
அன்புடன் அழைக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த டிசம்பர் (2016) மாதம்
திங்கட்கிழமை ஐந்தாம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். 75 நாட்கள்
தொடர் சிகிச்சைக்குப் பிறகு 4-ம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டு, அதற்குப் பிறகும் மருத்துவ
நிபுணர்களின் தொடர் சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமடைந்தார்.
தொண்டர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஜெயலலிதாவைப் பார்க்க வருபவர்களை,
மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருந்தாலும், அவரைப் பார்க்க அனுமதிக்காமல், அவருடைய
தோழியாக உடன்பிறவா சகோதரியாக அறியப்பட்ட சசிகலா என்பவரின் உத்தரவுகளுக்கு இணங்க அபோல்லோ
மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டது. அவ்வாறு செயல்பட்ட காரணத்தால் ஜெயலலிதாவின் 75
நாள் சிகிச்சை மற்றும் இறப்பு பற்றிப் பலவித சந்தேகங்களும் கேள்விகளும் மக்கள் மனதில்
எழும்பியுள்ளன. அந்தக் கேள்விகளைத்தான் நடிகை கௌதமி பிரதமருக்கு அனுப்பிய பகிரங்கக்
கடிதத்தில் எழுப்பியிருந்தார்.
அல்லது ஜெயலலிதாவின் புதிர்கள் நிறைந்த வாழ்க்கையில் இந்தக் கேள்விகளும் புதிர்களாகவே
அடங்கிவிடுமா என்பது வரும் நாட்களில்தான் தெரியும்.
தந்தையாரை இழந்தவர். தாய் சந்தியாவின் வளர்ப்பில், மிகவும் புத்திசாலியான மாணவியாக
உருவெடுத்தார். ஆயினும், தனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும், தாயாரின் விருப்பத்திற்கிணங்க
திரையுலகில் கால்பதித்த ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று முன்னணிக் கதாநாயகியாக வலம்
வந்தார். இருபத்து இரண்டாவது வயதில் தன் தாயையும் இழந்தார் ஜெயலலிதா.
அப்போது திரையுலகில் மாபெரும் சக்தியாக விளங்கிய எம்.ஜி.ஆர் நெருங்கி, அவருடன் நட்புறவை
ஏற்படுத்திக்கொண்டு, அவரைத் தன் விருப்பத்தின்படி அரசியலிலும் நுழைத்தார். அரசியல்
மீது நாட்டமில்லாமல் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அரசியலிலும்
கால்பதித்தார் ஜெயலலிதா. அவரை 1983ல் கொள்கைப் பரப்புச் செயலாளராக்கி, 1984ல் ராஜ்ய
சபா உறுப்பினராகவும் ஆக்கினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். 1987ல் இறந்த சமயத்திலும்,
அதற்குப் பின்னரும் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்த ஜெயலலிதா, அவற்றை எதிர்த்துப் போராடி
வெற்றி பெற்றுக் கட்சியைத் தன் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் தொடர்பு ஏற்பட்டது. சசிகலாவின் கணவர் நடராஜன் அப்போது மாநில
அரசில் பொதுத்தொடர்பு அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். சசிகலா ஒரு வீடியோ மையம் வைத்து
நடத்திக்கொண்டிருந்தார். நாளடைவில் ஜெயலலிதாவின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமான சசிகலா,
அவரின் உற்ற தோழியாக போயஸ் தோட்ட இல்லத்தில் நுழைந்தார். 1991ல் அ,தி.மு.க வெற்றி பெற்று
அரசு அமைத்தபோது, திரைமறைவில் பெரும் சக்தியாக விளங்கினார் சசிகலா. 1991 முதல்
1996 வரையிலான ஐந்து வருட ஆட்சியானது, ஊழல்களும் குற்றங்களும் நிறைந்த ஆட்சியாக இருந்தது.
அதன் விளைவாக 1996 தேர்தலில் ஆட்சியை இழந்தது அ.தி.மு.க.
ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராக இருந்த 1991 முதல் 1996 வரையிலான ஆட்சியில்தான் ஊழல்கள்
மலிந்து காணப்பட்டன.
பிளெஸண்ட் ஸ்டே ஹோட்டல் (Pleasant Stay Hotel) வழக்கு
Small Industries Corporation) நில
பேரத்தில் நடந்த ஊழல் பற்றிய வழக்கு
ஊழல் (Disinvestment of TIDCO’s
shares to SPIC) பற்றிய
வழக்கு
பலகோடி ரூபாய் ஊழல் வழக்கு
சொத்துக்கள் சேர்த்த வழக்கு
குடும்பத்தினர் தமிழகமெங்கும் தங்களுடைய அராஜகத்தைக் கட்டவிழ்த்து, பல பிரமுகர்களை
மிரட்டியும் ஏமாற்றியும் பல சொத்துக்களைக் கைப்பற்றினர். திரைப்பட இசையமைப்பாளர் கங்கை
அமரனின் பங்களா, சென்னை அண்ணா சாலையில் இருந்த சஃபையர் தியேட்டர், கோயமுத்தூரில் இருந்த
குரு ஹோட்டல் மற்றும் தமிழகமெங்கும் பல முக்கியப் பிரமுகர்களின் சொத்துக்கள் மிரட்டியும்
ஏமாற்றியும் வாங்கப்பட்டன. இதனாலேயே அவர்களுக்கு ஊடகங்களால் ‘மன்னார்குடி மாஃபியா’
என்கிற பெயர் கொடுக்கப்பட்டது.
குடும்பத்தைச் சேர்ந்த சுதாகரன் என்பவரைத் தன்னுடைய வளர்ப்பு மகனாக அறிவித்து, அவருக்கு
நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தியைத் திருமணம் செய்வித்தார் ஜெயலலிதா. அந்தத் திருமண
விழா மிகவும் பகட்டாக பணக்காரத்தனத்தின் அகம்பாவம் மிகுந்த வெளிப்பாடாகக் காட்சி அளித்தது.
அந்த ஒரு விழாவே இவர் கண்டிப்பாக ஊழல்கள் பல செய்திருப்பார் என்கிற வலுவான எண்ணத்தைப்
பொதுமக்களின் மனதில் ஏற்படுத்துவதாக இருந்தது.
தி.மு.க. தனியாகவும் ஜெயலலிதாவுக்கும், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் எதிராகப்
பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கு, கீழ் நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டு, உயர்
நீதிமன்றத்தில் அந்தத் தண்டனைத் தள்ளுபடி செய்யப்பட்டு, தற்போது தீர்ப்புக்காக உச்ச
நீதிமன்றத்தில் இருக்கிறது. இதனிடையே 2001 முதல் 2006 வரை ஆட்சி செய்தபோது, முந்தைய
தி.மு.க அரசு தன் மேல் தொடர்ந்திருந்த மற்ற அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை பெற்றார்
ஜெயலலிதா.
பஞ்சமில்லை. ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது, தர்மபுரி அருகே அ.தி.மு.கட்சியினரால்
பெண்கள் கல்லூரி பஸ் ஒன்று தீ வைக்கப்பட்டு மூன்று அப்பாவி மாணவிகள் உயிரிழந்தனர்.
‘தராசு’ பத்திரிகை அலுவலகத்தின் மீது அ.தி.மு.கட்சியினர் தாக்குதல் நடத்தி இரண்டு நிருபர்களைக் கொன்றனர்.
ஒத்துவரவில்லை என்கிற காரணத்துக்காக திறமை மிகுந்த IAS அதிகாரியான சந்திரலேகா அவர்கள்
மீது கூலிப்படை ஆள் ஒருவனை ஏவி அவர் மீது அமிலத்தை வீசி அவரைக் கொலை செய்யும் முயற்சி
நடந்தது. அவரின் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபல வழக்கறிஞர் விஜயன் மீது கொலைவெறித்
தாக்குதல் நடத்தப்பட்டது.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, 2004ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று, பாரம்பரியம்
மிக்க பழமையான காஞ்சி சங்கர மடத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார். பொய்யாகப்
புனையப்பட்ட கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் இருவரையும் ஒருவர் பின் ஒருவராகக்
கைது செய்து, மடத்தின் உள்ளே இருக்கும் பரமாச்சாரியாரின் பிருந்தாவனத்துள் போலிஸ்படையினரை
பூட்ஸ் கால்களுடன் அனுப்பி அந்தப் புனிதமான மஹாசமாதியை அவமதித்தார். மடத்து ஊழியர்களை
விசாரணை என்கிற பெயரில் கைது செய்து பலவிதமாகச் சித்தரவதை செய்தனர் அவருடைய போலிசார்.
உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்று, காஞ்சி மடத்தில் ஆன்மிகச் சேவை புரிந்து வந்த வயதானவர்கள்
மீது கஞ்சா கடத்தியதாகப் பொய் வழக்கு போட்டு சிறை செய்து சித்தரவதை செய்தது காவல்துறை.
தன்மீது நியாயமான விமர்சனத்தைக் கூடப் பொறுக்காமல் மானநஷ்ட வழக்குகள் போடும் ஜெயலலிதா,
ஊடகங்கள் காஞ்சி மடத்தின் மீது சேற்றையும் புழுதியையும் வாரி இறைத்ததைக் கண்டுகொள்ளாமல்
இருந்தார். 9 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவின் அரசு, சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க
முடியாமல் தோல்வி அடைந்தது. சங்கராச்சாரியார்களும் மற்றவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன் பிறகு 3 ஆண்டுகள் முடிந்து, ஒட்டுமொத்தமாக 12 ஆண்டுகள் கழிந்த பிறகும், தான் செய்த
மாபெரும் தவறுக்குச் சிறு வருத்தம் கூடத் தெரிவிக்காமல் அவர் மரணம் அடைந்தது அவருடைய
துரதிர்ஷ்டமும் கர்மவினையும் என்றுதான் சொல்லவேண்டும்.
ஜெயலலிதா தன் இல்லத்தை விட்டும் கட்சியை விட்டும் வெளியேற்றினார். அப்போது ஊடகங்களில்
ஒரு பகுதியினர் சசிகலா குடும்பத்தைப் பற்றிப் பலவிதமான செய்திகளையும் கட்டுரைகளையும்
வதந்திகளையும் வெளியிட்டனர். ஆனால், ஜெயலலிதா ஒரு சில மாதங்களிலேயே சசிகலாவை மீண்டும்
தன் இல்லத்தில் சேர்த்துக்கொண்டார். இருப்பினும், கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களில்
ஒரு பகுதியினரும், கட்சியில் கீழ்மட்டப்பதவியில் இருப்பவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும்பகுதியினரும்
சசிகலாவின் மீது உள்ளூர சந்தேகம் கொண்டவர்களாகவும், ஆனால் வெளியே ஏதும் சொல்ல விரும்பாமலும்
இருந்தனர்.
சசிகலா காட்டிக்கொண்டாலும், நடராஜன் எக்காரணம் கொண்டும் கட்சிப்பக்கமோ, அரசு பக்கமோ
நெருங்கக் கூடாது என்று தீர்மானமான உத்தரவை ஜெயலலிதா போட்டிருந்ததால்தான் சசிகலா அம்மாதிரியான
ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். மேலும் சசிகலாவின் ஒவ்வொரு நகர்வும், ஒவ்வொரு
செயலும் நடராஜனின் திட்டப்படியே நடப்பதாகவும், அனைத்திற்குமே அவர்தான் சூத்திரதாரி
என்றும் கூறப்பட்டு வந்தது. இவ்வுண்மை ஜெயலலிதாவுக்குத் தெரியவில்லையா அல்லது தெரிந்தும்
ஒன்றும் செய்ய இயலாதவராக இருந்தாரா என்பது என்றுமே புதிராகத்தான் இருந்துள்ளது.
நடராஜன் மற்றும் இவர்களது குடும்பத்தினரை வெளியே பகிரங்கமாகக் கொண்டுவந்துள்ளது. ராஜாஜி
கூடத்தில் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்திருக்கப்பட்டபோது, அவருடைய
உடலைச் சுற்றி அந்தக் குடும்பத்தினர் மட்டுமே சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர். முதல்வர்
பன்னீர்செல்வமும் மற்ற அமைச்சர்களும் ஜெயலலிதாவின் உடல் இருந்த இடத்திற்குச் செல்லும்
படிக்கட்டுகளில்தான் அமர்ந்திருந்தனர். சசிகலா குடும்பத்தினரின் முகபாவத்திலும் உடல்
மொழியிலும் பெரிய அளவில் சோகம் தெரியவில்லை. ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ய நடந்த
இறுதிச்சடங்குவரை இந்த உடல்மொழி அப்படியே இருந்ததைத் தொலைக்காட்சிகளின் நேரலை ஒளிபரப்பில்
தெளிவாகவே பார்க்கமுடிந்தது.
ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க மிகுந்த கவர்ச்சியும் பெரும் மக்கள்
செல்வாக்கும் உள்ள தலைவரின் கட்டுப்பாட்டில் வளர்ந்த கட்சி. கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர்
திட்டமிட்ட தொலைநோக்கம் கொண்டவர். தன் திரையுலக நடிப்பு மூலம் அப்பேற்பட்ட ஒரு மக்கள்
செல்வாக்கை வளர்த்திருந்தார். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு கட்சியின் மூத்த தலைவர்களிடமிருந்து
ஜெயலலிதா கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். அதன் விளைவாக கட்சி இரண்டாகப் பிளந்தது.
ஆயினும் குறைந்த காலத்திலேயே அந்த மூத்த தலைவர்கள் மற்றும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி
அம்மாள் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்று மற்ற தலைவர்களையும் ஒருங்கிணைத்து கட்சியைத்
தன் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
ஜெயலலிதா, காலப்போக்கில் கட்சியின் பிரசாரம் மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவற்றில்
அவருடைய பெயரையும், படங்களையும், பிம்பங்களையும் நீக்கிவிட்டுத் தன்னையே முன்னிறுத்தி,
தன்னை ஓர் அன்னையாகக் காண்பித்துக்கொண்டு, ‘அம்மா’ என்கிற முத்திரை கொண்ட ஒரு பிம்பத்தைப்
பெரிதாக வளர்த்துக்கொண்டார். அந்த அம்மா என்கிற பிம்பம் அவருக்கும் கட்சிக்கும் வெற்றிகளைத்
தேடித்தந்தது. அந்த பிம்பத்தின் சக்தியை உணர்ந்த மற்ற தலைவர்கள் அவரின் அடிமைகளாகவே
தொடர்ந்தனர்.
சசிகலா குடும்பம் தன்னுடைய சக்தி அனைத்தையும் பிரயோகித்துக் கட்சியைக் கைப்பற்றித்
தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்யும். செய்ய ஆரம்பித்து விட்டது. இதன் முதல்
கட்டமாக, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்குகளை அந்தக் குடும்பமே முன்னின்று நடத்தியது. சொல்லப்போனால்
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்தே அந்தக் குடும்பம் தன்னுடைய வேலைகளை
ஆரம்பித்துவிட்டது என்பதே உண்மை.
6ம் தேதி மாலை வரை, பகிரங்கமாகவும், திரைக்குப் பின்னும் நடந்ததாகச் சொல்லப்படும் விஷயங்களை
ஆழ்ந்து நோக்கும்போது, மத்திய அரசு ஒரு யுக்தியுடன் நடந்துகொள்வதாகத் தெரிகின்றது.
அ.தி.மு.கவில் பிளவு எற்படுவதை இன்றைய சூழலில் பா.ஜ.க விரும்பாது. குறைந்தபட்சம் வருகின்ற
2019 பாராளுமன்றத் தேர்தல் வரையிலாவது பிளவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான கடினமான பணிகள் பா.ஜ.கட்சிக்குக் காத்திருக்கின்றன.
ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்தில் ஒரு சிறந்த வாய்ப்பை பா.ஜ.கட்சிக்கு உருவாக்கியுள்ளது.
தான் விரும்பிய பன்னீர்செல்வத்தை முதல்வராக ஆக்கியது உண்மை என்றால், அதில் ஒரு சிறு
வெற்றியை பாஜக அடைந்துள்ளது எனலாம். இதன் அடுத்த கட்டமாக சசிகலா அ.தி.மு.கட்சியின்
பொதுச் செயலாளராக ஆவதைத் தடுக்க வேண்டும். சசிகலாவின் விசுவாசிகள் தவிர மற்றவர்கள்
அவர் பொதுச் செயலாளர் ஆவதை விரும்பமாட்டார்கள். ஏனென்றால் ஜெயலலிதா ‘அம்மா’ என்கிற
சக்தியால்தான் தாங்கள் இப்பேற்பட்ட நல்வாழ்வைப் பெற்றிருக்கிறோம் என்பது அவர்களுக்குத்
தெரியும். மேலும் சசிகலா ஜெயலலிதாவை எப்படித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதும்
அவர்களுக்குத் தெரியும். ஆகவே அவர்கள் சசிகலா பொதுச் செயலாளர் ஆவதை விரும்பமாட்டார்கள்.
ஆனால், இரண்டாம்கட்டத் தலைவர்களுக்குள் ஒற்றுமையும் புரிதலும் இல்லாத பட்சத்தில் சசிகலா
சுலபமாகப் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்ற முடியும். அதற்கான அறிகுறிகளும் தெரிய
ஆரம்பித்துள்ளன.
சசிகலா பல்வேறு வழிகளில் முயற்சி செய்யும் பட்சத்தில் கட்சி பிளவு ஏற்படும் வாய்ப்பும்
உண்டு. அம்மாதிரி நடந்தால், எதிரக்கட்சிகள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம்,
அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைத் தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடும்.
பா.ஜ.க தன்னுடைய விருப்பப்படி அ.தி.மு.கவில் பிளவு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது என்று
தெரிந்தால், தி.மு.க பிளவை ஏற்படுத்த மேலும் முயற்சிக்கும். தேவைப்பட்டால் சசிகலா குடும்பத்துடன்
சேர்ந்துகொள்ளவும் செய்யும்.
காரியங்களில் தீவிர கவனத்துடன் செயல்படவேண்டும். முதலாவதாக, சசிகலா குடும்பத்தைத் தனிமைப்படுத்த
வேண்டும். இரண்டாவதாக, அவர் பொதுச் செயலாளராக ஆவதைத் தடுக்க வேண்டும். மூன்றாவதாக,
சசிகலா குடும்பம் சட்டத்திற்குப் புறம்பாகவும் வருமானத்திற்கு அதிகமாகவும் சேர்த்துள்ள
சொத்துக்களையும், அவர்களுடைய பினாமி சொத்துக்களையும் வருமானவரித்துறையின் கண்காணிப்பில்
சோதனைக்கு உள்ளாக்க வேண்டும். சொத்துக்குவிப்பு
வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதித்தீர்ப்புக்காக நிலுவையில் இருக்கிறது என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக ஆகிவிட்டால்,
பிறகு பா,ஜ.க நீண்ட காலத்திற்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டதற்காகத்
தன்னைத்தானே நொந்துகொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.
நல்ல நிலையில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அக்கட்சியின் முதல் பிரச்சினை கட்சித்தலைவர்
கருணாநிதியின் உடல்நலன். இரண்டாவது பிரச்சினை அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தொடர்ந்து
கொண்டிருக்கும் பனிப்போரும், சச்சரவுகளும். மூன்றாவதாகக் கட்சியில் கனிமொழியின் நிலை.
ஸ்பெக்ட்ரம் ஊழல், கலைஞர் டிவி ஊழல் என்று ஊழல் வழக்குகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்
அவர். நான்காவதாக மாறன் சகோதரர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் ஊழல் வழக்குகள் மிகவும்
வலுவானவை. ஐந்தாவதாக தி.மு..கட்சியின் கூட்டாளியான காங்கிரஸ் கட்சி நாடெங்கிலும் பெரும்பாலான
மாநிலங்களில் படுதோல்வி அடைந்துள்ளது. தமிழகத்திலும் வெறும் பூஜ்யமாக உள்ளது. கருணாநிதியின்
இருப்பு மட்டுமே தி.மு.கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. அரசியல் களத்தில்
அவர் இல்லாமல் போனால், ஸ்டாலினின் கீழ் பெரும்பாமையானவர்கள் அணிதிரண்டாலும், கட்சி
பலவீனமாகத்தான் காட்சி அளிக்கும். தி.மு.கட்சியின் மேற்கண்ட நிலையையும் பா.ஜ.க கவனத்தில்
கொள்ள வேண்டும்.
தே.மு.தி.க போன்ற கட்சிகள் சென்ற தேர்தல்களில் பெருந்தோல்வி அடைந்து ஒன்றுமில்லாமல்
போய்விட்டன. தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த தே.மு.தி.க, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில்
நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அக்கட்சியிலிருந்து பலர் தி.மு.கவுக்கும்
அ.தி.மு.கவுக்கும் போய்விட்டனர். கட்சியைப் போலவே கட்சித் தலைவர் விஜயகாந்தும் உடல்நிலை
பொருத்தவரைப் பலவீனமாக இருக்கிறார். மற்ற எதிர்க்கட்சிகளான ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள்,
விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் போன்றவை வருகின்ற நாட்களில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைப்
பார்த்துக்கொண்டு தங்கள் நவடிக்கைகளை மேற்கொள்ளும். பா.ஜ.க இக்கட்சிகளின் நடவடிக்கைகளையும்
ஒரு பக்கம் கவனிக்க வேண்டும்.
விஷயம் சசிகலாவின் கணவர் நடராஜனைக் கண்காணிப்பது. சசிகலாவின் கடந்தகால நடவடிக்கைகள்
அனைத்திற்கும் பின்னணியில் இருந்த ‘சூத்திரதாரி’ இவர்தான் என்பதையும், அவருடைய ஒவ்வொரு
நகர்வையும் முடிவு செய்தவர் இவர்தான் என்பதையும் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
சசிகலா மூலமாக, ஜெயலலிதா, அரசு, கட்சி ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தியவர் இவர்தான்.
விடுதலைப் புலி ஆதரவும், தமிழ்ப் பிரிவினைவாதிகளின் ஆதரவும் கொண்டவர் இவர். திராவிட
இனவெறியாளர்களிடமும் நட்பு பாராட்டுபவர். இவரைப் பக்கத்தில் நெருங்க விடாமல் தள்ளி
வைத்தது ஜெயலலிதா செய்த நல்ல விஷயங்களுள் ஒன்று. மத்திய அரசு இவரைத் தீவிரக் கண்கானிப்பில்
வைத்திருக்க வேண்டும்.
குறிப்பாகத் தமிழகத்துக்கும் நல்லதல்ல. தமிழகத்தில்
உறுதியற்ற நிலை நிலவினால், அது மொழி வெறி, இன வெறி, பிரிவினைவாத, தேச விரோத சக்திகளுக்குப்
பெரும் வாய்ப்பாக முடிவதோடல்லாமல், அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள், கிறிஸ்தவ மதமாற்ற
சக்திகள், வெளிநாட்டு நிதியில் தேச விரோத வேலைகள் செய்யும் NGOக்கள், நக்ஸலைட்டு மற்றும்
மாவோயிஸ்டுகள் ஆகியோருடன் கூட்டணி கொண்டு செயல்படுவார்கள். அது தமிழகத்துக்குப் புதிதல்ல
என்றாலும், பேராபத்தில் முடியும் என்பதில் சந்தேகமில்லை.
சூழ்நிலைக்கு ஏற்றார்போல் விழிப்படைந்து உயிர்த்தெழுந்து களத்தில் இறங்கவேண்டியது அவசியம்.
எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவம்.)