Posted on Leave a comment

நேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2020 செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற 75வது ஐநா பொதுச் சபையில், காணொளி வாயிலாக, முன்பே பதிவுசெய்யப்பட்ட 22 நிமிட ஹிந்தி உரையை நிகழ்த்தினார். அதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்களை வலியுறுத்தினார். அவர் பேசிய விவரம் வருமாறு: Continue reading நேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ்

Posted on Leave a comment

வலம் நவம்பர் 2020 இதழ்

வலம் நவம்பர் 2020 இதழின் உள்ளடக்கம்.

 

தேசியக் கல்விக் கொள்கை: புதிய பாய்ச்சலை நோக்கி.. | கோலாகல ஸ்ரீனிவாஸ் 

தமிழ்வாணன் என்கிற தேசபக்த ஹிந்து | அரவிந்தன் நீலகண்டன்

சொந்த நாட்டின் அகதிகள் – THE EDGE (2010) | அருண் பிரபு

மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 8 | ஹரி கிருஷ்ணன்

இந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.

ஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு

திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

Posted on Leave a comment

திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

காலம் – பதினொன்றாம் நூற்றாண்டு; இடம் – மதுரை, திருவானைமலை – திருமாலிருஞ் சோலை செல்லும் பாதை.

‘தட தட தட..’ என்று வெண்ணிறப் புரவிகள் அந்த வண்டிப் பாதையில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தன. உயர்சாதிப் புரவி ஒன்றில் ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க ஒரு மன்மதனைப் போல இருந்தாலும், முகத்தைச் சற்றே மறைத்துத் துகிலொன்று கட்டியிருந்தான். அவனைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளில் சிலர் வர, கூப்பிடு தூரத்தில் மேலும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். இளைஞன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வலது திசையில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. அதுவோ அடர்ந்த காடு. அந்த வழி திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து நரசிங்கமங்கலத்தை இணைக்கும் வண்டிப்பாதை. Continue reading திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு

கிரேசி மோகன்

ரமணியின் அச்சகத்தில் பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஒரு செய்தி என்னைத் தாக்கியது (27.03.1984). ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கத்தைச் சேர்ந்த, தொடக்கத்தில் என்னைப் பண்படுத்தி வழிநடத்திய பத்துஜி (பத்மநாபன்) கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பதுதான் அந்தச் செய்தி. அது என்னை வெகுவாகப் பாதித்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு சகஜநிலைக்கு வருவதற்கு சில நாட்கள் ஆயின. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு

Posted on Leave a comment

ஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்

(அமர்ந்திருப்பவர்கள்: காந்தி, கஸ்தூர்பா.
நின்றிருப்பவர்களில் வெள்ளை தலைப்பாகை அணிந்திருப்பவர்: ஜி.ஏ.நடேசன்)

இந்த கொரானா பெருந்தொற்று நோய்க் காலத்தில் பல்வேறு தொழில் துறைகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. பாதிப்புக்குள்ளான துறைகள் எந்தளவுக்கு தங்களது நிறுவனத்தைத் திறமையாக நிர்வகித்தார்கள்,  நவீன தொழில்நுட்பத்தை எந்தளவுக்கு உள்வாங்கியுள்ளார்கள் என்பதைப் பொருத்து பாதிப்பு மாறுபடுகிறது. Continue reading ஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.

The Razor’s Edge – Somerset Maugham

வகுப்பறைகளைப் போலவே சிலநேரங்களில் தெருவோரங்களும் நமக்குச் சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் என்பதை ஒப்புக்கொள்பவர்கள் உண்டு. ஒப்புக்கொள்ளாதவர்கள் இதைப் படித்துவிட்டு மாறக்கூடும். Continue reading இந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 8 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

(செப்டம்பர் 2020 இதழின் தொடர்ச்சி..)

வலம் குழுவினர் தொகுத்து அனுப்பியிருந்த கர்ணனைக் குறித்த சில கேள்விகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். வில்லி பாரதம், ஜைமினி பாரதம் போன்ற படைப்புகளின் ஆசிரியர்கள் காரணத்தோடோ, காரணமின்றியோ செய்திருக்கும் மாறுதல்கள் உருவாக்கியிருக்கும் கட்டமைப்பே கர்ணனைப் பற்றி இன்று நிலவிவரும் பிம்பத்துக்கு அடிப்படையாக இருப்பதைப் பார்த்தோம். வியாச பாரதத்தில் கர்ணன் தோல்வியைத் தழுவும் தறுவாயில் ‘இவ்வளவு தர்மம் செய்தேனே! தர்மம் என்னைக் கைவிட்டுவிட்டதே’ என்று தர்ம நிந்தனை செய்கிறான். ‘தர்மம் தலை காக்கும்’ என்ற பாரம்பரியமான கருத்து இதில் அடிபட்டுப் போகிறதோ என்ற எண்ணத்தினாலோ என்னவோ (உண்மையில் வியாச பாரதத்தின் இந்தக் கட்டம் தர்மத்தின் மீதான அவநம்பிக்கை எதையும் ஊட்டவில்லை) வில்லிபுத்தூரார், கர்ணன் செய்த தர்மத்தின் பலன்களையெல்லாம் ஒரு பிராமணன் வடிவில் வந்து யாசித்துப் பெற்றதாக ஒரு கற்பனையை உள்ளே நுழைத்தார். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 8 | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

சொந்த நாட்டின் அகதிகள் – The Edge (2010) | அருண் பிரபு

இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் ஜெர்மானியர்களின் கைதிகளாக இருந்த சிவப்பு ராணுவத்தினர், சோவியத் அமைப்பின் பொது மக்கள் என்று பலரும் தங்களுக்கு விடுதலை என்று மகிழ்ந்து கொண்டாடினர். ஜெர்மனி தோற்று சோவியத் யூனியன் வென்ற நாடுகளின் கூட்டமைப்பில் இருந்ததால் நாட்டுக்குத் திரும்பி நிம்மதியாக வாழலாம் என்று கனவு கண்டனர். ஜெர்மன் சிறைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்குச் செல்லாமல் சைபீரியச் சிறை முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஜெர்மானியச் சிறைகளில் அவர்களுக்கு நாஜி கொள்கை கற்பிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுவித்து கம்யூனிசத்தை மீண்டும் கற்பிக்க என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அது ஒரு கொடுமையான சிறை. போனால் திரும்பி வருவது மிகவும் அரிது. Continue reading சொந்த நாட்டின் அகதிகள் – The Edge (2010) | அருண் பிரபு

Posted on Leave a comment

தமிழ்வாணன் என்கிற தேசபக்த ஹிந்து | அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்நாட்டில் திராவிட இயக்க அலை அடித்த போது அதனை எதிர்த்து நின்றதோடு, ஹிந்து தர்மத்துக்காகக் குரல் கொடுத்த முக்கியமான ஊடகவியலாளர்கள் உண்டு. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் இல்லாமல், அவர்கள் தீர்மானமாக ஹிந்து தர்மத்தை ஆதரித்தனர். திராவிட இயக்க போலித்தனங்களைத் தோலுரித்தனர்.

அப்படிப்பட்ட ஒரு ஊடகவியலாளர் தமிழ்வாணன் அவர்கள். தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களால் தமிழ்வாணன் எனப் பெயர் சூட்டப்பட்டவர் அவர். ‘துணிவே துணை’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டவர். Continue reading தமிழ்வாணன் என்கிற தேசபக்த ஹிந்து | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

தேசியக் கல்விக் கொள்கை: புதிய பாய்ச்சலை நோக்கி.. | கோலாகல ஸ்ரீநிவாஸ்

இந்தியா மீதான உலகின் பார்வையை மாற்றுவதில், தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ன பங்கு வகிக்கும் என்பது குறித்து அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இந்தியாவின் மீதான உலகின் பார்வை என்பது என்ன? அது எதைச் சார்ந்தது? Continue reading தேசியக் கல்விக் கொள்கை: புதிய பாய்ச்சலை நோக்கி.. | கோலாகல ஸ்ரீநிவாஸ்