Posted on 1 Comment

எல்.முருகன் நேர்காணல் | அபாகி

கிட்டத்தட்ட ஆறு மாத காத்திருப்புக்குப் பிறகு பா.ஜ.க. மாநிலத் தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரோடு உரையாட சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்குச் சென்றிருந்தோம். தொண்டர்கள், பிரமுகர்களின் வாழ்த்து மழையில் நனைந்திருந்த அவர், அதற்கு மத்தியில் ‘வலம் இதழுக்காக உரையாடினார். வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு கேள்விகளை முன்வைத்தோம்.

நாமக்கலில் தொடங்கி பா.ஜ.க. மாநிலத் தலைவர் வரை, உங்கள் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் 11ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு படிக்கும்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எங்கள் ஊருக்கு ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரக் (முழு நேர ஊழியர்) ஸ்ரீகணேசன்ஜி வந்திருந்தார். எங்கள் பகுதி, பட்டியலின மக்கள் வசிக்கின்ற பகுதி. Continue reading எல்.முருகன் நேர்காணல் | அபாகி

Posted on Leave a comment

நேர்காணல்: ஹெச்.ராஜா | அபாகி

தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தவே தேவையில்லாத பெயர் ஹெச்.ராஜா.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசியல் வட்டாரம் அவரைச் சுற்றியே இருக்கிறது. பேச்சைப்
போலவே, அவரும் பரபரப்பாகவே இருக்கிறார். புல்வாமா தாக்குதலுக்கு மறுநாள் அஞ்சலிக் கூட்டங்களுக்குச்
சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பியவரை ‘வலம்’ இதழுக்காகச் சந்தித்தோம்.

நீங்கள் எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தீர்கள்?

என் தகப்பனார் பேராசிரியர் ஹரிஹரன் அவர்கள், தமிழகத்துக்கு
ஆர்எஸ்எஸ் அறிமுகமான காலத்திலேயே 1942ல் சங்கத்தில் இணைந்தார். 1948ல் நேரு அரசாங்கம்
சங்கத்தின் மீது வீண் பழி சுமத்தித் தடை செய்தபோது, என் தகப்பனார் பேராசிரியர் ஹரிஹரன்,
பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரதத் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி
ஜி, சமீபத்தில் மறைந்த ஐஏஎஸ் அதிகாரி ஐராவதம் மகாதேவன், அன்றைய தினம் சங்கத்தின் மாநிலச்
செயலாளராக இருந்த அண்ணாஜி, இவர்கள் அனைவரும் சத்தியாகிரகம் செய்ததற்காக, ஆறு மாதம்
மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

நான் 1964ல் மூன்றாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது, பத்துஜி (பத்மநாபன்ஜி – பிற்காலத்தில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்காக இருந்தவர்)
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தார். அவர் என்
தகப்பனாரைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருவார். ஒருநாள் என்னிடம், “உனக்கு கபடி விளையாடப்
பிடிக்குமா?” என்றார். “பிடிக்கும்” என்றேன். அவரால் அழைத்து வரப்பட்டு, அப்போதிலிருந்து
ஷாகா வரத் தொடங்கினேன்.

எந்தெந்த நிலைகளில் சங்கப்பணி செய்திருக்கிறீர்கள்?

நான் 1974-75ல் நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் நேரத்தில்
காரைக்குடி ஷாகா முக்கியசிக்‌ஷக் பொறுப்பில் இருந்தேன். 1980லிருந்து 1984 வரை கோல்
இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். பிறகு 1984 முதல் 1990 வரை ராமேஸ்வரம்
விபாக் வியவஸ்தா பிரமுக்காக இருந்தேன். 1990-91ல் இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக
இருந்தேன். பிறகு, 1991 பிப்ரவரி முதல் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வருகிறேன். முதலில்
சிவகங்கை மாவட்ட அமைப்பாளராக இருந்தேன். 1993ல் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.
அப்போது, மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. அது
வெற்றிகரமாக அமைந்தது. மறுநாள் அத்வானிஜியை நிர்வாகிகள் சந்தித்தபோது, ‘Tamilnadu
learned to mobilize’ என்றார். அதற்குப் பிறகு, 1995ல் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.
2006 நவம்பர் வரை 11 ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்த பிறகு, 2006ல் மாநிலத் துணைத்
தலைவர் ஆனேன். 2014 ஆகஸ்ட் முதல் தேசியச் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உங்கள் சொந்த தொகுதியான சிவகங்கையைச் சேர்ந்தவர்.
அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

திரு. ப.சிதம்பரம் ஒன்றும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி
அல்ல. நான், 1999 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டேன்.
வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனைவிட நான் 19,000 வாக்குகள்தான்
குறைவு. ஆனால், அப்போதே ப.சிதம்பரம் என்னை விட 1 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றார்.
அந்தத் தேர்தலில் சுதர்சன நாச்சியப்பன் பெற்ற வாக்குகள் 2,45,000. நான் பெற்ற வாக்குகள்
2,25,000. சிதம்பரம் பெற்ற வாக்குகள் 1,25,000தான். கடந்த 2014 தேர்தலிலும் அதே நிலைதான்.
அந்தத் தேர்தலில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார். அதிகமான பணம்
செலவழித்தும் கூட என்னை விட 30,000 வாக்குகள் குறைவாகப் பெற்றார். சிதம்பரத்துக்கு
உள்ளூரில் செல்வாக்கு இல்லை. அவருக்குக் கட்சி மேலிடத்தில் செல்வாக்கு இருக்கிறது.
அது தொடர்கிறது.

சமீப காலமாக உங்கள் பேச்சுகள், சர்ச்சையைக் கிளப்புகிறதே?

சர்ச்சை என்றால் விவாதம் என்று அர்த்தம். நான் ஒரு விவாதத்தைக்
கிளப்புகிறேன். நான் பேசுவது சர்ச்சை என்பவர்கள் யாராவது நான் பொய் பேசுகிறேன் என்று
கூற முடியுமா?

திக, ஈவெரா, நீதிக்கட்சி இவர்களெல்லாம் தேச விரோதிகள் என்று
பேசினேன். இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்குத்
தெரியாத விஷயங்கள். 1944ல் திராவிடக் கழகத்தின் துவக்க மாநாடு சேலத்தில் ஈவெரா தலைமையில்
நடக்கிறது. அதில், சி.என்.அண்ணாதுரை ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். அதில் கூறப்பட்டது,
“ஆங்கிலேயன் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமாம். காந்தியார் சொல்கிறார். அவருக்குப்
பைத்தியம் பிடித்திருக்கிறது. அவருக்கு வைத்தியம் செய்யக்கூட இங்கிலாந்தில் இருந்துதான்
வைத்தியர் வர வேண்டும். அப்படி அவன் வெளியேறிவிட்டால், விஞ்ஞானம் வெளியேறிவிடும்; கார்
ஓடாது; பஸ் ஓடாது. இந்தியாவால் குண்டூசி கூடத் தயார் செய்ய முடியாது.”

அடல்ஜி ஆட்சியில் நாம் குண்டூசி கூடத் தயார் செய்தோம். ஆனால்,
ஈவெராவும், அண்ணாதுரையும் நம்மால் குண்டூசி கூடத் தயார் செய்ய முடியாது என்றார்கள்.
இவர்களெல்லாம் தலைவர்களா?
அடுத்த வரி இன்னும் மோசமானது. “அப்படி இந்தியாவில் இருந்து
வெளியேறுவதாக இருந்தால் லண்டனில் இருந்துகொண்டாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும்.”

இவர்கள் தேசவிரோதிகள் என்று கூறினால் சர்ச்சைக்கிடமானது என்பவர்கள்,
இந்த மாதிரி தீர்மானத்தை அவர்கள் போடவில்லை என்று சொல்ல முடியுமா? இதில் ஒரு பம்மாத்து,
அதாவது வெள்ளையன் வெளியேறி விட்டால் பார்ப்பனர் ஆதிக்கம் தலைதூக்கி விடும்; சமூகநீதி
போய்விடும் என்பதால்தான் ஈவெரா அப்படிச் சொன்னார் என்கிறார்கள். ஆனால், அவர்கள் போட்ட
தீர்மானத்தில் எங்காவது சமூகநீதி பற்றி ஒரு வார்த்தையாவது இருக்கிறதா? “வெள்ளையன் வெளியேறினால்
விஞ்ஞானம் வெளியேறிவிடும். கார் ஓடாது; பஸ் ஓடாது.” இதுதானே லட்சணம்? அப்படியென்றால்
ஈவெரா தேசத் துரோகிதானே?

அதேபோல, ஈவெரா தமிழுக்கு மிகப்பெரிய எதிரி. அவரே சொல்கிறார்;
“தமிழ் காட்டுமிராண்டி மொழி. தமிழில் பேசக்கூடாது.” 1969ல் பேசுகிறார். கருணாநிதி அப்போது
பொதுப்பணித்துறை அமைச்சர். ஒரு கூட்டத்தில் ஈவெரா பேசுகிறார்: “தமிழுக்காகப் பதவியைக்கூட
ராஜிநாமா செய்யத் தயாராம். இதற்காகவா நீங்கள் பெரியார்ப் பல்கலைக்கழகத்தில் படித்தீர்கள்?
நான் இந்தியை எதிர்த்தேன். அது இந்த சனியன் தமிழ் வரக்கூடாது என்பதற்காக அல்ல. நீ உன்
பொண்டாட்டியோடு இங்கிலீஷில் பேசு.” இப்படி பேசிய ஈவெரா தமிழ்த் துரோகிதானே? தமிழ் விரோதிதானே?
இப்படியெல்லாம் சரித்திரத்தில் பதிவான உண்மைகளை ஹெச்.ராஜா
பேசுகிறான். நான் பேசும் எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கும் ஏன், ஈவெராவே
ஒப்புக்கொண்டிருக்கிறார். “நான் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு துரோகம் செய்தேன்.”
பெரியார் என்ற மாயத்தோற்றத்தின் முன்னால் இந்தக் கழகங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மாயத்தோற்றத்தை நொறுக்க வேண்டும். ஆகவேதான், நான் உண்மையான விஷயங்களை மக்கள் முன்
வைக்கிறேன். ஆகவே, சர்ச்சை நடக்கட்டும்.

ட்விட்டரில் ஒரு பதிவு போட்டீர்கள்? பிறகு, அது உங்கள் அட்மின் போட்டதாகக் கூறி
ஏன் எடுத்துவிட்டீர்கள்?

இல்லை. அது உண்மையாகவே நான் போட்டதில்லை. உங்களுக்குப் புரிவதற்காகச்
சொல்றேன். என் குழந்தைகள் சின்னவர்களாக இருந்தபோது காரைக்குடியில் அவர்களைக் கூட்டிக்கொண்டு
வெளியே போவேன். அப்போது, ஈவெரா சிலையைக் காண்பித்து, “இது யாருப்பா?” என்று கேட்டால்,
“அம்மா, ராமனைப் பத்தி பேசும்போது ராவணன் பத்தியும் நினைவு வரும். இவர், ஹிந்து மதத்தை
அழிக்க நினைத்த ராவணன்” என்பேன். நாளை இப்படியொரு தேச விரோதி, ஹிந்து விரோதி இருந்தார்
என்பது மக்களுக்குத் தெரிவதற்காக அந்தச் சிலை இருக்கணும் என்று நினைப்பவன் நான். அந்த
ட்வீட் போட்ட அன்றைக்கு, கர்நாடகத்தில் ஒவ்வொரு நான்கு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர்
என மொத்தம் 56 பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்துக்காக தேசியத் தலைவர் அமித் ஷா
அழைத்திருந்தார். அதற்காக நான் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்த ட்வீட்
உண்மையிலேயே என் அட்மின் போட்டதுதான். நான் இறங்கி அதைப் பார்த்தும், உடனே எடுக்க சொல்லிவிட்டேன்.
சிலைகளை அகற்றுவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. அந்த ட்வீட்டை அட்மின் போட்டார்
என்பதால், இப்போது நான் அட்மின் வைத்துக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் பா.ஜ.க. வளராது என்கிறார்களே?

1980ல் பாரதிய ஜனதா கட்சி தொடங்கியபோது, சிவகங்கையில் முதல்
உறுப்பினராகச் சேர்ந்து, அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியைத் தொடங்கியவர்களில்
நானும் ஒருவன். அப்போதிலிருந்து மக்களுடன் நெருங்கிப் பழகி வருகிறேன். குறிப்பாக,
1989லிருந்து பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறேன். அதை மக்கள் அப்போது காது கொடுத்து
கேட்கக்கூட மாட்டார்கள். ஆனால், அன்று நாம் பேசிய பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு
370 அந்தஸ்து, ராம ஜென்ம பூமி போன்ற விஷயங்களெல்லாம் இன்று மக்களாலும் பேசப்படுகிறதா
இல்லையா?

கொள்கை ரீதியாகப் பிற்காலத்தில் பாஜகவில் இணைந்தாலும்
1971 முதல் தமிழக அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். அந்தத் தேர்தலில் இந்திரா
காங்கிரஸ், திமுகவோடு கூட்டணி வைத்தது. அப்போது, எம்ஜிஆர் திமுகவில் இருந்தார். பிரிக்கப்படாத
திமுகவுக்கு அந்தத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் 35 சதவீதம். 72ல் எம்ஜிஆர் திமுகவை
விட்டு வெளியேறுகிறார். 1977 தேர்தலில் வெற்றி பெறுகிறார். அந்தத் தேர்தலில் திமுக
பெற்ற வாக்குகள் 24 சதவீதம். எம்ஜிஆர் பிரித்த வாக்குகள் 11 சதவீதம்தான். ஆனால், அவர்
பெற்ற வாக்குகள் 35 சதவீதம். அவர்கள் தங்களை அண்ணா திமுக. என்று சொன்னாலும், மக்களைப்
பொருத்தவரை அவர்கள் Anti திமுகதான்.

அப்போது, கருணாநிதி என்ற நபர்; அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும்
ஓட்டுகள் பிரிந்து கிடந்தன. இன்றைக்கு ஹிந்து சனாதன தர்மத்தை வேரறுப்பது, ஹிந்துத்
திருமணங்களைக் கொச்சையாகப் பேசுவது என ஸ்டாலின் இருப்பதைப் போலத்தான் அவரது அப்பாவும்
இருந்தார். கருணாநிதியின் மீதான வெறுப்பினால் வரும் ஓட்டுகளைப் பெறுபவராக எம்ஜிஆர்
இருந்தார். ஆனால், இன்று கொள்கை ரீதியாக இதை எதிர்க்கும் நமக்கு, வலிமையான தலைமையும்
வேண்டும். இப்போது நமக்கு மோடி கிடைத்திருக்கிறார். ஆகவே, திமுக எதிர்ப்பு ஓட்டுகள்
வருங்காலத்தில் நமக்கு விழும். அது தேர்தலிலும் பிரதிபலிக்கும்.

மோடி அரசின் திட்டங்களை தமிழக பாஜக ஏன் சரியாக பிரசாரம் செய்வதில்லை?

பாரதிய ஜனதா கட்சி இயக்க ரீதியாக தனக்கு இருக்கும் பலத்தின்
அடிப்படையில் வேலை செய்து வருகிறது. அதைத்தான் நான் சொன்னேன். இந்திய மக்கள் முதலில்
தலைவர்களைத்தான் ஏற்பார்கள், பிறகுதான் கொள்கை. குஜராத்தில் மோடியை எப்படித் தாக்கி
தாக்கி அவரை வலிமைமிக்க தலைவராக உருவாக்கினார்களோ, அதேபோல தமிழகத்திலும் ஹிந்துத்துவ,
தேசியக் கொள்கைகளுக்கு எதிராக உள்ள ஜிஹாதிஸ்ட், ஈவெஞ்சலிஸ்ட் (கிறிஸ்தவ மதமாற்றச் சக்திகள்),
தமிழ்த் தேசியவாதிகள், நகர்ப்புற நக்ஸல்கள் ஆகிய நான்கு தீய, பிரிவினைவாத சக்திகளும்
செய்த எதிர்மறைப் பிரசாரத்தின் காரணமாக, இன்று மக்களே கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பாஜக பற்றி மக்களுக்குச் சென்றடைந்திருக்கிறது. ஆகவே, அதன் பலன்கள் நிச்சயமாக பாஜகவுக்குக்
கிடைக்கும்.

இப்போது பாஜக-அதிமுக கூட்டணி வந்துவிட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாகவே
அதிமுக அரசை தமிழக பாஜக எதிர்க்கவில்லையே? பாஜகதான் அதிமுக அரசை இயக்குகிறதா?

இது குழந்தைத்தனமான பேச்சு. நம் கூட்டாட்சி அமைப்பின்படி
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இணக்கம் அவசியம். அதுதான் இருக்கிறதே ஒழிய, பாஜக,
அதிமுக அரசை இயக்கவில்லை. இன்று ஏன் கூட்டணி வந்துள்ளது என்றால், நான் ஏற்கெனவே சொன்னது
போல இந்த நான்கு தீயசக்திகள்தான் காரணம். கருணாநிதி இருந்தபோது திமுக அவர் கட்டுப்பாட்டில்
இருந்தது. ஆனால், இன்று திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? ஸ்டாலின் யார்
கட்டுப்பாட்டில் இருக்கிறார்? வைகோ கட்டுப்பாட்டில், திருமாவளவன் கட்டுப்பாட்டில்,
சீமான் கட்டுப்பாட்டில், பாரதிராஜா கட்டுப்பாட்டில், வைரமுத்து கட்டுப்பாட்டில்! எல்லாப்
பிரிவினைவாத சக்திகளும் அவரை ஆட்டுவிக்கிறது. ஆனால், ஸ்டாலின் எடுப்பார் கைப்பிள்ளையாக
இருக்கிறார்.

அ.திமுக அரசுக்கு எதிராக நீங்கள், ஆலய மீட்பு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறீர்களே?

நான் அதைtஹ் தொடர்ந்து செய்து வருகிறேன். அதற்கும் ஒரு குறிப்பிட்ட
அரசாங்கத்துக்கும் சம்பந்தப்படுத்த முடியாது. அதை மிகப்பெரிய சதியின் ஒரு பகுதியாகவே
பார்க்கிறேன். ஏனென்றால், இன்றைக்குக் கூட என்னிடம் வடபழனி கோயில் நிலத்தின் பத்திரத்தை
ஒருவர் காண்பித்தார். அப்படி பத்திரம் போட்டதற்காக, ஒரு அதிகாரி மீது பத்திரப்பதிவுத்
துறை துறைரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால், அந்தப் பத்திரத்தை ரத்து செய்யச்
சொல்லி கோயில் செயல் அதிகாரி இதுபற்றி பத்திரப் பதிவுத் துறையில் புகார் கொடுத்திருக்காரா?
இல்லை. ஏனென்றால், கோயில் நிலங்கள் பற்றிய பதிவேடு அவர்களிடம் இல்லை. இந்து அறநிலைய
சட்டம் 29வது பிரிவு என்ன சொல்கிறது? கோயில் நிலங்கள், ஸ்வாமி விக்ரஹங்கள், நகைகள்,
கோயில்ல இருக்கும் பாத்திரங்கள் உட்பட மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆவணப்படுத்தப் படவேண்டும்
என்று சட்டம் சொல்கிறது. ஆனால், பதிவு செய்யப்பட்டிருக்கா? சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை.
ஐந்து வருஷங்களுக்கு மேல கோயில் சொத்துக்களை லீஸுக்கு தரக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது.
ஆனா, அவனவன் நிரந்தரமா உட்கார்ந்திருக்கான். 34(ஏ) பிரிவுப்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
சந்தை நிலவரப்படி கோயில் சொத்துக்களின் வாடகையை மறுநிர்ணயம் செய்யணும். ஆனா, வெள்ளைக்காரன்
காலத்துல போட்ட கட்டணமே இன்னும் இருக்கு. என்னோட போராட்டம் வெறும் ஊழலுக்கு எதிரான
போராட்டம் மட்டுமில்லை. பெரும்பான்மை சமுதாயத்தோட வழிபாட்டு உரிமையை மறுப்பதற்காக ஒரு
துறையா? ஏனென்று சொன்னால், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 38,606 கோயில்கள்
இருப்பதாகச் சொல்கிறார்கள். அதில், 8,500-9,000 கோயில்கள் இல்லை. திருவண்ணாமலையில இடும்பனார்
மற்றும் இளையனார் கோயில், வால்மீகி கோயில்ல கர்ப்பகிரகம் இருந்த இடத்துல கடைகள் இருக்கு.
அறநிலையத் துறை எடுத்துக்கற நிலையில அந்தக் கோயில் எப்படி இருந்தது? வழிபாடுகள் நடந்ததாலதானே
எடுத்தாங்க. குறைந்தபட்சம் அதை எடுத்த நிலையில எப்படி இருந்ததோ அப்படி அதை பராமரித்திருக்க
வேண்டாமா? இப்போ கையில் எடுத்துருக்கேன். மக்கள் மத்தியில விழிப்புணர்வு வர ஆரம்பிச்சிருக்கு.
ஆனா, எனக்குப் புரியுது. இது மிக நீண்ட போராட்டம். அதுக்கு தயாராகவே இருக்கேன்.

சமீப காலமாக இந்துத்துவவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மகாத்மா காந்தியை
சமூக வலைத்தளங்களில் அதிகமாக வசைபாடுகிறார்கள். வட இந்தியாவில் அவர் படத்தை வைத்துச்
சுடும் நிகழ்ச்சியை நடத்துகிறார்களே?

அதைச் செய்பவர்கள் ஹிந்து மகா சபாவைச் சேர்ந்தவர்கள். அது
ஆர்எஸ்எஸ் பரிவார் அமைப்புகளில் இல்லை. மேலும், அந்தச் செயல் தவறானது; ஏற்புடையதல்ல.
உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் யோகிஜி அரசாங்கம்தான் அவர்களை கைது செய்திருக்கு. இதுல
ஒரு வேடிக்கை என்னவென்றால், நாடு சுதந்திரம் பெறக்கூடாதுன்னு சொன்ன ஈவெராவின் வழியில
வந்த வைகோ கண்ணீர் விடறாராம். என்ன ஒரு போலித்தனம். இவங்க நோக்கம், காந்திஜியோட புகழைக்
காப்பாத்தறதில்லை. அதை வச்சி பாஜகவை ஒரு தட்டு தட்ட முடியாதான்னு ஒரு அல்ப புத்தி.
இந்த விஷயத்துல பாஜகவைக் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை. அந்த செயல்பாட்டில் எனக்கு
உடன்பாடில்லை.

ஹிந்து வாக்கு வங்கி இன்னும் இருக்கிறதா?

ஹிந்து வாக்குகளை விட ஹிந்துத்துவ வாக்குகள் பாஜகவுக்கு வரணும்னு
சொல்றேன். 1980களில் சிவகங்கைல அரண்மனைக்கு எதிரே ஒரு சின்ன பிள்ளையார் கோயில் இருக்கு.
அதை நெடுஞ்சாலைத் துறை இடிக்க வந்தாங்க. அதை எதிர்த்து நான் ஆர்ப்பாட்டம் நடத்தினேன்.
அப்போ, என்னிடம் பேச வந்த தாசில்தார், “இதோ பாருங்க. என் பாக்கெட்டுல பிள்ளையார்பட்டி
பிள்ளையார் போட்டோ வச்சிருக்கேன். எனக்கும் சமய உணர்வு இருக்கு” என்றார். ஆனால், சமூக
உணர்வு இருந்ததா? கோயிலுக்குப் போனேன், வழிபட்டேன், திருநீறு வாங்கினேன் என்பதல்ல.
ஹிந்து என்ற சமூக உணர்வு வேண்டும். அதனாலதான், என் சமூக வலைத்தளங்களில் வெறுமென ஹிந்து
என்று நான் எழுதுவதில்லை. ஹிந்து உணர்வாளர்கள் என்றே பதிவிடுகிறேன். அனுமனைப் பற்றிய
ஸ்லோகத்தில் ‘அஜாட்யம்’ வேண்டும் என்பார்கள். அதாவது ஜடத்தன்மை அற்றது. அந்த ஜடத்தன்மை
போனால் நம்மை ஆதரிப்பார்கள்.

தேர்தலில் தமிழக பா.ஜ.க.வின் பிரசாரம் என்னவாக இருக்கும்?

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப் பிரசாரம் செய்வோம். கழிவறைத்
திட்டம், சமையல் எரிவாயுத் திட்டம், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், விவசாயிகளுக்குப்
பயிர் காப்பீட்டுத் திட்டம், முத்ரா கடன் அல்லது பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களால்
பயன்பெற்றவர்களின் பட்டியல் சட்டமன்ற தொகுதி வாரியாக எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பயனாளிகளின்
வீடுகளுக்குச் சென்று, “இந்த மாதிரி திட்டங்கள் தொடர வேண்டுமானால், மோடி நிச்சயம் பிரதமராக
வேண்டும்” என்று கேட்போம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் தலை தூக்கியுள்ளனவே?

இது மூலமா, கோல் எடுத்தாத்தான் குரங்காடும்னு தெரியுதா? அதாவது,
அவர்களை ஒடுக்க ஜெயலலிதா கடைப்பிடித்த அணுகுமுறையை இப்போதும் கடைப்பிடித்தால், அந்தச்
சக்திகள் ஒடுங்கும்.

மோடி தமிழகத்துக்கு எதிரானவர் என்கிறார்களே?

ஒரு மாற்றுக்கட்சி நண்பர் என்னைத் தேடி வந்தார். “ஏங்க, ஒடிஸாவுல
நீங்க ஒரு எம்.பி. தான். ஆனா, உள்ளாட்சித் தேர்தலில் 36 சதவீத வாக்குகள் வாங்கியிருக்கீங்க.
மேற்கு வங்கத்துல பிரதான கட்சியா வந்துருக்கீங்க. அசாம்ல 4 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு
ஆட்சியையே பிடிச்சீங்க. தமிழ்நாட்டுல அப்படியொரு சூழ்நிலை இருக்கான்னா, இருக்கு. நீங்க
நெடுவாசல் போய் பாருங்க” என்றார். நானும் நெடுவாசல் போனேன். ஊரே திரண்டு வரவேற்றது.
அங்க இருந்து 5 கிமீ தொலவுல வடகாட்டுல 30 பேர் கொண்ட நாம் தமிழர், மே 17 கும்பல் மட்டும்
எனக்கு எதிரா கொடி பிடித்து நின்னாங்க. ஆகவே, மோடி இருந்தால் தங்களுக்குப் பிழைப்பு
போய்விடுமென்று திமுகவின் கொள்ளைக்காரக் கும்பல், மற்ற பிரிவினைவாத சக்திகள்தான் மோடியைத்
தமிழகத்துக்கு எதிரானவாக சித்திரிக்கிறார்கள். அதை மக்கள் நம்ப மாட்டார்கள். 

Posted on Leave a comment

பிரபுஜி – அஞ்சலி : அபாகி

விஜயபாரதம் தேசிய வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த பிரபுஜி இலக்கிய ஆர்வலர். ஜெயமோகனின் வாசகர். ஆரம்பக் காலத்தில் ‘ஜெயன்’ என்ற பெயரில் விஜயபாரதத்தில் எழுதிய கட்டுரைகளை இன்று ஜெயமோகனே மறந்துவிட்டிருப்பார். ஆனால், பிரபுஜி சேகரித்து வைத்திருந்தார். வாசிப்பில் அப்படியொரு நாட்டம். ரயிலில் போகும்போதெல்லாம் படிப்பாராம். முகநூலும் பார்ப்பார். நான் என்னவோ பெரிய படிப்பாளி என்று அவருக்கு நினைப்பு. “முகநூல், பத்திரிகை வேலை, ஊருக்குப் போகறது இதுக்கு மத்தியில எப்படி படிக்கறீங்க ஜி? பொறாமையா இருக்கு” என்பார். பல மாதங்களாக படித்தும், படிக்காமல் இருக்கும் புத்தகத்தைப் பார்த்தபடி “ஜி… கிண்டல் பண்றீங்களா?” என்பேன். “நெஜமா சொல்றேன். ஆச்சரியமா இருக்கு?” என்பார். கிண்டில் வாங்கியபோது, புத்தகத்தைப் படிப்பதற்கும் மின் புத்தகத்துக்கும் இருந்த வேறுபாடுகளைப் பற்றித் தீவிரமாக அலசியிருப்போம்.

இலக்கியம், அரசியல், பத்திரிகைப் பணி, ஹிந்துத்துவம், சமூக மாற்றங்கள், வாலிப விஷயங்கள் எதை வேண்டுமானாலும் திறந்த மனதுடன் அவரிடம் விவாதிக்க முடியும். முகநூலை பயன்படுத்துவது பற்றி அவரிடம் கற்க வேண்டும். தேவையற்ற பதிவுகளை போட மாட்டார். பல ஆண்டுகள் தனது முகப் படத்தைத் தவிர, வேறெந்த தனிப்பட்ட படங்களையும் பகிரவில்லை. பிறகு நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிலமுறை படங்களை மாற்றினார். அவ்வளவுதான். ராமானுஜர் 1000-ஆவது ஆண்டின் போதும், நிவேதிதை 150-இன் போதும் தினசரி பதிவுகளைப் போடுவார். அதற்காக அவர்களைப் பற்றிய அனைத்துப் புத்தகங்களையும் படித்தார். முகநூலில் தனக்குப் பாதித்த, பிடித்த அனைத்துப் பதிவுகளையும் விரிவாக அலசுவார்.

பிரபு ஜி திருநின்றவூரைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே சங்க அறிமுகம். அம்பத்தூர் தாலுகாவில் சங்கப் பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். அதன் பிறகு, பக்க வடிவமைப்பாளராக 1990களில் விஜயபாரதத்தில் சேர்ந்திருக்கிறார். நடுவில் மூன்று நான்கு ஆண்டுகள் சாரதா பப்ளிகேஷன்ஸில் இருந்தார். பிறகு மீண்டும் விஜயபாரதம்.

ஹிந்துத்துவப் பணிகளில் தீவிரமான நாட்டம். ஆனால், பயணம் காரணமாகப் பல நேரங்களில் உள்ளூரில் இயக்கக் காரியங்களில் ஈடுபட முடியாமல் போய்விடும். “உங்களுக்கு மட்டும் எப்படி நேரம் கண்டுபிடிக்க முடிகிறது?” என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.

வாசிப்பு, இலக்கியம், கலை போன்ற விஷயங்களில் ஹிந்துத்துவர்கள் அதிகமில்லை என்பது அவரது ஆதங்கம். அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் ஹிந்துத்துவர்களைப் பாராட்டுவார். பல உதவிகளும் செய்வார். புனே திரைப்படக் கல்லூரி விவகாரத்தின்போது, “பார்த்தீங்களா ஜி… ஒரேயொரு கஜேந்திர சௌஹான் கிடைச்சார். அதனால போட முடிந்தது. நம்ம ஆட்கள் இன்னும் அதிகமா வரணும்” என்றார். வலம் பத்திரிகையைப் படித்து மிகவும் மகிழ்ச்சியுடன் விவாதித்தார்.

கடந்த 26-11-18 அன்று காலை எட்டு மணியளவில் அவர் மட்டும் தனியே பயணமாகிவிட்டார். “சர்க்கரை வியாதி பற்றி நண்பர்களிடம் கூடவா சொல்லக்கூடாது? பிறகு எதற்கு நட்பு?” என்ற கோபத்துடனேயே கடைசியாகப் பார்த்துவிட்டு வந்தேன். ஓம் சாந்தி.

Posted on Leave a comment

ஸ்ரீ கணேசன் ஜியுடன் ஒரு நேர்காணல் | சந்தித்தவர்: அபாகி

 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றில் கண்ணுக்குத் தெரியாத வேர்கள் பலருண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ கணேசன் ஜி. 1970ல் இருந்து ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக (முழுநேர ஊழியர்) இருந்து வருபவர். தமிழகத்தில் பல்வேறு ஹிந்து இயக்கப் பிரமுகர்களை உருவாக்கியவர். மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ போன்ற பல்வேறு பிரபலங்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாக மாற்றியவர். தற்போது, விவசாயிகளுக்கான இயக்கமான பாரதிய கிசான் சங்கத்தின் தென் பாரத அமைப்பாளர். ஏராளமான விவசாயிகளைத் தலைவர்களாக மாற்றிய பெருமை இவருக்குண்டு. உடல்நிலை தளர்ந்த நிலையிலும், திருச்சியை மையமாக வைத்து தமிழகத்தில் உள்ள கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்

சென்னைக்கு வந்திருந்த ஸ்ரீகணேசன் ஜியை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். அவற்றில் சில பகுதிகள் இங்கே:
ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பில் எப்போது
சேர்ந்தீர்கள்?
1963ல்
குரோம்பேட்டையில்
இருந்தேன். அப்போது தி.நகர் பசுவுல்லா சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படிச்சிக்கிட்டிருந்தேன். ரக்ஷாபந்தன் நேரத்தில் ஒரு நோன்பு வரும். அதனால எங்க பள்ளியில் அரை நாள் விடுமுறை விட்டார்கள். சாயங்காலம்தான் அந்த நோன்பு. அதனால வீட்டுல பூஜையெல்லாம் முடிச்சிட்டு 6 மணிக்கு வாங்கடான்னு சொன்னாங்க. ஏன்னா பெண்கள் விழாதான் அது. அதனால் பகல் முழுவதும் கிரிக்கெட் விளையாண்டோம். கிரிக்கெட் முடிஞ்சிட்டுது. அப்புறம் திரும்ப வந்தோம். ஆறு மணிக்குத்தான வீட்டுல வரச் சொன்னாங்க, இன்னும் நேரம் இருக்கேன்னு பார்த்தோம்.
அப்போது மூணாவது வீட்டுப் பையன் சொன்னான், “டேய் இங்க நேத்து கபடி விளையாடினாங்கடா, பாக்கலாம்ன்னான். சரின்னு கபடி விளையாட்ற இடத்துக்கு போனோம். நாங்க போகும்போது எல்லாரும் அப்போதுதான் விளையாடிட்டு வரிசையா ரவுண்டா நின்னாங்க. எங்களையும் உக்காரச் சொன்னாரு. எங்கள் ஆரூயிர் தாய்நாடேன்னு ஒரு பாட்டை பாடினாரு. எல்லாரையும் அதைத் திரும்ப பாடச் சொன்னாரு.
அப்புறம் ஒரு அருமையான கதை சொன்னாரு. மகாத்மா காந்தி ஒரு கிராமத்துல நிதி திரட்டியபோது ஒரு சிறுமி ஒரு சின்ன பென்சில் கொடுத்தாராம். அதைத் தேடினது பத்திய கதை அது. ரொம்பவே கவர்ந்தது. கடைசியில் சமஸ்கிருத மொழியில் பிரார்த்தனை. அரை அரை வரியா சொல்லி திரும்ப சொல்லச் சொன்னாரு. முடிஞ்ச உடனே நாங்கள்லாம் சேரலாமான்னு கேட்டேன். நாளைல இருந்து வந்துடுனு சொன்னாரு.
சந்தா எவ்வளவுன்னு கேட்டேன்.
நாடு போன்ற ஒரு குடும்பம் இது. இந்த தேசத்த ஒரு குடும்பமாக்கணும். குடும்பத்துல ஒருத்தன உறுப்பினரா சேர்த்துக்க சந்தா உண்டான்னு சொன்னாரு. அப்ப நாளைக்கு வந்துட்றேன்னு சொன்னேன்.
எதுக்கு சார் இந்த சங்கம், நல்லா இருக்குன்னேன். நாளைக்கு கொஞ்சம் முன்னாடியே வந்துடுன்னு சொன்னார். நானும் அரை மணிநேரம் முன்னாடி போனேன். அவரும் வந்துட்டாரு.
எதுக்காக இந்த சங்கம்னு திரும்ப கேட்டேன். அதான் நேத்தே சொன்னேனே, “தேசத்த முழுக்க ஒரு குடும்பமாக்கணும். காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும். சிவபெருமான் நம்ம அப்பா. வடக்கே தக்ஷிணாமூர்த்தியா இருக்காரு. நம்ம அம்மா பார்வதி தெற்கே கன்னியாகுமரியா இருக்கா. நாமெல்லாம் சகோதரர்கள். உடன்பிறப்புகள். இந்த உணர்வு இருக்கும்போது இந்த நாடே உலகத்தில தலைசிறந்த நாடாகிடும்னு சொன்னாரு.
ஆனா அப்ப அதுமாதிரியெல்லாம் இல்ல. மொழி, மதம்னு ஒருபக்கம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், சண்டை. நம்மலாம் பாரத மாதாவின் குழந்தைகள். நம்ம எல்லாரும் ஒரு குடும்பம் ஆக்கணும். இதை எப்படிங்கய்யா செய்றது, சந்தாலாம் இல்லை, எப்படி உறுப்பினர் கணக்கு எடுக்கிறது, இது எப்படி செய்யமுடியும்னு கேட்டேன்.
செய்வோம்யா. இந்த
பூமில கடவுள் 24 மணிநேரத்த நமக்குக் கொடுத்திருக்கான். சாப்பிடறது, தண்ணி குடிக்கிறது, காத்த சுவாசிக்கிறதுக்குன்னு. அதுல ஒரே ஒரு மணி நேரத்தை இந்த நாட்டுக்காக நாம கொடுக்கணும், அதான்யா சந்தான்னு சொன்னாரு.
எப்படி வரணும் என்று என்றேன். “அப்படியே வரவேண்டியதுதான். செருப்ப அங்க வரிசையா கழட்டி போட்டுட்டு வரணும். ஒரு ரூபாய் செருப்பு இருக்கும், 5 ரூபாய் செருப்பு இருக்கும். 50 ரூபாய் செருப்பும் இருக்கும், 500 ரூபாய் செருப்புகூட இருக்கும். ஆனால் செருப்பு செருப்புதான. வந்து அங்க வரிசையா வெச்சிட்டு வரணும். கோயிலுக்குள்ள செருப்ப போட்டு போவோமா? அதுமாதிரிதான் ஒருமனப்பான்மையோடு வரணும். ஏன்னா, நாம பாரத மாதாவோட குழந்தை. நீ படிச்சவனா இருக்கலாம், படிக்காதவனா இருக்கலாம், உயர்ந்த சாதிய சேர்ந்தவனா இருக்கலாம், தாழ்த்தப்பட்ட சாதிய சேர்ந்தவனா இருக்கலாம். உயர்ந்த உத்தியோகம், தாழ்ந்த உத்தியோகம், தெருக்கூட்டுறவங்க, மளிகைக் கடை வச்சிருக்கிறவங்கன்னு எந்த வேறுபாடும் வரக்கூடாது. பாரத மாதாவோட குழந்தைன்னு வரணும். உடம்பால, மனசால, இந்த உணர்வோட வரணும். 24 நாளு மணி நேரத்துல 1 மணிநேரம், 24 நாள்ல ஒருநாள். அப்படி வரணும்னு சொன்னார்.
அப்படி வர ஆரம்பிச்சவன்தான். நானா போய்ச் சேர்ந்துட்டேன். அங்கே அப்போ சங்கத்த யாரு நடத்துனாங்கன்னா பிஜேபில சங்கர்ன்னு ஒருத்தர், ரயில்வேல வேலை பார்த்துட்டு, தீனதயாள் உபாத்தியாயா செத்துப் போன பிறகு, முழுநேரமா இருந்தாரு. அவரு அந்தப் பகுதில (சங்கத்துல) கார்யவாஹ் (செயலாளர்) ஆக இருந்தாரு. அவரு தம்பி தியாகராஜன். அவரும் சங்கத்துல இருந்தாரு. அவரு குரோம்பேட்டை நேரு நகர்ல இருந்தாரு. அவரு அப்பா போஸ்ட் ஆபீஸ்ல வேலை செய்தார்னு நினைக்கறேன், அதனால போஸ்ட் ஆபீஸ்வீடுனு அவங்க வீட்டைச் சொல்லுவாங்க. அவருதான் அந்த ஷாகாவ நடத்துனாரு. அவரு நடத்துன விதம் ரொம்பப் புடிச்சிருந்தது. அதனால, தானா போய்ச் சேர்ந்தேன்.
பிரச்சாரக்கா
எப்ப வந்தீங்க?
1970
சங்கத்தின் மூணாவது ஆண்டு பயிற்சிக்கு நாக்பூருக்குப் போயிருந்தேன். என்னுடன் ஒன்பது பேர் வந்திருந்தாங்க. இப்போது ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவராக இருக்கும் சேலம் குமாரசாமி உட்பட. முகாம் முடியும் நேரத்தில், மறைந்த சுப்பராவ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதுல, ‘ஸ்ரீகணேஷ், உன்னை தூத்துக்குடிக்கு போட்டிருக்காங்க. அதனால இந்த மூணாவது ஆண்டு பயிற்சி முடிஞ்சவுடனே தூத்துக்குடிக்கு இந்த விலாசத்துக்கு வரவும். அங்க மனவாளசாமின்னு ஒருத்தரும், நெல்லையப்பன்னு ஒருத்தரும் இருப்பாங்க. அவங்க உங்கள வரவேற்பாங்கன்னு சொல்லியிருந்தார். ஆனா உண்மையில பிரச்சாரக்கா எப்ப வந்தேன்னா… 1970 ஏப்ரல் 23 அன்னிக்கு எனக்குக் கல்லூரியில் மூணாவது ஆண்டு கடைசி நாள் பரிட்சை. ஒரு மணிக்கு பரிட்சை எழுதி முடிச்சிட்டு, 2 மணிக்கு பையை எடுத்துக்கிட்டு, தஞ்சாவூர் காரியாலயத்துக்கு பஸ் ஏறிட்டேன். ஏன்னா நான் சங்கத்தில் இரண்டாவது ஆண்டு, முதல் ஆண்டுப் பயிற்சி முகாம்கள் முடிக்கும்போதே அப்போதைய ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் இராமகோபாலன் ஜி, ‘யாரெல்லாம் இந்தத் தேசம் முன்னேற்றத்துக்காக உழைக்க முடியும்?’னு கேட்டாரு. திரும்பிப் பார்க்காம கை தூக்கணும்னு சொன்னாரு. நிறைய பேர் கைதூக்கினோம். அதுல நானும் ஒருத்தன். இல. கணேசன், சுகுமார் எல்லாரும் கை தூக்கினோம். சுகுமார்னா, இப்போதைய பி.எம்.எஸ். அகில பாரதப் பொறுப்பாளர் சுகுமாரன் ஜி. ஏப்ரல் 23, 1970ல் தஞ்சாவூர் காரியாலயத்துக்குப் போயிட்டேன். அப்போது 100 மாணவர்களை ஷாகாக்குக் கொண்டுவரணும்னு முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. இந்தியன் எக்ஸ்பிரஸ்ல கோபாலகிருஷ்ணன், T.R. நாராயணன் (இல. கணேசன் தங்கை வீட்டுக்காரர்), ராமரத்தினம் ஜி, வெங்கட்ராமன், அதே மாதிரி சுந்தர்ராஜன்னு ஒருத்தர் மானா மதுரை சாவடியில காரியாலயத்துல இருந்தாரு. இவங்கதான் 100 மாணவர்களை ஷாகாவுக்குக் கொண்டுவர முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. அப்புறம் மதுரைல சங்க சிக்ஷா வர்க (ஆர்.எஸ்.எஸ். வருடாந்திர பயிற்சி முகாம்) நடந்தது. அங்க ஐந்து, ஆறாவது நாள் இருந்து கணக்கை முடிச்சிட்டு, அங்கிருந்து கிளம்பி 8ம் தேதியோ என்னவோ சென்னைக்கு கிளம்பி வந்து 9ம் தேதி நாக்பூர் முகாமுக்குப் போனோம். அப்ப பிரச்சாரக்கா வந்தாச்சு.
அந்த நேரத்தில்
பிராந்திய பிரச்சாரக்காக
(
ஆர்.எஸ்.எஸ்.
மாநில அமைப்பாளர்)
இராம.கோபாலன்
ஜி இருந்தார்.
உங்களுக்கு அவரோடு
இருந்த அனுபவம்
பற்றி சொல்லுங்க
அவரோடு அனுபவம் 63வது வருஷமே தொடங்கியாச்சு.
இங்க சென்னை சாங்கிக் (கூடுகை) நடக்கும். கண்ணப்பர் ஹால், இல்லைன்னா சேத்துப்பட்டு, வடபகுதில இருக்கிற ரெயில்வே C.I.T. காலனில நடக்கும். இந்த சாங்கிக்ல விசேஷப் பயிற்சியும் நடக்கும். எல்லாத்திலேயும் கலந்துக்கிடுவோம். அங்கவச்சிதான் முதன்முதலா இராமகோபாலன் ஜியைப் பார்த்தோம். அங்க தேசபக்திக் கதைமலர்னு ஒண்ணு, விஜயபாரதம் (தியாகபூமி) வெளியிட்டாங்க. கனகராஜன்தான் அப்ப அதுக்கு ஆசிரியர். அதுல கப்பலோட்டிய தமிழன் செக்கிழுக்கிற படம்தான் அதன் முகப்பு அட்டையில போட்டிருந்தது. அந்தப் புத்தகத்தையும் வாங்கிட்டு, முதல்முறையா கோபால்ஜிகிட்ட பேசினோம். அதுதான் முதல் அத்தியாயத்தோட ஆரம்பம். அதுதான் பிரச்சாரக்கா வர்றதுக்கு கிடைத்த உணர்ச்சிகள்.
என்னோட முதல் முக்கிய சிக்ஷக் (ஆர்.எஸ்.எஸ். ஷாகா பொறுப்பாளர்) தியாகராஜன். அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. அங்கே ஒரு வீட்டு மாடில எங்க ஷாகா (ஆர்.எஸ்.எஸ். கிளை) ஸ்வயம்சேவகர்களுக்கு உணவுன்னு சொன்னாங்க. எனக்கு அதுக்கு முன்னாடி அது மாதிரி எல்லாம் அனுபவம் கிடையாது. என்னையும் கூப்பிட்டு இருந்தாங்க. நானும் போயிருந்தேன். அங்க கோபால்ஜி வந்திருந்தாரு. அங்க சடகோபன்னு ஒருத்தர். பிற்காலத்தில் அவரும் பி.ஜே.பி. முழு நேரமா வந்தாரு. அவரும் இவரும் போஸ்ட் ஆபிஸ்ல செஞ்சுக்கிட்டு இருந்த தங்களுடைய வேலையை ராஜினாமா செஞ்சிட்டு DL படிச்சிட்டு இருந்தாங்க. அதையும் முடிச்சிட்டு, சேலம், கோவை ஆகிய இடங்கள்ளல்லாம் முழு நேரமா வந்தாரு. அவரு கோபால்ஜிகிட்ட பேசிட்டு இருந்தாரு. ‘நீங்கள்ளா கல்யாணம் பண்ணிட்டுதான் பிரச்சாரக் ஆகணும்னு சொன்னீங்க. நாங்கள்லாம் கல்யாணம் பண்ணிகிட்டோம். ஆனா நீங்க எப்ப பண்ணப்போறிங்கன்னு கேட்டாரு. உங்க வீட்லலாம் அதப் பத்தி கேக்கலயான்னு இராமகோபாலனைக் கேட்டாரு.
தேசத்துக்காக வந்திருக்கோம், அப்படி போகவேண்டியதுதான்னு இராமகோபாலன்ஜி சொன்னாரு. அப்பதான் எனக்குத் தெரியும், அவர் திருமணம் ஆகாம பிரச்சாரக்கா ஆனவர்னு. அதுக்கப்புறம் ஷாகாவுல பாப்போம்.
பொத்தேரில ஒரு காரியாலயம் இருக்கு. அந்த காரியாலயத்துல அவரு இருந்தாரு. நான் அங்கே போவேன். நான் மயிலாடுதுறைக்கு கல்லூரிக்கு போயிட்டேன். அப்ப சென்னைக்கு ஏதாவது காரியமா வந்தேன்னா அங்க போவேன். அதுக்குள்ள எப்படியோ நட்பு வந்துருச்சு. அப்படியே போயிட்டு வருவேன். அங்க சீனிவாசன், கண்ணப்பான்னு ஒருத்தர், குஸ்தியெல்லாம் நல்லாப் போடுவாரு இவரு, அவங்கல்லாம் அங்க இருந்தாங்க. என்னை சாப்பிடுனு சொல்வாரு. இரு இரு, பேசிட்டுப் போலாம்னு சொல்வாரு. அப்படியே போச்சு.
அதுக்கு அப்புறம்தான் மயிலாடுதுறைக்குப் போய் முதல் வருஷப் பயிற்சி, இரண்டாவது வருஷப் பயிற்சி, மூணாவது வருஷப் பயிற்சி எல்லாம். அப்புறம் மயிலாடுதுறைக்கு வருஷத்துக்கு ஒருதரம் அவரு வருவாரு. அப்ப அங்க ஷாகா ஆரம்பிச்சாச்சு. அந்த ஷாகா ஆரம்பிச்சி இரண்டாவது வருஷம்தான் பாஸ்கர்ராவ் அங்க பிரச்சாரக் ஆனார். அதுக்கு முன்னாடிலாம் அங்க கோபால்ஜி வருஷத்துக்கு இரண்டு மூணு தடவை வந்திருவாரு. வல்லநாடு கோயில்ல நடந்தது. நாற்பது ஐம்பதுபேர் வருவாங்க. நானே அதை இரண்டா பிரிச்சி கல்லூரி மாணவர்களுக்குன்னு தனியா பயிற்சி கொடுப்பேன். அப்ப இராமகோபாலனுடைய அக்கா கூட இருந்தாங்க. அவங்க திருவெற்றியூர்ல கல்யாணம் ஆகி இருந்தாங்க. ஒருதடவை அவர் தன்னோட செருப்பை எடுத்துட்டு வந்துரு போலாம்னு சொன்னாரு. அதாவது வெளியே நின்னுட்டுப் பேசிட்டு இருந்தாரு. நான் அவரோட செருப்பைக் கால்ல போட்டுட்டு இருந்தேன். செருப்பு ரொம்ப பொருந்தியிருக்கே. என்னோட செருப்பும் நல்லாப் பொருந்தியிருக்கு, பிரச்சாரக்கா வர்றதுக்கும் எல்லாம் பொருந்தியிருக்குன்னு சொன்னாரு. அப்ப அது புரியல. சிந்திக்க சிந்திக்கத்தான் எல்லாம் புரிஞ்சது.
ஷாகால அவரு பேசினால் பொறி பறக்கும். அதுக்கு அப்புறம் பயிற்சி. ஒரு முகாமில் இன்ஸ்பெக்ஷன். எல்லாரும் அவங்க அவங்க பொருட்களை எடுத்து வைக்கணும்னு சொன்னாங்க. இராமகோபால்ஜி, இன்னும் இரண்டு பேரு வருவாங்கன்னு சொன்னாங்க. அப்ப என்னோட பொருட்களை கோபால்ஜி பார்த்தாரு. இந்த மூஞ்சிக்கு பவுடர் கேக்குதான்னு சொன்னாரு. விபூதி வேற பவுடர் வேறப்பான்னார். அன்னிக்கு தூக்கிப் போட்டதுதான் அந்த பான்ஸ் பவுடரை. அப்புறம் போடறதே இல்லை. அப்புறம் கல்லூரிப் படிப்பு இரண்டு வருஷம். அப்பல்லாம் பவுடர் இல்லாம மெட்ராஸ்ல பள்ளிக்கூடத்துக்குக்கூட போகவே முடியாது. நம்ம உணர்வு அப்படி இருக்கும். என்னவோ மாதிரி இருக்கேன்னு தோணும். அப்ப கூட பவுடர் போட்டதில்ல. அவரு சொல்லிட்டாரு, அப்படியே பவுடரை விட்டாச்சு. அப்புறம், ‘என்னாச்சு, ரெடியாய்ட்டியா, என்ன பண்றஅப்படின்னு அடிக்கடி கேப்பாரு.
அதுக்கு அப்புறம் எமர்ஜென்சி பீரியட்லாம் வந்தது. தூத்துக்குடிக்கு பிரச்சாரக்கா போயிருக்கோம். தூத்துக்குடிக்கு வருஷத்துக்கு மூணு தடவை போயிடுவாரு. திருச்செந்தூருக்கு மூணு தடவை வந்து பேசியிருக்காரு. தூத்துக்குடில, விளாத்திகுளத்துல, ஸ்ரீவைகுண்டத்துல, கோவில்பட்டிலன்னு எல்லா இடங்கள்லயும் பேசி இருக்காரு. விளாத்திகுளத்துல ஒரு தி..காரர் வீட்ல தங்கியிருந்தாரு. தி..காரரா இருந்தாலும் ரொம்ப ஆதரவாளரா மாறிட்டாரு. அப்படி என்னைப் பார்க்கிறதுக்காக வந்தேன்னுதான் சொல்லுவாரு. ஆனா, சங்க வேலையா திட்டம் போட்டுதான் வருவாரு எப்பவும். சுப்பராவ்தான் திட்டம்போட்டே கொடுப்பாரு. மாநில பிரச்சாரக் வர்றாரு, அதெல்லாம் அரேஞ்ச் பண்ணுங்கன்னு சொல்லிடுவாரு. நல்லா வேலை செஞ்சா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பத்து பேரு, இருபது பேரு, முப்பது பேரு இருப்பாங்க. அவரு பேரச் சொன்னா போதும், பெரிய மாற்றம் வந்துடும். அதுமாதிரிதான் தர்மபுரில. அப்பலாம் சைக்கிள் ஓட்டமுடியாது. சைக்கிள்லாம் கொடுக்கமாட்டாங்க. அப்படி கொடுத்தாலும் ஒண்ணுதான் கிடைக்கும். மணல்ல வச்சி மிதிக்க முடியாது. ஆனா அவரு நாலு பேர வச்சி ஓட்டிக்கிட்டு போவாரு. அப்படியே திருச்செந்தூர். அப்படி இருக்கும்போது அவரு பூஜை பண்ற முறை, தினசரி அனுஷ்டானங்கள்ல கரெக்டா இருப்பாரு. இதெல்லாம் அவரைப் பார்த்து ஒரு இம்ப்ரெஷன், அவர மாதிரி வரணும்னு. அவரு கூட்டம் நடத்தினா போதும், ஆள் வந்துரும். அது அப்படியே ஒரு பெரிய மார்க்கத்துல என்னைக் கொண்டுபோய் விட்டிச்சி.
சுந்தர.லட்சுமணனை
(
ஆர்.எஸ்.எஸ்.
பிரச்சாரகர், சேவாபாரதி
அகில பாரத
பொறுப்பாளர்) சங்கத்துக்கு
கொண்டுவந்தது நீங்கதானே?
அப்ப நான் தூத்துக்குடில பிரச்சாரக்கா இருந்தேன். இடிந்தகரைல பெரிய மதமாற்று வேலையெல்லாம் நடந்துடுச்சு. அப்ப தாய்மதம் திரும்புதல்னு ஒரு ஷாகா இருக்கு, வான்னு சொல்லிட்டாரு. நானும் போயிட்டேன். பகவான் அப்படிங்கிறவர் அங்க வேலை பாத்தாரு. அப்ப சுந்தர லட்சுமணன் அப்பா சுந்தரம்னு ஒரு ஆசிரியர் இருந்தார். அப்ப, ‘ கணேசா, திருச்செந்தூர்ல ஒரு ஷாகா ஆரம்பிக்கணும்னு சொன்னல்ல, உனக்கு ஒருத்தர அறிமுகம் செஞ்சு வைக்கிறேன்னு சொன்னாரு.
சுந்தரம்ஜியிடம் பேசினேன். அவரு, ‘இதுமாதிரி பள்ளிக்கூடத்தை நடத்துறேன். இந்தக் குழந்தைகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கிறேன். நல்ல விஷயங்கள்லாம் சொல்லிக் கொடுக்கிறேன். வாங்க, நாம RSS இந்துக்களை சேர்த்து நடத்தலாம்னு சொன்னாரு. அதனால அங்கபோய் அவரைத் தொடர்புகொண்டேன். நான் அவரைத் தேடிப் போனேன். மார்கழி மாசம் 1ஆம் தேதிதான் போனேன்னு நினைக்கிறேன். அப்ப அவரு பையன்ங்களை அழைச்சிக்கிட்டுக் குழுவா திருப்பாவை, திருவெம்பாவை பாடிட்டுப் போயிட்டு இருந்தாரு. அவரு வீட்டுலேயே தங்கச் சொன்னாரு. சாப்பாடு அவரு வீட்டுல. அப்ப சுந்தர.லட்சுமணன் காலேஜ்ல பி.யு.சி. படிச்சிட்டு இருந்தாரு. அவரோட ஸ்கூல்லயே ஷாகா ஆரம்பிச்சோம். அவரு வீட்டுப் பையங்க, பக்கத்து வீட்டுப் பையங்க எல்லாரும் சேர்த்துக்கிட்டு ஷாகா ஆரம்பிச்சு, அப்படியே 50, 60 பேர் ஆயிட்டோம். அப்ப நான் திருச்செந்தூர்லேயே தங்கிடலாம்னு முடிவு பண்ணினேன். அப்ப அவரு வீடு அங்க இருந்தது. முருகானந்தம் டிரெஸ்ட்னு ஒண்ணகூட அவரு நடத்திட்டு இருந்தாரு. அதுல மேல ஐந்து ரூம் வச்சிருந்தாரு. அதுல ஒரு ரூம் கொடுத்தாரு. அதனால, காலை வேளைல எழுந்திச்சு, திருச்செந்தூர் நாழிக் கிணறு எல்லாம் சுத்திக் குளிச்சிட்டு, காலைல வெளியே போயிட்டு, மத்தியானம் வந்துருவேன். அப்புறம் சாயங்காலம் ஷாகா நடக்கும். அதுல அப்படியே சுந்தர.லட்சுமணன் முக்கிய சிக்ஷக்கா ஆயிட்டாரு. அந்த ஆண்டுப் பயிற்சி வந்தது. லட்சுமணனைக் கூப்பிட்டேன். நான் வரேன்னும் சுந்தரம்ஜி சொன்னாரு. என் பையன் சின்னபையன்னு சொன்னாரு. ‘இல்ல இல்ல, உங்க பையனை முதல்ல நீங்க அனுப்புங்க. நீங்க அடுத்த வருஷம் வாங்கன்னு சொன்னேன். சுந்தர.லட்சுமணனோட தாத்தா, பாட்டி ரெண்டுபேரும் இருந்தாங்க. அம்மாவோட அண்ணா, தாத்தா அவங்க ரெண்டு பேரு, மொத்தம் ஐந்துபேரும் மூணு நாள் தங்குறோம்னு சொல்லிட்டு, மொத்தம் முப்பது நாளும் தங்கிட்டாங்க. ஒண்ணு ரெண்டு நாள் தவிர மற்ற எல்லா நாட்களும் தங்கிட்டாங்க. ஆசிரியர் பயிற்சி முடிச்சிருந்தாங்க. விருதுலாம் கூட வாங்கினாங்க. அவங்க பெரிய அம்மாவா இருந்து எல்லாருக்கும் வழிகாட்டினாங்க. நான் வேற ஊருக்கு மாற்றலான பிறகு இரண்டாவது பி.பி.. முடிச்சாரு. மூணாவது வருஷம் முடிச்சாரு. அப்புறம் எமர்ஜென்ஸி பீரியட்ல பிரச்சாரக்கா வந்தாரு.
எமர்ஜென்ஸி
நேரத்தில் எப்படி
வேலை செய்தீங்க?
எமர்ஜென்ஸி பீரியட்ல தென்சென்னைதான் நம்ம இடம். தென்சென்னைல கிழக்குப் பகுதிதான் இந்தக் காரியாலயத்துல இருந்தது. சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, ராயப்பேட்டை, டிரிப்ளிகேன், மயிலாப்பூர், அப்புறம் மௌன்ட் ரோடு, அடையார் வரைக்கும். இந்த ஏரியாவை நாலா பிரிச்சிருந்தாங்க. இந்தப் பகுதிக்கு நான். வடபகுதிக்கு சேதுபதி பத்மநாபன், கிழக்குப் பகுதி பீஷ்மாச்சாரி, இப்ப வெளிநாட்டில் பிரச்சாரக்கா இருக்காரு. ஹைதராபாத்ல இருந்து பிரச்சாரக்காக வந்தாரு. மேற்குப் பகுதிக்கு சண்முகநாதன்ஜி. நாலுபேருகிட்டயும் ஒப்படைச்சாங்க.
எமர்ஜென்ஸி
அறிவித்த நேரத்தில்
எங்கிருந்தீங்க?
எமர்ஜென்ஸி அறிவித்த சமயத்துல, எமர்ஜென்ஸி மாதிரி வரும் என்று சொல்லப்பட்டிருந்தது. எனக்கு அதைப் பத்தியெல்லாம் அவ்வளவு தெரியாது. எமர்ஜென்ஸி அறிவிக்கும்போது நான் இங்கேதான் இருந்தேன். காரியாலயம்கூட இங்கதான் இருந்தது. இடிக்கப்படுவதற்கு முன்னாடியே இதை வாங்கிட்டோம். இதை சீல் வச்சிருவாங்களோன்னு இருக்கோம். எமர்ஜென்ஸி காலைலதான் அறிவிக்கிறாங்க. தினத்தந்தி நாளிதழ் முதல்பக்கத்துல RSS அலுவலகம் சீல் வைக்கப்பட்டதுன்னு செய்தி வெளியிட்டிருந்தாங்க. ஆச்சரியமாக இல்லை? இன்னிக்குதான் அறிவிச்சி இப்பதான் கூட்டம் போட்டிருக்காங்க. அதுக்குள்ள தினத்தந்தி பேப்பர்ல செய்தி இருக்கு. நாங்க எல்லாத்துக்கும் ரெடியாத்தான் இருந்தோம். அப்படி எதாவது எமர்ஜென்ஸி மாதிரி அறிவிச்சா சுதந்திர தினப் பூங்காவில் எல்லாரும் சந்திக்கணும்னு சுப்பராவ் சொல்லியிருந்தாரு. இருக்கிற இடம், நாம எங்கெல்லாம் தங்கணும்ங்கிற ரகசிய இடம் எல்லாம் முடிவாகியிருந்தது. எமர்ஜென்ஸில எனக்கு வெளில வரக்கூடாதுன்னு உத்தரவு. ஆனால் முக்கியமான தலைவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க இணைப்பெல்லாம் இருந்தது. எல்லா மாநிலத்திலேயும் தொடர்புகொள்ளணும். நமக்குக் கடிதங்கள் அங்கங்கே வரும் போகும். இந்தப் பொறுப்புக்கு லிங்க்1னு பேரு. பல்வேறு பகுதிகளிலிருந்து என்னைத் தொடர்பு கொள்வாங்க. அப்படி கடிதப் போக்குவரத்து நாடு முழுவதும் நடத்துறது, மத்த மாநிலங்களில நடக்கிறதைத் தெரிஞ்சுக்கிறது, தமிழ்நாட்ல நடக்கிறதைச் சொல்றதுன்னு கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட் நம்ம கைல இருந்தது. தலைவர்கள்லாம் வரும்போது ரகசியமாக தலைவர்களைச் சந்திக்க வைக்கிற வேலை, இதுதான் நம்ம எமர்ஜென்ஸி வேலை.
இந்தியன்
எக்ஸ்பிரஸ் ராம்நாத்
கோயங்காவைத் தொடர்பு
கொண்டீர்களா?
கோயங்கா வீட்டுக்கு நான் போவேன். எப்படி போவேன்னா அவங்க வீட்டுல கிருஷ்ணா கைத்தான்னு அவரோட மகள் இருந்தாங்க. அவங்க ஒரு பால் பண்ணை வச்சி நடத்திட்டு இருந்தாங்க. ஹரிஹரன்னு முன்னாள் பிரச்சாரக் அங்க வேலை பார்த்தாரு. கோயங்கா வீட்டுலதான் எமர்ஜென்சி நேரத்துல மறைந்த கி. சூரியநாராயணராவ் ஜி கொஞ்சநாள் இருந்தாரு. அவருக்கு எப்படி நேரடித் தொடர்பு வந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஆனா அந்த ஹரிஹரன் மூலமா அங்க தங்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அப்ப அதுக்கு முன்னாடி எஸ். குருமூர்த்தி பெரியவங்களை தொடர்புகொண்டு எமர்ஜென்ஸி பத்தி பேசியிருந்தார். இண்டியன் எக்ஸ்பிரஸ்ல ஆடிட்டிங் செய்வதற்கு அவருதான் போவாரு. ஆனா ஹரிஹரன் மூலமாகதான் சூரிஜியை அங்க தங்க வச்சாரு. அப்படி நான் அந்த வீட்டுக்குப் போயிருந்தேன். கோயங்கா இருப்பாரு, அவர் மகன் சூர்தாஸ் இருப்பாரு, அப்ப தியாகராஜன்ஜி கூட இருப்பாரு. அப்ப நான் ஐந்து ஆறு முறை போயிருக்கிறேன்.
துக்ளக் பத்திரிகையின்
சோ…?
சோவைத் தொடர்பு கொள்ளணும்னு இராமகோபாலன் ஜிதான் சொன்னாரு. ‘நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்னு ஒரு பிரதியை சோவிடம் கொடுன்னு சொன்னாரு. அதனால சோவை நீ சந்திக்கணும்னு சொல்வாரு. அப்போ சிதம்பரம்னு அங்க ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி இருந்தாரு. இந்தியன் ரிவியூனு டிடிகே ரோட்ல இருக்கிற மியூசிக் அகாடமில ஒரு பத்திரிகை ஆபிஸ் இருக்கும். அந்தப் பத்திரிகையோட எடிட்டர் சிதம்பரம். அவரை எனக்கு கோபால்ஜி அறிமுகப்படுத்தி வச்சார். சோ தினமும் ஆபிஸ் போறதுக்கு முன்னாடி தியாகி சிதம்பரத்தைச் சந்திச்சிட்டுதான் போவாரு. அதனால அங்க சோவைச் சந்திக்கிறதுக்காக அங்க போய் தினமும் ஒருமணி நேரம் பேசிட்டு இருப்பேன். அப்ப அங்க சோ வருவாரு. அப்ப அவரை சந்திச்சு எமர்ஜென்ஸி நேரத்துல என்ன விஷயம் நடக்குது, என்ன என்ன சம்பவம்லாம் நடக்குதுன்னு நாங்க விவாதிப்போம். அங்க இருந்த நாலு பேர்ல, குருமூர்த்தி, வரதராஜன், சி. கோபாலன் ஆகிய மூணு பேருக்கு, நகரத்துல இருக்கிற முக்கிய பிரமுகர்களை ரகசியமா தொடர்பு கொள்வதற்கு துருப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ரொம்ப நல்லா செயல்பட்டாங்க.
நான்தான் அப்ப சோவோட லிங்க். வாரத்துல மூணுநாள் சந்திச்சிடுவேன். அவரோட காபி சாப்பிடுவேன். இப்ப அவரு இருந்தாருன்னா என்னைப் பார்த்தா அடையாளம் தெரியுமானு தெரியாது.
இந்து முன்னணி
ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி
தி..வை
எதிர்த்து சங்க
வேலைகள் எப்படி
இருந்தன?
சங்க வேலை, தி..வை எதிர்க்கணும், அதை முறியடிக்கணும்னு சொல்றதில்ல. சங்கம் ஒழுங்கா இருக்கணும்ங்கிறதை மட்டும் ரொம்ப வலியுறுத்தி இருந்தாங்க. ‘அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறிவிடு’, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்புஇந்த ரெண்டு விஷயத்தை இராமகோபாலன் ஜி இங்க வலியுறுத்தினாங்க. அதற்காகப் புத்தகத்தையே நாம போட்டோம். அந்த சமயத்துலதான் நான் சேலத்துல கல்லூரில படிச்சிட்டு இருந்தேன். 69 இருக்கும் அப்ப. சேலத்துல இருக்கிற ராமர், பிள்ளையார் சிலைக்கெல்லாம் செருப்பு மாலை போட்டு, சாணிய கரைத்து ஊத்தி, விளக்குமாறெல்லாம் அடிச்சு அவமானப்படுத்தினாங்க. இந்த விஷயம் எல்லாம் நம்ம ஷாகால தீவிரமாக விவாதிக்கப்படும். அவன் போட்டுருக்கான், அதனால அதைக் கண்டிச்சு நம்ம வால்போஸ்டர் ஒட்டுவோம்னு சொல்லி, மயிலாடுதுறையில நான் அதை ஒட்டியிருக்கேன். கல்லூரி மாணவர்கள் பத்துப்பேரு அங்க படிக்கிற மாதிரி நிக்கிறது. வெறும் வால்போஸ்டர்தான் ஒட்டினோம். அதுதான் தி..வை எதிர்த்து நாம செஞ்ச முதல் போராட்டம்னு நினைக்கிறேன். நாமல்லாம் ஒண்ணா நின்னு படிக்கிற மாதிரி காட்றது. அப்ப அங்க வர்றவங்களும் அதைப் படிப்பாங்க. அப்படி ஒவ்வொருத்தரையா படிக்க வைக்கிறது. அது பெரிய இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. அப்புறம் சேலத்துல இருக்கிறவங்க அதை எதிர்த்தாங்க. அப்புறம் தி. கூட்டத்துக்குப் போய் அவங்க பேசறதெல்லாம் கேக்கறது. நாம சாதியத்தான் எதிர்த்தோம். சாதி இல்லாத இந்தியா ஒண்ணா இருக்கணும்ங்கிறதுக்காகத்தான் நாம இருக்கோம். சாதிய ஒழிக்கணும், இந்துக்கள ஒற்றுமைப்படுத்தணும்ங்கிற எண்ணம் எனக்கு இருந்தது.
அப்ப தர்மபுரில தி..காரர் ஒருத்தர் நாகராஜன்னு பேரு, பஸ்டாண்ட்ல டீக்கடை வச்சிருந்தாரு. அவர் பழக்கமானார். அப்போ ஒருநாள் .வெ.ரா. வர்றார்னு சொன்னாரு. இருவரும் .வெ.ரா.வைப் பார்க்க போனோம். அங்க .வெ.ரா தமிழாசிரியர் வீட்டுல தங்கியிருந்தாரு. அவர்கிட்ட, ‘சாதிலாம் இல்லை, இந்துக்கள் ஒண்ணா இருக்கணும்னு சொல்ற RSS இயக்கத்துல முழு நேர ஊழியரா இருக்காருன்னு என்னை அறிமுகப்படுத்தி வச்சாரு. அப்படியா வாங்கன்னு .வெ.ரா. கூப்பிட்டாரு. ‘அப்படியா, RSS போறேன்னு சொன்னேன். அய்யா சாதி ஒழியணுங்கிற கொள்கை இரண்டு பேருக்கும் ஒண்ணுதான்னு நாகராஜன் சொன்னாரு.
ஈவெரா அவர்கள்
வேற எதாவது
சொன்னாரா?
வேற எதுவும் சொல்லல, வாங்கன்னாரு, அப்புறம் டீக்கடைக்காரர பார்த்து நீயும் RSS இருக்கியான்னு கேட்டாரு. ஆமா, அவங்க ஷாகா நடத்துவாங்க, நான் போவேன்னு சொன்னாரு. வேற ஒண்ணும் சொல்லலை. சிரிச்சாரு. ஆனா வாங்கன்னு கூப்பிட்டாரு. அது எனக்கு ஆச்சரியமா இருந்தது. சின்ன பசங்கதான நாம, நம்மை வாங்கன்னு கூப்பிட்டாரேன்னு தோணுச்சு. ஏன்னா கடவுள் இல்லைன்னு சொன்னவருதானன்னு ஒரு எண்ணம். அதுக்கப்புறம் தி..காரங்க சில பேர் தொடர்புல வந்தாங்க.
பாலக்காட்டுல கோபால்ஜி வந்தாரு, அங்க கன்னிகா பரமேஸ்வரி கோயில்னு ஒண்ணு இருந்துச்சு. கல்யாண மண்டபம் மாதிரி இருக்கும். RSS கொள்கை விளக்கக் கூட்டம்னு போட்டு நோட்டீஸ்லாம் அடிச்சிக் கொடுத்து, கோபால்ஜிய கூட்டிட்டு வந்தோம். பக்கத்துல இருக்கிற கிராமத்துல நாங்க போய் நேர்ல நோட்டீஸ் கொடுத்துக் கூப்பிட்டு வந்தோம். ஒரு 150 பேர்க்கு மேல வந்திருந்தாங்க. கல்யாண மண்டபம் முழுவதும் நிரம்பிடிச்சு. அந்த கூட்டத்துல கோபால்ஜி பேசினாரு. அப்போ தி..காரர் ஒருத்தர், சரிங்க அப்ப நாங்கல்லா எப்படிங்க உங்க கூட்டத்துக்கு வரமுடியும்னு கேட்டாரு. ‘நான் தி..வுல இருக்கேன், மாமிசம் சாப்பிடுவேன். நீங்களோ இந்துக்கள் ஒற்றுமைன்னுதான் சொல்றீங்க. எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா நான்லாம் சேரமுடியாதே. மாமிசம் சாப்பிடறேன், இந்துவே இல்லையேன்னு சொன்னாரு. “யாரு சொன்னா சாப்பிடக்கூடாதுன்னு? ரெண்டு ஆடு சாப்பிடணும்.” “இங்க ஐயருங்கல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்களே. மாமிசம் சாப்பிட்டவங்க அத விடமுடியாதுங்களேன்னு சொன்னாரு. “யாரு சொன்னா விடச்சொல்லி? ரெண்டு ஆடு சாப்பிடுங்கன்னு சொன்னாரு கோபால்ஜி. அதிர்ச்சியாயிட்டாரு தி..காரர். “அய்யருங்க மாமிசம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க, RSS அய்யரு இயக்கம்னு சொல்றாங்க…”ன்னு திரும்பவும் சொன்னாரு. “சாப்பாடு வீட்ல சாப்பிடப் போற, இங்கயா வந்து சாப்பிடப் போற? இல்ல RSS சாப்பாடு போடப்போதாஅவங்க அவங்க சாப்பிடுவாங்க இஷ்டமிருந்தா. நம்ம மாரியம்மன் கோயிலுக்கு கிடா வெட்டுறதில்லையா, அதல்லாம் இருக்கும். அதாவது கடவுளைப் பார்த்துடணும், கடவுள அடைஞ்சிடணும்னு நினைச்சிருக்காங்க. அவங்க நிறைய ஆசையை விடணும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை, இப்படி நிறைய விஷயங்களை விடணும். அதுல மாமிசமும் விடணும்னு சொல்லியிருக்கு. அப்ப கடவுளைப் பார்த்திரலாம்னு சொல்லியிருக்கு. அதைதான் சொல்லியிருக்காங்க எல்லாரும். அதல்லாம் சாப்பிடலாம். RSS இருந்தாலும் சாப்பிடலாம்னு சொன்னாரு. தி..காரருக்கு உடனே சந்தோசம். தருமபுரில எந்த இடத்துல என்னைப் பார்த்தாலும் உடனே என்னைக் கூட்டிட்டுப்போய், இவர் RSS இருக்காருன்னு பெருமையா சொல்லி அறிமுகப்படுத்தி வைப்பாரு. அவரோட நண்பர் ஒருவர் பெரியசாமின்னு ஒரு டாக்டர் ஒருத்தர் இருந்தாரு. அவருதான் எனக்கு நிறைய உதவி பண்ணினார் தருமபுரில. அவர் ஜிசிஐஎம் படிச்சிருந்தாரு. அவரைத்தான் .தி.மு..க்கு முதல் மாவட்ட அமைப்பாளராக எம்.ஜி.ஆர். போட்டார். தர்மபுரி மாவட்டத்துல நிறைய இடங்கள்ல நமக்கு நண்பர்கள்தான்.
எமர்ஜென்ஸிக்கு
அப்புறம் எங்க
இருந்தீங்க?
எமர்ஜென்ஸிக்கு அப்புறம் என்னை இங்கிருந்து இராஜபாளையம் ஜில்லாக்குப் போட்டுட்டாங்க. நாங்க போறதுக்கு நாலு ஐந்து வருஷத்துக்கு முன்னாடி சங்கரன்கோவில்ல சுப்பாராவை பிரச்சாரக்கா போட்டிருந்தாங்க. அங்க ஏதோ உண்ணாவிரதம் இருந்ததால, ஸ்கூல்ல டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. அதனால பள்ளிக்கூடத்தை எதிர்த்து கேஸ் போட்டு ஜெயிக்கிற வரைக்கும் அங்கயே இருந்தாரு. அங்க இருக்கிற கிராமங்களில் எல்லாம் சங்கம் அமைச்சி நடத்திட்டு இருந்தாரு. அவரு இராஜபாளையத்துல சமந்தபுரம் அப்படிங்கிற இடத்துல ஷாகா நடத்திட்டு இருந்தாரு. வாரத்துக்கு ஒருதடவை வருவாரு. பழைய பேட்டைலயும் ஷாகா நடத்தினாரு. கொஞ்சம் அறிமுகம் இருந்தது. நான் போனபிறகு ஒரு மூணு ஆண்டு இருந்தேன். மூணு ஆண்டுக்குள்ளே ஒரு 16 ஷாகா நடத்திட்டோம். மாநில அளவிலான ஒரு வருடாந்திர முகாமும் அங்க நடத்தும் ஒரு வாய்ப்பு கிடைச்சது. அங்க சங்கம் நல்ல செல்வாக்கா இருந்தது. இராஜசுப்பிரமணியம் பாலிடெக்னிக்லதான் முகாம் நடந்தது. பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவராக இருந்த பேராசிரியர் இராஜேந்திரசிங் போன்ற தலைவர்கள் வந்து வழிகாட்டினாங்க.
அப்பதானே
சங்கர சுப்பிரமணியம்
(
தற்போதைய பி.எம்.எஸ்.
மாநில அமைப்பாளர்)
வந்தாரு?
ஆமா, சங்கர சுப்பிரமணியம், .பி.வி.பி.யோட அமைப்பாளரா இருந்த ஆதித்யன், அப்புறம் பாலுன்னு ஒருத்தர் வந்திருந்தாங்க. இப்படி நமக்காக நிறைய பேர் வந்திருந்தாங்க. தற்போதைய தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். துணைத் தலைவர் பி.எம். ராமகிருஷ்ணன், வி.ஹெச்.பி. தென் பாரத அமைப்பாளர் பி.எம். நாகராஜன் இவங்கள்லாம் அந்த நேரத்துலதான் நம்மகூட வந்தாங்க. இராஜபாளையத்துல ஒரு 15, 16 ஷாகா. செல்வாக்குள்ள ஒரு இயக்கமாக இருந்தது.
அதன் பிறகு
எங்கே இருந்தீர்கள்?
மதுரை ஜில்லா பிரச்சாரக்கா இரண்டாண்டு, அப்புறம் விபாக் (மூன்று அல்லது நான்கு மாவட்டம் சேர்ந்தது) பிரச்சாரக்கா மதுரையில இருந்தேன். இப்ப இருக்கிற டி.வி. ரங்கராஜன், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசகண்டன், அவரு நகர காரியாலயத்துல இருந்தாரு. தினமணில எழுத்தாளராக இருந்த சுவாமிநாதன், அவர் ஜில்லா காரியகர்த்தாவா இருந்தாரு. இந்து முன்னணில இராஜகோபால்னு ஒருத்தர் வெட்டுப்பட்டு இறந்துபோயிட்டார். அவரு என்னோட மையப்பகுதி காரியாலயத்துல இருந்தாரு. அதுக்கு அப்புறம் பரமேஸ்வரன்னு ஒருத்தர் புரொபஸர். அவருக்குகூட நல்ல நெருக்கம் கிடைச்சது. அவர .பி.வி.பிக்கு அறிமுகப்படுத்தி வைச்சேன். பிற்காலத்தில் அவரும் வெட்டப்பட்டு இறந்து போனார்.
கோபால்ஜி (இராமகோபாலன் ஜி) வெட்டப்பட்டபோது நான் அங்க இருந்தேன். காலைல ஷாகாக்கு கிளம்பிட்டு இருக்கும்போது, அகில பாரத நுகர்வோர் அமைப்பின் (.பி.ஜி.பி ) தற்போதைய எம்.என். சுந்தரோட அண்ணன் எம்.என். சுப்பிரமணியன்னு நினைக்கிறேன், அவரு திருவனந்தபுரத்துல இருந்து வந்திருந்தாரு. கோபால்ஜி வெட்டுப்பட்ட செய்தியை அவருதான் கொண்டுவந்தாரு. உடம்பெல்லாம் ரத்தம் பட்டிருந்தது. “கோபால்ஜி இப்படி வெட்டுப்பட்டுட்டாரு, யாதவராவ்ஜி, சூரியநாராயணராவ், சங்கராச்சாரியார், சின்மயானந்தர். இந்த நாலுபேருக்கும் உங்களுக்கும் தகவல் கொடுக்கச் சொன்னாங்க. சாவைக் கண்டு நான் பயப்படலன்னு சொல்லச் சொன்னாரு. அவர வெட்டுனவங்களைப் பிடிச்சிட்டாங்க. அவருக்கு கழுத்துல வெட்டுப்பட்டு எலும்பெல்லாம் தெரியுது. ஆனா பேசிட்டு இருக்காரு.” மதுரை மெடிக்கல் காலேஜ்ல உதவிப்பேராசிரியரா இருக்கிறவர் சொன்னார், “உடனே அழைச்சிட்டு போங்கய்யா, அவரு பேசறாருல, காப்பாத்திடலாம், அழைச்சிட்டு போங்கன்னு சொன்னாராம். இப்ப இருக்கிற மாதிரி அப்ப ஃபோன்லாம் கிடையாது. இந்த மாதிரி கோபால்ஜி வீட்டுக்கு ஃபோன் பண்ணிக்கிறேன்னேன். மதுரை மெடிக்கல் காலேஜ்ல இருந்தவங்களுக்கு ஃபோன் பண்ணினேன். கோபால்ஜி வந்திருக்காருன்னாங்க. இராமகோபாலன்ஜிக்கு இரத்தம் கொடுக்கணுமா என்னன்னு பார்த்துக்கோங்கன்னு சொன்னேன். இப்படி பத்துபேருக்கு ஃபோன் பண்ணிருப்பேன். பத்து பேருக்கு தகவல் சொல்லி நேரா ஆஸ்பத்திரிக்கு வந்துருங்கன்னு சொல்லிட்டு, நேரா இராஜகோபாலன்ஜி (பிற்காலத்தில் இந்து முன்னணித் தலைவராக இருந்தவர், தீவிரவாதிகளால் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டவர்) வீட்டுக்கு போனேன். அவரு உடனே போஸ்டர் அடிக்கணும்ஜின்னு சொன்னாரு. என்கிட்டயே காசு கேட்டாரு. 50 ரூபாய்க்கு அப்போ கட்டைல வச்சி அடிச்சி தருவான். லெக்ஷ்மி பிரஸ்ல அடிச்சிட்டு, ஆஸ்பத்திரிக்குப் போனோம். நிறைய போலிஸ்காரங்க அங்க. எல்லாரையும் விடுவாங்கன்னு நினைச்சு போனோம். ஆனா என்னை மட்டும் உள்ளே விட்டாங்க. அப்பதாம் என்னை போலிஸ்காரங்களுக்கெல்லாம் தெரியும்னு நினைச்சேன். அப்ப அவருக்கு ஒரு பக்கம் ஷேவ் பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு பக்கம் தைச்சிட்டு இருந்தாங்க. ரத்தம் விளக்கெண்ண மாதிரி குபுக் குபுக்ன்னு வந்துட்டு இருந்தது. வலிக்கலையான்னு கேட்டேன். இல்லன்னு சொன்னாரு.
நாலு நாளா போராடி ஆப்ரேஷன் பண்ணி சக்சஸ் பண்ணிட்டாங்க. முடிஞ்சப்புறம் அவரைப் பார்க்க நான் போனேன். அப்புறம் மூணுநாள் அங்க இருந்துட்டு, வடசென்னைக்குப் போறதுக்கு டிக்கெட் புக் பண்ணி இருந்தேன். அப்ப சங்கத்துல நிறைய பொறுப்பு கொடுத்திருந்தாங்க. விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு போணும்னுலாம் சொல்லிருந்தாங்க. அப்பதான் இதுமாதிரி ஆயிடுச்சி. அதனால உடனே சென்னைக்கு கிளம்பி வரவும்னு சூரிஜி சொல்லிட்டாரு. உடனே அந்த டிக்கெட்டை கேன்சல் பண்ணி, அதுக்கு வேற ஒருத்தரை ஏற்பாடு செஞ்சேன்.
விஷ்வ ஹிந்து
பரிஷத்துல
விஷ்வ ஹிந்து பரிஷத்துல போயி நாங்கல்லாம் வேலை பார்த்தோம். அப்புறம் ஓராண்டுக்குப் பிறகு சங்கத்துக்கே வாங்கன்னு கூப்பிட்டாங்க. என்னை பாண்டிச்சேரிக்கு பிரச்சாரக்காகப் போட்டாங்க. அங்க ரெண்டு, மூணு வருஷம் இருந்தேன். அந்த சமயம் வடலூர்ல சங்கஷிர்சனம் ஒண்ணு நடத்தினோம். சுதர்ஷன்ஜி சிதம்பரத்துக்கு வந்தாரு. வடலூர்ல முகாம் நடத்தினோம். சிதம்பரத்துல ரெண்டு, மூணு முகாம் நடத்தினோம். கடலூர் மாவட்டம் கொஞ்சம் பின்தங்கின மாவட்டமாத்தான் அப்ப இருந்தது. இருந்தாலும் அந்த சமயம் நல்ல எழுச்சி இருந்தது.
அதுக்கு அப்புறம்
கன்னியாகுமரியா?
பாண்டிச்சேரில ரெண்டு வருஷம் இருந்தபோது, அதுக்கு அப்புறம் திருச்சில போட்டாங்க. அங்க இருந்தபோதுதான் டாக்டர்ஜி நூற்றாண்டு விழா நடந்தது. அப்பதான் ஷுகர் ரொம்ப அதிகம் ஆயிட்டது. அப்ப அதெல்லாம் தெரியாது. கால்ல ஓட்ட விழுந்துடுச்சி. அப்புறம் கேட்டா ஷுகர் 525ன்னு சொன்னாங்க. அப்புறம் ஷுகருக்கு மருந்து எடுத்தேன். காலைலயும், மாலைலயும் ரெண்டு வேளையும் இன்சுலின் போட்டுக்குவேன். அப்புறம் அது மூடிடுச்சு. சரியா போயிடுச்சு. அப்புறம் திருச்சில ரெண்டு வருஷம். அதுக்கு அப்புறம் கன்னியாகுமரிக்கு வான்னு சொல்லிட்டாங்க. அப்ப அங்க இருந்த பாஸ்கர் ராவ் தூத்துக்குடி, திருநெல்வேலிக்குப் போயிட்டாரு. அப்ப திருநெல்வேலிலதான் ஹெட்குவாட்டர்ஸ். அப்படி அங்க இருந்தப்புறம், பாஸ்கர் ராவ்க்கு பத்து மாவட்ட பொறுப்பு (சம்பாக்) கொடுத்துட்டாங்க. கன்னியாகுமரி பிரச்சாரக்கா 2 வருஷம் இருந்த பிறகு, 1993 என்னை சூரியநாராயண ராவ்ஜி, கேந்திர பிரச்சாரக்கா இருந்த கிருஷ்ணபாஜிஎல்லாரும் முடிவு செஞ்சு நம்ம ஸ்ரீகணேசனை பாரதிய கிசான் சங்கத்துக்கு மாநிலப் பொறுப்பாளராகப் போட்டிருக்குன்னு அப்ப சொன்னாங்க. அந்தக் கூட்டத்துல அப்போதைய அகில பாரத பொதுச் செயலாளர் ஹெச்.வி. சேஷாத்திரி வந்து கிசான் சங்கத்தைப் பத்தி தெரியுமான்னு கேட்டாரு. தெரியாதுன்னு சொல்லிட்டேன். சாப்பிடுவியா நல்லான்னாரு, நல்லா சாப்பிடுவேன்னு சொன்னேன். சும்மா செல்லமா ஒரு குத்து குத்திட்டு, சீரியஸாயிட்டாரு.
நம்ம
சங்கத்தால எல்லா இந்துக்கள்கிட்டயும் போக முடியும். ஆனா அதுக்கு இப்படித்தான் போகணும்னு ஒரு பயிற்சி இருக்கு. எல்லா இந்துக்களும் ஷாகா வருவதற்கு காலம் அதிகமாகும். விஷ்வ ஹிந்து பரிஷத்தால போகமுடியும். விஷ்வ ஹிந்து பரிஷத் இவ்வளவு நாள் நடந்தது. இது இரண்டாவது. மூன்றாவதாக பி.ஜே.பி. போகமுடியும். எல்லாக் கிராமங்களுக்கும், பி.ஜே.பி. எப்படி போனாலும் பாதிபேரு அரசியல்ரீதியா எதிராத்தான் இருப்பான். கிசான் சங்கம் எல்லா கிராமத்துக்கும் நல்லா போகமுடியும். பி.எம்.எஸ். தொழிற்சங்கம் நகரத்துல இருக்கும். கிராமத்துல போகமுடியாது. ஆனா கிசான் சங்கம் மூலமா கிராமத்துக்குப் போகமுடியும். கிசான் சங்கம் மூலமாக நம்ம சங்கக் கருத்தைச் சொல்லணும். ஆனா ஒண்ணு நியாபகம் வச்சிக்கணும். எல்லா விவசாயிகளையும் ஒரு சமஸ்காரமா உண்டாக்கணும்னு சொன்னாரு.
பாரதிய கிசான்
சங்கத்தின் மாநில
அமைப்பாளர் என்று
உங்களை அறிவித்ததும்
என்ன செய்தீர்கள்?
என்னை அறிவித்ததும், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச் செயலாளர் சேஷாத்திரிஜி, ‘டெல்லியில் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் கூட்டம் நடக்குது. அங்க போயிட்டு வாஎன்றார். அந்தக் கூட்டத்தில் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்களும் கலந்துகொண்டாங்க. அடுத்த கிசான் சங்கத்துக் கூட்டத்துக்கு கூப்பிடறதா சொன்னாங்க. இப்படிப் பல கூட்டத்துக்குப் போய் எனக்கு ஒரு விஷயம் தோணிச்சு. கிராமங்களில் எல்லாக் கட்சிக்கும் பிரமுகர்கள் இருக்காங்க. ஆனா, விவசாயிகளுக்காக வாதாட, போராட, தலைவர்கள் தேவைன்னு உணர்ந்தேன். முதல் கட்டமா, ஆர்.எஸ்.எஸ்ஸிடம் கேட்டு, 17 பழைய பொறுப்பாளர்களுக்குக் கடிதம் போட்டேன். அதுல, ஏழு பேரு திருநெல்வேலியில நடந்த மாநிலக் கூட்டத்துக்கு வந்திருந்தாங்க. அதுல வந்தவங்க ஐந்து பேர் மாநில அளவிலயும், ரெண்டு பேர் மாவட்ட அளவிலும் பொறுப்பேத்துக்கறதா சொன்னாங்க. இன்னும் சிலரையும் சேர்த்து 10 பேர் கொண்ட மாநிலச் செயற்குழு அமைத்தோம்.
இந்த 25 வருஷத்துல
தமிழகத்தில் பாரதிய
கிசான் சங்கம்
சார்பில் என்னென்ன
பணிகள் செய்திருக்கிறீர்கள்?
நிறைய செய்திருக்கோம். எல்லா மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தியிருக்கோம். தென்னை விவசாயிகள், மல்லி விவசாயிகள், கரும்பு விவசாயிகள், நெல் விவசாயிகள்னு எல்லாருக்காகவும் குரல் கொடுத்திருக்கோம். மதுரை மாவட்டத்துல முல்லைப் பெரியாறு தொடர்பான கருத்தரங்கம், திருநெல்வேலி, திருச்சி, மதுரைன்னு எல்லா இடங்களிலும் நதிநீர் தொடர்பான கருத்தரங்குகள், இயற்கை விவசாயம் தொடர்பான முகாம்னு நிறைய நடத்தியிருக்கோம். இவ்வளவு டன் வறட்டிகள் கொண்டு யாகம் நடத்தினா, இத்தனை ஆக்ஸிஜன் பெருகி, மழை வரும்னு விஞ்ஞானபூர்வமான உண்மை. காவிரிக்கரையில மழை வேண்டி ரெண்டு முறை யாகம் நடத்தியிருக்கோம். ரெண்டு முறையும் நல்ல மழை. எல்லா ஊர்களிலும் கோமாதா பூஜையும் நடத்தியிருக்கோம். பசு சார்ந்த பொருளால நிறைய நன்மை இருக்கு. அதேபோல நாட்டுமாடு விவசாயத்துக்கு மட்டுமல்ல, பல வகைகளில் உதவிகரமா இருக்கு.
அதேபோல, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்கணும்ங்கறதுதான் கிசான் சங்கத்தோட முக்கியமான கோரிக்கை. விவசாயிகளிடம் உற்பத்தி விலையை விட குறைவா வாங்கி அரசாங்கமே ஏமாத்துது. நகரங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச சந்தை விலை நிர்ணயிக்கப்படுது. ஆனா, விவசாயிகளுக்கு அவங்களோட உற்பத்தி செலவு கூட கிடைக்க மாட்டேங்குது. பல இடங்களில் கடன் வாங்கிதான் விவசாயிகள் பயிரிடறாங்க. உற்பத்தி விலையே கிடைக்கலேன்னா கடன் தள்ளுபடி கேட்கறாங்க. அப்படி கேட்கறது நியாயமில்லதான். ஆனா, வேற வழியில்லையே! கடன் தள்ளுபடி தற்காலிகத் தீர்வுதான். நிரந்தரத் தீர்வு லாபகரமான விலைதான்.
உலகமயமாக்கலின்
தாக்கம் விவசாயத்தில்
இருக்கிறதா?
நிச்சயமா. விவசாயிகளைத் தந்திரமா வியாபாரத்துக்குள்ள தள்ளுவதுதான் உலகமயமாக்கல். விவசாயிகளிடம் அதிக விளைச்சலை தரக்கூடிய விதைகள்ன்னு சொல்லி, மரபணு மாற்ற விதைகளை விக்கறான். அந்த விதைகளால, மனித இன செயல்பாடுகளே மாறக்கூடிய அபாயங்கள் இருக்கு. அதோட மண்ணு விஷமாகி, மண்ணுல விளையுற பயிர்கள் விஷமாகி, அதனால உணவுப் பொருட்கள் பால் வகைகள் விஷமாகி, அதை சாப்பிடற மக்கள் விஷமாகி, நாடே ஆஸ்பத்திரியா மாறிக்கொண்டிருக்கு. அப்புறம், நம்ம நாட்டுல ஏராளமான மருந்துகளையும் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கு. நம்ம நாட்டுல என்ன விளையணும்னு வெளிநாட்டு நிறுவனங்கள் முடிவு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படறோம். பன்னாட்டு நிறுவனங்கள் கூட சாதாரண விவசாயிகள் போட்டியிட முடியுமா? இந்த மோசடிதான் உலகமயமாக்கல்.
வாஜ்பாய்
ஆட்சிக்காலத்தில் விவசாயிகளைத்
திரட்டி கிசான்
சங்கம் சார்பில்
தந்தோபந்த் டெங்கடிஜி
டெல்லியில் ஆர்ப்பாட்டம்
நடத்தினாரே?
எதிர்க்கட்சியா இருக்கும்போது பேசறது சுலபமா இருக்கு. ஆனா, ஆட்சிக்கு வந்தா எதிர்க்கட்சிகள், எதிரிக்கட்சிகள், பன்னாட்டு நிறுவனங்கள் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டியிருக்கு. பா... ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி கிசான் சங்கத்தின் கோரிக்கையானவிவசாயிகளுக்கு லாபகரமான விலையை வாஜ்பாய் கொள்கையளவில் ஒத்துக்கொண்டார். இந்த நாட்டுல 80 சதவீத மக்கள் கிராமத்துலதான் வாழறாங்க. விவசாயம்தான் அவங்களோட ஆதாரம். விவசாயிகள் நல்லா இருந்தாதான் கோயில் பூசாரி முதல் எல்லா வியாபாரங்களும் பிழைக்கும். கிராம பொருளாதாரமே விவசாயிகளைதான் நம்பியிருக்கு. விவசாயிகள் நலிஞ்சு போனா, நாடே நலிஞ்சு போகும். இது வாஜ்பாய்க்கு புரிஞ்சது. முதல்ல, வருஷத்துக்கு ஒண்ணு நடைமுறைப்படுத்தறதா சொன்னார். அதை செய்யறதுக்குள்ள அவரோட ஆட்சி கவுந்து போச்சி. விவசாயிகளோட நிலைமையும் இன்னும் மாறலை. அவர், நதிநீர் இணைப்புத் திட்டங்கள்போல சிலவற்றைச் செய்தார். ஆனா, அது போதுமானதா இல்லை.
மன்மோகன்
சிங் தலைமையிலான
காங்கிரஸ் அரசாங்கம்
பத்தி?
அது வெளிநாட்டு அரசாங்கம் போலதான் இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அமெரிக்காவுக்கும் ஆதரவான அரசாங்கமாத்தான் செயல்பட்டார். அவர் நம்ம நாட்டு ஆளா இருந்தாலும், அமெரிக்க ஆள்போலதான் இருந்தார். அதனால அவர் ஆட்சியில விவசாயிகளுக்கு ஆதரவான ஒரேயொரு திட்டத்தைக்கூட சொல்ல முடியல.
அவருடைய ஆட்சியில்
விவசாயிகள் பட்டினிச்
சாவு அடைந்ததாக
பிரசாரம் செய்யப்பட்டதே?
வேற வழி? கடன் வாங்கி விவசாயம் பண்ணாங்க; உற்பத்தி விலையை விட குறைவான விலை; விவசாயத்துக்கு எதிரான அப்போதைய அரசின் நடவடிக்கைகள். இதனால, விவசாயிகள் தற்கொலை செய்யப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
மோடி ஆட்சியில்
விவசாயிகளுக்கு என்ன
செய்துள்ளார்?
மோடி நல்ல மனுஷன். விவசாயிகள் முன்னேறினாதான் நாடு முன்னேறும்னு உணர்ந்துருக்கார். கவலைப்படறார். இந்த ஆட்சியில்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விவசாயத் திட்டங்கள் வந்துருக்கு. நீர் மேலாண்மை தொடர்பான மோடி அரசின் திட்டம் எதிர்காலத்தில்தான் பலனளிக்கும். ஆனா, இப்ப இருக்கற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லைனுதான் சொல்லணும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடணும்னு கேட்டோம்; அதை பத்தி எதுவும் சொல்லலை. ஆனா, கிசான் சங்கத்தோட நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த வருஷ பட்ஜெட்டுலஃபேமிலி லேபருக்கும்சேர்த்து விவசாயிகளுக்கு விலை நிர்ணயிக்கப்படும்னு சொல்லியிருக்கார். விவசாயிகள் கடன் வாங்கிப் பயிரிடறது மட்டுமல்ல; அவங்க குடும்பமே வேலை செய்யுது. அதை புரிஞ்சுதான் ஃபேமிலி லேபர் பத்தி பேசியிருக்காரு. அதேபோல, விவசாயிகளுக்கு லாபகரமான விலை குறித்து பரிசீலிக்க ஒரு குழு அமைப்போம்னு சொல்லியிருக்கார். ஆனா, அது பத்தி உத்திரவாதம் எதுவும் தரலை. நாலு வருஷத்துக்கு முன்னாடி, உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு விலை நிர்ணயிப்போம்னு சொல்லியிருந்தார்.
மோடியை விவசாயிகளுக்கு
எதிரானவரா சித்திரிக்கிறார்களே?
மோடிக்கு நம்ம நாட்டுல மட்டுமல்ல, உலக அரங்கிலும் பெயர் கிடைச்சிருக்கு. அதனால, எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சியாவே மாறிட்டாங்க. அரசியல் லாபத்துக்காக விவசாயிகளைப் பயன்படுத்தறாங்க. ஆனா, இந்தப் போராட்டங்களால விவசாயிகளுக்கு எதுவும் நன்மை நடந்ததா தெரியலை. விவசாயிகளோட கடன்களைத் தள்ளுபடி செய்யணும்னு போராடுற எதிர்க்கட்சிகள், ஏன் லாபகரமான விலை வேண்டும்னு போராடுவதில்லை.
அது மட்டுமல்ல, இயற்கையை சுரண்டுறாங்க; காடு, வனங்களை சுரண்டுறாங்க; சட்டவிரோதமா மணலை அள்ளறாங்க. இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் கண்டிக்கறது இல்ல. எதிர்த்துப் போராட்டம் நடத்தறது இல்ல. ஆனா, விவசாயிகளை மட்டும் தங்களோட அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்திக்க நினைக்கறாங்க.
தமிழகத்தில்
இப்போது கிசான்
சங்க வேலைகள்
எப்படியிருக்கிறது?
தமிழகத்துல, அரசியல் கட்சிகள் மாதிரியே விவசாயி சங்கங்களும் ஆயிட்டாங்க. அரசியல் தலைவர்கள் மாதிரியே இருப்பைக் காட்ட போராட்டம் நடத்தறாங்க. இதுக்கு மத்தியில பாரதிய கிசான் சங்கம் சந்தேகமே இல்லாம வளர்ந்துட்டு வருது. கிராமந்தோறும் விவசாயத் தலைவர்களை உருவாக்குவது, இயற்கை விவசாயத்தைப் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நாட்டு மாடுகள் வளர்ப்பு, கோ பூஜைகள் நடத்துவது, விஷமில்லா உணவுப் பொருட்களை வழங்குவது, நீர் மேலாண்மை செய்வது போன்ற பயனுள்ள விஷயங்கள் செய்துட்டுதான் இருக்கோம்.
எதிர்காலத்
திட்டங்கள் ஏதாவது
வைத்திருக்கிறீர்களா?
நீர் மேலாண்மையை மேம்படுத்தணும். தமிழகத்துல ஆண்டுதோறும் 3,000 டி.எம்.சி. அளவுக்கு மழை பெய்யுது. அது மக்களுக்கு பயன்படாம வீணா கடல்ல கலக்குது. அதை மேலாண்மை செய்து, விவசாயத்துக்குப் பயன்படுத்தணும். தேவைக்கு மேற்கொண்டு அண்டை மாநிலங்களைக் கேட்கலாம். தர மறுத்தா சட்டபூர்வமாகவும் வாங்கலாம். ஆனால், அது மட்டுமே போதுமானதல்ல. இன்னைக்கு மக்கள்தொகை அதிகமாயிருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி, தங்கள் மாநிலத்துல பாயுற நதியை தாங்களே பயன்படுத்திக்கணும்னு அண்டை மாநிலங்களும் நினைக்குது. நாமதான் விழிச்சுக்கணும்.
பாரதிய கிசான்
சங்கம் சார்பில்
விவசாயிகளுக்கு கூட்டுறவு
வங்கி தொடங்கப்
போவதாக கூறப்படுகிறதே?
ஆமாம். நபார்டு வங்கி சார்பிலே ஏராளமான விவசாயத் திட்டங்கள் அறிமுகமாயிருக்கு. மற்றொரு பக்கம், லாபகரமான விலையை அரசாங்கம் மட்டுமே நிர்ணயித்துவிட முடியாது. அரிசி, தானியம், காய்கறிகளோட விலைகள் மாவட்டத்துக்கு மாவட்டம் கூட மாறுபடலாம். அதனால, விவசாயிகள் மத்தியில் கூட்டுறவு இருக்கணும்; அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துக்கணும்; விளையும் பொருட்களை தங்களுக்குள்ள லாபகரமான விலையில் பகிர்ந்து கொள்ளணும்ங்கற நோக்கத்தோட தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கியைத் தொடங்கும் திட்டமிருக்கு. இது சம்பந்தமா கலந்து பேசிட்டு இருக்கோம்.



(புகைப்படங்கள்பிரசன்னா)

Posted on Leave a comment

நேர்காணல்: இராம. கோபாலன் ஜி | சந்திப்பு: அபாகி

வைரமுத்து – ஆண்டாள் விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் எழுச்சியடைந்து வீதிக்கு வந்தபோது, அவரது வாழ்நாள் லட்சியம் நிறைவேறத் துவங்கியதாக மகிழ்ந்திருப்பார். ஹிந்து விழிப்புணர்வுப் பணிகளுக்காக அவர் சுற்றாத கிராமங்கள் இல்லை. வாங்காத ஏச்சுகளும் இல்லை. அவரது தியாகத்தை அவர் தலையில் முஸ்லிம் பயங்கரவாதி வெட்டிய காயங்களே சொல்லிவிடும். அவர்தான் இராம.கோபாலன்ஜி. சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் சந்தித்தோம். இந்த வயதிலும் ஹிந்து சமூகத்துக்காகவே சிந்திக்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல்நலனையும் விசாரிக்கிறார். நாம் பதிலுக்கு நலம் விசாரித்தால், “எனக்கு 92 வயதுதான் ஆகிறது” என்று கூறிவிட்டுச் சிரிக்கிறார். ‘வலம்’ இதழுக்காகப் பேட்டி கேட்டதுக்கு “இப்போ என்ன அவசியம்?” என்று கேட்டுக்கொண்டே கேள்விகளுக்குத் தயாரானார்.







ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு எப்போது வந்தீர்கள்? உங்களுக்கு ஊக்கமளித்த சங்க பிரசாரகர் யார்?

எனது 17ஆவது வயதில் சங்கத்துக்கு வந்தேன். என்னுடன் இன்ஜினியரிங் படித்த முத்துராமன் என்ற பையன் கிரிக்கெட் கத்து தர்றேன்னு கூப்பிட்டான். எல்லோருக்கும் இருக்கும் கிரிக்கெட் ஆர்வம் எனக்கும் அப்போது இருந்தது. அப்படித்தான் ஷாகா வந்தேன். பிறகு, வாழ்க்கையே சங்கமானது. என்னை பிரசாரக்காக்கியது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழுநேர ஊழியர் சிவராம்ஜி ஜோக்லேக்கர்.


தேசப் பிரிவினை தமிழகத்தில் எதிரொலித்ததா?

கொஞ்சம் இருந்தது. பிரிவினையால் அகதிகளாக்கப்பட்ட ஹிந்துக்களின் முகாம் ஆவடியில் இருந்தது. அங்கு சேவை செய்ய சங்கத்தில் இருந்து பல பேர் சென்றோம். அதில் நானும் ஒருவன். அந்த சோகக் கதையைக் கேட்டதும் வாழ்க்கை வெறுத்துவிட்டது. ‘என்ன கல்யாணம்…? என்ன குழந்தை குட்டி…?’ என்று சங்கத்தில் பிரசாரக்காகி விட்டேன்.

ஆரம்ப காலங்களில் சங்கத்தில் என்னென்ன பொறுப்புகளில் இருந்தீர்கள்?

முதலில் பிரசாரக்காக வந்தேன். பிறகு விபாக் பிரசாரக் (மூன்று மாவட்ட பொறுப்பாளர்), சக பிராந்த பிரசாரக் (மாநில இணை அமைப்பாளர்), பிராந்த பிரசாரக். இப்படிப் பல பொறுப்புகளில் இருந்தேன்.

ஸ்ரீகுருஜி கோல்வல்கர் தமிழகத்துக்கு வந்தபோதெல்லாம் நீங்கள்தான் மொழிபெயர்ப்பு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றி?

அவரது வாழ்க்கையே நமக்கு வழிகாட்டி. அவ்வளவுதான்.

சங்க பிராந்த பிரசாரக்காக இருந்தபோது பல வேலைகளுக்கு உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள். முக்கியமாக, ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு…?

கோயில் அழிந்துகொண்டிருந்தது. அதை கவனிக்க யாரும் இல்லை. அதைச் சீரமைக்கத்தான் தொடங்கினோம்.

நாத்திகப் பிரசாரம் அதிகமாக இருந்த காலகட்டம் அது. அப்போதைய சூழல் எப்படி இருந்தது?

சேலத்தில் ராமருக்குச் செருப்பு மாலை ஊர்வலம் நடப்பதற்கு முன்னால், என்னுடன் 50 பேர் இருந்தார்கள். ஊர்வலம் முடிந்ததும் அவர்கள் பயந்து ஒளிந்து கொண்டார்கள். (சிரிக்கிறார்.) என்ன ஹிந்து சமுதாயம் இது? அது என்னை ரொம்ப பாதித்தது. அதேமாதிரி, கன்னியாகுமரியை கன்னிமேரி மாவட்டமா மாத்த திட்டம் போட்டாங்க. மீனாட்சிபுரத்துக்கு வேற பெயர் வைக்க முஸ்லிம்கள் முயற்சி பண்ணாங்க.

தேசிய சிந்தனைக் கழகம் என்ற பெயரில் அமைப்பு நடத்தினீர்களே?

தமிழ்வாணன், தீபம் நா.பார்த்தசாரதி இவங்கல்லாம் வந்தார்கள். தி.க. நாத்திக மாநாடு போட்டு ஹிந்துக்களைப் பத்தி ரொம்பக் கேவலமா பேசினாங்க, எழுதினாங்க. அதை நானும், தீபம் நா.பார்த்தசாரதியும் சேர்ந்து எதிர்த்தோம். ‘இது பைத்தியக்காரத்தனம், அவங்க முரடர்கள். எதிர்த்தா அடிச்சி காயப்படுத்திடுவாங்க’ன்னு எல்லோரும் சொன்னாங்க. ‘மிரட்டலுக்குத் தயாரா இருக்கேன்’ன்னு நான் சொன்னேன். (சிரிக்கிறார்)

நாத்திக பிரசாரத்துக்கு எதிரா பக்தி இயக்கங்கள் இல்லையா?

பக்தி இயக்கங்கள் இருந்தன. ஆனா, ஹிந்து வேற, பக்தி வேறன்னு நினைச்சாங்க. ஹிந்துக்களுக்கு அந்த பயத்தை போக்கணுங்கறது என்னோட எண்ணம்.

நெருக்கடி (எமர்ஜன்ஸி) காலத்தில் ஆதரவு எப்படி இருந்தது?

ஆதரவைத் திரட்ட வேண்டியிருந்தது. ஆனா ஆதரவைத் திரட்டினா, நெருப்பு மாதிரி பரவியது. கொஞ்சம் கொஞ்சமா நிறைய பேர் வந்தாங்க.

எந்தக் கட்டத்தில் இந்து முன்னணி தொடங்கினீர்கள்? எடுத்த முதல் வேலை எது?

ஹிந்துக்களைக் காப்பாத்தறதுதான் முதல் வேலை. அப்போ, கரூரில் சங்கத்தின் கூட்டம் நடந்தது. யாதவராவ் ஜோஷிஜி (ஆர்.எஸ்.எஸ். அகில பாரத இணைப் பொதுச் செயலாளராக இருந்தவர்), சூரியநாராயண ராவ் ஜி எல்லாம் வந்திருந்தாங்க. என்னிடம் இந்து முன்னணி ஆரம்பிக்கச் சொன்னாங்க. என்னிடம் கொஞ்சம் பேச்சாற்றல் இருந்ததா அவங்க நினைச்சாங்க. அப்படித்தான் ஆரம்பிச்சோம்.

ஆரம்பக்கட்ட வேலைகள் எப்படி இருந்தன?

ஆரம்பத்துல பொதுக்கூட்டங்கள் போடலை. ஐந்து ஐந்து பேரா தமிழ்நாடு முழுக்க 78 இடங்களில் பேசத் தொடங்னோம். சும்மா அரட்டை, அவ்வளவுதான். கால இடைவெளியெல்லாம் இல்லை. எப்போ தேவையோ அப்போதெல்லாம் பேசினோம். அப்படியே இயக்கமும் வளர்ந்தது.

உங்கள் தலையில் வெட்டுப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

டாக்டர் சொன்னாங்க. வலது கை கால் போயிடும், பேச்சு போயிடும், ஞாபகசக்தி இருக்காதுன்னு சொன்னாங்க. ஆனா, பிழைச்சு வந்தேன். (இவங்கதான் காரணம் என்று தன் அறையில் இருந்த விநாயகர், ஹனுமான் படங்களைக் காண்பிக்கிறார்.)

விநாயகர் சதுர்த்தியை எப்போது தொடங்கினீர்கள்?

புதுக்கோட்டையில ஏழெட்டு பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சும்மா அரட்டை. காளியாத்தாவை கும்பிடுறவங்க மாரியாத்தாவை கும்பிடமாட்டாங்க. ஜாதி ரீதியா வேறுபாடு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்போ எல்லோருக்கும் பொதுவான தெய்வம் எதுன்னு பேசினோம். பிள்ளையார்தான் எல்லோரும் கும்பிடறாங்க. அப்படித்தான் விநாயகர் சதுர்த்தி தொடங்கினோம்.

முதல் விநாயகர் புதுக்கோட்டையிலா…?

இல்ல, புதுக்கோட்டையில விவாதித்தோம். முதல் விநாயகர் சென்னையில், திருவல்லிக்கேணியில்தான். அப்போ ஊர்வலம் போகக்கூடாதுன்னு 200 போலீஸ்காரங்க மெஷின் கன்னோட நின்னாங்க. நான் கேட்டேன். “ஊர்வலம் போகக்கூடாதுன்னு 200 பேர் நிக்கறீங்க. ஊர்வலத்துக்காக ஒருத்தன் நிக்க மாட்டானா? நிச்சயம் நிப்பாங்க”ன்னேன்.


இந்து முன்னணி சார்பில் பல போராட்டங்கள் நடத்தினீர்கள். முக்கியமா என்னென்ன போராட்டங்கள்?

நானே லிஸ்ட் எடுக்கல. நிறைய போராட்டங்கள் நடத்தியிருக்கோம். லிஸ்ட் அனுப்பச் சொல்லி பல பேர் கிட்ட கேட்டிருக்கேன். லிஸ்ட் கிடைச்சதும் சொல்லறேன். இப்போ நினைவில் இல்லை.

ஹிந்து வாக்கு வங்கி என்று முதலில் பேசியவர் நீங்கள்?

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களிடம் ஓட்டு இருப்பதால்தான் அரசியல்வாதிகள் அவங்களோட கால்ல விழறாங்க. அதனால ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்கினாதான் ஹிந்துக்களுக்கு விடிவுகாலம் கிடைக்கும்னு நினைத்தோம். கன்னியாகுமரி மாவட்டத்துல நான், தூணுலிங்க நாடார் எல்லாம் பிரசாரம் பண்ணி பாலசந்தர் என்பவரை முதன்முதலா ஜெயிக்க வச்சோம். இந்து முன்னணி வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் தாணுலிங்க நாடார்.


இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான இயக்கத்தை வளர்த்திருக்கிறீர்கள்?

ஆரம்பத்தில் பெரிய பெரிய வேலைகளைச் செய்யலே. சின்ன சின்ன பணிகள் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாத்தான் பிரம்மாண்டமான இயக்கமானோம்.

தெய்வத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை நடத்துகிறீர்களே?

ஆமாம். தெய்வம் வேற, தமிழ் வேற இல்லை. தமிழில்லாத பக்தி இலக்கியங்கள் கிடையாது. ஹிந்து இல்லாத தெய்வங்கள் இல்லை என்பதே நோக்கம்.

தீண்டாமையை எதிர்த்து இந்து முன்னணி போராடிய அனுபவங்கள் இருக்கா?

நிறைய இருக்கு. எங்கேயாவது ஜாதிச் சண்டைகள் நடந்தா அங்க போய், சம்பந்தப்பட்ட ரெண்டு ஜாதிகள் கிட்டயும் பேசுவோம். முதல்ல ரெண்டு தரப்பிலயும் தனித்தனியா பேசுவோம். அப்புறம் சேர்த்து வச்சி பேசுவோம். நாம் எல்லாம் ஒண்ணுதான்னு பேசுவோம்.

ஆண்டாள் பிரச்சினையில் ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைந்து வந்ததா?

ஆண்டாள் பிரச்சினை பத்தி ஒரு கூட்டம் நடக்குது, வாங்கன்னு ஒருத்தர் கூப்பிட்டார். நானும் கலந்துகொண்டேன். நிறைய பேச்சாளர்கள் இருந்தாங்க. ஹிந்து சமுதாயத்துல பேச்சாளர்களுக்கு குறைச்சல் இல்ல. ஒருங்கிணையணும். அப்போ இவங்கதான் என் கண் முன்னாடி வர்றாங்க. (பிள்ளையார், ஹனுமான் படங்களை கை காண்பிக்கிறார்.)


திராவிட கட்சிகள் வீழ்ந்து வரும் நேரத்தில், தேசிய சக்திகளுக்கும் எதிர்ப்புகள் இருக்கிறதே?

இல்லை. எல்லோரிடமும் ஹிந்து உணர்வு இருக்கு. அப்படித்தான் தனித்தனியா பல பேரிடம் பேசும்போது எனக்குத் தெரிகிறது.


ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க. வளரவில்லையே?

தினம் ஒரு பேட்டி கொடுப்பதால் பயனில்லை. குழுவாக இணைந்து களப்பணி செய்யணும். ஒருத்தர் என்கிட்ட வந்து, ‘ஆயிரம் பேர் இருக்கற மீட்டிங் ஏற்பாடு செய்தா அதுல பேசி அவங்களை நம்ம பக்கம் கொண்டு வர்றேன்’ன்னார். ஐந்து பேர் இருந்தா நான் பேசறேன்னு சொன்னேன். சிறுக சிறுகதான் கூட்டம் வரும். நான் தமிழ்நாடு முழுக்க 25 வருஷம் சுத்தினேன். அப்போது சாப்பாடு கிடைக்காது. மதியம் ஓய்வெடுக்க இடம் இருக்காது. ரெண்டு சோடா பாட்டில் வாங்கி ஒண்ணை கைகால் கழுவறதுக்கும் இன்னொன்னை குடிக்கறதுக்கும் வச்சிப்பேன். இதை எதற்கு சொல்றேன்னா, உழைச்சா பலன் உண்டு. ஒரே நாள்ல வளர்ந்துலாம்னு நினைக்கறாங்க. நரேந்திர மோடியா மாறணும்னு நினைக்கறாங்க. மோடியும் உழைச்சதாலதான் முன்னுக்கு வந்தார். சும்மா வரலை.

ஊடகம், இலக்கியத் துறையில் ஹிந்துக்களுக்கு எதிரான சூழல் இருக்கிறதே?

திராவிட மாயை போல இதுவும் ஒரு மாயைதான். மாயை என்பது ரொம்ப நாளைக்கு நிலைக்காது. இது எனது அனுபவம்.


உங்கள் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியுள்ளதா?

இப்போதான் நிறைவேற ஆரம்பிச்சிருக்கு. ஆரம்ப காலத்துல இருந்ததை விட வேலைகள் இப்போ அதிகமாயிருக்கு. பாஜக ஒப்புக்கறதோ இல்லையோ, என் கனவு ஹிந்து சாம்ராஜ்யம்தான். அதனால்தான் என் அறையில வீர சிவாஜி படத்தையும் மாட்டியிருக்கேன்.