Posted on Leave a comment

புதிய தொடர்: இந்தியா புத்தகங்கள் (பகுதி 1) | முனைவர் வ.வே.சு

Girish Chandra Ghosh – A bohemian devotee of Sri Ramakirishna – Swami Chetanananda

ஒரு சமயம் ஓர் எழுத்தாளர் ஐயா! தங்களுடைய வாழ்க்கை வரலாற்றை நான் எழுதலாமா? என்று தயங்கிக் கொண்டே கேட்டார். “நான் எப்படி உள்ளேனோ அப்படியே என்னை வடியுங்கள் என்று புன்னகையோடு உரைத்தார் கிரீஷ் சந்திர கோஷ். எழுத்தாளரின் தயக்கத்திற்கும் அவர் பெற்ற பதிலுக்கும் பின்னணியில் ஓர் அற்புதமான வாழ்க்கை வரலாறு படர்ந்து கிடக்கிறது. 

ஆடம்பர வாழ்க்கை, மதுப் பழக்கம், விலைமாதர்களோடு தொடர்பு, தன்னிச்சையாகச் செயல்படுதல், முரண்டு பிடிக்கும் குணம், முன்கோபம் என்று பல தீய பழக்கங்களையும், தீய குணங்களையும் கொண்டிருந்தவர் கிரீஷ். 

Continue reading புதிய தொடர்: இந்தியா புத்தகங்கள் (பகுதி 1) | முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

ஆத்மநிர்பர் – தன்னிறைவா? தற்கொலை முயற்சியா? | சுசீந்திரன்

‘ஆத்மநிர்பர்’ – ஆவலுடன் காத்திருந்த சதக்கோடி மக்களுக்கு நமது பிரதமர் தந்த பதில். ‘இந்த முன்வைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியதும் அல்ல, தன்னம்பிக்கை ஊட்டக்கூடியதும் அல்ல. முதல் பாரதப் பிரதமர் நேரு ஆரம்பித்த இந்த லட்சிய கோஷம் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாகியும் முன்னேறாமல் முடங்கிக் கிடக்கிறது. நேற்றுவரை உலகமயமானதை மெச்சிய வலதுசாரிய சிந்தனையாளர்களா இன்று சுயசார்பு பாரதம், ஸ்வதேசி என்று பல்டி அடித்திருக்கிறீர்கள்’ என்ற கேலியும், ‘வளைகுடா நாடுகளில் பெட்ரோலையும், பிரான்ஸ் ஆயுதங்களையும் வாங்கிக் கொண்டு ‘கோ லோக்கல் என்று கூவுவது அபத்தமில்லையா’ என்ற கிண்டலும் காதில் விழுகிறது. 

Continue reading ஆத்மநிர்பர் – தன்னிறைவா? தற்கொலை முயற்சியா? | சுசீந்திரன்

Posted on 1 Comment

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 4) | ஹரி கிருஷ்ணன்

அரசன் கர்ணனும் கூட்டு அனுமதியும்

துரியோதனன், கர்ணனை அங்க தேச மன்னனாக்கிய சமயத்தில் பாரதம் சொல்லும் விவரங்கள் துரியோதனனுக்கு சுயேச்சையாக முடிவெடுக்க முடியாத நிலை இருந்ததை உணர்த்துகின்றன. இந்நிலை துரியோதனனுக்கு மட்டுமல்லாமல் திருதராஷ்டிரனுக்கும் இருந்தது என்பதையும் இந்தக் குறிப்புகள் உணர்த்துகின்றன. 

போன இதழில் நாம், துரோணருடைய சீடர்களின் ஆட்டக் களத்தில் கர்ணன் நுழைந்ததில் தொடங்கி, இடையில் பாண்டவ வனவாச காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லி, துரியோதனனுடைய நிலைமை என்ன, திருதராஷ்டிரன் வகித்தததாகச் சொல்லப்படும் பதவிதான் என்ன என்பதைப் பற்றி சில கேள்விகளை எழுப்பினோம். 

Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 4) | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும் – அடித்தளத்தைத் தகர்க்கும் ஆதாரத் தொகுப்பு | செ.ஜகந்நாதன்

தண்ணீர்ப் பற்றாக்குறையின் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் இருபத்தேழு கிணறுகள் தோண்டப்படுகின்றன. தோண்டிய பிறகு ‘வார, திதி, நட்சத்திர, யோக, கரணம் பார்த்து சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு துரவு கண்டு புண்யாஹவாசனம் பண்ணுவித்தேன் என்று ஹிந்து சம்பிரதாயப் படி திறப்பு விழா நடத்தி அதைக் கல்வெட்டில் சாசனமாகப் பொறித்து வைக்கின்றார் ஒரு நபர்.

அந்த நபர் அனேகமாகச் சென்னையையும் அதன் சுற்றுப்புறங்களையும் ஆட்சி செய்த ஹிந்து மன்னராகவோ அல்லது குறு நிலப் பாளையக்காரராகவோ இப்பார் என்றுதான் இயல்பாக யூகிக்கத் தோன்றும். ஆனால் அவர் பிறப்பால் கிறிஸ்தவராகப் பிறந்த ஓர் ஆங்கிலேய அதிகாரி.

Continue reading திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும் – அடித்தளத்தைத் தகர்க்கும் ஆதாரத் தொகுப்பு | செ.ஜகந்நாதன்

Posted on Leave a comment

வீரராஜேந்திரரின் திருமுக்கூடல் கல்வெட்டு தரும் செய்திகள் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்

நம்முடைய பண்டைய வரலாற்றை அறிந்துகொள்வதற்கு கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருமளவு உதவுகின்றன. இந்த அரசன் அந்த நாட்டிற்குப் படையெடுத்துச் சென்றான், அந்த அரசனை வென்று அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் போன்ற செய்திகளைத் தவிர, அக்கால நிர்வாகம், நிதி மேலாண்மை, சமூக வாழ்வு போன்றவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள இந்த சாசனங்கள் உதவுகின்றன. அப்படிப்பட்ட பல செய்திகளைக் கொண்ட கல்வெட்டுகளில் ஒன்றுதான் பொயு 1063 – 1070க்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வீரராஜேந்திர சோழரின் திருமுக்கூடல் கல்வெட்டு. 

Continue reading வீரராஜேந்திரரின் திருமுக்கூடல் கல்வெட்டு தரும் செய்திகள் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்

Posted on Leave a comment

20 லட்சம் கோடி – பொருளாதார மாற்றக் கணம் | ஜெயராமன் ரகுநாதன்

கொரோனாவின் பாதிப்பால் அடி வாங்கிய இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக மோடி அரசாங்கம் அறிவித்திருக்கும் 20 லட்சம் கோடி ஊக்கத் திட்டங்களைப் புரிந்தும் புரியாமலும் புகழும் அல்லது விமர்சிக்கும் கோஷ்டிகளுக்கு 20 லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரியாது என்பதுதான் உண்மை!

பிரதமரின் மே 12ம் தேதி உரையில் தெரிவிக்கப்பட்ட ஐந்து அம்சங்களையும் உள்ளடக்கிய திட்டங்களாக நமது நிதி அமைச்சர் ஐந்து நாட்களில் திட்டங்களை அறிவித்தார்.

Continue reading 20 லட்சம் கோடி – பொருளாதார மாற்றக் கணம் | ஜெயராமன் ரகுநாதன்

Posted on Leave a comment

மாவோவின் கடைசி நடனக் கலைஞன்: Mao’s Last Dancer | அருண் பிரபு

சீனாவின் கம்யூனிஸ காலத்தையும் அதன் மாற்றத்தையும் சொல்லுகிறது இந்தப் படம். 1970களில் மாவோவின் காலத்தில் படம் தொடங்குகிறது. ஷாண்டாங் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 9 குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்தவன் லீ குங்க்சின். அந்தக் கிராமத்துக்கு அதிகாரிகள் வருகிறார்கள். லீயின் பள்ளிக்கு வரும் அதிகாரிகள் அங்கே மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பீஜிங்கில் நடக்கும் நாட்டியப் பயிற்சிக்கு அனுப்பவிருப்பதாகச் சொல்கிறார்கள். லீயின் வகுப்பில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் போகிறார்கள் அதிகாரிகள். லீயின் வகுப்பாசிரியர் மிகவும் கெஞ்சிக் கேட்டு அவனைச் சேர்த்துவிடுகிறார். லீ பீஜிங் போவதை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் பக்கத்து குவிங்டாவ் நகரத்தில் தேர்வுக்கு வரச்சொல்கிறார்கள். அங்கே சைக்கிளில் அழைத்துப் போகிறார் லீயின் தந்தை. லீயிடம் நடனத்துக்குத் தேவையான ஒரு நளினம் உள்ளது என்று மாநில நாட்டிய மாஸ்டர் அவனைத் தேர்வு செய்கிறார்.

Continue reading மாவோவின் கடைசி நடனக் கலைஞன்: Mao’s Last Dancer | அருண் பிரபு

Posted on Leave a comment

சீனா உலக நாடுகளால் தண்டிக்கப்பட வேண்டும் | எஸ்.நடராஜன்

2020ம் ஆண்டு உலக மக்களுக்கு அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் தரும் என்று எதிர்பார்ப்போடு துவங்கியது. புதிய தொழில்நுட்பம், தொழிற்சாலைகள், வேலை வாய்ப்பினை ஏராளமானோருக்கு வழங்குதல், அனைத்துப் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விவாசயத் துறையில் தன்னிறைவை நோக்கி நகர்வது என்று பல எதிர்பார்ப்புகள். உலகில் ஒவ்வொரு நாடும் வேளாண் பொருட்களை அதிக அளவிலே உற்பத்தி செய்து, தன் நாட்டின் தேவைக்குப் போக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என்ற கனவு இருந்தது. ஆடு, மாடு மற்றும் வளர்ப்புப் பிராணிகள் பல மடங்குப் பெருக்கம் என மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையே உலக மக்கள் 2020ல் எதிர்பார்த்தனர். ஆனால், காலம் தனது கடமையை வேறு விதமாக நிறைவேற்றுவதற்குக் காத்திருந்தது என்பதை நாம் பின்னர்தான் தெரிந்து கொண்டோம். 

Continue reading சீனா உலக நாடுகளால் தண்டிக்கப்பட வேண்டும் | எஸ்.நடராஜன்

Posted on 2 Comments

வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்

இன்று பத்ரி, பதரிகாசிரமம் என்பதைத்தான் ஆழ்வார்கள் வதரி என்று தூய தமிழில் சொல்லுகிறார்கள். வதரி என்றால் இலந்தையைக் குறிக்கும். இங்கே இருக்கும் பெருமாள் பதரிவிஷால். இலந்தை மரத்துக்குக் கீழே தியானம் செய்யும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அதனால் இந்தப் பெயர். 

எல்லோருக்கும் குறிப்பாக ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தன் வாழ்நாள் முடிவதற்குள் பத்ரிக்கு ஒருமுறை சென்று வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளுடன் திருமங்கை ஆழ்வார் வதரி வணங்குதுமே என்று அருளிய பாசுரங்களுடன், ஸ்ரீ ராமானுஜர் சென்று வந்த பாதையில் பத்து நாள் யாத்திரையாகப் பத்ரிக்குச் சென்று அங்கு நான்கு நாட்கள் தங்கியது வாழ்நாளில் மறக்க முடியாத இனிய அனுபவம்.  Continue reading வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்

Posted on Leave a comment

வலம் மே 2020  முழுமையான இதழ்


வலம் மே 2020 இதழ் படைப்புகளை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நேர்காணல் | அபாகி

நாவல் கொரோனா – அச்சமும் அறிவுறுத்தலும் | சுஜாதா தேசிகன்

முதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்

ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன்

ஜெர்மனியின் அல்கட்ராஸ் சிறை (Friedrich Loeffler Institute) | ராம் ஸ்ரீதர்

மகாபாரதம் கேள்வி பதில் | ஹரி கிருஷ்ணன்

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்

சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்

விடுப்பிற்குப் பின் (சிறுகதை) | ராமையா அரியா