Posted on 1 Comment

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 4) | ஹரி கிருஷ்ணன்

அரசன் கர்ணனும் கூட்டு அனுமதியும்

துரியோதனன், கர்ணனை அங்க தேச மன்னனாக்கிய சமயத்தில் பாரதம் சொல்லும் விவரங்கள் துரியோதனனுக்கு சுயேச்சையாக முடிவெடுக்க முடியாத நிலை இருந்ததை உணர்த்துகின்றன. இந்நிலை துரியோதனனுக்கு மட்டுமல்லாமல் திருதராஷ்டிரனுக்கும் இருந்தது என்பதையும் இந்தக் குறிப்புகள் உணர்த்துகின்றன. 

போன இதழில் நாம், துரோணருடைய சீடர்களின் ஆட்டக் களத்தில் கர்ணன் நுழைந்ததில் தொடங்கி, இடையில் பாண்டவ வனவாச காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லி, துரியோதனனுடைய நிலைமை என்ன, திருதராஷ்டிரன் வகித்தததாகச் சொல்லப்படும் பதவிதான் என்ன என்பதைப் பற்றி சில கேள்விகளை எழுப்பினோம். 

Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 4) | ஹரி கிருஷ்ணன்

Posted on 2 Comments

மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்

திருதராஷ்டிரன் பார்வையற்றவனாக இருந்த காரணத்தால் மட்டுமே அரசு பாண்டுவின்வசம் ஒப்புவிக்கப்பட்டது என்றல் அது ஒரு Care taker அரசுதானே? அப்படியானால், பாண்டவர்களுக்கு ஆட்சியில் எப்படி உரிமை வந்தது? அவர்கள் எப்படி அரசுரிமை பெறுகிறார்கள்?

மக்களாட்சி மலர்ந்துவிட்ட காலத்தில் வசிக்கும் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்—அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலைமைகள் — மிகவும் மசங்கலாகவே தெரிவிக்கப்பட்டும் புரிந்துகொள்ளப்பட்டும் இருக்கின்றன. இராமாயண பாரத இதிகாசங்களையும் பாகவதம் முதலான புராணங்களையும் ஆழ்ந்து படிக்கும்போது ஒரு பேருண்மை புலப்படுகிறது. மக்களாட்சிக் காலத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மன்னராட்சிக் காலத்தில், மன்னர்கள், மக்களுடைய குரலுக்கு மதிப்பளித்திருக்கின்றனர்; மக்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்திருக்கின்றனர். சொல்லப் போனால், ஒரு நாட்டில், மன்னனுக்கு உரிய இடம் என்ன என்பது காலந்தோறும் காலந்தோறும் மாறிக் கூட வந்திருக்கிறது. Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 2) | ஹரி கிருஷ்ணன்

கேள்வி: கிருஷ்ணனுடைய மாயை என்ற ஸஞ்சயன் அனுமானம் எந்த அளவுக்கு உண்மை?
 
இந்திரனிடமிருநது பெற்ற வாசவி சக்தியைக் கர்ணன், தான் போர்க்களத்துக்கு வந்த முதல் நாளிலேயே பயன்படுத்தி இருக்கலாமே. அவ்வாறு செய்யாமல், அந்த அஸ்திரத்தை ஏன் கடோத்கசனின்மேல் வீணடித்தான் என்று திருதராஷ்டிரன் எழுப்பிய கேள்விக்கு ஸஞ்சயன் சொன்ன பதிலைச் சென்றமுறை பார்த்தோம். இதற்கு, கிருஷ்ணன் உண்டாக்கிய மாயைதான் காரணம் என்ற தொனியில் ஸஞ்சயனின் விடை அமைந்திருந்தது. ஆனால், கர்ணன் களத்துக்கு வந்த பதினோராம் நாள் யுத்தத்திலிருந்து, கடோத்கசன் மீது அவன் இந்திரன் கொடுத்த சக்தியாயுதத்தை வீணடித்த பதினான்காம் நாள் இரவு நடந்த நிகழ்ச்சிகளை வரிசைப் படுத்தி, மிகச் சுருக்கமாக high-lights மட்டும் பார்த்துக்கொண்டு வந்தால், கர்ணனிடத்திலிருந்த சக்தி அஸ்திரத்திலிருந்து தப்பியது கிருஷ்ணன் உண்டாக்கிய மாயையாலா அல்லது வேறு காரணங்களாலா என்பது தெளிவாகும் என்று சொல்லியிருந்தோம். இப்போது கர்ணன் யுத்தகளத்துக்குள் நுழைந்த பதினோராம் நாள் யுத்தத்திலிருந்து பதினான்காம் நாள் இரவு யுத்தத்தில் கடோத்கசனைக் கொன்றது வரையில் நடந்தனவற்றை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். அதாவது கிட்டத்தட்ட 300-400 பக்கங்களின் சுருக்கத்தைப் பார்க்கப் போகிறோம்.
பத்தாம் நாள் பீஷ்மர் விழுந்தார். பீஷ்மர் உயிரோடு இருக்கும் வரை போர்புரிய மாட்டேன் என்று சபதம் செய்திருந்த கர்ணன், பதினோராம் நாள் யுத்தத்துக்கு வந்தான். பீஷ்மருடைய மரணத்துக்குப் பிறகே போருக்கு வருவேன் என்று அவன் உத்தியோக பர்வத்தில் மூன்று வெவ்வேறு சமயங்களில் சபதம் செய்கிறான். அதில் மூன்றாவது முறையாகச் செய்யும் சபதத்தில் இவ்வாறு சொல்கிறான்:
Alone I will exterminate the army of the Pandavas! The fame, however, of such a feat will attach to Bhishma, O tiger among kings, for this Bhishma, O monarch, hath been made by thee the commander of thy forces, and the renown always attacheth to the leader and not to those that fight under him. I will not, therefore, O king, fight as long as Gangas son liveth! After Bhishma, however, hath been laid low, I will fight with all the Maharathas of the enemy united together! (கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்ப்பு, உத்யோக பர்வம் 169ம் பகுதி)
 
அதாவது, நான் ஒருவனாகவே பாண்டவர்களை அழிப்பேன். ஆனால், பீஷ்மரின் தலைமையில் போரிட்டால், பாண்டவர்களை நான் அழித்ததற்கான எல்லாப் புகழும் சேனைத் தலைவர் என்ற முறையில் பீஷ்மரைச் சேரும். ஆகவே, இன்னொருவர் தலைமையின்கீழ் நான் போரிட மாட்டேன் என்று சொன்ன கர்ணன், இப்போது துரோணருடைய தலைமையின்கீழ் போரிட வந்திருப்பதே பெரிய நகைமுரண். அது போகட்டும். இந்தப் பதினோராவது நாள் யுத்தத்திலிருந்து நடந்தவை என்ன? வரிசைப்படிப் பார்ப்போம்.
 
பதினோராம் நாள்
 
இன்று நான் யுதிஷ்டிரனை சிறைப் பிடிப்பேன். ஆனால் ஒன்று. நான் அவ்வாறு சிறையெடுக்கும் சமயத்தில் அர்ஜுனன் குறுக்கிடக் கூடாது. அப்படி அவன் குறுக்கிடாமல் நீ பார்த்துக் கொண்டால் யுதிஷ்டிரனைச் சிறைப் பிடிக்கிறேன் என்று துரோணர், துரியோதனனுக்கு வாக்களித்திருந்தார். அன்று நடந்த யுத்தத்தில் பீமன், சல்யன், சாந்தனீகன், கர்ணனுடைய மகன் விருஷசேனன், அர்ஜுனனுடைய மகன் அபிமன்யு என்று பலர் தமக்குள் போர்புரிந்து கொண்டார்கள். துரோணர், தருமபுத்திரனை ஏறத்தாழ சிறைப்பிடித்துவிட்டார் என்ற நிலையில் மின்னல் வேகத்தில் அங்கே வந்த அர்ஜுனன் அவரைத் தடுத்துவிட்டான். துரோணரால் தர்மபுத்திரனைச் சிறைப்பிடிக்க முடியவில்லை. அன்று கர்ணன் களத்தில்தான் இருந்தான். அவனால் முடிந்திருந்தால், துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் புகுந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் யுதிஷ்டிரன் ஒருவேளை சிறைப்பிடிக்கப் பட்டிருக்கலாம். கர்ணன் அவ்வாறு குறுக்கிடவில்லை.
 
பன்னிரண்டாம் நாள்
 
அர்ஜுனனை சம்சப்தகர்கள் வெகுதொலைவுக்கு இழுத்துச் சென்றிருந்தனர். பகதத்தனும் அவனுடைய யானையான சுப்ரதீகமும் பாண்டவர் சைனியத்தைக் கலங்கடித்தனர். பீமன், சாத்யகி, அபிமன்யு என்று பலர் முயன்றும் சுப்ரதீகத்தின் அட்டகாசத்தைத் தடுக்க முடியவில்லை. எங்கிருந்தோ முளைத்த அர்ஜுனன் அன்று சுப்ரதீகத்தை அடக்கினான். அதைத் தொடர்ந்துதான் அர்ஜுனன்மீது பகதத்தன் வைஷ்ணவாஸ்திரத்தை எறிகிறான். அவன் அப்படி எறியும்போது, கிருஷ்ணன் தன் குதிரைச் சவுக்கையும் கீழே போட்டுவிட்டு, முழுமையான நிராயுதபாணியாக எழுந்து நின்று அந்த அஸ்திரத்தைத் தன் மார்பில் ஏற்றுக் கொள்கிறான். அது அவன் கழுத்தில் மாலையாக விழுகிறது. கிருஷ்ணா, நீ இப்படிக் குறுக்கிட்டிருக்கக்கூடாது என்று ஆட்சேபித்த அர்ஜுனனுக்கு, இது என் பொருள். என்னிடம் திரும்ப வந்துவிட்டது. பூமாதேவி கேட்டுக்கொண்டதன் பேரின் இதை நான் நரகாசுரனுக்குக் கொடுத்திருந்தேன். அவனிடமிருந்து பகதத்தனிடத்தில் இது வந்திருக்கிறது. இப்போது அவன் தன்னுடைய அங்குசத்தின்மேல் அபிமந்திரிந்து உன்மீது எய்தான். இனி நீ போரைத் தொடர்க என்று கிருஷ்ணன் பதில் சொன்னான். அதைத் தொடர்ந்து பகதத்தன் மீது அர்ஜுனன் எய்த அம்பு அவனுடைய மார்பைத் துளைத்து, அவன் உயிரைக் கவர்ந்தது. கிஸாரி மோகன் கங்கூலி சொல்கிறார்:
 
The son of Pandu then, with a straight shaft furnished with a crescent-shaped head, pierced the bosom of king Bhagadatta. His breast, being pierced through by the diadem-decked (Arjuna), king Bhagadatta, deprived of life, threw down his bow and arrows. Loosened from his head, the valuable piece of cloth that had served him for a turban, fell down, like a petal from a lotus when its stalk is violently struck.
 
கர்ணன் அன்று பகதத்தனுக்கு அருகிலேயேதான் இருந்தான். பகதத்தனுக்கு உதவியாக அர்ஜுனோடு போர்புரிந்து, கர்ணன் அர்ஜுனனைத் தடுத்திருக்கலாம். கர்ணன் அப்படி எதையுமே செய்யவில்லை.
 
பதின்மூன்றாம் நாள்
 
அன்றும் சம்சப்தகர்கள் அர்ஜுனனுக்கு சவால்விட்டு, அவனை யுத்தகளத்தின் தெற்குக் கடைக்கோடிக்கு இழுத்துச் சென்றிருந்தனர். அன்றுதான் அபிமன்யு சக்கர வியூகத்துக்குள் நுழைந்து, கர்ணன் உள்ளிட்ட கௌரவ மஹாரதிகளைத் தோற்கடித்திருந்தான். இப்படி அர்ஜுனனைத் தொலைதூரத்துக்கு இழுத்துச் சென்றால்தான் அபிமன்யு சக்கர வியூகத்துக்குள்ளே வருவான் என்பது ஏற்பாடு. அப்படியானால், அர்ஜுனனை அந்த இடத்திலிருந்து விலக்க துரோணாசாரியார் சம்சப்தகர்களைத் தற்கொலைப் படையாக உபயோகித்துக் கொண்டது ஏன்? கர்ணனைவிட்டு அர்ஜுனனைத் தடுத்திருக்கலாமே! அவனிடம்தான் இந்த மகத்தான சக்தி அஸ்திரம் இருக்கிறதே! துரோணர் கர்ணனிடம் இந்த வேலையை ஒப்படைக்கவில்லையே! அவனால் அர்ஜுனனைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை துரோணாசாரியருக்கு இருக்கவில்லையே!
 
பதினான்காம் நாள்
 
ஜயத்ரத வதம் நடந்த தினம். அன்று துரோணர், கௌரப் படைகளை அர்த்த-பத்ம-அர்த்த சக்கர வியூகங்களாக அமைத்து, இந்த வியூகங்களுக்குள் ஒரு ஊசி வியூகத்தை ஏற்படுத்தி, அந்த ஊசியின் காதுப் பகுதியில் ஜயத்ரதனை நிறுத்தியிருந்தார். ஜயத்ரதனுடைய பாதுகாப்புக்காக நின்ற மஹாரதிகளில் கர்ணனும் ஒருவன். ஜயத்ரதன் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் பீமனுக்கும் கர்ணனுக்கும் போர் மூண்டது. பீமன் கர்ணனை அன்று மூன்றுக்கும் மேற்பட்ட முறைகள் தோற்கடித்தான். கதாயுதப் போரிலில்லை; விற்போரில்தான். கர்ணனுடைய தேர்களைச் சிதைத்து அவனைத் தரையிலே நிற்கவைத்தான். இப்படித் தொடர்ந்து தோற்கடித்துக்கொண்டிருந்த பீமனிடத்தில் ஆயுதங்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. யுத்தத்தில், கையிலுள்ள ஆயுதங்கள் செலவழியும்; சாரணர்கள் (Scouts) ஆயுதங்களைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். அப்படி, சாரணர்களிடமிருந்தும் ஆயுதங்களைப் பெறமுடியாத நிலையில் இருந்தான் பீமன். பலமுறை பீமனிடம் தோற்றிருந்த கர்ணன், ஆயுதக் குறைபாட்டோடு இருந்த பீமனை வென்றான். அர்ஜுனனைத் தவிர மற்றவர்களைக் கொல்ல மாட்டேன் என்று குந்தியிடம் அவன் வாக்களித்திருந்தான். இது, கர்ணனே குந்திக்குத் தந்த வாக்கு; குந்தி கர்ணனிடம் கேட்டுப் பெற்றதன்று. ஆகவே கர்ணன் பீமனைக் கொல்லவில்லை. அதற்கு பதிலாக பீமனை, காட்டுக்குப் போ. பயிற்சியில்லாமல் உயர்ந்த வீரர்களோடு போர்புரிய வராதே என்றெல்லாம் பலவிதமாக அவமானப்படுத்தினான். தேரில்லாமல் தரையில் நின்றுகொண்டிருந்த பீமனைத் தன் வில் நுனியால் தொட்டான். வீரர்களுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய அவமானம் இது. ஜயத்ரத வதத்துக்காக அந்த இடத்தை நெருங்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் இதைப் பார்த்தான். சூரியனோ அஸ்தமனத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சூர்யாஸ்தமனத்துக்குள் ஜயத்ரதனைக் கொல்லாவிட்டால் தீயில் பாய்வேன் என்று சபதம் செய்திருந்த அர்ஜுனன் பீமனுக்கும் கர்ணனுக்கும் குறுக்கே வந்தான். Then the ape-bannered (Arjuna), urged by Kesava, shot at the Sutas son, O king, many shafts whetted on stone. Those arrows adorned with gold, shot by Parthas arms and issuing out of Gandiva, entered Karnas body, like cranes into the Krauncha mountains. With those arrows shot from Gandiva which entered Karnas body like so many snakes, Dhananjaya drove the Sutas son from Bhimasenas vicinity. His bow cut off by Bhima, and himself afflicted with the arrows of Dhananjaya, Karna quickly fled away from Bhima on his great car. என்று இந்த இடத்தை கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார். (துரோண பர்வம், அத்தியாயம் 138)
 
ஜயத்ரதனுக்குப் பாதுகாவலாக நிறுத்தப்பட்டிருந்த கர்ணன், அர்ஜுனனுடைய காண்டீவத்திலிருந்து புறப்படும் அம்புகளைச் சமாளிக்க முடியாமல் அந்த இடத்தைவிட்டு கிருபருடைய தேரில் ஏறிக்கொண்டு ஓடிப் போனான். கர்ணன் இந்தச் சமயத்திலாவது அர்ஜுனன் பேரில் அந்த மகத்தான சக்தியாயுதத்தை எய்திருக்கலாம். எய்யவில்லை.
 
ஜயத்ரத வதம் முடிந்தபிறகு எப்போதும்போல சூரிய அஸ்தமனத்துடன் போர் நிற்காமல் இரவெல்லாம் தொடர்ந்தது. இரவு ஆக ஆக அரக்கர்களுக்கு பலம் அதிகரிக்கும். அரக்கனான கடோத்கசனுக்கு பலம் ஏறிக்கொண்டே போனது. கடோத்கசன் ஏற்படுத்துகிற அழிவைப் பொறுக்க முடியாமல் கௌரவப் படைகள் கர்ணனிடத்தில் தஞ்சம் புகுந்தன. இதற்குமேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் கர்ணன் அந்த இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தைக் கடோத்கசன் மீது எய்தான்.
சக்தியாயுதம் என்பது அவ்வளவு பெரிய ஆற்றலுடையதா? உத்யோக பர்வத்தில் கர்ணனிடத்தில் பீஷ்மர் கேட்கிறார்: The shaft that the illustrious and adorable chief of the celestials, the great Indra, gave thee, thou wilt see, will be broken and reduced to ashes when struck by Kesava with his discus. That other shaft of serpentine mouth that shineth (in thy quiver) and is respectfully worshipped by thee with flowery garlands, will, O Karna, when struck by the son of Pandu with his shafts, perish with thee
அந்த சக்தியாயுதம் என்ன அவ்வளவு பெரியதா? கிருஷ்ணனுடை சக்ராயுதம் பட்டால் அது பொடிப் பொடியாகப் போய் சாம்பலாகும் என்கிறார் பீஷ்மர். அதற்குக் கர்ணன், ஆமாம். கிருஷ்ணனுடைய தன்மை அப்படிப்பட்டது; அதற்கும் மேற்பட்டது. நான் மறுக்கவில்லை என்கிறான்.
Karna said, Without doubt, the chief of the Vrishnis is even so. Further, I admit, that that high-souled one is even more than that. Let, however, the Grandsire listen to the effect of the bit of harsh speech that he hath uttered. I lay down my weapons. The Grandsire will henceforth behold me in court only and not in battle. After thou hast become quiet, the rulers of the earth will behold my prowess in this world. (உத்தியோக பர்வம், அத்தியாயம் 62)
 
அர்ஜுனனிடத்தில் சக்ராயுதத்துக்குச் சற்றும் குறையாத பாசுபதாஸ்திரம் இருந்தது. இந்திரனுடைய வஜ்ராயுதமும் இருந்தது. இந்திரனுடைய வஜ்ராயுதத்தைப் பயன்படுத்தித்தான் அவன் நிவாத கவசர்களை அழித்திருந்தான். எனவே அர்ஜுனனிடம் சக்தியாயுதத்துக்கு மாற்று இல்லாமலில்லை. கண்ணனுடைய சக்ராயுதம், அதற்குச் சற்றும் குறையாத பாசுபாதாஸ்திரம் இந்திரனுடைய வஜ்ராயுதம் என்று சகலவிதமான மாற்று ஆயுதங்களும் அர்ஜுனனுடைய துணைக்கிருந்தன.
 
அதற்குமேல், இந்திரன் இந்த சக்தியாயுதத்தைக் கர்ணனுக்குத் தரும்போது, மற்ற எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திய பிறகே இதைப் பயன்படுத்தவேண்டும்; உன்னுடைய உயிருக்குப் பேராபத்து இருக்கும் நிலையில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தான். தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் கட்டம் வரையில் கடோத்கசனோடு கர்ணன் போர்புரிந்திருநதான். வேறுவழியே இல்லாத நிலையில்தான் சக்தியாயுதத்தை கடோத்கசன் மீது எய்தான்.
 
அவ்வாறு எய்யப்படாமல் இருந்திருந்தாலும் எதுவும் நடந்திருக்காது. அர்ஜுனனிடத்திலேயே சக்தியாயுதத்தைவிட அபரிமிதமான ஆற்றலுள்ள ஆயுதங்கள் இருந்தன. ஒருவேளை அவையே இல்லாமல் போயிருந்தாலும் கண்ணனுடைய சக்ராயுதம் அந்த நேரத்தில் சும்மா இருந்திருக்காது. அதற்குமேல், கடோத்கச வதம் நடந்த சிலமணி நேரத்துக்கு முன்னால்தான் கர்ணன் பீமனிடத்திலேயே மூன்று நான்கு முறை விற்போரில் தோற்று, தேரிழந்து நின்றிருக்கிறான். அர்ஜுனனோடு நேருக்கு நேர் மோதி தோற்று ஓடியிருக்கிறான். சக்தியாயுதத்தை கடோத்கசன்பேரில் வீணடித்திராவிட்டாலும் அது அர்ஜுனனை வெல்ல ஒரு காரணியாக இருந்திருக்கவே போவதில்லை.
Posted on Leave a comment

மகாபாரதம் – கேள்வி பதில் (பகுதி 1) | ஹரி கிருஷ்ணன்

பகுதி 1
இதிகாசங்களை
விட்டுப் பெருமளவும் விலகிக்கொண்டே இருக்கும் இன்றைய சூழலில் பெரும்பாலும் இளம் தலைமுறைக்கும்
அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு முதியவர்களுக்கும்கூட, ராமாயண பாரதங்களைப் பற்றிய
பலவிதமான ஐயங்களும், விடைகாண முடியாத பல்வேறு கேள்விகளும் எழுந்துகொண்டேயிருப்பதுதான்
நிதர்சனம்.இப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு விடைகளைத் தருவதற்கான முயற்சி இது.வாசகர்களும்
தங்களுக்கு எழும் இதுபோன்ற—ராமாயண, பாரத இதிகாசங்கள் தொடர்பான கேள்விகளை அனுப்பி வைக்கலாம்.வால்மீகி
ராமாயணம், கம்பராமாயணம் ஆகியவற்றின் மூலங்களின் துணையுடனும், மஹாபாரதத்தில் தமிழில்
வெளிவந்துள்ள கும்பகோணம் பதிப்பு, ஆங்கிலத்திலுள்ள கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு,
Bhandarkar Oriental Research Institute (BORI) பதிப்பை ஆங்கிலத்தில் ஆக்கப்பட்டுள்ள
பிபேக் தேப்ராயின் மொழிபெயர்ப்பு ஆகியனவற்றின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் விடைகள்
சொல்லப்படும்.இந்த இதழுக்கான முதல் கேள்வி இது.
கேள்வி:
இந்திரனிடத்திலிருந்து பெற்ற (வாசவி சக்தி எனப்படும்) சக்தி ஆயுதத்தை, கர்ணன்தான் களத்தில்
நுழைந்த முதல் நாளிலேயே அர்ஜுனன் பேரில் எய்திருக்கலாமே.அவ்வாறு செய்யாமல் ஏன் கடோத்கசனின்மீது
எய்து அந்த அஸ்திரத்தை வீணடித்தான்?
இந்தக்
கேள்வியின் விடைக்குள் நுழைவதன் முன்பு, சில ஆரம்பகட்டத் தகவல்களைச் சொல்லவேண்டும்.பீஷ்மர்
தலைமையில் நடந்த யுத்தத்தில் ‘பீஷ்மர் விழும்வரையில் நான் யுத்தத்தில் பங்குபெறமாட்டேன்

என்று கர்ணன் சபதம் செய்திருந்தான்.பீஷ்மர் பத்தாம் நாள் வீழ்த்தப்பட்டார்.அபிமன்யு
வதம் துரோணர் தலைமையேற்ற பதின்மூன்றாம் நாள் நடைபெற்றது.அபிமன்யு வதத்துக்குக் காரணமாக
இருந்த ஜயத்ரதனை மறுநாள் ‘சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லாவிட்டால் நெருப்பில் விழுந்து
உயிர் நீப்பேன்
என்று அர்ஜுனன் சபதம் செய்திருந்தான்.பதினான்காம்
நாள் சூரிய அஸ்தமனத்துக்குச் சற்று முன்பு ஜயத்ரத வதம் முடிந்தது.ஆனால் அன்றைய போர்
எப்போதும்போல சூரியாஸ்தமனத்துடன் நிறுத்தப்படாமல் இரவெல்லாம் தொடர்ந்தது.யானைகள் மீதும்
குதிரைகள் மீதும் தேர்களின் மீதும் தீப்பந்தங்களை ஏற்றிவைத்துக்கொண்டு இரவெல்லாம் போரிட்டார்கள்
என்கிறது வியாச பாரதம்.பீமனுக்கும் ஹிடிம்பிக்கும் பிறந்தவனான கடோத்கசன் அரக்க இனத்தைச்
சேர்ந்தவனாதலால், இரவு ஆகஆக அவனுடைய உக்கிரம் அதிகரித்தது.கௌரவ சேனையைச் சேர்ந்த பலர்,
இந்திரன் தந்த சக்தியை உபயோகித்து அவனைக் கொல்லச் சொல்லிக் குரலெழுப்பினர். “கர்ண!
இப்பொழுது சக்தியாயுதத்தினாலே விரைவாகக் கடோத்கசனைக் கொல்.திருதராஷ்டிர மகாராஜனைச்
சேர்ந்த இந்தக் கௌரவர்கள் ஓடுகிறார்கள்.பீமன், பார்த்தன் இருவரும் நமது விஷயத்தில்
என்ன செய்யப்போகிறார்கள்?அர்த்தராத்திரியில் தாக்கச் செய்கின்ற இந்தப் பாபியைக் கொல்.நமக்குள்
எவன் மிக்க கோரமான இந்த யுத்தத்தினின்று விடுபடுவானோ அவன் சேனையுடன் கூடின பார்த்தர்களை
எதிர்த்துப் போர்புரிவான்.ஆதலால், இந்தக் கோரரூபியான ராக்ஷஸனை இந்திரனாலே கொடுக்கப்பட்ட
சக்தியினாலே நீ கொல்ல வேண்டும்.கர்ண!இந்திரனுக்கொப்பான எல்லாக் கௌரவர்களும் போர்வீரர்களுடன்
ராத்திரி யுத்தத்தில் நசிக்கவேண்டாம்
என்று சொன்னார்கள்.
(கும்பகோணம் பதிப்பு, துரோண பர்வம், 5ம் தொகுதி, கடோத்கசவத பர்வம், அத்.180, பக்.722)
(At that time all the
Kauravas, beholding Karna and that terrible illusion (of the Rakshasa) cried
out saying, ‘O Karna, slay the Rakshasa soon with thy dart. These Kauravas and
the Dhartarashtras are on the point of being annihilated. What will Bhima and
Arjuna do to us? Slay this wretched Rakshasa at dead of night, who is consuming
us all. They that will escape from this dreadful encounter to-day will fight
with the Parthas in battle. Therefore, slay this terrible Rakshas now with that
dart given thee by Vasava.
O Karna, let not these great warriors, the
Kauravas, these princes that resemble Indra himself, be all destroyed in this
nocturnal battle
என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு—Drona
Parva, Section CLXXIX) இதைக் கேட்ட கர்ணன், தன்னுடைய கவச குண்டலங்களைக் கொடுத்து அதற்கு
பதிலாக இந்திரனிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதத்தை கடோத்கசன் மீது எய்தான்.சக்தியாயுதத்தால்
தான் அடிக்கப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்த கடோத்கசன், தன் உருவத்தை விந்திய மலையைப்
போலப் பெருக்கிக்கொண்டு கௌரவ சேனையின் மீது விழுந்தான்.இப்படியொரு மலைபோன்ற உருவத்துடன்
அவன் விழுந்ததால் கௌரவ சேனையில் ஒரு அக்ஷெஹிணி சேனை அழிந்தது.(பாரதத்தின் மற்ற பல பதிப்புகளில்,
கடோத்கசன் விழும்போது, ‘உன் உருவத்தைப் பெருக்கிக்கொண்டு விழு

என்று பீமன் வந்து சொன்னதாகக் காணப்படுகிறது.அது தமிழ் மொழிபெயர்ப்பிலும் இல்லை.ஆங்கில
மொழிபெயர்ப்புகளிலும் இல்லை.)
ஸஞ்சயன்
இதை திருதராஷ்டிரனிடத்தில் சொல்லிக்கொண்டு வரும்போது, திருதராஷ்டிரன் அவனை இடைமறித்தான்.
‘ஓ ஸஞ்சயா!கர்ணன் இந்திரனிடத்திலிருந்து பெற்ற சக்தி ஆயுதத்தை ஏன் அவன் போருக்கு வந்த
முதல் நாளிலேயே (அதாவது பதினோராவது நாள் போரிலேயே) விடவில்லை?பன்றிக்கும் நாய்க்கும்
நடக்கின்ற சண்டையில் இரண்டுமே அழிந்தன என்றால் எப்படி வேட்டைக்காரனுக்கு லாபமோ, அப்படி
இப்போது சக்தியாயுதம் கடோத்கசனின் மீது ஏவப்பட்டதால் இப்போது வாசுதேவனுக்கு லாபமாயிற்று.கடோத்கசன் கர்ணனைக் கொன்றிருந்தால், அது பாண்டவர்களுக்கு
லாபமாகியிருக்கும்.
அல்லது கர்ணன் கடோத்கசனைக் கொன்றால், சக்தியாயுதம் வீணடிக்கப்பட்டதால்
அதுவும் பாண்டவர்களுடைய லாபமாகவே ஆகும்.இப்படியிருக்கும்போது, மகாபுத்திசாலியான நீ,
கர்ணனுக்கு அர்ஜுனன் மீது சக்தியாயுதத்தைப் பிரயோகிக்கும்படி ஏன் நினைவூட்டவில்லை?

என்று கேட்டான்.தமிழ் மொழிபெயர்ப்பில் அத்.183, பக்.731ல் உள்ள இந்தப் பகுதியை கிஸாரி
மோகன் கங்கூலி இவ்வாறு மொழிபெயர்க்கிறார்: Even so hath that fatal dart been
rendered fruitless through Ghatotkacha. As in a fight between a boar and a dog,
upon the death of either, the hunter is the party profited, I think, O learned
one, that even so was Vasudeva the party to profit by the battle between Karna
and Hidimva
s son. If Ghatotkacha had slain Karna
in battle, that would have been a great gain for the Pandavas. If, on the other
hand, Karna had slain Ghatotkacha, that too would have been a great gain to
them in consequence of the loss of Karna
s dart. Endued with great wisdom, that
lion among men, viz., Vasudeva, reflecting in this way, and for doing what was
agreeable to and good for the Pandavas, caused Ghatotkacha to be slain by Karna
in battle.
… “Dhritarashtra said, ‘My son is
fond of quarrel. His advisers are foolish. He is vain of his wisdom. It is for
that, that this certain means of Arjuna
s death hath been baffled. Why, O
Suta, did not Duryodhana, or that foremost of all wielders, viz., Karna,
possessed of great intelligence, hurl that fatal dart at Dhananjaya? Why,
O son of Gavalgana, didst thou too forget this great object, possessed as thou
art of great wisdom, or why didst not thou remind Karna of it?
‘நான்
கர்ணனுக்கு இதை நினைவூட்டாமலில்லை.பதினோராம் நாள் யுத்தத்தின் இரவிலிருந்து ஒவ்வொரு
நாளும்நானும் துரியோதனனும் துச்சாதனனும் சேர்ந்து பார்த்தனைக் கொல்லுமாறு கர்ணனுக்கு
நினைவூட்டுவோம். ‘கர்ணா, சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்தி அர்ஜுனனைக் கொல்.அர்ஜுனனுடைய
வீழ்ச்சிக்குப் பிறகு வேறு யாரையாவது கண்ணன் தலைமையேற்கச் செய்தால், கர்ணா, கண்ணனைக்
கொல்.அவன்தான் பாண்டவர்களுக்குப் புகல்.அவன்தான் அவர்களுடைய வேர்.ஆகவே, இலை கிளைகளை
விட்டுவிட்டு வேரை அழி
என்று தினந்தோறும் இரவுக்கூட்டத்தில் கர்ணனுக்கு
நினைவூட்டுவோம்.காலையில் எழுந்திருக்கும்போது இந்த உறுதியான தீர்மானத்தோடு கண்விழிப்போம்.ஆனால்
எப்படியோ தெரியவில்லை.காலையில் போர் தொடங்கியதும் இந்தத் தீர்மானத்தை நாங்கள் எல்லோருமே
மறந்துவிடுவோம்.கேசவன் எப்போதும் அர்ஜுனனைக் காக்கிறான்.அர்ஜுனைக் காக்கிறான் என்றால்,
தன்னைக் கொல்வதற்காக நாங்கள் திட்டம் தீட்டியிருப்பதை அவன் அறியானா?தன்னைக் காத்துக்கொள்வான்
இல்லையா?எனவேதான் அர்ஜுனனைக் கர்ணனுக்கு எதிரில் அவன் கொண்டுவரவே கையில் சக்கரப்படையைக்
கொண்டுள்ள அந்த ஜனார்தனனை வெல்வோர் யாருமே இல்லை
என்று
பதில் சொன்னான்.
கிஸாரி
மோகன் கங்கூலி இந்தப் பகுதியை இப்படி மொழிபெயர்க்கிறார்:
“Sanjaya
said, ‘Indeed, O king, every night this formed the subject of deliberation
with Duryodhana and Sakuni and myself and Duhsasana. And we said unto Karna, ‘Excluding
all other warriors, O Karna, slay Dhananjaya.
We would then lord it over
the Pandu
s
and the Panchalas as if these were our slaves. Or, if upon Partha
s
fall, he of Vrishni
s
race appoints another amongst the sons of Pandu (in this place for carrying on
the fight), let Krishna himself be slain. Krishna is the root of the Pandavas,
and Partha is like their risen trunk. The other sons of Pritha are like their
branches, while the Panchalas may be called their leaves
. The Pandavas have Krishna for their
refuge, Krishna for their might, Krishna for their leader. Indeed, Krishna is
their central support even as the moon is of the constellations. ……….. We
rose every morning, having formed such a resolution in respect of that Lord of
the very gods, viz., Hrishikesa of immeasurable energy. At the time of battle,
however, we forget our resolution. Kesava
always protected Arjuna, the son of Kunti. He never placed Arjuna before the
Suta
s son in battle. Indeed, Achyuta always placed other
foremost of car-warriors before Karna, thinking how that fatal dart of ours
might be made fruitless by ourselves
. O lord! When, again, the high-souled
Krishna protected Partha in this manner from Karna, why, O monarch, would not
that foremost of beings protect his own self? Reflecting well, I see that there
is no person in the three worlds who is able to vanquish that chastiser of
foes, viz., Janardana, that hero bearing the discus in hand.
‘இரவெல்லாம்
ஆலோசித்துத் திட்டம் தீட்டினாலும், யுத்தம் தொடங்கியதும் நாங்கள் அனைவருமே இதை எப்படி
மறக்கிறோம் என்பது தெரியவில்லை.இது கண்ணனுடைய வேலைதான்

என்று ஸஞ்சயன் சொல்கிற இந்த பதில், ஒருபுறம் பார்த்தால் ஏற்புடையது என்று தோன்றுகிறது.ஏனென்றால்,
மஹாபாரதத்தில் ஒரு வாக்கியம் திரும்பத் திரும்ப ஒலிக்கும்: “யதோ தர்மாஸ் ததா கிருஷ்ணோ
யதா கிருஷ்ணாஸ் ததோ ஜய:
(சல்லிய பர்வம், அத்தியாயம் 61, ஸ்லோகம்
30). இங்கே நாம் சல்லிய பர்வத்திலிருந்து மேற்கோள் காட்டியிருந்தாலும், கம்பராமாயணத்தில்
‘அறம் வெல்லும், பாவம் தோற்கும்
என்று திரும்பத் திரும்ப ஒலிப்பது போல இந்த
“யதோ தர்மாஸ் ததா கிருஷ்ணோ யதா கிருஷ்ணாஸ் ததோ ஜய:
என்பது
பல இடங்களில் ஒலிக்கும்.எங்கே தர்மமோ அங்கே கிருஷ்ணன்; எங்கே கிருஷ்ணனோ அங்கே வெற்றி

என்ற இந்த மஹாவாக்கியத்தை ஒட்டி ஸஞ்சயனுடைய பதில் ஒலிப்பதால் இதை ஏற்கலாம் என்றும்
தோன்றும்.
இந்த
பதில் அவனுடைய கண்ணோட்டத்தின்படி மட்டும்தான்.(இந்தச் சமயத்தில் இன்னொன்றையும் கவனித்திருப்பீர்கள்.ஸஞ்சயன் ஒவ்வொரு நாளும்
யுத்த களத்தில் இருந்தான்.நாம் பொதுவாக எண்ணுவதைப்போல திருதராஷ்டிரனுக்கு எதிரில் அமர்ந்துகொண்டு
ரன்னிங் காமெண்டரி கொடுத்துக்கொண்டிருக்கவில்லை. இதற்கான வலுவான ஆதாரங்கள் பாரதத்தில்
பல இடங்களில் வருகின்றன.பதினெட்டாம் நாள் யுத்தத்தில் போர்க்களத்தில் ஸஞ்சயன், பீமனிடத்திலும்
சாத்தியகியிடத்திலும் அகப்பட்டுக் கொள்கிறான். ‘இந்த மூஞ்சுறால் ஒரு பயனும் இல்லை.விட்டுவிடு

என்று பீமன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கே தோன்றும் வியாசர் ஸஞ்சயனை விடுவிக்கும்படிச்
சொல்கிறார்.இது போகட்டும்.இதை இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம்
.) ஸஞ்சயன் அவனுடைய கண்ணோட்டத்தில் சொன்ன
பதில் ஏற்கத் தக்கதுதானா என்பது இப்போது நம்முன் உள்ள கேள்வி.கர்ணன் களத்துக்குள் நுழைந்த
பதினோராம் நாள் யுத்தத்திலிருந்து, கர்ணன் வீழ்ந்த பதினேழாம் நாள் யுத்தம் வரையில்
ஒவ்வொரு நாளும் நடந்தது என்ன என்பதன் சுருக்கத்தைப் பார்த்துக்கொண்டு வந்தால்தான்,
ஸஞ்சயனுடைய பதிலின் validity புலப்படும்.அதை அடுத்தமுறை அலசுவோம்.
(தொடரும்…)