Posted on Leave a comment

வி.ஜி.சித்தார்த்தா – வளர்ந்தாரா வளைந்தாரா…? | ஜெயராமன் ரகுநாதன்



சென்ற
மாதம் ஒவ்வொரு இந்தியனும் அதிர்ச்சியுடன் கவனித்த விஷயம் கஃபே காஃபி டே (Caf
é Coffee Day) வி.ஜி.சித்தார்த்தாவின்
தற்கொலை. எத்தனையோ இளைஞர்களின் நட்பை உறுதிப்படுத்தும் இடமாக இருந்த அந்த நிறுவனத்தின்
மூலகர்த்தா இப்படி ஒரு முடிவைச் சந்திக்கவேண்டுமா என்னும் வருத்தம் இந்தியாவுக்கே இருந்தது
என்றெல்லாம் பரபரப்பையும் உணர்ச்சிகளையும் தூண்டிய வாக்கியங்களைப் பல பத்திரிகைகளிலும்
தொலைக்காட்சி செய்திகளிலும் கண்டோம். மேலும் ஒரு பத்திரிகை இந்த சாமானியனின் அபார வளர்ச்சியைக்கண்டு
சாதாரண இந்தியன் நெஞ்சு விம்மிப் பெருமிதம் கொண்டான் என்றுகூட எழுதியது.
சித்தார்த்தாவின்
மறைவு மிகவும் வருத்தமான செய்திதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும் அவர் ஒன்றும்
மீடியாக்களில் பரவியது போல சாமானியர் அல்லர். அவரின் தொடர்புகள் அளப்பரியன. அவரின்
கரங்கள் மிக நீண்டே இருந்தன. இதோ இந்த படத்தைப் பாருங்கள்:
அகாலத்
தற்கொலை பற்றி இப்போது எல்லோரும் பேசுவது ஒரு துர்மரணத்தினால் உண்டாகும் பரிதாப வார்த்தைகளையே.
எந்த ஒரு மனிதனுமே குடும்பம், பிள்ளைகளை நிர்க்கதியாக்கிவிட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்வது
பரிதாபத்துக்குரிய விஷயம்தான். என்றாலும், அதன் மற்றைய பரிமாணங்கள் என்ன என்று பார்க்கும்போது
வெளிப்படும் உண்மைகள் வேறு ஒரு பார்வையையும் அதன் மூலம் சில பாடங்களையும் தரலாம்.
நேத்ராவதி
ஆற்றிலிருந்து அவர் உடல் கண்டெடுக்கப்பட்டபோது பல சங்கடமான கேள்விகள் எழத்தான் செய்தன.
அவரது தற்கொலைக் கடிதத்தில், தொழில் தொடர்பான சிக்கல்களாலும் ஒரு வருமான வரி அதிகாரி
மற்றும் ஒரு தனிப்பட்ட முதலீட்டாளர் ஆகிய இருவராலும் தான் மிகவும் மன உளைச்சலுக்கு
ஆளானதாலும்தான் இந்த முடிவைத் தேடிக்கொண்டேன் என்று எழுதியிருக்கிறார். மேலும் தான்
சில மாதங்களாக ஈடுபட்டிருந்த நிதி நிர்வாக விஷயங்களை தம் குடும்பத்தாருக்கோ அல்லது
தன் நிறுவன நிர்வாகிக்களுக்கோ கூடத் தெரிவிக்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
 *                      சுலப வர்த்தகம் (Ease of doing business) என்பது வெற்று வாக்கியம்தானா?
*                       
*                     வருமான வரி அதிகாரிகள் எல்லை மீறுகின்றனரா?
*                       
*                     Private Equity Investor என்னும் தனிப்பட்ட முதலீட்டாளர்களின்
வழக்கங்கள் அரக்கத்தனமானவையா?
                      
இந்தக்
கேள்விகள் தவிர, கர்நாடகா அரசியலின் திரைமறைவுக் காட்சிகளும் இவரின் மரணத்துக்குத்
துணை போயிற்றா என்னும் கேள்வியும் எழுகிறது.
மிகச்சாமர்த்தியமான
புத்திசாலியான ஒரு பிஸினஸ் புள்ளி தன் சாதுரியத்தினாலும் தொடர்புகளினாலும் ஒரு மிகப்பெரிய
பிஸினஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கினாலும், அதீத பேராசையினாலும் சில மறைமுக நடவடிக்கைகளாலும்
அரசை ஏமாற்ற முயன்றதாலும் வெளி வரமுடியாத சிக்கல்களில் உழன்று போய் இந்த சோக முடிவைத்
தேடிக்கொண்டு விட்டாரா? உண்மை என்பது வெளி வந்தாலும் அது முழுமையான உண்மையா என்பது
எவருக்கும் தெரியப்போவதில்லை.
கடந்த
சில மாதங்களாகவே சித்தார்த்தாவின் பெயர் அடிபட்டுக்கொண்டிருந்ததன் காரணம் தனிப்பட்ட
மிகப்பெரும் கடன் சுமையினால் அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகளே. கஃபே காபி டேவின் மதிப்பு
கிட்டத்தட்ட ரூ 4200 கோடி. சித்தார்த்தாவும் அவரின் சில நண்பர்களும்கூட அவரது கடன்
சுமையை விட இந்த மதிப்பு அதிகம் என்றே சொல்கின்றனர். இருப்பினும் சித்தார்த்தா தன்
முடிவைத் தேடிக்கொண்டதன் காரணம் என்ன என்பது இன்று வரை சந்தேகமறத் தெளிவாகவில்லை. விசாரணைக்குப்
பின்னும் உண்மையான காரணம் தெரிய வருமா என்பது உறுதியில்லை.
சில
வாரங்களுக்கு முன்புதான் சித்தார்த்தா தன் மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவனப் பங்குகளை
(20.3%) L&Tக்கு விற்றிருந்தார். அந்த விற்பனையே மைண்ட் ட்ரீ கம்பெனியின் நிர்வாகிகளுக்கும்
சித்தார்த்தாவுக்கும் சலசலப்பை உண்டு பண்ணி, இதில் எல்.அண்ட்.டி குளிர் காய்கிறது என்றெல்லாம்
விமரிசனங்கள் வைக்கப்பட்டன. என்றாலும், அந்த விற்பனை என்னவோ நிகழ்ந்தே விட்டது. இந்த
விற்பனையின் சித்தார்த்தாவுக்கு எல்.அண்ட்.டி வழங்கிய மதிப்பு ரூ 3269 கோடி. இந்தத்
தொகை சித்தார்த்தாவின் கடனை முழுமையாக அடைக்கப் போதுமானதில்லையா என்னும் கேள்வி எழுகிறது.
அப்படியானால் தொழில் நிறுவனப் புத்தகங்களில் காட்டப்பட்ட கடனைவிட வேறு என்ன கடன் எங்கெங்கு
என்பது இன்னும் தெரியவில்லை.
கம்பெனிப்
புத்தகங்களில் அவரின் கடன் சுமை ரூ 6500 கோடிவரை இருப்பதாகவும் அது தவிர தனிப்பட்டு
அவர் ஏராளமான தொகைகளைக் கடனாக வாங்கியிருந்தார் (கிட்டத்தட்ட ரூ 2000 கோடி வரை) என்றும்
உறுதி செய்யப்படாத தகவல்கள் சொல்கின்றன. சமீபத்தில் இன்னும் ரூ 1600 கோடி கடன் வாங்குவதற்கான
ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார் என்பதும் தெரிய வருகிறது.
சித்தார்த்தாவுக்கு
கஃபே காபி டேவைத்தவிர தகவல் தொழில், ரியல் எஸ்டேட், நிதிச்சேவை, லாஜிஸ்டிக்ஸ் எனப்படும்
சரக்குப்போக்குவரத்து ஆகிய தொழில் துறைகளில் முதலீடு இருந்தது. இவை தவிர அவர் தென்
அமெரிக்காவில் 1.85 மில்லியன் ஹெக்டேர் வனப்பிரதேசக் காடுகளைக் குத்தகைக்கு எடுத்திருந்தார்.
தன் காபித் தோட்டங்களின் மதிப்பு மற்றும் சில்வர் ஓக் மரங்களின் மதிப்பை அவர் கிட்டத்தட்ட
ரூ 3000 கோடி என்று சொல்லியிருந்தார். ஆனால் விவரமறிந்த விற்பன்னர்கள் சிலர் இந்த மதிப்பை
ஒப்புக்கொள்ளவில்லை. அந்தச் சொத்துக்கள் அவர் கடனை அடைக்கப் போதுமானதில்லை என்றே கூறுகின்றனர்.
சித்தார்த்தாவின்
மரணத்தின் காரணம் அவர் கடிதத்தின்படி அவரால் கடன் சுமையைக் கையாள முடியவில்லை என்பதே.
மேலும் அவர் வாங்கியிருந்த பல கடன்கள் தனிப்பட்ட முறையில் பெற்றவை என்றும், அவை பற்றி
நிறுவனத்துக்கோ அதன் நிர்வாகிகளுக்கோ, ஏன் குடும்பத்தாருக்கோகூடத் தெரியாது. எல்லாவற்றுக்கும்
தானே பொறுப்பு என்னும் ரீதியிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு
தனி முதலிட்டாளரின் நெருக்கடியையும் ஒரு வருமானவரி அதிகாரியின் கிடுக்கிப்பிடியையும்
தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று கடிதத்தில் சொல்லியிருப்பது கேள்விக்கு உரியதாகிறது.
இந்தச் செயல்கள் தற்கொலைக்குத் தூண்டும் செயல்கள் என்று பார்க்கப்படுமா என்பது சட்ட
வல்லுனர்கள் கணிக்க வேண்டியதானாலும், இவை விசாரணைக்குட்படுத்தப் படவேண்டியவை என்பதில்
சந்தேகமே இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும்.
சரி,
இதையே இன்னொரு கோணத்தில் பார்ப்போமா?
வருமானவரி
அதிகாரி நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன, அதற்கு சித்தார்த்தா ஏன் பயப்படவேண்டும்
என்பதும் கேள்விக்குரியவையே! அவரின் வருமான வரிச்சிக்கல் சுருக்கமாக இதோ:
அரசியல்
தொடர்புகள் அவருக்கு இருந்தாலும் அவை எதுவும் அவரைக் காப்பாற்றவில்லை. டி.கே.சிவகுமாரின்
நெருக்கம் அவருக்கு நெருக்கடியைத் தந்தது. சிவகுமார் வீட்டில் நடந்த ரெய்டின் பாதிப்பில்
கிடைத்த விஷயங்கள்தாம் சித்தார்த்தாவின் வீட்டு ரெய்டுக்கும் காரணம் என்று சிலர் சொல்லுகின்றனர்.
மாமனார் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அரசியல் பலமோ அவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்ததால் உண்டான
தொடர்பினாலோ கூட சித்தார்த்தாவைக் காப்பாற்ற இயலாமல் போனது.
எந்த
விதத்திலும் சித்தார்த்தாவின் மரணம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. அவரின் மரணத்துக்கு
காரணமாக இருந்த எவருமே சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நமக்கு ஏற்படும்
எண்ணம் இந்தச் சம்பவத்தைக்கொண்டு வேறொரு அஜெண்டாவை முன்வைக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன
என்பதே.
பிஜேபி
அரசு பதவிக்கு வந்த 2014 முதலே சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. மோடி அரசாங்கம்
ஊழலுக்கு எதிரானது என்று முழங்கியே ஆட்சிக்கு வந்த காரணத்தால் அவரின் அமைச்சர்கள் தத்தம்
துறைகளில் களை எடுத்த முயற்சிகளில் பல பின் விளைவுகள் தெரிய ஆரம்பித்தன. பண மதிப்பிழப்பு,
ஜிஎஸ்டி, வருமான வரி கிடுக்கிப்பிடிகள் போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அரசை
எதிர்க்கும் வியூகத்தை வகுத்து மீடியாக்கள் மூலமாக தம் பிஜேபி தாக்குதலைத் தொடர்ந்த
சங்கதிகளை நாமறிவோம். தேச விரோத சக்திகளும் இந்த மறைமுகத் தாக்குதாலை வைத்துத் தம்
நோக்கங்களை முன்னிறுத்த ஆரம்பித்தன.
மிகக்கடுமையாக
மோடி வெறுப்பு தூவப்பட்டு பல நிலைகளில் அந்த எதிர்ப்புகள் வலுப்பெற ஆரம்பித்தன. முக்கியமாக
தென் மாநிலங்களில், அதுவும் தமிழகத்தில் இந்த எதிர்ப்பு பலம் பெற்றதும், அதனால்
2019 தேர்தலில் இவ்விடங்களில் பிஜேபி அதிகம் வெற்றி பெறமுடியாமல் போனதும் சரித்திரம்.
ஆனால் வட மாநிலங்களில் பிஜேபி இந்த அளவு மக்கள் ஆதரவைச் சம்பாதித்து மாபெரும் வெற்றியடைந்து
விடும் என்பதை இந்த எதிர்ப்பாளர்கள் எதிரே பார்க்கவில்லை. இந்த மாபெரும் வெற்றி பிஜேபியினருக்கே
தங்களின் முயற்சிகளின் மீது பெரும் நம்பிக்கையைத் தோற்றுவிக்க, புதிய அரசு ஊழல் களையெடுக்கும்
செயல்களில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது. நிர்மலா சீதாராமன் பதவி ஏற்ற கையோடு வருமான
வரி மற்றும் பல அரசு இயந்திரங்களில் மேல் நிலை அதிகாரிகளின் மாற்றம் தொடங்கிவிட்டதைப்
பார்த்தோம்.
மோடி
அரசின் கடந்த ஐந்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட, சட்டத்தின் முன் கேள்விக்குரிய செயல்களைச்செய்த
நேர்மையல்லாத தொழில் நிறுவனங்கள் கொண்டிருந்த ‘இந்த முறை பிஜேபி ஆட்சிக்கு வராது’ என்ற
நம்பிக்கை பொய்த்துப்போகவே அவர்கள் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். மேலும்
ஏற்கெனவே எடுக்கப்பட்ட விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு எதிரான செயல்பாடுகள் சர்வதேச
அளவிலேயே அவர்களுக்கு எதிராகப் போய்விட்ட நிலையில் இங்கு அதுபோன்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுக்
கொண்டிருக்கும் பெரிய மனிதர்களின் தப்பித்தல் கனவு வலுவிழந்து போய்விட்டது.
சித்தார்த்தாவின்
மரணத்துக்கான காரணம் தனக்கு ஏற்பட்ட அதீத மன உளைச்சல் என்று அவரால் எழுதப்பட்ட கடிதம்
மூலம் தெரிய வர, இந்த மோடி எதிர்ப்பு சக்திகள் இதையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தத்
தொடங்கிவிட்டதைக் காண்கிறோம்.
“வருமான
வரித்துறை சித்தார்த்தாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது!” (Tax Terrorism
என்ற சொல்லைப்பயன் படுத்துகின்றனர்.)
“கடன்
கொடுத்த வங்கிகள் அவரைத் தற்கொலைக்குச் செல்லும்படி அழுத்தம் கொடுத்துவிட்டன!”
இதில்
ஓரளவுக்கு உண்மை இருக்கக்கூடும்.
ஏனெனில்
கடன் கொடுத்தவன் நெருக்கத்தான் செய்வான். மல்லையா விஷயத்திலும் நீரவ் மோடி விஷயத்திலும்
அரசு என்ன செய்து கொண்டிருந்தது, வங்கிகள் அவர் ஊரை விட்டுக் கிளம்பும் வரை வேடிக்கை
பார்த்தனவா என்று கேட்ட அதே நபர்கள்தான் இப்போது நெருக்கடி கொடுத்ததைக் குறை கூறுகின்றார்கள்.
இந்த
நிருபிக்கப்படாத சந்தேகங்கள், அரசியல் மறைமுக நடவடிக்கைகள் என்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு
வெறும் தொழில் என்ற அளவில் பார்த்தால் ஓரளவு தெளிவு கிடைக்கலாம்.
ஒரு
மிகப்பெரும் தொழில் நிறுவனர் பலதரப்பட்ட வகை தொழில் நிறுவனங்களை ஒரே குடையின் கீழ்
நிர்வகிக்கும்போது சில தவிர்க்கமுடியாத நிர்வாகட் செயல்பாடுகளைச் செய்துவிடுகிறார்
என்பது உலகமெங்கும் நாம் பார்த்த ஒரு வழக்கம். பல நிறுவனங்கள் இயங்கும்போது, சில நல்ல
லாபகரமாக இயங்க, சில நிறுவனங்கள் தடுமாறும் அல்லது நொண்டியடிக்கும். அப்போது லாபகர
நிறுவனத்தில் இருக்கும் பணப்புழக்கத்தைச் சட்டென்று இன்னொன்றில் செலுத்தி நிலமையைச்
சமாளிப்பது வழக்கம்தான். ஆனாலும் இன்றைய கடுமையான வர்த்தகச் சட்டங்களுக்குட்பட்டு அதைச்செய்ய
முடியாது. எனவே பல சமயங்களில் சட்டங்கள் மீறப்படுகின்றன. நொண்டியடிக்கும் நிறுவனங்கள்
சீரடையாமல் நஷ்டத்திலேயே இயங்குமானால் இந்தக் குளறுபடி நிதி மேலாண்மை ஒரு கட்டுக்குள்
அடங்காமல் போய், சட்ட விதி மீறல், நேர்மையற்ற நிதிக்கணக்குகள், பெரும் கடன் சுமை என்று
முடிந்துவிடும். விதிகளை மீறிக் கடன் கொடுக்கும் வங்கிகளும் முதலீட்டாளர்களும் நிலைமை
நெருக்கடியாகும்போது தம் முதலீட்டையோ கடன் தொகையையோ காத்துக்கொள்ள நிறுவன அதிபரை நெருக்கத்தான்
செய்வார்கள். அவர் அதைச் சமாளிக்க இயலாமல் ஒன்று இன்சால்வென்ஸி கொடுத்துவிடுவார், இல்லை
ஓடி ஒளிந்துகொள்வார், அல்லது வேறென்ன, ஆற்றில் குதித்துவிடுவார்!
சித்தார்த்தின்
நிறுவனச் சங்கிலியைப்பாருங்கள்.
வி.ஜி.சித்தார்த்துக்கும்
இதுவே நிகழ்ந்திருக்கலாம் என்று நம்மால் யூகிக்கத்தான் முடியும்.
எத்தனையோ
பேருக்கு தம் நட்பையும் தொடர்புகளையும் வளர்த்துக்கொள்ள அருமையான இடம் கொடுத்த கஃபே
காஃபி டேவின் அதிபருக்கு, அவர் வாழ இந்த உலகத்தில் இடமில்லாமல் போய்விட்டது என்பதை
வாழ்க்கையின் அபத்தங்களுள் ஒன்றாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.
(Charts From: VG Siddhartha:
The death of an entrepreneur By Indulekha Aravind, Suman Layak, ET Online, 4th
August 2019)

Leave a Reply