Posted on Leave a comment

வலம் ஃபிப்ரவரி 2021 இதழ்

வலம் ஃபிப்ரவரி 2021 இதழை இங்கே வாசிக்கலாம்.

விவசாயிகள் போராட்டம் – வழி மாறியதா வெள்ளாடு? | ஜெயராமன் ரகுநாதன்

போர்க்கால தேவதைகள் | அருண் பிரபு

மகாபாரதம் கேள்வி பதில் – 11 | ஹரி கிருஷ்ணன்

வரம்பற்ற அதிகாரமும் பொறுப்பற்ற தன்மையும் | சுசீந்திரன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 34 | சுப்பு

இந்தியா புத்தகம் 9 | முனைவர் வ.வே.சு

சி.வி.ராமன் (1888-1970) | பா.சந்திரசேகரன்

சோழாந்தக சதுர்வேதி மங்கலம் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

துரதிர்ஷ்டக் கப்பல்: லெபானான் வெடிவிபத்து | தமிழில்: ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்

லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

நம்முடைய பாடப் புத்தகங்கள் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. அண்மையில் எழுந்த சர்ச்சை மொகலாய மன்னர்கள் தாங்கள் இடித்த ஹிந்துக் கோவில்களை மீண்டும் சீரமைத்தார்கள் என்பது. இதற்கு ஆதாரங்கள் உண்டா எனத் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது ‘இல்லை’ என என்.சி.ஈ.ஆர்.டி நிறுவனம் பதிலளித்துள்ளது. Continue reading லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

துரதிர்ஷ்டக் கப்பல்: லெபானான் வெடிவிபத்து | தமிழில்: ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்

தெளிவான சட்டதிட்டங்கள் அற்ற, உடனடியாக முடிவெடுக்கும் திறனும் அற்ற ஒரு அரசாங்கம். இந்த அரசின் தலைமைப் பொறுப்பும் இப்படியே. இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய பேராபத்தைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்பதை உணர்த்திய துரதிருஷ்ட சம்பவமே லெபனான் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து. Continue reading துரதிர்ஷ்டக் கப்பல்: லெபானான் வெடிவிபத்து | தமிழில்: ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்

Posted on Leave a comment

சோழாந்தக சதுர்வேதி மங்கலம் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

பாண்டிய நாட்டின் ஆனைமலை அடிவாரத்தில் நால்வர், உயர் சாதிக் குதிரைகளில் அமர்ந்தபடி ஏதோ மேற்கு தேசத்துப் பாஷையில் பேசிக்கொண்டார்கள். அங்கிருக்கும் குடவரை நரசிம்மர் கோவில் பின்புறம் வித்யாசமான சங்கேத மொழி போல் எழுந்த சப்தம் கேட்டு அவர்கள் அங்கு விரைந்தனர். ஒரு நாழிகையில் அழகாபுரி கோட்டை மலையடிவாரத்தில் மேலும் சிலர் மலையாளம் கலந்த தமிழில் ஏதோ பேச, அதில் தலைவன் போன்ற ஒருவன் ஆமோதித்துச் சிலவற்றைச் சொன்னான். அவையனைத்தையும் மறைவிலிருந்து ஒரு உருவம் கண்காணித்து வந்தது. இரவு மூன்றாவது சாமம் முடியும் நேரம். காலம் 12ம் நூற்றாண்டின் இறுதி. Continue reading சோழாந்தக சதுர்வேதி மங்கலம் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

Posted on Leave a comment

சி.வி.ராமன் (1888-1970) | பா.சந்திரசேகரன்

இருபதாம் நூற்றாண்டில் உலக அறிஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட மாபெரும் அறிவியல் அறிஞர் சந்திரசேகர வெங்கட ராமன் (சி.வி.ராமன்). அவர் இறந்து இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திர இந்தியாவின் பொருளாதார மற்றும் அறிவியல் வளர்ச்சியில் ராமனின் எண்ணமும் ராஜகோபாலாச்சாரியின் எண்ணமும் ஒன்றாக இருந்தது என்பதை வெகுசிலரே அறிவர். Continue reading சி.வி.ராமன் (1888-1970) | பா.சந்திரசேகரன்

Posted on Leave a comment

இந்தியா புத்தகம் 9 | முனைவர் வ.வே.சு

The Invasion That Never Was – Michel Danino

‘டேய்! பார்த்தியா?’

எங்கள் வகுப்பறைக்குள் முகுந்தனைச் சுற்றி ஒரே தலைகள். நான் எட்டிப் பார்த்தேன். அவன் கையில் கொஞ்சம் வளைந்து நீளமாக இருக்கும் இரும்புத் துண்டு. Continue reading இந்தியா புத்தகம் 9 | முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 34 | சுப்பு

பிரதமர் இந்திரா படுகொலை

திருவொற்றியூர் கடற்கரைக் கோவிலில் டாக்டர் நித்யானந்தம் ஏற்படுத்திய அனுபவத்தின் தாக்கம் என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் எவ்வளவு முயன்றாலும் அது என்னைவிட்டு அகலவில்லை. என்னுடைய உளநிலையில் டாக்டர் தனக்கென்று ஒரு உள்ஒதுக்கீடு செய்து கொண்டு விட்டார். எதைச் செய்தாலும் எங்கே சென்றாலும் என்னால் அவரை அகற்ற முடியவில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 34 | சுப்பு

Posted on Leave a comment

வரம்பற்ற அதிகாரமும் பொறுப்பற்ற தன்மையும் | சுசீந்திரன்

ஓர் உணவகத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள். நீங்கள்தான் வாழை இலை, உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் குடிக்க நீர் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என்கிறார் உரிமையாளர். நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள். பின்னர் நீங்களே சமைக்க வேண்டும் என்கிறார். நீங்கள் சமைக்கவும் செய்கிறீர்கள். அங்கு உணவு உண்ண உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நீங்கள் வெளியேறும் நேரம் உணவக உரிமையாளர் உணவிற்கான தொகையைப் பெற்றுக் கொள்கிறார். Continue reading வரம்பற்ற அதிகாரமும் பொறுப்பற்ற தன்மையும் | சுசீந்திரன்

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் – 11 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல் – ஒரு விளக்கக் குறிப்பு

ஜனவரி 2021 இதழில் நாம் பாண்டவர்களுடைய வனவாச காலம், காலக்கணக்குப்படி அதிகமாகவே இருந்தது என்ற பீஷ்மருடைய விளக்கத்தை மேற்கோள் காட்டி, ‘இந்த விளக்கம் இன்னமும் முடிவுபெறவில்லை’ என்பதையும் தெரிவித்து, ‘இது பீஷ்மருடைய விளக்கம். இதை துரியோதனன் ஏற்கவில்லை. இந்த விஷயத்தை அடுத்த இதழில் தொடர்ந்து காண்போம்’ என்ற குறிப்போடு முடித்திருந்தோம். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – 11 | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

போர்க்கால தேவதைகள் | அருண் பிரபு

உக்ரேனில் ஒரு கிராமத்தை நாசிப்படை ஆக்கிரமிக்கிறது. குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போய் கிருமிநாசினி அறைக்குள் அடைத்துச் சோதனைகள் செய்து வெளியே எடுக்கிறார்கள். நோயுள்ள குழந்தைகள் கொல்லப்படுவர் என்கிறார்கள். ஜெர்மனியின் சோதனைச் சாலைகளுக்குச் சில குழந்தைகள் அனுப்பப்படுகிறார்கள். எலிகள் சீக்குப் பிடித்துச் சாகின்றன, நல்ல எலிகளாகப் பார் என்று ஜெர்மன் அதிகாரி தன் படைக்கு உத்தரவு போடுகிறார். Continue reading போர்க்கால தேவதைகள் | அருண் பிரபு