Posted on Leave a comment

பிரதமர் நரேந்திர மோதியின் ஏ.என்.ஐ நேர்காணல் | தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு மோதி அளித்த
நேர்காணலின் தமிழ் வடிவம் இது. நேர்காணல் செய்தவர் ஏ.என்.ஐ ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ்.
தமிழில் மொழிபெயர்த்தவர் கிருஷ்ணன் சுப்ரமணியன்.

பாஜகவைப்
பொருத்தவரை 2018 ஒரு நல்ல ஆண்டாக அமையவில்லை. 5 மாநிலத் தேர்தல்களில் கட்சி தோல்வியைச்
சந்தித்திருக்கிறது. 2019ல் நீங்கள் வெல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதா? உங்களுக்கு
எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
பிரதமர்: 2018ஐ ஒரு வெற்றிகரமான ஆண்டாகவே
நான் கருதுகிறேன். தேர்தல்கள் நாட்டின் பல முகங்களில் ஒன்று மட்டுமே. இந்த நாட்டில்
ஏழை எளியவர்கள் ஆயுஷ்மான் பாரத் யோஜ்னா திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் காப்பீடு பெறுகிறார்கள்.
திட்டம் அமல்படுத்தப்பட்ட 100 நாட்களில் 6-7 லட்சம் பேர் பயனடைந்திருக்கின்றனர். இப்படிப்
பெரும் எண்ணிக்கையில் நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இன்று சிகிச்சைக்கான
வசதிகள் கிடைத்துள்ளன. இதை எப்படி நான் தோல்வி என்று கூறமுடியும். என்னுடைய ஆகப்பெரிய
சாதனையாக இதை நான் கருதுகிறேன். இன்று உலகம் வானிலை மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறது,
இந்தியா மாசுகளை உருவாக்கும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில்,
2018ல் ஐநா சபை சுற்றுச்சூழலைக் காப்பவருக்கு அளிக்கப்படும் ‘சாம்பியன் ஆஃப் எர்த்’
விருதை அதன் தலைவருக்கு வழங்கியுள்ளது. இது பெருமைக்குரிய விஷயமாகும். 18,000 கிராமங்கள்
மின்வசதி இல்லாமல் இருந்தன. இந்த ஆண்டு எல்லா
க் கிராமங்களுக்கும்
மின்வசதி கிடைத்திருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளைப் பொருத்தவரை, நமது வீரர்கள் அருமையான
சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். பல பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இரண்டாம், மூன்றாம்
கட்ட நகரங்கள், கிராமங்கள் ஆகிய இடங்களிலிருந்தும் பொருளாதார நிலையில் பின் தங்கி இருப்பவர்களாகவும்
உள்ளோர் நாட்டின் கொடியைப் பறக்க விட்டிருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகளான விளையாட்டு
வீரர்களும் சிறந்த முறையில் செயல்பட்டிருக்கிறார்கள். 104 செயற்கைக் கோள்கள் விண்ணில்
செலுத்தப்பட்டுள்ளன. அது ஒரு பெரும் சாதனை. 2018ல் விளைச்சலும் அமோகமாக உள்ளது. எந்த
ஒரு துறையையும் உதாரணமாக எடுத்துக்கொண்டால், இந்தியா முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.
2018 இந்தியாவிற்கு ஓர்
ஒளிமயமான
ஆண்டாக இருந்தது.
நான்
தேர்தல் தோல்விகளைப் பற்றிப் பேசுகிறேன். பாஜக 5 மாநிலங்களில் தோல்வியுற்றிருக்கிறது.
ஆட்சி செய்துகொண்டிருக்கும் கட்சியின் பிரதமர் நீங்கள். இதைத் தோல்வியாகக் கருதவில்லையா?
தெலுங்கானவிலும் மிசோரத்திலும், பாஜகவிற்கு
வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவோ ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவோ யாரும் கருதவில்லை.
சட்டிஸ்கரில் தெளிவான முடிவு கிடைத்துள்ளது. பாஜக தோல்வியடைந்திருக்கிறது. ஆனால், மற்ற
இரு மாநிலங்களில் தொங்கு சட்டசபையே அமைந்திருக்கிறது.
இரண்டாவதாக, 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்ததால்
ஏற்பட்ட சலிப்பை எங்களது தொண்டர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எங்கே தொய்வு ஏற்பட்டது
என்பதைப் பற்றி நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
இருந்தாலும், ஹரியானாவின் உள்ளாட்சித்
தேர்தல்களில் நாங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளோம். திரிபுராவில், 90-95% வெற்றி
கிடைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 74% ஓட்டுப் பதிவு நடந்துள்ளது, அங்கும் பல இடங்களில்
பாஜக வெற்றி பெற்றுள்ளது. வெற்றியும் தோல்வியும் மட்டுமே அளவுகோல்களாகக் கருதப்படுவதில்லை.
ஆனாலும் உங்களது ஓட்டு சதவிகிதம் இடங்களாக மாற்றமடையவில்லை. மோதி
அலை முடிவுக்கு வந்துவிட்டதா?
இந்த நேரத்தில் இப்படிச் சொல்லுவோருக்கு
நான் நன்றி தெரிவிக்க விழைகின்றேன். மோதி அலை / மோதி மாஜிக் என்று அவர்கள் சொல்லும்போது,
மோதி அலை என்று ஒன்று இருந்ததாக அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். 2013-14ல் வந்த ஊடகச்
செய்திகளை, தினசரி மற்றும் தொலைக்காட்சி விவாதங்களைப் படித்துப் பாருங்கள்.
ஒரு குறிப்பிட்ட சாரார், ‘மோதி அலை எதுவும்
இல்லை, மோதியால் எதுவும் செய்ய இயலாது’
என்று திரும்ப திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள்.
இன்று
இந்த எண்ணிக்கை சிறிது கூடியிருக்கலாம் அல்லது குறைந்திருக்கலாம். இந்த நபர்களுக்கு இந்தக் கதையை உருவாக்கவேண்டிய
பொறுப்பு உள்ளது. மோதி அலை அல்லது மோதி மாஜிக் என்று ஒன்று உள்ளது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்
என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியே.
என்னைப் பொருத்தவரை, அலை என்பது மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசையை உள்ளடக்கியது, நம்முடைய எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும்
யார் நிறைவேற்றப்போகிறார்கள் என்பதின் மீதான நம்பிக்கை சார்ந்தது. இளைஞர்களின் எதிர்பார்ப்புகள்
அதிகரித்துள்ளன. அதுவே ஒரு புதிய சக்தியாக ஒருவெடுத்துள்ளது
எதிர்க்கட்சிகள் மோதி மாஜிக் குறைந்துள்ள
காரணத்தால் பாஜக 180 இடங்களுக்கு மேல் பெறாது என்று நம்புகின்றன. அவர்களை ‘180 குழு’
என்று அழைக்கின்றனர். அவர்கள் மோதி அல்லாத ஒரு காரணியை சார்ந்துள்ளனர். இது நடக்குமா?
2019ல் பாஜக 180க்குக் கீழ் இடங்களைப் பெறும் என்று நினைக்கிறீர்களா?
இது போன்ற கணக்குகளைப் பரப்பாவிடில் அவர்களது கூட்டணியில் எப்படி ஆட்கள் சேர்வார்கள்?
மக்களை ஈர்க்க இதுபோன்று அவர்கள் பேச வேண்டியிருக்கிறது.
அவர்களைக் காப்பற்றிக் கொள்ள இது போன்ற சித்திரத்தை அளிக்கவேண்டியிருக்கிறது. அறிவியல் ரீதியாக
இதைப் பற்றி ஏதாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? 2013-14ல், இதே ஆட்கள்தான்
200
இடங்களுக்குக் கீழே என்ற குழுவில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்
. அதே கதை இப்போதும் தொடர்கிறது.
பாஜகவைப் பொருத்தவரை, சாதாரண வாக்காளரின் அறிவைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதில்
தீர்மானமாக இருக்கிறோம். அரசியல் நிபுணர்கள் எல்லோரிடமும் நான் சொல்வது, சாதாரண மனிதரின்
அறிவின் மீது நம்பிக்கை வையுங்கள் என்பதைத்தான்.
இந்த அரசிடமிருந்து 2019ல் விலகிச்செல்லும்படி சாதாரண மக்களுக்கு அப்படி
என்ன அனுபவம் நேர்ந்துவிட்டது? 5 ஆண்டுகளுக்கு முந்தைய தினசரிகளைப் படித்துப் பாருங்கள்.
அப்போதுள்ள தலைப்புச் செய்திகளைக் கவனியுங்கள். இப்போதுள்ள தலைப்புச் செய்திகளையும்
கவனியுங்கள். சாதாரண மனிதருக்கு எல்லாமே தெரியும். எனக்கு சாதாரண மனிதர்களிடமும் இந்த
நாட்டின் இளைஞர்களிடமும் நம்பிக்கை உள்ளது.
நீங்கள் காங்கிரஸ் அல்லாத பாரதத்தைப் பற்றி 2013லிருந்து கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் சாதாரண மனிதர் உங்களுக்கு மாற்றாகக் காங்கிரஸை இன்னும் கருதிக்கொண்டிருக்கிறார்
என்பதால்தான் உங்களுடைய
அடித்தளமான ஹிந்தி பேசும் பகுதிகளில் காங்கிரஸ் அரசுகள் அமைந்துள்ளன. உங்களுடைய இலக்கான
காங்கிரஸ் அல்லாத பாரதம் இன்னும் உருவாகவில்லை.
காங்கிரஸ் என்பது
ஒரு எண்ணம், ஒரு கலாசாரம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே கூடச் சொல்கிறார்கள்.
நீண்ட காலமாக அந்தக் கலாச்சாரம் நாட்டின் மையமாக இருந்துவருகிறது. அந்தக் கலாசாரம்
என்ன? சாதீயம், வாரிசு அரசியல், ஜனநாயக விரோதம், வேண்டியவர்களுக்குச் சலுகைகள் அளிப்பது.
நான் காங்கிரஸ்
அல்லாத என்று குறிப்பிடும்போது, இந்த நாடு மேற்குறிப்பிட்ட கலாசாரத்திலிருந்து அந்த
எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட விரும்புகிறேன். இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸே இந்தக்
கலாசாரத்திலிருந்து விடுபட நான் விரும்புகிறேன்.
நிறுவனங்கள் நிலைக்கின்றனவோ
இல்லையோ, ஒரு ஜனநாயகத்தில் வலுவான ஒரு எதிர்க்கட்சி தேவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் காங்கிரஸ் அதிலும் தோல்வியடைந்துவிட்டது.
2017 வரை மோதி-அமித் ஷா கூட்டணியை யாரும் தோற்கடிக்க முடியாது
என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது (தோல்விகளுக்கு) இந்தத் தலைமை பொறுப்பேற்கவேண்டியது
போல் தெரிகிறது. நீங்கள் தேர்தல்களில் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய கொள்கை
வெற்றிகரமானதாக இருந்தால், நீங்கள் ஏன் தேர்தல்களில் தோல்வியடைய நேரிடுகிறது
? இந்தத் தோல்விகளுக்கு
தலைமை பொறுப்பேற்க வேண்டியதில்லையா?
மோதி மற்றும் அமித்
ஷாவால் பாஜக இயங்குகிறது என்பது என்று கூறுபவர்கள் பாஜகவைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள்.
உலகின் ஆகப்பெரிய கட்சி பாஜக. வாக்குச் சாவடி தொடங்கி நாங்கள் வலிமையாக இருப்பதால்
பாஜக இயங்குகிறது. ‘என்னுடைய வாக்குச் சாவடி எல்லாவற்றிலும் பெரிது’ என்பது எங்கள்
தாரக மந்திரம். எங்களுடைய தொண்டர்கள் 365 நாட்களும் இந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறார்கள்.
பாஜகவை ஓரிருவர் இயக்குகிறார்கள் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள், இந்த இயக்கத்தைப் பற்றி
அறியாதவர்கள். ஒவ்வொரு தளத்திலும் தொண்டர்களுடைய தலைமைத்துவம் உள்ளது
. அது ஒரு கூட்டு முயற்சியாக உருவெடுக்கிறது. பாஜக எல்லோருடனும்,
எல்லோருடைய வளர்ச்சிக்காகவும் என்ற முன்னெடுப்புடன் மக்களை வென்றெடுக்கிறது.
மீண்டும் மீண்டும்
பாஜக தோற்கிறது என்று சொல்வதால், நாங்கள் உண்மையில் தோற்கிறோம் என்று அர்த்தமில்லை.
அஸ்ஸாம், ஹரியானா, திரிபுரா ஆகிய இடங்களில் பாஜக வென்றிருக்கிறது.
எனில், மன ஊக்கம் குறையவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
மன ஊக்கம் குறைவதைப்
பற்றிய பேச்சே இல்லை. பாஜக வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. மன ஊக்கம் குறைவதற்கான
காரணமே இல்லை. நாங்கள் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறோம். 2019ல் ஒரு கட்சி நாட்டின்
நம்பிக்கையைப் பெற்று மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது என்றால் அது பாஜகவாகவே
இருக்கமுடியும்.
இந்தத் தோல்விக்கான சில காரணங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியைச்
சரியான முறையில் அமல்படுத்தாதது போன்றவை. யோசித்துப் பார்த்தால், பணமதிப்பிழப்பிற்கான
தேவை இருந்ததா? அதனால் எந்த நோக்கம் நிறைவேறியது?
கருப்புப் பணத்தைப்
பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்துகொண்டிருந்தன. இணைப் பொருளாதாரம் ஒன்று செயல்படுகிறது
என்பதைப் பற்றிய சந்தேகமே இல்லை. படுக்கைகளுக்கு அடியில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன
. பணம் அடைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த இணைப் பொருளாதாரம் நாட்டைப் பாழ்படுத்திக்கொண்டிருந்தது. பணமதிப்பிழப்பு ஒரு பெரும்
பணியைச் செய்திருக்கிறது. வரும் நாட்களில் அது நாட்டை வலுவான பொருளாதாரப் பாதையில்
இட்டுச் செல்லும். சாக்குகளில் அடைபட்டிருந்த பணம் தற்போது வங்கிக் கட்டமைப்பில் நுழைந்துள்ளது.
நேர்மை நிறைந்த
சூழல் ஒன்று உருவாகியுள்ளது. வரிவிதிப்பின் அடித்தளம் முன்பைவிட விரிவடைந்துள்ளது.
இதை நீங்கள் வெற்றி என்று கருதமாட்டீர்களா? ஜிடிபியை ஒப்பு நோக்கும்போது பணச்சுழற்சி
குறைந்துள்ளது. இது ஒரு நல்ல அளவீடு ஆகும். அது முன்பு இருந்
து போலத் தொடர்ந்திருந்தால்,
நாட்டை வழி நடத்திச் செல்வது கடினமான விஷயமாக இருந்திருக்கும்.
இந்த ‘அதிர்ச்சிக்கு’ என்ன தேவை இருந்தது?
அது ஓர் ‘அதிர்ச்சி’
என்று கருத முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பே நாங்கள் மக்களை, உங்களிடம் கருப்புப்
பணம் இருந்தால் அதை வங்கியில் செலுத்திவிடுங்கள், அதற்கான அபராதத்தையும் செலுத்திவிடுங்கள்,
உங்களுக்கு உதவி வழங்கப்படும் என்று எச்சரித்திருந்தோம். ஆனால், அவர்கள் மோதி மற்ற
அரசுகளைப் போலத்தான் செயல்படுவார் என்று நினைத்தனர். மிகச் சிலரே தன்னிச்சையாக முன்வந்தனர்.
ஊடகங்கள் மூலமாகவும்,
நாடாளுமன்றத்திலும் நான் மக்களை இந்தத் திட்டத்தினால் பயன்பெறுமாறு வலியுறுத்தினேன்.
இல்லாவிடில், நாங்கள் (அரசு) நிலைமையை மாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுப்போம் என்றும்
கூறியிருந்தேன். இது ஒரே இரவில் ஏற்பட்டதன்று. இதை நடைமுறைப்படுத்த ஒரு வருட காலம்
பிடித்தது.
அதன் பின்னரே இந்த முடிவை நாங்கள் எடுக்கவேண்டியிருந்தது. நாட்டின்
பொருளாதார ஆரோக்கியத்திற்கு அது தேவையாக இருந்தது.
நடைமுறையில் ஏதாவது
மாற்றம் வந்தால், உதாரணத்திற்கு ரயில்வேயை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு போகி தண்டவாளங்களை
மாற்றும்போது அதன் வேகம் மாறுகிறது. இதை மறுக்க இயலாது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது,
ஜிடிபி எவ்வளவு குறைந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? 2%க்கும் குறைவாக அது வீழ்ச்சியடைந்தது.
மாற்றம் வரும்போது இது போன்று நிகழும்
. பின்னர் அது ஸ்திரப்படும். இப்போது நமது வளர்ச்சி விகிதம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கவேண்டிய பணி ஒன்று இருந்தது, நாங்கள் அதைச் செய்தோம். நாடு முன்னோக்கிச்
செல்லவேண்டிய கொள்கை ஒன்று இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரக் குற்றங்கள் புரிந்தவர்கள் திரும்ப அழைக்கப்படுவார்களா?
அவர்கள் நாட்டை விட்டு வெளியில் தப்பியோடிவிட்டனர். நீரவ் மோதி, சோக்ஸி, மல்யா ஆகியோர்
அயல்நாட்டு வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டுள்ளனர். இணைப் பொருளாதாரத்தை ஒழிக்கவும் பொருளாதாரக்
குற்றவாளிகளை
த் திரும்பக் கொண்டுவரவுமான நோக்கம் நிறைவேறவில்லை.
அவர்கள் ஏன் தப்பியோடவேண்டும்.
முன்பு போல அரசுகள் இருந்திருந்தால், அதே நட்பு தொடர்ந்திருக்கும். கொள்ளையடிக்கவேண்டுமா,
அடித்துக்கொள்ளுங்கள்; நேர்மையின்றி
ப் பணம் சம்பாதிக்கவேண்டுமா, சம்பாதித்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குத் தப்பியோடவேண்டிய
தேவை இருந்திருக்காது. இப்போது அவர்கள் சட்டத்தின் வழி நடக்கவேண்டியிருப்பதால் தப்பியோடுகிறார்கள்.
ஒரு பைசா கூட மீதம் வைக்காமல் அவர்கள் செலுத்தவேண்டியிருக்கிறது.
தப்பியோடியவர்களைத் திரும்பக் கொண்டுவர பன்னாட்டுச் சட்டங்கள் உள்ளன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தலைமறைவாயுள்ள அவர்களைப் போன்றவர்களுக்காக நாங்கள் கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம்.
அவர்களின் சொத்துப் பறிமுதல் அன்னிய நாடுகளில் கூட நடைபெறுகிறது. அரசிடம் உள்ள அத்தனை
கருவிகளையும் இதற்காக நாங்கள் பயன்படுத்துகிறோம்.
முன்பு நாட்டை விட்டு
வெளியேறிச் சென்றவர்கள் திரும்பி வரமாட்டார்கள், ஆனால் இந்த அரசின் காலத்தில் நாட்டை
விட்டுத் தப்பியோடியவர்கள் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை
உள்ளது. அது இன்றோ நாளையோ கூட நிகழலாம். தூதரக வழிகள், சட்ட ரீதியான முயற்சிகள், சட்டத்தின்
மூலமாக சொத்துக்களைப் பறிமுதல் செய்வது ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின்
பணத்தைக் கொள்ளையடித்தவர்கள், ஒவ்வொரு காசையும் திரும்பச் செலுத்தவேண்டியிருக்கும்.
முதன்முதலாக, நான்
பங்குபெற்ற முதல் ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டில் கருப்புப் பணத்தைப் பற்றியும் பணப்பாதுகாப்புப்
புகலிடங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பினேன். அது ஒரு முக்கியப் பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டது.
தவிர, தீவிரவாத்தின் ஒரு நிதி ஊற்றாகவும் அது கருதப்பட்டது. அது தொடர்பான வங்கிக் கணக்குகளைப்
பகிர்ந்து கொள்ள நாடுகளிடையே உடன்பாடு ஏற்பட்டது.
நாம் பல்வேறு நாடுகளோடு
உடன்படிக்கைகள் செய்துகொண்டுள்ளோம். 2019க்குப் பின் பல நாடுகளிடமிருந்து உடனடித் தகவல்கள்
நமக்குக் கிடைக்கும். இதன்மூலம் கருப்புப் பணம் திரும்பக் கொண்டுவரப்படும்.
2013லிருந்து உங்களுடைய உரைகளைக் கவனிக்கும் போது, அதாவது 2ஜி, 3ஜி,
சிடபிள்யூஜி, தமாத் (மாப்பிள்ளை) ஜி, நீங்கள் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் அவர்கள்
லோதி தோட்டத்தில் உலவிக்கொண்டேயிருக்கிறார்கள். யாரும் சிறையில் இல்லை
sஅவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள் அல்லவா. பெயிலில் வெளியே இருப்பவர்களால்
அதைச் செய்ய முடியும்.
ஆனால் நீங்கள் கவனிக்கவேண்டிய உண்மை, நாட்டின் முதல் குடும்பமாக அறியப்பட்ட, நாட்டை நான்கு தலைமுறைகளாக
ஆட்சி செய்தவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர். அதுவும் நிதிமுறைகேடுகள் சம்பந்தமான குற்றங்களுக்காக.
இது பெரிய விஷயம். அவர்களிடம் பணி செய்த ஒரு குழுவினர், இந்தத் தகவல்களை மறைத்து வேறு
பல கதைகளை உலவ விடுகின்றனர்.
இந்த நாட்டின் முன்னாள்
நிதி அமைச்சர் நீதிமன்றங்களுக்குச் சென்று வருகிறார். இது சாதாரண விஷயமல்ல. அரசியல்
எதிரியாக இருப்பதனாலேயே நீங்கள் பிரச்
சினைகளைச் சந்திக்கவேண்டும் என்று நினைப்பவன்
நான் அல்ல. நாங்கள் அதை (அரசியல் பழிவாங்குதலை) ஆதரிப்பவர்களல்ல. நீதிமன்றம் எந்தத்
தீர்ப்பு வழங்கினாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் ஆனால் அது தாமதமாகிவிடக்கூடாது.
நீங்கள் இந்த விஷயத்தில் தாமதம் செய்ய மாட்டீர்கள் என்ற எதிர்பார்ப்பினால்தான்
மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர். ஆனால் ஐந்து வருடங்கள் கழிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லையே
?
5 வருடங்களில் ஏராளமாக
நடந்திருக்கிறது என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதனால்தான் மோதியிடம் அவர்களுக்கு ஆதரவு
இருக்கிறது.
ஜிஎஸ்டி – ராகுல் காந்தி இதை கப்பர் சிங் டாக்ஸ் என்று அழைக்கிறார்,
இந்த வரியை அமலாக்குவதில் சிரமங்கள் இருந்ததால்தான் ஏதோ ஒரு வழியில் இதைச் செயல்படுத்திவிட்டீர்கள்
என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஒருவர் எப்படி நினைக்கிறாரோ
அப்படியேதான் அவரிடமிருந்து வார்த்தைகள் வெளிப்படும். நாட்டின் அரசியல் கட்சிகள் அனைவரிடமும்
கலந்து ஆலோசித்த பிறகுதானே ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டது? பிரணாப் முகர்ஜி நிதி
அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே ஜிஎஸ்டியின் செயலாக்கம் துவங்கிவிட்டது. நாடாளுமன்றத்தில்
ஒருமுகமாக அது நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முன் நாட்டிலிருந்த வரி விகிதம் என்ன?
30-40% வரை வரி விதிக்கப்பட்டது. இதைத் தவிர மறைமுக வரிகள். மீண்டும் விதிக்கப்பட்ட
வரிகள் எல்லாம் இருந்தன. ஜிஎஸ்டி இதை எளிமையாக்கிவிட்டது. அதிக வரி வசூலிக்கப்பட்ட
500 பொருட்களுக்கு தற்போது வரியே இல்லை. கடந்த சில தினங்களில், 1
,200-1,250 பொருட்களுக்கான
வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, சிலவற்றிற்கு 18% லிருந்து 12-5% ஆகவும் சிலவற்றிற்கு
0 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. எங்களுக்குக் கிடைக்கின்ற கருத்துகளின் அடிப்படையில்
நாங்கள் இதைச் செயல்படுத்திக்கொண்டிருக்கின்றோம். இது தொடர்பான உரையாடல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு ஆகியவை பங்கு பெறும் ஜிஎஸ்டி கவுன்சிலில்தான்
முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அங்கே அனைவரும் சமமாகக் கருதப்படுகின்றனர். புதுச்சேரியும்
கோவாவும் சமமானவை. காங்கிரஸ் அரசுகள் கூட. நாடாளுமன்றத்தில் அது ஒருமுகமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அவர்கள் தங்களுடைய அரசுகளையும் கட்சித் தலைவர்களையுமே வசை பாடுகிறார்களா என்ன?
அரசியல் ரீதியாக
சர்ச்சைகளை எழுப்புவதில் எந்தப் பயனும் இல்லை. ஜிஎஸ்டி என்பது புதியதொரு முறை.
தொழில்நுட்பத்தின்
துணையோடு நிகழ்கின்ற ஒரு பெரிய மாற்றம். சில சிறிய வர்த்தகர்கள் அதனால் பிரச்
சினைகளைச் சந்தித்துள்ளார்கள்,
அது எங்களுக்குப் புரிகிறது. அவர்களுடைய பிரச்
சினைகளைக் காதுகொடுத்துக்
கேட்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எங்களுடைய கவனத்திற்கு வரும் எதையும் நாங்கள்
ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்புகிறோம். அதை எப்படி எளிமைப்படுத்துவது என்று கூட்டாக
நாங்கள் முடிவுசெய்கிறோம்.
ரூ 20 லட்சம் வரம்பிற்குட்பட்ட
வர்த்தகர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வரி விதிப்பிற்கான வரம்பை ரூ 75 லட்சமாக
உயர்த்த நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் சந்திப்பின்போது, சில மாநிலங்கள்
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், இது கமிட்டியிடம் சென்றுவிட்டது. கமிட்டி இது தொடர்பான
முடிவு எடுக்கும்போது பலர் இதனால் பயன்பெறுவார்கள்.
அதைப் போலவே, கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்
வீடுகள் மற்றும் முடிவடைந்த வீடுகளின் ஜிஎஸ்டியை, உணவகங்களுக்கு நாங்கள் அளித்த சலுகை
போலவே 5 சதவிகிதத்திற்குக் கீழே கொண்டுவர முயன்றோம். ஆனால் ஜிஎஸ்டி கவுன்சிலால் இதை
நிறைவேற்ற முடியவில்லை. இதுவும் கமிட்டிக்குச் சென்றிருக்கிறது. கமிட்டியின் அறிக்கையை
விரைவில் கொண்டுவர நாங்கள் முயல்கிறோம்.
இப்படித் தொடர்ந்து,
ஜிஎஸ்டியை எளிமையாக்கவும் வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிக்கவும் நாங்கள் முயன்றுகொண்டிருக்கிறோம்.
இவ்வளவு குறைந்த நேரத்தில், இவ்வளவு பெரிய நாட்டில் இதைச் செய்வது சாதாரண விஷயமல்ல.
இவ்வளவு பெரிய நாட்டின் வேறுபாடுகளோடு நாங்கள் இதைச் செயல்படுத்துவதில் இன்னமும் மேம்பாட்டிற்கான
வழிவகைகள் உள்ளன. நாங்கள் அந்த மாற்றங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்.
உங்களுடைய தீவிர ஆதரவு வாக்கு வங்கியாக இருப்பது வர்த்தகர்கள்,
பணியாளர்கள், மத்தியதர வர்க்கம் ஆகியோர். புதுச்சேரியைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள்.
அங்கே உங்களது தொண்டர் திரு ஜெயின், மத்தியதர வர்க்கத்தைப் பற்றி, அவர்களுக்கு வரிச்
சலுகை எதுவும் கிடைக்காதது பற்றி உங்களிடம் கேள்வி எழுப்பினார். நடுத்தர வர்க்க மக்களுக்கு
நீங்கள் செய்ய நினைப்பது என்ன?
நடுத்தரவர்க்க மக்களைப்
பொருத்தவரை, நமது சிந்தனையை மாற்றிக்கொள்ளவேண்டும். நடுத்தரவர்க்கம் யாருடைய தயவிலும்
வாழ்வதில்லை. அவர்கள் கௌரவத்தோடு வாழ்கிறார்கள், நாட்டிற்கு அவர்களுடைய பங்கு அளப்பரியது.
அடித்தள மக்களுக்கு ஏதாவது கிடைக்கவேண்டுமென்றால், அந்த எண்ணமும் பெருந்தன்மையும் நடுத்தரவர்க்க
மக்களிடமும் உள்ளது. நடுத்தரவர்க்க மக்களைப் பற்றி சிந்திக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்கு
உள்ளது, அவர்கள் எங்களுக்கு மட்டும் வாக்கு அளிப்பதில்லை, நாட்டின் நலனுக்காகவும் அவர்கள்
வாக்களிக்கிறார்கள்.
ஒரு காலத்தில்
18% இருந்த பணவீக்கத்தை நாங்கள் 2-3% க்கு கொண்டுவந்துவிட்டோம். அதனால் பெரும் பலன்
அடைபவர்கள் நடுத்தரவர்க்கத்தினரே. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்போது அதன் சிறந்த
பலன்கள் மத்தியதரவர்க்கத்தினரையே சென்றடைகின்றன. ஏனெனில் அவர்கள் திருடுவதில்லை, தினசரி
செலவினங்களைக் குறைப்பதில்லை. எனவே விலை உயராத போது அவர்கள் பலனடைகிறார்கள். மருத்துவப்
படிப்பிற்கான இடங்களை அதிகரிக்கும்போது யார் பலனடைகிறார்கள்? நடுத்தரவர்க்கத்தினரின்
எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
உடான் யோஜ்னா திட்டத்தின் கீழ், ரூ 2
,500க்கு விமானங்களில் செல்லலாம். அதேபோன்று
ரயில்வேயிலும் உதாரணங்கள் உண்டு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழைகளுக்கு ரூ 5 லட்சம்
வரை காப்பீடு கிடைக்கும் என்றாலும் மறைமுகமாக மருத்துவமனைகள் மற்றும் மற்ற வேலைவாய்ப்புகள்
மூலம் நேரடியாகப் பலனடைபவர்கள் நடுத்தரவர்க்கத்தினரே. முத்ரா யோஜ்னா
வின் 15 கோடி கடன்வசதியின்
மூலம் அதிக பலனடைவது நடுத்தரவர்க்கமே. நடுத்தரவர்க்கத்தினர் வங்கிகளிடமிருந்து வீட்டுக்கடனைப்
பெறுவது முன்பு கடினமாக இருந்தது ஆனால் பணம்திப்பிழப்பிற்குப் பிறகு ரூ 20 லட்சம் வரை
அவர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது அதன்பின் 5 வருடங்களுக்கு 5-6 லட்சங்கள் வரை சேமிப்பின்
பயனை அடைவார்கள். ‘ஸ்டார்ட் அப்’ களை தொடங்குவதற்கான சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம்,
அது நடுத்தரவர்க்கத்தால்தான் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இது போன்ற பல உதாரணங்கள்
உள்ளன.
சிலர் மோதி விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறுகின்றனர்.
ராகுல் காந்தியின் கடன் தள்ளுபடி ‘லாலிபாப்’ என்று உங்களால் அழைக்கப்படுகிறது.
ஒரு விவசாயி கடனைச்
செலுத்தத் தவறும்போது, மற்றொரு பக்கம் பொருளாதாரக் குற்றவாளிகள் கவலையில்லாமல் வாழும்போது,
விவசாயிகள் ராகுல் காந்தி அவர்கள் பக்கம் இருக்கிறார் என்று நினைப்பார்கள். உங்களுடைய
கருத்து என்ன?
ஒரு தவறான. திசை
திருப்பக்கூடிய பொய்யைக் கூறும்போது அதை நான் லாலிபாப் என்று அழைத்தேன். அதாவது நாங்கள்
அத்தனை விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்துவிட்டோம் என்று கூறுவது. அப்படி எதுவும்
நடக்கவில்லை என்பதே உண்மை. அவர்களுடைய சுற்றறிக்கைகளைப் பாருங்கள். அவர்கள் தவறான செய்திகளை
அளிக்கக்கூடாது. வங்கிகளைக் கொள்ளையடித்தவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற தேவையான
சட்டங்களை இந்த அரசு இயற்றியுள்ளது. ரூ 3 லட்சம் கோடி திரும்ப வந்துள்ளது.
அவர்கள் இந்த இரண்டு
விஷயங்களையும் ஒப்பிடக்கூடாது. மக்களைத் திசை திருப்பி, பொய்களைக் கூறக்கூடாது. குறிப்பாக
ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி இதைச் செய்யவே கூடாது.
கடன் தள்ளுபடி உதவும்
என்றால், அது கட்டாயம் செயல்படுத்தப்படும். ஆனால், அது முந்தைய அரசுகளால் செய்யப்பட்டதா?
தேவிலால் காலத்திலிருந்து கடன் தள்ளுபடி செய்யப்பட்டது 2009 தேர்தலில் அது வெற்றியைக்
கொடுத்தது.
ஆனால் நம்முடைய
முறையின் தவறு என்ன. விவசாயிகள் கடன்களால் கஷ்டப்படுகிறார்கள். அரசு
, தேர்தல்கள் – கடன் தள்ளுபடி என்ற சுழற்சியை மீண்டும் மீண்டும் அவர்களின் மேல்
சுமத்துகிறது.
எனவே இதற்கான தீர்வு
விவசாயிகளுக்குத் தகுந்த அதிகாரத்தை அளிப்பதில் உள்ளது. விதைகளிலிருந்து சந்தைப்படுத்துதல்
வரை, விவசாயிகளுக்கு அத்தனை வசதிகளையும் அளிக்கவேண்டும். விவசாயிகளுக்கான குளிரூட்டப்பட்ட
சேமிப்பகங்களுக்கான 100 திட்டங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். ஏன் விவசாயிகளுக்கு கடன்
பிரச்
சினை ஏற்படுகிறது. அவர்களுக்குக் கடன் தேவைப்படாத சூழ்நிலையை உருவாக்கவேண்டும்.
சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை 2007ல் செயல்படுத்தப்பட்டிருந்தால், கடன்களுக்கான தேவையே
ஏற்பட்டிராது. அதைச் செயல்படுத்தாமல், தேர்தலில் வெற்றிபெற வழிகளைத் தேடுகிறார்கள்
அவர்கள்.
வங்கிகளிலிருந்து
கடன் பெறுபவர்கள் விவசாயிகளில் ஒரு பகுதியினர்தான். பெரும்பாலான விவசாயிகள் லேவாதேவிக்காரர்களிடமிருந்து
கடன் பெறுகின்றனர். அரசுகள் இப்படிப்பட்ட அறிவிப்புகளைச் செய்யும்போது, இந்த வகை விவசாயிகளுக்கு
தள்ளுபடியின் பலன் கிடைப்பதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் இந்தத் திட்டங்களுக்கு
வெளியே இருப்பவர்கள்தான். ஆக, இதெல்லாம் அரசியல் வித்தைகளாகவே உள்ளன.
இருப்பினும், மாநில
அரசுகள் இதைச் செய்யும்போது நாங்கள் அதைத் தடுப்பதில்லை. நாங்கள் எந்த மாநில அரசுகளையும்
தடுத்ததில்லை. நாங்கள் விவசாயிகளின் பிரச்
சினைகளைத் தீர்க்க
முனைகிறோம். அவர்களுக்குத் தகுந்த அதிகாரங்கள் அளிக்க விழைகிறோம்.
முத்தலாக் பிரச்சினை போன்று அவசரச்சட்டம் அயோத்யா விஷயத்தில் கொண்டுவரப்படுமா?
ராமர் கோவில் ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயமாக பாஜகவினால் ஏன் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிட்டது?
முத்தலாக் விஷயத்தில்
அவசரச்சட்டம் உச்சநீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. பாஜகவின் தேர்தல்
அறிக்கையில் நாங்கள் இந்த விஷயத்திற்கான தீர்வு சட்டபூர்வமாக எட்டப்படும் என்று கூறியிருந்தோம்.
கடந்த 70 வருடங்களாக
ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களால் முடிந்த அளவு இந்தப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்று
உருவாவதைத் தடுத்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றும் இது உச்சநீதி மன்றத்தின்
முன்னால் உள்ளது. ஒரு வழியாக தனது இறுதிக் கட்டத்தை அது எட்டிவிட்டது.
நாட்டின் நலனைக்
கருதி நீதிமன்றத்தை முடக்கக்கூடாது என்று காங்கிரஸுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அவர்கள் தடைகளை ஏற்படுத்தக்கூடாது. காங்கிரஸைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து
நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உதவி செய்ய வேண்டும்.
நீதிமன்றத்தில்
தடைகளை ஏற்படுத்தும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள், அதை நிறுத்தவேண்டும். நீதி தன் கடமையைச்
செய்யட்டும். அதை அரசியலாக்காதீர்கள். நீதிமன்றத்தின் நடைமுறைகள் நிறைவடையட்டும். அரசுக்கு
என்ன பொறுப்பு உள்ளதோ அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம்.
பசுக்களின் பெயரால் அடித்துக் கொலை செய்வது... முக்கியமான பிரமுகர்கள்,
நஸ்ருதீன் ஷா போன்றவர்கள் கூட இந்தியாவில் இஸ்லாமியருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறுவது…
இம்ரான் கான் கூட
மோதிக்கு சிறுபான்மையினரை எப்படிக் கையாள்வது என்று போதிப்பேன் என்று சொல்வது…
ஏன் பாஜக சிறுபான்மையரிடம்
மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதில்லை
?
அது போன்ற நிகழ்வுகள்
நாகரிகமுள்ள சமூகத்தை உயர்த்திக்காட்டாது. அந்த நிகழ்வுகளை எந்த ஒரு குரலும் ஆதரிக்கக்கூடாது.
இது மிகவும் தவறானது, கண்டனத்துக்குரியது. ஆனால் அந்நிகழ்வுகள் 2014க்குப் பின்தான்
தொடங்கியதா? இது சமூகத்தில் உள்ள குறைபாடுகளின் வெளிப்பாடே. இந்த நிலையை மாற்ற நாம்
எல்லோரும் ஒன்றாகச் செயல்படவேண்டும். அது இந்த அரசில் நிகழ்ந்தது, இது அந்த அரசில்
நிகழ்ந்தது போன்ற விவாதங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதுபோன்ற ஒரு நிகழ்வு
கூடக் கண்டிக்கத்தக்கது.
மகாத்மா காந்தி,
வினோபா பாவே ஆகியோர் சொன்னவை, அரசியல் சாசனத்தில் எதிரொலிக்கப்பட்டுள்ளன. அந்த உணர்வுகளை
மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அந்த உணர்வுகளை மதித்தால் நம்முடைய உணர்வுகளுக்கும்
மரியாதை கிடைக்கும். அந்தச் சூழலை உருவாக்க ஒவ்வொருவரும் பங்களிக்கவேண்டும்.
வளைகுடா பகுதியில்
இருக்கும் ஒரு இஸ்லாமிய அறிவுஜீவி, இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறப்பைப்
பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் பகுதியில் ஒரே மதநம்பிக்கை உள்ளவர்கள் ஒருவரையொருவர்
தாக்கிக்கொள்கிறார்கள். இந்தியா இந்தப் பாராட்டை எண்ணிப் பெருமிதம் கொள்ளவேண்டும்.
எல்லாருடனும் எல்லோருக்கான
வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால், 18
,000 கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்படுள்ளது.
எந்த கிராமம் எந்த இனத்தைச் சேர்ந்தது என்று கேட்டு இந்த வசதி அளிக்கப்படவில்லை.
நீண்ட காலமாக ஒற்றுமையுடன்
வாழ்வதை எண்ணி இந்தியா பெருமைப்படவேண்டும். சமூகத்தில் அத்தகைய நிகழ்வுகளுக்கு இடமில்லை.
சமூகத்தின் அடி நாதம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
நாட்டில் நடைபெறும் அரசியல் வன்முறைகள் பற்றி
பாஜவின் தொண்டன்
என்ற முறையில் நான் அவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
மேற்கு வங்கத்தில் பாஜக, தனது ஜனநாயக உரிமைகளைச் செயல்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
தேர்தல்களின் போது எங்களது தொண்டர்கள் கொல்லப்பட்டவிதம் ஜனநாயகத்தைப் பற்றிய உயர்வான
அபிப்பிராயத்தை உருவாக்காது. கேரளாவில் எங்களது தொண்டர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகின்றனர்.
கர்நாடாவில் எண்ணமுடியாத
அளவிற்கு எங்களது பல தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் எங்களது தொண்டர்கள்
கொலை செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாமிலும் கூட. ஜம்மு காஷ்மீரில் எங்கள் தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர்.
இங்கு எங்களது தொண்டர்கள் கொல்லப்படுவது முக்கியப் பிரச்சினை அல்ல, இது போன்ற அரசியல்
வன்முறை நமது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எல்லா அரசியல் கட்சிகளும் இதுபற்றிச் சிந்திக்கவேண்டும்.
இந்த அரசு எந்த
உருவத்திலும் வன்முறையைச் சகித்துக்கொள்ளாது என்று பாஜக தொண்டர்களுக்கும் அவர்களது
குடும்பத்தினருக்கும் உறுதியளிக்கிறேன். அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்பதில்
நாங்கள் தீர்மானமாக உள்ளோம்.
நாங்கள் மாநில அரசுகளுக்கும்
வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஒருநாள் உண்மை வெளிவரும். இன்று சிலர் பாதுகாப்பாக இருப்பதுபோன்று
உணரலாம்
. ஆனால் ஒரு நாள்
உண்மை வெளிவந்துவிடும். ஒரு ஜனநாயகத்தில் எப்படிச் செயல்படவேண்டும் என்பது பற்றி அரசியல்
கட்சிகள் தங்கள் தொண்டர்களுக்குக் கற்றுத் தரவேண்டும்.
முத்தலாக் அவசரச் சட்டம் ஒரு முற்போக்கான விஷயமாகக் கருதப்பட்டது
ஆனால் அதே நேரத்தில் சபரிமலைப் பிரச்சினையில் உங்களது கட்சி மரபுக்கும் சடங்குகளுக்கும்
இடையே சிக்கிக் கொண்டது. ஏன் இந்த முரண்பாடு
?
இரண்டும் மாறுபட்ட
விஷயங்கள். நீங்கள் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. உலகில் பல இஸ்லாமிய நாடுகள்
முத்தலாக்கைத் தடை செய்துள்ளன. எனவே இது மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமில்லை. பாகிஸ்தானில்
கூட முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. இது பாலின சம உரிமையைப் பொருத்த விஷயம். எனவே
இரண்டும் வேறுபட்டவை.
அனைவரும் தங்களுக்குரிய
உரிமையைப் பெறவேண்டும் என்று இந்தியா கருதுகிறது. சில கோவில்களின் மரபுப் படி, அங்கெல்லாம்
ஆண்கள் செல்லக்கூடாது. அங்கே ஆண்கள் செல்வதில்லை.
சபரிமலை விஷயத்தில்
உச்சநீதிமன்றத்தின் ஒரு பெண் நீதிபதி சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அதை ஆழ்ந்து வாசிக்கவேண்டும்.
அதை எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்புபடுத்த வேண்டியதில்லை. ஒரு பெண்ணாக அவர்
சில பரிந்துரைகளைச் செய்துள்ளார். அதைப் பற்றி விவாதம் நிகழ்த்தப்படவேண்டும்.
மகாகட்பந்தன் (மகா கூட்டணி) இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறது.
மோதி கேசிஆர் கூட்டணியை ஆதரிக்கிறார் என்று சந்திரபாபு நாயுடு கூறுகிறார். இதைப் பற்றிய
தெளிவு கிடைக்குமா?
கேசிஆர் உருவாக்கும்
கூட்டணியைப் பற்றி எனக்குத் தெரியாது.
கடந்த 5 ஆண்டுகளில் மகாகட்பந்தன் ஒருமித்துக்
கூறிய ஏதாவது ஒன்று உண்டா? அவர்களின் குரல் மாறுபாடுகளுடன் ஒலிக்கின்றது. அவர்கள் யார்?
தங்களைக் காத்துக்கொள்ள ஆதரவைத் தேடுகின்றனர்.
ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொள்வோம், அதன் மூலம் நாம் காப்பாற்றப்படுவோம்.இப்படியாக இந்த விளையாட்டு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அவர்களுடைய ஒரே
நோக்கம் மோதி. மோதிக்கு
, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள்
என்பது. ஒரு தினசரியை எடுத்துக்கொள்ளுங்கள். கூட்டணியின் 10 தலைவர்கள் பல குரல்களில்
மோதியின் மீது வசைபாடுவார்கள். நாட்டிற்கு அவர்கள் என்ன செய்வார்கள், ஏன் செய்வார்கள்
என்பதைப் பற்றி அதில் ஒன்றும் இருக்காது.
அரசியல் கூட்டணியில் உள்ளவர்களே தங்களுக்குள் கொள்கையளவில் ஒற்றுமை
இல்லை என்று கூறிவிட்டனர். மோதியைத் தவிர வேறு யாராவதோ என்பது அவர்களின் கொள்கை.
2019 மோதிக்கும் மற்றவர்களுக்குமான போட்டியாக இருக்குமா?
இந்திய மக்கள் தேர்தலின்
போக்கைத் தீர்மானிப்பார்கள். பொதுமக்கள் அதன் அடிப்படையை முடிவு செய்வார்கள். யார்
மக்களின் தேவைகளைப் பூர்த்தி
செய்யப்போகிறார்கள். யார் மக்களின் நோக்கங்களுக்கு எதிராக உள்ளனர்.
அதுதான் தேர்தலின் அளவுகோலாக இருக்கப்போகிறது.
முன்பு ஊழல் பரவலாகப்பட்டிருந்தது
என்று மக்களுக்குத் தெரியும், மாநிலங்களில் இருந்தவர்கள் மாநிலங்களைக் கொள்ளையடித்தனர்.
மத்தியில் இருந்தோர் மத்திய அரசைக் கொள்ளையடித்தனர். இப்படி ஊழலில் ஈடுபட்டோர் கூட்டணியாக
வருவதை ஆதரிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி மக்கள் முடிவெடுப்பார்கள்.
இது மக்களுக்கும்
கூட்டணிக்கும் இடையேயான போட்டி. பொதுமக்களின் அன்புக்கும் ஆசிக்கும் அடையாளமாக இருப்பது
மோதிதான்.
ஒரு அதிபர் தேர்தலைப் போல 2019 இருக்குமா – ஒரு புறம் மோதி மற்றொரு
புறம் ராகுல்.
இந்தத் தேர்தல்
யார் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறார்கள், மக்களின் அபிலாஷைகளை யார் நிறைவேற்றுகிறார்கள்,
யார் தடுக்கிறார்கள் என்பதின் அடிப்படையில் நடைபெறும். பொதுமக்கள் அதுபற்றி முடிவெடுப்பார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய கட்சிகள் இணையுமா?
தொடர்ந்து இணைந்துகொண்டிருக்கிறார்கள்.
2014க்குப் பின், சிறிய கட்சிகள் எங்களுடன் சேர்ந்துள்ளன, குறிப்பாக வடகிழக்குப் பிராந்தியத்தில்.
மாயாவதி?
எந்த ஒரு புத்திசாலி
மனிதரும் இதை
த் தொலைக்காட்சியில்
சொல்லிக்கொண்டிருக்கமாட்டார். அதாவது யார் இணைகிறார்கள், யார் வெளியேறுகிறார்கள் என்பதை.
ஆனால் பொதுமக்கள் அனைத்தையும் அறிவார்கள். உதாரணமாக, தெலுங்கானாவில் அவர்கள் கூட்டணி
படுதோல்வி அடைந்திருக்கிறது. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. கூட்டணியின் முதல்
முயற்சி அது.
ஜம்மு காஷ்மிரில்
கூட்டணி உள்ளாட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்க முடிவுசெய்தது. மக்கள் அவர்களை நிராகரித்தனர்.
74% வாக்கு பதிவானது. அஸ்ஸாமில் கூட்டணி முழுவதும் பஞ்சாயத்துத் தேர்தல்களில் போட்டியிட்டது.
ஆனால் பாஜகவி
டம் தோல்வியைத் தழுவியது.
திரிபுராவிலும் இது போன்ற முடிவுதான். மேல்மட்டத்தில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இந்தத்
தலைவர்கள் ஒன்று சேரலாம், ஆனால் பொதுமக்கள் அவர்களுடன் சேரப்போவதில்லை.
உதவ் தாக்கரேயைப் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின்
வார்த்தைகளை, ‘சௌக்கிதார் சோர் ஹை’ போன்றவற்றை எதிரொலிக்கிறார். கடந்த சட்டசபைத் தேர்தல்களை
அடுத்து கூட்டணித் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டைக் கடுமையாக்கிக் கொள்கின்றனர் என்று
நீங்கள் நினைக்கவில்லையா?
2014ல் எங்களுக்கு
அறுதிப் பெரும்பான்மை கிடைத்தது. ஆனாலும் நாங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்தோம்.
இன்றும் நாங்கள் அரசை நடத்தும்போது, முடிவெடுப்பதில் எங்களுக்குள் ஒற்றுமை உள்ளது.
மாநிலங்களில் தனிப்பட்ட அரசியல் உள்ளது என்பது உண்மை. எங்களது கூட்டணிக்கட்சிகள் தாங்கள்
வளர்ச்சியடையவேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். எங்களது எதிர்பார்ப்பும் அதுவே. கூட்டணிக்
கட்சிகளைப் பாதிப்படையச் செய்து நாங்கள் வளர விரும்பவில்லை.
ஆனால் காங்கிரஸின்
நோக்கம் வேறு. காங்கிரஸ் கூட்டணியில் உள்ளோர் காங்கிரஸை எதிர்த்துக் குரலை எழுப்பி
அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் அல்லது காங்கிரஸ் எதிர்ப்பின் மூலம் வளர்ந்தவர்கள்.
எனவே காங்கிரஸை அவர்கள் நெருங்கும்போது அந்தக் கட்சி அவர்களை விழுங்கிவிடுகிறது.
நாங்கள் மாறுபட்டவர்கள்.
எங்களிடம் கூட்டு வைத்திருப்பவர்கள் வலுப்பெறுகிறார்கள். எங்களது கூட்டணிக் கட்சிகள்
உயர்வதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபடுகிறோம். சில நேரங்களில் சில எதிர்பார்ப்புகள்
பூர்த்தியடைவதில்லை. அவர்கள் பலனடைய அழுத்தம் கொடுக்கிறார்கள். சிலர் பேச்சுவார்த்தையின்
மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட
குணம் உண்டு. ஆனால் எங்களைப் பொருத்தவரை அனைவரையும் ஒன்றாக முன்னெடுத்துச்செல்ல விழைகிறோம்.
பிராந்தியங்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவே நான் விரும்புகிறேன். மாநிலங்களின்
உரிமைகளைப் புறக்கணித்து நாட்டை நடத்திச்செல்ல இயலாது. அதனால்தான் பாஜக வெற்றியடைகிறது.
தென்னிந்தியாவில் பாஜக ஏன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவில்லை.
கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றோரோடு தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உண்டா?
இது உண்மையல்ல.
30 வருடங்களுக்கு முன்னால் சொல்லப்பட்டது இன்னும் சொல்லப்பட்டு வருகின்றது. தென்னிந்தியாவில்
எங்களுக்கு இடம் உண்டு. கோவாவிலும் மகாராஷ்ட்ராவிலும் நாங்கள் உள்ளோம். எங்களுடைய அடித்தளத்தை
விரிவுபடுத்த தொடர்ந்து முயன்றுவருகிறோம். ஜம்மு காஷ்மீரில் எங்களுக்கு எம்பி உண்டு,
தமிழ்நாட்டிலும் உண்டு. வடகிழக்கிலும் உண்டு. நாங்கள் அனைவரையும் கூட்டுச் சேர்த்துக்கொள்ள
தயாராக இருக்கிறோம், யார் எங்களுடன் சேர விரும்புகிறார்களோ, நாங்கள் யாருடன் பேச இயலுமோ
அவர்களை இணைத்துக்கொள்வோம்.
காங்கிரஸும் அரசியல் நோக்கர்களும் பாஜக நாட்டின் நிறுவனங்களை
பலவீனப்படுத்திவிட்டது என்று கூறுகின்றனர். சிபிஐயின் முதலாவது இரண்டாவது இடங்களில்
இருப்பவர்களுக்கிடையேயான தகராறின் காரணமாக பிரதமர் நேரடியாகத் தலையிட நேர்ந்தது. ரிசர்வ்
வங்கியின் ஆளுநரின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாகவே அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆர்பிஐயின் கஜானாவை பாஜகா காலி செய்ய முயல்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸுக்கு இந்த
விஷயத்தைப் பேச எந்த உரிமையும் இல்லை. பிரதமருக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் எதிராக
என்ஏசி உருவாக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் அலுவலகத்திற்கு எந்த வகையில் அதிகாரம் இருக்க
முடியும்? மந்திரி சபை முக்கிய முடிவுகளை எடுக்கிறது
. ஆனால் பெரிய தலைவர்கள் அதை பத்திரிகையாளர் சந்திப்பில் கிழித்தெறிகிறார்கள்.
நிறுவனங்களுக்குக் கொடுக்கும் மரியாதை இதுதானா?
நீதித்துறையைப்
பொருத்த அளவில், கொள்கையின் அடிப்படையில் நீதித்துறையை முடிவு செய்வோம் என்று அவர்கள்
கூறினர். மூத்த நீதிபதிகள் வெளியேற்றப்பட்டு அனுபவமில்லாத நீதிபதிகள் பதவி உயர்வு பெற்றனர்.
நீங்கள் நிறுவனங்களைப் பற்றிப் பேசலாமா?
இதே ஆர்பிஐயில்,
பல முறை ஆளுநர்கள் தங்கள் பதவிக்காலம் முடியுமுன்பே வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
திட்டக்குழு உறுப்பினர்களை கோமாளிகள் என்று நீங்கள் வர்ணித்ததுண்டு. அப்போதைய துணைத்தலைவர்
யார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அது அவர்களுக்கு
உயர்வளிக்கின்றதா? சிபிஐயின் பிரச்சினை வெளிவந்தபோது, சட்டப்படி அவர்கள் இருவரும் விடுப்பில்
செல்லப்பணிக்கப்பட்டனர். ஏனெனில் நிறுவனங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை.
ஆர்பிஐயின் ஆளுநர்
தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ய விரும்பினார். நான் இதை முதல் முறையாக வெளிப்படுத்துகிறேன்.
கடந்த 6-7 மாதங்களாகவே தனது விருப்பத்தை அவர் தெரிவித்துக்கொண்டிருக்கிறார். அதை எழுத்துபூர்வமாகக்
கூடத் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் எனக்குக் கூட எழுதினார்…
அவர் மீது (உர்ஜித் படேல்) ஏதாவது அரசியல்ரீதியான அழுத்தம் இருந்ததா?
அந்தக் கேள்விக்கே
இடமில்லை. ஆர்பிஐ ஆளுநராக படேல் சிறப்பாகப் பணிசெய்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்வேன்.
ஈடி (அமலாக்கப்பிரிவு) எம்பராஸ்மெண்ட் டைரக்டரேட் என்று அழைக்கப்பட்டது,
பழி வாங்குதல் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதை எப்படிச் சொல்கிறார்கள்
என்று தெரியவில்லை. அண்மையில் சோராபுதீன் தீர்ப்பு வந்தது. அதைப் படியுங்கள். நிறுவனங்கள்
எப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்று தெரியும். மோதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
என்றுதான் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் நீங்கள் பழிவாங்குதல் என்கிறீர்கள். அமலாக்கப்பிரிவு
தன் கடமையைச் செய்கிறது. ஒரு வெளிநாட்டிலிருந்து தலைமறைவான ஒருவர் இந்தியாவிற்குக்
கொண்டுவரப்படுகிறார். ஒவ்வொரு இந்தியரும் இதை நினைத்துப் பெருமைப் படவேண்டாமா.
கிறிஸ்டியன் மைக்கலுடைய
வழக்கறிஞராக காங்கிரஸ்காரர் ஒருவர் வந்தால் அது கவலையளிக்கக்கூடிய விஷயம். நாட்டுமக்கள்
இப்போது தலைமறைவுக் குற்றவாளி வந்ததை நினைத்துப் பெருமையடையவேண்டும். சட்டபூர்வமான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உண்மை விரைவில் வெளிப்படும். அதை விடுத்து, உங்கள் கட்சியிலிருந்து
மைக்கலுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களை அனுப்புகிறீர்கள். இது வருத்தப்படவேண்டிய ஒன்று.
ரபேல் விவகாரத்தில், உங்களுக்கு வேண்டியவருக்கு
ஆதரவாக
நீங்கள் செயல்பட்டதாக ராகுல் காந்தி உங்களின் மீது
தனிப்பட்ட குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறார். அனில் அம்பானி உங்கள் நண்பர் என்றும்
அவருக்கு நீங்கள் உதவிசெய்ய பிரான்ஸ் அரசுக்கும் டஸ்ஸாட்டுக்கும் அழுத்தம் கொடுத்ததாகவும்
அவர் கூறுகிறார். நீங்கள் இதுபற்றிப் பேசவில்லை, ஏன் நீங்கள் இந்த விஷயத்தில் மௌனம்
சாதிக்கிறீர்கள்?
இது என்மீது வைக்கப்பட்டுள்ள
தனிப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, என்னுடைய அரசின்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. தனிப்பட்ட
முறையில் என்மீது குற்றம் இருந்தால், அவர்கள் யார் எப்போது எங்கே யாருக்கு என்ன கொடுத்தார்கள்
என்பதைத் தோண்டியெடுக்கட்டும்.
நாடாளுமன்றத்தில்
நான் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன். எனக்குக் கிடைத்த பொது மேடைகளில் இதுபற்றிக்
குறிப்பிட்டிருக்கிறேன். உச்சநீதிமன்றம் கூட இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. அது இந்த
விஷயத்தை ஆழமாக ஆய்வுசெய்திருக்கிறது. பிரான்ஸின் அதிபர் இதுபற்றிப் பேசியிருக்கிறார்.
ஊடகங்கள் இதற்கான ஆதாரங்கள் என்ன என்பது பற்றி அவர்களிடம் கேட்டிருக்கவேண்டும். அதற்கான
துணிச்சல் இருக்கிறதா? சேற்றை எறிந்துவிட்டு ஓடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள்
எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்காமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து
இதை எழுப்புவதாலேயே நான் பதிலளித்துக்கொண்டு இருக்கவேண்டுமா என்ன?
நாட்டில் இதுபற்றி
விவாதம் நடத்தப்பட வேண்டும். சுதந்தரம் அடைந்ததிலிருந்து ராணுவ பேரங்களில் ஏன் சர்ச்சைகள்
எழுப்பப்படுகின்றன? ஏன் நம் ராணுவம் பலவீனப்படுத்தப்படுகிறது? யார் இதைச் செய்கிறார்கள்?
இதன் காரணம் என்ன?
ராணுவ விவகாரங்களில்
இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? இடைத்தரகர் இல்லாமல் இந்தப் பேரங்கள் நடக்காதா? மேக்
இன் இந்தியா 70 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டிருந்தால், வெளியிலிருந்து சுரண்டுபவர்களின்
வழி மூடப்பட்டிருக்கும்.
என்னுடைய குற்றம்
நான் மேக் இன் இந்தியாவை உருவாக்கியது. என்னுடைய குற்றம் நம்முடைய ராணுவத்திற்குத்
தேவையானவற்றை இந்தியாவிலேயே உருவாக்குவது. அதன்மூலம் வெளிநாட்டுத் தேவைகளுக்கு முடிவுகட்டுவது.
தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்காக நான் முயல்கிறேன்.
ராணுவத்தைப் பலவீனப்படுத்த
முயல்பவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். என்மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளைச்
சுமத்துகின்றனர் என்பது பற்றி நான் கவலைப்படுவதா அல்லது என்னுடைய நாட்டின் தேவைகளைப்
பூர்த்தி செய்ய முயல்வதா? என் மீது எப்படி வசைபாடப்பட்டாலும், எந்த ஒரு குற்றம் சுமத்தப்பட்டாலும்,
நேர்மையின் வழி நடப்பது என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது
என்றும் நான் முடிவுசெய்துவிட்டேன். நம் ராணுவ வீரர்களை விதியின் வழி செல்ல நான் விடப்போவதில்லை.
அவர்களது தேவைக்கேற்ப, நான் கொள்முதல் முறையை விரைவுபடுத்தப்போகிறேன். என்மீது தவறான
குற்றம் சுமத்தப்பட்டாலும் இதைச் செய்வேன்.
சர்ஜிகல் ஸ்ட்ரைக் விஷயத்தை, முன்னாள் ராணுவ
அதிகாரிகள் அரசியலாக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். பாஜக இந்தத் தாக்குதல்களை அரசியல்
ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துகிறது
என்னுடைய கருத்தும்
இந்தத் தாக்குதல்களை அரசியலாகக் கூடாது என்பதுதான். அதில் எந்தச் சர்ச்சையும் இல்லை.
இந்தத் தாக்குதல்கள் நடைபெற்ற பின் எந்த ஒரு அமைச்சரும் இதைப் பற்றிப் பேசவில்லை.
ஒரு ராணுவ அதிகாரி
நாட்டிற்கு இதைப் பற்றி விளக்கமளித்தார். இந்தத் தகவல் பாகிஸ்தானுக்கும் அளிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்குத் தகவல் அளிக்கப்ப
டும் வரையில், இந்தியாவிலும் இதுபற்றிச் செய்திகள் வெளிப்படுத்தப்பட்டவில்லை.
ஆனால், இந்த நாட்டில்
தாக்குதல்கள் நடந்த அதே நாளில் துரதிருஷ்டவசமாக சில கட்சித் தலைவர்கள்
சர்ஜிகல் ஸ்ட்ரைக்கைப் பற்றிச் சந்தேகம் எழுப்பினார்கள். தங்களது மன ஊக்கத்தை உயர்த்திக்கொள்ள
பாகிஸ்தானுக்கு இப்படிப் பேசவேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் பாகிஸ்தானில் சொல்லப்பட்டது
இங்கும் கூறப்பட்டது.
அவர்களுடைய வாதங்களுக்கு
வலுச்சேர்ப்பதற்காக, பாகிஸ்தானில் கூறப்பட்டதையே அவர்கள் ஆதாரமாகக் காட்டினர். அரசியலாக்குவது
அதிலிருந்து துவங்கியது. நீங்கள் ராணுவத்தைப் பழித்தீர்கள். ராணுவ நடவடிக்கையைப் பற்றி
ச் சந்தேகம் எழுப்பியவர்கள் தவறு செய்தார்கள் என்று நான் கருதுகிறேன்.
அந்த வகை அரசியலாக்குதல் நடந்திருக்கக்கூடாது.
ராணுவத்தைப் புகழ்வது
குடிமக்கள் மற்றும் அரசின் கடமையாகும். 1962ல் நமது ராணுவம் வெளிப்படுத்திய வீரத்தையும்
சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட அதன் திறனையும்
நாம் பாராட்ட வேண்டும்.
நாட்டிற்காக தங்கள்
உயிரைப் பணயம் வைப்பவர்களின் வீரத்தை நாம் பாரட்டவில்லை என்றால், யார்தான் அதைச் செய்வது?
ராணுவத்தைப் பாராட்டுவது அரசியல் என்று கருதக்கூடாது.
இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடைபெற்ற மணித்துளிகளில், உங்கள் மனதில்
ஓடிக்கொண்டிருந்தது என்ன
? இந்தத் தாக்குதல்கள் தோல்வியுறும் பட்சத்தில் ஒரு அரைகுறை நடவடிக்கைக்கான
பொறுப்பு உங்கள் மேல் அல்லவா விழுந்திருக்கும். போர்களை விரும்புபவர் என்ற குற்றச்சாட்டும்
உங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும்.
..
யூரி (URI) நிகழ்ந்தபோது, நமது
ஜவான்கள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டபோது
, அது என்னை அமைதியிழக்கச்செய்தது. என்னுள்ளே ஒரு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நான் கேரளா சென்றபோது
இதுபற்றிக் குறிப்பிட்டேன்.
ஆனால் ஒரு ஜனநாயக
நடைமுறையின் ஒரு பகுதி
தான் நான். தனிப்பட்ட கோபம், ஆத்திரம், அமைதியிழப்பு ஆகியவை நடைமுறைகளின்
மீது திணிக்கப்படக்கூடாது. ஆனால் என்ன நிகழ்ந்தது என்பது பற்றி ராணுவத்திடம் பேச்சு
நடத்திக்கொண்டேயிருந்தேன். ராணுவத்தில் இருந்த கோபம் என்னிடத்தில் இருந்ததை விட மிக
அதிகம் என்பதைக் கண்டுகொண்டேன். ராணுவ வீரர்களின் மன ஊக்கத்திற்காக, உயிர்த்தியாகம்
செய்த வீரர்களுக்காக நீதியை அவர்கள் விரும்பினர்
. நான் அவர்களிடம் திட்டம் ஒன்றைத் தீட்டும்படிக் கேட்டுக்கொண்டேன். என்ன தேவை, என்ன செய்யலாம் என்பதையும் கேட்டேன்.
அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். அவர்கள் திட்டம் தீட்டினர். அந்த நடவடிக்கைக்கு
முழுப் பாதுகாப்பை நான் விரும்பியதால் இருமுறை அந்தத் தேதி மாற்றப்பட்டது. இறுதியில்
அந்த நடவடிக்கை முடிவுசெய்யப்பட்டது. அது ஒரு பெரிய அபாயம் என்பதை நான் உணர்ந்திருந்தேன்.
எனக்கு அரசியல் அபாயங்களைப் பற்றிக் கவலையில்லை. என்னுடைய கவலையெல்லாம் நம் வீரர்களின்
பாதுகாப்புப் பற்றியதுதான். அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது. அவர்கள்
நம்முடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு எந்தவிதத் தியாகத்தையும் செய்யத்தயாராக இருந்தார்கள்.
அதற்காக அவர்களுக்குத் தேவையானது அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பயிற்சியளிக்கவும்
முடிவுசெய்யப்பட்டது. சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ரகசியம் காக்கப்பட்டது.
இட விவரங்களும் தடைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. மோசமான நிலை ஏற்பட்டால் என்ன
செய்வது என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டது. எனக்கு ஒரு நல்ல
படிப்பாக அது இருந்தது. அதன்பின் தேதியைத் தீர்மானித்தோம்.
முக்கிய அணியில் யார் எங்கேயிருப்பது என்பது பற்றி முடிவுசெய்யப்பட்டது. விடிவதற்கு
முன் நம் ஆட்கள் திரும்பிவிடவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது.
வெற்றியடைந்தாலும்
தோல்வியுற்றாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சூரிய உதயத்திற்கு முன் திரும்பிவிடவேண்டும்
என்று தெளிவாக ஆணையிட்டிருந்தேன். ஆசைப்பட்டு தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டாம் என்று
கூறியிருந்தேன். வெற்றியோ தோல்வியோ விடிவதற்கு முன் திரும்பிவிடவேண்டும். தோல்வி கிடைத்தாலும்
திரும்பி விடுங்கள். என்னுடைய வீரர்கள் இறப்பதை நான் விரும்பவில்லை.
வீரர்கள் குறிப்பிட்ட
முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை முழுவதும் நான் அவர்களுடன் தொடர்பிலிருந்தேன்.
ஆனால் காலையில் ஒரு மணி நேரம் தகவல்கள் கிடைக்கவில்லை. எனக்கு கவலை ஏற்பட்டது. சூரிய
உதயத்திற்கு ஒரு மணி நேரம் கழித்தும் தகவல்கள் ஏதும் இல்லை. எனக்கு அது ஒரு கடினமான
நேரமாக இருந்தது. நானும் அவர்களுக்குத் தகவல்கள் அனுப்ப இயலவில்லை.
சூரியன் உதித்து
அடுத்த ஒரு மணி நேரம் கவலையோடு கழிந்தது. என்னுடைய முதல் நோக்கம் நம் வீரர்கள் உயிரோடு
திரும்பவேண்டும்.
அதன்பின், நம்முடைய
எல்லையை அவர்கள் இன்னும் அடையவில்லை என்ற தகவல் கிடைத்தது
. ஆனால் இரண்டு பிரிவுகள் பாதுகாப்பான பகுதியை அடைந்துவிட்டன, எனவே கவலைப்படவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி
வீரர் திரும்பும் வரை எனக்கு அமைதியில்லை என்று கூறினேன். இந்நடவடிக்கை நிறைவடைய
, விடிந்த பின் 2 மணி நேரம் ஆனது. பின்னர் சிசிஎஸ் சந்திப்பு நிகழ்ந்தது.
அதற்கு முன் பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டியிருந்தது. பாகிஸ்தானியர்கள் நம்முடைய
அழைப்பை முதல் முறை எடுக்கவில்லை. இந்திய ஊடகங்களுக்கு 12 மணிக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
என்னைப் பொருத்தவரை அந்த நிமிடங்கள்
, அந்த நடவடிக்கை நடந்த விதம், அந்தத் துல்லியம், முக்கியமானவை. நம்முடைய ராணுவத்தின்
புதிய பரி
மாணத்தை நான் அறிந்துகொண்டேன். அவர்களுக்கு என் வந்தனங்கள்.
இந்தத் தாக்குதலின் நோக்கங்கள் என்ன? தீவிரவாதம் குறையவில்லை,
எல்லைக்கு அப்பாலான தீவிரவாதம் இன்னமும் தொடர்கிறது. இது ஒரு தடுப்பு நடவடிக்கையா?
தொடர்ந்து சென்று தாக்குதல் என்ற புதிய கொள்கை ஏதும் உள்ளதா?
இதுபோன்ற விஷயங்கள்
ஊடகங்களில் விவாதிக்கத் தகுந்தவை என்று நான் கருதவில்லை. எந்த மாதிரியான வியூகங்கள்
வகுக்கவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்பதெல்லாம் தகுந்த நிலைகளில் விவாதிக்கப்பட்டுவருகின்றன.
1965 போர், பிரிவினையின்போது நடந்த போர்
, இப்படி ஒரு போரில் பாகிஸ்தான் வழிக்கு வந்துவிடும்
என்று நாம் நினைத்தால் அது தவறான நினைப்பாகும். பாகிஸ்தான் ஒழுங்குபட சிறிது காலம்
பிடிக்கும்.
நவாஸ் ஷெரிப்பைத் தாங்கள் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தீர்கள்.
நீங்களும் லாகூர் சென்றீர்கள். இம்ரான் கான் பதவியேற்குமுன்பே அவருக்கு வாழ்த்துச்
செய்தி அனுப்பினீர்கள்.
சிலர் மோதி ஏன் வாழ்த்துச் சொல்ல அவசரப்படுகிறார், அவருடைய நோக்கம்
நோபல் பரிசா என்று கூறுகின்றனர். இந்திய – பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் துவங்குமா?
ஐமுகூ அரசாக இருந்தாலும்
சரி அல்லது தேஜ கூட்டணி அரசாக இருந்தாலும் சரி, நாம் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற
கொள்கை நிலைப்பாட்டையே எடுத்து வந்திருக்கிறோம். அது நாட்டின் கொள்கை, மன்மோகன் சிங்குடையதோ
அல்லது மோதியுடையதோ அல்ல. நம்முடைய மாறாத கொள்கை
, எல்லாவிதமான பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துக்கொள்வது என்பது. ஏனெனில் இந்தியாவின் நிலை வலுவாக இருக்கிறது. நாம் சொல்வதெல்லாம் ஒன்றுதான்,
குண்டு வெடிப்புகளுக்கும் துப்பாக்கி
ச் சத்தங்களுக்கும் இடையே நாம் பேச்சுவார்த்தை நடத்த இயலாது. எல்லை
கடந்த பயங்கரவாதம் முற்றுப்பெறவேண்டும். இதற்கான தொடர்ந்த அழுத்தத்தை நாம் கொடுத்து
வருகிறோம். உலகில் இந்த நிலைப்பாட்டிற்குச் சாதகமான சூழலை உருவாக்கியிருக்கிறோம், தீவிரவாதத்தை
ஆதரிக்கும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தியிருக்கிறோம். இதுதான் உண்மை. நிகழ்வுகள் நடந்தன,
ஆனால் குறைந்த அளவிலேயேதான் அவை நடைபெற்றன. மனிதத் தன்மையையும், சட்டத்தையும், நாட்டின்
ஒற்றுமையையும் நம்புபவர்களின் கை ஓங்கி இருக்கிறது.
இம்ரான் கானின் அறிக்கையில் ஏதாவது நம்பகத்தன்மை தெரிகிறதா,
இம்ரான் அழைத்தால் நீங்கள் சார்க் மாநாட்டிற்குச் செல்வீர்களா?
பழமொழி ஒன்று உண்டு. பாலத்தை நாம் நெருங்கும்போது…”
சீனா – நீங்கள் ஸீ ஜின்பிங்கை 13-14 முறை சந்தித்திருக்கிறீர்கள்.
அதற்குப் பதிலாக டோக்லம் போன்றவையே உங்களுக்குக் கிடைத்தது. நேருவைப் போல நீங்களும்
ஏமாற்றப்பட்டுவிட்டீர்களா?
டோக்லாமில் நாம்
அளித்த பதிலடியை வைத்தே இந்தியாவைப் பற்றி முடிவுசெய்ய வேண்டும். ஏமாற்றம் என்ற வகையில்
இந்தியாவுடன் எதுவும் நிகழவில்லை. நம்முடைய அடிப்படைக் கொள்கை, நம் அயல்நாடுகளுடன்
நேச உறவு கொள்வதே. எல்லா இந்திய அரசுகளும் இதையே கடைப்பிடிக்கின்றன.
நீங்கள் அடிக்கடி வெளிநாடு செல்கிறீர்கள், அது வெறும் புகைப்படங்களுக்காக
மட்டுமே, வேறு வலுவான பலன்கள் ஏதும் கிடைப்பதில்லை என்று விமர்சனங்கள் எழுகின்றன.
எல்லா பிரதமர்களும்
கிட்டத்தட்ட இதுபோன்ற பயணத்திட்டங்களையே கொண்டிருந்தனர். நீங்கள் கணக்கெடுத்தால், பல்வேறு
சந்திப்புகள், உச்சி மாநாடுகள் நடைபெறுகின்றன. அவற்றில் பிரதமர் இல்லாவிடில், உங்கள்
குரல்
ஒலிக்காது. எனவே இந்தப் பயணங்கள் அவசியமானவை. மன்மோகன் ஜியும் இதைச் செய்யவேண்டியிருந்தது.
அது கட்டாயமானதாக ஆகிவிட்டது. இந்தியாவின் குரல் உலகத்திற்குக் கேட்கவேண்டும் என்று
நான் முயல்கிறேன். அதிக எண்ணிக்கையில் மக்களைச் சந்திக்க நான் முயல்கிறேன். முன்பு
பிரதமர் செல்லும்போது அவர்கள் போய்ச்சேரும் இடங்களிலும் அவர்கள் புறப்படும் இடங்களிலும்
அவர்களை யாரும் கவனிப்பதில்லை. நான் மக்களோடு உரையாடுவதாலும் முக்கிய முடிவுகளை எடுப்பதனாலும்தான்
என்னுடைய பயணங்கள் கவனிக்கப்படுகின்றன.
கங்கை இன்னமும் சுத்தம் செய்யப்படவில்லை. 5 வருடங்கள் ஆகிவிட்டன.
நான் 5 மாநிலங்களை
இந்த நோக்கத்திற்காக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்த ஆற்றுக்காக ராஜீவ் காந்தி
காலத்திலிருந்து செலவிடப்படும் பணம் எந்தப்பலனையும் ஏன் அளிக்கவில்லை? நாங்கள் அதை
ஆராய்ந்தோம். குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன, இந்தப் பணியை முடிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டுவிட்டோம்.
உதாரணமாக, ஆற்றை 120 வருடங்களாக மாசுபடுத்திக்கொண்டிருந்த ஒரு கால்வாய் மூடப்பட்டுள்ளது.
கங்கையில் கலக்கும்
துணை ஆறுகளையும் தூய்மை செய்வது சவாலான பணியாகும். பன்னாட்டு அறிக்கை ஒன்று கங்கையைத்
தூய்மை செய்யும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் அது
எனக்குத் திருப்தி தரவில்லை. இந்தப் பணியில் கடுமையாக உழைக்கிறேன். நாம் வெற்றிபெறுவோம்
ஆக, நீங்கள் வாரணாசியிலிருந்து போட்டியிடுவீர்களா அல்லது புரி
ஒரு தொகுதியாக இருக்குமா?
ஊடகவியலாளர்களும்
ஏதாவது பணி செய்
யுங்கள்.
முதல்முறை எம்பியான நீங்கள் ராகுல் காந்தி உங்களைப் பார்த்து
கண்ணடிப்பார் என்று எதிர்பார்த்தீர்களா? நாடாளுமன்றத்தில் உங்களுடைய ஏற்றத் தாழ்வுகளைப்
பற்றிக் கூறுங்கள்
.
நாடாளுமன்றம் விவாதங்களுக்குரிய
இடமாக இருக்கவேண்டும். வலுவான விவாதங்கள் நடைபெறும்போது, இனிய அமுதம் அதிலிருந்து கிடைக்கும்.
துரதிருஷ்டவசமாக, அதுபோன்ற விவாதங்கள் நடைபெறாதது நாட்டை பாதிப்புக்குள்ளாக்குகிறது.
நாடாளுமன்றத்தில் எட்டு மணி நேர விவாதம் நடைபெறும்போது அரசைச் சூழ்ந்து கேள்விகள் கேட்க
அது ஒரு அருமையான வாய்ப்பாக உள்ளது. அரசுப்பணித்துறையும் இதைக் குறித்துக்கொள்கிறது.
நமது நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் அறிவொளி பொருந்தியதாக இருக்கவேண்டும். ஆனால் ஒரு சில
மனிதர்கள் இதைச் சீர்குலைத்து நமது ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கின்றனர்.
இந்த ஐந்தாண்டு கால உங்கள் ஆட்சியில் ஏதாவது வருத்தம்
உண்டா, அதேபோன்று உங்களுக்குத் திருப்தி அளித்த ஒரு விஷயம்.
..
என்னுடைய பணி திருப்தியாக
இருந்ததா இல்லையா என்ற முடிவை நான் மக்களிடமே விட்டுவிடுகிறேன். ஆனால் ஒன்று, எனக்கு
ஆச்சரியமேதுமில்லை. லுட்
யென் உலகத்தை (அதாவது பாரதீயமற்ற உலகத்தை) எனது ஒரு பகுதியாக
மாற்றவில்லை அல்லது நான் அதன் ஒரு பகுதியாக மாறவில்லை. எனது பின்புலம் வேறு என்ற காரணத்தால்
அவர்கள் எனது ஒரு பகுதியாக இருப்பதை நான் விரும்பவில்லை. மேல்தட்டு அல்லாத மக்களின்
பிரதிநிதியாக நான் இருக்கிறேன். நான் அவர்களை வெல்ல முடியவில்லை. அவர்களை எப்படி வெல்வது
என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (மற்றபடி) ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மகிழ்ச்சியாகக்
கழித்தேன். என்னுடைய பணியில் நேர்மை உள்ளது. நான் மக்களுக்காகப் பணிபுரிகிறேன்

Posted on Leave a comment

புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? – கொய்ன்ராட் எல்ஸ்ட் (தமிழில்: ஜடாயு)

கொய்ன்ராட் எல்ஸ்ட் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சிறந்த வரலாற்றாசிரியர்இந்தியவியலாளர்கடந்த ஐம்பதாண்டுகளாக இந்தியாவுடன் ஆழ்ந்த பிணைப்புக் கொண்டு ஆய்வுகளைச் செய்து வருபவர்அயோத்தி ராமஜன்ம பூமி வரலாறு குறித்தும்இந்துத்துவ இயக்கங்கள் குறித்தும் காத்திரமான நூல்களை எழுதியிருக்கிறார்.


ரோப்பாவைச் சேர்ந்த கீழைத்தேச ஆய்வாளர்கள் (Orientalists)
இந்தியாவிற்கு
வெளியில்தான் பௌத்தத்தை முதலில் கண்டறிந்தனர்
. அதனால், பௌத்தம் புழக்கத்தில்
உள்ளதற்கான அடையாளமே இல்லாதிருந்த இந்தியாவுடன் அதற்கு எந்த வெளிப்படையான தொடர்பும்
இல்லை
, பௌத்தம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு மதம் என்று அவர்கள் கருதினர். ஆரம்பத்தில், புத்தர் இந்தியாவைச்
சேர்ந்தவர் என்றுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை
. இந்தியாவின்
வரலாற்று நிகழ்வுகளுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத வகையில் பௌத்தம் பல நூற்றாண்டுகள்
பல்வேறு வகைகளில் இந்தியாவிற்கு வெளியே வளர்ந்து வந்தது உண்மை
. எனவே, இந்துமதத்துடன்
அதற்கு உள்ள உறவு எடுத்துச் சொல்லப்படும் வரை
, பௌத்தம் முற்றிலும்
தனிப்பட்ட ஒரு மதம் என்ற கருத்து அவர்களிடையே நிலவியது புரிந்துகொள்ளக் கூடியதே
.
நவீன
இந்தியாவில் பௌத்தம்
இதன் பின்னர் இந்தியாவிலும் பௌத்தம் தனி மதம் என்ற இந்த நிலைப்பாட்டுடன்
பொருந்தும்படி பலவிதமான புதிய
கண்டுபிடிப்புகள்உருவாக்கிச்
சேர்க்கப்பட்டன
. குறிப்பாக 1956ல் டாக்டர் பீம்ராவ்
அம்பேத்கர் புத்தமதம் தழுவியதன் பின்னணியில்
, ‘இந்துமதத்திற்கு
முற்றிலும் எதிரானவர்
என்ற வகையில் புத்தரின் கடந்தகாலத்தை மீள் உருவாக்கும்
முயற்சிகளில் அம்பேத்கரிய இயக்கம் முனைந்து ஈடுபட்டது
. தனது மத சம்பிரதாயத்திலிருந்து
வேறு ஒரு மத சம்பிரதாயத்தைத் தழுவுவதாக அல்லாமல்
(இந்துவாக இருந்துகொண்டு
இதைச் செய்வதற்கான முழு சுதந்திரம் இந்துமதத்தில் உண்டு
), ‘மதமாற்றம்என்ற பெயரில்எனது முந்தைய
மதத்தைத் துறந்து பௌத்த மதத்தில் இணைகிறேன்
என்று அம்பேத்கர்
அறிவித்தது கிறிஸ்தவ மதக் கோட்பாடே அன்றி
, இந்திய மதங்களில்
உள்ள கோட்பாடு அல்ல
.
கி.பி. 496ம் வருடம் ஃபிராங்கிய
மன்னர் க்ளோவிஸ்
தான் அதுகாறும் வழிபட்டு வந்தவற்றை எரித்து, எரித்து வந்ததை
வழிபடத் தொடங்கி
மதம் மாறியது இதற்கான முன்னுதாரணமாகலாம். (கிறிஸ்தவ வரலாற்றாசியர்கள்
ஒரு பொய்யான எதுகைமோனைக்காகத் தங்களது மத எதிரிகளை வசைபாடி இவ்வாறு எழுதினார்கள்
. மற்றபடி பழைய
விக்கிரக வழிபாட்டாளர்கள் கிறிஸ்தவச் சின்னங்களை ஒருபோதும் எரித்ததும் அழித்ததும் கிடையாது
என்பதே உண்மை
.) இஸ்லாமின் வரலாறு குறித்தும், சாதி தொடர்பான
வரலாற்றில் உள்ள சில விஷயங்கள் குறித்தும் அம்பேத்கர் சிறப்பாக எழுதியுள்ளார் என்பது
உண்மையே
. ஆனால் பௌத்த தர்மத்தின் வரலாறு குறித்து அவரது புரிதல் சிறிதுகூட
ஆதாரமில்லாதது
, நம்பகத்தன்மையில்லாதது.
ஆனால், அவர் கொஞ்சம்
சரியாகவும் கொஞ்சம் தவறாகவும் இதுபற்றிச் சொல்லிச் சென்றவற்றை
, அவரைப் பின்பற்றிய
தொண்டர்கள் ஒரேயடியாக மட்டையடி அடித்து
, வரலாற்றுக் கேலிச்சித்திரம்
போல ஆக்கிவிட்டார்கள்
. இந்து வரலாற்றில் பௌத்தத்தின் இடம் என்ன என்பது
குறித்த அம்பேத்கரிய கருத்துக்கள் விஷயத்தில் இந்த விமரிசனம் முற்றிலும் பொருந்தும்
.
இங்கு ஆட்சியதிகாரத்தில் இருந்த நேருவியர்களின் இந்துமத எதிர்ப்பு
ஒரு கட்டுக்குள் அடங்கியதாக இருந்தது
. அம்பேத்கரியக்
கண்ணோட்டம் அதை மேலும் தீவிரப்படுத்தியது
. இந்தியாவின்
முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஆட்சியில் இந்தியாவின்
அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்படாத அரசு மதமாக
பௌத்தம் முன்னெடுக்கப்பட்டது. பௌத்தப் பேரரசர்
அசோகரின் சிங்கத் தூண் அரசுச் சின்னமாகவும்
, 24 ஆரங்கள் கொண்டசக்ரவர்த்திஆழி தேசியக்
கொடியில் இடம்பெறும் ஒன்றாகவும் ஆயிற்று
. இந்திய வரலாற்றைப்
பற்றிய நேருவின் குறுகலான அறிவுப் பார்வையில் ஒட்டுமொத்த இந்திய சரித்திரத்தில் இரண்டு
ஆன்மிகத் தலைவர்களும்
(புத்தர், மகாத்மா காந்தி) மூன்று அரசியல்
தலைவர்களும்
(அசோகர், அக்பர் மற்றும் ஜவஹர்லால் நேருவாகிய தான்) மட்டும்தான்
தெரிந்தார்கள்
! உண்மையில்சக்ரவர்த்தி’ (சக்கரத்தை சுழலச்
செய்பவர்
, உலகப் பேரரசர்) என்ற கோட்பாடு, அசோகருக்கு மிகவும்
முன்பு வேதகாலத்திலிருந்தே வந்து கொண்டிருக்கும் ஒன்று
. 24 ஆரங்கள் என்பவை
பௌத்த கோட்பாடுகளை மட்டும் குறிக்கவில்லை
. அந்தக் குறியீட்டை
பல்வேறு விதங்களில் பொருள் கொள்ளலாம்
. உதாரணமாக, சாங்கிய தரிசனத்தில்
புருஷன் என்பதை மையமும்
, 24 தத்துவங்களுடன்
கூடிய பிரகிருதி என்பதை ஆரங்களும் குறிப்பதாகக் கொள்ளலாம்
.
முற்றிலும் ஆங்கிலமயமாகி விட்டஇந்தியாவின்
கடைசி வைஸ்ராய்
ஆன நேரு, இந்துக் கலாசாரம்
குறித்த தனது அறியாமையை ஒருவிதப் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்பவராகவே இருந்தார்
. உண்மையில் அவர்
சக்கரத்தையோ அதன் தத்துவத்தையோ பற்றியெல்லாம் எதுவும் அறிந்திருக்கவில்லை
. ஆனால், இந்தs சின்னங்கள் அசோகரின்
பெருமையைப் பறைசாற்றி இந்துமதத்தைச் சிறுமைப்படுத்துகின்றன என்பதே அவருக்குப் போதுமானதாக
இருந்தது
. பௌத்தத்தைத் தழுவுவதற்காக, அசோகர் தன்னை
அதிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறிய இந்துமதம்
! பொதுவாக, இந்தியாவில்
பெருமிதத்திற்கும் மதிப்புக்கும் உரியவை எல்லாம்
, பௌத்தம் (மற்றும் இஸ்லாம்) துப்புக்கெட்ட
இந்துக்களுக்கு அளித்துவிட்டுச் சென்ற கொடை என்றே நேரு கருதினார்
. அவரைப் பொருத்த
வரையில் இந்துக்களின் சகிப்புத்தன்மை என்ற புகழ்பெற்ற விஷயம் கூட புத்தமதத்திலிருந்து
கடன் வாங்கியதுதான்
. ஆனால், உண்மை என்னவென்றால், வரலாற்று ரீதியாக, இங்கு ஏற்கெனவே
நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்துக் கலாசாரத்தின் பன்முகத்தன்மைதான்
, புத்தர் என்பவர்
தோன்றி
, தனது தர்ம உபதேசங்களைக் கூறுவதற்கே காரணமாக அமைந்தது. ஒரு முஸ்லிம்
நாட்டில் அவர் தனது கொள்கைகளை
45 வருடங்கள் அமைதியாகவும்
சுகமாகவும் உபதேசித்துக் கொண்டிருந்திருந்திருக்க முடியாது
. இங்கும் அவரது
உயிருக்குச் சில முறைகள் ஆபத்துக்கள் நேர்ந்தனதான்
. ஆனால் அவைஇந்துக்களிடமிருந்துவரவில்லை. அவரே உருவாக்கியிருந்த
துறவு அமைப்பின் பொறாமை பிடித்த சீடர்களிடமிருந்துதான் வந்தன
.
ஆயினும், இந்துவாகப் பிறந்து துறவறம் பூண்ட புத்தர், தனது வாழ்க்கையின்
ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்துமதத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு
, புத்தமதம் என்ற
ஒரு புதிய மதத்தை உருவாக்கினார் என்பதான ஒரு கருத்தாக்கத்தை நேருவும்
, அம்பேத்கரும்
அவர்களைப் பின்பற்றியவர்களும் நம்பத் தொடங்கினர்
. இந்தக் கருத்துதான்
இப்போது எங்கும் பரவலாக உள்ளது
. பள்ளிப் பாடப் புத்தகங்களின் வாயிலாக, பெரும்பாலான
இந்தியர்களுக்கு இந்தக் கருத்து ஊட்டப்பட்டுள்ளது
. இதற்கு மேல்
இந்த விஷயம் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது
. ஆனால், இந்தக் கதையை
நம்புகின்ற எண்ணற்றவர்களில் ஒருவர் கூட
, புத்தர் தனது
வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில் இந்துமதத்திலிருந்து துண்டித்துக் கொண்டு சென்றார்
என்பதைக் கூறுவதே இல்லை
. எப்பொழுது அவர் இந்துமதத்திற்கெதிராகப்
புரட்சி செய்தார்
? ஏராளமான இந்தியர்கள் இந்த நேருவியச் சித்தரிப்பை
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
. ஆனால் இதுவரை
புத்தரின் வாழ்வில்
, அவர் இந்துமதத்திலிருந்து துண்டித்துக் கொண்டு
சென்றார் என்று கருதத்தக்க ஒரு சம்பவத்தைக்கூட அவர்கள் ஒருவராலும் சுட்டிக்காட்ட இயலவில்லை
.
இந்துமதம்என்னும் சொல்
இவ்வாறு கேள்விக்குள்ளாக்கப்படும்போது அவர்களது முதல் வாதம் கட்டாயமாக
இப்படித்தான் இருக்கும்
– ‘உண்மையில், அந்தக் காலகட்டத்தில்
இந்துமதமே இருக்கவில்லையே
.’ அதாவது, அப்போது இந்துமதம்
இருக்கவில்லை
. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் புத்தர் அதிலிருந்து விலகிக்கொண்டு
மட்டும் வந்து விட்டார்
! ஆமாம், அவர் செய்த மகா
அற்புதங்களில் ஒன்று இது
. இப்படித்தான் உள்ளது மதச்சார்பின்மைவாதிகளின்
நிலைப்பாடு
.
அதைத் திருத்துவோம். அதாவது, ‘இந்துமதம்என்ற *சொல்* அப்போது
இருந்திருக்கவில்லை
. புத்தருக்குச் சமகாலத்தில் வாழ்ந்த அகாமெனிட் (Achaemenid) பாரசீகர்களின்
அரசன் டேரியஸ்
ஹிந்துஎன்ற சொல்லைப் பயன்படுத்தியபோது, அது
நிலவியல் சார்ந்ததாக மட்டுமே இருந்தது
அதாவது, சிந்து
பிரதேசத்திலும் அதற்கு அப்பாலும் இருப்பவர்கள்
. மத்தியக்
காலத்திய முஸ்லிம் படையெடுப்பாளர்கள் இந்தியாவுக்கு
ஹிந்துஎன்ற
சொல்லைக் கொண்டுவந்தபோது அதன் பொருள் இப்படி இருந்தது
இந்திய
முஸ்லிம்கள்
, கிறிஸ்தவர்கள், யூதர்கள்
தவிர்த்து இந்தியாவில் உள்ள மற்ற அனைவரும்
. ‘ஆபிரகாமியர்களாக
அல்லாதவர்கள்
என்ற எதிர்மறைக் குறிப்பைத் தாண்டி, ஹிந்து
என்ற அந்தச் சொல் எந்தக் குறிப்பிட்ட மதக்கொள்கையுடனும் தொடர்புபடுத்தப்படவில்லை
. எல்லா
விதமான இந்திய பாகனியர்களையும்

(Indian Pagans)
அது குறித்ததுபிராமணர்கள், பௌத்தர்கள் (‘மொட்டைத்
தலை பிராமணர்கள்
’), ஜைனர்கள், மற்ற
துறவிகள்
, தாழ்ந்த சாதியினர், இடைநிலைச்சாதியினர், பழங்குடியினர்
மேலும் இதே தொடர்பின் காரணமாக
,
வரலாற்றில் இன்னும் தோன்றியிருக்காத லிங்காயதர்கள், சீக்கியர்கள், ‘ஹரே
கிருஷ்ணா
க்கள், ஆரிய சமாஜிகள், ராமகிருஷ்ண
இயக்கத்தினர்
, மதச்சார்பின்மைவாதிகள் மற்றும் தற்காலத்தில் இந்து
என்ற முத்திரையை மறுதலிப்பவர்கள்

இவர்கள் எல்லாரையுமே அச்சொல் குறித்தது. ஹிந்து
என்ற சொல்லுக்கான இந்த வரையறையைத்தான் ஹிந்துத்துவம் என்ற தனது நூலில்
(1923) வீர சாவர்க்கரும்,
இந்திய அரசின் இந்து திருமணச் சட்டமும் (1955) ஏற்றுக்கொண்டனர்.
இந்த வரலாற்று ரீதியான
வரையறை
தந்திரக்கார பிராமணர்களால்புகுத்தப்படவில்லை
என்பதனால் சாதகமானதும்கூட
.
இதன்படி, புத்தரும் அவரைப் பின்பற்றுபவர்களும்
சந்தேகத்திற்கிடமின்றி இந்துக்களே
.
எனவே, அம்பேத்கர் புத்தமதத்தில்
தஞ்சமடைந்தபோது
, ‘உறுதியாக இந்து அரவணைப்புக்குள் தாவியிருக்கிறார்என்று
வீர சாவர்க்கர் கூறியது இதன்படி மிகச்சரியானதே
.
ஆனால் நடைமுறையில்இந்துஎன்ற
இந்தச்சொல் அபிமான விளையாட்டுக் கருவி போல இஷ்டத்துக்கு வளைக்கப்படுகிறது
. திராவிடர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சீக்கியர்கள்
என்று பலதரப்பட்ட சமூகக் குழுக்களையும்
இந்துக்களே அல்லஎன்று
மதச்சார்பின்மைவாதிகள் அடித்துக் கூறுவார்கள்
. ஆனால்
சிறுபான்மை மதத்தினரின் அராஜக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைப் பற்றி இந்துக்கள் புகார்
கூறினால்
, அது ஒரு பிரச்சினையே அல்ல என்று ஏளனமாகச் சிரிப்பார்கள். ‘இந்துக்கள்
எப்படி ஆபத்தாக உணர முடியும்
?
அவர்கள் தான் 80%க்கு
மேல் இருக்கிறார்களே
என்று அதே வாயால் கூறுவார்கள் இந்த மதச்சார்பின்மைவாதிகள். ‘பழங்குடிகள்
இந்துக்களே அல்ல
என்று கிறிஸ்தவ மிஷனரிகள் அறிவிப்பார்கள். ஆனால்
தங்களது மரியாதைக்குரிய துறவியின் படுகொலைக்குக் காரணமான கிறிஸ்தவர்களை எதிர்த்துப்
பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபடும்போது அவர்கள்
இந்து
கலவரக்காரர்கள்
ஆகிவிடுகிறார்கள்! இதே
ரீதியில்தான்
, புத்தர் விஷயத்தில்இந்துஎன்பதுவேதம்
சார்ந்த
, வைதீகஎன்ற பொருளில் சௌகரியத்திற்கேற்றபடி
குறுக்கப்படுகிறது
. பிறகு தேவைப்படும்போது அதன் பரந்த பொருளுக்குத் திரும்ப
அழைத்து வரப்படுகிறது
.
ஹிந்து என்ற சொல்லின் ஒரு பொருளாகவேதம் சார்ந்த, வைதீகஎன்பது நிச்சயமாக
இல்லை
. அந்தச் சொல் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் கூட அப்படி ஒரு
பொருள் இருக்கவில்லை
. சங்கரர் பதஞ்சலிக்கும், சாங்கிய தத்துவப்
பிரிவினருக்கும் எதிராக
, ‘அவர்கள் (புத்தரைப் போன்றே) வேதங்களைப் பிரமாணமாகக்
கொள்வதில்லை
என்று கூறுகிறார். ஆயினும் இந்துச்
சிந்தனைப்பள்ளியின் ஒவ்வொரு வரலாற்றிலும் இந்தத் தத்துவங்களுக்கு முக்கியமான இடம் உள்ளது
. இந்துமதத்தின்
பல கூறுகளில் வேதம் ஒரு மெல்லிய மேற்பூச்சுப் படலம் போல மட்டுமே உள்ளதையும்
, இன்னும் சில
கூறுகளில் வேதம் சாராமலே அவை இருப்பதையும் நாம் கவனிக்கலாம்
. சில அறிஞர்கள், வைதீகபெருமரபு’, பற்பல பிரதேசம்
சார்ந்த சம்பிரதாயங்களும் அனுமதிக்கப்பட்ட
சிறுமரபுஇவை இரண்டுமே
வேதம் என்ற பெருமிதமிக்க விசாலமான குடையின் கீழ் வளர்ந்து வந்துள்ளன என்று இதனை விளக்குகிறார்கள்
. இந்த விதத்தில்
நாம் புத்தரை வகைப்படுத்த விரும்பினால்
, அவருக்கான இடம்
பெருமரபு என்பதிலேயே உள்ளது என்பதையும் தெளிவாக உணரலாம்
.


 சித்தார்த்த
கௌதமர் என்கிற புத்தர்
, சூரிய குலத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில், மனுவின் வழித்தோன்றலாக
வந்த க்ஷத்திரியர் ஆவார்
. ‘ராமரின் மற்றொரு அவதாரமாகத் தோன்றியவன்என்று தன்னை
விளித்துக் கொள்ளும் அவர்
, சாக்கியர் குடியின் ராஜனுடைய (நிரந்தரக் குடித்தலைவன்) மகனாக, கௌதமக் கோத்திரத்தில்
உதித்து
, சபையின் உறுப்பினராக இருந்தவர். துறவிகள் பெரும்பாலும்
தங்களது துறவுப்பெயராலேயே அறியப்படுவது மரபானாலும்
, பௌத்தர்கள் புத்தரை
அவரது குலப்பெயரைச் சேர்த்து
சாக்கிய முனி’ (சாக்கியர் குடியைச்
சார்ந்த துறவி
) என்று அழைப்பதையே விரும்புகின்றனர். இந்தக் குடியானது
எந்த அளவுக்குச் சாத்தியமோ அந்த அளவுக்கான ஒரு இந்து சமூகமாக இருந்தது
. ஆதி மூதாதையான
மனுவின் மூத்த மகனின் வழித்தோன்றல்களாகவும்
, அவரது பிந்தைய, இளைய மனைவியின்
ஆணையால் மறுதலிக்கப்பட்டவர்களாகவும் அக்குடியினர் தங்களைக் கருதினர்
. புத்தர் ஒருபோதும்சாக்கியஎன்ற குலப்பெயரை
நிராகரித்ததற்கான சான்றுகள் இல்லை
. அவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், சாக்கியர்கள்
கோசல மன்னன் விடூதபனின் கோபத்திற்கு இலக்காகி முற்றிலுமாக படுகொலை செய்யப் பட்டபோதும்
கூட
.
ராமன் முதலான அவதாரங்களின் வரிசையில் அவரும் ஒருவர் என்பதான கருத்து, குயுக்திபடைத்த
பிராமணர்களின் புராணங்களின் கண்டுபிடிப்பு அல்ல
. மாறாக, புத்தரே தன்னைக்
குறித்து அறிவித்துக் கொண்டது அது
. தனது முந்தைய அவதாரங்களில் ராமரும் ஒருவர்
என்று கூறிக்கொண்டது புத்தர்தான்
. பல இந்துமதக் கொள்கைகளையும் பழக்கங்களையும்புத்தமதத்திலிருந்து
கடன்வாங்கப்பட்டது
என்றே கூறி விளக்க விரும்பும் அறிஞர் பெருமக்கள், இந்தக் குறிப்பிட்டஇந்துமதக்கொள்கையை
அம்பேத்கர் நிராகரிப்பதை
, இல்லை இல்லை இதுவும்புத்தமதத்திலிருந்து
கடன் வாங்கப்பட்டதே
என்று சிறப்பாகவும் செம்மையாகவும் கூறி அம்பேத்கரை
எதிர்க்கலாம்
.
வாழ்க்கைப் பாதை
தனது 29ம் வயதில் அவர் சமூக வாழ்க்கையைத் துறந்தார், ஆனால் இந்துமதத்தைத்
துறக்கவில்லை
. சமூகத்திலிருந்து முற்றிலுமாக விலகி, தனது சாதிக்கான
அடையாளங்களையும் பெயரையும் கூட நீத்துச் செல்வது என்பது இந்துக்களிடையே இருந்த பழக்கம்தான்
. சடாமுடிகளுடன்
ஆகாயத்தையே ஆடையாக உடுத்து வாழும் முனிவர்களைப் பற்றி ரிக்வேதத்திலேயே குறிப்பு உண்டு
. ‘நாகா சாதுக்கள்என்று இன்று
அழைக்கப்படுபவர்கள் இத்தன்மையினர்தான்
. துறவு வாழ்க்கை
என்பது புத்தருக்கு நீண்ட காலம் முன்பே வேதகால சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகவே
இருந்தது
. ‘ஆத்மாஎன்ற தத்துவத்தை
விரிவாக வளர்த்தெடுத்த உபநிஷத ரிஷியாகிய யாக்ஞவல்கியர் அரசவைப் புரோகிதராக
, இரண்டு மனைவியருடன்
நிறைவான இல்லறத்தில் வாழ்ந்து பின்னர் சமூகவாழ்வைத் துறந்தவர்
. எனவே, இந்து சமுதாயத்தில்
ஏற்கெனவே இருந்த ஒரு மரபைப் பின்பற்றியே புத்தரும் தனது அரசியல் எதிர்காலத்தையும் குடும்பத்தையும்
துறந்து சென்றார்
. அதன்பிறகு மற்ற வேதநெறி சார்ந்த துறவியர் போலவே, அவரும் எந்த
வைதீக சடங்குகளையும் பின்பற்றவில்லை
(ஆனால் ஜென் பௌத்தர்கள்
இன்றளவும்
, ‘ஸவுகாஅதாவதுஸ்வாஹாஎன்று முடியும்
ஹிருதய சூத்திரத்தை
(Heart Sutra) வேதமந்திரங்களின்
பாணியில் போல ஜபம் செய்கிறார்கள்
).
கர்மகாண்டம்எனப்படும்
சடங்குகளைத் துறந்து
, அறிவுத் தேடலில் ஈடுபடும்ஞானகாண்டம்என்பதான
இயக்கத்திற்கு உபநிஷதங்களில் சான்று உள்ளது
. இந்த
இயக்கத்தையே பிற்பாடு புத்தரும் பின்பற்றினார்
. கானகத்திற்குச்
செல்லுதல் என்ற இந்து நடைமுறையை மேற்கொண்டதன் பின்
, அவர்
இரண்டு குருமார்களிடமிருந்து கற்றுக்கொண்ட தியான முறைகள் உட்பட பல வழிமுறைகளை முயன்று
பார்த்தார்
. எவையும் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆயினும், அவற்றைத்
தனது பௌத்தப் பாடத்திட்டத்தில் சேர்க்க அதுவே போதுமானதாக இருந்தது
. அனபனஸதி (Anapanasati) அதாவது மூச்சுக்காற்றைக் கவனித்தல் என்ற வழிமுறையை
அவர் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது
. இன்று ஒவ்வொரு யோகப்பள்ளியிலும்
பிரபலமான இருக்கும் யோக முறைதான் அது
. சில காலங்கள், இந்துமதப்
பிரிவான ஜைனத்தில் உள்ளது போன்றே அதிதீவிர துறவு நெறியையும் அவர் பின்பற்றினார்
. ஆன்மிக
வழிமுறைகளைப் பின்பற்றும் ஒரு குழுவில் சேர்வதற்கும்
, பிறகு
அதிலிருந்து விலகுவதற்குமான இந்து மதத்திற்கே உரியதான சுதந்திரத்தை அவர் பயன்படுத்திக்
கொண்டார்
. இதில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இந்துவாகவே நீடித்தார்.
பிறகு அவர் தனது சொந்த
வழிமுறைகளையும் இதில் சேர்த்தார் அல்லது அப்படித்தான் புத்தமதத்தின் முதல்நூல்கள் நமக்குச்
சொல்கின்றன
. இது குறித்து ஆதாரபூர்வமான சான்றுகள் இல்லை என்பதனால், விபாசனா (மனதை
முழுவதுமாக ஈடுபடுத்தியிருத்தல்
)
என்ற இந்த வழிமுறையையும் கூட வேறு எங்கிருந்தாவது அவர்
கற்றிருக்கக் கூடுமா என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை
. வேறு
ஏதேனும் எதிர்மறையான சான்றுகள் கிடைக்காத பட்சத்தில்
, ஒரு
இந்துவுக்கு அத்தகைய
(புதிய பாதைகளை உருவாக்கும்) சுதந்திரம்
எப்போதுமே உண்டு என்பதனால்
,
இந்த வழிமுறையை அவர் தானாகவே முழுமையாகக் கண்டுபிடித்தார்
என்றே நாம் கொள்ளலாம்
. அதன் பிறகு அவர்போதிஎன்ற
அகவிழிப்பு நிலையை அடைந்தார்
.
அவரே கூறியுள்ளபடி, அவர்
இத்தகைய நிலையை அடைந்த முதல் மனிதரும் அல்ல
. மாறாக, அவருக்கு
முந்தைய விழிப்புற்றோர்

(
புத்தர்கள்) நடந்த
பாதையில் சென்றவரே அவர்
.
வேத தெய்வங்களான பிரம்மாவும்
இந்திரனும் கேட்டுக் கொண்டபடி
,
அவர் தன்னிறைவு பெற்ற அந்த அகவிழிப்பு நிலையிலிருந்து
இறங்கி வந்து
, தனது உபதேசங்களை மற்றவர்களுக்கு வழங்கத் தொடங்கினார். தர்மத்தின்
ஆழியை அவர் இயக்கத்தொடங்கிய போது

(
தர்மசக்ர ப்ரவர்த்தனம்), ஏற்கெனவே
இருக்கும் ஒரு அமைப்பிலிருந்து

(system)
விலகுவதற்கான எந்த
அடையாளமும் அதில் இல்லை
.
மாறாக, ஏற்கெனவே உள்ள வேத
உபநிஷத சங்கேதங்களைப் பயன்படுத்தி தனது வழியை
ஆர்ய
தர்மம்
என்று அழைத்தார் (ஆர்ய = வேதத்தினால்
பண்படுத்தப்பட்ட
). இதன் மூலம் தனது வேத வேர்களை உறுதி செய்தது மட்டுமின்றி, தனது
வழியானது சீரழிந்து விட்ட வேத ஆதர்சங்களை மறுசீரமைப்பு செய்வதாகும் என்றும் அவர் உணர்த்தினார்
. தனது
வழிமுறைகளையும்
, மானுட நிலை குறித்த தனது வியாக்கியானங்களையும் தனது
சீடர்களுக்குப் போதித்து
,
அவற்றைச் சிரத்தையுடன் கடைப்பிடித்தால், தான்
அடைந்தது போன்ற அதே அகவிழிப்பை அவர்களும் அடையமுடியும் என்றும் வாக்களித்தார்
.
 சாதி
சாதி விஷயத்தில், ஏற்கெனவே இருந்த
சமுதாய அமைப்புடன் முழுவதுமாக ஒத்துழைப்பவராகவே புத்தர் இருந்தார் என்பதைக் காண்கிறோம்
. செல்வாக்குள்ள
பிரபு குடும்பத்தவர் என்ற அளவில்
, தனது உபதேசங்களைப் பரப்புப் பணிக்காக
உயர் சாதியினரையே அவர் தெரிவு செய்தார்
. அதில் 40%க்கும் அதிகமானோர்
பிராமணர்கள்
. பிற்காலத்தில் பௌத்தம் என்றாலே நேர்த்தியான நுட்பமான தத்துவங்கள்
என்ற நிலையை உருவாக்கப் போகிற மகத்தான தத்துவவாதிகள் அவர்களிலிருந்துதான் வந்தார்கள்
. இதற்குப் பிரதியாக, பிற்காலத்தில்
பௌத்த பல்கலைக்கழங்கள் வானியலாளர் ஆர்யபட்டர் போன்று சிறந்த பௌத்தரல்லாத அறிஞர்களுக்கும்
கற்பிக்கும் கேந்திரங்களாக விளங்கின
. இந்தியாவின்
பண்டைய பல்கலைக்கழங்களே புத்தமதம் அளித்த கொடைதான் என்று ஒரு பொதுப்படையான எண்ணம் நிலவுகிறது
. ஆனால், புத்தரின் நண்பர்களான
பந்துலர்
(Bandhula), பிரசேனாதி
(Prasenadi)
ஆகியவர்களும் (சில ஊகங்களின் படி இளைஞரான சித்தார்த்தருமே
கூட
) தட்சீலத்தில் இருந்த பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். பௌத்தர்களின்
கூட்டம் உருவாவதற்குப் பலகாலம் முன்பே இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுவிட்டிருந்தது
. கறாராகச் சொல்வதானால், இந்துச் சமூகத்தில்
முன்பு இருந்த கல்வி அமைப்புகளை விரிவாக்கி மேன்மைக்கு இட்டுச்சென்றது புத்தமதம் என்பது
சரியாக இருக்கும்
.
கிழக்கு கங்கைச் சமவெளிப் பகுதியைச் சார்ந்த மன்னர்களும் செல்வந்தர்களும்
புத்தரைத் தங்களில் ஒருவராகக் கருதினர்
. அதுவே உண்மையும்
கூட
. எனவே வேகமாக வளர்ந்து வந்த அவரது துறவு அமைப்புக்கு மகிழ்ச்சியுடன்
அவர்கள் உதவினர்
. தங்களது பணியாளர்களையும் பிரஜைகளையும் அந்த
அமைப்புக்கான மடாலயங்களை உருவாக்குமாறு ஆணையிட்டனர்
. எதிர்காலத்தில்
தன்னைப் போன்ற அகவிழிப்பு கொண்ட
மைத்ரேயபுத்தரின் (நட்பும் கொடையும்
நிரம்பியவர்
) வருகை நிகழும் என்றும் அவர் பிராமணக் குடும்பத்தில் பிறப்பார்
என்றும் கௌதம புத்தர் அறிவித்தார்
.
தனது மனைவி தூய சாக்கிய குல இளவரசி அல்ல, சாக்கிய அரசருக்கும்
பணிப்பெண்ணும் பிறந்தவள்தான் என்று தெரிய வந்தவுடன்
, மன்னர் பிரசேனாதி
அவளையும் அவள்மூலம் பிறந்த மகனையும் மறுதலித்தார்
. இளமைக்காலம்
முதல் மன்னரின் நண்பராக விளங்கிய புத்தர் அது தவறு என்று கூறி மன்னர் அவர்களை ஏற்றுக்கொள்ளச்
செய்தார்
. ஆனால், அம்பேத்கரியர்கள் கூறுவது போல, ‘பிறப்பு முக்கியமானதல்லஎன்றோசாதி தவறுஎன்றோசாதி ஒரு பொருட்டல்லஎன்றோ கூறி அதை
அவர் சாதித்தாரா என்ன
? இல்லை. மாறாக, சாதி என்பது
தந்தைவழியிலேயே சந்ததியினருக்கு வரும் என்ற பழைய சாஸ்திர மரபை மன்னனுக்கு நினைவுறுத்தினார்
(அக்காலகட்டத்தில்
இந்த சாஸ்திர மரபு இன்னும் கறாராகத் திருத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்தது
). குதிரைகள், கழுதைகள் ஆகியவற்றின்
கூட்டு இனங்களில்
, ஆண் குதிரைக்கும் பெண் கழுதைக்கும் பிறப்பவை, தந்தையின் இனம்
சார்ந்து குதிரையினங்களாகவே கருதப்பட்டன
. ஆண் கழுதைக்கும்
பெண் குதிரைக்கும் பிறப்பவை அதே ரீதியில் கழுதையினங்களாகக் கருதப்பட்டன
. இந்தப் பழங்கால
மரபை வைத்துத்தான்
, ஆகத் தொன்மையான சாந்தோக்ய உபநிஷதத்தில், பிராமணர்களுக்கு
மட்டுமே கற்பிக்க விரும்பும் குரு
, சத்யகாம ஜாபாலனை சீடனாக ஏற்றுக்கொள்கிறார்அவனது தாய் பணிப்பெண்ணாக
இருந்தாலும் தந்தை பிராமணர் என்று அறியப்பட்டிருந்ததால்
. இதே முறைப்படிதான், தனது மனைவி தூய
சாக்கிய க்ஷத்திரிய ரத்த உறவில் வந்தவளாக இல்லாவிட்டாலும்கூட அவள் பெற்ற மகனை மன்னர்
பிரசேனாதியும் க்ஷத்ரியனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று புத்தர் வாதிட்டார்
.
அவரது மறைவின்போது, எட்டு நகரங்களின்
பெருங்குடியாளர்களும் பிரபுக்களும்
, ‘நாங்கள் க்ஷத்ரியர்கள். அவரும் க்ஷத்ரியர். எனவே, அவரது புனித
சாம்பல் மீது எங்களுக்கு உரிமை உள்ளது
என்று கோரி அந்தப்
புனித சாம்பலுக்கான உரிமையைப் பெறுவதில் வெற்றியடைந்தனர்
. அதற்கு அரை நூற்றாண்டு
காலத்திற்குப் பிறகு
, அவரது சீடர்கள் பொதுவில் சாதியைக் கடைப்பிடிப்பதில்
எந்தத் தயக்கத்தையும் காண்பிக்கவில்லை
. சொல்லப் போனால்
அது புத்தமதத்தின் சிறந்த நெறியாகவே கருதப்பட்டது
. காரணம் என்னவென்றால், புத்தர் அவரது
உபதேசங்களில் சாதியை விட்டுவிடுங்கள்
(உதாரணமாக, உங்கள் மகள்களை
வேறு சாதியினருக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்பது போல
) என்று ஒருபோதும்
கூறவில்லை
. தர்க்கபூர்வமாகவும் இதுவே சரியாக வருகிறது. ஏனென்றால், ஆன்மிக உபதேசகராக, சமூக நடைமுறை
சார்ந்த விஷயங்களில் அனாவசியமாக நேரத்தை விரயமாக்க புத்தருக்கு எந்த விருப்பமும் இருக்கவில்லை
. சொந்த வாழ்வில்
தனிப்பட்ட அளவில் துன்பத்திற்குக் காரணமான ஆசையைத் திருப்தி செய்வதே மிகக் கடினமாக
இருக்கையில்
, சமதர்ம சமுதாயத்திற்கான ஆசையைத் திருப்தி செய்வதெல்லாம்
ஆன்மத் தேடலிலிருந்து விலகிய முடிவற்ற திசைதிருப்பலாகவே இருக்கும்
.
ஏழு
நெறிகள்
:
இந்து அல்லாத தனிப்பட்ட
பௌத்த சமுதாயம் என்று ஒன்று எப்போதுமே இருந்ததில்லை
. பெரும்பாலான
இந்துக்கள்
, பல்வேறு கடவுளர்களையும் ஆசாரியர்களையும் வழிபடுகின்றனர். தங்கள்
வீட்டுப் பூஜை அறைகளில் ஒருசில படங்களையும் திருவுருவங்களையும் சில சமயங்கள் சேர்ப்பதும்
, சில
சமயங்கள் எடுப்பதும் சகஜமான விஷயம்தான்
. இந்த வகையில்தான் புத்தரை
வழிபடும் மக்களும் இருந்தார்கள்
.
மற்ற தெய்வங்களையும் ஆசாரியர்களையும் வழிபடுபவர்களிடமிருந்து
தனிப்பட்ட ஒரு சமூகமாக அவர்கள் இருக்கவில்லை
. சமூகத்தைக்
கறாரான மதப்பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி பெட்டிகளுக்குள் அடைப்பது என்பது பரஸ்பர
காழ்ப்புணர்வுகளுடன் கூடிய கிறிஸ்தவ மனநிலை
. இந்தக்
கிறிஸ்தவக் கண்ணோட்டம் நேருவிய மதச்சார்பின்மையால்
, நவீன
இந்து சமுதாயத்திற்குள் வலிந்து புகுத்தப்பட்டிருக்கிறது
. வரலாற்று
உண்மை என்னவெனில்
இந்துக்கள் மட்டுமே இருந்தனர், இந்து
சாதிகளின் உறுப்பினர்களாக
.
அவர்களில் சிலர் மற்ற தெய்வங்களோடு கூட புத்தர் மீதும்
வழிபாட்டுணர்வுடன் கூடியவர்களாக இருந்தனர்
.
இந்தியாவின் பௌத்தமதக்
கட்டடங்கள் பெரும்பாலும் வேதம் சார்ந்த வசிப்பிடச் சூழல் கோட்பாடுகள் அல்லது வாஸ்து
சாஸ்திரத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன
. பௌத்தக்
கோவில்களின் நடைமுறைகள் ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் இந்துமதப் பாணியையே பின்பற்றுகின்றன
. இந்தியாவிலும்
அதற்கு வெளியிலும்
, பௌத்த மந்திரங்கள் வேத மந்திரங்களின் பாணியிலேயே உள்ளன. சீனாவிலும்
ஜப்பானிலும் பௌத்தம் பரவியபோது
,
பௌத்த துறவிகள் பன்னிரு ஆதித்தியர்கள் போன்ற வேத தெய்வங்களையும்
தங்களுடன் அழைத்துச் சென்றனர்
.
அவர்களுக்கான கோயில்களையும் எழுப்பினர். ஜப்பானின்
பல ஊர்களில்
, பென்ஜைடென் (Benzaiten) என்ற
நதி தேவதையின் கோயில் உள்ளது
.
இவள் சாட்சாத் சரஸ்வதி தேவியேதான். அவளை
அங்கு பௌத்தர்களேதான் அறிமுகப்படுத்தினர்
, ‘குயுக்தி
பிடித்த
பிராமணர்கள் அல்ல.
தனது வாழ்வின் கடையிறுதிக்காலத்தில், சமூகத்தை
அழிவிலிருந்து காப்பாற்றும் ஏழு நெறிகளை புத்தர் வரையறுத்தார்
. இவை
சப்தசீலங்கள் என்று அழைக்கப்படுகின்றன
(சீதாராம் கோயல், இதனைசப்த
சீல
என்ற தனது வரலாற்று நாவலில் விரிவாக எடுத்தாண்டுள்ளார்). ஏற்கெனவே
புழக்கத்தில் உள்ள பண்டிகைகளையும்
,
புனிதயாத்திரைகளையும், சடங்குகளையும்
போற்றிப் பாதுகாத்தல்
, அனைத்துத் துறவியர்களுக்கும் மரியாதை செய்தல் ஆகிய
நெறிகளும் அவற்றில் அடக்கம்
.
இதில், பண்டிகைகள் என்று புத்தர்
குறிப்பிடுவை அனைத்தும் வேதநெறி சார்ந்தவை அன்றி வேறென்ன
? மகாபாரதத்தில்
சரஸ்வதி நதிதீரத்திற்கு பலராமன் சென்ற யாத்திரை
, தம்
முதியவயதில் பாண்டவ சகோதரர்கள் செய்த கங்கா தீர யாத்திரை போன்றவைதான் இதில் புனித யாத்திரைகள்
என்று குறிப்பிடப்படுபவை
.
புத்தர் ஒரு புரட்சிக்காரர்
என்பதெல்லாம் தொலைதூரக் கற்பனை
.
உண்மையில், சமூக
விஷயங்களிலும் மத விஷயங்களிலும் மரபில் வேரூன்றியவராகவே
(conservative) அவர் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டார். அவர்
விரும்பியது கிளர்ச்சியையோ புரட்சியையோ அல்ல
, ஏற்கெனவே
உள்ள பழக்கவழக்கங்கள் நீடித்துத் தொடர்வதைத்தான்
. தன்
ஒவ்வொரு அணுவிலும் இந்துவாக இருந்தவர் புத்தர்
.
*********