Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 46 | சுப்பு

ஜதி பல்லக்கு

பெரியவாளுடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ஒட்டி, ரா.கணபதி அவர்களுக்கும் சிறப்புச் செய்யவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அவர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இருந்தாலும் அவரைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய சிறு புத்தகத்தை வெளியிட முடிவு செய்தோம். அதில் போடுவதற்குத் தேடியபோது, அவருடைய புகைப்படங்கள் எங்குமே இல்லை. எப்படியோ அவருடைய உதவியாளரிடம் பேசி, ரா.கணபதி கவனிக்காத போது, புகைப்படம் எடுக்கப்பட்டது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 46 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 45 | சுப்பு

காஞ்சி பெரியவா

பெரியவா என்று அறியப்படுகிற காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களை நான் சந்தித்ததில்லை, ஒரே ஒருமுறை பார்த்திருக்கிறேன், கனவில். எனக்குத் தெரிந்து இந்த ஜென்மாவில் என்னுள் சில அடையாளங்களை அகற்றியிருக்கிறார். சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. அவரைப் படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், அவர் சொன்னதையும் அவரைப் பற்றி அடுத்தவர் சொன்னதையும். Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 45 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 44 | சுப்பு

பக்தராஜ் மகராஜ்

வருடத்திற்கு இரண்டு முறையாவது விசாகப்பட்டினத்திற்குப் போய் ரமணனைச் சந்திப்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. ஒருமுறை புறப்படும் போது பக்தராஜ் மகராஜ் என்ற மகான் விசாகபட்டினத்திற்கு வரப்போவதாகவும், மூன்று நாட்கள் பிரபாத் குமார் வீட்டில் தங்கப் போகிறார் என்றும் செய்தி வந்தது. அவரோடு இருக்க வேண்டுமென்று ரமணன், அனு, இரண்டு குழந்தைகள் எல்லோரும் அந்த மூன்று நாட்களும் பிரபாத் குமார் வீட்டிலேயே தங்குவதாக முடிவெடுத்தார்கள். என்னையும் சேர்த்துக்கொண்டார்கள். பெங்களூரில் இருந்து ஆனந்த் வந்து சேர்ந்துகொண்டான். Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 44 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 43 | சுப்பு

ராமன் மாமா

ரமணனின் நண்பரான விசாகப்பட்டினம் பிரபாத் குமாரைப் பற்றிச் சொன்னேன். இன்னொருவர் பெயர் பார்வதி குமார். பார்வதி குமார் World Teachers Trust என்ற ஆன்மிக அமைப்பின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு சென்னையில் தலைமையிடம் கொண்டிருக்கும் பிரம்ம ஞான சபையின் சித்தாந்த வகையில் ஏற்படுத்தப்பட்டது. இதை எக்கிராலா கிருஷ்ணமாச்சாரி என்பவர் நிறுவி, அவருக்குப் பிறகு தலைமைப் பொறுப்பு பார்வதி குமாரிடம் வந்தது. இந்த அமைப்பிற்கு ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் கிளைகள் உண்டு. வருடா வருடம் பார்வதி குமார் சுற்றுப்பயணமாக அங்கே போகவும், அவர்கள் வருட இறுதியில் இங்கே வருவதுமாக ஒரு ஏற்பாடு. ரமணன் தயவால் எனக்கு இந்த அமைப்பின் புத்தகங்களை அச்சடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அது லாபகரமாகவும் இருந்தது. முதலில் ஆசான் சி.வி.வி. என்கிற புத்தகம். கும்பகோணத்தில் வாழ்ந்த சி.வி.விதான் இவர்களுடைய குரு. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எக்கிராலா கிருஷ்ணமாச்சாரியார் எழுதி ஆங்கிலப் புத்தகம் ஏற்கெனவே வெளியாகி, அதைத் தமிழில் ரமணன் மொழிபெயர்க்க, அச்சிடும் பணி எனக்கு. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 43 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 42 | சுப்பு

புட்டபர்த்தி

தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இந்தியாவுக்குத் திரும்பினார் என்பதையும் அதன் விளைவாக என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பத்தையும் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 42 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 41 – சுப்பு

Image credit: https://chithirapoomalai.wordpress.com/

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

டாக்டரைச் சந்தித்துப் பழகி ஏழு வருடங்கள் ஆன நிலையில் அவருடைய அமைப்பில் சில விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டன. லௌகீக உலகத்தில் நாம் சந்திக்கும் குணக்கேடுகள் அங்கேயும் தலைகாட்டின. புதிதாக ஒரு பொன்னுலகத்தை உருவாக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு போய்க் கொண்டிருந்த எங்களுக்கு, குறிப்பாக எனக்கும் ரமணனுக்கும் இது சகிக்கவில்லை. டாக்டரிடம் முறையிட்டோம் பலனில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 41 – சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 40 – சுப்பு

பெரியார் ஈவெரா

இதுவரை நான் அறிந்திராத ஒரு உலகத்திற்குள் எட்டிப்பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது-திரையுலகம். பத்மா வந்தது நல்லநேரம் என்று சொல்லலாம்.

நண்பன் ரவியுடைய தந்தை கல்யாணராமன் திரையுலக தயாரிப்பாளர் என்பதைக் குறித்துக்கொள்ளவும். நாங்கள் அவரை மாமா என்று அழைப்போம். எம்ஜிஆர், சிவாஜி போன்ற பிரபலங்களை வைத்துப் படம் எடுத்திருக்கிறார். இந்தமுறை நடிகர் பிரபு-அம்பிகா ஜோடியில் ‘ராஜா நீ வாழ்க’ என்ற படம் எடுத்து கையைச் சுட்டுக் கொண்டுவிட்டார். திரையுலகப் பிரச்சினைகளுக்கு திரையுலகத்திலேயே தீர்வுகள் உண்டு. அங்கே விட்ட பணத்தை அங்கேயே எடுக்க வேண்டும். எனவே அடுத்த படத்திற்குப் பூஜை போட்டார். இது கொஞ்சம் பெரிய பட்ஜெட் என்பதால் பணத்தைப் பாதுகாப்பதற்கு அவருக்கு நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டது. நான் நியமிக்கப்பட்டேன். காபி பவுடர் விற்கும் வேலை தொடர்ந்தாலும் சினிமா கம்பெனி கணக்கு பார்க்கும் வேலை மாலை நேரத்திலேயே இருக்கும் என்பதால் எனக்கு இரட்டைக் குதிரை சவாரி. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 40 – சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 39 | சுப்பு

39

திருமணம்

திருவண்ணாமலையில் கோயிலுக்குப் பின்னால் மலை. மலையின் சில நேரப் படிக்கட்டுகளில் ஏறினால் ஆலமரத்துக் குகை ஆசிரமம். சின்னசாமி என்பவர் அங்கே ஒரு ஆல மரத்தை நட்டு, அது வளர்ந்து பெரிதாகி அங்கிருக்கும் குகைக்கு நிழல் கொடுப்பதால் அந்தப் பெயர். மேற்படி குகையில் பகவான் ரமணர் இருந்திருக்கிறார்; விசிறி சாமியாரின் குரு சுவாமி ராமதாசுக்கு ராம தரிசனம் கிடைத்திருக்கிறது. இப்போதைக்கு ஒரு பெரியவர் அங்கே வாசம். பல ஆண்டுகளாக அங்கே தவம் செய்யும் இந்தப் பெரியவரின் பெயர் தெரியவில்லை. பெரியசாமி என்று அழைக்கிறார்கள். நாங்கள் தாத்தா என்று கூப்பிடுவோம். Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 39 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 38 | சுப்பு

திருவண்ணாமலை

உயிர்களின் இயல்பையும் உலக நடப்பையும் வழிநடத்துவது மகான்கள்தான் என்பது, டாக்டரின் தீர்மானம். மகான்களோடு தொடர்புகொள்ளவேண்டும் என்றும், அவர்களுக்கு இடையே காலப் பிரிவினையோ தேசப் பிரிவினையோ கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார். இதைத் தவிர பலவகையான பயிற்சிகளில் நாங்கள் ஈடுபட்டோம். பரிட்சார்த்த முறையில் படிப்பும் உண்டு. மற்ற மதங்களின் நூல்களைப் படித்தபோது, டாக்டர் தடைசொல்லவில்லை. அவரளவில் ஹிந்துவாகவே இருந்தார். பஞ்சாங்கம் பார்க்காமல், எதையும் ஆரம்பிக்க மாட்டார். விரதங்களை வலியுறுத்துவார். மகான்களின் சமாதிக்கு முன்னுரிமை. யார் எந்த ஊருக்குப் போனாலும், அங்கிருக்கும் மகானின் இடத்தைக் குறிப்பிட்டுப் போகச் சொல்லுவார். ஆனால், கத்தோலிக்க மதத்தினர் வழிபடும் மேரி மாதா மீது அவருக்கு பக்தி இருந்தது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 38 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 37 | சுப்பு

சமையல்கட்டில் ஆண்கள்

பல வருடங்களாகத் தொடர்ந்து அரசியல்களத்தில் செயல்பட்டு வந்த எனக்கு டாக்டருடைய அரசியல் நிலைப்பாடுகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. ஆனால் பலமுறை முயன்று பார்த்தும் என்னால் அவரை வகைப்படுத்த முடியவில்லை. ‘சிறுவயதில் தனக்கு ‘கம்யூனிஸ்ட் கட்சி மீது ஈடுபாடு இருந்ததாக’ அவர் ஒரு முறை குறிப்பிட்டார். அதற்காக அவர் சொல்லிய காரணம் சுவாரசியமாக இருந்தது. ‘கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் அரிவாளும் சுத்தியலும். விளைகின்ற பொருட்களை அறுவடை செய்து அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இதற்குத் தடையாக இருப்பவரை சுத்தியலால் அடிக்கவேண்டும் என்பதாகத் தன்னுடைய புரிதல் இருந்தது’ என்று அவர் சொன்னார். இதையே நான் டாக்டருடைய அரசியல் கொள்கை என்று பரப்புரை செய்தபோது, ‘அது சின்ன வயசில் இருந்த புரிதல்’ என்று சொல்லி ஒதுக்கிவிட்டார். அவருடைய சமகாலத்தில் வெகுவாகப் பேசப்பட்ட அதிமுக – திமுக., எம்ஜிஆர் – கருணாநிதி மோதல் பற்றி அவர் எதுவும் பேசியதில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 37 | சுப்பு