Posted on Leave a comment

பிரிவினைவாதிகளின் பிடியில் அமர்நாத் யாத்திரை – தமிழ்ச்செல்வன்


கடந்த ஜுலை மாதம் 10ம் தேதி திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து மீது லஷ்கர்-இ-தைபா பயங்கவராதிகள் சரமாரியாகச் சுட்டதில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டார்கள்; 32 பேர் காயமுற்றனர்.

பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் இந்தப் பேருந்து அகப்பட்டுக்கொண்டதாக ஒரு செய்திக்குறிப்பு கூறுகின்றது. பதுகாப்புப் படையினரிடம் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒன்றும் செய்ய முடியாமல் போன வெறுப்பில், யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது சரமாரியாக பயங்கரவாதிகள் சுட்டதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும், குறிப்பிட்ட பேருந்து அரசாங்கத்தின் அதிகாரபூர்வ யாத்திரையின் வண்டித்தொடரில் பங்குபெறவில்லை என்றும், அந்தப் பேருந்தில் இருந்த யாத்ரீகர்கள் அமர்நாத் கோவில் தேவஸ்தானத்தில் பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகின்றது.

 அமர்நாத் கோவில் தேவஸ்தானத்தில் பதிவு செய்து, அரசின் அதிகாரபூர்வ யாத்திரையில் பங்கு பெற்றுள்ள பேருந்துகள் தக்க பாதுகாப்புடன் அனுப்பப்படுகின்றன. வழியெங்கும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளும், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளும், பாகிஸ்தான் ஆதரவு பெற்றுள்ள காஷ்மீர் பயங்கரவாத அமைப்புகளும், அமர்நாத் யாத்திரையைக் குலைக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மிரட்டல் விடுவதாலும், தாக்குதல் நடத்த முயல்வதாலும், அமர்நாத் யாத்திரையை அரசும், அமர்நாத் தேவஸ்தானமும் இணைந்து நடத்தி வருகின்றன. தேவஸ்தானத்தில் பதிவு செய்து, அரசு வழங்கும் பாதுகாப்புடன்தான் யாத்திரை மேற்கொள்ள முடியும். தனியார் அமைப்புகள் யாத்திரை நடத்த அனுமதியில்லை. இருப்பினும் ஒரு சிலர் தாங்களாக யாத்திரைகள் மேற்கொள்வதும் நடக்கிறது. அவ்வாறு தெரிய வரும்போது, அரசு அவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி, அரசு அங்கீகாரம் பெற்ற வண்டித்தொடருடன் சேர்த்து விடுவதும் உண்டு.

இவ்வாறாக அரசும் அமர்நாத் கோவில் தேவஸ்தானமும் இணைந்து பலத்த பாதுகாப்புடன் யாத்திரையை நடத்தினாலும், பயங்கரவாத அச்சுறுத்தலும் தொடர்ந்து இருந்துகொண்டுதான் வருகிறது.

அமர்நாத் யாத்திரையின் புனிதத்துவம்1

சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் தோன்றி வளர்ந்த வேத நகரீகத்தை அடிப்படையாகக் கொண்ட கலாசார ஆன்மிகப் பாரம்பரிய வாழ்வை வாழ்ந்து வருபவர்கள் பாரத தேசத்து மக்களான ஹிந்துக்கள். தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வது, மலைக்கோவில்களுக்குச் செல்வது, குலதெய்வ வழிபாடுகள், நீத்தார் வழிபாடுகள் ஆகியவை ஹிந்துக்களுக்கு மிகவும் இன்றியமையாதவை. அவற்றுள் மிகவும் முக்கியமாக அவர்கள் கருதுபவை, கயிலாய யாத்திரை, காசி-ராமேஸ்வரம் யாத்திரை போன்றவை. அமர்நாத் யாத்திரையும் அவற்றுக்குச் சமமான யாத்திரையாகும்.

புராணத்திலும், ஹிந்து நூல்களிலும் அமர்நாத் தலம் பற்றிய வரலாற்றுச் செய்திகள் காணப்படுகின்றன.

ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானிடம், “நீங்கள் என்றிலிருந்து இந்த மண்டையோடு மாலையை அணிய ஆரம்பித்தீர்கள்? ஏன் அதை அணிகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்குச் சிவபெருமான், “நீ ஒவ்வொரு முறை பிறக்கும்போதும் நான் ஒவ்வொரு தலையைச் சேர்த்துக்கொள்கிறேன்” என்று பதிலளிக்க, பார்வதி தேவி, “நான் அடிக்கடி இறந்து பிறக்கிறேன். ஆனால் நீங்கள் இறப்பே இல்லாமல் நிரந்தரமாக இருக்கிறீர்கள். இதற்கான காரணம் யாது?” என்று கேட்டார். சிவபெருமான், “இறவா நிலை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீ ‘அமரத்துவக் கதை’ அறிந்துகொள்ள வேண்டும்” என்று கூறி, எந்த உயிரினமும் கேட்க முடியாத, எந்த உயிரினமும் இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பி, அமர்நாத் குகைக்கு பார்வதியைக் கூட்டிச் செல்கிறார்.

போகும் வழியில், பஹல்கம் என்கிற இடத்தில் நந்தியையும், சந்தன்வாரி என்கிற இடத்தில் தன் முடியில் சூட்டியிருந்த சந்திரனையும், சேஷ்நாக் ஏரியில் தான் அணிந்திருந்த சர்ப்பங்களையும் (பாம்புகள்), மஹாகுண பர்வதத்தில் தன் பிள்ளை விநாயகரையும், பஞ்சதாரணி என்கிற இடத்தில் பஞ்ச பூதங்களையும் விட்டுவிட்டு, பார்வதி தேவியுடன் அமர்நாத் குகைக்குச் சென்று அமர்கின்றார். தான் பார்வதிக்குச் சொல்வதை வேறு உயிரினங்கள் எதுவும் கேட்கக்கூடாது என்பதை உறுதி செய்துகொள்வதற்காக, காலாக்னியை மூட்டி, குகையைச் சுற்றிப் பாதுகாப்பாக நெருப்பு வளையத்தை உண்டாக்குகிறார். அதன் பிறகு இறவாத்தன்மையின் ரகசியத்தை பார்வதி தேவிக்குச் சொல்கிறார். அத்தகைய புனிதத்துவம் மிகுந்த குகைக்கோவில் அமர்நாத். (இவ்வளவு பாதுகாப்புடன் சிவபெருமான் பார்வதி தேவிக்குச் சொல்லியும், அதை ஒரு ஜோடிப்புறாக்கள் கேட்டுவிட்டு, அவையும் இறவாத்தன்மை பெற்றதாகவும், இப்போதும், சில யாத்ரீகர்கள் அந்தப் புறாக்களைக் கண்டதாகவும் நம்பப்படுகிறது.)

சைவம் தோன்றி வளர்ந்த புண்ணிய பூமியான காஷ்மீரம் காஷ்யப மஹரிஷியின் பெயரினாலேயே அந்தப் பெயரைப் பெற்றது. அவருடைய காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஒரு மிகப்பெரிய ஏரியில் மூழ்கியிருந்தது. அதை உடைத்துப் பல்வேறு ஆறுகளாகவும், ஓடைகளாகவும் பிரித்தவர் காஷ்யப மஹரிஷி. அதன் பிறகுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கு வெளியே வந்தது. அந்தச் சமயத்தில் கயிலாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பிருகு மஹரிஷி, அங்கே வந்து அமர்நாத் குகையைக் கண்டறிந்து பனி லிங்கத்தையும் தரிசனம் செய்தார். அமர்நாத் பனி லிங்கத்தை முதன் முதல் தரிசனம் செய்தவர் என்கிற பெருமையையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து மக்கள் வழிபடும் தலமாக அமர்நாத் இன்றுவரைத் திகழ்கிறது. பனி லிங்கத்தின் அருகே மேலும் இரண்டு சிறிய பனி லிங்கங்கள் தோன்றுகின்றன. அவை பார்வதியாகவும், விநாயகராகவும் வழிபடப்படுகின்றன. ஆடி-ஆவணி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடெங்கிலுமிருந்து அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு சிவபெருமானைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

பஹல்காம் என்கிற இடத்திலிருந்து 46 கிலோமீட்டர் தூரத்தில், லிட்டர் பள்ளத்தாக்கில் பூமியிலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் உள்ளது அமர்நாத் குகை. பஹல்கம் ஸ்ரீநகரிலிருந்து 96 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்தக் குகையில் அமர்நாத் பனி லிங்கமாகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அமர்நாத் ஜி என்று அன்பும் மரியாதையும் பக்தியும் கலந்து மக்கள் அவரை வழிபடுகின்றார்கள்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைப் பிறகு, பாகிஸ்தான் காஷ்மீரைத் தன்னுடைய பகுதியாக உரிமை கோரியது. தொடர்ந்து அங்கே பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் வளர்த்து வருகின்றது. சுதந்திரத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பிரதம மந்திரிகள் செய்த தவறுகளினால் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் இன்றுவரை ஆக்கிரமித்து வருவதுடன், இந்தியப் பகுதியிலும் பயங்கரவாதத்தை வளர்த்து வருகின்றது. இதன் விளைவாக 1990ம் ஆண்டு காஷ்மிர் ஹிந்துக்களான பண்டிட் சமுதாயத்தினர் லட்சக்கணக்கில் அடித்துத் துரத்தப்பட்டனர். வெளியேற மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர். ஹிந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். குழந்தைகளும் கூடக் கொல்லப்பட்டனர். அவர்களுடைய வீடுகளும் வியாபாரத் தலங்களும் சூறையாடப்பட்டன. நூற்றுக்கணக்கான கோவில்கள் அழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமாக முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. அப்போதிலிருந்து, அமர்நாத் யாத்திரையும் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளானது.2

2 ஆகஸ்டு 2000: பயங்கரவாதிகள் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதில் 21 யாத்ரீகர்கள் உட்பட 89 பேர் இறந்தனர்.

20 ஜூலை 2001: அமர்நாத் குகை அருகிலேயே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பக்தர்கள் கொல்லப்பட்டனர்.

30 ஜூலை 2002: ஸ்ரீநகரில் அமர்நாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரவாதி கிரேனைட் குண்டு வீசியதில் காரில் பயணித்த யாத்ரீகர்களில் 2 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமுற்றனர்.

6 ஆகஸ்டு 2002: பஹல்காமில் அமர்நாத் யாத்ரீகர்களுக்கான முகாம் மீது லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டு 27 பேர் படுகாயமுற்றனர்.

21 ஜூன் 2006: யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது கிரேனைட் குண்டுகளைப் பயங்கரவாதிகள் வீசியதில் 5 பேர் படுகாயமுற்றனர்.

26 மே 20083: மத்திய அரசும் மாநில அரசும் முடிவுசெய்து அமர்நாத் யாத்ரீகர்களின் வசதிக்காக 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் கோவில் தேவஸ்தானத்துக்கு அளித்தன. அதை காஷ்மீர் பிரிவினைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். பல்வேறு போராட்டங்களை காஷ்மீரில் நடத்தினர். அப்போதைய மாநில அரசு தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கியது. மத்திய காங்கிரஸ் அரசும் மௌனம் சாதித்தது. அதனைத் தொடர்ந்து, முடிவை மாநில அரசு வாபஸ் வாங்கியதை எதிர்த்து ஜம்முவில் உள்ள ஹிந்துக்கள் போராட்டங்கள் நடத்தினர். அப்படியும் மாநில அரசு பின்வாங்கும் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

2010: மாநில அரசு அமர்நாத் யாத்திரையில் செல்லும் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ரூ 2,000 வரி விதித்தது. 7 நாட்களுக்குப் பிறகு அம்மாநிலத்தில் ஓடும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ 2,000/- வரி என்றும் அறிவித்தது. அப்போதைய எதிர்க்கட்சியான பா.ஜ.க எதிர்த்தும் அந்த வரி விதிப்பை வாபஸ் பெறவில்லை.

காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கும், பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்பது உலகறிந்த ரகசியம். பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ (ISI – Inter Services Intelligence) மற்றும் பாகிஸ்தான் ராணுவம் ஆகிய அமைப்புகள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தைபா, ஜெயிஷ்-இ-முகம்மது போன்றவற்றிற்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவ்வமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கும் உதவி வருகின்றன. நிதியுதவியும் செய்கின்றன.

கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி திங்கட்கிழமை நடந்த தாக்குதலைக்கூட பாகிஸ்தான் லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதியான இஸ்மாயில் என்பவர்தான் திட்டமிட்டுள்ளார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இந்த பயங்கரவாதி இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரைத் தேடிப்பிடிக்கச் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை இந்தியாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தும்போதும், நம் நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை விடுப்பது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. அந்தச் சம்பிரதாயம் இம்முறையும் கடைப்பிடிக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் ஆரம்பித்து, அமைச்சர்கள், கட்சித்தலைவர்கள் என்று பலரும் கண்டன அறிக்கைகள் விடுத்துள்ளனர். பயங்கரவாதிகள் கோழைகள் என்றும், அப்பாவி யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமான செயல் என்றும், இம்மாதிரியான செயல்களால் இந்தியாவின் இறையாண்மையையும் மக்களின் ஒற்றுமையையும் குலைத்துவிட முடியாது என்றும் அவ்வறிக்கைகள் கூறின.

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு முந்தைய அரசுகள் போல் இல்லாமல் பயங்கரவாத அமைப்புகள் மீதும், அவற்றுக்கு உதவுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. தேச விரோதச் செயல்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகளின் (NGOs) உரிமத்தை ரத்து செய்து அவற்றைத் தடை செய்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிபவர்கள் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 500 மற்றும் 1000 ரூபாய்களை முடக்கிய நடவடிக்கையினால் காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டங்கள் நடத்துவதும், கல்லெறிதல் நடத்துவதும் வெகுவாகக் குறைந்து போனது. சமீப காலமாக போராட்டங்களும் கல்லெறிதலும் மீண்டும் ஆரம்பித்திருந்தாலும், மத்தியக் காவல் படையினரின் பதிலடி கடுமையாக இருந்து வருகிறது. பல பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லையோர ராணுவ முகாம்களும் Surgical Operations என்கிற ராணுவ நடவடிக்கையினால் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஆயினும், கடந்த ஜூலை 10-ம் தேதி நடத்தப்பட்டுள்ள தாக்குதல், நேரம் பார்த்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றே சொல்ல வேண்டும். பிரதமரின் இஸ்ரேல் விஜயத்தைத் தொடர்ந்தும், பூட்டான் எல்லையில் சீனாவின் எல்லை மீறலைத் தொடர்ந்தும், அமர்நாத் யாத்திரை தொடங்கிய சமயத்திலும் இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவினால் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் மூலம், நாங்கள் பயங்கரவாதத்தைக் கைவிட மாட்டோம்; அமர்நாத் யாத்திரையைக் குலைக்கத் தொடர்ந்து முயற்சி செய்வோம்; காஷ்மீர் மீதான எங்கள் உரிமையைக் கைவிட மாட்டோம் என்கிற செய்தியைத்தான் சொல்கிறது பாகிஸ்தான். ஆகவே, இந்த மாதிரியான தாக்குதல்களுக்கும், காஷ்மீர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் பின்வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தாக வேண்டும்.

· அரசியல் அமைப்புச் சட்டத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒன்றிணைக்கப்படாமல் காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து தரும் க்ஷரத்து 370 ரத்து செய்யப்பட வேண்டும்.

· காஷ்மீர் மாநிலத்திற்காக மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கும் சிறப்புச் செலவினங்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

· காஷ்மீர் பிரிவினைவாதிகளின் பாதுகாப்புச் செலவுகளை மத்திய அரசு இனி ஏற்கக்கூடாது. அவர்கள் இத்தனை வருடங்களாக ஈடுபட்டுக்கொண்டிருந்த தேச விரோத, பிரிவினைவாத செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டு மீதியிருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

· தங்களுடைய சொந்த நிலங்களும், வீடுகளும், சொத்துக்களும் பிடுங்கப்பட்டு, அவற்றை விட்டுத் துரத்தப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் காஷ்மீர் ஹிந்துக்களான பண்டிட்டுகளை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த வேண்டும்.

· மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ள பண்டிட் சமூகத்தினரின் பாதுகாப்புக்காக முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினரையும் காஷ்மீரில் குடியேற்ற வேண்டும்.

· ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகராக ஜம்முவே நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். சட்டமன்றம், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் என்று ஆட்சியின் அனைத்துத் தலைமையகங்களும் ஜம்முவிலேயே இயங்கவேண்டும்.

· பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சட்டமன்றத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

· முஸ்லிம்களுக்குத் தற்போது கொடுக்கப்பட்டு வரும் சிறுபான்மையினச் சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும்.

· பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும், பாதுகாப்புப் படையினர் மீது கல் எறிதலில் ஈடுபடுபவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

· ராணுவப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA – Armed Forces Special Powers Act) தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும்.

· இந்திய அரசியல் அமைப்பில் மற்ற மாநிலங்கள் எப்படி நடத்தப்படுகின்றனவோ, அப்படியே ஜம்மு காஷ்மீர் மாநிலமும் நடத்தப்பட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்தினால், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும். தேசிய இறையாண்மையும் ஒருமைப்பாடும் தொடர்ந்து காப்பாற்றப்படும்.

ஆதாரங்கள்:

1.   (http://www.shriamarnathjishrine.com/the-holy-shrine.html)
2.   http://www.firstpost.com/india/amarnath-yatra-devotees-have-faced-repeated-terror-attacks-heres-the-blood-soaked-history-of-pilgrimage-3799091.html
3.   (https://en.wikipedia.org/wiki/Amarnath_Temple )

Posted on 2 Comments

தாமஸ் கட்டுக்கதை – தமிழ்ச்செல்வன்

சென்னையைச் சேர்ந்த
பிரபலமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான
சிவாஜி
புரொடக்
ஷன்ஸ்’, கத்தோலிக்க அப்போஸ்தலர்களுள்
ஒருவராகக் கொண்டாடப்படும் புனித தாமஸ்ஸின் கதையைத் திரைப்படமாகத் தயாரிக்கப்போவதாகச்
செய்திகள் வந்துள்ளன
. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள தார்லின்
எண்டெர்டெய்ன்மெண்ட்
(Dharlin
Entertainment)
என்கிற நிறுவனத்துடன்
இணைந்து
, கேரளா, சென்னை மற்றும் இலங்கை
ஆகிய இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என்றும்
, இந்திய
மற்றும் சர்வதேசக் கலைஞர்கள் பங்குபெறுவார்கள் என்றும்
, 2018 ஆரம்பத்தில் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது. திரைப்படத்தின்
பெயர்
கமிஷண்ட்’ (Commissioned) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்
திரைப்படம் அப்போஸ்தலர் தாமஸ்ஸின் இந்தியப் பயணத்தைப் பற்றியும்
, அவர்
சென்னையில் ஒரு பிராம்மண புரோகிதரால் கொல்லப்பட்டு மடிந்தது பற்றியும் விரிவாகச் சொல்லும்
என்றும் கூறப்படுகின்றது
.
(Deccan Chronicle dated 1 May 2017)
அப்போஸ்தலர் தாமஸ்
கதையைத் திரைப்படமாக எடுக்கவிருப்பதாக
2008ம் ஆண்டே செய்திகள்
வந்தன
. சென்னை மயிலாப்பூர் தலைமை மறைமாவட்டம், அப்போஸ்தலர் புனித தாமஸ் இந்தியா டிரஸ்ட் என்கிற அமைப்பின் பெயரில்
ரூபாய்
50 கோடி செலவில், புனித
தாமஸின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரிக்கப்போவதாக அறிவித்தது
. (Deccan Chronicle dated 24
June 2008)
அந்த அறிவிப்புக்கு
முக்கிய காரணங்கள் இரண்டு
.
முதலாவதாக, போப்
இரண்டாம் ஜான்பால் இந்தியாவிற்கு

1986
மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் வந்தார்.
அந்த இரண்டு பயணங்களின் போதும் இந்தியாவில் அவர் கலந்துகொண்ட
நிகழ்ச்சிகளில் புனித தாமஸ் பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லை
. சொல்லப்போனால்புனித
தாமஸ்
பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை என்று சொல்லலாம்.
கிறிஸ்தவர்கள் முக்கியமாகக்
கருதும் அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித தாமஸ் உண்மையிலேயே இந்தியப் பயணம் மேற்கொண்டு
, கேரளம்
மற்றும் தமிழகக் கடற்கரை கிராமங்களில் வாழ்ந்து இறுதியாகச் சென்னையில் கொல்லப்பட்டு
இறந்தவர் என்றால்
, கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்
போப் அவரைப் பற்றிப் பேசாமல் இருந்திருப்பாரா
? இத்தனைக்கும்
அவர்
1986ம் ஆண்டு வந்தபோது, சென்னையில்
சாந்தோம் சர்ச்சுக்கும்
,
புனித தாமஸ் மலை (உண்மைப்
பெயர்
பிருங்கி மஹரிஷி தொடர்பால்பிருங்கி
மலை
’ – பின்னர் பரங்கிமலை என்று மருவியது) சர்ச்சுக்கும்
வந்து பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார்
. ஆகவே, இரண்டு
முறை வந்தபோதும் போப் இரண்டாம் ஜான்பால் புனித தாமஸ் பற்றிப் பேசவில்லை
.
இரண்டாவதாக, போப்
இரண்டாம் ஜான் பாலுக்குப் பிறகு பதவியேற்றுக்கொண்ட போப் பதினாறாம் பெனடிக்ட்
27 செப்டம்பர் 2006 அன்று வாத்திக்கனில்,
புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், அப்போஸ்தலர் புனித
தாமஸ் சிரியா மற்றும் பெர்ஷியா ஆகிய நாடுகளில் மதமாற்றத்தில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர்
இந்தியாவின் மேற்குப் பகுதியில்
(தற்போதைய பாகிஸ்தான்) மதமாற்றம் செய்தார். அங்கிருந்து கத்தோலிக்கக்
கிறிஸ்தவம் இந்தியாவின் தென்பகுதிகளை அடைந்தது

என்று, புனித தாமஸ் தென் இந்தியாவுக்கு
வரவில்லை என்று தெளிவாகப் புரியுமாறு
, பேசினார். (Hindustan Times dated 23
November 2006)
கேரளம் மற்றும் தமிழகக்
கத்தோலிக்கச் சபைகளுக்கு போப் பெனடிக்டின் பேச்சு இடிபோல இறங்கியது
. இத்தனை
வருடங்களாக அவர்கள் கட்டமைத்து வந்த புனித தாமஸ் கதை
, உண்மையிலேயே
கட்டுக்கதை என்று நிரூபிப்பது போல போப் பெனடிக்டின் பேச்சு இருக்கவே
, அவர்கள்
அவசரம் அவசரமாக வாத்திக்கனுடன் தொடர்புகொண்டு தங்கள் பிரச்சினையைத் தெரிவிக்கவே
, வாத்திக்கன்
தலைமை தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் போப்பின் பேச்சை மாற்றி அமைத்தது
. இருந்தும்
அவர் பேச்சு வெளியில் செய்திகள் மூலம் முன்னரே வந்துவிட்டதை எப்படி மாற்றி அமைக்க முடியும்
? (Rediff.com dated 29
November 2006)
ஆகவே, சென்னை
மயிலை தலைமை மறைமாவட்டம் புனித தாமஸ் பற்றிய திரைப்படம் ஒன்றை எடுத்துத் தன்னுடைய கட்டுக்கதைக்கு
மேலும் வலுச் சேர்க்க முனைந்தது
.
புனித தாமஸ்ஸின் கட்டுக்கதைக்கு மேலும் கூடுதலான நம்பகத்தன்மையைச்
சேர்க்க
, அவர் சென்னை மயிலாப்பூர் கடற்கரையில் திருவள்ளுவருடன்
அளவளாவினார் என்றும்
, திருவள்ளுவர் தாமஸ்ஸின் சீடர் என்றும், அதனால்தான்
திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் காணப்படுகின்றது என்றும் புனைந்துரைகளை
, ஏற்கெனவே
பரப்பிக்கொண்டிருந்த தெய்வநாயகம் என்னும் ஒரு மதமாற்றப் பிரசாரகரை மீண்டும் பயன்படுத்திக்கொண்டனர்
. திருக்குறளில்
விவிலியத்தின் தாக்கம் உள்ளது என்கிற புனைந்துரையை முதன்முதலில் பரப்பியவர்
19ம்
நூற்றாண்டில் மதமாற்றம் புரிய வந்த ஜி
.யு.போப்
என்கிற பாதிரி ஆவார்
. அவருடைய போலித்தனமான வழியைப் பின்பற்றித்தான் தெய்வநாயகமும்
நடந்துள்ளார்
.
தமிழர் சமயம் பற்றிய திரிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தெய்வநாயகம்விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம்ஒப்பு ஆய்வுஎன்கிற ஒரு நூலை 1985-86ல் எழுதி வெளியிட்டு
இந்தப் புனித தாமஸ் கட்டுக்கதையை உண்மையென நிலைநாட்ட முயற்சி செய்தார்
. ஆனால் அருணை
வடிவேல் முதலியார் என்கிற தமிழறிஞர் மூலம் தரமான மறுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு தருமை
ஆதீனத்தைச் சேர்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தினர்
, தெய்வநாயகத்தின்
சதியை முறியடித்தனர்
. அந்த நூல்: ‘விவிலியம் திருக்குறள்
சைவ சித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்
’ – அனைத்துலக சைவ
சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம்
, தருமபுரம் ஆதீனம் – 1991.
இங்கே முக்கியமாகக்
கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவென்றால் தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ
, இங்கே ஒரு பிராம்மணர்
அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது
. ஆனால், போர்ச்சுகீசியர்
படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும்
, பிருங்கி
மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள்
இருக்கின்றன
. சொல்லப்போனால், சாந்தோம்
சர்ச்சிலும்
, அதன் அருகில் உள்ள அருங்காட்சியகத்திலும் பழைய கபாலீஸ்வரர்
கோவிலின் தூண்கள் மற்றும் சில இடிபாடுகள் இன்னும் இருக்கின்றன
. கோவில்
இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு அந்த இடத்தில்தான் சர்ச்சு கட்டப்பட்டுள்ளது என்கிற
உண்மையைப் பறைசாற்றும் விதமாக அவை இன்றும் சர்ச்சுக்குள்ளேயே காட்சியளிக்கின்றன
. டாக்டர்
நாகசாமி போன்ற தொல்லியல் நிபுணர்களும் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளனர்
. தமிழக இந்து அறநிலையத்துறையே, தற்போதைய கபாலீஸ்வரர்
கோவிலின் நுழைவாயிலில் இவ்வுண்மையைக் கல்வெட்டில் பதிய வைத்துள்ளது
.
எனவே, இந்தத்
தாமஸ் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கியதே பாரதத்தின் தென்பகுதியில் உள்ள இந்துக்களை
மதமாற்றம் செய்யத்தான்
.
தாமஸ் இங்கு வந்து
திருவள்ளுவருக்கு குருவாக இருந்தார் என்றும்
, திருவள்ளுவர்
தாமஸிடம் பைபிள் கற்று
,
பின்னர் பைபிளில் உள்ள பல கருத்துக்களின் அடிப்படையில்
திருக்குறளை இயற்றினார் என்றும் கதை கட்டிவிட்டதுதான் தமிழுக்குப் பங்குத் தந்தைகளின்
பங்களிப்பு
. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகும் திருக்குறள். நம்மிடமுள்ள
வரலாற்றுச் சான்றுகளை வைத்துப் பார்த்தால் திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார்
என்று தெரிய வருகிறது
. மேலும் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்ட
கம்ப ராமாயணம்
, பெரிய புராணம் ஆகியவற்றில் திருக்குறள் கருத்துக்கள்
காணப்படுவதும்
, கிறிஸ்துவம் பற்றிய ஒரு தகவலும் இல்லாமல் இருப்பதுமே, இவர்களின்
தாமஸ் கதை சரியான ஏமாற்று வேலை என்பதை
வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது
.
மயிலையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தின் சுவர்களில்
பதினோராம் நூற்றாண்டு ராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுக் குறிப்புகள் இருந்து பின்னர்
அழிக்கப் பட்டுள்ளன
. கிறிஸ்தவர்களின் தாமஸ் கூத்தைபுனித
தாமஸ் கட்டுக்கதையும் மயிலை சிவாலயமும்
என்ற புத்தகத்தின்
மூலம் ஈஸ்வர் சரண் என்கிற ஆராய்ச்சியாளர் தோலுரித்துக் காட்டியுள்ளார்
. வேதம்
வேதபிரகாஷ் என்கிற வரலாற்று ஆய்வாளரும்
, தன்னுடையபுனித
தாமஸ் கட்டுக்கதை
என்கிற புத்தகத்தில் கிறிஸ்துவர்களின் சூழ்ச்சியை நிரூபித்துள்ளார். ஈஸ்வர்
சரண் எழுதியுள்ள
The Myth of
St.Thomas and Mylapore Shiva Temple
என்ற
புத்தகத்தை அவசியம் படியுங்கள்
.
அதற்கு பெல்ஜியம் நாட்டு வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான
கோன்ராட் யெல்ஸ்ட் எழுதியுள்ள முன்னுரையும் படிக்க வேண்டிய ஒன்று
.1
இருப்பினும், தாமஸ்
கட்டுக்கதையைத் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட முடிவு செய்த மயிலை மறைமாவட்டம் தெய்வநாயகத்தின்
மூலமாக தாமஸ் கட்டுக்கதை மீண்டும் புதிய வேகத்துடன் பரவத் தொடங்கியது
அந்தத் திரைப்படத்தின்
துவக்க விழாவில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு
துவக்கி வைத்துப் பேசினார்
.
ஜி.யு.போப்பை சிலாகிக்கும் கருணாநிதி, திருக்குறளை
நன்கு கற்றறிந்து அதற்கு உரையும் எழுதிய கருணாநிதி
, தன்னுடைய
துவக்க விழா உரையில்
, புனித தாமஸ்திருவள்ளுவர்
சந்திப்பைப் பற்றியோ அல்லது திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் உள்ளதைப் பற்றியோ
ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை
.
அவை உண்மைகளாக இருந்திருந்தால் பேசாமல் இருக்கக்கூடியவரா
அவர்
? ஆனால், கிறிஸ்தவர்களைத் திருப்திப
படுத்தி அவர்கள் ஓட்டுகளைப் பெறவேண்டும் என்கிற காரணத்துக்காக புனித தாமஸை ஒரு பிராம்மணர்
கொன்றார் என்கிற கட்டுக்கதையைப் பற்றி மட்டும் பேசினார்
. பல்வேறு
ஆதாரங்களும் சான்றுகளும் உடைய ராமபிரானின் வரலாற்றைக் கேள்விக்குள்ளாக்கி ராமாயண சரிதத்தின்
உண்மைத் தன்மையைப் பற்றிக் கேள்விகள் எழுப்பிய கருணாநிதி
, ஒரு
துளி கூட ஆதாரமோ சான்றோ இல்லாத புனித தாமஸ்ஸின் வரலாற்றைப் பற்றி ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை
. (Rediff.com dated 4 July 2008)
திரைப்படத் தயாரிப்பைப்
பற்றிய அறிவிப்பைச் செய்து
,
அதற்கு முதலமைச்சர் தலைமையில் துவக்க விழா நடத்திய
பிறகும்
, எந்த காரணத்தாலோ மயிலாப்பூர் மறைமாவட்டம் அதன் பிறகு
அந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கவில்லை
. அவர்களின் தயக்கத்திற்கு
புனித தாமஸ்ஸின் இந்தியப் பயணம் பற்றி வாத்திக்கனே நம்பிக்கை தெரிவிக்கவில்லை என்பதே
முக்கியக் காரணமாக இருக்க வேண்டும்
.
மேலும், பின்வரும் உண்மைகளும்
காரணங்களாக இருக்கலாம்
:
·         1729ம்
ஆண்டு மயிலாப்பூர் மறைமாவட்டத் தலைமைப் பாதிரியார் சாந்தோம் சர்ச்சில் உள்ள கல்லறை
புனித தாமஸ்ஸுடையதுதானா என்கிற சந்தேகத்தை எழுப்பி
, ரோமானிய
சடங்குமுறைச் சபைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்
. ஆனால்
அவருடைய சந்தேகத்தை நிராகரித்தோ அல்லது சாந்தோமில் உள்ளது தாமஸ்ஸின் கல்லறைதான் என்பதை
உறுதி செய்தோ ரோமானியச் சபை பதில் எதுவும் அளிக்கவில்லை
.
·         1886ம்
ஆண்டு போப் பதிமூன்றாம் லியோவும்
,
1923
ம் ஆண்டு போப் பதினொன்றாம் பையஸும், புனித
தாமஸ் இறுதியாக சிந்து நதிக்கு அப்பால் உள்ள இந்திய எல்லைக்கு
(தற்போதைய
பாகிஸ்தான்
) வந்தார் என்றுதான் கூறியிருக்கிறார்கள். அதாவது 2006ல்
போப் பெனடிக்ட் கூறியதும் அவர்கள் கூறியதும் ஒன்றே
. ஆகவே, தாமஸ்
தென் இந்தியாவுக்கு வந்தார் என்பது வெறும் பொய் என்பதே உறுதியாகின்றது
.   
·         பொது ஆண்டு 52ல் அப்போஸ்தலர் தாமஸ் கேரளக் கடலோரக் கிராமமான கொடுங்கல்லூரில்
வந்து இறங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வாத்திக்கன் தலைமையகம்
13 நவம்பர் 1952 அன்று கேரள கத்தோலிக்க சபைக்குத் தகவல் அனுப்பியுள்ளது.2
இந்த மாதிரியான சூழ்நிலையில்
தாமஸ் கட்டுக்கதையை
, உண்மையான வரலாறாகக் கட்டமைக்க, மயிலை
கத்தோலிக்கச் சபை மேலும் முயற்சி செய்வது பரிதாபத்திற்குரியது
. ஆனால்
இவ்வாறான முயற்சிகள் மூலம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் மதமாற்ற நடவடிக்கைகளை மேலும்
மேம்படுத்த நினைக்கலாம்
.
அதற்குத் திரைப்படங்கள் பயனுள்ள வழிவகையாகவும் அமையக்கூடும்.
எனவே, தற்போது
எடுக்கப்படும் இந்தத் திரைப்பட முயற்சியை தேசப்பற்றும் மதநல்லிணக்க விருப்பமும் கொண்ட
இந்தியக் குடிமக்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும்
. ஹிந்து
இயக்கங்களும் அமைப்புகளும் சிவாஜி புரொடக்
ஷன்ஸ்
நிறுவனத்தின் அதிபர்களான பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோரிடம் விஷயத்தை எடுத்துச் சென்று
, உண்மையான
வரலாற்றை எடுத்துக்கூறி
,
மதநல்லிணக்கத்திற்கு ஆபத்தாக முடியும், போலியான
வரலாற்றை நிலைநிறுத்த முயலும் இந்த முயற்சிக்குத் துணைபோக வேண்டாம் என எச்சரிக்க வேண்டும்
.
இந்தத் திரைப்படத்
தயாரிப்பைக் கைவிடுவது சிவாஜி புரொடக்
ஷன்ஸ்ஸுக்கு மட்டுமல்லாமல், மயிலைக்
கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கும்
,
கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் நல்லது.
அடிக்குறிப்புகள்: