கடந்த ஆண்டின் இறுதியில், தாத்ரி சம்பவத்தை முன்வைத்து,
பிரதமர் மோடிக்கு எதிராக இடதுசாரி எழுத்தாளர்களும், எதிர்க்கட்சிகளும் பிரசாரத்தில்
ஈடுபட்டார்கள். அப்போது, மத்திய அரசு கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதாக அவர்கள் அலறினார்கள்.
பிரதமர் மோடிக்கு எதிராக இடதுசாரி எழுத்தாளர்களும், எதிர்க்கட்சிகளும் பிரசாரத்தில்
ஈடுபட்டார்கள். அப்போது, மத்திய அரசு கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதாக அவர்கள் அலறினார்கள்.
பாரதிய ஜனதா மீதும் இந்துத்துவர்கள் மீதும் அக்கறை
கொண்டவர்களும், எக்கட்சி சார்பும் இல்லாத பொதுமக்களும்கூட மத்திய அரசு தவறிழைக்கிறதோ
என்று சந்தேகப்படும் வகையில், எதிர்க்கட்சிகள் வலுவாகக் கோஷமிட்டன. பிகார் தேர்தலுடன்
பிரசாரத்தை மூட்டை கட்டிவிட்டன.
கொண்டவர்களும், எக்கட்சி சார்பும் இல்லாத பொதுமக்களும்கூட மத்திய அரசு தவறிழைக்கிறதோ
என்று சந்தேகப்படும் வகையில், எதிர்க்கட்சிகள் வலுவாகக் கோஷமிட்டன. பிகார் தேர்தலுடன்
பிரசாரத்தை மூட்டை கட்டிவிட்டன.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரவிருக்கும் உத்திரப்
பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மோடிக்கு எதிரான பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கிவிட்டன.
பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மோடிக்கு எதிரான பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கிவிட்டன.
அண்மையில் நாடு முழுவதும் தலாக் பிரச்சினை தொடர்பாக
விவாதம் எழுந்தது. முஸ்லிம் பெண்களுக்கு உரிய நியாயத்தை மத்திய அரசு உறுதி செய்யும்
என்றார் மோடி. உடனே மோடியின் மனைவி யசோதாபென்னுக்கு நியாயம் வழங்கப்படுமா என்று காங்கிரஸ்
கட்சி தனிப்பட்ட தாக்குதலை மீண்டும் தொடங்கியது. இத்தனைக்கும் இந்த விவகாரம் எழுப்பப்படுவது
புதிதல்ல. குஜராத் தேர்தலில் மோடியைத் தோற்கடிக்க முடியாமல், யசோதா பென் விவகாரத்தை
காங்கிரஸ் எழுப்பியது. ஏதுமறியாத 10 வயதில் யசோதாபென்னைத் திருமணம் செய்ததை மோடி மறுக்கவில்லை.
ஆனால், விவரம் புரிந்ததும் பால்யத் திருமணம் செல்லாது என்று கூறிவிட்டு, ஆர்.எஸ்.எஸ்.
இயக்கத்தில் மோடி சேர்ந்துவிட்டார். யசோதா பென்னும் மறு திருமணம் செய்து கொள்ளவில்லை.
சாதாரண ஆசிரியையாக வாழ்ந்து வருகிறார். ஆனால், இருவருக்கும் அதன் பிறகு தொடர்பும் இல்லை.
இந்த பதிலை அப்போது முதலே பாஜகவும் கூறி வருகிறது. மக்களவைத் தேர்தலில் இந்த விவகாரம்
எழுப்பப்பட்டது. மக்கள் இந்த விஷமப் பிரசாரத்தைப் புறக்கணித்தனர். மீண்டும் மீண்டும்
தோல்வி அடைந்தாலும் எதிர்க்கட்சிகள் தங்களைத் திருத்திக் கொள்ளவில்லை. இனி மாற்றிக்
கொள்ளப் போவதுமில்லை. காரணம், எதிர்க்கட்சிகளின் குணம் அது.
விவாதம் எழுந்தது. முஸ்லிம் பெண்களுக்கு உரிய நியாயத்தை மத்திய அரசு உறுதி செய்யும்
என்றார் மோடி. உடனே மோடியின் மனைவி யசோதாபென்னுக்கு நியாயம் வழங்கப்படுமா என்று காங்கிரஸ்
கட்சி தனிப்பட்ட தாக்குதலை மீண்டும் தொடங்கியது. இத்தனைக்கும் இந்த விவகாரம் எழுப்பப்படுவது
புதிதல்ல. குஜராத் தேர்தலில் மோடியைத் தோற்கடிக்க முடியாமல், யசோதா பென் விவகாரத்தை
காங்கிரஸ் எழுப்பியது. ஏதுமறியாத 10 வயதில் யசோதாபென்னைத் திருமணம் செய்ததை மோடி மறுக்கவில்லை.
ஆனால், விவரம் புரிந்ததும் பால்யத் திருமணம் செல்லாது என்று கூறிவிட்டு, ஆர்.எஸ்.எஸ்.
இயக்கத்தில் மோடி சேர்ந்துவிட்டார். யசோதா பென்னும் மறு திருமணம் செய்து கொள்ளவில்லை.
சாதாரண ஆசிரியையாக வாழ்ந்து வருகிறார். ஆனால், இருவருக்கும் அதன் பிறகு தொடர்பும் இல்லை.
இந்த பதிலை அப்போது முதலே பாஜகவும் கூறி வருகிறது. மக்களவைத் தேர்தலில் இந்த விவகாரம்
எழுப்பப்பட்டது. மக்கள் இந்த விஷமப் பிரசாரத்தைப் புறக்கணித்தனர். மீண்டும் மீண்டும்
தோல்வி அடைந்தாலும் எதிர்க்கட்சிகள் தங்களைத் திருத்திக் கொள்ளவில்லை. இனி மாற்றிக்
கொள்ளப் போவதுமில்லை. காரணம், எதிர்க்கட்சிகளின் குணம் அது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய
அரசு திடீர்த் தடை விதித்தபோதும், எதிர்க்கட்சிகளின் ‘தரம்’ புரிந்தது. மத்திய அரசின்
நடவடிக்கைகளை விமர்சிப்பது தவறல்ல. ஆனால், அதை மையமாக வைத்து நடந்த கீழ்த்தர அரசியல்,
சாமானிய மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. பிரதமரின் அறிவிப்பை சாமானிய மக்கள் வரவேற்று
விடக் கூடாது என்ற ‘பதற்றம்’ அவர்களிடம் காணப்பட்டது. பல விமர்சனங்களில் தர்க்கம் இல்லை.
மாறாக அவதூறு மட்டுமே காணப்பட்டது. பலவிதமான பொய்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. மக்களை
பீதிக்குள்ளாக்குவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றெல்லாம் சிலர் கனவு
கண்டனர்.
அரசு திடீர்த் தடை விதித்தபோதும், எதிர்க்கட்சிகளின் ‘தரம்’ புரிந்தது. மத்திய அரசின்
நடவடிக்கைகளை விமர்சிப்பது தவறல்ல. ஆனால், அதை மையமாக வைத்து நடந்த கீழ்த்தர அரசியல்,
சாமானிய மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. பிரதமரின் அறிவிப்பை சாமானிய மக்கள் வரவேற்று
விடக் கூடாது என்ற ‘பதற்றம்’ அவர்களிடம் காணப்பட்டது. பல விமர்சனங்களில் தர்க்கம் இல்லை.
மாறாக அவதூறு மட்டுமே காணப்பட்டது. பலவிதமான பொய்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. மக்களை
பீதிக்குள்ளாக்குவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றெல்லாம் சிலர் கனவு
கண்டனர்.
ரூபாய் நோட்டு தடை திடீரென அறிவிக்கப்பட்டிருக்கலாம்.
இது தவிர்க்கமுடியாதது. ஒட்டுமொத்தமாக கறுப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் ஒழிக்க
ரகசியம் மிக அவசியம். அதேசமயம் இத்திட்டத்தை சரியாக அமல்படுத்த ஆறு மாதங்களாகத் திட்டமிடப்பட்டது.
அறிவிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, அமைச்சரவைக் கூட்டத்துக்கு வரும் மத்திய அமைச்சர்களோ
அவர்களது உதவியாளர்களோ அலைபேசிகளைக் கொண்டு வரக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சாதாரண மக்கள் தங்கள் இன்னல்களையும் தாண்டி அரசின் அறிவிப்பை வரவேற்கிறார்கள். எதிர்க்கட்சிகளும்
அவர்களது ஆதரவு ஊடகங்களும் வழக்கம் போலவே வதந்திகளைப் பரப்பின.
இது தவிர்க்கமுடியாதது. ஒட்டுமொத்தமாக கறுப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் ஒழிக்க
ரகசியம் மிக அவசியம். அதேசமயம் இத்திட்டத்தை சரியாக அமல்படுத்த ஆறு மாதங்களாகத் திட்டமிடப்பட்டது.
அறிவிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, அமைச்சரவைக் கூட்டத்துக்கு வரும் மத்திய அமைச்சர்களோ
அவர்களது உதவியாளர்களோ அலைபேசிகளைக் கொண்டு வரக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சாதாரண மக்கள் தங்கள் இன்னல்களையும் தாண்டி அரசின் அறிவிப்பை வரவேற்கிறார்கள். எதிர்க்கட்சிகளும்
அவர்களது ஆதரவு ஊடகங்களும் வழக்கம் போலவே வதந்திகளைப் பரப்பின.
மத்திய அரசின் நடவடிக்கைகளை வரவேற்பவர்களுக்கு டேஷ்
பக்தர்கள் என்று அடைமொழி இடுவது, பிரதமர் மோடியை சகட்டுமேனிக்கு விமர்சிப்பது என்று
சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியான அர்ச்சனை. போதாததற்கு, அரவிந்த் கெஜ்ரிவாலும், மம்தாவும்
செய்யும் ஸ்டண்டுகள். ஒருபக்கம், பாரதிய ஜனதாவின் நண்பர்களுக்கு மட்டும் முன்கூட்டியே
தகவல் தெரியும் என்கிறார்கள். அதையே காங்கிரசும் கூறுகிறது. மறுபக்கமோ, பிரதமரின் அறிவிப்பு
பற்றி நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கே தெரியாது என்று ராகுல் காந்தி விமர்சிக்கிறார்.
முதலில், மோடி எதிர்ப்பாளர்களும், எதிர்க்கட்சிகளும் அவர்களுக்குள் பேசி தெளிவு அடையவேண்டும்.
பக்தர்கள் என்று அடைமொழி இடுவது, பிரதமர் மோடியை சகட்டுமேனிக்கு விமர்சிப்பது என்று
சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியான அர்ச்சனை. போதாததற்கு, அரவிந்த் கெஜ்ரிவாலும், மம்தாவும்
செய்யும் ஸ்டண்டுகள். ஒருபக்கம், பாரதிய ஜனதாவின் நண்பர்களுக்கு மட்டும் முன்கூட்டியே
தகவல் தெரியும் என்கிறார்கள். அதையே காங்கிரசும் கூறுகிறது. மறுபக்கமோ, பிரதமரின் அறிவிப்பு
பற்றி நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கே தெரியாது என்று ராகுல் காந்தி விமர்சிக்கிறார்.
முதலில், மோடி எதிர்ப்பாளர்களும், எதிர்க்கட்சிகளும் அவர்களுக்குள் பேசி தெளிவு அடையவேண்டும்.
என்ன செய்வது என்று புரியாத கையறு நிலையில் இவர்கள்
இருப்பது புரிகிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு பெருகி வருகிறது. என்னதான்
காட்டுக் கத்தல் கத்தினாலும், மோடி எதிர்ப்பாளர்களை மக்கள் நம்புவதாக இல்லை. அவர்களை
நினைத்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கெல்லாம் அசறுகிறவராக மோடி தெரியவில்லை.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றே தெரிகிறது.
இருப்பது புரிகிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு பெருகி வருகிறது. என்னதான்
காட்டுக் கத்தல் கத்தினாலும், மோடி எதிர்ப்பாளர்களை மக்கள் நம்புவதாக இல்லை. அவர்களை
நினைத்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கெல்லாம் அசறுகிறவராக மோடி தெரியவில்லை.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றே தெரிகிறது.