Posted on Leave a comment

வாழ்க்கைச் சக்கரம் (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்

“என்ன ராமா, என்ன யோசனை?” பெருமூச்சு விட்டார் ராமன்.

எதிரே சுவரில் மெரூன் கலர் சட்டத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் சுந்தரேச கனபாடிகள் – ராமனின் அப்பா – எப்போதும் ராமனுக்கு வழிகாட்டி அவர்தான், படத்திலிருந்தாலும்!

வட்டமான முகம் – கால் இன்ச்சுக்கு முகம் முழுக்க முள்தாடி; தலையிலும் அதே அளவுக்கு நரை முடி – குடுமி என்று பிரத்தியேகமாய் ஏதும் கிடையாது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ‘சர்வாங்க சவரம்’ உண்டு. அப்போது மட்டும் சின்னதாய் உச்சந்தலையில் ஒரு குடுமி சில நாட்களுக்கு இருக்கும்! மழிக்கப்பட்ட முகத்தில் கோபக்களை கொஞ்சம் தூக்கலாய்த் தெரியும். இந்தப் படம் அவரது சதாபிஷேகத்தின் போது ஆறுமுகம் ஸ்டூடியோவில் எடுத்தது. பொக்கை வாய்ச் சிரிப்புடன், நெற்றியில் விபூதியும், கண்களில் சிரிப்பின் சுருக்கங்களும், தோளில் போர்த்திய ஆறு முழ வேஷ்டியும் – கிட்டத்தட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரை ஒத்து இருந்தன!

ராமன் அந்தக் கால எம்ஏ. யூனிவர்சிடி ப்ரொஃப்சராக சமீபத்தில்தான் ப்ரமோட் ஆனவர். எப்போதும் அப்பாவின் நினைவுகள்தான் அவருக்கு. முடிவு எடுக்கத் தடுமாறிய போதெல்லாம், அப்பாவின் போட்டோவே அவருக்குத் துணை!

Continue reading வாழ்க்கைச் சக்கரம் (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்

Posted on Leave a comment

வலையில் சிக்காத தீவிரவாத யானை | ராம் ஸ்ரீதர்

பனிக் குல்லா போட்டுக் கொண்ட மலைச்சிகரங்கள், மரகதப் பச்சையில் கம்பளம் விரித்த பள்ளத்தாக்குகள், ஆப்பிள் தோட்டங்கள், குங்குமப்பூ நிறைந்த நிலங்கள்…. இந்த அழகான, கவித்துவமான சூழ்நிலையைப் பார்க்கும்போது காஷ்மீர்ப் பள்ளத்தாக்கை யாரும் தீவிரவாதிகள் நிறைந்த இடம் என்று சொல்ல மாட்டார்கள்.

ஆனால், பல ஆண்டுகளாக இந்த இடம் அமைதியின்றித் தத்தளித்துக் கொண்டுள்ளது. நமக்குச் சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகள் மேலாகியும், இந்தப் பூவுலகச் சொர்க்கத்தின் மீது பாகிஸ்தான் கொண்ட வெறி கொஞ்சமும் குறையவில்லை. ஆம், அதை வெறி என்றுதான் சொல்லவேண்டும். ஆசை, காதல் போன்றவை மென்மையான வார்த்தைகள். அவை பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் மீது இருக்கும் அதீத வெறியை வர்ணிக்கப் போதாது.

31 அக்டோபர் 2019 முதல் இத்தனை வருடங்களாக ஜம்மு/காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த தன்னாட்சியைத் திரும்பப்பெற்று, லடாக் பகுதி மற்றும் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தது இந்திய அரசு.

பெரும்பான்மை ஹிந்துக்கள் இருக்கும் ஜம்முவில் இதற்குப் பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லாத நிலையில், பெரும்பான்மையாக முஸ்லிம்களும், முஸ்லிம் தீவிரவாதிகளும் நிறைந்த காஷ்மீரில் எதிர்பார்த்தது போலவே தீவிர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Continue reading வலையில் சிக்காத தீவிரவாத யானை | ராம் ஸ்ரீதர்

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.

Annie Besant – An Autobiography. (அன்னி பெஸெண்ட் – ஒரு சுயசரிதை)

இங்கிலாந்து சர்ச் ஒன்றின் பாதிரியான டாக்டர் ப்யூசேவிடம், 20 வயதான அப்பெண் கூறுகிறாள்:

“ஃபாதர் எனக்கு ஜீஸஸ் மீதோ அவர் கூறியுள்ள வார்த்தைகள் மீதோ நம்பிக்கை இல்லை. என் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நீங்கள் விளக்க வேண்டும்.”

“பெண்ணே! நீயே ஒரு தேவாலய ஊழியரான பாதிரியின் மனைவி. நீ இப்படிச் சொல்வது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் உள்ளது. நீ செய்வது இறை நிந்தனை.”

“கிறித்துவ மதத்தில் எனக்குள்ள சந்தேகங்களைத்தானே கேட்கிறேன்!”

Continue reading இந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

ஒற்றைக் குழந்தை நாடு (One Child Nation) | அருண் பிரபு

வாங் கிராமம், ஜியாங்சி மாகாணம் சீனாவில் பிறந்தவர் நான்ஃபு வாங். இவர் 1985ல் சீனாவின் ஒரு பிள்ளைக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். இவர் பெற்றோர் பையன் பிறப்பான் என்ற எதிர்பார்ப்பில் ஆண் தூண் என்று பொருள்பட நான்ஃபு என்று இவருக்குப் பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். ஆனால் பெண் குழந்தை பிறக்கிறது. அப்படியும் அதே பெயரை வைத்தனர். இவருக்குப் பிறகு ஒரு தம்பி உண்டு. ஒரு பிள்ளைக்கும் இன்னொரு பிள்ளைக்கும் இடையே 5 ஆண்டுகள் இடைவெளி இருந்தால் இரண்டாவது பிள்ளைக்கு அனுமதி உண்டு என்ற சட்டத்தின் படி இவர் பெற்றோர் இரண்டாவது பிள்ளை பெற்றுக் கொண்டாலும், ஊரில், பொது இடங்களில் அவர்கள் ஏதோ தவறு செய்தவர்கள் போலவே பார்க்கப்பட்டனர். பள்ளிக்கூடத்தில் நான்ஃபுவை தோழிகள் தம்பி இருப்பது பற்றிக் கேலி செய்தனர். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாதவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. நான்ஃபுவின் தம்பி பிறக்கவுள்ள சமயம் அவரது பாட்டி ‘இது பெண்ணாக இருந்தால் ஒரு கூடையில் வைத்து தெருவில் வைப்போம்’ என்றாராம். அப்போது குழந்தையின் பாலினத்தை அறியும் சோதனை அங்கே வரவில்லை. பையன் என்றதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.

Continue reading ஒற்றைக் குழந்தை நாடு (One Child Nation) | அருண் பிரபு

Posted on Leave a comment

கேரளத்தின் சங்கர மடங்கள் | V.அரவிந்த் ஸுப்ரமண்யம்

ஆதி சங்கர பகவத்பாதர், நம் ஸனாதன தர்மத்தைக் காக்க வேண்டி பாரத பூமி முழுவதும் பயணம் செய்து நமது தர்மத்திற்குப் புத்துயிரூட்டினார். நம் பாரதத்தின் ஆச்சார்ய புருஷர்களில் மிக முக்கியமான ஒருவராகவே சங்கரர் விளங்குகிறார்.

அதன் அங்கமாக, இந்தியாவின் பல இடங்களில் அவருடைய சம்பந்தம் சொல்லப்படுகிறது. அவர் இந்த இடத்துக்கு விஜயம் செய்திருக்கிறார், இந்தக் கோவிலில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்திருக்கிறார், இந்த இடத்தில் அவர் தவம் செய்து இருக்கிறார் என்று பல தலங்களைச் சொல்லுவது வழக்கம். அதே போல அவருடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் இந்த இடத்தில்தான் நடந்தது என்று ஒரே சம்பவத்தை இரண்டு மூன்று இடங்களில் சொல்வதும் வழக்கம் உண்டு. அந்த அளவுக்கு சங்கரரின் தாக்கம் பாரதக் கலாசாரத்தில் உண்டு.

அதேபோல சங்கர மடங்கள் என்று ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட மடங்களைப் பற்றியும், ஆதிசங்கரர் சமாதியான இடம் குறித்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் உண்டு.

Continue reading கேரளத்தின் சங்கர மடங்கள் | V.அரவிந்த் ஸுப்ரமண்யம்

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 5) | ஹரி கிருஷ்ணன்

5 பாண்டவ கௌரவன்

தலைப்பு நகை முரணைப் போலத் தோன்றலாம். ஆனால் அது அவ்வாறில்லை என்பதை பின்னால் பார்க்கலாம். இப்போது நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஆறு கேள்விகளுக்கு முதலில் விடையளித்த பிறகு மற்ற கேள்விகளை எழுப்பத் தொடங்குவோம். நாம் எழுப்பிய முதல் கேள்வி இது: திருதராஷ்டிரன், பிறவியிலேயே கண் தெரியாதவனாக இருந்த காரணத்தால், பாண்டுவிடம் அரசு தரப்பட்டது என்றால், அரசு ஒப்படைக்கப்பட்டதா அல்லது, ஒரு மாற்று அரசனாகத் தாற்காலிகப் பொறுப்பில் பாண்டு அரசேற்றானா அல்லது, பாண்டுவின் நிலை வேறெதுவுமா?

மஹாபாரதத்தின் கதை அமைப்பின்படி, இந்தக் கேள்விக்கான விடை, பாண்டு அரசேற்ற அல்லது, திருதராஷ்டிரனிடம் அரசை ஒப்படைத்துச் சென்ற கட்டங்களில் இல்லை. பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, இரு தரப்பினரும் ஒருவருக்கு மற்றவர் தூது அனுப்பிக் கொண்டும், யுத்தத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டும் இருக்கின்ற சமயமான உத்யோக பர்வத்தில்தான் வருகிறது. கிருஷ்ணர் தூது வந்திருக்கிறார். ஒவ்வொருவரும் துரியோதனனுக்கு அவன் செய்யும் தவறை எடுத்துச் சொல்லி, இதோபதேசமாக, முழு நாட்டை இல்லாவிட்டாலும் பாதி அரசையாவது கொடுக்கும்படியாக அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவனோ எதற்கும் செவி சாய்க்காமல், தான் பிடித்த பிடியில் நின்று கொண்டிருக்கிறான்.

Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 5) | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

அந்தக் கால சமையல் புத்தகங்கள் | அரவிந்த் சுவாமிநாதன்

(மீனாட்சி அம்மாள்)

இந்த கோவிட்-19 வீட்டு முடக்க நாட்களில், குழந்தைகளுக்கும், மனைவிக்கும் சுவையாக ஏதாவது தின்பண்டங்கள் செய்து அசத்தலாமே என்று இணையத்தில் தேடினேன். அறிந்ததும் அறியாததுமாய்ப் பல்வேறு தின்பண்டங்கள் செய்யும் வழிமுறைகள் காணக் கிடைத்தன. கூடவே கிடைத்தது ‘மீனாட்சி அம்மாள்’ என்பவர் எழுதிய ‘சமைத்துப் பார்’ என்ற புத்தகம் பற்றிய செய்திகள். ‘மீனாட்சி அம்மாள்’ அந்தக் காலத்து மனுஷி ஆயிற்றே, அவர் எழுதிய புத்தகம் இன்னுமா கிடைக்கிறது என்று ஆச்சர்யத்துடன் தேடிப் பார்த்தால்.. ஆம். அவர் எழுதிய புத்தகமேதான். அவருடைய பேத்தி ப்ரியா ராம்குமார் வெளியிட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் வழக்கில் இருந்த சொற்களை மாற்றி, தற்காலத்து மக்களுக்கும் புரியும்படி நூலைக் கொண்டு வந்திருக்கிறார் ப்ரியா. அமேசானிலும் கிடைக்கிறது.

மீனாட்சி அம்மாளின் ‘சமைத்துப் பார்’ வெளிவந்தது 1951ம் ஆண்டு. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகம். இப்புத்தகம் இன்றைக்கும் விற்பனையில் இருக்கிறது என்பதும், ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது என்பதும் சமையற்கலைக்கு இருக்கும் முக்கியத்துவத்தையும், வரவேற்பையும் காட்டுகிறது. அதனால்தான் இன்றைக்கும் செட்டிநாட்டுச் சமையல், கொங்கு நாட்டுச் சமையல், சிறு தானியச் சமையல், அசைவச் சமையல், சைவச் சமையல், கிராமத்துச் சமையல், மண்பானைச் சமையல், மூலிகைச் சமையல் என்றெல்லாம் புதிது புதிதாகப் புத்தகங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வந்து கொண்டிருக்கின்றன.

The Best Of Samaithu Paar’ என்ற தலைப்பில், பெங்குவின் வெளியீடாக மீனாட்சி அம்மாளின் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது. அதனை வாசித்துக் கொண்டிருக்கையில் தமிழில் சமையற்கலை பற்றி வெளியான முதல் புத்தகம் எதுவாக இருக்கும் என்ற சிந்தனை தோன்றியது.

Continue reading அந்தக் கால சமையல் புத்தகங்கள் | அரவிந்த் சுவாமிநாதன்

Posted on Leave a comment

சாளக்கிராமம் அடை நெஞ்சே! | சுஜாதா தேசிகன்

எல்லா திவ்ய தேசத்துக்கும் ஸ்தல புராணம் என்று ஒரு கதை இருக்கும். ‘சாளக்கிராமம்’ என்ற ‘முக்திநாத்’ திவ்ய தேசத்துக்கு நீங்கள் போய்விட்டு வந்து சொல்லும் கதையே ஒரு புராணம். முக்திநாத் சென்று வந்த என்னுடைய அக்கதையே இக்கட்டுரை.

108 திவ்ய தேசங்கள் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் பெருமாள் உகந்து வாசம் செய்யும் ஸ்தலங்களில் 106 மட்டுமே நாம் இந்தப் பிறவியில் சேவிக்க முடியும். ‘போதுமடா சாமி!’ என்று இந்தப் பூவுலகத்தை விட்டுக் கிளம்பிய பின் மற்ற இரண்டு திவ்ய தேசங்களைக் காண முடியும். அவை திருப்பாற்கடல் மற்றும் ஸ்ரீவைகுண்டம்.

Continue reading சாளக்கிராமம் அடை நெஞ்சே! | சுஜாதா தேசிகன்

Posted on Leave a comment

சினிமாச் சோழர்கள் | கோ.எ.பச்சையப்பன்

அரசியலில் நடிகர்களும், நடிகர்களின் அரசியலும்

“தகர்த்திடுக மாற்றரசர்கோட்டை வீரத்
தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க
குகைப்புலிகள் சினந்தெழுந்து வகுத்த யூகம்
குலத்தமிழர் அணியென்றே ஊது சங்கு”

மிகக்கனன்று சோழர்குலத் திலகம் பேசி
முடித்த உடன் அரண்மனைக்குள் இருட்டு சூழச்
சிகரெட்டைப் பற்றவைத்தார் பாக்காச் சோழர்
சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?

-ஞானக்கூத்தன்!

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு அது. திரையுலகப் பாரம்பரியத்தின்படி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். படத்தின் நாயகன் கமல்ஹாஸனை வாழ்த்தியும், அவர் ‘வேண்டாவெறுப்பாக’ தாங்கி வரும் உலக நாயகன், காதல் மன்னன் (இந்த பட்டம் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒவ்வொரு நாயகனுக்கு இடம்பெயரும்! ஏறக்குறைய சூழற்கோப்பை போன்றது) போன்ற பட்டங்களை விளித்து ரசிகர்கள் கோஷம் எழுப்பியவாறு இருக்க, முதல்வர் முகம் சுளித்தார். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை வேறு எவரையும் விட நன்கறிந்தவர் கமல்! ஒலிபெருக்கிக்கு அருகே வந்து கொன்ன வார்த்தை – பீருட்டஸைப் பார்த்து ஜீலியஸ் சீஸர் சொன்ன ‘யூ டூ ப்ரூட்டஸிற்கு’ நிகரானது – “என் ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்லர்!” Continue reading சினிமாச் சோழர்கள் | கோ.எ.பச்சையப்பன்

Posted on Leave a comment

கோவிட் 19 – உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைக்க தவறியதா? | பா.சந்திரசேகரன்

கடந்த ஐந்து மாதங்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ், யானையின் காதில் சித்தெறும்பு புகுந்தால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி இருக்கிறது. இந்த நிலையில்தான் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் இருக்கிறார்கள். எத்தனை கொடிய ஒரு நோயைக் காட்டிலும் இந்த கொரோனா வைரஸைக் கண்டு அச்சப்படுகிறோம். ஏனென்றால், இந்த வைரஸ் மனிதர்களிடையே ஒரு நொடியிலே பரவும் தன்மை உள்ளதால்தான்.

Continue reading கோவிட் 19 – உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைக்க தவறியதா? | பா.சந்திரசேகரன்