
அந்தப் பிரசித்தி பெற்ற ஆகஸ்டு 15, 1947ன் நள்ளிரவு, மௌண்ட்பேட்டன் கப்பலேறும்போது மறதியாக விட்டுச்சென்ற ஆங்கிலம் என்னும் மொழி இந்தியாவைப் படாத பாடு படுத்திக்கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து ஆங்கிலத்துக்கான இடம் எது என்பதில் நமது சண்டையும் சச்சரவும் ஓய்ந்தபாடில்லை. முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால் எந்த மொழியில் நம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் இன்னும் குடுமிப்பிடி தொடருகிறது. சமீபத்தைய தேசிய கல்விக் கொள்கை இன்னொரு பரிமாணத்தைச் சொல்லியிருப்பது சிக்கலைத் தீர்க்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Continue reading பள்ளிக் கல்வியில் ஆங்கிலமும் தாய்மொழியும் | ஜெயராமன் ரகுநாதன்