சுவாரஸ்யமான
நூலைப் படைப்பது என்பது பெரிய சவாலான விஷயம். அதை இந்த நூல் சாதித்திருக்கிறது.
வைகறையில் மெதுமெதுவாகப்
புன்முறுவல் பூத்துக் கொண்டு உதிக்கும் உஷையின் மென்கதிர்கள், பளீரென்று சூரிய கிரணங்களாக
மாறிக் கல்லிலும் புல்லிலும் நீரிலும் ஒளியையும் தகிப்பையும் உண்டாக்குவது போல, அமர்ச்சையாக,
அமைதியாக ஆரம்பிக்கும் நூலின் கதி, விடுவிடுவென்று பல திசைகளிலும் பரவுகிறது. இதிலுள்ள
ஒவ்வொரு கட்டுரையுமே சம்பிரதாயமான நேர்கோட்டுப் பார்வையையும் நடையையும் தவிர்த்து,
பல தளங்களிலும் சஞ்சரிப்பதாக, பல திறப்புகளை அளிப்பதாக உள்ளதை வாசகர்கள் எடுத்த எடுப்பிலேயே
உணர முடியும்.
புன்முறுவல் பூத்துக் கொண்டு உதிக்கும் உஷையின் மென்கதிர்கள், பளீரென்று சூரிய கிரணங்களாக
மாறிக் கல்லிலும் புல்லிலும் நீரிலும் ஒளியையும் தகிப்பையும் உண்டாக்குவது போல, அமர்ச்சையாக,
அமைதியாக ஆரம்பிக்கும் நூலின் கதி, விடுவிடுவென்று பல திசைகளிலும் பரவுகிறது. இதிலுள்ள
ஒவ்வொரு கட்டுரையுமே சம்பிரதாயமான நேர்கோட்டுப் பார்வையையும் நடையையும் தவிர்த்து,
பல தளங்களிலும் சஞ்சரிப்பதாக, பல திறப்புகளை அளிப்பதாக உள்ளதை வாசகர்கள் எடுத்த எடுப்பிலேயே
உணர முடியும்.
வேதப் பண்பாட்டின்
கூறுகளை விவரிக்கும் முகமாக, பரிணாம அறிவியல், நரம்பியல், உளவியல், உயிரியல், வரலாற்று
ஆய்வுகள், தத்துவ தரிசனங்கள், புராணங்கள், சங்க இலக்கியம், கட்டிடக் கலை, கிரேக்க –
ரோமானிய – எகிப்திய பண்பாடுகள், அகழ்வாராய்ச்சி, நாட்டார் கலை வடிவங்கள், சமூகவியல்
எனப் பல அறிவுத் துறைகளிலிருந்தும் ஆதாரங்களையும், நுண் தகவல்களையும், புதிய அறிதல்களையும்
அளித்தபடியே செல்கின்றன இக்கட்டுரைகள். அந்த தகவல்களும் அறிதல்களும் கச்சிதமாக, மிக
இயல்பாக அந்தந்த இடங்களில் அமைந்து வருவது சிறப்பு. அவை பிரமிப்பூட்டுகின்றனவேயன்றி,
அயர்ச்சியூட்டுவதில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
கூறுகளை விவரிக்கும் முகமாக, பரிணாம அறிவியல், நரம்பியல், உளவியல், உயிரியல், வரலாற்று
ஆய்வுகள், தத்துவ தரிசனங்கள், புராணங்கள், சங்க இலக்கியம், கட்டிடக் கலை, கிரேக்க –
ரோமானிய – எகிப்திய பண்பாடுகள், அகழ்வாராய்ச்சி, நாட்டார் கலை வடிவங்கள், சமூகவியல்
எனப் பல அறிவுத் துறைகளிலிருந்தும் ஆதாரங்களையும், நுண் தகவல்களையும், புதிய அறிதல்களையும்
அளித்தபடியே செல்கின்றன இக்கட்டுரைகள். அந்த தகவல்களும் அறிதல்களும் கச்சிதமாக, மிக
இயல்பாக அந்தந்த இடங்களில் அமைந்து வருவது சிறப்பு. அவை பிரமிப்பூட்டுகின்றனவேயன்றி,
அயர்ச்சியூட்டுவதில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
அரவிந்தனுக்கென்று
சில திட்டவட்டமான, ஆணித்தரமான கருத்துக்கள் உண்டு. அவற்றை எந்த சமரசமுமின்றி திட்டவட்டமாக
முன்வைப்பவர் அவர். அதே சமயம் இந்து ஞான நெறியின் ஆதார சுருதியாக விளங்கும் ‘சமன்வய
நோக்கு’ சார்ந்த கண்ணோட்டமும் அந்த நெறியை ஆழ்படக் கற்று அதனை உள்வாங்கியிருக்கும்
அவரிடம் உண்டு. உதாரணமாக, வேதங்கள் ‘அபௌருஷேயம்’ (மனிதரால் செய்யப்படாதவை) என்ற சம்பிரதாயமான
கருத்தை அவர் விவாதத்திற்கே எடுத்துக் கொள்வதில்லை. “வேதங்களை இயற்றியவர்கள் யார்?
ரிஷிகள். வேதங்கள் என்பவை ரிஷிகள் தம் தெய்வாவேச நிலையில் இயற்றிய பாடல்களால் நிரம்பியவை.
மிக உயர்ந்த கவித்துவ உச்சங்கள். மிக எளிய வேண்டுதல்கள்… “ (பக். 15) என்று தான்
ஆரம்பிக்கிறார். அதே சமயம், அஸ்வமேத யாகத்தைப் பற்றி எழுதுகையில் அதன் சடங்கு சார்ந்த
பரிமாணங்களை வரலாற்று ரீதியாக முற்றிலுமாக அலசி ஆராய்ந்து விட்டு, அதன் பிரபஞ்ச உருவகத்தையும்
மகத்தான குறியீட்டுத் தன்மையையும் மறக்காமல் குறிப்பிடுகிறார் (பக். 233). வேதங்களின்
ஞான காண்டம் சார்ந்த தத்துவப் பகுதிகள் மட்டுமல்ல, அவற்றிலுள்ள சடங்குகள் சார்ந்த கர்மகாண்டப்
பகுதிகளும் கூட முக்கியமானவையே என்பதை அக்நிசயனம், அதிராத்ரம் போன்ற வேள்விகள் குறித்த
ஆழ் அறிதல்கள் மூலம் விளக்குகிறார்.
சில திட்டவட்டமான, ஆணித்தரமான கருத்துக்கள் உண்டு. அவற்றை எந்த சமரசமுமின்றி திட்டவட்டமாக
முன்வைப்பவர் அவர். அதே சமயம் இந்து ஞான நெறியின் ஆதார சுருதியாக விளங்கும் ‘சமன்வய
நோக்கு’ சார்ந்த கண்ணோட்டமும் அந்த நெறியை ஆழ்படக் கற்று அதனை உள்வாங்கியிருக்கும்
அவரிடம் உண்டு. உதாரணமாக, வேதங்கள் ‘அபௌருஷேயம்’ (மனிதரால் செய்யப்படாதவை) என்ற சம்பிரதாயமான
கருத்தை அவர் விவாதத்திற்கே எடுத்துக் கொள்வதில்லை. “வேதங்களை இயற்றியவர்கள் யார்?
ரிஷிகள். வேதங்கள் என்பவை ரிஷிகள் தம் தெய்வாவேச நிலையில் இயற்றிய பாடல்களால் நிரம்பியவை.
மிக உயர்ந்த கவித்துவ உச்சங்கள். மிக எளிய வேண்டுதல்கள்… “ (பக். 15) என்று தான்
ஆரம்பிக்கிறார். அதே சமயம், அஸ்வமேத யாகத்தைப் பற்றி எழுதுகையில் அதன் சடங்கு சார்ந்த
பரிமாணங்களை வரலாற்று ரீதியாக முற்றிலுமாக அலசி ஆராய்ந்து விட்டு, அதன் பிரபஞ்ச உருவகத்தையும்
மகத்தான குறியீட்டுத் தன்மையையும் மறக்காமல் குறிப்பிடுகிறார் (பக். 233). வேதங்களின்
ஞான காண்டம் சார்ந்த தத்துவப் பகுதிகள் மட்டுமல்ல, அவற்றிலுள்ள சடங்குகள் சார்ந்த கர்மகாண்டப்
பகுதிகளும் கூட முக்கியமானவையே என்பதை அக்நிசயனம், அதிராத்ரம் போன்ற வேள்விகள் குறித்த
ஆழ் அறிதல்கள் மூலம் விளக்குகிறார்.
வேதங்களைப் பற்றிய
விரிவான கல்வியால், ஆராய்ச்சியால், சமகாலத்தில் ஏதேனும் பயன் உண்டா என்று வாசகன் மனதில்
இயல்பாகவே எழும் கேள்விகளை ஊகித்து, தக்க இடங்களில் சமகால பிரச்சினைகள், சமகால அறிவுசார்
விவாதங்கள் ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறது இந்த நூல். அதர்வ வேதத்தின் பூமி சூக்தம்
அளிக்கும் மகத்தான சூழலியல் பார்வைகள், டாக்டர் அம்பேத்கர் பார்வையில் வேதகால சமுதாயத்தைப்
பற்றிய மதிப்பீடு, வேதத்தின் சமூக பார்வை : ஆழியும் பிரமிடும், நவீன இந்து மறுமலர்ச்சிக்
காலத்திய சமூக சீர்திருத்தங்களில் வேத சிந்தனைகளின் தாக்கம், வேதப் பெண்ணியம் முதலானவை
குறித்த கட்டுரைகள் அரசியல், சமூக தளங்களில் செயல்படும் இந்துத்துவர்கள் கட்டாயம் வாசித்து
உள்வாங்க வேண்டியவை.
விரிவான கல்வியால், ஆராய்ச்சியால், சமகாலத்தில் ஏதேனும் பயன் உண்டா என்று வாசகன் மனதில்
இயல்பாகவே எழும் கேள்விகளை ஊகித்து, தக்க இடங்களில் சமகால பிரச்சினைகள், சமகால அறிவுசார்
விவாதங்கள் ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறது இந்த நூல். அதர்வ வேதத்தின் பூமி சூக்தம்
அளிக்கும் மகத்தான சூழலியல் பார்வைகள், டாக்டர் அம்பேத்கர் பார்வையில் வேதகால சமுதாயத்தைப்
பற்றிய மதிப்பீடு, வேதத்தின் சமூக பார்வை : ஆழியும் பிரமிடும், நவீன இந்து மறுமலர்ச்சிக்
காலத்திய சமூக சீர்திருத்தங்களில் வேத சிந்தனைகளின் தாக்கம், வேதப் பெண்ணியம் முதலானவை
குறித்த கட்டுரைகள் அரசியல், சமூக தளங்களில் செயல்படும் இந்துத்துவர்கள் கட்டாயம் வாசித்து
உள்வாங்க வேண்டியவை.
சோமபானம் என்றால்
என்ன? சோமலதை என்ற தாவரம் எதுவாக இருக்கக் கூடும்? சரஸ்வதி நதியைக் குறித்து நவீன ஆராய்ச்சிகள்
சொல்வதென்ன? சிந்துவெளி இலச்சினைகளில் உள்ள ஒற்றைக் கொம்பு மிருகம் குதிரையா அல்லது
வேறொன்றா? அது எதைக் குறிக்கிறது? ஆரியப் படையெடுப்பு, ஆரிய இனவாதம் இவற்றுக்கு ஏதேனும்
ஆதாரங்கள் உண்டா? – இந்த வரலாற்றுப் புதிர்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு அறிவுபூர்வமாக,
தர்க்கபூர்வமாக ஆராயும் பகுதிகள் இந்த நூலில் உண்டு.
என்ன? சோமலதை என்ற தாவரம் எதுவாக இருக்கக் கூடும்? சரஸ்வதி நதியைக் குறித்து நவீன ஆராய்ச்சிகள்
சொல்வதென்ன? சிந்துவெளி இலச்சினைகளில் உள்ள ஒற்றைக் கொம்பு மிருகம் குதிரையா அல்லது
வேறொன்றா? அது எதைக் குறிக்கிறது? ஆரியப் படையெடுப்பு, ஆரிய இனவாதம் இவற்றுக்கு ஏதேனும்
ஆதாரங்கள் உண்டா? – இந்த வரலாற்றுப் புதிர்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு அறிவுபூர்வமாக,
தர்க்கபூர்வமாக ஆராயும் பகுதிகள் இந்த நூலில் உண்டு.
அதற்கிணையாக, அறிதலின்
பரவசமும் கவித்துவமும் வெளிப்படும் கீழ்க்காண்பது போன்ற இடங்களும் உண்டு.
பரவசமும் கவித்துவமும் வெளிப்படும் கீழ்க்காண்பது போன்ற இடங்களும் உண்டு.
“ஆதித்தன்னுணர்வின் படுகையில் இருந்து மலர்ந்த மலரே,
இப்பொருண்மைப் பிரபஞ்சம். நாரணன் தொப்புளில் இருந்து எழும் கமலத்தில் சிருஷ்டி தேவன்
இருக்கிறான். அவன் எதைக் கொண்டு படைக்கிறான்? பிரபஞ்ச சிருஷ்டியின் மர்மம் என்ன?…
ஆதித் தன்னுணர்வே பிரபஞ்சமாக விரிகிறது, பிரளயத்தில் ஒடுங்குகிறது. ஆனால், தன்னுணர்வின்
தூய இருப்பில், இவை அனைத்துமே ஒன்றாக, இருப்பும் இருப்பின்மையுமாக இருக்கின்றன” (பக்.
24).
இப்பொருண்மைப் பிரபஞ்சம். நாரணன் தொப்புளில் இருந்து எழும் கமலத்தில் சிருஷ்டி தேவன்
இருக்கிறான். அவன் எதைக் கொண்டு படைக்கிறான்? பிரபஞ்ச சிருஷ்டியின் மர்மம் என்ன?…
ஆதித் தன்னுணர்வே பிரபஞ்சமாக விரிகிறது, பிரளயத்தில் ஒடுங்குகிறது. ஆனால், தன்னுணர்வின்
தூய இருப்பில், இவை அனைத்துமே ஒன்றாக, இருப்பும் இருப்பின்மையுமாக இருக்கின்றன” (பக்.
24).
நாம் நன்கறிந்த
தொன்மங்களையும், நன்கு வாசித்த படைப்புகளையும் (உதா: லா.ச.ரா.வின் ‘பாற்கடல்’ போல)
முற்றிலும் புதிய வெளிச்சம் பாய்ச்சிக் காட்டும் மின்னல்களும் உண்டு.
தொன்மங்களையும், நன்கு வாசித்த படைப்புகளையும் (உதா: லா.ச.ரா.வின் ‘பாற்கடல்’ போல)
முற்றிலும் புதிய வெளிச்சம் பாய்ச்சிக் காட்டும் மின்னல்களும் உண்டு.
“ஆழ்மனத்தின் இருட்கடல்,
அதிமனத்தின் ஒளிக்கடலுக்கு எதிரானதல்ல. இந்த ஆழ்மனத்தின் அடி ஆழங்களிலிருந்தே அமிர்தத்தை,
இறவாமையைக் கோரும் இனிமையான சோமப் பேரலை எழும்புகிறது. மனம், அதன் ஒளிமிகுந்த தருணங்களில்
எல்லாம் இப்பேரலையின் திவலைகளையே ருசிக்கிறது. இப்பாடலில் விதையாக இருப்பது, இந்தியப்
புராணங்களில் பிற்காலத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு முக்கியத் தொன்மக் கதையாக
மாறும். கடலைக் கடைந்து அமுதம் எடுக்கும் கதை அது. நன்மையும் தீமையும் இணைந்து, இறவாமையை
அடைய அகக்கடலைக் கடையும் அந்த பாற்கடல் தொன்மம், எல்லா அகச்செயல்பாடுகளுக்குமான ஓர்
ஆதார உருவகமாக விளங்குகிறது. இதை, ஒவ்வொரு இந்தியப் படைப்பாளியும் தனது அகத்திலேயே
கூட உணர்ந்திருப்பார்கள்” (பக். 161)
அதிமனத்தின் ஒளிக்கடலுக்கு எதிரானதல்ல. இந்த ஆழ்மனத்தின் அடி ஆழங்களிலிருந்தே அமிர்தத்தை,
இறவாமையைக் கோரும் இனிமையான சோமப் பேரலை எழும்புகிறது. மனம், அதன் ஒளிமிகுந்த தருணங்களில்
எல்லாம் இப்பேரலையின் திவலைகளையே ருசிக்கிறது. இப்பாடலில் விதையாக இருப்பது, இந்தியப்
புராணங்களில் பிற்காலத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு முக்கியத் தொன்மக் கதையாக
மாறும். கடலைக் கடைந்து அமுதம் எடுக்கும் கதை அது. நன்மையும் தீமையும் இணைந்து, இறவாமையை
அடைய அகக்கடலைக் கடையும் அந்த பாற்கடல் தொன்மம், எல்லா அகச்செயல்பாடுகளுக்குமான ஓர்
ஆதார உருவகமாக விளங்குகிறது. இதை, ஒவ்வொரு இந்தியப் படைப்பாளியும் தனது அகத்திலேயே
கூட உணர்ந்திருப்பார்கள்” (பக். 161)
ஒட்டுமொத்தமாகச்
சொல்வதானால், இந்துப் பண்பாடு என்கிற பிரம்மாண்டத்தின் பல கூறுகளில் ஒன்று அல்ல வேதம்
என்பது. வேதத்தின் இடம் என்பது மையமானதும் ஆதாரமானதும் ஆகும். “வேதமன்றோ அனைத்து அறத்தின்
ஆணிவேர்” (வேதோsகிலோ தர்மமூலம்) என்பது முதுமொழி. எனவே, இந்துப் பண்பாட்டின் மீது பற்றும்
நேசமும் கொண்டு, அதைக் கற்கவும், கற்பிக்கவும் விழைபவர்களுக்கு வேதங்களைப் பற்றிய அடிப்படையான
கல்வி என்பது அத்தியாவசியமானது. அதற்கான அனைவருக்குமான ஒரு அறிவுசார் கையேடு இந்த நூல்.
சொல்வதானால், இந்துப் பண்பாடு என்கிற பிரம்மாண்டத்தின் பல கூறுகளில் ஒன்று அல்ல வேதம்
என்பது. வேதத்தின் இடம் என்பது மையமானதும் ஆதாரமானதும் ஆகும். “வேதமன்றோ அனைத்து அறத்தின்
ஆணிவேர்” (வேதோsகிலோ தர்மமூலம்) என்பது முதுமொழி. எனவே, இந்துப் பண்பாட்டின் மீது பற்றும்
நேசமும் கொண்டு, அதைக் கற்கவும், கற்பிக்கவும் விழைபவர்களுக்கு வேதங்களைப் பற்றிய அடிப்படையான
கல்வி என்பது அத்தியாவசியமானது. அதற்கான அனைவருக்குமான ஒரு அறிவுசார் கையேடு இந்த நூல்.
“ஞானமும் தைரியமும்
கொண்ட மக்கள், மனத்தின் உதவியினாலேயே பெரும் காரியங்களைப் போர்க்காலங்களிலும் அமைதிக்
காலங்களிலும் செய்கிறார்கள்,. அந்த மனம் மங்களகரமான சங்கல்பத்துடன் இருக்கட்டும்” (பக்.
173)
கொண்ட மக்கள், மனத்தின் உதவியினாலேயே பெரும் காரியங்களைப் போர்க்காலங்களிலும் அமைதிக்
காலங்களிலும் செய்கிறார்கள்,. அந்த மனம் மங்களகரமான சங்கல்பத்துடன் இருக்கட்டும்” (பக்.
173)
என்ற சிவசங்கல்ப
மந்திரத்தின் வாசகங்கள் குறிப்பிடும் அக ஒளியின் விகசிப்பு இந்த நூலின் கட்டமைப்பிலும்,
இதன் வெளிப்பாட்டிலும் நெடுகக் காணக் கிடைக்கிறது.
மந்திரத்தின் வாசகங்கள் குறிப்பிடும் அக ஒளியின் விகசிப்பு இந்த நூலின் கட்டமைப்பிலும்,
இதன் வெளிப்பாட்டிலும் நெடுகக் காணக் கிடைக்கிறது.
முதல்பதிப்பு வெளிவந்தபோது,
இத்தகைய காத்திரமான நூலுக்கேற்ற உரிய கவனம் இந்த நூலுக்குப் பரவலாகக் கிடைக்கவில்லை
என்பது ஒரு பெருங்குறை. நமது சூழலின் துரதிர்ஷ்டமும் கூட. செம்மையாக வெளிவரும் இந்த
இரண்டாம் பதிப்பில் இது உரிய கவனத்தையும் தீவிர வாசிப்பையும் பெற வேண்டும் என்று ஆசைப்
படுகிறேன். பெறும் என்று நம்புகிறேன்.
இத்தகைய காத்திரமான நூலுக்கேற்ற உரிய கவனம் இந்த நூலுக்குப் பரவலாகக் கிடைக்கவில்லை
என்பது ஒரு பெருங்குறை. நமது சூழலின் துரதிர்ஷ்டமும் கூட. செம்மையாக வெளிவரும் இந்த
இரண்டாம் பதிப்பில் இது உரிய கவனத்தையும் தீவிர வாசிப்பையும் பெற வேண்டும் என்று ஆசைப்
படுகிறேன். பெறும் என்று நம்புகிறேன்.