Posted on Leave a comment

பிரிவினைத் துன்பங்கள் – நேர்காணல் | தமிழில்: ஜனனி ரமேஷ்

1971ல் நாட்டு விடுதலை இயக்கத்தின் போது ஒட்டுமொத்த இனப் படுகொலைகளுக்குத் தூண்டியது உள்பட்ட வன்முறைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை மற்றும் வழக்குகள் தொடர்பான வங்கதேசப் பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தில் அரசு வழக்கறிஞராக இருக்கிறார் தாஸ்குப்தா. இவர் நாட்டிலுள்ள சிறுபான்மையினரை ஒருங்கிணைக்கும் மனித உரிமை இயக்கமான இந்து–பௌத்த–கிறித்துவ ஒற்றுமை அமைப்பின் பொதுச் செயலராகவும் இருக்கிறார்.

1947 பிரிவினை குறித்து ஸ்க்ரோல்.இன் இதழுக்கு ராணா தாஸ்குப்தா அளித்த பேட்டி: Continue reading பிரிவினைத் துன்பங்கள் – நேர்காணல் | தமிழில்: ஜனனி ரமேஷ்

Posted on Leave a comment

ஸ்யாமா பிரசாத் முகர்ஜீயின் சத்தியாகிரகம் – ஜம்மு காஷ்மிர் விவகாரம் | அருண் ஆனந்த், தமிழில்: ஜனனி ரமேஷ்

(இந்திரப்பிரஸ்தா விஷ்வ சம்வாத் கேந்திரத்தின் சி.இ.ஓ அருண் ஆனந்த், ஆர்எஸ்எஸ் பற்றிய இரண்டு நூல்களை எழுதி உள்ளார். அவர் எழுதி ‘தி ப்ரிண்ட்’ இதழில் வெளியான இக்கட்டுரையின் தமிழாக்கம் இங்கே அவரது அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.) Continue reading ஸ்யாமா பிரசாத் முகர்ஜீயின் சத்தியாகிரகம் – ஜம்மு காஷ்மிர் விவகாரம் | அருண் ஆனந்த், தமிழில்: ஜனனி ரமேஷ்

Posted on Leave a comment

ஸ்டெர்லைட்: இந்தியாவும் தாமிரத்தின் புவி அரசியலும்

மூலம்  :  கௌதம்
தேசிராஜூ, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ், பெங்களூரு

தமிழில்:  ஜனனி ரமேஷ்

ஸ்டெர்லைட்
ஆலையில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடத்தப்பட்ட நீண்ட காலப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 2018ல் அரசும் நீதிமன்றமும் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட
ன. இதன் பிறகே இந்தியாவிலுள்ள பெரும்பான்மையோர் தாமிரம் பற்றிய செய்தியைப் பார்க்கத் தொடங்கினார்கள்.  

தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பொது சுகாதாரம் குறித்த அச்சம் ஆகியவை
வேதியல் துறையைப் போலவே பழமையானது.  அரசாங்கங்கள் மற்றும் நீதித் துறை அமைப்புகளுக்கு இடையே எப்போதுமே ஒரு நிச்சயமற்ற உறவுதான். தொழிற்துறையைப் பொருத்தவரையோ இந்த உறவு, வாழ்க்கைத் தரம் மற்றும் இலாப அளவு ஆகிய இரண்டுக்கும் இடையே, சாதக பாதகமின்றி நடுத்தரமாக எச்சரிக்கை உணர்வுடன் கத்திமேல் நடப்பது போலத்தான். இருப்பினும் இதற்கான தீர்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளில்
ஓரளவுக்குக் கண்டறியப்பட்டுள்ளன.  அதோடு, செர்னோபில், லவ் கனால், போபால் விஷ வாயுக் கசிவுபோல் மிகப் பெரிய பேரழிவுகள் தற்போதெல்லாம் நடைபெறுவதில்லை.  

ஸ்டெர்லைட் எப்படி வேறுபடுகிறது?  அது ஏன் மூடப்பட்டது? இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஏன் இன்னும் மூடியே இருக்கிறது? மாசு, தொழிற்சாலை மூடப்படுவது மற்றும் மீண்டும் திறக்க  இயலாதது ஆகியவற்றுக்கு யார் காரணம்? அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்களே காரணமா அல்லது வேறு யாரேனுமா?  இவைபோன்று இன்னும் பல கேள்விகள் உள்ளன.

அடிப்படை அறிவியலிலிருந்து புவி அரசியல் தொடங்குவதால் முதலில் வேதியலுக்குச் செல்வோம். 90க்கும் அதிகமான இயற்கைத் தனிமங்களில் தாமிரம் முதன்மையானதாகும்.  5000 ஆண்டுகளுக்கு  முன்பே மனிதனால் சுத்தமாகத் தனிமைப்படுத்தப்பட்ட இந்த உலோகம் ஏனைய தனிமங்களைப் போலவே வித்தியாசமானதாகும். வேதியலாளர்கள் சேர்மங்களை உருவாக்குவது போலத் தனிமங்களை உருவாக்க முடியாது. பூமியின் மேலடுக்கிலுள்ள தனிமமும், வளிமண்டலமும் மட்டுமே நமக்கு உள்ளன. ஆக்ஸிஜன், சிலிகான், இரும்பு ஆகியவை ஏராளமாக இருக்கின்றன.  தாமிரம் போன்றவை மிக அரிதாகக் கிடைக்கின்றன. அவையும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இயற்கையாக தாமிரமாகக் கிடைக்காத இந்த உலோகத்தின் தாது, சிலி, பெரு, அமெரிக்கா, இந்தோனீஷியா, ஜாம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும்  ஃபிலிபைன்ஸ் ஆகிய சில நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. அங்கும் இங்குமாகச் சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது என்பது சரிதானே? 

பிரச்சினையின் மையப் புள்ளியே இதுதான். அதிக அளவு மின் கடத்துத் திறன், அதிக வெப்பக் கடத்துத் திறன், அதிக வளை மற்றும் வடமாக நீளும் திறன், நடுத்தர விலை (வெள்ளியின் பண்புகள் தாமிரத்தைப் போலவே நல்லதுதான் என்றாலும் அதன் விலை பொதுவான பயன்பாட்டுக்குத் தடையாக உள்ளது) ஆகியவை தாமிரத்தின் சிறப்பியல்புகள். இந்தப் பண்புகள் காரணமாக அதிக அளவிலான மின் பகிர்மானத்துக்குத் தேவையான கம்பி வடங்கள் மற்றும் மின் முனைகள் தயாரிப்பில் தாமிரம் மிக அத்தியாவசியமான உலோகமாகிறது.  எளிதாகச் சொல்வதெனில் உலகளவில் தாமிரம் உடனடியாக எளிதாகக் கிடைக்காவிட்டால் இன்றைய நவீன வாழ்க்கை சாத்தியமில்லை.  

தாமிரத்தின்
முக்கிய தாதுப் பொருளான தாமிர பைரேட்டுகள் இந்தியாவில் அதிக அளவில் கிடைப்பதில்லை.
ராஜஸ்தானிலிருந்து ஜார்கண்ட் செல்லும் வழியில் கிடைக்கும் மிகக் குறைந்த அளவும் (உலகின்
மொத்த தாமிரத் தாதுவில் 2% மட்டுமே) தரம் குறைந்ததாகும்.  ஸ்டெர்லைட் போன்ற தாமிரம் பிரித்தெடுக்கும் நிறுவனங்கள்,
இந்தத் தாதுப் பொருளை மேற்கண்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, சுத்தமான உலோகத்தை
தூத்துக்குடியில் உற்பத்தி செய்கின்றன. இது மொத்தத் உள்நாட்டுத் தேவையில் சுமார்
35% ஆகும். மின்கலங்களில் பயன்படுத்தப்படும் எதிர்மின் முனைகள் (கேத்தோடுகள்) தயாரிப்புக்காகச்
சீனாவுக்குக் கணிசமான அளவில் தாமிர உலோகத்தை இந்தியா ஏற்றுமதி செய்தும் வந்தது. தாமிரத்தின்
இறக்குமதிகளைச் சீனா நம்பியிருக்க, அதை இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

ஒரு
நாட்டின் முக்கிய உலோகத்தை இழக்கச் செய்வது பண்டைய போர் முறையின் ஒர் அங்கமாகும். தங்கத்துக்கும்,
வெள்ளிக்கும் போரிட்டு சாம்ராஜ்ஜியங்கள் உருவாகி உள்ளன அல்லது சரிந்துள்ளன. அறிவியல்
வளரும் போது அத்துடன் இணைந்து தொழில்நுட்பமும் வளரவே, மற்ற தனிமங்களுக்கான நமது விருப்புகளும்
அதிகரிக்கத் தொடங்கின. உதாரணத்துக்கு பிளாட்டினம், பலோடியம், குரோமியம், நியோடைமியம்,
யுரேனியம், இண்டியம் போன்ற தனிமங்களும் இன்றைய அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவைப்படுகின்றன. 
 

மேற்கண்ட
தனிமங்களைக் கொண்ட நாடுகள் அவை இல்லாத நாடுகள் மீது தங்கள் அசாதாரணச் செல்வாக்கைப்
பயன்படுத்த முடியும்.  இதற்குக் காரணம், தனிமங்களை
உற்பத்தி செய்ய முடியாது, அவற்றைத் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கத்தான் முடியும்.  உதாரணத்துக்கு, தென் ஆப்பிரிக்க நிற வெறி அரசாங்கம்
நீண்ட காலம் நீடித்ததற்குக் காரணம், அமெரிக்கச் சந்தையின் மிக முக்கியப் பொருளான எஃகு
மீது பூசப்படும் குரோமியம் அதன் கைவசம் ஏராளமாக இருந்ததுதான். உயர் காந்தப் பாய்வு
அல்லது பெருக்குகளில் முக்கியப் பொருளாக விளங்கும் நியோடைமியம்
என்னும்
உலோகம் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத அளவுக்குச் சீனாவில் இன்றைக்குக்
குவிந்திருப்பதால் அதன் உலகச் சந்தை விலையை நினைத்தபடி சீனாவால் நிர்ணயிக்க முடியும்.  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்…   
 

இதனைக்
கருத்தில் கொண்டு தாமிரத் தேவைகள் தொடர்பான இந்தியாவின் இழப்பு காரணமாக எந்த நாடு அதிக
அளவில் பயனடையும் என்பதை ஆய்வு செய்வது முக்கியமாகும்.  இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தாமிரச் சுத்திகரிப்பு
ஆலைகள் உள்ளன. சில ஆலைகள் உள்ளூர்த் தாதுக்களைப் பயன்படுத்துகின்றன. சில ஆலைகள் தாதுக்களை
இறக்குமதி செய்கின்றன.  ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம்
பிரிவில் வருகிறது. மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் (தாமிர பைரேட் தாதுவின் சாம்பலாக்கல் மற்றும் உருக்கலின்
போது வெளியேறும் நச்சுப் பொருள் சல்ஃபர் டை ஆக்சைட்) நீண்ட காலமாகவே கண்டுகொள்ளப்படாமலும்,
புறக்கணிக்கப்பட்டும், மீறப்பட்டும் வந்துள்ளது. இதற்கு நீண்ட நெடிய வரலாறும் உள்ளது.  இந்தப் பிரச்சினை போதாதென்று திராவிட இனவாதம், பிராமணத்
துவேஷம், கிறித்துவ மதமாற்றப் பிரசாரம், இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவற்றுடன் எப்போதுமே
பரபரப்புடன் கொந்தளிக்கும் அரசியல் சூழலுள்ள மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் ஸ்டெர்லைட்
ஆலை நிறுவப்பட்டுள்ளது. இவை காரணமாக அதிகார பலத்துடன் சர்வ வல்லமை படைத்தவர்களால் நினைத்த
நேரத்தில் பிரச்சினையைக் கொந்தளிக்க வைக்கவும் முடியும், உடனடியாக நிறுத்தவும் முடியும்.

இவை
அனைத்துக்கும் மேலாக இடதுசாரிகளின் வலுவான தடம், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின்
பிராந்திய அடிப்படையிலான போக்கு ஆகியவை இம்மாநிலத்தில் ஆழமாக வேருன்றி உள்ளன. அடிப்படைப்
பிரச்சினையைத் தூண்டிய நாட்டுக்கு
,
இந்தியத் தொழிலாளர் மற்றும் தொழில்துறைத் தகராறுகள் மத்திய மாநில
அரசுகளின் பொதுப் பட்டியலில் வரும் என்ற விவரம் என்பது கண்டிப்பாகத் தெரியும். மேலும்  கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தில்லி அரசுடன்
மோதல் போக்கையும்,  மையத்திலிருந்து விலகும்
தன்மையைம் கொண்ட ஒரு மாநில அரசைக் கையாளவது வெகு சுலபம் என்பதையும் அறிந்தே இருந்தனர்.
எனவேதான் தமிழகத்திலுள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தது,  புவிசார் மூலஉத்தி மேதாவித்தனம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
 

விவரங்களைக்
கூறிவிட்டேன்.  இதற்கு மேலும் எதையேனும் கூறினால்
அது ஊகங்களுக்கும், அனுமானங்களுக்குமே இடமளிக்கும். எனவே நான் வைத்த புள்ளிகளைக் கோலமாக்கிப்
புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த இரு ஆண்டுகளுக்குள் மரியாதைக்குரிய
ஏற்றுமதியாளர் ஒருவரிடமிருந்து இந்தியா தாமிரத்தை இறக்குமதி செய்யத் தொடங்கி இருக்கிறது
(இதன் காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சுமார் ரூ 40,000 கோடிகள்). இதே காலகட்டத்தில்
சீனாவுக்கான  பாகிஸ்தானின் தாமிர ஏற்றுமதிகள்
400% அதிகரித்துள்ளன (தாமிர பைரேட் தாது பலுசிஸ்தானில் ஏராளமாக உள்ளது). இதன் மூலம்
சீனாவின் தேவைகளைப் பாகிஸ்தான் தொடர்ந்து நிறைவு செய்து வருகிறது.  அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள்
அல்லது மதக் குழுக்கள் ஆகியோருக்கு லஞ்சம் வழங்க பெரிய ஆற்றல்மிகு நாட்டை உலகின் எங்கு
வேண்டுமானாலும் தேடுங்கள், உங்களுக்கான விடை கிடைக்கும். 
 

எந்த
நாடாக இருப்பினும் அந்நாட்டுத் தலைவர்கள் வேதியல் தனிமம் மற்றும் அதன் சேர்மங்கள் ஆகியவற்றுக்கு
இடையேயுள்ள வேறுபாட்டைத் தங்கள் விஞ்ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும், ஆலோசனை
பெறுவதிலும் தவறுவதில்லை.  ஆனால் இந்தியாவிலுள்ள
அறிவியல் ஆலோசகர்களால் இதனைச் செய்ய முடிவதில்லை. ஆனாலும், நிறைவாக, அரசியல், பொருளாதாரம்
மற்றும் மதத்தின் சட்டங்களை விட வேதியல் சட்டங்கள் உயர்வானவை. 

ஆங்கில மூலம் இங்கே.

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 8 (நிறைவுப் பகுதி) | தமிழில்: ஜனனி ரமேஷ்

பகுதி 8 (நிறைவுப் பகுதி)
(27)   மத்திய அரசு
தொடர்பான எனது மனப்பாங்கு
இந்தப் பத்திரிகைச் செய்தியை நான் வெளியிட்ட
பின்னர், இந்திய அரசியலில் மிகப் பெரிய பிரளயமே ஏற்பட்டது. இந்தியாவில் விலங்குகளை
உயிருடன் அறுத்து ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கத்துக்குத் தலைமை வகித்து
வருகிறேன். ஆனால் 1947ம் ஆண்டு நமது தாய்நாடு பிரிவினைக்கு உள்ளானது. பாகிஸ்தான் தனி
நாடாகப் பிரிந்து சென்றாலும், அந்த இழப்பை ஈடு செய்ய, இந்துஸ்தானின் மிகப் பெரிய பகுதி
அந்நிய ஆளுமையிலிருந்து விடுதலை பெற்றது. அரசியல் விடுதலைக்காக நடைபெற்ற சுதந்திரப்
போரில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு போர் வீரனாகப் பங்கேற்றுக் கடுமையான பாதிப்புகளுக்கு
உள்ளானேன். நான் பட்ட துன்பங்களும், துயரங்களும், எனது தலைமுறையைச் சேர்ந்த வேறேந்த
நாட்டுப்பற்று மிக்கத் தலைவருக்கும் சளைத்ததல்ல. நிறைவாக நாடு விடுதலை பெற்று சுதந்திர
இந்தியா மலர்ந்தது. என் நாடு விடுதலை பெறுவதைக் கண்ணாரக் கண்டு மகிழ உயிருடன் இருப்பதற்கு
பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்றே உணர்கிறேன். எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதி இன்னும்
முழுமை பெறவில்லை என்பது உண்மை. என்றாலும், சிந்து முதல் பெருங்கடல்கள் வரை தாய்நாட்டை
மீட்டெடுத்து ஒருங்கிணைக்கும் விருப்பத்தை நாங்கள் கைவிடவில்லை. இந்த நோக்கத்தை நிறைவு
செய்வதற்குக் கூட முதலில் நாம் வெற்றி பெற்ற பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதால்,
எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும், மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டியது
அவசியம் என்பதை மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்க முயன்றேன்.
ஆட்சிப் பொறுப்பில் எந்த மாற்றத்தை விரும்பினாலும்
அது அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும். வன்முறையோ, உள்நாட்டுக்
கலவரமோ ஏற்பட்டால் அது நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும். அந்நிய அரசை எதிர்த்து
நான் நடத்திய போராட்டத்தின் போது புரட்சிகரமான எண்ணங்கள் தவிர்க்க முடியாதது மற்றும்
நியாயமானதுதான். என்றாலும், நமது நாட்டைப் பயங்கரமான குழப்பங்களிலிருந்தும், உள்நாட்டுக்
கலவரங்களிலிருந்தும் காப்பாற்ற வேண்டுமானால், ஆயுத ஒடுக்குமுறையிலிருந்து, அரசியல்
அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட ஜனநாயகத்துக்கு உடனடியாக மாற வேண்டும். இதை நோக்கமாகக்கொண்டே,
தற்போது நெருக்கமாகி வரும் காங்கிரஸ் மற்றும் மகாசபா ஆகிய இரு அமைப்புகளும் பொதுவான
முன்னணியை அமைத்து நமது நாட்டின் மத்திய அரசின் கரங்களை வலுப்படுத்த வேண்டுமென விரும்பினேன்.
இதன் அடிப்படையிலேயே புதிய தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டேன். உடல்நலம் குன்றியிருந்த
நிலையிலும் அனைத்துக் கட்சி இந்து மாநாட்டுக்குத் தலைமை வகிக்க தில்லி சென்று மகாசபா
செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றேன். பெரும்பான்மை மகாசபா தலைவர்கள் மற்றும் சில காங்கிரஸ்
முன்னணி தலைவர்களும் என்னுடன் இணைந்து பொதுவான முன்னணியை அமைக்கக் கடுமையாக உழைத்துக்
கொண்டிருந்தனர். மத்திய அரசுக்கு முழுமையான ஆதரவளிக்க மகாசபா செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
மகாசபா தலைவர் டாக்டர் எஸ்.பி.முகர்ஜி மத்திய அமைச்சரவையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டதை
நாங்கள் அனைவரும் மனதாரப் பாராட்டி வரவேற்றோம். இந்த நீதிமன்றத்தில் இவற்றின் சில விவரங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளன (பேட்ஜ் சாட்சியம் பக்கம் 224 & 225 பார்க்கவும்). பி.டபிள்யூ
69 தாதா மகராஜும் கூறுகையில் ‘பம்பாயில் இந்து தலைவர்கள் நடத்திய மாநாட்டில் 1947 டிசம்பரில்
கலந்து கொண்டேன். வீர சாவர்க்கர் அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்து அனைத்து இந்துக்களும்
ஒன்றுபட வேண்டும் என்றும், இந்தியா விடுதலை பெற்றதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும்
தங்கள் வேற்றுமைகளை மறந்து இந்திய அரசை வலுப்படுத்தி முழுமையான ஆதரவை வழங்க வேண்மென
வலியுறுத்தினார்’ என்றார். (பி.டபிள்யூ 69 பக்கம் 320).
கோட்சேவும் ஆப்தேவும் மகாசபையை நிராகரித்தனர்
இந்து மகாசபாவின் முன்னணித் தலைவர்களாக
நாங்கள் கருதப்பட்டாலும், மகாசபா உள்ளேயும், வெளியேயும், இந்து சங்கடன்களின் பெரிய,
தீவிர மற்றும் உறுதினான பிரிவு, நாங்கள் மேற்கொண்ட இந்தக் கொள்கையை எதிர்த்ததை
1947 ஆகஸ்ட் பிரிவினையிலிருந்தே கண்டுபிடித்தோம். மகாசபா உள்ளேயும், வெளியேயும், இந்திய
யூனியனை அங்கீகரிப்பது, பாகிஸ்தானை அங்கீகரிப்பதற்கு ஒப்பாகும் என்ற அடிப்படையில் எங்களை
வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கினார்கள். மேலும் வங்காளம் மற்றும் பஞ்சாபிலுள்ள முஸ்லிம்
தீவிரவாதிகள் லட்சக் கணக்கான இந்துக்களைக் கொன்று குவித்த போது அவர்களைப் பாதுகாகத்
தவறிய மத்திய அரசுடன் ஒத்துப் போவது இந்துக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் வாதாடினார்கள்.
இந்த வழக்கில் என்னைப் பாதுகாத்துக் கொள்ளத்
தேவையான விவரங்களை மட்டுமே நான் தெளிவுபடுத்தி என் வாக்குமூலத்தைக் கட்டுப்படுத்தி
கொள்ள விரும்புகிறேன். எனவே, பிரிவினை முதற்கொண்டே ஆப்தே, கோட்சே மற்றும் அவர்கள் குழுவினர்,
இந்தியா முழுவதுமுள்ள இந்து சங்கடன் முகாமிலுள்ள எதிர்ப்பு கோஷ்டியினருடன் கை கோத்துக்
கொண்டனர் என்பதை மட்டும் தெளிவுபடுத்துவது போதுமென எண்ணுகிறேன்.
(A) ஆப்தேவும் கோட்சேவும் கட்டாயப்படுத்தி வழிநடத்தப்படும் மனிதர்கள்
அல்ல
பண்டிட் கோட்சேவும், ஆப்தேவும், மன உறுதி
மிக்கவர்கள் என்றும், இந்து மதத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் என்றும், தங்கள்
மனத்துக்குச் சரியென்றால் மட்டுமே ஒரு விஷயத்தைச் செய்வபர்கள் என்றும், காரணம் ஒத்துப்
போனால் மட்டுமே ஒன்றைப் பின்பற்றுவார்கள் என்றும் ப்ராசிக்யூஷன் தரப்பே சாட்சியம் அளித்துள்ளது.
ஆதலால் அவர்கள் கட்டாயப்படுத்தி வழிநடத்தப்படும் மனிதர்கள் அல்ல என்பது தெளிவு. இந்து
மகாசபா தலைவர் என்ற முறையில் இந்து மகாசபா ஊழியர்களாக அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களை
பராசிக்யூஷன் தரப்பு சான்றாவணங்களாகச் சமர்ப்பித்துள்ளது. அவற்றில் நான் என்ன செய்ய
வேண்டும், தலைமை உரையில் எவ்வாறு பேச வேண்டும், தலையங்கம் எவ்வாறு எழுத வேண்டும் என்று
‘யோசனையும்’, சில தருணங்களில் ‘அறிவுரையும்’ கூறியுள்ளனர். மேலும் அவர்கள் நம்பாத,
மகாசபாவின் சில தலைவர்களை நான் நம்புதுவது தவறு என்றும், அவர்கள் விருப்பம்போல் நான்
செயல்படாதது, இன்னும் குறிப்பாக, அக்ரணி பத்திரிகைக்கு நான் எழுதாததற்காக மறைமுகமாகக்
கண்டித்ததுடன், அவர்களது பத்திரிகைக்கு இருபதாயிரம் ரூபாய் வழங்காததால் ஏற்பட்ட இழப்புக்கு,
அவர்களுடைய வார்த்தையையே மேற்கோள் காட்டுவதென்றால், ‘மூழ்கிவிட்டது’ எனத் தங்களது அதிருப்தியை
வெளிப்படுத்தியதையும் அக்கடிதங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். (கடிதங்கள் ஜி1 (டி/30),
ஜி26 (பி/277), ஜி43 (பி/284), ஜி70 (பி/293) மற்றும் ஜிஏஎஸ்4 (பி/298 பார்க்கவும்).
(B) மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும் என்பதுடன் அதில் பங்கேற்கவும் ஆதரவளித்த மகாசபாவின் தீர்மானத்தை ஆப்தே,
கோட்சே மற்றும் அவர்கள் குழுவினர் கண்டித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்திய யூனியனை
அங்கீகரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவளித்த டாக்டர் முகர்ஜி, பாரிஸ்டர்
என் சி சாட்டர்ஜி, டாக்டர் மூஞ்சி, போபட்கர், நான் மற்றும் ஏனைய தலைவர்கள் மகசபாவின்
‘வயதான தலைவர்கள்’ என்று அவர்களால் முத்திரை குத்தப்பட்டோம். வயதான தலைவர்கள் தலைமையில்
செயல்படும் மகாசபா, இந்து ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கத் தவறியதற்காக அவர்களது தினசரியான
‘அக்ரணி’ அல்லது ‘இந்து ராஷ்ட்ரம்’ பத்திரிகையில் தொடர்ந்து பல மாதங்கள் தாக்குதலுக்கு
உள்ளானார்கள். மேலும் இந்து இளைஞர்கள் ‘வயதான தலைவர்களின்’ தொடர்பு இல்லாமல், தனிப்பட்ட
முறையில் சுதந்திரமான ‘நடவடிக்கை அமைப்பை’ ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் புத்திமதி
சொல்லிக் கொண்டே இருந்தனர்.
(C) இந்த வாக்குமூலம் முழுவதும் ப்ராசிக்யூஷன்
தரப்பு சாட்சி மூலம் ஏற்கெனவே உறுதிப்படுத்திய விவரங்களை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன்.
இதிலும் கூட அப்ரூவராக மாறி மன்னிப்புக் கோரிய பேட்ஜ், சாட்சியத்தில் பதிவு செய்த சில
தொடர்புடைய வரிகளை, துல்லியமான தகவல்களை நான் மேற்கோள் காட்டுகிறேன். 1947 ஆகஸ்ட்
15 இந்திய சுதந்திரம் பெற்ற நாளன்று வீர சாவர்க்கர் தனது இல்லத்தில் இந்து மகாசபா மற்றும்
தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடியது நினைவிருக்கிறது. தேசியக் கொடியைத் தத்யாராவ் தனது
இல்லத்தில் ஏற்றியதை இந்து மகாசபாவினர் ஆட்சேபித்தது உண்மைதான். அவர் தேசியக் கொடியை
ஏற்றியதை நானும் ஆட்சேபித்தேன். கோட்சே, ஆப்தே மற்றும் பலரும் ஆட்சேபித்தனர். இந்தியப்
பிரிவினையைத் தொடர்ந்து மத்திய அரசை (நேரு அரசை) வலுப்படுத்த வேண்டும் என்பதே மகாசபையின்
கொள்கை என்பதை நானறிவேன். இந்து மகாசபா நிறைவேற்றிய தீர்மானத்தை எல் பி போபட்கர் படித்தார்.
காங்கிரஸோடு தோளோடு தோள் நின்று நாம் உழைப்பதுடன், நேரு அரசுக்கு (மத்திய அரசுக்கு)
அதரவளிக்க வேண்டும் என்பதே அத்தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். பார்சியில் நடைபெற்ற
மராட்டிய மாகாண இந்து மகாசபா முன்னிலையில் 1946 டிசம்பரில் தீர்மானம் படிக்கப்பட்டது.
கோட்சேவும், ஆப்தேவும் இத்தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தனர். சமீபமாகச் சில தருணங்களில்
இந்து மகாசபாவின் கொள்கையை கோட்சேவும், ஆப்தேவும், தங்கள் ‘அக்ரணி’ மற்றும் ‘இந்து
ராஷ்ட்ரம்’ பத்திரிகைகளில் விமர்சித்தது உண்மையே (பேட்ஜ் சாட்சி பக்கம் 224 &
225).
இந்த நேரத்தில் என் உடல்நலம் மீண்டும்
பாதிக்கப்பட்டேன். தினசரிக் காய்ச்சல், 1948 ஜனவரி மாதம் முழுவதும் என்னைப் படுக்கையிலேயே
கிடத்தியது. திடீரென ஜனவரி 30ம் தேதி தில்லியில் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட
அதிர்ச்சியான செய்தியைக் கேட்டேன். பத்திரிகைச் செய்தி முகமைகள் என்னைத் தொலைபேசியில்
தொடர்ந்து அழைக்கவே, நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு, 1948 பிப்ரவரி 4ம் தேதி, கீழ்க்காணும்
பத்திரிகைச் செய்தியை வெளியிட்டேன். இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் அது வெளியானது.
இந்த வாக்குமூலத்துடன் எனது பத்திரிகைச் செய்தியை உறுதிப்படுத்தப் பம்பாய் ‘டைம்ஸ்
ஆஃப் இந்தியா’ 1948 பிப்ரவரி 7 ம் தேதி வெளியான செய்திக் குறிப்பை இணைத்துள்ளேன். அறிக்கை
பின்வருமாறு:-
தில்லியிலுள்ள இந்து மகாசபா தலைவர் எல்
பி போபட்கர் மற்றும் செயற்குழுவின் சில உறுப்பினர்களின் கூட்டு அறிக்கை, மகாத்மா காந்தியின்
கொடூரமான படுகொலை தொடர்பான உணர்வுகளை அதிகாரப்பூர்வமாக சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.
அத்துடன், இந்து மகாசபா என்பது ஜனநாயக மற்றும் பொது அமைப்பு என்பதையும் தெளிவுபடுத்தி
உள்ளது. இந்து மகாசபையின் துணைத் தலைவர்களுள் ஒருவன் என்ற முறையில், நானும் அவர்களது
உணர்வுகளுடன் உடன்படுகிறேன். தனிநபர் வெறுப்பு அல்லது கூட்டத்தின் வெறிச் செயல் காரணமாக
ஏற்படும் இதுபோன்ற சகோதரச் சண்டைகளை எந்தச் சமரசமும் இன்றி வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வெற்றிகரமான நாடு தழுவிய புரட்சிக்கும், புதிதாகப் பிறந்த தேசிய அரசுக்கும், சகோதரத்துவ
உள்நாட்டுச் சண்டையைக் காட்டிலும், குறிப்பாக அந்நிய சக்திகளால் தூண்டப்பட விரோதத்தை
விடவும், மோசமான எதிரி இருக்க முடியாது. வரலாறு உரைக்கும் இந்த உறுதியான எச்சரிக்கையை
ஒவ்வொரு நாட்டுப்பற்று மிக்க குடிமகனும் நெஞ்சில் நிறுத்தவேண்டும் – வி டி சாவர்க்கர்.
மேற்கூறிய பத்திகளில், என் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கான பதிலைச் சுருக்கமாகப் பதிவு செய்துள்ளேன். என்னுடைய வழக்கறிஞர்கள்
அவர்களது வாதத்தின் போது சரியாகவும், முறையாகவும் இருக்கும் வகையில் விரிவாக எடுத்துரைப்பார்கள்.
என்னுடைய வழக்கில் தொடர்புடைய அனைத்து சட்ட விவரங்களையும் அவர்கள் கவனிப்பார்கள்.
நிறைவாக, எனக்கு எதிரான ப்ராசிக்யூஷன்
வழக்கைக் கூட்டாகவும், விரிவாகவும் ஆய்வு செய்த பிறகு கீழ்க்காணும் முக்கிய விவரங்களைச்
சமர்ப்பிக்கிறேன்:-
(A) கூறப்படும் சதித்திட்டத்தில் எனக்குத்
தனிப்பட்ட முறையில் நேரடித் தொடர்பு அல்லது பங்களிப்பு அல்லது அதன் கருத்துருவாக்கம்
அல்லது அதனைத் தொடர்ந்து நடைபெற்றதாகக் கூறப்படும் செயல்கள் எதிலும் நேரடிச் சாட்சி
இல்லை.
(B) என்னைக் குற்றவாளியாக்கும் வகையில்
எனது கையிருப்பிலோ, கட்டுப்பாட்டிலோ, எந்த ஆயுதமோ, வெடிமருந்தோ, அதைப் போன்ற எந்தப்
பொருளோ இல்லை
(C) பத்து ஆண்டுகளுக்கும் மேலான
கடிதத் தொடர்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களில்
என்னைக் குற்றவாளியாக்கும் வகையில் ஒரு வார்த்தை அல்லது சிறு குறிப்பு கூட இல்லை.
(D) என் மீதான முழு வழக்கு மூன்று அல்லது
நான்கு சொற்றொடர்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொடரப்பட்டுள்ளது. செவிவழிச் செய்தியாகவும்,
அதுவும் அப்ரூவர் ஒருவரால் கேட்டதாக ஒப்புக் கொள்ளப்பட்ட செவி வழிச் செய்தியாகவும்,
எந்த தனிப்பட்ட அல்லது நம்பகத்தன்மை கொண்ட சாட்சியால் முற்றிலும் உறுதி செய்யப்படாததாகவும்
உள்ளது.
(E) மேலே உள்ள பிரிவுகளில் (பிரிவு
26 & 27) மேற்கோள் காட்டப்பட்ட எனது பத்திரிகைச் செய்தி மூலம் மகாத்மா காந்தி மற்றும்
பண்டிட் ஜவாஹர்லால் நேரு ஆகியோரின் நாட்டுப் பற்று மற்றும் தியாகத்தின் மீது நான் உயர்ந்த
அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது, பிரிட்டிஷ் அரசு அவர்களைக் கைது செய்த போதெல்லாம்
நான் கண்டித்தது, காந்திஜிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சோகங்களிலும், துக்கங்களிலும் பங்கேற்றது,
அவர் விடுதலையாகும் போதும் மகிழ்ந்தது, அவரது 75 ஆவது பிறந்த நாளின் போது நீண்ட காலம்
வாழ வேண்டுமெனப் பிரார்த்தித்தது, எனது 60ஆவது பிறந்தநாளுக்குக் காந்திஜி வாழ்த்துச்
செய்தி அனுப்பியது என, மேற்கண்ட விஷயங்கள் அனைத்துமே, எங்கள் இருவருக்கும் இடையே கொள்கை
ரீதியான அல்லது நிஜமான வேற்றுமைகள் இருந்தாலும், அவை பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ,
ஆழ்ந்த வெறுப்பாக மாற நாங்கள் என்றைக்குமே அனுமதித்ததில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.
இதன் காரணமாகவே திடீரென அதிர்ச்சியூட்டும்
வகையில் மகாத்மா காந்தியின் படுகொலைச் செய்தியை நான் கேட்டதுடன், பத்திரிகை செய்தி
மூலம் அதைச் சந்தேகத்துக்கு இடமற்றக் கொடூரமான, சகோதரச் சண்டை என்று வெளிப்படையாகவே
கண்டித்தேன். இன்றைக்கும் கூட மகாத்மா காந்தியின் படுகொலையை சமரசமற்றப் படுகொலை என்றே
கண்டிப்பேன்.
மேற்கூறிய முக்கிய விவரங்கள் காரணமாக
ப்ராசிக்யூஷன் தரப்பு கிரிமினல் வழக்குக்குத் தேவையான நிலையான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்,
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிவிட்டது
எனவே வாக்குமூலத்தில் விவரிக்கப்பட்ட
எனது வாதத்தைப் படித்துப் பார்த்த பிறகு என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு முழுக்க முழுக்க
சந்தேகங்களாலும், அனுமானங்களாலும் ஆனவை என்பதைப் ப்ராசிக்யூஷன் தரப்பு நம்புமெனத் தாழ்மையுடன்
சமர்ப்பிக்கிறேன். இது போன்ற சந்தேகங்கள் மற்றும் அனுமானங்களால் பிரச்சினைகளைக் குழப்பாமல்,
எனக்கு எதிராக உள்ளதைப் போன்ற வழக்கை மதிப்பீடு செய்து நீதிமன்றம் முடிவுக்கு வர உதவுவதே
அதன் கடமை என்பதை ப்ராசியூஷன் தரப்புக்கு நினைவூட்ட வேண்டுமெனக் கருதவில்லை.
எனது வாக்குமூலத்தை நிறைவு செய்வதற்கு
முன்பு ஒரு மனிதன் தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்குச் சாத்தியம் உண்டு என்பதால்
மீண்டும் உறுதியாக வலியுறுத்துகிறேன். என் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றத்தையும்
நான் இழைக்கவும் இல்லை, அதற்கான காரணமும் எதுவும் இல்லை. என் மீது குற்றம் சுமத்தப்பட்டது
போல் எந்தக் கிரிமினல் ஒப்பந்தத்துடனோ, சதித்திட்டத்துடனோ எனக்கு எந்தப் பங்களிப்பும்
இல்லை. குற்றச்சாட்டில் கூறியுள்ளபடி நான் எந்தக் குற்றத்துக்கும் உடந்தையாகவும் இல்லை,
குற்றச் செயல்கள் குறித்து அறிந்திருக்கவும் இல்லை.
எனவே, மாண்புமிகு கனம் நீதிபதி அவர்களுக்குத்
தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில், மேற்கூறியவை உள்ளிட்ட ஏனைய காரணங்களுக்காக,
எனது நடத்தை மீது சிறு களங்கம் கூட இல்லாமல், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும்
விடுவித்து என்னை விடுதலை செய்ய ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  
தில்லி                                                
 (ஓப்பம்) வி.டி. சாவ்சர்கர்
தேதி 1948 நவம்பர் 20                                     குற்றம் சுமத்தப்பட்டவர்
இணைப்பு A 
ஏ எஸ் பிடே எழுதிய ‘வீர் சாவர்க்கர் சூறாவளிப்
பிரச்சாரம்’ என்னும் நூலின் 262 பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை (பிரிவு 26 (A) பக்கம்
46)
ஜவாஹர்லால் நேருவுக்குச் சிறைத் தண்டனை
பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு நான்கு
ஆண்டு சிறைத் தண்டனை என்னும் செய்தி ஒவ்வொரு தேசாபிமானிக்கும் வருத்தமான அதிர்ச்சியைக்
கட்டாயம் ஏற்படுத்தி இருக்கும். எங்கள் இருவருக்கும் இடையே நிலவும் பல்வேறு தத்துவங்கள்
மற்றும் கொள்கைகள் காரணமாக நாங்கள் வேறு வேறு பாதைகளில் இயங்கிக் கொண்டிருந்தாலும்,
பண்டித ஜவாஹர்லால் நேருஜியின் பொது வாழ்வு முழுவதும் அவர் மேற்கொண்ட நாட்டுப் பற்று
மற்றும் மனிதாபிமான முனைவுகளைப் பாராட்டவும், அவர் சந்திக்கும் துன்பங்களுக்கு எனது
ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிக்கவும் தவறினால், இந்து சபா உறுப்பினர் என்னும் கடமையிலிருந்து
தவறியவன் ஆவேன்.
‘காங்கிரசுக்குள் காந்தியக் கொள்கைகளிலிருந்து
மாறுபட்ட கட்சிகளின் தேசாபிமானத் தலைவர்களான சேனாபதி பாபத், பாபு சுபாஷ் சந்திர போஸ்
மற்றும் ஏனைய தொண்டர்களும், போர் தொடங்கிய உடனேயே இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்
கீழ் தண்டனை அளிக்கப்பட்ட போது, பண்டித ஜவாஹர்லால் நேருஜி உள்ளிட்ட காங்கிரஸின் இப்போதைய
செயற்குழுவும், வழிநடத்திய காந்திஜியும், குற்ற உணர்ச்சியுடன் அமைதியாக இருந்தார்கள்.
அத்தோடு, எந்தவொரு கண்டனத்தையோ, வருத்தத்தையோ தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அரசின்
கொள்கையையும், அடக்குமுறையையும், இந்து மகாசபா தனது கடமையிலிருந்து விலகி எச்சரிக்கத்
தவறவில்லை. வெஸ்ட்மினிஸ்டர் ஸ்டேசரில் பரிந்துரைத்ததுபோல் டொமினியன் அந்தஸ்தை உடனடியாக
அரசு வழங்கினால் மட்டுமே இந்திய மக்களின் உண்மையான மற்றும் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும்
என்றும், ஒடுக்குமுறை இன்னும் ஆழமான அதிருப்தியையே ஏற்படுத்தும் என்றும், இந்து மகாசபாவின்
செயற்குழு 1940 மே மாதமே இது தொடர்பான தீர்மானத்தை வலியுறுத்தி நிறைவேற்றியது. நம்பிக்கை
ஒன்றே நம்பிக்கையை ஏற்படுத்தும். அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான மேம்பாடு மட்டுமே
தேசிய அளவிலான ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும்.
‘உலக யுத்தம் வெடித்த உடனேயே பண்டித ஜவாஹர்லால்ஜி
போன்ற மாமனிதர் அவசர அவசரமாக, அதீத ஆர்வத்துடன், உலக ஜனநாயகத்தைக் காக்கும் பிரிட்டிஷுக்கு
நிபந்தனையற்ற ஒத்துழைப்பை இந்தியா வழங்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டார். பிறகு,
மனக்கசப்புடன் அனைத்து ஒத்துழைப்பையும் திடீரெனக் கண்டித்தார். ‘இதன் காரணமாக இந்தியப்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பழிவாங்கும் நோக்கத்துடன் அவருக்குத் தண்டனை வழங்கும்
அளவுக்கு வேறு வழியின்றி அரசு தள்ளப்பட்டிருக்கிறதா என்ன?’ என்று நான் கேட்கும் ஒரு
சாதாரண கேள்வி தொடர்பாகக் கொஞ்சம் தீவிர கவனம் செலுத்துமாறும் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
உலக யுத்தம் வெடித்தவுடன் ஐரோப்பாவிலுள்ள
ஒரு நாடு உலக ஜனநாயகத்தைக் காப்பாற்ற அல்லது சுயநலமற்ற வேறு முனைவுக்காகப் போரில் பங்கேற்றது
என்று காங்கிரஸ் வெளிப்படையாக, அவசர அவசரமாக, அதீத ஆர்வத்துடன் அறிக்கை வெளியிட்டது.
ஆனாலும், ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேசிய நலனுக்காகவும், ஏகாதிபத்திய இலட்சியத்துக்காகவுமே
களத்தில் இறங்கின. இதன் விளைவாக இந்து மகாசபா தொடக்கம் முதற்கொண்டே தங்கள் தேசிய நலன்களைப்
பெற ஒரே வழி ‘ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு’ மட்டுமே என்று தனக்குத் தானே சொந்தக் கொள்கையை
வகுத்துக் கொண்டது.
இந்தக் கொள்கையின் கீழ் ஒத்துழைப்பு என்பதும்
தொடர்புடைய ஆக்கப்பூர்வ விளைவு என்று சுட்டிக் காட்டப்படுவதும் தெளிவாக இல்லையா? நேர்மையான
ஒத்துழைப்பைப் பெற ஒடுக்குமுறை மட்டுமே சிறந்ததாகக் கருத முடியுமா?
இந்திய அரசு இந்தியாவைத் தொழில்மயமாகவும்,
ராணுவ பலமிக்கதாகவும் மாற்றவும், எதிரிகளின் படையெடுப்பு அல்லது உள்நாட்டுக் குழப்பம்
ஆகியவற்றிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கவும், திட்டமிட்டு மேற்கொள்ளும் அனைத்து போர்
முனைவுகளிலும், இந்து சங்கடன்கள் இன்றைய சூழலில் தங்கள் சக்திக்கு உட்பட்டு பங்கேற்க
வேண்டும். இந்து சபா உறுப்பினர் என்ற வகையில் இதில் உண்மையாகவே ஆர்வமாக உள்ளேன். அமைதி
அல்லது நிர்பந்திக்கப்பட்ட ஒத்துழைப்பைப் பெற இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்
அடக்குமுறையை மட்டுமே நம்பியிருக்கிறது. இந்தியாவின் நிஜமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும்,
தடையாகவும், இதை விடத் தீவிரமாக வேறேதும் இல்லை. இவற்றையெல்லாம் தாமதமாக உணர்ந்து கொள்வதற்கு
முன்பாகவே, இந்திய அரசு மயக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்தக்
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்; நல்ல ஆரம்பமாக டொமினியன் அந்தஸ்தை வழங்குவதன் மூலம் உடனடியாக
அரசியல் அமைப்புச் சட்ட வழிமுறைகளுக்கான கதவுகளைத் திறந்து விட வேண்டும். இவ்வாறு நடைபெறும்
பட்சத்தில், இந்திய தேச நலனில் தங்களுக்குக் கடமை இருப்பதுடன், அரசுடன் இணைந்து செயல்படவும்,
நேருஜி போன்ற தலைவர்கள் உணர்வதை அரசு காண வாய்ப்புண்டு. ஒரு பிரிவினர் இந்தக் கொள்கைக்கு
உடன்படவில்லை என்றாலும், இந்திய மக்களுக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை
எதிர்க்கும் அவர்களது கிளர்ச்சி பொது மக்கள் மனத்தில் தானாகவே குறையத் தொடங்கும். இதனால்
அவர்களுடைய எண்ணமும் தானாகவே தோல்வி அடைந்துவிடும். எனவே இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்
கீழ் கடுமையான தண்டனைகள் பெறும் அளவுக்கு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.
06/11/1940
இந்து சபாக்களுக்கு எச்சரிக்கை
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பும், உங்கள் கடமையும்.
அனைத்து மாகாண மற்றும் உள்ளூர் உள்ளூர்
இந்து சபாக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தீவிர கவனம் செலுத்த அவசர அழைப்பு விடப்படுகிறது.
ஐதராபாத் உள்நாட்டு எதிர்ப்பு இயக்கத்தைப் போன்று மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதால் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி முக்கியம் மற்றும் அவசரமும் ஆகும். வரவிருக்கும்
குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்கு பொதுச் சேவை, சட்டமன்றங்கள் தொடர்பான அனைத்து அரசியல்
அமைப்பு விவகாரங்கள், எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவாகும் எண்கள் மற்றும்
தகவல்கள் அடிப்படையில் அட்டவணையிடப்பட்டு உறுதி செய்யப்படும்.
ஏனைய விஷயங்களைப் போன்றே காங்கிரஸின்
முட்டாள்தனமான கொள்கையால், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பைப் புறக்கணித்த காரணத்தால்,
இந்துக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர். காங்கிரஸை வழிநடத்தும் எண்ணக் கோளாறு
கொண்ட காந்திஜியின் சில புதிய ‘உள் குரல்கள்’ இம்முறை கூட இந்துக்களின் நலன்களைத் தியாகம்
செய்வதுடன், போலித்தனமான தேசியத்தையும் திருப்திப்படுத்தும், ‘சத்தியாகிரகம்’ போன்ற
நடவடிக்கையை எடுப்பார்களா என்று சொல்ல முடியாது. எனவே இதன் காரணமாக இந்து மகாசபா தொடக்கத்திலிருந்தே
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்களின் ஜனத்தொகை வலிமையைத் துல்லியமாகப் பதிவு
செய்ய வலியுறுத்துவதுடன், இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட இந்துக்களின் நலன்களைப்
பாதுகாக்கத் தவறினால், தங்கள் வாழ்க்கையின் அனைத்துக் கோணங்களிலும் தங்களுக்குத் தாங்களே
இந்துக்கள் இரட்டைப் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணர்த்தும் வகையில்,
சரியான நேரத்தில் களமிறங்கி இந்து நாட்டுக்குத் தனிப்பட்ட முனைவையும், வழிகாட்டுதலையும்
வழங்க வேண்டும்.
புயல் வேகப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல்
இதன் காரணமாக ஒவ்வொரு மாகாணம், மாவட்டம்
மற்றும் உள்ளூர் இந்து சபா உறுப்பினர்கள் இந்தியா முழுவதும் புயல் வேகப் பிரச்சாரத்தை
மேற்கொண்டு இந்துக்களின் எண்ணிக்கையை வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் துல்லியமாகப்
பதிவு செய்ய வேண்டும். அதே சமயம் சட்டத்துக்குப் புறம்பாக முஸ்லிம்கள் தங்களது எண்ணிக்கையை
மிகைப்படுத்திப் பதிவு செய்வதையும் எப்படியேனும் தடுத்தாக வேண்டும். மேலும் மக்கள்
தொகை எண்ணிக்கையின் சரியான பதிவு மட்டுமே முக்கியமல்ல. இந்துக்களின் நலன் அரசியல்,
சமூகம், மதம், பொருளாதாரம், வரலாறு என எல்லாப் பிரிவுகளிலும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில்
அனைத்து விவரங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமும் கட்டாயமும்
ஆகும்.
பிரச்சாரத்துக்கான எல்லைகளை வகுக்கவும்,
முறைப்படுத்தவும், கீழ்க்காணும் சில முக்கிய அறிவுறுத்தல்களை இந்தியாவிலுள்ள அனைத்து
மாகாண, மாவட்ட, உள்ளூர் இந்து சபாக்களும் வரையறைகளுக்கு உட்பட்டு உடனடியாகப் பின்பற்ற
வேண்டும்.
மாகாண இந்து சபாக்கள் முதற்கட்டமாக மாகாண
மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கண்காணிப்பாளர் அலுவலகத்துடனான தொடர்பை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். மாவட்ட மற்றும் உள்ளூர் சபாக்கள் அவரவர் பகுதியில் பொறுப்பிலுள்ள மக்கள்
தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுடன் அதேபோன்ற தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுவது அவசியமாகும்.
இணைப்பு B
‘பயோனீர்’ பத்திரிகை தேதியிட்ட 1943 பிப்ரவரி 22 (நகரப் பதிப்பு)
சான்றாவணம் டி.79
பிரிவு 26 (சி) பக்கம் 47 மேற்கண்டபடி
உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் காந்திஜிக்கு விண்ணப்பம்
சாவர்க்கர் ஆலோசனை
பம்பாய் பிப்ரவரி 20 : மகாத்மா காந்தியின்
உயிரைக் காப்பாற்ற அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதைத் தவிர இப்போதைக்குத்
வேறு வழியில்லை என்பதால் தேசிய அளவிலான கோரிக்கையை இந்து மகாசபைத் தலைவர் வி டி சாவர்க்கர்
பரிந்துரைத்துள்ளார்.
‘நமக்கு முன்னிருக்கும் இருண்ட சூழலை
நாம் மன உறுதியுடன் சந்தித்தே ஆக வேண்டும். நமக்கு அந்நியமாகவும், கருணையற்றும் இருக்கும்
வைஸ்ராய் லாட்ஜ் கதவுகளின் வாசலில் நிற்பதை விடுத்து மகாத்மா காந்தியின் படுக்கை அருகே
நமது கவனத்தைத் திருப்பி, எந்த தேச நலனுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டாரோ, அந்த தேசத்துக்குச்
சேவை புரியத் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென வேண்டுகோள் விடுக்க வேண்டும்’ என்கிறார்
சாவர்க்கர்.
‘இந்த நிமிடம் வரை மகாத்மா காந்திஜியை
விடுதலை செய்து அவரது உயிரைக் காப்பாற்ற எங்களால் இயன்ற வரை அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
ஆனால் உண்ணாவிரதம் தொடர்பாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
மனிதாபிமான முறையில் வைக்கும் வேண்டுகோளும் அரசின் மனத்தில் எந்த வகையான மாற்றத்தையும்
ஏற்படுத்தப் போவதில்லை. அரசின் இந்த முடிவைக் கோடிக் கணக்கான மக்கள் ஏற்காமல், அதன்
மனப்பாங்கைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். நேரம் மிக வேகமாக ஓடிக் கொண்டே இருப்பதால்,
விமர்சனம் மற்றும் எதிர்ப்பென ஒரு நிமிடத்தைக் கூட நம்மால் வீணடிக்க முடியாது. மகாத்மாவின்
விடுதலையை நாம் அரசுக்கு வைக்கும் வேண்டுகோள், ராஜிநாமா அல்லது தீர்மானங்கள் மூலம்
பெற முடியாது.
‘மகாத்மா காந்தி உயிரிழப்பதற்கு முன்பாக
அவரது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேறெந்த நியாயமான கேள்வியும் தடையாக இருக்க முடியாது.
மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கும் போது அதை உயிருக்கான இடர்ப்பாடாகக் கருதாமல்
கடுமையான சோதனையை வெற்றி கொள்ளவே விரும்புவதாகக் கூறினார். இதன் காரணமாக இதுவொரு திறன்
உண்ணாவிரதம் ஆகும். எத்தனை நாள்கள் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறினாலும்,
அதுவொரு அரைகுறைக் கணக்கே ஆகும்’.
உயர்ந்த நோக்கம்
இரண்டாவதாக, தேவையற்ற சிறு விஷயங்களுக்கு
அதிக முக்கியத்துவம் அளிப்பதைத் தவிர்க்கும் வகையில் உயர்ந்த நோக்கம் ஒன்றுள்ளது. மகாத்மா
காந்திஜியின் வாழ்க்கை நாட்டின் சொத்து என்பதால் அவருக்கே சொந்தமானதல்ல. நமது நச்சரிப்புகள்
அல்லது முகஸ்துதிகளுக்கு அரசு இறங்கி வருவதை விடவும், தேசிய நலனுக்காக அவர் இறங்கி
வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தான் எடுத்த முடிவுகள் தேச நலனுக்குக் கேடு விளைவிக்கும்
என்பதைத் தெரிந்து கொண்டாலோ, ராஜ்கோட் மற்றும் ஏனைய இடங்களில் மேற்கொண்ட சபதங்களைப்
போன்று தான் மேற்கொண்ட சபதங்களில் ஏதேனும் சிறு தவறுகள் காணப்பட்டாலோ, தேசிய நலனைக்
கருத்தில் கொண்டு அவற்றை மகாத்மா காந்திஜி பலமுறை புறக்கணித்திருப்பதை நாம் அறிவோம்.
நிறைவாக சாவர்க்கர் கூறுவதாவது: ‘எனவே
தில்லி கருத்தரங்கில் பங்கேற்கும் அனைத்து கனவான்களுக்கும் நான் தாழ்மையுடன் கேட்பது
என்னவெனில் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல், மகாத்மா காந்திஜி தனது உண்ணாவிரதத்தை உடனடியாகக்
கைவிட வேண்டுமென்று நீங்கள் மட்டுமின்றி அவரது உயிரைக் காப்பாற்ற ஏற்கெனவே துடித்துக்
கொண்டிருக்கும் நாடு முழுவதுமுள்ள நூற்றுக் கணக்கான நிலையங்களிலுள்ள பிரதிநிதிகள் அனைவரும்
கூட்டாகக் கையெழுத்திட்டு வேண்டுகோள் விடுக்க வேண்டும்’.
இணைப்பு C
ஆனந்த் பஜார் பத்திரிகை தேதி 1944 பிப்ரவரி 24 (சான்றாவணம் டி.78)
பிரிவு 26 (எஃப்) பக்கம் 50 மேற்கண்டபடி
வி டி சாவர்க்கர் கீழ்க்காணும் தந்தியைக்
மகாத்மா காந்திஜிக்கு அனுப்பி உள்ளார்:
கஸ்தூரி பாய் மரணத்துக்கு என் ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையான மனைவியாகவும், அன்பான அன்னையாகவும்,
கடவுள் மற்றும் மனிதனுக்கான சேவையில் மேன்மையான மரணத்தைத் தழுவியுள்ளார். இந்த நாடே
உங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
இணைப்பு D
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை’ 1948 பிப்ரவரி 7 பிரிவு 29,
பக்கம் 55 மேற்கண்டபடி
சாவர்க்கரின் கருத்து
பிப்ரவரி 4 அதாவது கைதாவதாற்கு முதல்
நாள் இந்து மகாசபாவின் முன்னாள் தலைவர் வி டி சாவர்க்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
‘மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாகத் தில்லியிலுள்ள இந்து மகாசபா தலைவர் மற்றும் செயற்குழு
உறுப்பினர்கள் சிலர் கூட்டாக விடுத்த அறிக்கை, தம் உணர்வுகளை அதிகாரப்பூர்வமாக சிறப்பாக
வெளியிட்டிருக்கிறது. அத்துடன், இந்து மகாசபா என்பது ஜனநாயக மற்றும் பொது அமைப்பு என்பதையும்
தெளிவுபடுத்தி உள்ளது. இந்து மகாசபையின் துணைத் தலைவர்களுள் ஒருவன் என்ற முறையில்,
நானும் அவர்களது உணர்வுகளுடன் உடன்படுகிறேன். தனிநபர் வெறுப்பு அல்லது கூட்டத்தின்
வெறிச் செயல் காரணமாக ஏற்படும் இதுபோன்ற சகோதரச் சண்டைகளை எந்தச் சமரசமும் இன்றி வன்மையாகக்
கண்டிக்கிறேன். வெற்றிகரமான நாடு தழுவிய புரட்சிக்கும், புதிதாகப் பிறந்த தேசிய அரசுக்கும்,
சகோதரத்துவ உள்நாட்டுச் சண்டையைக் காட்டிலும், குறிப்பாக அந்நிய சக்திகளால் தூண்டப்பட
விரோதத்தை விடவும், மோசமான எதிரி இருக்க முடியாது. வரலாறு உரைக்கும் இந்த உறுதியான
எச்சரிக்கையை ஒவ்வொரு நாட்டுப்பற்று மிக்க குடிமகனும் நெஞ்சில் நிறுத்தவேண்டும்.
நிறைவு
Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 7) | தமிழில்: ஜனனி ரமேஷ்



பகுதி
7
(26)எனது வாக்குமூலத்தில் இந்தக் கட்டம் வரை, எனது
பாதுகாப்பு தொடர்பான எதிர்மறை விஷயங்களை மட்டுமே கையாண்டு வந்துள்ளேன். என்னைச் சிக்க
வைக்கப் ப்ராசிக்யூஷன் தரப்பு சமர்ப்பித்த அனைத்து சான்றாவணங்களும் தவறென நிரூபிக்க
முயன்றுள்ளேன். கனம் நீதிபதி அவர்களை இப்போது நான் கேட்டுக் கொள்வது என்னவெனில் எனது
பாதுகாப்பு தொடர்பாக நான் உடன்படும் விஷயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான்.
மகாத்மா காந்திஜியின் படுகொலைக்கு நானும் உடந்தை என்றும், பண்டிட் நேருவின் உயிரைப்
பறிக்கத் தூண்டிவிட்டேன் என்றும் என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காந்திஜி மற்றும்
பண்டிட்ஜீ ஆகியோர் மீது நான் வைத்திருக்கும் தனிப்பட்ட மதிப்பையும், மரியாதையும் இத்தருணத்தில்
கனம் நீதிபதி அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
1908ம் ஆண்டு காந்திஜி இலண்டனில் முக்கியப் புள்ளியான பண்டிட் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்குச்
சொந்தமான ‘இண்டியா ஹவுஸில்’ தங்கியிருந்த போது அவரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு
என்வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக அவருடனான தனிப்பட்ட மற்றும் பொதுவான உறவுகளை
இங்கு மேற்கோள் காட்டப் போவதில்லை. அத்தருணத்தில் நானும் காந்திஜியும் நண்பர்களைப்
போலவும் அக்கம் பக்கம் வசிப்பவர்கள் போலவும் ஒன்றாக வசித்துப் பணியாற்றிதையும், தனது
மனைவியுடன் தனிப்பட்ட முறையில் வருகை தந்து பழைய நண்பர்கள் மற்றும் தற்போதைய அரசியல்
பற்றி பல மணி நேரம் எங்களுடன் அளாவியதையும் சுட்டிக்காட்டப் போவதில்லை. மேலும் காந்திஜி
அவரது ‘யங்க் இந்தியா’ இதழில் அவ்வப்போது என்னைப் பற்றி எழுதிய நெகிழ்வான விஷயங்களையும்
குறிப்பிட்டு இந்த நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கவும் போவதில்லை. ஏனெனில் இந்த வழக்குக்கும்,
அந்த நினைவுகளுக்கும், எந்தத் தொடர்பும் கிடையாது என்பதே முக்கியக் காரணம். சில விஷயங்களிலும்,
சித்தாந்தங்களிலும், எங்கள் இருவருக்கும் இடையே அடிப்படை வேறுபாடு நிலவினாலும், பரஸ்பர
அபிமானம் இருந்ததால், தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் மரியாதையும், தனிப்பட்ட நல்லெண்ணமும்
கொண்டிருந்தோம்.
கடந்த சில வருட நிகழ்வுகளை மட்டுமே நான் கருத்தில்
எடுத்துக் கொள்கிறேன். ப்ராசிக்யூஷன் தரப்பு 1938ம் ஆண்டு முதல் பல கடிதங்களைச் சான்றாவணங்களாகச்
சமர்ப்பிக்க இந்த நீதிமன்றம் அனுமதித்தே இதற்குக் காரணமாகும். எனவே நானும் 1940 முதல்
என்னால் வெளியிடப்பட்டு பத்திரிகைகளில் அச்சான ஆறு அல்லது ஏழு பத்திரிகைச் செய்திக்
குறிப்புகளை மேற்கோள் காட்ட என்னைக் கட்டாயம் அனுமதிக்கவேண்டும். என்னுடைய இந்த வாக்குமூலத்தில்
அவற்றின் சாரத்தை மேற்கோள் காட்டுகிறேன். எனது நினைவிலிருந்து அவற்றை எடுத்திருக்க
முடியாது என்பதை நிரூபிக்க அவற்றின் மூல அச்சுப் பிரதிகளையும், இந்த வாக்குமூலம் தொடர்பான
கடிதங்களையும், பல்வேறு தேதிகளில் வெளியான பத்திரிகைச் செய்திகளையும் தனித்தனியாக இணைத்துள்ளேன்.
என்னுடைய வாக்குமூலத்தை உறுதிப்படுத்த அவற்றை இந்த நீதிமன்றம் படித்துப் பார்க்கும்
பட்சத்தில், இணைக்கப்பட்ட அந்தப் அச்சுப் பிரதிகள் பயனளிக்கும். எது எப்படியிருப்பினும்,
இணைக்கப்பட்ட அச்சுப் பிரதிகளை அச்சடித்துத் தர தீடீரென இன்றைக்கு ஆணையிட்டிருக்க முடியாது
என்பதை மட்டும் இவை நிரூபிக்கும்.
இந்த வாக்குமூலத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த அச்சுப்
பிரதிகள் அனைத்துமே என் வசம் இருந்த கோப்புகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்று ப்ராசிக்யூஷன்
தரப்பு சாட்சியான பிரதான் (எண் 129) என்பவரால் ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டவை
என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவை பிரதிவாதி சான்றாவணங்களாக எண் குறிக்கப்பட்டு
நீதிமன்றம் வசம் ஒப்படைக்கப்பட்டன.
(A)பண்டிட் நேரு குறித்த எனது பத்திரிகைச் செய்தி
பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு நான்கு ஆண்டு காலம்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது 1940 நவம்பர் 6ம் தேதி நான் வெளியிட்டு இந்தியா முழுவதுமுள்ள
அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியான பத்திரிகைச் செய்தி. இதன் சாராம்சம் ‘வீர் சாவர்க்கர்
சூறாவளிப் பிரசாரம்’ (Veer Savarkar’s Whirl-wind Propaganda)என்னும் எனது அறிக்கைகள்
அடங்கிய புத்தகத் தொகுப்பின் பக்கம் 262ல் காணலாம். இந்நூலை வெளியிட்டவர் திரு ஏ.எஸ்.
பிடே. இதை உறுதிப்படுத்த இதன் மூலப் பக்கங்கள் எனது வாக்குமூலத்துடன் தனியாக இணைக்கப்பட்டுள்ளன
(இணைப்பு A).
‘பண்டிட் ஜவாஹர்லால் நேருவுக்கு
விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு காலச் சிறைத் தண்டனை என்னும் செய்தி ஒவ்வொரு இந்திய தேசாபிமானிக்கும்
நிச்சயம் வருத்தமளிக்கும் அதிர்ச்சியாகும். எங்கள் இருவருக்கும் இடையே நிலவிய பல்வேறு
கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் காரணமாக வேறு வேறு சித்தாந்தங்களின் கீழ் பணியாற்றி
வந்தாலும், பொது வாழ்க்கை முழுவதும் தொண்டாற்றிய அவரது தேசாபிமானத்துக்கும் மனிதாபிமானத்துக்கும்
எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், அவர் தொடர்ந்து சந்தித்து வரும் கொடுமைகளுக்கு
எனது ஆழ்ந்த இரங்கல்களயும் தெரிவிக்காவிடில், இந்து சபாவைச் சேர்ந்தவன் என்னும் கடமையிலிருந்து
தவறியவன் ஆவேன்’ – சாவர்க்கர்.
(B)காந்திஜி மற்றும் நேருஜி கைது குறித்த எனது
பத்திரிகைச் செய்தி:
1942 ஆகஸ்ட்டில் தலைவர்கள் கைதானதைத் தொடர்ந்து
வெளியான பத்திரிகைச் செய்தியின் சாராம்சம் : (சான்றாவணம் டி.36)
‘தவிர்க்க முடியாதது நடந்தே
விட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னணி மற்றும் தேசாபிமானத் தலைவர்களான மகாத்மா காந்தி,
பண்டிட் ஜவாஹர்லால் நேரு மற்றும் நூற்றுக் கணக்கான தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். தேசாபிமானச் செயலுக்காக அவர்கள் சந்திக்கும் துயரங்களுடன் இந்து
சங்கடனைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட இரங்கல்கள் இணையும்’.
‘இந்தியாவில் நிலவும்
அமைதியின்மைக்குத் தீர்வு காண ஒரே சிறந்த வழி இந்திய – பிரிட்டிஷ் காமன்வெல்த்தில்
கிரேட் பிரிட்டனுக்கு இணையாகச் சரிசமமான உரிமைகளையும் கடமைகளையும், உள்ளடக்கிய முழு
சுதந்திரத்தையும், இணையான அந்தஸ்தையும் கொண்ட அரசியல் நிலையை வழங்குவதாக பிரிட்டிஷ்
பாராளுமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி அறிவிப்பதுடன், மேற்கண்ட அறிக்கையில் கூறியுள்ளதுபோல்
உண்மையான அரசியல் அதிகாரங்களை இந்தியாவுக்கு அளிக்க உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள
வேண்டுமென்றும், நான் மீண்டும் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்’ – சாவர்க்கர்.
(C)காந்திஜியின் உண்ணாவிரதம் குறித்த எனது பத்திரிகைச்
செய்தி:
சர் தேஜ் பகதூர் சாப்ரூ தலைமையில் டாக்டர் ஜெயகர்,
சர் ஜெகதீஷ் பிரசாத் மற்றும் ஏனைய தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
நானும் ஓர் உறுப்பினராக இருந்தேன். இப்பொறுப்பில் இருந்த காரணத்தால் 1943ம் ஆண்டு சிறையில்
இருந்தவாறே காந்திஜி மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்துக் கீழ்க்காணும் அறிக்கையை வெளியிட்டேன்
(சான்றாவணம் டி.79 பார்க்கவும்). (இணைப்பு B)- 1943 பிப்ரவரி 22 தேதியிட்ட ‘பயனீர்’
பத்திரிகையில் வந்த செய்திக் குறிப்பு.
‘காந்திஜியின் மோசமான
உடல் நிலை குறித்து நாம் அனைவரும் ஆழ்ந்த கவலை கொள்வதுடன், அவரது விலை மதிப்பற்ற உயிரைக்
காப்பாற்றவும், எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. நமக்குப்
பிடிக்கிறதோ இல்லையோ, காந்தியிஜியின் உயிரைக் காப்பாற்ற நாடு தழுவிய அளவில் நாம் அனைவரும்
கூட்டாக இணைந்து மகாத்மா காந்திஜியிடமே, அவர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு
வேண்டுகோள் விடுப்பது ஒன்றுதான் இப்போதுள்ள ஒரேயொரு மிகச் சிறந்த வழி என்பதை உணர வேண்டும்.
அவர் கேட்கும் திறனை இழப்பதற்கு முன்பாக நாம் இதைச் செய்யவேண்டும். இந்த வாய்ப்பின்
மீது அதிக நம்பிக்கை வைப்பது இப்போது கூட அபாயகரமானதுதான்.
காந்திஜியின் உயிரைக்
காப்பாற்ற அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அரசை இணங்க வைக்க எங்களால் இயன்ற
முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். உண்ணாவிரதமோ, தார்மிகமோ, மனிதாபிமான வேண்டுகோளோ,
அரசின் இதயத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று இப்போது நம்புவதில் எந்தப் பயனும்
இல்லை. மரணம் உள்ளிட்ட அபாயகரமான எந்த விளைவுகளுக்கும் பொறுப்பில்லை என்று கைகளை உதறிவிட்டுத்
தெளிவாக இருக்கின்றது. நேரம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருப்பதால் கோபிப்பதிலும், கண்டிப்பதிலும்,
எந்தவொரு வினாடியையும் வீணடிக்கக் கூடாது. அரசிடம் வைக்கும் வேண்டுகோள், ராஜினாமா அல்லது
தீர்மானம் மூலம் காந்திஜியின் விடுதலையைப் பெற முடியாது. மனிதாபிமானம் இல்லாத வைஸ்ராய்கள்
லாட்ஜ் கதவுகளின் முன்பு காத்திருப்பதை விட நமது முகங்களை காந்திஜியின் படுக்கை அருகே
திருப்பி, எந்த தேசத்துக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டாரோ, அந்த தேசத்தின் நலனுக்காக
அதை நிறுத்த வேண்டுமென்று அவரிடமே கோரிக்கை வைக்க வேண்டும்.
மரணம் என்னும் விபரீத
முடிவுக்குச் செல்வதற்கு முன்பாக இந்த உண்ணாவிரதத்தை நிறுத்த எந்தத் தார்மிகக் கேள்வியும்
குறிக்கே நிற்கப் போவதில்லை. தார்மிகக் கேள்விகள் அரசியல் காரணங்களுக்காகக் கேட்கப்படுகின்றன
என்பதால் அவை அவற்றின் அரசியல் பயன்பாடுகளாலேயே முக்கியமாகத் தீர்மானிக்கப்படும். காந்திஜியே
உண்ணாவிரதத்தை இரு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மேற்கொண்டார். முதலாவது அவரது உயிருக்கான
இடர்ப்பாடு என்பதை விடக் கடுமையான சோதனையை வெற்றி கொள்ளவே விரும்பினார். இதன் காரணமாக
இதுவொரு திறன் உண்ணாவிரதம் ஆகும். எத்தனை நாள்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அவர்
கூறினாலும், மேற்கூறிய இரு முக்கிய வரம்புகள் காரணமாக இதுவொரு அரைகுறைக் கணக்கே ஆகும்.
இரண்டாவது, இந்த அம்சம்
தவிர்த்து, ஏனைய விஷயங்களை விடவும் மேலோங்கும் வகையில், உயர்ந்த நோக்கம் உள்ளது. தனது
உயிரைப் பிணை வைத்து எந்த நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து சேவை செய்ய காந்திஜி விரும்பினாரோ,
இந்தச் சூழலில், அவரது இழப்பை விட, அவரது உயிர் விலை அளவிட முடியாத மதிப்பு கொண்டது
என அந்த நாடு உணர வேண்டும் என்பதே நோக்கமாகும்.
நமது வற்புறுத்தல் அல்லது
புகழ்ச்சிக்காக அரசு இணங்குவதை விடவும், இந்த தேசத்துக்காக அவர் இணங்குவதற்கான வாய்ப்புகள்
நிச்சயம் அதிகம். ஏனெனில் ராஜ்கோட் மற்றும் பல நடவடிக்கைகளில் அவர் எடுத்த மற்றும்
திரும்பப் பெற்றுக் கொண்ட உறுதிமொழிகள் தொடர்பான விஷயங்களை மேலோங்கும் வகையில் தேசிய
அளவிலான உயர் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிப்பார் என்பது நமக்குத் தெரிந்த விஷயமே.
இதன் காரணமாகத் தில்லியில்
நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் காந்திஜி உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுகோள்
விடுக்க வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
(D)ஜின்னாவுக்கு எனது பத்திரிகைச் செய்தி:
நான் சூராவார்டியை தீர்த்துக் கட்ட விரும்பியதாக
ஆப்தேவிடம் கூறியதாகத் தனது சாட்சியில் பேட்ஜ் கூறியுள்ளார். சூராவார்டி முஸ்லிமாக
இருப்பதால் என் மீது வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு இன்னும் ஏற்புடையதாக இருக்குமென
பேட்ஜ் நம்பியிருக்கலாம். சட்டம் ஒழுங்கை மதித்து வாழும் குடிமகன், இந்துவோ முஸ்லிமோ,
மத சம்பிரதாயங்கள் அல்லது அரசியல் கொள்கைகளில் மாறுபட்ட நம்பிக்கை கொண்டுள்ள யாராக
இருப்பினும், அவர்கள் மீதான உட்பகை மற்றும் சகோதர வன்முறைச் செயலை நான் தொடர்ந்து கடுமையாகக்
கண்டித்து வருகிறேன் என்பதற்கு 1943 ஜூலை 27 அன்று வெளியான பத்திரிகைச் செய்தியே சான்றாகும்.
அந்தச் செய்திக் குறிப்பில், அப்போது வரை இந்தியக் குடிமகனாகவும், சக நாட்டு மனிதனாகவும்
விளங்கிய முஸ்லிம் தலைவர் காயித்-ஏ-ஆசாம் ஜின்னா மீதான கொலை முயற்சியை நான் வன்மையாகக்
கண்டித்துள்ளேன் (சான்றாவணம் டி.8பார்க்கவும்).
‘ஜின்னாவின் மீதான கொலை
வெறித் தாக்குதலைக் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவர் மயிரிழையில் உயிர்
பிழைத்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் மனத்தளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்குக்
காரணம், முஸ்லிம்களுக்காகத் தீவிரமாகப் பாடுபட்ட அவரை ஒரு முஸ்லிமே கொல்ல முயன்றதுதான்.
இதுபோன்ற உட்பகை, தூண்டுதலற்ற மற்றும் கொலைவெறித் தாக்குதல், அதன் நோக்கம் அரசியல்
அல்லது வெறித்தனம் எதுவாக இருப்பினும், பொது மற்றும் குடிமை வாழ்க்கையில் கறையை ஏற்படுத்தும்
என்பதால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் – வி டி சாவர்க்கர்’.
ஜின்னாவின் பதில்:
எனது செயலர் பிட்டேவிடம் மேற்கண்ட அறிக்கையின்
நகலை ஜின்னாவுக்கு அனுப்புமாறு கூறினேன். அதைப் பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஜின்னா
1943 ஆகஸ்ட் 15 அன்று பிட்டேவுக்குக் கீழ்காணும் கடிதத்தை எழுதினார் (சான்றாவணம் டி/75).
மவுண்ட் பிளெசண்ட் சாலை,
மலபார் ஹில்
1 ஆகஸ்ட் 1943
அன்புடையீர்,
நீங்கள் அனுப்பிய சாவர்க்கர்
அறிக்கையின் பத்திரிகைச் செய்தி நகல் வந்து சேர்ந்தது. என் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலைக்
கண்டித்தும், அனுதாப அறிக்கை வெளியிட்டமைக்கும் சாவர்க்கருக்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.
உண்மையுள்ள,
(ஒப்பம்)எம் ஏ ஜின்னா
(E)மகாத்மாஜியின் பிறந்தநாள் குறித்த எனது பத்திரிகைச்
செய்தி:
1943 அக்டோபர் 2 ஆம் தேதி காந்திஜிக்கு அனுப்பிய
கீழ்க்காணும் தந்தியைப் பத்திரிகைச் செய்தியாக வெளியிட்டேன் (சான்றாவணம் டி/77).
‘மகாத்மா காந்திஜியின்
75ஆவது பிறந்தநாளில் அவருக்கும், நம் திருநாட்டுக்கும், இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்க இறைவனைப்
பிரார்த்திக்கிறேன் – சாவர்க்கர்’.
(F)கஸ்தூரிபா மரணம் குறித்த எனது பத்திரிகைச் செய்தி:
1944 பிப்ரவரி 23 அன்று காந்திஜிக்கு நான் அனுப்பிய
தந்தியும் பின்னர் பத்திரிகையில் வெளியான செய்தியும் (சான்றாவணம் டி/78 பார்க்க). ‘அமிர்த
பஜார் பத்திரிகை’ உள்ளிட்ட ஏனைய பத்திரிகைகளில் வெளியான செய்திக் குறிப்பும் இந்த வாக்குமூலத்தின்
இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது (இணைப்பு C).
‘கனத்த இதயத்துடன் கஸ்தூரிபாய்
மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விசுவாசமான மனைவியாகவும்,
அன்பான அன்னையாகவும் விளங்கியவர் இறைவனுக்கும், மனிதனுக்குமான சேவையில் உன்னதமான மரணத்தைத்
தழுவிக் கொண்டார். உங்கள் துக்கத்தை இந்த நாடே பகிர்ந்து கொள்கிறது – சாவர்க்கர்’.
(G)மகாத்மாவின் விடுதலை ஒட்டி நான் விடுத்த பத்திரிகைச்
செய்தி:
சிறையிலிருந்து காந்திஜியை விடுவித்தைத் தொடர்ந்து
1944 மே 7ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையும் பத்திரிகையில் வெளியான செய்தி (சான்றாவணம்
டி/81 பார்க்கவும்).
‘காந்திஜியின் முதிர்ந்த
வயது மற்றும் சமீபத்திய நோய் காரணமாக மோசமடையும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில்
கொண்டு அரசாங்கம் அவரை விடுவித்திருப்பது குறித்து தேசமே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.
இதுவொரு மனிதாபிமானச் செயல். காந்திஜி விரைந்து குணமடைய வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
அரசியல் காரணங்களுக்காக விசாரணை ஏதுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பண்டிட் நேரு
மற்றும் தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது வெளிப்படையான நீதி விசாரணைக்கு
உத்தரவிட்ட வேண்டும். அப்போதுதான் அரசு அவர்கள் மீது சுமத்தியுள்ள உண்மையான குற்றச்சாட்டுகள்
என்ன என்பதை இந்த நாடு தெரிந்து கொள்ளும் – வி டி சாவர்க்கர்.’
(தொடரும்)

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 5) | தமிழில்: ஜனனி ரமேஷ்

பகுதி 5



(17)
செல்வி. மோடாக் சாட்சி (பி. டபிள்யூ 60) :
இந்த
சாட்சியின் சான்றாவணத்தில் என் வழக்கு தொடர்பாக இரண்டு அல்லது மூன்று வரிகளே உள்ளன.
தனது சான்றாவணத்தின் பக்கம் 277ல் சாட்சி கூறுவதாவதுள்: ‘1948 ஜனவரி 14 அன்று ரயில்
பயணத்தின் போது, ஆப்தே மற்றும் கோட்சே இருவருக்குமான உரையாடலிலிருந்து சிவாஜி பூங்கா
அருகிலுள்ள சாவர்க்கர் சதனுக்குப் போக விரும்பியதாகத் தெரிய வந்தது’ என்கிறார்.
கோட்சேவும்
ஆப்தேவும் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பியதாக இந்தச் சாட்சி எந்த இடத்திலும்
சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாவர்க்கர் சதனுக்குப் போவதென்றால் சாவர்க்கரைச்
சந்திக்கத்தான் செல்லவேண்டும் என்று அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. சாவர்க்கர் சதன்
குறித்து ப்ராஸிக்யூஷன் தரப்பே அளித்த சான்றின் அடிப்படையில், மேற்கண்ட விளக்கத்தைப்
பார்க்கும்போது, ஆப்தேவும், கோட்சேவும், சாவர்க்கர் சதனில் வாடகைக்குக் குடியிருக்கும்
பரிச்சயமான பலரை அல்லது என் செயலரின் பொறுப்பில் தரைத்தளத்தில் இருந்த இந்து சங்கதன்
அலுவலகத்தில் அடிக்கடி கூடும் அவர்களது நண்பர்களான இந்து சபா ஊழியர்களைப் பார்க்க விரும்பியிருக்கலாம்.
நான் முதல் தளத்தில் வசிப்பதால், அலுவலகத்துக்கு வரும் மக்கள் கட்டாயமாக என்னைப் பார்க்க
வர வேண்டிய அவசியமில்லை. சாவர்க்கர் சதனுக்குப் பலமுறை வந்திருந்தாலும் என்னை ஒரே ஒருமுறைதான்
பார்த்ததாக ப்ராஸிக்யூஷன் தரப்பு சாட்சியான பேட்ஜே அவரது சான்றாவணத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்
(பக்கம் 222).
வாக்குமூலம்
பக்கம் 278ல் சாட்சி மேலும் கூறுகையில் ‘சாவர்க்கர் சதனுக்கு எதிரே தனது வாகனத்தை நிறுத்தியபோது
ஆப்தேவும், கோட்சேவும் இறங்கிக் கொண்டனர். ஆனால் அவர்கள் உண்மையில் சாவர்க்கர் சதனுக்குள்தான்
நுழைந்ததைத்தான் பார்க்கவில்லை’ என்கிறார். எனவே இந்த சாட்சிக்கு என்னைப் பொருத்தவரை
எந்த முக்கியத்துவமோ, உறுதிப்படுத்தும் மதிப்போ கிடையாது.
ஆப்தே
மற்றும் கோட்சேவை இருவராகவோ, இருவரில் ஒருவராகவோ, என் வீட்டுக்கு வந்ததை நான் பார்க்கவுமில்லை,
கேட்கவுமில்லை. மேலும் இருவரையும் சேர்ந்தோ, தனித்தனியாகவோ, அந்நாளிலோ, அடுத்த நாள்களிலோ,
பார்க்கவுமில்லை என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
(18) டாக்டர் ஜே சி ஜெயின் (பி.
டபிள்யூ. 67)
டாக்டர்
ஜெயின் என்னை நேரடியாகவும், உறுதியாகவும், குறிப்பிடும் ஒரே பகுதி அவருடைய வாக்குமூலத்தின்
பக்கங்கள் 299-300. அவர் பதிவு செய்துள்ளதாவது: ‘அகமதுநகரில் மதன்லாலின் பணிகளைக் கேட்ட
பிறகு இந்து மகாசபாவின் வீர சாவர்க்கர் என்னை (மதன்லால்) வரச் சொல்லி இரண்டு மணி நேரம்
பேசினார்’ என்று மதன்லால் சொன்னார். மேலும் வீர சாவர்க்கர் அவருடைய முதுகில் தட்டி
“தொடர்ந்து செய்” என்றார். அவ்வளவுதான்.
டாக்டர்
ஜெயினிடம் மதன்லால் சொன்னதாகக் கூறப்படும் இக்கதை குறித்து எனது கருத்தைக் கீழ்க்கண்டவாறு
சமர்ப்பிக்கிறேன்:
முதலாவதாக,
நான் மதன்லால் என்பவர் பற்றிக் கேள்விப்படவும் இல்லை, அவர் என்னைச் சந்திக்கவும் இல்லை,
அவரது பணிகள் குறித்து என்னிடம் விவரிக்கவும் இல்லை. அவருடன் எந்தச் சூழலிலும் உரையாடவும்
இல்லை. அவருடைய பணியைப் பாராட்டி அவர் முதுகில் தட்டி “தொடர்ந்து செய்” என்று சொல்லவும்
இல்லை.
இரண்டாவதாக,
என்னைச் சந்தித்த கதையை டாக்டர் ஜெயினிடம் மதன்லாலே சொன்னார் என்று வைத்துக் கொண்டாலும்,
அகமத் நகரில் ‘மதன்லால் பணி’ குறித்துத் தனது சான்றாவணப் பக்கம் 229ல் ஜெயின், ‘அகமத்
நகரில் தனது பணிகள் பற்றி என்னிடம் மதன்லால் விவரித்தார்’ என்று கூறியதுடன் ‘பட்வர்த்தன்
கூட்டத்தில் மதன்லால் தகராறு செய்ததுடன் என்னைத் தாக்கினார்; அகதிகள் மற்றும் இந்துக்களுக்காகத்
தன்னார்வக் குழுவை அமைத்தார்; நகரில் கட்சியைத் தொடங்கி ஆயுதங்களை வாங்கிக் குவித்ததுடன்
முஸ்லிம் பழக்கடைக்காரர்களை விரட்டி அடித்தார்’ என்றும் பதிவு செய்துள்ளார். அகமத்
நகரில் அவருடைய பணிகள் என்று ஜெயினே குறிப்பிட்டுள்ளார். பிறகு வீர சவார்க்கரைச் சந்தித்து
அகமத் நகரில் தனது பணிகளை அவரிடம் விவரித்ததாக மதன்லால் தன்னிடம் சொன்னதாகவும் ஜெயின்
குறிப்பிடுகிறார்.
இந்தத்
தொடர்ச்சியை நுணுக்கமாகக் கவனிக்கும் போது “இவற்றை” அல்லது “பணிகளில்” சிலவற்றை மட்டுமே
என்னிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. என்னை மதன்லால் சந்திக்க வந்த கதையைச் சொன்ன பிறகே
ஜெயின் அதன் பிற்பகுதியை பக்கம் 300ல் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்: ‘ஏதோவொரு தலைவரைக்
கொல்ல அவரது கட்சி சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் அந்தத் தலைவர் காந்திஜி என்றும்
கடைசியாகத் தன்னிடம் மதன்லால் தெரிவித்தாகவும்’ கூறுகிறார். எனவே இக்கதையின் தொடர்ச்சியிலிருந்து
காந்திஜியைக் கொலை செய்யும் சதித்திட்டம் தனியான திட்டம் என்பதும், “அகமத் நகரில் மதன்லால்
பணிகள்” என்று ஜெயின் முன்னர் சொன்ன நிகழ்வுகளின் பட்டியலில் இது சேராது என்பதும் தெளிவு.
எனவே
இதன் காரணமாக மதன்லால் என்னிடம் சொன்னதாகக் கூறப்படும் விஷயங்களில் அகமத் நகர் பணிகள்
மட்டுமே அடங்கும் என்றும் காந்திஜியைக் கொலை செய்யும் சதித்திட்டம் குறித்து என்னிடம்
எதுவும் கூறவில்லை என்பதும் தெளிவு. மேலும் மற்றும் இந்த அனுமானம் தவிர்த்துக் கவனிக்க
வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், டாக்டர் ஜெயினின் சாட்சியம் முழுவதும் காந்திஜியைக்
கொல்லும் சதித்திட்டம் பற்றி மதன்லால் என்னிடம் கூறியதற்கு ஆதரவாகவோ, அந்தக் கட்சியுடன்
எனக்குக் குறைந்தபட்சம் தொடர்போ, அறிவோ இருப்பதாகவோ, ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.
மாறாக, மதன்லாலின் கட்சி உறுப்பினர்களின் பெயர்களோ, ஏனைய விவரங்களோ, அவரைப் பற்றியோ
கூட அதிகம் தெரியாது என்று டாக்டர் ஜெயின் தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார். (பி. டபிள்யூ
67 பக்கங்கள் 306 & 308).
கூறப்படும்
சதித்திட்டத்துடன் என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்புபடுத்த முடியாத சூழலில், மதன்லால்
என்னைச் சந்தித்தது குறித்த இந்தப் பதிவுக்கு எந்த சாட்சியும் இல்லை என்பதைத் தாழ்மையுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்றாவதாக,
டாக்டர் ஜெயின் அல்லது திரு அங்கத் சிங்க் அல்லது மாண்புமிகு திரு தேசாய் ஆகியோர் எந்த
நிலையிலும் மதன்லால் கதையை நம்பவோ அல்லது அது பற்றிய குறிப்புகளையோ பதிவு செய்யவில்லை
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக்
கதையின் சாரங்கள் பிரத்யேகமாக நினைவாற்றலின் அடிப்படையில் டாக்டர் ஜெயின் அளித்திருக்கும்
பட்சத்தில், பழமொழிக்கேற்ப விலாங்கு மீனைப் போன்று மனித நினைவும் ஞாபகமும் நழுவும்
தன்மை கொண்டதால், ஒன்றுக்கொன்று மாறுபடும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
மதன்லால் என்னைச் சந்திக்க வந்ததைக் குறிக்கும் அப்பகுதி, என்னைத் தொடர்புபடுத்தும்
ஒரே பகுதி, காவல் துறையின் அழுத்தம் காரணமாகப் புனையப்பட்டுள்ளது என்பது கீழ்க்காணும்
காரணங்களால் தெள்ளத் தெளிவாகிறது:
நான்காவதாக,
என்னைப் பற்றிய மதன்லாலின் கதை குறித்த டாக்டர் ஜெயினின் கருத்திலுள்ள நேர்மை தொடர்பாக
எனது மேற்கண்ட ஆட்சேபணை, சந்தேகத்துக்கு இடமின்றித் தோன்றியதற்குக் காரணம், குற்றவியல்
நீதிபதி முன்பான தனது வாக்குமூலத்தில், அவர் இதுபோல் எதையுமே பதிவு செய்யவில்லை என்பதுதான்.
குற்ற வழக்கு விசாரணை முறைத் தொகுப்புச் சட்டம் பிரிவு 161ன் கீழ் அளிக்கும் வாக்குமூலத்தை
விட பிரிவு 164ன் கீழ் அளிக்கும் வாக்குமூலத்துக்குச் சான்றளிப்பு ஆற்றலும் மதிப்பும்
அதிகம். ஆனால் பம்பாய் குற்றவியல் நீதிபதி முன்பு அவர் அளித்த புனிதமான உறுதிமொழி மீதான
வாக்குமூலத்தில், நீதிமன்றத்தில் இருந்து காவல் துறையை அப்புறப்படுத்தி, அழுத்தத்திலிருந்து
டாக்டர் ஜெயினின் மனச்சாட்சியை சிறிது நேரம் விடுவித்த போது, மதன்லால் என்னைச் சந்தித்தார்
என்னும் தற்போதைய பொய்யான கட்டுக்கதையை டாக்டர் ஜெயின் அப்போது கூறவில்லை.
அவர்
அதைச் சொன்னார் என்றோ, குற்றவியல் நீதிபதி அதைப் பதிவு செய்யவில்லை என்றோ பொருளல்ல.
டாக்டர் ஜெயின் அதை அவரிடம் சொல்லவே இல்லை. குறுக்கு விசாரணையின் போது பக்கம் 303ல்
தனது சாட்சியில் அவர் தெளிவுபடுத்தியதாவது: ‘வீர சாவர்க்கர் தனக்குச் சொல்லி அனுப்பியதாக
மதன்லால் கூறியதாகவோ, இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவருடன் உரையாடியதாகவோ, தன் முதுகில்
தட்டி “தொடர்ந்து செய்யுங்கள்” என்று சொன்னதாகவோ நான் குற்றவியல் நீதிபதி முன்னிலையில்
பதிவு செய்யவே இல்லை. காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த போது கூட ‘தொடர்ந்து செய்யுங்கள்’
என்பது குறித்த எந்தப் பதிவும் இல்லை. இந்த நீதிமன்றத்தின் முன் மறு விசாரணையின் போது
டாக்டர் ஜெயின் ப்ராசிக்யூஷனை இதிலிருந்து விடுவிக்க முயன்று கடைசியில் சிக்கலை இன்னும்
அதிகமாக்கிவிட்டார். அதாவது மதன்லால் என்னைச் சந்தித்தது தொடர்பான கதையை ஏற்கெனவே காவல்
துறை மற்றும் மாண்புமிகு உள்துறை உறுப்பினர் (ஜெயின் வாக்குமூலம் பக்கம் 311) ஆகியோரிடம்
தெரிவித்துவிட்டதால், குற்றவியல் நீதிபதி முன்பு சொல்லவில்லை என்று பதிலளித்துள்ளார்.
காவல்துறை
மற்றும் அமைச்சரிடம் மதன்லால் கதையிலுள்ள முக்கிய விவரங்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு
முறை ஜெயின் தனது வாக்குமூலத்தில் குற்றவியல் நீதிபதியிடம், விற்பனை செய்த புத்தகங்கள்
மற்றும் வெடி மருந்துகள் உள்படக், கூறியுள்ள நிலையில் அவரது பதில் அர்த்தமற்றதாக உள்ளது.
இருப்பினும் குற்றவியல் நீதிபதியிடம், மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படுவதை,
அதாவது, இப்போது ப்ராக்சிக்யூஷன் தரப்பு எனக்கு எதிராக வழக்கின் தொடக்கப் புள்ளியாக்க
எண்ணுவதை மட்டும் டாக்டர் ஜெயின் சொல்லவில்லை. இதுபோன்ற புனைந்துரைக்கப்பட்ட கதைகளை
புனிதமான உறுதிமொழியின் அடிப்படையில் உண்மையானவை என்று குற்றவியல் நீதிபதி முன்பாக
கூறும் நிலையில் டாக்டர் ஜெயின் இல்லை என்பதே உண்மையான காரணமாகும்.
ஐந்தாவதாகப்,
படுகொலை திட்டம் குறித்து டாக்டர் ஜெயினிடம் உண்மையிலேயே மதன்லால் கூறியிருந்தால் அதைத்
தடுக்கச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் ஏன் கூறவில்லை? ஒரு நல்ல குடிமகனாக குற்றவியல்
சதித் திட்டங்களை உரிய நேரத்தில் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உதவுவது தனது கடமை என்பதை
அறிவேன் என்று டாக்டர் ஜெயின் தனது வாக்குமூலத்தில் (பக்கம் 303) ஒப்புக் கொண்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் இத்தகவலை முன் கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என்று பின்னர் கடிந்து
கொண்டார். சதித் திட்டம் தொடர்பான மதன்லால் கதையைத் தான் முக்கியமாகக் கருதவில்லை என்பதே
டாக்டர் ஜெயினின் ஒரே பதிலாக இருந்தது (பக்கம் 309). ஆனால் அவரது இந்தச் சமாதானம் முற்றிலும்
பொய் என்பதற்கு, இதை முக்கியமாகக் கருதி தில்லியிலுள்ள அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக
இருக்குமாறு கூறுவார் என்ற நோக்கில் ஜெய் பிரகாஷிடம் “தில்லியில் நடைபெறவிருக்கும்
மிகப் பெரிய சதித்திட்டம்” பற்றி விவரித்ததற்கு அவரது சொந்த ஒப்புதல் வாக்குமூலமே சாட்சியாகும்
(ஜெயின் வாக்குமூலம் பக்கம் 301).
தில்லியிலுள்ள
அரசை எச்சரிக்கும் அளவுக்கு இந்தக் கதை முக்கியம் எனில் பம்பாய் அரசிடமும் தகவல் தெரிவிக்கும்
அளவுக்கு அது நிச்சயம் முக்கியம் ஆகும். பம்பாய் காவல் துறையிடம் தகவலைத் தெரிவிக்கத்
தான் அச்சப்படுவதாகவும், ஆனால் குண்டு வெடிப்பு நடந்த பிறகு எந்தத் தயக்கமும் இல்லாமல்
தொடர்பு கொண்ட பம்பாய் பிரதமரிடம் சொல்ல பயப்படவில்லை என்று இன்னொரு சமாதானம் சொல்கிறார்
டாக்டர் ஜெயின். இந்தக் குழப்பமும், சுய-முரண்பாடும் கொண்ட இச்சாட்சியின் குணமே, இப்போது
அவர் சொன்னது போன்றும், பின்னர் புனைந்தது போன்றும், மதன்லாலிடம் இருந்து எந்தவொரு
கதையையும் டாக்டர் ஜெயின் கேட்கவில்லை என்னும் தவிர்க்க முடியாத முடிவுக்கு நம்மை அழைத்துச்
செல்கிறது.
ஆறாவதாக,
குண்டு வெடிப்புக்குப் பிறகு இந்த முழுக் கதையையும் டாக்டர் ஜெயின் மற்றும் அங்கத்
சிங்க் புனையத் தூண்டிய நோக்கமும் கூட அவர்களது வாக்குமூலத்தின் உட்பொருளைக் கூர்ந்து
படித்தால் சுயமாகவே வெளிப்படையாகும். மதன்லாலுடன் டாக்டர் ஜெயின் நெருக்கமாகவே இருந்துள்ளார்.
மதன்லாலிடமிருந்து அவருக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. சில கடிதங்கள் அவர் வசம்
இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனது புத்தகங்களை விற்பதற்காக பல நபர்களை மதன்லால்
சந்தித்துள்ளதால் டாக்டர் ஜெயினுடனான மதன்லாலின் தொடர்பைப் பலர் அறிந்துள்ளனர். எனவே
1948 ஜனவரி 21 தேதியிட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் காந்திஜியின் பிரார்த்தனைக்
கூட்டத்தில் குண்டு வெடித்ததாகவும், குற்றத்தைச் செய்ததற்காக மதன்லால் என்பவர் கைது
செய்யப்பட்டதகாவும், அதைப் படித்தவுடன் தனக்கும் ஏதேனும் பிரச்சினை வருமோ என்று பயந்து
கவலைப்பட்டதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்கு முன்பாகவே ‘டைம்ஸ்
ஆஃப் இந்தியா’ நாளேட்டில் மதன்லால் என்ற பெயரைத் தான் படித்ததாகவும் டாக்டர் ஜெயின்
ஒப்புக் கொள்கிறார் (டாக்டர் ஜெயின் வாக்குமூலம் பக்கம் 301).
மதன்லாலுடன்
தங்களுக்கு இருக்கும் நெருக்கமான தொடர்பு பற்றி அவர் கட்டாயம் வெளிப்படுத்துவது குறித்தும்,
அதன் தொடர்ச்சியாக ஏற்படவுள்ள இடர் பற்றியும், டாக்டர் ஜெயின் மற்றும் திரு அங்கத்
சிங்க் ஆகியோர் அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கையாகத் தங்களைத் தயார்ப்படுத்திக்
கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. சதித் திட்டம் தொடர்பாக ஏதோவொரு தகவல், உண்மையோ,
பொய்யோ, அதை அதிகாரிகளுக்குத் தெரிவித்து உதவுவதன் மூலம் தங்களை வீரம் மிக்க குடிமகன்களாகக்
காட்டிக் கொள்ளும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விடவும் வேறென்ன சிறப்பாக இருக்க
இயலும்? குண்டு வெடிப்பின் பின்னணியில் ஏதோவொரு சதித் திட்டம் இருப்பதாக அன்றைய காலைத்
தினசரிகள் ஏற்கெனவே குறிப்பாக செய்தி வெளியிட்டிருந்தன. டாக்டர் ஜெயின் அந்தக் குறிப்பையே
தனது கதையின் அடிப்படையாக எடுத்துக் கொண்டார்.
மதன்லால்
இந்து சிந்தனையுடன் அகதிகளிடம் பணியாற்றிக் கொண்டிருப்பதையும், நான் இந்து சங்கதான்களின்
அங்கீகரிக்கப்பட்ட தலைவராக மக்களிடையே பிரபலமாக இருப்பதையும் டாக்டர் ஜெயின் அறிவார்.
மதன்லாலுடனும் சதித் திட்டத்துடனும் என்னைத் தொடர்புபடுத்திக் கதைக்குள் பொருத்திவிட்டால்,
காவல் துறைக்கும் பொது மக்களுக்கும் கட்டாயம் அதுவொரு தலைப்புச் செய்தியாக மிகப் பெரிய
அளவில் பரபரப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகக் காவல் துறைக்கு முன் கூட்டியே சதித்
திட்டம் பற்றிய தகவலைத் தெரிவிக்காமல் இருந்த குற்றத்துக்காக டாக்டர் ஜெயின் கட்டாயம்
மன்னிக்கப்படுவார். எனவேதான் டாக்டர் ஜெயின் அவசர அவசரமாக உள்துறை உறுப்பினரிடம் தனது
கற்பனைக் கதையைக் கூறியுள்ளார். டாக்டர் ஜெயின் சாட்சியிலுள்ள இந்த முரணும், குழப்பமுமே,
இந்தக் கதையின் தோற்றம் புனைவு என்பதைச் சாத்தியமாக்குகிறது.
ஏழாவதாக,
இந்த நீதிமன்றத்தின் முன்பு மதன்லால் அளித்த வாக்குமூலத்தில் மகாத்மா காந்திக்குக்
கெடுதல் விளைவிக்கும் எந்தச் சதித்திட்டத்தையும் மறுத்ததுடன், அதுபோன்ற சதித்திட்டத்தில்
தான் எப்போதுமே ஈடுபட்டதில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் பதிவே டாக்டர் ஜெயின் கதையை
ஏற்றுக் கொள்ள முடியாததாக்கி உள்ளது.
எட்டாவதாக,
டாக்டர் ஜெயின் என்னைத் தொடர்புபடுத்தி, அதாவது, மதன்லால் என்னைச் சந்தித்ததாகக் கூறப்படுவது
பற்றி டாக்டர் ஜெயினிடம் அவர் சொன்னதைத் துல்லியம் மற்றும் உண்மை என்றே வைத்துக் கொண்டாலும்,
டாக்டர் ஜெயினிடம் மதன்லால் சொன்னது உண்மைதானா என்பதை நிரூபிக்க இது போதுமானதாக இல்லை.
மதன்லால் குறித்த ஜெயின் மற்றும் அங்கத் ஆகியோரின் கருத்து, அவர்களே சொன்ன வார்த்தைகள்
மூலமாகவே மேற்கோள் காட்டுவதெனில் ‘தன்னைப் பற்றியே அதிகம் பீற்றிக் கொள்ளும் இளைஞனின்
பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை’ என்பதே. ஆனால் இவரைப் போன்ற
இளைஞர் ஒருவர், டாக்டர் ஜெயினின் மனத்தில் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிரயாயத்தையும்,
முக்கியத்துவத்தையும் அழுத்தமாக உணர்த்த, இதுபோன்ற ஒரு கதையை, அதாவது, இந்து மகா சபையின்
தலைவரான வீர சாவர்க்கரே தன்னை அழைத்து முதுகில் தட்டி வாழ்த்தினார் என்று கூற எண்ணுவது
இயற்கையே.
மதன்லால்
என்னைச் சந்திக்க வந்த போது டாக்டர் ஜெயின் உடனில்லை என்பதுடன் மதன்லாலுக்கும் எனக்கும்
இடையே நடைபெற்றதாகச் சொல்லப்படும் உரையாடலைத் தனிப்பட்ட முறையில் அவர் கேட்கவும் இல்லை
என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே டாக்டர் ஜெயினிடம் மதன்லால் சொன்னதாகக் கூறப்படுவது,
நான் மதன்லாலிடம் கூறியதாக அவரே சொன்ன கட்டுக்கதை ஆகும். ஆகவே ஜெயினிடம் சொன்னது செவி
வழிச் செய்தியே தவிர, அதன் உண்மை மற்றும் நம்பகத் தன்மையை அவர் உறுதிப்படுத்தியிருக்க
வாய்ப்பே இல்லை. அதேபோல் மதன்லால் என்னைச் சந்தித்ததாகக் கூறப்படும் கதை தொடர்பாக அதை
நிரூபிக்கப் ப்ராசிக்யூஷன் தரப்பும் எந்தவொரு சான்றாவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
ஆகவே நான் தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில், டாக்டர் ஜெயின் சாட்சியின் சான்றாவணப்
பக்கங்களில் இடம்பெற்றுள்ள இப்பகுதி, அதாவது, மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படும்
கதையும் இருவருக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் உரையாடலும், தெளிவற்ற, உறுதிப்படுத்தப்படாத,
நிரூபிக்கப்படாத, செவி வழிச் செய்தியே ஆகும். ஆகவே சட்டப்படி இவை ஏற்கத்தக்கதல்ல என்பதுடன்,
ஒருவேளை இவை பதிவு செய்யப்பட்டிருப்பின், இந்த நீதிமன்றம் அவற்றைக் கருத்தில் கொள்ளாமல்
நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படும்
கட்டுக்கதையின் ஆசிரியர் யாராக இருந்தாலும் அது முழுவதும் பொய் என்பதை மீண்டும் ஒரு
முறை தாழ்மையுடன் வலியுறுத்துகிறேன். நான் மதன்லால் என்பவர் பற்றிக் கேள்விப்பட்டதும்
இல்லை, அவரைச் சந்தித்ததும் இல்லை.
(19)
திரு அங்கத் சிங்க் மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு தேசாய் (பி. டபிள்யூ
72 மற்றும் 78) சாட்சி குறித்து நான் சமர்ப்பிப்பது என்னவெனில்:
முதலாவதாக,
இது செவிவழிச் செய்தி என்பதாலும், அதிலும் மூன்றாம் தரச் செவிவழிச் செய்தி என்பதாலும்,
சட்டத்தின் முன்பு இதைச் சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. சாட்சிகளிடமிருந்து நீதிமன்றம்
கதையைக் கேட்கிறது. அக்கதையை டாக்டர் ஜெயினிடம் இருந்தும், அதை அவர் மதன்லாலிடம் இருந்தும்
கேட்கிறார். மொத்தத்தில், சொன்னதாகக் கூறப்படும் கதை உறுதிப்படுத்தப்படாதது, நிரூபிக்கப்படாதது
மற்றும் ஆதாரமற்றது என்பதுடன் மதன்லாலே இதுபோல் தான் யாரிடமும் சொல்லவில்லை என்றும்
அத்தனையும் பொய் என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இரண்டாவதாக,
இந்தக் கதை, உண்மையோ, பொய்யோ, மதன்லால் டாக்டர் ஜெயினிடம் உண்மையிலேயே சொல்லப்பட்டது
என்பதை நிரூபிக்க மட்டுமே இவ்விருவர்களின் சான்றாவணம் எனில், நான் தாழ்மையுடன் சமர்ப்பிப்பது
என்னவெனில் ஜெயின் இதை பலரிடம் சொன்னார் என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு கூட நிரூபிக்க
முடியாது. மதன்லால் இதைத் தன்னிடம் சொல்லும்போது நான் தனியாக விடப்பட்டேன் என்று ஜெயின்
தெளிவாகச் சொன்னதே இதற்குக் காரணம் ஆகும் (ஜெயின் வாக்குமூலம் பக்கக் 299). இதைத் தவிர
இந்தக் கதையை மதன்லால் டாக்டர் ஜெயினிடம் சொன்னார் என்பதை நிரூபிக்க வேறொரு சாட்சியும்
இல்லை. மதன்லால் அவரிடம் எதுவுமே சொல்லவில்லை என்றாலும் கூட ஜெயின் அதை ஏராளமான நபர்களிடம்
சொல்லி இருக்கலாம்.
மூன்றாவதாக,
இதுபோன்ற சான்றாவணம் ஐ.இ.ஏ. பிரிவு 157ன் கீழ் ஏற்கத்தக்கதல்ல என்பது கீழ்க்காணும்
(சர்க்காரின் இந்தியச் சாட்சியச் சட்டம், 7வது பதிப்பு பக்கம் 1374ல் இருந்து எடுக்கப்பட்டுள்ள)
சிறு சுருக்கத்திலிருந்து விளங்கும்: “உங்களின் பல நண்பர்களுக்குச் சொல்லிவிட்டுப்
பின்னர் அவர்களை நீங்கள் சொன்னது உண்மை என்று நிரூபிக்கச் சாட்சிகளாக வரச் சொல்லி சாட்சிகளை
உருவாக்குவது சுலபம். இந்தப் பிரிவு காதால் கேட்ட சாட்சியை உறுதிப்படுத்தும் சான்றாக
ஏற்றுக் கொள்வதில்லை”.
நான்காவதாக,
இந்த இரு சாட்சிகளின் சான்றாவணமும் பிரிவு 157ன் கீழ் வராததற்கு இன்னொரு காரணம் அதில்
குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை நிறைவு செய்யாமையே ஆகும்.
ஐந்தாவதாக,
அங்கத் சிங்கின் சான்றாவணம், ஒரு கதை ஒருவர் வாயிலிருந்து மற்றொருவர் வாய்க்குச் செல்லும்போது
மாறுபடுவதுடன் அபாயகரமாகவும் இருப்பதைச் சிறப்பாகத் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும்
கதை சொல்பவர்கள் எழுத்துபூர்வமாக எதையும் பதிவு செய்யாத நிலையில், காதால் கேட்ட சாட்சிகளை
நம்புவது அநீதி ஆகும். இதை அங்கத் சிங்கே எழுத்துபூர்வமாக எதையும் பதிவு செய்யவில்லை
என்று ஒப்புக் கொண்டுள்ளார் (அங்கத் சின் வாக்குமூலம் பக்கம் 334). உதாரணத்துக்கு அங்கத்
சிங்க் (வாக்குமூலம் பக்கம் 332 & 333ல்) கூறுவதாவது: ‘மதன்லால் தன்னிடம் (ஜெயின்)
சொன்னதாக டாக்டர் ஜெயின் கூறுவது என்னவெனில் “என்னுடைய (மதன்லால்) கட்சிக்கு ஆதரவராகச்
சாவர்க்கர் இருக்கிறார், அதாவது மதன்லால் சொல்வதுபோல் சதித் திட்டத்தின் பின்னணியில்
சாவர்க்கர் உள்ளார் என்றும் இது உண்மையாகும்” என்பதாகும். இப்போது டாக்டர் ஜெயினின்
வாக்குமூலம் முழுவதிலும், எந்தவொரு இடத்திலும், சாவர்க்கர் தனது கட்சிக்கு ஆதரவாக அல்லது
சதிக்கு உடந்தையாக இருப்பதாக மதன்லால் அவரிடம் கூறியதாக ஓரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.
மேலும் இந்த நெறி தவறிய கதையை அங்கத் சிங்கிடம் மீண்டும் ஒரு முறை சொன்னதாகவும் டாக்டர்
ஜெயின் பதிவு செய்யவில்லை. எனக்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ஜெயின் தனது
சாட்சியில் மீண்டும் சொன்ன இக்கதையின் தொடர்ச்சியைக் கூட அங்கத் சிங்க் திரித்துள்ளார்.
எனவே அங்கத் சிங்கின் இந்த வாக்குமூலம் செவிவழிச் செய்தி மட்டுமின்றி, தீய நோக்கம்
கொண்ட செவி வழிச் செய்தியுமாகும்.
ஆறாவதாக,
மாண்புமிகு அமைச்சர் வாக்குமூலத்தில் கவனிக்க வேண்டிய முதல் அம்சம் என்னவெனில் இது
1948 ஜனவரி 21 தொடங்குவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இதைப் படிக்க வேண்டும். இந்தக்
கதை குறித்து எந்த நேரத்திலும் எந்தக் குறிப்புகளையும் எழுதவில்லை என்பதையும் அமைச்சர்
ஒப்புக் கொள்கிறார் (பி. டபிள்யூ 78 பக்கம் 38). மேலும் டாக்டர் ஜெயின் அவரிடம் சொன்னதை
மட்டுமே தொடர்புபடுத்தி உள்ளதால், இவரது சாட்சிக்கும் திரு அங்கத் சிங்கைப் போன்றே
எந்த உண்மையான மதிப்பும் இல்லை.
ஆகவே
நான் மீண்டும் ஒருமுறை தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில் மதன்லால் என்னை ஒருபோதும்
சந்திக்கவே இல்லை என்பதுடன் நானும் அவருடன் எந்தத் தருணத்திலும் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும்
வைத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மேற்கண்ட பத்திகள்
18 மற்றும் 19 அளிக்கப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில், நான் குற்றவாளி அல்லது நிரபராதி
எப்படியிருப்பினும், டாக்டர் ஜெயின், அங்கத் சிங்க் மற்றும் மாண்புமிகு மொரார்ஜி தேசாய்
ஆகியோரின் சான்றாவணங்களைப் பரிசீலனையிலிருந்து விலக்க வேண்டுமென நீதிமன்றத்தைத் தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேன்.
(20) ட்ரங்கால் அழைப்பு
1948
ஜனவரி 9 காலை 9.20 மணிக்கு தில்லி 8024ல் இருந்து பம்பாய் 60201க்குப் பதிவு செய்யப்பட்ட
தொலைபேசி அழைப்பு (பி 70) தொடர்பாக இதுவரை பி.டபிள்யூ 23, பி.டபிள்யூ 40, பி.டபிள்யூ
41, பி.டபிள்யூ 42, பி.டபிள்யூ 93 என மொத்தமாக 5 சாட்சிகளை ப்ராசிக்யூஷன் தரப்பு விசாரித்துள்ளது.
நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்த பிறகு ப்ராசிக்யூஷன் தரப்பு கடைசியாக சாதித்தது என்ன?
யாரோ ஒருவர் (அவர் யார் என்று எவருக்குமே தெரியாது) தாம்லே அல்லது கசர்-க்கு (இதிலும்
தெளிவில்லை) ட்ரங்க் கால் பதிவு செய்தார் என்பது மட்டுமே. தாம்லே அல்லது கசர் என்ற
பெயரில் அப்போது யாருமே இல்லாததால் கடைசியில் அந்த ட்ரங்க் கால் அழைப்பும் பயனற்றுப்
போய்விட்டது. மேலும் ப்ராசிக்யூஷன் தரப்புக்கு அந்த ட்ரங்க் கால் அழைப்பின் உள்ளடக்கம்
கூடத் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பி.70 மற்றும் பி.59 ஆகியவற்றின்
பொருண்மைகள் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுவதால் இரண்டையுமே சேர்த்துப் படிக்க வேண்டும்.
சாவர்க்கர் சதன் தரைத்தளத்தில் படிக்கும் அறையில் ஒரு தொலைபேசி இணைப்பு இருப்பதும்,
அதை அந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர்களும், இந்து சங்கதான் அலுவலகத்துக்கு
வரும் இந்து மகாசபா செயலாளர்களும், ஊழியர்களும் பயன்படுத்துகின்றனர் என்பதும் ஏற்கெனவே
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது (பி. டபிள்யூ 57 பக்கம் 24 & 25, பி. டபிள்யூ 130 பக்கம்
7 பார்க்கவும்). மகாசபா பணிகள் தொடர்பாக தில்லியிலுள்ள இந்து சபா பவனிலிருந்து ஏராளமான
ட்ரங்க் கால் அழைப்புகள் என் வீட்டிலுள்ள இந்து சங்கதான் அலுவலகத்துக்கு வரும்.
இந்த
ட்ரங்க் கால் தனிநபர் அழைப்பாக தாம்லே மற்றும் கசர் ஆகிய பெயர்களில் பதிவு செய்யப்பட்டனவே
தவிர என் அலுவலகச் செயலாளர்கள் பெயர்களில் அல்ல. தில்லியிலுள்ள தாம்லே அல்லது கசர்
ஆகியோரின் நண்பர்கள் யாரேனும் சட்ட ரீதியான பணிகளுக்காக அந்த ட்ரங்க் கால் அழைப்பைப்
பதிவு செய்திருக்கலாம். தொலைபேசி அழைப்பின் இரு முனைகளிலும் எனது பெயர் எங்கேயும் தொடர்புபடுத்தப்படவில்லை.
இருப்பினும் ப்ராசிக்யூஷன் தரப்பு இந்த ட்ரங்க் கால் அழைப்பு யாருக்கு எதிரானது என்று
யாருக்குமே தெரியாமல் நிரூபிக்க முயன்று, கடைசியில் எதையுமே நிருபிக்க முடியவில்லை
என்பதை மட்டுமே நிரூபிக்க, ஐந்து சாட்சிகளையும் மிகத் தீவிரமாக விசாரித்து வெற்றி பெற்றுள்ளது.
(21) தி இந்து ராஷ்ட்ர தளம்
இந்து
சங்கதான் இயக்கத்தின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளப் பல இந்து தன்னார்வ அமைப்புகள் உள்ளன.
அவை பல்வேறு தளங்களில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. அவற்றுள் இந்து ராஷ்ட்ர தளம்
ஒன்றாகும். கோட்சே, ஆப்தே மற்றும் ஏனைய ஊழியர்கள் அதை நிர்வகித்து வருகின்றனர். அதன்
உறுப்பினர்களுள் (பக்கம் 232) ஒருவரான பேட்ஜ் தளத்தின் நோக்கம் தேர்தல்களில் மகாசபா
வேட்பாளர்களுக்கு உதவுவது, பிரசாரப் பணிகளை மேற்கொள்வது, ஒழுங்குபடுத்துவது மற்றும்
கட்டுப்பாட்டைப் பராமரிப்பது ஆகியவை என்று தனது வாக்குமூலத்தில் (பக்கம் 245) கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர்கள் அழுத்தம் தந்தபோதும் அதன் தலைவராகவோ உறுப்பினராகவோ என்னை நான் அடையாளப்படுத்திக்
கொள்ளாததற்குக் காரணம் மகாசபாவின் தலைவர் என்ற முறையில் ஏனைய இந்து சங்கதான் துணை அமைப்புகளின்
மீது எனக்கிருக்கும் அனுதாபம் மட்டுமே ஆகும். இந்த அமைப்பு வெளிப்படையான மற்றும் மக்களுக்கான
அமைப்பாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறது. அதன் வருடந்திர முகாம்களில் கூட
நான் பங்கேற்க முடியாமல் போனதால் சில தருணங்களில் அவர்களது மன வருத்தத்தையும் சம்பாதிக்க
நேர்ந்தது. ஏனைய இந்து தன்னார்வ அமைப்புகளைப் பொதுவாக வாழ்த்தியது போலவே நான் இதையும்
வாழ்த்தினேன். அவ்வளவே.

(தொடரும்…)

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு: சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 4) – தமிழில்: ஜனனி ரமேஷ்



பகுதி 4
மூன்றாவதாக, அதே
காரணத்துக்காக பேட்ஜின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் அவரே பேசியதாவது: ‘அடுத்த
5 அல்லது 10 நிமிடங்களில் ஆப்தேவும், கோட்சேவும் கீழே இறங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து
சாவர்க்கரும் உடனே இறங்கினார். கோட்சே மற்றும் ஆப்தேவிடம் சாவர்கர் கூறியதாவது: ‘வெற்றியுடன்
திரும்பி வாருங்கள்’. இந்த வாக்கியத்தை நான் சொன்னேன் என்றே வைத்துக் கொண்டாலும், அது
நிஜாம் ஒத்துழையாமை அல்லது அக்ரணி தினசரிக்கு நிதி திரட்டுதல் அல்லது இந்து ராஷ்ட்ர
பிரகாஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்றல் அல்லது வேறெந்த சட்டப்பூர்வ விஷயத்துக்கான
பொருள்களாகவும், பணிகளாகவும் இருக்கலாம். மாடியில் என்னுடன் ஆப்தேவும் கோட்சேவும் என்ன
பேசினார்கள் என்று பேட்ஜுக்குத் தெரியாத நிலையில் ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’
என்று எது குறித்து நான் சொன்னேன் என்று அவரால் கட்டாயம் உறுதிப்படுத்த முடியாது.

நான்காவதாக என்
வீட்டை விட்டு வெளியேறி இன்னொருவர் வீட்டுக்கு வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது
நான் ஆப்தேவிடம் சொன்னதாக ஆப்தேவே பேட்ஜிடம் கூறிய ‘காந்திஜியின் நூறு ஆண்டுகள் முடிந்துவிட்டது’
என்பது வெறும் செவி வழிச் செய்தி மற்றும் எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததாகும்.
காரணம் அது நான் ஆப்தேவிடம் சொன்னதாகவும், அதை அவர் பேட்ஜிடம் சொன்னதாகவும் கூறப்படும்
வரியாகும். இந்த வாக்கியத்தை நான் ஆப்தேவிடம் சொன்னதை பேட்ஜ் நேரடியாகக் கேட்டிருக்க
முடியாது. நான் ஆப்தேவிடம் கூறியதாக பேட்ஜிடம் ஆப்தே பொய் கூட சொல்லியிருக்கலாம். நான்
ஆப்தேவிடம் சொன்னதாகக் கூறப்படுவதை நிரூபிக்கவோ உறுதிப்படுத்தவோ எந்த சாட்சியும் ஆதாரமும்
இல்லை.
எனவே, மக்களிடம்
எனக்கிருக்கும் தார்மிகச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களது குற்றவியல் கூட்டுச்
சதியை வலுப்படுத்த, பேட்ஜ் பொய் சொன்னாலும் சரி அல்லது கோட்சேவும் ஆப்தேவும் பொய் சொன்னாலும்
சரி, எப்படியிருப்பினும், அந்தக் கூட்டுச் சதிக்கான குற்ற அறிவு அல்லது பங்கேற்புடன்
என்னைத் தொடர்புபடுத்தும் நேரடி மற்றும் பொருள் சான்று இல்லாத நிலையில் என்னைக் குற்றவாளியாக்க
முடியாது.
ஐந்தாவதாக, எல்லாவற்றுக்கும்
மேலாக, கோட்சேவும் ஆப்தேவும் இந்த வாக்கியங்களை பேட்ஜுடன் பேசவே இல்லை என ஆக்கப்பூர்வமாக
மறுத்துள்ளனர். 1948 ஜனவரி 17 அன்று நடைபெற்றதாக பேட்ஜ் கூறும் நிகழ்வை முழுமையாக ஆப்தேவும்
கோட்சேவும் மறுத்துள்ளனர். மேலும் அன்றைய தினம் பேட்ஜுடனோ மற்றவர்களுடனோ, சாவர்க்கர்
சதனுக்கு வண்டியில் பயணிக்கவும் இல்லை, சாவர்க்கரைச் சந்திக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆப்தே மற்றும் கோட்சே கூறியிருப்பது பேட்ஜ் கூறிய முழுக் கதைக்கு முற்றிலும் மாறாக
இருப்பதால் அது பேட்ஜ் சுமத்திய குற்றச்சாட்டின் அடிப்படையையே தகர்த்துவிட்டது.
ஆறாவதாக, சாவர்க்கர்
சதனுக்கு வருகை தந்தபோது ஆப்தே மற்றும் கோட்சேவுடன் இணைந்து ஓட்டுநர் கோஷியானுக்குச்
சொந்தமான டாக்ஸியை வாடகைக்கு எடுத்ததாக பேட்ஜ் கூறியுள்ளார். இந்த டாக்ஸி ஓட்டுநர்
கோஷியான் (பி.டபிள்யூ.80) தனது வாக்குமூலத்தில் (பக்கம் 391 & 392) ‘சிவாஜி பூங்காவில்
நான் டாக்ஸியுடன் காத்திருந்தேன். நான்கு பயணிகள் கீழே இறங்கினர். நான் பார்த்தவரை
எனக்கு வலப்பக்கமுள்ள சாலையின் மூலையிலுள்ள இரண்டாவது வீடு வரை சென்றனர். ஐந்து நிமிடங்களில்
அவர்கள் மீண்டும் டாக்ஸி இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர்’ எனப் பதிவு செய்துள்ளார்.
பேட்ஜின் கதையை உறுதிப்படுத்த இப்போது இந்த டாக்ஸி ஓட்டநர் அழைக்கப்பட்டிருந்தால்,
இந்நிகழ்வுடன் என்னைத் தொடர்புபடுத்தும் முயற்சியில் அவர் தோல்வி அடைந்துவிட்டார் என்றே
கருத வேண்டும். டாக்ஸி ஓட்டநருக்கு என் வீட்டைச் சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை;
அந்த வீட்டின் பெயர் கூடத் தெரியவில்லை; டாக்ஸியில் வந்த பயணிகள் வீட்டிலுள்ள யாரைச்
சந்திக்க விரும்பினார்கள் என்பது குறித்தும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை; அது இரண்டாவது
வீடுதான் என்பதை உறுதியாகக் கூறாமல், மேம்போக்காகத், தெளிவின்றி ‘தொலைவில் நான் நின்று
கொண்டிருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் போது எனக்குப் வலப்பக்கமுள்ள சாலையின் மூலையிலுள்ள
இரண்டாவது வீடு’ என்றுதான் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர்கள் வீடு வரை சென்றதை
மட்டுமே பார்த்ததாகக் கூறினாரே தவிர அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்தேன் என்று
சொல்லவில்லை.
எனவே அவரது சாட்சி,
பேட்ஜ் எனது வீட்டுக்கு வந்ததையும், ஏனைய விவரங்கள் குறித்த அவரது குற்றச்சாட்டையும்
நிரூபிக்கத் தவறிவிட்டது. பேட்ஜின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு மாறாகக் கோஷியானின்
சாட்சி அவருக்கு எதிராகவே அமைந்துவிட்டது. அவர்கள் ஐந்தே நிமிடங்களில் டாக்ஸிக்குத்
திரும்பி விட்டதாகக் கோஷியான் கூறியுள்ளார் (பக்கம் 392). மேலும் குறுக்கு விசாரணையின்போது
டாக்ஸி ஓட்டுநராக நேரத்தின் மீது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே அவரது நேரத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம். பேட்ஜின் கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில்
20-25 நிமிடங்களுக்குள் அவர்களால் டாக்சிக்குத் திரும்பி இருக்கவே முடியாது.
கோஷியான் தொடர்கையில்
‘டாக்சியுடன் வீடு வரை வந்து நின்றுவிட்டதாகவும் அங்கிகிருந்து அறைக்குள் செல்வதற்குக்
குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாகவது ஆகும்’ என்றார். இதனைத் தொடர்ந்து பேட்ஜ் கூறுகையில்
‘கோட்சேவும், ஆப்தேவும், மாடிக்குச் சென்று ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு
கீழே இறங்கி டாக்சிக்குத் திரும்பிவிட்டனர்’ என்றார். எனவே இருபது – இருபத்தைந்து நிமிடங்களுக்கு
முன்பாக அவர்களால் டாக்ஸிக்குத் திரும்பி இருக்கவே முடியாது. டாக்சி ஓட்டுநரின் சாட்சி
மற்றும் பேட்ஜ் கதை ஆகிய இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு பின்னவர் (பேட்ஜ்) சொல்வது
நம்பத் தகுந்ததாக இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது. எனவே இரண்டையுமே எனக்கு எதிரான சாட்சியாக
எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்வதே நலம்.
பேட்ஜின் குற்றச்சாட்டை
சங்கர் மறுப்பதைப் பார்க்கவும் (இடதுபக்கம் 24-A குறிப்பைப் பார்க்கவும்).
ஏழாவதாக, இந்த நிகழ்வு
தொடர்பான பேட்ஜின் குற்றச்சாட்டைச் சங்கரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டாக்சியிலிருந்து
சங்கரும் இறங்கி அவர்களுடன் (பேட்ஜ், ஆப்தே, கோட்சே) சாவர்க்கர் சதனுக்குச் சென்றது
மற்றும் அவர்கள் மூவரும் வீட்டுக்குள் நுழைந்தபோது வெளியே காத்திருக்கச் சொன்னது ஆகியவை
குறித்த பேட்ஜின் குற்றச்சாட்டு தொடர்பாகச் சங்கரிடம் நீதிமன்றம் கேள்வி கேட்டபோது
‘சிவாஜி பூங்காவுக்கு அவர்களுடன் டாக்சியில் சென்றேன். அங்கே டாக்சி நின்றது. பேட்ஜ்,
ஆப்தே மற்றும் கோட்சே மூவரும் கீழே இறங்கி எங்கோ சென்றனர். நான் அவர்களுடன் செல்லாமல்
டாக்சியிலேயே தங்கிவிட்டேன். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது எனக்குத் தெரியாது.
நான் சாவர்க்கர் சதன் என்ற பெயரைக் கூட கேள்விப்பட்டதில்லை’ என்று பதிலளித்துள்ளார்.
“காந்திஜியின் நூறாண்டுகள்
எண்ணப்பட்ட வருகின்றன….” என்று ஆப்தேவிடம் தத்யாராவ் சாவர்க்கர் சொன்னதாக, பேட்ஜிடம்
ஆப்தே கூறியது உண்மையா என்று நீதிமன்றம் கேட்ட இரண்டாவது கேள்விக்கு சங்கர் அளித்த
பதில் பின்வருமாறு: ‘அவர்களுக்குள் மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
நான் டாக்சியின் முன் இருக்கையில் ஓட்டுநருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்ததாலும்,
மராத்தி மற்றும் ஆங்கில மொழிகள் தெரியாததாலும், அவர்கள் பேசியது காதுகளில் விழவும்
இல்லை, புரியவும் இல்லை.’
எனவே ஆப்தே, நாதுராம்
மற்றும் சங்கர் ஆகியோருடன் கோஷியான் ஓட்டுநருக்குச் சொந்தமான டாக்சியில் 1948 ஜனவரி
17ம் தேதி சாவ்ர்க்கர் சதனுக்குச் சென்றதாகப் பேட்ஜ் கூறும் குற்றச்சாட்டை எவருமே உறுதிப்படுத்தவில்லை
என்பதுடன், அனைவருமே முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
நன்றி:
ஃப்ரண்ட்லைன் – தி ஹிந்து
(13) பேட்ஜ் தனது
வாக்குமூலத்தில் (பக்கம் 220) ஆப்தேவுடனும், கோட்சேவுடனும் சேர்ந்து காந்திஜியையும்
மற்றவர்களையும் கொல்வதற்கு தில்லி செல்ல முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம் கோட்சேவும்,
ஆப்தேவும், பல முறை தனக்குப் பண உதவி செய்துள்ளதாகக் கூறியுள்ளார்; மேலும் அவர்களுடன்
எப்போதும் இணைந்து செயல்படுவதாகவும், அவர்கள் சொன்னதுபோல் செய்ததாவும் பதிவு செய்துள்ளார்;
தத்யாராவ் சாவர்க்கர் இச்செயலைச் செய்து முடிக்கத் தனக்கு ஆணையிட்டதாக ஆப்தே கூறியதாக
அவர் புரிந்து கொண்டதால், அவரது உத்தரவைச் செய்து முடிக்க வேண்டியது தனது கடமை என்று
பேட்ஜ் நினைத்திருக்கலாம்.
இது குறித்து நான்
சமர்ப்பிப்பதாவது:
முதலாவதாக, இதுபோன்ற
குற்றப் பணியைச் செய்யுமாறு நான் ஆப்தேவிடம் சொன்னதற்கு எந்தத் தனிப்பட்ட ஆதாரமும்
இல்லை. இந்தப் பொய்யை ஆப்தே கண்டுபிடித்திருக்கலாம் அல்லது பேட்ஜ் பொய் சொல்லியிருக்கலாம்.
எப்படி இருப்பினும், நான் மேலும் பதிவு செய்துள்ள காரணங்களின் அடிப்படையில், இந்தக்
குற்றச்சாட்டு மூலம் பேட்ஜ் என்னைக் குற்றவாளியாக்க முடியாது.
இரண்டாவதாக, பேட்ஜ்
சொல்வதுபோல் 1948 ஜனவரி 15 சதித் திட்டத்தில் சேர்ந்துகொள்ள உண்மையிலேயே முடிவெடுத்திருந்தால்,
பிறகு பேட்ஜைப் போன்ற ஒருவர், அவரது சொந்த சாட்சியத்தின்படி, அவரது உயிருக்கோ, தனிப்பட்ட
பாதுகாப்புக்கோ, பொறுப்பற்றவராகவோ மூடனாகவோ இருப்பவராகத் தோன்றவில்லை. சாதாரண மனிதனுக்குள்ள
இயல்பான குணத்தின்படி ஆப்தேவுக்கு இதுபோன்ற செயலைச் செய்ய நான் ஆணையிட்டேனா என்று அப்போதே
என்னிடம் பேட்ஜ் நேரடியாகவே கேட்டிருக்கலாம். மேலும் பேட்ஜ், அவரே கூறியதுபோல், ஆப்தேவுடனும்
கோட்சேவுடனும் சாவர்க்கர் சதனுக்கு இரு நாள்கள் கழித்து, அதாவது 1948 ஜனவரி 17 அன்று
சென்றதாகவும், பேட்ஜ் காதுகளுக்குக் கேட்குமாறு ‘வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள்’
என்று நான் அவர்களிடம் சொன்னதாகவும் கூறியுள்ளார். பேட்ஜ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்
வகையில் இதுபோன்ற பயங்கரமான பணியைச் செய்து முடிக்க நான் உத்தரவிட்டேனா என்று ஆப்தே
மற்றும் கோட்சே முன்னிலையில் அப்போதே உடனுக்குடன் பேட்ஜ் என்னிடம் கேட்டுத் தெளிவு
பெற்றிருக்கலாம். ஆனால் பேட்ஜ் இதுபோல் எதையும் செய்யவில்லை.
மூன்றாவதாக, பேட்ஜ்
உயிருக்கே ஆபத்தாக முடியும் ஒரு பயங்கரமான பணியைச் செய்து முடிக்கத் தில்லிக்குப் புறப்பட்டுச்
செல்லுமாறு, நான் ஆணையிட்டதாகச் சொல்லப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு மீது அவருக்கு
உண்மையிலேயே ஏதேனும் ஆச்சரியமான மற்றும் பொறுப்பற்ற மரியாதை இருக்குமானால், காந்திஜியைத்
தாக்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாமல், சம்பவ இடத்திலிருந்து முன் கூட்டியே
ஓடியதும், தலைமறைவாக இருந்ததும், அவரே ஒப்புக் கொண்டதுபோல், ‘தன்னைக் காப்பாற்றிக்
கொள்வதைப் பற்றி மட்டுமே ஏன் எண்ணினார்?’
நான்காவதாக, பேட்ஜ்
ஒருவேளை தில்லிக்குச் சென்றிருந்தால், அது பண விஷயமாக இருந்திருக்கலாம் அல்லது தில்லி
மற்றும் பஞ்சாப்பிலுள்ள அகதிகளிடம் அவர் விற்பனை செய்து கொண்டிருந்த ‘பொருளுக்கு’ மிகப்
பெரிய தொகையை எதிர்பார்த்திருக்கலாம் அல்லது ‘ஆணை’ என்னும் ஆதாரமற்ற குற்றச்சாட்டைத்
தவிர வேறெந்தக் காரணமாகவும் இருந்திருக்கலாம்.
(14) பேட்ஜின் உள்நோக்கமும்
நடத்தையும்: மேலே காணப்படும் பேட்ஜ் சாட்சியத்தை விரிவாக ஆய்வு செய்தத்தில், என்னைப்
பொருத்தவரை, பெருமளவு ஜோடிக்கப்பட்டவை என்பதுடன், எனக்கு எதிராக எந்த மதிப்புமிக்க
ஆதாரமும் இல்லை என்பதும் நிரூபணம். எனக்கு எதிராகத் தவறான சாட்சி அளிக்க வேண்டும் என்னும்
பேட்ஜின் உள்நோக்கமும் தெளிவாகி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் எப்படியேனும் என்னை
இந்த வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று காவல்துறை தீவிரமாக முனைவதை பேட்ஜ் தெரிந்துகொண்டார்.
பொது வாழ்க்கையில் மதிப்போடும் கௌரவத்தோடும் வாழும் புகழ்பெற்ற மனிதரை இதுபோன்ற வழக்கில்
சிக்க வைத்தால் மட்டுமே நாடு முழுவதும் செய்தி பரபரப்பாவதுடன் சுய விளம்பரமும் கிடைக்கும்
என்றும், வேறு வழிகளில் கிடைக்காது என்றும், காவல்துறை நம்புவதை பேட்ஜ் உணர்ந்திருப்பார்.
எனவே கடுமையான குற்றச்சாட்டுகளின்
அடிப்படையில் குற்றவாளிக் கூண்டில், கவலை மற்றும் இக்கட்டான சூழலில் உழன்று கொண்டிருக்கும்
பேட்ஜ், எப்படியாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ‘அப்ரூவராக’ மாறுவதுதான் ஒரே வழி என்பதை
அறிந்து கொண்டிருக்கிறார்; எனக்கு எதிராகச் சாட்சியம் அளித்தால் மட்டுமே காவல்துறை
தன்னைத் தவிர்க்க முடியாத அப்ரூவராக ஏற்றுக் கொள்ளும் என்னும் உட்கிடையான நிபந்தனை
காரணமாக இம்முடிவுக்கு வந்துள்ளார். ஆகவேதான் இந்த நிபந்தனையை நிறைவு செய்து தன்னைக்
காப்பாற்றிக் கொண்டுள்ளார். பேட்ஜ் புத்திசாலித்தனத்துடன், நேர்மையற்ற குணமும் உடையவர்
என்பதற்கு நீதிமன்றத்தில் அவர் அளித்த சாட்சியங்களே ஆதாரம். அவரது வாக்குமூலத்தில்
சில தருணங்களில் தற்பெருமையாகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அடுத்தவர் வாழ்க்கையைப்
பற்றிக் கவலைப்படாமல் பொய் சொன்னதாகவும், தகுதி இருப்பதுபோல் போலியாக நடித்ததாவும்,
அவரே ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான அவரது சாட்சியத்தில் சில நிகழ்வுகள் பின்வருமாறு:
(a)  பேட்ஜ் கூறுகிறார்: ‘நான் உரிமம் இல்லாமலும், சட்டத்துக்குப்
புறம்பாகவும் வெடி மருந்துகளும், குண்டுகளும், விற்பனை செய்து கொண்டிருந்தேன் என்பது
உண்மைதான் (பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 228)
(b) கராத்தின் வீட்டில்
வெடி மருந்துகள் அடங்கிய பையை மறைத்து வைத்ததற்குக் காரணம் அது என்னிடம் இருப்பது தெரியக்
கூடாது என்னும் முக்கிய நோக்கம் மற்றும் நான் கைது செய்யப்படுவேன் என்ற அச்சமுமே ஆகும்
(அதே பக்கம்).
(c) டாக்ஸியில்
இரு ரிவால்வர் துப்பாக்கிகள் அடங்கிய பையை டாக்ஸி ஓட்டுநருக்குத் தெரியாமல் வைத்ததன்
காரணம், தேடுதலின்போது ஒருவேளை அவை கண்டுபிடிக்கப்பட்டால், டாக்சி ஓட்டுநர்தான் மாட்டிக்கொண்டு
கைதாவார், நான் தப்பித்துக் கொள்வேன் (பக்கம் 240).
(d) பேட்ஜ் தனது
உண்மைப் பெயரை மறைந்து ‘பந்தோபந்த்’ என்னும் போலியான பெயரை வைத்துக்கொண்டார் (பக்கம்
215)
(e) பயணச் சீட்டு
வாங்காமல் பேட்ஜ் பயணித்ததுடன், டிக்கெட் கலெக்டர்களுக்கு லஞ்சமும் கொடுத்துள்ளார்
(பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 237)
(f) பணத்துக்காகப்
பொய்யான தகவல்களைக் கூறியதாக அவரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். ‘எனக்கு அவசரமாகப்
பணம் தேவைப்பட்டது. தீக்ஷித் மகராஜ் என்னிடம் வாங்கிய ரிவால்வர் துப்பாக்கிக்காகக்
குறைந்தபட்சம் ரூ 350/-ஆவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே அவரிடம் அந்த
ரிவால்வரை நான் பணம் கொடுத்துதான் வாங்கினேன் என்று பொய் சொன்னேன். உண்மையில் அது எனக்கு
வேறொரு பொருளுக்குப் பரிமாற்றாகத்தான் கிடைத்தது.’ (பக்கம் 236).
எனவே, மேலே குறிப்பிட்டதுபோல்
நேர்மையற்ற முறையில் வாக்குமூலம் அளித்த பேட்ஜ் போன்ற ஒரு அப்ரூவர் தன்னைக் காப்பாற்றிக்
கொள்ளவும், மன்னிப்புப் பெறவும், என் மீது கூட தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிச் சாட்சி
அளிக்கலாம்.
(15) பேட்ஜின் சாட்சியத்தில்
என்னை நேரடியாகத் தொடர்புபடுத்திய பகுதியை மட்டுமே நான் மேலே விவரித்துள்ளேன். காந்திஜி,
நேரு அல்லது ஸுஹ்ரவார்தி ஆகியோரைத் தீர்த்துக் கட்டக் கொடுமையான ஆணையை நான் ஆப்தேவுக்கு
வழங்கியதை நிரூபிப்பதற்கு எந்தவொரு தனிப்பட்ட சாட்சியும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி
உள்ளேன். ஆகவே அரசு சாட்சியாக மாறியுள்ள அப்ரூவர் பேட்ஜ் சொன்ன கதை என்னைக் குற்றவாளியாக்க
முனைவதால் அதை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பேட்ஜின்
சாட்சியத்தில் எனக்குத் தொடர்பில்லாத சில விஷயங்கள் விவரிக்கப்பட்டு, நீதிமன்றம் ஒருவேளை
சில தகவல்களுக்காக உறுதிப்படுத்தி இருந்தாலும் கூட, ஆதாரமற்ற சதிச் செயலுடன், எனது
தனிப்பட்ட தொடர்பு அல்லது பங்கேற்பை நீரூபிக்க இயலாத பட்சத்தில், அப்போதும் கூட அவற்றை
அப்ரூவரின் சாட்சியாக எனக்கு எதிராக உறுதிப்படுத்த முடியாது. இந்த விஷயத்தை இன்னும்
சிறப்பாகத் தெளிவுபடுத்தப் பிரிவு 133 கீழ் சர்கார் சாட்சிச் சட்டம் 7ஆவது பதிப்பிலிருந்து
ஒன்று அல்லது இரு பத்திகளை மேற்கோள் காட்டுகிறேன்:
“பொருள் விவரங்களுடன்
சாட்சியை உறுதிப்படுத்துவதுடன், குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தும்
வகையில் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவரை மட்டும்
உறுதிப்படுத்தினால் போதாது, சாட்சியினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அவரது சாட்சி மூலம் சிறைக் கைதியாக ஒருவர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், உறுதிப்படுத்தப்படாத
மற்றொருவர் மீதான அவரது சாட்சியை ஏற்றுக் கொள்வது நடுநிலை ஆகாது.” (பக்கம் 1253).
“குற்றத்துக்கு
உடந்தையாக இருப்பவர் தனிப்பட்ட சாட்சி மூலம் அவர் குற்றம் சுமத்தும் ஒவ்வொரு நபரின்
அடையாளத்தையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது வழக்கமான நடைமுறைச் சட்டமாகும்.
குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர் குற்றத்தின் ஒவ்வொரு சூழலையும் அறிந்திருப்பார்
என்பதால், தனது நண்பரைக் காப்பாற்ற அல்லது பகைமையைச் திருப்திப்படுத்த (அல்லது தன்னைக்
காப்பாற்றிக் கொள்ள) குற்றத்துக்குத் தொடர்பே இல்லாத அப்பாவியைக் குற்றவாளிகளுள் ஒருவராக
அடையாளம் காட்டத் துணிவார்.” (பக்கம் 1254).
(16) பேட்ஜின் மூன்று
கடிதங்கள்
ப்ராக்ஸிக்யூஷன்
தரப்பு மூன்று கடிதங்களைச் சாட்சி / ஆவணம் பி87, பி88 மற்றும் பி89 சமர்ப்பித்துள்ளது.
முதல் இரண்டு கடிதங்கள் 1943ல் பேட்ஜ் எனக்கு அனுப்பியவை. உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை
விற்பதற்காக அவர் நடத்திய சஸ்திர பண்டாருக்காக நன்கொடை அனுப்புமாறு அவற்றில் கோரியிருந்தார்.
பேட்ஜ் தனது வாக்குமூலத்தில் திரும்பத் திரும்ப தன்னை இந்து மஹாசபா ஊழியர் என்றும்
1947ல் உரிமை தேவையில்லாத ஆயுதங்களை மட்டுமே விற்பனை செய்து வந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்
(பி.டபிள்யூ 57, பக்கங்கள் 218, 229, 242). ஆயுதச் சட்டத்தை ரத்து செய்வதுடன், ஆயுத
விற்பனைக்கு உரிமம் வழங்குவது மற்றும் ராணுவப் பயிற்சியைப் பரவலாக்குவது ஆகியவற்றுக்கு
ஆதரவாக நான் வெளிப்படையாக ஓர் இயக்கம் நடத்தி வந்த காரணத்தால் இந்து மஹாசபா தலைவர்
என்ற முறையில் எண்ணற்ற கடிதங்களும், அறிக்கைகளும், நிதி உதவி கேட்டு எனக்கு வந்தன.
மூன்றாவது கடிதம்,
பேட்ஜ் நடத்திய படிக்கும் அறைக்கு இந்து சங்கதான் மற்றும் இந்து மதம் தொடர்பான சில
புத்தகங்களை இலவசமாக அனுப்பியதற்காக எனது செயலாளர் திரு வி ஜி தாம்லேவுக்கு நன்றி தெரிவித்து
அவர் அனுப்பிய ரசீதாகும். இந்த ரசீதில் துக்காராம் பாடல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்து இயக்கம் தொடர்பான
புத்தகங்களை இந்தியா முழுவதுமுள்ள நூலகங்களுக்கும், படிக்கும் அறைகளுக்கும் இலவசமாகவே
அனுப்பி வைப்பது வழக்கமாகும். தற்போது ப்ராக்ஸிக்யூஷன் வசமுள்ள எனது அலுவலகக் கோப்புகளில்
இதுபோல் ஏராளமான ரசீதுகள் உள்ளன. எனவே இதன் மூலம் நான் பணிவுடன் தெரிவிப்பது என்னவெனில்,
இந்த ஆவணங்களுக்கும், இப்போதைய வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுடன் இவற்றில்
குற்றம் சுமத்தும் அளவுக்கு எதுவுமில்லை என்பதுமே ஆகும்.

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 3) | தமிழில்: ஜனனி ரமேஷ்


பகுதி 3

11) ப்ராசிக்யூஷன் சமர்ப்பித்த ஆவணச் சான்று என்றழைக்கப்படும் மேற்கண்ட பகுப்பாய்வு,
கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோர் மகா சபா தொடர்பான பணிகளுக்கு மட்டுமே என்னுடன் இணைந்திருந்ததைச்
சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்து
மகா சங்கடான் பணிகளில் என்னுடன் இணைந்திருந்த ஆயிரக் கணக்கான பெரிய மற்றும் சிறிய மனிதர்களுள்
கோட்சே மற்றும் ஆப்தே ஆகிய இருவரும் அடங்குவர். அவ்வளவே. அவர்கள் இருவரும் சிறப்பாகத்
தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை, பிரத்யேகமாக நம்பப்படவும் இல்லை. இருவரும் என் மீது வைத்திருந்த
அதே மதிப்பையும், மரியாதையையும், அவர்களைப் போலவே இந்தியா முழுவதும் ஆயிரக் கணக்கான
தலைவர்களும், தொண்டர்களும் என் மீது கொண்டிருந்தனர். தேசப்பற்றுடனும், சட்டப்படியும்,
மகா சபா மற்றும் அதன் செயல்பாடுகளுக்காக மட்டுமே அவர்களுடன் நான் இணைந்திருந்தேன் என்ற
செய்தியைத் தவிர, வேறெதற்காகவும், நேரடியாகவோ, குறிப்பாகவோ எந்தவொரு சொல்லும் கோட்சேவும்,
ஆப்தேவும், எனக்கு எழுதிய 25 கடிதங்களில் இடம் பெறவில்லை. அப்படி இருக்கையில் இந்தச்
சட்டப்பூர்வ இணைந்த செயல்பாட்டை கிரிமினல் குற்றத்துக்கான ஆதாரபூர்வ சாட்சியாக என்
மீது ப்ராசிக்யூஷன் தரப்பு குற்றம் சுமத்த முனைவது அநீதி, அக்கிரமம் மற்றும் அநியாயம்
ஆகும். இப்பிரச்சினை எனது வாக்குமூலத்தில் தனியாக விவாதிக்கப்படும்.
(12) பேட்ஜ் சாட்சி (பி.டபிள்யூ.57)
(A) சாவர்க்கருடனான முதல் சந்திப்பு குறித்து பேட்ஜ் கூறியது அவரது வாக்குமூலம்
பக்கம் 199ல் இடம் பெற்றுள்ளது. ‘1944-45ல் பம்பாய் கவாலியா டேங்க் பகுதியில் நடைபெற்ற
கூட்டத்துக்குச் சென்ற பிறகு சாவர்க்கர் சதனில் இருந்த சாவர்க்கரைச் சந்திக்கப் போனவர்களுள்
நானும் ஒருவன். தனிப்பட்ட முறையில் நடைபெற்ற கூட்டத்தில் தத்யாராவ் உரையாற்றினார்.
பிறகு “சாஸ்திரா பண்டார்
உரிமையாளர் என்று தத்யாராவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.
அவர் எனது வேலையைப் பாராட்டியதுடன் தொடர்ந்து பணியாற்ற ஊக்கப்படுத்தினார்.
முதலாவதாக என் மீது கிரிமினல் குற்றம் சாட்டும் வகையில் எதுவுமே இதில் இல்லை.
அந்த நேரத்தில் பேட்ஜ் (1944-45) உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை மட்டுமே விற்பனை செய்வதாகவும்,
அவற்றைச் சட்டப்படி வைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார் (பி.டபிள்யூ.57 பக்கம்
228, 229). பராக்சிக்யூஷன் தரப்பு சமர்ப்பித்த., சாவர்க்கருக்கு பேட்ஜ் எழுதிய இரு
கடிதங்களுமே பேட்ஜ் சட்டப்படி விற்பனை செய்யத்தக்க ஆயுத வணிகத்தில்தான் ஈடுபட்டுக்
கொண்டிருந்தார் என்பதை உறுதிப்படுத்தும். இந்த நீதிமன்றம் முன்பு தனது வாக்குமூலத்தில்
அவர் கூறுவதாவது (பி.டபிள்யூ 57 பக்கம் 242) ‘சாஸ்திரா பண்டார் அறிக்கையை அனுப்ப விரும்பியதால்
தத்யாராவுக்குக் கடிதங்கள் அனுப்பினேன். அறிக்கை சரிதான். அதுவரை அதாவது 1943 வரை…
நான் பிஸ்டலைப் பார்த்து கூட இல்லை. 1947 வரை உரிமம் தேவையில்லாத ஆயுதங்களின் வணிகத்தில்
மட்டுமே நான் ஈடுபட்டு வந்தேன். 1947 மத்தியில்தான் முதல்முதலில் ரிவால்வரைப் பார்த்தேன்.
பிறகு பிஸ்டல், வெடிமருந்து உள்ளிட்ட ஆயுத வணிகத்தில் இறங்கினேன்.
ஆயுதங்களை விற்பனை
செய்ததாகத் தன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதாகவும் ஆனால் உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை
விற்பனை செய்ததால் தன் மீதான வழக்குத் தள்ளுபடியாகி விடுதலை ஆனதாகவும் தனது வாக்குமூலம்
பக்கம் 229ல் பேட்ஜ் மீண்டும் தெரிவிக்கிறார்.
எனவே பேட்ஜ் என்னைச் சந்தித்த போது அவர் ஆயுதங்கள் விற்பதை நான் பாராட்டியதாகச்
சொன்ன அவரது குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும் கூட அது ஆட்சேபகரமாகத் தோன்றவில்லை.
அப்போதும் அதற்கும் பிறகும் 1947 மத்தி வரை அவர்கள் உரிமம் பெற்ற ஆயுதங்களையே விற்று
வந்தார். இதைப் ப்ராசிக்யூஷன் தரப்பு சாட்சியே உறுதிப்படுத்தி உள்ளது.
இரண்டாவதாக, இந்து மகாசபாவே ஆயுதங்கள் சட்டத்தை ரத்து செய்வதுடன், இங்கிலாந்தைப்
போல ராணுவப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், ஆயுதங்கள் விற்பனை செய்ய உரிமம்
அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளது. இது சட்ட ரீதியானது என்பதால்
இந்த இயக்கத்துக்கு நானே தலைமை வகித்தேன்.
(B) சாவர்க்கர் சதன் கூட்டத்தில் பேட்ஜ் பங்கேற்றதாகச் சொல்லப்படும் நிகழ்வு
குறித்த விவரம் 200ம் பக்கத்தில் உள்ளது. அதில் பேட்ஜ் கூறுவதாவது: ‘1946 இறுதியில்
அல்லது 1947 தொடக்கத்தில் தாதரிலுள்ள சப்பிதாஸ் உயர்நிலைப் பள்ளியில் நடந்த சம்மேளனத்துக்கு
முன்போ, பின்போ இது நடைபெற்றது. சாவர்க்கர் சதனுக்குச் சென்ற 40-50 நபர்களுள் நானும்
ஒருவன். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் “காங்கிரஸ் கொள்கை இந்துக்களுக்கு விரோதமானது.
பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஒருவேளை அவர்கள் தாக்கினால்
இந்துக்கள் பதிலடியாகத் திருப்பித் தாக்க வேண்டும். எனவே இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி
அவசியம்
என்றார். (பி.டபிள்யூ.57 பக்கம் 200).
பேட்ஜ் கூறுவது ஒருவேளை உண்மை என்று வைத்துக்கொண்டாலும்கூட, அந்தக் கூட்டத்துக்கும்
இந்தச் சதி வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்து – முஸ்லிம் குறித்துப் பேசியதாகவும்,
முஸ்லிம்கள் தாக்கினால் இந்துக்கள் திருப்பித் தாக்க வேண்டும் என்று நான் கூறியதாகவும்
சொல்லப்படுகிறது. தற்காப்புக்காக இதைச் செய்வது முறையானதும், சட்டப்படி சரியானதும்
ஆகும். ஆனால் அமைதியாக இருக்கும் முஸ்லிம்களைத் தாக்க வேண்டுமென நான் சொன்னதாகக் குற்றம்
சுமத்தப்படவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் அது ஆட்சேபகரமானதாகும். மொத்தத்தில் பேட்ஜ்
வாக்குமூலம் எந்த வகையிலும் என்னைக் குற்றவாளி ஆக்காது என்பதுடன் என் மீது குற்றம்
சுமத்தப்பட்டுள்ள இந்தக் குறிப்பிட்ட சதிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று
தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் உண்மை விவரம் என்னவெனில் என் வீட்டில் அதுபோல் எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை
என்பதுடன் எந்தவொரு உரையையும் நான் நிகழ்த்தவும் இல்லை. பேட்ஜ் கூறியவை அனைத்தும் ஆதாரமற்றவை.
(C) தனது வாக்குமூலத்தில் பேட்ஜ் சொன்ன மூன்றாவது நிகழ்வு (பி.டபிள்யூ.57 பக்கம்
200) என்னவெனில், பர்மேகர் மற்றும் பக்காலே ஆகியோர் பணி தொடர்பாக சாவர்க்கர் சதனில்
நடைபெற்ற மற்றுமொரு இந்து சபா ஊழியர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றதுடன், சாவர்க்கர்,
டாக்டர் மூஞ்சே மற்றும் பலருடன் அவர் (பேட்ஜ்) நிழற்படம் எடுத்துக் கொண்டார் என்பதுதான்.
இவ்வளவுதான் விஷயம். குறுக்கு விசாரணையில் பேட்ஜ் மேலும் கூறுகையில் (பேட்ஜ் வாக்குமூலம்
பக்கம் 250) பர்மேகர் மற்றும் பக்காலே ஆகிய இருவரும் அந்த நேரத்தில் இந்து அகதிப் பணிகளை
மேற்கொண்டிருந்தனர் என்றும் பம்பாயில் நடைபெற்ற இந்து – முஸ்லிம் கலவரங்களின் போது
இந்துப் பயணிகளின் பாதுகாப்பைக் கவனித்துக் கொண்டிருந்தனர் என்றும் தெரிவுத்துள்ளார்
(பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 229). ஆகவே முறையான மற்றும் சட்டப்படியான அகதிகள் பணி தொடர்பான
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தத்தில் எந்த ஆட்சேபணையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக்
கூட்டம் பற்றி பேட்ஜ் பிறிதொரு வார்த்தை கூட அதிகம் சொல்லவில்லை. ஆகவே அவரது இந்த வாக்குமூலம்
ஒன்றே ஆபத்து இல்லாதது என்பதுடன் சதி வழக்கில் முக்கிய அம்சமாக இடம் பெறத்தக்க அளவில்
எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
(D) வாக்குமூலத்தில் (பக்கம் 203) பேட்ஜ் சொன்ன நான்காவது முக்கிய நிகழ்வு,
‘ஆப்தேவும், கோட்சேவும், நானும், (பேட்ஜ்) சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். அவரது வீட்டை
அடைந்தவுடன் ஆப்தே என் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு என்னை வெளியே நிற்கச் சொன்னார்.
ஆப்தேவும், கோட்சேவும் உள்ளே சென்றனர். 5 அல்லது 10 நிமிடங்களுக்குப் பிறகு இருவரும்
வெளியே வந்த போது ஆப்தே கையில் பை இருந்தது. பின்னர் ஒரு காரில் அவர்கள் தீக்ஷித் மகராஜைப்
பார்க்கச் சென்றனர். இது நடந்த தேதி 1948 ஜனவரி 14 நேரம் இரவு மணி 9க்கு.
முதலாவதாக, இதில் பேட்ஜ் என் பெயரை எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆப்தேவும், கோட்சேவும்,
சாவர்க்கர் சதனில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே தங்கியிருந்தனர் என்பதும் இதிலிருந்து
தெரிய வருகிறது. சாவர்க்கர் சதனுக்கு வருகை தருவது என்றால் சாவர்க்கரைச் சந்திக்கத்தான்
வர வேண்டும் என்று அர்த்தமில்லை. தரை தளத்தில் வசித்த தாம்லே, பிட்டே, கஸர் ஆகியோருடன்
ஆப்தேவுக்கும், கோட்சேவுக்கும் நல்ல பழக்கம் உண்டு. இந்தத் தகவல்களை பேட்ஜே தனது வாக்குமூலத்தில்
(பக்காம் 223, 230) பதிவு செய்துள்ளார். எனவே ஆப்தேவும், கோட்சேவும் தரை தளத்தில் வசித்துக்
கொண்டிருந்த தனது நண்பர்களையும், உடன் பணியாற்றும் ஊழியர்களையும் பார்க்கச் சென்றிருப்பார்கள்
அல்லது தொலைபேசியில் உரையாடச் சென்றிருப்பார்கள் அல்லது இந்து மகாசபா படிப்பறையில்
படித்துக் கொண்டிருக்கும் ஏனைய இந்து மகாசபா ஊழியர்களைப் பார்க்கச் சென்றிருப்பார்கள்.
இருவருமே உள்ளே வந்த 5-10 நிமிடங்களில் கிளம்பிவிட்டார்கள்.
வெளியே வரும் போது ஆப்தேவிடம் பை இருந்ததாக பேட்ஜ் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
ஆப்தே பையை வைப்பதற்காக உள்ளே சென்றார் என்று நிரூபிக்க பேட்ஜ் வாக்குமூலத்தில் ஒரு
வார்த்தை கூட இல்லை. மேலும் அந்தப் பையை இருவரும் தீக்ஷித் மகராஜ் வீட்டில் அன்று இரவே
வைத்தததையும் பேட்ஜ் தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இரண்டாவதாக, பேட்ஜுடனும் பையுடனும் சாவர்க்கர் சதனுக்குச் செல்லவே இல்லை என்று
ஆப்தேவும், கோட்சேவும் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக, இந்த நிகழ்வை நிரூபிக்கப் ப்ராசிக்யூஷன் தரப்பு எந்தத் தனிப்பட்ட
ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே ‘பேட்ஜ் மற்றும் பை
என்னும் இந்த முழுக்
கதைக்கு எந்த ஆதாரபூர்வ மதிப்பும் இருக்க முடியாது.
(E) வாக்குமூலத்தின் 205ம் பக்கத்தில் பேட்ஜ் கூறிய ஐந்தாவது நிகழ்வு ஆப்தே,
கோட்சே மற்றும் பேட்ஜ் ஆகியோரிடையே 1948 ஜனவரி 15ம் தேதி நடைபெற்ற உரையாடல் குறித்ததாகும்.
அதில் பேட்ஜ் பதிவு செய்துள்ளதாவது: ‘ஆப்தேவும், கோட்சேவும், நானும், தீக்ஷித் மகராஜ்
வீட்டிலிருந்து வெளியே வந்து கோயிலின் சுற்றுச்சுவர் அருகே நின்று கொண்டிருந்தோம்.
அவர்களுடன் தில்லிக்குச் செல்லுமாறு ஆப்தே என்னிடம் கூறினார். அங்கே என்ன வேலை என்று
கேட்டேன். காந்திஜி, நேருஜி, சூராவார்டி ஆகிய மூவரையும் தீர்த்துக் கட்டத் தத்யாராவ்
முடிவு செய்துள்ளதாகவும், அந்தப் பணி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்தே என்னிடம்
கூறினார்.
முதலாவது, இது வெறும் செவி வழிச் செய்திதான். சாவர்க்கர் (தத்யாராவ்) இது பற்றிச்
சொன்னதை பேட்ஜ் நேரடியாகக் கேட்கவில்லை. காந்திஜி, நேருஜி, சூராவார்டி ஆகிய மூவரையும்
தீர்த்துக் கட்டத் தத்யாராவ் முடிவு செய்துள்ள விவரத்தை ஆப்தேவிடம் அவரே சொன்னதையும்
பேட்ஜ் நேரடியாகக் கேட்கவில்லை. சாவர்க்கர் சொன்னதாக ஆப்தேதான் மேற்கண்ட அனைத்தையும்
பேட்ஜிடம் கூறியிருக்கிறார்.
இரண்டாவதாக, பேட்ஜ் உண்மையைத்தான் சொல்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், தன்னிடம்
ஆப்தேதான் சொன்னார் என்று அவர் கூறும்போது, பேட்ஜிடம் ஆப்தே சொன்னது உண்மையா பொய்யா
என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியாது. காந்தி, நேரு மற்றும் சூராவார்ட் ஆகிய மூவரையும்
தீர்த்துக்கட்ட ஆப்தேவிடம் நான் சொன்னேன் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்து சங்கடான்
மீது சாவர்க்கருக்கு உள்ள செல்வாக்கைத் தனது சொந்த நலன்களுக்குத் தவறாகப் பயன்படுத்த
ஆப்தே இந்தப் பொல்லாத பொய்யைக் கண்டுபிடித்திருக்கலாம். இதுபோன்ற நேர்மையற்ற தந்திரங்களைச்
செய்யும் பழக்கமுள்ளவர் ஆப்தே என்பதைப் ப்ராசிக்யூஷன் தரப்பே அறியும். உதாரணத்துக்கு
ஹோட்டலில் தங்கும் போதும், சட்டத்துக்குப் புறம்பான வகையில், உரிமம் இல்லாத ஆயுதங்களையும்,
வெடி மருந்துகளையும் விற்பதற்காக அவற்றை ரகசியமாகத் திரட்டிய போதும், ஆப்தே பொய்யான
பெயர்களையும், பொய்யான முகவரிகளையும் தந்துள்ளார் என்பதும் ப்ராசிக்யூஷனுக்கு நன்கு
தெரியும்.
மூன்றாவதாக, ஆப்தேவும், கோட்சேவும் என்னைப் பற்றிய எந்தப் பொய்களையும் பேட்ஜிடம்
சொல்லவில்லை என்று உறுதியாக மறுத்துள்ளனர். அப்ரூவராகித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும்,
மன்னிப்புக் கோரவும், காவல் துறையின் அழுத்தம் காரணமாக அவர்களைத் திருப்திப்படுத்தி
நன்மதிப்பைப் பெறவும், உண்மையோ, பொய்யோ என்னை இந்த வழக்கில் குற்றவாளியாக்க ஏதோவொரு
சாட்சியைக் காவல்துறை தீவிரமாகத் தேடிக் கொண்டிருப்பது பேட்ஜுக்குத் தெரியும் என்பதால்
அவர் இந்தப் பொய்களைக் கூறியுள்ளார்.
நான்காவதாக, ப்ராசிக்யூஷன் கோணத்தில் பேட்ஜ் வாக்குமூலத்தின் இந்தப் பகுதி மட்டுமே
என்னைப் பொருத்த வரையில் முக்கிய அம்சம் என்று கருதுகிறேன். ஆனால் அப்ரூவரின் வாக்குமூலத்தின்
முக்கிய அம்சங்கள் தனிப்பட்ட மற்றும் நல்ல சான்றுடன் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே
நம்பகத்தன்மையைப் பெறும். ஆனால் எனக்கு எதிரான பேட்ஜ் வாக்குமூலத்தின் முக்கியப் பகுதி,
ப்ராசிக்யூஷன் தரப்பு சமர்ப்பிக்கும் வகையில், எந்தவொரு தனிப்பட்ட மற்றும் நல்ல சான்றுடன்
உறுதிப்படுத்தப்படவில்லை.
(F) பேட்ஜ் கூறிய ஆறாவது நிகழ்வு 1948 ஜனவரி 17 அன்று நடைபெற்றது. அவரது வாக்குமூலத்தில்
(பக்கம் 207) கூறுவதாவது: ‘கோட்சே, ஆப்தே, நான் (பேட்ஜ்) மற்றும் சங்கர் ஒரு வாடகை
வண்டியைப் பயணித்தோம். அப்போது கோட்சே “கடைசியாக ஒரு முறை தத்யாராவைத் தரிசித்துவிட்டு
வருவோம்
என்று சொல்லவே சாவர்க்கர் சதனுக்கு வண்டி சென்றது. சுற்றுச்சுவருக்கும் வெளியே
சங்கரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் சாவர்க்கர் வீட்டுக்குள் நுழைந்தோம்.
தரை தளத்திலுள்ள அறையில் காத்திருக்குமாறு ஆப்தே என்னிடம் (பேட்ஜ்) கூறினார். பிறகு
கோட்சேவும், ஆப்தேவும் மாடிக்குச் சென்றனர். 5 – 10 நிமிடம் கழித்து இருவரும் கீழிறங்கினர்.
இவர்கள் இருவரைத் தொடர்ந்து தத்யாராவும் கீழே இறங்கினார். கோட்சே மற்றும் ஆப்தேவிடம்
‘வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள்
என்ற வார்த்தைகளைத் தத்யாராவ் கூறினார். பிறகு நாங்கள் நால்வரும்
வாடகை வண்டியில் ஏறி சாவர்க்கர் இல்லத்தை விட்டு ருயா கல்லூரியை நோக்கிச் சென்றோம்.
வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது ‘காந்திஜியின் நூறாண்டு வாழ்க்கை முடிந்து விட்டது
என்று தத்யாராவ் சொன்னதாக ஆப்தே என்னிடம் கூறினார். மேலும் நமது வேலை வெற்றிகரமாக முடியும்
என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை என்று சொன்னதாகவும் கூறினார்
. பிறகு அஃப்சல்புர்கர்
வீடு உள்படச் சென்றனர்…
முதலாவதாக, 1948 ஜனவரி 17ம் தேதி அல்லது வேறு எந்தத் தேதியிலும், ஆப்தேவும்,
கோட்சேவும் என்னைச் சந்திக்கவே இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ‘வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள்
என்று அவர்களிடமும், ‘காந்திஜியின் நூறாண்டு வாழ்க்கை முடிந்து
விட்டது
என்று ஆப்தேவிடமும் அல்லது வேறு யாரிடமும் நான் சொல்லவே இல்லை.
இரண்டாவதாகப், பேட்ஜ் தனது வருகை குறித்துச் சொன்னது உண்மையாகவே இருந்தாலும்,
என் வீட்டின் தரைத் தளத்தில் அமர்ந்து கொண்டதையும், ஆப்தேவும், கோட்சேவும், மட்டுமே
மாடிக்குச் சென்றதையும் ஒப்புக் கொள்கிறார். ஆகவே இருவரும் என்னைப் பார்த்திருக்க இயலுமா
அல்லது பார்த்தார்களா அல்லது முதல் மாடியில் வாடகைக்குக் குடியிருப்பவர் குடும்பத்தினர்
யாரையேனும் சந்தித்துவிட்டுக் கீழே இறங்கினாரா என்பன எதுவுமே அவருக்கு (பேட்ஜ்) நிச்சயமாகத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆப்தேவும், கோட்சேவும் என்னைச் சந்தித்துப் பேசினார்கள்
என்று பேட்ஜ் சொல்வதை ஒருவேளை ஏற்றுக் கொண்டாலும், நாங்கள் என்ன பேசிக் கொண்டோம் என்ற
விவரம் தனிப்பட்ட முறையிலோ, நேரடியாகவோ அவருக்குத் தெரிந்திருக்க முடியாது. காரணம்,
தரைத் தளத்தில் உட்கார்ந்திருந்தேன் என்று பேட்ஜ் ஒப்புக் கொண்ட நிலையில் மாடியில்
நடந்த நிகழ்வுகளை அவரால் பார்த்திருக்கவும் முடியாது, கேட்டிருக்கவும் முடியாது. ஆப்தேவும்,
கோட்சேவும் தனியாக மாடிக்குச் சென்றதாலேயே அவர்கள் இருவரும் என்னுடன் சதிவேலை தொடர்பான
கிரிமினல் விஷயங்களைத்தான் பேசியிருப்பார்கள் என்ற முடிவுக்கு வருவது முற்றிலும் அபத்தமாகும்.
சதித்திட்டம் தவிர்த்து வேறு எதைப் பற்றி வேண்டுமானாலும் கூடப் பேசியிருக்கலாம்.
அன்றைய தினம் பேட்ஜ், ஆப்தே மற்றும் கோட்சே ஆகியோர் அதே காரில் பம்பாயிலுள்ள
பலரை, காந்திஜியைக் கொல்லும் சதித் திட்டம் தவிர்த்துப், பல்வேறு காரணங்களுக்காகச்
சந்தித்து பல்வேறு பணிகளுக்காப் பேசியிருப்பதைப் ப்ராசிக்யூஷன் தரப்புச் சாட்சியே உறுதிப்படுத்துகிறது.
உதாரணத்துக்கு, அஃப்சல்பூர்கரைச் சந்தித்து நிஜாம் சிவில் எதிர்ப்பு இயக்கம் தொடர்பாகப்
பேசியதுடன் அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டதாக ப்ராசிக்யூஷன் சாட்சியான அஃப்சல்புர்கரே
வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் துணிகளுக்குச் சாயம் போடும் நிறுவன உரிமையாளர்
சேத் சரண்தாஸ் மேகாஜியைத் தனியாகச் சந்தித்த ஆப்தே அவரிடம் நிஜாம் சமஸ்தானம் சிவில்
எதிர்ப்பு பற்றி மட்டுமே பேசியதுடன் அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டார் (ப்ராக்சிக்யூஷன்
தரப்புச் சாட்சி சேத் சரண்தாஸ் மேகாஜி வாக்குமூலத்தைப் பார்க்கவும்). பிறகு நடுவே குர்லாவுக்குச்
சென்று பட்வர்த்தன், பதங்கர், காலே (பி.டபிள்யூ.86 பக்கம் 418) ஆகியோரைச் சந்தித்துப்
பேசி அவர்களிடமும் ‘அக்ரணி தினசரி பத்திரிகை
மற்றும் ‘ஹிந்து ராஷ்ட்ர பிரகாஷன் ஆகியவற்றுக்குப்
பணம் பெற்றுக் கொண்டனர். எனவே ஒருவேளை ஆப்தே மற்றும் கோட்சே ஆகிய இருவரும் மாடியில்
சாவர்க்கரைச் சந்தித்து, அப்படியே ஒருவேளை சந்தித்திருந்தால், ‘ஐதராபாத் நிஜாம் சிவில்
எதிர்ப்பு
அல்லது ‘அக்ரணி நாளிதழ் அல்லது ‘ஹிந்து சபா பணிகள் அல்லது அவரது ‘உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டுத்
திரும்பி இருக்கலாம். நாள் முழுவதும் அவர்கள் மற்றவர்களிடம் இவை பற்றித்தான் பேசிக்
கொண்டிருந்தனரே தவிர சதித்திட்ட கிரிமினல் விஷயங்கள் எதுவுமே பேசவில்லை என்பதைப் ப்ராசிக்யூஷன்
தரப்பு வாக்குமூலமே நிரூபித்துள்ளது.
(தொடரும்)

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 2) | தமிழில்: ஜனனி ரமேஷ்

(a) அக்ரணி அல்லது இந்து ராஷ்டிரம்
இந்தியாவிலுள்ள
ஏனைய இந்து சங்கடன தலைவர்களைப் போலவே நானும் இந்தியாவிலுள்ள எல்லா மாகாணங்களிலும் புதிய
மகாசபா தினசரிகளைத் தொடங்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமும் உதவியும் அளிக்க முயன்று
வருகிறேன். அதேபோல் இந்து சித்தாந்தத்தைப் பரப்ப ஆப்தேவும், கோட்சேவும் மராத்தி தினசரியைத்
தொடங்க நீண்ட காலமாகவே முனைந்ததுடன், இது தொடர்பாக எனது தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும்
வலியுறுத்தி வந்தனர். பத்திரிகை தொடங்குவதற்குத் தேவையான தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும்,
முன்னணி மற்றும் பொறுப்புள்ள இந்து
த் தலைவர்களிடமிருந்து அவர்கள் பெற்றது தெரிய வந்தவுடன், மூன்று நிபந்தனைகளின்
அடிப்படையில் நானும் ரூ 15,000/- அளிக்க ஒப்புக்கொண்டேன்.
முதலாவதாக இந்த
முன்பணம் கடனாகத் தரப்படுவதால், ஆப்தே மற்றும் கோட்சே இருவரும் கூட்டாக உறுதிப் பத்திரம்
(Promissory Note) எழுதித் தர வேண்டும்; இரண்டாவதாக நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகப்
(Limited Company) பதிவு செய்யப்பட வேண்டும்; மூன்றாவதாக நான் கொடுத்த கடன் அந்நிறுவனத்தில்
பங்குத் தொகையாக மாற்றப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து இருவருமே கூட்டாகக் கடன் பத்திரத்தை
எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தனர். ‘இந்து ராஷ்ட்ர ப்ரகாஷன் லிமிடெட்
என்ற பெயரில் லிமிடெட் நிறுவனமாகப் பதிவு
செய்ததுடன் எனது கடனும் பங்குத் தொகையாக மாற்றப்பட்டது.
பிரபல மற்றும்
வசதியான இந்துத் தலைவர்கள் ரூ 5000 முதல் ரூ 10000 வரை அளித்துள்ளது பதிவாகி உள்ளது.
சேத் குலாப் சந்த் ஹீரா சந்த் (சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் சேத் வால்சந்த்
ஹீராசந்த் சகோதரர்), போர் (Bhor) மாகாண முன்னாள் அமைச்சர் ஷிங்க்ரே, சங்க்லி மில் உரிமையாளரும்
கோடீஸ்வரருமான விஷ்ணு பந்து வேலாங்கர், கோலாபூர் சினிமா பிரபலம் ஸ்ரீமான் பால்ஜி பெண்டார்கர்,
போர் (Bhor) மன்னர் ‘நகர் பூஷன்
என்ற பட்டமளித்துக்
கௌரவப்படுத்திய தோப்தே, ஸ்ரீமான் சந்திரசேகர் அகாஷே, பாராமதி ராவ் பகாதூர் ஷெம்பேகர்,
ஸ்ரீமான் சேத் ஜுகல்கிஷோர் பிர்லா (கோட்சே கடிதம் ஜி-74 டி.29 பார்க்கவும்) உள்ளிட்ட
பலர் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளுக்குக் கணிசமான தொகையை அல்லது இந்து ராஷ்ட்ரத்த்துக்கு
நன்கொடையை வழங்கி இருக்கின்றனர்.
மேற்கூறிய பத்தியில்
காணப்படும் விவரங்கள் அனைத்தும் ப்ராக்ஷிக்யூஷன் தரப்பு சாட்சியில் உள்ளன (P.W. 57,
பக்கங்கள் 233, 234, 243, 254; பி P.W. 60, பக்கம் 320; P.W. 86, பக்கம் 420 மற்றும்
கோட்சே & ஆப்தே கடிதங்கள் பக்.277–பக்.293). அக்ரணி பத்திரிகைக்கு மட்டுமின்றி
,
விக்ரம் மற்றும் ஃப்ரீ இந்துஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்குத்
தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும், இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நான் வழங்கி
வருவதாக கோட்சேவே ஒப்புக் கொண்டுள்ளார் (G.-70 பக்கம் 293 பார்க்கவும்).
மேற்கண்ட விவரங்களிலிருந்து
அக்ரணி பத்திரிகைக்கு நான் உதவியதற்குக் காரணம் அது ஆப்தே – கோட்சே நிறுவனம் என்பதால்
அல்ல என்றும், மகாசபா கட்சி பத்திரிகை என்பதால்தான் என்றும், அதற்கு நான் மட்டுமின்றி
இந்து சங்கடனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பொறுப்புள்ள கௌரவமிக்கத் தலைவர்களும் உதவி உள்ளனர்
என்பதும் தெளிவு.
(b)
அக்ரணி கொள்கை முழுவதும் கோட்சே மற்றும் ஆப்தேவின் கட்டுப்பா
ட்டில்
அக்ரணி பத்திரிகையை
கோட்சேவும், ஆப்தேவும் சொந்தப் பத்திரிகையாக ஆரம்பித்ததைத் தொடர்ந்து பத்திரிகையின்
கொள்கை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இருப்பினும் பரவலாகப் பிரபலமடைவதற்காகப்
பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக அல்லது நிறுவனராக அல்லது ஆதரவாளராக நான் இணைய வேண்டுமெனத்
தொடர்ந்து அழுத்தம் கொடுத்தபோதும் நான் உடன்படவில்லை. எனது தலைமையில் உருவான இந்து
மகாசபாவின், ‘சாவர்க்கர்–வாதம்
என்று அவர்களால்
அழைக்கப்படும் எண்ணங்களின் பிரதிநிதியாகவும், அதன் சார்பில் இந்தியா முழுவதும் பிரசாரம்
மேற்கொள்ளும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் பொதுவான நலம் விரும்பியாகவும், ஆதரவாளராகவும்
மட்டுமே இருப்பேன் என்று அவர்களிடம் தெளிவுபடுத்தினேன். இந்தப் பத்திரிகையைப் பொருத்தவரையிலும்கூட
இந்த அடிப்படையில்தான் ஆதரவளிப்பேன் என்று சொன்னேன்.
அக்ரணி
தினசரியில் எனது நிழற்படம்
இருப்பினும்
இந்து மகாசபையின் தலைவர் என்ற முறையில் எனது நிழற்படத்தை அவர்களது தினசரியின் முதல்
பக்கத்தில் வெளியிட ஆப்தேவும், கோட்சேவும் தன்னிச்சையாக முடிவெடுத்தனர். இந்தியாவின்
பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த பல இந்து-எண்ணம் கொண்ட தினசரிகளும் அவற்றின் முதல் பக்கங்களில்
எனது நிழற்படத்தை வெளியிட்டு வருகின்றன. எனவே இதில் ஆட்சேபகரமான விஷயம் ஏதும் இருப்பதாக
நான் கருதவில்லை. ஆனால் ப்ராசிக்யூஷன் தரப்பு அவரது தொடக்க உரையில் எனக்கும் அந்தத்
தினசரியின் கொள்கைக்கும் ஏதோ நேரடித் தொடர்பு இருப்பதுபோல் இதை முக்கிய விஷயமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தினசரிகளின் ஒவ்வொரு இதழின் முதல் பக்கத்திலும் இதுபோல் நிழற்படங்களை வெளியிடுவது இந்தியாவில்
சாதாரண விஷயம். மகாத்மா காந்தி பிரபலமாக இருந்த காரணத்தால் அவரது நிழற்படத்தை தினசரிகள்
முதல் பக்கத்தில் வெளியிட்டன. ஆனால் இந்த தினசரிகள் குறித்த எந்த விவரமும் காந்திக்குத்
தெரியாது. அவற்றைப் படித்ததும் இல்லை. பூனாவைச் சேர்ந்த ‘கேசரி
பத்திரிகையின் முதல் பக்கத்தில் லோகமான்ய
திலகருடைய நிழற்படம் நிரந்தரமாகவே இடம் பெறும். ஆனால் இதைச் சுட்டிக்காட்டி நல்ல மனநிலையிலுள்ள
யாரும் எந்தவொரு நீதிமன்றத்திலும் மறைந்த லோமான்ய திலகருக்கும், இன்றைய கேசரியின் பத்திரிகையின்
கொள்கைக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்ல மாட்டார். சட்டப்படியும், நியாயப்படியும்,
தலைவர்களின் நிழற்படங்களை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்தான் பொறுப்பே தவிர, ஆசிரியரின்
கொள்கைகளுக்கு நிழற்படத்தில் இருப்பவர் பொறுப்பாக மாட்டார்.
இன்னுமொரு நம்பத்தகுந்த
ஆதாரமாக, அக்ரணியின் நிர்வாகத்தோடும், கொள்கையோடும் (இந்து ராஷ்டிரம்) என்னை அடையாளப்படுத்திக்
கொள்ளும் பொறுப்பைத் தனிப்பட்ட முறையில் நான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதற்கான ஆவணத்தைப்
ப்ராசிக்யூஷன் தரப்பே அளித்துள்ளது. கோட்சேவுக்கும், ஆப்தேவுக்கும் கூட்டாக நான் எழுதிய
கடிதத்தை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர் (SGA-# Exhibit பக்கம் 302 பார்க்கவும்).
கடிதத்தை நான்
எழுதியதற்கான சூழல் இதுதான். ஒரு வருடத்துக்குப் பிறகு ஆப்தேவும், கோட்சேவும் தினசரியைத்
தொடங்கி அதற்கான அச்சகத்தையும் முடிவு செய்தனர். பிறகு என்னைச் சந்தித்துப் பத்திரிகையின்
கொள்கையுடன் அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தினர். ஒப்பந்தத்தில்
என் பெயரை எழுத அனுமதிக்குமாறு அல்லது நிறுவனராக அல்லது புரவலராக இருக்க ஒப்புக் கொண்டால்,
அச்சகத்தை நல்ல விலையில், எளிதாக வாங்க முடியும் என்றும் வேண்டினர். அவர்கள் சொன்ன
காரணங்களுக்காகவே நான் சம்மதிக்கவில்லை. அவர்கள் சென்ற பிறகு சரியாகப் புரிந்து கொள்ளாமலோ,
வேறெந்த காரணத்தினாலோ, எனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதால்,
தினசரியின் கொள்கை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதையும் குறிப்பிட்டு ஒரு கடிதம்
எழுதுவது நல்லது என்று நினைத்தேன். இதனைத் தொடர்ந்த உரையாடலின்போது ஏதேனும் குழப்பம்
ஏற்பட்டுச் சொல்ல வந்தது மறந்து போகாமல் இருக்க இந்த விஷயத்தை எழுத்தில் தெளிவுபடுத்தச்
சொன்னேன். அதாவது அக்ரணியின் கொள்கை உங்கள் இருவருக்கு (கோட்சே மற்றும் ஆப்தே) மட்டுமே
சொந்தமாகவும், பிரத்யேகமாகவும், நிபந்தனையற்றும் இருப்பதை ஒப்பந்தத்தில் எழுத்து மூலம்
பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
(c)
‘அக்ரணி
யில் நான் எழுதவே இல்லை
ஆப்தேவும்,
கோட்சேவும் அக்ரணியின் முதல் இதழ் முதற்கொண்டே சிறு குறிப்பையேனும் எழுத வேண்டும் என்று
அழுத்தம் கொடுத்து வந்தனர். எனது கட்டுரைகளைச் சிறப்புத் தலையங்கப் பத்திகளில் வெளியிடுவதாகவும்
கூறினர் (கோட்சேவின் கடிதம் G-61 தேதி 10 மார்ச் 1944 பக்கம் 291 பார்க்கவும்). ஆனால்
அக்ரணி பத்திரிகைக்காக நான் எதுவுமே பிரத்யேகமாக எழுதவும் இயலவில்லை, எழுதவும் இல்லை.
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள கட்சித் தொடர்பற்ற நூற்றுக்கணக்கான பத்திரிகைகள்
எதையேனும் எழுதித் தருமாறு என்னைத் தொடர்ந்து வேண்டி வந்துள்ளன. ஒரு சிலவற்றுக்கு மட்டும்
எழுதி, மற்றவைகளுக்கு எழுதாமல் இருந்திருந்தால் நான் நடுநிலை தவறியவனாகி இருப்பேன்.
இந்து சங்கடன இயக்கப் பணிகள் அதிகமிருந்த காரணத்தாலும், அதற்காகத் தனிப்பட்ட முறையில்
எழுதுவதற்கும் ஏராளம் இருந்ததாலும், வேறு எந்தப் பத்திரிகைக்கும் எழுதுவதில்லை என்பதைக்
கொள்கையாக வைத்துக்கொண்டு மறுத்து வந்தேன். எனது அறிக்கைகளும், கட்டுரைகளும், பொதுவான
பத்திரிகைச் செய்திகளாகப் பத்திரிகை முகவர்களால் அதிக எண்ணிக்கையில் வெளியாகிக் கொண்டிருந்ததால்,
தனியாக எந்தப் பத்திரிகைக்கும் பிரத்யேகமாக எழுத வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.
அந்த வகையில் அக்ரணி நான் கையொப்பமிட்டு வெளியிட்ட பத்திரிகைச் செய்திகளையும், குறிப்புகளையும்,
சிறப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்துள்ளது. இவற்றைத் தவிர அக்ரணிக்காக நான் தனியாக
வேறெதையும் எழுதவில்லை. இதற்காக நான் வருத்தப்பட்டேன் என்றாலும் அக்ரணி பத்திரிகையை
விதிவிலக்காகக் கருத முடியவில்லை. இதற்காகச் சில நேரங்களில் ஆப்தேவும், கோட்சேவும்
என் மீது வருத்தப்பட்டார்கள். இது சந்தேகத்துக்கு இடமின்றி, மறுக்க முடியாத உண்மை என்பதை
கோட்சேவும், ஆப்தேவும் எனக்கு எழுதிய கடிதங்களை ப்ராசிக்யூஷன் தரப்புச் சாட்சிகளாகச்
சமர்ப்பித்ததிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவற்றிலிருந்து ஒன்றே ஒன்றை மட்டும் நான்
குறிப்பிட விரும்புகிறேன். ப்ராசிக்யூஷன் தரப்பு மொழிபெயர்ப்பு கீழ்க்கண்டவாறு:-
G-70 என்று
குறிப்பிடப்பட்டுள்ள கோட்சேவின் கடிதம் (Exhibit பக்கம் 293) கூறுவதாவது:
‘அக்ரணி தினசரி பத்திரிகைக்கு நீங்கள் எந்தப்
பிணையையும் பெறாமல் வெறும் கடன் உறுதிச் சீட்டின் (promissory note) அடிப்படையில் மிகப்
பெரிய தொகையாக ரூபாய் பதினைந்தாயிரம் அளித்திருக்கிறீர்கள்.
‘இம்மாதம் 25ம் தேதி, அதாவது இன்றிலிருந்து
25 நாள்கள் கழித்து ‘அக்ரணி
தினசரி இரண்டு
ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அச்சகத்துக்காக வசதியான சில ஆதரவாளர்களிடமிருந்து மூலதனத்தைப்
பெற்றுள்ளோம்
.
‘அக்ரணி குறித்த நிதி நிலவரத்தை
உங்களுக்கு (சாவர்க்கர்) கூறியபோது உங்களுக்குக் கொடுத்த கடன் உறுதிச் சீட்டை (promissory
note) நாங்கள் கிழித்துப் போடச் சொன்னோம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருப்பது தெரிய
வந்தது…
‘கடந்த திங்கள் கிழமை ஸ்ரீமான்
குலாப் சந்த் இங்கே வந்திருந்தார். அவருடன் நாங்கள் பேசினோம். ஒரு மாத காலத்துக்கு
ரூபாய் ஐந்தாயிரம் அனுப்பியிருந்தார்…
‘கணிசமான நிதி அக்ரணி தினசரிக்கு
வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது என்றாலும் ‘விக்ரம்

மற்றும் ‘ஃப்ரீ இந்துஸ்தான்
பத்திரிகைகளுக்கும்
உங்கள் உதவி தேவைப்படுவதால், உங்கள் கவனத்துக்குக் கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு
வர விரும்புகிறேன்.
‘இந்தப் பத்திரிகையில் நீங்கள்
கூடுதலாக ரூபாய் பத்தாயிரம் முதலீடு செய்வதுடன் ஒட்டுமொத்தத் தொகைக்கு அதாவது ரூபாய்
இருபத்தைந்து ஆயிரம் மீது ஆண்டுக்கு மூன்று சதவிகிதம் வட்டி வசூலிக்க வேண்டும் என்பதும்
எனது கருத்தாகும்
.
‘இப்போது நான் இந்த தினசரியின்
மற்றொரு பாகம் (அம்சம்) பற்றி எழுதுகிறேன். காந்திஜியின் ‘ஹரிஜன்
பத்திரிகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அந்தப் பத்திரிகையில் பல்வேறு தலைப்புகளில் குறைந்தபட்சம் பத்து பத்திகளுக்கு காந்தியின்
சொந்தப் பெயரில் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ஆனால் ‘அக்ரணி
பத்திரிகைக்கு உங்கள் (சாவர்க்கர்) எழுத்து
மூலம் சின்னஞ்சிறு பலன்
(பெருமை) கூட கிடைக்கவில்லை. ‘கேசரி
பத்திரிகைக்கு (லோகமான்ய) திலகர் மூலம் அதாவது அவரது எழுத்துக்கள் மூலம் நேரடிப் பலன்
கிடைத்தது. ‘ஹரிஜன்
பத்திரிகையில்
காந்தியே (கட்டுரைகள்) எழுதுகிறார்…

‘இப்போது இருப்பதை விடவும் உங்கள்
உடல் ஆரோக்கியம் தேறிய பிறகு ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒரேயொரு கட்டுரையேனும்,
அரசியல் அல்லது இந்து மதம் பற்றி மட்டுமின்றி
, புரட்சி, எந்திரமயமாக்கல், இயற்பியல், நுண்ணறிவு, இலக்கியம், வரலாறு, தத்துவம்,
கவிதை என பல்வேறு தலைப்புகளில் எழுதுங்கள். இரு
கைகளையும் கூப்பி உங்களைத் தாழ்மையுடன் தொடர்ந்து வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
.
‘எழுத்துக்கான சன்மானம் குறித்து
உங்களிடம் (சாவர்க்கர்) பேசுவது நாகரிகமாக இருக்காது. ‘அக்ரணி
பத்திரிகைக்குப் பல்வேறு தலைப்புகளில்
தொடர்ந்து எழுதத் தொடங்கிய பிறகு ‘அக்ரணி

மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை உங்கள் மீதுள்ள மரியாதைக்காகவும், பக்திக்காகவும்
தரச் சித்தமாக இருக்கிறோம். உங்களுக்கு (சாவர்க்கர்) மாதம் ரூபாய் நூறு அனுப்பி வைக்கிறோம்
.
எனது எழுத்துக்கான
சன்மானம் தொடர்பாகப் பணம் கொடுக்கும் யோசனை நேர்மையாக ஆனால் வேடிக்கையாக இருந்தாலும்,
அக்ரணி பத்திரிகைக்கு நான் எழுதவுமில்லை, ஏற்கெனவே பட்டியலிட்ட காரணங்களுக்காக மேற்கொண்டு
பண உதவி செய்யவுமில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(d)
கோட்சேவும், ஆப்தேவும் என்னுடன் பயணித்தனர்
என்னுடனான சுற்றுப்
பயணங்களில் குழுவினருடன் கோட்சேவும், சில தருணங்களில் ஆப்தேவும் பங்கேற்றனர் எனறு ப்ராசிக்யூஷன்
தரப்பு தெரிவித்துள்ளது. ப்ராசிக்யூஷன் தரப்பு சாட்சிப்படுத்தி உள்ள கோட்சே எனக்கு
எழுதிய பதினேழு கடிதங்களுள், கோட்சே என்னுடன் பயணிக்க விரும்பினார் மற்றும் பயணித்தார்
என்பதை நிரூபிக்க மட்டுமே நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் பத்துக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளது.
நான் எப்போது பயணித்தாலும் ஒவ்வொரு இடத்திலும் பிரபலத் தலைவர்களும், ஏராளமான ஊழியர்களும்
என் குழுவுடன் இணைந்து பயணிப்பார்கள். குழுவின் அளவும் எண்ணிக்கையும் சில நேரங்களில்
அதிகமாகும்போது எனது பயணத்துக்காகச் சிறப்பு ரயில் பெட்டிகள் பதிவு செய்யப்படும். கடந்த
எட்டு ஆண்டுகளில் இதுபோல் நூற்றுக்கணக்கில் நீண்ட பயணங்களை மேற்கொண்டு இந்தியா முழுவதும்
பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசியுள்ளேன்.
இவற்றுள் அதிகபட்சம் பத்து அல்லது பன்னிரண்டு பயணங்களில் மட்டுமே கோட்சேவும், ஆப்தேவும்
என்னுடன் வந்திருப்பார்கள். பண்டிட் நாதுராம் என்னுடைய பயணக் குழுவில் அவராகவே விருப்பப்பட்டு
இணைந்தார் என்பதையும், தொடர்ந்து அவர் முன்வைத்த பல அழுத்தமான கோரிக்கைகளுக்குப் பின்னரே
அனுமதிக்கப்பட்டார் என்பதையும், சில தருணங்களில் ஆர்வமுள்ள மற்ற தன்னார்வத் தொண்டர்களுக்குச்
சம அளவு வாய்ப்பளிக்க வேண்டியிருப்பதால் கோட்சே வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதையும்
நிரூபிக்க ப்ராக்சியூஷன் தரப்பு சமர்ப்பித்துள்ள கடிதங்களே ஆதாரம். மேற்கூறியவை அனைத்தும்
உண்மை என்பதை நிரூபிக்க கோட்சேவின் கடிதங்களிலிருந்து சில பத்திகளைக் கீழே தர வேண்டியது
அவசியமாகிறது. ப்ராசிக்யூஷன் தரப்பே இக்கடிதங்களைப் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளது:
1941 நவம்பர்
10 (G-26 Exhibit
பக்கம் 278) கடிதத்தில்
கோட்சே எழுதியதாவது:
“அஸ்ஸாம் பயணத்தில் கலந்துகொள்ள
நான் எப்போது பம்பாய்க்கு வரவேண்டும் என்பதையும் உங்கள் (சாவர்க்கர்) பயணத் தேதியையும்,
ரயில் விவரங்களையும் எனக்குக் கடிதம் மூலம் முன்கூட்டியே தயவுசெய்து தெரிவியுங்கள்.
உங்களுடன் (சாவர்க்கர்) பயணிக்கும்போது உங்கள் மூலம் இந்து சபா குறித்த அனுபவத்தையும்,
கல்வி அறிவையும் பெற மராட்டியத்திலுள்ள பல நல்ல ஊழியர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்…
நேற்று
சதாரா பாரிஸ்டர் விதால் ராவ் கரந்திகர் இது குறித்த தனது ஆர்வத்தை என்னிடம் கூறியதுடன்,
அவரது விருப்பத்தைக் கடிதம் வாயிலாக உங்களுக்கு (சாவர்க்கர்) தெரிவிக்கவும் பணித்தார்.
இந்தப் பயணத்தின்போது தனது செலவுகளைத் தானே பார்த்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்…
உங்களுடன் (சாவர்க்கர்) பதினைந்து நாள்கள் செலவிட ஆசைப்படுவதாகவும், அதற்கான அவரது
பயணச் செலவுகளை அவரே ஏற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளதாகக் கூறியிருக்கிறார். எனவே உங்கள்
பயணத்தின்போது அவரை இணைத்துக் கொள்ள உங்கள் சம்மதத்தைத் தர வேண்டும் என்பது என் எண்ணம்…
1942 ஆகஸ்ட்
21 கோட்சே எழுதிய கடிதத்தில் G-38 (Exhibit பக்கம் 281) உள்ளவை பின்வருமாறு:
“…29ஆம் தேதி நடைபெற இருக்கும்
செயற்குழுக் கூட்டம் மிக முக்கியமானதாக இருக்குமென எண்ணுகிறேன். …இந்தக் கூட்டத்துக்கு
நீங்கள் (சாவர்க்கர்) மற்றவர்களையும் (உறுப்பினர் அல்லாதவர்களையும்) அழைத்துள்ளீர்கள்.
எனவே இந்தக் கூட்டத்துக்கு நான் வருவதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை எனில், உங்களுடன்
வரவிருப்போருடன் என்னையும் இணைத்துக் கொள்ளச் சாத்தியப்படால் எனக்கும் மகிழ்ச்சியே.
1942 ஆகஸ்ட்
24 கோட்சே எழுதிய கடிதத்தில் G-39 (Exhibit பக்கம் 282) உள்ளவை பின்வருமாறு:
“தில்லி அமர்வு மிக முக்கியமானது
என்பதால் தலைவர் (சாவர்க்கர்) குழுவின் உறுப்பினராக என்னையும் உடன் அழைத்துச் செல்வது
குறித்துப் பரிசீலிக்கவும்.
கோட்சே எழுதிய
கடிதத்தில் G 43 (Exhibit பக்கம் 284) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“கான்பூரில் நீங்கள் தலைமை ஏற்கும்
கூட்டத்துக்கு உங்களுக்கு முன்பாகவே நான் சென்று இந்து
ப்
பிரசாரத்தை மேற்கொள்ள விரும்புகிறேன். ஆனால் மற்றவர்கள் அவர்களை அனுப்ப
உங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதை நான் அறிவேன். இதன் காரணமாக எனது பெயரை நீங்கள்
நீக்க வாய்ப்புள்ளது. எனவே ஐக்கிய மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்ய என்னை நினைவில்
வைத்துக்கொண்டு அனுப்பி வைக்கவும்.

கோட்சே எழுதிய
கடிதத்தில் (G-45 Exhibit பக்கம் 286) கூறுவதாவது:
“தில்லி செயற்குழுக் கூட்டத்துக்கு
நீங்கள் (சாவர்க்கர்) செல்லும்போது உங்கள் குழுவுடன் நானும் தில்லி வர விரும்புகிறேன்.
ரயிலில் பணியாளரின் டிக்கெட்டிலோ, உங்கள் குழுவிடமுள்ள இரண்டாம் வகுப்பு டிக்கெட்டிலோ
பயணிக்க ஆர்வமாக உள்ளேன்.
எனது செயலாளர்
மற்றுமொரு தருணத்தில் கோட்சேவுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்:
“தலைவருடன் தில்லி செல்ல விரும்பும்
உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. ஆனால் ஏற்கெனவே திரு பகவத்தை எங்களுடன் (சாவர்க்கர் குழு)
அழைத்துச் செல்ல முடிவெடுத்ததால் இம்முறை உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை (SG-5
Exhibit பக்கம் 299 பார்க்கவும்).

சில தருணங்களில்
பயணங்களின்போது எங்கள் குழுவினருடன் ஊடகப் பிரதிநிதியாக கோட்சே கலந்துகொண்டு பல்வேறு
பத்திரிகையில் சிறப்பாக விவரித்து எழுதியுள்ளார். இதை ஏனைய பத்திரிகையாளர்களும் செய்துள்ளனர்.
அவர்களுள் ஒருவராகத்தான் கோட்சே இருந்துள்ளார்.



தொடரும்…
Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலைவழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 1 | தமிழில்: ஜனனி ரமேஷ்


நிற்பவர்கள்:
சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்ஸே, மதன்லால் பஹ்வா, திகம்பர் பட்கே
அமர்ந்திருப்பவர்கள்: நாராயண் ஆப்தே, சாவர்க்கர், நாதுராம் கோட்ஸே, விஷ்ணு கார்கரே

பின்புலம்: மகாத்மா
காந்தி கொலை வழக்கு தொகுதி II (குற்றம் சுமத்தப்பட்டவர் அறிக்கைகள்) அதிகாரப்பூர்வ
ஆவணங்களிலிருந்து மீள் உருவாக்கம் செய்யபப்பட்டவை. கீழ்க்கண்டவை சாவர்க்கர் எழுத்து
வடிவிலான வாக்குமூலம் ஆகும்:
சிறப்பு நீதிமன்றம், செங்கோட்டை, தில்லி
குற்றவியல் எண் ….. 1948
வாதி
Vs
கோட்சே மற்றும் பலர் – குற்றம் சுமத்தப்பட்டவர்கள்
இபீகோ 120பி, 302 பிரிவுகளின் கீழ் வழக்குப்
பதிவு
குற்றம் சுமத்தப்பட்டவர் எண் 7, விநாயக்
தாமோதர் சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு பணிந்து சமர்ப்பிப்பது
என்
மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றங்களையும் நான் இழைக்கவில்லை அதற்கான நோக்கமும் இல்லை.
இந்த
வழக்குக்கான சாட்சி 1948 ஜனவரி 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்மந்தப்பட்டவர்களின்
தனி நபர் செயல்கள் என்றும், கூட்டுச் சதியின் விளைவு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி
இருந்த நிலையிலும், இந்த நிகழ்வுகளுடன் தொடர்புடைய குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஒப்புக்
கொண்ட நிலையிலும்,
இந்த
நீதிமன்றத்தின் விசாரணை முடிவுகள் எப்படி இருப்பினும், நான் விழுமிய முறையில் வலியுறுத்துவது
என்னவெனில், அரசு வழக்கறிஞர் குற்றம் சுமத்தியபடி நான் எந்தவொரு கூட்டுச் சதிக்குக்
காரணமாகவும் இல்லை, அதில் ஈடுபடவும் இல்லை அல்லது அதுபோன்ற குற்றவியல் நிகழ்வுகள் குறித்து
அறியவும் இல்லை.
குற்றப்
பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி நான் எந்தக் குற்றத்துக்கும் உடந்தையாக இருக்கவில்லை,
அதற்கான காரணமோ அவசியமோ இல்லை.
என்
தரப்பு வாதத்தைத் தெளிவுபடுத்த எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிலை குறித்துச் சில
முக்கிய விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். 1905ம் ஆண்டு பம்பாய் பல்கலைக்கழகத்தில்
பட்டம் பெற்றேன். சட்டம் படிக்க இலண்டன் க்ரேஸ் இன் கல்லூரியில் சேர்ந்து 1909ல் பார்
கௌன்சிலில் இணையத் தகுதி பெற்றேன். மராட்டியம் மற்றும் ஆங்கில மொழிகளில் கவிதை, நாடகம்,
விமர்சனம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதி உள்ளேன். நான்
எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகள், இந்தியாவின் ஒன்றுக்கும்
மேற்பட்ட பல பல்கலைக்கழகங்களால் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பாடங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நாக்பூர் பலகலைக்கழகம் இலக்கியத்துக்கான எனது சேவைகளைப் பாராட்டிச் எனக்கு
‘டாக்டர்’ பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது. அஸ்ஸாம் முதல் சிந்து வரை, காஷ்மீர்
முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் நடைபெறும் அரசியல், சமூகம்,
மதம், இலக்கியம் தொடர்பான பல்வேறு அமர்வுகள், கூட்டமைப்புகள், கருத்தரங்குகளுக்குத்
தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இது தொடர்பான விவரங்களையும், சம்மந்தப்பட்ட
ஆவணங்களையும், ப்ராக்சிக்யூஷன் தரப்பு ஏற்கனவே ஆதாரமாகப் பதிவு செய்துள்ளது. (பி.டபிள்யூ
57, பக்கங்கள் 222 & 223, பி.டபிள்யூ 69 பக்கங்கள் 319 & 320 பார்க்கவும்)
சாவர்க்கர் சதன்
– பத்தாண்டுகளுக்குமுன்பு பம்பாய் தாதர் பகுதியில் நான் புதிதாகக் கட்டிய ‘சாவ்சர்க்கர்
சதன்’ என்னும் வீட்டில் குடியிருக்க வந்தேன். இந்த வழக்கைப் பொருத்தவரை இந்த வீட்டைப்
பற்றிய சில விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். ‘சாவர்க்கர் சதன்’ இரு அடுக்குகள்
கொண்ட வீடாகும். தரைத் தளத்தில், நடுக் கூடம், இந்து சங்கதான் அலுவலகத்துக்காக, இந்து
மகாசபாவைப் போலவே, எந்த வாடகையும் இல்லாமல், எனது சொந்தச் செலவில் பரமாரிக்கப்பட்டு
வருகிறது. உள்ளூர் இந்து சபா ஊழியர்கள் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து வருவோர், இந்து
சபா பணிகள் குறித்து விவாதிக்க இங்கே வழக்கமாக வருவார்கள். இந்து சபா ஊழியர்களும்,
வருகை தருவோரும், படிப்பதற்காக ஏராளமான தினசரிகளும், சஞ்சிகைகளும் அங்கே வைக்கப்பட்டிருக்கும்.
அது வரவேற்பு அறையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அலுவலக ஊழியர்களும், வாடகைக்குக்
குடியிருப்போரும் உபயோகப்படுத்தத் தொலைபேசி இணைப்பும் உண்டு. இந்து சங்கதான் அலுவலகம்
தொடர்பான தட்டச்சு மற்றும் எழுத்துப் பணிகளும் நடைபெற்று வந்தன. அன்றாட வேலைகளைக் கவனிக்க
செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலக நிர்வாகம் தொடர்பான மிக முக்கிய மற்றும் அவசரப்
பணிகள் இருந்தால் மட்டுமே அவர் என்னைத் தொடர்பு கொள்வார். கடந்த நான்கு அல்லது ஐந்து
ஆண்டுகளாக திரு ஜி.வி.தாம்லே எனது செயலாளராகவும், திரு கஸர் எனது பாதுகாவலராகவும் இருந்து
வருகின்றனர். திரு கஸர் நடுக் கூடத்துக்குப் பின்புறம் உள்ள அறையில் வசித்து வருகிறார்.
இந்த
வீட்டின் தரைத் தளத்திலுள்ள நடுக் கூடத்தின் இடதுபக்கம் நுழைந்தால் பல அறைகள் வாடகைக்கு
விடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாக திரு ஏ.எஸ்.பிட்டே தனது குடும்பத்துடன்
இங்கே வாடகைக்குத் தங்கியிருக்கிறார். ‘ஃப்ரீ இந்துஸ்தான்’ என்னும் ஆங்கில வார ஏட்டின்
ஆசிரியரான அவர் பம்பாய் மற்றும் மராட்டிய மாகாண முன்னணித் தலைவரும் ஆவார். இந்த நடுக்
கூடத்தின் வலது பக்கத்தில் திரு ஜி.வி.தாம்லே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
என்னுடைய செயலாளராக இருப்பதுடன் திரு ஜி.வி.தாம்லே தாதர் மற்றும் பம்பாய் மாகாண இந்து
சபாக்களின் தனித்துவ மற்றும் பிரபல ஊழியராகவும் உள்ளார்.
நான்
என் குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் வசித்து வருகிறேன். என் தனிப்பட்ட அலுவலகம்
மற்றும் வரவேற்பு அறை முதல் மாடியிலுள்ள நடுக் கூடத்தில் அமைந்துள்ளது. எனது உடல்நிலை
தொடர்ந்து சரிந்து வருவதால், செயலாளரின் சிறப்பு அனுமதி இல்லாமல், பொது மக்களோ, ஊழியர்களோ,
என்னைச் சந்திக்க முதல் மாடிக்கு அனுமதிக்கப்படுவதில்லை. என்னைப் பார்க்க சிறப்பு அனுமதி
பெற்ற பிறகே நேர்காணல்கள் அனைத்துக்கும் நேரம் ஒதுக்குகிறேன். முதல் மாடியிலும் சில
அறைகளை ஒருவருக்குக் குடும்பத்துடன் வாடகைக்கு விட்டிருக்கிறேன்.
பொதுவாக
என்னைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்ள விரும்பாத நான், ப்ராக்சிக்யூஷன் தரப்பு என் மீது
சுமத்திய சில மறைமுகக் குற்றச்சாட்டுகள் காரணமாக, விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில்
உள்ளேன். இந்தியா மற்றும் சில தருணங்களில் வெளி நாடுகளிலிருந்து கூட ஆயிரக் கணக்கானோர்
சாவர்க்கர் சதனுக்கு வருகை தந்துள்ளனர். இளவரசர்கள் தொடங்கி விவசாயிகள் வரை, சனாதனத்
தலைவர்கள் தொடங்கி சோஷியலிஸ்ட் தலைவர்கள் வரை, இந்து சபா தலைவர்கள் தொடங்கி காங்கிரஸ்
தலைவர்கள் வரை, பள்ளி மாணவர்கள் தொடங்கிக் கல்லூரி மாணவர்கள் வரை, பல்வேறு கட்சிகளைச்
சேர்ந்த பிரபலங்கள், ஊழியர்கள், இளைஞர்கள் என அன்றாடம் பலர் நாள் முழுவதும் சாவர்க்கர்
சதனுக்கு வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஆப்பிரிக்கா
மற்றும் உலகின் ஏனைய நாடுகளின் பத்திரிக்கைப் பிரதிநிதிகளும், பிரபல அரசியல் விமர்சகர்களும்
என்னை பேட்டி எடுக்க சாவர்க்கர் சதனுக்கு வந்துள்ளனர். என்னைச் சந்திக்க வருவோரை ஒழுங்குபடுத்த
நுழைவு வாயிலில் ஒன்றிரண்டு கூர்க்காக்களும், சீக்கியர்களும் பாதுகாப்புக்கு இருப்பார்கள்.
(சாட்சி பி.டபிள்யூ 57 பக்கங்கள் 222 & 223 பார்க்கவும்).
இந்து மகாசபா – 1937ம்
ஆண்டு இந்து மகாசபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆறு முறை தொடர்ந்து அதன் தலைவராக
இருந்தேன். சமீபமாக எனது உடல் நிலை ஒத்துழைக்காததால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன்.
லாலா
லஜ்பத்ராய், பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகிய பிரபலங்கள் நிறுவிய மகாசபா பதிவு பெற்ற
சங்கம் என்பதை விளக்க இந்த வழக்குக்கு இதுபோதும். விஜயராகவாச்சாரியார், ராமானந்த் சாட்டர்ஜி,
என்.சி.கேல்கர், பாய் பரமானந்த், டாக்டர் மூஞ்சே உள்ளிட்ட பிரபலங்கள் இதன் தலைவர்களாகப்
பதவி வகித்துள்ளனர். இதன் நிறுவனர்களும், தலைவர்களும், இந்திய தேசியக் காங்கிரஸின்
தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் இருந்துள்ளனர். மகாசபாவின் முக்கிய நோக்கம் ‘இந்து
சங்கதான்’ அதாவது இந்துக்களின் அரசியல், சமுக ஒருங்கிணைப்பு மற்றும் ராணுவமயமாக்கல்
ஆகும். அரசியல் அறிவியல் ரீதியாக இந்துக்களை இந்தியாவில் ‘தேசியப் பெரும்பான்மையினர்’
என்று அழைப்பதால், ஆற்றலும், பாதுகாப்பும், உறுதியும் கொண்ட பாறைபோன்ற அடித்தளத்தின்
மீது வலுவான சுதந்திர இந்திய நாடு உருவாகும் வகையில், இந்துக்களின் ஒருங்கிணைப்பும்,
கூட்டமைப்பும் அமைய வேண்டும். அவ்வாறு உருவாகும் இந்தியா மதசார்பற்ற நாடாக விளங்க வேண்டும்.
வாழும் ஒவ்வொரு விசுவாசம் மிக்க குடிமகனும் மதம், சாதி, இன, வேறுபாடு இன்றிச் சமமான
உரிமையும், கடமையும் பெற வேண்டும். தேசிய அளவில் இந்துக்களுக்கான உரிமைப் பங்கைத் தாண்டி
ஒரு இஞ்ச் அளவு கூட அதிகம் வேண்டாம். ஆனால் அதே சமயம், இந்துக்களுக்குக் கிடைக்க வேண்டிய
நியாயமான உரிமையைப் பிடுங்கிக்கொண்டு, முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்துக்காக, அவர்களது
தகுதியைத் தாண்டிப் பங்களிப்பது, அப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் விசுவாசமாக இருக்கமாட்டார்கள்
என்பதற்காக அப்படிச் செய்வதை இந்திய நாடு பொறுத்துக் கொள்ளாது. அது துரோகத்தின் மீது
நம்பிக்கை வைப்பதற்குச் சமானமாகும். சிறுபான்மை மதம் / இன ரீதியிலான தனி வாக்குரிமைக்கு
வழிவகுக்கும் ‘கம்யூனல் அவார்ட்’ (Communal Award) திட்டத்தை மகாசபை கடுமையாக எதிர்த்ததற்கு
முக்கியக் காரணம், கிட்டத்தட்ட ஒரு இஸ்லாமியருக்கு 3 வாக்குரிமையும், 3 இந்துக்களுக்கு
1 வாக்குரிமையும் மட்டுமே கிடைக்கும் என்று அது சொன்னதால்தான்.
அகில
இந்திய அளவில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இந்து மகாசபா என மூன்று முக்கிய மற்றும்
பெரிய அமைப்புகளாக உருவாகும் வகையில் மகாசபா மிக வேகமாக வளர்ச்சியையும், அங்கீகாரத்தையும்
பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடு மற்றும் ஏனைய ஆலோசனை அமைப்புகளில்
பங்கேற்கப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க அதற்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. மேலும் அதன்
தலைவர் என்ற முறையில் பல்வேறு தருணங்களில் நேர்காணல்களுக்கும், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கான
கருத்துக்களைப் பதிவு செய்ய பல்வேறு வைஸ்ராய்கள் மற்றும் ஆளுநர்களிடமிருந்து எனக்கும்
அழைப்பு வந்துள்ளது. க்ரிப்ஸ் மிஷன் வந்திருந்த சமயத்திலும் அரசு அழைப்புக்கு இணங்க
மகாசபாவின் கருத்துக்களை எடுத்துரைக்க எனது தலைமையில் குழு பங்கேற்றது. தாய்நாட்டின்
ஒற்றுமையை வேரறுக்கும் வகையில் கூறுபோட்ட க்ரிப்ஸ் திட்ட விதிகளை எந்த சமரசமும் செய்து
கொள்ளாமல் ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரே அமைப்பு, மூன்று அகில இந்திய அமைப்புகளில், மகாசபா
மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மகாசபாவுக்கு
அனைத்து மாகாணங்களிலும், இந்தியாவின் எல்லா மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளன. மகாசபா
உருவாக்கிப் பிரச்சாரம் செய்த இந்து சங்கதானுக்குப், பின்னாளில் சாவர்க்கரிஸம் என்று
பிரபலமான சித்தாந்தத்துக்கு, இளைஞர்கள் தொடங்கி பிரபல தலைவர்கள் வரை ஆயிரக் கணக்கான
இந்துக்கள் மகத்தான ஆதரவளித்தனர். தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மகாசபை தலைவர் பொறுப்பில்
இருந்த காரணத்தால் அதன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவே நான் பார்க்கப்பட்டேன்.
என்னுடைய அமைப்பு ரீதியான கடிதத் தொடர்புகள், பயணங்கள், எழுத்துகள், பேச்சுகள் மூலம்
இந்தியா முழுவதிலுமுள்ள ஆயிரக் கணக்கான மகாசபா தலைவர்கள், ஊழியர்கள், உறுப்பினர்கள்
ஆகியோருடன் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டேன்.
இதுபோன்ற
எண்ணற்ற இந்து மகாசபா ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுள் ஒருவராகத்தான் பண்டிட்
நாதுராம் கோட்சே எனக்குப் பிரத்யேகமாக அறிமுகம் ஆனார். திரு ஆப்தேவும் ஒரு கடிதம் மூலம்,
நகரில் பணியாற்றும் இந்து சபா ஊழியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். கலெக்டர்
அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து ரைஃபிள் கிளப் தொடங்கவும் ஆர்வமுடன் இருந்தார். குவாலியர்
இந்து சபா தலைவர் என்ற முறையில் டாக்டர் பர்சுரேவும் அறிமுகமானார். கர்கரே நகரைச் சேர்ந்த
இந்து சபா ஊழியர் என்பதையும், இந்து மகாசபா மூலம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
விவரத்தையும் அறிந்துகொண்டேன். திரு பட்கே எனக்கு எழுதிய கடிதம் மூலம் அவர் இந்து சங்கதான்
ஊழியர் என்றும் சட்டத்துக்கு உட்பட்டு உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை விற்பனை செய்வதையும்
தெரிந்துகொண்டேன். குற்றம் சுமத்தப்பட்ட மற்றவர்களான சங்கர், கோபால் கோட்சே மற்றும்
மதன்லால் ஆகியோர் யாரென்றே எனக்குத் தெரியாது. அவர்களின் பெயர்களைக்கூட நான் அறிந்திருக்கவில்லை.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் இந்து சபா
ஊழியர்களாக நான் அறிந்திருந்தவர்கள்:
இந்து
மகாசபாவின் உள்ளூர், மாவட்ட மற்றும் மாகாணக் கிளைகள் அமைப்பு ரீதியான விதிகளுக்கு இணங்க
அவர்களது பணி குறித்த அறிக்கைகளை பம்பாயிலுள்ள எனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.
பூனா இந்து சபாவிலிருந்து வரும் அறிக்கைகளிருந்து திரு பட்கே சம்பளத்துக்கும், சில
சமயம் சம்பளம் இல்லாமலும் பிரச்சாரக்காகப் பணியாற்றியதைத் தெரிந்துகொண்டேன். உரிமம்
பெற்ற ஆயுதங்களை விற்பனை செய்ய அவர் நடத்திக் கொண்டிருந்த கடை குறித்த ஒன்று அல்லது
இரண்டு அறிக்கைகளை எனக்கு அனுப்பியதுடன், நிதி உதவியும் கோரி இருந்தார். இக்கடிதங்கள்
பற்றி எனது எழுத்து வடிவிலான வாக்குமூலத்தில் பின்னர் விரிவாக விளக்குகிறேன். இதைத்
தாண்டி எனக்குத் திரு பட்கே பற்றி வேறு எதுவுமே தெரியாது. தனிப்பட்ட முறையிலும் என்னுடன்
அவர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.
குவாலியர்
இந்து மகாசபா பணி குறித்த அறிக்கைகளை டாக்டர் பர்சுரே சில ஆண்டுகள் எனக்கு அனுப்பி
வைத்தார். இந்து சங்தான் இயக்கத்துக்கு உதவும் நோக்கத்துடன் ‘இந்து ராஷ்ட்ர சேனா’ என்ற
பெயரில் தன்னார்வக் குழுவை அமைத்துள்ளதாக எனக்குக் கடிதம் எழுதினார். ப்ராக்சிக்யூஷன்
தரப்பு சாட்சிகளுள் ஒருவர் தன்னை சேனா அமைப்பின் உறுப்பினர் என்றும், அதன் பயிற்சிகளில்
பங்கேற்றுள்ளதாகவும், ராஷ்ட்ர சேனாவின் நோக்கம் இந்து இளைஞர்களை ஒருங்கிணைப்பது என்றும்
இந்த நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார் (பி.டபிள்யூ.39 பக்கம் 137 பார்க்கவும்).
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து டாக்டர்
பர்சுரே பற்றிய செய்திகள் எதுவும் எனக்கு வரவில்லை. அவரும் தனிப்பட்ட முறையில் என்னுடன்
எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. நகரிலுள்ள இந்து சபா அறிக்கைகள் மூலம் இந்து
ராணுவமயமாக்கலுக்காகவும், சங்கதானுக்காகவும், திரு ஆப்தேவுடன் ஷுத்திப் பணிக்காவும்
கடுமையாக உழைத்து வருவதாகத் திரு கர்கரே பற்றி அடிக்கடி நான் கேள்விப்படுவேன். இந்து
சபா சார்பில் நகராட்சித் தேர்தல்களில் கர்கரே வெற்றி பெற்றது குறித்து திரு ஆப்தே ஓரிரு
முறை எனக்குக் கடிதம் எழுதி உள்ளார். ஆனால் கர்கரே ஒரு தடவை கூட எனக்குக் கடிதம் எழுதியதில்லை.
தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திக்கவும் இல்லை (பி.டபிள்யூ 129 பக்கம் 3 பார்க்கவும்).
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நான் உடல்நலம் குன்றியதிலிருந்து அவரைப் பற்றி எந்தவொரு
தருணத்திலும் நான் கேள்விப்படவும் இல்லை. திரு ஆப்தே மற்றும் திரு பண்டிட் கோட்சே ஆகிய
இருவரும் நகர் மற்றும் பூனாவிலுள்ள இந்து சபா ஊழியர்களாகத் தாங்களாகவே என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு
பின்னர் தனிப்பட்ட முறையில் என்னுடன் பழக்கமானார்கள்.
ஆப்தே, கோட்சே மற்றும் அவர்களது கடிதப்
போக்குவரத்து
மகாசபா
திட்டத்தில் இந்து ராணுவமயமாக்கல் விஷயம் மிக முக்கிய அம்சமாக எப்போதுமே இடம் பெற்று
வந்ததுள்ளது. இந்த நோக்கத்துடன் சில பணிகளை நகர் ஊரிலிருந்து ஆப்தே செய்து வருவதாக
அவரது கடிதத்திலிருந்து தெரிந்துகொண்டேன். இதுகுறித்து அங்குள்ள தலைவர்களிடம் நடத்திய
விசாரணையில் அது உண்மை என்றும், அதற்கான அரசு அனுமதியை அப்போதைய உள்துறை உறுப்பினரிடமிருந்து
அவர் பெற்றுள்ளதாகவும் கேள்விப்பட்டேன். பின்னர் பூனாவில் ஸ்ரீ ரகுநாத ராவ் பரஞ்ச்பே
தலைமையில் ரைஃபிள் க்ளப்களின் கூட்டத்துக்கான மையத்துக்கும் திரு ஆப்தே ஏற்பாடு செய்திருந்தார்
(டி27 & டி28 என்று குறிக்கப்பட்டுள்ள திரு ஆப்தேவின் கடிதங்களைப் பார்க்கவும்).
இதைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகளால் அவர் கௌரவ தொழில்நுட்ப ஆளெடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன்,
நிறைவாக விமானப் படையில் கிங்க்ஸ் கமிஷனாகவும் உயர்ந்தார். இந்து சபாவிலும் பணியாற்றினார்.
அவர் எனக்கு எழுதி, நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10-12 கடிதங்களில் பெரும்பாலானவை
ரைஃபிள் க்ளப் அறிக்கைகள் மற்றும் இந்து சபாவில் அவர் பணியாற்றியது தொடர்பானவையே.
ஆப்தேவைப்
போலவே கோட்சேவும் அதே வழியில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். மராட்டியத்தின் பல்வேறு
பகுதிகளுக்குப் பிரச்சாரக் என்ற முறையில் மேற்கொண்ட பயணம், உள்ளூர் சபா தொடர்பான அவரது
பணிகள், கருத்துகள், ஆலோசனைகள் குறித்து எனக்கு அறிக்கைகள் அனுப்பி வைப்பார். எங்களது
அமைப்பு ரீதியான கட்டமைப்பு விதிகளின்படி ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாகாண ஊழியரும் இதுபோன்ற
அறிக்கைகளை எனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாகும். கோட்சே எனக்கு
எழுதி நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 15 அல்லது 20 கடிதங்கள் அனைத்துமே மேற்கூறிய
அமைப்பு ரீதியான அறிக்கைகள் தொடர்பானவை மட்டுமே ஆகும்.
கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோர் எனக்கு எழுதிய சில கடிதங்களைப் ப்ராக்சிக்யூஷன்
தரப்பு எனக்கு எதிரான சாட்சியங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ‘அக்ரணி’க்கு
எழுதிய கடிதங்களில் எனது பயணம் உள்பட சில தலைப்புகளில் இடம்பெற்றவைகளைப் ப்ராக்சிக்யூஷன்
தரப்பு மேற்கோள் காட்டி எனக்கும் அவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் நிரூபிக்க
முனைந்துள்ளது. ஆனால் விரிவாக ஆராய்ந்தால், எனக்கும் அவர்களுக்கும் இடையேயான உண்மையான
தொடர்பைத் தெரிவிப்பதுடன், அவை இயற்கை நியதிக்கும் சட்டத்துக்கும் உட்பட்டவை என்பதையும்
விளக்கும். ப்ராக்சிக்யூஷன் தரப்பு எனக்கு எதிராகத் தாக்கல் செய்த அதே கடிதங்கள் மூலமே
என் தரப்பு நியாயத்தை நிரூபிப்பேன்.
(தொடரும்…)