Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் – 13 | முனைவர் வ.வே.சு.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதாம் ஆண்டு. கல்லூரித் தமிழ் மன்றம் அமைத்த பட்டி மண்டபம். அந்தக் காலத்திலே பிரபலமாயிருந்த பேராசிரியர் கண.சிற்சபேசன் நடுவர். நான் வரவேற்புரை நவில வேண்டும். அதற்காகக் குறிப்புகள் எடுக்கும் போது, பழைய தமிழ் இலக்கியத்தில் பட்டிமன்றம் பற்றிய செய்திகள் உண்டா எனத் தேடினேன். வருகை தர உள்ள பேராசிரியர் கம்பனில் ஆழங்கால் பட்டவர். எனவே கம்ப ராமாயணத்தில் தேடினேன். Continue reading இந்தியா புத்தகங்கள் – 13 | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் – 12 | முனைவர் வ.வே.சு

Krishna The man and his philosophy OSHO

‘அந்தப் பையனுக்கு எவ்ளோ வயசிருக்கும் பாட்டி?’

‘அஞ்சு வயசிருக்கும். அவன் பள்ளிக்கூடம் போற வழியில ஒரு பெரிய காடு. அதத் தாண்டிதான் போகணும். அன்னிக்கு அவன் அம்மாவால அவன் கூட வரமுடியல. தனியாத்தான் போகணம். அவனுக்கு பயமாயிருந்தது. என்ன பண்ணறதும்மான்னு கேட்டான்.’

‘அப்ப.. அவன் அம்மா என்ன சொன்னா பாட்டி?’ Continue reading இந்தியா புத்தகங்கள் – 12 | முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் – 11 | முனைவர் வவேசு

The Dance of Shiva – Ananda Coomaraswamy – Rupa Antiquities

‘சுவாமி எனக்குச் சிற்பக் கலையைச் சொல்லிக் கொடுக்கிறீர்களா?’

‘ஓ! பேஷாய்ச் சொல்லித்தருகிறேன். ஆனால் சிற்பக்கலையைக் கற்றுக் கொள்வதற்கு முன்னால் சித்திரக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமே!’ Continue reading இந்தியா புத்தகங்கள் – 11 | முனைவர் வவேசு

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் 10 | முனைவர் வ.வே.சு

Our Oriental Heritage – Will Durant

பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்த எமெர்ஜென்ஸி காலம். பேச்சுக்கு இருந்த கட்டுப்பாடு உணவுக்கு இல்லை. எனவே சென்னை மயிலை லஸ் முனையிலுள்ள உணவகத்தில் சிற்றுண்டி அருந்த நண்பர்களோடு சென்றிருந்தேன். வட இந்திய உணவு வகை மற்றும் வேறு பல புதிய உணவு வகைகள் கிடைக்குமிடம். இதுவரை சாப்பிடாத ஏதேனும் ஒன்றை ‘டேஸ்ட்’ செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆசை. Continue reading இந்தியா புத்தகங்கள் 10 | முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

இந்தியா புத்தகம் 9 | முனைவர் வ.வே.சு

The Invasion That Never Was – Michel Danino

‘டேய்! பார்த்தியா?’

எங்கள் வகுப்பறைக்குள் முகுந்தனைச் சுற்றி ஒரே தலைகள். நான் எட்டிப் பார்த்தேன். அவன் கையில் கொஞ்சம் வளைந்து நீளமாக இருக்கும் இரும்புத் துண்டு. Continue reading இந்தியா புத்தகம் 9 | முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு

Radhakrishnan Reader – an Anthology, Bharathiya Vidhya Bhavan.

‘சார்! உங்களையெல்லாம் நாங்கள் ஆசிரியர் தினம் அன்று நிச்சயமாய் நினைத்துக் கொள்வோம்.’

கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவுபசார விழாவில் எங்கள் வகுப்பு லீடர் கேசவன் மேற்கண்டவாறு எல்லோர் சார்பிலும் உறுதியளித்தான். கரவொலி எழுந்து அடங்கியது. கல்லூரி முதல்வர் புன்னகைத்ததைப் பார்த்த பிறகு, பிற ஆசிரியர்களும் இலேசாகச் சிரிப்பைக் காட்டினர். Continue reading இந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

இந்தியா புத்தகம் 7 | முனைவர் வ.வே.சு.

Rambles in Vedanta – B.R.Rajam Iyer (Collection of his contributions to The Prabuddha Bharata, 1896-1898)

அது ஆறாம் வகுப்பு. முதல் நாள். நாங்கள் படிக்கும் காலத்தில் அஞ்சாவது வரை ஒண்ணாங் கிளாஸ் ரெண்டாங் கிளாஸ் என்று சொல்வார்கள்; ஆறாவது என்பது ஃபர்ஸ்ட் ஃபார்ம். எலிமெண்டரி ஸ்கூலில் இருந்து பெரிய ஸ்கூலுக்கு வந்த வேளை. எல்லாம் புதுசு. புது நண்பர்கள்; புது ஆசிரியர்கள். Continue reading இந்தியா புத்தகம் 7 | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.

The Razor’s Edge – Somerset Maugham

வகுப்பறைகளைப் போலவே சிலநேரங்களில் தெருவோரங்களும் நமக்குச் சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் என்பதை ஒப்புக்கொள்பவர்கள் உண்டு. ஒப்புக்கொள்ளாதவர்கள் இதைப் படித்துவிட்டு மாறக்கூடும். Continue reading இந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு

அன்று ஆங்கில வகுப்பு. இங்கிலீஷ் சார் வயதில் இளயவர். கிளாஸ் ‘போரடிக்காமல்’ இருக்க அவ்வப்போது சுவைபட ஏதாவது பேசுவார்; கேள்விகள் கேட்பார். ‘வாழ்க்கையில் என்ன சாதனை செய்யப்போகிறீர்கள்’ என்ற பொதுவான கேள்விக்கு மாணவர்கள் பதில் கூற வேண்டும்.

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் (பகுதி 4) | முனைவர் வ.வே.சு

‘ஏன் சார் நீங்க செருப்பு போடறதில்ல?’

1967ல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் புகுமுக வகுப்பில் பயிலும் ஒரு சிறு மாணவர் கூட்டம், அங்கே தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சி.ஜகன்னாதாச்சாரியாரிடம் இக்கேள்வியைக் கேட்டது. ஜகன்னாதாச்சாரியார் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் துறைபோகியவர். ஆன்மிகத்திலும், ஆண்டாள் பாசுரங்களிலும் ஆய்வுகள் செய்தவர். இலக்கணப் புலி. பொய்யே சொல்லத்தெரியாத புனிதர். தேசபக்தர். Continue reading இந்தியா புத்தகங்கள் (பகுதி 4) | முனைவர் வ.வே.சு