
பனிக் குல்லா போட்டுக் கொண்ட மலைச்சிகரங்கள், மரகதப் பச்சையில் கம்பளம் விரித்த பள்ளத்தாக்குகள், ஆப்பிள் தோட்டங்கள், குங்குமப்பூ நிறைந்த நிலங்கள்…. இந்த அழகான, கவித்துவமான சூழ்நிலையைப் பார்க்கும்போது காஷ்மீர்ப் பள்ளத்தாக்கை யாரும் தீவிரவாதிகள் நிறைந்த இடம் என்று சொல்ல மாட்டார்கள்.
ஆனால், பல ஆண்டுகளாக இந்த இடம் அமைதியின்றித் தத்தளித்துக் கொண்டுள்ளது. நமக்குச் சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகள் மேலாகியும், இந்தப் பூவுலகச் சொர்க்கத்தின் மீது பாகிஸ்தான் கொண்ட வெறி கொஞ்சமும் குறையவில்லை. ஆம், அதை வெறி என்றுதான் சொல்லவேண்டும். ஆசை, காதல் போன்றவை மென்மையான வார்த்தைகள். அவை பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் மீது இருக்கும் அதீத வெறியை வர்ணிக்கப் போதாது.
31 அக்டோபர் 2019 முதல் இத்தனை வருடங்களாக ஜம்மு/காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த தன்னாட்சியைத் திரும்பப்பெற்று, லடாக் பகுதி மற்றும் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தது இந்திய அரசு.
பெரும்பான்மை ஹிந்துக்கள் இருக்கும் ஜம்முவில் இதற்குப் பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லாத நிலையில், பெரும்பான்மையாக முஸ்லிம்களும், முஸ்லிம் தீவிரவாதிகளும் நிறைந்த காஷ்மீரில் எதிர்பார்த்தது போலவே தீவிர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Continue reading வலையில் சிக்காத தீவிரவாத யானை | ராம் ஸ்ரீதர்