மடர்னிடி விடுப்பு முடிந்து முதல் நாள் மீரா வேலைக்குப் போன போது எல்லோரும் மிகக் கனிவாக இருந்தார்கள்.
“பாப்பா ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிக்கலையா?” என்று கேட்டார்கள்.
பாஸ்கர், டீமின் ஜோக்கர். “என் பையனுக்கு அல்லயன்ஸ் பாக்குறேன்” என்று சொன்னான். “உங்க மகள் கட்டின டயபரோட வந்தா போதும்.”
“உங்க மாதிரி இல்லை. நல்லா இருக்கா பொண்ணு” போன்ற ஜோக்குகள் வந்து விழுந்தன.
மீராவின் கம்ப்யூட்டரை வேறு யாருக்கோ கொடுத்து விட்டார்கள். நாள் முழுக்க அவள் புதுக் கம்ப்யூட்டருக்கு அலைந்தாள். பிறகு அதில் சாஃப்ட்வேர் எல்லாம் போட்டு முடிக்க நேரம் ஆகி விட்டது. அந்த நேரத்தில் பெண் போட்டோவை எல்லோருக்கும் காட்டி மகிழ்ந்தாள்.
ஆனால் மறுநாள் அவள் வேலையைத் தொடங்க முயற்சித்த போதுதான் கவனித்தாள் – வேலையே இல்லை. சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு ஐ.டி கம்பெனிகளில் வேலை கண்டுபிடிக்க செய்யும் யுக்தியைச் செய்தாள். எல்லோருக்கும் ஒரு மீட்டிங்கிற்கு வரச் சொல்லி ஈமெயில் அனுப்பினாள். Continue reading விடுப்பிற்குப் பின் (சிறுகதை) | ராமையா அரியா